99. ஸூரத்துஜ் ஜில்ஜால்(அதிர்ச்சி)
மக்கீ, வசனங்கள்: 8

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
99:1
99:1 اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۙ‏
اِذَا زُلْزِلَتِ நடுங்க வைக்கப்படும் போது الْاَرْضُ பூமி زِلْزَالَهَا ۙ‏ அதன் நிலநடுக்கத்தால்
99:1. இதா Zஜுல் Zஜிலதில் அர்ளு Zஜில் Zஜாலஹா
99:1. பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது-
99:2
99:2 وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۙ‏
وَاَخْرَجَتِ இன்னும் எறிந்துவிடும் الْاَرْضُ பூமி اَثْقَالَهَا ۙ‏ அதன் சுமைகளை
99:2. வ அக் ரஜதில் அர்ளு அத்காலஹா
99:2. இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
99:3
99:3 وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا‌ ۚ‏
وَقَالَ இன்னும் கூறுவான் الْاِنْسَانُ மனிதன் مَا لَهَا‌ ۚ‏ இதற்கென்ன
99:3. வ காலல் இன்ஸானு ம லஹா
99:3. “அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும் போது-
99:4
99:4 يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۙ‏
يَوْمَٮِٕذٍ அந்நாளில் تُحَدِّثُ அறிவிக்கும் اَخْبَارَهَا ۙ‏ அது தன் செய்திகளை
99:4. யவ்மா இதின் துஹத்திது அக்Bபாரஹா
99:4. அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
99:5
99:5 بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَا ؕ‏
بِاَنَّ அதாவது நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் اَوْحٰى لَهَا ؕ‏ தனக்கு கட்டளையிட்டான்
99:5. Bபி-அன்ன ரBப்Bபக அவ்ஹா லஹா
99:5. (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறிவித்ததனால்.
99:6
99:6 يَوْمَٮِٕذٍ يَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا  ۙ لِّيُرَوْا اَعْمَالَهُمْؕ‏
يَوْمَٮِٕذٍ அந்நாளில் يَّصْدُرُ புறப்படுவார்கள் النَّاسُ மக்கள் اَشْتَاتًا  ۙ பலபிரிவுகளாக لِّيُرَوْا அவர்கள் காண்பதற்காக اَعْمَالَهُمْؕ‏ அவர்களின் செயல்களை
99:6. யவ்ம இதி(ன்)ய் யஸ் துருன் னாஸு அஷ் ததல் லியுரவ் அஃமாலஹும்
99:6. அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
99:7
99:7 فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ‏
فَمَنْ ஆகவே, யார் يَّعْمَلْ செய்வாரோ مِثْقَالَ அளவு ذَرَّةٍ ஓர் அணு خَيْرًا நன்மை يَّرَهٗ ؕ‏ அதைப் பார்ப்பார்
99:7. Fபமய்ய் யஃமல் மித்கல தர்ரதின் கய் ரய்ய்-யரஹ்
99:7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
99:8
99:8 وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ
وَمَنْ இன்னும் யார் يَّعْمَلْ செய்வாரோ مِثْقَالَ அளவு ذَرَّةٍ ஓர் அணு شَرًّا தீமை يَّرَهٗ‏ அதைப் பார்ப்பார்
99:8. வ மய்ய்-யஃமல் மித்கல தர்ரதின் ஷர்ரய்ய்-யரஹ்
99:8. அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.