41. ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா
மக்கீ, வசனங்கள்: 54

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
41:1
41:1 حٰمٓ‌ ۚ‏
حٰمٓ‌ ۚ‏ ஹா மீம்
41:1. ஹா மீம்
41:1. ஹா, மீம்.
41:2
41:2 تَنْزِيْلٌ مِّنَ الرَّحْمٰنِ الرَّحِيْمِ‌ۚ‏
تَنْزِيْلٌ இறக்கப்பட்ட வேதமாகும் مِّنَ الرَّحْمٰنِ பேரன்பாளனிடமிருந்து الرَّحِيْمِ‌ۚ‏ பேரருளாளன்
41:2. தன்Zஜீலும் மினர்-ரஹ்மானிர்-ரஹீம்
41:2. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது;
41:3
41:3 كِتٰبٌ فُصِّلَتْ اٰيٰتُهٗ قُرْاٰنًا عَرَبِيًّا لِّقَوْمٍ يَّعْلَمُوْنَۙ‏
كِتٰبٌ வேதமாகும் فُصِّلَتْ விவரிக்கப்பட்டன اٰيٰتُهٗ இதன் வசனங்கள் قُرْاٰنًا குர்ஆன் عَرَبِيًّا அரபி மொழியிலான لِّقَوْمٍ மக்களுக்காக يَّعْلَمُوْنَۙ‏ அறிகின்றார்கள்
41:3. கிதாBபுன் Fபுஸ்ஸிலத் ஆயாதுஹூ குர்ஆனன் 'அரBபிய்யல் லிகவ்மி(ன்)ய் யஃலமூன்
41:3. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது.
41:4
41:4 بَشِيْرًا وَّنَذِيْرًا‌ ۚ فَاَعْرَضَ اَكْثَرُهُمْ فَهُمْ لَا يَسْمَعُوْنَ‏
بَشِيْرًا நற்செய்தி கூறக்கூடியது وَّنَذِيْرًا‌ ۚ அச்சமூட்டி எச்சரிக்கக் கூடியது فَاَعْرَضَ புறக்கணித்தனர் اَكْثَرُ அதிகமானோர் هُمْ அவர்களில் فَهُمْ இன்னும் அவர்கள் لَا يَسْمَعُوْنَ‏ செவியேற்பதில்லை
41:4. Bபஷீர(ன்)வ் வ னதீரன் Fப-அஃரள அக்தருஹும் Fபஹும் லா யஸ்ம'ஊன்
41:4. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை.
41:5
41:5 وَقَالُوْا قُلُوْبُنَا فِىْۤ اَكِنَّةٍ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَيْهِ وَفِىْۤ اٰذَانِنَا وَقْرٌ وَّمِنْۢ بَيْنِنَا وَبَيْنِكَ حِجَابٌ فَاعْمَلْ اِنَّنَا عٰمِلُوْنَ‏
وَقَالُوْا அவர்கள் கூறினார்கள் قُلُوْبُنَا எங்கள் உள்ளங்கள் فِىْۤ اَكِنَّةٍ திரைகளில்தான் مِّمَّا எதில் تَدْعُوْنَاۤ நீர் எங்களை அழைக்கின்றீர்களோ اِلَيْهِ அதன் பக்கம் وَفِىْۤ اٰذَانِنَا இன்னும் எங்கள்செவிகளில் وَقْرٌ செவிட்டுத்தனம் وَّمِنْۢ بَيْنِنَا இன்னும் எங்களுக்கு மத்தியிலும் وَبَيْنِكَ உமக்கு மத்தியிலும் حِجَابٌ ஒரு திரை فَاعْمَلْ ஆகவே நீர் செய்வீராக! اِنَّنَا நிச்சயமாக நாங்கள் عٰمِلُوْنَ‏ செய்வோம்
41:5. வ காலூ குலூBபுனா Fபீ அகின்னதிம் மிம்மா தத்'ஊனா இலய்ஹி வ Fபீ ஆதானினா வக்ரு(ன்)வ் வ மிம் Bபய்னினா வ Bபய்னிக ஹிஜாBபுன் Fபஃமல் இன்னனா 'ஆமிலூன்
41:5. மேலும் அவர்கள்: “நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதனை விட்டும் எங்கள் இருதயங்கள் மூடப்பட்டுள்ளன; எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது; எங்களுக்கிடையிலும் உமக்கிடையிலும் திரை இருக்கிறது; ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்து கொண்டிருப்பவர்கள்” என்று கூறினர்.
41:6
41:6 قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَاسْتَقِيْمُوْۤا اِلَيْهِ وَاسْتَغْفِرُوْهُ‌ ؕ وَوَيْلٌ لِّلْمُشْرِكِيْنَ ۙ‏
قُلْ கூறுவீராக! اِنَّمَاۤ اَنَا நான் எல்லாம் بَشَرٌ ஒரு மனிதர்தான் مِّثْلُكُمْ உங்களைப் போன்ற يُوْحٰٓى வஹீ அறிவிக்கப்படுகிறது اِلَىَّ எனக்கு اَنَّمَاۤ اِلٰهُكُمْ உங்கள் கடவுள் எல்லாம் اِلٰـهٌ وَّاحِدٌ ஒரே ஒருகடவுள்தான் فَاسْتَقِيْمُوْۤا ஆகவே, நீங்கள் நேர்வழி நடங்கள்! اِلَيْهِ அவன் பக்கமே وَاسْتَغْفِرُوْهُ‌ ؕ இன்னும் அவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! وَوَيْلٌ لِّلْمُشْرِكِيْنَ ۙ‏ நாசம்தான்/இணைவைப்பவர்களுக்கு
41:6. குல் இன்னமா அன Bபஷரும் மித்லுகும் யூஹா இலய்ய அன்னமா இலாஹுகும் இலாஹு(ன்)வ் வாஹிதுன் Fபஸ்தகீமூ இலய்ஹி வஸ்தக்Fபிரூஹ்; வ வய்லுல் லில் முஷ்ரிகீன்
41:6. “நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது; நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக; இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்” என்று (நபியே!) நீர் கூறும்.
41:7
41:7 الَّذِيْنَ لَا يُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ‏
الَّذِيْنَ لَا يُؤْتُوْنَ எவர்கள்/அவர்கள் கொடுப்பதில்லை الزَّكٰوةَ ஸகாத்தை وَهُمْ இன்னும் அவர்கள் بِالْاٰخِرَةِ மறுமையை هُمْ அவர்கள் كٰفِرُوْنَ‏ நிராகரிக்கின்றனர்
41:7. அல்லதீன லா யு'தூனZஜ் Zஜகாத வ ஹும் Bபில்ஆகிரதிஹும் காFபிரூன்
41:7. அவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள்; மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!
41:8
41:8 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை لَهُمْ அவர்களுக்கு உண்டு اَجْرٌ நற்கூலி غَيْرُ مَمْنُوْنٍ‏ முடிவற்ற(து)
41:8. இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் அஜ்ருன் கய்ரு மம்னூன்
41:8. “நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு முடிவேயில்லாத (நிலையான) கூலியுண்டு.”  
41:9
41:9 قُلْ اَٮِٕنَّكُمْ لَتَكْفُرُوْنَ بِالَّذِىْ خَلَقَ الْاَرْضَ فِىْ يَوْمَيْنِ وَتَجْعَلُوْنَ لَهٗۤ اَنْدَادًا‌ؕ ذٰلِكَ رَبُّ الْعٰلَمِيْنَ‌ۚ‏
قُلْ கூறுவீராக! اَٮِٕنَّكُمْ لَتَكْفُرُوْنَ நீங்கள் நிராகரிக்கின்றீர்களா? بِالَّذِىْ خَلَقَ படைத்தவனை الْاَرْضَ பூமியை فِىْ يَوْمَيْنِ இரண்டு நாள்களில் وَتَجْعَلُوْنَ இன்னும் ஏற்படுத்துகின்றீர்களா? لَهٗۤ அவனுக்கு اَنْدَادًا‌ؕ இணைகளை ذٰلِكَ அவன்தான் رَبُّ இறைவன் الْعٰلَمِيْنَ‌ۚ‏ அகிலங்களின்
41:9. குல் அ'இன்னகும் லதக்Fபுரூன Bபில்லதீ கலகல் அர்ள Fபீ யவ்மய்னி வ தஜ்'அலூன லஹூ அன்தாதா; தாலிக ரBப்Bபுல் 'ஆலமீன்
41:9. “பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.
41:10
41:10 وَجَعَلَ فِيْهَا رَوَاسِىَ مِنْ فَوْقِهَا وَبٰرَكَ فِيْهَا وَقَدَّرَ فِيْهَاۤ اَقْوَاتَهَا فِىْۤ اَرْبَعَةِ اَيَّامٍؕ سَوَآءً لِّلسَّآٮِٕلِيْنَ‏
وَجَعَلَ இன்னும் ஏற்படுத்தினான் فِيْهَا அதில் رَوَاسِىَ மலைகளை مِنْ فَوْقِهَا அதற்கு மேலாக وَبٰرَكَ இன்னும் அருள்வளம் புரிந்தான் فِيْهَا அதில் وَقَدَّرَ இன்னும் திட்டமிட்டு நிர்ணயித்தான் فِيْهَاۤ அதில் اَقْوَاتَهَا அதன் உணவுகளை فِىْۤ اَرْبَعَةِ நான்கு اَيَّامٍؕ நாள்களில் سَوَآءً சரியான பதிலாக لِّلسَّآٮِٕلِيْنَ‏ விசாரிப்பவர்களுக்கு
41:10. வ ஜ'அல Fபீஹா ரவா ஸிய மின் Fபவ்கிஹா வ Bபாரக Fபீஹா வ கத்தர Fபீஹா அக்வாதஹா Fபீ அர்Bப'அதி அய்யாமின் ஸவா'அல் லிஸ்ஸா'இலீன்
41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).
41:11
41:11 ثُمَّ اسْتَـوٰۤى اِلَى السَّمَآءِ وَهِىَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْاَرْضِ ائْتِيَا طَوْعًا اَوْ كَرْهًا ؕ قَالَتَاۤ اَتَيْنَا طَآٮِٕعِيْنَ‏
ثُمَّ பிறகு اسْتَـوٰۤى அவன் உயர்ந்தான் اِلَى السَّمَآءِ வானத்திற்கு மேல் وَهِىَ அது (இருந்தது) دُخَانٌ ஓர் ஆவியாக فَقَالَ அவன் கூறினான் لَهَا அதற்கு(ம்) وَلِلْاَرْضِ பூமிக்கும் ائْتِيَا நீங்கள் இருவரும் வாருங்கள் طَوْعًا விருப்பத்துடன் اَوْ அல்லது كَرْهًا ؕ வெறுப்புடன் قَالَتَاۤ அவை இரண்டும் اَتَيْنَا நாங்கள் வந்தோம் طَآٮِٕعِيْنَ‏ விருப்பமுள்ளவர்களாகவே
41:11. தும்மஸ் தவா இலஸ்-ஸமா'இ வ ஹிய துகானுன் Fபகால லஹா வ லில் அர்ளி'தியா தவ்'அன் அவ் கர்ஹன் காலதா அதய்னா தா'இ'ஈன்
41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.
41:12
41:12 فَقَضٰٮهُنَّ سَبْعَ سَمٰوَاتٍ فِىْ يَوْمَيْنِ وَاَوْحٰى فِىْ كُلِّ سَمَآءٍ اَمْرَهَا‌ ؕ وَزَ يَّـنَّـا السَّمَآءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ ‌ۖ  وَحِفْظًا ‌ؕ ذٰ لِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ‏
فَقَضٰٮهُنَّ ஆக, முடித்தான்/அவற்றை سَبْعَ ஏழு سَمٰوَاتٍ வானங்களாக فِىْ يَوْمَيْنِ இரண்டு நாள்களில் وَاَوْحٰى இன்னும் அறிவித்தான் فِىْ كُلِّ ஒவ்வொரு سَمَآءٍ வானத்திலும் اَمْرَهَا‌ ؕ அதன் காரியத்தை وَزَ يَّـنَّـا இன்னும் அலங்கரித்தோம் السَّمَآءَ வானத்தை الدُّنْيَا சமீபமான(து) بِمَصَابِيْحَ நட்சத்திரங்களால் ۖ  وَحِفْظًا ؕ இன்னும் பாதுகாப்பதற்காக ذٰ لِكَ تَقْدِيْرُ இது/ஏற்பாடாகும் الْعَزِيْزِ மிகைத்தவன் الْعَلِيْمِ‏ நன்கறிந்தவன்
41:12. Fபகளாஹுன்ன ஸBப்'அ ஸமாவாதின் Fபீ யவ்மய்னி வ அவ்ஹா Fபீ குல்லி ஸமா'இன் அமரஹா; வ Zஜய்யன்னஸ்ஸ மா'அத் துன்யா BபிமஸாBபீஹ வ ஹிFப்ளா; தாலிக தக்தீருல் 'அZஜீZஜில் 'அலீம்
41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.
41:13
41:13 فَاِنْ اَعْرَضُوْا فَقُلْ اَنْذَرْتُكُمْ صٰعِقَةً مِّثْلَ صٰعِقَةِ عَادٍ وَّثَمُوْدَ ؕ‏
فَاِنْ اَعْرَضُوْا அவர்கள் புறக்கணித்தால் فَقُلْ கூறுவீராக! اَنْذَرْتُكُمْ உங்களுக்கு எச்சரிக்கிறேன் صٰعِقَةً ஒரு பேரழிவை مِّثْلَ போன்ற صٰعِقَةِ (ஏற்பட்ட) பேரழிவை عَادٍ ஆது உடைய وَّثَمُوْدَ ؕ‏ இன்னும் ஸமூது
41:13. Fப-இன் அஃரளூ Fபகுல் அன்தர்துகும் ஸா'இகதம் மித்ல ஸா'இகதி 'ஆதி(ன்)வ் வ தமூத்
41:13. ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், “ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) போன்ற வேதனையைப் போல் (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!.
41:14
41:14 اِذْ جَآءَتْهُمُ الرُّسُلُ مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ‌ؕ قَالُوْا لَوْ شَآءَ رَبُّنَا لَاَنْزَلَ مَلٰٓٮِٕكَةً فَاِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ‏
اِذْ جَآءَتْهُمُ الرُّسُلُ அவர்களிடம் வந்தபோது/தூதர்கள் مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன்னிருந்து(ம்) وَمِنْ خَلْفِهِمْ இன்னும் அவர்களுக்குப் பின்னிருந்து اَلَّا تَعْبُدُوْۤا வணங்காதீர்கள் اِلَّا தவிர اللّٰهَ‌ؕ அல்லாஹ்வை قَالُوْا அவர்கள் கூறினார்கள் لَوْ شَآءَ நாடியிருந்தால் رَبُّنَا எங்கள் இறைவன் لَاَنْزَلَ இறக்கி இருப்பான் مَلٰٓٮِٕكَةً வானவர்களை فَاِنَّا நிச்சயமாக நாங்கள் بِمَاۤ اُرْسِلْتُمْ எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ بِهٖ அதை كٰفِرُوْنَ‏ நிராகரிப்பவர்கள்தான்
41:14. இத் ஜா'அத் ஹுமுர் ருஸுலு மிம் Bபய்னி அய்தீஹிம் வ மின் கல்Fபிஹிம் அல்லா தஃBபுதூ இல்லல் லாஹ காலூ லவ் ஷா'அ ரBபுனா ல அன்Zஜல மலா 'இகதன் Fப இன்னா Bபிமா உர்ஸில்தும் Bபிஹீ காFபிரூன்
41:14. “அல்லாஹ்வையன்றி (வேறு) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்” என்று அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவர்களிடம் தூதர்கள் வந்த போது: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) இறக்கியிருப்பான். ஆகவேதான், நீங்கள் எதனைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிக்கிறோம்” என்று சொன்னார்கள்.
41:15
41:15 فَاَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوْا فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوْا مَنْ اَشَدُّ مِنَّا قُوَّةً  ‌ؕ اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِىْ خَلَقَهُمْ هُوَ اَشَدُّ مِنْهُمْ قُوَّةً  ؕ وَكَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ‏
فَاَمَّا عَادٌ ஆக, ஆது சமுதாயம் فَاسْتَكْبَرُوْا பெருமை அடித்தனர் فِى الْاَرْضِ பூமியில் بِغَيْرِ الْحَقِّ அநியாயமாக وَقَالُوْا இன்னும் கூறினார்கள் مَنْ யார் اَشَدُّ மிக பலசாலி(கள்) مِنَّا எங்களை விட قُوَّةً  ؕ வலிமையால் اَوَلَمْ يَرَوْا இவர்கள் கவனிக்கவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் الَّذِىْ خَلَقَهُمْ எவன்/படைத்தான்/அவர்களை هُوَ அவன் اَشَدُّ மிக பலசாலி مِنْهُمْ அவர்களை விட قُوَّةً  ؕ வலிமையால் وَكَانُوْا அவர்கள் இருந்தனர் بِاٰيٰتِنَا நமது வசனங்களை يَجْحَدُوْنَ‏ மறுப்பவர்களாக
41:15. Fப அம்மா 'ஆதுன் Fபஸ்தக் Bபரூ Fபில் அர்ளி Bபிகய்ருல் ஹக்கி வ காலூ மன் அஷத்து மின்னா குவ்வதன் அவலம் யரவ் அன்னல் லாஹல் லதீ கலகஹும் ஹுவ அஷத்து மின்ஹும் குவ்வத(ன்)வ் வ கானூ Bபி ஆயாதினா யஜ்ஹதூன்
41:15. அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, “எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.
41:16
41:16 فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا صَرْصَرًا فِىْۤ اَيَّامٍ نَّحِسَاتٍ لِّـنُذِيْقَهُمْ عَذَابَ الْخِزْىِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَخْزٰى‌ وَهُمْ لَا يُنْصَرُوْنَ‏
فَاَرْسَلْنَا ஆகவே அனுப்பினோம் عَلَيْهِمْ அவர்கள் மீது رِيْحًا காற்றை صَرْصَرًا கடும் குளிர்(ந்தது) فِىْۤ اَيَّامٍ நாள்களில் نَّحِسَاتٍ துரதிர்ஷ்டமான لِّـنُذِيْقَهُمْ நாம் அவர்களுக்கு சுவைக்க வைப்பதற்காக عَذَابَ வேதனையை الْخِزْىِ கேவலமான فِى الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕ இவ்வுலகில் وَلَعَذَابُ வேதனையோ الْاٰخِرَةِ மறுமையின் اَخْزٰى‌ மிக கேவலமானது وَهُمْ لَا يُنْصَرُوْنَ‏ இன்னும் அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்
41:16. Fப அர்ஸல்னா 'அலய்ஹிம் ரீஹன் ஸர்ஸரன் Fபீ அய்யாமின் னஹிஸாதில் லினுதீகஹும் 'அதாBபல் கிZஜ்யி Fபில் ஹயாதித் துன்யா வ ல'அதாBபுல் ஆகிரதி அக்Zஜா வ ஹும் லா யுன்ஸரூன்
41:16. ஆதலினால், இவ்வுலக வாழ்வில் அவர்கள் இழிவு தரும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்ய, கெட்ட நாட்களில் அவர்கள் மீது ஒரு கொடிய புயல் காற்றை அனுப்பினோம்; மேலும், மறுமையிலுள்ள வேதனையோ மிகவும் இழிவுள்ளதாகும்; அன்றியும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.
41:17
41:17 وَاَمَّا ثَمُوْدُ فَهَدَيْنٰهُمْ فَاسْتَحَبُّوا الْعَمٰى عَلَى الْهُدٰى فَاَخَذَتْهُمْ صٰعِقَةُ الْعَذَابِ الْهُوْنِ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‌ۚ‏
وَاَمَّا ثَمُوْدُ ஆக, ஸமூது சமுதாயம் فَهَدَيْنٰهُمْ அவர்களுக்கு நேர்வழிகாட்டினோம் فَاسْتَحَبُّوا (ஆனால்) அதிகம் விரும்பினார்கள் الْعَمٰى குருட்டுத் தனத்தைத்தான் عَلَى الْهُدٰى நேர்வழியை விட فَاَخَذَتْهُمْ ஆகவே, அவர்களைப் பிடித்தது صٰعِقَةُ பேரழிவு الْعَذَابِ வேதனையின் الْهُوْنِ இழிவான بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‌ۚ‏ அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக
41:17. வ அம்மா தமூது Fபஹதினாஹும் Fபஸ்தஹBப்Bபுல் 'அம 'அலல் ஹுத Fப அகதத்ஹும் ஸா'இகதுல் 'அதாBபில் ஹூனி Bபிமா கானூ யக்ஸிBபூன்
41:17. ஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம், ஆயினும், அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
41:18
41:18 وَ نَجَّيْنَا الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ
وَ نَجَّيْنَا நாம் பாதுகாத்தோம் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கைகொண்டனர் وَكَانُوْا இன்னும் இருந்தார்கள் يَتَّقُوْنَ‏ அஞ்சுபவர்களாக
41:18. வ னஜ்ஜய்னல் லதீன ஆமனூ வ கானூ யத்தகூன்
41:18. ஆனால், ஈமான் கொண்டு பயபக்தியுடன் இருந்தவர்களை நாம் ஈடேற்றினோம்.  
41:19
41:19 وَيَوْمَ يُحْشَرُ اَعْدَآءُ اللّٰهِ اِلَى النَّارِ فَهُمْ يُوْزَعُوْنَ‏
وَيَوْمَ நாளில் يُحْشَرُ ஒன்று திரட்டப்படுகின்றார்(கள்) اَعْدَآءُ எதிரிகள் اللّٰهِ அல்லாஹ்வின் اِلَى النَّارِ நரகத்தின் பக்கம் فَهُمْ ஆகவே, அவர்கள் يُوْزَعُوْنَ‏ நிறுத்தி வைக்கப்படுவார்கள்
41:19. வ யவ்ம யுஹ்ஷரு அஃதா'உல் லாஹி இலன் னாரி Fபஹும் யூZஜ'ஊன்
41:19. மேலும், அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.
41:20
41:20 حَتّٰٓى اِذَا مَا جَآءُوْهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
حَتّٰٓى இறுதியாக اِذَا مَا جَآءُوْهَا அவர்கள் அதனிடம் வரும் போது شَهِدَ சாட்சி கூறும் عَلَيْهِمْ அவர்களுக்கு எதிராகவே سَمْعُهُمْ அவர்களுடைய செவி(யும்) وَاَبْصَارُهُمْ அவர்களுடைய பார்வைகளும் وَجُلُوْدُهُمْ அவர்களுடைய தோல்களும் بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி
41:20. ஹத்தா இதா மா ஜா'ஊஹா ஷஹித 'அலய்ஹிம் ஸமு'உஹும் வ அBப்ஸாருஹும் வ ஜுலூதுஹும் Bபிமா கானூ யஃமலூன்
41:20. இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
41:21
41:21 وَقَالُوْا لِجُلُوْدِهِمْ لِمَ شَهِدْتُّمْ عَلَيْنَا‌ ؕ قَالُوْۤا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِىْۤ اَنْطَقَ كُلَّ شَىْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ‏
وَقَالُوْا அவர்கள் கூறுவார்கள் لِجُلُوْدِهِمْ தங்களுடைய தோல்களிடம் لِمَ شَهِدْتُّمْ ஏன் சாட்சிகூறினீர்கள் عَلَيْنَا‌ ؕ எங்களுக்கு எதிராக قَالُوْۤا அவை கூறும் اَنْطَقَنَا எங்களை(யும்) பேச வைத்தான் اللّٰهُ அல்லாஹ் الَّذِىْۤ எவன் اَنْطَقَ பேசவைத்தான் كُلَّ شَىْءٍ எல்லாவற்றையும் وَّهُوَ அவன்தான் خَلَقَكُمْ உங்களைப் படைத்தான் اَوَّلَ مَرَّةٍ முதல் முறையாக وَّاِلَيْهِ இன்னும் அவன் பக்கம்தான் تُرْجَعُوْنَ‏ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
41:21. வ காலூ லிஜுலூதிஹிம் லிம ஷஹித்தும் 'அலய்னா காலூ அன்தகனல் லாஹுல் லதீ அன்தக குல்ல ஷய்'இ(ன்)வ் வ ஹுவ கலககும் அவ்வல மர்ரதி(ன்)வ் வ இலய்ஹி துர்ஜ'ஊன்
41:21. அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.
41:22
41:22 وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ يَّشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَاۤ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا يَعْلَمُ كَثِيْرًا مِّمَّا تَعْمَلُوْنَ‏
وَمَا كُنْتُمْ நீங்கள் இருக்கவில்லை تَسْتَتِرُوْنَ மறைப்பவர்களாக اَنْ يَّشْهَدَ சாட்சி கூறிவிடும் என்பதற்காக عَلَيْكُمْ உங்களுக்கு எதிராக سَمْعُكُمْ உங்கள் செவியும் وَلَاۤ اَبْصَارُكُمْ உங்கள் பார்வைகளும் وَلَا جُلُوْدُكُمْ உங்கள் தோல்களும் وَلٰكِنْ என்றாலும் ظَنَنْتُمْ நீங்கள் எண்ணினீர்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يَعْلَمُ அறியமாட்டான் كَثِيْرًا அதிகமானதை مِّمَّا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்வதில்
41:22. வமா குன்தும் தஸ்ததிரூன அய்-யஷ்ஹத 'அலய்கும் ஸம்'உகும் வ லா அBப்ஸாருகும் வலா ஜுலூதுகும் வ லாகின் ளனன்தும் அன்னல் லாஹ லா யஃலமு கதீரம் மிம்மா தஃமலூன்
41:22. “உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.
41:23
41:23 وَذٰلِكُمْ ظَنُّكُمُ الَّذِىْ ظَنَنْتُمْ بِرَبِّكُمْ اَرْدٰٮكُمْ فَاَصْبَحْتُمْ مِّنَ الْخٰسِرِيْنَ‏
وَذٰلِكُمْ அந்த ظَنُّكُمُ உங்கள் எண்ணம்தான் الَّذِىْ எது ظَنَنْتُمْ எண்ணினீர்கள் بِرَبِّكُمْ உங்கள் இறைவனைப் பற்றி اَرْدٰٮكُمْ உங்களை நாசமாக்கியது فَاَصْبَحْتُمْ ஆகவே, நீங்கள் ஆகிவிட்டீர்கள் مِّنَ الْخٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளில்
41:23. வ தாலிகும் ளன்னுகுமுல் லதீ ளனன்தும் Bபி-ரBப்Bபிகும் அர்தாகும் Fப அஸ்Bபஹ்தும் மினல் காஸிரீன்
41:23. ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).
41:24
41:24 فَاِنْ يَّصْبِرُوْا فَالنَّارُ مَثْوًى لَّهُمْ‌ؕ وَاِنْ يَّسْتَعْتِبُوْا فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِيْنَ‏
فَاِنْ يَّصْبِرُوْا அவர்கள் பொறுமையாக இருந்தாலும் فَالنَّارُ நரகம்தான் مَثْوًى தங்குமிடமாகும் لَّهُمْ‌ؕ அவர்களுக்குரிய وَاِنْ يَّسْتَعْتِبُوْا அவர்கள் தங்களைத் திருப்புமாறு கோரினால் فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِيْنَ‏ அப்படி அவர்கள் திருப்பப்பட மாட்டார்கள்
41:24. Fப-இ(ன்)ய் யஸ்Bபிரூ Fபன் னாரு மத்வல் லஹும் வ இ(ன்)ய்-யஸ்தஃதிBபூ Fபமா ஹும் மினல் முஃதBபீன்
41:24. ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
41:25
41:25 وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَآءَ فَزَيَّنُوْا لَهُمْ مَّا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِىْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ‌ۚ اِنَّهُمْ كَانُوْا خٰسِرِيْنَ
وَقَيَّضْنَا நாம் இலகுவாக்கி அமைத்துக் கொடுத்தோம் لَهُمْ அவர்களுக்கு قُرَنَآءَ சில நண்பர்களை فَزَيَّنُوْا அலங்கரித்துக் காட்டினார்கள் لَهُمْ அவர்களுக்கு مَّا بَيْنَ اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன்னுள்ளதை(யும்) وَمَا خَلْفَهُمْ அவர்களுக்கு பின்னுள்ளதையும் وَحَقَّ இன்னும் உறுதியாகிவிட்டது عَلَيْهِمُ இவர்கள் மீதும் الْقَوْلُ விதிக்கப்பட்ட அதே விதி فِىْۤ اُمَمٍ சமுதாயங்களுக்கு قَدْ خَلَتْ சென்று விட்டனர் مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் مِّنَ الْجِنِّ ஜின்களில் وَالْاِنْسِ‌ۚ மற்றும் மனிதர்களில் اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் كَانُوْا இருக்கின்றனர் خٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளாக
41:25. வ கய்யள்னா லஹும் குரனா'அ FபZஜய்யனூ லஹும் மா Bபய்ன அய்தீஹிம் வமா கல்Fபஹும் வ ஹக்க 'அலய்ஹிமுல் கவ்லு Fபீ உமமின் கத் கலத் மின் கBப்லிஹிம் மினல் ஜின்னி வல் இன்ஸி இன்னஹும் கானூ காஸிரீன்
41:25. நாம் அவர்களுக்கு (தீய) கூட்டாளிகளை இணைத்து விட்டோம்; ஆகவே, (அத்தீய கூட்டாளிகள்) அவர்களுக்கு, முன்னாலிருப்பதையும் பின்னாலிருப்பதையும் அழகாக்கிக் காண்பித்தார்கள்; அன்றியும் அவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்களும் மனிதர்களுமாகிய சமுதாயத்தார் மீது நம்வாக்கு உறுதியாகிவிட்டது - நிச்சயமாக அவர்கள் நஷ்டவாளிகளாயினர்.  
41:26
41:26 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِيْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ‏
وَقَالَ கூறினார்கள் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் لَا تَسْمَعُوْا செவியுறாதீர்கள் لِهٰذَا الْقُرْاٰنِ இந்த குர்ஆனை وَالْغَوْا கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துங்கள்! فِيْهِ அதில் لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ‏ நீங்கள்வெற்றி பெறுவீர்கள்
41:26. வ காலல் லதீன கFபரூ லா தஸ்ம'ஊ லிஹாதல் குர்'ஆனி வல்கவ் Fபீஹி ல'அல்லகும் தக்லிBபூன்
41:26. “நீங்கள் இந்த குர்ஆனை செவி ஏற்காதீர்கள். (அது ஓதப்படும் போது) அதில் (குழப்பம் செய்து) கூச்சலிடுங்கள், நீங்கள் அதனால் மிகைத்து விடுவீர்கள்” என்றும் காஃபிர்கள் (தங்களைச் சார்ந்தோரிடம்) கூறினர்.
41:27
41:27 فَلَـنُذِيْقَنَّ الَّذِيْنَ كَفَرُوْا عَذَابًا شَدِيْدًاۙ وَّلَنَجْزِيَنَّهُمْ اَسْوَاَ الَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ‏
فَلَـنُذِيْقَنَّ ஆகவே, நிச்சயமாக சுவைக்க வைப்போம் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களுக்கு عَذَابًا வேதனையை شَدِيْدًاۙ கடுமையான وَّلَنَجْزِيَنَّهُمْ இன்னும் அவர்களுக்கு நிச்சயமாக கூலி கொடுப்போம் اَسْوَاَ மிகக் கெட்ட செயலுக்கு الَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில்
41:27. Fபலனுதீகன்னல் லதீன கFபரூ 'அதாBபன் ஷதீத(ன்)வ் வ லனஜ்Zஜியன்னஹும் அஸ்வல்லதீ கானூ யஃமலூன்
41:27. ஆகவே, காஃபிர்களை நாம் நிச்சயமாக கொடிய வேதனையைச் சுவைக்க செய்வோம் - அன்றியும், நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்ததில் மிகத் தீயதை அவர்களுக்குக் கூலியாக கொடுப்போம்.
41:28
41:28 ذٰ لِكَ جَزَآءُ اَعْدَآءِ اللّٰهِ النَّارُ‌ ۚ لَهُمْ فِيْهَا دَارُ الْخُـلْدِ‌ ؕ جَزَآءًۢ بِمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ‏
ذٰ لِكَ இதுதான் جَزَآءُ கூலியாகும் اَعْدَآءِ எதிரிகளுக்குரிய اللّٰهِ அல்லாஹ்வின் النَّارُ‌ ۚ நரகம்தான் لَهُمْ அவர்களுக்கு فِيْهَا அதில் دَارُ الْخُـلْدِ‌ ؕ நிரந்தரமாக தங்கும் இல்லம் جَزَآءًۢ கூலியாக بِمَا كَانُوْا அவர்கள் இருந்ததற்கு بِاٰيٰتِنَا நமது வசனங்களை يَجْحَدُوْنَ‏ மறுப்பவர்களாக
41:28. தாலிக ஜZஜா'உ அஃதா'இல் லாஹின் னாரு லஹும் Fபீஹா தாருல் குல்த், ஜZஜா'அம் Bபிமா கானூ Bபி ஆயாதினா யஜ்ஹதூன்
41:28. அதுவேதான் அல்லாஹ்வுடைய பகைவர்களுக்குள்ள கூலியாகும் - அதாவது நரகம்; நம் வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் கூலியாக அவர்களுக்கு நிரந்தரமான வீடு அ(ந்நரகத்)தில் உண்டு.
41:29
41:29 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا رَبَّنَاۤ اَرِنَا الَّذَيْنِ اَضَلّٰنَا مِنَ الْجِنِّ وَالْاِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ اَقْدَامِنَا لِيَكُوْنَا مِنَ الْاَسْفَلِيْنَ‏
وَقَالَ கூறுவார்(கள்) الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பவர்கள் رَبَّنَاۤ எங்கள் இறைவா اَرِنَا எங்களுக்குக் காண்பி الَّذَيْنِ اَضَلّٰنَا எவர்கள்/வழிகெடுத்தனர்/எங்களை مِنَ الْجِنِّ وَالْاِنْسِ ஜின் மற்றும் மனிதர்களில் نَجْعَلْهُمَا அ(வ்விரு)வர்களை ஆக்கிக் கொள்கிறோம் تَحْتَ اَقْدَامِنَا எங்கள் பாதங்களுக்குக் கீழ் لِيَكُوْنَا ஆகிவிடுவதற்காக مِنَ الْاَسْفَلِيْنَ‏ மிகக் கீழ்த்தரமானவர்களில்
41:29. வ காலல் லதீன கFபரூ ரBப்Bபனா அரினல் லதய்னி அளல் லானா மினல் ஜின்னி வல் இன்ஸி னஜ்'அல்ஹுமா தஹ்த அக்தாமினா லியகூனா மினல் அஸ்Fபலீன்
41:29. (அந்நாளில்:) காஃபிர்கள்: “எங்கள் இறைவா! ஜின்களிலிருந்தும் மனிதனிலிருந்தும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! அவ்விருவரும் தாழ்ந்தவர்களாக ஆவதற்காக நாங்கள் எங்களுடைய கால்களுக்குக் கீழாக்கி (மிதிப்போம்)” எனக் கூறுவார்கள்.
41:30
41:30 اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் قَالُوْا கூறினார்கள் رَبُّنَا எங்கள் இறைவன் اللّٰهُ அல்லாஹ்தான் ثُمَّ பிறகு اسْتَقَامُوْا உறுதியாக இருந்தார்கள் تَتَنَزَّلُ இறங்குவார்கள் عَلَيْهِمُ அவர்கள் மீது الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் اَلَّا تَخَافُوْا நீங்கள் பயப்படாதீர்கள்! وَلَا تَحْزَنُوْا இன்னும் கவலைப்படாதீர்கள்! وَاَبْشِرُوْا நற்செய்தி பெறுங்கள்! بِالْجَـنَّةِ சொர்க்கத்தைக் கொண்டு الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏ எது/வாக்களிக்கப்பட்டவர்களாக இருந்தீர்கள்
41:30. இன்னல் லதீன காலூ ரBப்Bபுனல் லாஹு தும்மஸ் தகாமூ ததனZஜ்Zஜலு 'அலய்ஹிமுல் மலா 'இகது அல்லா தகாFபூ வலா தஹ்Zஜனூ வ அBப்ஷிரூ Bபில் ஜன்ன்னதில் லதீ குன்தும் தூ'அதூன்
41:30. நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.
41:31
41:31 نَحْنُ اَوْلِيٰٓـؤُکُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ ۚ وَلَـكُمْ فِيْهَا مَا تَشْتَهِىْۤ اَنْفُسُكُمْ وَلَـكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ ؕ‏
نَحْنُ اَوْلِيٰٓـؤُکُمْ நாங்கள் உங்கள் பொறுப்பாளர்கள் فِى الْحَيٰوةِ வாழ்க்கையிலும் الدُّنْيَا இந்த உலக وَفِى الْاٰخِرَةِ ۚ மறுமையிலும் وَلَـكُمْ உங்களுக்கு உண்டு فِيْهَا அதில் مَا எதை تَشْتَهِىْۤ விரும்புகின்றது اَنْفُسُكُمْ உங்கள் மனங்கள் وَلَـكُمْ உங்களுக்கு உண்டு فِيْهَا அதில் مَا تَدَّعُوْنَ ؕ‏ எதை/கேட்கின்றீர்கள்
41:31. னஹ்னு அவ்லியா'உகும் Fபில் ஹயாதித் துன்யா வ Fபில் ஆகிரதி வ லகும் Fபீஹா மா தஷ்தஹீ அன்Fபுஸுகும் வ லகும் Fபீஹா ம தத்த'ஊன்
41:31. “நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.
41:32
41:32 نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِيْمٍ
نُزُلًا விருந்தோம்பலாக مِّنْ இருந்து غَفُوْرٍ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٍ‏ மகா கருணையாளன்
41:32. னுZஜுலம் மின் கFபூரிர் ரஹீம்
41:32. “மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்” (இது என்று கூறுவார்கள்).  
41:33
41:33 وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏
وَمَنْ யார்? اَحْسَنُ மிக அழகானவர் قَوْلًا பேச்சால் مِّمَّنْ ஒருவரைவிட دَعَاۤ அழைத்தார் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் وَعَمِلَ இன்னும் செய்தார் صَالِحًا நல்லதை وَّقَالَ இன்னும் கூறுகின்றார் اِنَّنِىْ நிச்சயமாக நான் مِنَ الْمُسْلِمِيْنَ‏ முஸ்லிம்களில் உள்ளவன்
41:33. வ மன் அஹ்ஸனு கவ்லம் மிம்மன் த'ஆ இலல் லாஹி வ 'அமில ஸாலிஹ(ன்)வ் வ கால இன்னனீ மினல் முஸ்லிமீன்
41:33. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
41:34
41:34 وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَ لَا السَّيِّئَةُ ؕ اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ فَاِذَا الَّذِىْ بَيْنَكَ وَبَيْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِىٌّ حَمِيْمٌ‏
وَلَا تَسْتَوِى சமமாகாது الْحَسَنَةُ நன்மையும் وَ لَا السَّيِّئَةُ ؕ தீமையும் اِدْفَعْ தடுப்பீராக! بِالَّتِىْ هِىَ اَحْسَنُ மிக அழகியதைக் கொண்டு فَاِذَا அப்போது الَّذِىْ எவர் بَيْنَكَ உமக்கு இடையில் وَبَيْنَهٗ ஒருவருக்கும் عَدَاوَةٌ பகைமை كَاَنَّهٗ போல்/அவர் وَلِىٌّ ஓர் உறவுக்காரரை حَمِيْمٌ‏ நெருக்கமான
41:34. வ லா தஸ்தவில் ஹஸனது வ லஸ் ஸய்யி'அஹ்; இத்Fபஃ Bபில்லதீ ஹிய அஹ்ஸனு Fப'இதல் லதீ Bபய்னக வ Bபய்னஹூ 'அதாவதுன் க'அன்னஹூ வலியுன் ஹமீம்
41:34. நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.
41:35
41:35 وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا الَّذِيْنَ صَبَرُوْا‌ۚ وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ‏
وَمَا يُلَقّٰٮهَاۤ இதை கொடுக்கப்பட மாட்டார்கள் اِلَّا தவிர الَّذِيْنَ صَبَرُوْا‌ۚ பொறுமையாளர்கள் وَمَا يُلَقّٰٮهَاۤ இன்னும் இதை கொடுக்கப்பட மாட்டார்கள் اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ‏ பெரும் பாக்கியம் உடையவர்கள் தவிர
41:35. வமா யுலக்காஹா இல்லல் லதீன ஸBபரூ வமா யுலக்காஹா இல்லா தூ ஹள்ளின் 'அளீம்
41:35. பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.
41:36
41:36 وَاِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ‌ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
وَاِمَّا يَنْزَغَنَّكَ நிச்சயமாக உம்மைத் தூண்டினால் مِنَ الشَّيْطٰنِ ஷைத்தானிடமிருந்து نَزْغٌ தீய எண்ணம் فَاسْتَعِذْ பாதுகாவல் தேடுவீராக! بِاللّٰهِ‌ؕ அல்லாஹ்விடம் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
41:36. வ இம்மா யன்Zஜகன்னக மினஷ் ஷய்தானி னZஜ்குன் Fபஸ்த'இத் Bபில்லாஹி இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
41:36. உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
41:37
41:37 وَمِنْ اٰيٰتِهِ الَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ‌ؕ لَا تَسْجُدُوْا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوْا لِلّٰهِ الَّذِىْ خَلَقَهُنَّ اِنْ كُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ‏
وَمِنْ اٰيٰتِهِ அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான் الَّيْلُ இரவு وَالنَّهَارُ பகல் وَالشَّمْسُ சூரியன் وَالْقَمَرُ‌ؕ சந்திரன் لَا تَسْجُدُوْا சிரம் பணியாதீர்கள்! لِلشَّمْسِ சூரியனுக்கும் وَلَا لِلْقَمَرِ சந்திரனுக்கும் وَاسْجُدُوْا சிரம் பணியுங்கள் لِلّٰهِ அல்லாஹ்விற்கு الَّذِىْ خَلَقَهُنَّ இவற்றைப் படைத்தவன் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் اِيَّاهُ அவனை تَعْبُدُوْنَ‏ வணங்குபவர்களாக
41:37. வ மின் ஆயாதிஹில் லய்லு வன்னஹாரு வஷ்ஷம்ஸு வல்கமர்; லா தஸ்ஜுதூ லிஷ்ஷம்ஸி வலா லில்கமரி வஸ்ஜுதூ லில்லாஹில் லதீ கல கஹுன்ன இன் குன்தும் இய்யாஹு தஃBபுதூன்
41:37. இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்.
41:38
41:38 فَاِنِ اسْتَكْبَرُوْا فَالَّذِيْنَ عِنْدَ رَبِّكَ يُسَبِّحُوْنَ لَهٗ بِالَّيْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا يَسْــٴَــمُوْنَ۩
فَاِنِ اسْتَكْبَرُوْا அவர்கள் பெருமையடித்து விலகினால் فَالَّذِيْنَ عِنْدَ رَبِّكَ உமது இறைவனிடம் இருக்கின்றவர்கள் يُسَبِّحُوْنَ துதிக்கின்றனர் لَهٗ அவனை بِالَّيْلِ இரவிலும் وَالنَّهَارِ பகலிலும் وَهُمْ அவர்கள் لَا يَسْــٴَــمُوْنَ۩‏ சோர்வடைய மாட்டார்கள்
41:38. Fப இனிஸ்-தக்Bபரூ Fபல்லதீ ன 'இன்த ரBப்Bபிக யுஸBப்Bபிஹூன லஹூ Bபில்லய்லி வன்ன்னஹாரி வ ஹும் லா யஸ்'அமூன்
41:38. ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்; அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை.
41:39
41:39 وَمِنْ اٰيٰتِهٖۤ اَنَّكَ تَرَى الْاَرْضَ خَاشِعَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَيْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ‌ؕ اِنَّ الَّذِىْۤ اَحْيَاهَا لَمُحْىِ الْمَوْتٰى ؕ اِنَّهٗ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
وَمِنْ اٰيٰتِهٖۤ இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் اَنَّكَ நிச்சயமாக நீர் تَرَى பார்க்கின்றீர் الْاَرْضَ பூமியை خَاشِعَةً காய்ந்ததாக فَاِذَاۤ اَنْزَلْنَا பிறகு, நாம் இறக்கினால் عَلَيْهَا அதன் மீது الْمَآءَ நீரை اهْتَزَّتْ செழிப்படைகிறது وَرَبَتْ‌ؕ இன்னும் அது வளர்கிறது اِنَّ நிச்சயமாக الَّذِىْۤ اَحْيَاهَا எவன்/உயிர்ப்பித்தான்/அதை لَمُحْىِ உயிர்ப்பிப்பவன் الْمَوْتٰى ؕ மரணித்தவர்களை(யும்) اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீதும் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
41:39. வ மின் ஆயாதிஹீ அன்னக தரல் அர்ள காஷி'அதன் Fப இதா அன்Zஜல்ன 'அலய்ஹல் மா'அஹ் தZஜ்Zஜத் வ ரBபத்; இன்னல் லதீ அஹ்யாஹா லமுஹியில் மவ்தா; இன்னஹூ 'அலா குல்லி ஷய்-இன் கதீர்
41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
41:40
41:40 اِنَّ الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اٰيٰتِنَا لَا يَخْفَوْنَ عَلَيْنَا ؕ اَفَمَنْ يُّلْقٰى فِى النَّارِ خَيْرٌ اَمْ مَّنْ يَّاْتِىْۤ اٰمِنًا يَّوْمَ الْقِيٰمَةِ‌ ؕ اِعْمَلُوْا مَا شِئْتُمْ‌ ۙ اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ يُلْحِدُوْنَ தடம் புரளுபவர்கள் فِىْۤ اٰيٰتِنَا நமது வசனங்களில் لَا يَخْفَوْنَ மறைந்துவிட மாட்டார்கள் عَلَيْنَا ؕ நம்மீது اَفَمَنْ يُّلْقٰى போடப்படுபவர் فِى النَّارِ நரகத்தில் خَيْرٌ சிறந்தவரா اَمْ அல்லது مَّنْ يَّاْتِىْۤ வருகின்றவரா? اٰمِنًا நிம்மதி பெற்றவராக يَّوْمَ الْقِيٰمَةِ‌ ؕ மறுமை நாளில் اِعْمَلُوْا செய்துகொள்ளுங்கள்! مَا شِئْتُمْ‌ ۙ நீங்கள் நாடியதை اِنَّهٗ நிச்சயமாக அவன் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
41:40. இன்னல் லதீன யுல்ஹிதூன Fபீ ஆயாதின லா யக்Fபவ்ன 'அலய்னா' அFபமய் யுல்கா Fபின் னாரி கய்ருன் அம் மய் யாதீ ஆமினய் யவ்மல் கியாமஹ்; இஃமலூ ம ஷி'தும் இன்னஹூ Bபிமா தஃமலூன Bபஸீர்
41:40. நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களில் குறை காண்கிறார்களோ அவர்(களுடைய செயல்)கள் நமக்கு மறைக்கப்படவில்லை - ஆகவே, நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது கியாம நாளன்று அச்சம் தீர்ந்து வருப(வன் நல்ல)வனா? நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள் - நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான்.
41:41
41:41 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِالذِّكْرِ لَمَّا جَآءَهُمْ‌ۚ وَاِنَّهٗ لَـكِتٰبٌ عَزِيْزٌۙ‏
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا நிச்சயமாக நிராகரித்தவர்கள் بِالذِّكْرِ இந்த வேதத்தை لَمَّا جَآءَ அது வந்த போது هُمْ‌ۚ அவர்களிடம் وَاِنَّهٗ நிச்சயமாக இது لَـكِتٰبٌ வேதமாகும் عَزِيْزٌۙ‏ மிக கண்ணியமான
41:41. இன்னல் லதீன கFபரூ Bபித் திக்ரி லம்மா ஜா'அஹும் வ இன்னஹூ ல கிதாBபுன் 'அZஜீZஜ்
41:41. நிச்சயமாக, எவர்கள் நல்லுபதேசம் (குர்ஆன்) தம்மிடம் வந்த போது அதை நிராகரித்தார்களோ (அவர்கள் உண்மையை உணர்வார்கள்); ஏனெனில் அதுவே நிச்சயமாக மிகவும் கண்ணியமான வேதமாகும்.
41:42
41:42 لَّا يَاْتِيْهِ الْبَاطِلُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهٖ‌ؕ تَنْزِيْلٌ مِّنْ حَكِيْمٍ حَمِيْدٍ‏
لَّا يَاْتِيْهِ அதனிடம் வரமாட்டார்(கள்) الْبَاطِلُ பொய்யர்(கள்) مِنْۢ بَيْنِ يَدَيْهِ அதற்கு முன்னிருந்தும் وَلَا مِنْ خَلْفِهٖ‌ؕ அதற்குப் பின்னிருந்தும் تَنْزِيْلٌ இறக்கப்பட்ட வேதம் مِّنْ حَكِيْمٍ حَمِيْدٍ‏ மகா ஞானவான், மகா புகழுக்குரியவனிடமிருந்து
41:42. லா யாதீஹில் Bபாதிலு மிம் Bபய்னி யதய்ஹி வலா மின் கல்Fபிஹீ தன்Zஜீலும் மின் ஹகீமின் ஹமீத்
41:42. அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.
41:43
41:43 مَا يُقَالُ لَـكَ اِلَّا مَا قَدْ قِيْلَ لِلرُّسُلِ مِنْ قَبْلِكَ ‌ؕ اِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ وَّذُوْ عِقَابٍ اَ لِيْمٍ‏
مَا يُقَالُ சொல்லப்படாது لَـكَ உமக்கு اِلَّا தவிர مَا எது قَدْ திட்டமாக قِيْلَ சொல்லப்பட்டதோ لِلرُّسُلِ தூதர்களுக்கு مِنْ قَبْلِكَ ؕ உமக்கு முன்னர் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உமது இறைவன் لَذُوْ مَغْفِرَةٍ மன்னிப்புடையவன் وَّذُوْ عِقَابٍ இன்னும் தண்டனைஉடையவன் اَ لِيْمٍ‏ வலி தரக்கூடியது
41:43. மா யுகாலு லக இல்லா மா கத் கீல லிர் ருஸுலி மின் கBப்லிக்; இன்ன ரBப்Bபக லதூ மக்Fபிரதி(ன்)வ் வ தூ 'இகாBபின் அலீம்
41:43. (நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதேயன்றி உமக்குக் கூறப்படவில்லை; நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிப்போனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான்.
41:44
41:44 وَلَوْ جَعَلْنٰهُ قُرْاٰنًا اَعْجَمِيًّا لَّقَالُوْا لَوْلَا فُصِّلَتْ اٰيٰتُهٗ ؕ ءَؔاَعْجَمِىٌّ وَّعَرَبِىٌّ‌  ؕ قُلْ هُوَ لِلَّذِيْنَ اٰمَنُوْا هُدًى وَشِفَآءٌ‌  ؕ وَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ فِىْۤ اٰذَانِهِمْ وَقْرٌ وَّهُوَ عَلَيْهِمْ عَمًى‌ ؕ اُولٰٓٮِٕكَ يُنَادَوْنَ مِنْ مَّكَانٍۢ بَعِيْدٍ
وَلَوْ جَعَلْنٰهُ நாம் இதை ஆக்கி இருந்தால் قُرْاٰنًا குர்ஆனாக اَعْجَمِيًّا அரபி அல்லாத மொழி لَّقَالُوْا கூறியிருப்பார்கள் لَوْلَا فُصِّلَتْ விவரிக்கப்பட்டிருக்க வேண்டாமா? اٰيٰتُهٗ ؕ இதன் வசனங்கள் ءَؔاَعْجَمِىٌّ அரபி அல்லாத ஒரு மொழியிலா! وَّعَرَبِىٌّ‌  ؕ இன்னும் அரபி ஆயிற்றே ! قُلْ கூறுவீராக! هُوَ இது لِلَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களுக்கு هُدًى நேர்வழி(யும்) وَشِفَآءٌ‌  ؕ நிவாரணமும் وَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ எவர்கள்/நம்பிக்கை கொள்ளவில்லையோ فِىْۤ اٰذَانِهِمْ அவர்களின் காதுகளில் وَقْرٌ செவிட்டுத்தனம் وَّهُوَ அது عَلَيْهِمْ அவர்கள் மீது عَمًى‌ ؕ மறைந்திருக்கிறது اُولٰٓٮِٕكَ அவர்கள் يُنَادَوْنَ அழைக்கப்படுவார்கள் مِنْ مَّكَانٍۢ இடத்தில் இருந்து بَعِيْدٍ‏ மிக தூரமான
41:44. வ லவ் ஜ'அல்னாஹு குர்ஆனன் அஃஜமிய்யல் லகாலூ லவ் லா Fபுஸ்ஸிலத் ஆயாதுஹூ 'அ அஃஜமிய்யு(ன்)வ் வ 'அரBபிய்ய்; குல் ஹுவ லில்லதீன ஆமனூ ஹுத(ன்)வ் வ ஷிFபா'உ(ன்)வ் வல்லதீன ல யு'மினூன Fபீ ஆதானிஹிம் வக்ரு(ன்)வ் வ ஹுவ 'அலய்ஹிம் 'அமா; உலா'இக யுனாதவ்ன மிம் மாகானிம் Bப'ஈத்
41:44. நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால்; இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது; இன்னும், அவர் (கண்)களில் குருட்டுத்தனமும் இருக்கிறது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்).  
41:45
41:45 وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ فَاخْتُلِفَ فِيْهِ‌ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَـقُضِىَ بَيْنَهُمْ‌ؕ وَاِنَّهُمْ لَفِىْ شَكٍّ مِّنْهُ مُرِيْبٍ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் கொடுத்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْكِتٰبَ வேதத்தை فَاخْتُلِفَ ஆனால் முரண்பாடு செய்யப்பட்டது فِيْهِ‌ؕ அதில் وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ ஒரு வாக்கு முந்தியிருக்கவில்லை என்றால் مِنْ رَّبِّكَ உமது இறைவனிடமிருந்து لَـقُضِىَ தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் بَيْنَهُمْ‌ؕ அவர்களுக்கு மத்தியில் وَاِنَّهُمْ இன்னும் நிச்சயமாக அவர்கள் لَفِىْ شَكٍّ சந்தேகத்தில்தான் مِّنْهُ இதில் مُرِيْبٍ‏ மிக ஆழமான
41:45. வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப Fபக்துலிFப Fபீ; வ லவ்லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக லகுளிய Bபய்னஹும்; வ இன்னஹும் லFபீ ஷக்கிம் மின்ஹு முரீBப்
41:45. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; ஆனால், அதில் மாறுபாடுகள் செய்யப்பட்டு விட்டன; அன்றியும் உமது இறைவனிடமிருந்து ஏற்கனவே வாக்கு ஏற்படாது போயிருந்தால், அவர்களுக்கிடையே தீர்ப்பு அளிக்கப்பட்டே இருக்கும் - நிச்சயமாக அவர்களும் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
41:46
41:46 مَنْ عَمِلَ صَالِحًـا فَلِنَفْسِهٖ‌ وَمَنْ اَسَآءَ فَعَلَيْهَا‌ؕ وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ‏
مَنْ عَمِلَ யார் செய்வாரோ صَالِحًـا நல்லதை فَلِنَفْسِهٖ‌ அது அவருக்குத்தான் நன்மையாகும் وَمَنْ இன்னும் யார் اَسَآءَ தீயதை செய்வாரோ فَعَلَيْهَا‌ؕ அது அவருக்குத்தான் கேடாகும் وَمَا இல்லை رَبُّكَ உமது இறைவன் بِظَلَّامٍ அநியாயம் செய்பவனாக لِّلْعَبِيْدِ‏ அடியார்களுக்கு
41:46. மன் 'அமில ஸலிஹன் FபலினFப்ஸிஹீ வ மன் அஸா'அ Fப'அலய்ஹா; வமா ரBப்Bபுக Bபிளல்லாமில் லில் 'அBபீத்
41:46. எவர் ஸாலிஹான (நல்ல) அமல் செய்கிறாரோ (அது) அவருக்கே நன்மையாகும், எவர் பாவம் செய்கிறாரோ (அது) அவருக்கே கேடாகும் - அன்றியும் உம்முடைய இறைவன் (தன்) அடியார்களுக்குச் சிறிதும் அநியாயம் செய்பவன் அல்லன்.  
41:47
41:47 اِلَيْهِ يُرَدُّ عِلْمُ السَّاعَةِ‌ؕ وَمَا تَخْرُجُ مِنْ ثَمَرٰتٍ مِّنْ اَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ اُنْثٰى وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖ‌ؕ وَيَوْمَ يُنَادِيْهِمْ اَيْنَ شُرَكَآءِىْۙ قَالُـوْۤا اٰذَنّٰكَۙ مَا مِنَّا مِنْ شَهِيْدٍ‌ۚ‏
اِلَيْهِ அவன் பக்கமே يُرَدُّ திருப்பப்படுகிறது عِلْمُ அறிவு السَّاعَةِ‌ؕ மறுமையைப் பற்றிய وَمَا تَخْرُجُ வெளிவருவதில்லை مِنْ ثَمَرٰتٍ பழங்களில் எதுவும் مِّنْ اَكْمَامِهَا அவற்றின் பாலைகளில் இருந்து وَمَا تَحْمِلُ கர்ப்பமடைவதுமில்லை مِنْ اُنْثٰى பெண்களில் எவரும் وَلَا تَضَعُ இன்னும் குழந்தை பெற்றெடுப்பதுமில்லை اِلَّا بِعِلْمِهٖ‌ؕ அவனது ஞானமில்லாமல் وَيَوْمَ நாளில் يُنَادِيْهِمْ அவர்களை அவன் அழைக்கின்ற اَيْنَ எங்கே شُرَكَآءِىْۙ எனது இணைகள் قَالُـوْۤا அவர்கள்கூறுவார்கள் اٰذَنّٰكَۙ நாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம் مَا مِنَّا எங்களில் இல்லை مِنْ شَهِيْدٍ‌ۚ‏ சாட்சி சொல்பவர் யாரும்
41:47. இலய்ஹி யுரத்து 'இல்முஸ் ஸா'அஹ்; வமா தக்ருஜு மின் தமராதிம் மின் அக்மாமிஹா வமா தஹ்மிலு மின் உன்ஸா வலா தள'உ இல்லா Bபி'இல்மிஹ்; வ யவ்ம யுனாதீஹிம் அய்ன ஷுரகா'ஈ காலூ ஆதன்னாக மா மின்னா மின் ஷஹீத்
41:47. (இறுதித் தீர்ப்பின்) வேளைக்குரிய ஞானம் அவனுக்கு சொந்தமானது; இன்னும், அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை; (அவன் அறியாது) எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை; பிரசவிப்பதுமில்லை; (இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில் அவன் “எனக்கு இணையாக்கப்பட்டவை எங்கே?” என்று அவர்களிடம் கேட்பான்; அப்போது அவர்கள் “எங்களில் எவருமே (அவ்வாறு) சாட்சி கூறுபவர்கள் இல்லை” என்று நாங்கள் உனக்கு அறிவித்துவிடுகிறோம்” என்று கூறுவார்கள்.
41:48
41:48 وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَدْعُوْنَ مِنْ قَبْلُ‌ وَظَنُّوْا مَا لَهُمْ مِّنْ مَّحِيْصٍ‏
وَضَلَّ இன்னும் மறைந்துவிடும் عَنْهُمْ அவர்களை விட்டும் مَّا كَانُوْا يَدْعُوْنَ அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவை مِنْ قَبْلُ‌ இதற்கு முன்னர் وَظَنُّوْا இன்னும் அறிந்து கொள்வார்கள் مَا لَهُمْ தங்களுக்கு இல்லை مِّنْ مَّحِيْصٍ‏ தப்பிப்பதற்குரிய இடம் எதுவும்
41:48. வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யத்'ஊன மின் கBப்லு வ ளன்னூ மா லஹும் மிம் மஹீஸ்
41:48. அன்றியும், முன்னால் அவர்கள் (தெய்வங்கள் என) அழைத்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிடும். எனவே அவர்களுக்குப் புகலிடமில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
41:49
41:49 لَا يَسْــٴَــمُ الْاِنْسَانُ مِنْ دُعَآءِ الْخَيْرِ وَاِنْ مَّسَّهُ الشَّرُّ فَيَــٴُــوْسٌ قَنُوْطٌ‏
لَا يَسْــٴَــمُ சடைவடையமாட்டான் الْاِنْسَانُ மனிதன் مِنْ دُعَآءِ பிரார்த்திப்பதில் الْخَيْرِ நன்மைக்காக وَاِنْ مَّسَّهُ அவனுக்கு நிகழ்ந்தால் الشَّرُّ தீமைகள் فَيَــٴُــوْسٌ நிராசை அடைந்தவனாக قَنُوْطٌ‏ நம்பிக்கை இழந்தவனாக
41:49. லா யஸ்'அமுல் இன்ஸானு மின் து'ஆ'இல் கய்ரி வ இம் மஸ்ஸ ஹுஷ் ஷர்ரு Fப ய'ஊஸுன் கனூத்
41:49. மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான்.
41:50
41:50 وَلَٮِٕنْ اَذَقْنٰهُ رَحْمَةً مِّنَّا مِنْۢ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُ لَيَقُوْلَنَّ هٰذَا لِىْ ۙ وَمَاۤ اَظُنُّ السَّاعَةَ قَآٮِٕمَةً  ۙ وَّلَٮِٕنْ رُّجِعْتُ اِلٰى رَبِّىْۤ اِنَّ لِىْ عِنْدَهٗ لَـلْحُسْنٰى‌ ۚ فَلَـنُنَـبِّـئَنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِمَا عَمِلُوْا وَلَـنُذِيْقَنَّهُمْ مِّنْ عَذَابٍ غَلِيْظٍ‏
وَلَٮِٕنْ اَذَقْنٰهُ நாம் அவனுக்கு சுவைக்க வைத்தால் رَحْمَةً ஓர் அருளை مِّنَّا நம் புறத்தில் இருந்து مِنْۢ بَعْدِ பின்னர் ضَرَّآءَ தீங்குக்கு مَسَّتْهُ அவனுக்கு நிகந்ததது لَيَقُوْلَنَّ இன்னும் கூறுகிறான் هٰذَا இது لِىْ ۙ எனக்குரியது وَمَاۤ اَظُنُّ நான் எண்ணவில்லை السَّاعَةَ மறுமை قَآٮِٕمَةً  ۙ நிகழும் وَّلَٮِٕنْ رُّجِعْتُ நான் திரும்பக் கொண்டு வரப்பட்டாலும் اِلٰى رَبِّىْۤ என் இறைவனிடம் اِنَّ لِىْ நிச்சயமாக எனக்கு عِنْدَهٗ அவனிடம் لَـلْحُسْنٰى‌ ۚ சொர்க்கம் உண்டு فَلَـنُنَـبِّـئَنَّ நாம் நிச்சயமாக அறிவிப்போம் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களுக்கு بِمَا عَمِلُوْا அவர்கள் செய்ததை وَلَـنُذِيْقَنَّهُمْ இன்னும் நிச்சயமாக அவர்களுக்கு சுவைக்க வைப்போம் مِّنْ عَذَابٍ غَلِيْظٍ‏ கடுமையான வேதனையை
41:50. வ ல இன் அதக்னாஹு ரஹ்மதம் மின்னா மிம் Bபஃதி ளர் ரா'அ மஸ்ஸத் ஹு ல யகூலன்ன ஹாதா லீ வ மா அளுன்னுஸ் ஸா'அத கா'இமத(ன்)வ் வ ல'இன் ருஜிஃது இலா ரBப்Bபீ இன்ன லீ 'இன்தஹூ லல்ஹுஸ்னா; Fபலனு னBப்Bபி'அன்னல் லதீன கFபரூ Bபிமா 'அமிலூ வ லனுதீகன் னஹும் மின் 'அதாBபின் கலீள்
41:50. எனினும் அவனைத் தீண்டியிருந்த கெடுதிக்குப் பின் நாம் அவனை நம் ரஹ்மத்தை - கிருபையைச் சுவைக்கச் செய்தால், அவன் “இது எனக்கு உரியதே யாகும்; அன்றியும் (விசாரணைக்குரிய) வேளை ஏற்படுமென நான் நினைக்கவில்லை; நான் என்னுடைய இறைவனிடம் திருப்பி அனுப்பப்பட்டாலும், நிச்சயமாக அவனிடத்தில் எனக்கு நன்மையே கிடைக்கும்” என்று திடமாகச் சொல்கிறான். ஆகவே காஃபிர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நிச்சயமாக நாம் தெரிவிப்போம்; மேலும் நாம் அவர்களை நிச்சயமாக, கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
41:51
41:51 وَاِذَاۤ اَنْعَمْنَا عَلَى الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖ‌ۚ وَاِذَا مَسَّهُ الشَّرُّ فَذُوْ دُعَآءٍ عَرِيْضٍ‏
وَاِذَاۤ اَنْعَمْنَا நாம் அருள் புரிந்தால் عَلَى الْاِنْسَانِ மனிதன் மீது اَعْرَضَ புறக்கணித்து செல்கிறான் وَنَاٰ بِجَانِبِهٖ‌ۚ தூரமாகி விடுகிறான் وَاِذَا مَسَّهُ இன்னும் அவனுக்குநிகழ்ந்தால் الشَّرُّ தீங்கு فَذُوْ دُعَآءٍ பிரார்த்தனை உடையவனாக عَرِيْضٍ‏ மிக அதிகமான
41:51. வ இதா அன்'அம்னா 'அலல் இன்ஸானி அஃரள வ னஆ Bபிஜானி Bபிஹீ வ இதா மஸ்ஸஹுஷ் ஷர்ரு Fபதூ து'ஆ'இன் 'அரீள்
41:51. அன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான் - ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான்.
41:52
41:52 قُلْ اَرَءَيْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ ثُمَّ كَفَرْتُمْ بِهٖ مَنْ اَضَلُّ مِمَّنْ هُوَ فِىْ شِقَاقٍۢ بَعِيْدٍ‏
قُلْ கூறுவீராக! اَرَءَيْتُمْ நீங்கள் அறிவியுங்கள் اِنْ كَانَ இருந்தால் مِنْ عِنْدِ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து ثُمَّ பிறகு كَفَرْتُمْ நீங்கள் நிராகரித்து விட்டால் بِهٖ அதை مَنْ யார்? اَضَلُّ மிகப் பெரிய வழிகேடன் مِمَّنْ ஒருவனைவிட هُوَ அவன் فِىْ شِقَاقٍۢ முரண்பாட்டில் بَعِيْدٍ‏ வெகு தூரமான
41:52. குல் அராஇதும் இன் கான மின் 'இன்தில் லாஹி தும்ம கFபர் தும் Bபிஹீ மன் அளல்லு மிம்மன் ஹுவ Fபீ ஷிககிம் Bப'ஈத்
41:52. “(இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்துள்ளதாக இருந்தும், இதை நீங்கள் நிராகரித்தால், உங்கள் நிலை என்னவாகும்; தூரமான விரோதத்திலுள்ளவர்(களாகிய உங்)களை விட, அதிக வழிகேடன் யார் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று (நபியே!) நீர் கேளும்.
41:53
41:53 سَنُرِيْهِمْ اٰيٰتِنَا فِى الْاٰفَاقِ وَفِىْۤ اَنْفُسِهِمْ حَتّٰى يَتَبَيَّنَ لَهُمْ اَنَّهُ الْحَـقُّ‌ ؕ اَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ اَنَّهٗ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏
سَنُرِيْهِمْ விரைவில் அவர்களுக்கு நாம் காண்பிப்போம் اٰيٰتِنَا நமது அத்தாட்சிகளை فِى الْاٰفَاقِ பல பகுதிகளிலும் وَفِىْۤ اَنْفُسِهِمْ அவர்களிலும் حَتّٰى இறுதியாக يَتَبَيَّنَ தெளிவாகிவிடும் لَهُمْ அவர்களுக்கு اَنَّهُ நிச்சயமாக இதுதான் الْحَـقُّ‌ ؕ உண்மை اَوَلَمْ يَكْفِ போதாதா? بِرَبِّكَ உமது இறைவனுக்கு اَنَّهٗ நிச்சயமாக தான் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் شَهِيْدٌ‏ நன்கு பார்ப்பவனாக
41:53. ஸனுரீஹிம் ஆயாதினா Fபில் ஆFபாகி வ Fபீ அன்Fபுஸிஹிம் ஹத்தா யதBபய்யன லஹும் அன்னஹுல் ஹக்க்; அவ லம் யக்Fபி Bபி ரBப்Bபிக அன்னஹூ 'அலா குல்லி ஷய்-இன் ஷஹீத்
41:53. நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?
41:54
41:54 اَلَاۤ اِنَّهُمْ فِىْ مِرْيَةٍ مِّنْ لِّقَآءِ رَبِّهِمْ‌ؕ اَلَاۤ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍ مُّحِيْطٌ
اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் فِىْ مِرْيَةٍ சந்தேகத்தில் இருக்கின்றனர் مِّنْ لِّقَآءِ சந்திப்பதில் رَبِّهِمْ‌ؕ தங்கள் இறைவனை اَلَاۤ அறிந்து கொள்ளுங்கள்! اِنَّهٗ நிச்சயமாக அவன் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் مُّحِيْطٌ‏ சூழ்ந்தவன்
41:54. அலா இன்னஹும் Fபீ மிர்யதிம் மில் லிகா'இ ரBப்Bபிஹிம்; அலா இன்னஹூ Bபிகுல்லி ஷய்'இம் முஹீத்
41:54. அறிந்து கொள்க: நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள்; அறிந்து கொள்க: நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான்.