50. ஸூரத்து ஃகாஃப்
மக்கீ, வசனங்கள்: 45

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
50:1
50:1 قٓ ۚ وَالْقُرْاٰنِ الْمَجِيْدِۚ‏
قٓ ۚ காஃப் وَالْقُرْاٰنِ குர்ஆன் மீது சத்தியமாக! الْمَجِيْدِۚ‏ கீர்த்திமிக்க(து)
50:1. காFப்; வல் குர் ஆனில் மஜீத்
50:1. காஃப், கண்ணியமிக்க இக்குர்ஆன் மீது சத்தியமாக!
50:2
50:2 بَلْ عَجِبُوْۤا اَنْ جَآءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا شَىْءٌ عَجِيْبٌ‌ۚ‏
بَلْ மாறாக عَجِبُوْۤا ஆச்சரியப்பட்டனர் اَنْ جَآءَ வந்ததால் هُمْ அவர்களிடம் مُّنْذِرٌ ஓர் எச்சரிப்பாளர் مِّنْهُمْ அவர்களில் இருந்தே فَقَالَ ஆகவே, கூறினர் الْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள் هٰذَا இது شَىْءٌ ஒரு விஷயம் عَجِيْبٌ‌ۚ‏ மிக ஆச்சரியமான
50:2. Bபல் 'அஜிBபூ அன் ஜா'அஹும் முன்திரும் மின்ஹும் Fபகாலல் காFபிரூன ஹாதா ஷய்'உன் 'அஜீBப்
50:2. எனினும்: அவர்களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்; ஆகவே, காஃபிர்கள் கூறுகிறார்கள்: “இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்.”
50:3
50:3 ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ‌ۚ ذٰ لِكَ رَجْعٌ ۢ بَعِيْدٌ‏
ءَاِذَا مِتْنَا நாங்கள் இறந்துவிட்டாலுமா وَكُنَّا இன்னும் நாங்கள் ஆகிவிட்டாலுமா تُرَابًا ۚ மண்ணாக ذٰ لِكَ அது رَجْعٌ ۢ மீட்சியாகும் بَعِيْدٌ‏ தூரமான(து)
50:3. 'அ-இதா மித்னா வ குன்னா துராBபன் தாலிக ரஜ்'உம் Bப'ஈத்
50:3. “நாம் மரணமடைந்து மண்ணாகி விட்டாலு(ம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா? இப்படி மீள்வது (சாத்தியமில்லாத) தொலைவானது” (என்றும் அவர்கள் கூறுகின்றனர்).
50:4
50:4 قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْاَرْضُ مِنْهُمْ‌ۚ وَعِنْدَنَا كِتٰبٌ حَفِيْظٌ‏
قَدْ திட்டமாக عَلِمْنَا நாம் அறிவோம் مَا تَنْقُصُ குறைப்பதை الْاَرْضُ பூமி مِنْهُمْ‌ۚ அவர்களில் وَعِنْدَنَا நம்மிடம் இருக்கிறது. كِتٰبٌ பதிவு நூல் حَفِيْظٌ‏ பாதுகாக்கக்கூடிய(து)
50:4. கத் 'அலிம்னா மா தன்கு-ஸுல்-அர்ளு மின்ஹும் வ 'இன்தனா கிதாBபுன் ஹFபீள்
50:4. (மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.
50:5
50:5 بَلْ كَذَّبُوْا بِالْحَقِّ لَمَّا جَآءَهُمْ فَهُمْ فِىْۤ اَمْرٍ مَّرِيْجٍ‏
بَلْ மாறாக كَذَّبُوْا அவர்கள் பொய்ப்பித்தனர் بِالْحَقِّ உண்மையை لَمَّا جَآءَ அது வந்த போது هُمْ அவர்களிடம் فَهُمْ அவர்கள் இருக்கின்றனர் فِىْۤ اَمْرٍ ஒரு விஷயத்தில் مَّرِيْجٍ‏ குழப்பமான
50:5. Bபல் கத்தBபூ Bபில்ஹக்கி லம்மா ஜா'அஹும் Fபஹும் Fபீ அம்ரிம் மரீஜ்
50:5. இருப்பினும், சத்திய (வேத)த்தை -அது தம்மிடம் வந்த போது பொய்ப்பிக்(க முற்படு)கிறார்கள்; அதனால், அவர்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றனர்.
50:6
50:6 اَ فَلَمْ يَنْظُرُوْۤا اِلَى السَّمَآءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنٰهَا وَزَ يَّـنّٰهَا وَمَا لَهَا مِنْ فُرُوْجٍ‏
اَ فَلَمْ يَنْظُرُوْۤا அவர்கள் பார்க்கவில்லையா? اِلَى السَّمَآءِ வானத்தை فَوْقَهُمْ தங்களுக்கு மேல் உள்ள كَيْفَ بَنَيْنٰهَا நாம் அதை எப்படி படைத்தோம்? وَزَ يَّـنّٰهَا இன்னும் அதை எப்படி அலங்கரித்தோம்? وَمَا لَهَا அதில் இல்லை مِنْ فُرُوْجٍ‏ பிளவுகள்
50:6. அFபலம் யன்ளுரூ இலஸ் ஸமா'இ Fபவ்கஹும் கய்Fப Bபனய்னாஹா வ Zஜய்யன்னாஹா வமா லஹா மின் Fபுரூஜ்
50:6. அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
50:7
50:7 وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَ لْقَيْنَا فِيْهَا رَوَاسِىَ وَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍۢ بَهِيْجٍ ۙ‏
وَالْاَرْضَ இன்னும் பூமியை مَدَدْنٰهَا நாம் அதை விரித்தோம் وَاَ لْقَيْنَا فِيْهَا இன்னும் அதில் அமைத்தோம் رَوَاسِىَ பெரிய மலைகளை وَاَنْۢبَتْنَا இன்னும் தாவரங்களை முளைக்க வைத்தோம் فِيْهَا அதில் مِنْ كُلِّ زَوْجٍۢ எல்லா வகையான بَهِيْجٍ ۙ‏ அழகான
50:7. வல் அர்ள மதத்னாஹா வ அல்கய்னா Fபீஹா ரவாஸிய வ அம்Bபத்னா Fபீஹா மின் குல்லி Zஜவ்ஜிம் Bபஹீஜ்
50:7. மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம்; மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.
50:8
50:8 تَبْصِرَةً وَّذِكْرٰى لِكُلِّ عَبْدٍ مُّنِيْبٍ‏
تَبْصِرَةً உற்று நோக்குவதற்காக(வும்) وَّذِكْرٰى படிப்பினை பெறுவதற்காகவும் لِكُلِّ عَبْدٍ எல்லா அடியார்களுக்கும் مُّنِيْبٍ‏ திரும்பக்கூடிய(வர்)
50:8. தBப்ஸிரத(ன்)வ் வ திக்ரா லிகுல்லி 'அBப்திம் முனீBப்
50:8. (இது இறைவன் பக்கம்) திரும்பும் அடியார்கள் எல்லோருக்கும் (அகப்) பார்வை அளிப்பதாகவும், (நினைவூட்டும்) நல்லுபதேசமாகவும் உள்ளது.
50:9
50:9 وَنَزَّلْنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰـرَكًا فَاَنْۢبَـتْـنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الْحَصِيْدِ ۙ‏
وَنَزَّلْنَا இன்னும் நாம் இறக்கினோம் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مَآءً நீரை مُّبٰـرَكًا அருள் நிறைந்த(து) فَاَنْۢبَـتْـنَا முளைக்க வைத்தோம் بِهٖ அதன் மூலம் جَنّٰتٍ தோட்டங்களை(யும்) وَّحَبَّ தானியங்களையும் الْحَصِيْدِ ۙ‏ அறுவடை செய்யப்படும்
50:9. வ னZஜ்Zஜல்னா மினஸ் ஸமா'இ மா'அம் முBபாரகன் Fப அம்Bபத்னா Bபிஹீ ஜன்னாதி(ன்)வ் வ ஹBப்Bபல் ஹஸீத்
50:9. அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம்.
50:10
50:10 وَالنَّخْلَ بٰسِقٰتٍ لَّهَا طَلْـعٌ نَّضِيْدٌ ۙ‏
وَالنَّخْلَ இன்னும் பேரித்த மரங்களையும் بٰسِقٰتٍ உயரமான(வைகள்) لَّهَا அவற்றில் طَلْـعٌ குலைகள் இருக்கின்றன نَّضِيْدٌ ۙ‏ அடர்த்தியான(து)
50:10. வன்னக்ல Bபாஸிகாதில் லஹ தல்'உன் னளீத்
50:10. அடுக்கடுக்கான பாளைகளைக் கொண்ட (குலைகளையுடைய) நெடிய பேரீச்ச மரங்களையும் (உண்டாக்கினோம்).
50:11
50:11 رِّزْقًا لِّلْعِبَادِ‌ ۙ وَاَحْيَيْنَا بِهٖ بَلْدَةً مَّيْـتًا‌ ؕ كَذٰلِكَ الْخُـرُوْجُ‏
رِّزْقًا உணவாக இருப்பதற்காக لِّلْعِبَادِ‌ ۙ அடியார்களுக்கு وَاَحْيَيْنَا நாம் உயிர்ப்பிப்போம் بِهٖ அதன் மூலம் بَلْدَةً பூமியை مَّيْـتًا‌ ؕ இறந்த(து) كَذٰلِكَ இவ்வாறுதான் الْخُـرُوْجُ‏ வெளியேறுவதும்
50:11. ரிZஜ்கல் லில்'இBபாத், வ அஹ்யய்னா Bபிஹீ Bபல்ததம் மய்தா; கதாலிகல் குரூஜ்
50:11. (அவற்றின் கனிகளை) அடியார்களுக்கு உணவாக (அளிக்கிறோம்), மேலும், அதைக் கொண்டு இறந்து கிடந்த ஊரை (பூமியை) நாம் உயிர்ப்பிக்கிறோம், இவ்விதமே, (இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப் பெற்று) வெளியேறுதலும் இருக்கிறது.
50:12
50:12 كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّاَصْحٰبُ الرَّسِّ وَثَمُوْدُۙ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் قَوْمُ மக்களும் نُوْحٍ நூஹூடைய وَّاَصْحٰبُ الرَّسِّ கிணற்றுடையவர்களும் وَثَمُوْدُۙ‏ ஸமூது மக்களும்
50:12. கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வ அஸ்ஹாBபுர் ரஸ்ஸி வ தமூத்
50:12. இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ரஸ்ஸு (கிணற்று) வாசிகளும், ஸமூது மக்களும் (இவ்வாறு மறுமையை) மறுத்தார்கள்.
50:13
50:13 وَعَادٌ وَّفِرْعَوْنُ وَاِخْوَانُ لُوْطٍۙ‏
وَعَادٌ ஆது மக்களும் وَّفِرْعَوْنُ ஃபிர்அவ்னும் وَاِخْوَانُ சகோதரர்களும் لُوْطٍۙ‏ லூத்துடைய
50:13. வ 'ஆது(ன்)வ் வ Fபிர்'அவ்னு வ இக்வானு லூத்
50:13. “ஆது” (சமூகத்தாரும்) ஃபிர்அவ்னும் லூத்தின் சகோதரர்களும் (மறுத்தனர்).
50:14
50:14 وَّاَصْحٰبُ الْاَيْكَةِ وَقَوْمُ تُبَّعٍ‌ؕ كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِيْدِ‏
وَّاَصْحٰبُ الْاَيْكَةِ தோட்டக்காரர்களும் وَقَوْمُ மக்களும் تُبَّعٍ‌ؕ துப்பஃ உடைய كُلٌّ எல்லோரும் كَذَّبَ பொய்ப்பித்தனர் الرُّسُلَ தூதர்களை فَحَقَّ ஆகவே, உறுதியாகிவிட்டது وَعِيْدِ‏ என் எச்சரிக்கை
50:14. வ அஸ்ஹாBபுல் அய்கதி வ கவ்மு துBப்Bப'; குல்லுன் கத்தBபர் ருஸுல Fபஹக்க வ'ஈத்
50:14. (அவ்வாறே மத்யன்) தோப்புவாசிகளும், துப்பவுடைய கூட்டத்தாரும் ஆக எல்லோரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டனர்; எனவே (அவர்களைப் பற்றிய) என்னுடைய எச்சரிக்கை உண்மையாயிற்று.
50:15
50:15 اَفَعَيِيْنَا بِالْخَـلْقِ الْاَوَّلِ‌ؕ بَلْ هُمْ فِىْ لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِيْدٍ
اَفَعَيِيْنَا நாம் பலவீனமாக ஆகிவிட்டோமா? بِالْخَـلْقِ படைத்ததினால் الْاَوَّلِ‌ؕ முதல் முறை بَلْ மாறாக هُمْ அவர்கள் இருக்கின்றனர் فِىْ لَبْسٍ குழப்பத்தில் مِّنْ خَلْقٍ படைக்கப்படுவதில் جَدِيْدٍ‏ புதிதாக
50:15. அFப'அ யீனா Bபில்கல்கில் அவ்வல்; Bபல் ஹும் Fபீ லBப்ஸிம் மின் கல்கின் ஜதீத்
50:15. எனவே, (எல்லாவற்றையும்) முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்து விட்டோமா? இல்லை. எனினும், இ(க்காஃபிரான)வர்கள் (நாம்) புதிதாக படைப்பதைப் பற்றி சந்தேகத்தில் இருக்கின்றனர்.  
50:16
50:16 وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖۚ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ‏
وَلَقَدْ திட்டவட்டமாக خَلَقْنَا நாம் படைத்தோம் الْاِنْسَانَ மனிதனை وَنَعْلَمُ இன்னும் நாம் அறிவோம் مَا எதை تُوَسْوِسُ கிசுகிசுக்கிறதோ بِهٖ அதை نَفْسُهٗ ۖۚ அவனது உள்ளம் وَنَحْنُ நாம் اَقْرَبُ மிக நெருக்கமானவர்கள் اِلَيْهِ அவனுக்கு مِنْ حَبْلِ நரம்பைவிட الْوَرِيْدِ‏ கழுத்தின்
50:16. வ லகத் கலக்னல் இன்ஸான வ னஃலமு மா துவஸ்விஸு Bபிஹீ னFப்ஸுஹூ வ னஹ்னு அக்ரBபு இலய்ஹி மின் ஹBப்லில் வரீத்
50:16. மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.
50:17
50:17 اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ‏
اِذْ يَتَلَقَّى சந்திக்கின்ற போது الْمُتَلَقِّيٰنِ சந்திக்கின்ற இரு வானவர்கள் عَنِ الْيَمِيْنِ வலது பக்கத்திலும் وَعَنِ الشِّمَالِ இடது பக்கத்திலும் قَعِيْدٌ‏ கண்காணிப்பவர்
50:17. 'இத் யதலக்கல் முதலக்கி யானி 'அனில் யமீனி வ 'அனிஷ் ஷிமாலி க'ஈத்
50:17. (மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-
50:18
50:18 مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏
مَا يَلْفِظُ பேச மாட்டான் مِنْ قَوْلٍ பேச்சில் எதையும் اِلَّا தவிர لَدَيْهِ அவனிடம் இருந்தே رَقِيْبٌ கண்காணிப்பாளர் عَتِيْدٌ‏ ஆஜராகி இருப்பவர்
50:18. மா யல்Fபிளு மின் கவ்லின் இல்லா லதய்ஹி ரகீBபுன் 'அதீத்
50:18. கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.
50:19
50:19 وَ جَآءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَـقِّ‌ؕ ذٰلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيْدُ‏
وَ جَآءَتْ வந்துவிட்டது سَكْرَةُ மயக்கம் الْمَوْتِ மரணத்தின் بِالْحَـقِّ‌ؕ உண்மையாக ذٰلِكَ அதுதான் مَا எது كُنْتَ நீ இருந்தாய் مِنْهُ அதை விட்டு تَحِيْدُ‏ விலகி ஓடுபவனாக
50:19. வ ஜா'அத் ஸக்ரதுல் மவ்தி Bபில்ஹக்க்; தாலிக மா குன்த மின்ஹு தஹீத்
50:19. மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது; (அப்போது அவனிடம்) நீ எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)
50:20
50:20 وَنُفِخَ فِى الصُّوْرِ ‌ؕ ذٰ لِكَ يَوْمُ الْوَعِيْدِ‏
وَنُفِخَ ஊதப்படும் فِى الصُّوْرِ ؕ சூரில் ذٰ لِكَ يَوْمُ அதுதான்/நாள் الْوَعِيْدِ‏ எச்சரிக்கப்பட்ட
50:20. வ னுFபிக Fபிஸ் ஸூர்; தாலிக யவ்முல் வ'ஈத்
50:20. மேலும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும். அதுதான் அச்சுறுத்தி எச்சரிக்கப்பட்ட நாளாகும்.
50:21
50:21 وَجَآءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَآٮِٕقٌ وَّشَهِيْدٌ‏
وَجَآءَتْ வரும் كُلُّ எல்லா نَفْسٍ ஆன்மாவும் مَّعَهَا அதனுடன் இருக்கின்ற நிலையில் سَآٮِٕقٌ ஓட்டிவருபவரும் وَّشَهِيْدٌ‏ சாட்சி சொல்பவரும்
50:21. வ ஜா'அத் குல்லு னFப்ஸிம் ம'அஹா ஸா'இகு(ன்)வ் வ ஷஹீத்
50:21. அன்றியும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும் தன்னை அழைத்து வருபவர், சாட்சியாளர் ஆகியோருடன் வரும்.
50:22
50:22 لَقَدْ كُنْتَ فِىْ غَفْلَةٍ مِّنْ هٰذَا فَكَشَفْنَا عَنْكَ غِطَآءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيْدٌ‏
لَقَدْ திட்டவட்டமாக كُنْتَ நீ இருந்தாய் فِىْ غَفْلَةٍ மறந்த நிலையில் مِّنْ هٰذَا இதை فَكَشَفْنَا நாம் அகற்றினோம் عَنْكَ உன்னை விட்டும் غِطَآءَكَ உனது திரையை فَبَصَرُكَ ஆகவே, உனது பார்வை الْيَوْمَ இன்றைய தினம் حَدِيْدٌ‏ மிகக் கூர்மையானதாக
50:22. லகத் குன்த Fபீ கFப் லதிம் மின் ஹாதா FபகஷFப்னா 'அன்க கிதா'அக FபBபஸருகல் யவ்ம ஹதீத்
50:22. “நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது.” (என்று கூறப்படும்).
50:23
50:23 وَقَالَ قَرِيْـنُهٗ هٰذَا مَا لَدَىَّ عَتِيْدٌ ؕ‏
وَقَالَ கூறுவார் قَرِيْـنُهٗ அவனுடைய நண்பன் هٰذَا இது مَا எது لَدَىَّ என்னிடம் عَتِيْدٌ ؕ‏ தயாராக
50:23. வ கால கரீனுஹூ ஹாதா மா லதய்ய 'அதீத்
50:23. அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு) “இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது” என்று கூறுவார்.
50:24
50:24 اَلْقِيَا فِىْ جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيْدٍۙ‏
اَلْقِيَا நீங்கள் இருவரும் தள்ளுங்கள்! فِىْ جَهَنَّمَ நரகத்தில் كُلَّ எல்லோரையும் كَفَّارٍ நிராகரிப்பாளர் عَنِيْدٍۙ‏ முரண்டு பிடிப்பவர்
50:24. அல்கியா Fபீ ஜஹன்னம குல்ல கFப்Fபாரின் 'அனீத்
50:24. “மனமுரண்டாக நிராகரித்துக் கொண்டிருந்தோர் எல்லோரையும் நீங்கள் இருவரும் நரகில் போடுங்கள்.
50:25
50:25 مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ مُّرِيْبِ ۙ‏
مَّنَّاعٍ தடுப்பவர் لِّلْخَيْرِ செல்வத்தை مُعْتَدٍ எல்லை மீறுபவர் مُّرِيْبِ ۙ‏ சந்தேகிப்பவன்
50:25. மன்னா'இல் லில்கய்ரி முஃததிம் முரீBப்
50:25. “(அவன்) நன்மையை தடுத்துக் கொண்டேயிருந்தவன்; (இந்நாளைப் பற்றி) சந்தேகிப்பவனாக, வரம்பு மீறிக் கொண்டும் இருந்தான்.
50:26
50:26 اۨلَّذِىْ جَعَلَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَاَ لْقِيٰهُ فِى الْعَذَابِ الشَّدِيْدِ‏
اۨلَّذِىْ எவர் جَعَلَ ஏற்படுத்தினாரோ مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اِلٰهًا اٰخَرَ வேறு ஒரு கடவுளை فَاَ لْقِيٰهُ அவரையும் தள்ளுங்கள்! فِى الْعَذَابِ வேதனையில் الشَّدِيْدِ‏ கடுமையான(து)
50:26. அல்லதீ ஜ'அல ம'அல் லாஹி இலாஹன் ஆகர Fப அல்கியாஹு Fபில்'அதாBபிஷ் ஷதீத்
50:26. “அவன் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை ஏற்படுத்தினான். ஆகவே நீங்களிருவரும் இவனை மிகக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்” (என்றுங் கூறப்படும்).
50:27
50:27 قَالَ قَرِيْنُهٗ رَبَّنَا مَاۤ اَطْغَيْتُهٗ وَلٰـكِنْ كَانَ فِىْ ضَلٰلٍۢ بَعِيْدٍ‏
قَالَ கூறுவான் قَرِيْنُهٗ அவனுடைய நண்பன் رَبَّنَا எங்கள் இறைவா! مَاۤ اَطْغَيْتُهٗ நான் அவனை மீறச்செய்யவில்லை وَلٰـكِنْ எனினும் كَانَ இருந்தான் فِىْ ضَلٰلٍۢ வழிகேட்டில் بَعِيْدٍ‏ தூரமான(து)
50:27. கால கரீனுஹூ ரBப்Bபனா மா அத்கய்துஹூ வ லாகின் கான Fபீ ளலாலின் Bப'ஈத்
50:27. (அப்போது ஷைத்தானாகிய) அவனுடைய கூட்டாளி கூறுவான்: “எங்கள் இறைவா! நான் இவனை வழி கெடுக்கவில்லை; ஆனால், அவனே தூரமான வழி கேட்டில் தான் இருந்தான்-”
50:28
50:28 قَالَ لَا تَخْتَصِمُوْا لَدَىَّ وَقَدْ قَدَّمْتُ اِلَيْكُمْ بِالْوَعِيْدِ‏
قَالَ கூறுவான் لَا تَخْتَصِمُوْا தர்க்கம் செய்யாதீர்கள் لَدَىَّ என்னிடம் وَقَدْ திட்டமாக قَدَّمْتُ முற்படுத்திவிட்டேன் اِلَيْكُمْ உங்களுக்கு بِالْوَعِيْدِ‏ எச்சரிக்கையை
50:28. கால லா தக்தஸிமூ லதாய்ய வ கத் கத்தம்து இலய்கும் Bபில்வ'ஈத்
50:28. “என் முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்; (இதைப்பற்றி என் அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன்” என்று (அல்லாஹ்) கூறுவான்.
50:29
50:29 مَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَىَّ وَمَاۤ اَنَا بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ
مَا يُبَدَّلُ மாற்றப்படாது الْقَوْلُ பேச்சுகள் لَدَىَّ என்னிடம் وَمَاۤ اَنَا நான் இல்லை بِظَلَّامٍ அறவே அநியாயம் செய்பவனாக لِّلْعَبِيْدِ‏ அடியார்களுக்கு
50:29. மா யுBபத்தலுல் கவ்லு லதய்ய வ மா அன Bபிளல் லாமில் லில்'அBபீத்
50:29. (எனவே என்னுடைய) அச்சொல் “என்னிடத்தில் மாற்றப்படுவதில்லை - நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்” (என்றும் அல்லாஹ் கூறுவான்).  
50:30
50:30 يَوْمَ نَـقُوْلُ لِجَهَـنَّمَ هَلِ امْتَلَـئْتِ وَتَقُوْلُ هَلْ مِنْ مَّزِيْدٍ‏
يَوْمَ நாளில் نَـقُوْلُ நாம் கூறுகின்ற لِجَهَـنَّمَ நரகத்திடம் هَلِ امْتَلَـئْتِ நீ நிரம்பிவிட்டாயா? وَتَقُوْلُ அது கூறும் هَلْ مِنْ مَّزِيْدٍ‏ இன்னும் அதிகம் இருக்கிறதா?
50:30. யவ்ம னகூலு லி'ஜஹன்னம ஹலிம் தலாதி வ தகூலு ஹல் மிம் மZஜீத்
50:30. நரகத்தை நோக்கி, “நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது “இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)!
50:31
50:31 وَاُزْلِفَتِ الْجَـنَّةُ لِلْمُتَّقِيْنَ غَيْرَ بَعِيْدٍ‏
وَاُزْلِفَتِ சமீபமாகக் கொண்டு வரப்படும் الْجَـنَّةُ சொர்க்கம் لِلْمُتَّقِيْنَ இறையச்சமுள்ளவர்களுக்கு غَيْرَ بَعِيْدٍ‏ தூரமின்றி
50:31. வ உZஜ்லிFபதில் ஜன்னது லில் முத்தகீன கய்ர Bப'ஈத்
50:31. (அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.
50:32
50:32 هٰذَا مَا تُوْعَدُوْنَ لِكُلِّ اَوَّابٍ حَفِيْظٍ‌ۚ‏
هٰذَا இதுதான் مَا எது تُوْعَدُوْنَ வாக்களிக்கப்படுகிறது لِكُلِّ எல்லோருக்கும் اَوَّابٍ அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பக்கூடிய(வர்) حَفِيْظٍ‌ۚ‏ பேணக்கூடிய(வர்)
50:32. ஹாத மா தூ'அதூன லிகுல்லி அவ்வாBபின் ஹFபீள்
50:32. “இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).”
50:33
50:33 مَنْ خَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِ وَجَآءَ بِقَلْبٍ مُّنِيْبِۙ‏
مَنْ எவர் خَشِىَ பயந்தாரோ الرَّحْمٰنَ பேரருளாளனை بِالْغَيْبِ மறைவில் وَجَآءَ இன்னும் வந்தாரோ بِقَلْبٍ உள்ளத்துடன் مُّنِيْبِۙ‏ அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பிய(து)
50:33. மன் கஷியர் ரஹ்மான Bபில்கய்Bபி வ ஜா'அ Bபிகல்Bபிம் முனீBப்
50:33. எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).
50:34
50:34 اۨدْخُلُوْهَا بِسَلٰمٍ‌ؕ ذٰلِكَ يَوْمُ الْخُلُوْدِ‏
اۨدْخُلُوْهَا நீங்கள் அதில் நுழையுங்கள்! بِسَلٰمٍ‌ؕ பாதுகாப்புடன் ذٰلِكَ இதுதான் يَوْمُ நாள் الْخُلُوْدِ‏ நிரந்தர
50:34. உத்குலூஹா Bபிஸலாமின் தாலிக யவ்முல் குலூத்
50:34. “ஸலாமுடன் - சாந்தியுடன் - இ(ச் சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள்; இதுதான் நித்தியமாக நீங்கள் தங்கியிருக்கும் நாளாகும்” (என்று கூறப்படும்).
50:35
50:35 لَهُمْ مَّا يَشَآءُوْنَ فِيْهَا وَلَدَيْنَا مَزِيْدٌ‏
لَهُمْ அவர்களுக்கு مَّا எவை يَشَآءُوْنَ அவர்கள் நாடுகின்றனர் فِيْهَا அதில் وَلَدَيْنَا இன்னும் நம்மிடம் உண்டு مَزِيْدٌ‏ மேலதிகமும்
50:35. லஹும் மா யஷா'ஊன Fபீஹா வ லதய்னா மZஜீத்
50:35. அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது; இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது.
50:36
50:36 وَكَمْ اَهْلَـكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَّبُوْا فِى الْبِلَادِ ؕ هَلْ مِنْ مَّحِيْصٍ‏
وَكَمْ எத்தனையோ اَهْلَـكْنَا நாம் அழித்தோம் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் مِّنْ قَرْنٍ தலைமுறையினரை هُمْ அவர்கள் اَشَدُّ மிக பலமான(வர்கள்) مِنْهُمْ இவர்களை விட بَطْشًا வலிமை(யுள்ளவர்கள்) فَنَقَّبُوْا அவர்கள் சுற்றினார்கள் فِى الْبِلَادِ ؕ நகரங்களில் هَلْ مِنْ مَّحِيْصٍ‏ தப்பிக்கும் இடம் ஏதும் இருக்கிறதா?
50:36. வ கம் அஹ்லக்னா கBப்லஹும் மின் கர்னின் ஹும் அஷத்து மின்ஹும் Bபத்ஷன் Fபனக்கBபூ Fபில் Bபிலாத், ஹல் மிம் மஹீஸ்
50:36. அன்றியும், (நிராகரிப்போரான) அவர்களைவிட பலசாலிகளாக இருந்த எத்தனையோ தலைமுறையினரை அவர்களுக்கு முன்னர் நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள் (அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள) பல ஊர்களிலும் (துளைத்துச்) சென்றனர்; ஆனால் அவர்கள் தப்பித்துக் கொள்ள புகலிடம் இருந்ததா?
50:37
50:37 اِنَّ فِىْ ذٰلِكَ لَذِكْرٰى لِمَنْ كَانَ لَهٗ قَلْبٌ اَوْ اَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيْدٌ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰلِكَ இதில் இருக்கிறது لَذِكْرٰى நல்லறிவுரை لِمَنْ எவருக்கு كَانَ இருக்கின்றது لَهٗ அவருக்கு قَلْبٌ உள்ளம் اَوْ இன்னும் اَلْقَى السَّمْعَ செவி சாய்த்தான் وَهُوَ அவர் شَهِيْدٌ‏ பிரசன்னமாக இருந்து
50:37. இன்ன Fபீ தாலிக லதிக்ரா லிமன் கான லஹூ கல்Bபுன் அவ் அல்கஸ் ஸம்'அ வ ஹுவ ஷஹீத்
50:37. எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.
50:38
50:38 وَلَقَدْ خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍ‌ۖ وَّمَا مَسَّنَا مِنْ لُّغُوْبٍ‏
وَلَقَدْ திட்டவட்டமாக خَلَقْنَا நாம் படைத்தோம் السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضَ பூமியையும் وَمَا بَيْنَهُمَا அவை இரண்டுக்கும் மத்தியில் உள்ளவற்றையும் فِىْ سِتَّةِ ஆறு اَيَّامٍ‌ۖ நாள்களில் وَّمَا مَسَّنَا நமக்கு ஏற்படவில்லை مِنْ لُّغُوْبٍ‏ சோர்வும்
50:38. வ லகத் கலக்னஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்னஹுமா Fபீ ஸித்ததி அய்யாமின் வமா மஸ்ஸனா மில் லுகூBப்
50:38. நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.
50:39
50:39 فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوْبِ‌ۚ‏
فَاصْبِرْ ஆகவே, பொறுமையாக இருப்பீராக! عَلٰى مَا يَقُوْلُوْنَ அவர்கள் பேசுகின்றவற்றின் மீது وَسَبِّحْ இன்னும் துதிப்பீராக! بِحَمْدِ புகழ்ந்து رَبِّكَ உமது இறைவனை قَبْلَ முன்னரும் طُلُوْعِ உதிப்பதற்கு الشَّمْسِ சூரியன் وَقَبْلَ முன்னரும் الْغُرُوْبِ‌ۚ‏ மறைவதற்கு
50:39. Fபஸ்Bபிர் 'அலா மா யகூலூன வ ஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக கBப்ல துலூ'இஷ் ஷம்ஸி வ கBப்லல் குரூBப்
50:39. எனவே (நபியே!) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக; இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக.
50:40
50:40 وَمِنَ الَّيْلِ فَسَبِّحْهُ وَاَدْبَارَ السُّجُوْدِ‏
وَمِنَ الَّيْلِ இரவிலும் فَسَبِّحْهُ அவனை துதிப்பீராக! وَاَدْبَارَ பிறகும் السُّجُوْدِ‏ தொழுகைகளுக்கு
50:40. வ மினல் லய்லி FபஸBப்Bபிஹ் ஹு வ அத்Bபாரஸ் ஸுஜூத்
50:40. இன்னும் இரவிலிருந்தும், ஸுஜூதுக்குப் பின்னரும் அவனைத் தஸ்பீஹு செய்வீராக.
50:41
50:41 وَاسْتَمِعْ يَوْمَ يُنَادِ الْمُنَادِ مِنْ مَّكَانٍ قَرِيْبٍۙ‏
وَاسْتَمِعْ நீர் செவியுறுவீராக! يَوْمَ நாளில் يُنَادِ அழைக்கின்ற الْمُنَادِ அழைப்பவர் مِنْ مَّكَانٍ ஓர் இடத்தில் இருந்து قَرِيْبٍۙ‏ சமீபமான(து)
50:41. வஸ்தமிஃ யவ்ம யுனா தில் முனாதி மிம் மகானின் கரீBப்
50:41. மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.
50:42
50:42 يَوْمَ يَسْمَعُوْنَ الصَّيْحَةَ بِالْحَـقِّ‌ ؕ ذٰ لِكَ يَوْمُ الْخُـرُوْجِ‏
يَوْمَ நாளில் يَسْمَعُوْنَ அவர்கள் செவியுறுகின்ற الصَّيْحَةَ அந்த சப்தத்தை بِالْحَـقِّ‌ ؕ உண்மையில் ذٰ لِكَ அதுதான் يَوْمُ நாளாகும் الْخُـرُوْجِ‏ வெளியேறுகின்ற
50:42. யவ்ம யஸ்மஊனஸ் ஸய் ஹத Bபில்ஹக்க் தாலிக யவ்முல் குரூஜ்
50:42. அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும்.
50:43
50:43 اِنَّا نَحْنُ نُحْىٖ وَنُمِيْتُ وَاِلَيْنَا الْمَصِيْرُۙ‏
اِنَّا نَحْنُ நிச்சயமாக நாம்தான் نُحْىٖ உயிர்ப்பிக்கின்றோம் وَنُمِيْتُ இன்னும் மரணிக்க வைக்கின்றோம் وَاِلَيْنَا இன்னும் நம் பக்கமே இருக்கின்றது الْمَصِيْرُۙ‏ மீளுமிடம்
50:43. இன்னா னஹ்னு னுஹ்யீ வ னுமீது வ இலய்னல் மஸீர்
50:43. நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரணிக்கும்படிச் செய்கிறோம் - அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது.
50:44
50:44 يَوْمَ تَشَقَّقُ الْاَرْضُ عَنْهُمْ سِرَاعًا‌ ؕ ذٰ لِكَ حَشْرٌ عَلَيْنَا يَسِيْرٌ‏
يَوْمَ நாளில் تَشَقَّقُ الْاَرْضُ பூமி பிளந்துவிடும் عَنْهُمْ அவர்களை விட்டும் سِرَاعًا‌ ؕ அதிவிரைவாக வெளியேறுகின்ற ذٰ لِكَ இது حَشْرٌ ஒன்றுதிரட்டல்தான் عَلَيْنَا நமக்கு يَسِيْرٌ‏ இலகுவான
50:44. யவ்ம தஷக்ககுல் அர்ளு 'அன்ஹும் ஸிரா'ஆ; தாலிக ஹஷ்ருன் 'அலய்னா யஸீர்
50:44. பூமி பிளந்து, அவர்கள் வேகமாக (வெளியே) வரும் நாள்; இவ்வாறு (அவர்களை) ஒன்று சேர்ப்பது நமக்கு எளிதானதாகும்.
50:45
50:45 نَحْنُ اَعْلَمُ بِمَا يَقُوْلُوْنَ‌ وَمَاۤ اَنْتَ عَلَيْهِمْ بِجَـبَّارٍ‌ فَذَكِّرْ بِالْقُرْاٰنِ مَنْ يَّخَافُ وَعِيْدِ
نَحْنُ اَعْلَمُ நாம் அதிகம் அறிந்தவர்கள் بِمَا يَقُوْلُوْنَ‌ அவர்கள் கூறுகின்றவற்றை وَمَاۤ اَنْتَ நீ இல்லை عَلَيْهِمْ அவர்களை بِجَـبَّارٍ‌ அடக்கக்கூடியவராக فَذَكِّرْ ஆகவே, அறிவுரை வழங்குவீராக! بِالْقُرْاٰنِ இந்த குர்ஆன் மூலமாக مَنْ يَّخَافُ பயப்படுகின்றவருக்கு وَعِيْدِ‏ எனது எச்சரிக்கையை
50:45. னஹ்னு அஃலமு Bபிமா யகூலூன வ மா அன்த 'அலய்ஹிம் BபிஜBப்Bபாரின் Fபதக்கிர் Bபில் குர்'ஆனி ம(ன்)ய் யகாFபு வ'ஈத்
50:45. அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் - நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லுபதேசம் செய்வீராக.