29. ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி)
மக்கீ, வசனங்கள்: 69

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
29:1
29:1 الٓمّٓ‌ ۚ‏
الٓمّٓ‌ ۚ‏ அலிஃப், லாம், மீம்
29:1. அலிFப்-லாம்-மீம்
29:1. அலிஃப், லாம், மீம்.
29:2
29:2 اَحَسِبَ النَّاسُ اَنْ يُّتْرَكُوْۤا اَنْ يَّقُوْلُوْۤا اٰمَنَّا وَهُمْ لَا يُفْتَـنُوْنَ‏
اَحَسِبَ நினைத்துக் கொண்டனரா النَّاسُ மக்கள் اَنْ يُّتْرَكُوْۤا அவர்கள் விடப்படுவார்கள் اَنْ يَّقُوْلُوْۤا என்று அவர்கள் கூறுவதால் اٰمَنَّا நாங்கள் நம்பிக்கை கொண்டோம் وَهُمْ அவர்கள் لَا يُفْتَـنُوْنَ‏ சோதிக்கப்படாமல்
29:2. அஹஸிBபன் னாஸு அ(ன்)ய் யுத்ரகூ அ(ன்)ய் யகூலூ ஆமன்னா வ ஹும் ல யுFப்தனூன்
29:2. “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
29:3
29:3 وَلَقَدْ فَتَـنَّا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ فَلَيَـعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ صَدَقُوْا وَلَيَعْلَمَنَّ الْكٰذِبِيْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக فَتَـنَّا நாம் சோதித்தோம் الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களை فَلَيَـعْلَمَنَّ ஆகவே, நிச்சயமாக அறிவான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ صَدَقُوْا உண்மையாளர்களை(யும்) وَلَيَعْلَمَنَّ இன்னும் நிச்சயமாக அறிவான் الْكٰذِبِيْنَ‏ பொய்யர்களை(யும்)
29:3. வ லகத் Fபதன்னல் லதீன மின் கBப்லிஹிம் Fபல யஃலமன்னல் லாஹுல் லதீன ஸதகூ வ ல யஃலமன்னல் காதிBபீன்
29:3. நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.
29:4
29:4 اَمْ حَسِبَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ السَّيِّاٰتِ اَنْ يَّسْبِقُوْنَا‌ ؕ سَآءَ مَا يَحْكُمُوْنَ‏
اَمْ حَسِبَ அல்லது எண்ணிக் கொண்டார்களா? الَّذِيْنَ يَعْمَلُوْنَ செய்பவர்கள் السَّيِّاٰتِ தீமைகளை اَنْ يَّسْبِقُوْنَا‌ ؕ நம்மை முந்தி விடுவார்கள் என்று سَآءَ மிகக் கெட்டது مَا يَحْكُمُوْنَ‏ அவர்கள் தீர்ப்பளிப்பது
29:4. அம் ஹஸிBபல் லதீன யஃமலூனஸ் ஸய்யிஆதி அ(ன்)ய் யஸ்Bபிகூனா; ஸா'அ மா யஹ்குமூன்
29:4. அல்லது: தீமை செய்கிறார்களே அவர்கள் நம்மைவிட்டும் தாங்கள் தப்பிக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் (அவ்வாறு) தீர்மானித்துக் கொண்டது மிகவும் கெட்டது.
29:5
29:5 مَنْ كَانَ يَرْجُوْا لِقَآءَ اللّٰهِ فَاِنَّ اَجَلَ اللّٰهِ لَاٰتٍ‌ؕ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
مَنْ யார் كَانَ இருப்பாரோ يَرْجُوْا ஆதரவு வைக்கின்றார் لِقَآءَ சந்திப்பை اللّٰهِ அல்லாஹ்வின் فَاِنَّ நிச்சயமாக اَجَلَ தவணை اللّٰهِ அல்லாஹ்வின் لَاٰتٍ‌ؕ வரக்கூடியதுதான் وَهُوَ அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
29:5. மன் கான யர்ஜூ லிகா 'அல்லாஹி Fப இன்ன அஜலல் லாஹி ல'ஆத்; வ ஹுவஸ்ஸ் ஸமீஉல் 'அலீம்
29:5. எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று நம்புகிறார்களோ அவர்கள் (அதற்காக நல்ல அமல்களைச் செய்து கொள்ளட்டும்); ஏனெனில் அல்லாஹ் (அதற்காகக் குறித்துள்ள) தவணை நிச்சயமாக வருவதாக இருக்கிறது; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
29:6
29:6 وَمَنْ جَاهَدَ فَاِنَّمَا يُجَاهِدُ لِنَفْسِهٖؕ اِنَّ اللّٰهَ لَـغَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏
وَمَنْ யார் جَاهَدَ போரிடுவாரோ فَاِنَّمَا يُجَاهِدُ அவர் போரிடுவதெல்லாம் لِنَفْسِهٖؕ தனக்காகத்தான் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَـغَنِىٌّ முற்றிலும் தேவையற்றவன் عَنِ الْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களை விட்டு
29:6. வ மன் ஜாஹத Fப-இன்னமா யுஜாஹிது லினFப்ஸிஹ்; இன்னல் லாஹ லகனிய்யுன் 'அனில் 'ஆலமீன்
29:6. இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கிறார்; நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் (உதவி எதுவும்) தேவைப்படாதவன்.
29:7
29:7 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَـنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَـنَجْزِيَنَّهُمْ اَحْسَنَ الَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ‏
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை لَـنُكَفِّرَنَّ நாம் நீக்கி விடுவோம் عَنْهُمْ அவர்களை விட்டும் سَيِّاٰتِهِمْ அவர்களின் பாவங்களை وَلَـنَجْزِيَنَّهُمْ நாம் அவர்களுக்கு கூலியாகத் தருவோம் اَحْسَنَ மிகச் சிறந்ததை الَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட
29:7. வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லனுகFப் Fபிரன்ன 'அன்ஹும் ஸய்யிஆதிஹிம் வ லனஜ்Zஜியன்னஹும் அஹ்ஸனல் லதீ கானூ யஃமலூன்
29:7. ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்.
29:8
29:8 وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا‌ ؕ وَاِنْ جَاهَدٰكَ لِتُشْرِكَ بِىْ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ؕ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
وَوَصَّيْنَا நாம் உபதேசித்தோம் الْاِنْسَانَ மனிதனுக்கு بِوَالِدَيْهِ அவன் தனது பெற்றோரிடம் حُسْنًا‌ ؕ அழகிய முறையில் وَاِنْ جَاهَدٰكَ அவர்கள் உன்னை வற்புறுத்தினால் لِتُشْرِكَ நீ இணைஆக்கும்படி بِىْ எனக்கு مَا எதை لَـيْسَ இல்லை لَـكَ உனக்கு بِهٖ அதைப் பற்றி عِلْمٌ அறிவு فَلَا تُطِعْهُمَا ؕ அவர்களுக்கு நீ கீழ்ப்படியாதே! اِلَىَّ என் பக்கமே مَرْجِعُكُمْ உங்கள் மீட்சி இருக்கிறது فَاُنَبِّئُكُمْ நான் உங்களுக்கு அறிவிப்பேன் بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை
29:8. வ வஸ்ஸய்னல் இன்ஸான Bபிவாலிதய்ஹி ஹுஸ்ன(ன்)வ் வ இன் ஜாஹதாக லிதுஷ்ரிக Bபீ மா லய்ஸ லக Bபிஹீ 'இல்முன் Fபலா துதிஃஹுமா; இலய்ய மர்ஜி'உகும் Fப உனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
29:8. தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்; என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
29:9
29:9 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَـنُدْخِلَـنَّهُمْ فِى الصّٰلِحِيْنَ‏
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை لَـنُدْخِلَـنَّهُمْ அவர்களை நாம் நிச்சயமாக நுழைவிப்போம் فِى الصّٰلِحِيْنَ‏ நல்லோரில்
29:9. வல்லதீன ஆமனூ வ'அமிலுஸ் ஸாலிஹாதி லனுத்கிலன் னஹும் Fபிஸ் ஸாலிஹீன்
29:9. அன்றியும் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்களைச் செய்கிறார்களோ அவர்களை நல்லடியார்களுடன் நிச்சயமாக நாம் சேர்த்து விடுவோம்.
29:10
29:10 وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ فَاِذَاۤ اُوْذِىَ فِى اللّٰهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللّٰهِؕ وَلَٮِٕنْ جَآءَ نَـصْرٌ مِّنْ رَّبِّكَ لَيَـقُوْلُنَّ اِنَّا كُنَّا مَعَكُمْ‌ؕ اَوَلَـيْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِمَا فِىْ صُدُوْرِ الْعٰلَمِيْنَ‏
وَمِنَ النَّاسِ மக்களில் இருக்கின்றனர் مَنْ எவர் يَّقُوْلُ கூறுகின்றார் اٰمَنَّا நாங்கள் நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வை فَاِذَاۤ اُوْذِىَ அவர்கள் துன்புறுத்தப்பட்டால் فِى اللّٰهِ அல்லாஹ்வின் விஷயத்தில் جَعَلَ ஆக்கிவிடுகிறார் فِتْنَةَ சோதனையை النَّاسِ மக்களுடைய كَعَذَابِ தண்டனையைப் போன்று اللّٰهِؕ அல்லாஹ்வின் وَلَٮِٕنْ جَآءَ வந்தால் نَـصْرٌ ஓர் உதவி مِّنْ رَّبِّكَ உமது இறைவனிடமிருந்து لَيَـقُوْلُنَّ நிச்சயமாக கூறுகின்றனர் اِنَّا நிச்சயமாக நாம் كُنَّا இருக்கின்றோம் مَعَكُمْ‌ؕ உங்களுடன் اَوَلَـيْسَ இல்லையா? اللّٰهُ அல்லாஹ் بِاَعْلَمَ மிக அறிந்தவனாக بِمَا فِىْ صُدُوْرِ நெஞ்சங்களில் உள்ளவற்றை الْعٰلَمِيْنَ‏ அகிலத்தாரின்
29:10. வ மினன் னாஸி ம(ன்)ய் யகூலு ஆமன்னா Bபில்லாஹி Fப-இதா ஊதிய Fபில் லாஹி ஜ'அல Fபித்னதன் னாஸி க'அதாBபில் லாஹி வ ல'இன் ஜா'அ னஸ்ரும் மிர் ரBப்Bபிக ல யகூலுன்ன இன்னா குன்னா ம'அகும்; அவ லய்ஸல் லாஹு Bபி அஃலம Bபிமா Fபீ ஸுதூரில் 'ஆலமீன்
29:10. மேலும், மனிதர்களில் சிலர் “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளோம்” என்று சொல்கிறார்கள்; எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் துன்பம் உண்டானால், மனிதர்களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின் வேதனைபோல் கருதி (உம்மை விட்டும் நீங்க முனைந்து) விடுகிறார்கள்; ஆனால் உம் இறைவனிடத்திலிருந்து உதவி வரும்போது: “நிச்சயமாக நாங்கள் உங்களுடனே தான் இருந்தோம்” என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை நன்கறிந்தவனாக இல்லையா?
29:11
29:11 وَلَيَـعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَلَيَـعْلَمَنَّ الْمُنٰفِقِيْنَ‏
وَلَيَـعْلَمَنَّ நிச்சயமாக நன்கறிவான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை وَلَيَـعْلَمَنَّ இன்னும் நிச்சயமாக நன்கறிவான் الْمُنٰفِقِيْنَ‏ நயவஞ்சகர்களை
29:11. வ ல யஃலமன்னல் லாஹுல் லதீன ஆமனூ வ ல யஃலமன்னல் முனாFபிகீன்
29:11. அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான்.
29:12
29:12 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوا اتَّبِعُوْا سَبِيْلَـنَا وَلْـنَحْمِلْ خَطٰيٰكُمْ ؕ وَمَا هُمْ بِحٰمِلِيْنَ مِنْ خَطٰيٰهُمْ مِّنْ شَىْءٍ‌ؕ اِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏
وَقَالَ கூறினர் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لِلَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களை நோக்கி اتَّبِعُوْا நீங்கள் பின்பற்றுங்கள்! سَبِيْلَـنَا எங்கள் பாதையை وَلْـنَحْمِلْ நாங்கள் சுமந்து கொள்கிறோம் خَطٰيٰكُمْ ؕ உங்கள் தவறுகளை وَمَا هُمْ அவர்கள் அல்லர் بِحٰمِلِيْنَ சுமப்பவர்கள் مِنْ خَطٰيٰهُمْ அவர்களுடைய தவறுகளில் مِّنْ شَىْءٍ‌ؕ எதையும் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَـكٰذِبُوْنَ‏ பொய்யர்கள்தான்
29:12. வ காலல் லதீன கFபரூ லில்லதீன ஆமனுத் தBபி'ஊ ஸBபீலனா வல்னஹ்மில் கதாயாகும் வமா ஹும் Bபிஹாமிலீன மின் கதா யாஹும் மின் ஷய்'இன் இன்னஹும் லகாதிBபூன்
29:12. நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம்: “நீங்கள் எங்கள் வழியை (மார்க்கத்தைப்) பின்பற்றுங்கள்; உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக (தாங்குபவர்களாக) இல்லையே! எனவே (உங்கள் குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!
29:13
29:13 وَلَيَحْمِلُنَّ اَ ثْقَالَهُمْ وَاَ ثْقَالًا مَّعَ اَثْقَالِهِمْ‌ وَلَـيُسْـٴَــلُنَّ يَوْمَ الْقِيٰمَةِ عَمَّا كَانُوْا يَفْتَرُوْنَ
وَلَيَحْمِلُنَّ நிச்சயம் அவர்கள் சுமப்பார்கள் اَ ثْقَالَهُمْ தங்கள்சுமைகளையும் وَاَ ثْقَالًا இன்னும் பல சுமைகளையும் مَّعَ اَثْقَالِهِمْ‌ தங்களது சுமைகளுடன் وَلَـيُسْـٴَــلُنَّ நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் عَمَّا பற்றி كَانُوْا يَفْتَرُوْنَ‏ இன்னும் அவர்கள் பொய்யை இட்டுக்கட்டிக் கொண்டிருந்தார்கள்
29:13. வ ல யஹ்மிலுன்ன அத்கா லஹும் வ அத்காலம் ம'அ அத்காலிஹிம் வ ல யுஸ்'அலுன்ன யவ்மல் கியாமதி 'அம்மா கானூ யFப்தரூன்
29:13. ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய (பளுவான பாவச்) சுமைகளையும், தம் (பளுவான பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச்) சுமைகளையும் சுமப்பார்கள்; கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள்.  
29:14
29:14 وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَلَبِثَ فِيْهِمْ اَ لْفَ سَنَةٍ اِلَّا خَمْسِيْنَ عَامًا ؕ فَاَخَذَهُمُ الطُّوْفَانُ وَهُمْ ظٰلِمُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் نُوْحًا நூஹை اِلٰى قَوْمِهٖ அவரது மக்களிடம் فَلَبِثَ அவர் தங்கி இருந்தார் فِيْهِمْ அவர்களுடன் اَ لْفَ ஆயிரம் سَنَةٍ ஆண்டுகள் اِلَّا தவிர خَمْسِيْنَ ஐம்பது عَامًا ؕ ஆண்டுகள் فَاَخَذَ இறுதியில் பிடித்தது هُمُ அவர்களை الطُّوْفَانُ வெள்ளப் பிரளயம் وَهُمْ அவர்கள் இருக்க ظٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்களாக
29:14. வ லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ FபலBபித Fபீஹிம் அல்Fப ஸனதின் இல்லா கம்ஸீன 'ஆமன் Fப அகதஹுமுத் தூFபானு வ ஹும் ளாலிமூன்
29:14. மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது.
29:15
29:15 فَاَنْجَيْنٰهُ وَاَصْحٰبَ السَّفِيْنَةِ وَجَعَلْنٰهَاۤ اٰيَةً لِّـلْعٰلَمِيْنَ‏
فَاَنْجَيْنٰهُ அவரை(யும்) நாம் பாதுகாத்தோம் وَاَصْحٰبَ السَّفِيْنَةِ இன்னும் கப்பலுடையவர்களை(யும்) وَجَعَلْنٰهَاۤ இன்னும் அதை ஆக்கினோம் اٰيَةً ஓர் அத்தாட்சியாக لِّـلْعٰلَمِيْنَ‏ அகிலத்தாருக்கு
29:15. Fப அன்ஜய்னாஹு வ அஸ் ஹாBபஸ் ஸFபீனதி வ ஜ'அல்னாஹா ஆயதல் லில்'ஆலமீன்
29:15. (அப்போது) நாம் அவரையும், (அவருடன்) கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம்; மேலும், அதை உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
29:16
29:16 وَاِبْرٰهِيْمَ اِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْـتُمْ تَعْلَمُوْنَ‏
وَاِبْرٰهِيْمَ இன்னும் இப்ராஹீம் اِذْ قَالَ அவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள் لِقَوْمِهِ தனது மக்களுக்கு اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاتَّقُوْهُ‌ ؕ இன்னும் அவனை அஞ்சுங்கள் ذٰ لِكُمْ இதுதான் خَيْرٌ சிறந்ததாகும் لَّـكُمْ உங்களுக்கு اِنْ كُنْـتُمْ நீங்கள் இருந்தால் تَعْلَمُوْنَ‏ அறிகின்றவர்களாக
29:16. வ இBப்ரஹீம இத் கால லிகவ்மிஹிஃ Bபுதுல் லாஹ வத்தகூஹு தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
29:16. இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்” என்று கூறிய வேளையை (நபியே! நினைவூட்டுவீராக).
29:17
29:17 اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا‌ ؕ اِنَّ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَمْلِكُوْنَ لَـكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ ؕ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏
اِنَّمَا تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குவதெல்லாம் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اَوْثَانًا சிலைகளைத்தான் وَّتَخْلُقُوْنَ இன்னும் இட்டுக்கட்டுகிறீர்கள் اِفْكًا‌ ؕ பொய்யை اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்களை تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குகிறீர்கள் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி لَا يَمْلِكُوْنَ உரிமை பெறமாட்டார்கள் لَـكُمْ உங்களுக்கு رِزْقًا உணவளிக்க فَابْتَغُوْا ஆகவே, தேடுங்கள் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் الرِّزْقَ உணவை وَاعْبُدُوْهُ இன்னும் அவனை வணங்குங்கள் وَاشْكُرُوْا இன்னும் நன்றி செலுத்துங்கள் لَهٗ ؕ அவனுக்கு اِلَيْهِ அவன் பக்கமே تُرْجَعُوْنَ‏ திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்
29:17. இன்னமா தஃBபுதூன மின் தூனில் லாஹி அவ்தான(ன்)வ்-வ தக்லுகூன இFப்கா; இன்னல் லதீன தஃBபுதூன மின் தூனில் லாஹி லா யம்லிகூன லகும் ரிZஜ்கன் FபBப்தகூ 'இன்தல் லாஹிர் ரிZஜ்க வஃBபுதூஹு வஷ்குரூ லஹூ இலய்ஹி துர்ஜ'ஊன்
29:17. அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
29:18
29:18 وَاِنْ تُكَذِّبُوْا فَقَدْ كَذَّبَ اُمَمٌ مِّنْ قَبْلِكُمْ‌ؕ وَمَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ‏
وَاِنْ تُكَذِّبُوْا நீங்கள் பொய்ப்பித்தால் فَقَدْ திட்டமாக كَذَّبَ பொய்ப்பித்துள்ளனர் اُمَمٌ பல சமுதாயத்தினர் مِّنْ قَبْلِكُمْ‌ؕ உங்களுக்கு முன்னர் وَمَا வேறில்லை عَلَى மீது الرَّسُوْلِ தூதர் اِلَّا தவிர الْبَلٰغُ எடுத்துரைத்தலே الْمُبِيْنُ‏ தெளிவான
29:18. வ இன் துகத்திBபூ Fபகத் கத்தBப உமமும் மின் கBப்லிகும் வ மா'அலர் ரஸூலி இல்லல் Bபலாகுல் முBபீன்
29:18. இன்னும் நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால் (தளர்ந்து போவதில்லை - ஏனெனில்) உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தவரும் (அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; ஆகவே, (இறை) தூதரின் கடமை (தம் தூதை) பகிரங்கமாக எடுத்துரைப்பதன்றி (வேறு) இல்லை.”
29:19
29:19 اَوَلَمْ يَرَوْا كَيْفَ يُبْدِئُ اللّٰهُ الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ ؕ اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ‏
اَوَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? كَيْفَ எப்படி يُبْدِئُ ஆரம்பமாக படைத்தான் اللّٰهُ அல்லாஹ் الْخَـلْقَ படைப்புகளை ثُمَّ பிறகு يُعِيْدُهٗ ؕ அவற்றை அவன் மீண்டும் உருவாக்குகிறான் اِنَّ நிச்சயமாக ذٰ لِكَ இது عَلَى اللّٰهِ அல்லாஹ்விற்கு يَسِيْرٌ‏ இலகுவானதாகும்
29:19. அவ லம் யரவ் கய்Fப யுBப்தி'உல் லாஹுல் கல்க தும்ம யு'ஈதுஹ்; இன்ன தாலிக 'அலல் லாஹி யஸீர்
29:19. அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு (அதனை எவ்வாறு) தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபம்.
29:20
29:20 قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ بَدَاَ الْخَـلْقَ‌ ثُمَّ اللّٰهُ يُنْشِئُ النَّشْاَةَ الْاٰخِرَةَ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‌ۚ‏
قُلْ கூறுவீராக! سِيْرُوْا சுற்றுங்கள்! فِى الْاَرْضِ பூமியில் فَانْظُرُوْا பாருங்கள்! كَيْفَ எப்படி بَدَاَ அவன்ஆரம்பித்தான் الْخَـلْقَ‌ படைப்புகளை ثُمَّ பிறகு اللّٰهُ அல்லாஹ் يُنْشِئُ உருவாக்குவான் النَّشْاَةَ உருவாக்குதல் الْاٰخِرَةَ‌ ؕ மற்றொரு முறை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் قَدِيْرٌ‌ۚ‏ பேராற்றலுடையவன்
29:20. குல் ஸீரூ Fபில் அர்ளி Fபன்ளுரூ கய்Fப Bபத அல் கல்க தும்ம் அல்லாஹு யுன்ஷி''உன் னஷ் அதல் ஆகிரஹ்; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
29:20. “பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
29:21
29:21 يُعَذِّبُ مَنْ يَّشَآءُ وَيَرْحَمُ مَنْ يَّشَآءُ ‌ۚ وَاِلَيْهِ تُقْلَبُوْنَ‏
يُعَذِّبُ வேதனை செய்வான் مَنْ يَّشَآءُ தான் நாடியவரை وَيَرْحَمُ இன்னும் கருணை காட்டுவான் مَنْ يَّشَآءُ ۚ அவன் நாடியவருக்கு وَاِلَيْهِ அவனிடமே تُقْلَبُوْنَ‏ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
29:21. யு'அத்திBபு ம(ன்)ய் யஷா'உ வ யர்ஹமு ம(ன்)ய் யஷா'; வ இலய்ஹி துக்லBபூன்
29:21. தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்குக் கிருபை செய்கிறான் - (இறுதியில்) அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
29:22
29:22 وَمَاۤ اَنْـتُمْ بِمُعْجِزِيْنَ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَآءِ‌ وَمَا لَـكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ
وَمَاۤ اَنْـتُمْ بِمُعْجِزِيْنَ நீங்கள் பலவீனப்படுத்திவிட முடியாது فِى الْاَرْضِ பூமியில் وَلَا فِى السَّمَآءِ‌ இன்னும் வானத்தில் وَمَا لَـكُمْ இன்னும் உங்களுக்கு இல்லை مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مِنْ وَّلِىٍّ ஒரு பாதுகாவலரும் وَّلَا نَصِيْرٍ‏ உதவியாளரும்
29:22. வ மா அன்தும் BபிமுஃஜிZஜீன Fபில் அர்ளி வலா Fபிஸ்ஸமா'இ வமா லகும் மின் தூனில் லாஹி மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
29:22. பூமியிலோ, வானத்திலோ நீங்கள் (அவனை) இயலாமல் ஆக்குபவர்களல்லர். மேலும், உங்களுக்கு அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலனோ, உதவியாளனோ இல்லை.  
29:23
29:23 وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ وَلِقَآٮِٕهٖۤ اُولٰٓٮِٕكَ يَٮِٕسُوْا مِنْ رَّحْمَتِىْ وَاُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ‏
وَالَّذِيْنَ كَفَرُوْا நிராகரிக்கின்றவர்கள் بِاٰيٰتِ அத்தாட்சிகளையும் اللّٰهِ அல்லாஹ்வின் وَلِقَآٮِٕهٖۤ அவனது சந்திப்பையும் اُولٰٓٮِٕكَ அவர்கள் يَٮِٕسُوْا நிராசை அடைந்து விட்டனர் مِنْ رَّحْمَتِىْ எனது கருணையிலிருந்து وَاُولٰٓٮِٕكَ அவர்கள் لَهُمْ அவர்களுக்கு உண்டு عَذَابٌ தண்டனை اَلِيْمٌ‏ வேதனை தரும்
29:23. வல்லதீன கFபரூ Bபி ஆயாதில் லாஹி வ லிகா'இஹீ உலா'இக ய'இஸூ மிர் ரஹ்மதீ வ உலா'இக லஹும் 'அதாBபுன் அலீம்
29:23. இன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ, அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள்; மேலும், இ(த்தகைய)வர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
29:24
29:24 فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا اقْتُلُوْهُ اَوْ حَرِّقُوْهُ فَاَنْجٰٮهُ اللّٰهُ مِنَ النَّارِ ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏
فَمَا كَانَ இல்லை جَوَابَ பதில் قَوْمِهٖۤ அவருடைய மக்களின் اِلَّاۤ தவிர اَنْ قَالُوا என்று கூறியே اقْتُلُوْهُ அவரைகொள்ளுங்கள் اَوْ அல்லது حَرِّقُوْهُ அவரை எரித்து விடுங்கள் فَاَنْجٰٮهُ ஆக, அவரை பாதுகாத்தான் اللّٰهُ அல்லாஹ் مِنَ النَّارِ ؕ நெருப்பிலிருந்து اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் உள்ளன لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்கின்ற
29:24. Fபமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலுக்துலூஹு அவ் ஹர்ரிகூஹு Fப அன்ஜாஹுல் லாஹு மினன் னார்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லி கவ்மி(ன்)ய் யு'மினூன்
29:24. இதற்கு அவருடைய சமூகத்தாரின் பதிலெல்லாம் “அவரைக் கொன்று விடுங்கள் அல்லது நெருப்பிலிட்டுப் பொசுக்குங்கள்” என்று கூறியதைத் தவிர வேறில்லை; ஆனால், அல்லாஹ் அவரை (அந்த) நெருப்பிலிருந்து ஈடேற்றினான்; நிச்சயமாக இதில், ஈமான் கொண்ட சமூகத்தோருக்கு தக்க அத்தாட்சிகள் இருக்கின்றன.
29:25
29:25 وَقَالَ اِنَّمَا اتَّخَذْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا ۙ مَّوَدَّةَ بَيْنِكُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ‌ۚ ثُمَّ يَوْمَ الْقِيٰمَةِ يَكْفُرُ بَعْضُكُمْ بِبَعْضٍ وَّيَلْعَنُ بَعْضُكُمْ بَعْضًا  وَّمَاْوٰٮكُمُ النَّارُ وَمَا لَـكُمْ مِّنْ نّٰصِرِيْنَ ۙ‏
وَقَالَ இன்னும் கூறினார் اِنَّمَا اتَّخَذْتُمْ நீங்கள் எடுத்துக் கொண்டதெல்லாம் مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اَوْثَانًا ۙ சிலைகளை مَّوَدَّةَ அன்பினால்தான் بَيْنِكُمْ உங்களுக்கு மத்தியில் فِى الْحَيٰوةِ வாழ்வில் الدُّنْيَا ۚ இவ்வுலக ثُمَّ பிறகு يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் يَكْفُرُ மறுத்து விடுவார்கள் بَعْضُكُمْ உங்களில் சிலர் بِبَعْضٍ சிலரை وَّيَلْعَنُ சபிப்பார்கள் بَعْضُكُمْ உங்களில் சிலர் بَعْضًا  சிலரை وَّمَاْوٰٮكُمُ உங்கள் தங்குமிடம் النَّارُ நரகம்தான் وَمَا لَـكُمْ உங்களுக்கு யாரும் இல்லை مِّنْ نّٰصِرِيْنَ ۙ உதவியாளர்கள்
29:25. வ கால இன்னமத் தகத் தும் மின் தூனில் லாஹி அவ்தானம் மவத்தத Bபய்னிகும் Fபில் ஹயாதித் துன்யா தும்ம யவ்மல் கியாமதி யக்Fபுரு Bபஃளுகும் BபிBபஃளி(ன்)வ் வ யல்'அனு Bபஃளுகும் Bபஃள(ன்)வ் வ ம'வாகுமுன் னாரு வமா லகும் மின் னாஸிரீன்
29:25. மேலும் (இப்ராஹீம்) சொன்னார்: “உலக வாழ்க்கையில் அல்லாஹ்வையன்றி (சிலரை) வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டது (அவர்கள் மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தினால்தான்; பின்னர் கியாம நாளன்று உங்களில் சிலர் சிலரை நிராகரிப்பார்கள்; உங்களில் சிலர் சிலரை சபித்துக் கொள்வர்; (இறுதியில்), நீங்கள் ஒதுங்குந்தலம் (நரக) நெருப்புத்தான்; (அங்கு) உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை.”
29:26
29:26 فَاٰمَنَ لَهٗ لُوْطٌ‌ۘ وَقَالَ اِنِّىْ مُهَاجِرٌ اِلٰى رَبِّىْ ؕ اِنَّهٗ هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
فَاٰمَنَ ஆக, நம்பிக்கைகொண்டார் لَهٗ அவரை لُوْطٌ‌ۘ லூத் وَقَالَ இன்னும் அவர் கூறினார் اِنِّىْ நிச்சயமாக நான் مُهَاجِرٌ வெளியேறிசெல்கிறேன் اِلٰى رَبِّىْ ؕ என் இறைவனின் பக்கம் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
29:26. Fப ஆமன லஹூ லூத்; வ கால இன்னீ முஹஜிருன் இலா ரBப்Bபீ இன்னஹூ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
29:26. (இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்ராஹீம்): “நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” என்று கூறினார்.
29:27
29:27 وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ وَجَعَلْنَا فِىْ ذُرِّيَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتٰبَ وَاٰتَيْنٰهُ اَجْرَهٗ فِى الدُّنْيَا ‌ۚ وَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَ‏
وَوَهَبْنَا நாம் வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கையும் وَيَعْقُوْبَ யஃகூபையும் وَجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் فِىْ ذُرِّيَّتِهِ அவரது சந்ததிகளில் النُّبُوَّةَ நபித்துவத்தையும் وَالْكِتٰبَ வேதங்களையும் وَاٰتَيْنٰهُ இன்னும் அவருக்கு நாம் கொடுத்தோம் اَجْرَهٗ அவருடைய கூலியை فِى الدُّنْيَا ۚ இம்மையில் وَاِنَّهٗ நிச்சயமாக அவர் فِى الْاٰخِرَةِ மறுமையில் لَمِنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில் இருப்பார்
29:27. வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப வ ஜ'அல்னா Fபீ துர்ரிய்யதிஹின் னுBபுவ்வத வல் கிதாBப வ ஆதய்னாஹு அஜ்ரஹூ Fபித் துன்யா வ இன்னஹூ Fபில் ஆகிரதி லமினஸ் ஸாலிஹீன்
29:27. மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.
29:28
29:28 وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اِنَّكُمْ لَـتَاْتُوْنَ الْفَاحِشَةَ مَا سَبَـقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِيْنَ‏
وَلُوْطًا இன்னும் லூத்தை اِذْ قَالَ அவர் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக! لِقَوْمِهٖۤ தனது மக்களுக்கு اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَـتَاْتُوْنَ செய்கிறீர்கள் الْفَاحِشَةَ மானக்கேடான செயலை مَا سَبَـقَكُمْ உங்களுக்கு முன் செய்ததில்லை بِهَا مِنْ اَحَدٍ இதை/ஒருவரும் مِّنَ الْعٰلَمِيْنَ‏ அகிலத்தாரில்
29:28. வ லூதன் இத் கால லிகவ்மிஹீ இன்னகும் ல த'தூனல் Fபாஹிஷத மா ஸBபககும் Bபிஹா மின் அஹதின் மினல் 'ஆலமீன்
29:28. மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.
29:29
29:29 اَٮِٕنَّكُمْ لَـتَاْتُوْنَ الرِّجَالَ وَتَقْطَعُوْنَ السَّبِيْلَ ۙ وَتَاْ تُوْنَ فِىْ نَادِيْكُمُ الْمُنْكَرَ ‌ؕ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللّٰهِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏
اَٮِٕنَّكُمْ لَـتَاْتُوْنَ நீங்கள் உறவு கொள்கிறீர்களா? الرِّجَالَ ஆண்களிடம் وَتَقْطَعُوْنَ தடுக்கிறீர்கள் السَّبِيْلَ ۙ பாதைகளை وَتَاْ تُوْنَ செய்கிறீர்கள் فِىْ نَادِيْكُمُ உங்கள் சபைகளில் الْمُنْكَرَ ؕ கெட்டசெயலை فَمَا كَانَ இருக்கவில்லை جَوَابَ பதில் قَوْمِهٖۤ அவருடைய மக்களின் اِلَّاۤ தவிர اَنْ قَالُوا என்று கூறியதை ائْتِنَا எங்களிடம் கொண்டு வருவீராக بِعَذَابِ தண்டனையை اللّٰهِ அல்லாஹ்வின் اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ‏ உண்மையாளர்களில்
29:29. அ'இன்னகும் ல த'தூனர் ரிஜால வ தக்த'ஊனஸ் ஸBபீல வ த'தூன Fபீ னாதீகுமுல் முன்கர Fபமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலு' தினா Bபி'அதாBபில் லாஹி இன் குன்த மினஸ் ஸாதிகீன்
29:29. நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்” என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: “நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக” என்பது தவிர வேறு எதுவுமில்லை.
29:30
29:30 قَالَ رَبِّ انْصُرْنِىْ عَلَى الْقَوْمِ الْمُفْسِدِيْنَ
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! انْصُرْنِىْ எனக்கு நீ உதவுவாயாக عَلَى எதிராக الْقَوْمِ மக்களுக்கு الْمُفْسِدِيْنَ‏ கெடுதி செய்கின்ற(வர்கள்)
29:30. கால ரBப்Bபின் ஸுர்னீ 'அலல் கவ்மில் முFப்ஸிதீன்
29:30. அப்போது அவர்: “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.  
29:31
29:31 وَلَمَّا جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِيْمَ بِالْبُشْرٰىۙ قَالُـوْۤا اِنَّا مُهْلِكُوْۤا اَهْلِ هٰذِهِ الْقَرْيَةِ ‌ۚ اِنَّ اَهْلَهَا كَانُوْا ظٰلِمِيْنَ‌ ۖ ‌ۚ‏
وَلَمَّا جَآءَتْ வந்த போது رُسُلُنَاۤ நமது தூதர்கள் اِبْرٰهِيْمَ இப்ராஹீமிடம் بِالْبُشْرٰىۙ நற்செய்தியுடன் قَالُـوْۤا அவர்கள் கூறினார்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் مُهْلِكُوْۤا அழிக்கப் போகிறோம் اَهْلِ வசிப்பவர் هٰذِهِ இந்த الْقَرْيَةِ ۚ ஊரில் اِنَّ நிச்சயமாக اَهْلَهَا இதில் வசிப்பவர்கள் كَانُوْا இருக்கின்றனர் ظٰلِمِيْنَ‌ ۖ ۚ‏ தீயவர்களாக
29:31. வ லம்மா ஜா'அத் ருஸுலுனா இBப்ராஹீம Bபில் Bபுஷ்ரா காலூ இன்னா முஹ்லிகூ அஹ்லி ஹாதிஹில் கர்யதி இன்ன அஹ்லஹா கானூ ளாலிமீன்
29:31. நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள்.
29:32
29:32 قَالَ اِنَّ فِيْهَا لُوْطًا ‌ؕ قَالُوْا نَحْنُ اَعْلَمُ بِمَنْ فِيْهَا‌ لَـنُـنَجِّيَـنَّهٗ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ كَانَتْ مِنَ الْغٰبِرِيْنَ‏
قَالَ அவர் கூறினார் اِنَّ நிச்சயமாக فِيْهَا அதில் இருக்கிறார் لُوْطًا ؕ லூத் قَالُوْا அவர்கள் கூறினார்கள் نَحْنُ நாங்கள் اَعْلَمُ நன்கறிந்தவர்கள் بِمَنْ فِيْهَا‌ அதில்உள்ளவர்களை لَـنُـنَجِّيَـنَّهٗ நிச்சயமாக அவரையும் நாம் பாதுகாப்போம் وَاَهْلَهٗۤ அவருடைய குடும்பத்தாரையும் اِلَّا தவிர امْرَاَتَهٗ அவருடைய மனைவியை كَانَتْ அவள்ஆகிவிடுவாள் مِنَ الْغٰبِرِيْنَ‏ மீதம் இருப்பவர்களில்
29:32. கால இன்ன Fபீஹா லூதா; காலூ னஹ்னு அஃலமு Bபிமன் Fபீஹா லனுனஜ்ஜ்ஜியன்னஹூ வ அஹ்லஹூ இல்லம் ர அதஹூ கானத் மினல் காBபிரீன்
29:32. “நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்ராஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.
29:33
29:33 وَلَمَّاۤ اَنْ جَآءَتْ رُسُلُـنَا لُوْطًا سِىْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالُوْا لَا تَخَفْ وَلَا تَحْزَنْ‌ اِنَّا مُنَجُّوْكَ وَاَهْلَكَ اِلَّا امْرَاَتَكَ كَانَتْ مِنَ الْغٰبِرِيْنَ‏
وَلَمَّاۤ اَنْ جَآءَتْ வந்த போது رُسُلُـنَا நமது தூதர்கள் لُوْطًا லூத்திடம் سِىْٓءَ அவர் மனம் புண்பட்டார் بِهِمْ அவர்களால் وَضَاقَ இன்னும் அவர் நெருக்கடிக்கு உள்ளானார் بِهِمْ அவர்களால் ذَرْعًا மன وَّقَالُوْا அவர்கள் கூறினார்கள் لَا تَخَفْ பயப்படாதீர் وَلَا تَحْزَنْ‌ இன்னும் கவலைப்படாதீர்! اِنَّا நிச்சயமாக நாம் مُنَجُّوْكَ உம்மைபாதுகாப்போம் وَاَهْلَكَ உமது குடும்பத்தையும் اِلَّا தவிர امْرَاَتَكَ உமது மனைவியை كَانَتْ அவள்ஆகிவிடுவாள் مِنَ الْغٰبِرِيْنَ‏ மீதம் இருப்பவர்களில்
29:33. வ லம்மா அன் ஜா'அத் ருஸுலுனா லூதன் ஸீ'அ Bபிஹிம் வ ளாக Bபிஹிம் தர்'அ(ன்)வ் வ காலூ லா தகFப் வலா தஹ்Zஜன் இன்னா முனஜ்ஜூக வ அஹ்லக இல்லம் ர அதக கானத் மினல் காBபிரீன்
29:33. இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் “நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்” என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.
29:34
29:34 اِنَّا مُنْزِلُوْنَ عَلٰٓى اَهْلِ هٰذِهِ الْقَرْيَةِ رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ‏
اِنَّا நிச்சயமாக நாம் مُنْزِلُوْنَ இறக்குவோம் عَلٰٓى மீது اَهْلِ வசிப்பவர் هٰذِهِ இந்த الْقَرْيَةِ ஊரில் رِجْزًا தண்டனையை مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ‏ அவர்கள் பாவம் செய்துகொண்டு இருந்ததால்
29:34. இன்னா முன்Zஜிலூன 'அலா அஹ்லி ஹாதிஹில் கர்யதி ரிஜ்Zஜன் மினஸ் ஸமா'இ Bபிமா கானூ யFப்ஸுகூன்
29:34. நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது, இவர்கள் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக, வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.
29:35
29:35 وَلَقَدْ تَّرَكْنَا مِنْهَاۤ اٰيَةًۢ بَيِّنَةً لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக تَّرَكْنَا நாம் விட்டுள்ளோம் مِنْهَاۤ அதில் اٰيَةًۢ அத்தாட்சியை بَيِّنَةً தெளிவான لِّـقَوْمٍ மக்களுக்கு يَّعْقِلُوْنَ‏ சிந்தித்து புரிகின்ற
29:35. வ லகத் தரக்னா மின் ஹா ஆயதன் Bபய்யினதன் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
29:35. (அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம்.
29:36
29:36 وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا ۙ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ وَ ارْجُوا الْيَوْمَ الْاٰخِرَ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ‏
وَاِلٰى مَدْيَنَ இன்னும் ‘மத்யன்’க்கு اَخَا சகோதரர் هُمْ அவர்களுடைய شُعَيْبًا ۙ ஷுஐபை فَقَالَ அவர் கூறினார் يٰقَوْمِ என் மக்களே! اعْبُدُوا வணங்குங்கள்! اللّٰهَ அல்லாஹ்வை وَ ارْجُوا இன்னும் ஆதரவு வையுங்கள்! الْيَوْمَ நாளை الْاٰخِرَ மறுமை وَلَا تَعْثَوْا வரம்பு மீறி அழிச்சாட்டியம் செய்யாதீர்கள் فِى الْاَرْضِ பூமியில் مُفْسِدِيْنَ‏ தீயவர்களாக இருந்து
29:36. வ இலா மத்யன அகாஹும் ஷு'அய்Bபன் Fபகால யா கவ்மிஃ-Bபுதுல் லாஹ வர்ஜுல் யவ்மல் ஆகிர வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
29:36. மேலும், மத்யன் (ஊராருக்கு) அவர்கள் சகோதரராகிய ஷுஐபை (அனுப்பி வைத்தோம்); ஆகவே அவர்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; இறுதி நாளை (நம்பி) எதிர்பாருங்கள், மேலும், பூமியில் குழப்பம் செய்வோராக, (விஷமிகளாகத்) திரியாதீர்கள்” என்று கூறினார்.
29:37
29:37 فَكَذَّبُوْهُ فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِىْ دَارِهِمْ جٰثِمِيْنَ‏
فَكَذَّبُوْهُ அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர் فَاَخَذَتْهُمُ ஆகவே, அவர்களைப் பிடித்தது الرَّجْفَةُ நிலநடுக்கம் فَاَصْبَحُوْا அவர்கள் காலையில் ஆகிவிட்டனர் فِىْ دَارِهِمْ தங்கள் இல்லத்தில் جٰثِمِيْنَ‏ இறந்தவர்களாக
29:37. Fபகத்தBபூஹு Fப அகதத் ஹுமுர் ரஜ்Fபது Fப அஸ்Bபஹூ Fபீ தாரிஹிம் ஜாதிமீன்
29:37. எனினும் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலால் அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது; ஆகவே, அவர்கள் தம் வீடுகளில் அதிகாலையில் (மரித்து) முகங்குப்புற விழுந்து கிடந்தார்கள்.
29:38
29:38 وَعَادًا وَّثَمُوْدَا۟ وَقَدْ تَّبَيَّنَ لَـكُمْ مِّنْ مَّسٰكِنِهِمْ‌ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيْلِ وَكَانُوْا مُسْتَـبْصِرِيْنَۙ‏
وَعَادًا இன்னும் ஆதை وَّثَمُوْدَا۟ இன்னும் சமூதை وَقَدْ تَّبَيَّنَ தெளிவாக இருக்கின்றது لَـكُمْ உங்களுக்கு مِّنْ مَّسٰكِنِهِمْ‌ அவர்களின் தங்குமிடங்களில் இருந்து وَزَيَّنَ அலங்கரித்தான் لَهُمُ அவர்களுக்கு الشَّيْطٰنُ ஷைத்தான் اَعْمَالَهُمْ அவர்களின் செயல்களை فَصَدَّ தடுத்தான் هُمْ அவர்களை عَنِ السَّبِيْلِ பாதையிலிருந்து وَكَانُوْا அவர்கள் இருந்தனர் مُسْتَـبْصِرِيْنَۙ‏ தெளிவானவர்களாக
29:38. வ 'ஆத(ன்)வ் வ தமூத வ கத் தBபய்யன லகும் மின் மஸாகினிஹிம் வ Zஜய்யன லஹுமுஷ் ஷய்தானு அஃமாலஹும் Fபஸத்தஹும் 'அனிஸ் ஸBபீலி வ கானூ முஸ்தBப்ஸிரீன்
29:38. இவ்வாறே, ஆது, ஸமூது (சமூகத்தாரையும் அழித்தோம்); அன்றியும் அவர்கள் வசித்த இடங்களிலிருந்து (ஒரு சில சின்னங்கள்) உங்களுக்குத் தெளிவாக தென்படுகின்றன; ஏனெனில் ஷைத்தான் அவர்களுடைய (தீச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் நல்லறிவு படைத்தவர்களாக இருந்தும், அவர்களை நேர்வழியில் (போக விடாது) தடுத்து விட்டான்.
29:39
29:39 وَقَارُوْنَ وَفِرْعَوْنَ وَهَامٰنَ‌ وَلَقَدْ جَآءَهُمْ مُّوْسٰى بِالْبَيِّنٰتِ فَاسْتَكْبَرُوْا فِى الْاَرْضِ وَمَا كَانُوْا سٰبِقِيْنَ ‌ ۖ ‌ ۚ‏
وَقَارُوْنَ இன்னும் காரூனையும் وَفِرْعَوْنَ ஃபிர்அவ்னையும் وَهَامٰنَ‌ ஹாமானையும் وَلَقَدْ திட்டவட்டமாக جَآءَهُمْ அவர்களிடம் வந்தார் مُّوْسٰى மூசா بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளுடன் فَاسْتَكْبَرُوْا அவர்கள் பெருமையடித்தனர் فِى الْاَرْضِ பூமியில் وَمَا كَانُوْا அவர்கள் இல்லை سٰبِقِيْنَ ۖ ۚ‏ தப்பி விடுபவர்களாக
29:39. வ காரூன வ Fபிர்'அவ்ன வ ஹாமான வ லகத் ஜா'அஹும் மூஸா Bபில்Bபய்யினாதி Fபஸ்தக்Bபரூ Fபில் அர்ளி வமா கானூ ஸாBபிகீன்
29:39. இன்னும் ஃகாரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (அழித்தோம்); திடனாக, அவர்களிடம் மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்; எனினும், (அவற்றை நிராகரித்து) அவர்கள் பூமியில் பெருமையடித்து நின்றார்கள். ஆனால் அவர்கள் (அழிவிலிருந்து) தப்பித்தார்களில்லை.
29:40
29:40 فَكُلًّا اَخَذْنَا بِذَنْۢبِهٖ‌ ۚ فَمِنْهُمْ مَّنْ اَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا‌ ۚ وَمِنْهُمْ مَّنْ اَخَذَتْهُ الصَّيْحَةُ‌ ۚ وَمِنْهُمْ مَّنْ خَسَفْنَا بِهِ الْاَرْضَ‌ ۚ وَمِنْهُمْ مَّنْ اَغْرَقْنَا‌ ۚ وَمَا كَانَ اللّٰهُ لِيَـظْلِمَهُمْ وَلٰـكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏
فَكُلًّا ஒவ்வொருவரையும் اَخَذْنَا நாம் தண்டித்தோம் بِذَنْۢبِهٖ‌ ۚ அவர்களின் பாவத்தினால் فَمِنْهُمْ இவர்களில் مَّنْ எவர்கள் اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் عَلَيْهِ அவர்கள் மீது حَاصِبًا‌ ۚ கல் மழையை وَمِنْهُمْ இன்னும் இவர்களில் مَّنْ اَخَذَتْهُ எவர்கள்/பிடித்தோம்/அவர்கள் الصَّيْحَةُ‌ ۚ இடி முழக்கம் وَمِنْهُمْ இன்னும் , இவர்களில் مَّنْ எவர்கள் خَسَفْنَا நாம் சொருகினோம் بِهِ அவர்களை الْاَرْضَ‌ ۚ பூமியில் وَمِنْهُمْ இன்னும் இவர்களில் مَّنْ اَغْرَقْنَا‌ ۚ எவர்கள்/நாம் மூழ்கடித்தோம் وَمَا كَانَ இல்லை اللّٰهُ அல்லாஹ் لِيَـظْلِمَهُمْ அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக وَلٰـكِنْ எனினும் كَانُوْۤا அவர்கள் இருந்தனர் اَنْفُسَهُمْ தங்களுக்கே يَظْلِمُوْنَ‏ அநியாயம் செய்பவர்களாக
29:40. Fபகுல்லன் அகத்னா Bபி தன்Bபிஹீ Fபமின்ஹும் மன் அர்ஸல்னா 'அலய்ஹி ஹாஸிBபா; வ மின்ஹும் மன் அகதத் ஹுஸ் ஸய்ஹது வ மின்ஹும் மன் கஸFப்னா Bபிஹில் அர்ள வ மின்ஹும் மன் அக்ரக்னா; வமா கானல் லாஹு லி யள்லிமஹும் வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
29:40. இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை; அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.
29:41
29:41 مَثَلُ الَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِيَآءَ كَمَثَلِ الْعَنْكَبُوْتِ ‌ۖۚ اِتَّخَذَتْ بَيْتًا ‌ؕ وَ اِنَّ اَوْهَنَ الْبُيُوْتِ لَبَيْتُ الْعَنْكَبُوْتِ‌ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏
مَثَلُ உதாரணம் الَّذِيْنَ எவர்கள் اتَّخَذُوْا ஆக்கிக் கொண்டனர் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اَوْلِيَآءَ பாதுகாவலர்களாக كَمَثَلِ உதாரணத்தைப் போல الْعَنْكَبُوْتِ ۖۚ சிலந்தியின் اِتَّخَذَتْ அது ஆக்கிக் கொண்டது بَيْتًا ؕ ஒரு வீட்டை وَ اِنَّ நிச்சயமாக اَوْهَنَ மிக பலவீனமானது الْبُيُوْتِ வீடுகளில் لَبَيْتُ வீடே الْعَنْكَبُوْتِ‌ۘ சிலந்தியின் لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
29:41. மதலுல் லதீனத் தகதூ மின் தூனில் லாஹி அவ்லியா'அ கமதலில் 'அன்கBபூத், இத்தகதத் Bபய்தா; வ இன்ன அவ்ஹனல் Bபுயூதி ல Bபய்துல் 'அன்கBபூத்; லவ் கானூ யஃலமூன்
29:41. அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).
29:42
29:42 اِنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مِنْ شَىْءٍ‌ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَعْلَمُ அறிகின்றான் مَا يَدْعُوْنَ அவர்கள் அழைக்கின்றவற்றை مِنْ دُوْنِهٖ அவனையன்றி مِنْ شَىْءٍ‌ؕ எதுவாக இருந்தாலும் وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
29:42. இன்னல் லாஹ யஃலமு மா யத்'ஊன மின் தூனிஹீ மின் ஷய்'; வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
29:42. நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் - இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
29:43
29:43 وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ‌ۚ وَمَا يَعْقِلُهَاۤ اِلَّا الْعٰلِمُوْنَ‏
وَتِلْكَ இந்த الْاَمْثَالُ உதாரணங்கள் نَضْرِبُهَا அவற்றை நாம் விவரிக்கிறோம் لِلنَّاسِ‌ۚ மக்களுக்கு وَمَا يَعْقِلُهَاۤ இவற்றை சிந்தித்து புரியமாட்டார்கள் اِلَّا தவிர الْعٰلِمُوْنَ‏ அறிஞர்களை
29:43. வ தில்கல் அம்தாலு னள்ரிBபுஹா லின்னாஸி வமா யஃகிலுஹா இல்லல் 'ஆலிமூன்
29:43. இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
29:44
29:44 خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ بِالْحَـقِّ‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّـلْمُؤْمِنِيْنَ
خَلَقَ படைத்தான் اللّٰهُ அல்லாஹ் السَّمٰوٰتِ வானங்களையும் وَ الْاَرْضَ பூமியையும் بِالْحَـقِّ‌ ؕ உண்மையான காரணத்திற்கே اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَاٰيَةً ஓர் அத்தாட்சி இருக்கிறது لِّـلْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
29:44. கலகல் லாஹுஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்க்; இன்ன Fபீ தாலிக ல ஆயதன் லில் மு'மினீன்
29:44. வானங்களையும், பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே படைத்துள்ளான் - நிச்சயமாக இதில் முஃமின்களுக்கு அத்தாட்சி இருக்கிறது.  
29:45
29:45 اُتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ ‌ؕ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ؕ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ‏
اُتْلُ ஓதுவீராக! مَاۤ اُوْحِىَ வஹீ அறிவிக்கப்பட்டதை اِلَيْكَ உமக்கு مِنَ الْكِتٰبِ வேதத்தில் وَاَقِمِ இன்னும் நிலைநிறுத்துவீராக الصَّلٰوةَ ؕ தொழுகையை اِنَّ நிச்சயமாக الصَّلٰوةَ தொழுகை تَنْهٰى தடுக்கிறது عَنِ الْفَحْشَآءِ மானக்கேடானவற்றை விட்டும் وَالْمُنْكَرِ‌ؕ தீயகாரியங்களை விட்டும் وَلَذِكْرُ நினைவு கூர்வது اللّٰهِ அல்லாஹ் اَكْبَرُ ؕ மிகப் பெரியது وَاللّٰهُ அல்லாஹ் يَعْلَمُ நன்கறிகின்றான் مَا تَصْنَعُوْنَ‏ நீங்கள் செய்பவற்றை
29:45. உத்லு மா ஊஹிய இலய்க மினல் கிதாBபி வ அகிமிஸ் ஸலாத இன்னஸ் ஸலாத தன்ஹா 'அனில் Fபஹ்ஷா'இ வல் முன்கர்; வ லதிக்ருல் லாஹி அக்Bபர்; வல் லாஹு யஃலமு மா தஸ்ன'ஊன்
29:45. (நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.
29:46
29:46 وَلَا تُجَادِلُوْٓا اَهْلَ الْكِتٰبِ اِلَّا بِالَّتِىْ هِىَ اَحْسَنُ ۖ اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ‌ وَقُوْلُوْٓا اٰمَنَّا بِالَّذِىْۤ اُنْزِلَ اِلَيْنَا وَاُنْزِلَ اِلَيْكُمْ وَاِلٰهُـنَا وَاِلٰهُكُمْ وَاحِدٌ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
وَلَا تُجَادِلُوْٓا தர்க்கம் செய்யாதீர்கள் اَهْلَ الْكِتٰبِ வேதமுடையவர்களிடம் اِلَّا அன்றி بِالَّتِىْ முறையில் هِىَ அது اَحْسَنُ ۖ மிக அழகியது اِلَّا தவிர الَّذِيْنَ ظَلَمُوْا அநியாயக்காரர்களை مِنْهُمْ‌ அவர்களில் இருக்கின்ற وَقُوْلُوْٓا இன்னும் நீங்கள் கூறுங்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِالَّذِىْۤ اُنْزِلَ இறக்கப்பட்டதையும் اِلَيْنَا எங்களுக்கு وَاُنْزِلَ இறக்கப்பட்டதையும் اِلَيْكُمْ உங்களுக்கு وَاِلٰهُـنَا எங்கள் கடவுளும் وَاِلٰهُكُمْ உங்கள் கடவுளும் وَاحِدٌ ஒருவன்தான் وَّنَحْنُ நாங்கள் لَهٗ அவனுக்குத்தான் مُسْلِمُوْنَ‏ கீழ்ப்பணிந்தவர்கள்
29:46. வ லா துஜாதிலூ அஹ்லல் கிதாBபி இல்லா Bபில்லதீ ஹிய அஹ்ஸனு இல்லல் லதீன ளலமூ மின்ஹும் வ கூலூ ஆமன்னா Bபில்லதீ உன்Zஜில இலய்னா வ உன்Zஜில இலய்கும் வ இலாஹுன்ன வ இலஹுகும் வாஹிது(ன்)வ்-வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
29:46. இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; “எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்” என்று கூறுவீர்களாக.
29:47
29:47 وَكَذٰلِكَ اَنْزَلْنَاۤ اِلَيْكَ الْكِتٰبَ‌ؕ فَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يُؤْمِنُوْنَ بِهٖ‌ۚ وَمِنْ هٰٓؤُلَاۤءِ مَنْ يُّؤْمِنُ بِهٖ ‌ؕ وَ مَا يَجْحَدُ بِاٰيٰتِنَاۤ اِلَّا الْكٰفِرُوْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறுதான் اَنْزَلْنَاۤ நாம் இறக்கினோம் اِلَيْكَ உமக்கு الْكِتٰبَ‌ؕ இவ்வேதத்தை فَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ எவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்கு الْكِتٰبَ வேதத்தை يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள் بِهٖ‌ۚ இதை وَمِنْ هٰٓؤُلَاۤءِ இன்னும் இவர்களில் مَنْ يُّؤْمِنُ بِهٖ ؕ நம்பிக்கை கொள்கின்றவர்களும்/இதை وَ مَا يَجْحَدُ மறுக்க மாட்டார்கள் بِاٰيٰتِنَاۤ நமது வசனங்களை اِلَّا தவிர الْكٰفِرُوْنَ‏ நிராகரிப்பாளர்களை
29:47. வ கதாலிக அன்Zஜல்னா இலய்கல் கிதாBப்; Fபல்லதீன ஆதய்னாஹுமுல் கிதாBப யு'மினூன Bபிஹீ வ மின் ஹா'உலா'இ ம(ன்)ய் யு'மினு Bபிஹ்; வமா யஜ்ஹது Bபி'ஆயாதினா இல்லல் காFபிரூன்
29:47. இவ்விதமே, (அவர்களுக்கு வேதம் இறக்கியது போன்றே நபியே!) உமக்கும் இவ்வேதத்தை இறக்கியிருக்கிறோம்; ஆகவே, நாம் (முன்னர்) எவருக்கு வேதத்தை, வழங்கியுள்ளோமோ, அவர்கள் இதனை நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும், இதை நம்பி ஏற்றுக் கொள்வோரும் இவர்களில் இருக்கிறார்கள் - காஃபிர்களைத் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
29:48
29:48 وَمَا كُنْتَ تَـتْلُوْا مِنْ قَبْلِهٖ مِنْ كِتٰبٍ وَّلَا تَخُطُّهٗ بِيَمِيْنِكَ‌ اِذًا لَّارْتَابَ الْمُبْطِلُوْنَ‏
وَمَا كُنْتَ நீர் இல்லை تَـتْلُوْا ஓதுபவராக مِنْ قَبْلِهٖ இதற்கு முன் مِنْ كِتٰبٍ ஒரு வேதத்தை وَّلَا تَخُطُّهٗ இன்னும் அதை எழுதுபவராகவும் இல்லை بِيَمِيْنِكَ‌ உமது வலக்கரத்தால் اِذًا அப்படி இருந்திருந்தால் لَّارْتَابَ நிச்சயமாக சந்தேகம் கொண்டிருப்பார்கள் الْمُبْطِلُوْنَ‏ வீணர்கள்
29:48. வமா குன்த தத்லூ மின் கBப்லிஹீ மின் கிதாBபி(ன்)வ் வலா தகுத்துBப்ஹூ Bபி யமீனிக இதல் லர்தாBபல் முBப்திலூன்
29:48. அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.
29:49
29:49 بَلْ هُوَ اٰيٰتٌۢ بَيِّنٰتٌ فِىْ صُدُوْرِ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ‌ؕ وَمَا يَجْحَدُ بِاٰيٰتِنَاۤ اِلَّا الظّٰلِمُوْنَ‏
بَلْ மாறாக, هُوَ இது اٰيٰتٌۢ அத்தாட்சிகளாகும் بَيِّنٰتٌ தெளிவான فِىْ صُدُوْرِ நெஞ்சங்களில் الَّذِيْنَ اُوْتُوا கொடுக்கப்பட்டவர்களின் الْعِلْمَ‌ؕ கல்வி وَمَا يَجْحَدُ மறுக்க மாட்டார்கள் بِاٰيٰتِنَاۤ நமது வசனங்களை اِلَّا தவிர الظّٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்களை
29:49. Bபல் ஹுவ ஆயாதும் Bபய்யினாதுன் Fபீ ஸுதூரில் லதீன ஊதுல் 'இல்ம்; வமா யஜ்ஹது Bபி ஆயாதினா இல்லள் ளாலிமூன்
29:49. அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
29:50
29:50 وَقَالُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْهِ اٰيٰتٌ مِّنْ رَّبِّهٖ‌ؕ قُلْ اِنَّمَا الْاٰيٰتُ عِنْدَ اللّٰهِ ؕ وَاِنَّمَاۤ اَنَا۟ نَذِيْرٌ مُّبِيْنٌ‏
وَقَالُوْا அவர்கள் கூறினர் لَوْلَاۤ اُنْزِلَ இறக்கப்பட வேண்டாமா? عَلَيْهِ இவர் மீது اٰيٰتٌ அத்தாட்சிகள் مِّنْ رَّبِّهٖ‌ؕ அவரது இறைவனிடமிருந்து قُلْ கூறுவீராக! اِنَّمَا எல்லாம் الْاٰيٰتُ அத்தாட்சிகள் عِنْدَ اللّٰهِ ؕ அல்லாஹ்விடம் وَاِنَّمَاۤ எல்லாம் اَنَا۟ நான் نَذِيْرٌ எச்சரிப்பாளர்தான் مُّبِيْنٌ‏ தெளிவான
29:50. வ காலூ லவ் லா உன்Zஜில 'அலய்ஹி ஆயாதும் மிர் ரBப்Bபிஹீ குல் இன்னமல் ஆயாது 'இன்தல் லாஹி வ இன்னமா அன னதீரும் முBபீன்
29:50. “அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
29:51
29:51 اَوَلَمْ يَكْفِهِمْ اَنَّاۤ اَنْزَلْنَا عَلَيْكَ الْكِتٰبَ يُتْلٰى عَلَيْهِمْ‌ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَرَحْمَةً وَّذِكْرٰى لِقَوْمٍ يُّؤْمِنُوْنَ
اَوَلَمْ يَكْفِهِمْ அவர்களுக்கு போதுமாகாதா? اَنَّاۤ நிச்சயமாக நாம் اَنْزَلْنَا இறக்கியது عَلَيْكَ உம்மீது الْكِتٰبَ இந்த வேதத்தை يُتْلٰى ஓதப்படுகின்ற عَلَيْهِمْ‌ؕ அவர்கள் மீது اِنَّ நிச்சயமாக فِىْ ذٰلِكَ இதில் இருக்கின்றன لَرَحْمَةً அருளும் وَّذِكْرٰى அறிவுரையும் لِقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்கின்ற
29:51. அவ லம் யக்Fபிஹிம் அன்னா அன்Zஜல்னா 'அலய்கல் கிதாBப யுத்லா 'அலய்ஹிம்; இன்ன Fபீ தாலிக லரஹ்மத(ன்)வ் வ திக்ரா லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
29:51. அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.  
29:52
29:52 قُلْ كَفٰى بِاللّٰهِ بَيْنِىْ وَبَيْنَكُمْ شَهِيْدًا ‌ۚ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ ؕ وَالَّذِيْنَ اٰمَنُوْا بِالْبَاطِلِ وَكَفَرُوْا بِاللّٰهِ ۙ اُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏
قُلْ கூறுவீராக! كَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்வே بَيْنِىْ எனக்கிடையில் وَبَيْنَكُمْ உங்களுக்குஇடையில் شَهِيْدًا ۚ சாட்சியால் يَعْلَمُ அவன் நன்கறிவான் مَا உள்ளவற்றை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِ‌ ؕ இன்னும் பூமியில் وَالَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் بِالْبَاطِلِ பொய்யை وَكَفَرُوْا நிராகரித்தவர்கள் بِاللّٰهِ ۙ அல்லாஹ்வை اُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْخٰسِرُوْنَ‏ நஷ்டவாளிகள்
29:52. குல் கFபா Bபில்லாஹி Bபய்னீ வ Bபய்னகும் ஷஹீதா; யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; வல்லதீன ஆமனூ Bபில் Bபாதிலி வ கFபரூ Bபில்லாஹி உலா'இக ஹுமுல் காஸிரூன்
29:52. “எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே போதுமானவன்; வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான்; எனவே, எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்” என்று (நபியே!) நீர் கூறும்.
29:53
29:53 وَيَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ‌ؕ وَلَوْلَاۤ اَجَلٌ مُّسَمًّى لَّجَآءَهُمُ الْعَذَابُؕ وَلَيَاْتِيَنَّهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ‏
وَيَسْتَعْجِلُوْنَكَ அவர்கள் உம்மிடம் அவசரமாகக் கேட்கின்றனர் بِالْعَذَابِ‌ؕ தண்டனையை وَلَوْلَاۤ اَجَلٌ ஒரு தவணை இல்லை என்றால் مُّسَمًّى குறிப்பிடப்பட்ட لَّجَآءَ வந்தே இருக்கும் هُمُ அவர்களுக்கு الْعَذَابُؕ தண்டனை وَلَيَاْتِيَنَّهُمْ அவர்களிடம் வரும் بَغْتَةً திடீரென وَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَا يَشْعُرُوْنَ‏ உணராதவர்களாக இருக்க
29:53. வ யஸ்தஃஜிலூனக Bபில்'அதாBப்; வ லவ் லா அஜலும் முஸம்மல் லஜா'அஹுமுல் அ'தாBப்; வ ல ய'திஅன்னஹும் Bபக்த த(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
29:53. இன்னும், (மறுமையின்) வேதனையைப் பற்றி அவர்கள் உம்மை அவசரப்படுத்துகிறார்கள்; மேலும், (அதற்கெனக்) குறிப்பிட்ட தவணை ஏற்படுத்தப்படாதிருப்பின் அவ்வேதனை அவர்களுக்கு வந்திருக்கும்; எனினும் (அத்தவணையை) அவர்கள் உணர்ந்தறிய முடியாதிருக்கும் நிலையில், அவர்களிடம் அ(வ்வேதனையான)து திடீரென்று வந்து சேரும்.
29:54
29:54 يَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِؕ وَ اِنَّ جَهَنَّمَ لَمُحِيْطَةٌ ۢ بِالْكٰفِرِيْنَۙ‏
يَسْتَعْجِلُوْنَكَ அவர்கள் உம்மிடம் அவசரமாகக் கேட்கின்றனர் بِالْعَذَابِؕ தண்டனையை وَ اِنَّ நிச்சயமாக جَهَنَّمَ நரகம் لَمُحِيْطَةٌ ۢ சூழ்ந்தே உள்ளது بِالْكٰفِرِيْنَۙ‏ நிராகரிப்பாளர்களை
29:54. யஸ்தஃஜிலூனக Bபில்'அதாBப்; வ இன்ன ஜஹன்னம ல முஹீததும் Bபில் காFபிரீன்
29:54. அவ்வேதனையை அவசரப்படுத்து மாறு அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள் - ஆனால், நிச்சயமாக நரகம் காஃபிர்களைச் சூழ்ந்து கொள்வதாக இருக்கிறது.
29:55
29:55 يَوْمَ يَغْشٰٮهُمُ الْعَذَابُ مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ وَيَقُوْلُ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
يَوْمَ நாளில் يَغْشٰٮهُمُ அவர்களை மூடிக்கொள்கின்ற الْعَذَابُ தண்டனை مِنْ فَوْقِهِمْ அவர்களுக்கு மேலிருந்தும் وَمِنْ تَحْتِ கீழே இருந்தும் اَرْجُلِهِمْ அவர்களின் கால்களுக்கு وَيَقُوْلُ கூறுவான் ذُوْقُوْا நீங்கள் சுவையுங்கள் مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்து கொண்டிருந்ததை
29:55. யவ்ம யக்'ஷாஹுமுல் 'அதாBபு மின் Fபவ்கிஹிம் வ மின் தஹ்தி அர்ஜுலிஹிம் வ யகூலு தூகூ மா குன்தும் தஃமலூன்
29:55. அந்நாளில், அவ்வேதனை அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்குக் கீழிருந்தும் அவர்களை மூடிக் கொள்ளும். (அப்போது இறைவன்) “நீங்கள் செய்து கொண்டிருந்த(தின் பய)னைச் சுவைத்துப் பாருங்கள்“ என்று கூறுவான்.
29:56
29:56 يٰعِبَادِىَ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ اَرْضِىْ وَاسِعَةٌ فَاِيَّاىَ فَاعْبُدُوْنِ‏
يٰعِبَادِىَ என் அடியார்களே! الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கை கொண்டவர்கள் اِنَّ நிச்சயமாக اَرْضِىْ எனது பூமி وَاسِعَةٌ விசாலமானது فَاِيَّاىَ ஆகவே, என்னையே فَاعْبُدُوْنِ‏ நீங்கள் வணங்குங்கள்!
29:56. யா 'இBபாதியல் லதீன ஆமனூ இன்ன அர்ளீ வாஸி 'அதுன் Fப இய்யாய FபஃBபுதூன்
29:56. ஈமான் கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது; ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.
29:57
29:57 كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ ثُمَّ اِلَيْنَا تُرْجَعُوْنَ‏
كُلُّ எல்லா نَفْسٍ ஆன்மாவும் ذَآٮِٕقَةُ சுவைக்கக் கூடியதே الْمَوْتِ மரணத்தை ثُمَّ பிறகு اِلَيْنَا நம்மிடமே تُرْجَعُوْنَ‏ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
29:57. குல்லு னFப்ஸின் தா'இகதுல் மவ்தி தும்ம இலய்னா துர்ஜ'ஊன்
29:57. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.
29:58
29:58 وَالَّذِيْنَ اٰمَنُوا وَعَمِلُوْا الصّٰلِحٰتِ لَـنُبَـوِّئَنَّهُمْ مِّنَ الْجَـنَّةِ غُرَفًا تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ‌ؕ نِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَ‌ۖ‏
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوْا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை لَـنُبَـوِّئَنَّهُمْ அவர்களுக்கு நாம் தயார்படுத்திக் கொடுப்போம் مِّنَ الْجَـنَّةِ சொர்க்கத்தில் غُرَفًا பல அறைகளை تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ அவர்கள் நிரந்தரமானவர்கள் فِيْهَا ؕ அதில் نِعْمَ மிகச் சிறப்பானதே اَجْرُ கூலி الْعٰمِلِيْنَ‌ۖ‏ அமல் செய்தவர்களின்
29:58. வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ல னுBபவ்வி 'அன்னஹும் மினல் ஜன்னதி குரFபன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; னிஃம அஜ்ருல் 'ஆமிலீன்
29:58. எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
29:59
29:59 الَّذِيْنَ صَبَرُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ‏
الَّذِيْنَ صَبَرُوْا அவர்கள் பொறுமையாக இருந்தனர் وَعَلٰى இன்னும் மீதே رَبِّهِمْ தங்கள் இறைவன் يَتَوَكَّلُوْنَ‏ சார்ந்து இருந்தனர்
29:59. அல்லதீன ஸBபரூ வ 'அலா ரBப்Bபிஹிம் யதவக்கலூன்
29:59. (ஏனெனில்) அவர்கள் பொறுமையைக் கொண்டார்கள்; மேலும் தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
29:60
29:60 وَكَاَيِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا ۖ اللّٰهُ يَرْزُقُهَا وَاِيَّاكُمْ‌‌ۖ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
وَكَاَيِّنْ எத்தனையோ مِّنْ دَآبَّةٍ கால்நடைகள் لَّا تَحْمِلُ சுமப்பதில்லை رِزْقَهَا ۖ தனது உணவை اللّٰهُ அல்லாஹ்தான் يَرْزُقُهَا அவற்றுக்கும் உணவளிக்கிறான் وَاِيَّاكُمْ‌ۖ உங்களுக்கும் وَهُوَ அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
29:60. வ க அய்யிம் மின் தாBப்Bபதில் லா தஹ்மிலு ரிZஜ்கஹா; அல் லாஹு யர்Zஜுகுஹா வ இய்யாகும்; வ ஹுவஸ் ஸமீ'உல் அலீம்
29:60. அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை; அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான் - இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
29:61
29:61 وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُوْلُنَّ اللّٰهُ‌ۚ فَاَنّٰى يُؤْفَكُوْنَ‏
وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ அவர்களிடம் நீர் கேட்டால் مَّنْ خَلَقَ யார் படைத்தான்? السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ பூமியையும் وَسَخَّرَ வசப்படுத்தினான் الشَّمْسَ சூரியனையும் وَالْقَمَرَ சந்திரனையும் لَيَقُوْلُنَّ நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள் اللّٰهُ‌ۚ அல்லாஹ்தான் فَاَنّٰى ஆக, அவர்கள் எப்படி يُؤْفَكُوْنَ‏ திருப்பப்படுகிறார்கள்
29:61. வ ல'இன் ஸ அல்தஹும் மன் கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வ ஸக்கரஷ் ஷம்ஸ வல் கமர ல யகூலுன்னல் லாஹு Fப அன்ன யு'Fபகூன்
29:61. மேலும், (நபியே!) “நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?” என்று கேட்டால், “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்?
29:62
29:62 اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُ لَهٗ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
اَللّٰهُ அல்லாஹ்தான் يَبْسُطُ விசாலமாக்குகின்றான் الرِّزْقَ உணவை لِمَنْ يَّشَآءُ தான் நாடியவர்களுக்கு مِنْ عِبَادِهٖ தனது அடியார்களில் وَيَقْدِرُ இன்னும் சுருக்குகின்றான் لَهٗ ؕ அவருக்கு اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
29:62. அல்லாஹு யBப்ஸுதுர் ரிZஜ்க லிம(ன்)ய் யஷா'உ மின் 'இBபாதிஹீ வ யக்திரு லஹ்; இன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
29:62. “அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்.”
29:63
29:63 وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ نَّزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحْيَا بِهِ الْاَرْضَ مِنْۢ بَعْدِ مَوْتِهَا لَيَقُوْلُنَّ اللّٰهُ‌ؕ قُلِ الْحَمْدُ لِلّٰهِ‌ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ
وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ நீர் அவர்களிடம் கேட்டால் مَّنْ யார் نَّزَّلَ இறக்கினான் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مَآءً மழையை فَاَحْيَا உயிர்ப்பிப்பவன் بِهِ அதன் மூலம் الْاَرْضَ பூமியை مِنْۢ بَعْدِ பின்னர் مَوْتِهَا அது இறந்து விட்ட لَيَقُوْلُنَّ நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள் اللّٰهُ‌ؕ அல்லாஹ் قُلِ நீர் கூறுவீராக! الْحَمْدُ புகழ் எல்லாம் لِلّٰهِ‌ؕ அல்லாஹ்விற்கே! بَلْ மாறாக اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் لَا يَعْقِلُوْنَ‏ சிந்தித்து புரிய மாட்டார்கள்
29:63. வ ல'இன் ஸ அல்தஹும் மன் னZஜ்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fப அஹ்யா Bபிஹில் அர்ள மின் Bபஃதி மவ்திஹா ல யகூலுன்னல் லாஹ்; குலில் ஹம்து லில்லாஹ்; Bபல் அக்தருஹும் லா யஃகிலூன்
29:63. இன்னும், அவர்களிடம்: ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?” என்று நீர் கேட்பீராயின்: “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) “அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக; எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.  
29:64
29:64 وَمَا هٰذِهِ الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا لَهْوٌ وَّلَعِبٌ‌ؕ وَاِنَّ الدَّارَ الْاٰخِرَةَ لَهِىَ الْحَـيَوَانُ‌ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏
وَمَا هٰذِهِ இல்லை الْحَيٰوةُ வாழ்க்கை الدُّنْيَاۤ இவ்வுலக اِلَّا தவிர لَهْوٌ வேடிக்கையாகவும் وَّلَعِبٌ‌ؕ விளையாட்டாகவும் وَاِنَّ நிச்சயமாக الدَّارَ வீடு الْاٰخِرَةَ மறுமை لَهِىَ அதுதான் الْحَـيَوَانُ‌ۘ நிரந்தரமானது لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே!
29:64. வமா ஹாதிஹில் ஹயா துத் துன்யா இல்லா லஹ்வு(ன்)வ்-வ ல'இBப்; வ இன்னத் தாரல் ஆகிரத ல ஹியல் ஹ யவான்; லவ் கானூ யஃலமூன்
29:64. இன்னும், இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை - இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும் - இவர்கள் (இதை) அறிந்திருந்தால்.
29:65
29:65 فَاِذَا رَكِبُوْا فِى الْفُلْكِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ ۚ فَلَمَّا نَجّٰٮهُمْ اِلَى الْبَـرِّ اِذَا هُمْ يُشْرِكُوْنَۙ‏
فَاِذَا رَكِبُوْا அவர்கள் பயணித்தால் فِى الْفُلْكِ கப்பலில் دَعَوُا அழைக்கின்றனர் اللّٰهَ அல்லாஹ்வை مُخْلِصِيْنَ தூய்மைப்படுத்தியவர்களாக لَـهُ அவனுக்கு மட்டும் الدِّيْنَ ۚ வணக்க வழிபாட்டை فَلَمَّا نَجّٰٮهُمْ அவன் அவர்களை காப்பாற்றிக் கொண்டு வந்தால் اِلَى الْبَـرِّ கரைக்கு اِذَا هُمْ அப்போது அவர்கள் يُشْرِكُوْنَۙ‏ இணைவைக்கின்றனர்
29:65. Fப-இதா ரகிBபூ Fபில் Fபுல்கி த'அவுல் லாஹ முக்லிஸீன லஹுத் தீன Fபலம்மா னஜ்ஜா ஹும் இலல் Bபர்ரி இதா ஹும் யுஷ்ரிகூன்
29:65. மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.
29:66
29:66 لِيَكْفُرُوْا بِمَاۤ اٰتَيْنٰهُمْ ۙۚ وَلِيَتَمَتَّعُوْا‌فَسَوْفَ يَعْلَمُوْنَ‏
لِيَكْفُرُوْا இறுதியாக, நிராகரிப்பதற்காகவும் بِمَاۤ اٰتَيْنٰهُمْ ۙۚ நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை وَلِيَتَمَتَّعُوْا‌ அவர்கள் இன்புறுவதற்காகவும் فَسَوْفَ يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறிவார்கள்
29:66. லி யக்Fபுரூ Bபிமா ஆதய்னாஹும் வ லி யதமத்த'ஊ Fபஸவ் Fப யஃலமூன்
29:66. அவர்கள், நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றுக்கு மாறு செய்து கொண்டு, (இவ்வுலகின் அற்ப) சுகங்களை அனுபவிக்கட்டும் - ஆனால் (தம் தீச்செயல்களின் பயனை) அறிந்து கொள்வார்கள்.
29:67
29:67 اَوَلَمْ يَرَوْا اَنَّا جَعَلْنَا حَرَمًا اٰمِنًا وَّيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ‌ ؕ اَفَبِالْبَاطِلِ يُؤْمِنُوْنَ وَبِنِعْمَةِ اللّٰهِ يَكْفُرُوْنَ‏
اَوَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? اَنَّا நிச்சயமாக நாம் جَعَلْنَا ஏற்படுத்தினோம் حَرَمًا புனித தலத்தை اٰمِنًا பாதுகாப்புஅளிக்கின்ற وَّيُتَخَطَّفُ சூறையாடப்படுகின்றனர் النَّاسُ மக்கள் مِنْ حَوْلِهِمْ‌ ؕ அவர்களைச் சுற்றி اَفَبِالْبَاطِلِ பொய்யை يُؤْمِنُوْنَ அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனரா? وَبِنِعْمَةِ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் يَكْفُرُوْنَ‏ நிராகரிக்கின்றனரா?
29:67. அவலம் யரவ் அன்னா ஜ'அல்னா ஹரமன் ஆமின(ன்)வ் வ யுதகத்தFபுன் னாஸு மின் ஹவ் லிஹிம்; அFபBபில் Bபாதிலி யு'மினூன வ Bபினிஃமதில் லாஹி யக்Fபுரூன்
29:67. அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா?
29:68
29:68 وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِالْحَـقِّ لَمَّا جَآءَهٗ‌ؕ اَلَيْسَ فِىْ جَهَـنَّمَ مَثْوًى لِّلْكٰفِرِيْنَ‏
وَمَنْ யார்? اَظْلَمُ மகா அநியாயக்காரன் مِمَّنِ افْتَرٰى இட்டுக்கட்டியவனை விட عَلَى மீது اللّٰهِ அல்லாஹ்வின் كَذِبًا பொய்யை اَوْ அல்லது كَذَّبَ பொய்ப்பித்தான் بِالْحَـقِّ உண்மையை لَـمَّا جَآءَهٗ‌ؕ அது தன்னிடம் வந்த போது اَلَيْسَ இல்லையா? فِىْ جَهَـنَّمَ நரகத்தில் مَثْوًى தங்குமிடம் لِّلْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களுக்கு
29:68. வ மன் அள்லமு மிம்ம னிFப் தரா 'அலல் லாஹி கதிBபன் அவ் கத்தBப Bபில்ஹக்கி லம்மா ஜா'அஹ்; அலய்ஸ Fபீ ஜஹன்னம மத்வல் லில் காFபிரீன்
29:68. அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது,
29:69
29:69 وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ‌ؕ وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِيْنَ
وَالَّذِيْنَ எவர்கள் جَاهَدُوْا போரிட்டனர் فِيْنَا நமக்காக لَنَهْدِيَنَّهُمْ அவர்களுக்கு நாம் நிச்சயமாக வழிகாட்டுவோம் سُبُلَنَا ؕ நமது பாதைகளை وَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَمَعَ الْمُحْسِنِيْنَ நல்லோருடன் இருக்கின்றான்
29:69. வல்லதீன ஜாஹதூ Fபீனா லனஹ்தியன்னஹும் ஸுBபுலன; வ இன்னல் லாஹ லம'அல் முஹ்ஸினீன்
29:69. மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.