பக்கம் - 173 -
இந்த ஆபத்தான ஆலோசனை மன்றத்தில் கலந்துகொண்ட குறைஷிகளின் சில முக்கிய பிரமுகர்கள் பின்வருமாறு:

1) மக்ஜும் கிளையினரின் சார்பாக அபூஜஹ்ல்,

2,3,4) நவ்ஃபல் இப்னு அப்து மனாஃப் கிளையினரின் சார்பாக ஜுபைர் இப்னு முத்”, துஅய்மா இப்னு அதீ, ஹாரிஸ் இப்னு ஆமிர் ஆகிய மூவர்,

5,6,7) அப்து ஷம்ஸ் இப்னு அப்து முனாஃப் கிளையினரின் சார்பாக ஷைபா, உத்பா, அபூஸுஃப்யான் இப்னு ஹர்ஃப் ஆகிய மூவர்,

8) அப்துத் தார் கிளையினரின் சார்பாக நள்ர் இப்னு ஹாரிஸ்,

9,10,11) அஸ்அத் இப்னு அப்துல் உஜ்ஜா கிளையினரின் சார்பாக அபுல் பக்த இப்னு ஹிஷாம், ஜம்ஆ இப்னு அஸ்வத், ஹகீம் இப்னு ஜாம் ஆகிய மூவர்,

12,13) சஹம் கிளையினரின் சார்பாக நுபைஹ் இப்னு ஹஜ்ஜாஜ், முனப்பிஹ் இப்னு ஹஜ்ஜாஜ் ஆகிய இருவர்,

14 ) ஜுமஹ் கிளையினரின் சார்பாக உமையா இப்னு கலஃப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேற்கூறிய இவர்களும் மற்றவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் தாருந் நத்வாவிற்கு வந்து சேர்ந்தபோது, தடிப்பமான ஓர் ஆடையை அணிந்துகொண்டு வயோதிக தோற்றத்தில் இப்லீஸ்” அங்கு வந்தான். அவர்கள் “வயோதிகர் யார்?” என்று கேட்கவே, அவன் “நான் நஜ்து பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிகன். நீங்கள் பேசுவதைக் கேட்டு என்னால் முடிந்த நல்ல யோசனையையும், அபிப்ராயத்தையும் கூறலாம் என்று வந்திருக்கிறேன்” என்றான். இதனைக் கேட்ட அம்மக்கள் “சரி! உள்ளே வாருங்கள்” என்றவுடன் உள்ளே சென்று அமர்ந்து கொண்டான்.

நபியவர்களைக் கொல்ல திட்டமிடுதல்

சபை ஒன்றுகூடிய பின் பலவிதமான கருத்துகள், விவாதங்கள் நடைபெற்றன. அவர்களில் ஒருவனான அபுல் அஸ்வத் என்பவன் “நாம் அவரை நமது ஊரைவிட்டு வெளியேற்றி விடுவோம். அவர் எங்கு சென்றால் நமக்கென்ன. நாம் நமது காரியத்தையும், நமக்கு மத்தியிலிருந்த நட்பையும் முன்பு போல் சீர்படுத்திக் கொள்வோம்” என்று கூறினான்.

அதற்கு அந்த நஜ்தி வயோதிகன் “இது சரியான யோசனையல்ல. அவன் அழகிய பேச்சையும், இனிமையான சொல்லையும், தனது மார்க்கத்தைக் கொண்டு மக்களின் உள்ளங்களில் அவர் இடம்பிடித்து விடுவதையும் நீங்கள் பார்க்கவில்லையா? அவ்வாறு நீங்கள் செய்தால் அவர் வேறொரு இடம் சென்று அவர்களிடம் தங்கி அவர்களை முஸ்லிம்களாக மாற்றிவிடலாம். பிறகு அவர்களை அழைத்துக்கொண்டு உங்களது ஊருக்கு வந்து உங்களை அழித்தொழித்து விடலாம். எனவே வேறு யோசனை செய்யுங்கள்” என்று கூறினான்.

அடுத்து அபுல் புக்த என்பவன் “அவரை சங்கிலியால் பிணைத்து ஓர் அறையில் அடைத்து விடுவோம். இதற்கு முன் ஜுஹைர், நாஃபிகா போன்ற கவிஞர்களுக்கு நடந்தது போன்று நடக்கட்டும். அதாவது, சாகும் வரை அப்படியே அவரை விட்டுவிடுவோம்” என்று கூறினான்.