13. ஸூரத்துர் ரஃது (இடி)
மதனீ, வசனங்கள்: 43

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
13:1
13:1 الٓـمّٓرٰ تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ‌ؕ وَالَّذِىْۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ الْحَـقُّ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُوْنَ‏
الٓـمّٓرٰ அலிஃப்;லாம்;மீம்;றா تِلْكَ இவை اٰيٰتُ வசனங்கள் الْكِتٰبِ‌ؕ வேதத்தின் وَالَّذِىْۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு مِنْ இருந்து رَّبِّكَ உம் இறைவன் الْحَـقُّ உண்மைதான் وَلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்(கள்) النَّاسِ மக்களில் لَا يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
13:1. அலிFப்-லாம்-மீம்-ரா; தில்க ஆயாதுல் கிதாBப்; வல்லதீ உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிகல் ஹக்கு வ லாகின்ன அக்தரன் னாஸி லா யு'மினூன்
13:1. அலிஃப், லாம், மீம், றா. இவை வேதத்தின் வசனங்களாகும். மேலும் (நபியே!) உம் மீது, உம் இறைவனிடமிருந்து அருளப்பட்டுள்ள இது உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்புவதில்லை.
13:2
13:2 اَللّٰهُ الَّذِىْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا‌ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ‌ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ‌ؕ كُلٌّ يَّجْرِىْ لِاَجَلٍ مُّسَمًّى‌ؕ يُدَبِّرُ الْاَمْرَ يُفَصِّلُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ بِلِقَآءِ رَبِّكُمْ تُوْقِنُوْنَ‏
اَللّٰهُ அல்லாஹ் الَّذِىْ எத்தகையவன் رَفَعَ உயர்த்தினான் السَّمٰوٰتِ வானங்களை بِغَيْرِ இன்றி عَمَدٍ தூண்கள் تَرَوْنَهَا‌ காண்கிறீர்கள்/அதை ثُمَّ பிறகு اسْتَوٰى உயர்ந்து விட்டான் عَلَى மேல் الْعَرْشِ‌ அர்ஷ் وَسَخَّرَ இன்னும் வசப்படுத்தினான் الشَّمْسَ சூரியனை وَالْقَمَرَ‌ؕ இன்னும் சந்திரனை كُلٌّ எல்லாம் يَّجْرِىْ ஓடுகின்றன لِاَجَلٍ ஒரு தவணையின் பக்கம் مُّسَمًّى‌ؕ குறிப்பிடப்பட்டது يُدَبِّرُ திட்டமிடுகிறான் الْاَمْرَ காரியத்தை يُفَصِّلُ விவரிக்கிறான் الْاٰيٰتِ வசனங்களை لَعَلَّكُمْ ழுமீலிs ஸசீவீÓனீ بِلِقَآءِ சந்திப்பை رَبِّكُمْ உங்கள் இறைவன் تُوْقِنُوْنَ‏ உறுதி கொள்கிறீர்கள்
13:2. அல்லாஹுல் லதீ ரFப்'அஸ் ஸமாவாதி Bபிகய்ரி 'அமதின் தரவ்னஹா தும்மஸ் தவா 'அலல் 'அர்ஷி வ ஸக்கரஷ் ஷம்ஸ வல்கமர குல்லு(ன்)ய் யஜ்ரீ லி அஜலிம் முஸம்மா; யுதBப்Bபிருல் அம்ர யுFபஸ்ஸிலில் ஆயாதி ல'அல்லகும் Bபிலிகா'இ ரBப்Bபிகும் தூகினூன்
13:2. (இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.
13:3
13:3 وَهُوَ الَّذِىْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِيْهَا رَوَاسِىَ وَاَنْهٰرًا‌ ؕ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِيْهَا زَوْجَيْنِ اثْنَيْنِ‌ يُغْشِى الَّيْلَ النَّهَارَ‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏
وَهُوَ அவன் الَّذِىْ எத்தகையவன் مَدَّ விரித்தான் الْاَرْضَ பூமியை وَجَعَلَ இன்னும் அமைத்தான் فِيْهَا அதில் رَوَاسِىَ மலைகளை وَاَنْهٰرًا‌ ؕ இன்னும் ஆறுகளை وَمِنْ இருந்து كُلِّ எல்லாம் الثَّمَرٰتِ கனிகள் جَعَلَ ஆக்கினான் فِيْهَا அவற்றில் زَوْجَيْنِ ஜோடிகளை اثْنَيْنِ‌ இரண்டு يُغْشِى மூடுகின்றான் الَّيْلَ இரவால் النَّهَارَ‌ ؕ பகலை اِنَّ فِىْ ذٰ لِكَ நிச்சயமாக/இதில் لَاٰيٰتٍ அத்தாட்சிகள் لِّـقَوْمٍ மக்களுக்கு يَّتَفَكَّرُوْنَ‏ சிந்திக்கின்றார்கள்
13:3. வ ஹுவல் லதீ மத்தல் அர்ள வ ஜ'அல Fபீஹா ரவாஸிய வ அன்ஹாரா; வ மின் குல்லிஸ் தமராதி ஜ'அல Fபீஹா Zஜவ்ஜய்னித் னய்னி யுக்ஷில் லய்லன் னஹார்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யதFபக்கரூன்
13:3. மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
13:4
13:4 وَ فِى الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِيْلٌ صِنْوَانٌ وَّغَيْرُ صِنْوَانٍ يُّسْقٰى بِمَآءٍ وَّاحِدٍ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلٰى بَعْضٍ فِى الْاُكُلِ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
وَ فِى الْاَرْضِ பூமியில் قِطَعٌ பகுதிகள் مُّتَجٰوِرٰتٌ ஒன்றுக்கொன்று நெருக்கமான وَّجَنّٰتٌ இன்னும் தோட்டங்கள் مِّنْ اَعْنَابٍ திராட்சைகளின் وَّزَرْعٌ இன்னும் விவசாயம் وَّنَخِيْلٌ இன்னும் பேரீச்ச மரங்கள் صِنْوَانٌ கிளைகள் நிறைந்தது وَّغَيْرُ அற்றது صِنْوَانٍ கிளைகள் يُّسْقٰى புகட்டப்படுகிறது بِمَآءٍ நீரைக் கொண்டு وَّاحِدٍ ஒரே وَنُفَضِّلُ இன்னும் மேன்மையாக்கு கின்றோம் بَعْضَهَا அவற்றில் சிலவற்றை عَلٰى விட بَعْضٍ சிலவற்றை فِى الْاُكُلِ‌ؕ சுவையில் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّـقَوْمٍ மக்களுக்கு يَّعْقِلُوْنَ‏ சிந்தித்து புரிவார்கள்
13:4. வ Fபில் அர்ளி கித'உம் முத ஜாவிராது(ன்)வ் வ ஜன்னாதும் மின் அஃனாBபி(ன்)வ் வ Zஜர்'உ(ன்)வ் வ னகீலுன் ஸின்வானு(ன்)வ் வ கய்ரு ஸின்வானி(ன்)ய் யுஸ்கா Bபிமா'இ(ன்)வ் வாஹித்; வ னுFபள்ளிலு Bபஃளஹா 'அலா Bபஃளின் Fபில்-உகுல்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
13:4. இன்னும், பூமியில் அருகருகே இணைந்தார்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
13:5
13:5 وَ اِنْ تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ ءَاِذَا كُنَّا تُرٰبًا ءَاِنَّا لَفِىْ خَلْقٍ جَدِيْدٍ  ؕ اُولٰۤٮِٕكَ الَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ‌ۚ وَاُولٰۤٮِٕكَ الْاَغْلٰلُ فِىْۤ اَعْنَاقِهِمْ‌ۚ وَاُولٰۤٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
وَ اِنْ تَعْجَبْ நீர்ஆச்சரியப்பட்டால் فَعَجَبٌ ஆச்சரியமானதே قَوْلُهُمْ அவர்களுடைய கூற்று ءَاِذَا كُنَّا நாங்கள் ஆகிவிட்டால்? تُرٰبًا மண்ணாக ءَاِنَّا ?/நிச்சயமாக நாம் لَفِىْ خَلْقٍ படைப்பில் جَدِيْدٍ  ؕ புதியது اُولٰۤٮِٕكَ இவர்கள் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் بِرَبِّهِمْ‌ۚ தங்கள் இறைவனை وَاُولٰۤٮِٕكَ இன்னும் இவர்கள் الْاَغْلٰلُ அரிகண்டங்கள் فِىْۤ اَعْنَاقِهِمْ‌ۚ இவர்களுடைய கழுத்துகளில் وَاُولٰۤٮِٕكَ இன்னும் இவர்கள் اَصْحٰبُ النَّارِ‌ۚ நரகவாசிகள் هُمْ فِيْهَا அதில் இவர்கள் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
13:5. வ இன் தஃஜBப் Fப'அஜBபுன் கவ்லுஹும் 'அ-இதா குன்ன துராBபன் 'அ-இன்ன லFபீ கல்கின் ஜதீத்; உலா 'இகல் லதீன கFபரூ Bபி ரBப்Bபிஹிம் வ உலா'இகல் அக்லாலு Fபீ அஃனாகிஹிம் வ உலா'இக அஸ்ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
13:5. (அவர்களிடம் நம்பிக்கை இல்லையே என்று நபியே!) நீர் ஆச்சரியப்படுவீராயின் அவர்கள், “நிச்சயமாக நாங்கள் (மரித்து) மண்ணாகிவிட்ட பிறகு நாம் புதிதாக படைக்கப்படுவோமா?” என்று கூறுவது (இதைவிட) ஆச்சரியமானதே! இவர்கள் தாம் தங்களுடைய இறைவனையே நிராகரிப்பவர்கள் (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்துகளில் விலங்கிடப்படும்; இவர்கள் நரகவாசிகளே யாவார்கள்; இவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
13:6
13:6 وَيَسْتَعْجِلُوْنَكَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلٰتُ‌ؕ وَاِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ لِّـلنَّاسِ عَلٰى ظُلْمِهِمْ‌ۚ وَاِنَّ رَبَّكَ لَشَدِيْدُ الْعِقَابِ‏
وَيَسْتَعْجِلُوْنَكَ அவசரமாகத் தேடுகின்றனர்/உம்மிடம் بِالسَّيِّئَةِ கெட்டதை قَبْلَ முன்னர் الْحَسَنَةِ நல்லதிற்கு وَقَدْ خَلَتْ சென்றுள்ளன مِنْ قَبْلِهِمُ அவர்களுக்கு முன்னர் الْمَثُلٰتُ‌ؕ தண்டனைகள் وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் لَذُوْ مَغْفِرَةٍ மன்னிப்பவன் لِّـلنَّاسِ மக்களை عَلٰى ظُلْمِهِمْ‌ۚ அவர்கள் குற்றம் செய்திருந்தபோதும் وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் لَشَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ‏ தண்டனை
13:6. வ யஸ்தஃஜிலூனக Bபிஸ் ஸய்யி'அதி கBப்லல் ஹஸனதி வ கத் கலத் மின் கBப்லிஹிமுல் மதுலாத்; வ இன்ன ரBப்Bபக லதூ மக்Fபிரதில் லின்னாஸி 'அலா ளுல்மிஹிம் வ இன்ன ரBப்Bபக லஷதீதுல் 'இகாBப்
13:6. (நபியே!) நன்மை (வருவதற்கு) முன்னர், தீமையைக் கொண்டு (வருமாறு) உம்மை இவர்கள் அவசரப்படுத்துகிறார்கள்; நிச்சயமாக இவர்களுக்கு முன்னரும் (வேதனை மிக்க தண்டனைகள் வழங்கப்பட்ட உதாரணமான) நிகழ்ச்சிகள் நடந்தேயிருக்கின்றன; நிச்சயமாக உம் இறைவன் மனிதர்களை அவர்களின் பாவங்களுக்காக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்; மேலும், உம் இறைவன் நிச்சயமாக வேதனை செய்வதிலும் கடுமையானவனாக இருக்கின்றான்.
13:7
13:7 وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖؕ اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرٌ‌ وَّ لِكُلِّ قَوْمٍ هَادٍ
وَيَقُوْلُ கூறுகிறார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தவர்கள் لَوْلَاۤ اُنْزِلَ இறக்கப்பட வேண்டாமா? عَلَيْهِ இவர் மீது اٰيَةٌ ஓர் அத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّهٖؕ இவருடையஇறைவன் اِنَّمَاۤ اَنْتَ நீரெல்லாம் مُنْذِرٌ‌ ஓர் எச்சரிப்பாளர் وَّ لِكُلِّ قَوْمٍ எல்லா மக்களுக்கும் هَادٍ‏ தலைவர்/வழிகாட்டி
13:7. வ யகூலுல் லதீன கFபரூ லவ் லா உன்Zஜில 'அலய்ஹி ஆயதும் மிர் ரBப்Bபிஹ்; இன்னமா அன்த முன்திரு(ன்)வ் வ லிகுல்லி கவ்மின் ஹாத்
13:7. இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் “அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.  
13:8
13:8 اَللّٰهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ اُنْثٰى وَمَا تَغِيْضُ الْاَرْحَامُ وَمَا تَزْدَادُ ‌ؕ وَكُلُّ شَىْءٍ عِنْدَهٗ بِمِقْدَارٍ‏
اَللّٰهُ அல்லாஹ் يَعْلَمُ அறிகின்றான் مَا எதை تَحْمِلُ சுமக்கிறாள் كُلُّ ஒவ்வொரு اُنْثٰى பெண் وَمَا تَغِيْضُ இன்னும் குறைவதை الْاَرْحَامُ கர்ப்பப்பைகள் وَمَا تَزْدَادُ ؕ இன்னும் அதிகமாவதை وَكُلُّ شَىْءٍ எல்லாம் عِنْدَهٗ அவனிடம் بِمِقْدَارٍ‏ ஓர் அளவில்
13:8. அல்லாஹு யஃலமு மா தஹ்மிலு குல்லு உன்தா வமா தகீளுல் அர்ஹாமு வமா தZஜ்தாத், வ குல்லு ஷய்'இன் 'இன்தஹூ Bபிமிக்தார்
13:8. ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.
13:9
13:9 عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيْرُ الْمُتَعَالِ‏
عٰلِمُ அறிந்தவன் الْغَيْبِ மறைவை وَالشَّهَادَةِ இன்னும் வெளிப்படையை الْكَبِيْرُ மிகப் பெரியவன் الْمُتَعَالِ ‏ மிக உயர்ந்தவன்
13:9. 'ஆலிமுல் கய்Bபி வஷ் ஷஹாததில் காBபீருல் முத'ஆல்
13:9. (எல்லாவற்றின்) இரகசியத்தையும், பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன்.
13:10
13:10 سَوَآءٌ مِّنْكُمْ مَّنْ اَسَرَّ الْقَوْلَ وَ مَنْ جَهَرَ بِهٖ وَمَنْ هُوَ مُسْتَخْفٍۢ بِالَّيْلِ وَسَارِبٌۢ بِالنَّهَارِ‏
سَوَآءٌ சமமே مِّنْكُمْ உங்களில் مَّنْ எவன் اَسَرَّ ரகசியப்படுத்தினான் الْقَوْلَ وَ مَنْ பேச்சை/இன்னும் எவன் جَهَرَ பகிரங்கப்படுத்தினான் بِهٖ அதை وَمَنْ இன்னும் எவன் هُوَ அவன் مُسْتَخْفٍۢ மறைத்து செய்பவனாக بِالَّيْلِ இரவில் وَسَارِبٌۢ இன்னும் வெளிப்படுபவன் بِالنَّهَارِ‏ பகலில்
13:10. ஸவா'உம் மின்கும் மன் அஸர்ரல் கவ்ல வ மன் ஜஹர Bபிஹீ வ மன் ஹுவ முஸ்தக்Fபிம் Bபில்லய்லி வ ஸாரிBபும் Bபின்னஹார்
13:10. எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது, அதை வெளிப்படையாகக் கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்குச் சமமே).
13:11
13:11 لَهٗ مُعَقِّبٰتٌ مِّنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖ يَحْفَظُوْنَهٗ مِنْ اَمْرِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ؕ وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْۤءًا فَلَا مَرَدَّ لَهٗ‌ۚ وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ‏
لَهٗ அவனுக்கு مُعَقِّبٰتٌ பின் தொடரக் கூடியவர்கள் مِّنْۢ بَيْنِ يَدَيْهِ அவனுக்கு முன் وَمِنْ خَلْفِهٖ இன்னும் அவனுக்குப் பின் يَحْفَظُوْنَهٗ பாதுகாக்கின்றனர்/அவனை مِنْ இருந்து اَمْرِ கட்டளை اللّٰهِ‌ؕ அல்லாஹ் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُغَيِّرُ மாற்றமாட்டான் مَا بِقَوْمٍ ஒரு சமுதாயத்திடம் உள்ளதை حَتّٰى يُغَيِّرُوْا அவர்கள் மாற்றுகின்றவரை مَا بِاَنْفُسِهِمْ‌ؕ தங்களிடமுள்ளதை وَاِذَاۤ اَرَادَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் بِقَوْمٍ ஒரு சமுதாயத்திற்கு سُوْۤءًا அழிவை فَلَا அறவே முடியாது مَرَدَّ தடுப்பது لَهٗ‌ۚ அதை وَمَا لَهُمْ அவர்களுக்கு இல்லை مِّنْ دُوْنِهٖ அவனையன்றி مِنْ وَّالٍ‏ உதவியாளர் எவரும்
13:11. லஹூ மு'அக்கிBபாதும் மிம் Bபய்னி யதய்ஹி வ மின் கல்Fபிஹீ யஹ்Fபளூனஹூ மின் அம்ரில் லாஹ்; இன்னல் லாஹ லா யுகய்யிரு மா Bபிகவ்மின் ஹத்தா யுகய்யிரூ மா Bபிஅன்Fபுஸிஹிம்; வ இதா அராதல் லாஹு Bபிகவ்மின் ஸூ'அன் Fபலா மரத்த லஹ்; வமா லஹும் மின் தூனிஹீமி(ன்)வ் வால்
13:11. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
13:12
13:12 هُوَ الَّذِىْ يُرِيْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّيُنْشِئُ السَّحَابَ الثِّقَالَ‌ۚ‏
هُوَ அவன் الَّذِىْ எத்தகையவன் يُرِيْكُمُ காட்டுகின்றான்/உங்களுக்கு الْبَرْقَ மின்னலை خَوْفًا பயமாக وَّطَمَعًا இன்னும் ஆசையாக وَّيُنْشِئُ இன்னும் கிளப்புகின்றான் السَّحَابَ மேகங்களை الثِّقَالَ‌ۚ‏ கனமானவை
13:12. ஹுவல் லதீ யுரீகுமுல் Bபர்க கவ்Fப(ன்)வ் வ தம'அ(ன்)வ் வ யுன்ஷி'உஸ் ஸஹாBபஸ் திகால்
13:12. அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் (அதே நேரத்தில் மழைக்குரிய) ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான்.
13:13
13:13 ‌وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهٖ وَالْمَلٰۤـٮِٕكَةُ مِنْ خِيْفَتِهٖ ‌ۚ وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيْبُ بِهَا مَنْ يَّشَآءُ وَهُمْ يُجَادِلُوْنَ فِى اللّٰه‌ۚ ِ وَهُوَ شَدِيْدُ الْمِحَالِؕ‏
وَيُسَبِّحُ துதிக்கின்றனர் الرَّعْدُ இடி بِحَمْدِهٖ அவனைப் புகழ்ந்து وَالْمَلٰۤـٮِٕكَةُ இன்னும் வானவர்கள் مِنْ خِيْفَتِهٖ ۚ அவனுடைய பயத்தால் وَيُرْسِلُ அனுப்புகிறான் الصَّوَاعِقَ அபாயங்களை فَيُصِيْبُ வேறறுக்கிறான் بِهَا அவற்றைக் கொண்டு مَنْ எவர்களை يَّشَآءُ நாடுகிறான் وَهُمْ அவர்களோ يُجَادِلُوْنَ தர்க்கிக்கிறார்கள் فِى اللّٰه‌ۚ அல்லாஹ்வை பற்றி وَهُوَ அவன் شَدِيْدُ கடுமையானவன் الْمِحَالِؕ‏ பிடி
13:13. வ யுஸBப்Bபிஹுர் ரஃது Bபிஹம்திஹீ வல்மலா'இகது மின் கீFபதிஹீ வ யுர்ஸிலுஸ் ஸவா'இக Fப யுஸீBபு Bபிஹா மய் யஷா'உ வ ஹும் யுஜாதிலூன Fபில் லாஹி வ ஹுவ ஷதீதுல் மிஹால்
13:13. மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
13:14
13:14 لَهٗ دَعْوَةُ الْحَـقِّ‌ؕ وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا يَسْتَجِيْبُوْنَ لَهُمْ بِشَىْءٍ اِلَّا كَبَاسِطِ كَفَّيْهِ اِلَى الْمَآءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِـغِهٖ‌ؕ وَمَا دُعَآءُ الْكٰفِرِيْنَ اِلَّا فِىْ ضَلٰلٍ‏
لَهٗ அவனுக்கே دَعْوَةُ பிரார்த்தனை الْحَـقِّ‌ؕ உண்மை وَالَّذِيْنَ எவர்கள் يَدْعُوْنَ அழைக்கிறார்கள் مِنْ دُوْنِهٖ அவனையன்றி لَا يَسْتَجِيْبُوْنَ பதில் தர மாட்டார்கள் لَهُمْ அவர்களுக்கு بِشَىْءٍ எதையும் اِلَّا தவிர كَبَاسِطِ விரிப்பவனைப் போன்றே كَفَّيْهِ தன் இரு கைகளை اِلَى பக்கம் الْمَآءِ தண்ணீர் لِيَبْلُغَ அது அடைவதற்காக فَاهُ தன் வாயை وَمَا இல்லை هُوَ அதுவோ بِبَالِـغِهٖ‌ؕ அடையாது/அதை وَمَا இல்லை دُعَآءُ பிரார்த்தனை الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களின் اِلَّا فِىْ ضَلٰلٍ‏ வழிகேட்டில் தவிர
13:14. லஹூ தஃவதுல் ஹக்க்; வல்லதீன யத்'ஊன மின் தூனிஹீ லா யஸ்தஜீBபூன லஹும் Bபிஷய்'இன் இல்லா கBபாஸிதி கFப்Fபய்ஹி இலல் மா'இ லியBப்லுக Fபாஹு வமா ஹுவ BபிBபாலிகிஹ்; வமா து'ஆ'உல் காFபிரீன இல்லா Fபீ ளலால்
13:14. உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை.
13:15
13:15 وَلِلّٰهِ يَسْجُدُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّظِلٰلُهُمْ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۩
وَلِلّٰهِ அல்லாஹ்வுக்கு يَسْجُدُ சிரம் பணிகின்றனர் مَنْ فِى السَّمٰوٰتِ எவர்/வானங்களில் وَالْاَرْضِ இன்னும் பூமியில் طَوْعًا ஆசையாக وَّكَرْهًا இன்னும் நிர்பந்தமாக وَّظِلٰلُهُمْ அவர்களின் நிழல்களும் بِالْغُدُوِّ காலையில் وَالْاٰصَالِ ۩‏ இன்னும் மாலைகளில்
13:15. வ லில்லாஹி யஸ்ஜுது மன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி தவ் 'அ(ன்)வ் வ கர்ஹ(ன்)வ் வ ளிலாலுஹும் Bபில்குதுவ்வி வல் ஆஸால்
13:15. வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன; அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸஜ்தா செய்கின்றன).
13:16
13:16 قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ قُلِ اللّٰهُ‌ؕ قُلْ اَفَاتَّخَذْتُمْ مِّنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ لَا يَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ نَفْعًا وَّلَا ضَرًّا‌ؕ قُلْ هَلْ يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ۙ اَمْ هَلْ تَسْتَوِى الظُّلُمٰتُ وَالنُّوْرُ ۚ اَمْ جَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ خَلَقُوْا كَخَلْقِهٖ فَتَشَابَهَ الْخَـلْقُ عَلَيْهِمْ‌ؕ قُلِ اللّٰهُ خَالِـقُ كُلِّ شَىْءٍ وَّهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ‏
قُلْ கூறுவீராக مَنْ யார்? رَّبُّ இறைவன் السَّمٰوٰتِ வானங்களின் وَالْاَرْضِؕ இன்னும் பூமி قُلِ கூறுவீராக اللّٰهُ‌ؕ அல்லாஹ் قُلْ கூறுவீராக اَفَاتَّخَذْتُمْ நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்? مِّنْ دُوْنِهٖۤ அவனையன்றி اَوْلِيَآءَ பாதுகாவலர்களை لَا يَمْلِكُوْنَ உரிமை பெறமாட்டார்கள் لِاَنْفُسِهِمْ தங்களுக்கே نَفْعًا நன்மை செய்வதற்கு وَّلَا ضَرًّا‌ؕ தீங்கு செய்வதற்கு قُلْ கூறுவீராக هَلْ يَسْتَوِى சமமாவார்களா? الْاَعْمٰى குருடன் وَالْبَصِيْرُ ۙ இன்னும் பார்வையுடையவன் اَمْ அல்லது هَلْ تَسْتَوِى சமமாகுமா? الظُّلُمٰتُ இருள்கள் وَالنُّوْرُ ۚ இன்னும் ஒளி اَمْ அல்லது? جَعَلُوْا ஆக்கினார்கள் لِلّٰهِ அல்லாஹ்விற்கு شُرَكَآءَ இணைகளை خَلَقُوْا படைத்தார்கள் كَخَلْقِهٖ அவனுடைய படைப்பைப் போன்று فَتَشَابَهَ அதனால் குழப்பமடைந்தது الْخَـلْقُ படைப்பது عَلَيْهِمْ‌ؕ இவர்கள் மீது قُلِ கூறுவீராக اللّٰهُ அல்லாஹ்தான் خَالِـقُ படைப்பாளன் كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் وَّهُوَ அவன் الْوَاحِدُ ஒருவன் الْقَهَّارُ‏ அடக்கி ஆளுபவன்
13:16. குல் மர் ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ள்; குலில்லாஹ்; குல் அFபத்தகத்தும் மின் தூனிஹீ அவ்லியா'அ லா யம்லிகூன லி அன்Fபுஸிஹிம் னFப்'அ(ன்)வ் வலா ளர்ரா; குல் ஹல் யஸ்தவில் அஃமா வல் Bபஸீரு அம் ஹல் தஸ்தவிள் ளுலுமாது வன்னூர்; அம் ஜ'அலூ லில்லாஹி ஷுரகா'அ கலகூ ககல்கிஹீ Fபதஷா Bபஹல் கல்கு 'அலய்ஹிம்; குலில் லாஹு காலிகு குல்லி ஷய்'இ(ன்)வ் வ ஹுவல் வாஹிதுல் கஹ்ஹர்
13:16. (நபியே! அவர்களிடம்;) “வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்”; மேலும், கூறும்: “குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!” (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று.
13:17
13:17 اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَالَتْ اَوْدِيَةٌۢ بِقَدَرِهَا فَاحْتَمَلَ السَّيْلُ زَبَدًا رَّابِيًا‌ ؕ وَمِمَّا يُوْقِدُوْنَ عَلَيْهِ فِى النَّارِ ابْتِغَآءَ حِلْيَةٍ اَوْ مَتَاعٍ زَبَدٌ مِّثْلُهٗ‌ ؕ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ الْحَـقَّ وَالْبَاطِلَ ؕ  فَاَمَّا الزَّبَدُ فَيَذْهَبُ جُفَآءً‌‌ ۚ وَاَمَّا مَا يَنْفَعُ النَّاسَ فَيَمْكُثُ فِى الْاَرْضِ‌ؕ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَؕ‏
اَنْزَلَ அவன் இறக்கினான் مِنَ இருந்து السَّمَآءِ மேகம் مَآءً மழையை فَسَالَتْ ஓடின اَوْدِيَةٌۢ ஓடைகள் بِقَدَرِهَا அவற்றின் அளவிற்கு فَاحْتَمَلَ சுமந்தது السَّيْلُ வெள்ளம் زَبَدًا நுரைகளை رَّابِيًا‌ ؕ மிதக்கக்கூடிய(து) وَمِمَّا இன்னும் எதிலிருந்து يُوْقِدُوْنَ பழுக்கவைக்கிறார்கள் عَلَيْهِ அதன் மீது فِى النَّارِ நெருப்பில் ابْتِغَآءَ நாடி حِلْيَةٍ ஓர் ஆபரணத்தை اَوْ அல்லது مَتَاعٍ ஒரு பொருளை زَبَدٌ நுரை مِّثْلُهٗ‌ ؕ அது போன்ற كَذٰلِكَ இப்படித்தான் يَضْرِبُ விவரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் الْحَـقَّ சத்தியத்தை وَالْبَاطِلَ ؕ இன்னும் அசத்தியத்தை فَاَمَّا ஆகவே الزَّبَدُ நுரை فَيَذْهَبُ செல்கிறது جُفَآءً‌ ۚ வீணானதாக وَاَمَّا ஆகவே مَا எது يَنْفَعُ பலனளிக்கிறது النَّاسَ மக்களுக்கு فَيَمْكُثُ தங்குகிறது فِى الْاَرْضِ‌ؕ பூமியில் كَذٰلِكَ இவ்வாறே يَضْرِبُ விவரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் الْاَمْثَالَؕ‏ உவமைகளை
13:17. அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fபஸாலத் அவ்தியதும் Bபிகதரிஹா Fபஹ்தமலஸ் ஸய்லு ZஜBபதர் ராBபியா; வ மிம்ம்மா யூகிதூன 'அலய்ஹி Fபின் னாரிBப் திகா'அ ஹில்யதின் அவ் மதா'இன் ZஜBபதும் மித்லுஹ்; கதாலிக யள்ரிBபுல் லாஹுல் ஹக்க வல் Bபாதில்; Fப அம்மZஜ் ZஜBபது Fப யத்ஹBபு ஜுFபா'ஆ; வ அம்மா மா யன்Fப'உன் னாஸ Fப யம்குது Fபில் அர்ள்; கதாலிக யள்ரிBபுல் லாஹுல் அம்தால்
13:17. அவன்தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன; அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது; (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது; இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது; ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது; இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான்.
13:18
13:18 لِلَّذِيْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمُ الْحُسْنٰىؔ‌ؕ وَالَّذِيْنَ لَمْ يَسْتَجِيْبُوْا لَهٗ لَوْ اَنَّ لَهُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖؕ اُولٰۤٮِٕكَ لَهُمْ سُوْۤءُ الْحِسَابِ ۙ وَمَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ؕ وَبِئْسَ الْمِهَادُ
لِلَّذِيْنَ எவர்களுக்கு اسْتَجَابُوْا பதிலளித்தார்கள் لِرَبِّهِمُ தங்கள் இறைவனுக்கு الْحُسْنٰىؔ‌ؕ மிக அழகிய நன்மை وَالَّذِيْنَ எவர்கள் لَمْ يَسْتَجِيْبُوْا அவர்கள் பதிலளிக்கவில்லை لَهٗ அவனுக்கு لَوْ اَنَّ நிச்சயமாகஇருந்திருந்தால் لَهُمْ அவர்களுக்கு مَّا فِى الْاَرْضِ பூமியிலுள்ளவை جَمِيْعًا அனைத்தும் وَّمِثْلَهٗ இன்னும் அதுபோன்றது مَعَهٗ அதனுடன் لَافْتَدَوْا بِهٖؕ அதை பிணை கொடுத்திருப்பார்கள் اُولٰۤٮِٕكَ அவர்கள் لَهُمْ அவர்களுக்கு سُوْۤءُ கடினமானது الْحِسَابِ ۙ விசாரணை وَمَاْوٰ இன்னும் தங்குமிடம் ٮهُمْ அவர்களுடைய جَهَـنَّمُ‌ؕ நரகம்தான் وَبِئْسَ மிகக் கெட்டுவிட்டது الْمِهَادُ‏ தங்குமிடத்தால்
13:18. லில்லதீனஸ் தஜாBபூ லிரBப்Bபிஹிமுல் ஹுஸ்னா; வல்லதீன லம் யஸ்தஜீBபூ லஹூ லவ் அன்ன லஹும் மா Fபில் அர்ளி ஜமீ'அ(ன்)வ் வ மித்லஹூ ம'அஹூ லFப்ததவ் Bபிஹ்; உலா'இக லஹும் ஸூ'உல் ஹிஸாBப்; வ ம'வாஹும் ஜஹன்னமு வ Bபி'ஸல் மிஹாத்
13:18. எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ள வில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருள்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகமும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது;) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்; அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம்.  
13:19
13:19 اَفَمَنْ يَّعْلَمُ اَنَّمَاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ الْحَـقُّ كَمَنْ هُوَ اَعْمٰىؕ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِۙ‏
اَفَمَنْ எவர்? يَّعْلَمُ அறிகின்றார் اَنَّمَاۤ எல்லாம் اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு مِنْ رَّبِّكَ உம் இறைவனால் الْحَـقُّ உண்மைதான் كَمَنْ போன்று/எவர் هُوَ அவர் اَعْمٰىؕ குருடர் اِنَّمَا يَتَذَكَّرُ நல்லுபதேசம் பெறுவதெல்லாம் اُولُوا الْاَلْبَابِۙ‏ அறிவுடையவர்கள்தான்
13:19. அFபமய் யஃலமு அன்னமா உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிகல் ஹக்கு கமன் ஹுவ அஃமா; இன்னமா யததக்கரு உலுல் அல்BபாBப்
13:19. உம் இறைவனால் உம் மீது நிச்சயமாக இறக்கப்பட்ட (வேதத்)தை உண்மையென அறிகிறவர் குருடராக இருப்பவரைப் போலாவாரா? நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்கள் தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.
13:20
13:20 الَّذِيْنَ يُوْفُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَلَا يَنْقُضُوْنَ الْمِيْثَاقَۙ‏
الَّذِيْنَ எவர்கள் يُوْفُوْنَ நிறைவேற்றுகிறார்கள் بِعَهْدِ ஒப்பந்தத்தை اللّٰهِ அல்லாஹ்வின் وَلَا يَنْقُضُوْنَ இன்னும் முறிக்க மாட்டார்கள் الْمِيْثَاقَۙ‏ உடன்படிக்கையை
13:20. அல்லதீன யூFபூன Bபி'அஹ்தில் லாஹி வலா யன்கு ளூனல் மீதாக்
13:20. அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள்; இன்னும் (தாம் செய்த) உடன்படிக்கையை முறித்து விடவும் மாட்டார்கள்.
13:21
13:21 وَالَّذِيْنَ يَصِلُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ يُّوْصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَ يَخَافُوْنَ سُوْۤءَ الْحِسَابِؕ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் يَصِلُوْنَ சேர்ப்பார்கள் مَاۤ எதை اَمَرَ ஏவினான் اللّٰهُ அல்லாஹ் بِهٖۤ اَنْ يُّوْصَلَ அதை/சேர்க்கப்பட வேண்டும் وَيَخْشَوْنَ இன்னும் அச்சம் கொள்வார்கள் رَبَّهُمْ தங்கள் இறைவனை وَ يَخَافُوْنَ இன்னும் பயப்படுவார்கள் سُوْۤءَ கடினமான الْحِسَابِؕ‏ விசாரணையை
13:21. வல்லதீன யஸிலூன மா அமரல் லாஹு Bபிஹீ அய் யூஸல வ யக்-ஷவ்ன ரBப்Bபஹும் வ யகாFபூன ஸூ'அல் ஹிஸாBப்
13:21. மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்.
13:22
13:22 وَالَّذِيْنَ صَبَرُوا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً وَّيَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ اُولٰۤٮِٕكَ لَهُمْ عُقْبَى الدَّارِۙ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் صَبَرُوا பொறுத்தனர் ابْتِغَآءَ நாடி وَجْهِ முகத்தை رَبِّهِمْ தங்கள் இறைவனின் وَاَقَامُوا இன்னும் நிலைநிறுத்தினர் الصَّلٰوةَ தொழுகையை وَاَنْفَقُوْا இன்னும் தர்மம் புரிந்தனர் مِمَّا رَزَقْنٰهُمْ நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து سِرًّا இரகசியமாக وَّعَلَانِيَةً இன்னும் வெளிப்படையாக وَّيَدْرَءُوْنَ இன்னும் தடுப்பார்கள் بِالْحَسَنَةِ நன்மையைக் கொண்டு السَّيِّئَةَ தீமையை اُولٰۤٮِٕكَ இவர்கள் لَهُمْ இவர்களுக்குத்தான் عُقْبَى முடிவு الدَّارِۙ‏ மறுமை
13:22. வல்லதீன ஸBபருBப் திகா'அ வஜ்ஹி ரBப்Bபிஹிம் வ அகாமுஸ் ஸலாத வ அன்Fபகூ மிம்மா ரZஜக்னாஹும் ஸிர்ர(ன்)வ் வ 'அலானியத(ன்)வ் வ யத்ர'ஊன Bபில்ஹஸனதிஸ் ஸய்யி'அத உலா'இக லஹும் 'உக்Bபத் தார்
13:22. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது.
13:23
13:23 جَنّٰتُ عَدْنٍ يَّدْخُلُوْنَهَا وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآٮِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ‌ وَالْمَلٰٓٮِٕكَةُ يَدْخُلُوْنَ عَلَيْهِمْ مِّنْ كُلِّ بَابٍ‌ۚ‏
جَنّٰتُ சொர்க்கங்கள் عَدْنٍ அத்ன் يَّدْخُلُوْنَهَا நுழைவார்கள்/அதில் وَ இன்னும் مَنْ இன்னும் எவர் صَلَحَ நல்லவரானார் مِنْ اٰبَآٮِٕهِمْ இவர்களுடைய மூதாதைகளில் وَاَزْوَاجِهِمْ இன்னும் இவர்களுடைய மனைவிகளில் وَذُرِّيّٰتِهِمْ‌ இன்னும் இவர்களுடைய சந்ததிகளில் وَالْمَلٰٓٮِٕكَةُ இன்னும் வானவர்கள் يَدْخُلُوْنَ நுழைவார்கள் عَلَيْهِمْ இவர்களிடம் مِّنْ இருந்து كُلِّ ஒவ்வொரு بَابٍ‌ۚ‏ வாசல்
13:23. ஜன்னாது 'அதி(ன்)ய் யத்கு லூனஹா வ மன் ஸலஹ மின் ஆBபா'இஹிம் வ அZஜ்வாஜிஹிம் வ துர்ரிய்யாதிஹிம் வல்மலா'இ கது யத்குலூன 'அலய்ஹிம் மின் குல்லி BபாBப்
13:23. நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.
13:24
13:24 سَلٰمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ‌ فَنِعْمَ عُقْبَى الدَّارِؕ‏
سَلٰمٌ ஈடேற்றம் உண்டாகுக عَلَيْكُمْ உங்களுக்கு بِمَا صَبَرْتُمْ‌ நீங்கள் பொறுமையாக இருந்த காரணத்தால் فَنِعْمَ மிக்க நல்லதாயிற்று عُقْبَى இறுதி الدَّارِؕ‏ வீடு
13:24. ஸலாமுன் 'அலய்கும் Bபிமா ஸBபர்தும்; Fபனிஃம 'உக்Bபத் தார்
13:24. “நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!” (என்று கூறுவார்கள்.)
13:25
13:25 وَالَّذِيْنَ يَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مِيْثَاقِهٖ وَيَقْطَعُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ يُّوْصَلَ وَيُفْسِدُوْنَ فِى الْاَرْضِ‌ۙ اُولٰۤٮِٕكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْۤءُ الدَّارِ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் يَنْقُضُوْنَ முறிக்கிறார்கள் عَهْدَ வாக்குறுதியை اللّٰهِ அல்லாஹ்வின் مِنْۢ بَعْدِ பின்னர் مِيْثَاقِهٖ அது உறுதியான وَيَقْطَعُوْنَ இன்னும் துண்டிக்கிறார்கள் مَاۤ எதை اَمَرَ ஏவினான் اللّٰهُ அல்லாஹ் بِهٖۤ அதை اَنْ يُّوْصَلَ சேர்க்கப்படும் وَيُفْسِدُوْنَ இன்னும் விஷமம் செய்வார்கள் فِى الْاَرْضِ‌ۙ பூமியில் اُولٰۤٮِٕكَ இவர்கள் لَهُمُ இவர்களுக்கு اللَّعْنَةُ சாபம் وَلَهُمْ இன்னும் இவர்களுக்கு سُوْۤءُ மிகக் கெட்டது الدَّارِ‏ வீடு
13:25. வல்லதீன யன்குளூன 'அஹ்தல் லாஹி மிம் Bபஃதி மீதாகிஹீ வ யக்த'ஊன மா அமரல் லாஹு Bபிஹீ அய் யூஸல வ யுFப்ஸிதூன Fபில் அர்ளி உலா'இக லஹுமுல் லஃனது வ லஹும் ஸூ'உத் தார்
13:25. எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ; இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ; பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ - அத்தகையோருக்குச் சாபந்தான்; அவர்களுக்கு மிகக்கெட்ட வீடும் இருக்கிறது.
13:26
13:26 اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ؕ وَفَرِحُوْا بِالْحَيٰوةِ الدُّنْيَا ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَا فِى الْاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ
اَللّٰهُ அல்லாஹ் يَبْسُطُ விரிவுபடுத்துகிறான் الرِّزْقَ வாழ்க்கை வசதியை لِمَنْ எவருக்கு يَّشَآءُ நாடுகின்றான் وَيَقْدِرُ‌ؕ இன்னும் சுருக்குகிறான் وَفَرِحُوْا இன்னும் மகிழ்கின்றனர் بِالْحَيٰوةِ வாழ்வைக் கொண்டு الدُّنْيَا ؕ وَمَا உலகம்/இல்லை الْحَيٰوةُ الدُّنْيَا உலக வாழ்க்கை فِى الْاٰخِرَةِ மறுமையில் اِلَّا தவிர مَتَاعٌ‏ ஒரு சுகம்
13:26. அல்லாஹு யBப்ஸுதுர் ரிZஜ்க லிமய் யஷா'உ வ யக்திர்; வ Fபரிஹூ Bபில்ஹயாதித் துன்யா வ மல் ஹயாதுத் துன்ய Fபில் ஆகிரதி இல்லா மதா'
13:26. அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் - இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.  
13:27
13:27 وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖؕ قُلْ اِنَّ اللّٰهَ يُضِلُّ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْۤ اِلَيْهِ مَنْ اَنَابَ ‌ۖ ‌ۚ‏
وَيَقُوْلُ கூறுகிறார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் لَوْلَاۤ اُنْزِلَ இறக்கப்பட வேண்டாமா? عَلَيْهِ இவர் மீது اٰيَةٌ ஓர் அத்தாட்சி مِّنْ رَّبِّهٖؕ இவருடைய இறைவனிடமிருந்து قُلْ கூறுவீராக اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُضِلُّ வழிகெடுக்கிறான் مَنْ يَّشَآءُ தான் நாடுகின்றவர்களை وَيَهْدِىْۤ இன்னும் நேர்வழி செலுத்துகிறான் اِلَيْهِ தன் பக்கம் مَنْ اَنَابَ ۖ ۚ‏ எவர்/திரும்பினார்
13:27. வ யகூலுல் லதீன கFபரூ லவ் லா உன்Zஜில 'அலய்ஹி ஆயதும் மிர் ரBப்Bபிஹ்; குல் இன்னல் லாஹ யுளில்லு மய் யஷா'உ வ யஹ்தீ இலய்ஹி மன் அனாBப்
13:27. “இவருக்கு இவருடைய இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கி வைக்கப்படக் கூடாதா” என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள், (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்” என்று
13:28
13:28 اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ‌ ؕ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ ؕ‏
اَلَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَ இன்னும் تَطْمَٮِٕنُّ நிம்மதியடைகின்றன قُلُوْبُهُمْ உள்ளங்கள்/அவர்களுடைய بِذِكْرِ நினைவால் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் اَلَا அறிந்துகொள்ளுங்கள்! بِذِكْرِ நினைவைக் கொண்டே اللّٰهِ அல்லாஹ்வின் تَطْمَٮِٕنُّ நிம்மதியடைகின்றன الْقُلُوْبُ ؕ‏ உள்ளங்கள்
13:28. அல்லதீன ஆமனூ வ தத்ம'இன்னு குலூBபுஹும் Bபிதிக்ரில் லாஹ்; அலா Bபிதிக்ரில் லாஹி தத்ம'இன்னுல் குலூBப்
13:28. (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
13:29
13:29 اَلَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ طُوْبٰى لَهُمْ وَحُسْنُ مَاٰبٍ‏
اَلَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டு وَعَمِلُوا செய்தார்கள் الصّٰلِحٰتِ நற்செயல்களை طُوْبٰى நற்பாக்கியம் لَهُمْ அவர்களுக்கு وَحُسْنُ அழகிய مَاٰبٍ‏ மீளுமிடம்
13:29. அல்லதீன ஆமனூ வ அ'அமிலுஸ் ஸாலிஹாதி தூBபா லஹும் வ ஹுஸ்னு ம ஆBப்
13:29. எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு.
13:30
13:30 كَذٰلِكَ اَرْسَلْنٰكَ فِىْۤ اُمَّةٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهَاۤ اُمَمٌ لِّـتَتْلُوَا۟ عَلَيْهِمُ الَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ وَ هُمْ يَكْفُرُوْنَ بِالرَّحْمٰنِ‌ؕ قُلْ هُوَ رَبِّىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَاِلَيْهِ مَتَابِ‏
كَذٰلِكَ இவ்வாறே اَرْسَلْنٰكَ அனுப்பினோம்/உம்மை فِىْۤ اُمَّةٍ ஒரு சமுதாயத்திடம் قَدْ خَلَتْ சென்றிருக்கின்றன مِنْ قَبْلِهَاۤ இவர்களுக்கு முன்னரும் اُمَمٌ பல சமுதாயங்கள் لِّـتَتْلُوَا۟ நீர் ஓதுவதற்காக عَلَيْهِمُ இவர்கள் முன் الَّذِىْۤ எது اَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு وَ هُمْ இவர்களோ يَكْفُرُوْنَ நிராகரிக்கின்றனர் بِالرَّحْمٰنِ‌ؕ ரஹ்மானை قُلْ கூறுவீராக هُوَ அவன்தான் رَبِّىْ என் இறைவன் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَۚ அவனை عَلَيْهِ அவன் மீது تَوَكَّلْتُ நம்பிக்கை வைத்தேன் وَاِلَيْهِ இன்னும் அவனிடமே مَتَابِ‏ என் பாவ மீட்சி
13:30. கதாலிக அர்ஸல்னாக Fபீ உம்மதின் கத் கலத் மின் கBப்லிஹா உமமுல் லிதத்லுவ 'அலய்ஹிமுல் லதீ அவ்ஹய்னா இலய்க வ ஹும் யக்Fபுரூன Bபிர் ரஹ்மான்; குல் ஹுவ ரBப்Bபீ லா இலாஹ இல்லா ஹுவ 'அலய்ஹி தவக்கல்து வ இலய்ஹி மதாBப்
13:30. (நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்: “அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை; அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது” என்று நீர் கூறுவீராக!
13:31
13:31 وَلَوْ اَنَّ قُرْاٰنًا سُيِّرَتْ بِهِ الْجِبَالُ اَوْ قُطِّعَتْ بِهِ الْاَرْضُ اَوْ كُلِّمَ بِهِ الْمَوْتٰى‌ ؕ بَلْ لِّلّٰهِ الْاَمْرُ جَمِيْعًا ‌ؕ اَفَلَمْ يَايْــٴَــسِ الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْ لَّوْ يَشَآءُ اللّٰهُ لَهَدَى النَّاسَ جَمِيْعًا ؕ وَلَا يَزَالُ الَّذِيْنَ كَفَرُوْا تُصِيْبُهُمْ بِمَا صَنَعُوْا قَارِعَةٌ اَوْ تَحُلُّ قَرِيْبًا مِّنْ دَارِهِمْ حَتّٰى يَاْتِىَ وَعْدُ اللّٰهِ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُخْلِفُ الْمِيْعَادَ
وَلَوْ اَنَّ قُرْاٰنًا வேதம்/இருந்தால் سُيِّرَتْ நகர்த்தப்பட்டது بِهِ அதைக் கொண்டு الْجِبَالُ மலைகள் اَوْ அல்லது قُطِّعَتْ துண்டு துண்டாக்கப்பட்டிருந்தால் بِهِ அதைக் கொண்டு الْاَرْضُ பூமி اَوْ அல்லது كُلِّمَ பேச வைக்கப்பட்டிருந்தால்... بِهِ அதைக் கொண்டு الْمَوْتٰى‌ ؕ மரணித்தவர்கள் بَلْ மாறாக لِّلّٰهِ அல்லாஹ்வுக்குரியனவே الْاَمْرُ அதிகாரம் جَمِيْعًا ؕ அனைத்தும் اَفَلَمْ يَايْــٴَــسِ அறியவில்லையா? الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْۤا நம்பிக்கை கொண்டனர் اَنْ لَّوْ يَشَآءُ நாடினால் اللّٰهُ அல்லாஹ் لَهَدَى நேர்வழி படுத்தியிருப்பான் النَّاسَ மக்களை جَمِيْعًا ؕ அனைவரை وَلَا يَزَالُ தொடர்ந்து இருக்கும் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் تُصِيْبُهُمْ அடையும்/அவர்களை بِمَا காரணமாக صَنَعُوْا செய்தனர் قَارِعَةٌ ஒரு திடுக்கம் اَوْ அல்லது تَحُلُّ நீர் இறங்குவீர் قَرِيْبًا அருகாமையில் مِّنْ دَارِهِمْ அவர்களின் ஊருக்கு حَتّٰى இறுதியாக يَاْتِىَ வரும் وَعْدُ வாக்குறுதி اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُخْلِفُ மாற்ற மாட்டான் الْمِيْعَادَ‏ வாக்குறுதியை
13:31. வ லவ் அன்ன குர்'ஆனன் ஸுய்யிரத் Bபிஹில் ஜிBபாலு அவ் குத்தி'அத் Bபிஹில் அர்ளு அவ் குல்லிம Bபிஹில் மவ்தா; Bபல் லில்லாஹில் அம்ரு ஜமீ'ஆ; அFபலம் யய்'அஸில் லதீன ஆமனூ அல் லவ் யஷா 'உல்லாஹு லஹதன் னாஸ ஜமீ'ஆ; வலா யZஜாலுல் லதீன கFபரூ துஸீBபுஹும் Bபிமா ஸன'ஊ காரி'அதுன் அவ் தஹுல்லு கரீBபம் மின் தாரிஹிம் ஹத்தா ய'திய வஃதுல் லாஹ்; இன்னல் லாஹ லா யுக்லிFபுல் மீ'ஆத்
13:31. நிச்சயமாக குர்ஆன் - அதனைக் கொண்டு மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது அதனைக் கொண்டு பூமியைத் துண்டு துண்டாக்கினாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்கள் பேசும்படிச் செய்யப்பட்டாலும் (காஃபிர்கள் விசுவாசங்கொள்ளவே மாட்டார்கள்), ஆயினும் எல்லாக்காரியங்களும் அல்லாஹ்வுக்கே உரியன; ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை ஈமான் கொண்டவர்கள் அறியவில்லையா? நிராகரிப்போரை, அவர்கள் செய்து கொண்டிருக்கும் (தீச்) செயல்கள் காரணமாக ஏதேனும் ஒரு கேடு வந்தடைந்து கொண்டேயிருக்கும், அல்லது அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சமீபமாகவேனும், (அக்கேடு) சம்பவித்து, (உங்கள் வெற்றி குறித்து) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும் - நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் மாறுசெய்யமாட்டான்.
13:32
13:32 وَلَـقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَاَمْلَيْتُ لِلَّذِيْنَ كَفَرُوْا ثُمَّ اَخَذْتُهُمْ‌ فَكَيْفَ كَانَ عِقَابِ‏
وَلَـقَدِ اسْتُهْزِئَ திட்டமாக பரிகசிக்கப்பட்டனர் بِرُسُلٍ தூதர்கள் مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் فَاَمْلَيْتُ நீட்டினேன் لِلَّذِيْنَ எவர்களுக்கு كَفَرُوْا நிராகரித்தனர் ثُمَّ பிறகு اَخَذْتُهُمْ‌ பிடித்தேன்/அவர்களை فَكَيْفَ எப்படி? كَانَ இருந்தது عِقَابِ‏ என் தண்டனை
13:32. வ லகதிஸ் துஹ்Zஜி'அ Bபி ருஸுலிம் மின் கBப்லிக Fப அம்லய்து லில்லதீன கFபரூ தும்ம அகத்துஹும் Fபகய்Fப கான 'இகாBப்
13:32. (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் (வந்து சென்ற நம்) தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டனர்; ஆகவே, நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு நான் தவணையளித்துப் பின்னர் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்; ஆகவே, (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) என் தண்டனை எவ்வாறு இருந்தது? (என்பதைச் சிந்திப்பார்களாக!)
13:33
13:33 اَفَمَنْ هُوَ قَآٮِٕمٌ عَلٰى كُلِّ نَفْسٍۢ بِمَا كَسَبَتْ‌ۚ وَجَعَلُوْالِلّٰهِ شُرَكَآءَ ؕ قُلْ سَمُّوْهُمْ‌ؕ اَمْ تُنَـبِّـئُــوْنَهٗ بِمَا لَا يَعْلَمُ فِى الْاَرْضِ اَمْ بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِؕ بَلْ زُيِّنَ لِلَّذِيْنَ كَفَرُوْا مَكْرُهُمْ وَصُدُّوْا عَنِ السَّبِيْلِ‌ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ‏
اَفَمَنْ யார்? هُوَ அவன் قَآٮِٕمٌ நிர்வகிப்பவன் عَلٰى மீது كُلِّ ஒவ்வொரு نَفْسٍۢ ஆன்மா بِمَا كَسَبَتْ‌ۚ அவை செய்தவற்றுக்கு وَجَعَلُوْا அவர்கள் ஏற்படுத்தினர் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு شُرَكَآءَ ؕ இணைகளை قُلْ கூறுவீராக سَمُّوْ பெயரிடுங்கள் هُمْ‌ؕ அவற்றுக்கு اَمْ تُنَـبِّـئُــوْنَهٗ அல்லது/அறிவிக்கிறீர்களா?/அவனுக்கு بِمَا لَا يَعْلَمُ அவன் அறியாததை فِى الْاَرْضِ பூமியில் اَمْ அல்லது بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِؕ பொய்யான சொல்லை بَلْ மாறாக زُيِّنَ அலங்கரிக்கப்பட்டது لِلَّذِيْنَ எவர்களுக்கு كَفَرُوْا நிராகரித்தனர் مَكْرُ சூழ்ச்சி هُمْ அவர்களுடைய وَصُدُّوْا இன்னும் தடுக்கப்பட்டனர் عَنِ السَّبِيْلِ‌ؕ பாதையிலிருந்து وَمَنْ எவரை يُّضْلِلِ வழிகெடுப்பான் اللّٰهُ அல்லாஹ் فَمَا لَهٗ அவருக்கு இல்லை مِنْ هَادٍ‏ நேர்வழிகாட்டுபவர் எவரும்
13:33. அFபமன் ஹுவ கா'இமுன் 'அலா குல்லி னFப்ஸிம் Bபிமா கஸBபத்; வ ஜ'அலூ லில்லாஹி ஷுரகா'அ குல் ஸமூஹும்; அம் துனBப்Bபி'ஊன ஹூ Bபிமா லா யஃலமு Fபில் அர்ளி; அம் Bபிளாஹிரிம் மினல் கவ்ல்; Bபல் Zஜுய்யின லில்லதீன கFபரூ மக்ருஹும் வ ஸுத்தூ 'அனிஸ் ஸBபீல்; வ மய் யுள்லிலில் லாஹு Fபமா லஹூ மின் ஹாத்;
13:33. ஒவ்வோர் ஆத்மா சம்பாதிக்கும் ஒவ்வொன்றையும் கண்காணிப்பவன் அவனல்லவா? அப்படியிருந்தும்; அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்துகின்றார்கள். (நபியே!) நீர் கூறும்: “அவர்களின் பெயர்களைக் கூறுங்கள்; அல்லது பூமியிலுள்ள அவன் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது) வெறும் வார்த்தைகள் தானா?” என்று. அப்படியல்ல! நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகள் அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளன; நேர்வழியிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டும் விட்டனர். எவரை அல்லாஹ் வழிகெடுக்கிறானோ அவரை நேர் வழியில் செலுத்துபவர் எவருமில்லை.
13:34
13:34 لَهُمْ عَذَابٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا‌ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَقُّ‌ ۚ وَمَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ‏
لَهُمْ அவர்களுக்கு عَذَابٌ வேதனை فِى الْحَيٰوةِ வாழ்வில் الدُّنْيَا‌ உலகம் وَلَعَذَابُ வேதனைதான் الْاٰخِرَةِ மறுமையின் اَشَقُّ‌ ۚ மிக சிரமமானது وَمَا இல்லை لَهُمْ அவர்களை مِّنَ இருந்து اللّٰهِ அல்லாஹ் مِنْ وَّاقٍ‏ பாதுகாப்பவர் எவரும்
13:34. லஹும் 'அதாBபுன் Fபில் ஹயாதித் துன்யா வ ல'அதாBபுல் ஆகிரதி அஷக், வமா லஹும் மினல் லாஹி மின்-வாக்
13:34. அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு, மறுமையின் வேதனை மிகக் கடுமையானது - அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை.
13:35
13:35 مَثَلُ الْجَـنَّةِ الَّتِىْ وُعِدَ الْمُتَّقُوْنَ‌ ؕ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ ؕ اُكُلُهَا دَآٮِٕمٌ وَّظِلُّهَا‌ ؕ تِلْكَ عُقْبَى الَّذِيْنَ اتَّقَوْا‌ ‌ۖ  وَّعُقْبَى الْكٰفِرِيْنَ النَّارُ‏
مَثَلُ தன்மை الْجَـنَّةِ சொர்க்கத்தின் الَّتِىْ எது وُعِدَ வாக்களிக்கப்பட்டார்(கள்) الْمُتَّقُوْنَ‌ ؕ அஞ்சியவர்கள் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ‌ ؕ நதிகள் اُكُلُهَا அதன் உணவுகள் دَآٮِٕمٌ நிலையானவை وَّظِلُّهَا‌ ؕ இன்னும் அதன் நிழல் تِلْكَ இதுதான் عُقْبَى முடிவு الَّذِيْنَ எவர்கள் اتَّقَوْا‌ அஞ்சினர் ۖ  وَّعُقْبَى முடிவோ الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களின் النَّارُ‏ நரகம்தான்
13:35. மதலுல் ஜன்னதில் லதீ வு'இதல் முத்தகூன தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு உகுலுஹா தா'இமு(ன்)வ் வ ளில்லுஹா; தில்க உக்Bபல் லதீனத் தகவ் வ 'உக்Bபல் கFபிரீனன் னார்
13:35. பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையானது - அதன் கீழே நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிக் கொண்டிருக்கும்; அதன் ஆகாரமும், அதன் நிழலும் நிலையானவை; இது தான் பயபக்தியுடையோரின் முடிவாகும்; காஃபிர்களின் முடிவோ (நரக) நெருப்பேயாகும்.
13:36
13:36 وَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَفْرَحُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَيْكَ‌ وَمِنَ الْاَحْزَابِ مَنْ يُّـنْكِرُ بَعْضَهٗ‌ؕ قُلْ اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ وَلَاۤ اُشْرِكَ بِهٖؕ اِلَيْهِ اَدْعُوْا وَاِلَيْهِ مَاٰبِ‏
وَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ எவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்கு الْكِتٰبَ வேதத்தை يَفْرَحُوْنَ மகிழ்வார்கள் بِمَاۤ اُنْزِلَ اِلَيْكَ‌ இறக்கப்பட்டதைக் கொண்டு/உமக்கு وَمِنَ الْاَحْزَابِ இன்னும் கூட்டங்களில் مَنْ يُّـنْكِرُ எவர் மறுப்பார் بَعْضَهٗ‌ؕ அதில் சிலவற்றை قُلْ கூறுவீராக اِنَّمَاۤ اُمِرْتُ நான் கட்டளையிடப்பட்டதெல்லாம் اَنْ اَعْبُدَ நான் வணங்குவதற்கு اللّٰهَ அல்லாஹ்வை وَلَاۤ اُشْرِكَ بِهٖؕ நான் இணைவைக்காமல் இருக்க/அவனுக்கு اِلَيْهِ அவன் பக்கமே اَدْعُوْا அழைக்கிறேன் وَاِلَيْهِ இன்னும் அவன் பக்கமே مَاٰبِ‏ என் திரும்புதல்
13:36. வல்லதீன ஆதய்னா ஹுமுல் கிதாBப யFப்ரஹூன Bபிமா உன்Zஜில இலய்க வ மினல் அஹ்ZஜாBபி மய் யுன்கிரு Bபஃளஹ்; குல் இன்னமா உமிர்து அன் அஃBபுதல் லாஹ வ லா உஷ்ரிக Bபிஹ்; இலய்ஹி அத்'ஊ வ இலய்ஹி மாBப்
13:36. எவர்களுக்கு நாம் (முன்னர்) வேதத்தை அளித்தோமோ, அவர்கள் (நபியே!) உம் மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி மகிழ்வார்கள்; எனினும் இதன் சில பகுதிகளை மறுக்கிறவர்களும் (அவர்களுடைய) கூட்டதில் இருக்கிறார்கள். (அவர்களை நோக்கி:)நான் ஏவப்பட்டிருப்பதெல்லாம், அல்லாஹ் - (ஒருவனையே) வணங்க வேண்டும்; அவனுக்கு (எதனையும், எவரையும்) இணைவைக்கக் கூடாது என்பது தான்; நான் (உங்களை) அவன் பக்கமே அழைக்கின்றேன்; அவன் பாலே (என்) மீட்சியும் இருக்கிறது” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
13:37
13:37 وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ حُكْمًا عَرَبِيًّا‌ ؕ وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَمَا جَآءَكَ مِنَ الْعِلْمِۙ مَا لَـكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا وَاقٍ
وَكَذٰلِكَ இவ்வாறுதான் اَنْزَلْنٰهُ இதை இறக்கினோம் حُكْمًا சட்டமாக عَرَبِيًّا‌ ؕ அரபி மொழியில் وَلَٮِٕنِ اتَّبَعْتَ நீங்கள் பின்பற்றினால் اَهْوَآءَ விருப்பங்களை هُمْ அவர்களுடைய بَعْدَ பின்னர் مَا جَآءَكَ உமக்கு வந்தது مِنَ الْعِلْمِۙ கல்வி مَا இல்லை لَـكَ உமக்கு مِنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து مِنْ وَّلِىٍّ உதவியாளர் எவரும் وَّلَا وَاقٍ‏ பாதுகாவலர் இல்லை
13:37. வ கதாலிக அன்Zஜல்னாஹு ஹுக்மன் 'அரBபிய்யா; வ ல'இனித் தBபஃத அஹ்வா 'அஹும் Bபஃத மா ஜா'அக மினல் 'இல்மி மா லக மினல் லாஹி மி(ன்)வ் வலியி(ன்)வ் வலா வாக்
13:37. (நபியே!) இவ்வாறே அரபி (மொழி)யில் சட்ட திட்டங்களைக் கொண்டதாக, இ(வ் வேதத்)தை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்; எனவே உமக்கு ஞானம் வந்த பின்னரும் அவர்களுடைய (வீணான) இச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து (உம்மை இரட்சிக்கும் உற்ற) உதவியாளரோ, பாதுகாவலரோ (எவரும்) உமக்குக் கிடைக்க மாட்டார்.  
13:38
13:38 وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ وَ جَعَلْنَا لَهُمْ اَزْوَاجًا وَّذُرِّيَّةً ‌ ؕ وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ يَّاْتِىَ بِاٰيَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ ؕ لِكُلِّ اَجَلٍ كِتَابٌ‏
وَلَقَدْ اَرْسَلْنَا அனுப்பி இருக்கிறோம் رُسُلًا தூதர்களை مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் وَ جَعَلْنَا இன்னும் ஆக்கினோம் لَهُمْ அவர்களுக்கு اَزْوَاجًا மனைவிகளை وَّذُرِّيَّةً ؕ இன்னும் சந்ததியை(யும்) وَمَا كَانَ முடியாது لِرَسُوْلٍ (எந்த) தூதருக்கு اَنْ يَّاْتِىَ அவர் வருவது بِاٰيَةٍ அத்தாட்சியைக் கொண்டு اِلَّا தவிர بِاِذْنِ அனுமதி கொண்டே اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் لِكُلِّ ஒவ்வொரு اَجَلٍ தவணைக்கும் كِتَابٌ‏ ஒரு விதி
13:38. வ லகத் அர்ஸல்னா ருஸுலம் மின் கBப்லிக வ ஜ'அல்னா லஹும் அZஜ்வாஜ(ன்)வ் வ துர்ரிய்யஹ்; வமா கான லிரஸூலின் அய் ய'திய Bபி ஆயதின் இல்லா Bபி இத்னில் லாஹ்; லிகுல்லி அஜலின் கிதாBப்
13:38. (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை; ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.
13:39
13:39 يَمْحُوْا اللّٰهُ مَا يَشَآءُ وَيُثْبِتُ ‌ۖ ‌ۚ وَعِنْدَهٗۤ اُمُّ الْكِتٰبِ‏
يَمْحُوْا அழிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் مَا يَشَآءُ அவன் நாடியதை وَيُثْبِتُ ۖ ۚ தரிபடுத்துகிறான் وَعِنْدَهٗۤ இன்னும் அவனிடம்தான் اُمُّ தாய் الْكِتٰبِ‏ புத்தகம்
13:39. யம்ஹுல் லாஹு மா யஷா'உ வ யுத்Bபிது வ 'இன்தஹூ உம்முல் கிதாBப்
13:39. (எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது.
13:40
13:40 وَاِنْ مَّا نُرِيَـنَّكَ بَعْضَ الَّذِىْ نَعِدُهُمْ اَوْ نَـتَوَفَّيَنَّكَ فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ وَعَلَيْنَا الْحِسَابُ‏
وَاِنْ مَّا نُرِيَـنَّكَ நிச்சயமாக நாம் காண்பித்தால்/உமக்கு بَعْضَ சிலதை الَّذِىْ எது نَعِدُ நாம் வாக்களிக்கிறோம் هُمْ அவர்களுக்கு اَوْ نَـتَوَفَّيَنَّكَ அல்லது/கைப்பற்றிக் கொள்வோம்/உம்மை فَاِنَّمَا ஆகவே, எல்லாம் عَلَيْكَ உம்மீது الْبَلٰغُ எடுத்துரைப்பதுதான் وَعَلَيْنَا நம்மீதுதான் الْحِسَابُ‏ விசாரணை
13:40. வ இம் மா னுர்ரியன்னக Bபஃளல் லதீ ன'இதுஹும் அவ் னத வFப்Fபயன்னக Fப இன்னமா 'அலய்கல் Bபலாகு வ 'அலய்னல் ஹிஸாBப்
13:40. (நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களித்தவற்றில் சிலதை (உம் வாழ் நாளிலேயே உம் கண்ணால்) நீர் காணும்படிச் செய்தாலும், அல்லது (அதற்கு முன்னரே) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப் பற்றி நீர் விசாரப்பட வேண்டாம்); உம்முடைய கடமையெல்லாம் (நம்முடைய கட்டளையை அவர்களிடம்) சேர்ப்பிப்பது தான்; (அவர்களிடம்) கணக்கு வாங்குதல் நம்மிடம் இருக்கிறது.
13:41
13:41 اَوَلَمْ يَرَوْا اَنَّا نَاْتِى الْاَرْضَ نَـنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ؕ‌ وَاللّٰهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهٖ‌ؕ وَهُوَ سَرِيْعُ الْحِسَابِ‏
اَوَلَمْ يَرَوْا அவர்கள் காணவில்லையா? اَنَّا நிச்சயமாக நாம் نَاْتِى வருகிறோம் الْاَرْضَ பூமியை نَـنْقُصُهَا குறைக்கிறோம்/அதை مِنْ இருந்து اَطْرَافِهَا ؕ அதன் ஓரங்கள் وَاللّٰهُ அல்லாஹ் يَحْكُمُ தீர்ப்பளிக்கிறான் لَا அறவே இல்லை مُعَقِّبَ தடுப்பவர் لِحُكْمِهٖ‌ؕ அவனுடைய தீர்ப்பை وَهُوَ அவன் سَرِيْعُ மிகத் தீவிரமானவன் الْحِسَابِ‏ விசாரிப்பதில்
13:41. அவலம் யரவ் அன்னா ன'தில் அர்ள னன்குஸுஹா மின் அத்ராFபிஹா; வல்லாஹு யஹ்குமு லா மு'அக்கிBப லிஹுக்மிஹ்; வ ஹுவ ஸரீ'உல் ஹிஸாBப்
13:41. பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
13:42
13:42 وَقَدْ مَكَرَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَلِلّٰهِ الْمَكْرُ جَمِيْعًا‌ؕ يَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍؕ وَسَيَـعْلَمُ الْـكُفّٰرُ لِمَنْ عُقْبَى الدَّارِ‏
وَقَدْ திட்டமாக مَكَرَ சூழ்ச்சி செய்தனர் الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னிருந்தவர்கள் فَلِلّٰهِ அல்லாஹ்விற்கே الْمَكْرُ சூழ்ச்சி جَمِيْعًا‌ؕ அனைத்தும் يَعْلَمُ அறிவான் مَا எதை تَكْسِبُ செய்கிறது كُلُّ ஒவ்வொரு نَفْسٍؕ ஆன்மா وَسَيَـعْلَمُ அறிவார்(கள்) الْـكُفّٰرُ நிராகரிப்பவர்கள் لِمَنْ எவருக்கு عُقْبَى முடிவு الدَّارِ‏ மறுமை
13:42. வ கத் மகரல் லதீன மின் கBப்லிஹிம் Fபலில்லாஹில் மக்ரு ஜமீ'ஆ; யஃலமு மா தக்ஸிBபு குல்லு னFப்ஸ்; வ ஸ யஃலமுல் குFப்Fபாரு லிமன் 'உக்Bபத் தார்
13:42. (நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே பல) சூழ்ச்சிகளைச் செய்துகொண்டிருந்தனர்; எனினும் எல்லா சூழ்ச்சிக(ளின் முடிவுக)ளும் அல்லாஹ்விடமே இருக்கின்றன; ஒவ்வோர் ஆத்மா சம்பாதிப்பதையும் அவன் நன்கறிவான்; மேலும், (மறுமையில்) எவர்களுக்கு நல்ல வீடு உரியது என்பதை காஃபிர்கள் சீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.
13:43
13:43 وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَسْتَ مُرْسَلًا‌ ؕ قُلْ كَفٰى بِاللّٰهِ شَهِيْدًۢا بَيْنِىْ وَبَيْنَكُمْۙ وَمَنْ عِنْدَهٗ عِلْمُ الْكِتٰبِ
وَيَقُوْلُ கூறுகிறார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் لَسْتَ நீர் இல்லை مُرْسَلًا‌ ؕ தூதராக قُلْ கூறுவீராக كَفٰى போதுமாகி விட்டான் بِاللّٰهِ அல்லாஹ் شَهِيْدًۢا சாட்சியால் بَيْنِىْ எனக்கு மத்தியில் وَبَيْنَكُمْۙ இன்னும் உங்களுக்கு மத்தியில் وَمَنْ இன்னும் எவர் عِنْدَهٗ அவரிடம் عِلْمُ ஞானம் الْكِتٰبِ‏ வேதத்தின்
13:43. வ யகூலுல் லதீன கFபரூ லஸ்த முர்ஸலா; குல் கFபா Bபில்லாஹி ஷஹீதம் Bபய்னீ வ Bபய்னகும் வ மன் 'இன்தஹூ 'இல்முல் கிதாBப்
13:43. (நபியே!) நீர் (இறைவனால் அனுப்பப்பட்ட) தூதர் அல்லர் என்று காஃபிர்கள் சொல்கிறார்கள்; எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வும், வேதஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்களும் போதுமானவர்கள்” என்று நீர் கூறிவிடுவீராக!