4. ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)
மதனீ, வசனங்கள்: 176

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
4:1
4:1 يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏
يٰۤـاَيُّهَا النَّاسُ மனிதர்களே! اتَّقُوْا அஞ்சுங்கள் رَبَّكُمُ உங்கள் இறைவனை الَّذِىْ எவன் خَلَقَكُمْ உங்களைப் படைத்தான் مِّنْ نَّفْسٍ ஓர் ஆன்மாவிலிருந்து وَّاحِدَةٍ ஒரே وَّخَلَقَ இன்னும் படைத்தான் مِنْهَا அதிலிருந்து زَوْجَهَا அவருடைய மனைவியை وَبَثَّ இன்னும் பரப்பினான் مِنْهُمَا அவ்விருவரிலிருந்து رِجَالًا ஆண்களை كَثِيْرًا அதிகமான وَّنِسَآءً‌ ۚ இன்னும் பெண்களை وَاتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை الَّذِىْ எவன் تَسَآءَلُوْنَ உங்களுக்குள் கேட்டுக் கொள்கிறீர்கள் بِهٖ அவனைக்கொண்டு وَالْاَرْحَامَ‌ ؕ இன்னும் இரத்தபந்தங்களை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَلَيْكُمْ உங்கள் மீது رَقِيْبًا‏ கண்காணிப்பாளனாக
4:1. யா அய்யுஹன் னாஸுத் தகூ ரBப்Bபகுமுல் லதீ கலககும் மின் னFப்ஸி(ன்)வ் வாஹிததி(ன்)வ் வ கலக மின்ஹா Zஜவ்ஜஹா வ Bபத் த மின்ஹுமா ரிஜாலன் கதீர(ன்)வ் வ னிஸா'ஆ; வத்தகுல் லாஹல்லதீ தஸா 'அலூன Bபிஹீ வல் அர்ஹாம்; இன்னல் லாஹ கான 'அலய்கும் ரகீBபா
4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
4:2
4:2 وَاٰ تُوا الْيَتٰمٰٓى اَمْوَالَهُمْ‌ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِيْثَ بِالطَّيِّبِ وَلَا تَاْكُلُوْۤا اَمْوَالَهُمْ‌ اِلٰٓى اَمْوَالِكُمْ‌ؕ اِنَّهٗ كَانَ حُوْبًا كَبِيْرًا‏‏
وَاٰ تُوا இன்னும் கொடுங்கள் الْيَتٰمٰٓى அநாதைகளுக்கு اَمْوَالَهُمْ‌ செல்வங்களை/அவர்களுடைய وَلَا تَتَبَدَّلُوا மாற்றி விடாதீர்கள் الْخَبِيْثَ கெட்டதை بِالطَّيِّبِ நல்லதிற்கு பதிலாக وَلَا تَاْكُلُوْۤا விழுங்காதீர்கள் اَمْوَالَهُمْ‌ செல்வங்களை/அவர்களுடைய اِلٰٓى اَمْوَالِكُمْ‌ؕ உங்கள்/செல்வங்கள்/உடன் اِنَّهٗ நிச்சயமாக அது كَانَ இருக்கிறது حُوْبًا பாவமாக كَبِيْرًا‏‏ பெரும்
4:2. வ ஆதுல் யதாமா அம்வாலஹும் வலா ததBபத் தலுல் கBபீத Bபித்தய்யிBபி வலா த'குலூ அம்வாலஹும் இலா அம்வாலிகும்; இன்னஹூ கான ஹூBபன் கBபீரா
4:2. நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்; நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.
4:3
4:3 وَاِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِى الْيَتٰمٰى فَانْكِحُوْا مَا طَابَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ‌ ‌ۚ فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ؕ ذٰ لِكَ اَدْنٰٓى اَلَّا تَعُوْلُوْا ؕ‏
وَاِنْ خِفْتُمْ நீங்கள் பயந்தால் اَلَّا تُقْسِطُوْا நீதமாக நடக்க மாட்டீர்கள் என்பதை فِى الْيَتٰمٰى அநாதைகள் விஷயத்தில் فَانْكِحُوْا மணம் புரியுங்கள் مَا எவளை طَابَ விருப்பமாகி விட்டார் لَـكُمْ உங்களுக்கு مِّنَ النِّسَآءِ பெண்களிலிருந்து مَثْنٰى இரண்டிரண்டாக وَثُلٰثَ இன்னும் மும்மூன்றாக وَرُبٰعَ‌ ۚ இன்னும் நான்கு நான்காக فَاِنْ خِفْتُمْ நீங்கள் பயந்தால் اَلَّا تَعْدِلُوْا நீதமாக நடக்க மாட்டீர்கள் என்பதை فَوَاحِدَةً ஒருத்தியை اَوْ அல்லது مَا எவளை مَلَـكَتْ சொந்தமாக்கியது اَيْمَانُكُمْ‌ ؕ உங்கள் வலக்கரங்கள் ذٰ لِكَ இதுவே اَدْنٰٓى சுலபமாகும் اَلَّا تَعُوْلُوْاؕ‏ நீங்கள் அநீதியிழைக்காமல் இருப்பதற்கு
4:3. வ இன் கிFப்தும் அல்லா துக்ஸிதூ Fபில் யதாமா Fபன்கிஹூ மா தாBப லகும் மினன் னிஸா'இ மத்னா வ துலாத வ ருBபா'அ Fப'இன் கிFப்தும் அல்லா தஃதிலூ Fபவாஹிததன் அவ் மா மலகத் அய்மானுகும்; தாலிக அத்னா அல்லா த'ஊலூ
4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.
4:4
4:4 وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً‌  ؕ فَاِنْ طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا مَّرِیْٓـــٴًﺎ‏
وَاٰ تُوا கொடுங்கள் النِّسَآءَ பெண்களுக்கு صَدُقٰتِهِنَّ மணக்கொடைகளை /அவர்களுடைய نِحْلَةً‌  ؕ கடமையாக فَاِنْ طِبْنَ அவர்கள் விரும்பினால் لَـكُمْ உங்களுக்கு عَنْ شَىْءٍ ஒரு சிறிதை مِّنْهُ அதிலிருந்து نَفْسًا மனதால் فَكُلُوْهُ அதைப் புசியுங்கள் هَنِيْٓــٴًـــا இன்பமாக مَّرِیْٓـــٴًﺎ‏ மகிழ்ச்சியாக
4:4. வ ஆதுன் னிஸா'அ ஸது காதிஹின்ன னிஹ்லஹ்; Fப இன் திBப்ன லகும் 'அன் ஷய்'இம் மின்ஹு னFப்ஸன் Fபகுலூஹு ஹனீ'அம் மரீ'ஆ
4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.
4:5
4:5 وَلَا تُؤْتُوا السُّفَهَآءَ اَمْوَالَـكُمُ الَّتِىْ جَعَلَ اللّٰهُ لَـكُمْ قِيٰمًا وَّارْزُقُوْهُمْ فِيْهَا وَاكْسُوْهُمْ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا‏
وَلَا تُؤْتُوا கொடுக்காதீர்கள் السُّفَهَآءَ புத்திக் குறைவானவர்களுக்கு اَمْوَالَـكُمُ செல்வங்களை/உங்கள் الَّتِىْ எது جَعَلَ ஆக்கினான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு قِيٰمًا வாழ்வாதாரமாக وَّارْزُقُوْهُمْ உணவளியுங்கள் فِيْهَا அதில்/அவர்களுக்கு وَاكْسُوْهُمْ இன்னும் ஆடை அணிவியுங்கள்/அவர்களுக்கு وَقُوْلُوْا கூறுங்கள் لَهُمْ அவர்களுக்கு قَوْلًا சொல்லை مَّعْرُوْفًا‏ நல்லது
4:5. வ லா து'துஸ் ஸுFபஹா'அ அம்வாலகுமுல் லதீ ஜ'அலல் லாஹு லகும் கியாம(ன்)வ்-வர்Zஜுகூஹும் Fபீஹா வக்ஸூஹும் வ கூலூ லஹும் கவ்லம் மஃரூFபா
4:5. (அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்; ஆடையும் அளியுங்கள்; இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்.
4:6
4:6 وَابْتَلُوا الْيَتٰمٰى حَتّٰىۤ اِذَا بَلَغُوا النِّكَاحَ‌ ۚ فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْۤا اِلَيْهِمْ اَمْوَالَهُمْ‌ۚ وَلَا تَاْكُلُوْهَاۤ اِسْرَافًا وَّبِدَارًا اَنْ يَّكْبَرُوْا‌ ؕ وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ‌ ۚ وَمَنْ كَانَ فَقِيْرًا فَلْيَاْكُلْ بِالْمَعْرُوْفِ‌ ؕ فَاِذَا دَفَعْتُمْ اِلَيْهِمْ اَمْوَالَهُمْ فَاَشْهِدُوْا عَلَيْهِمْ‌ ؕ وَكَفٰى بِاللّٰهِ حَسِيْبًا‏
وَابْتَلُوا சோதியுங்கள் الْيَتٰمٰى அநாதைகளை حَتّٰىۤ இறுதியாக اِذَا بَلَغُوا அவர்கள் அடைந்தால் النِّكَاحَ‌ ۚ திருமணத்தை فَاِنْ اٰنَسْتُمْ நீங்கள் கண்டால் مِّنْهُمْ அவர்களிடம் رُشْدًا தெளிவான அறிவை فَادْفَعُوْۤا ஒப்படையுங்கள் اِلَيْهِمْ அவர்களிடம் اَمْوَالَهُمْ‌ۚ செல்வங்களை/ அவர்களுடைய وَلَا تَاْكُلُوْهَاۤ சாப்பிடாதீர்கள் / அவற்றை اِسْرَافًا அளவு கடந்து وَّبِدَارًا இன்னும் அவரை அவசரமாக اَنْ يَّكْبَرُوْا‌ ؕ அவர்கள் பெரியவர்களாகுவதை وَمَنْ எவர் كَانَ இருக்கிறார் غَنِيًّا செல்வந்தராக فَلْيَسْتَعْفِفْ‌ ۚ அவர் தவிர்க்கவும் وَمَنْ இன்னும் எவர் كَانَ இருக்கிறார் فَقِيْرًا ஏழையாக فَلْيَاْكُلْ புசிக்கவும் بِالْمَعْرُوْفِ‌ ؕ முறையுடன் فَاِذَا دَفَعْتُمْ நீங்கள் ஒப்படைத்தால் اِلَيْهِمْ அவர்களிடம் اَمْوَالَهُمْ செல்வங்களை/ அவர்களுடைய فَاَشْهِدُوْا சாட்சியாக்குங்கள் عَلَيْهِمْ‌ ؕ அவர்கள் மீது وَكَفٰى இன்னும் போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ் حَسِيْبًا‏ துல்லியமாக கணக்கெடுப்பவனாக
4:6. வBப்தலுல் யதாமா ஹத்தா இதா Bபலகுன் னிகாஹ Fப இன் ஆனஸ்தும் மின்ஹும் ருஷ்தன் Fபத் Fப'ஊ இலய்ஹிம் அம்வாலஹும் வலா த' குலூஹா இஸ்ராFப(ன்)வ் வ Bபிதாரன் அய் யக்Bபரூ; வ மன் கான கனிய்யன் Fபல்யஸ்தஃ FபிFப் வ மன் கான Fபகீரன் Fபல் ய' குல் Bபில்மஃரூFப்; Fப இதா தFபஃதும் இலய்ஹிம் அம்வாலஹும் Fப அஷ்-ஹிதூ 'அலய்ஹிம்; வ கFபா Bபில்லாஹி ஹஸீBபா
4:6. அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
4:7
4:7 لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ وَلِلنِّسَآءِ نَصِيْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ مِمَّا قَلَّ مِنْهُ اَوْ كَثُرَ ‌ؕ نَصِيْبًا مَّفْرُوْضًا‏
لِلرِّجَالِ ஆண்களுக்கு نَصِيْبٌ ஒரு பாகம் مِّمَّا எதிலிருந்து تَرَكَ விட்டுச் சென்றார் الْوَالِدٰنِ பெற்றோர் وَالْاَقْرَبُوْنَ இன்னும் நெருங்கிய உறவினர்கள் وَلِلنِّسَآءِ இன்னும் பெண்களுக்கு نَصِيْبٌ ஒரு பாகம் مِّمَّا எதிலிருந்து تَرَكَ விட்டுச் சென்றார் الْوَالِدٰنِ பெற்றோர் وَالْاَقْرَبُوْنَ இன்னும் நெருங்கிய உறவினர்கள் مِمَّا எதிலிருந்து قَلَّ குறைந்தது مِنْهُ அதில் اَوْ அல்லது كَثُرَ ؕ அதிகமானது نَصِيْبًا பாகமாக مَّفْرُوْضًا‏ கடமையாக்கப்பட்டது
4:7. லிர்ரிஜாலி னஸீBபும் மிம்மா தரகல் வாலிதானி வல் அக்ரBபூன வ லின் னிஸா'இ னஸீBபும் மிம்மா தரகல் வாலிதானி வல் அக்ரBபூன மிம்மா கல்ல மின்ஹு அவ் கதுர்; னஸீBபம் மFப்ரூளா
4:7. பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.
4:8
4:8 وَاِذَا حَضَرَ الْقِسْمَةَ اُولُوا الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنُ فَارْزُقُوْهُمْ مِّنْهُ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا‏
وَاِذَا حَضَرَ வந்தால் الْقِسْمَةَ பங்கு வைக்கும்போது اُولُوا الْقُرْبٰى உறவினர்கள் وَالْيَتٰمٰى இன்னும் அனாதைகள் وَالْمَسٰكِيْنُ இன்னும் ஏழைகள் فَارْزُقُو கொடுங்கள் هُمْ அவர்களுக்கு مِّنْهُ அதிலிரு ந்து وَقُوْلُوْا இன்னும் கூறுங்கள் لَهُمْ அவர்களுக்கு قَوْلًا சொல்லை مَّعْرُوْفًا‏ நல்லது
4:8. வ இதா ஹளரல் கிஸ்மத உலுல் குர்Bபா வல்யதாமா வல்மஸாகீனு Fபர்Zஜுகூஹும் மின்ஹு வ கூலூ லஹும் கவ்லம் மஃரூFபா
4:8. பாகப்பிரிவினை செய்யும் போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்; மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள்.
4:9
4:9 وَلْيَخْشَ الَّذِيْنَ لَوْ تَرَكُوْا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعٰفًا خَافُوْا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللّٰهَ وَلْيَقُوْلُوا قَوْلًا سَدِيْدًا‏
وَلْيَخْشَ பயப்படட்டும் الَّذِيْنَ எவர்கள் لَوْ تَرَكُوْا அவர்கள் விட்டுச் சென்றால் مِنْ இருந்து خَلْفِهِمْ அவர்களுக்குப் பின் ذُرِّيَّةً ஒரு சந்ததியை ضِعٰفًا பலவீனர்கள் خَافُوْا பயப்படுவார்கள் عَلَيْهِمْ அவர்கள் மீது فَلْيَتَّقُوا ஆகவே அவர்கள் அஞ்சட்டும் اللّٰهَ அல்லாஹ்வை وَلْيَقُوْلُوا இன்னும் அவர்கள் சொல்லட்டும் قَوْلًا சொல்லை سَدِيْدًا‏ நேர்மையானது
4:9. வல்யக்-ஷல் லதீன லவ் தரகூ மின் கல்Fபிஹிம் துர்ரிய்யதன் ளி'ஆFபன் காFபூ 'அலய்ஹிம் Fபல்யத்தகுல் லாஹ வல்யகூலூ கவ்லன் ஸதீதா
4:9. தங்களுக்கு பின்னால் பலஹீனமான சந்ததிகளை விட்டுச் சென்றால் (அவர்களுடைய நிலை என்னவாகும் என்று) அஞ்சுகிறார்களோ அவர்கள் பயந்து (முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்ளட்டும்; மேலும் அல்லாஹ்வை அஞ்சி, இதமான வார்த்தைகளையே அவர்கள் சொல்லட்டும்.
4:10
4:10 اِنَّ الَّذِيْنَ يَاْكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ نَارًا‌ ؕ وَسَيَـصْلَوْنَ سَعِيْرًا
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يَاْكُلُوْنَ விழுங்குகிறார்கள் اَمْوَالَ செல்வங்களை الْيَتٰمٰى அநாதைகளின் ظُلْمًا அநியாயமாக اِنَّمَا எல்லாம் يَاْكُلُوْنَ விழுங்குகிறார்கள் فِىْ بُطُوْنِهِمْ வயிறுகளில் / அவர்களுடைய نَارًا‌ ؕ நெருப்பை وَسَيَـصْلَوْنَ இன்னும் எரிவார்கள் سَعِيْرًا‏ நரக ஜுவாலையில்
4:10. இன்னல் லதீன ய'குலூன அம்வாலல் யதாமா ளுல்மன் இன்னமா ய'குலூன Fபீ Bபுதூனிஹிம் னார(ன்)வ்-வ ஸயஸ்லவ்ன ஸ'ஈரா
4:10. நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.
4:11
4:11 يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ‌ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ‌ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ‌ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ‌ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ‌ ؕ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِىْ بِهَاۤ اَوْ دَيْنٍ‌ ؕ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ ۚ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَـكُمْ نَفْعًا‌ ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا‏
يُوْصِيْكُمُ உங்களுக்கு உபதேசிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் فِىْۤ اَوْلَادِكُمْ‌ பிள்ளைகளில் / உங்கள் لِلذَّكَرِ ஆணுக்கு مِثْلُ போன்று حَظِّ الْاُنْثَيَيْنِ‌ ۚ பங்கு/இருபெண்கள் فَاِنْ كُنَّ அவர்கள் இருந்தால் نِسَآءً பெண்களாக فَوْقَ மேல் اثْنَتَيْنِ இரு பெண்கள் فَلَهُنَّ அவர்களுக்கு உண்டு ثُلُثَا மூன்றில் இரண்டு مَا تَرَكَ‌ ۚ எது/விட்டுச் சென்றார் وَاِنْ كَانَتْ இருந்தால் وَاحِدَةً ஒருத்தியாக فَلَهَا அவளுக்கு النِّصْفُ‌ ؕ பாதி وَلِاَ بَوَيْهِ இன்னும் அவருடைய தாய் தந்தைக்கு لِكُلِّ وَاحِدٍ ஒவ்வொருவருக்கும் مِّنْهُمَا அவ்விருவரிலிருந்து السُّدُسُ ஆறில் ஒன்று مِمَّا எதிலிருந்து تَرَكَ விட்டுச் சென்றார் اِنْ كَانَ இருந்தால் لَهٗ அவருக்கு وَلَدٌ ۚ பிள்ளை فَاِنْ لَّمْ يَكُنْ இல்லையெனில் لَّهٗ அவருக்கு وَلَدٌ பிள்ளை وَّوَرِثَهٗۤ இன்னும் அவருக்கு வாரிசானார் اَبَوٰهُ அவருடைய தாய் தந்தை فَلِاُمِّهِ அவருடைய தாய்க்கு الثُّلُثُ‌ ؕ மூன்றில் ஒன்று فَاِنْ كَانَ இருந்தால் لَهٗۤ அவருக்கு اِخْوَةٌ சகோதரர்கள் فَلِاُمِّهِ அவருடைய தாய்க்கு السُّدُسُ ஆறில் ஒன்று مِنْۢ بَعْدِ பின்னர் وَصِيَّةٍ மரண சாசனம் يُّوْصِىْ மரண சாசனம் கூறுகிறார் بِهَاۤ அதை اَوْ دَيْنٍ‌ ؕ அல்லது கடன் اٰبَآؤُكُمْ உங்கள் தந்தைகள் وَاَبْنَآؤُكُمْ ۚ பிள்ளைகள் / உங்கள் لَا تَدْرُوْنَ அறியமாட்டீர்கள் اَيُّهُمْ அவர்களில் யார் اَقْرَبُ நெருங்கியவர் لَـكُمْ உங்களுக்கு نَفْعًا‌ ؕ பலனளிப்பதில் فَرِيْضَةً சட்டமாகும் مِّنَ இருந்து اللّٰهِ ؕ அல்லாஹ் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا‏ மகா ஞானவானாக
4:11. யூஸீகுமுல் லாஹு Fபீ அவ்லாதிகும் லித் தகரி மித்லு ஹள்ளில் உன்தயய்ன்; Fப இன் குன்ன னிஸா'அன் Fபவ்கத் னதய்னி Fபலஹுன்ன துலுதா மா தரக வ இன் கானத் வாஹிததன் Fபலஹன் னிஸ்Fப்; வ லி அBபவய்ஹி லிகுல்லி வாஹிதிம் மின்ஹுமஸ் ஸுதுஸு மிம்ம்ம தரக இன் கான லஹூ வலத்; Fப இல் லம் யகுல் லஹூ வலது(ன்)வ் வ வரிதஹூ அBபவாஹு Fபலி உம்மிஹித் துலுத்; Fப இன் கான லஹூ இக்வதுன் Fபலி உம்மிஹிஸ் ஸுதுஸ்; மிம் Bபஃதி வஸிய்யதி(ன்)ய் யூஸீ Bபிஹா அவ் தய்ன்; ஆBபா'உகும் வ அBப்னா'உகும் லா தத்ரூன அய்யுஹும் அக்ரBபு லகும் னFப்'ஆ; Fபரீளதம் மினல்லாஹ்; இன்னல் லாஹ கான 'அலீமன் ஹகீமா
4:11. உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
4:12
4:12 وَلَـكُمْ نِصْفُ مَا تَرَكَ اَزْوَاجُكُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّهُنَّ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَـكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ‌ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِيْنَ بِهَاۤ اَوْ دَ يْنٍ‌ ؕ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّكُمْ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَـكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ‌ مِّنْۢ بَعْدِ وَصِيَّةٍ تُوْصُوْنَ بِهَاۤ اَوْ دَ يْنٍ‌ ؕ وَاِنْ كَانَ رَجُلٌ يُّوْرَثُ كَلٰلَةً اَوِ امْرَاَةٌ وَّلَهٗۤ اَخٌ اَوْ اُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ‌ ۚ فَاِنْ كَانُوْۤا اَكْثَرَ مِنْ ذٰ لِكَ فَهُمْ شُرَكَآءُ فِى الثُّلُثِ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصٰى بِهَاۤ اَوْ دَ يْنٍ ۙ غَيْرَ مُضَآرٍّ‌ ۚ وَصِيَّةً مِّنَ اللّٰهِ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَلِيْمٌ ؕ‏
وَلَـكُمْ உங்களுக்கு نِصْفُ பாதி مَا எது تَرَكَ விட்டுச் சென்ற اَزْوَاجُكُمْ உங்கள் மனைவிகள் اِنْ لَّمْ يَكُنْ இல்லையென்றால் لَّهُنَّ அவர்களுக்கு وَلَدٌ ۚ பிள்ளை فَاِنْ كَانَ இருந்தால் لَهُنَّ அவர்களுக்கு وَلَدٌ பிள்ளை فَلَـكُمُ உங்களுக்கு الرُّبُعُ கால் مِمَّا تَرَكْنَ‌ அவர்கள் விட்டுச் சென்ற مِنْۢ بَعْدِ பின்னர் وَصِيَّةٍ மரண சாசனம் يُّوْصِيْنَ மரண சாசனம் செய்கின்றனர் بِهَاۤ அதை اَوْ دَ يْنٍ‌ ؕ அல்லது கடன் وَلَهُنَّ இன்னும் அவர்களுக்கு الرُّبُعُ கால் مِمَّا تَرَكْتُمْ நீங்கள் விட்டுச் சென்ற اِنْ لَّمْ يَكُنْ இல்லையென்றால் لَّكُمْ உங்களுக்கு وَلَدٌ ۚ பிள்ளை فَاِنْ كَانَ இருந்தால் لَـكُمْ உங்களுக்கு وَلَدٌ பிள்ளை فَلَهُنَّ அவர்களுக்கு الثُّمُنُ எட்டில் ஒன்று مِمَّا எதிலிருந்து تَرَكْتُمْ‌ விட்டுச் சென்றீர்கள் مِّنْۢ بَعْدِ பின்னர் وَصِيَّةٍ மரண சாசனம் تُوْصُوْنَ மரண சாசனம் கூறுகிறீர்கள் بِهَاۤ அதை اَوْ دَ يْنٍ‌ ؕ அல்லது கடன் وَاِنْ كَانَ இருந்தால் رَجُلٌ ஓர் ஆண் يُّوْرَثُ வாரிசாக்கப்படுவான் كَلٰلَةً வாரிசு இல்லாதவர் اَوِ امْرَاَةٌ ஒரு பெண் وَّلَهٗۤ இன்னும் அவருக்கு اَخٌ சகோதரன் اَوْ அல்லது اُخْتٌ சகோதரி فَلِكُلِّ وَاحِدٍ ஒவ்வொருவருக்கும் مِّنْهُمَا அவ்விருவரில் السُّدُسُ‌ ۚ ஆறில் ஒன்று فَاِنْ كَانُوْۤا அவர்கள் இருந்தால் اَكْثَرَ அதிகமாக مِنْ ذٰ لِكَ அதை விட فَهُمْ அவர்கள் شُرَكَآءُ பங்குதாரர்கள் فِى الثُّلُثِ மூன்றில் ஒன்றில் مِنْۢ بَعْدِ பின்னர் وَصِيَّةٍ மரண சாசனம் يُّوْصٰى மரண சாசனம் கூறப்படுகிறது بِهَاۤ அதை اَوْ دَ يْنٍ ۙ அல்லது கடன் غَيْرَ அல்லாத مُضَآرٍّ‌ ۚ நஷ்டம் ஏற்படுத்துபவர் وَصِيَّةً நல்லுபதேசம் مِّنَ இருந்து اللّٰهِ‌ ؕ அல்லாஹ் وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَلِيْمٌ ؕ‏ மகா சகிப்பாளன்
4:12. வ லகும் னிஸ்Fபு மா தரக அZஜ்வாஜுகும் இல் லம் யகுல் லஹுன்ன வலத்; Fப இன் கான லஹுன்ன வலதுன் Fபலகுமுர் ருBப்'உ மிம்மா தரக்ன மிம் Bபஃதி வஸிய்யதி(ன்)ய் யூஸீன Bபிஹா அவ் தய்ன்; வ லஹுன்னர் ருBபு'உ மிம்மா தரக்தும் இல் லம் யகுல் லகும் வலத்; Fப இன் கான லகும் வலதுன் Fபலஹுன்னத் துமுனு மிம்மா தரக்தும்; மிம் Bபஃதி வஸிய்யதின் தூஸூன Bபிஹா அவ் தய்ன்; வ இன் கான ரஜுலு(ன்)ய் யூரது கலாலதன் அவிம் ர அது(ன்)வ் வ லஹூ அகுன் அவ் உக்துன் Fபலிகுல்லி வாஹிதிம் மின்ஹுமஸ் ஸுதுஸ்; Fப இன் கானூ அக்தர மின் தாலிக Fபஹும் ஷுரகா'உ Fபித்துலுத்; மிம் Bபஃதி வஸிய்யதி(ன்)ய் யூஸா Bபிஹா அவ் தய்னின் கய்ர முளார்ர்; வஸிய்யதம் மினல் லாஹ்; வல்லாஹு 'அலீமுன் ஹலீம்
4:12. இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் - (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் - தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்; தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது பெண்ணோ - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு; ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் - (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்; ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்; இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
4:13
4:13 تِلْكَ حُدُوْدُ اللّٰهِ‌ ؕ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ يُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا‌ ؕ وَذٰ لِكَ الْفَوْزُ الْعَظِيْمُ‏
تِلْكَ இவை حُدُوْدُ சட்டங்கள் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் وَمَنْ எவர் يُّطِعِ கீழ்ப்படிகிறார் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَرَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதருக்கு يُدْخِلْهُ நுழைப்பான்/அவரை جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ ஆறுகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَا‌ ؕ அதில் وَذٰ لِكَ الْفَوْزُ இதுதான்/வெற்றி الْعَظِيْمُ‏ மகத்தானது
4:13. தில்க ஹுதூதுல் லாஹ்; வ மய் யுதி'இல் லாஹ வ ரஸூலஹூ யுத்கில்ஹு ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; வ தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
4:13. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும்.
4:14
4:14 وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَتَعَدَّ حُدُوْدَهٗ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيْهَا وَلَهٗ عَذَابٌ مُّهِيْنٌ
وَمَنْ இன்னும் எவர் يَّعْصِ மாறு செய்கிறார் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَرَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதருக்கு وَيَتَعَدَّ இன்னும் மீறுகிறார் حُدُوْدَهٗ அவனுடைய சட்டங்களை يُدْخِلْهُ நுழைப்பான்/அவரை نَارًا நரகத்தில் خَالِدًا நிரந்தரமானவன் فِيْهَا அதில் وَلَهٗ இன்னும் அவனுக்கு عَذَابٌ வேதனை مُّهِيْنٌ‏ இழிவுபடுத்தக்கூடியது
4:14. வ மய் யஃஸில் லாஹ வ ரஸூலஹூ வ யத'அத்த ஹுதூதஹூ யுத்கில்ஹு னாரன் காலிதன் Fபீஹா வ லஹூ 'அதாBபும் முஹீன்
4:14. எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.
4:15
4:15 وَالّٰتِىْ يَاْتِيْنَ الْفَاحِشَةَ مِنْ نِّسَآٮِٕكُمْ فَاسْتَشْهِدُوْا عَلَيْهِنَّ اَرْبَعَةً مِّنْكُمْ‌ ۚ فَاِنْ شَهِدُوْا فَاَمْسِكُوْهُنَّ فِى الْبُيُوْتِ حَتّٰى يَتَوَفّٰٮهُنَّ الْمَوْتُ اَوْ يَجْعَلَ اللّٰهُ لَهُنَّ سَبِيْلًا‏
وَالّٰتِىْ எவர்கள் يَاْتِيْنَ செய்கிறார்கள்/ வருகிறார்கள் الْفَاحِشَةَ மானக்கேடானதிற்கு مِنْ இருந்து نِّسَآٮِٕكُمْ பெண்கள்/உங்கள் فَاسْتَشْهِدُوْا சாட்சியாக கொண்டு வாருங்கள் عَلَيْهِنَّ அவர்கள் மீது اَرْبَعَةً நான்கு (நபர்களை) مِّنْكُمْ‌ ۚ உங்களில் فَاِنْ شَهِدُوْا அவர்கள் சாட்சியளித்தால் فَاَمْسِكُوْهُنَّ தடுத்து வையுங்கள்/ அவர்களை فِى الْبُيُوْتِ வீடுகளில் حَتّٰى يَتَوَفّٰٮهُنَّ வரை/கைப்பற்றும்/அவர்களை الْمَوْتُ மரணம் اَوْ அல்லது يَجْعَلَ ஆக்குவான் اللّٰهُ அல்லாஹ் لَهُنَّ அவர்களுக்கு سَبِيْلًا‏ ஒரு வழியை
4:15. வல்லாதீ ய'தீனல் Fபாஹிஷத மின் னிஸா'இகும் Fபஸ்தஷ்-ஹிதூ 'அலய்ஹின்ன அர்Bப'அதம் மின்கும் Fப இன் ஷஹிதூ Fப அம்ஸிகூஹுன்ன Fபில் Bபுயூதி ஹத்தா யதவFப்Fபா ஹுன்னல் மவ்து அவ் யஜ்'அலல் லாஹு லஹுன்ன ஸBபீலா
4:15. உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்; அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
4:16
4:16 وَالَّذٰنِ يَاْتِيٰنِهَا مِنْكُمْ فَاٰذُوْهُمَا‌ ۚ فَاِنْ تَابَا وَاَصْلَحَا فَاَعْرِضُوْا عَنْهُمَا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ تَوَّابًا رَّحِيْمًا‏
وَالَّذٰنِ இன்னும் இரு ஆண்கள் يَاْتِيٰنِهَا அதைச் செய்தால் مِنْكُمْ உங்களிலிருந்து فَاٰذُو துன்புறுத்துங்கள் هُمَا‌ ۚ அவ்விருவரையும் فَاِنْ تَابَا அவ்விருவரும் மன்னிப்புக் கோரினால் وَاَصْلَحَا இன்னும் திருத்திக் கொண்டால் فَاَعْرِضُوْا புறக்கணித்துவிடுங்கள் عَنْهُمَا‌ ؕ அவ்விருவரை விட்டு اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் تَوَّابًا பிழை பொறுப்பவனாக رَّحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
4:16. வல்லதானி ய'தியானிஹா மின்கும் Fப ஆதூஹுமா Fப இன் தாBபா வ அஸ்லஹா Fப அஃரிளூ 'அன்ஹுமா; இன்னல் லாஹ கான தவ்வாBபர் ரஹீமா
4:16. உங்களில் அதை (விபச்சாரத்தை) செய்துவிடக்கூடிய இருவருக்கும் தண்டனை கொடுங்கள்; அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) தவ்பா செய்து தங்களை திருத்திக் கொண்டால், அவர்களை விட்டு விடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான்.
4:17
4:17 اِنَّمَا التَّوْبَةُ عَلَى اللّٰهِ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوْبُوْنَ مِنْ قَرِيْبٍ فَاُولٰٓٮِٕكَ يَتُوْبُ اللّٰهُ عَلَيْهِمْ‌ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا‏
اِنَّمَا التَّوْبَةُ மன்னிப்பெல்லாம் عَلَى اللّٰهِ அல்லாஹ்விடம் لِلَّذِيْنَ எவர்களுக்கு يَعْمَلُوْنَ செய்கிறார்கள் السُّوْٓءَ தீமையை بِجَهَالَةٍ அறியாமையினால் ثُمَّ பிறகு يَتُوْبُوْنَ திருந்தி திரும்புகின்றனர் مِنْ قَرِيْبٍ அதிசீக்கிரத்தில் فَاُولٰٓٮِٕكَ அவர்கள் يَتُوْبُ பிழை பொறுப்பான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ‌ؕ அவர்கள் மீது وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا‏ மகா ஞானவானாக
4:17. இன்னமத் தவ்Bபது 'அலல்லாஹி லில்லதீன யஃமலூனஸ் ஸூ'அ Bபிஜஹாலதின் தும்ம யதூBபூன மின் கரீBபின் Fப உலா'இக யதூBபுல் லாஹு 'அலய்ஹிம்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
4:17. எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.
4:18
4:18 وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السَّيِّاٰتِ‌ ۚ حَتّٰۤى اِذَا حَضَرَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ اِنِّىْ تُبْتُ الْـــٰٔنَ وَلَا الَّذِيْنَ يَمُوْتُوْنَ وَهُمْ كُفَّارٌ ‌ؕ اُولٰٓٮِٕكَ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَ لِيْمًا‏
وَلَيْسَتِ இன்னும் இல்லை التَّوْبَةُ பிழை பொறுப்பு لِلَّذِيْنَ எவர்களுக்கு يَعْمَلُوْنَ செய்கிறார்கள் السَّيِّاٰتِ‌ ۚ கெட்டவைகளை حَتّٰۤى வரை اِذَا حَضَرَ வந்தால் اَحَدَهُمُ அவர்களில்ஒருவருக்கு الْمَوْتُ மரணம் قَالَ கூறினார் اِنِّىْ நிச்சயமாக நான் تُبْتُ திருந்தி விடுகிறேன் الْـــٰٔنَ இப்போது وَلَا கிடையாது الَّذِيْنَ எவர்கள் يَمُوْتُوْنَ இறக்கிறார்கள் وَهُمْ அவர்களோ كُفَّارٌ ؕ நிராகரிப்பாளர்களாக اُولٰٓٮِٕكَ அவர்கள் اَعْتَدْنَا ஏற்படுத்தினோம் لَهُمْ அவர்களுக்கு عَذَابًا வேதனையை اَ لِيْمًا‏ துன்புறுத்தக்கூடியது
4:18. வ லய்ஸதித் தவ்Bபது லில்லதீன யஃமலூனஸ் ஸய்யிஆதி ஹத்தா இதா ஹளர அஹதஹுமுல் மவ்து கால இன்னீ துBப்துல் 'ஆன வ லல்லதீன யமூதூன வ ஹும் குFப்Fபார்; உலா'இக அஃதத்னா லஹும் 'அதாBபன் அலீமா
4:18. இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரணிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
4:19
4:19 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَحِلُّ لَـكُمْ اَنْ تَرِثُوا النِّسَآءَ كَرْهًا‌ ؕ وَلَا تَعْضُلُوْهُنَّ لِتَذْهَبُوْا بِبَعْضِ مَاۤ اٰتَيْتُمُوْهُنَّ اِلَّاۤ اَنْ يَّاْتِيْنَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ‌ ۚ وَعَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ‌ ۚ فَاِنْ كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْــٴًـــا وَّيَجْعَلَ اللّٰهُ فِيْهِ خَيْرًا كَثِيْرًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا يَحِلُّ ஹலால் ஆகாது لَـكُمْ உங்களுக்கு اَنْ تَرِثُوا நீங்கள்அனந்தரம் கொள்வது النِّسَآءَ பெண்களை كَرْهًا‌ ؕ பலவந்தமாக وَلَا تَعْضُلُو தடுக்காதீர்கள் هُنَّ அவர்களை لِتَذْهَبُوْا நீங்கள் செல்வதற்காக بِبَعْضِ சிலதைக் கொண்டு مَاۤ எதை اٰتَيْتُمُو கொடுத்தீர்கள் هُنَّ அவர்களுக்கு اِلَّاۤ தவிர اَنْ يَّاْتِيْنَ அவர்கள் செய்வது بِفَاحِشَةٍ ஒரு மானக்கேடானதை مُّبَيِّنَةٍ‌ ۚ பகிரங்கமானது وَعَاشِرُو இன்னும் வாழுங்கள் هُنَّ அவர்களுடன் بِالْمَعْرُوْفِ‌ ۚ நல்ல முறையில் فَاِنْ كَرِهْتُمُو நீங்கள் வெறுத்தால் هُنَّ அவர்களை فَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا நீங்கள் வெறுக்கலாம் شَيْــٴًـــا ஒன்றை وَّيَجْعَلَ இன்னும் ஆக்குவான் اللّٰهُ அல்லாஹ் فِيْهِ அதில் خَيْرًا நன்மையை كَثِيْرًا‏ அதிகமான
4:19. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா யஹில்லு லகும் அன் தரிதுன் னிஸா'அ கர்ஹன் வலா தஃளுலூஹுன்ன லிதத்ஹBபூ BபிBபஃளி மா ஆதய்துமூஹுன்ன இல்லா அய் ய'தீன BபிFபாஹிஷதிம் முBபய்யினஹ்; வ 'ஆஷிரூ ஹுன்ன Bபில்மஃரூFப்; Fப இன் கரிஹ்துமூஹுன்ன Fப'அஸா அன் தக்ரஹூ ஷய்'அ(ன்)வ் வ யஜ்'அலல் லாஹு Fபீஹி கய்ரன் கதீரா
4:19. நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது; பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்; இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.
4:20
4:20 وَاِنْ اَرَدْتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰٮهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَيْئًا‌ ؕ اَ تَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا‏
وَاِنْ اَرَدْتُّمُ நீங்கள் நாடினால் اسْتِبْدَالَ மாற்றுவதற்கு زَوْجٍ ஒரு மனைவியை مَّكَانَ இடத்தில் زَوْجٍ ۙ ஒரு மனைவி وَّاٰتَيْتُمْ நீங்கள் கொடுத்தீர்கள் اِحْدٰٮهُنَّ அவர்களில்ஒருத்திக்கு قِنْطَارًا குவியலை فَلَا تَاْخُذُوْا எடுக்காதீர்கள் مِنْهُ அதிலிருந்து شَيْئًا‌ ؕ எதையும் اَ تَاْخُذُوْنَهٗ அதை எடுக்கிறீர்களா? بُهْتَانًا அபாண்டமாக وَّاِثْمًا இன்னும் பாவமாக مُّبِيْنًا‏ பகிரங்கமானது
4:20. வ இன் அரத்துமுஸ்திBப் தால Zஜவ்ஜிம் மகான Zஜவ்ஜின் வ ஆதய்தும் இஹ்தாஹுன்ன கின்தாரன் Fபலா த'குதூ மின்ஹு ஷய்'ஆ; அத'குதூனஹூ Bபுஹ்தான்ன(ன்)வ் வ இத்மம் முBபீனா
4:20. நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?
4:21
4:21 وَ كَيْفَ تَاْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰى بَعْضُكُمْ اِلٰى بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّيْثَاقًا غَلِيْظًا‏
وَ كَيْفَ எவ்வாறு ? تَاْخُذُوْنَهٗ அதை எடுப்பீர்கள் وَقَدْ திட்டமாக اَفْضٰى கலந்து விட்டார் بَعْضُكُمْ உங்களில் சிலர் اِلٰى بَعْضٍ சிலருடன் وَّاَخَذْنَ (அப்பெண்கள்) வாங்கி இருக்கிறார்கள் مِنْكُمْ உங்களிடம் مِّيْثَاقًا வாக்குறுதியை غَلِيْظًا‏ உறுதியானது
4:21. வ கய்Fப த'குதூனஹூ வ கத் அFப்ளா Bபஃளுகும் இலா Bபஃளி(ன்)வ் வ அகத்ன மின்கும் மீதாகன் கலீளா
4:21. அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!
4:22
4:22 وَلَا تَنْكِحُوْا مَا نَكَحَ اٰبَآؤُكُمْ مِّنَ النِّسَآءِ اِلَّا مَا قَدْ سَلَفَ‌ ؕ اِنَّهٗ كَانَ فَاحِشَةً وَّمَقْتًا ؕ وَسَآءَ سَبِيْلًا
وَلَا تَنْكِحُوْا மணம் புரியாதீர்கள் مَا எவர்களை نَكَحَ மணம் புரிந்தார் اٰبَآؤُكُمْ உங்கள் தந்தைகள் مِّنَ இருந்து النِّسَآءِ பெண்கள் اِلَّا தவிர مَا قَدْ سَلَفَ‌ ؕ எது/முன்னர் நடந்து விட்டது اِنَّهٗ நிச்சயமாக இது كَانَ இருக்கிறது فَاحِشَةً மானக்கேடானதாக وَّمَقْتًا ؕ இன்னும் வெறுக்கப்பட்டதாக وَسَآءَ இன்னும் கெட்டுவிட்டது سَبِيْلًا‏ பழக்கம்
4:22. வ லா தன்கிஹூ மா னகஹ ஆBபா'உகும் மினன் னிஸா'இ இல்லா மா கத் ஸலFப்; இன்னஹூ கான Fபாஹிஷத(ன்)வ் வ மக்த(ன்)வ் வ ஸா'அ ஸBபீலா
4:22. முன்னால் நடந்து போனதைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக இது மானக்கேடானதும், வெறுக்கக்கூடியதும், தீமையான வழியுமாகும்.
4:23
4:23 حُرِّمَتْ عَلَيْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِىْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَ اُمَّهٰتُ نِسَآٮِٕكُمْ وَرَبَآٮِٕبُكُمُ الّٰتِىْ فِىْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآٮِٕكُمُ الّٰتِىْ دَخَلْتُمْ بِهِنَّ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَاۤٮِٕلُ اَبْنَآٮِٕكُمُ الَّذِيْنَ مِنْ اَصْلَابِكُمْۙ وَاَنْ تَجْمَعُوْا بَيْنَ الْاُخْتَيْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۙ‏
حُرِّمَتْ தடுக்கப்பட்டுள்ளது عَلَيْكُمْ உங்கள் மீது اُمَّهٰتُكُمْ உங்கள் தாய்கள் وَبَنٰتُكُمْ இன்னும் உங்கள் மகள்கள் وَاَخَوٰتُكُمْ இன்னும் உங்கள்சகோதரிகள் وَعَمّٰتُكُمْ இன்னும் உங்கள் மாமிகள் وَخٰلٰتُكُمْ இன்னும் உங்கள் தாயின் சகோதரிகள் وَبَنٰتُ இன்னும் மகள்கள் الْاَخِ சகோதரனின் وَبَنٰتُ இன்னும் மகள்கள் الْاُخْتِ சகோதரியின் وَاُمَّهٰتُكُمُ இன்னும் உங்கள் தாய்கள் الّٰتِىْۤ எவர்கள் اَرْضَعْنَكُمْ பாலூட்டினர்/ உங்களுக்கு وَاَخَوٰتُكُمْ இன்னும் உங்கள்சகோதரிகள் مِّنَ الرَّضَاعَةِ பால்குடியினால் وَ اُمَّهٰتُ தாய்கள் نِسَآٮِٕكُمْ உங்கள்மனைவிகளின் وَرَبَآٮِٕبُكُمُ இன்னும் உங்கள் வளர்ப்புப் பிள்ளைகள் الّٰتِىْ எவர்கள் فِىْ حُجُوْرِكُمْ உங்கள் மடிகளில் مِّنْ இருந்து نِّسَآٮِٕكُمُ உங்கள் மனைவிகள் الّٰتِىْ எவர்கள் دَخَلْتُمْ உறவு கொண்டீர்கள் بِهِنَّ அவர்களுடன் فَاِنْ لَّمْ تَكُوْنُوْا நீங்கள் இல்லையென்றால் دَخَلْتُمْ உறவு கொண்டீர்கள் بِهِنَّ அவர்களுடன் فَلَا جُنَاحَ குற்றமே இல்லை عَلَيْكُمْ உங்கள் மீது وَحَلَاۤٮِٕلُ இன்னும் மனைவிகள் اَبْنَآٮِٕكُمُ உங்கள் மகன்களின் الَّذِيْنَ எவர்கள் مِنْ இருந்து اَصْلَابِكُمْۙ உங்கள் முதுகந்தண்டு وَاَنْ تَجْمَعُوْا இன்னும் நீங்கள் ஒன்று சேர்ப்பது بَيْنَ மத்தியில் الْاُخْتَيْنِ இரு சகோதரிகள் اِلَّا தவிர مَا எது قَدْ سَلَفَ‌ؕ முன்னர் நடந்தது اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கின்றான் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا ۙ‏ பெரும் கருணையாளனாக
4:23. ஹுர்ரிமத் 'அலய்கும் உம்ம ஹாதுகும் வ Bபனாதுகும் வ அகவாதுகும் வ 'அம்மாதுகும் வ காலாதுகும் வ Bபனாதுல் அகி வ Bபனாதுல் உக்தி வ உம்மஹாது குமுல் லாதீ அர்ளஃ னகும் வ அகவாதுகும் மினர்ரளா'அதி வ உம்மஹாது னிஸா'இகும் வ ரBபா'இ Bபுகுமுல் லாதீ Fபீ ஹுஜூரிகும் மின் னிஸா'இகுமுல் லாதீ தகல்தும் Bபிஹின்ன Fப இல் லம் தகூனூ தகல்தும் Bபிஹின்ன Fபலா ஜுனாஹ 'அலய்கும் வ ஹலா'இலு அBப்னா'இகுமுல் லதீன மின் அஸ்லாBபிகும் வ அன் தஜ்ம'ஊ Bபய்னல் உக்தய்னி இல்லா மா கத் ஸலFப்; இன்னல்லாஹ கான கFபூரர் ரஹீமா
4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.
4:24
4:24 وَّالْمُحْصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ۚ كِتٰبَ اللّٰهِ عَلَيْكُمْ‌ۚ وَاُحِلَّ لَـكُمْ مَّا وَرَآءَ ذٰ لِكُمْ اَنْ تَبْتَـغُوْا بِاَمْوَالِكُمْ مُّحْصِنِيْنَ غَيْرَ مُسَافِحِيْنَ‌ ؕ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ مِنْهُنَّ فَاٰ تُوْهُنَّ اُجُوْرَهُنَّ فَرِيْضَةً‌ ؕ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا تَرٰضَيْـتُمْ بِهٖ مِنْۢ بَعْدِ الْـفَرِيْضَةِ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا‏
وَّالْمُحْصَنٰتُ மணமானவர்கள் مِنَ இருந்து النِّسَآءِ பெண்களில் اِلَّا தவிர مَا எவர்கள் مَلَـكَتْ சொந்தமாக்கிக் கொண்டது اَيْمَانُكُمْ‌ۚ உங்கள் வலக்கரங்கள் كِتٰبَ சட்டம் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ‌ۚ உங்கள் மீது وَاُحِلَّ அனுமதிக்கப்பட்டது لَـكُمْ உங்களுக்கு مَّا எவர்கள் وَرَآءَ தவிர ذٰ لِكُمْ இவர்(கள்) اَنْ تَبْتَـغُوْا நீங்கள் தேடுவது بِاَمْوَالِكُمْ உங்கள் செல்வங்கள் மூலம் مُّحْصِنِيْنَ ஒழுக்கமுள்ளவர்களாக غَيْرَ مُسَافِحِيْنَ‌ ؕ விபச்சாரர்களாக இல்லாமல் فَمَا எவள் اسْتَمْتَعْتُمْ சுகம்அனுபவித்தீர்கள் بِهٖ அவளிடம் مِنْهُنَّ அவர்களில் فَاٰ تُو கொடுங்கள் هُنَّ அவர்களுக்கு اُجُوْر மஹர்களை هُنَّ அவர்களுடைய فَرِيْضَةً‌ ؕ கடமையாக وَلَا جُنَاحَ குற்றமில்லை عَلَيْكُمْ உங்கள் மீது فِيْمَا எதில் تَرٰضَيْـتُمْ விரும்பினீர்கள் بِهٖ அதில் مِنْۢ بَعْدِ பின்னர் الْـفَرِيْضَةِ‌ ؕ கடமை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَلِيْمًا நன்கறிபவனாக حَكِيْمًا‏ ஞானவானாக
4:24. வல்முஹ்ஸனாது மினன் னிஸா'இ இல்லா மா மலகத் அய்மானுகும் கிதாBபல் லாஹி 'அலய்கும்; வ உஹில்ல லகும் மா வரா'அ தாலிகும் அன் தBப்தகூ Bபி'அம்வாலிகும் முஹ்ஸினீன கய்ர முஸா Fபிஹீன்; Fபமஸ்தம்தஃதும் Bபிஹீ மின்ஹுன்ன Fப ஆதூஹுன்ன உஜூரஹுன்ன Fபரீளஹ்; வலா ஜுனாஹ 'அலய்கும் Fபீமா தராளய்தும் Bபிஹீ மிம் Bபஃதில் Fபரீளஹ்; இன்னல் லாஹ கான 'அலீமன் ஹகீமா
4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.
4:25
4:25 وَمَنْ لَّمْ يَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا اَنْ يَّنْكِحَ الْمُحْصَنٰتِ الْمُؤْمِنٰتِ فَمِنْ مَّا مَلَـكَتْ اَيْمَانُكُمْ مِّنْ فَتَيٰـتِكُمُ الْمُؤْمِنٰتِ‌ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِاِيْمَانِكُمْ‌ ؕ بَعْضُكُمْ مِّنْۢ بَعْضٍ‌ ۚ فَانْكِحُوْهُنَّ بِاِذْنِ اَهْلِهِنَّ وَاٰ تُوْهُنَّ اُجُوْرَهُنَّ بِالْمَعْرُوْفِ مُحْصَنٰتٍ غَيْرَ مُسٰفِحٰتٍ وَّلَا مُتَّخِذٰتِ اَخْدَانٍ‌ ؕ فَاِذَاۤ اُحْصِنَّ فَاِنْ اَ تَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِ‌ ؕ ذٰ لِكَ لِمَنْ خَشِىَ الْعَنَتَ مِنْكُمْ‌ ؕ وَاَنْ تَصْبِرُوْا خَيْرٌ لَّكُمْ‌ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
وَمَنْ எவர் لَّمْ يَسْتَطِعْ சக்தி பெறவில்லை مِنْكُمْ உங்களில் طَوْلًا பொருளாதாரம் اَنْ يَّنْكِحَ மணம் முடிப்பதற்கு الْمُحْصَنٰتِ சுதந்திர பெண்களை الْمُؤْمِنٰتِ நம்பிக்கைகொண்ட பெண்களை فَمِنْ ஆகவே, இருந்து مَّا எவர்கள் مَلَـكَتْ சொந்தமாக்கின اَيْمَانُكُمْ உங்கள் வலக்கரங்கள் مِّنْ இருந்து فَتَيٰـتِكُمُ உங்கள் அடிமைப் பெண்கள் الْمُؤْمِنٰتِ‌ ؕ நம்பிக்கைகொண்ட பெண்கள் وَاللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِاِيْمَانِكُمْ‌ ؕ உங்கள் நம்பிக்கையை بَعْضُكُمْ உங்களில் சிலர் مِّنْۢ بَعْضٍ‌ ۚ சிலரைச் சேர்ந்தவரே فَانْكِحُو ஆகவே மணமுடியுங்கள் هُنَّ அவர்களை بِاِذْنِ அனுமதியுடன் اَهْلِهِنَّ அவர்களின் உரிமையாளரின் وَاٰ تُوْهُنَّ கொடுங்கள் / அவர்களுக்கு اُجُوْرَهُنَّ அவர்களுடைய மஹர்களை بِالْمَعْرُوْفِ நல்ல முறையில் مُحْصَنٰتٍ பத்தினிகளாக غَيْرَ مُسٰفِحٰتٍ விபச்சாரிகளாக இல்லாமல் وَّلَا مُتَّخِذٰتِ ஆக்கிக் கொள்ளாதவர்களாக اَخْدَانٍ‌ ؕ ரகசிய நண்பர்களை فَاِذَاۤ اُحْصِنَّ அல்லது மணமுடிக்கப்பட்டால் فَاِنْ اَ تَيْنَ அவர்கள் செய்தால் بِفَاحِشَةٍ மானக்கேடானதை فَعَلَيْهِنَّ அவர்கள் மீது نِصْفُ பாதி مَا எது عَلَى மீது الْمُحْصَنٰتِ சுதந்திரமானபெண்கள் مِنَ இருந்து الْعَذَابِ‌ ؕ தண்டனை ذٰ لِكَ இது لِمَنْ எவருக்கு خَشِىَ பயந்தார் الْعَنَتَ பாவத்தை مِنْكُمْ‌ ؕ உங்களில் وَاَنْ تَصْبِرُوْا நீங்கள்சகித்திருப்பது خَيْرٌ நன்று لَّكُمْ‌ ؕ உங்களுக்கு وَاللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
4:25. வ மல் லம் யஸ்ததிஃ மின்கும் தவ்லன் அய் யன்கிஹல் முஹ்ஸனாதில் மு'மினாதி Fபமிம்மா மலகத் அய்மானுகும் மின் Fபதயாதிகுமுல் மு'மினாத்; வல்லாஹு அஃலமு Bபி ஈமானிகும்; Bபஃளுகும் மிம் Bபஃள்; Fபன்கிஹூஹுன்ன Bபி இத்னி அஹ்லிஹின்ன வ ஆதூஹுன்ன உஜூரஹுன்ன Bபில்மஃரூFபி முஹ்ஸனாதின் கய்ர முஸா Fபிஹாதி(ன்)வ் வலா முத்தகிதாதி அக்தான்; Fப இதா உஹ்ஸின்ன Fப இன் அதய்ன BபிFபாஹி ஷதின் Fப'அலய்ஹின்ன்ன னிஸ்Fபு மா 'அலல் முஹ்ஸனாதி மினல் 'அதாBப்; தாலிக லிமன் கஷியல் 'அனத மின்கும்; வ அன் தஸ்Bபிரூ கய்ருல் லகும்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
4:25. உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
4:26
4:26 يُرِيْدُ اللّٰهُ لِيُبَيِّنَ لَـكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ وَيَتُوْبَ عَلَيْكُمْ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏
يُرِيْدُ நாடுகிறான் اللّٰهُ அல்லாஹ் لِيُبَيِّنَ தெளிவுபடுத்துவதற்கு لَـكُمْ உங்களுக்கு وَيَهْدِيَكُمْ இன்னும் நேர்வழி நடத்துவதற்கு/உங்களை سُنَنَ வழிகளை الَّذِيْنَ எவர்களின் مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்னர் وَيَتُوْبَ இன்னும் பிழை பொறுப்பதற்கு عَلَيْكُمْ‌ ؕ உங்கள் மீது وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
4:26. யுரீதுல் லாஹு லியுBபய் யின லகும் வ யஹ்தியகும் ஸுனனல் லதீன மின் கBப்லிகும் வ யதூBப 'அலய்கும்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
4:26. அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
4:27
4:27 وَاللّٰهُ يُرِيْدُ اَنْ يَّتُوْبَ عَلَيْكُمْ وَيُرِيْدُ الَّذِيْنَ يَتَّبِعُوْنَ الشَّهَوٰتِ اَنْ تَمِيْلُوْا مَيْلًا عَظِيْمًا‏
وَاللّٰهُ அல்லாஹ் يُرِيْدُ நாடுகிறான் اَنْ يَّتُوْبَ பிழைபொறுக்க عَلَيْكُمْ உங்கள் மீது وَيُرِيْدُ நாடுகிறார்(கள்) الَّذِيْنَ எவர்கள் يَتَّبِعُوْنَ பின்பற்றுகிறார்கள் الشَّهَوٰتِ அற்ப ஆசைகளை اَنْ تَمِيْلُوْا நீங்கள் சாய்வதை مَيْلًا சாய்வது عَظِيْمًا‏ முற்றிலும்
4:27. வல்லாஹு யுரீது அய் யதூBப 'அலய்கும் வ யுரீதுல் லதீன யத்தBபி 'ஊனஷ் ஷஹவாதி அன் தமீலூ மய்லன் 'அளீமா
4:27. மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்; ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
4:28
4:28 يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّخَفِّفَ عَنْكُمْ‌ۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا‏
يُرِيْدُ நாடுகிறான் اللّٰهُ அல்லாஹ் اَنْ يُّخَفِّفَ இலகுவாக்க عَنْكُمْ‌ۚ உங்களுக்கு وَخُلِقَ இன்னும் படைக்கப்பட்டுள்ளான் الْاِنْسَانُ மனிதன் ضَعِيْفًا‏ பலவீனனாக
4:28. யுரீதுல் லாஹு அய் யுகFப்FபிFப 'அன்கும்; வ குலிகல் இன்ஸானு ள'ஈFபா
4:28. அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
4:29
4:29 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوْۤا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ‌ وَلَا تَقْتُلُوْۤا اَنْـفُسَكُمْ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِيْمًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَاْكُلُوْۤا புசிக்காதீர்கள் اَمْوَالَـكُمْ உங்கள் செல்வங்களை بَيْنَكُمْ உங்களுக்கு மத்தியில் بِالْبَاطِلِ தவறான முறையில் اِلَّاۤ தவிர اَنْ تَكُوْنَ இருப்பது تِجَارَةً வர்த்தகமாக عَنْ تَرَاضٍ பரஸ்பர விருப்பத்துடன் مِّنْكُمْ‌ உங்களின் وَلَا تَقْتُلُوْۤا இன்னும் கொல்லாதீர்கள் اَنْـفُسَكُمْ‌ؕ உங்கள் உயிர்களை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் بِكُمْ உங்கள் மீது رَحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
4:29. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா த'குலூ அம்வாலகும் Bபய்னகும் Bபில்Bபாதிலி 'இல்லா அன் தகூன திஜாரதன் 'அன் தராளிம் மின்கும்; வலா தக்துலூ அன்Fபுஸகும்; இன்னல் லாஹ கான Bபிகும் ரஹீமா
4:29. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்; நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.
4:30
4:30 وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ عُدْوَانًا وَّظُلْمًا فَسَوْفَ نُصْلِيْهِ نَارًا‌ ؕ وَكَانَ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا‏
وَمَنْ எவர் يَّفْعَلْ செய்வாரோ ذٰ لِكَ அதை عُدْوَانًا வரம்பை மீறி وَّظُلْمًا இன்னும் அநியாயமாக فَسَوْفَ விரைவில் نُصْلِيْهِ அவரை எரிப்போம் نَارًا‌ ؕ நரகத்தில் وَكَانَ இருக்கிறது ذٰ لِكَ அது عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் يَسِيْرًا‏ சுலபமாக
4:30. வ மய் யFப்'அல் தாலிக 'உத்வான(ன்)வ் வ ளுல்மன் Fபஸவ்Fப னுஸ்லீஹி னாரா; வ கான தாலிக 'அலல் லாஹி யஸீரா
4:30. எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.
4:31
4:31 اِنْ تَجْتَنِبُوْا كَبٰٓٮِٕرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَنُدْخِلْـكُمْ مُّدْخَلًا كَرِيْمًا‏
اِنْ تَجْتَنِبُوْا நீங்கள் விலகிக் கொண்டால் كَبٰٓٮِٕرَ பெரும் பாவங்களை مَا எது تُنْهَوْنَ தடுக்கப்படுகிறீர்கள் عَنْهُ அதை விட்டு نُكَفِّرْ அகற்றி விடுவோம் عَنْكُمْ உங்களை விட்டு سَيِّاٰتِكُمْ சிறு பாவங்களை/உங்கள் وَنُدْخِلْـكُمْ இன்னும் நுழைப்போம்/உங்களை مُّدْخَلًا இடத்தில் كَرِيْمًا‏ கண்ணியமான
4:31. இன் தஜ்தனிBபூ கBபா'இர மா துன்ஹவ்ன 'அன்ஹு னுகFப்Fபிர் 'அன்கும் ஸய்யிஆதிகும் வ னுத்கில்கும் முத்கலன் கரீமா
4:31. நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம்.
4:32
4:32 وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ‌ ؕ لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبُوْا ؕ‌ وَلِلنِّسَآءِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبْنَ‌ ؕ وَسْئَـلُوا اللّٰهَ مِنْ فَضْلِهٖ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏
وَلَا تَتَمَنَّوْا ஏங்காதீர்கள் مَا எதை فَضَّلَ மேன்மையாக்கினான் اللّٰهُ அல்லாஹ் بِهٖ அதைக் கொண்டு بَعْضَكُمْ உங்களில் சிலரை عَلٰى விட بَعْضٍ‌ ؕ சிலர் لِلرِّجَالِ ஆண்களுக்கு نَصِيْبٌ ஒரு பங்கு مِّمَّا எதிலிருந்து اكْتَسَبُوْا ؕ சம்பாதித்தார்கள் وَلِلنِّسَآءِ இன்னும் பெண்களுக்கு نَصِيْبٌ ஒரு பங்கு مِّمَّا எதி லிருந்து اكْتَسَبْنَ‌ ؕ சம்பாதித்தார்கள் وَسْئَـلُوا கேளுங்கள் اللّٰهَ அல்லாஹ்விடம் مِنْ இருந்து فَضْلِهٖ ؕ அவனின் அருள் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمًا‏ நன்கறிந்தவனாக
4:32. வ லா ததமன்னவ் மா Fபள்ளலல் லாஹு Bபிஹீ Bபஃளகும் 'அலா Bபஃள்; லிர்ரிஜாலி னஸீBபும் மிம்மக் தஸBபூ வ லின்னிஸா'இ னஸீBபும் மிம்மக் தஸBப்ன்; வஸ்'அலுல்லாஹ மின் Fபள்லிஹ்; இன்னல் லாஹ கான Bபிகுல்லி ஷய்'இன் 'அலீமா
4:32. மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
4:33
4:33 وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِىَ مِمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ‌ ؕ وَالَّذِيْنَ عَقَدَتْ اَيْمَانُكُمْ فَاٰ تُوْهُمْ نَصِيْبَهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدًا
وَلِكُلٍّ ஒவ்வொருவருக்கும் جَعَلْنَا ஆக்கினோம் مَوَالِىَ வாரிசுகளை مِمَّا எதில் تَرَكَ விட்டுச்சென்றார் الْوَالِدٰنِ தாய், தந்தை وَالْاَقْرَبُوْنَ‌ ؕ இன்னும் நெருங்கிய உறவினர்கள் وَالَّذِيْنَ எவர்கள் عَقَدَتْ ஒப்பந்தம் செய்தன اَيْمَانُكُمْ உங்கள் சத்தியங்கள் فَاٰ تُوْهُمْ கொடுத்து விடுங்கள் / அவர்களுக்கு نَصِيْبَهُمْ‌ؕ பங்கை/அவர்களின் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَلٰى மீது كُلِّ எல்லாம் شَىْءٍ பொருள் شَهِيْدًا சாட்சியாளனாக
4:33. வ லிகுல்லின் ஜ'அல்னா ம வாலிய மிம்மா தரகல் வாலிதானி வல் அக்ரBபூன்; வல்லதீன 'அகதத் அய்மானுகும் Fப ஆதூஹும் னஸீBபஹும்; இன்னல் லாஹ கான 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீதா
4:33. இன்னும், தாய் தந்தையரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம்; அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.
4:34
4:34 اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ‌ ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّٰهُ‌ ؕ وَالّٰتِىْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِى الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ‌ ۚ فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَيْهِنَّ سَبِيْلًا‌ ؕاِنَّ اللّٰهَ كَانَ عَلِيًّا كَبِيْرًا‏
اَلرِّجَالُ ஆண்கள் قَوَّامُوْنَ நிர்வகிப்பவர்கள் عَلَى النِّسَآءِ பெண்களை بِمَا எதன் காரணமாக فَضَّلَ மேன்மையாக்கினான் اللّٰهُ அல்லாஹ் بَعْضَهُمْ அவர்களில் சிலரை عَلٰى விட بَعْضٍ சிலர் وَّبِمَاۤ எதன் காரணமாக اَنْفَقُوْا செலவழித்தார்கள் مِنْ இருந்து اَمْوَالِهِمْ‌ ؕ தங்கள் செல்வங்கள் فَالصّٰلِحٰتُ நல்லபெண்கள் قٰنِتٰتٌ பணிந்தவர்கள் حٰفِظٰتٌ பாதுகாப்பவர்கள் لِّلْغَيْبِ மறைவில் بِمَا எதைக் கொண்டு حَفِظَ பாதுகாத்தான் اللّٰهُ‌ ؕ அல்லாஹ் وَالّٰتِىْ எவர்கள் تَخَافُوْنَ பயப்படுகிறீர்கள் نُشُوْزَهُنَّ அவர்கள் மாறுபாடு செய்வதை فَعِظُو உபதேசியுங்கள் هُنَّ அவர்களுக்கு وَاهْجُرُو அப்புறப்படுத்துங்கள் هُنَّ அவர்களை فِى الْمَضَاجِعِ படுக்கைகளில் وَاضْرِبُو இன்னும் அடியுங்கள் هُنَّ‌ ۚ அவர்களை فَاِنْ اَطَعْنَكُمْ அவர்கள் கீழ்ப்படிந்தால் / உங்களுக்கு فَلَا تَبْغُوْا தேடாதீர்கள் عَلَيْهِنَّ அவர்கள் மீது سَبِيْلًا‌ ஒரு வழியை ؕاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَلِيًّا உயர்ந்தவனாக كَبِيْرًا‏ பெரியவனாக
4:34. அர்ரிஜாலு கவ்வாமூன 'அலன் னிஸா'இ Bபிமா Fபள் ளலல்லாஹு Bபஃளஹும் 'அலா Bபஃளி(ன்)வ் வ Bபிமா அன்Fபகூ மின் அம்வாலிஹிம்; Fபஸ்ஸாலிஹாது கானிதாதுன் ஹாFபிளாதுல் லில் கய்Bபி Bபிமா ஹFபிளல் லாஹ்; வல்லாதீ தகாFபூன னுஷூ Zஜஹுன்ன Fப 'இளூஹுன்ன வஹ்ஜுரூஹுன்ன Fபில் மளாஜி'இ வள்ரிBபூஹுன்ன Fப இன் அதஃனகும் Fபலா தBப்கூ 'அலய்ஹின்ன ஸBபீலா; இன்னல்லாஹ கான 'அலிய்யன் கBபீரா
4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
4:35
4:35 وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا‌ ۚ اِنْ يُّرِيْدَاۤ اِصْلَاحًا يُّوَفِّـقِ اللّٰهُ بَيْنَهُمَا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا خَبِيْرًا‏
وَاِنْ خِفْتُمْ நீங்கள் பயந்தால் شِقَاقَ பிளவை بَيْنِهِمَا அந்த இருவருக்குள் فَابْعَثُوْا ஏற்படுத்துங்கள் حَكَمًا ஒரு தீர்ப்பாளரை مِّنْ இருந்து اَهْلِهٖ அவனின் உறவினர் وَحَكَمًا இன்னும் ஒரு தீர்ப்பாளரை مِّنْ இருந்து اَهْلِهَا‌ ۚ அவளின் உறவினர் اِنْ يُّرِيْدَاۤ இருவரும் நாடினால் اِصْلَاحًا சீர்திருத்தத்தை يُّوَفِّـقِ ஒற்றுமை ஏற்படுத்துவான் اللّٰهُ அல்லாஹ் بَيْنَهُمَا‌ ؕ அந்த இருவருக்கிடையில் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَلِيْمًا நன்கறிந்தவனாக خَبِيْرًا‏ ஆழ்ந்தறிந்தவனாக
4:35. வ இன் கிFப்தும் ஷிகாக Bபய்னி ஹிமா FபBப்'அதூ ஹக மம் மின் அஹ்லிஹீ வ ஹகமம் மின் அஹ்லிஹா; இ(ன்)ய்-யுரீதா இஸ்லாஹ் அய்-யுவFப்Fபிகில் லாஹு Bபய்னஹுமா; இன்னல் லாஹ கான 'அலீமன் கBபீரா
4:35. (கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.
4:36
4:36 وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ‏
وَاعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَلَا تُشْرِكُوْا இன்னும் இணையாக்காதீர்கள் بِهٖ அவனுக்கு شَيْــٴًـــا‌ ؕ எதையும் وَّبِالْوَالِدَيْنِ இன்னும் தாய் தந்தைக்கு اِحْسَانًا நன்மை செய்யுங்கள் وَّبِذِى الْقُرْبٰى இன்னும் உறவினருக்கு وَالْيَتٰمٰى இன்னும் அநாதைகள் وَ الْمَسٰكِيْنِ இன்னும் ஏழைகள் وَالْجَـارِ இன்னும் அண்டைவீட்டார் ذِى الْقُرْبٰى உறவினர் وَالْجَـارِ இன்னும் அண்டைவீட்டார் الْجُـنُبِ அந்நியர் وَالصَّاحِبِ இன்னும் நண்பர் بِالْجَـنْۢبِ அருகில் இருக்கும் وَابْنِ السَّبِيْلِ ۙ இன்னும் பயணி(கள்) وَمَا இன்னும் எவர் مَلَـكَتْ சொந்தமாக்கின اَيْمَانُكُمْ‌ ؕ உங்கள் வலக்கரங்கள் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் مَنْ எவன் كَانَ இருக்கிறான் مُخْتَالًا கர்வமுடையவனாக فَخُوْرَا ۙ‏ பெருமையுடையவனாக
4:36. வஃBபுதுல் லாஹ வலா துஷ்ரிகூ Bபிஹீ ஷய்'அ(ன்)வ் வ Bபில்வாலிதய்னி இஹ்ஸான(ன்)வ் வ Bபிதில் குர்Bபா வல்யதாமா வல்மஸாகீனி வல்ஜாரி தில்குர்Bபா வல்ஜாரில் ஜுனுBபி வஸ்ஸாஹிBபி Bபில்ஜம்Bபி வBப்னிஸ் ஸBபீலி வமா மலகத் அய்மானுகும்; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபு மன் கான முக்தாலன் Fபகூரா
4:36. மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
4:37
4:37 اۨلَّذِيْنَ يَـبْخَلُوْنَ وَيَاْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُوْنَ مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ ؕ وَ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا‌ ۚ‏
اۨلَّذِيْنَ எவர்கள் يَـبْخَلُوْنَ கருமித்தனம் செய்கிறார்கள் وَيَاْمُرُوْنَ இன்னும் ஏவுகிறார்கள் النَّاسَ மக்களுக்கு بِالْبُخْلِ கருமித்தனத்தை وَيَكْتُمُوْنَ இன்னும் மறைக்கிறார்கள் مَاۤ எதை اٰتٰٮهُمُ கொடுத்தான்/அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் مِنْ فَضْلِهٖ‌ ؕ தன் அருளிலிருந்து وَ اَعْتَدْنَا தயார்படுத்தினோம் لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பவர்களுக்கு عَذَابًا வேதனையை مُّهِيْنًا‌ இழிவான
4:37. அல்லதீன யBப்கலூன வ ய'முரூனன் னாஸ Bபில்Bபுக்லி வ யக்துமூன மா ஆதாஹு முல்லாஹு மின் Fபள்லிஹ்; வ அஃதத்னா லில்காFபிரீன 'அதாBபம் முஹீனா
4:37. அத்தகையோர் உலோபித்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும்படித் தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள்; அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
4:38
4:38 وَالَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ وَمَنْ يَّكُنِ الشَّيْطٰنُ لَهٗ قَرِيْنًا فَسَآءَ قَرِيْنًا‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் يُنْفِقُوْنَ தர்மம் செய்கிறார்கள் اَمْوَالَهُمْ தங்கள் செல்வங்களை رِئَآءَ காண்பிப்பதற்காக النَّاسِ மக்களுக்கு وَلَا يُؤْمِنُوْنَ இன்னும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ இன்னும் இறுதி நாளை وَمَنْ எவருக்கு يَّكُنِ ஆகிவிட்டான் الشَّيْطٰنُ ஷைத்தான் لَهٗ அவனுக்கு قَرِيْنًا நண்பனாக فَسَآءَ கெட்டுவிட்டான் قَرِيْنًا‏ நண்பனால்
4:38. வல்லதீன யுன்Fபிகூன அம்வாலஹும் ரி'ஆ'அன் னாஸி வலா யு'மினூன Bபில்லாஹி வலா Bபில் யவ்மில் ஆகிர்; வ மய் யகுனிஷ் ஷய்தானு லஹூ கரீனன் Fபஸா'அ கரீனா
4:38. இன்னும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்); எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?)
4:39
4:39 وَمَاذَا عَلَيْهِمْ لَوْ اٰمَنُوْا بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقَهُمُ اللّٰهُ‌ ؕ وَكَانَ اللّٰهُ بِهِمْ عَلِيْمًا‏
وَمَاذَا என்னதான் عَلَيْهِمْ அவர்கள் மீது لَوْ اٰمَنُوْا அவர்கள் நம்பிக்கை கொண்டால் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ இன்னும் நாளை الْاٰخِرِ இறுதி وَاَنْفَقُوْا இன்னும் தர்மம் செய்தனர் مِمَّا எதிலிருந்து رَزَقَهُمُ வழங்கினான்/அவர்களுக்கு اللّٰهُ‌ ؕ அல்லாஹ் وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் بِهِمْ அவர்களை عَلِيْمًا‏ நன்கறிந்தவனாக
4:39. வ மாதா 'அலய்ஹிம் லவ் ஆமனூ Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ அன்Fபகூ மிம்மா ரZஜகஹுமுல் லாஹ்; வ கானல்லாஹு Bபிஹிம் 'அலீமா
4:39. இவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இவர்களுக்கு அல்லாஹ் வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்களானால் இவர்களுக்கு என்ன கேடு ஏற்பட்டுவிடப் போகிறது? அல்லாஹ் இவர்களை நன்கறிபவனாகவே இருக்கின்றான்.
4:40
4:40 اِنَّ اللّٰهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ‌ ۚ وَاِنْ تَكُ حَسَنَةً يُّضٰعِفْهَا وَيُؤْتِ مِنْ لَّدُنْهُ اَجْرًا عَظِيْمًاؔ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَظْلِمُ அநியாயம் செய்ய மாட்டான் مِثْقَالَ ذَرَّةٍ‌ ۚ ஓர் அணு அளவு وَاِنْ تَكُ இருந்தால் حَسَنَةً நன்மையாக يُّضٰعِفْهَا அதை பன்மடங்காக்குவான் وَيُؤْتِ இன்னும் கொடுப்பான் مِنْ لَّدُنْهُ தன்னிடமிருந்து اَجْرًا கூலியை عَظِيْمًاؔ‏ மகத்தான
4:40. இன்னல் லாஹ லா யள்லிமு மித்கால தர்ரதி(ன்)வ் வ இன் தகு ஹஸனத(ன்)ய் யுளா'இFப்ஹா வ யு'தி மில் லதுன்ஹு அஜ்ரன் 'அளீமா
4:40. நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.
4:41
4:41 فَكَيْـفَ اِذَا جِئْـنَا مِنْ كُلِّ اُمَّةٍ ۭ بِشَهِيْدٍ وَّجِئْـنَا بِكَ عَلٰى هٰٓؤُلَاۤءِ شَهِيْدًا ؕ‏
فَكَيْـفَ எவ்வாறிருக்கும்? اِذَا جِئْـنَا நாம் வந்தால் مِنْ இருந்து كُلِّ ஒவ்வொரு اُمَّةٍ ۭ சமுதாயம் بِشَهِيْدٍ ஒரு சாட்சியைக் கொண்டு وَّجِئْـنَا இன்னும் நாம் வந்தோம் بِكَ உம்மை கொண்டு عَلٰى மீது هٰٓؤُلَاۤءِ இவர்கள் شَهِيْدًا ؕ‏ சாட்சியாக
4:41. Fபகய்Fப இதா ஜி'னா மின் குல்லி உம்மதிம் Bபிஷஹீதி(ன்)வ் வ ஜி'னாBபிக 'அலா ஹா'உலா 'இ ஷஹீதா
4:41. எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டுவரும்போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?
4:42
4:42 يَوْمَٮِٕذٍ يَّوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا وَعَصَوُا الرَّسُوْلَ لَوْ تُسَوّٰى بِهِمُ الْاَرْضُ ؕ وَلَا يَكْتُمُوْنَ اللّٰهَ حَدِيْـثًا
يَوْمَٮِٕذٍ அந்நாளில் يَّوَدُّ விரும்புவர் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَعَصَوُا இன்னும் மாறு செய்தார்கள் الرَّسُوْلَ தூதருக்கு لَوْ تُسَوّٰى சமமாக்கப்பட வேண்டுமே? بِهِمُ அவர்களுடன் الْاَرْضُ ؕ பூமி وَلَا يَكْتُمُوْنَ மறைக்க மாட்டார்கள் اللّٰهَ அல்லாஹ்விடம் حَدِيْـثًا‏ ஒரு செய்தியை
4:42. யவ்ம'இதி(ன்)ய் யவத் துல்லதீன கFபரூ வ'அஸவுர் ரஸூல லவ் துஸவ்வா Bபிஹிமுல் அர்ளு வலா யக்துமூனல் லாஹ ஹதீதா
4:42. அந்த நாளில், (இவ்வாறு) (அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வின்) தூதருக்கும் மாறு செய்தவர்கள், பூமி தங்களை விழுங்கி சமப்படுத்திடக் கூடாதா என்று விரும்புவார்கள்; ஆனால் அல்லாஹ்விடத்தில் எந்த விஷயத்தையும் அவர்கள் மறைக்கமுடியாது.
4:43
4:43 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْـتُمْ سُكَارٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِىْ سَبِيْلٍ حَتّٰى تَغْتَسِلُوْا‌ ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤى اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا غَفُوْرًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَقْرَبُوا நெருங்காதீர்கள் الصَّلٰوةَ தொழுகைக்கு وَاَنْـتُمْ நீங்கள் இருக்கும்போது سُكَارٰى போதைஏறியவர்களாக حَتّٰى வரை تَعْلَمُوْا நீங்கள் அறிவது مَا تَقُوْلُوْنَ எதை கூறுகிறீர்கள் وَلَا جُنُبًا முழுக்காளிகளாக اِلَّا தவிர عَابِرِىْ سَبِيْلٍ பயணிகளாக حَتّٰى வரை تَغْتَسِلُوْا‌ ؕ குளிக்கிறீர்கள் وَاِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مَّرْضٰۤى நோயாளிகளாக اَوْ அல்லது عَلٰى سَفَرٍ பயணத்தில் اَوْ அல்லது جَآءَ வந்தால் اَحَدٌ ஒருவர் مِّنْكُمْ உங்களில் مِّنَ இருந்து الْغَآٮِٕطِ மலஜலம் اَوْ அல்லது لٰمَسْتُمُ உறவு கொண்டீர்கள் النِّسَآءَ பெண்களிடம் فَلَمْ تَجِدُوْا நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை مَآءً தண்ணீரை فَتَيَمَّمُوْا நாடுங்கள் صَعِيْدًا மண்ணை طَيِّبًا சுத்தமான فَامْسَحُوْا தடவுங்கள் بِوُجُوْهِكُمْ உங்கள் முகங்களை وَاَيْدِيْكُمْ‌ ؕ இன்னும் உங்கள் கைகளை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَفُوًّا பிழை பொறுப்பவனாக غَفُوْرًا‏ அதிகம் மன்னிப்பவனாக
4:43. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தக்ரBபுஸ் ஸலாத வ அன்தும் ஸுகாரா ஹத்தா தஃலமூ ம தகூலூன வலா ஜுனுBபன் இல்லா 'ஆBபிரீ ஸBபீலின் ஹத்தா தக்தஸிலூ; வ இன் குன்தும் மர்ளா அவ் 'அலா ஸFபரின் அவ் ஜா'அ அஹதும் மின்கும் மினல் கா'இதி அவ் லாமஸ்துமுன் னிஸா'அ Fபலம் தஜிதூ மா'அன் Fபதயம் மமூ ஸ'ஈதன் தய்யிBபன் Fபம்ஸஹூ Bபிவுஜூஹிகும் வ அய்தீகும்; இன்னல் லாஹ கான 'அFபுவ்வன் கFபூரா
4:43. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி “தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
4:44
4:44 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يَشْتَرُوْنَ الضَّلٰلَةَ وَيُرِيْدُوْنَ اَنْ تَضِلُّوا السَّبِيْلَ ؕ‏
اَلَمْ تَرَ பார்க்கவில்லையா? اِلَى பக்கம் الَّذِيْنَ எவர்கள் اُوْتُوْا கொடுக்கப்பட்டார்கள் نَصِيْبًا ஒரு பாகம் مِّنَ இருந்து الْكِتٰبِ வேதம் يَشْتَرُوْنَ விலைக்கு வாங்குகிறார்கள் الضَّلٰلَةَ வழிகேட்டை وَيُرِيْدُوْنَ இன்னும் நாடுகின்றனர் اَنْ تَضِلُّوا நீங்கள் தவறுவதை السَّبِيْلَ ؕؕ‏ வழி
4:44. அலம் தர இலல் லதீன ஊதூ னஸீBபம் மினல் கிதாBபி யஷ்தரூனள் ளலாலத வ யுரீதூன அன் தளில்லுஸ் ஸBபீல்
4:44. (நபியே!) வேதத்திலிருந்து ஒரு பாகம் கொடுக்கப்பட்டோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர் - நீங்கள் வழிகெட்டு விடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
4:45
4:45 وَاللّٰهُ اَعْلَمُ بِاَعْدَآٮِٕكُمْ‌ؕ وَكَفٰى بِاللّٰهِ وَلِيًّا وَّكَفٰى بِاللّٰهِ نَصِيْرًا‏
وَاللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِاَعْدَآٮِٕكُمْ‌ؕ உங்கள் எதிரிகளை وَكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்தான் وَلِيًّا பாதுகாவலனாக وَّكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்தான் نَصِيْرًا‏ பேருதவியாளனாக
4:45. வல்லாஹு அஃலமு Bபி அஃதா'இ-கும்; வ கFபா Bபில்லாஹி வலிய்ய(ன்)வ் வ கFபா Bபில்லாஹி னஸீரா
4:45. மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.
4:46
4:46 مِنَ الَّذِيْنَ هَادُوْا يُحَرِّفُوْنَ الْـكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ وَ يَقُوْلُوْنَ سَمِعْنَا وَعَصَيْنَا وَاسْمَعْ غَيْرَ مُسْمَعٍ وَّرَاعِنَا لَـيًّۢا بِاَ لْسِنَتِهِمْ وَطَعْنًا فِىْ الدِّيْنِ‌ ؕ وَلَوْ اَنَّهُمْ قَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا وَاسْمَعْ وَانْظُرْنَا لَـكَانَ خَيْرًا لَّهُمْ وَاَقْوَمَ ۙ وَ لٰـكِنْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُوْنَ اِلَّا قَلِيْلًا‏
مِنَ இருந்து (சிலர்) الَّذِيْنَ எவர்கள் هَادُوْا யூதராகி விட்டார்கள் يُحَرِّفُوْنَ புரட்டுகின்றனர் الْـكَلِمَ வசனங்களை عَنْ இருந்து مَّوَاضِعِهٖ அதன் இடங்கள் وَ يَقُوْلُوْنَ இன்னும் கூறுகின்றனர் سَمِعْنَا செவியுற்றோம் وَعَصَيْنَا இன்னும் மாறுசெய்தோம் وَاسْمَعْ கேட்பீராக غَيْرَ مُسْمَعٍ கேட்கப்படாதவராக وَّرَاعِنَا இன்னும் ராயினா لَـيًّۢا வளைத்து بِاَ لْسِنَتِهِمْ தங்கள் நாவுகளை وَطَعْنًا இன்னும் குற்றம் சொல்வதற்காக فِىْ الدِّيْنِ‌ ؕ மார்க்கத்தில் وَلَوْ اَنَّهُمْ قَالُوْا நிச்சயமாக அவர்கள் கூறினால் سَمِعْنَا செவியுற்றோம் وَاَطَعْنَا இன்னும் கீழ்ப்படிந்தோம் وَاسْمَعْ இன்னும் கேட்பீராக وَانْظُرْنَا இன்னும் எங்களை பார்ப்பீராக لَـكَانَ இருந்திருக்கும் خَيْرًا நன்றாக لَّهُمْ அவர்களுக்கு وَاَقْوَمَ ۙ இன்னும் மிக நேர்மையாக وَ لٰـكِنْ எனினும் لَّعَنَهُمُ அவர்களை சபித்தான் اللّٰهُ அல்லாஹ் بِكُفْرِهِمْ அவர்களின் நிராகரிப்பின் காரணமாக فَلَا يُؤْمِنُوْنَ ஆகவே நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் اِلَّا தவிர قَلِيْلًا‏ சிலரை
4:46. மினல் லதீன ஹாதூ யுஹர்ரிFபூனல் கலிம 'அம் மவாளி'இஹீ வ யகூலூன ஸமிஃனா வ 'அஸய்னா வஸ்மஃ கய்ர முஸ்ம'இ(ன்)வ் வ ரா'இனா லய்யம் Bபி அல்ஸினதிஹிம் வ தஃனன் Fபித்தீன்; வ லவ் அன்னஹும் காலூ ஸமிஃனா வ அதஃனா வஸ்மஃ வன்ளுர்னா லகான கய்ரல் லஹும் வ அக்வம வ லாகில் ல' அ'னஹுமுல் லாஹு BபிகுFப்ரிஹிம் Fபலா யு'மினூன இல்லா கலீலா
4:46. யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, “நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!” என்று கூறி, “ராயினா” என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் “நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;” (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.
4:47
4:47 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اٰمِنُوْا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ مِّنْ قَبْلِ اَنْ نَّـطْمِسَ وُجُوْهًا فَنَرُدَّهَا عَلٰٓى اَدْبَارِهَاۤ اَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّاۤ اَصْحٰبَ السَّبْتِ‌ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اُوْتُوا கொடுக்கப்பட்டவர்களே! الْكِتٰبَ வேதம் اٰمِنُوْا நம்பிக்கை கொள்ளுங்கள் بِمَا எதை نَزَّلْنَا இறக்கினோம் مُصَدِّقًا உண்மைப்படுத்தக் கூடியதாக لِّمَا எதை مَعَكُمْ உங்களுடன் مِّنْ قَبْلِ முன்னர் اَنْ نَّـطْمِسَ நாம் மாற்றுவது وُجُوْهًا முகங்களை فَنَرُدَّهَا அவற்றை திருப்பி விடுவோம் عَلٰٓى மீது اَدْبَارِهَاۤ அவற்றின்பின்புறங்கள் اَوْ அல்லது نَلْعَنَهُمْ அவர்களை சபிப்போம் كَمَا போல் لَعَنَّاۤ சபித்தோம் اَصْحٰبَ السَّبْتِ‌ؕ சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை وَكَانَ ஆகும் اَمْرُ கட்டளையிட்டது اللّٰهِ அல்லாஹ் مَفْعُوْلًا‏ நிறைவேற்றப்பட்டே
4:47. யா அய்யுஹ ல்லதீன ஊதுல் கிதாBப ஆமினூ Bபிமா னZஜ்Zஜல்னா முஸதிகல்லிமா ம'அகும் மின் கBப்லி அன் னத்மிஸ வுஜூஹன் Fபனருத்தஹா 'அலா அத்Bபாரிஹா அவ் னல்'அனஹும் கமா ல'அன்னா அஸ்ஹாBபஸ் ஸBப்த்; வ கான அம்ருல் லாஹி மFப்'ஊலா
4:47. வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) “அஸ்ஹாபுஸ் ஸப்து” என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும்.
4:48
4:48 اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَغْفِرُ மன்னிக்க மாட்டான் اَنْ يُّشْرَكَ இணை வைக்கப்படுவதை بِهٖ அவனுக்கு وَيَغْفِرُ இன்னும் மன்னிப்பான் مَا எது دُوْنَ தவிர ذٰ لِكَ இது لِمَنْ எவருக்கு يَّشَآءُ‌ ۚ நாடுகிறான் وَمَنْ எவர் يُّشْرِكْ இணைவைப்பார் بِاللّٰهِ அல்லாஹ்விற்கு فَقَدِ திட்டமாக افْتَـرٰۤى புனைந்து விட்டார் اِثْمًا பாவத்தை عَظِيْمًا‏ பெரும்
4:48. இன்னல் லாஹ லா யக்Fபிரு அய் யுஷ்ரக Bபிஹீ வ யக்Fபிரு மா தூன தாலிக லிமய் யஷா'; வ மய் யுஷ்ரிக் Bபில்லாஹி FபகதிFப் தரா இத்மன் 'அளீமா
4:48. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
4:49
4:49 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ يُزَكُّوْنَ اَنْفُسَهُمْ‌ ؕ بَلِ اللّٰهُ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ وَلَا يُظْلَمُوْنَ فَتِيْلًا‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? اِلَى الَّذِيْنَ எவர்களை يُزَكُّوْنَ பரிசுத்தப்படுத்துகிறார்கள் اَنْفُسَهُمْ‌ ؕ தங்களை بَلِ மாறாக اللّٰهُ அல்லாஹ்தான் يُزَكِّىْ பரிசுத்தமாக்குகிறான் مَنْ எவரை يَّشَآءُ நாடுகிறான் وَلَا يُظْلَمُوْنَ அநீதி செய்யப்பட மாட்டார்கள் فَتِيْلًا‏ வெள்ளை நூலளவும்
4:49. அலம் தர இலல் லதீன யுZஜக்கூன அன்Fபுஸஹும்; Bபலில் லாஹு யுZஜக்கீ மய் யஷா'உ வலா யுள்லமூன Fபதீலா
4:49. (நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
4:50
4:50 اُنْظُرْ كَيْفَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْـكَذِبَ‌ؕ وَكَفٰى بِهٖۤ اِثْمًا مُّبِيْنًا
اُنْظُرْ பார்ப்பீராக كَيْفَ எவ்வாறு يَفْتَرُوْنَ கற்பனை செய்கின்றனர் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது الْـكَذِبَ‌ؕ பொய்யை وَكَفٰى போதுமாகும் بِهٖۤ இதுவே اِثْمًا பாவத்திற்கு مُّبِيْنًا‏ பகிரங்கமான
4:50. உன்ளுர் கய்Fப யFப்தரூன 'அலல் லாஹில் கதிBப், வகFபா Bபிஹீ இத்மம்ம் முBபீனா
4:50. (நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும்; இதுவே (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்துக்குப் போதுமா(ன சான்றாக) இருக்கின்றது.
4:51
4:51 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يُؤْمِنُوْنَ بِالْجِبْتِ وَالطَّاغُوْتِ وَيَقُوْلُوْنَ لِلَّذِيْنَ كَفَرُوْا هٰٓؤُلَۤاءِ اَهْدٰى مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا سَبِيْلًا‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? اِلَى الَّذِيْنَ எவர்களை اُوْتُوْا கொடுக்கப்பட்டார்கள் نَصِيْبًا ஒரு பாகம் مِّنَ الْكِتٰبِ வேதத்தில் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கின்றனர் بِالْجِبْتِ ஷைத்தானை وَالطَّاغُوْتِ இன்னும் சிலையை وَيَقُوْلُوْنَ இன்னும் கூறுகின்றனர் لِلَّذِيْنَ எவர்களை நோக்கி كَفَرُوْا நிராகரித்தார்கள் هٰٓؤُلَۤاءِ இவர்கள் اَهْدٰى மிக நேர்வழியாளர்(கள்) مِنَ விட الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் سَبِيْلًا‏ பாதையால்
4:51. அலம் தர இலல் லதீன 'ஊதூ னஸீBபம் மினல் கிதாBபி யு'மினூன Bபில் ஜிBப்தி வத் தாகூதி வ யகூலூன லில்லதீன கFபரூ ஹா உலா'இ அஹ்தா மினல் லதீன ஆமனூ ஸBபீலா
4:51. (நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
4:52
4:52 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَعَنَهُمُ اللّٰهُ‌ ؕ وَمَنْ يَّلْعَنِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ نَصِيْرًا ؕ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ எவர்கள் لَعَنَهُمُ அவர்களை சபித்தான் اللّٰهُ‌ ؕ அல்லாஹ் وَمَنْ எவரை يَّلْعَنِ சபிப்பான் اللّٰهُ அல்லாஹ் فَلَنْ تَجِدَ காணவே மாட்டீர் لَهٗ அவருக்கு نَصِيْرًا ؕ‏ உதவியாளரை
4:52. உலா'இகல் லதீன ல'அன ஹுமுல் லாஹு வ மய் யல்'அனில் லாஹு Fபலன் தஜித லஹூ னஸீரா
4:52. இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்; எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.
4:53
4:53 اَمْ لَهُمْ نَصِيْبٌ مِّنَ الْمُلْكِ فَاِذًا لَّا يُؤْتُوْنَ النَّاسَ نَقِيْرًا ۙ‏
اَمْ அல்லது لَهُمْ இவர்களுக்கு نَصِيْبٌ பங்கு مِّنَ الْمُلْكِ ஆட்சியில் فَاِذًا அவ்வாறிருந்தால் لَّا يُؤْتُوْنَ கொடுக்க மாட்டார்கள் النَّاسَ மக்களுக்கு نَقِيْرًا கீறல் அளவும்
4:53. அம் லஹும் னஸீBபும் மினல் முல்கி Fப இதல் லா யு'தூனன் னாஸ னகீரா
4:53. இவர்களுக்கு ஆட்சியில் ஒரு சிறு பாகமாவது இருக்கிறதா? அப்படியிருந்தால், (மற்ற) மனிதர்களுக்கு (அதிலிருந்து) ஓர் எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள்.
4:54
4:54 اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ۚ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا‏
اَمْ அல்லது يَحْسُدُوْنَ பொறாமைப்படுகி றார்கள் النَّاسَ மக்களை عَلٰى மீது مَاۤ اٰتٰٮهُمُ எது/கொடுத்தான்/ அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் مِنْ فَضْلِهٖ‌ۚ தன் அருளிலிருந்து فَقَدْ திட்டமாக اٰتَيْنَاۤ கொடுத்தோம் اٰلَ குடும்பத்தாருக்கு اِبْرٰهِيْمَ இப்ராஹீமுடைய الْـكِتٰبَ வேதத்தை وَالْحِكْمَةَ இன்னும் ஞானத்தை وَاٰتَيْنٰهُمْ இன்னும் கொடுத்தோம்/ அவர்களுக்கு مُّلْكًا ஆட்சியை عَظِيْمًا‏ பெரிய
4:54. அம் யஹ்ஸுதூனன் னாஸ 'அலா மா ஆதாஹுமுல் லாஹு மின் Fபள்லிஹீ Fபகத் ஆதய்னா ஆல இBப்ராஹீமல் கிதாBப வல் ஹிக்மத வ ஆதய்னாஹும் முல்கன் 'அளீமா
4:54. அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
4:55
4:55 فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ‌ ؕ وَكَفٰى بِجَهَـنَّمَ سَعِيْرًا‏
فَمِنْهُمْ அவர்களில் உண்டு مَّنْ எவர் اٰمَنَ நம்பிக்கை கொண்டார் بِهٖ அதை وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ எவர் صَدَّ தடுத்தார் عَنْهُ‌ ؕ அதை விட்டு وَكَفٰى போதுமாகும் بِجَهَـنَّمَ நரகமே سَعِيْرًا‏ கொழுந்து விட்டெரியும் நெருப்பால்
4:55. Fபமின்ஹும் மன் ஆமன Bபிஹீ வ மின்ஹும் மன் ஸத்த 'அன்ஹ்; வ கFபா Bபி ஜஹன்னம ஸ'ஈரா
4:55. (அவ்வாறிருந்தும்) அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டார்கள்; சிலர் தங்கள் முகங்களை அதைவிட்டும் திருப்பிக் கொண்டார்கள்; (இவ்வாறு முகந் திருப்பிக் கொண்டோருக்கு) கொழுந்து விட்டு எரியும் நரகமே போதுமானது.
4:56
4:56 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا سَوْفَ نُصْلِيْهِمْ نَارًا ؕ كُلَّمَا نَضِجَتْ جُلُوْدُهُمْ بَدَّلْنٰهُمْ جُلُوْدًا غَيْرَهَا لِيَذُوْقُوا الْعَذَابَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَزِيْزًا حَكِيْمًا‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் بِاٰيٰتِنَا நம் வசனங்களை سَوْفَ نُصْلِيْهِمْ அவர்களை எரிப்போம் نَارًا ؕ நரக நெருப்பில் كُلَّمَا போதெல்லாம் نَضِجَتْ கனிந்து விட்டது جُلُوْدُهُمْ அவர்களின் தோல்கள் بَدَّلْنٰهُمْ அவர்களுக்கு மாற்றுவோம் جُلُوْدًا தோல்களை غَيْرَهَا அவை அல்லாத لِيَذُوْقُوا அவர்கள் சுவைப்பதற்கு الْعَذَابَ‌ ؕ வேதனையை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَزِيْزًا மிகைத்தவனாக حَكِيْمًا‏ ஞானவானாக
4:56. இன்னல் லதீன கFபரூ Bபி ஆயாதினா ஸவ்Fப னுஸ்லீஹிம் னாரன் குல்லமா னளிஜத் ஜுலூதுஹும் Bபத்தல்னாஹும் ஜுலூதன் கய்ரஹா லியதூகுல் 'அதாBப்; இன்னல்லாஹ கான 'அZஜீZஜன் ஹகீமா
4:56. யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
4:57
4:57 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ لَـهُمْ فِيْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ  وَّنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيْلًا‏
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَعَمِلُوا செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகள் سَنُدْخِلُهُمْ அவர்களை நுழைப்போம் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَاۤ اَبَدًا‌ ؕ அவற்றில்/என்றும் لَـهُمْ அவர்களுக்கு فِيْهَاۤ அவற்றில் اَزْوَاجٌ மனைவிகள் مُّطَهَّرَةٌ  பரிசுத்தமான وَّنُدْخِلُهُمْ இன்னும் அவர்களை நுழைப்போம் ظِلًّا நிழலில் ظَلِيْلًا‏ அடர்ந்தது
4:57. வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஸனுத் கிலுஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா, லஹும் Fபீஹா அZஜ்வாஜும் முதஹ்ஹரதுன் வ னுத்கிலுஹும் ளில்லன் ளலீலா
4:57. (அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு; அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.
4:58
4:58 اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰٓى اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ‌ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهٖ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًۢا بَصِيْرًا‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَاْمُرُكُمْ உங்களுக்குக் கட்டளையிடுகிறான் اَنْ تُؤَدُّوا நீங்கள் ஒப்படைத்து விடுவது الْاَمٰنٰتِ அமானிதங்களை اِلٰٓى இடம் اَهْلِهَا ۙ அதன் சொந்தக்காரர் وَاِذَا حَكَمْتُمْ இன்னும் நீங்கள் தீர்ப்பளித்தால் بَيْنَ இடையில் النَّاسِ மக்கள் اَنْ تَحْكُمُوْا நீங்கள் தீர்ப்பளிப்பது بِالْعَدْلِ‌ ؕ நீதமாக اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் نِعِمَّا எது மிக சிறந்தது? يَعِظُكُمْ உங்களுக்கு உபதேசிக்கிறான் بِهٖ‌ ؕ அதை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் سَمِيْعًۢا செவியுறுபவனாக بَصِيْرًا‏ உற்று நோக்குபவனாக
4:58. இன்னல் லாஹ ய'முருகும் அன் து'அத்துல் அமானாதி இலா அஹ்லிஹா வ இதா ஹகம்தும் Bபய்னன் னாஸி அன் தஹ்குமூ Bபில்'அத்ல்; இன்னல் லாஹ னி'இம்மா ய'இளுகும் Bபிஹ்; இன்னல் லாஹ கான ஸமீ'அம் Bபஸீரா
4:58. நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
4:59
4:59 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ‌ ؕ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اَطِيْـعُوا கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَاَطِيْـعُوا கீழ்ப்படியுங்கள் الرَّسُوْلَ தூதருக்கு وَاُولِى الْاَمْرِ இன்னும் அதிகாரிகளுக்கு مِنْكُمْ‌ۚ உங்களில் فَاِنْ تَنَازَعْتُمْ உங்களுக்குள் பிணக்கு ஏற்பட்டால் فِىْ شَىْءٍ ஒரு விஷயத்தில் فَرُدُّوْهُ அதைத் திருப்புங்கள் اِلَى பக்கம் اللّٰهِ அல்லாஹ் وَالرَّسُوْلِ தூதர் اِنْ كُنْـتُمْ நீங்கள் இருந்தால் تُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறீர்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَـوْمِ الْاٰخِرِ‌ ؕ இன்னும் இறுதி நாள் ذٰ لِكَ இதுதான் خَيْرٌ சிறந்தது وَّاَحْسَنُ இன்னும் மிக அழகானது تَاْوِيْلًا‏ முடிவால்
4:59. யா அய்யுஹல் லதீன ஆமனூ அதீ'உல் லாஹ வ அதீ'உர் ரஸூல வ உலில் அம்ரி மின்கும் Fப இன் தனாZஜஃதும் Fபீ ஷய்'இன் Fபருத்தூஹு இலல் லாஹி வர் ரஸூலி இன் குன்தும் து'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; தாலிக கய்ரு(ன்)வ் வ அஹ்ஸனு த'வீலா
4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
4:60
4:60 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ يَزْعُمُوْنَ اَنَّهُمْ اٰمَنُوْا بِمَاۤ اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ يُرِيْدُوْنَ اَنْ يَّتَحَاكَمُوْۤا اِلَى الطَّاغُوْتِ وَقَدْ اُمِرُوْۤا اَنْ يَّكْفُرُوْا بِهٖ ؕ وَيُرِيْدُ الشَّيْـطٰنُ اَنْ يُّضِلَّهُمْ ضَلٰلًاۢ بَعِيْدًا‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? اِلَى பக்கம் الَّذِيْنَ எவர்கள் يَزْعُمُوْنَ எண்ணுகின்றனர் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் بِمَاۤ எதை اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكَ உம் பக்கம் وَمَاۤ எவற்றை اُنْزِلَ இறக்கப்பட்டன مِنْ قَبْلِكَ உமக்கு முன்னர் يُرِيْدُوْنَ நாடுகின்றனர் اَنْ يَّتَحَاكَمُوْۤا அவர்கள் தீர்ப்பு தேடிச்செல்ல اِلَى الطَّاغُوْتِ தீயவனிடம் وَقَدْ اُمِرُوْۤا கட்டளையிடப் பட்டுள்ளனர் اَنْ يَّكْفُرُوْا அவர்கள் புறக்கணிக்க வேண்டும் بِهٖ ؕ அவனை وَيُرِيْدُ நாடுகிறான் الشَّيْـطٰنُ اَنْ يُّضِلَّهُمْ ஷைத்தான்/அவர்களை வழிகெடுக்க ضَلٰلًاۢ வழிகேடு بَعِيْدًا‏ வெகு தூரம்
4:60. அலம் தர இலல் லதீன யZஜ்'உமூன அன்னஹும் அமனூ Bபிமா உன்Zஜிலா இலய்க வ மா உன்Zஜில மின் கBப்லிக யுரீதூன அய் யதஹாகமூ இலத் தாகூதி வ கத் உமிரூ அய் யக்Fபுரூ Bபிஹி, வ யுரீதுஷ் ஷய்தானு அய் யுளில்லஹும் ளலாலம் Bப'ஈதா
4:60. (நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? - (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் - அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான்.
4:61
4:61 وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ رَاَيْتَ الْمُنٰفِقِيْنَ يَصُدُّوْنَ عَنْكَ صُدُوْدًا‌ ۚ‏
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمْ அவர்களுக்கு تَعَالَوْا வாருங்கள் اِلٰى பக்கம் مَاۤ எதை اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் وَاِلَى இன்னும் பக்கம் الرَّسُوْلِ தூதர் رَاَيْتَ காண்பீர் الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்களை يَصُدُّوْنَ புறக்கணிக்கிறார்கள் عَنْكَ உம்மை விட்டு صُدُوْدًا‌ ۚ‏ புறக்கணித்தல்
4:61. வ இதா கீல லஹும் த'ஆலவ் இலா மா அன்Zஜலல்லாஹு வ இலர் ரஸூலி ர அய்தல் முனாFபிகீன யஸுத்தூன 'அன்க ஸுதூதா
4:61. மேலும் அவர்களிடம்: “அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்” என்று கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே நீர் பார்ப்பீர்.
4:62
4:62 فَكَيْفَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۢ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ ثُمَّ جَآءُوْكَ يَحْلِفُوْنَ‌ۖ بِاللّٰهِ اِنْ اَرَدْنَاۤ اِلَّاۤ اِحْسَانًـا وَّتَوْفِيْقًا‏
فَكَيْفَ எவ்வாறு اِذَاۤ اَصَابَتْهُمْ அவர்களுக்கு ஏற்பட்டால் مُّصِيْبَةٌ ۢ ஒரு கஷ்டம் بِمَا எதன் காரணமாக قَدَّمَتْ முற்படுத்தியன اَيْدِيْهِمْ அவர்களின் கரங்கள் ثُمَّ பிறகு جَآءُوْكَ உம்மிடம் வந்தனர் يَحْلِفُوْنَ‌ۖ சத்தியம் செய்கின்றனர் بِاللّٰهِ அல்லாஹ்வைக் கொண்டு اِنْ اَرَدْنَاۤ நாங்கள் நாடவில்லை اِلَّاۤ அன்றி اِحْسَانًـا நன்மையை وَّتَوْفِيْقًا‏ இன்னும் ஒற்றுமையை
4:62. Fபகய்Fப இதா அஸாBபத்ஹும் முஸீBபதும் Bபிமா கத்தமத் அய்தீஹிம் தும்ம ஜா'ஊக யஹ்லிFபூன Bபில்லாஹி இன் அரத்னா இல்லா இஹ்ஸான(ன்)வ் வ தவ்Fபீகா
4:62. அவர்களின் கைகள் முற்படுத்தியனுப்பிய தீவினையின் காரணத்தால், அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அப்பொழுது அவர்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மேல் சத்தியம் செய்து “நாங்கள் நன்மையையும் ஒற்றுமையையும் தவிர (வேறெதனையும்) நாடவில்லை” என்று கூறுகின்றனர்.
4:63
4:63 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ يَعْلَمُ اللّٰهُ مَا فِىْ قُلُوْبِهِمْ فَاَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُلْ لَّهُمْ فِىْۤ اَنْفُسِهِمْ قَوْلًاۢ بَلِيْغًا‏
اُولٰٓٮِٕكَ இவர்கள் الَّذِيْنَ எவர்கள் يَعْلَمُ அறிவான் اللّٰهُ அல்லாஹ் مَا எதை فِىْ قُلُوْبِهِمْ அவர்களுடைய உள்ளங்களில் فَاَعْرِضْ ஆகவே புறக்கணிப்பீராக عَنْهُمْ அவர்களை وَعِظْهُمْ இன்னும் உபதேசிப்பீராக/அவர்களுக்கு وَقُلْ கூறுவீராக لَّهُمْ அவர்களுக்கு فِىْۤ اَنْفُسِهِمْ அவர்களுடைய உள்ளங்களில் قَوْلًاۢ கூற்றை بَلِيْغًا‏ தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய
4:63. உலா'இகல் லதீன யஃல முல்லாஹு மா Fபீ குலூBபிஹிம் Fப அஃரிள் 'அன்ஹும் வ 'இள்ஹும் வ குல் லஹும் Fபீ அன்Fபுஸிஹிம் கவ்லம் Bபலீகா
4:63. அத்தகையோரின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிவான் - ஆகவே நீர் அவர்களிடமிருந்து விலகியிரும், அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யும்; மேலும், அவர்களின் மனங்களில் பதியும்படி தெளிவான வார்த்தைகளைக் கூறும்.
4:64
4:64 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِـيُـطَاعَ بِاِذْنِ اللّٰهِ ‌ؕ وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَـهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا‏
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை مِنْ رَّسُوْلٍ எந்த தூதரையும் اِلَّا தவிர لِـيُـطَاعَ அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِ ؕ அல்லாஹ்வுடைய وَلَوْ இருந்தால் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اِذْ போது ظَّلَمُوْۤا தீங்கிழைத்தார்கள் اَنْفُسَهُمْ தங்களுக்கு جَآءُوْكَ உம்மிடம் வந்தனர் فَاسْتَغْفَرُوا இன்னும் பாவமன்னிப்பு கோரினர் اللّٰهَ அல்லாஹ்விடம் وَاسْتَغْفَرَ இன்னும் பாவமன்னிப்பு கோரினார் لَـهُمُ அவர்களுக்கு الرَّسُوْلُ தூதர் لَوَجَدُوا கண்டிருப்பார்கள் اللّٰهَ அல்லாஹ்வை تَوَّابًا பிழை பொறுப்பவனாக رَّحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
4:64. வமா அர்ஸல்னா மிர் ரஸூலின் இல்லா லியுதா'அ Bபி இத்னில் லாஹ்; வ லவ் அன்னஹும் 'இத் ளலமூ அன்Fபுஸஹும் ஜா'ஊக Fபஸ்தக்Fபருல் லாஹ வஸ்தக்Fபர லஹுமுர் ரஸூலு ல வஜதுல் லாஹ தவ்வாBபர் ரஹீமா
4:64. அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.
4:65
4:65 فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوْا فِىْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا‏
فَلَا ஆகவே, இல்லை وَرَبِّكَ உம் இறைவன் மீது சத்தியமாக لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கையாளராக ஆகமாட்டார்கள் حَتّٰى يُحَكِّمُوْكَ வரை/அவர்கள் தீர்ப்பாளராக்குவது/உம்மை فِيْمَا எதில் شَجَرَ சச்சரவு ஏற்பட்டது بَيْنَهُمْ அவர்களுக்கிடையில் ثُمَّ பிறகு لَا يَجِدُوْا காணமாட்டார்கள் فِىْۤ اَنْفُسِهِمْ தங்கள் உள்ளங்களில் حَرَجًا அதிருப்தி مِّمَّا قَضَيْتَ நீர் தீர்ப்பளித்ததில் وَيُسَلِّمُوْا பணிவார்கள் تَسْلِيْمًا‏ முழுமையாக பணிதல்
4:65. Fபலா வ ரBப்Bபிக லா யு'மினூன ஹத்தா யுஹக்கிமூக Fபீ மா ஷஜர Bபய்னஹும் தும்ம லா யஜிதூ Fபீ அன்Fபுஸிஹிம் ஹரஜம் மிம்மா களய்த வ யுஸல் லிமூ தஸ்லீமா
4:65. உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.
4:66
4:66 وَلَوْ اَنَّا كَتَبْنَا عَلَيْهِمْ اَنِ اقْتُلُوْۤا اَنْفُسَكُمْ اَوِ اخْرُجُوْا مِنْ دِيَارِكُمْ مَّا فَعَلُوْهُ اِلَّا قَلِيْلٌ مِّنْهُمْ‌ ؕ وَلَوْ اَنَّهُمْ فَعَلُوْا مَا يُوْعَظُوْنَ بِهٖ لَـكَانَ خَيْرًا لَّهُمْ وَاَشَدَّ تَثْبِيْتًا ۙ‏
وَلَوْ இருந்தால் اَنَّا நிச்சயமாக நாம் كَتَبْنَا விதித்தோம் عَلَيْهِمْ அவர்கள் மீது اَنِ اقْتُلُوْۤا கொல்லுங்கள் اَنْفُسَكُمْ உங்களை اَوِ அல்லது اخْرُجُوْا வெளியேறுங்கள் مِنْ இருந்து دِيَارِكُمْ உங்கள் இல்லங்கள் مَّا மாட்டார்கள் مَّا فَعَلُوْهُ அதை செய்திருக்க اِلَّا தவிர قَلِيْلٌ குறைவானவர் مِّنْهُمْ‌ ؕ அவர்களில் وَلَوْ இருந்தால் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் فَعَلُوْا செய்தார்கள் مَا எதை يُوْعَظُوْنَ உபதேசிக்கப்படுகிறார்கள் بِهٖ அதை لَـكَانَ ஆகி இருக்கும் خَيْرًا மிக நன்றாக لَّهُمْ அவர்களுக்கு وَاَشَدَّ இன்னும் மிக வலுவானது تَثْبِيْتًا ۙ‏ உறுதிப்படுத்துவதில்
4:66. வ லவ் அன்னா கதBப்னா 'அலய்ஹிம் அனிக்துலூ அன்Fபுஸகும் அவ் இக்ருஜூ மின் தியாரிகும் மா Fப'அலூஹு இல்லா கலீலும் மின்ஹும் வ லவ் அன்னஹும் Fப'அலூ மா யூ'அளூன Bபிஹீ லகான கய்ரல் லஹும் வ அஷத்த தத்Bபீதா
4:66. மேலும், நாம் (அவர்களைப் பார்த்து) “நீங்கள் உங்களை வெட்டி மாய்த்துக் கொள்ளுங்கள், அல்லது உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று கட்டளைவிட்டிருப்போமானால், அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் - அவர்கள் தங்களுக்கு உபதேசம் செய்யப்பட்டபடி நடந்திருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், (அவர்கள் நம்பிக்கையை) மிகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.
4:67
4:67 وَّاِذًا لَّاٰتَيْنٰهُمْ مِّنْ لَّدُنَّاۤ اَجْرًا عَظِيْمًا ۙ‏
وَّاِذًا இன்னும் அப்போது لَّاٰتَيْنٰهُمْ கொடுத்திருப்போம்/அவர்களுக்கு مِّنْ இருந்து لَّدُنَّاۤ நம்மிடம் اَجْرًا கூலியை عَظِيْمًا ۙ‏ மகத்தானது
4:67. வ இதல் ல ஆதய்னாஹும் மில் லதுன்னா அஜ்ரன் 'அளீமா
4:67. அப்போது, நாம் அவர்களுக்கு நம்மிடத்திலிருந்து மகத்தான நற்கூலியைக் கொடுத்திருப்போம்.
4:68
4:68 وَّلَهَدَيْنٰهُمْ صِرَاطًا مُّسْتَقِيْمًا‏
وَّلَهَدَيْنٰهُمْ இன்னும் நேர்வழி செலுத்தியிருப்போம்/அவர்களை صِرَاطًا பாதையில் مُّسْتَقِيْمًا‏ நேரானது
4:68. வ ல ஹதய்னாஹும் ஸிராதம் முஸ்தகீமா
4:68. மேலும், அவர்களுக்கு நேரான வழியையும் காட்டியிருப்போம்.
4:69
4:69 وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ‌ ۚ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا ؕ‏
وَمَنْ எவர்(கள்) يُّطِعِ கீழ்ப்படிகிறார்(கள்) اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَالرَّسُوْلَ இன்னும் தூதருக்கு فَاُولٰٓٮِٕكَ அவர்கள் مَعَ உடன் الَّذِيْنَ எவர்கள் اَنْعَمَ அருள் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ அவர்கள் மீது مِّنَ இருந்து النَّبِيّٖنَ நபிமார்கள் وَالصِّدِّيْقِيْنَ இன்னும் சத்தியவான்கள் وَالشُّهَدَآءِ இன்னும் உயிர்நீத்த தியாகிகள் وَالصّٰلِحِيْنَ‌ ۚ இன்னும் நல்லவர்கள் وَحَسُنَ அழகிய اُولٰٓٮِٕكَ இவர்கள் رَفِيْقًا ؕ‏ தோழர்கள்
4:69. வ ம(ன்)ய்-யுதி'இல் லாஹ வர் ரஸூல Fப உலா'இக ம'அல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன வஸ்ஸித்தீகீன வஷ்ஷுஹதா'இ வஸ்ஸாலிஹீன்; வ ஹஸுன உலா'இக ரFபீகா
4:69. யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.
4:70
4:70 ذٰ لِكَ الْـفَضْلُ مِنَ اللّٰهِ‌ ؕ وَكَفٰى بِاللّٰهِ عَلِيْمًا
ذٰ لِكَ இது الْـفَضْلُ அருள் مِنَ اللّٰهِ‌ ؕ அல்லாஹ்விடமிருந்து وَكَفٰى போதுமாகி விட்டான் بِاللّٰهِ அல்லாஹ்வே عَلِيْمًا‏ நன்கறிபவனாக
4:70. தாலிகல் Fபள்லு மினல் லாஹ்; வ கFபா Bபில்லாஹி 'அலீமா
4:70. இந்த அருட்கொடை அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும்; (எல்லாவற்றையும்) அறிந்து கொள்வதில் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.
4:71
4:71 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا خُذُوْا حِذْرَكُمْ فَانْفِرُوْا ثُبَاتٍ اَوِ انْفِرُوْا جَمِيْعًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே خُذُوْا பற்றிப் பிடியுங்கள் حِذْرَكُمْ எச்சரிக்கையை/உங்கள் فَانْفِرُوْا புறப்படுங்கள் ثُبَاتٍ சிறு கூட்டங்களாக اَوِ அல்லது انْفِرُوْا புறப்படுங்கள் جَمِيْعًا‏ அனைவருமாக
4:71. யா அய்யுஹல் லதீன ஆமனூ குதூ ஹித்ரகும் Fபன்Fபிரூ துBபாதின் அவின் Fபிரூ ஜமீ'ஆ
4:71. நம்பிக்கை கொண்டவர்களே! (போர் நடக்கும்போது) நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; பிரிவு, பிரிவாகவோ அல்லது எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவோ (எச்சரிக்கையுடன்) செல்லுங்கள்.
4:72
4:72 وَاِنَّ مِنْكُمْ لَمَنْ لَّيُبَطِّئَنَّ‌ۚ فَاِنْ اَصَابَتْكُمْ مُّصِيْبَةٌ قَالَ قَدْ اَنْعَمَ اللّٰهُ عَلَىَّ اِذْ لَمْ اَكُنْ مَّعَهُمْ شَهِيْدًا‏
وَاِنَّ நிச்சயமாக مِنْكُمْ உங்களில் لَمَنْ திட்டமாக எவர் لَّيُبَطِّئَنَّ‌ۚ நிச்சயமாக பின்தங்கிவிடுகிறான் فَاِنْ اَصَابَتْكُمْ ஏற்பட்டால் / உங்களுக்கு مُّصِيْبَةٌ ஒரு சோதனை قَالَ கூறுகிறான் قَدْ திட்டமாக اَنْعَمَ அருள் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَىَّ என் மீது اِذْ ஏனெனில் لَمْ اَكُنْ நான் இருக்கவில்லை مَّعَهُمْ அவர்களுடன் شَهِيْدًا‏ பிரசன்னமாகி இருப் பவன்
4:72. வ இன்ன மின்கும் லமல் ல யுBபத்தி'அன்ன Fப இன் அஸாBபத்கும் முஸீBபதுன் கால கத் அன்'அமல் லாஹு 'அலய்ய இத் லம் அகும் ம'அஹும் ஷஹீதா
4:72. (போரிடாமல்) பின்தங்கி விடுகிறவர்களும் உங்களில் சிலர் நிச்சயமாக உள்ளனர்; உங்களுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், “அவர்களுடன் கலந்து கொள்ளாமல் இருந்ததினால் அல்லாஹ் என் மீது அருள் புரிந்துள்ளான்” என்று (அவர்கள்) கூறுகிறார்கள்.
4:73
4:73 وَلَٮِٕنْ اَصَابَكُمْ فَضْلٌ مِّنَ اللّٰهِ لَيَـقُوْلَنَّ كَاَنْ لَّمْ تَكُنْۢ بَيْنَكُمْ وَبَيْنَهٗ مَوَدَّةٌ يّٰلَيْتَنِىْ كُنْتُ مَعَهُمْ فَاَ فُوْزَ فَوْزًا عَظِيْمًا‏
وَلَٮِٕنْ اَصَابَكُمْ அடைந்தால் / உங்களை فَضْلٌ ஓர் அருள் مِّنَ இருந்து اللّٰهِ அல்லாஹ் لَيَـقُوْلَنَّ நிச்சயமாக கூறுகிறான் كَاَنْ போன்று لَّمْ تَكُنْۢ இருக்கவில்லை بَيْنَكُمْ உங்களுக்கிடையில் وَبَيْنَهٗ இன்னும் அவனுக்கிடையில் مَوَدَّةٌ நட்பு يّٰلَيْتَنِىْ كُنْتُ நான் இருந்திருக்க வேண்டுமே مَعَهُمْ அவர்களுடன் فَاَ فُوْزَ வெற்றிபெற்றிருப்பேன் فَوْزًا வெற்றி عَظِيْمًا‏ மகத்தானது
4:73. வ ல'இன் அஸாBபகும் Fபள்லும் மினல் லாஹி ல யகூலன்ன க அல் லம் தகும் Bபய்னகும் வ Bபய்னஹூ மவத்தது(ன்)ய் யா லய்தனீ குன்து ம'அஹும் Fப அFபூZஜ Fபவ்Zஜன் 'அளீமா
4:73. அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு பாக்கியம் கிடைக்குமானால், உங்களுக்கும் அவர்களுக்கு மிடையே நேசமே இல்லாத (அன்னியர்கள்) போல்; “நானும் அவர்களுடன் இருந்திருக்கக் கூடாதா? நானும் பெரும் பாக்கியத்தை அடைந்திருப்பேனே!” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
4:74
4:74 فَلْيُقَاتِلْ فِىْ سَبِيْلِ اللّٰهِ الَّذِيْنَ يَشْرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا بِالْاٰخِرَةِ‌ ؕ وَمَنْ يُّقَاتِلْ فِىْ سَبِيْلِ اللّٰهِ فَيُقْتَلْ اَوْ يَغْلِبْ فَسَوْفَ نُـؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا‏
فَلْيُقَاتِلْ போரிடட்டும் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் الَّذِيْنَ எவர்கள் يَشْرُوْنَ விற்கிறார்கள் الْحَيٰوةَ வாழ்க்கையை الدُّنْيَا இவ்வுலகம் بِالْاٰخِرَةِ‌ ؕ மறுமைக்குப் பகரமாக وَ இன்னும் مَنْ எவர் يُّقَاتِلْ போரிடுவாரோ فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் فَيُقْتَلْ அவர் கொல்லப்பட்டாலும் اَوْ அல்லது يَغْلِبْ வெற்றி பெற்றாலும் فَسَوْفَ விரைவாக نُـؤْتِيْهِ கொடுப்போம் / அவருக்கு اَجْرًا கூலியை عَظِيْمًا‏ மகத்தானது
4:74. Fபல்யுகாதில் Fபீ ஸBபீலில் லாஹில் லதீன யஷ்ரூனல் ஹயாதத் துன்யா Bபில் ஆகிரஹ்; வ மய்-யுகாதில் Fபீ ஸBபீலில் லாஹி Fப யுக்தல் அவ் யக்லிBப் Fபஸவ்Fப னு'தீஹி அஜ்ரன் 'அளீமா
4:74. எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக; யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
4:75
4:75 وَمَا لَـكُمْ لَا تُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ الَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْـقَرْيَةِ الظَّالِمِ اَهْلُهَا‌ ۚ وَاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙۚ وَّاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ نَصِيْرًا ؕ‏
وَمَا لَـكُمْ உங்களுக்கு என்ன لَا تُقَاتِلُوْنَ நீங்கள் போரிடாமல் இருக்க فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் وَالْمُسْتَضْعَفِيْنَ பலவீனர்கள் مِنَ இருந்து الرِّجَالِ ஆண்கள் وَالنِّسَآءِ இன்னும் பெண்கள் وَالْوِلْدَانِ இன்னும் சிறுவர்கள் الَّذِيْنَ எவர்கள் يَقُوْلُوْنَ கூறுகின்றனர் رَبَّنَاۤ எங்கள் இறைவா اَخْرِجْنَا வெளியேற்று/ எங்களை مِنْ இருந்து هٰذِهِ இந்த الْـقَرْيَةِ ஊர் الظَّالِمِ அநியாயக்காரர்(கள்) اَهْلُهَا‌ ۚ இந்த ஊர் வாசிகள் وَاجْعَلْ இன்னும் ஏற்படுத்து لَّـنَا எங்களுக்கு مِنْ இருந்து لَّدُنْكَ உன் புறம் وَلِيًّا ۙۚ ஒரு பாதுகாவலரை وَّاجْعَلْ இன்னும் ஏற்படுத்து لَّـنَا எங்களுக்கு مِنْ இருந்து لَّدُنْكَ உன் புறம் نَصِيْرًا ؕ‏ ஓர் உதவியாளரை
4:75. வமா லகும் லா துகாதிலூன Fபீ ஸBபீலில் லாஹி வல்முஸ்தள்'அFபீன மினர் ரிஜாலி வன்னிஸா'இ வல்வில்தானில் லதீன யகூலூன ரBப்Bபனா அக்ரிஜ்னா மின் ஹாதிஹில் கர்யதிள் ளாலிமி அஹ்லுஹா வஜ்'அல் லனா மில் லதுன்க வலிய(ன்)வ் வஜ்'அல் லனா மில் லதுன்க னஸீரா
4:75. பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
4:76
4:76 اَلَّذِيْنَ اٰمَنُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌‌ ۚ وَالَّذِيْنَ كَفَرُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ الطَّاغُوْتِ فَقَاتِلُوْۤا اَوْلِيَآءَ الشَّيْطٰنِ‌ۚ اِنَّ كَيْدَ الشَّيْطٰنِ كَانَ ضَعِيْفًا
اَلَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்கள் يُقَاتِلُوْنَ போரிடுவார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ‌ ۚ அல்லாஹ்வின் وَالَّذِيْنَ كَفَرُوْا இன்னும் நிராகரிப்பாளர்கள் يُقَاتِلُوْنَ போரிடுவார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் الطَّاغُوْتِ ஷைத்தானின் فَقَاتِلُوْۤا ஆகவே போரிடுங்கள் اَوْلِيَآءَ நண்பர்களிடம் الشَّيْطٰنِ‌ۚ ஷைத்தானின் اِنَّ كَيْدَ நிச்சயமாக சூழ்ச்சி الشَّيْطٰنِ ஷைத்தானின் كَانَ இருக்கிறது ضَعِيْفًا‏ பலவீனமாக
4:76. அல்லதீன ஆமனூ யுகாதிலூன Fபீ ஸBபீலில் லாஹி வல்லதீன கFபரூ யுகாதிலூன Fபீ ஸBபீலித் தாகூத் Fபகாதிலூ அவ்லியா'அஷ் ஷய்தான்; இன்ன கய்தஷ் ஷய்தானி கான ள'ஈFபா
4:76. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.
4:77
4:77 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ قِيْلَ لَهُمْ كُفُّوْۤا اَيْدِيَكُمْ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰ تُوا الزَّكٰوةَ ۚ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللّٰهِ اَوْ اَشَدَّ خَشْيَةً‌ ۚ وَقَالُوْا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ ۚ لَوْلَاۤ اَخَّرْتَنَاۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍ‌ ؕ قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيْلٌ‌ ۚ وَالْاٰخِرَةُ خَيْرٌ لِّمَنِ اتَّقٰى وَلَا تُظْلَمُوْنَ فَتِيْلًا‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اِلَى الَّذِيْنَ எவர்களை قِيْلَ கூறப்பட்டது لَهُمْ அவர்களுக்கு كُفُّوْۤا தடுத்துக் கொள்ளுங்கள் اَيْدِيَكُمْ உங்கள் கரங்களை وَاَقِيْمُوا இன்னும் நிலைநிறுத்துங்கள் الصَّلٰوةَ தொழுகையை وَاٰ تُوا இன்னும் கொடுங்கள் الزَّكٰوةَ ۚ ஸகாத்தை فَلَمَّا كُتِبَ விதிக்கப்பட்ட போது عَلَيْهِمُ அவர்கள் மீது الْقِتَالُ போர் اِذَا அப்போது فَرِيْقٌ ஒரு பிரிவினர் مِّنْهُمْ அவர்களில் يَخْشَوْنَ பயப்படுகின்றனர் النَّاسَ மக்களை كَخَشْيَةِ பயப்படுவதுபோல் اللّٰهِ அல்லாஹ்வை اَوْ அல்லது اَشَدَّ மிகக் கடுமையாக خَشْيَةً‌ ۚ பயத்தால் وَقَالُوْا இன்னும் கூறினார்கள் رَبَّنَا எங்கள் இறைவா لِمَ كَتَبْتَ ஏன் விதித்தாய் عَلَيْنَا எங்கள் மீது الْقِتَالَ ۚ போரை لَوْلَاۤ اَخَّرْتَنَاۤ எங்களை நீ பிற்படுத்த வேண்டாமா? اِلٰٓى வரை اَجَلٍ ஒரு தவணை قَرِيْبٍ‌ ؕ சமீபமாக قُلْ கூறுவீராக مَتَاعُ இன்பம் الدُّنْيَا உலகத்தின் قَلِيْلٌ‌ ۚ அற்பமானது وَالْاٰخِرَةُ மறுமை خَيْرٌ மேலானது لِّمَنِ எவருக்கு اتَّقٰى அஞ்சினார் وَلَا تُظْلَمُوْنَ அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள் فَتِيْلًا‏ ஒரு நூலும்
4:77. அலம் தர இலல் லதீன கீல லஹும் குFப்Fபூ அய்தியகும் வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத Fபலம்மா குதிBப 'அலய்ஹிமுல் கிதாலு இதா Fபரீகும் மின்ஹும் யக்-ஷவ் னன் னாஸ ககஷ்யதில் லாஹி அவ் அஷத்த கஷ்யஹ்; வ காலூ ரBப்Bபனா லிம கதBப்த 'அலய்னல் கிதால லவ் லா அக்கர்தனா இலா அஜலின் கரீBப்; குல் மதா'உத் துன்யா கலீலு(ன்)வ் வல் ஆகிரது கய்ருல் லிமனித் தகா வலா துள்லமூன Fபதீலா
4:77. “உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜகாத்தை கொடுத்தும் வருவீர்களாக!” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.”
4:78
4:78 اَيْنَ مَا تَكُوْنُوْا يُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِىْ بُرُوْجٍ مُّشَيَّدَةٍ‌ ؕ وَاِنْ تُصِبْهُمْ حَسَنَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِ اللّٰهِ‌ ۚ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِكَ‌ ؕ قُلْ كُلٌّ مِّنْ عِنْدِ اللّٰهِ‌ ؕ فَمَالِ ھٰٓؤُلَۤاءِ الْقَوْمِ لَا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ حَدِيْثًا‏
اَيْنَ مَا تَكُوْنُوْا நீங்கள் எங்கிருந்தாலும் يُدْرِكْكُّمُ அடையும்/உங்களை الْمَوْتُ மரணம் وَلَوْ كُنْتُمْ நீங்கள் இருந்தாலும் فِىْ بُرُوْجٍ கோபுரங்களில் مُّشَيَّدَةٍ‌ ؕ பலமான وَاِنْ تُصِبْهُمْ அவர்களை அடைந்தால் حَسَنَةٌ ஒரு நன்மை يَّقُوْلُوْا கூறுகின்றனர் هٰذِهٖ இது مِنْ இருந்து عِنْدِ اللّٰهِ‌ ۚ அல்லாஹ்விடம் وَاِنْ تُصِبْهُمْ அவர்களை அடைந்தால் سَيِّئَةٌ ஒரு தீங்கு يَّقُوْلُوْا கூறுகின்றனர் هٰذِهٖ இது مِنْ இருந்து عِنْدِكَ‌ ؕ உம்மிடம் قُلْ கூறுவீராக كُلٌّ எல்லாம் مِّنْ இருந்து عِنْدِ اللّٰهِ‌ ؕ அல்லாஹ்விடம் فَمَالِ ھٰٓؤُلَۤاءِ الْقَوْمِ இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது? لَا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ அவர்கள் விரைவாக விளங்குவதில்லையே حَدِيْثًا‏ ஒரு பேச்சை
4:78. அய்ன மா தகூனூ யுத்ரிக்குமுல் மவ்து வ லவ் குன்தும் Fபீ Bபுரூஜிம் முஷய் யதஹ்; வ இன் துஸிBப்ஹும் ஹஸனது(ன்)ய் யகூலூ ஹாதிஹீ மின் இன்தில் லாஹி வ இன் துஸிBப்ஹும் ஸய்யி'அது(ன்)ய் யகூலூ ஹாதிஹீ மின் 'இன்திக்; குல் குல்லும் மின் 'இன்தில்லாஹி Fபமா லிஹா 'உலா'இல் கவ்மி லா யகாதூன யFப்கஹூன ஹதீதா
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, “இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது” என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன; இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!”
4:79
4:79 مَاۤ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ‌ وَمَاۤ اَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَّـفْسِكَ‌ ؕ وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا‌ ؕ وَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا‏
مَاۤ எது اَصَابَكَ அடைந்தது/உம்மை مِنْ இருந்து حَسَنَةٍ நன்மை فَمِنَ இருந்து اللّٰهِ‌ அல்லாஹ் وَمَاۤ இன்னும் எது اَصَابَكَ அடைந்தது/உம்மை مِنْ இருந்து سَيِّئَةٍ தீமை فَمِنْ نَّـفْسِكَ‌ ؕ உன்னிலிருந்து وَاَرْسَلْنٰكَ அனுப்பினோம்/உம்மை لِلنَّاسِ மக்களுக்கு رَسُوْلًا‌ ؕ தூதராக وَكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ் شَهِيْدًا‏ சாட்சியாளனாக
4:79. மா அஸாBபக மின் ஹஸனதின் Fபமினல் லாஹி வ மா அஸாBபக மின் ஸய்யி'அதின் Fபமின் னFப்ஸிக்; வ அர்ஸல்னாக லின்னாஸி ரஸூலா; வ கFபா Bபில்லாஹி ஷஹீதா
4:79. உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது; (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.
4:80
4:80 مَنْ يُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ ‌ۚ وَمَنْ تَوَلّٰى فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًا ؕ‏
مَنْ எவர் يُّطِعِ கீழ்ப்படிகிறார் الرَّسُوْلَ தூதருக்கு فَقَدْ திட்டமாக اَطَاعَ கீழ்ப்படிந்தார் اللّٰهَ ۚ அல்லாஹ்விற்கு وَمَنْ இன்னும் எவர்(கள்) تَوَلّٰى திரும்பினார்(கள்) فَمَاۤ இல்லை اَرْسَلْنٰكَ உம்மை அனுப்ப عَلَيْهِمْ அவர்கள் மீது حَفِيْظًا ؕ‏ பாதுகாவலராக
4:80. ம(ன்)ய் யுதி'இர் ரஸூல Fபகத் அதா'அல் லாஹ வ மன் தவல்லா Fபமா அர்ஸல்னாக 'அலய்ஹிம் ஹFபீளா
4:80. எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை.
4:81
4:81 وَيَقُوْلُوْنَ طَاعَةٌ فَاِذَا بَرَزُوْا مِنْ عِنْدِكَ بَيَّتَ طَآٮِٕفَةٌ مِّنْهُمْ غَيْرَ الَّذِىْ تَقُوْلُ‌ ؕ وَاللّٰهُ يَكْتُبُ مَا يُبَيِّتُوْنَ‌ ۚ فَاَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ ؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا‏
وَيَقُوْلُوْنَ கூறுகின்றனர் طَاعَةٌ கீழ்ப்படிதல் فَاِذَا بَرَزُوْا அவர்கள் வெளியேறினால் مِنْ இருந்து عِنْدِكَ உம்மிடம் بَيَّتَ சதி செய்கின்றனர் طَآٮِٕفَةٌ ஒரு கூட்டம் مِّنْهُمْ அவர்களில் غَيْرَ மாறாக الَّذِىْ எது تَقُوْلُ‌ ؕ கூறுகிறீர் وَاللّٰهُ அல்லாஹ் يَكْتُبُ பதிவு செய்கிறான் مَا يُبَيِّتُوْنَ‌ ۚ எதை/சதிசெய்கிறார்கள் فَاَعْرِضْ ஆகவே புறக்கணிப்பீராக عَنْهُمْ அவர்களை விட்டு وَتَوَكَّلْ இன்னும் நம்பிக்கை வைப்பீராக عَلَى اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் மீது وَكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்வே وَكِيْلًا‏ பொறுப்பாளனாக
4:81. வ யகூலூன தா'அன்துன் Fப இதா BபரZஜூ மின் 'இன்திக Bபய்யத தா'இFபதும் மின்ஹும் கய்ரல் லதீ தகூலு வல்லாஹு யக்துBபு மா யுBபய்யிதூன Fப அஃரிள் 'அன்ஹும் வ தவக்கல் 'அலல் லாஹ்; வ கFபா Bபில்லாஹி வகீலா
4:81. (நபியே! உங்களுக்கு நாங்கள்) கீழ்படிகிறோம் என்று அவர்கள் (வாயளவில்) கூறுகின்றனர்;; உம்மை விட்டு அவர் வெளியேறிவிட்டாலோ, அவர்களில் ஒரு சாரார், நீர் (அவர்களுக்குக்) கூறியதற்கு மாறாக இரவு முழுவதும் சதியாலோசனை செய்கின்றனர்; அவர்கள் இரவில் செய்த சதியாலோசனையை அல்லாஹ் பதிவு செய்கிறான்; ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக - பொறுப்பேற்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
4:82
4:82 اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ‌ؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا‏
اَفَلَا يَتَدَبَّرُوْنَ அவர்கள் ஆழ்ந்தாராய வேண்டாமா? الْقُرْاٰنَ‌ؕ குர்ஆனை وَلَوْ كَانَ இருந்திருந்தால் مِنْ இருந்து عِنْدِ இடம் غَيْرِ அல்லாதவர் اللّٰهِ அல்லாஹ் لَوَجَدُوْا கண்டிருப்பார்கள் فِيْهِ இதில் اخْتِلَافًا முரண்பாட்டை كَثِيْرًا‏ பல
4:82. அFபலா யததBப்Bபரூனல் குர்'ஆன்; வ லவ் கான மின் 'இன்தி கய்ரில் லாஹி ல வஜதூ Fபீ இக்திலாFபன் கதீரா
4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
4:83
4:83 وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَـوْفِ اَذَاعُوْا بِهٖ‌ ۚ وَلَوْ رَدُّوْهُ اِلَى الرَّسُوْلِ وَاِلٰٓى اُولِى الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِيْنَ يَسْتَنْۢبِطُوْنَهٗ مِنْهُمْ‌ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّيْطٰنَ اِلَّا قَلِيْلًا‏
وَاِذَا جَآء வந்தால் هُمْ அவர்களிடம் اَمْرٌ ஒரு செய்தி مِّنَ பற்றி الْاَمْنِ பாதுகாப்பு اَوِ அல்லது الْخَـوْفِ பயம் اَذَاعُوْا பரப்புகின்றனர் بِهٖ‌ ۚ அதை وَلَوْ رَدُّوْهُ அவர்கள் கொண்டு சென்றால் / அதை اِلَى الرَّسُوْلِ தூதரிடம் وَاِلٰٓى اُولِى الْاَمْرِ இன்னும் அதிகாரிகளிடம் مِنْهُمْ அவர்களில் لَعَلِمَهُ அதை நன்கறிந்து கொள்வார்கள் الَّذِيْنَ எவர்கள் يَسْتَنْۢبِطُوْنَهٗ யூகிப்பார்கள்/அதை مِنْهُمْ‌ؕ அவர்களில் وَلَوْلَا இல்லையென்றால் فَضْلُ அருள் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ உங்கள் மீது وَرَحْمَتُهٗ இன்னும் அவனுடைய கருணை لَاتَّبَعْتُمُ பின்பற்றி இருப்பீர்கள் الشَّيْطٰنَ ஷைத்தானை اِلَّا தவிர قَلِيْلًا‏ சிலரை
4:83. வ இதா ஜா'அஹும் அம்ரும் மினல் அம்னி அவில் கவ்Fபி அதா'ஊ Bபிஹீ வ லவ் ரத்தூஹு இலர் ரஸூலி வ இலா உலில் அம்ரி மின்ஹும் ல'அலிமஹுல் லதீன யஸ்தம்Bபிதூனஹூ மின்ஹும்; வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்கும் வ ரஹ்மதுஹூ லத்தBபஃதுமுஷ் ஷய்தான இல்லா கலீலா
4:83. மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்; அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.
4:84
4:84 فَقَاتِلْ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌ ۚ لَا تُكَلَّفُ اِلَّا نَـفْسَكَ‌ وَحَرِّضِ الْمُؤْمِنِيْنَ‌ ۚ عَسَی اللّٰهُ اَنْ يَّكُفَّ بَاْسَ الَّذِيْنَ كَفَرُوْا‌ ؕ وَاللّٰهُ اَشَدُّ بَاْسًا وَّاَشَدُّ تَـنْكِيْلًا‏
فَقَاتِلْ ஆகவே போரிடுவீராக فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ‌ ۚ அல்லாஹ்வின் لَا تُكَلَّفُ பணிக்கப்பட மாட்டீர் اِلَّا نَـفْسَكَ‌ உம்மைத் தவிர وَحَرِّضِ இன்னும் தூண்டுவீராக الْمُؤْمِنِيْنَ‌ ۚ நம்பிக்கையாளர்களை عَسَى கூடும் اللّٰهُ அல்லாஹ் اَنْ يَّكُفَّ அவன் தடுக்க بَاْسَ ஆற்றலை الَّذِيْنَ كَفَرُوْا‌ ؕ நிராகரிப்பாளர்களின் وَاللّٰهُ அல்லாஹ் اَشَدُّ மிக கடுமையானவன் بَاْسًا ஆற்றலால் وَّاَشَدُّ இன்னும் கடுமையானவன் تَـنْكِيْلًا‏ தண்டிப்பதால்
4:84. Fபகாதில் Fபீ ஸBபீலில் லாஹி லா துகல்லFபு இல்லா னFப்ஸக வ ஹர்ரிளில் மு'மினீன்; 'அஸல்லாஹு அய் யகுFப்Fப Bப'ஸல்லதீன கFபரூ; வல்லாஹு அஷத்து Bப'ஸ(ன்)வ் வ அஷத்து தன்கீலா
4:84. எனவே, நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவீராக. உம்மைத் தவிர, வேறு யாரையும் நீர் கட்டாயப் படுத்துவதற்கில்லை; எனினும் முஃமின்களைத் தூண்டுவீராக; நிராகரிப்போரின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான் - ஏனெனில் அல்லாஹ் வலிமை மிக்கோன், இன்னும் தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.
4:85
4:85 مَنْ يَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَّكُنْ لَّهٗ نَصِيْبٌ مِّنْهَا‌ ۚ وَمَنْ يَّشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَا‌ ؕ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ مُّقِيْتًا‏
مَنْ எவர் يَّشْفَعْ சிபாரிசு செய்வார் شَفَاعَةً சிபாரிசு حَسَنَةً நல்ல يَّكُنْ இருக்கும் لَّهٗ அவருக்கு نَصِيْبٌ ஒரு பங்கு مِّنْهَا‌ ۚ அதிலிருந்து وَمَنْ இன்னும் எவர் يَّشْفَعْ சிபாரிசு செய்வார் شَفَاعَةً சிபாரிசு سَيِّئَةً தீயது يَّكُنْ இருக்கும் لَّهٗ அவருக்கு كِفْلٌ குற்றம் مِّنْهَا‌ ؕ அதிலிருந்து وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீது مُّقِيْتًا‏ கண்காணிப்பவனாக
4:85. மய் யஷ்Fபஃ ஷFபா'அதன் ஹஸனதய் யகுல் லஹூ னஸீBபும் மின்ஹா வ மய் யஷ்Fபஃ ஷFபா'அதன் ஸய்யி'அத(ன்)ய்-யகுல் லஹூ கிFப்லும் மின்ஹா; வ கானல் லாஹு 'அலா குல்லி ஷய்'இம் முகீதா
4:85. எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
4:86
4:86 وَاِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ حَسِيْبًا‏
وَاِذَا حُيِّيْتُمْ உங்களுக்கு முகமன் கூறப்பட்டால் بِتَحِيَّةٍ ஒரு முகமனைக் கொண்டு فَحَيُّوْا முகமன் கூறுங்கள் بِاَحْسَنَ மிக அழகியதைக்கொண்டு مِنْهَاۤ அதைவிட اَوْ அல்லது رُدُّوْهَا‌ ؕ திரும்பக் கூறுங்கள் / அதையே اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீது حَسِيْبًا‏ பாதுகாவலனாக
4:86. வ இதா ஹுய்யீதும் Bபிதஹய்ய்யதின் Fபஹய்யூ Bபி அஹ்ஸன மின்ஹா அவ் ருத்தூஹா; இன்னல் லாஹ கான 'அலா குல்லி ஷய்'இன் ஹஸீBபா
4:86. உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
4:87
4:87 اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ؕ لَيَجْمَعَنَّكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَا رَيْبَ فِيْهِ‌ؕ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ حَدِيْثًا
اللّٰهُ அல்லாஹ் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَ‌ؕ لَيَجْمَعَنَّكُمْ அவன்/நிச்சயமாக ஒன்று சேர்ப்பான்/உங்களை اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாளில் لَا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهِ‌ؕ அதில் وَمَنْ யார் اَصْدَقُ மிக உண்மையானவன் مِنَ விட اللّٰهِ அல்லாஹ் حَدِيْثًا‏ பேச்சால்
4:87. அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ ல யஜ்ம'அன்னகும் இலா யவ்மில் கியாமதி லா ரய்Bப Fபீஹ்; வ மன் அஸ்தகு மினல்லாஹி ஹதீதா
4:87. அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு யாருமில்லை; நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன், ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை; மேலும் அல்லாஹ்வைப் பார்க்கிலும் சொல்லில் உண்மையுடையோர் யார்?
4:88
4:88 فَمَا لَـكُمْ فِىْ الْمُنٰفِقِيْنَ فِئَـتَيْنِ وَاللّٰهُ اَرْكَسَهُمْ بِمَا كَسَبُوْا‌ؕ اَ تُرِيْدُوْنَ اَنْ تَهْدُوْا مَنْ اَضَلَّ اللّٰهُ‌ ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِيْلًا‏
فَمَا لَـكُمْ உங்களுக்கு என்ன? فِىْ الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்களில் فِئَـتَيْنِ இரு பிரிவினராக وَاللّٰهُ அல்லாஹ் اَرْكَسَهُمْ தாழ்த்தினான்/அவர்களை بِمَا எதன் காரணமாக كَسَبُوْا‌ؕ செய்தார்கள் اَ تُرِيْدُوْنَ நாடுகிறீர்களா? اَنْ تَهْدُوْا நீங்கள் நேர்வழிப்படுத்த مَنْ எவரை اَضَلَّ வழிகெடுத்தான் اللّٰهُ‌ ؕ அல்லாஹ் وَمَنْ இன்னும் எவரை يُّضْلِلِ வழிகெடுப்பான் اللّٰهُ அல்லாஹ் فَلَنْ تَجِدَ அறவே காணமாட்டீர் لَهٗ அவருக்கு سَبِيْلًا‏ ஒரு வழியை
4:88. Fபமா லகும் Fபில் முனாFபிகீன Fபி'அதய்னி வல்லாஹு அர்கஸஹும் Bபிமா கஸBபூ; அ' துரீதூன அன் தஹ்தூ மன் அளல்லல் லாஹு வ ம(ன்)ய் யுள்லி லில்லாஹு Fபலன் தஜித லஹூ ஸBபீலா
4:88. நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்; எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர்.
4:89
4:89 وَدُّوْا لَوْ تَكْفُرُوْنَ كَمَا كَفَرُوْا فَتَكُوْنُوْنَ سَوَآءً‌ فَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ اَوْلِيَآءَ حَتّٰى يُهَاجِرُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ فَاِنْ تَوَلَّوْا فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَيْثُ وَجَدْتُّمُوْهُمْ‌ وَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ وَلِيًّا وَّلَا نَصِيْرًا ۙ‏
وَدُّوْا விரும்புகிறார்கள் لَوْ تَكْفُرُوْنَ நீங்கள் நிராகரிப்பதை كَمَا போன்று كَفَرُوْا நிராகரித்தார்கள் فَتَكُوْنُوْنَ ஆகிவிடுவீர்கள் سَوَآءً‌ فَلَا تَتَّخِذُوْا சமமாக/ ஆகவே எடுத்துக் கொள்ளாதீர்கள் مِنْهُمْ அவர்களில் اَوْلِيَآءَ பொறுப்பாளர்களை حَتّٰى வரை يُهَاجِرُوْا ஹிஜ்ரா செல்வார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் فَاِنْ تَوَلَّوْا அவர்கள் விலகினால் فَخُذُو பிடியுங்கள் هُمْ அவர்களை وَاقْتُلُو இன்னும் கொல்லுங்கள் هُمْ அவர்களை حَيْثُ இடம் وَجَدْتُّمُوْ கண்டீர்கள் هُمْ‌ அவர்களை وَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ இன்னும் எடுத்துக் கொள்ளாதீர்கள்/அவர்களில் وَلِيًّا பொறுப்பாளரை وَّلَا نَصِيْرًا ۙ‏ இன்னும் உதவியாளரை
4:89. வத்தூ லவ் தக்Fபுரூன கமா கFபரூ Fபதகூனூன ஸவா'அன் Fபலா தத்தகிதூ மின்ஹும் அவ்லியா'அ ஹத்தா யுஹாஜிரூ Fபீ ஸBபீலில் லாஹ்; Fப இன் தவல்லவ் Fப குதூஹும் வக்துலூஹும் ஹய்து வஜத் துமூஹும் வலா தத்தகிதூ மின்ஹும் வலிய்ய(ன்)வ் வலா னஸீரா
4:89. (முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.
4:90
4:90 اِلَّا الَّذِيْنَ يَصِلُوْنَ اِلٰى قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ اَوْ جَآءُوْكُمْ حَصِرَتْ صُدُوْرُهُمْ اَنْ يُّقَاتِلُوْكُمْ اَوْ يُقَاتِلُوْا قَوْمَهُمْ‌ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ فَلَقٰتَلُوْكُمْ‌‌ ۚ فَاِنِ اعْتَزَلُوْكُمْ فَلَمْ يُقَاتِلُوْكُمْ وَاَلْقَوْا اِلَيْكُمُ السَّلَمَ ۙ فَمَا جَعَلَ اللّٰهُ لَـكُمْ عَلَيْهِمْ سَبِيْلًا‏
اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் يَصِلُوْنَ சேருகிறார்கள் اِلٰى قَوْمٍۢ சமுதாயத்திடம் بَيْنَكُمْ உங்களுக்கிடையில் وَبَيْنَهُمْ இன்னும் அவர்களுக்கு இடையில் مِّيْثَاقٌ உடன்படிக்கை اَوْ அல்லது جَآءُوْكُمْ உங்களிடம் வந்தனர் حَصِرَتْ நெருக்கடிக்குள்ளாகின صُدُوْر நெஞ்சங்கள் هُمْ அவர்களுடைய اَنْ يُّقَاتِلُو அவர்கள் போரிடுவது كُمْ உங்களிடம் اَوْ அல்லது يُقَاتِلُوْا அவர்கள் போரிடுவது قَوْمَهُمْ‌ ؕ தங்கள் சமுதாயத்திடம் وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ சாட்டியிருப்பான்/அவர்களை/உங்கள் மீது فَلَقٰتَلُو போரிட்டிருப்பார்கள் كُمْ‌ ۚ உங்களிடம் فَاِنِ اعْتَزَلُو அவர்கள் விலகினால் كُمْ உங்களை فَلَمْ يُقَاتِلُو அவர்கள் போரிடவில்லை كُمْ உங்களிடம் وَاَلْقَوْا இன்னும் சமர்ப்பித்தார்கள் اِلَيْكُمُ உங்கள் முன் السَّلَمَ ۙ சமாதானத்தை فَمَا جَعَلَ ஆக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு عَلَيْهِمْ அவர்கள் மீது سَبِيْلًا‏ ஒரு வழியை
4:90. இல்லல் லதீன யஸிலூன இலா கவ்மிம் Bபய்னகும் வ Bபய்னஹும் மீதாகுன் அவ் ஜா'ஊகும் ஹஸிரத் ஸுதூருஹும் அய் யுகாதிலூகும் அவ் யுகாதிலூ கவ்மஹும், வ லவ் ஷா'அல் லாஹு லஸல்லதஹும் 'அலய்கும் Fபலகாதலூகும்; Fப இனிஃ தZஜலூகும் Fபலம் யுகாதிலூகும் வ அல்கவ் இலய்குமுஸ் ஸலம Fபமா ஜ'அலல் லாஹு லகும் 'அலய்ஹிம் ஸBபீலா
4:90. ஆனால் எவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்); ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்; அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்; எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள்; ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை.
4:91
4:91 سَتَجِدُوْنَ اٰخَرِيْنَ يُرِيْدُوْنَ اَنْ يَّاْمَنُوْكُمْ وَيَاْمَنُوْا قَوْمَهُمْ ؕ كُلَّمَا رُدُّوْۤا اِلَى الْفِتْنَةِ اُرْكِسُوْا فِيْهَا‌‌ ۚ فَاِنْ لَّمْ يَعْتَزِلُوْكُمْ وَيُلْقُوْۤا اِلَيْكُمُ السَّلَمَ وَيَكُفُّوْۤا اَيْدِيَهُمْ فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَيْثُ ثَقِفْتُمُوْهُمْ‌ ؕ وَاُولٰٓٮِٕكُمْ جَعَلْنَا لَـكُمْ عَلَيْهِمْ سُلْطٰنًا مُّبِيْنًا
سَتَجِدُوْنَ காண்பீர்கள் اٰخَرِيْنَ மற்றவர்களை يُرِيْدُوْنَ நாடுகிறார்கள் اَنْ يَّاْمَنُوْ அவர்கள் பாதுகாப்புப்பெறவும் كُمْ உங்களிடம் وَيَاْمَنُوْا அல்லது பாதுகாப்புப்பெறவும் قَوْمَهُمْ ؕ தங்கள் சமுதாயத்திடம் كُلَّمَا எல்லாம் رُدُّوْۤا திருப்பப்பட்டார்கள் اِلَى الْفِتْنَةِ குழப்பம் விளைவிப்பதற்கு (இணைவைத்தல்) اُرْكِسُوْا குப்புற விழுந்து விடுகிறார்கள் فِيْهَا‌‌ ۚ فَاِنْ لَّمْ يَعْتَزِلُوْ அதில்/அவர்கள் விலகவில்லையென்றால் كُمْ உங்களை وَيُلْقُوْۤا இன்னும் சமர்ப்பிக்காமல் اِلَيْكُمُ உங்கள் முன் السَّلَمَ சமாதானத்தை وَيَكُفُّوْۤا இன்னும் அவர்கள் தடுக்காமல் اَيْدِيَهُمْ தங்கள் கைகளை فَخُذُوْ பிடியுங்கள் هُمْ இவர்களை وَاقْتُلُوْ இன்னும் கொல்லுங்கள் هُمْ அவர்களை حَيْثُ எங்கெல்லாம் ثَقِفْتُمُوْ பெறுகிறீர்கள் هُمْ‌ ؕ وَاُولٰٓٮِٕكُمْ அவர்கள்/இவர்கள் جَعَلْنَا ஆக்கி விட்டோம் لَـكُمْ உங்களுக்கு عَلَيْهِمْ அவர்களுக்கு எதிராக سُلْطٰنًا ஆதாரத்தை مُّبِيْنًا‏ தெளிவானது
4:91. ஸதஜிதூன ஆகரீன யுரீதூன அய் ய'மனூகும் வ ய'மனூ கவ்மஹும் குல்லமா ருத்தூ இலல் Fபித்னதி உர்கிஸூ Fபீஹா; Fப இல் லம் யஃதZஜிலூகும் வ யுல்கூ இலய் குமுஸ் ஸலம வ யகுFப்Fபூ அய்தியஹும் Fபகுதூஹும் வக்துலூஹும் ஹய்து தகிFப் துமூஹும்; வ உலா'இகும் ஜ'அல்னா லகும் 'அலய்ஹிம் ஸுல்தானம் முBபீனா
4:91. வேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள் - அவர்கள் உங்களிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும், (உங்கள் பகைவர்களான) தம் இனத்தாரிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும் விரும்புவார்கள்; எனினும் விஷமம் செய்வதற்கு அவர்கள் அழைக்கப்பட்டால் அதிலும் தலைகீழாக விழுந்து விடுவார்கள்; இத்தகையோர் உங்கள் (பகையிலிருந்து) விலகாமலும், உங்களுடன் சமாதானத்தை வேண்டாமலும், (உங்களுக்குத் தீங்கிழைப் பதினின்று) தங்கள் கைகளை தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களைக் கண்டவிடமெல்லாம் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; இன்னும் (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - இத்தகையோருடன் (போர் செய்ய) நாம் தெளிவான அனுமதியை உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
4:92
4:92 وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ يَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـــٴًــا‌ ۚ وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـــٴًــا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ يَّصَّدَّقُوْا‌ ؕ فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّـكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌ ؕ وَاِنْ كَانَ مِنْ قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ فَدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖ وَ تَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌ ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللّٰهِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا‏
وَمَا كَانَ ஆகுமானதல்ல لِمُؤْمِنٍ ஒரு நம்பிக்கையாளருக்கு اَنْ يَّقْتُلَ அவர் கொல்வது مُؤْمِنًا ஒரு நம்பிக்கையாளரை اِلَّا தவிர خَطَـــٴًــا‌ ۚ தவறுதலாக وَمَنْ எவராவது قَتَلَ கொன்றால் مُؤْمِنًا ஒரு நம்பிக்கையாளரை خَطَـــٴًــا தவறுதலாகவே فَتَحْرِيْرُ உரிமையிடவேண்டும் رَقَبَةٍ ஓர் அடிமையை مُّؤْمِنَةٍ நம்பிக்கையாளரான وَّدِيَةٌ இன்னும் நஷ்டஈடு مُّسَلَّمَةٌ ஒப்படைக்கப்பட்டது اِلٰٓى இடம் اَهْلِهٖۤ அவருடைய குடும்பத்தார் اِلَّاۤ தவிர اَنْ يَّصَّدَّقُوْا‌ ؕ அவர்கள் தானமாக்குவது فَاِنْ كَانَ இருந்தால் مِنْ قَوْمٍ ஒரு சமுதாயம் சேர்ந்தவராக عَدُوٍّ எதிரி لَّـكُمْ உங்கள் وَهُوَ அவர் مُؤْمِنٌ நம்பிக்கையாளர் فَتَحْرِيْرُ உரிமையிடவேண்டும் رَقَبَةٍ ஓர் அடிமை مُّؤْمِنَةٍ‌ ؕ நம்பிக்கையாளரான وَاِنْ كَانَ இருந்தால் مِنْ قَوْمٍۢ ஒரு சமுதாயத்தை சேர்ந்தவராக بَيْنَكُمْ உங்களுக்கிடையில் وَبَيْنَهُمْ இன்னும் அவர்களுக்கு இடையில் مِّيْثَاقٌ உடன்படிக்கை فَدِيَةٌ நஷ்டஈடு مُّسَلَّمَةٌ ஒப்படைக்கப்பட்டது اِلٰٓى اَهْلِهٖ அவருடைய குடும்பத்தாரிடம் وَ تَحْرِيْرُ இன்னும் உரிமையிடுவது வேண்டும் رَقَبَةٍ ஓர் அடிமை مُّؤْمِنَةٍ‌ ۚ நம்பிக்கையாளரான فَمَنْ எவர் لَّمْ يَجِدْ பெறவில்லை فَصِيَامُ நோன்பிருத்தல் شَهْرَيْنِ இரண்டு மாதங்கள் مُتَتَابِعَيْنِ தொடர்ந்து تَوْبَةً மன்னிப்புக் கோரி مِّنَ اللّٰهِ‌ ؕ அல்லாஹ்விடம் وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا‏ ஞானவானாக
4:92. வமா கான லிமு'மினின் அய் யக்துல மு'மினன் இல்லா கத'ஆ; வமன் கதல மு'மினன் கத'அன் Fப தஹ்ரீரு ரகBபதிம் மு'மினதி(ன்)வ் வ தியதும் முஸல்லமதுன் இலா அஹ்லிஹீ இல்லா அய் யஸ்ஸத்தகூ; Fப இன் கான மின் கவ்மின் 'அதுவ்வில் லகும் வ ஹுவ மு'மினுன் Fப தஹ்ரீரு ரகBபதிம் மு'மினஹ்; வ இன் கான மின் கவ்மிம் Bபய்னகும் வ Bபய்னஹும் மீதாகுன் Fபதியதும் முஸல்லமதுன் இலா அஹ்லிஹீ வ தஹ்ரீரு ரகBபதிம் மு'மினஹ்; Fபமல் லம் யஜித் Fப ஸியாமு ஷஹ்ரய்னி முததாBபி'அய்னி தவ்Bபதன் மினல் லாஹ்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
4:92. தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
4:93
4:93 وَمَنْ يَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهٗ جَهَـنَّمُ خَالِدًا فِيْهَا وَغَضِبَ اللّٰهُ عَلَيْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِيْمًا‏
وَمَنْ எவர் يَّقْتُلْ கொல்வார் مُؤْمِنًا ஒரு நம்பிக்கையாளரை مُّتَعَمِّدًا நாடியவராக فَجَزَآؤُهٗ அவருடைய கூலி جَهَـنَّمُ நரகம் خَالِدًا நிரந்தரமானவராக فِيْهَا அதில் وَغَضِبَ இன்னும் கோபிப்பான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِ அவர் மீது وَلَعَنَهٗ இன்னும் சபிப்பான்/அவரை وَاَعَدَّ இன்னும் தயார்படுத்துவான் لَهٗ அவருக்கு عَذَابًا வேதனையை عَظِيْمًا‏ பெரிய
4:93. வ மய் யக்துல் மு'மினம் முத'அம்மிதன் FபஜZஜா'உஹூ ஜஹன்னமு காலிதன் Fபீஹா வ களிBபல் லாஹு' அலய்ஹி வ ல'அனஹூ வ அ'அத்த லஹூ 'அதாBபன் 'அளீமா
4:93. எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.
4:94
4:94 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا ضَرَبْتُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ فَتَبَـيَّـنُوْا وَلَا تَقُوْلُوْا لِمَنْ اَ لْقٰٓى اِلَيْكُمُ السَّلٰمَ لَسْتَ مُؤْمِنًا‌ ۚ تَبْـتَـغُوْنَ عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا فَعِنْدَ اللّٰهِ مَغَانِمُ كَثِيْرَةٌ‌ ؕ كَذٰلِكَ كُنْتُمْ مِّنْ قَبْلُ فَمَنَّ اللّٰهُ عَلَيْكُمْ فَتَبَـيَّـنُوْا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِذَا ضَرَبْتُمْ நீங்கள் பயணித்தால் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் فَتَبَـيَّـنُوْا தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் وَلَا تَقُوْلُوْا இன்னும் கூறாதீர்கள் لِمَنْ اَ لْقٰٓى எவருக்கு/கூறினார் اِلَيْكُمُ உங்கள் முன் السَّلٰمَ ஸலாம் لَسْتَ நீர் இல்லை مُؤْمِنًا‌ ۚ நம்பிக்கையாளராக تَبْـتَـغُوْنَ தேடுகிறீர்கள் عَرَضَ பொருளை الْحَيٰوةِ வாழ்க்கையின் الدُّنْيَا இவ்வுலகம் فَعِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் مَغَانِمُ செல்வங்கள் كَثِيْرَةٌ‌ ؕ ஏராளமான كَذٰلِكَ இவ்வாறே كُنْتُمْ இருந்தீர்கள் مِّنْ قَبْلُ (இதற்கு) முன்னர் فَمَنَّ அருள் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْكُمْ உங்கள் மீது فَتَبَـيَّـنُوْا‌ ؕ ஆகவே தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் بِمَا எதை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் خَبِيْرًا‏ ஆழ்ந்தறிந்தவனாக
4:94. யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா ளரBப்தும் Fபீ ஸBபீலில் லாஹி FபதBபய்யனூ வலா தகூலூ லிமன் அல்கா இலய்குமுஸ் ஸலாம லஸ்த மு'மினன் தBப்தகூன 'அரளல் ஹயாதித் துன்யா Fப'இன்தல் லாஹி மகானிமு கதீரஹ்; கதாலிக குன்தும் மின் கBப்லு Fபமன்ன்னல் லாஹு 'அலய்கும் FபதBபய்யனூ; இன்னல்லாஹ கான Bபிமா தஃமலூன கBபீரா
4:94. முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு “ஸலாம்” சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு “நீ முஃமினல்ல” என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்; அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன; இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
4:95
4:95 لَا يَسْتَوِى الْقَاعِدُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ غَيْرُ اُولِى الضَّرَرِ وَالْمُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ‌ ؕ فَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِيْنَ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ عَلَى الْقٰعِدِيْنَ دَرَجَةً‌  ؕ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰى‌ؕ وَفَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِيْنَ عَلَى الْقٰعِدِيْنَ اَجْرًا عَظِيْمًا ۙ‏
لَا يَسْتَوِى சமமாக மாட்டார்(கள்) الْقَاعِدُوْنَ தங்கியவர்கள் مِنَ الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களில் غَيْرُ அல்லாதவர் اُولِى الضَّرَرِ குறையுடையோர் وَالْمُجَاهِدُوْنَ இன்னும் போரிடுபவர்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வுடைய بِاَمْوَالِهِمْ தங்கள் செல்வங்களைக் கொண்டு وَاَنْفُسِهِمْ‌ ؕ இன்னும் தங்கள் உயிர்களைக் கொண்டு فَضَّلَ இன்னும் மேன்மையாக்கினான் اللّٰهُ அல்லாஹ் الْمُجٰهِدِيْنَ போரிடுபவர்களை بِاَمْوَالِهِمْ தங்கள் செல்வங்களைக் கொண்டு وَاَنْفُسِهِمْ இன்னும் தங்கள் உயிர்களைக் கொண்டு عَلَى விட الْقٰعِدِيْنَ தங்கியவர்கள் دَرَجَةً‌  ؕ பதவியால் وَكُلًّا எல்லோருக்கும் وَّعَدَ வாக்களித்துள்ளான் اللّٰهُ அல்லாஹ் الْحُسْنٰى‌ؕ சொர்க்கத்தை وَفَضَّلَ இன்னும் மேன்மையாக்கினான் اللّٰهُ அல்லாஹ் الْمُجٰهِدِيْنَ போராளிகளை عَلَى الْقٰعِدِيْنَ தங்கியவர்களை விட اَجْرًا عَظِيْمًا ۙ‏ கூலி/மகத்தானது
4:95. லா யஸ்தவில் கா'இதூன மினல் மு'மினீன கய்ரு உலிள்ளரரி வல்முஜாஹிதூன Fபீ ஸBபீலில் லாஹி Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம்; Fபள்ளலல் லாஹுல் முஜாஹிதீன Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம் 'அலல்கா'இதீன தரஜஹ்; வ குல்ல(ன்)வ் வ'அதல் லாஹுல் ஹுஸ்னா; வ Fபள்ளலல் லாஹுல் முஜாஹிதீன 'அலல் கா'இதீன அஜ்ரன் 'அளீமா
4:95. ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும்(அர்ப்பணித்தவர்களாக)அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்; எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்; ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.
4:96
4:96 دَرَجٰتٍ مِّنْهُ وَمَغْفِرَةً وَّرَحْمَةً‌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
دَرَجٰتٍ (பல) பதவிகளை مِّنْهُ தன்னிடமிருந்து وَمَغْفِرَةً இன்னும் மன்னிப்பை وَّرَحْمَةً‌ ؕ இன்னும் கருணையை وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
4:96. தரஜாதிம் மின்ஹு வ மக்Fபிரத(ன்)வ் வ ரஹ்மஹ்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
4:96. (இதுவன்றி) தன்னிடமிருந்து (மேலான) பதவிகளையும், மன்னிப்பையும், அருளையும் (அவர்களுக்கு) அருள்கின்றான்; ஏனென்றால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
4:97
4:97 اِنَّ الَّذِيْنَ تَوَفّٰٮهُمُ الْمَلٰٓٮِٕكَةُ ظَالِمِىْۤ اَنْفُسِهِمْ قَالُوْا فِيْمَ كُنْتُمْ‌ؕ قَالُوْا كُنَّا مُسْتَضْعَفِيْنَ فِىْ الْاَرْضِ‌ؕ قَالُوْۤا اَلَمْ تَكُنْ اَرْضُ اللّٰهِ وَاسِعَةً فَتُهَاجِرُوْا فِيْهَا‌ؕ فَاُولٰٓٮِٕكَ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ؕ وَسَآءَتْ مَصِيْرًا ۙ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் تَوَفّٰٮهُمُ உயிர் வாங்கினார்(கள்)/அவர்களை الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் ظَالِمِىْۤ தீங்கிழைத்தவர்களாக اَنْفُسِهِمْ தங்களுக்கு قَالُوْا கூறினர் فِيْمَ كُنْتُمْ‌ؕ எவ்வாறுஇருந்தீர்கள்? قَالُوْا கூறினார்கள் كُنَّا இருந்தோம் مُسْتَضْعَفِيْنَ பலவீனர்களாக فِىْ الْاَرْضِ‌ؕ இந்த பூமியில் قَالُوْۤا கூறினார்கள் اَلَمْ تَكُنْ இருக்கவில்லையா? اَرْضُ பூமி اللّٰهِ அல்லாஹ்வின் وَاسِعَةً விசாலமானதாக فَتُهَاجِرُوْا ஹிஜ்ரா சென்றிருக்க வேண்டாமா? فِيْهَا‌ؕ அதில் فَاُولٰٓٮِٕكَ இவர்கள் مَاْوٰٮهُمْ இவர்களின் ஒதுங்குமிடம் جَهَـنَّمُ‌ؕ நரகம் وَسَآءَتْ கெட்டுவிட்டது مَصِيْرًا ۙ மீளுமிடத்தால்
4:97. இன்னல் லதீன தவFப்Fபா ஹுமுல் மலா'இகது ளாலிமீ அன்Fபுஸிஹிம் காலூ Fபீம குன்தும் காலூ குன்னா முஸ்தள்'அFபீன Fபில்-அர்ள்; காலூ அலம் தகுன் அர்ளுல் லாஹி வாஸி'அதன் Fபதுஹாஜிரூ Fபீஹா; Fப உலா'இக ம'வாஹும் ஜஹன்னமு வ ஸா'அத் மஸீரா
4:97. (அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) “நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?” என (மலக்குகள்) கேட்பார்கள்; எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்.
4:98
4:98 اِلَّا الْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ لَا يَسْتَطِيْعُوْنَ حِيْلَةً وَّلَا يَهْتَدُوْنَ سَبِيْلًا ۙ‏
اِلَّا தவிர الْمُسْتَضْعَفِيْنَ பலவீனர்கள் مِنَ இருந்து الرِّجَالِ ஆண்கள் وَالنِّسَآءِ இன்னும் பெண்கள் وَالْوِلْدَانِ இன்னும் சிறுவர்கள் لَا يَسْتَطِيْعُوْنَ இயலமாட்டார்கள் حِيْلَةً ஓர் ஆற்றலை وَّلَا يَهْتَدُوْنَ இன்னும் வழி காணமாட்டார்கள் سَبِيْلًا ۙ‏ ஒரு வழியையும்
4:98. இல்லல் முஸ்தள் 'அFபீன மினர் ரிஜாலி வன்னிஸா'இ வல்வில்தானி லா யஸ்ததீ'ஊன ஹீலத(ன்)வ் வலா யஹ்ததூன ஸBபீலா
4:98. (ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்.
4:99
4:99 فَاُولٰٓٮِٕكَ عَسَى اللّٰهُ اَنْ يَّعْفُوَ عَنْهُمْ‌ؕ وَكَانَ اللّٰهُ عَفُوًّا غَفُوْرًا‏
فَاُولٰٓٮِٕكَ இவர்கள் عَسَى கூடும் اللّٰهُ அல்லாஹ் اَنْ يَّعْفُوَ அவன் மன்னிக்க عَنْهُمْ‌ؕ இவர்களை وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَفُوًّا மன்னிப்பாளானாக غَفُوْرًا‏ பாவங்களை மறைப்பவனாக
4:99. Fப உலா'இக 'அஸல் லாஹு அய் யஃFபுவ 'அன்ஹும்; வ கானல் லாஹு 'அFபுவ்வன் கFபூரா
4:99. அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்; ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.
4:100
4:100 وَمَنْ يُّهَاجِرْ فِىْ سَبِيْلِ اللّٰهِ يَجِدْ فِى الْاَرْضِ مُرٰغَمًا كَثِيْرًا وَّسَعَةً‌ ؕ وَمَنْ يَّخْرُجْ مِنْۢ بَيْتِهٖ مُهَاجِرًا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ اَجْرُهٗ عَلَى اللّٰهِ‌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
وَمَنْ எவர் يُّهَاجِرْ ஹிஜ்ரா செல்கிறார் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வுடைய يَجِدْ பெறுவார் فِى الْاَرْضِ பூமியில் مُرٰغَمًا அடைக்கலங்களை كَثِيْرًا பல وَّسَعَةً‌ ؕ இன்னும் வசதியை وَمَنْ எவர் يَّخْرُجْ வெளியேறுவார் مِنْۢ இருந்து بَيْتِهٖ தன் இல்லம் مُهَاجِرًا ஹிஜ்ரா செல்பவராக اِلَى பக்கம் اللّٰهِ அல்லாஹ் وَرَسُوْلِهٖ இன்னும் அவனின் தூதர் ثُمَّ பிறகு يُدْرِكْهُ அடையும்/அவரை الْمَوْتُ மரணம் فَقَدْ திட்டமாக وَقَعَ கடமையாகிவிடுகிறது اَجْرُهٗ அவனுடைய கூலி عَلَى اللّٰهِ‌ ؕ அல்லாஹ் மீது وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرًا மகாமன்னிப்பாளனாக رَّحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
4:100. வ மய் யுஹாஜிர் Fபீ ஸBபீலில் லாஹி யஜித் Fபில் அர்ளி முராகமன் கதீர(ன்)வ் வ ஸ'அத்; வ மய் யக்ருஜ் மிம் Bபய்திஹீ முஹாஜிரன் இலல் லாஹி வ ரஸூலிஹீ தும்ம யுத்ரிக்-ஹுல் மவ்து Fபகத் வக'அ அஜ்ருஹூ 'அலல் லாஹ்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
4:100. இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்; இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்.
4:101
4:101 وَاِذَا ضَرَبْتُمْ فِى الْاَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَقْصُرُوْا مِنَ الصَّلٰوةِ ‌ۖ اِنْ خِفْتُمْ اَنْ يَّفْتِنَكُمُ الَّذِيْنَ كَفَرُوْا‌ ؕ اِنَّ الْـكٰفِرِيْنَ كَانُوْا لَـكُمْ عَدُوًّا مُّبِيْنًا‏
وَاِذَا ضَرَبْتُمْ நீங்கள் பயணித்தால் فِى الْاَرْضِ பூமியில் فَلَيْسَ இல்லை عَلَيْكُمْ உங்கள் மீது جُنَاحٌ குற்றம் اَنْ تَقْصُرُوْا நீங்கள் சுருக்குவது مِنَ الصَّلٰوةِ தொழுகையை ۖ اِنْ خِفْتُمْ நீங்கள் பயந்தால் اَنْ உங்களை يَّفْتِنَكُمُ துன்புறுத்துவதை الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا‌ ؕ நிராகரித்தார்கள் اِنَّ الْـكٰفِرِيْنَ நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் كَانُوْا இருக்கின்றனர் لَـكُمْ உங்களுக்கு عَدُوًّا எதிரிகளாக مُّبِيْنًا‏ பகிரங்கமான
4:101. வ இதா ளரBப்தும் Fபில் அர்ளி Fபலய்ஸ 'அலய்கும் ஜுனாஹுன் அன் தக்ஸுரூ மினஸ் ஸலாதி இன் கிFப்தும் அய் யFப்தினகுமுல் லதீன கFபரூ; இன்னல் காFபிரீன கானூ லகும் அதுவ்வம் முBபீனா
4:101. நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது; நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர்.
4:102
4:102 وَاِذَا كُنْتَ فِيْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَآٮِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْيَاْخُذُوْۤا اَسْلِحَتَهُمْ فَاِذَا سَجَدُوْا فَلْيَكُوْنُوْا مِنْ وَّرَآٮِٕكُمْ وَلْتَاْتِ طَآٮِٕفَةٌ اُخْرٰى لَمْ يُصَلُّوْا فَلْيُصَلُّوْا مَعَكَ وَلْيَاْخُذُوْا حِذْرَهُمْ وَاَسْلِحَتَهُمْ‌ ۚ وَدَّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَمْتِعَتِكُمْ فَيَمِيْلُوْنَ عَلَيْكُمْ مَّيْلَةً وَّاحِدَةً‌ ؕ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِنْ كَانَ بِكُمْ اَ ذًى مِّنْ مَّطَرٍ اَوْ كُنْـتُمْ مَّرْضٰۤى اَنْ تَضَعُوْۤا اَسْلِحَتَكُمْ‌ ۚ وَ خُذُوْا حِذْرَكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا‏
وَاِذَا كُنْتَ நீர் இருந்தால் فِيْهِمْ அவர்களில் فَاَقَمْتَ இன்னும் நிலைநிறுத்தினால் لَهُمُ அவர்களுக்கு الصَّلٰوةَ தொழுகையை فَلْتَقُمْ நிற்கவும் طَآٮِٕفَةٌ ஒரு பிரிவு مِّنْهُمْ அவர்களில் مَّعَكَ உம்முடன் وَلْيَاْخُذُوْۤا அவர்கள் எடுக்கவும் اَسْلِحَتَهُمْ ஆயுதங்களை/தங்கள் فَاِذَا سَجَدُوْا அவர்கள் சஜ்தா செய்து விட்டால் فَلْيَكُوْنُوْا அவர்கள் இருக்கவும் مِنْ وَّرَآٮِٕكُمْ உங்களுக்குப் பின்னர் وَلْتَاْتِ இன்னும் வரவும் طَآٮِٕفَةٌ ஒரு பிரிவு اُخْرٰى மற்ற لَمْ يُصَلُّوْا அவர்கள் தொழவில்லை فَلْيُصَلُّوْا அவர்கள் தொழவும் مَعَكَ உம்முடன் وَلْيَاْخُذُوْا அவர்கள் எடுக்கவும் حِذْرَهُمْ தங்கள் தற்காப்பை وَاَسْلِحَتَهُمْ‌ ۚ இன்னும் தங்கள் ஆயுதங்களை وَدَّ விரும்பினார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் لَوْ تَغْفُلُوْنَ நீங்கள் கவனமற்று விடுவதை عَنْ இருந்து اَسْلِحَتِكُمْ உங்கள் ஆயுதங்கள் وَاَمْتِعَتِكُمْ இன்னும் உங்கள் பொருள்கள் فَيَمِيْلُوْنَ அவர்கள் பாய்ந்து விடுவார்கள் عَلَيْكُمْ உங்கள் மீது مَّيْلَةً பாய்ச்சல் وَّاحِدَةً‌ ؕ ஒரே பாய்ச்சல் وَلَا جُنَاحَ குற்றமில்லை عَلَيْكُمْ உங்கள் மீது اِنْ كَانَ இருந்தால் بِكُمْ உங்களுக்கு اَ ذًى சிரமம் مِّنْ காரணமாக مَّطَرٍ மழை اَوْ அல்லது كُنْـتُمْ இருந்தீர்கள் مَّرْضٰۤى நோயாளிகளாக اَنْ تَضَعُوْۤا நீங்கள் வைப்பது اَسْلِحَتَكُمْ‌ ۚ உங்கள் ஆயுதங்களை وَ خُذُوْا இன்னும் எடுங்கள் حِذْرَكُمْ‌ ؕ உங்கள் தற்காப்பை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் اَعَدَّ ஏற்படுத்தினான் لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு عَذَابًا வேதனையை مُّهِيْنًا‏ இழிவான
4:102. வ இதா குன்த Fபீஹிம் Fப அகம்த லஹுமுஸ் ஸலாத Fபல்தகும் தா'இFபதும் மின்ஹும் ம'அக வல் ய'குதூ அஸ்லிஹதஹும் Fப இதா ஸஜதூ Fபல் யகூனூ மி(ன்)வ் வரா'இகும் வல் த'தி தா'இFபதுன் உக்ரா லம் யுஸல்லூ Fபல்யுஸல்லூ ம'அக வல் ய'குதூ ஹித்ரஹும் வ அஸ்லிஹதஹும்; வத்தல் லதீன கFபரூ லவ் தக்Fபுலூன 'அனஸ்லிஹதிகும் வ அம்தி'அதிகும் Fப யமீலூன 'அலய்கும் மய்லத(ன்)வ் வாஹிதஹ்; வலா ஜுனாஹ 'அலய்கும் இன் கான Bபிகும் அதம் மிம்மதரின் அவ் குன்தும் மர்ளா அன் தள'ஊ அஸ்லிஹதகும் வ குதூ ஹித்ரகும்; இன்னல் லாஹ அ'அத்த லில்காFபிரீன 'அதாBபம் முஹீனா
4:102. (நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது; எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.
4:103
4:103 فَاِذَا قَضَيْتُمُ الصَّلٰوةَ فَاذْكُرُوا اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِكُمْ ۚؕ فَاِذَا اطْمَاْنَنْتُمْ فَاَقِيْمُوا الصَّلٰوةَ‌ ۚ اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا‏
فَاِذَا قَضَيْتُمُ நீங்கள் முடித்தால் الصَّلٰوةَ தொழுகையை فَاذْكُرُوا நினைவு கூருங்கள் اللّٰهَ அல்லாஹ்வை قِيَامًا நின்றவர்களாக وَّقُعُوْدًا இன்னும் உட்கார்ந்தவர்களாக وَّعَلٰى இன்னும் மீது جُنُوْبِكُمْ ۚؕ உங்கள் விலாக்கள் فَاِذَا اطْمَاْنَنْتُمْ நீங்கள் நிம்மதியடைந்தால் فَاَقِيْمُوا நிலை நிறுத்துங்கள் الصَّلٰوةَ‌ ۚ தொழுகையை اِنَّ الصَّلٰوةَ நிச்சயமாக தொழுகை كَانَتْ இருக்கிறது عَلَى மீது الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்கள் كِتٰبًا கடமையாக مَّوْقُوْتًا‏ நேரம் குறிக்கப்பட்டது
4:103. Fப இதா களய்துமுஸ் ஸலாத Fபத்குருல் லாஹ கியாம(ன்)வ் வ கு'ஊத(ன்)வ் வ 'அலா ஜுனூBபிகும்; Fப இதத்ம'னன்தும் Fப அகீமுஸ் ஸலாஹ்; இன்னஸ் ஸலாத கானத் 'அலல் மு'மினீன கிதாBபம் மவ்கூதா
4:103. நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.
4:104
4:104 وَلَا تَهِنُوْا فِى ابْتِغَآءِ الْقَوْمِ‌ ؕ اِنْ تَكُوْنُوْا تَاْلَمُوْنَ فَاِنَّهُمْ يَاْلَمُوْنَ كَمَا تَاْلَمُوْنَ‌ ۚ وَتَرْجُوْنَ مِنَ اللّٰهِ مَا لَا يَرْجُوْنَ‌ ؕ وَ كَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا
وَلَا تَهِنُوْا சோர்வடையாதீர்கள் فِى ابْتِغَآءِ தேடுவதில் الْقَوْمِ‌ ؕ கூட்டத்தை اِنْ تَكُوْنُوْا நீங்கள் இருந்தால் تَاْلَمُوْنَ வேதனைப் படுபவர்களாக فَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் يَاْلَمُوْنَ வேதனைப்படுகிறார்கள் كَمَا போன்று تَاْلَمُوْنَ‌ ۚ வேதனைப் படுபவர்களாக وَتَرْجُوْنَ இன்னும் ஆதரவு வைக்கிறீர்கள் مِنَ اللّٰهِ مَا அல்லாஹ்விடம்/எது لَا يَرْجُوْنَ‌ ؕ அவர்கள் ஆதரவு வைக்க மாட்டார்கள் وَ كَانَ اللّٰهُ இருக்கிறான்/அல்லாஹ் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا‏ ஞானவானாக
4:104. வ லா தஹினூ FபிBப்திகா'இல் கவ்மி இன் தகூனூ தஃலமூன Fப இன்னஹும் யஃலமூன கமா தஃலமூன வ தர்ஜூன மினல் லாஹி மா லா யர்ஜூன்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
4:104. மேலும், (பகைக்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்; நீங்கள் (போரில்) துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத (நற்கூலியும் வெற்றியும்) நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
4:105
4:105 اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَـقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَاۤ اَرٰٮكَ اللّٰهُ‌ ؕ وَلَا تَكُنْ لِّـلْخَآٮِٕنِيْنَ خَصِيْمًا ۙ‏
اِنَّاۤ நிச்சயமாக நாமே اَنْزَلْنَاۤ இறக்கினோம் اِلَيْكَ உம்மீது الْكِتٰبَ இவ்வேதத்தை بِالْحَـقِّ உண்மையுடன் لِتَحْكُمَ நீர் தீர்ப்பளிப்பதற்காக بَيْنَ மத்தியில் النَّاسِ மக்கள் بِمَاۤ எதைக்கொண்டு اَرٰٮكَ உமக்கு அறிவித்தான் اللّٰهُ‌ ؕ அல்லாஹ் وَلَا تَكُنْ ஆகிவிடாதீர் لِّـلْخَآٮِٕنِيْنَ மோசடிக்காரர்களுக்கு خَصِيْمًا ۙ‏ தர்க்கிப்பவராக
4:105. இன்னா அன்Zஜல்னா இலய்கல் கிதாBப Bபில்ஹக்கி லிதஹ்கும Bபய்னன் னாஸி Bபிமா அராகல் லாஹ்; வலா தகுல் லில்கா'இனீன கஸீமா
4:105. (நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்; எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.
4:106
4:106 وَّاسْتَغْفِرِ اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا‌ ۚ‏
وَّاسْتَغْفِرِ இன்னும் மன்னிப்புக் கோருவீராக اللّٰهَ‌ ؕ அல்லாஹ்விடம் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا‌ பெரும் கருணையாளனாக
4:106. வஸ்தக்Fபிரில் லாஹ இன்னல் லாஹ கான கFபூரர் ரஹீமா
4:106. (தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
4:107
4:107 وَلَا تُجَادِلْ عَنِ الَّذِيْنَ يَخْتَانُوْنَ اَنْفُسَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا اَثِيْمًا ۙ‌ ۚ‏
وَلَا تُجَادِلْ இன்னும் வாதிடாதீர் عَنِ சார்பாக الَّذِيْنَ எவர்கள் يَخْتَانُوْنَ மோசடி செய்கிறார்கள் اَنْفُسَهُمْ‌ ؕ தங்களுக்கே اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் مَنْ எவன் كَانَ இருக்கிறான் خَوَّانًا சதிகாரனாக اَثِيْمًا ۙ‌ பாவியாக
4:107. வ லா துஜாதில் 'அனில் லதீன யக்தானூன அன்Fபுஸஹும்; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபுமன் கான கவ்வானன் அதீமா
4:107. (நபியே!) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
4:108
4:108 يَّسْتَخْفُوْنَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُوْنَ مِنَ اللّٰهِ وَهُوَ مَعَهُمْ اِذْ يُبَيِّتُوْنَ مَا لَا يَرْضٰى مِنَ الْقَوْلِ‌ؕ وَكَانَ اللّٰهُ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطًا‏
يَّسْتَخْفُوْنَ مِنَ النَّاسِ மறைக்கத் தேடுகிறார்கள்/மக்களிடம் وَلَا يَسْتَخْفُوْنَ அவர்கள் மறைக்கத் தேடுவதில்லை مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் وَهُوَ அவன் مَعَهُمْ அவர்களுடன் اِذْ போது يُبَيِّتُوْنَ சதித்திட்டம் செய்கின்றனர் مَا எதை لَا يَرْضٰى விரும்பமாட்டான் مِنَ الْقَوْلِ‌ؕ பேச்சில் وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் بِمَا எதை يَعْمَلُوْنَ செய்கிறார்கள் مُحِيْطًا‏ சூழ்ந்தவனாக
4:108. யஸ்தக்Fபூன மினன்னாஸி வலா யஸ்தக் Fபூன மினல் லாஹி வ ஹுவ ம'அஹும் இத் யுBபய்யிதூன மா லா யர்ளா மினல் கவ்ல்; வ கானல் லாஹு Bபிமா யஃமலூன முஹீதா
4:108. இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்; ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது; ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.
4:109
4:109 هٰۤاَنْتُمْ هٰٓؤُلَۤاءِ جَادَلْـتُمْ عَنْهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا فَمَنْ يُّجَادِلُ اللّٰهَ عَنْهُمْ يَوْمَ الْقِيٰمَةِ اَمْ مَّنْ يَّكُوْنُ عَلَيْهِمْ وَكِيْلًا‏
هٰۤاَنْتُمْ நீங்கள் هٰٓؤُلَۤاءِ இவர்கள் جَادَلْـتُمْ வாதிடுகிறீர்களா? عَنْهُمْ இவர்கள் சார்பாக فِى الْحَيٰوةِ வாழ்க்கையில் الدُّنْيَا இவ்வுலகம் فَمَنْ யார் يُّجَادِلُ வாதிடுவார் اللّٰهَ அல்லாஹ்விடம் عَنْهُمْ இவர்கள் சார்பாக يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் اَمْ அல்லது مَّنْ யார் يَّكُوْنُ இருப்பார் عَلَيْهِمْ இவர்கள் மீது وَكِيْلًا‏ பொறுப்பாளராக
4:109. ஹா அன்தும் ஹா'உலா'இ ஜாதல்தும் 'அன்ஹும் Fபில் ஹயாதித் துன்யா Fபமய் யுஜாதிலுல் லாஹ 'அன்ஹும் யவ்மல் கியாமதி அம் மய் யகூனு 'அலய்ஹிம் வகீலா
4:109. (முஃமின்களே!) என்னே! இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்?
4:110
4:110 وَ مَنْ يَّعْمَلْ سُوْٓءًا اَوْ يَظْلِمْ نَفْسَهٗ ثُمَّ يَسْتَغْفِرِ اللّٰهَ يَجِدِ اللّٰهَ غَفُوْرًا رَّحِيْمًا‏
وَ مَنْ يَّعْمَلْ எவர்/செய்வார் سُوْٓءًا ஒரு தீமையை اَوْ அல்லது يَظْلِمْ அநீதியிழைப்பார் نَفْسَهٗ தனக்கு ثُمَّ பிறகு يَسْتَغْفِرِ மன்னிப்புக் கேட்பார் اللّٰهَ அல்லாஹ்விடம் يَجِدِ காண்பார் اللّٰهَ அல்லாஹ்வை غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
4:110. வ மய் யஃமல் ஸூ'அன் அவ் யள்லிம் னFப்ஸஹூ தும்ம யஸ்தக்Fபிரில் லாஹ யஜிதில் லாஹ கFபூரர் ரஹீமா
4:110. எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் - அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
4:111
4:111 وَمَنْ يَّكْسِبْ اِثْمًا فَاِنَّمَا يَكْسِبُهٗ عَلٰى نَفْسِهٖ‌ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا‏
وَمَنْ இன்னும் எவர் يَّكْسِبْ சம்பாதிப்பார் اِثْمًا ஒரு பாவத்தை فَاِنَّمَا எல்லாம் يَكْسِبُهٗ சம்பாதிப்பார்/அதை عَلٰى نَفْسِهٖ‌ؕ தனக்கெதிராகத்தான் وَكَانَ اللّٰهُ அல்லாஹ் இருக்கின்றான் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا‏ ஞானவானாக
4:111. வ மய் யக்ஸிBப் இத்மன் Fப இன்னமா யக்ஸிBபுஹூ 'அலா னFப்ஸிஹ்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
4:111. எவன் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
4:112
4:112 وَمَنْ يَّكْسِبْ خَطِيْٓــٴَــةً اَوْ اِثْمًا ثُمَّ يَرْمِ بِهٖ بَرِيْٓــٴًـــا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا
وَمَنْ எவர் يَّكْسِبْ சம்பாதிப்பார் خَطِيْٓــٴَــةً ஒரு குற்றத்தை اَوْ அல்லது اِثْمًا ஒரு பாவத்தை ثُمَّ பிறகு يَرْمِ எறிகிறார் بِهٖ அதை بَرِيْٓــٴًـــا ஒரு நிரபராதியை فَقَدِ திட்டமாக احْتَمَلَ சுமந்து கொண்டார் بُهْتَانًا அவதூறை وَّاِثْمًا இன்னும் பாவத்தை مُّبِيْنًا‏ பகிரங்கமான
4:112. வ மய் யக்ஸிBப் கதீ'அதன் அவ் இத்மன் தும்ம யர்மி Bபிஹீ Bபரீ'அன் Fபகதிஹ் தமல Bபுஹ்தான(ன்)வ் வ இத்மம் முBபீனா
4:112. மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.
4:113
4:113 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكَ وَرَحْمَتُهٗ لَهَمَّتْ طَّآٮِٕفَةٌ مِّنْهُمْ اَنْ يُّضِلُّوْكَ ؕ وَمَا يُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ‌ وَمَا يَضُرُّوْنَكَ مِنْ شَىْءٍ ‌ؕ وَاَنْزَلَ اللّٰهُ عَلَيْكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ‌ؕ وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَيْكَ عَظِيْمًا‏
وَلَوْلَا فَضْلُ அருளும் இல்லாதிருந்தால் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكَ உம்மீது وَرَحْمَتُهٗ அவனின் கருணை لَهَمَّتْ திட்டமாக நாடியிருக்கும் طَّآٮِٕفَةٌ ஒரு பிரிவு مِّنْهُمْ அவர்களில் اَنْ يُّضِلُّوْ அல்லது வழிகெடுத்துவிட كَ ؕ உம்மை وَمَا يُضِلُّوْنَ அவர்கள் வழிகெடுக்க மாட்டார்கள் اِلَّاۤ தவிர اَنْفُسَهُمْ‌ தங்களையே وَمَا மாட்டார்கள் يَضُرُّوْنَكَ தீங்கிழைக்க / உமக்கு مِنْ شَىْءٍ ؕ எதையும் وَاَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْكَ உம்மீது الْكِتٰبَ இவ்வேதத்தை وَالْحِكْمَةَ இன்னும் ஞானத்தை وَعَلَّمَكَ இன்னும் உமக்குக் கற்பித்தான் مَا எவற்றை لَمْ تَكُنْ நீர் இருக்கவில்லை تَعْلَمُ‌ؕ அறிகிறீர் وَكَانَ இருக்கிறது فَضْلُ اللّٰهِ அல்லாஹ்வின்அருள் عَلَيْكَ உம்மீது عَظِيْمًا‏ மகத்தானது
4:113. வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்க வ ரஹ்மதுஹூ லஹம்மத் தா'இFபதும் மின்ஹும் அய் யுளில்லூக வமா யுளில்லூன இல்லா அன்Fபுஸஹும் வமா யளுர்ரூனக மின் ஷய்'; வ அன்Zஜலல் லாஹு 'அலய்கல் கிதாBப வல் ஹிக்மத வ 'அல்லமக மா லம் தகுன் தஃலம்; வ கான Fபள்லுல் லாஹி 'அலய்க 'அளீமா
4:113. (நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது; இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது; மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.
4:114
4:114 لَا خَيْرَ فِىْ كَثِيْرٍ مِّنْ نَّجْوٰٮهُمْ اِلَّا مَنْ اَمَرَ بِصَدَقَةٍ اَوْ مَعْرُوْفٍ اَوْ اِصْلَاحٍۢ بَيْنَ النَّاسِ‌ ؕ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ فَسَوْفَ نُـؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا‏
لَا அறவே இல்லை خَيْرَ நன்மை فِىْ كَثِيْرٍ அதிகமானவற்றில் مِّنْ இருந்து نَّجْوٰٮهُمْ அவர்களின் ரகசியம் اِلَّا தவிர مَنْ எவர் اَمَرَ ஏவினார் بِصَدَقَةٍ தர்மத்தை اَوْ அல்லது مَعْرُوْفٍ நன்மையை اَوْ அல்லது اِصْلَاحٍۢ சமாதானத்தை بَيْنَ இடையில் النَّاسِ‌ ؕ மக்கள் وَمَن எவர் يَّفْعَلْ செய்வார் ذٰ لِكَ அதை ابْتِغَآءَ நாடி مَرْضَاتِ பொருத்தம் اللّٰهِ அல்லாஹ்வின் فَسَوْفَ தருவோம் نُـؤْتِيْهِ அவர்களுக்கு اَجْرًا கூலியை عَظِيْمًا‏ மகத்தானது
4:114. லா கய்ர Fபீ கதீரிம் மின் னஜ்வாஹும் இல்லா மன் அமர Bபிஸதகதின் அவ் மஃரூFபின் அவ் இஸ்லாஹிம் Bபய்னன் னாஸ்; வ மய் யFப்'அல் தாலிகBப் திகா'அ மர்ளாதில் லாஹி Fப ஸவ்Fப னு'தீஹி அஜ்ரன் 'அளீமா
4:114. (நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை; ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.
4:115
4:115 وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ‌ ؕ وَسَآءَتْ مَصِيْرًا
وَمَنْ எவர் يُّشَاقِقِ முரண்படுகிறார் الرَّسُوْلَ தூதருக்கு مِنْۢ بَعْدِ பின்னர் مَا تَبَيَّنَ தெளிவானது لَـهُ தனக்கு الْهُدٰى நேர்வழி وَ يَـتَّبِعْ பின்பற்றுவார் غَيْرَ அல்லாதது سَبِيْلِ பாதை الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களின் نُوَلِّهٖ திருப்பி விடுவோம்/ அவரை مَا எது تَوَلّٰى திரும்பினார் وَنُصْلِهٖ இன்னும் நுழைப்போம்/ அவரை جَهَـنَّمَ‌ ؕ நரகத்தில் وَسَآءَتْ கெட்டுவிட்டது مَصِيْرًا‏ மீளுமிடத்தால்
4:115. வ மய் யுஷாகிகிர் ரஸூல மிம் Bபஃதி மா தBபய்யன லஹுல் ஹுதா வ யத்தBபிஃ கய்ர ஸBபீலில் மு'மினீன னுவல்லிஹீ ம தவல்லா வ னுஸ்லிஹீ ஜஹன்னம வ ஸா'அத் மஸீரா
4:115. எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.
4:116
4:116 اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ؕ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَغْفِرُ மன்னிக்க மாட்டான் اَنْ يُّشْرَكَ بِهٖ இணைவைக்கப்படுவதை/அவனுக்கு وَيَغْفِرُ இன்னும் மன்னிப்பான் مَا دُوْنَ ذٰ لِكَ அது அல்லாததை لِمَنْ எவருக்கு يَّشَآءُ‌ ؕ நாடுவான் وَمَنْ எவர் يُّشْرِكْ இணைவைப்பார் بِاللّٰهِ அல்லாஹ்வுக்கு فَقَدْ திட்டமாக ضَلَّ வழிகெட்டார் ضَلٰلًاۢ வழிகேடு بَعِيْدًا‏ தூரமானது
4:116. இன்னல் லாஹ லா யக்Fபிரு அய் யுஷ்ரக Bபிஹீ வயக்Fபிரு மா தூன தாலிக லிமய் யஷா'; வ மய் யுஷ்ரிக் Bபில்லாஹி Fபகத் ளல்ல ளலாலம் Bப'ஈதா
4:116. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.
4:117
4:117 اِنْ يَّدْعُوْنَ مِنْ دُوْنِهٖۤ اِلَّاۤ اِنٰـثًـا‌ ۚ وَاِنْ يَّدْعُوْنَ اِلَّا شَيْـطٰنًا مَّرِيْدًا ۙ‏
اِنْ يَّدْعُوْنَ அவர்கள் பிரார்த்திப்பதில்லை مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اِلَّاۤ தவிர اِنٰـثًـا‌ ۚ பெண்(சிலை)களை وَاِنْ يَّدْعُوْنَ அவர்கள் பிரார்த்திப்பதில்லை اِلَّا தவிர شَيْـطٰنًا ஷைத்தானிடம் مَّرِيْدًا ۙ‏ கீழ்ப்படியாதவன்
4:117. இ(ன்)ய் யத்'ஊன மின் தூனிஹீ இல்லா இனாத(ன்)வ் வ இ(ன்)ய் யத்'ஊன இல்லா ஷய்தானம் மரீதா
4:117. அவனை (அல்லாஹ்வை) விட்டு அவர்கள் அழைப்பவை எல்லாம் பெண் தெய்வங்களேயன்றி வேறில்லை; இன்னும் துஷ்ட ஷைத்தானையும் தவிர, வேறு யாரையும் அவர்கள் அழைக்கவில்லை.
4:118
4:118 لَّـعَنَهُ اللّٰهُ‌ ۘ وَقَالَ لَاَ تَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيْبًا مَّفْرُوْضًا ۙ‏
لَّـعَنَهُ சபித்தான்/அவனை اللّٰهُ‌ ۘ அல்லாஹ் وَقَالَ கூறினான் لَاَ تَّخِذَنَّ நிச்சயமாக எடுத்துக்கொள்வேன் مِنْ இருந்து عِبَادِكَ அடியார்கள்/உன் نَصِيْبًا ஒரு தொகையை مَّفْرُوْضًا ۙ‏ குறிப்பிட்டது
4:118. ல'அனஹுல் லாஹ்; வ கால ல அத்தகிதன்ன மின் 'இBபாதிக னஸீBபம் மFப்ரூளா
4:118. அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்தான். “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நான் நிச்சயமாக எடுத்துக் கொள்வேன்” என்றும்,
4:119
4:119 وَّلَاُضِلَّـنَّهُمْ وَلَاُمَنِّيَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُبَـتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللّٰهِ‌ؕ وَمَنْ يَّتَّخِذِ الشَّيْطٰنَ وَلِيًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِيْنًا ؕ‏
وَّلَاُضِلَّـنَّهُمْ இன்னும் நிச்சயம் வழிகெடுப்பேன்/அவர்கû ள وَلَاُمَنِّيَنَّهُمْ இன்னும் நிச்சயமாக வீண் நம்பிக்கையூட்டுவேன்/அவர்களுக்கு وَلَاٰمُرَنَّهُمْ இன்னும் நிச்சயம் ஏவுவேன்/அவர்களுக்கு فَلَيُبَـتِّكُنَّ ஆகவே நிச்சயம் அறுப்பார்கள் اٰذَانَ காதுகளை الْاَنْعَامِ கால்நடைகளின் وَلَاٰمُرَنَّهُمْ இன்னும் நிச்சயம் ஏவுவேன்/அவர்களுக்கு فَلَيُغَيِّرُنَّ நிச்சயமாக அவர்கள் மாற்றுவார்கள் خَلْقَ படைப்புகளை اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَمَنْ எவன் يَّتَّخِذِ எடுத்துக் கொள்வான் الشَّيْطٰنَ ஷைத்தானை وَلِيًّا நண்பனாக, பாதுகாவலனாக مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி فَقَدْ خَسِرَ திட்டமாகநஷ்டமடைந்தான் خُسْرَانًا நஷ்டம் مُّبِيْنًا ؕ‏ பகிரங்கமானது
4:119. வ ல உளில்லன்னஹும் வ ல உமன்னி யன்ன்னஹும் வ ல ஆமுரன்னஹும் Fபல யுBபத் திகுன்ன ஆதானல் அன்'ஆமி வ ல ஆமுரன்னஹும் Fபல யுகய் யிருன்ன கல்கல் லாஹ்; வ மய் யத்தகிதிஷ் ஷய்தான வலிய்யம் மின் தூனில் லாஹி Fபகத் கஸிர குஸ்ரானம் முBபீனா
4:119. “இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.
4:120
4:120 يَعِدُهُمْ وَيُمَنِّيْهِمْ‌ ؕ وَمَا يَعِدُهُمُ الشَّيْـطٰنُ اِلَّا غُرُوْرًا‏
يَعِد வாக்களிக்கிறான் هُمْ அவர்களுக்கு وَيُمَنِّيْهِمْ‌ ؕ இன்னும் வீண்நம்பிக்கையூட்டுகிறான் / அவர்களுக்கு وَمَا மாட்டான் يَعِدُهُمُ அவர்களுக்கு வாக்களிக்க الشَّيْـطٰنُ ஷைத்தான் اِلَّا غُرُوْرًا‏ ஏமாற்றத்தைத் தவிர
4:120. ய'இதுஹும் வ யுமன் னீஹிம் வமா ய'இதுஹுமுஷ் ஷய்தானு இல்லா குரூரா
4:120. ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்; மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.
4:121
4:121 اُولٰٓٮِٕكَ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ وَلَا يَجِدُوْنَ عَنْهَا مَحِيْصًا‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் مَاْوٰٮهُمْ அவர்களுடைய ஒதுங்குமிடம் جَهَـنَّمُ நரகம் وَلَا يَجِدُوْنَ பெறமாட்டார்கள் عَنْهَا அதை விட்டு مَحِيْصًا‏ ஒரு மீளுமிடத்தை
4:121. உலா'இக ம'வாஹும் ஜஹன்னமு வலா யஜிதூன 'அன்ஹா மஹீஸா
4:121. இத்தகையோருக்கு நரகமே ஒதுங்குமிடமாகும்; அதைவிட்டுத் தப்பிச் செல்ல அவர்கள், ஒருவழியையும் காண மாட்டார்கள்.
4:122
4:122 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا‌ ؕ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ قِيْلًا‏
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தனர் الصّٰلِحٰتِ நன்மைகளை سَنُدْخِلُهُمْ அவர்களை நுழைப்போம் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَاۤ அவற்றில் اَبَدًا‌ ؕ என்றென்றும் وَعْدَ வாக்குறுதி اللّٰهِ அல்லாஹ்வுடைய حَقًّا‌ ؕ உண்மையான وَمَنْ யார் اَصْدَقُ மிக உண்மையானவன் مِنَ اللّٰهِ அல்லாஹ்வை விட قِيْلًا‏ சொல்லில்
4:122. வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஸனுத் கிலுஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா; வஃதல் லாஹி ஹக்கா; வ மன் அஸ்தகு மினல் லாஹி கீலா
4:122. மேலும் எவர் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் சுவனபதிகளில் நுழைய வைப்போம்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்?
4:123
4:123 لَـيْسَ بِاَمَانِيِّكُمْ وَلَاۤ اَمَانِىِّ اَهْلِ الْـكِتٰبِ‌ؕ مَنْ يَّعْمَلْ سُوْٓءًا يُّجْزَ بِهٖۙ وَ لَا يَجِدْ لَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَلِيًّا وَّلَا نَصِيْرًا‏
لَـيْسَ இல்லை بِاَمَانِيِّكُمْ உங்கள் விருப்பங்களைக் கொண்டு وَلَاۤ இன்னும் இல்லை اَمَانِىِّ விருப்பங்கள் اَهْلِ الْـكِتٰبِ‌ؕ வேதக்காரர்களின் مَنْ எவன் يَّعْمَلْ செய்வான் سُوْٓءًا ஒரு தீமையை يُّجْزَ கூலி கொடுக்கப்படுவான் بِهٖۙ அதற்கு وَ لَا يَجِدْ இன்னும் பெறமாட்டான் لَهٗ தனக்கு مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ் وَلِيًّا பாதுகாவலரை وَّلَا نَصِيْرًا‏ இன்னும் உதவியாளரை
4:123. லய்ஸ Bபி அமானிய்யிகும் வ லா அமானிய்யி அஹ்லில் கிதாBப்; மய் யஃமல் ஸூ'அய் யுஜ்Zஜ Bபிஹீ வலா யஜித் லஹூ மின் தூனில் லாஹி வலிய(ன்)வ் வலா னஸீரா
4:123. (முஃமின்களே!) மறுமையில் நீங்கள் விரும்பிய படியோ, அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பிய படியோ நடந்து விடுவதில்லை - எவன் தீமை செய்கிறானோ, அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான்; இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் (தனக்குப்) பாதுகாவலனாகவோ, துணை செய்பவனாகவோ காண மாட்டான்.
4:124
4:124 وَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ مِنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ وَلَا يُظْلَمُوْنَ نَقِيْرًا‏
وَمَنْ இன்னும் எவர் يَّعْمَلْ செய்வார் مِنَ இருந்து الصّٰلِحٰتِ நன்மைகள் مِنْ இருந்து ذَكَرٍ ஓர் ஆண் اَوْ அல்லது اُنْثٰى ஒரு பெண் وَهُوَ அவர் இருக்க مُؤْمِنٌ நம்பிக்கையாளராக فَاُولٰٓٮِٕكَ அவர்கள்தான் يَدْخُلُوْنَ நுழைவார்கள் الْجَـنَّةَ சொர்க்கத்தில் وَلَا يُظْلَمُوْنَ இன்னும் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள் نَقِيْرًا‏ கீறல் அளவும்
4:124. வ மய் யஃமல் மினஸ் ஸாலிஹாதி மின் தகரின் அவ் உன்தா வ ஹுவ மு'மினுன் Fப உலா'இக யத்குலூனல் ஜன்னத வலா யுள்லமூன னகீரா
4:124. ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
4:125
4:125 وَمَنْ اَحْسَنُ دِيْنًا مِّمَّنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ وَّاتَّبَعَ مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا‌ ؕ وَاتَّخَذَ اللّٰهُ اِبْرٰهِيْمَ خَلِيْلًا‏
وَمَنْ யார் اَحْسَنُ மிக அழகானவர் دِيْنًا மார்க்கத்தால் مِّمَّنْ எவரைவிட اَسْلَمَ பணியவைத்தார் وَجْهَهٗ தன் முகத்தை لِلّٰهِ அல்லாஹ்விற்கு وَهُوَ அவர் இருக்க مُحْسِنٌ நற்குணமுடையவராக وَّاتَّبَعَ இன்னும் பின்பற்றினார் مِلَّةَ மார்க்கத்தை اِبْرٰهِيْمَ இப்ராஹீமுடைய حَنِيْفًا‌ ؕ உறுதியுடையவராக وَاتَّخَذَ இன்னும் எடுத்துக்கொண்டான் اللّٰهُ அல்லாஹ் اِبْرٰهِيْمَ இப்ராஹீமை خَلِيْلًا‏ நண்பராக
4:125. வ மன் அஹ்ஸனு தீனம் மிம்ம்மன் அஸ்லம வஜ்ஹஹூ லில்லாஹி வ ஹுவ முஹ்ஸினு(ன்)வ் வத்தBப'அ மில்லத இBப்ராஹீம ஹனீFபா; வத்தகதல் லாஹு இBப்ராஹீம கலீலா
4:125. மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.
4:126
4:126 وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ مُّحِيْـطًا
وَلِلّٰهِ அல்லாஹ்வுக்கு مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَمَا فِى الْاَرْضِ‌ؕ இன்னும் பூமியிலுள்ளவை وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் مُّحِيْـطًا‏ சூழ்ந்தறிபவனாக
4:126. வ லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கானல் லாஹு Bபிகுல்லி ஷய்'இம் முஹீதா
4:126. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
4:127
4:127 وَيَسْتَفْتُوْنَكَ فِى النِّسَآءِ ‌ؕ قُلِ اللّٰهُ يُفْتِيْكُمْ فِيْهِنَّ ۙ وَمَا يُتْلٰى عَلَيْكُمْ فِى الْكِتٰبِ فِىْ يَتٰمَى النِّسَآءِ الّٰتِىْ لَا تُؤْتُوْنَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُوْنَ اَنْ تَـنْكِحُوْهُنَّ وَالْمُسْتَضْعَفِيْنَ مِنَ الْوِلْدَانِ ۙ وَاَنْ تَقُوْمُوْا لِلْيَتٰمٰى بِالْقِسْطِ‌ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ كَانَ بِهٖ عَلِيْمًا‏
وَيَسْتَفْتُوْنَكَ மார்க்கத் தீர்ப்பு கோருகின்றனர்/உம்மிடம் فِى النِّسَآءِ ؕ பெண்களைப் பற்றி قُلِ கூறுவீராக اللّٰهُ அல்லாஹ் يُفْتِيْكُمْ தீர்ப்பளிக்கிறான் فِيْهِنَّ ۙ அவர்களைப் பற்றி وَمَا يُتْلٰى இன்னும் எது ஓதப்படுகிறதோ عَلَيْكُمْ உங்களுக்கு فِى الْكِتٰبِ வேதத்தில் فِىْ يَتٰمَى அனாதைகளில் النِّسَآءِ பெண்கள் الّٰتِىْ எவர்கள் لَا இல்லை تُؤْتُوْنَهُنَّ நீங்கள் அவர்களுக்கு கொடுப்பது مَا எது كُتِبَ விதிக்கப்பட்டது لَهُنَّ அவர்களுக்கு وَتَرْغَبُوْنَ விரும்புகிறீர்கள் اَنْ تَـنْكِحُو நீங்கள் மண முடிப்பது هُنَّ அவர்களை وَالْمُسْتَضْعَفِيْنَ பலவீனர்கள் مِنَ இருந்து الْوِلْدَانِ ۙ சிறுவர்கள் وَاَنْ تَقُوْمُوْا இன்னும் நீங்கள் நிற்பது لِلْيَتٰمٰى அனாதைகளுக்கு بِالْقِسْطِ‌ ؕ நீதத்தைக் கொண்டு وَمَا எது تَفْعَلُوْا செய்வீர்கள் مِنْ இருந்து خَيْرٍ நன்மை فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் بِهٖ அதை عَلِيْمًا‏ நன்கறிந்தவனாக
4:127. வ யஸ்தFப்தூனக Fபின்னிஸா'இ குலில் லாஹு யுFப்தீகும் Fபீஹின்ன வமா யுத்லா 'அலய்கும் Fபில் கிதாBபி Fபீ யதாமன் னிஸா'இல் லாதீ லா து'தூனஹுன்ன மா குதிBப லஹுன்ன்ன வ தர்கBபூன அன் தன்கிஹூஹுன்ன வல் முஸ்தள்'அ Fபீன மினல் வில்தானி வ அன் தகூமூ லில்யதாமா Bபில்கிஸ்த்; வமா தFப்'அலூ மின் கய்ரின் Fப இன்னல் லாஹ கான Bபிஹீ 'அலீமா
4:127. (நபியே! மக்கள்) உம்மிடம் பெண்கள் பற்றி (மார்க்கக் கட்டளைக்) கேட்கிறார்கள்; அதற்கு நீர், “அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு தீர்ப்புக் கூறுவான்” என்று சொல்லும்; தவிர: வேதத்தில் உங்ளுக்கு ஓதிக்காண்பிக்கப்படுவது அநாதைப் பெண்கள் சம்பந்தமாக அவர்களுக்கு விதிக்கப்பட்டதை (மஹரை) நீங்கள் அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை நீங்கள் மணந்து கொள்ள விரும்பிக் கொண்டிருந்ததைப் பற்றியும்; குழந்தைகளில் பலவீனமானவர்களைப் பற்றியும், அநாதைகளுக்கு நீங்கள் நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்பது பற்றியுமாகும்; ஆகவே, (அவர்களுக்கு) நன்மையாக நீங்கள் எதைச் செய்தாலும், அதை அல்லாஹ் நிச்சயமாக நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
4:128
4:128 وَاِنِ امْرَاَةٌ خَافَتْ مِنْۢ بَعْلِهَا نُشُوْزًا اَوْ اِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَاۤ اَنْ يُّصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا‌ ؕ وَالصُّلْحُ خَيْرٌ‌ ؕ وَاُحْضِرَتِ الْاَنْفُسُ الشُّحَّ‌ ؕ وَاِنْ تُحْسِنُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏
وَاِنِ امْرَاَةٌ خَافَتْ ஒரு பெண் பயந்தால் مِنْۢ இருந்து بَعْلِهَا தனது கணவன் نُشُوْزًا வெறுப்பை اَوْ அல்லது اِعْرَاضًا புறக்கணிப்பை فَلَا جُنَاحَ குற்றமே இல்லை عَلَيْهِمَاۤ அவ்விருவர் மீது اَنْ يُّصْلِحَا அவ்விருவரும் சமாதானம் செய்வது بَيْنَهُمَا அவ்விருவரு(ம் தங்களு)க்கு மத்தியில் صُلْحًا‌ ؕ ஒரு சமாதான ஒப்பந்தத்தை وَالصُّلْحُ خَيْرٌ‌ ؕ சமாதானம்/சிறந்தது وَاُحْضِرَتِ அமைக்கப்பட்டுள்ளன الْاَنْفُسُ ஆன்மாக்கள் الشُّحَّ‌ ؕ கஞ்சத்தனம் மீது وَاِنْ تُحْسِنُوْا நீங்கள் நன்மைசெய்தால் وَتَتَّقُوْا இன்னும் நீங்கள் அஞ்சினால் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் بِمَا எதை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் خَبِيْرًا‏ ஆழ்ந்தறிந்தவனாக
4:128. வ இனிம்ர அதுன் காFபத் மிம் Bபஃலிஹா னுஷூZஜன் அவ் இஃராளன் Fபலா ஜுனாஹ 'அலய்ஹி மா அய் யுஸ்லிஹா Bபய்னஹுமா ஸுல்ஹா; வஸ்ஸுல்ஹு கய்ர்; வ உஹ்ளிரதில் அன்Fபுஸுஷ் ஷுஹ்ஹ்; வ இன் துஹ்ஸினூ வ தத்தகூ Fப இன்னல் லாஹ கான Bபிமா தஃமலூன கBபீரா
4:128. ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
4:129
4:129 وَلَنْ تَسْتَطِيْعُوْۤا اَنْ تَعْدِلُوْا بَيْنَ النِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ‌ فَلَا تَمِيْلُوْا كُلَّ الْمَيْلِ فَتَذَرُوْهَا كَالْمُعَلَّقَةِ‌ ؕ وَاِنْ تُصْلِحُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا‏
وَلَنْ تَسْتَطِيْعُوْۤا அறவே இயலமாட்டீர்கள் اَنْ تَعْدِلُوْا நீங்கள் நீதமாக நடப்பதற்கு بَيْنَ இடையில் النِّسَآءِ பெண்கள்,மனைவிகள் وَلَوْ حَرَصْتُمْ‌ நீங்கள் ஆசைப்பட்டாலும் فَلَا تَمِيْلُوْا ஆகவே சாய்ந்து விடாதீர்கள் كُلَّ الْمَيْلِ முற்றிலும் சாய்தல் فَتَذَرُو விட்டு விடுவீர்கள் هَا அவளை كَالْمُعَلَّقَةِ‌ ؕ தொங்கவிடப்பட்டவளைப் போன்று وَاِنْ تُصْلِحُوْا நீங்கள் சமாதானம் செய்து கொண்டால் وَتَتَّقُوْا இன்னும் அல்லாஹ்வை அஞ்சினால் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
4:129. வ லன் தஸ்ததீ'ஊ அன் தஃதிலூ Bபய்னன் னிஸா'இ வ லவ் ஹரஸ்தும் Fபலா தமீலூ குல்லல் மய்லி Fபததரூஹா கல்மு'அல் லகஹ்; வ இன் துஸ்லிஹூ வ தத்தகூ Fப இன்னல் லாஹ கான கFபூரர் ரஹீமா
4:129. (முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது; ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
4:130
4:130 وَاِنْ يَّتَفَرَّقَا يُغْنِ اللّٰهُ كُلًّا مِّنْ سَعَتِهٖ‌ ؕ وَكَانَ اللّٰهُ وَاسِعًا حَكِيْمًا‏
وَاِنْ يَّتَفَرَّقَا அவ்விருவரும் பிரிந்து விட்டால் يُغْنِ நிறைவடையச் செய்வான் اللّٰهُ அல்லாஹ் كُلًّا ஒவ்வொருவரையும் مِّنْ سَعَتِهٖ‌ ؕ தன் கொடையினால் وَكَانَ இன்னும் இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் وَاسِعًا விசாலமானவனாக حَكِيْمًا‏ ஞானவானாக
4:130. வ இ(ன்)ய்-யதFபர்ரகா யுக்னில் லாஹு குல்லம் மின் ஸ'அதிஹ்; வ கானல் லாஹு வாஸி'அன் ஹகீமா
4:130. (சமாதானமாக இணைந்து வாழ முடியாமல் சமாதானமாக) அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டால், அவ்விருவரையும் தன்னுடைய விசாலமான அருட்கொடையால், (ஒருவர் மற்றவரை விட்டும்) தேவையற்றவராக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அல்லாஹ் விசாலமான அருளுடையவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
4:131
4:131 وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ ‌ؕ وَلَـقَدْ وَصَّيْنَا الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَاِيَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَ‌ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَكَانَ اللّٰهُ غَنِيًّا حَمِيْدًا‏
وَلِلّٰهِ அல்லாஹ் விற்குரியனவே مَا فِى السَّمٰوٰتِ எவை/வானங்களில் وَمَا இன்னும் எவை فِى الْاَرْضِ ؕ பூமியில் وَلَـقَدْ திட்டவட்டமாக وَصَّيْنَا உபதேசித்தோம் الَّذِيْنَ எவர்களுக்கு اُوْتُوا கொடுக்கப்பட்டார்கள் الْكِتٰبَ வேதம் مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்னர் وَاِيَّاكُمْ இன்னும் உங்களுக்கு اَنِ اتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ‌ ؕ அல்லாஹ்வை وَاِنْ تَكْفُرُوْا நீங்கள் நிராகரித்தால் فَاِنَّ لِلّٰهِ நிச்சயமாக அல்லாஹ்விற்கு مَا فِى السَّمٰوٰتِ எவை/வானங்களில் وَمَا இன்னும் எவை فِى الْاَرْضِ‌ؕ பூமியில் وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் غَنِيًّا நிறைவானவனாக, மகா செல்வனாக حَمِيْدًا‏ புகழுக்குரியவனாக
4:131. வ லில்லாஹி மாFபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ லகத் வஸ்ஸய்னல் லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லிகும் வ இய்யாகும் அனித் தகுல் லாஹ்; வ இன்தக்Fபுரூ Fப இன்ன லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கானல் லாஹு கனிய்யன் ஹமீதா
4:131. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு (வஸிய்யத்து) உபதேசம் செய்தோம்; நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான்.
4:132
4:132 وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ ‌ؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا‏
وَلِلّٰهِ அல்லாஹ்விற்கே உரியன مَا எவை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَمَا فِى இன்னும் எவை الْاَرْضِ ؕ பூமியில் وَكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்வே وَكِيْلًا‏ பொறுப்பாளனாக
4:132. வ லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கFபா Bபில்லாஹி வகீலா
4:132. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம் - இன்னும், (உங்கள் எல்லாக் காரியங்களையும் பொறுப்பேற்றுக் கொள்வதில்) அல்லாஹ்வே போதுமானவன்.
4:133
4:133 اِنْ يَّشَاْ يُذْهِبْكُمْ اَيُّهَا النَّاسُ وَيَاْتِ بِاٰخَرِيْنَ‌ؕ وَكَانَ اللّٰهُ عَلٰى ذٰلِكَ قَدِيْرًا‏
اِنْ يَّشَاْ அவன் நாடினால் يُذْهِبْكُمْ போக்கி விடுவான்/உங்களை اَيُّهَا النَّاسُ மனிதர்களே وَيَاْتِ இன்னும் வருவான் بِاٰخَرِيْنَ‌ؕ மற்றவர்களைக் கொண்டு وَكَانَ இன்னும் இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى மீது ذٰلِكَ அது قَدِيْرًا‏ பேராற்றலுடையவனாக
4:133. இ(ன்)ய்-யஷ' யுத்ஹிBப்கும் அய்யுஹன் னாஸு வ ய'தி Bபி ஆகரீன்; வ கானல் லாஹு 'அலா தாலிக கதீரா
4:133. மனிதர்களே! அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு வருவான்; இன்னும், அவ்வாறு செய்ய அல்லாஹ் பேராற்றல் உடையவன்.
4:134
4:134 مَنْ كَانَ يُرِيْدُ ثَوَابَ الدُّنْيَا فَعِنْدَ اللّٰهِ ثَوَابُ الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ ؕ وَكَانَ اللّٰهُ سَمِيْعًاۢ بَصِيْرًا
مَنْ எவர் كَانَ இருந்தார் يُرِيْدُ நாடுகிறார் ثَوَابَ பலனை الدُّنْيَا இவ்வுலகத்தின் فَعِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் ثَوَابُ பலன் الدُّنْيَا இவ்வுலகத்தின் وَالْاٰخِرَةِ‌ ؕ இன்னும் மறுமையின் وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் سَمِيْعًاۢ நன்கு செவியுறுபவனாக بَصِيْرًا‏ உற்று நோக்குபவனாக
4:134. மன் கான யுரீது தவாBபத் துன்யா Fப'இன்தல்லாஹி தவாBபுத் துன்யா வல் ஆகிரஹ்; வ கானல் லாஹு ஸமீ'அம் Bபஸீரா
4:134. எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், “அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.”
4:135
4:135 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ‌ ؕ اِنْ يَّكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّٰهُ اَوْلٰى بِهِمَا‌ فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا ‌ۚ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே كُوْنُوْا ஆகிவிடுங்கள் قَوَّامِيْنَ நிலைநிறுத்துபவர்களாக بِالْقِسْطِ நீதத்தை شُهَدَآءَ சாட்சி கூறுபவர்களாக لِلّٰهِ அல்லாஹ்விற்காக وَلَوْ இருப்பினும் عَلٰٓى எதிராக اَنْفُسِكُمْ உங்களுக்கு اَوِ அல்லது الْوَالِدَيْنِ பெற்றோருக்கு وَالْاَقْرَبِيْنَ‌ ؕ இன்னும் உறவினர்களுக்கு اِنْ يَّكُنْ அவர் இருந்தால் غَنِيًّا ஒரு செல்வந்தனாக اَوْ அல்லது فَقِيْرًا ஓர் ஏழையாக فَاللّٰهُ அல்லாஹ் اَوْلٰى மிக ஏற்றமானவன் بِهِمَا‌ அவ்விருவருக்கும் فَلَا تَتَّبِعُوا பின்பற்றாதீர்கள் الْهَوٰٓى ஆசைகளை اَنْ تَعْدِلُوْا ۚ நீங்கள் நீதி செலுத்துவதில் وَاِنْ تَلْوٗۤا நீங்கள் மாற்றினால் اَوْ அல்லது تُعْرِضُوْا புறக்கணித்தால் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் كَانَ இருக்கிறான் بِمَا எதை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் خَبِيْرًا‏ ஆழ்ந்தறிந்தவனாக
4:135. யா அய்யுஹல் லதீன ஆமனூ கூனூ கவ்வ அமீன Bபில்கிஸ்தி ஷுஹதா'அ லில்லாஹி வ லவ் 'அலா அன்Fபுஸிகும் அவில் வாலிதய்னி வல் அக்ரBபீன் இ(ன்)ய் யகுன் கனிய்யன் அவ் Fபகீரன் Fபல்லாஹு அவ்லா Bபிஹிமா Fபலா தத்தBபி'உல் ஹவா அன் தஃதிலூ; வ இன் தல்வூ அவ் துஃரிளூ Fப இன்னல் லாஹ கான Bபிமா தஃமலூன கBபீரா
4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
4:136
4:136 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْ نَزَّلَ عَلٰى رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْۤ اَنْزَلَ مِنْ قَبْلُ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اٰمِنُوْا நம்பிக்கை கொள்ளுங்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَرَسُوْلِهٖ இன்னும் அவனின் தூதரை وَالْكِتٰبِ இன்னும் வேதத்தை الَّذِىْ எது نَزَّلَ இறக்கினான் عَلٰى மீது رَسُوْلِهٖ தன் தூதர் وَالْكِتٰبِ இன்னும் வேதத்தை الَّذِىْۤ எது اَنْزَلَ இறக்கினான் مِنْ قَبْلُ‌ؕ முன்னர் وَمَنْ எவர் يَّكْفُرْ நிராகரிப்பார் بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَلٰٓٮِٕكَتِهٖ இன்னும் அவனின் வானவர்களை وَكُتُبِهٖ இன்னும் அவனின் வேதங்களை وَرُسُلِهٖ இன்னும் அவனின் தூதர்களை وَالْيَوْمِ இன்னும் நாளை الْاٰخِرِ மறுமை فَقَدْ திட்டமாக ضَلَّ வழிகெட்டார் ضَلٰلًاۢ வழிகேடாக بَعِيْدًا‏ தூரமானது
4:136. யா அய்யுஹல் லதீன ஆமனூ ஆமினூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வல் கிதாBபில் லதீ னZஜ்Zஜல 'அலா ரஸூலிஹீ வல் கிதாBபில் லதீ அன்Zஜல மின் கBப்ல்; வ மய் யக்Fபுர் Bபில்லாஹி வ மலா'இகதிஹீ வ குதுBபிஹீ வ ருஸுலிஹீ வல் யவ்மில் ஆகிரி Fபகத் ளல்ல ளலாலம் Bப'ஈதா
4:136. முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்.
4:137
4:137 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّمْ يَكُنِ اللّٰهُ لِيَـغْفِرَ لَهُمْ وَلَا لِيَـهْدِيَهُمْ سَبِيْلًا ؕ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் ثُمَّ பிறகு كَفَرُوْا நிராகரித்தனர் ثُمَّ பிறகு اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் ثُمَّ பிறகு كَفَرُوْا நிராகரித்தனர் ثُمَّ பிறகு ازْدَادُوْا அதிகப்படுத்தினார்கள் كُفْرًا நிராகரிப்பை لَّمْ يَكُنِ இருக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் لِيَـغْفِرَ அவன் மன்னிப்பதற்கு لَهُمْ அவர்களை وَلَا இன்னும் இல்லை لِيَـهْدِيَهُمْ நேர்வழிகாட்டுவதற்கு/அவர்களை سَبِيْلًا ؕ‏ ஒரு வழியை
4:137. இன்னல் லதீன ஆமனூ தும்ம கFபரூ தும்ம ஆமனூ தும்ம கFபரூ தும்மZஜ் தாதூ குFப்ரல் லம் யகுனில் லாஹு லியக்Fபிர லஹும் வலா லியஹ்தியஹும் ஸBபீலா
4:137. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை; மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை.
4:138
4:138 بَشِّرِ الْمُنٰفِقِيْنَ بِاَنَّ لَهُمْ عَذَابًا اَلِيْمًاۙ‏
بَشِّرِ நற்செய்தி கூறுவீராக الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்களுக்கு بِاَنَّ நிச்சயமாக/என்று لَهُمْ அவர்களுக்கு عَذَابًا வேதனை اَلِيْمًاۙ‏ துன்புறுத்துகின்ற
4:138. Bபஷ்ஷிரில் முனாFபிகீன Bபி அன்ன லஹும் 'அதாBபன் அலீமா
4:138. (நபியே! இத்தகைய) நயவஞ்சகர்களுக்கு “நிச்சயமாக நோவினை தரும் வேதனை உண்டு” என்று நன்மாராயங் கூறுவீராக!
4:139
4:139 ۨالَّذِيْنَ يَتَّخِذُوْنَ الْـكٰفِرِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ‌ ؕ اَيَبْتَغُوْنَ عِنْدَهُمُ الْعِزَّةَ فَاِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِيْعًا ؕ‏
ۨالَّذِيْنَ எவர்கள் يَتَّخِذُوْنَ எடுத்துக் கொள்கிறார்கள் الْـكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களை اَوْلِيَآءَ பாதுகாவலர்களாக مِنْ دُوْنِ அன்றி الْمُؤْمِنِيْنَ‌ ؕ நம்பிக்கையாளர்களை اَيَبْتَغُوْنَ தேடுகின்றார்களா? عِنْدَهُمُ அவர்களிடம் الْعِزَّةَ கண்ணியத்தை فَاِنَّ الْعِزَّةَ நிச்சயமாக கண்ணியம் لِلّٰهِ அல்லாஹ்வுக்குரியதே جَمِيْعًا ؕ‏ அனைத்தும்
4:139. அல்லதீன யத்தகிதூ னல் காFபிரீன அவ்லியா'அ மின் தூனில் மு'மினீன்; அ-யBப்த கூன 'இன்தஹுமுல் 'இZஜ்Zஜத Fப இன்ன்னல் 'இZஜ்Zஜத லில்லாஹி ஜமீ'ஆ
4:139. இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.
4:140
4:140 وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِى الْـكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰيٰتِ اللّٰهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَاُبِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِىْ حَدِيْثٍ غَيْرِهٖۤ‌ ‌ ۖ اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ جَامِعُ‌‌‌الْمُنٰفِقِيْنَ وَالْكٰفِرِيْنَ فِىْ جَهَـنَّمَ جَمِيْعَاۨ ۙ‏
وَقَدْ نَزَّلَ இறக்கி விட்டான் عَلَيْكُمْ உங்கள் மீது فِى الْـكِتٰبِ வேதத்தில் اَنْ என்று اِذَا سَمِعْتُمْ நீங்கள் செவியுற்றால் اٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் يُكْفَرُ நிராகரிக்கப்படுகிறது بِهَا அவற்றை وَيُسْتَهْزَا இன்னும் பரிகசிக்கப்படுகிறது بِهَا அவற்றை فَلَا تَقْعُدُوْا உட்காராதீர்கள் مَعَهُمْ அவர்களுடன் حَتّٰى வரை يَخُوْضُوْا ஈடுபடுவார்கள் فِىْ حَدِيْثٍ பேச்சில் غَيْرِهٖۤ‌ ۖ அது அல்லாத வேறு اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் اِذًا அப்போது مِّثْلُهُمْ‌ؕ அவர்களைப் போன்று اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் جَامِع ஒன்று சேர்ப்பான் ‌الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்களை وَالْكٰفِرِيْنَ இன்னும் நிராகரிப்பவர்களை فِىْ جَهَـنَّمَ நரகத்தில் جَمِيْعَاۨ ۙ‏ அனைவரையும்
4:140. வ கத் னZஜ்Zஜல 'அலய்கும் Fபில் கிதாBபி அன் இதா ஸமிஃதும் ஆயாதில் லாஹி யுக்Fபரு Bபிஹா வ யுஸ்தஹ்Zஜ உ Bபிஹா Fபலா தக்'உதூ ம'அஹும் ஹத்தா யகூளூ Fபீ ஹதீதின் கய்ரிஹ்; இன்னகும் இதம் மித்லுஹும்; இன்னல் லாஹ ஜாமி'உல் முனாFபிகீன வல் காFபிரீன Fபீ ஜஹன்னம ஜமீ'ஆ
4:140. (முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.
4:141
4:141 الَّذِيْنَ يَتَرَ بَّصُوْنَ بِكُمْ‌ ۚ فَاِنْ كَانَ لَـكُمْ فَتْحٌ مِّنَ اللّٰهِ قَالُـوْۤا اَلَمْ نَـكُنْ مَّعَكُمْ ‌ ۖ وَاِنْ كَانَ لِلْكٰفِرِيْنَ نَصِيْبٌۙ قَالُـوْۤا اَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ وَنَمْنَعْكُمْ مِّنَ الْمُؤْمِنِيْنَ‌ ؕ فَاللّٰهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ ‌ؕ وَلَنْ يَّجْعَلَ اللّٰهُ لِلْكٰفِرِيْنَ عَلَى الْمُؤْمِنِيْنَ سَبِيْلًا
الَّذِيْنَ எவர்கள் يَتَرَ بَّصُوْنَ எதிர்பார்க்கின்றனர் بِكُمْ‌ ۚ உங்களுக்கு فَاِنْ كَانَ இருந்தால் لَـكُمْ உங்களுக்கு فَتْحٌ ஒரு வெற்றி مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து قَالُـوْۤا கூறினர் اَلَمْ نَـكُنْ நாங்களும் இருக்க வில்லையா? مَّعَكُمْ ۖ உங்களுடன் وَاِنْ كَانَ இருந்தால் لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு نَصِيْبٌۙ ஓர் அளவு قَالُـوْۤا கூறினர் اَلَمْ نَسْتَحْوِذْ நாங்கள் வெற்றி கொள்ளவில்லையே عَلَيْكُمْ உங்கள் மீது وَنَمْنَعْكُمْ இன்னும் உங்களைப் பாதுகாக்க(வில்லையா) مِّنَ இருந்து الْمُؤْمِنِيْنَ‌ ؕ நம்பிக்கையாளர்கள் فَاللّٰهُ அல்லாஹ் يَحْكُمُ தீர்ப்பளிப்பான் بَيْنَكُمْ உங்களுக்கிடையில் يَوْمَ الْقِيٰمَةِ ؕ மறுமை நாளில் وَلَنْ يَّجْعَلَ ஆக்கவே மாட்டான் اللّٰهُ அல்லாஹ் لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு عَلَى மீது الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்கள் سَبِيْلًا‏ ஒரு வழியை
4:141. அல்லதீன யதரBப் Bபஸூன Bபிகும் Fப இன் கான லகும் Fபத்ஹும் மினல் லாஹி காலூ அலம் னகும் ம'அகும் வ இன் கான லில்காFபிரீன னஸீBபுன் காலூ அலம் னஸ்தஹ் வித் 'அலய்கும் வ னம்ம்னஃகும் மினல் மு'மினீன்; Fபல்லாஹு யஹ்குமு Bபய்னகும் யவ்மல் கியாமஹ்; வ லய் யஜ்'அலல் லாஹு லில்காFபிரீன 'அலல் மு'மினீன ஸBபீலா
4:141. (இந்நயவஞ்சகர்கள்) உங்களை எப்பொழுதும் கவனித்தவர்களாகவே இருக்கின்றனர்; அல்லாஹ்வின் அருளினால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால், (அவர்கள் உங்களிடம் வந்து) “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறுகின்றனர்; மாறாக, காஃபிர்களுக்கு ஏதாவது வெற்றி(ப் பொருள்) கிடைத்தால் (அவர்களிடம் சென்று: அவர்களுடன் சேர்ந்து) “உங்களை நாங்கள் வெற்றிக்கொள்ளக்கூடிய நிலையிலிருந்தும் அந்த விசுவாசிகளிடமிருந்து காப்பாற்றவில்லையா?” என்று கூறுகின்றனர்; எனவே அல்லாஹ் உங்களுக்கும் (அவர்களுக்கும்) இடையே நிச்சயமாக மறுமை நாளில் தீர்ப்பு வழங்குவான்; மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.
4:142
4:142 اِنَّ الْمُنٰفِقِيْنَ يُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُهُمْ‌ ۚ وَاِذَا قَامُوْۤا اِلَى الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰى ۙ يُرَآءُوْنَ النَّاسَ وَلَا يَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِيْلًا ۙ‏
اِنَّ நிச்சயமாக الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்கள் يُخٰدِعُوْنَ வஞ்சிக்கின்றனர் اللّٰهَ அல்லாஹ்வை وَهُوَ அவன் خَادِعُوْهُمْ‌ ۚ வஞ்சிப்பவன்/அவர்களை وَاِذَا قَامُوْۤا அவர்கள் நின்றால் اِلَى الصَّلٰوةِ தொழுகைக்கு قَامُوْا நிற்கின்றனர் كُسَالٰى ۙ சோம்பேறிகளாக يُرَآءُوْنَ காண்பிக்கின்றனர் النَّاسَ மனிதர்களுக்கு وَلَا يَذْكُرُوْنَ நினைவு கூரமாட்டார்கள் اللّٰهَ அல்லாஹ்வை اِلَّا தவிர قَلِيْلًا ۙ‏ குறைவாகவே
4:142. இன்னல் முனாFபிகீன யுகாதி'ஊனல் லாஹ வ ஹுவ காதி'உஹும் வ இதா காமூ இலஸ் ஸலாதி காமூ குஸாலா யுரா'ஊனன் னாஸ வலா யத்குரூனல் லாஹ இல்லா கலீலா
4:142. நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.
4:143
4:143 مُّذَبْذَبِيْنَ بَيْنَ ‌ ۖ ذٰ لِكَ لَاۤ اِلٰى هٰٓؤُلَاۤءِ وَلَاۤ اِلٰى هٰٓؤُلَاۤءِ‌ ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِيْلًا‏
مُّذَبْذَبِيْنَ தடுமாறியவர்களாக بَيْنَ ۖ இடையில் ذٰ لِكَ அதற்கு لَاۤ இல்லை اِلٰى هٰٓؤُلَاۤءِ இவர்களுடன் وَلَاۤ இல்லை اِلٰى உடன் هٰٓؤُلَاۤءِ‌ ؕ இவர்கள் وَمَنْ எவரை يُّضْلِلِ வழிகெடுப்பான் اللّٰهُ அல்லாஹ் فَلَنْ تَجِدَ அறவே பெறமாட்டீர் لَهٗ அவருக்கு سَبِيْلًا‏ ஒரு வழியை
4:143. முதBப்தBபீன Bபய்ன தாலிக லா இலா ஹா' உலா'இ வ லா இலா ஹா'உலா'; வ மய் யுள்லி லில்லாஹு Fபலன் தஜித லஹூ ஸBபீலா
4:143. இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை, காஃபிர்களின் பக்கமுமில்லை; இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர்.
4:144
4:144 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْكٰفِرِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ‌ ؕ اَ تُرِيْدُوْنَ اَنْ تَجْعَلُوْا لِلّٰهِ عَلَيْكُمْ سُلْطٰنًا مُّبِيْنًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَتَّخِذُوا ஆக்காதீர்கள் الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களை اَوْلِيَآءَ பொறுப்பாளர்களாக مِنْ دُوْنِ அன்றி الْمُؤْمِنِيْنَ‌ ؕ நம்பிக்கையாளர்கள் اَ تُرِيْدُوْنَ நாடுகிறீர்களா? اَنْ تَجْعَلُوْا நீங்கள் ஆக்குவது لِلّٰهِ அல்லாஹ்விற்கு عَلَيْكُمْ உங்களுக்கு எதிராக سُلْطٰنًا ஒரு சான்றை مُّبِيْنًا‏ தெளிவானது
4:144. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதுல் காFபிரீன அவ்லியா'அ மின் தூனில் மு'மினீன்; அதுரீ தூன அன் தஜ்'அலூ லில்லாஹி 'அலய்கும் ஸுல்தானம் முBபீனா
4:144. முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா?
4:145
4:145 اِنَّ الْمُنٰفِقِيْنَ فِى الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِ‌ ۚ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيْرًا ۙ‏
اِنَّ நிச்சயமாக الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்கள் فِى الدَّرْكِ அடுக்கில் الْاَسْفَلِ மிகக் கீழ் مِنَ النَّارِ‌ ۚ நரகத்தின் وَلَنْ تَجِدَ காணமாட்டீர் لَهُمْ அவர்களுக்கு نَصِيْرًا ۙ‏ ஓர் உதவியாளரை
4:145. இன்னல் முனாFபிகீன Fபித்தர்கில் அஸ்Fபலி மினன் னாரி வ லன் தஜித லஹும் னஸீரா
4:145. நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.
4:146
4:146 اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَاعْتَصَمُوْا بِاللّٰهِ وَاَخْلَصُوْا دِيْنَهُمْ لِلّٰهِ فَاُولٰٓٮِٕكَ مَعَ الْمُؤْمِنِيْنَ‌ ؕ وَسَوْفَ يُـؤْتِ اللّٰهُ الْمُؤْمِنِيْنَ اَجْرًا عَظِيْمًا‏
اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் تَابُوْا திருந்தி பாவமன்னிப்புக் கோரினார் وَاَصْلَحُوْا இன்னும் சீர்திருத்தினர் وَاعْتَصَمُوْا இன்னும் பற்றிப் பிடித்தனர் بِاللّٰهِ அல்லாஹ்வை وَاَخْلَصُوْا இன்னும் தூய்மைப்படுத்தினர் دِيْنَهُمْ தங்கள் வழிபாட்டை لِلّٰهِ அல்லாஹ்விற்கு فَاُولٰٓٮِٕكَ அவர்கள் مَعَ உடன் الْمُؤْمِنِيْنَ‌ ؕ நம்பிக்கையாளர்கள் وَسَوْفَ يُـؤْتِ கொடுப்பான் اللّٰهُ அல்லாஹ் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு اَجْرًا கூலியை عَظِيْمًا‏ மகத்தானது
4:146. இல்லல் லதீன தாBபூ வ அஸ்லஹூ வஃதஸமூ Bபில்லாஹி வ அக்லஸூ தீனஹும் லில்லாஹி Fபஉலா'இக ம'அல் மு'மினீன வ ஸவ்Fப யு'தில் லாஹுல் மு'மினீன அஜ்ரன் 'அளீமா
4:146. யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்; மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான்.
4:147
4:147 مَا يَفْعَلُ اللّٰهُ بِعَذَابِكُمْ اِنْ شَكَرْتُمْ وَاٰمَنْتُمْ‌ ؕ وَكَانَ اللّٰهُ شَاكِرًا عَلِيْمًا‏
مَا என்ன? يَفْعَلُ செய்வான் اللّٰهُ அல்லாஹ் بِعَذَابِكُمْ உங்களை வேதனை செய்வது கொண்டு اِنْ شَكَرْتُمْ நீங்கள் நன்றி செலுத்தினால் وَاٰمَنْتُمْ‌ ؕ இன்னும் நீங்கள் நம்பிக்கை கொண்டால் وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் شَاكِرًا நன்றியாளனாக عَلِيْمًا‏ நன்கறிந்தவனாக
4:147. மா யFப்'அலுல் லாஹு Bபி 'அதாBபிகும் இன் ஷகர்தும் வ ஆமன்தும்; வ கானல் லாஹு ஷாகிரன் 'அலீமா
4:147. நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான்.
4:148
4:148 لَا يُحِبُّ اللّٰهُ الْجَــهْرَ بِالسُّوْٓءِ مِنَ الْقَوْلِ اِلَّا مَنْ ظُلِمَ‌ؕ وَكَانَ اللّٰهُ سَمِيْعًا عَلِيْمًا‏
لَا يُحِبُّ விரும்ப மாட்டான் اللّٰهُ அல்லாஹ் الْجَــهْرَ பகிரங்கப்படுத்தி பேசுவதை بِالسُّوْٓءِ தீமையை مِنَ الْقَوْلِ பேச்சில் اِلَّا தவிர مَنْ எவர் ظُلِمَ‌ؕ அநீதி இழைக்கப்பட்டார் وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் سَمِيْعًا நன்குசெவியுறுபவனாக عَلِيْمًا‏ நன்கறிபவனாக
4:148. லா யுஹிBப்Bபுல்லாஹுல் ஜஹ்ர Bபிஸ் ஸூ'இ மினல் கவ்லி இல்லா மன் ளுலிம்; வ கானல்லாஹு ஸமீ'அன் 'அலீமா
4:148. அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறு யாரும்) வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை - அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
4:149
4:149 اِنْ تُبْدُوْا خَيْرًا اَوْ تُخْفُوْهُ اَوْ تَعْفُوْا عَنْ سُوْٓءٍ فَاِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا قَدِيْرًا‏
اِنْ تُبْدُوْا நீங்கள்வெளிப்படுத்தினால் خَيْرًا நன்மையை اَوْ அல்லது تُخْفُوْهُ நீங்கள் மறைத்தால்/அதை اَوْ அல்லது تَعْفُوْا நீங்கள் மன்னித்தால் عَنْ سُوْٓءٍ ஒரு கெடுதியை فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَفُوًّا பெரிதும் பிழை பொறுப்பவனாக قَدِيْرًا‏ பேராற்றலுடையவனாக
4:149. இன் துBப்தூ கய்ரன்ன் அவ் துக்Fபூஹு அவ் தஃFபூ 'அன் ஸூ'இன் Fப இன்னல் லாஹ கான 'அFபுவ்வன் கதீரா
4:149. நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) - ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான்.
4:150
4:150 اِنَّ الَّذِيْنَ يَكْفُرُوْنَ بِاللّٰهِ وَرُسُلِهٖ وَيُرِيْدُوْنَ اَنْ يُّفَرِّقُوْا بَيْنَ اللّٰهِ وَرُسُلِهٖ وَيَقُوْلُوْنَ نُؤْمِنُ بِبَعْضٍ وَّنَكْفُرُ بِبَعْضٍۙ وَّيُرِيْدُوْنَ اَنْ يَّتَّخِذُوْا بَيْنَ ذٰ لِكَ سَبِيْلًا ۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يَكْفُرُوْنَ நிராகரிக்கிறார்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَرُسُلِهٖ இன்னும் அவனுடைய தூதர்களை وَيُرِيْدُوْنَ இன்னும் நாடுகிறார்கள் اَنْ يُّفَرِّقُوْا அவர்கள் பிரிவினை செய்வது بَيْنَ இடையில் اللّٰهِ அல்லாஹ் وَرُسُلِهٖ இன்னும் அவனுடைய தூதர்களை وَيَقُوْلُوْنَ இன்னும் கூறுகின்றனர் نُؤْمِنُ நம்பிக்கை கொள்வோம் بِبَعْضٍ சிலரை وَّنَكْفُرُ இன்னும் நிராகரிப்போம் بِبَعْضٍۙ சிலரை وَّيُرِيْدُوْنَ இன்னும் நாடுகிறார்கள் اَنْ يَّتَّخِذُوْا அவர்கள் ஏற்படுத்த بَيْنَ மத்தியில் ذٰ لِكَ அதற்கு سَبِيْلًا ۙ‏ ஒரு பாதையை
4:150. இன்னல் லதீன யக்க்Fபுரூன Bபில்லாஹி வ ருஸுலிஹீ வ யுரீதூன அய் யுFபர்ரிகூ Bபய்னல் லாஹி வ ருஸுலிஹீ வ யகூலூன னு'மினு BபிBபஃளி(ன்)வ் வ னக்Fபுரு BபிBபஃ ளி(ன்)வ் வ யுரீதூன அய் யத்தகிதூ Bபய்ன தாலிக ஸBபீலா
4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.
4:151
4:151 اُولٰٓٮِٕكَ هُمُ الْـكٰفِرُوْنَ حَقًّا‌ ۚ وَ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا‏
اُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْـكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள் حَقًّا‌ ۚ உண்மையில் وَ اَعْتَدْنَا இன்னும் ஏற்படுத்தியுள்ளோம் لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு عَذَابًا வேதனையை مُّهِيْنًا‏ இழிவு தரும்
4:151. உலா'இக ஹுமுல் காFபிரூன ஹக்காவ்; வ அஃதத்னா லில்காFபிரீன 'அதாBபம் முஹீனா
4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
4:152
4:152 وَالَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ وَلَمْ يُفَرِّقُوْا بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ اُولٰٓٮِٕكَ سَوْفَ يُؤْتِيْهِمْ اُجُوْرَهُمْ ‌ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் بِاللّٰهِ அல்லாஹ்வை وَرُسُلِهٖ இன்னும் அவனுடைய தூதர்களை وَلَمْ يُفَرِّقُوْا இன்னும் பிரிவினை செய்யவில்லை بَيْنَ இடையில் اَحَدٍ ஒருவர் مِّنْهُمْ அவர்களில் اُولٰٓٮِٕكَ அவர்கள் سَوْفَ விரைவில்  يُؤْتِيْهِمْ அவர்களுக்கு கொடுப்பான் اُجُوْرَ கூலிகளை هُمْ ‌ؕ அவர்களுடைய وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا‏ மகாகருணையாளனாக
4:152. வல்லதீன ஆமனூ Bபில்லாஹி வ ருஸுலிஹீ வ லம் யுFபர்ரிகூ Bபய்ன அஹதிம் மின்ஹும் உலா'இக ஸவ்Fப யு'தீஹிம் உஜூரஹும்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
4:153
4:153 يَسْأَلُكَ اَهْلُ الْـكِتٰبِ اَنْ تُنَزِّلَ عَلَيْهِمْ كِتٰبًا مِّنَ السَّمَآءِ‌ فَقَدْ سَاَ لُوْا مُوْسٰٓى اَكْبَرَ مِنْ ذٰ لِكَ فَقَالُوْۤا اَرِنَا اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ بِظُلْمِهِمْ‌‌ ۚ ثُمَّ اتَّخَذُوا الْعِجْلَ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ فَعَفَوْنَا عَنْ ذٰ لِكَ‌‌‌‌ ۚ وَاٰتَيْنَا مُوْسٰى سُلْطٰنًا مُّبِيْنًا‏
يَسْأَلُكَ கேட்கிறார்(கள்)/உம்மிடம் اَهْلُ الْـكِتٰبِ வேதக்காரர்கள் اَنْ تُنَزِّلَ நீர் இறக்கும்படி عَلَيْهِمْ அவர்கள் மீது كِتٰبًا ஒரு வேதத்தை مِّنَ السَّمَآءِ‌ வானத்திலிருந்து فَقَدْ திட்டமாக سَاَ لُوْا கேட்டனர் مُوْسٰٓى மூஸா(விடம்) اَكْبَرَ மிகப் பெரியதை مِنْ ذٰ لِكَ இதை விட فَقَالُوْۤا கூறினர் اَرِنَا எங்களுக்குக் காண்பி اللّٰهَ அல்லாஹ்வை جَهْرَةً கண்கூடாக فَاَخَذَتْهُمُ ஆகவே, அவர்களைப் பிடித்தது الصّٰعِقَةُ இடிமுழக்கம் بِظُلْمِهِمْ‌ ۚ அவர்களின் அநியாயத்தினால் ثُمَّ பிறகு اتَّخَذُوا எடுத்துக் கொண்டனர் الْعِجْلَ காளைக் கன்றை مِنْۢ بَعْدِ பின்னர் مَا جَآءَتْهُمُ அவர்களிடம் வந்த(து) الْبَيِّنٰتُ தெளிவான அத்தாட்சிகள் فَعَفَوْنَا மன்னித்தோம் عَنْ ذٰ لِكَ‌ ۚ அதை وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் مُوْسٰى மூஸாவிற்கு سُلْطٰنًا சான்றை مُّبِيْنًا‏ தெளிவான(து)
4:153. யஸ்'அலுக அஹ்லுல் கிதாBபி அன் துனZஜ்Zஜில 'அலய்ஹிம் கிதாBபம் மினஸ் ஸமா'இ Fபகத் ஸ அலூ மூஸா அக்Bபர மின் தாலிக Fபகாலூ அரினல் லாஹ ஜஹ்ரதன் Fப அகதத் ஹுமுஸ் ஸா'இகது Bபிளுல்மிஹிம்; தும்மத் தகதுல் 'இஜ்ல மிம் Bபஃதி மா ஜா'அத் ஹுமுல் Bபய்யினாது Fப'அFபவ்னா 'அன்ன் தாலிக்; வ ஆதய்னா மூஸா ஸுல்தானம் முBபீனா
4:153. (நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள்; அதையும் நாம் மன்னித்தோம்; இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.
4:154
4:154 وَرَفَعْنَا فَوْقَهُمُ الطُّوْرَ بِمِيْثَاقِهِمْ وَقُلْنَا لَهُمُ ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُلْنَا لَهُمْ لَا تَعْدُوْا فِى السَّبْتِ وَاَخَذْنَا مِنْهُمْ مِّيْثَاقًا غَلِيْظًا‏
وَرَفَعْنَا மேலும் உயர்த்தினோம் فَوْقَهُمُ அவர்களுக்கு மேல் الطُّوْرَ மலையை بِمِيْثَاقِهِمْ அவர்களுடைய வாக்குறுதியின் காரணமாக وَقُلْنَا இன்னும் கூறினோம் لَهُمُ அவர்களுக்கு ادْخُلُوا நுழையுங்கள் الْبَابَ வாசலில் سُجَّدًا தலை குணிந்தவர்களாக وَّقُلْنَا இன்னும் கூறினோம் لَهُمْ அவர்களுக்கு لَا تَعْدُوْا வரம்பு மீறாதீர்கள் فِى السَّبْتِ சனிக்கிழமையில் وَاَخَذْنَا இன்னும் எடுத்தோம் مِنْهُمْ அவர்களிடம் مِّيْثَاقًا வாக்குறுதியை غَلِيْظًا‏ உறுதியானது
4:154. வ ரFபஃனா Fபவ்கஹுமுத் தூர Bபிமீதாகிஹிம் வ குல்னா லஹுமுத் குலுல் BபாBப ஸுஜ்ஜத(ன்)வ் வ குல்னா லஹும் லா தஃதூ Fபிஸ் ஸBப்தி வ அகத்னா மின்ஹும் மீதாகன் கலீளா
4:154. மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்; இன்னும் “இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்” என்று சொன்னோம்; மேலும் “(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்” என்றும் அவர்களுக்கு கூறினோம்; இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்.
4:155
4:155 فَبِمَا نَقْضِهِمْ مِّيْثَاقَهُمْ وَكُفْرِهِمْ بِاٰيٰتِ اللّٰهِ وَقَتْلِهِمُ الْاَنْۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ وَّقَوْلِهِمْ قُلُوْبُنَا غُلْفٌ ؕ بَلْ طَبَعَ اللّٰهُ عَلَيْهَا بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُوْنَ اِلَّا قَلِيْلًا‏
فَبِمَا نَقْضِهِمْ ஆகவே, அவர்கள் முறித்ததாலும் مِّيْثَاقَهُمْ தங்கள் வாக்குறுதியை وَكُفْرِهِمْ இன்னும் அவர்கள் நிராகரித்ததாலும் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் وَقَتْلِهِمُ இன்னும் அவர்கள் கொலை செய்ததாலும் الْاَنْۢبِيَآءَ நபிமார்களை بِغَيْرِ حَقٍّ நியாயமின்றி وَّقَوْلِهِمْ இன்னும் அவர்கள் கூறியதாலும் قُلُوْبُنَا எங்கள் உள்ளங்கள் غُلْفٌ ؕ திரையிடப்பட்டுள்ளன بَلْ மாறாக طَبَعَ முத்திரையிட்டான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهَا அவற்றின் மீது بِكُفْرِهِمْ அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக فَلَا يُؤْمِنُوْنَ ஆகவே நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் اِلَّا قَلِيْلًا‏ சிலரைத் தவிர
4:155. FபBபிமா னக்ளிஹிம் மீதாகஹும் வ குFப்ரிஹிம் Bபி ஆயாதில் லாஹி வ கத்லிஹிமுல் அம்Bபியா'அ Bபிகய்ரி ஹக்கி(ன்)வ் வ கவ்லிஹிம் குலூBபுனா குல்Fப்; Bபல் தBப'அல் லாஹு 'அலய்ஹா BபிகுFப்ரிஹிம் Fபலா யு'மினூன இல்லா கலீலா
4:155. அவர்களுடைய வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும்; அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்து விட்டதாலும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும், “எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன.” (எனவே எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று அவர்கள் கூறியதாலும், (அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;) அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் (அவர்களுடைய இருதயங்களின் மீது) முத்திரையிட்டுவிட்டான். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஈமான் கொள்ள மாட்டார்கள்.
4:156
4:156 وَّبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلٰى مَرْيَمَ بُهْتَانًـا عَظِيْمًا ۙ‏
وَّبِكُفْرِهِمْ இன்னும் அவர்கள் நிராகரித்ததாலும் وَقَوْلِهِمْ இன்னும் அவர்கள் கூறியதாலும் عَلٰى மீது مَرْيَمَ மர்யம் بُهْتَانًـا அவதூறை عَظِيْمًا ۙ‏ மாபெரும்
4:156. வ BபிகுFப்ரிஹிம் வ கவ்லிஹிம் 'அலா மர்யம Bபுஹ் தானன் 'அளீமா
4:156. இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).
4:157
4:157 وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللّٰهِ‌ ۚ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰـكِنْ شُبِّهَ لَهُمْ‌ ؕ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَـفُوْا فِيْهِ لَفِىْ شَكٍّ مِّنْهُ‌ ؕ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ‌ ۚ وَمَا قَتَلُوْهُ يَقِيْنًا ۢ ۙ‏
وَّقَوْلِهِمْ இன்னும் அவர்கள் கூறியதாலும் اِنَّا நிச்சயமாக நாம் قَتَلْنَا கொன்றோம் الْمَسِيْحَ மஸீஹை عِيْسَى ஈஸா ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய رَسُوْلَ தூதர் اللّٰهِ‌ ۚ அல்லாஹ்வின் وَمَا இல்லை قَتَلُوْهُ அவர்கள் அவரை கொன்றார்கள் وَمَا இன்னும் இல்லை صَلَبُوْهُ அவரை அவர்கள் சிலுவையில் அறைய وَلٰـكِنْ எனினும் شُبِّهَ தோற்றமாக்கப்பட்டான் لَهُمْ‌ ؕ அவர்களுக்கு وَاِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اخْتَلَـفُوْا முரண்பட்டனர் فِيْهِ அவர் விஷயத்தில் لَفِىْ شَكٍّ சந்தேகத்தில்தான் مِّنْهُ‌ ؕ அதில் مَا لَهُمْ அவர்களுக்கு இல்லை بِهٖ அதில் مِنْ عِلْمٍ ஓர் அறிவும் اِلَّا தவிர اتِّبَاعَ பின்பற்றுவது الظَّنِّ‌ ۚ சந்தேகத்தை وَمَا இன்னும் இல்லை قَتَلُوْهُ அவர்கள் அவரை கொல்ல يَقِيْنًا ۢ ۙ‏ உறுதியாக
4:157. வ கவ்லிஹிம் இன்னா கதல் னல் மஸீஹ 'ஈஸBப்-ன-மர்யம ரஸூலல் லாஹி வமா கதலூஹு வமா ஸலBபூஹு வ லாகின் ஷுBப்Bபிஹ லஹும்; வ இன்னல் லதீனக் தலFபூ Fபீஹீ லFபீ ஷக்கிம் மின்ஹ்; மா லஹும் Bபிஹீ மின் 'இல்மின் இல்லத் திBபா'அள் ளன்ன்; வமா கதலூஹு யகீனா
4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
4:158
4:158 بَلْ رَّفَعَهُ اللّٰهُ اِلَيْهِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا‏
بَلْ மாறாக رَّفَعَهُ உயர்த்தினான்/அவரை اللّٰهُ அல்லாஹ் اِلَيْهِ‌ ؕ தன்னளவில் وَكَانَ இன்னும் இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَزِيْزًا மிகைத்தவனாக حَكِيْمًا‏ மகா ஞானவானாக
4:158. Bபர் ரFப'அஹுல் லாஹு இலய்ஹ்; வ கானல் லாஹு 'அZஜீZஜன் ஹகீமா
4:158. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
4:159
4:159 وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَيُـؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ‌ ۚ وَيَوْمَ الْقِيٰمَةِ يَكُوْنُ عَلَيْهِمْ شَهِيْدًا‌ ۚ‏
وَاِنْ இல்லை (இருக்கமாட்டார்) مِّنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் எவரும் اِلَّا தவிர لَيُـؤْمِنَنَّ நிச்சயமாக நம்பிக்கை கொள்வார் بِهٖ அவரை قَبْلَ முன்னர் مَوْتِهٖ‌ ۚ அவர் இறப்பதற்கு وَيَوْمَ الْقِيٰمَةِ இன்னும் மறுமை நாளில் يَكُوْنُ இருப்பார் عَلَيْهِمْ இவர்களுக்கு எதிராக شَهِيْدًا‌ ۚ‏ சாட்சி கூறுபவராக
4:159. வ இம் மின் அஹ்லில் கிதாBபி இல்லா லயு'மினன்ன Bபிஹீ கBப்ல மவ்திஹீ வ யவ்மல் கியாமதி யகூனு 'அலய்ஹிம் ஷஹீதா
4:159. வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
4:160
4:160 فَبِظُلْمٍ مِّنَ الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبٰتٍ اُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيْلِ اللّٰهِ كَثِيْرًا ۙ‏
فَبِظُلْمٍ அநியாயத்தின் காரணமாக مِّنَ الَّذِيْنَ هَادُوْا யூதர்களின் حَرَّمْنَا விலக்கினோம் عَلَيْهِمْ அவர்களுக்கு طَيِّبٰتٍ நல்லவற்றை اُحِلَّتْ அனுமதிக்கப்பட்டன لَهُمْ அவர்களுக்கு وَبِصَدِّهِمْ இன்னும் அவர்கள் தடுப்பது عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ அல்லாஹ்வின் كَثِيْرًا அதிகமானவர்களை
4:160. FபBபிளுல்மின் மினல் லதீன ஹாதூ ஹர்ரம்னா 'அலய்ஹிம் தய்யிBபாதின் உஹில்லத் லஹும் வ Bபிஸதிஹிம் 'அன் ஸBபீலில் லாஹி கதீரா
4:160. எனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்; இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்.)
4:161
4:161 وَّاَخْذِهِمُ الرِّبٰوا وَقَدْ نُهُوْا عَنْهُ وَاَكْلِـهِمْ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ‌ ؕ وَاَعْتَدْنَـا لِلْـكٰفِرِيْنَ مِنْهُمْ عَذَابًا اَ لِيْمًا‏
وَّاَخْذِهِمُ இன்னும் அவர்கள் வாங்குவது الرِّبٰوا வட்டியை وَقَدْ نُهُوْا அவர்களுமோ தடுக்கப்பட்டிருக்க عَنْهُ அதிலிருந்து وَاَكْلِـهِمْ இன்னும் அவர்கள் சாப்பிடுவது اَمْوَالَ செல்வங்களை النَّاسِ மக்களின் بِالْبَاطِلِ‌ ؕ தப்பான வழியில் وَاَعْتَدْنَـا இன்னும் ஏற்படுத்தினோம் لِلْـكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு مِنْهُمْ அவர்களில் عَذَابًا வேதனையை اَ لِيْمًا‏ துன்புறுத்தக் கூடிய(து)
4:161. வ அக்திஹிமுர் ரிBபா வ கத் னுஹூ 'அன்ஹு வ அக்லிஹிம் அம்வாலன் னாஸி Bபில்Bபாதில்; வ அஃதத்னா லில்காFபிரீன மின்ஹும் 'அதாBபன் அலீமா
4:161. வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.
4:162
4:162 لٰـكِنِ الرّٰسِخُوْنَ فِى الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُوْنَ يُـؤْمِنُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ‌ وَالْمُقِيْمِيْنَ الصَّلٰوةَ‌ وَالْمُؤْتُوْنَ الزَّكٰوةَ وَ الْمُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ ؕ اُولٰٓٮِٕكَ سَنُؤْتِيْهِمْ اَجْرًا عَظِيْمًا
لٰـكِنِ எனினும் الرّٰسِخُوْنَ தேர்ச்சி பெற்றவர்கள் فِى الْعِلْمِ கல்வியில் مِنْهُمْ அவர்களில் وَالْمُؤْمِنُوْنَ இன்னும் நம்பிக்கையாளர்கள் يُـؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கின்றனர் بِمَاۤ எதை اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு وَمَاۤ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது مِنْ قَبْلِكَ‌ உமக்கு முன்னர் وَالْمُقِيْمِيْنَ இன்னும் நிலை நிறுத்துபவர்கள் الصَّلٰوةَ‌ தொழுகையை وَالْمُؤْتُوْنَ இன்னும் கொடுப்பவர்கள் الزَّكٰوةَ ஸகாத்தை وَ الْمُؤْمِنُوْنَ இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِ ؕ இன்னும் மறுமை நாளை اُولٰٓٮِٕكَ இவர்கள் سَنُؤْتِيْهِمْ கொடுப்போம்/இவர்களுக்கு اَجْرًا கூலியை عَظِيْمًا‏ மகத்தானது
4:162. லாகினிர் ராஸிகூன Fபில்'இல்மி மின்ஹும் வல்மு'மினூன யு'மினூன Bபிமா உன்Zஜில இலய்க வ மா உன்Zஜில மின் கBப்லிக வல்முகீமீனஸ் ஸலாத வல்மு'தூனZஜ் Zஜகாத வல்மு 'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; உலா'இக ஸனு'தீஹிம் அஜ்ரன் 'அளீமா
4:162. எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
4:163
4:163 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ‌ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ۚ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு كَمَاۤ போன்றே اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلٰى نُوْحٍ நூஹுக்கு وَّالنَّبِيّٖنَ இன்னும் நபிமார்களுக்கு مِنْۢ بَعْدِهٖ‌ ۚ அவருக்குப் பின்னர் وَاَوْحَيْنَاۤ இன்னும் வஹீ அறிவித்தோம் اِلٰٓى اِبْرٰهِيْمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَعِيْسٰى இன்னும் ஈஸா وَاَيُّوْبَ இன்னும் அய்யூப் وَيُوْنُسَ இன்னும் யூனுஸ் وَهٰرُوْنَ இன்னும் ஹாரூன் وَسُلَيْمٰنَ‌ ۚ இன்னும் ஸுலைமான் وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் دَاوٗدَ தாவூதுக்கு زَبُوْرًا‌ ஸபூரை
4:163. இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
4:164
4:164 وَرُسُلًا قَدْ قَصَصْنٰهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ‌ ؕ وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰى تَكْلِيْمًا ‌ۚ‏
وَرُسُلًا இன்னும் தூதர்களை قَدْ திட்டமாக قَصَصْنٰهُمْ عَلَيْكَ விவரித்தோம்/அவர்களை/உமக்கு مِنْ قَبْلُ முன்னர் وَرُسُلًا இன்னும் தூதர்களை لَّمْ نَقْصُصْهُمْ விவரிக்கவில்லை / அவர்களை عَلَيْكَ‌ ؕ உமக்கு وَكَلَّمَ பேசினான் اللّٰهُ அல்லாஹ் مُوْسٰى மூஸாவுடன் تَكْلِيْمًا பேசுதல்
4:164. வ ருஸுலன் கத் கஸஸ் னாஹும் 'அலய்க மின் கBப்லு வ ருஸுலல் லம் னக்ஸுஸ்ஹும் 'அலய்க்; வ கல்லமல்லாஹு மூஸா தக்லீமா
4:164. (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.
4:165
4:165 رُسُلًا مُّبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَى اللّٰهِ حُجَّةٌ ۢ بَعْدَ الرُّسُلِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا‏
رُسُلًا தூதர்களை مُّبَشِّرِيْنَ நற்செய்தி கூறுபவர்களாக وَمُنْذِرِيْنَ இன்னும் எச்சரிப்பவர்களாக لِئَلَّا يَكُوْنَ இல்லாதிருக்க لِلنَّاسِ மக்களுக்கு عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது حُجَّةٌ ۢ ஓர் ஆதாரம் بَعْدَ பின்னர் الرُّسُلِ‌ ؕ தூதர்கள் وَكَانَ اللّٰهُ அல்லாஹ் இருக்கின்றான் عَزِيْزًا மிகைத்தவனாக حَكِيْمًا‏ மகா ஞானவானாக
4:165. ருஸுலம் முBபஷ்ஷிரீன வ முன்திரீன லி'அல்லா யகூன லின்னாஸி 'அலல் லாஹி ஹுஜ்ஜதும் Bபஃதர் ருஸுல்; வ கானல்லாஹு 'அZஜீZஜன் ஹகீமா
4:165. தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.
4:166
4:166 لٰـكِنِ اللّٰهُ يَشْهَدُ بِمَاۤ اَنْزَلَ اِلَيْكَ‌ اَنْزَلَهٗ بِعِلْمِهٖ‌ ۚ وَالْمَلٰٓٮِٕكَةُ يَشْهَدُوْنَ‌ ؕ وَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا ؕ‏
لٰـكِنِ என்றாலும் اللّٰهُ அல்லாஹ் يَشْهَدُ சாட்சி கூறுகிறான் بِمَاۤ اَنْزَلَ இறக்கியதற்கு اِلَيْكَ‌ உமக்கு اَنْزَلَهٗ இறக்கினான்/அதை بِعِلْمِهٖ‌ ۚ அவனுடைய அறிவைக் கொண்டே وَالْمَلٰٓٮِٕكَةُ இன்னும் வானவர்கள் يَشْهَدُوْنَ‌ ؕ சாட்சி கூறுகின்றனர் وَكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்வே شَهِيْدًا ؕ‏ சாட்சியாளனாக
4:166. லாகினில் லாஹு யஷ்ஹது Bபிமா அன்Zஜல இலய்க அன்Zஜலஹூ Bபி'இல்மிஹீ வல் மலா'இகது யஷ்ஹதூன்; வ கFபா Bபில்லாஹி ஷஹீதா
4:166. (நபியே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்; அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்; மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள்; மேலும் சாட்சியங் கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன்.
4:167
4:167 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَ صَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ قَدْ ضَلُّوْا ضَلٰلًاۢ بَعِيْدًا‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَ صَدُّوْا இன்னும் தடுத்தார்கள் عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ அல்லாஹ்வுடைய قَد ضَلُّوْا திட்டமாக வழி கெட்டனர் ضَلٰلًاۢ வழிகேடாக بَعِيْدًا‏ தூரமான(து)
4:167. இன்னல் லதீன கFபரூ வ ஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹி கத் ளல்லூ ளலாலம் Bப'ஈதா
4:167. நிராகரித்து அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மனிதர்களை) தடுத்து கொண்டு இருக்கிறார்களே நிச்சயமாக அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் வழி கெட்டுச் சென்று விட்டார்கள்.
4:168
4:168 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَظَلَمُوْا لَمْ يَكُنِ اللّٰهُ لِيَـغْفِرَ لَهُمْ وَلَا لِيَـهْدِيَهُمْ طَرِيْقًا ۙ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَظَلَمُوْا இன்னும் அநியாயம் செய்தார்கள் لَمْ يَكُنِ இல்லை اللّٰهُ அல்லாஹ் لِيَـغْفِرَ மன்னிப்பவனாக لَهُمْ அவர்களை وَلَا இன்னும் இல்லை لِيَـهْدِيَهُمْ அவர்களுக்கு வழிகாட்டுபவனாக طَرِيْقًا ۙ‏ ஒரு வழியை
4:168. இன்னல் லதீனகFபரூ வ ளலமூ லம் யகுனில்லாஹு லியக்Fபிர லஹும் வலா லியஹ்தியஹும் தரீகா
4:168. நிச்சயமாக (இவ்வாறு) நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்க மாட்டான்; அன்றி அவர்களை நேர் வழியிலும் செலுத்த மாட்டான்.
4:169
4:169 اِلَّا طَرِيْقَ جَهَـنَّمَ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ وَكَانَ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا‏
اِلَّا தவிர طَرِيْقَ வழி جَهَـنَّمَ நரகத்தின் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَاۤ அதில் اَبَدًا‌ ؕ என்றென்றும் وَكَانَ ذٰ لِكَ ஆகிவிட்டது/இது عَلَى اللّٰهِ அல்லாஹ்வுக்கு يَسِيْرًا‏ சுலபமாக
4:169. இல்லா தரீக ஜஹன்னம்ம காலிதீன Fபீஹா அBபதா; வ கான தாலிக 'அலல் லாஹி யஸீரா
4:169. நரகத்தின் வழியைத் தவிர - அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்; இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது.
4:170
4:170 يٰۤـاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الرَّسُوْلُ بِالْحَـقِّ مِنْ رَّبِّكُمْ فَاٰمِنُوْا خَيْرًا لَّـكُمْ‌ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا‏
يٰۤـاَيُّهَا النَّاسُ மக்களே قَدْ جَآء வந்து விட்டார் كُمُ உங்களிடம் الرَّسُوْلُ இத்தூதர் بِالْحَـقِّ சத்தியத்தைக் கொண்டு مِنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் فَاٰمِنُوْا ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள் خَيْرًا மிக்க நன்று لَّـكُمْ‌ ؕ உங்களுக்கு وَاِنْ تَكْفُرُوْا நீங்கள் நிராகரித்தால் فَاِنَّ நிச்சயமாக لِلّٰهِ அல்லாஹ்விற்கு مَا فِى السَّمٰوٰتِ எவை/வானங்களில் وَالْاَرْضِ‌ ؕ இன்னும் பூமி وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا‏ மகா ஞானவானாக
4:170. யா அய்யுஹன் னாஸு கத் ஜா'அகுமுர் ரஸூலு Bபில்ஹக்கி மிர் ரBப்Bபிகும் Fப ஆமினூ கய்ரல் லகும்; வ இன் தக்Fபுரூ Fப இன்ன லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ கானல் லாஹு 'அலீமன்ன் ஹகீமா
4:170. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான்.
4:171
4:171 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِىْ دِيْـنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَـقَّ‌ ؕ اِنَّمَا الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ‌ ۚ اَ لْقٰٮهَاۤ اِلٰى مَرْيَمَ وَرُوْحٌ مِّنْهُ‌ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ‌ ۚ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ‌ ؕ اِنْتَهُوْا خَيْرًا لَّـكُمْ‌ ؕ اِنَّمَا اللّٰهُ اِلٰـهٌ وَّاحِدٌ‌ ؕ سُبْحٰنَهٗۤ اَنْ يَّكُوْنَ لَهٗ وَلَدٌ‌ ۘ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا
يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே لَا تَغْلُوْا அளவு கடக்காதீர் فِىْ دِيْـنِكُمْ உங்கள் மார்க்கத்தில் وَلَا تَقُوْلُوْا இன்னும் கூறாதீர்கள் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது اِلَّا الْحَـقَّ‌ ؕ உண்மையைத் தவிர اِنَّمَا எல்லாம் الْمَسِيْحُ மஸீஹ் عِيْسَى ஈஸா ابْنُ مَرْيَمَ மர்யமுடைய மகன் رَسُوْلُ தூதர் اللّٰهِ அல்லாஹ்வுடைய وَكَلِمَتُهٗ‌ ۚ இன்னும் அவனுடைய வார்த்தை اَ لْقٰٮهَاۤ சேர்ப்பித்தான்/அதை اِلٰى مَرْيَمَ மர்யமின் பக்கம் وَرُوْحٌ இன்னும் உயிர் مِّنْهُ‌ அவன் புறத்திலிருந்து فَاٰمِنُوْا ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَرُسُلِهٖ‌ ۚ இன்னும் அவனுடைய தூதர்களை وَلَا تَقُوْلُوْا இன்னும் கூறாதீர்கள் ثَلٰثَةٌ‌ ؕ மூவர் اِنْتَهُوْا விலகுங்கள் خَيْرًا மிக நன்று لَّـكُمْ‌ ؕ உங்களுக்கு اِنَّمَا اللّٰهُ அல்லாஹ் எல்லாம் اِلٰـهٌ ஒரு கடவுள் وَّاحِدٌ‌ ؕ ஒரே سُبْحٰنَهٗۤ அவன் மிக பரிசுத்தமானவன் اَنْ يَّكُوْنَ இருப்பதைவிட்டு لَهٗ அவனுக்கு وَلَدٌ‌ ۘ குழந்தை لَهٗ அவனுக்கே مَا எவை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَمَا فِى الْاَرْضِ‌ؕ இன்னும் எவை/பூமியில் وَكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்வே وَكِيْلًا‏ பொறுப்பாளனாக
4:171. யா அஹ்லல் கிதாBபி லா தக்லூ Fபீ தீனிகும் வலா தகூலூ 'அலல் லாஹி இல்லல்ஹக்க்; இன்னமல் மஸீஹு 'ஈஸBப்-னு-மர்யம ரஸூலுல் லாஹி வ கலிமதுஹூ அல்காஹா இலா மர்யம வ ரூஹும் மின்ஹும் Fப ஆமினூ Bபில்லாஹி வ ருஸுலிஹீ வலா தகூலூ தலாதஹ்; இன்தஹூ கய்ரல்லகும்; இன்னமல் லாஹு இலாஹு(ன்)வ் வாஹித், ஸுBப்ஹானஹூ அ(ன்)ய் யகூன லஹூ வலத்; லஹூ மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கFபா Bபில்லாஹி வகீலா
4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
4:172
4:172 لَنْ يَّسْتَـنْكِفَ الْمَسِيْحُ اَنْ يَّكُوْنَ عَبْدًالِّلّٰهِ وَلَا الْمَلٰٓٮِٕكَةُ الْمُقَرَّبُوْنَ‌ؕ وَمَنْ يَّسْتَـنْكِفْ عَنْ عِبَادَ تِهٖ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ اِلَيْهِ جَمِيْعًا‏
لَنْ يَّسْتَـنْكِفَ திமிரு கொள்ளமாட்டார்(கள்) الْمَسِيْحُ ஈஸா (மஸீஹ்) اَنْ يَّكُوْنَ இருப்பதைவிட்டு عَبْدً அடிமையாக الِّلّٰهِ அல்லாஹ்விற்கு وَلَا இன்னும் இல்லை الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் الْمُقَرَّبُوْنَ‌ؕ நெருக்கமானவர்கள் وَمَنْ எவர்(கள்) يَّسْتَـنْكِفْ திமிரு கொள்வார்(கள்) عَنْ விட்டு عِبَادَ تِهٖ அவனைவணங்குவது وَيَسْتَكْبِرْ இன்னும் பெருமை கொள்வார்(கள்) فَسَيَحْشُرُ ஒன்று திரட்டுவான் هُمْ அவர்கள் اِلَيْهِ தன் பக்கம் جَمِيْعًا‏ அனைவரையும்
4:172. லய் யஸ்தன்கிFபல் மஸீஹு அய் யகூன 'அBப்தல் லில்லாஹி வ லல் மலா'இகதுல் முகர்ரBபூன்; வ மய் யஸ்தன்கிFப் 'அன் இBபாததிஹீ வ யஸ்தக்Bபிர் Fபஸ யஹ்ஷுருஹும் இலய்ஹி ஜமீ'ஆ
4:172. (ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ; அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.
4:173
4:173 فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُوَفِّيْهِمْ اُجُوْرَهُمْ وَ يَزِيْدُهُمْ مِّنْ فَضْلِهٖ‌ۚ وَاَمَّا الَّذِيْنَ اسْتَـنْكَفُوْا وَاسْتَكْبَرُوْا فَيُعَذِّبُهُمْ عَذَابًا اَ لِيْمًا  ۙ وَّلَا يَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِيًّا وَّلَا نَصِيْرًا‏
فَاَمَّا ஆகவே الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை فَيُوَفِّيْهِمْ முழுமையாக நிறைவேற்றுவான்/ அவர்களுக்கு اُجُوْرَهُمْ கூலிகளை/அவர்களுடைய وَ يَزِيْدُ இன்னும் அதிகப்படுத்துவான் هُمْ அவர்களுக்கு مِّنْ فَضْلِهٖ‌ۚ தன் அருளிலிருந்து وَاَمَّا ஆகவே الَّذِيْنَ எவர்கள் اسْتَـنْكَفُوْا திமிரு பிடித்தார்கள் وَاسْتَكْبَرُوْا இன்னும் பெருமையடித்தார்கள் فَيُعَذِّبُهُمْ வேதனை செய்வான்/அவர்களை عَذَابًا வேதனையால் اَ لِيْمًا  ۙ துன்புறுத்தும் وَّلَا يَجِدُوْنَ இன்னும் காணமாட்டார்கள் لَهُمْ தங்களுக்கு مِّنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ்வை وَلِيًّا பாதுகாவலரை وَّلَا نَصِيْرًا‏ இன்னும் உதவியாளரை
4:173. Fப அம்மல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fப யுவFப்Fபீஹிம் உஜூரஹும் வ யZஜீதுஹும் மின் Fபள்லிஹீ வ அம்மல் லதீனஸ் தன்கFபூ வஸ்தக்Bபரூ Fப யு'அத்திBபுஹும் 'அதாBபன் அலீம வலா யஜிதூன லஹும் மின் தூனில் லாஹி வலிய்ய(ன்)வ் வலா னஸீரா
4:173. ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்.
4:174
4:174 يٰۤـاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمْ بُرْهَانٌ مِّنْ رَّبِّكُمْ وَاَنْزَلْنَاۤ اِلَيْكُمْ نُوْرًا مُّبِيْنًا‏
يٰۤـاَيُّهَا النَّاسُ மனிதர்களே! قَدْ திட்டமாக جَآءَ வந்துள்ளது كُمْ உங்களிடம் بُرْهَانٌ ஓர் அத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் وَاَنْزَلْنَاۤ இன்னும் இறக்கினோம் اِلَيْكُمْ உங்களுக்கு نُوْرًا ஓர் ஒளியை مُّبِيْنًا‏ தெளிவானது
4:174. யா அய்யுஹன் னாஸு கத் ஜா'அகும் Bபுர்ஹானும் மிர் ரBப்Bபிகும் வ அன்Zஜல்னா இலய்கும் னூரம் முBபீனா
4:174. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்.
4:175
4:175 فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَاعْتَصَمُوْا بِهٖ فَسَيُدْخِلُهُمْ فِىْ رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍۙ وَّيَهْدِيْهِمْ اِلَيْهِ صِرَاطًا مُّسْتَقِيْمًا ؕ‏
فَاَمَّا ஆகவே الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் بِاللّٰهِ அல்லாஹ்வை وَاعْتَصَمُوْا இன்னும் பற்றிப்பிடித்தார்கள் بِهٖ அவனை فَسَيُدْخِلُهُمْ நுழைப்பான்/ அவர்களை فِىْ رَحْمَةٍ கருணையில் مِّنْهُ தன் புறத்திலிருந்து وَفَضْلٍۙ இன்னும் அருள் وَّيَهْدِيْهِمْ இன்னும் வழிகாட்டுவான்/அவர்களுக்கு اِلَيْهِ தன் பக்கம் صِرَاطًا வழியை مُّسْتَقِيْمًا ؕ‏ நேரானது
4:175. Fப அம்மல் லதீன ஆமனூ Bபில்லாஹி வஃதஸமூ Bபிஹீ Fபஸ யுத்கிலுஹும் Fபீ ரஹ்மதிம் மின்ஹு வ Fபள்லி(ன்)வ் வ யஹ்தீஹிம் இலய்ஹி ஸிராதம் முஸ்தகீமா
4:175. ஆகவே, யார் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவ(ன் அருளிய நேர் வழியி)னை பலமாகப் பிடித்துக் கொள்கிறார்களோ, அவர்களைத் தன் ரஹ்மத்திலும், அருளிலும் புகச் செய்கிறான்; இன்னும் தன்னிடம் (அவர்கள் வந்து) சேரக்கூடிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான்.
4:176
4:176 يَسْتَفْتُوْنَكَ ؕ قُلِ اللّٰهُ يُفْتِيْكُمْ فِى الْـكَلٰلَةِ‌ ؕ اِنِ امْرُؤٌا هَلَكَ لَـيْسَ لَهٗ وَلَدٌ وَّلَهٗۤ اُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ‌ ۚ وَهُوَ يَرِثُهَاۤ اِنْ لَّمْ يَكُنْ لَّهَا وَلَدٌ‌  ؕ فَاِنْ كَانَـتَا اثْنَتَيْنِ فَلَهُمَا الثُّلُثٰنِ مِمَّا تَرَكَ‌ ؕ وَاِنْ كَانُوْۤا اِخْوَةً رِّجَالًا وَّنِسَآءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ‌ ؕ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اَنْ تَضِلُّوْا‌ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
يَسْتَفْتُوْنَكَ ؕ தீர்ப்பு கேட்கின்றனர் / உம்மிடம் قُلِ கூறுவீராக اللّٰهُ அல்லாஹ் يُفْتِيْكُمْ உங்களுக்கு கட்டளையிடுகிறான் فِى الْـكَلٰلَةِ‌ ؕ வாரிசு அற்றவர் பற்றி اِنِ امْرُؤٌا (ஆண்) மனிதன் هَلَكَ இறந்து விட்டான் لَـيْسَ இல்லை لَهٗ அவனுக்கு وَلَدٌ சந்ததி وَّلَهٗۤ இன்னும் அவனுக்கு اُخْتٌ ஒரு சகோதரி فَلَهَا அவளுக்கு نِصْفُ பாதி مَا تَرَكَ‌ ۚ எது/விட்டுச்சென்றான் وَهُوَ அவன் يَرِثُهَاۤ வாரிசாக ஆவான்/அவளுக்கு اِنْ لَّمْ يَكُنْ இல்லையென்றால் لَّهَا அவளுக்கு وَلَدٌ‌  ؕ சந்ததி فَاِنْ كَانَـتَا இருந்தால் اثْنَتَيْنِ இரு பெண்களாக فَلَهُمَا அவ்விருவருக்கும் الثُّلُثٰنِ மூன்றில் இரண்டு مِمَّا எதிலிருந்து تَرَكَ‌ ؕ விட்டுச் சென்றான் وَاِنْ كَانُوْۤا அவர்கள் இருந்தால் اِخْوَةً உடன் பிறந்தவர்கள் رِّجَالًا ஆண்களாக وَّنِسَآءً இன்னும் பெண்களாக فَلِلذَّكَرِ ஆணுக்கு مِثْلُ போன்று حَظِّ பங்கு الْاُنْثَيَيْنِ‌ ؕ இரு பெண்களின் يُبَيِّنُ விவரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு اَنْ تَضِلُّوْا‌ ؕ நீங்கள் வழிதவறாமல் இருப்பதற்காக وَاللّٰهُ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
4:176. யஸ்தFப்தூனக குலில்லாஹு யFப்தீகும் Fபில் கலாலஹ்; இனிம்ரு'உன் ஹலக லய்ஸ லஹூ வலது(ன்)வ் வ லஹூ உக்துன் Fபலஹா னிஸ்Fபு மா தரக்; வ ஹுவ யரிதுஹா இல் லம் யக்குல் லஹா வலத்; Fப இன் கானதத் னதய்னி Fபலஹுமத் துலுதானி மிம்ம்மா தரக்; வ இன் கானூ இக்வதர் ரிஜால(ன்)வ் வ னிஸா'அன் Fபலித் தகரி மித்லு ஹள்ளில் உன்தயய்ன்; யுBபய்யினுல்லாஹு லகும் அன் தளில்லூ; வல்லாஹு Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
4:176. (நபியே!) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்; ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்; இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள்; அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு - நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.