98. ஸூரத்துல் பய்யினா(தெளிவான ஆதாரம்)
மதனீ, வசனங்கள்: 8

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
98:1
98:1 لَمْ يَكُنِ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِيْنَ مُنْفَكِّيْنَ حَتّٰى تَاْتِيَهُمُ الْبَيِّنَةُ ۙ‏
لَمْ يَكُنِ இருக்கவில்லை الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் مِنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களாகிய وَالْمُشْرِكِيْنَ இன்னும் இணைவைப்போர் مُنْفَكِّيْنَ விலகியவர்களாக حَتّٰى வரை تَاْتِيَهُمُ தங்களிடம் வருகின்ற الْبَيِّنَةُ ۙ‏ தெளிவான அத்தாட்சி
98:1. லம் ய குனில் லதீன கFபரு மின் அஹ்லில் கிதாBபி வல் முஷ்ரி கீன முன் Fபக் கீன ஹத்தா த-திய ஹுமுல் Bபய்யினஹ்
98:1. வேதக்காரர்களிலும், முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்கள் அல்லர்.
98:2
98:2 رَسُوْلٌ مِّنَ اللّٰهِ يَتْلُوْا صُحُفًا مُّطَهَّرَةً ۙ‏
رَسُوْلٌ தூதர் مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து يَتْلُوْا ஓதுகின்றார் صُحُفًا ஏடுகளை مُّطَهَّرَةً ۙ‏ பரிசுத்தமான
98:2. ரஸூலும் மினல் லாஹி யத்லு ஸுஹுFபம் முதஹ்ஹரஹ்
98:2. (அத் தெளிவான ஆதாரம்) அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், அவர்களுக்கு பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பிக்கிறார் (என்பது).
98:3
98:3 فِيْهَا كُتُبٌ قَيِّمَةٌ ؕ‏
فِيْهَا அவற்றில் كُتُبٌ சட்டங்கள் قَيِّمَةٌ ؕ‏ நேரான
98:3. Fபீஹா குதுBபுன் கய்யிமஹ்
98:3. அவற்றில் நிலையான சட்டதிட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
98:4
98:4 وَمَا تَفَرَّقَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنَةُ ؕ‏
وَمَا تَفَرَّقَ பிரியவில்லை الَّذِيْنَ اُوْتُوا கொடுக்கப்பட்டவர்கள் الْكِتٰبَ வேதம் اِلَّا தவிர مِنْۢ بَعْدِ பின்னர் مَا جَآءَتْهُمُ தங்களிடம் வந்தது الْبَيِّنَةُ ؕ‏ தெளிவான சான்று
98:4. வமா தFபர்ரகல் லதீன ஊதுல் கிதாBப இல்-ல மிம் Bபஃதி ம ஜா-அத் ஹுமுல் Bபய்ய்யினஹ்
98:4. எனினும் வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான (இந்த) ஆதாரம் வந்த பின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை.
98:5
98:5 وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ  ۙ حُنَفَآءَ وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ‌ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِ ؕ‏
وَمَاۤ اُمِرُوْۤا அவர்கள் ஏவப்படவில்லை اِلَّا தவிர لِيَعْبُدُوا வணங்குவதற்கு اللّٰهَ அல்லாஹ்வை مُخْلِصِيْنَ தூய்மைப்படுத்தியவர்களாக لَـهُ அவனுக்கு الدِّيْنَ  ۙ வழிபாட்டை حُنَفَآءَ இணைவைப்பை விட்டு விலகியவர்களாக وَيُقِيْمُوا இன்னும் அவர்கள் நிலைநிறுத்துவது الصَّلٰوةَ தொழுகையை وَيُؤْتُوا இன்னும் அவர்கள் கொடுப்பது الزَّكٰوةَ‌ ஸகாத்தை وَذٰلِكَ இன்னும் இதுதான் دِيْنُ மார்க்கம் الْقَيِّمَةِ ؕ‏ நேரான
98:5. வமா உமிரூ இல்லா லி யஃBபுதுல்லாஹ முக்லிஸீன லஹுத்-தீன ஹுன Fபா-அ வ யுகீமுஸ் ஸலாத வ யு-துZஜ் Zஜகாத; வ தாலிக தீனுல் கய்யிமஹ்
98:5. “அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.”
98:6
98:6 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَ الْمُشْرِكِيْنَ فِىْ نَارِ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ ؕ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் مِنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களாகிய وَ الْمُشْرِكِيْنَ இன்னும் இணைவைப்போர் فِىْ نَارِ நெருப்பில் جَهَنَّمَ நரகம் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்களாக فِيْهَا ؕ அதில் اُولٰٓٮِٕكَ هُمْ இவர்கள்தான் شَرُّ மகா தீயோர் الْبَرِيَّةِ ؕ‏ படைப்புகளில்
98:6. இன்னல் லதீன கFபரு மின் அஹ்லில் கிதாBபி வல் முஷ்ரி கீன Fபீ னாரி ஜஹன்னம காலி தீன Fபீஹா; உலா-இக ஹும் ஷர்ருல் Bபரீயஹ்
98:6. நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.
98:7
98:7 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِۙ اُولٰٓٮِٕكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ ؕ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِۙ நற்செயல்களை اُولٰٓٮِٕكَ هُمْ அவர்கள்தான் خَيْرُ மிகச் சிறந்தோர் الْبَرِيَّةِ ؕ‏ படைப்புகளில்
98:7. இன்னல் லதீன ஆமனு வ 'அமிலுஸ் ஸாலிஹாதி உல-இக ஹும் கய்ருல் Bபரீய் யஹ்
98:7. நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள்.
98:8
98:8 جَزَآؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ‌ؕ رَضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ‌ؕ ذٰلِكَ لِمَنْ خَشِىَ رَبَّهٗ
جَزَآؤُهُمْ அவர்களுடைய கூலி عِنْدَ رَبِّهِمْ அவர்களின் இறைவனிடம் جَنّٰتُ சொர்க்கங்கள் عَدْنٍ அத்ன் تَجْرِىْ ஓடுகின்றன مِنْ تَحْتِهَا அவற்றின் கீழே الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்களாக فِيْهَاۤ அவற்றில் اَبَدًا ؕ எப்போதும் رَضِىَ திருப்தி அடைவான் اللّٰهُ அல்லாஹ் عَنْهُمْ அவர்களைப் பற்றி وَرَضُوْا இன்னும் அவர்கள் திருப்தி அடைவார்கள் عَنْهُ ؕ அவனைப் பற்றி ذٰلِكَ இது لِمَنْ خَشِىَ பயந்தவருக்கு رَبَّهٗ‏ தன் இறைவனை
98:8. ஜZஜா-உஹும் இன்த ரBப்Bபிஹிம் ஜன் னாது 'அத்னின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன் ஹாரு காலிதீன Fபீஹா அBபத; ரளிய்-யல்லாஹு 'அன்ஹும் வரளு 'அன் தாலிக லிமன் கஷிய ரBப்Bபஹ்.
98:8. அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.