42. ஸூரத்துஷ் ஷூரா (கலந்தாலோசித்தல்)
மக்கீ, வசனங்கள்: 53

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
42:1
42:1 حٰمٓ‏
حٰمٓ‏ ஹா மீம்
42:1. ஹா மீம்
42:1. ஹா, மீம்.
42:2
42:2 عٓسٓقٓ‏
عٓسٓقٓ‏ அய்ன் சீன் காஃப்
42:2. 'அய்ய்ய்ன் ஸீன் காFப்
42:2. ஐன், ஸீன், காஃப்.
42:3
42:3 كَذٰلِكَ يُوْحِىْۤ اِلَيْكَ وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَۙ اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
كَذٰلِكَ இவ்வாறுதான் يُوْحِىْۤ வஹீ அறிவித்தான் اِلَيْكَ உமக்கும் وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَۙ உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் اللّٰهُ அல்லாஹ் الْعَزِيْزُ மிகைத்தவனும் الْحَكِيْمُ‏ மகா ஞானவானும்
42:3. கதாலிக யூஹீ இலய்க வ இலல் லதீன மின் கBப்லிகல் லாஹுல் 'அZஜீZஜுல் ஹகீம்
42:3. (நபியே!) இது போன்றே அல்லாஹ் உமக்கும், உமக்கு முன் இருந்தவர்(களாகிய நபிமார்)களுக்கும் வஹீ அறிவிக்கின்றான்; அவனே (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
42:4
42:4 لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَهُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ‏
لَهٗ அவனுக்குத்தான் مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவையும் وَمَا فِى الْاَرْضِ‌ؕ பூமியில்உள்ளவையும் وَهُوَ அவன்தான் الْعَلِىُّ மிக உயர்ந்தவன் الْعَظِيْمُ‏ மிக மகத்தானவன்
42:4. லஹூ மா Fபிஸ் ஸமா வாதி வமா Fபில் அர்ளி வ ஹுவல் 'அலியுல் 'அளீம்
42:4. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே (சொந்தமானவையாகும்!) மேலும் அவன் மிகவும் உயர்ந்தவன், மகத்தானவன்.
42:5
42:5 تَـكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْ فَوْقِهِنَّ‌ وَالْمَلٰٓٮِٕكَةُ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُوْنَ لِمَنْ فِى الْاَرْضِ‌ؕ اَلَاۤ اِنَّ اللّٰهَ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏
تَـكَادُ நெருங்கி விடுகின்றன السَّمٰوٰتُ வானங்கள் يَتَفَطَّرْنَ (அவை) பிளந்துவிடுவதற்கு مِنْ فَوْقِهِنَّ‌ அவற்றுக்கு மேல் உள்ள وَالْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் يُسَبِّحُوْنَ துதிக்கின்றனர் بِحَمْدِ புகழ்ந்து رَبِّهِمْ தங்கள் இறைவனை وَيَسْتَغْفِرُوْنَ இன்னும் பாவமன்னிப்புக் கேட்கின்றனர் لِمَنْ فِى الْاَرْضِ‌ؕ பூமியில் உள்ளவர்களுக்காக اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ اللّٰهَ هُوَ நிச்சயமாக அல்லாஹ்தான் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُ‏ மகாக் கருணையாளன்
42:5. தகாதுஸ் ஸமாவாது யதFபத்தர்ன மின் Fபவ்கிஹின்ன்; வல்மலா'இகது யுஸBப்Bபிஹூன Bபிஹம்தி ரBப்Bபிஹிம் வ யஸ்தக்Fபிரூன லிமன் Fபில் அர்ள்; அலா இன்னல் லாஹ ஹுவல் கFபூருர் ரஹீம்
42:5. அவர்களுக்கு மேலிருந்து வானங்கள் பிளந்து விடலாம்; ஆனால் மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்து, உலகில் உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர்; அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
42:6
42:6 وَالَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ اللّٰهُ حَفِيْظٌ عَلَيْهِمْ‌ۖ وَمَاۤ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ‏
وَالَّذِيْنَ எவர்கள் اتَّخَذُوْا அவர்கள் எடுத்துக் கொண்டார்களோ مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اَوْلِيَآءَ உதவியாளர்களாக اللّٰهُ அல்லாஹ்தான் حَفِيْظٌ கண்காணிப்பவன் عَلَيْهِمْ‌ۖ அவர்கள் மீது وَمَاۤ اَنْتَ நீர் இல்லை عَلَيْهِمْ அவர்கள் மீது بِوَكِيْلٍ‏ பொறுப்பாளர்
42:6. வல்லதீனத் தகதூ மின் தூனிஹீ அவ்லியா'அல் லாஹு ஹFபீளுன் 'அலய்ஹிம் வ மா அன்த 'அலய்ஹிம் Bபிவகீல்
42:6. அவனையன்றி(த் தங்களுக்கு வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களே அவர்களை அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கின்றான்; நீர் அவர்கள் மேல் பொறுப்பாளர் அல்லர்.
42:7
42:7 وَكَذٰلِكَ اَوْحَيْنَاۤ اِلَيْكَ قُرْاٰنًا عَرَبِيًّا لِّـتُـنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيْهِ‌ؕ فَرِيْقٌ فِى الْجَنَّةِ وَفَرِيْقٌ فِى السَّعِيْرِ‏
وَكَذٰلِكَ இவ்வாறுதான் اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு قُرْاٰنًا குர்ஆனை عَرَبِيًّا அரபி மொழியில் لِّـتُـنْذِرَ நீர் எச்சரிப்பதற்காக اُمَّ الْقُرٰى மக்காவாசிகளை وَمَنْ حَوْلَهَا இன்னும் அதைச் சுற்றி உள்ளவர்களை وَتُنْذِرَ இன்னும் நீர் எச்சரிப்பதற்காக يَوْمَ மறுமை நாளைப் பற்றி الْجَمْعِ ஒன்று சேர்க்கப்படும் لَا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهِ‌ؕ அதில் فَرِيْقٌ ஓர் அணி فِى الْجَنَّةِ சொர்க்கத்தில் وَفَرِيْقٌ இன்னும் ஓர் அணி فِى السَّعِيْرِ‏ நரகத்தில்
42:7. வ கதாலிக அவ்ஹய்னா ல்லய்க குர்ஆனன் 'அரBபிய்யல் லிதுன்திர உம்மல் குரா வ மன் ஹவ்லஹா வ துன்திர யவ்மல் ஜம்'இ லா ரய்Bப Fபீஹ்; Fபரீகுன் Fபில் ஜன்னதி வ Fபரீகுன் Fபிஸ்ஸ'ஈர்
42:7. அவ்வாறே நகரங்களின் தாய்க்கும், (மக்காவுக்கும்) அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித சந்தேகமுமின்றி (யாவரும்) ஒன்று சேர்க்கப்படும் நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், அரபி மொழியிலான இந்த குர்ஆனை நாம் உமக்கு வஹீ அறிவிக்கிறோம்; ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் ஒரு கூட்டம் நரகத்திலும் இருக்கும்.
42:8
42:8 وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَهُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰـكِنْ يُّدْخِلُ مَنْ يَّشَآءُ فِىْ رَحْمَتِهٖ‌ؕ وَالظّٰلِمُوْنَ مَا لَهُمْ مِّنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ‏
وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் لَجَعَلَهُمْ அவர்களை ஆக்கியிருப்பான் اُمَّةً மார்க்கமுடையவர்களாக وَّاحِدَةً ஒரே ஒரு وَّلٰـكِنْ என்றாலும் يُّدْخِلُ நுழைக்கின்றான் مَنْ يَّشَآءُ தான் நாடியவர்களை فِىْ رَحْمَتِهٖ‌ؕ தனது அருளில் وَالظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள் مَا لَهُمْ அவர்களுக்கு இல்லை مِّنْ وَّلِىٍّ எந்த பாதுகாவலரும் وَّلَا نَصِيْرٍ‏ எந்த உதவியாளரும் இல்லை
42:8. வ லவ் ஷா'அல் லாஹு லஜ'அலஹும் உம்மத(ன்)வ் வாஹி தத(ன்)வ் வலாகி(ன்)ய் யுத்கிலும(ன்)ய் யஷா'உ Fபீ ரஹ்மதிஹ்; வள் ளாலிமூன மா லஹும் மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
42:8. அல்லாஹ் நாடியிருந்தால், நிச்சயமாக அவர்கள் (யாவரையும்) அவன் ஒரே உம்மத்தாக - சமுதாயமாக ஆக்கியிருப்பான்; எனினும் அவன் தான் நாடியவர்களைத் தன்னுடைய ரஹ்மத்தில் - கிருபையில் - நுழைவிப்பான்; அநியாயக்காரர்களுக்குப் பாதுகாவலர்களோ, உதவிபுரிபவர்களோ இல்லை.
42:9
42:9 اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ‌ۚ فَاللّٰهُ هُوَ الْوَلِىُّ وَهُوَ يُحْىِ الْمَوْتٰى وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
اَمِ اتَّخَذُوْا அவர்கள் எடுத்துக் கொண்டார்களா? مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اَوْلِيَآءَ‌ۚ பாதுகாவலர்களை فَاللّٰهُ هُوَ அல்லாஹ்தான் الْوَلِىُّ பாதுகாவலன் وَهُوَ இன்னும் அவன்தான் يُحْىِ உயிர்ப்பிப்பான் الْمَوْتٰى இறந்தவர்களை وَهُوَ இன்னும் அவன் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீதும் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
42:9. அமித் தகதூ மின் தூனிஹீ அவ்லியா'அ Fபல்லாஹு ஹுவல் வலிய்யு வ ஹுவ யுஹ்யில் மவ்தா வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
42:9. (நபியே!) அவர்கள் அல்லாஹ்வை அன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களா? ஆனால் அல்லாஹ்வோ அவன் தான் பாதுகாவலனாக இருக்கின்றான், அவனே இறந்தோரை உயிர்ப்பிக்கிறான் - அவனே எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்.
42:10
42:10 وَمَا اخْتَلَـفْتُمْ فِيْهِ مِنْ شَىْءٍ فَحُكْمُهٗۤ اِلَى اللّٰهِ‌ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبِّىْ عَلَيْهِ تَوَكَّلْتُۖ وَاِلَيْهِ اُنِيْبُ‏
وَمَا எது اخْتَلَـفْتُمْ முரண்படுகிறீர்களோ فِيْهِ அதில் مِنْ شَىْءٍ எந்த ஒரு விஷயம் فَحُكْمُهٗۤ அதன் இறுதி தீர்ப்பு اِلَى اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் பக்கம்தான் ذٰ لِكُمُ اللّٰهُ அந்த அல்லாஹ்தான் رَبِّىْ என் இறைவன் عَلَيْهِ அவன் மீதே تَوَكَّلْتُۖ நம்பிக்கை வைத்துள்ளேன் وَاِلَيْهِ இன்னும் அவன் பக்கமே اُنِيْبُ‏ திரும்புகின்றேன்
42:10. வ மக்-தலFப்தும் Fபீஹி மின் ஷய்'இன் Fபஹுக்முஹூ இலல்லாஹ்; தாலிகுமுல் லாஹு ரBப்Bபீ 'அலய்ஹி தவக்கல்து வ இலய்ஹி உனீBப்
42:10. நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேற்றுமை கொண்டிருக்கிறீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கிறது - அ(த்தகைய தீர்ப்பு வழங்குப)வன் தான் அல்லாஹ் - என்னுடைய இறைவன்; அவன் மீதே நான் முற்றும் நம்பிக்கை வைக்கிறேன்; அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன்.
42:11
42:11 فَاطِرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ جَعَلَ لَـكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّ مِنَ الْاَنْعَامِ اَزْوَاجًا‌ ۚ يَذْرَؤُكُمْ فِيْهِ‌ ؕ لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌ۚ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏
فَاطِرُ படைத்தவன் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضِ‌ؕ பூமியையும் جَعَلَ ஏற்படுத்தினான் لَـكُمْ உங்களுக்கு مِّنْ اَنْفُسِكُمْ உங்களிலிருந்தே اَزْوَاجًا ஜோடிகளை(யும்) وَّ مِنَ الْاَنْعَامِ இன்னும் கால்நடைகளில் اَزْوَاجًا‌ ۚ ஜோடிகளை(யும்) يَذْرَؤُ படைக்கின்றான் كُمْ உங்களை فِيْهِ‌ ؕ لَيْسَ அதில்/இல்லை كَمِثْلِهٖ அவனைப் போன்று شَىْءٌ ۚ எதுவும் وَهُوَ அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْبَصِيْرُ‏ நன்கு பார்ப்பவன்
42:11. Fபாதிருஸ் ஸமாவாதி வல் அர்ள்; ஜ'அல லகும் மின் அன்Fபுஸிகும் அZஜ்வாஜ(ன்)வ் வ மினல் அன்'ஆமி அZஜ்வாஜய் யத்ர'உகும் Fபீஹ்; லய்ஸ கமித்லிஹீ ஷய்'உ(ன்)வ் வ ஹுவஸ் ஸமீ'உல் Bபஸீர்
42:11. வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.
42:12
42:12 لَهٗ مَقَالِيْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ؕ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
لَهٗ அவனுக்கே உரியன مَقَالِيْدُ சாவிகள் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ۚ இன்னும் பூமி يَبْسُطُ விரிவாக்குகின்றான் الرِّزْقَ வாழ்வாதாரத்தை لِمَنْ يَّشَآءُ தான் நாடியவர்களுக்கு وَيَقْدِرُ‌ؕ இன்னும் சுருக்குகின்றான் اِنَّهٗ நிச்சயமாக அவன் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன் ஆவான்
42:12. லஹூ மகாலீதுஸ் ஸமாவாதி வல் அர்ளி யBப்ஸுதுர் ரிZஜ்க லிமய் யஷா'உ வ யக்திர்; இன்னஹூ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
42:12. வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன; தான் நாடியவர்களுக்கு அவனே உணவு வசதிகளைப் பெருகும் படி செய்கிறான், (தான் நாடியவர்களுக்கு அவனே அளவு படுத்திச்) சுருக்கிவிடுகிறான் - நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
42:13
42:13 شَرَعَ لَـكُمْ مِّنَ الدِّيْنِ مَا وَصّٰى بِهٖ نُوْحًا وَّالَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهٖۤ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى وَعِيْسٰٓى اَنْ اَقِيْمُوا الدِّيْنَ وَ لَا تَتَفَرَّقُوْا فِيْهِ‌ؕ كَبُـرَ عَلَى الْمُشْرِكِيْنَ مَا تَدْعُوْهُمْ اِلَيْهِ‌ ؕ اَللّٰهُ يَجْتَبِىْۤ اِلَيْهِ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْۤ اِلَيْهِ مَنْ يُّنِيْبُ‏
شَرَعَ சட்டமாக்கினான் لَـكُمْ உங்களுக்கு(ம்) مِّنَ الدِّيْنِ மார்க்கத்தில் مَا எதை وَصّٰى உபதேசித்தானோ بِهٖ அதையே نُوْحًا நூஹூக்கு وَّالَّذِىْۤ இன்னும் எதை اَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தோமோ اِلَيْكَ உமக்கு وَمَا இன்னும் எது وَصَّيْنَا நாம் உபதேசித்தோமோ بِهٖۤ அதை اِبْرٰهِيْمَ இப்ராஹீம் وَمُوْسٰى இன்னும் மூஸா وَعِيْسٰٓى இன்னும் ஈஸா(விற்கு) اَنْ اَقِيْمُوا நிலை நிறுத்துங்கள்! الدِّيْنَ இந்த மார்க்கத்தை وَ لَا تَتَفَرَّقُوْا நீங்கள் பிரிந்து விடாதீர்கள்! فِيْهِ‌ؕ அதில் كَبُـرَ மிக பாரமாக ஆகிவிட்டது عَلَى الْمُشْرِكِيْنَ இணைவைப்பவர்களுக்கு مَا எது تَدْعُوْ அழைக்கின்றீரோ هُمْ அவர்களை اِلَيْهِ‌ ؕ அதன் பக்கம் اَللّٰهُ அல்லாஹ் يَجْتَبِىْۤ தேர்ந்தெடுக்கின்றான் اِلَيْهِ தன் பக்கம் مَنْ يَّشَآءُ தான் நாடுகின்றவர்களை وَيَهْدِىْۤ இன்னும் வழி காட்டுகின்றான் اِلَيْهِ தன் பக்கம் مَنْ يُّنِيْبُ‏ திரும்புகின்றவர்களுக்கு
42:13. ஷர'அ லகும் மினத் தீனி மா வஸ்ஸா Bபிஹீ னூஹ(ன்)வ் வல்லதீ அவ்ஹய்னா இலய்க வமா வஸ்ஸய்னா Bபிஹீ இBப்ராஹீம வ மூஸா வ 'ஈஸா அன் அகீமுத் தீன வலா ததFபர்ரகூ Fபீஹ்; கBபுர 'அலல் முஷ்ரிகீன மா தத்'ஊஹும் இலய்ஹ்; அல்லாஹு யஜ்தBபீ இலய்ஹி மய் யஷா'உ வ யஹ்தீ இலய்ஹி மய் யுனீBப்
42:13. நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
42:14
42:14 وَمَا تَفَرَّقُوْۤا اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًاۢ بَيْنَهُمْ‌ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى لَّقُضِىَ بَيْنَهُمْ‌ؕ وَ اِنَّ الَّذِيْنَ اُوْرِثُوا الْكِتٰبَ مِنْۢ بَعْدِهِمْ لَفِىْ شَكٍّ مِّنْهُ مُرِيْبٍ‏
وَمَا تَفَرَّقُوْۤا அவர்கள் பல பிரிவுகளாக பிரியவில்லை اِلَّا தவிர مِنْۢ بَعْدِ مَا جَآءَ வந்ததன் பின்னரே هُمُ தங்களிடம் الْعِلْمُ கல்வி بَغْيًاۢ பொறாமையினால்தான் بَيْنَهُمْ‌ؕ தங்களுக்கு மத்தியில் وَلَوْلَا இருக்கவில்லை என்றால் كَلِمَةٌ ஒரு வாக்கு سَبَقَتْ முந்தி(யது) مِنْ رَّبِّكَ உமது இறைவன் புறத்தில் இருந்து اِلٰٓى اَجَلٍ ஒரு தவணை வரை مُّسَمًّى குறிப்பிட்ட لَّقُضِىَ தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் بَيْنَهُمْ‌ؕ அவர்களுக்கு மத்தியில் وَ اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ اُوْرِثُوا கொடுக்கப்பட்டவர்கள் الْكِتٰبَ வேதம் مِنْۢ بَعْدِ பின்னர் هِمْ இவர்களுக்கு لَفِىْ شَكٍّ சந்தேகத்தில் مِّنْهُ அதில் مُرِيْبٍ‏ பெரிய
42:14. வமா தFபர்ரகூ இல்லா மிம் Bபஃதி மா ஜா'அஹுமுல் 'இல்மு Bபக்யம் Bபய்னஹும்; வ லவ் லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக இலா அஜலிம் முஸம்மல் லகுளிய Bபய்னஹும்; வ இன்னல் லதீன ஊரிதுல் கிதாBப மிம் Bபஃதிஹிம் லFபீ ஷக்கிம் மின்ஹு முரீBப்
42:14. அவர்கள், தங்களிடம் ஞானம் (வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை; (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்கு பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர்.
42:15
42:15 فَلِذٰلِكَ فَادْعُ‌ ۚ وَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ‌ۚ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ‌ۚ وَقُلْ اٰمَنْتُ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنْ كِتٰبٍ‌‌ۚ وَاُمِرْتُ لِاَعْدِلَ بَيْنَكُمُ‌ؕ اَللّٰهُ رَبُّنَا وَرَبُّكُمْ‌ؕ لَـنَاۤ اَعْمَالُـنَا وَلَـكُمْ اَعْمَالُكُمْ‌ۚ لَا حُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمُ‌ؕ اَللّٰهُ يَجْمَعُ بَيْنَنَا‌ۚ وَاِلَيْهِ الْمَصِيْرُؕ‏
فَلِذٰلِكَ இதன் பக்கமே فَادْعُ‌ ۚ நீர் அழைப்பீராக وَاسْتَقِمْ இன்னும் நீர் நிலையாக நீடித்து இருப்பீராக كَمَاۤ اُمِرْتَ‌ۚ நீர் கட்டளையிடப்பட்டது போன்றே وَلَا تَتَّبِعْ நீர் பின்பற்றாதீர் اَهْوَآءَ மன விருப்பங்களை هُمْ‌ۚ அவர்களின் وَقُلْ இன்னும் நீர் கூறுவிராக اٰمَنْتُ நான் நம்பிக்கை கொண்டேன் بِمَاۤ اَنْزَلَ இறக்கியதை اللّٰهُ அல்லாஹ் مِنْ كِتٰبٍ‌ۚ வேதங்களில் இருந்து وَاُمِرْتُ பணிக்கப்பட்டுள்ளேன் لِاَعْدِلَ நீதமாக நடக்க வேண்டும் என்று بَيْنَكُمُ‌ؕ உங்களுக்கு மத்தியில் اَللّٰهُ அல்லாஹ்தான் رَبُّنَا இன்னும் உங்களுக்கு وَرَبُّكُمْ‌ؕ இன்னும் உங்கள் அமல்கள் لَـنَاۤ எங்களுக்கு اَعْمَالُـنَا எங்கள் அமல்கள் وَلَـكُمْ இன்னும் உங்களுக்கு اَعْمَالُكُمْ‌ۚ உங்கள் அமல்கள் لَا حُجَّةَ சண்டை வேண்டாம் بَيْنَنَا நமக்கு மத்தியிலும் وَبَيْنَكُمُ‌ؕ உங்களுக்கு மத்தியிலும் اَللّٰهُ அல்லாஹ்தான் يَجْمَعُ ஒன்று சேர்ப்பான் بَيْنَنَا‌ۚ நமக்கு மத்தியில் وَاِلَيْهِ அவன் பக்கமே الْمَصِيْرُؕ‏ மீளுமிடம்
42:15. Fபலிதாலிக Fபத்'உ வஸ்தகிம் கமா உமிர்த வலா தத்தBபிஃ அஹ்வா'அஹும் வ குல் ஆமன்து Bபிமா அன்Zஜலல் லாஹு மின் கிதாBப், வ உமிர்து லி அஃதில Bபய்னகும் அல்லாஹு ரBப்Bபுனா வ ரBப்Bபுகும் லனா அஃமா லுனா வ லகும் அஃமாலுகும் லா ஹுஜ்ஜத Bபய்னனா வ Bபய்ன குமுல் லாஹு யஜ்ம'உ Bபய்னனா வ இலய்ஹில் மஸீர்
42:15. எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக; மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், “அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு; எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் - அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பான், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது” என்றும் கூறுவீராக.
42:16
42:16 وَالَّذِيْنَ يُحَآجُّوْنَ فِى اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا اسْتُجِيْبَ لَهٗ حُجَّتُهُمْ دَاحِضَةٌ عِنْدَ رَبِّهِمْ وَعَلَيْهِمْ غَضَبٌ وَّلَهُمْ عَذَابٌ شَدِيْدٌ‏
وَالَّذِيْنَ يُحَآجُّوْنَ எவர்கள் தர்க்கம் செய்கின்றார்களோ فِى اللّٰهِ அல்லாஹ்வின் விஷயத்தில் مِنْۢ بَعْدِ பின்னர் مَا اسْتُجِيْبَ ஏற்றுக்கொண்டதன் لَهٗ அவனை حُجَّتُهُمْ அவர்களின்வாதங்கள் دَاحِضَةٌ வீணானதே! عِنْدَ رَبِّهِمْ அல்லாஹ்விடம் وَعَلَيْهِمْ இன்னும் அவர்கள் மீது இறங்கும் غَضَبٌ கோபம் وَّلَهُمْ இன்னும் அவர்களுக்கு உண்டு عَذَابٌ வேதனையும் شَدِيْدٌ‏ கடுமையான
42:16. வல்லதீன யுஹாஜ்ஜூன Fபில் லாஹி மிம் Bபஃதி மஸ்துஜீBப லஹூ ஹுஜ்ஜதுஹும் தாஹிளதுன் 'இன்த ரBப்Bபிஹிம் வ 'அலய்ஹிம் களBபு(ன்)வ் வ லஹும் 'அதாBபுன் ஷதீத்
42:16. எவர்கள் அல்லாஹ்வை ஒப்புக் கொண்டபின், அவனைப்பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும்; அதனால் அவர்கள் மீது (அவனுடைய) கோபம் ஏற்பட்டு, கடினமான வேதனையும் அவர்களுக்கு உண்டாகும்.
42:17
42:17 اَللّٰهُ الَّذِىْۤ اَنْزَلَ الْكِتٰبَ بِالْحَقِّ وَالْمِيْزَانَ‌ؕ وَمَا يُدْرِيْكَ لَعَلَّ السَّاعَةَ قَرِيْبٌ‏
اَللّٰهُ அல்லாஹ் الَّذِىْۤ எப்படிப்பட்டவன் اَنْزَلَ இறக்கினான் الْكِتٰبَ வேதத்தையும் بِالْحَقِّ சத்தியத்துடன் وَالْمِيْزَانَ‌ؕ தராசையும் وَمَا يُدْرِيْكَ உமக்கு எது அறிவிக்கும்? لَعَلَّ السَّاعَةَ மறுமை قَرِيْبٌ‏ மிக சமீபமானது
42:17. அல்லாஹுல் லதீ அன்Zஜலல் கிதாBப Bபில்ஹக்கி வல் மீZஜான்; வ ம யுத்ரீக ல'அல்லஸ் ஸா'அத கரீBப்
42:17. அல்லாஹ்தான் இந்த வேதத்தையும் நீதியையும் உண்மையையும் கொண்டு இறக்கி அருளினான்; இன்னும் (நபியே! தீர்ப்புக்குரிய) அவ்வேளை சமீபமாக இருக்கிறது என்பதை நீர் அறிவீரா?
42:18
42:18 يَسْتَعْجِلُ بِهَا الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِهَا‌ ۚ وَالَّذِيْنَ اٰمَنُوْا مُشْفِقُوْنَ مِنْهَا ۙ وَيَعْلَمُوْنَ اَنَّهَا الْحَقُّ ‌ ؕ اَلَاۤ اِنَّ الَّذِيْنَ يُمَارُوْنَ فِى السَّاعَةِ لَفِىْ ضَلٰلٍۢ بَعِيْدٍ‏
يَسْتَعْجِلُ அவசரமாகத் தேடுகின்றனர் بِهَا அதை الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِهَا‌ ۚ நம்பிக்கை கொள்ளாதவர்கள்/அதை وَالَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் مُشْفِقُوْنَ பயப்படுகின்றனர் مِنْهَا ۙ அதை وَيَعْلَمُوْنَ இன்னும் அறிவார்கள் اَنَّهَا நிச்சயமாக அது الْحَقُّ ؕ உண்மைதான் اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ الَّذِيْنَ يُمَارُوْنَ நிச்சயமாக தர்க்கிப்பவர்கள் فِى السَّاعَةِ மறுமை விஷயத்தில் لَفِىْ ضَلٰلٍۢ வழிகேட்டில்தான் بَعِيْدٍ‏ வெகு தூரமான
42:18. யஸ்தஃஜிலு Bபிஹல் லதீன லா யு'மினூன Bபிஹா வல்லதீன ஆமனூ முஷ்Fபிகூன மின்ஹா வ யஃலமூன அன்னஹல் ஹக்க்; அலா இன்னல் லதீன யுமாரூன Fபிஸ் ஸா'அதி லFபீ ளலாலின் Bப'ஈத்
42:18. அதன் மேல் நம்பிக்கை கொள்ளாதவர்கள், அதைப்பற்றி அவசரப்படுகின்றனர்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அதனை (நினைத்து) பயப்படுகிறார்கள்; நிச்சயமாக அது உண்மையே என்பதை அவர்கள் அறிகிறார்கள்; அறிந்து கொள்க: அவ்வேளை குறித்து எவர்கள் வீண்வாதம் செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நெடிய வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
42:19
42:19 اَللّٰهُ لَطِيْفٌۢ بِعِبَادِهٖ يَرْزُقُ مَنْ يَّشَآءُ‌ۚ وَهُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ
اَللّٰهُ அல்லாஹ்தான் لَطِيْفٌۢ மிக கருணையும் தயவும் உடையவன் بِعِبَادِهٖ தன் அடியார்கள் மீது يَرْزُقُ உணவளிக்கின்றான் مَنْ يَّشَآءُ‌ۚ தான் நாடுகின்றவர்களுக்கு وَهُوَ அவன்தான் الْقَوِىُّ மிக வலிமை உள்ளவன் الْعَزِيْزُ‏ மிகைத்தவன்
42:19. அல்லாஹு லதீFபும் Bபி'இBபாதிஹீ யர்Zஜுகு மய் யஷா'உ வ ஹுவல் கவிய்யுல் 'அZஜீZஜ்
42:19. அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.
42:20
42:20 مَنْ كَانَ يُرِيْدُ حَرْثَ الْاٰخِرَةِ نَزِدْ لَهٗ فِىْ حَرْثِهٖ‌ۚ وَمَنْ كَانَ يُرِيْدُ حَرْثَ الدُّنْيَا نُؤْتِهٖ مِنْهَا وَمَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ نَّصِيْبٍ‏
مَنْ யார் كَانَ இருப்பாரோ يُرِيْدُ நாடுகின்றவராக حَرْثَ விளைச்சலை الْاٰخِرَةِ மறுமையின் نَزِدْ நாம் அதிகப்படுத்துவோம் لَهٗ அவருக்கு فِىْ حَرْثِهٖ‌ۚ அவருடைய விளைச்சலில் وَمَنْ இன்னும் யார் كَانَ இருப்பாரோ يُرِيْدُ நாடுகின்றவராக حَرْثَ விளைச்சலை الدُّنْيَا உலகத்தின் نُؤْتِهٖ அவருக்கு நாம் கொடுப்போம் مِنْهَا அதில் இருந்து وَمَا இல்லை لَهٗ அவருக்கு فِى الْاٰخِرَةِ மறுமையில் مِنْ نَّصِيْبٍ‏ எவ்வித பங்கும்
42:20. மன் கான யுரீது ஹர்தல் ஆகிரதி னZஜித் லஹூ Fபீ ஹர்திஹீ வ மன் கான யுரீது ஹர்தத் துன்யா னு'திஹீ மின்ஹா வமா லஹூ Fபில் ஆகிரதி மின் னஸீBப்
42:20. எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ அவருடைய விளைச்சலை நாம் அவருக்காக அதிகப்படுத்துவோம்; எவர் இவ்வுலகின் விளைச்சலை மட்டும் விரும்புகிறாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம் - எனினும் அவருக்கு மறுமையில் யாதொரு பங்கும் இல்லை.
42:21
42:21 اَمْ لَهُمْ شُرَكٰٓؤُا شَرَعُوْا لَهُمْ مِّنَ الدِّيْنِ مَا لَمْ يَاْذَنْۢ بِهِ اللّٰهُ‌ؕ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِىَ بَيْنَهُمْ‌ؕ وَاِنَّ الظّٰلِمِيْنَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ‏
اَمْ لَهُمْ இவர்களுக்கு உண்டா? شُرَكٰٓؤُا இணைதெய்வங்களும் شَرَعُوْا சட்டமாக்(கு)கி(ன்ற)னர் لَهُمْ இவர்களுக்கு مِّنَ الدِّيْنِ மார்க்கத்தில் مَا لَمْ يَاْذَنْۢ எதை/அனுமதிக்கவில்லையோ بِهِ அதை اللّٰهُ‌ؕ அல்லாஹ் وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ தீர்ப்பின் வாக்கு மட்டும்/இல்லை என்றால் لَقُضِىَ தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் بَيْنَهُمْ‌ؕ அவர்களுக்கு மத்தியில் وَاِنَّ நிச்சயமாக الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள் لَهُمْ அவர்களுக்கு உண்டு عَذَابٌ வேதனை اَلِيْمٌ‏ வலி தரக்கூடியது
42:21. அம் லஹும் ஷுரகா'உ ஷர'ஊ லஹும் மினத் தீனி மா லம் ய'தன் Bபிஹில் லாஹ்; வ லவ் லா கலிமதுல் Fபஸ்லி லகுளிய Bபய்னஹும்; வ இன்னள் ளாலிமீன லஹும் 'அதாBபுன் அலீம்
42:21. அல்லது: அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் - நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
42:22
42:22 تَرَى الظّٰلِمِيْنَ مُشْفِقِيْنَ مِمَّا كَسَبُوْا وَهُوَ وَاقِعٌۢ بِهِمْ‌ؕ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِىْ رَوْضَاتِ الْجَـنّٰتِ‌ۚ لَهُمْ مَّا يَشَآءُوْنَ عِنْدَ رَبِّهِمْ‌ؕ ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيْرُ‏
تَرَى நீர் பார்ப்பீர்! الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களை مُشْفِقِيْنَ பயந்தவர்களாக مِمَّا كَسَبُوْا அவர்கள் செய்தவற்றின் காரணமாக وَهُوَ وَاقِعٌۢ அது நிகழ்ந்தே தீரும் بِهِمْ‌ؕ அவர்களுக்கு وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை فِىْ رَوْضَاتِ சோலைகளில் الْجَـنّٰتِ‌ۚ சொர்க்கங்களின் لَهُمْ அவர்களுக்கு உண்டு مَّا يَشَآءُوْنَ அவர்கள் நாடுகின்றவை عِنْدَ رَبِّهِمْ‌ؕ அவர்களின் இறைவனிடம் ذٰلِكَ هُوَ இதுதான் الْفَضْلُ சிறப்பாகும் الْكَبِيْرُ‏ மிகப் பெரிய
42:22. தரள் ளாலிமீன முஷ்Fபிகீன மிம்மா கஸBபூ வ ஹுவ வாகி'உம் Bபிஹிம்; வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபீ ரவ்ளாதில் ஜன்னாதி லஹும் மா யஷா'ஊன 'இன்த ரBப்Bபிஹிம்; தாலிக ஹுவல் Fபள்லுல் கBபீர்
42:22. (அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே செய்யும்; ஆனால் எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில் இருப்பார்கள்; அவர்கள் விரும்பியது அவர்களுடைய இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும் பாக்கியமாகும்.
42:23
42:23 ذٰ لِكَ الَّذِىْ يُبَشِّرُ اللّٰهُ عِبَادَهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ‌ؕ قُلْ لَّاۤ اَسْــٴَــــلُـكُمْ عَلَيْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِى الْقُرْبٰى‌ؕ وَمَنْ يَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهٗ فِيْهَا حُسْنًا‌ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ
ذٰ لِكَ இது الَّذِىْ எது يُبَشِّرُ நற்செய்தி கூறுகின்றான் اللّٰهُ அல்லாஹ் عِبَادَهُ தன் அடியார்களுக்கு الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ‌ؕ நன்மைகளை قُلْ கூறுவீராக! لَّاۤ اَسْــٴَــــلُـكُمْ நான் உங்களிடத்தில் கேட்கவில்லை عَلَيْهِ இதற்காக اَجْرًا எந்த கூலியையும் اِلَّا الْمَوَدَّةَ அன்பைத் தவிர فِى الْقُرْبٰى‌ؕ உறவினால் உள்ள وَمَنْ يَّقْتَرِفْ யார் செய்வாரோ حَسَنَةً அழகிய அமலை نَّزِدْ அதிகப்படுத்துவோம் لَهٗ அவருக்கு فِيْهَا அதில் حُسْنًا‌ ؕ அழகை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் شَكُوْرٌ நன்றியறிபவன்
42:23. தாலிகல் லதீ யுBபஷ் ஷிருல் லாஹு 'இBபாதஹுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாத்; குல் லா அஸ்'அலுகும் 'அலய்ஹி அஜ்ரன் இல்லல் மவத்தத Fபில் குர்Bபா; வ மய் யக்தரிFப் ஹஸனதன் னZஜித் லஹூ Fபீஹா ஹுஸ்னா; இன்னல் லாஹ கFபூருன் ஷகூர்
42:23. ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே: (நபியே!) நீர் கூறும்: “உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!” அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.
42:24
42:24 اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا‌ ۚ فَاِنْ يَّشَاِ اللّٰهُ يَخْتِمْ عَلٰى قَلْبِكَ‌ ؕ وَيَمْحُ اللّٰهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمٰتِهٖۤ‌ ؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
اَمْ يَقُوْلُوْنَ கூறுகிறார்களா? افْتَـرٰى இட்டுக்கட்டினார் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا‌ ۚ பொய்யை فَاِنْ يَّشَاِ நாடினால் اللّٰهُ அல்லாஹ் يَخْتِمْ முத்திரையிட்டு விடுவான் عَلٰى قَلْبِكَ‌ ؕ உமது உள்ளத்தின் மீது وَيَمْحُ இன்னும் அழித்துவிடுவான் اللّٰهُ அல்லாஹ் الْبَاطِلَ பொய்யை وَيُحِقُّ இன்னும் உறுதிப்படுத்துவான் الْحَقَّ சத்தியத்தை بِكَلِمٰتِهٖۤ‌ ؕ தனது கட்டளைகளைக் கொண்டு اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِذَاتِ الصُّدُوْرِ‏ நெஞ்சங்களில் உள்ளதை
42:24. அம் யகூலூனFப் தர 'அலல் லாஹி கதிBபன் Fப-இ(ன்)ய் யஷ' இல்லாஹு யக்திம் 'அலா கல்Bபிக்; வ யம்ஹுல் லாஹுல் Bபாதில வ யுஹிக்குல் ஹக்க Bபி கலிமாதிஹ்; இன்னஹூ 'அலீமுன் Bபிதாதிஸ் ஸுதூர்
42:24. அல்லது (உம்மைப் பற்றி) அவர்கள்: “அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டிக் கூறுகிறார்” என்று சொல்கிறார்களா? அல்லாஹ் நாடினால் அவன் உம் இருதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான்; அன்றியும் அல்லாஹ் பொய்யை அழித்து, தன் வசனங்களைக் கொண்டு உண்மையை உறுதிப்படுத்துகிறான்; நிச்சயமாக நெஞ்சங்களிலிருப்பதை அவன் மிக அறிந்தவன்.
42:25
42:25 وَهُوَ الَّذِىْ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَيَعْفُوْا عَنِ السَّيِّاٰتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُوْنَ ۙ‏
وَهُوَ அவன் الَّذِىْ எப்படிப்பட்டவன் يَقْبَلُ ஏற்றுக்கொள்கிறான் التَّوْبَةَ திருந்துவதை عَنْ عِبَادِهٖ தனது அடியார்களிடமிருந்து وَيَعْفُوْا இன்னும் மன்னிக்கிறான் عَنِ السَّيِّاٰتِ பாவங்களை وَيَعْلَمُ இன்னும் நன்கறிகின்றான் مَا تَفْعَلُوْنَ ۙ‏ நீங்கள் செய்வதை
42:25. வ ஹுவல் லதீ யக்Bபலுத் தவ்Bபத 'அன் 'இBபாதிஹீ வ யஃFபூ 'அனிஸ் ஸய்யிஆதி வ யஃலமு மா தFப்'அலூன்
42:25. அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவ மன்னிப்புக் கோறுதலை - ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.
42:26
42:26 وَيَسْتَجِيْبُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَيَزِيْدُهُمْ مِّنْ فَضْلِهٖ‌ؕ وَالْكٰفِرُوْنَ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ‏
وَيَسْتَجِيْبُ இன்னும் பதில் அளிக்கின்றான் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை وَيَزِيْدُ இன்னும் அதிகம் கொடுப்பான் هُمْ அவர்களுக்கு مِّنْ فَضْلِهٖ‌ؕ தனது அருளால் وَالْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள் لَهُمْ அவர்களுக்கு உண்டு عَذَابٌ வேதனை شَدِيْدٌ‏ கடுமையான(து)
42:26. வ யஸ்தஜீBபுல் லதீன ஆமனூ வ 'அமிலு ஸாலிஹாதி வ யZஜீதுஹும் மின் Fபள்லிஹ்; வல் காFபிரூன லஹும் 'அதாBபுன் ஷதீத்
42:26. அன்றியும் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்(களின் பிரார்த்தனை)களையும் ஏற்று அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான்; இன்னும், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு.
42:27
42:27 وَلَوْ بَسَطَ اللّٰهُ الرِّزْقَ لِعِبَادِهٖ لَبَغَوْا فِى الْاَرْضِ وَلٰكِنْ يُّنَزِّلُ بِقَدَرٍ مَّا يَشَآءُ ‌ؕ اِنَّهٗ بِعِبَادِهٖ خَبِيْرٌۢ بَصِيْرٌ‏
وَلَوْ بَسَطَ விசாலமாக்கினால் اللّٰهُ அல்லாஹ் الرِّزْقَ வாழ்வாதாரத்தை لِعِبَادِهٖ தனது அடியார்களுக்கு لَبَغَوْا அவர்கள் எல்லை மீறி விடுவார்கள் فِى الْاَرْضِ பூமியில் وَلٰكِنْ என்றாலும் يُّنَزِّلُ இறக்குகின்றான் بِقَدَرٍ அளவுடன் مَّا يَشَآءُ ؕ தான் நாடியதை اِنَّهٗ நிச்சயமாக அவன் بِعِبَادِهٖ தன் அடியார்களை خَبِيْرٌۢ ஆழ்ந்தறிபவன் بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
42:27. வ லவ் Bபஸதல் லாஹுர் ரித்க லி'இBபாதிஹீ லBபகவ் Fபில் அர்ளி வ லாகி(ன்)ய் யுனZஜ்Zஜிலு Bபிகதரிம் மா யஷா'; இன்னஹூ Bபி'இBபாதிஹீ கBபீருன் Bபஸீர்
42:27. அல்லாஹ் தன் அடியார்களுக்கு, உணவு (மற்றும் வசதிகளை) விரிவாக்கி விட்டால், அவர்கள் பூமியில் அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள்; ஆகவே அவன், தான் விரும்பிய அளவு கொடுத்து வருகின்றான்; நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கறிபவன்; (அவர்கள் செயலை) உற்று நோக்குபவன்.
42:28
42:28 وَهُوَ الَّذِىْ يُنَزِّلُ الْغَيْثَ مِنْۢ بَعْدِ مَا قَنَطُوْا وَيَنْشُرُ رَحْمَتَهٗ‌ ؕ وَهُوَ الْوَلِىُّ الْحَمِيْدُ‏
وَهُوَ அவன்தான் الَّذِىْ எப்படிப்பட்டவன் يُنَزِّلُ இறக்குகின்றான் الْغَيْثَ மழையை مِنْۢ بَعْدِ مَا قَنَطُوْا அவர்கள் நிராசை அடைந்த பின்னர் وَيَنْشُرُ இன்னும் பரப்புகின்றான் رَحْمَتَهٗ‌ ؕ தனது அருளை وَهُوَ அவன்தான் الْوَلِىُّ பாதுகாவலன் الْحَمِيْدُ‏ மகா புகழாளன்
42:28. வ ஹுவல் லதீ யுனZஜ்Zஜிலுல் கய்த மின் Bபஃதி மா கனதூ வ யன்ஷுரு ரஹ்மதஹ்; வ ஹுவல் வலிய்யுல் ஹமீத்
42:28. அவர்கள் நிராசையான பின்னர் மழையை இறக்கி வைப்பவன் அவனே; மேலும் அவன் தன் ரஹ்மத்தை (அருளை)ப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.
42:29
42:29 وَ مِنْ اٰيٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَثَّ فِيْهِمَا مِنْ دَآبَّةٍ‌ ؕ وَهُوَ عَلٰى جَمْعِهِمْ اِذَا يَشَآءُ قَدِيْرٌ
وَ مِنْ اٰيٰتِهٖ அவனது அத்தாட்சிகளில் خَلْقُ படைத்திருப்பது السَّمٰوٰتِ وَالْاَرْضِ வானங்களையும் பூமியையும் وَمَا இன்னும் எவற்றை بَثَّ பரத்தி இருக்கின்றானோ فِيْهِمَا அவ்விரண்டில் مِنْ دَآبَّةٍ‌ ؕ உயிரினங்களில் இருந்து وَهُوَ عَلٰى جَمْعِهِمْ அவன் அவர்களை ஒன்று சேர்ப்பதற்கு اِذَا يَشَآءُ அவன் நாடுகின்றபோது قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
42:29. வ மின் ஆயாதிஹீ கல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபத்த Fபீஹிமா மின் தாBப்Bபஹ்; வ ஹுவ 'அலா ஜம்'இஹிம் இதா யஷா'உ கதீர்
42:29. வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், அவையிரண்டிலும் உயிரினங்களை பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் - ஆகவே, அவன் விரும்பியபோது அவற்றை ஒன்று சேர்க்க பேராற்றலுடையவன்.
42:30
42:30 وَمَاۤ اَصَابَكُمْ مِّنْ مُّصِيْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَيْدِيْكُمْ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍؕ‏
وَمَاۤ எது اَصَابَكُمْ உங்களுக்கு ஏற்பட்டதோ مِّنْ مُّصِيْبَةٍ சோதனைகளில் فَبِمَا كَسَبَتْ செய்தவற்றினால்தான் اَيْدِيْكُمْ உங்கள் கரங்கள் وَيَعْفُوْا இன்னும் மன்னித்துவிடுகிறான் عَنْ كَثِيْرٍؕ‏ அதிகமான தவறுகளை
42:30. வ மா அஸாBபகும் மின் முஸீBபதின் FபBபிமா கஸBபத் அய்தீகும் வ யஃFபூ 'அன் கதீர்
42:30. அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.
42:31
42:31 وَمَاۤ اَنْـتُمْ بِمُعْجِزِيْنَ فِى الْاَرْضِ ۖۚ وَمَا لَـكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ‏
وَمَاۤ اَنْـتُمْ بِمُعْجِزِيْنَ நீங்கள் தப்பித்துவிட முடியாது فِى الْاَرْضِ ۖۚ இந்த பூமியில் وَمَا لَـكُمْ இன்னும் உங்களுக்குஇல்லை مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مِنْ وَّلِىٍّ எந்த பாதுகாவலரும் وَّلَا نَصِيْرٍ‏ எந்த உதவியாளரும் இல்லை
42:31. வ மா அன்தும் BபிமுஃஜிZஜீன Fபில் அர்ளி வமா லகும் மின் தூனில் லாஹி மி(ன்)வ் வ லிய்யி(ன்)வ் வலா னஸீர்
42:31. இன்னும், நீங்கள் பூமியில் (எங்கு தஞ்சம் புகுந்தாலும்) அவனை இயலாமல் ஆக்குபவர்கள் இல்லை; மேலும், உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர, பாதுகாவலனோ, உதவிபுரிபவனோ இல்லை.
42:32
42:32 وَمِنْ اٰيٰتِهِ الْجَوَارِ فِى الْبَحْرِ كَالْاَعْلَامِؕ‏
وَمِنْ اٰيٰتِهِ அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான் الْجَوَارِ மிதந்து செல்லக்கூடிய கப்பல்கள் فِى الْبَحْرِ கடலில் كَالْاَعْلَامِؕ‏ மலைகளைப் போன்று
42:32. வ மின் ஆயாதிஹில் ஜ வாரிFபில் Bபஹ்ரி கல் அஃலம்
42:32. இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.
42:33
42:33 اِنْ يَّشَاْ يُسْكِنِ الرِّيْحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلٰى ظَهْرِهٖؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّـكُلِّ صَبَّارٍ شَكُوْرٍۙ‏
اِنْ يَّشَاْ அவன் நாடினால் يُسْكِنِ அமைதியாக்கி விடுவான் الرِّيْحَ காற்றுகளை فَيَظْلَلْنَ ஆகிவிடும் رَوَاكِدَ அசையாமல் நிற்கக்கூடியதாக عَلٰى ظَهْرِهٖؕ அதன் மீதே اِنَّ நிச்சயமாக فِىْ ذٰلِكَ இதில் இருக்கின்றன لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّـكُلِّ எல்லோருக்கும் صَبَّارٍ பெரும் பொறுமையாளர்கள் شَكُوْرٍۙ‏ நன்றி உள்ளவர்கள்
42:33. இ(ன்)ய் யஷா யுஸ்கினிர் ரீஹ Fப யள்லல்ன ரவாகித 'அலா ளஹ்ரிஹி; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகுல்லி ஸBப்Bபாரின் ஷகூர்
42:33. அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
42:34
42:34 اَوْ يُوْبِقْهُنَّ بِمَا كَسَبُوْا وَيَعْفُ عَنْ كَثِيْرٍ‏
اَوْ அல்லது يُوْبِقْهُنَّ அவற்றை அவன் அழித்து விடுவான் بِمَا كَسَبُوْا அவர்கள் செய்தவற்றின் காரணமாக وَيَعْفُ இன்னும் மன்னித்து விடுகிறான் عَنْ كَثِيْرٍ‏ அதிகமான தவறுகளை
42:34. அவ் யூBபிக்ஹுன்ன Bபிமா கஸBபூ வ யஃFபு 'அன் கதீர்
42:34. அல்லது அவர்கள் சம்பாதித்த (தீ)வினையின் காரணத்தினால் அவற்றை அவன் மூழ்கடிக்கச் செய்து விடுவான்; மேலும் அவன் பெரும்பாலானவற்றை மன்னித்தருளுகிறான்.
42:35
42:35 وَّيَعْلَمَ الَّذِيْنَ يُجَادِلُوْنَ فِىْۤ اٰيٰتِنَا ؕ مَا لَهُمْ مِّنْ مَّحِيْصٍ‏
وَّيَعْلَمَ அவன் நன்கறிவான் الَّذِيْنَ يُجَادِلُوْنَ தர்க்கிப்பவர்களை فِىْۤ اٰيٰتِنَا ؕ நமது வசனங்களில் مَا لَهُمْ அவர்களுக்கு இல்லை مِّنْ مَّحِيْصٍ தப்பிக்கும் இடம் ஏதும்
42:35. வ யஃலமல் லதீன யுஜாதிலூன Fபீ ஆயாதினா மா லஹும் மின் மஹீஸ்
42:35. அன்றியும், நம்முடைய வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்து கொண்டிருப்போர் - அவர்களுக்கு (தப்பித்துக் கொள்ள) புகலிடம் ஏதுமில்லை என்பதை அறிவார்கள்.
42:36
42:36 فَمَاۤ اُوْتِيْتُمْ مِّنْ شَىْءٍ فَمَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا‌ۚ وَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ وَّاَبْقٰى لِلَّذِيْنَ اٰمَنُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَۚ‏
فَمَاۤ اُوْتِيْتُمْ நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள எல்லாம் مِّنْ شَىْءٍ பொருள்கள் فَمَتَاعُ இன்பமாகும் الْحَيٰوةِ வாழ்க்கையின் الدُّنْيَا‌ۚ இவ்வுலக وَمَا எது உள்ளதோ عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் خَيْرٌ மிகச் சிறந்தது(ம்) وَّاَبْقٰى மிக நிரந்தரமானது(ம்) لِلَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களுக்கு وَعَلٰى رَبِّهِمْ இன்னும் தங்கள் இறைவனையே يَتَوَكَّلُوْنَۚ‏ சார்ந்திருப்பார்கள்
42:36. Fபமா ஊதீதும் மின் ஷய்'இன் Fபமதா'உல் ஹயாதித் துன்யா வமா 'இன்தல் லாஹி கய்ரு(ன்)வ் வ அBப்கா லில்லதீன ஆமனூ வ 'அலா ரBப்Bபிஹிம் யதவக்கலூன்
42:36. ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும்.
42:37
42:37 وَالَّذِيْنَ يَجْتَنِبُوْنَ كَبٰٓٮِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ وَاِذَا مَا غَضِبُوْا هُمْ يَغْفِرُوْنَ‌ۚ‏
وَالَّذِيْنَ يَجْتَنِبُوْنَ இன்னும் /எவர்கள்/விலகிவிடுவார்கள் كَبٰٓٮِٕرَ الْاِثْمِ பெரும் பாவங்களை விட்டும் وَالْفَوَاحِشَ மானக்கேடான விஷயங்களை விட்டும் وَاِذَا مَا غَضِبُوْا هُمْ அவர்கள் கோபப்படும்போது يَغْفِرُوْنَ‌ۚ‏ மன்னித்து விடுவார்கள்
42:37. வல்லதீன யஜ்தனிBபூன கBபா'இரல் இத்மி வல் Fபவாஹிஷ வ இதா மா களிBபூ ஹும் யக்Fபிரூன்
42:37. அவர்கள் (எத்தகையோரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.
42:38
42:38 وَالَّذِيْنَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَاَقَامُوْا الصَّلٰوةَ وَاَمْرُهُمْ شُوْرٰى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ‌ۚ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اسْتَجَابُوا பதில் அளிப்பார்கள் لِرَبِّهِمْ தங்கள் இறைவனுக்கு وَاَقَامُوْا இன்னும் நிலைநிறுத்துவார்கள் الصَّلٰوةَ தொழுகையை وَاَمْرُهُمْ இன்னும் அவர்களது காரியம் شُوْرٰى ஆலோசிக்கப்படும் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் وَمِمَّا رَزَقْنٰهُمْ இன்னும் அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றில் இருந்து يُنْفِقُوْنَ‌ۚ‏ தர்மம் கொடுப்பார்கள்
42:38. வல்லதீனஸ் தஜாBபூ லி ரBப்Bபிஹிம் வ அகாமுஸ் ஸலாத வ அம்ருஹும் ஷூரா Bபய்னஹும் வ மிம்மா ரZஜக்னாஹும் யுன்Fபிகூன்
42:38. இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.
42:39
42:39 وَالَّذِيْنَ اِذَاۤ اَصَابَهُمُ الْبَغْىُ هُمْ يَنْتَصِرُوْنَ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اِذَاۤ اَصَابَهُمُ அவர்களுக்கு நிகழ்ந்தால் الْبَغْىُ அநியாயம் هُمْ يَنْتَصِرُوْنَ‏ அவர்கள் பழிவாங்குவார்கள்
42:39. வல்லதீன இதா அஸாBபஹுமுல் Bபக்யு ஹும் யன்தஸிரூன்
42:39. அன்றியும். அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள்.
42:40
42:40 وَجَزٰٓؤُا سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا‌ۚ فَمَنْ عَفَا وَاَصْلَحَ فَاَجْرُهٗ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ‏
وَجَزٰٓؤُا தண்டனை سَيِّئَةٍ தீமையின் سَيِّئَةٌ தீமைதான் مِّثْلُهَا‌ۚ அது போன்ற فَمَنْ யார் عَفَا மன்னிப்பாரோ وَاَصْلَحَ இன்னும் சமாதானம் செய்வாரோ فَاَجْرُهٗ அவரது கூலி عَلَى اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் மீது اِنَّهٗ நிச்சயமாக அவன் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களை
42:40. வ ஜZஜா'உ ஸய்யி'அதின் ஸய்யி'அதும் மித்லுஹ Fபமன் 'அFபா வ அஸ்லஹ Fப அஜ்ருஹூ 'அலல் லாஹ்; இன்னஹூ லா யுஹிBப்Bபுள் ளாலிமீன்
42:40. இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
42:41
42:41 وَلَمَنِ انْتَصَرَ بَعْدَ ظُلْمِهٖ فَاُولٰٓٮِٕكَ مَا عَلَيْهِمْ مِّنْ سَبِيْلٍؕ‏
وَلَمَنِ யார் انْتَصَرَ பழிவாங்குவாரோ بَعْدَ ظُلْمِهٖ தனக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் فَاُولٰٓٮِٕكَ مَا عَلَيْهِمْ அவர்கள் மீது இல்லை مِّنْ سَبِيْلٍؕ‏ எவ்வித குற்றமும்
42:41. வ லமனின் தஸர Bபஃத ளுல்மிஹீ Fப உலா'இக மா 'அலய்ஹிம் மின் ஸBபீல்
42:41. எனவே, எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை.
42:42
42:42 اِنَّمَا السَّبِيْلُ عَلَى الَّذِيْنَ يَظْلِمُوْنَ النَّاسَ وَ يَبْغُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ‌ؕ اُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ‏
اِنَّمَا السَّبِيْلُ குற்றமெல்லாம் عَلَى الَّذِيْنَ يَظْلِمُوْنَ அநியாயம் செய்பவர்கள் மீதும் النَّاسَ மக்களுக்கு وَ يَبْغُوْنَ இன்னும் வரம்பு மீறுகிறார்கள் فِى الْاَرْضِ பூமியில் بِغَيْرِ الْحَقِّ‌ؕ அநியாயமாக اُولٰٓٮِٕكَ لَهُمْ அவர்களுக்கு உண்டு عَذَابٌ வேதனை اَلِيْمٌ‏ வலிதரக்கூடியது
42:42. இன்னமஸ் ஸBபீலு 'அலல் லதீன யள்லிமூனன் னாஸ வ யBப்கூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்க்; உலா'இக லஹும் 'அதாBபுன் அலீம்
42:42. ஆனால் எவர்கள் மக்களுக்கு அநியாயம் செய்து நீதமின்றி பூமியில் அட்டூழியம் செய்கிறார்களோ, அவர்கள் மீது தான் (குற்றம் சுமத்த) வழியிருக்கிறது - இத்தகையோருக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.
42:43
42:43 وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ اِنَّ ذٰلِكَ لَمِنْ عَزْمِ الْاُمُوْرِ
وَلَمَنْ صَبَرَ யார் பொறுமையாக இருப்பாரோ وَغَفَرَ இன்னும் மன்னிப்பாரோ اِنَّ ذٰلِكَ நிச்சயமாக அது لَمِنْ عَزْمِ الْاُمُوْرِ‏ மிக வீரமான காரியங்களில் உள்ளதாகும்
42:43. வ லமன் ஸBபர வ கFபர இன்ன தாலிக லமின் 'அZஜ்மில் உமூர்
42:43. ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்.
42:44
42:44 وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ وَّلِىٍّ مِّنْۢ بَعْدِهٖ‌ ؕ وَتَرَى الظّٰلِمِيْنَ لَمَّا رَاَوُا الْعَذَابَ يَقُوْلُوْنَ هَلْ اِلٰى مَرَدٍّ مِّنْ سَبِيْلٍ‌ۚ‏
وَمَنْ யாரை يُّضْلِلِ வழிகெடுத்தானோ اللّٰهُ அல்லாஹ் فَمَا இல்லை لَهٗ அவனுக்கு مِنْ وَّلِىٍّ எந்தப் பாதுகாவலரும் مِّنْۢ بَعْدِهٖ‌ ؕ அவனுக்குப் பிறகு وَتَرَى நீர் காண்பீர்! الظّٰلِمِيْنَ பாவிகளை لَمَّا رَاَوُا அவர்கள் பார்க்கும் போது الْعَذَابَ வேதனையை يَقُوْلُوْنَ அவர்கள் கூறுவார்கள் هَلْ اِلٰى مَرَدٍّ திரும்புவதற்கு உண்டா? مِّنْ سَبِيْلٍ‌ۚ‏ ஏதேனும் வழி
42:44. வ மய் யுள்லி லில்லாஹு Fபமா லஹூ மி(ன்)வ் வலிய்யின் மின் Bபஃதிஹ்; வ தரள் ளாலிமீன லம்மா ர அவுல் 'அதாBப யகூலூன ஹல் இலா மரத்தின் மின் ஸBபீல்
42:44. “இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது; (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?” என்று கூறும் நிலையை நீர் காண்பீர்.
42:45
42:45 وَتَرٰٮهُمْ يُعْرَضُوْنَ عَلَيْهَا خٰشِعِيْنَ مِنَ الذُّلِّ يَنْظُرُوْنَ مِنْ طَرْفٍ خَفِىٍّ‌ ؕ وَقَالَ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ الْخٰسِرِيْنَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَاَهْلِيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ اَلَاۤ اِنَّ الظّٰلِمِيْنَ فِىْ عَذَابٍ مُّقِيْمٍ‏
وَتَرٰٮهُمْ நீர் காண்பீர்/அவர்களை يُعْرَضُوْنَ சமர்ப்பிக்கப்படுவர்களாக عَلَيْهَا அதன் முன் خٰشِعِيْنَ தலைகுனிந்தவர்களாக مِنَ الذُّلِّ இழிவினால் يَنْظُرُوْنَ அவர்கள் பார்ப்பார்கள் مِنْ طَرْفٍ பார்வையால் خَفِىٍّ‌ ؕ திருட்டு وَقَالَ இன்னும் கூறுவார்கள் الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்கள் اِنَّ நிச்சயமாக الْخٰسِرِيْنَ நஷ்டவாளிகள் الَّذِيْنَ خَسِرُوْۤا நஷ்டமிழைத்தவர்கள்தான் اَنْفُسَهُمْ தங்களுக்கு(ம்) وَاَهْلِيْهِمْ தங்கள்குடும்பத்திற்கும் يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ மறுமை நாளில் اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ நிச்சயமாக الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள் فِىْ عَذَابٍ வேதனையில் مُّقِيْمٍ‏ நிலையான
42:45. வ தராஹும் யுஃரளூன 'அலய்ஹா காஷி'ஈன மினத்துல்லி யன்ளுரூன மின் தர்Fபின் கFபிய்ய்; வ காலல் லதீன ஆமனூ இன்னல் காஸிரீனல் லதீன கஸிரூ அன்Fபுஸஹும் வ அஹ்லீஹிம் யவ்மல் கியாமஹ்; அலா இன்னள் ளாலிமீன Fபீ 'அதாBபின் முகீம்
42:45. மேலும், சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (மறைவாகக்) கடைக்கண்ணால் பார்த்த வண்ணமாகவும் அவர்கள் (நரகத்தின் முன்) கொண்டுவரப் படுவதை நீர் காண்பீர்; (அவ்வேளை) ஈமான் கொண்டவர்கள் கூறுவார்கள்: “எவர் தங்களுக்கும், தம் குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை தேடிக் கொண்டார்களோ, கியாம நாளில் நிச்சயமாக அவர்கள் முற்றிலும் நஷ்டவாளர்தாம்.” அறிந்து கொள்க! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள்.
42:46
42:46 وَمَا كَانَ لَهُمْ مِّنْ اَوْلِيَآءَ يَنْصُرُوْنَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ‌ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ سَبِيْلٍؕ‏
وَمَا كَانَ இருக்க மாட்டார்கள் لَهُمْ அவர்களுக்கு مِّنْ اَوْلِيَآءَ பாதுகாவலர்கள் யாரும் يَنْصُرُوْنَهُمْ அவர்களுக்கு உதவுகின்ற(னர்) مِّنْ دُوْنِ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வையன்றி وَمَنْ யாரை يُّضْلِلِ வழிகெடுப்பானோ اللّٰهُ அல்லாஹ் فَمَا لَهٗ அவருக்கு இல்லை مِنْ سَبِيْلٍؕ‏ எந்த வழியும்
42:46. வமா கான லஹும் மின் அவ்லியா'அ யன்ஸுரூனஹும் மின் தூனில் லாஹ்; வ மய் யுள்லிலில் லாஹு Fபமா லஹூ மின் ஸBபீல்
42:46. (அந்நாளில்) அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவிபுரியும் உபகாரிகளில் எவரும் இருக்கமாட்டார்கள்; அன்றியும், அல்லாஹ் எவரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவருக்கு வேறு வழியொன்றுமில்லை.
42:47
42:47 اِسْتَجِيْبُوْا لِرَبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ يَوْمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِ‌ؕ مَا لَكُمْ مِّنْ مَّلْجَاٍ يَّوْمَٮِٕذٍ وَّمَا لَكُمْ مِّنْ نَّكِيْرٍ‏
اِسْتَجِيْبُوْا நீங்கள்பதில் அளியுங்கள்! لِرَبِّكُمْ உங்கள் இறைவனுக்கு مِّنْ قَبْلِ முன் اَنْ يَّاْتِىَ வருவதற்கு يَوْمٌ ஒரு நாள் لَّا مَرَدَّ அறவே தடுத்துவிட முடியாது لَهٗ அதை مِنَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்விடமிருந்து مَا لَكُمْ உங்களுக்கு இருக்காது مِّنْ مَّلْجَاٍ ஒதுங்குமிடம் எதுவும் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் وَّمَا لَكُمْ இன்னும் உங்களுக்கு இருக்க மாட்டார் مِّنْ نَّكِيْرٍ‏ தடுப்பவர் யாரும்
42:47. இஸ்தஜீBபூ லி ரBப்Bபிகும் மின் கBப்லி அ(ன்)ய் யாதிய யவ்முல் லா மரத்த லஹூ மின் அல்லாஹ்; மா லகும் மின் மல்ஜ' இ(ன்)ய் யவ்ம'இதி(ன்)வ் வமா லகும் மின் னகீர்
42:47. அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் - அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது; (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது.
42:48
42:48 فَاِنْ اَعْرَضُوْا فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًا‌ؕ اِنْ عَلَيْكَ اِلَّا الْبَلٰغُ‌ ؕ وَاِنَّاۤ اِذَاۤ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً فَرِحَ بِهَا‌ۚ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌۢ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ فَاِنَّ الْاِنْسَانَ كَفُوْرٌ‏
فَاِنْ اَعْرَضُوْا அவர்கள் புறக்கணித்தால் فَمَاۤ اَرْسَلْنٰكَ நாம் உம்மை அனுப்பவில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது حَفِيْظًا‌ؕ கண்காணிப்பவராக اِنْ عَلَيْكَ உம்மீது கடமை இல்லை اِلَّا தவிர الْبَلٰغُ‌ ؕ எடுத்துரைப்பதை وَاِنَّاۤ நிச்சயமாக நாம் اِذَاۤ اَذَقْنَا சுவைக்க வைத்தால் الْاِنْسَانَ மனிதர்களுக்கு مِنَّا நம்மிடமிருந்து رَحْمَةً ஓர் அருளை فَرِحَ அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்(கள்) بِهَا‌ۚ அதனால் وَاِنْ تُصِبْهُمْ அவர்களுக்கு ஏற்பட்டால் سَيِّئَةٌۢ ஒரு தீங்கு بِمَا قَدَّمَتْ முற்படுத்தியதால் اَيْدِيْهِمْ அவர்களின் கரங்கள் فَاِنَّ الْاِنْسَانَ நிச்சயமாக மனிதன் كَفُوْرٌ‏ மிகப்பெரிய நிராகரிப்பாளன்
42:48. Fப-இன் அஃரளூ Fபமா அர்ஸல்னாக 'அலய்ஹிம் ஹFபீளன் இன் 'அலய்க இல்லல் Bபலாக்; வ இன்னா இதா அதக்னல் இன்ஸான மின்னா ரஹ்மதன் Fபரிஹ Bபிஹா வ இன் துஸிBப்ஹும் ஸய்யி'அதுன் Bபிமா கத்தமத் அய்தீஹிம் Fப இன்னல் இன்ஸான கFபூர்
42:48. எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்.
42:49
42:49 لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ يَخْلُقُ مَا يَشَآءُ‌ ؕ يَهَبُ لِمَنْ يَّشَآءُ اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَآءُ الذُّكُوْرَ ۙ‏
لِلّٰهِ அல்லாஹ்விற்கே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ ؕ இன்னும் பூமி(யின்) يَخْلُقُ படைக்கின்றான் مَا يَشَآءُ‌ ؕ தான் நாடுவதை يَهَبُ வழங்குகின்றான் لِمَنْ يَّشَآءُ தான் நாடியவர்களுக்கு اِنَاثًا பெண் பிள்ளைகளை وَّيَهَبُ இன்னும் வழங்குகின்றான் لِمَنْ يَّشَآءُ தான் நாடியவர்களுக்கு الذُّكُوْرَ ۙ‏ ஆண் பிள்ளைகளை
42:49. லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; யக்லுகு மா யஷா'; யஹBபு லிமய் யஷா'உ இனாத(ன்)வ் வ யஹBபு லிமய் யஷா'உத் துகூர்
42:49. அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.
42:50
42:50 اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا‌ ۚ وَيَجْعَلُ مَنْ يَّشَآءُ عَقِيْمًا‌ؕ اِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ‏
اَوْ அல்லது يُزَوِّجُهُمْ அவர்களுக்கு கலந்து கொடுக்கின்றான் ذُكْرَانًا ஆண் பிள்ளைகளை وَّاِنَاثًا‌ ۚ இன்னும் பெண் பிள்ளைகளை وَيَجْعَلُ இன்னும் ஆக்குகின்றான் مَنْ يَّشَآءُ தான் நாடுகின்றவர்களை عَقِيْمًا‌ؕ மலடுகளாக اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلِيْمٌ நன்கறிந்தவன் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
42:50. அவ் யுZஜவ்விஜுஹும் துக்ரான(ன்)வ் வ இனாத(ன்)வ் வ யஜ்'அலு மய் யஷா'உ 'அகீமா; இன்னஹூ 'அலீமுன் கதீர்
42:50. அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.
42:51
42:51 وَمَا كَانَ لِبَشَرٍ اَنْ يُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْيًا اَوْ مِنْ وَّرَآىٴِ حِجَابٍ اَوْ يُرْسِلَ رَسُوْلًا فَيُوْحِىَ بِاِذْنِهٖ مَا يَشَآءُ‌ؕ اِنَّهٗ عَلِىٌّ حَكِيْمٌ‏
وَمَا كَانَ முடியாது لِبَشَرٍ ஒரு மனிதருக்கு اَنْ يُّكَلِّمَهُ அவரிடம் நேரடியாகபேசுவது اللّٰهُ அல்லாஹ் اِلَّا தவிர وَحْيًا வஹீ அறிவிப்பதன் மூலம் اَوْ அல்லது مِنْ وَّرَآىٴِ பின்னால் இருந்து حِجَابٍ திரைக்கு اَوْ அல்லது يُرْسِلَ அனுப்புவான் رَسُوْلًا ஒரு தூதரை فَيُوْحِىَ வஹீ அறிவிப்பான் بِاِذْنِهٖ தனது உத்தரவின்படி مَا يَشَآءُ‌ؕ தான் நாடுவதை اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلِىٌّ மிக உயர்ந்தவன் حَكِيْمٌ‏ மகா ஞானவான்
42:51. வமா கான லிBபஷரின் அ(ன்)ய் யுகல்லிமஹுல் லாஹு இல்லா வஹ்யன் அவ் மி(ன்)வ் வரா'இ ஹிஜாBபின் அவ் யுர்ஸில ரஸூலன் Fப யூஹிய Bபி இத்னிஹீ மா யஷா'; இன்னஹூ 'அலிய்யுன் ஹகீம்
42:51. அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ; அல்லது திரைக்கப்பால் இருந்தோ; அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை; நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.
42:52
42:52 وَكَذٰلِكَ اَوْحَيْنَاۤ اِلَيْكَ رُوْحًا مِّنْ اَمْرِنَا‌ ؕ مَا كُنْتَ تَدْرِىْ مَا الْكِتٰبُ وَلَا الْاِيْمَانُ وَلٰـكِنْ جَعَلْنٰهُ نُوْرًا نَّهْدِىْ بِهٖ مَنْ نَّشَآءُ مِنْ عِبَادِنَا‌ ؕ وَاِنَّكَ لَتَهْدِىْۤ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍۙ‏
وَكَذٰلِكَ இவ்வாறுதான் اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு رُوْحًا அருளாக مِّنْ اَمْرِنَا‌ ؕ நமதுகட்டளையினால் مَا كُنْتَ நீர் இருக்கவில்லை تَدْرِىْ அறிந்தவராக مَا الْكِتٰبُ வேதம் என்றால் என்ன وَلَا الْاِيْمَانُ ஈமான் என்றால் என்ன وَلٰـكِنْ எனினும் جَعَلْنٰهُ நாம் இதை ஆக்கினோம் نُوْرًا ஓர் ஒளியாக نَّهْدِىْ நாம் நேர்வழி காட்டுகின்றோம் بِهٖ இதன் மூலம் مَنْ نَّشَآءُ நாம் நாடுகின்றவர்களுக்கு مِنْ عِبَادِنَا‌ ؕ நமது அடியார்களில் وَاِنَّكَ நிச்சயமாக நீர் لَتَهْدِىْۤ நேர்வழி காட்டுகின்றீர் اِلٰى பக்கம் صِرَاطٍ பாதையின் مُّسْتَقِيْمٍۙ‏ நேரான
42:52. வ கதாலிக அவ்ஹய்னா இலய்க ரூஹன் மின் அம்ரினா; மா குன்த தத்ரீ மல் கிதாBபு வ லல் ஈமானு வ லாகின் ஜ'அல்னாஹு னூரன் னஹ்தீ Bபிஹீ மன் னஷா'உ மின் 'இBபாதினா; வ இன்னக லதஹ்தீ இலா ஸிராதின் முஸ்தகீம்
42:52. (நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர்.
42:53
42:53 صِرَاطِ اللّٰهِ الَّذِىْ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ اَلَاۤ اِلَى اللّٰهِ تَصِيْرُ الْاُمُوْرُ
صِرَاطِ பாதையின் பக்கம் اللّٰهِ அல்லாஹ்வின் الَّذِىْ எப்படிப்பட்டவன் لَهٗ அவனுக்கே مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَمَا فِى الْاَرْضِ‌ؕ இன்னும் பூமியில் உள்ளவை(யும்) اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கமே تَصِيْرُ திரும்புகின்றன الْاُمُوْرُ‏ காரியங்கள்
42:53. ஸிராதில் லாஹில் லதீ லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; அலா இலல் லாஹி தஸீருல் உமூர்
42:53. (அதுவே) அல்லாஹ்வின் வழியாகும்; வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (யாவும்) அவனுக்கே சொந்தம் - அறிந்து கொள்க! அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீண்டு வருகின்றன.