57. ஸூரத்துல் ஹதீத்(இரும்பு)
மதனீ, வசனங்கள்: 29

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
57:1
57:1 سَبَّحَ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
سَبَّحَ துதிக்கின்றன لِلّٰهِ அல்லாஹ்வை مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَالْاَرْضِ‌ۚ இன்னும் பூமியில் وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
57:1. ஸBப்Bபஹ லில்லாஹி மா Fபிஸ்ஸமாவாதி வல் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
57:1. வானங்களிலும், பூமியிலும் உள்ளயாவும் அல்லாஹ்வுக்கே தஸ்பீஹு செய்து (துதி செய்து) கொண்டிருக்கின்றன - அவன் (யாவரையும்) மிகைத்தோன்; ஞானம் மிக்கவன்.
57:2
57:2 لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ يُحْىٖ وَيُمِيْتُ‌ۚ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
لَهٗ அவனுக்கே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ வானங்கள் இன்னும் பூமியின் يُحْىٖ உயிர்கொடுக்கின்றான் وَيُمِيْتُ‌ۚ மரணிக்க வைக்கின்றான் وَهُوَ அவன் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீதும் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
57:2. லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி யுஹ்யீ வ யுமீது வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
57:2. வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும் படியும் செய்கிறான் - மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
57:3
57:3 هُوَ الْاَوَّلُ وَالْاٰخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ‌ۚ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
هُوَ அவன்தான் الْاَوَّلُ முதலாமவன் وَالْاٰخِرُ இன்னும் இறுதியானவன் وَالظَّاهِرُ இன்னும் வெளிப்படையானவன் وَالْبَاطِنُ‌ۚ இன்னும் மறைந்தவன் وَهُوَ இன்னும் அவன் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
57:3. ஹுவல் அவ்வலு வல்'ஆகிரு வள் ளாஹிரு வல் Bபாதினு வ ஹுவ Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
57:3. (யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; பகிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.
57:4
57:4 هُوَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ‌ؕ يَعْلَمُ مَا يَلِجُ فِى الْاَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيْهَاؕ وَهُوَ مَعَكُمْ اَيْنَ مَا كُنْتُمْ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
هُوَ அவன்தான் الَّذِىْ எத்தகையவன் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ பூமியையும் فِىْ سِتَّةِ اَيَّامٍ ஆறு நாள்களில் ثُمَّ பிறகு اسْتَوٰى உயர்ந்து விட்டான் عَلَى الْعَرْشِ‌ؕ அர்ஷின் மீது يَعْلَمُ நன்கறிவான் مَا يَلِجُ நுழைவதை(யும்) فِى الْاَرْضِ பூமியில் وَمَا يَخْرُجُ வெளியேறுவதையும் مِنْهَا அதிலிருந்து وَمَا يَنْزِلُ இறங்குவதையும் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து وَمَا يَعْرُجُ ஏறுவதையும் فِيْهَاؕ அதில் وَهُوَ அவன் مَعَكُمْ உங்களுடன் اَيْنَ مَا كُنْتُمْ‌ؕ நீங்கள்எங்குஇருந்தாலும் وَاللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
57:4. ஹுவல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Fபீ ஸித்ததி அய்யாமின் தும்மஸ் தவா 'அலல் 'அர்ஷ்; யஃலமு மா யலிஜு Fபிலர்ளி வமா யக்ருஜு மின்ஹா வமா யன்Zஜிலு மினஸ் ஸமா'இ வமா யஃருஜு Fபீஹா வ ஹுவ ம'அகும் அய்ன மா குன்தும்; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
57:4. அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
57:5
57:5 لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ‏
لَهٗ அவனுக்கே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமியின் وَاِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கமே تُرْجَعُ திருப்பப்படுகின்றன الْاُمُوْرُ‏ எல்லாக் காரியங்களும்
57:5. லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
57:5. வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; அன்றியும் காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே மீட்கப்படும்.
57:6
57:6 يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ‌ؕ وَهُوَ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
يُوْلِجُ நுழைக்கின்றான் الَّيْلَ فِى النَّهَارِ இரவை/பகலில் وَيُوْلِجُ இன்னும் நுழைக்கின்றான் النَّهَارَ فِى الَّيْلِ‌ؕ பகலை / இரவில் وَهُوَ அவன் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِذَاتِ الصُّدُوْرِ‏ நெஞ்சங்களில் உள்ளவற்றை
57:6. யூலிஜுல் லய்ல Fபின் னஹாரி வ யூலிஜுன் னஹார Fபில் லய்ல்; வ ஹுவ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
57:6. அவனே இரவைப் பகலில் புகுத்துகின்றான்; இன்னும் பகலை இரவில் புகுத்துகின்றான் - அவன் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் நன்கறிந்தவன்.
57:7
57:7 اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاَنْفِقُوْا مِمَّا جَعَلَـكُمْ مُّسْتَخْلَفِيْنَ فِيْهِ‌ؕ فَالَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَاَنْفَقُوْا لَهُمْ اَجْرٌ كَبِيْرٌ‏
اٰمِنُوْا நம்பிக்கை கொள்ளுங்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை(யும்) وَرَسُوْلِهٖ அவனது தூதரையும் وَاَنْفِقُوْا இன்னும் தர்மம் செய்யுங்கள் مِمَّا جَعَلَـكُمْ அவன் எதில் உங்களை ஆக்கினானோ مُّسْتَخْلَفِيْنَ பிரதிநிதிகளாக فِيْهِ‌ؕ அதில் فَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் مِنْكُمْ உங்களில் وَاَنْفَقُوْا இன்னும் தர்மம் செய்தார்கள் لَهُمْ அவர்களுக்கு اَجْرٌ கூலி உண்டு كَبِيْرٌ‏ மிகப் பெரிய(து)
57:7. ஆமினூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வ அன்Fபிகூ மிம்மா ஜ'அலகும் முஸ்தக் லFபீன Fபீஹி Fபல்லதீன ஆமனூ மின்கும் வ அன்Fபகூ லஹும் அஜ்ருன் கBபீர்
57:7. நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்; ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது.
57:8
57:8 وَمَا لَـكُمْ لَا تُؤْمِنُوْنَ بِاللّٰهِ‌ۚ وَالرَّسُوْلُ يَدْعُوْكُمْ لِتُؤْمِنُوْا بِرَبِّكُمْ وَقَدْ اَخَذَ مِيْثَاقَكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
وَمَا لَـكُمْ உங்களுக்கு என்ன لَا تُؤْمِنُوْنَ நீங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு بِاللّٰهِ‌ۚ அல்லாஹ்வை وَالرَّسُوْلُ தூதரோ يَدْعُوْكُمْ உங்களை அழைக்கின்றார் لِتُؤْمِنُوْا நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கு بِرَبِّكُمْ உங்கள் இறைவனை وَقَدْ திட்டமாக اَخَذَ வாங்கி இருக்கின்றான் مِيْثَاقَكُمْ உங்கள் வாக்குறுதியை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளராக
57:8. வமா லகும் லா து'மினூன Bபில்லாஹி வர் ரஸூலு யத்'ஊகும் லி து'மினூ Bபி ரBப்Bபிகும் வ கத் அகத மீதாககும் இன் குன்தும் மு'மினீன்
57:8. உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள (நம்) தூதர் உங்களை அழைக்கையில் - இன்னும் திட்டமாய் ஏற்கனவே (அவன்) உங்களிடம் உறுதிமானமும் வாங்கியிருக்கும் போது, அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொள்ளாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களாயின் (இறை போதனைப்படி நடவுங்கள்).
57:9
57:9 هُوَ الَّذِىْ يُنَزِّلُ عَلٰى عَبْدِهٖۤ اٰيٰتٍۭ بَيِّنٰتٍ لِّيُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ‌ؕ وَاِنَّ اللّٰهَ بِكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌ‏
هُوَ அவன் الَّذِىْ எத்தகையவன் يُنَزِّلُ இறக்குகின்றான் عَلٰى عَبْدِهٖۤ தனது அடியார் மீது اٰيٰتٍۭ அத்தாட்சிகளை بَيِّنٰتٍ தெளிவான(வை) لِّيُخْرِجَكُمْ உங்களை வெளியேற்றுவதற்காக مِّنَ الظُّلُمٰتِ இருள்களிலிருந்து اِلَى النُّوْرِ‌ؕ வெளிச்சத்தின் பக்கம் وَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் بِكُمْ உங்கள் மீது لَرَءُوْفٌ மிக இரக்கமுடையவனும் رَّحِيْمٌ‏ கருணையாளனும்
57:9. ஹுவல் லதீ யுனZஜ்Zஜிலு 'அலா 'அBப்திஹீ ஆயாதிம் Bபய்யினாதில் லியுக்ரிஜகும் மினள் ளுலுமாதி இலன் னூர்; வ இன்னல் லாஹ Bபிகும் ல ர'ஊFபுர் ரஹீம்
57:9. அவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன்; நிகரற்ற அன்புடையவன்.
57:10
57:10 وَ مَا لَـكُمْ اَلَّا تُنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلِلّٰهِ مِيْـرَاثُ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ‌ؕ لَا يَسْتَوِىْ مِنْكُمْ مَّنْ اَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ‌ ؕ اُولٰٓٮِٕكَ اَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِيْنَ اَنْفَقُوْا مِنْۢ بَعْدُ وَقَاتَلُوْا‌ ؕ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰى‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ
وَ مَا لَـكُمْ உங்களுக்கு என்ன ஆனது? اَلَّا تُنْفِقُوْا நீங்கள் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் وَلِلّٰهِ அல்லாஹ்விற்கே مِيْـرَاثُ சொத்துக்கள் السَّمٰوٰتِ வானங்கள் وَ الْاَرْضِ‌ؕ இன்னும் பூமியின் لَا يَسْتَوِىْ சமமாக மாட்டார் مِنْكُمْ உங்களில் مَّنْ எவரும் اَنْفَقَ தர்மம் செய்தார் مِنْ قَبْلِ முன்னர் الْفَتْحِ வெற்றிக்கு وَقَاتَلَ‌ ؕ இன்னும் போர் செய்தார் اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் اَعْظَمُ மிக மகத்தான دَرَجَةً பதவி مِّنَ الَّذِيْنَ எவர்களைவிட اَنْفَقُوْا தர்மம் செய்தார்கள் مِنْۢ بَعْدُ இதற்குப் பின்னர் وَقَاتَلُوْا‌ ؕ இன்னும் போர் செய்தார்கள் وَكُلًّا எல்லோருக்கும் وَّعَدَ வாக்களித்துள்ளான் اللّٰهُ அல்லாஹ் الْحُسْنٰى‌ؕ சொர்க்கத்தை وَاللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை خَبِيْرٌ‏ ஆழ்ந்தறிபவன்
57:10. வமா லகும் அல்லா துன்Fபிகூ Fபீ ஸBபீலில் லாஹி வ லில்லாஹி மீராதுஸ் ஸமாவாதி வல்-அர்ள்; லா யஸ்தவீ மின்கும் மன் அன்Fபக மின் கBப்லில் Fபத்-ஹி வ காதல்; உலா'இக அஃளமு தரஜதம் மினல் லதீன அன்Fபகூ மின் Bபஃது வ காதலூ; வ குல்ல(ன்)வ் வ'அத் அல்லாஹுல் ஹுஸ்னா; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
57:10. அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார்; (மக்காவின் வெற்றிக்குப்) பின்; செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.  
57:11
57:11 مَنْ ذَا الَّذِىْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗ وَلَهٗۤ اَجْرٌ كَرِيْمٌ ۚ‏
مَنْ ذَا யார் الَّذِىْ எவர் يُقْرِضُ கடன் கொடுக்கின்றார் اللّٰهَ அல்லாஹ்விற்கு قَرْضًا கடனாக حَسَنًا அழகிய فَيُضٰعِفَهٗ அதை பன்மடங்காக்குவான் لَهٗ அவருக்கு وَلَهٗۤ இன்னும் அவருக்கு اَجْرٌ கூலி உண்டு كَرِيْمٌ ۚ‏ கண்ணியமான(து)
57:11. மன் தல் லதீ யுக்ரிளுல் லாஹ கர்ளன் ஹஸனன் Fப யுளா'இFபஹூ லஹூ வ லஹூ அஜ்ருன் கரீம்
57:11. அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான்; மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு.
57:12
57:12 يَوْمَ تَرَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ يَسْعٰى نُوْرُهُمْ بَيْنَ اَيْدِيْهِمْ وَبِاَيْمَانِهِمْ بُشْرٰٮكُمُ الْيَوْمَ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا‌ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ‌ۚ‏
يَوْمَ நாளில் تَرَى நீர் பார்ப்பீர் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கை கொண்ட ஆண்களை وَالْمُؤْمِنٰتِ இன்னும் நம்பிக்கை கொண்ட பெண்களை يَسْعٰى செல்லும் نُوْرُهُمْ அவர்களின் ஒளி بَيْنَ اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன்னர் وَبِاَيْمَانِهِمْ இன்னும் அவர்களின் வலப்பக்கங்களில் بُشْرٰٮكُمُ உங்கள் நற்செய்தி الْيَوْمَ இன்று جَنّٰتٌ சொர்க்கங்களாகும் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமாக இருப்பார்கள் فِيْهَا‌ؕ அதில் ذٰلِكَ هُوَ அதுதான் الْفَوْزُ வெற்றியாகும் الْعَظِيْمُ‌ۚ‏ மகத்தான
57:12. யவ்ம தரல் மு'மினீன வல்மு'மினாதி யஸ்'ஆ னூருஹும் Bபய்ன அய்தீஹிம் வ Bபி அய்மானிஹிம் Bபுஷ்ராகுமுல் யவ்ம ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
57:12. முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) “இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்” (என்று கூறப்படும்).
57:13
57:13 يَوْمَ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ لِلَّذِيْنَ اٰمَنُوا انْظُرُوْنَا نَقْتَبِسْ مِنْ نُّوْرِكُمْ‌ۚ قِيْلَ ارْجِعُوْا وَرَآءَكُمْ فَالْتَمِسُوْا نُوْرًاؕ فَضُرِبَ بَيْنَهُمْ بِسُوْرٍ لَّهٗ بَابٌؕ بَاطِنُهٗ فِيْهِ الرَّحْمَةُ وَظَاهِرُهٗ مِنْ قِبَلِهِ الْعَذَابُؕ‏
يَوْمَ அந்நாளில் يَقُوْلُ கூறுவார்கள் الْمُنٰفِقُوْنَ நயவஞ்சகம் உடைய ஆண்களும் وَالْمُنٰفِقٰتُ நயவஞ்சகம் உடைய பெண்களும் لِلَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கை கொண்டவர்களுக்கு انْظُرُوْنَا எங்களை எதிர்பாருங்கள்! نَقْتَبِسْ நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் مِنْ نُّوْرِكُمْ‌ۚ உங்கள்ஒளியிலிருந்து قِيْلَ கூறப்படும் ارْجِعُوْا நீங்கள் திரும்பிச்செல்லுங்கள் وَرَآءَكُمْ உங்களுக்குப் பின்னால் فَالْتَمِسُوْا தேடுங்கள்! نُوْرًاؕ ஒளியை فَضُرِبَ ஆகவே அமைக்கப்படும் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் بِسُوْرٍ ஒரு சுவர் لَّهٗ அதற்கு بَابٌؕ ஒரு வாசல் بَاطِنُهٗ அதன் உள் பக்கம் فِيْهِ அதில் الرَّحْمَةُ அருள் وَظَاهِرُهٗ இன்னும் அதன் வெளிப்பக்கம் مِنْ قِبَلِهِ அதற்கு முன்னால் الْعَذَابُؕ‏ வேதனை
57:13. யவ்ம யகூலுல் முனாFபிகூன வல்முனாFபிகாது லில் லதீன ஆமனு உன்ளுரூனா னக்தBபிஸ் மின் னூரிகும் கீலர்ஜி'ஊ வரா'அகும் Fபல்தமிஸூ னூரன் FபளுரிBப Bபய்னஹும் Bபிஸூரில் லஹூ BபாBபுன், Bபாதினுஹூ Fபீஹிர் ரஹ்மது வ ளாஹிருஹூ மின் கிBபலிஹி-'அதாBப்
57:13. முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி: “எங்களை கவனியுங்கள்; உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்” என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக); அவர்களுக்குக் கூறப்படும்: “உங்களுக்குப் பின்னால், திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்.” பிறகு, அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும்! அதற்கு ஒரு வாயில் இருக்கும்; அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும்; ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.
57:14
57:14 يُنَادُوْنَهُمْ اَلَمْ نَكُنْ مَّعَكُمْ‌ؕ قَالُوْا بَلٰى وَلٰـكِنَّكُمْ فَتَنْتُمْ اَنْفُسَكُمْ وَ تَرَبَّصْتُمْ وَارْتَبْتُمْ وَغَرَّتْكُمُ الْاَمَانِىُّ حَتّٰى جَآءَ اَمْرُ اللّٰهِ وَ غَرَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ‏
يُنَادُوْنَهُمْ அவர்களை கூவி அழைப்பார்கள் اَلَمْ نَكُنْ நாங்கள் இருக்கவில்லையா? مَّعَكُمْ‌ؕ உங்களுடன் قَالُوْا அவர்கள் கூறுவார்கள் بَلٰى ஏன் இல்லை وَلٰـكِنَّكُمْ என்றாலும் நீங்கள் فَتَنْتُمْ அழித்துக் கொண்டீர்கள் اَنْفُسَكُمْ உங்களையே وَ تَرَبَّصْتُمْ இன்னும் தீமையை எதிர்பார்த்தீர்கள் وَارْتَبْتُمْ இன்னும் சந்தேகித்தீர்கள் وَغَرَّتْكُمُ உங்களை மயக்கின الْاَمَانِىُّ பொய்யானஆசைகள் حَتّٰى இறுதியாக جَآءَ வந்துவிட்டது اَمْرُ கட்டளை اللّٰهِ அல்லாஹ்வின் وَ غَرَّكُمْ உங்களை மயக்கிவிட்டான் بِاللّٰهِ அல்லாஹ்வை விட்டும் الْغَرُوْرُ‏ மயக்கக் கூடியவன்
57:14. யுனாதூனஹும் அலம் னகும் ம'அகும் காலூ Bபலா வ லாகின்னகும் Fபதன்தும் அன்Fபுஸகும் வ தரBப்Bபஸ்தும் வர்தBப்தும் வ கர்ரத்குமுல் அமானிய்யு ஹத்தா ஜா'அ அம்ருல் லாஹி வ கர்ரகும் Bபில்லாஹில் கரூர்
57:14. இவர்கள் (முஃமின்களைப் பார்த்து) நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று (அந்த முனாஃபிக்குகள்) சப்தமிட்டுக் கூறுவார்கள்; “மெய்தான்; எனினும் நீங்களே உங்களைச் சோதனையிலாழ்த்தி விட்டீர்கள்; (எங்கள் அழிவை) நீங்கள் எதிர் பார்த்தீர்கள்; (இந்நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள்; அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் (உங்களுடைய வீண் ஆசைகள் உங்களை மயக்கி விட்டன; அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன், அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்” என்றும் (முஃமின்கள்) கூறுவார்கள்.
57:15
57:15 فَالْيَوْمَ لَا يُؤْخَذُ مِنْكُمْ فِدْيَةٌ وَّلَا مِنَ الَّذِيْنَ كَفَرُوْا‌ؕ مَاْوٰٮكُمُ النَّارُ‌ؕ هِىَ مَوْلٰٮكُمْ‌ؕ وَبِئْسَ الْمَصِيْرُ‏
فَالْيَوْمَ இன்றைய தினம் لَا يُؤْخَذُ வாங்கப்படாது مِنْكُمْ உங்களிடமும் فِدْيَةٌ எவ்வித பரிகாரம் وَّلَا مِنَ الَّذِيْنَ كَفَرُوْا‌ؕ நிராகரிப்பாளர்களிடமும் مَاْوٰٮكُمُ உங்கள் தங்குமிடம் النَّارُ‌ؕ நரகம்தான் هِىَ அதுதான் مَوْلٰٮكُمْ‌ؕ உங்களுக்கு மிக ஏற்றமானது وَبِئْسَ الْمَصِيْرُ‏ மீளுமிடங்களில் அது மிகக் கெட்டது
57:15. Fபல் யவ்ம லா யு'கது மின்கும் Fபித்யது(ன்)வ் வலா மினல் லதீன கFபரூ; ம'வாகுமுன் னாரு ஹிய மவ் லாகும் வ Bபி'ஸல் மஸீர்
57:15. “ஆகவே, இன்று உங்களிடமிருந்தோ நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குரிய வேதனைக்குப் பதிலாக) எந்த வகையான நஷ்ட ஈடும் வாங்கப்பட மாட்டாது; உங்களுடைய தங்குமிடம் நரகம் தான்; அதுதான் உங்களுக்குத் துணை - அதுவோ சென்றடையும் இடங்களிலெல்லாம் மிகக் கெட்டதாகும்” (என்றுங் கூறப்படும்).
57:16
57:16 اَلَمْ يَاْنِ لِلَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْ تَخْشَعَ قُلُوْبُهُمْ لِذِكْرِ اللّٰهِ وَمَا نَزَلَ مِنَ الْحَـقِّۙ وَلَا يَكُوْنُوْا كَالَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْاَمَدُ فَقَسَتْ قُلُوْبُهُمْ‌ؕ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ‏
اَلَمْ يَاْنِ நேரம் வரவில்லையா? لِلَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களுக்கு اَنْ تَخْشَعَ நடுங்குவதற்கு قُلُوْبُهُمْ அவர்களின் உள்ளங்கள் لِذِكْرِ நினைவு கூர்வதாலும் اللّٰهِ அல்லாஹ்வை وَمَا இன்னும் எது نَزَلَ இறங்கியது مِنَ الْحَـقِّۙ சத்தியவேதத்தினாலும் وَلَا يَكُوْنُوْا அவர்கள் ஆகிவிட வேண்டாம் كَالَّذِيْنَ அவர்களைப் போல் اُوْتُوا الْكِتٰبَ வேதம் கொடுக்கப் பட்டார்கள் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் فَطَالَ عَلَيْهِمُ அவர்கள் மீது நீண்டு விட்டது الْاَمَدُ காலம் فَقَسَتْ ஆகவே இறுகிவிட்டன قُلُوْبُهُمْ‌ؕ அவர்களின் உள்ளங்கள் وَكَثِيْرٌ அதிகமானவர்கள் مِّنْهُمْ அவர்களில் فٰسِقُوْنَ‏ பாவிகள்
57:16. அலம் ய'னி லில் லதீன ஆமனூ அன் தக்-ஷ'அ குலூBபுஹும் லிதிக்ரில் லாஹி வமா னZஜல மினல் ஹக்கி வலா யகூனூ கல்லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லு Fபதால 'அலய்ஹிமுல் அமது Fபகஸத் குலூBபுஹும் வ கதீரும் மின்ஹும் Fபாஸிகூன்
57:16. ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்; (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன; அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர்.
57:17
57:17 اِعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يُحْىِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا‌ؕ قَدْ بَيَّنَّا لَكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
اِعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُحْىِ உயிர்ப்பிக்கின்றான் الْاَرْضَ பூமியை بَعْدَ مَوْتِهَا‌ؕ அது இறந்த பின்னர் قَدْ திட்டமாக بَيَّنَّا நாம் தெளிவுபடுத்துகின்றோம் لَكُمُ உங்களுக்கு الْاٰيٰتِ வசனங்களை لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
57:17. இஃலமூ அன்னல் லாஹ யுஹ்யில் அர்ள Bபஃத மவ்திஹா; கத் Bபய்யன்னா லகுமுல் ஆயாதி ல'அல்லகும் தஃகிலூன்
57:17. அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பூமியை அதன் இறப்பிற்குப்பின், உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் இவ்வசனங்களை உங்களுக்கு தெளிவாக விவரிக்கிறோம்.
57:18
57:18 اِنَّ الْمُصَّدِّقِيْنَ وَالْمُصَّدِّقٰتِ وَاَقْرَضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعَفُ لَهُمْ وَلَهُمْ اَجْرٌ كَرِيْمٌ‏
اِنَّ الْمُصَّدِّقِيْنَ நிச்சயமாக தர்மம் செய்த ஆண்கள் وَالْمُصَّدِّقٰتِ இன்னும் தர்மம் செய்த பெண்கள் وَاَقْرَضُوا இன்னும் கடன் கொடுத்தவர்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு قَرْضًا حَسَنًا அழகிய கடனாக يُّضٰعَفُ لَهُمْ அவர்களுக்கு பன்மடங்காக்கப்படும் وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு اَجْرٌ கூலி كَرِيْمٌ‏ கண்ணியமான(து)
57:18. இன்னல் முஸ்ஸத்திகீன வல் முஸ்ஸத்திகாதி வ அக்ரளுல் லாஹ கர்ளன் ஹஸ்ஸன(ன்)ய் யுளா'அFபு லஹும் வ லஹும் அஜ்ருன் கரீம்
57:18. நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.
57:19
57:19 وَالَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖۤ اُولٰٓٮِٕكَ هُمُ الصِّدِّيْقُوْنَۖ وَالشُّهَدَآءُ عِنْدَ رَبِّهِمْؕ لَهُمْ اَجْرُهُمْ وَنُوْرُهُمْ‌ؕ وَ الَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَاۤ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ
وَالَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் بِاللّٰهِ அல்லாஹ்வையும் وَرُسُلِهٖۤ இன்னும் அவனது தூதர்களையும் اُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الصِّدِّيْقُوْنَۖ மிக உண்மையானவர்கள் وَالشُّهَدَآءُ அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் عِنْدَ رَبِّهِمْؕ அவர்களின் இறைவனிடம் لَهُمْ அவர்களுக்கு اَجْرُهُمْ அவர்களின் கூலியும் وَنُوْرُهُمْ‌ؕ ( ஒளியும்இ) அவர்களின் وَ الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَكَذَّبُوْا இன்னும் பொய்ப்பித்தார்கள் بِاٰيٰتِنَاۤ நமது வசனங்களை اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் اَصْحٰبُ الْجَحِيْمِ‏ நரகவாசிகள்
57:19. வல்லதீன ஆமனூ Bபில்லாஹி வ ருஸுலிஹீ உலா'இக ஹுமுஸ் ஸித்தீகூன்; வஷ் ஷுஹதா'உ 'இன்த ரBப்Bபிஹிம் லஹும் அஜ்ருஹும் வ னூருஹும்; வல்லதீன கFபரூ வ கத்தBபூ Bபி ஆயாதினா உலா'இக அஸ் ஹாBபுல் ஜஹீம்
57:19. மேலும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள் தாம் தங்கள் இறைவன் முன் உண்மையாளர்களாகவும், உயிர் தியாகிகளாகவும் இருப்பார்கள்; அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலியும், (நேர்வழி காட்டும்) பேரொளியும் உண்டு; எவர்கள் நிராகரித்துக் கொண்டும், நம் வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள்தான்.  
57:20
57:20 اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِيْنَةٌ وَّتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ‌ؕ كَمَثَلِ غَيْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَرٰٮهُ مُصْفَرًّا ثُمَّ يَكُوْنُ حُطٰمًا‌ؕ وَفِى الْاٰخِرَةِ عَذَابٌ شَدِيْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ‌ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏
اِعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا உலக வாழ்க்கை எல்லாம் لَعِبٌ விளையாட்டு(ம்) وَّلَهْوٌ வேடிக்கையும் وَّزِيْنَةٌ அலங்காரமும் وَّتَفَاخُرٌۢ பெருமை அடிப்பதும் بَيْنَكُمْ உங்களுக்கு மத்தியில் وَتَكَاثُرٌ அதிகத்தின் போட்டியும்தான் فِى الْاَمْوَالِ செல்வங்களிலும் وَالْاَوْلَادِ‌ؕ பிள்ளைகளிலும் كَمَثَلِ போல்தான் غَيْثٍ ஒரு மழையை اَعْجَبَ கவர்ந்தது الْكُفَّارَ விவசாயிகளை نَبَاتُهٗ அதன் விளைச்சல் ثُمَّ பிறகு يَهِيْجُ அது காய்ந்து விடுகிறது فَتَرٰٮهُ அதை நீர் பார்க்கிறீர் مُصْفَرًّا மஞ்சளாக ثُمَّ பிறகு يَكُوْنُ அது ஆகிவிடுகிறது حُطٰمًا‌ؕ குப்பையாக وَفِى الْاٰخِرَةِ மறுமையில் عَذَابٌ வேதனை(யும்) شَدِيْدٌ ۙ கடுமையான(து) وَّمَغْفِرَةٌ மன்னிப்பும் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் புறத்தில் இருந்து وَرِضْوَانٌ‌ؕ திருப்பொருத்தமும் وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ உலக வாழ்க்கை இல்லை اِلَّا مَتَاعُ இன்பமே தவிர الْغُرُوْرِ‏ மயக்கக் கூடிய(து)
57:20. இஃலமூ அன்னமல் ஹயா துத் துன்யா ல'இBபு(ன்)வ் வ லஹ்வு(ன்)வ் வ Zஜீனது(ன்)வ் வ தFபாகுரும் Bபய்னகும் வ தகாதுருன் Fபில் அம்வாலி வல் அவ்லாத், கமதலி கய்தின் அஃஜBபல் குFப்Fபார னBபாதுஹூ தும்ம யஹீஜு Fபதராஹு முஸ்Fபாரன் தும்ம யகூனு ஹுதாமா; வ Fபில் ஆகிரதி 'அதாBபுன் ஷதீது(ன்)வ் வ மக் Fபிரதும் மினல் லாஹி வ ரிள்வான்; வ மல் ஹய்யா துத்துன் யா இல்லா மதா'உல் குரூர்
57:20. அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.
57:21
57:21 سَابِقُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَآءِ وَ الْاَرْضِۙ اُعِدَّتْ لِلَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ‌ؕ ذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏
سَابِقُوْۤا முந்துங்கள் اِلٰى مَغْفِرَةٍ மன்னிப்பின் பக்கமும் مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனின் وَجَنَّةٍ இன்னும் சொர்க்கத்தின் பக்கமும் عَرْضُهَا அதன் அகலம் كَعَرْضِ அகலத்தைப் போல السَّمَآءِ வானம் وَ الْاَرْضِۙ இன்னும் பூமியின் اُعِدَّتْ அது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது لِلَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களுக்காக بِاللّٰهِ அல்லாஹ்வையும் وَرُسُلِهٖ‌ؕ அவனது தூதரையும் ذٰلِكَ அது فَضْلُ சிறப்பாகும் اللّٰهِ அல்லாஹ்வின் يُؤْتِيْهِ அதை அவன் கொடுக்கின்றான் مَنْ يَّشَآءُ‌ؕ அவன் நாடுகின்றவர்களுக்கு وَاللّٰهُ அல்லாஹ் ذُو الْفَضْلِ சிறப்புடையவன் الْعَظِيْمِ‏ மகத்தான
57:21. ஸாBபிகூ இலா மக்Fபிரதிம் மிர் ரBப்Bபிகும் வ ஜன்னதின் 'அர்ளுஹா க-'அர்ளிஸ் ஸமா'இ வல் அர்ளி உ'இத்தத் லில்லதீன ஆமனூ Bபில்லாஹி வ ருஸுலிஹ்; தாலிக Fபள்லுல் லாஹி யு'தீஹி ம(ன்)ய் யஷா'; வல் லாஹு துல் Fபள்லில் 'அளீம்
57:21. உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.
57:22
57:22 مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ فِى الْاَرْضِ وَلَا فِىْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِىْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْـرَاَهَا ؕ اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌۚ  ۖ‏
مَاۤ اَصَابَ ஏற்படுவதில்லை مِنْ مُّصِيْبَةٍ ஒரு சோதனை فِى الْاَرْضِ பூமியிலும் وَلَا فِىْۤ اَنْفُسِكُمْ உங்களிலும் اِلَّا فِىْ كِتٰبٍ தவிர/விதியில்இருந்தே مِّنْ قَبْلِ முன்னர் اَنْ نَّبْـرَاَهَا ؕ அதை நாம் உருவாக்குவதற்கு اِنَّ நிச்சயமாக ذٰ لِكَ இது عَلَى اللّٰهِ அல்லாஹ்விற்கு يَسِيْرٌۚ மிக எளிதானதாகும்
57:22. மா அஸாBப மின் முஸீBபதின் Fபில் அர்ளி வலா Fபீ அன்Fபுஸிகும் இல்லா Fபீ கிதாBபிம் மின் கBப்லி அன் னBப்ர அஹா; இன்னா தாலிக 'அலல் லாஹி யஸீர்
57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
57:23
57:23 لِّـكَيْلَا تَاْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰٮكُمْ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِۙ‏
لِّـكَيْلَا تَاْسَوْا ஏனெனில், நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காக(வும்) عَلٰى مَا فَاتَكُمْ உங்களுக்கு தவறி விட்டதற்காக وَلَا تَفْرَحُوْا நீங்கள் பெருமைப்படாமல் இருப்பதற்காகவும் بِمَاۤ اٰتٰٮكُمْ‌ؕ وَاللّٰهُ அவன் உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு/அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் كُلَّ எல்லோரையும் مُخْتَالٍ அகம்பாவக்காரர்கள் فَخُوْرِۙ‏ பெருமையடிப்பவர்கள்
57:23. லிகய்லா த'ஸவ் 'அலா மா Fபாதகும் வலா தFப்ரஹூ Bபிமா ஆதாகும்; வல்லாஹு லா யுஹிBப்Bபு குல்ல முக்தாலின் Fபகூர்
57:23. உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
57:24
57:24 اۨلَّذِيْنَ يَبْخَلُوْنَ وَيَاْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ‌ؕ وَمَنْ يَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ‏
اۨلَّذِيْنَ எவர்கள் يَبْخَلُوْنَ கருமித்தனம் காட்டுகிறார்கள் وَيَاْمُرُوْنَ இன்னும் ஏவுகிறார்கள் النَّاسَ மக்களுக்கு بِالْبُخْلِ‌ؕ கருமித்தனத்தை وَمَنْ யார் يَّتَوَلَّ விலகுவாரோ فَاِنَّ اللّٰهَ هُوَ நிச்சயமாக அல்லாஹ்தான் الْغَنِىُّ மகா நிறைவானவன் الْحَمِيْدُ‏ மகா புகழாளன்
57:24. அல்லதீன யBப்கலூன வ யாமுரூனன் னாஸ Bபில் Bபுக்ல்; வ ம(ன்)ய் யதவல்ல Fப இன்னல் லாஹ ஹுவல் கனிய்யுல் ஹமீத்
57:24. எவர்கள் உலோபித்தனம் செய்து உலோபித்தனம் செய்யுமாறு மனிதர்களையும் ஏவுகிறார்களோ; எவர் (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) புறக்கணிக்கிறாரோ - (இவர்களே நஷ்டவாளிகள்.) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன்.
57:25
57:25 لَـقَدْ اَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنٰتِ وَاَنْزَلْنَا مَعَهُمُ الْكِتٰبَ وَالْمِيْزَانَ لِيَقُوْمَ النَّاسُ بِالْقِسْطِ‌ۚ وَاَنْزَلْنَا الْحَـدِيْدَ فِيْهِ بَاْسٌ شَدِيْدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَـعْلَمَ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ وَ رُسُلَهٗ بِالْغَيْبِ‌ ؕ اِنَّ اللّٰهَ قَوِىٌّ عَزِيْزٌ
لَـقَدْ اَرْسَلْنَا திட்டவட்டமாக அனுப்பினோம் رُسُلَنَا நமது தூதர்களை بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு وَاَنْزَلْنَا நாம் இறக்கினோம் مَعَهُمُ அவர்களுடன் الْكِتٰبَ வேதத்தை(யும்) وَالْمِيْزَانَ தராசையும் لِيَقُوْمَ நிலைநிறுத்துவதற்காக النَّاسُ மக்கள் بِالْقِسْطِ‌ۚ நீதத்தை وَاَنْزَلْنَا இன்னும் இறக்கினோம் الْحَـدِيْدَ இரும்பையும் فِيْهِ அதில் بَاْسٌ வலிமை(யும்) شَدِيْدٌ கடுமையான(து) وَّمَنَافِعُ இன்னும் பல பலன்களும் لِلنَّاسِ மக்களுக்கு وَلِيَـعْلَمَ அறிவதற்காகவும் اللّٰهُ அல்லாஹ் مَنْ எவர் يَّنْصُرُهٗ அவனுக்கு உதவி செய்கின்றார் وَ رُسُلَهٗ அவனது தூதருக்கும் بِالْغَيْبِ‌ ؕ மறைவில் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் قَوِىٌّ மிக வலிமையாளன் عَزِيْزٌ‏ மிகைத்தவன்
57:25. லகத் அர்ஸல்னா ருஸுலனா Bபில்Bபய்யினாதி வ அன்Zஜல்னா ம'அஹுமுல் கிதாBப வல் மீZஜான லியகூமன் னாஸு Bபில்கிஸ்த், வ அன்Zஜல்னல் ஹதீத Fபீஹி Bபா'ஸுன் ஷதீது(ன்)வ் வ மனாFபி'உ லின்னாஸி வ லியஃலமல் லாஹு ம(ன்)ய் யன்ஸுருஹூ வ ருஸுலஹூ Bபில்கய்Bப்; இன்னல் லாஹ கவிய்யுன் 'அZஜீZஜ்
57:25. நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் நாம் இறக்கினோம்; அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாக உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்.  
57:26
57:26 وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا وَّ اِبْرٰهِيْمَ وَجَعَلْنَا فِىْ ذُرِّيَّتِهِمَا النُّبُوَّةَ وَالْـكِتٰبَ‌ فَمِنْهُمْ مُّهْتَدٍ‌ۚ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் نُوْحًا நூஹை(யும்) وَّ اِبْرٰهِيْمَ இப்ராஹீமையும் وَجَعَلْنَا இன்னும் நாம் ஆக்கினோம் فِىْ ذُرِّيَّتِهِمَا அ(வ்விரு)வர்களின் சந்ததியில் النُّبُوَّةَ நபித்துவத்தை(யும்) وَالْـكِتٰبَ‌ வேதங்களையும் فَمِنْهُمْ அவர்களில் مُّهْتَدٍ‌ۚ நேர்வழி பெற்றவர்களும் وَكَثِيْرٌ இன்னும் அதிகமானவர்கள் مِّنْهُمْ அவர்களில் فٰسِقُوْنَ‏ பாவிகள்
57:26. வ லகத் அர்ஸல்னா னூஹ(ன்)வ் வ இBப்ராஹீம வ ஜ'அல்னா Fபீ துர்ரிய்யதிஹிமன் னுBபுவ்வத வல் கிதாBப Fபமின்ஹும் முஹ்தத்; வ கதீரும் மின்ஹும் Fபாஸிகூன்
57:26. அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.
57:27
57:27 ثُمَّ قَفَّيْنَا عَلٰٓى اٰثَارِهِمْ بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيْسَى ابْنِ مَرْيَمَ وَاٰتَيْنٰهُ الْاِنْجِيْلَ ۙ وَجَعَلْنَا فِىْ قُلُوْبِ الَّذِيْنَ اتَّبَعُوْهُ رَاْفَةً وَّرَحْمَةً  ؕ وَرَهْبَانِيَّةَ اۨبْتَدَعُوْهَا مَا كَتَبْنٰهَا عَلَيْهِمْ اِلَّا ابْتِغَآءَ رِضْوَانِ اللّٰهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا‌ ۚ فَاٰتَيْنَا الَّذِيْنَ اٰمَنُوْا مِنْهُمْ اَجْرَهُمْ‌ۚ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ‏
ثُمَّ பிறகு قَفَّيْنَا தொடர்ந்து அனுப்பினோம் عَلٰٓى اٰثَارِهِمْ அவர்களின் அடிச்சுவடுகளில் بِرُسُلِنَا நமது தூதர்களை وَقَفَّيْنَا நாம் பின்னால் அனுப்பினோம் بِعِيْسَى ஈஸாவை ابْنِ مَرْيَمَ மர்யமுடைய மகன் وَاٰتَيْنٰهُ அவருக்கு கொடுத்தோம் الْاِنْجِيْلَ ۙ இன்ஜீலை وَجَعَلْنَا ஏற்படுத்தினோம் فِىْ قُلُوْبِ உள்ளங்களில் الَّذِيْنَ எவர்கள் اتَّبَعُوْهُ அவரைப் பின்பற்றினார்கள் رَاْفَةً இரக்கத்தை(யும்) وَّرَحْمَةً  ؕ கருணையையும் وَرَهْبَانِيَّةَ இன்னும் துறவரத்தை اۨبْتَدَعُوْهَا புதுமையாக ஏற்படுத்திக் கொண்டனர்/அதை مَا كَتَبْنٰهَا நாம் அதை கடமையாக்கவில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது اِلَّا ابْتِغَآءَ நாடியே தவிர رِضْوَانِ பொருத்தத்தை اللّٰهِ அல்லாஹ்வின் فَمَا رَعَوْهَا ஆனால் அதை அவர்கள் பேணவில்லை حَقَّ رِعَايَتِهَا‌ ۚ அதை பேணவேண்டிய முறையில் فَاٰتَيْنَا கொடுப்போம் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொள்வார்களோ مِنْهُمْ அவர்களில் இருந்து اَجْرَهُمْ‌ۚ அவர்களின் கூலியை وَكَثِيْرٌ இன்னும் அதிகமானவர்கள் مِّنْهُمْ அவர்களில் فٰسِقُوْنَ‏ பாவிகள்
57:27. தும்ம கFப்Fபய்னா 'அலா ஆதாரிஹிம் Bபி ருஸுலினா வ கFப்Fபய்னா Bபி 'ஈஸBப் னி மர்யம வ ஆதய்னாஹுல் இன்ஜீல வ ஜ'அல்னா Fபீ குலூBபில் லதீனத் தBப'ஊஹு ர'Fபத(ன்)வ் வ ரஹ்மத(ன்)வ் ரஹ்Bபானிய்யதன் இBப்தத'ஊஹ மா கதBப்னாஹா 'அலய்ஹிம் இல்லBப் திகா'அ ரிள்வானில் லாஹி Fபமா ர'அவ்ஹா ஹக்க ரி'ஆயதிஹா; Fப ஆதய்னல் லதீன ஆமனூ மின்ஹும் அஜ்ரஹும்; வ கதீரும் மின்ஹும் Fபாஸிகூன்
57:27. பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேனவில்லை - அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.
57:28
57:28 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَاٰمِنُوْا بِرَسُوْلِهٖ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِنْ رَّحْمَتِهٖ وَيَجْعَلْ لَّـكُمْ نُوْرًا تَمْشُوْنَ بِهٖ وَيَغْفِرْ لَـكُمْ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ۙۚ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே! اتَّقُوا பயந்து கொள்ளுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاٰمِنُوْا இன்னும் நம்பிக்கை கொள்ளுங்கள் بِرَسُوْلِهٖ அவனது தூதரை يُؤْتِكُمْ உங்களுக்கு கொடுப்பான் كِفْلَيْنِ இரு மடங்கு பங்குகளை مِنْ رَّحْمَتِهٖ தனது கருணையிலிருந்து وَيَجْعَلْ இன்னும் ஏற்படுத்துவான் لَّـكُمْ உங்களுக்கு نُوْرًا ஒளியை تَمْشُوْنَ நீங்கள் நடந்து செல்வீர்கள் بِهٖ அதன் மூலம் وَيَغْفِرْ இன்னும் மன்னிப்பான் لَـكُمْ‌ؕ உங்களை وَاللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ ۙۚ‏ மகா கருணையாளன்
57:28. யா அய்யுஹல் லதீன ஆமானுத் தகுல்லாஹ வ ஆமினூ Bபி ரஸூலிஹீ யு'திகும் கிFப்லய்னி மிர் ரஹ்மதிஹீ வ யஜ்'அல் லகும் னூரன் தம்ஷூன Bபிஹீ வ யக்Fபிர் லகும்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
57:28. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; அவன்தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான்; அதைக் கொண்டு நீங்கள் (நேர்வழி) நடப்பீர்கள்; இன்னும், உங்களுக்காக (உங்கள் குற்றங்களையும்) அவன் மன்னிப்பான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபை உடையவன்.
57:29
57:29 لِّـئَلَّا يَعْلَمَ اَهْلُ الْكِتٰبِ اَلَّا يَقْدِرُوْنَ عَلٰى شَىْءٍ مِّنْ فَضْلِ اللّٰهِ‌ وَاَنَّ الْفَضْلَ بِيَدِ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ ذُوْ الْفَضْلِ الْعَظِيْمِ
لِّـئَلَّا يَعْلَمَ ஏனெனில், அறிந்து கொள்வதற்காக اَهْلُ الْكِتٰبِ வேதக்காரர்கள் اَلَّا يَقْدِرُوْنَ ஆற்றல் பெற மாட்டார்கள் என்பதையும் عَلٰى شَىْءٍ எதன் மீதும் مِّنْ فَضْلِ அருளில் اللّٰهِ‌ அல்லாஹ்வின் وَاَنَّ நிச்சயமாக الْفَضْلَ சிறப்பு بِيَدِ கரத்தில் اللّٰهِ அல்லாஹ்வின் يُؤْتِيْهِ அதை கொடுக்கின்றான் مَنْ يَّشَآءُ‌ ؕ அவன் நாடுகின்றவர்களுக்கு وَاللّٰهُ அல்லாஹ் ذُوْ الْفَضْلِ சிறப்புடையவன் الْعَظِيْمِ‏ மகத்தான(து)
57:29. லி'அல்ல யஃலம அஹ்லுல் கிதாBபி அல்லா யக்திரூன 'அலா ஷய்'இன் மின் Fபள்லில் லாஹி வ அன்னல் Fபள்ல Bபி யதில் லாஹி யு'தீஹி ம(ன்)ய் யஷா'; வல்லாஹு துல் Fபளிலில் 'அளீம்
57:29. அல்லாஹ்வுடைய அருள் கொடையிலிருந்து யாதொன்றையும் பெறத் தாங்கள் சக்தியுடையவர்களல்லர் என்று வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இவற்றை அவன் உங்களுக்கு அறிவிக்கின்றான்); அன்றியும் அருள் கொடையெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றது; தான் விரும்பியவர்களுக்கு அதனை அவன் அளிக்கின்றான் - அல்லாஹ்வே மகத்தான கிருபையுடையவன்.