17. பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)
மக்கீ, வசனங்கள்: 111

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
17:1
17:1 سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌ ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏
سُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் الَّذِىْۤ எத்தகையவன் اَسْرٰى அழைத்துச்சென்றான் بِعَبْدِهٖ தன் அடிமையை لَيْلًا இரவில் مِّنَ இருந்து الْمَسْجِدِ மஸ்ஜிது الْحَـرَامِ புனிதமானது اِلَى வரை الْمَسْجِدِ அல் மஸ்ஜிது الْاَقْصَا அல் அக்ஸா الَّذِىْ எது بٰرَكْنَا அருள் வளம் புரிந்தோம் حَوْلَهٗ அதைச் சுற்றி لِنُرِيَهٗ நாம் காண்பிப்பதற்காக/அவருக்கு مِنْ اٰيٰتِنَا‌ ؕ நம் அத்தாட்சிகளில் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْبَصِيْرُ‏ உற்று நோக்குபவன்
17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற மஸ்ஜிதிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். அதைச்சுற்றி நாம் அருள் புரிந்திருக்கிறோம். நம் அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்). அவன்தான் நிச்சயமாக நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
17:1. மிகத் தூய்மையானவன்; தன் அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன்! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஸ்ஜித் வரையில்! அதன் சுற்றுப்புறங்களை அவன் அருள்வளம் மிக்கதாய் ஆக்கினான். எதற்காக அழைத்துச் சென்றானெனில், தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காண்பிப்பதற்காக! உண்மையில் அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
17:1. தன் அடியாரை (கஅபாவாகிய) சிறப்புப் பெற்ற பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப் பரிசுத்தமானவன், (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால் நாம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கிறோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உமதிரட்சகனாகிய) அவனே செவியேற்கிறவன், பார்க்கிறவன்.
17:2
17:2 وَاٰتَيْنَا مُوْسَى الْـكِتٰبَ وَ جَعَلْنٰهُ هُدًى لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَ اَلَّا تَتَّخِذُوْا مِنْ دُوْنِىْ وَكِيْلًا ؕ‏
وَاٰتَيْنَا கொடுத்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْـكِتٰبَ வேதத்தை جَعَلْنٰهُ அதை هُدًى நேர்வழி காட்டியாக لِّبَنِىْۤ சந்ததிகளுக்கு اِسْرَآءِيْلَ இஸ்ராயீலின் اَلَّا تَتَّخِذُوْا நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று مِنْ دُوْنِىْ என்னைத் தவிர وَكِيْلًا ؕ‏ பொறுப்பாளனாக (பாதுகாவலனாக)
17:2. இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, “என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்).
17:2. நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அதை ஒரு வழிகாட்டியாக அமைத்து ‘‘நீங்கள் என்னைத் தவிர (மற்ற எவரையும் உங்களுக்கு) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளக்கூடாது'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டோம்.
17:2. (இதற்கு முன்பு) நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கியிருந்தோம். மேலும், அதனை இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு வழிகாட்டக் கூடியதாக அமைத்தோம்; “நீங்கள் என்னைத் தவிர வேறு யாரையும் உங்களின் பொறுப்பாளனாய் ஆக்கிக்கொள்ளக்கூடாது” எனும் அறிவுறுத்தலுடன்!
17:2. மேலும், மூஸாவிற்கு வேதத்ததையும் நாம் கொடுத்தோம், அதனை இஸ்ராயீலின் மக்களுக்கு வழிகாட்டியாகவும் ஆக்கி, “நீங்கள் என்னைத் தவிர (மற்றெவரையும் உங்கள் செயல்களுக்கு) பொறுப்பாளராக எடுத்துக் கொள்ள வேண்டாம்” (என்றும் கட்டளையிட்டோம்.)
17:3
17:3 ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ‌ؕ اِنَّهٗ كَانَ عَبْدًا شَكُوْرًا‏
ذُرِّيَّةَ சந்ததிகளே مَنْ எவர்கள் حَمَلْنَا ஏற்றினோம் مَعَ نُوْحٍ‌ؕ நூஹூடன் اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருந்தார் عَبْدًا ஓர் அடியாராக شَكُوْرًا‏ அதிகம் நன்றி செலுத்துகிறவர்
17:3. நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார்.
17:3. நூஹ்வுடன் நாம் கப்பலில் ஏற்றி பாதுகாத்தவர்களுடைய சந்ததிகளே! அவர் நிச்சயமாக (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார். (ஆகவே, அவர்களின் வழித்தோன்றல்களாகிய நீங்களும் எனக்கு நன்றி செலுத்துங்கள்.)
17:3. நீங்கள் நூஹுடன் கப்பலில் நாம் ஏற்றியிருந்த மக்களின் வழித்தோன்றல்கள் ஆவீர்கள். திண்ணமாக, நூஹ் நன்றியுள்ள ஓர் அடியாராகத் திகழ்ந்தார்.
17:3. (நபி) நூஹுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் காப்பாற்றிக்) கொண்டவர்களின் சந்ததிகளே! நிச்சயமாக அவர் (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார்.
17:4
17:4 وَقَضَيْنَاۤ اِلٰى بَنِىْۤ اِسْرَاۤءِيْلَ فِى الْكِتٰبِ لَـتُفْسِدُنَّ فِى الْاَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيْرًا‏
وَقَضَيْنَاۤ அறிவித்தோம் اِلٰى க்கு بَنِىْۤ சந்ததிகள் اِسْرَاۤءِيْلَ இஸ்ராயீலின் فِى الْكِتٰبِ வேதத்தில் لَـتُفْسِدُنَّ நிச்சயம் விஷமம் செய்வீர்கள் فِى الْاَرْضِ பூமியில் مَرَّتَيْنِ இரு முறை وَلَتَعْلُنَّ இன்னும் நிச்சயமாக பெருமைகொள்வீர்கள் عُلُوًّا பெருமை كَبِيْرًا‏ பெரியது
17:4. நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம்.
17:4. இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நீங்கள் பூமியில் இரண்டு முறை விஷமம் செய்வீர்கள் என்றும், நிச்சயமாக நீங்கள் பெரும் மேன்மைகளை அடை(ந்து கர்வம் கொண்டு அநியாயம் செய்)வீர்கள்! என்றும் (உங்களுக்கு அளித்த) வேதத்தில் நாம் முடிவு செய்துள்ளோம்.
17:4. பிறகு, நாம் நமது வேதத்தில் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு ‘திண்ணமாக நீங்கள் பூமியில் இரு தடவை பெரும் குழப்பம் விளைவிப்பீர்கள்’ என்றும் ‘பெரிதும் அக்கிரமம் புரிவீர்கள்’ என்றும் முன்பே அறிவித்திருந்தோம்.
17:4. இஸ்ராயீலின் மக்களுக்கு, “நிச்சயமாக நீங்கள் இரு தடவை பூமியில் குழப்பம் செய்வீர்கள்” என்றும், நிச்சயமாக நீங்கள் (அகம்பாவத்துடன் அக்கிரமங்கள் செய்து) பெரும் உயர்வாக உயர்வீர்கள்” என்றும் (உங்களுக்களிக்கப்பட்ட) வேதத்தில் நாம் முடிவு செய்திருந்தோம்.
17:5
17:5 فَاِذَا جَآءَ وَعْدُ اُوْلٰٮهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَّنَاۤ اُولِىْ بَاْسٍ شَدِيْدٍ فَجَاسُوْا خِلٰلَ الدِّيَارِ ‌ؕ وَكَانَ وَعْدًا مَّفْعُوْلًا‏
فَاِذَا جَآءَ வரும்போது وَعْدُ வாக்கு اُوْلٰٮهُمَا அவ்விரண்டில் முதல் بَعَثْنَا அனுப்பினோம் عَلَيْكُمْ உங்கள் மீது عِبَادًا அடியார்களை لَّنَاۤ நமக்குரிய اُولِىْ உடையவர்கள் بَاْسٍ பலம் شَدِيْدٍ கடுமையானது فَجَاسُوْا ஊடுருவிச் சென்றனர் خِلٰلَ நடுவில் الدِّيَارِ ؕ வீடுகளுக்கு وَكَانَ இருந்தது وَعْدًا ஒரு வாக்காக مَّفْعُوْلًا‏ நிறைவேற்றப்பட்டது
17:5. எனவே, அவ்விரண்டில் முதலாவது வாக்குறுதி (நிறைவேறும் காலம்) வந்த போது, உங்களுக்கு எதிராக (போரில்) கொடிய வலிமையுடைய நம் அடியார்களை ஏவி விட்டோம்; அவர்கள் உங்கள் வீடுகளில் புகுந்து (உங்களையும். உங்கள் பொருள்களையும்) தேடி (அழித்து) விட்டார்கள்; (இவ்வாறு முதல்) வாக்குறுதி நிறைவேறியது.
17:5. அவ்விரண்டில் முதல் தவணை வந்த சமயத்தில் (நீங்கள் செய்து கொண்டிருந்த குற்றங்களுக்குத் தண்டனையாக) நாம் படைத்த இரக்கமற்ற பெரும் பலவான்களாகிய மனிதர்களை உங்கள் மீது ஏவிவிட்டோம். அவர்கள் (பைத்துல் முகத்தஸிலிருந்த உங்கள்) வீடுகளுக்குள் ஊடுருவிச் சென்று (தங்கள் கைக்குக் கிட்டியதையெல்லாம் அழித்து நாசமாக்கி) விட்டார்கள். (அதனால் பைத்துல் முகத்தஸிலிருந்த ஆலயமும், அவ்வூரும் அழிந்து நாசமாயின. இவ்வாறு நமது முந்திய) வாக்குறுதி நிறை வேறியது.
17:5. இவ்வாறு குழப்பத்திற்கான முதல் சந்தர்ப்பம் வந்தபோது (இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே!) மிகவும் சக்தி வாய்ந்த நம்முடைய அடிமைகளை உங்களுக்கு எதிராக, நாம் எழச் செய்தோம்; அவர்கள் உங்கள் நாட்டில் ஊடுருவி, எல்லாத் திசைகளிலும் பகுதிகளிலும் பரவினார்கள். இது நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வாக்குறுதியாகவே இருந்தது.
17:5. எனவே, அவ்விரண்டில் முதல் வாக்குறுதி வந்த சமயத்தில் நம் அடியார்களில் பெரும் பலசாலிக(ளாகிய மனிதர்க)ளை உங்களுக்கு எதிராக (உங்கள் மீது ஏவி) அனுப்பினோம், அவர்கள் (பைத்துல் முகத்தஸிலிருந்த உங்கள்) வீடுகளுக்குள் ஊடுருவிச் சென்று விட்டார்கள், அது நிறைவேற்றப்பட்ட வாக்காகவும் இருந்தது.
17:6
17:6 ثُمَّ رَدَدْنَا لَـكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَاَمْدَدْنٰـكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَجَعَلْنٰكُمْ اَكْثَرَ نَفِيْرًا‏
ثُمَّ பிறகு رَدَدْنَا திருப்பினோம் لَـكُمُ உங்களுக்குசாதகமாக الْكَرَّةَ தாக்குதலை عَلَيْهِمْ அவர்களுக்கு எதிராக وَاَمْدَدْنٰـكُمْ இன்னும் உதவினோம்/உங்களுக்கு بِاَمْوَالٍ செல்வங்களைக் கொண்டு وَّبَنِيْنَ இன்னும் ஆண்பிள்ளைகள் وَجَعَلْنٰكُمْ இன்னும் ஆக்கினோம்/ உங்களை اَكْثَرَ அதிகமானவர்களாக نَفِيْرًا‏ எண்ணிக்கையில்
17:6. பின்னர் அவர்கள் மீது வெற்றியடையும் வாய்ப்பை உங்கள்பால் திருப்பினோம்; ஏராளமான பொருள்களையும், புதல்வர்களையும் (தந்தது) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.
17:6. பின்னர் அவர்களுக்கு எதிராக உங்களுக்கு சாதகமாக காலச் சக்கரத்தைத் திருப்பி (உங்களுக்கு வெற்றியைக் கொடுத்து) ஏராளமான பொருள்களையும் ஆண் மக்களையும் கொண்டு நாம் உங்களுக்கு உதவி புரிந்து, உங்களைப் பெரும் கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.
17:6. இதன் பின்னர், அவர்களை வெற்றி கொள்ளும் வாய்ப்பினை உங்களுக்கு நாம் வழங்கினோம். மேலும் பொருள் செல்வங்கள், மக்கள் செல்வங்கள் மூலம் உங்களுக்கு உதவி செய்தோம். உங்கள் எண்ணிக்கையை முன்பைவிட பெருகச் செய்தோம்.
17:6. பின்னர், அவர்கள் மீது நீங்கள் வெற்றி கொள்ளும் வாய்ப்பை உங்கள் வகையில் திருப்பினோம், (ஏராளமான) பொருட்களையும், ஆண் மக்களையும் (நல்கியது) கொண்டு நாம் உங்களுக்கு உதவி புரிந்தோம், மேலும், உங்களை எண்ணிக்கையில் (அவர்களை விட) மிக அதிகமானவர்களாக நாம் ஆக்கினோம்.
17:7
17:7 اِنْ اَحْسَنْتُمْ اَحْسَنْتُمْ لِاَنْفُسِكُم ۫وَ اِنْ اَسَاْتُمْ فَلَهَا ؕفَاِذَاجَآءَوَعْدُالْاٰ خِرَةِلِیَسُوْٓءٗاوُجُوْهَكُمْ وَ لِیَدْخُلُواالْمَسْجِدَكَمَادَخَلُوْهُ اَوَّلَ مَرَّةٍ وَّ لِیُتَبِّرُوْامَاعَلَوْاتَتْبِیْرًا
اِنْ اَحْسَنْتُمْ நீங்கள் நன்மை செய்தால் اَحْسَنْتُمْ நன்மை செய்தீர்கள் لِاَنْفُسِكُمْ‌ உங்கள் ஆன்மாக்களுக்குத்தான் وَاِنْ اَسَاْتُمْ நீங்கள் தீமை செய்தால் فَلَهَا ؕ அதுவும் அவற்றுக்கே فَاِذَا جَآءَ வந்த போது الْاٰخِرَةِ மறு لِیَسُوْٓءٗا அவர்கள் கெடுப்பதற்கு وُجُوْهَكُمْ உங்கள் முகங்களை وَلِيَدْخُلُوا இன்னும் அவர்கள் நுழைவதற்கு الْمَسْجِدَ மஸ்ஜிதில் كَمَا அவர்கள் நுழைந்தது போன்று دَخَلُوْهُ அதில் اَوَّلَ முதல் مَرَّةٍ முறை وَّلِيُتَبِّرُوْا இன்னும் அவர்கள் அழிப்பதற்காக مَا எவற்றை عَلَوْا மிகைத்தனர் تَتْبِيْرًا‏ அழித்தல்
17:7. நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே(தீமை)யாகும், உங்கள் முகங்களை சோகம் அடையச் செய்வதற்காகவும் பைத்துல் முகத்தஸில் முதல் முறையாக அவர்கள் நுழைந்தது போல் நுழைந்து அவர்கள் தாங்கள் கைப்பற்றிக் கொண்டவைகளை முற்றாக அழித்து விடுவதற்காகவும் (எதிரிகளை) இரண்டாம் வாக்குறுதி வரும்பொழுது (நாம் அனுப்பினோம்).
17:7. (அச்சமயம் அவர்களை நோக்கி) நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்களுக்குத்தான் நன்று. நீங்கள் தீமை செய்தால் அது உங்களுக்கே (கேடாகும் என்றும் நாம் கூறினோம். எனினும், அவர்கள் அநியாயம் செய்யவே ஆரம்பித்தனர். ஆகவே,) இரண்டாவது தவணை வந்த சமயத்தில் (உங்களைத் துன்புறுத்தி) உங்கள் முகங்களை கெடுத்து, முந்திய தடவை மஸ்ஜிதுல் அக்ஸாவில் நுழைந்தவாறே (இந்தத் தடவையும் அதனுள்) நுழைந்து, தங்கள் கைக்குக் கிடைத்தவற்றையெல்லாம் அழித்து நாசமாக்கக்கூடிய (கடின சித்தமுடைய) அவர்களை (நாம் உங்கள் மீது) ஏவினோம்.
17:7. பாருங்கள், நீங்கள் நன்மை செய்த போது, அது உங்களுக்கு நன்மையாய் இருந்தது. நீங்கள் தீமை செய்தபோது அது உங்களுக்குத் தீமையாய் இருந்தது. பிறகு, இரண்டாவது சந்தர்ப்பம் வந்தபோது வேறு பகைவர்களை உங்கள் மீது நாம் சாட்டினோம். அவர்கள் உங்கள் முகங்களை உருக்குலைத்திட வேண்டும்; மேலும், முந்தைய பகைவர்கள் முதல் தடவை எவ்வாறு (பைத்துல் முகத்தஸ்) பள்ளியில் நுழைந்தார்களோ அவ்வாறு இவர்களும் அங்கே நுழைந்து, தங்கள் கைக்கு எட்டியவற்றையெல்லாம் அழித்துவிட வேண்டும் என்பதற்காக!”
17:7. நீங்கள் நன்மை செய்தால் உங்கள் ஆத்மாக்களுக்கே நன்மை செய்துகொள்கிறீர்கள், நீங்கள் தீமை செய்தால் அ(தன் தீமையான)து அவற்றின் மீதேயாகும், (என்று நாம் கூறினோம், பின்னும், அவர்கள் அக்கிரமம் செய்யத் தலைப் பட்டனர், ஆகவே,) இரண்டாவது தவணை வந்த சமயத்தில், உங்களுடைய முகங்களை அவர்கள் இழிவடையச் செய்வதற்காகவும், (அக்ஸா) பள்ளியில் முந்திய தடவை அதில் அவர்கள் நுழைந்தவாறே (இந்தத் தடவையும்) அவர்கள் நுழைந்து விடுவதற்காகவும், எவற்றை அவர்கள் மிகைத்து விட்டார்களோ அவற்றையெல்லாம் அவர்கள் (இடித்தழித்து) பெரும் சேதத்தை விளைவித்து விடுவதற்காகவும் (அவர்களை நாம் உங்கள் மீது ஏவி அனுப்பினோம்.)
17:8
17:8 عَسٰى رَبُّكُمْ اَنْ يَّرْحَمَكُمْ‌ ۚ وَاِنْ عُدْتُّمْ عُدْنَا‌ۘ وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكٰفِرِيْنَ حَصِيْرًا‏
عَسٰى ஆகலாம் رَبُّكُمْ உங்கள் இறைவன் اَنْ يَّرْحَمَكُمْ‌ ۚ கருணை புரிய/உங்களுக்கு وَاِنْ عُدْتُّمْ நீங்கள் திரும்பினால் عُدْنَا‌ۘ நாம் திரும்புவோம் وَجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் جَهَنَّمَ நரகத்தை لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு حَصِيْرًا‏ விரிப்பாக
17:8. (இதன் பின்னரும் நீங்கள் திருந்திக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியப்போதும். ஆனால், நீங்கள் (பாவத்தின் பக்கமே) திரும்புவீர்களானால், நாமும் (முன் போல் தண்டிக்கத்) திரும்புவோம்; மேலும் காஃபிர்களுக்கு ஜஹன்ன(ம் எனும் நரக)த்தைச் சிறைச்சாலையாக ஆக்கி வைத்துள்ளோம்.
17:8. (நீங்கள் விஷமம் செய்வதைவிட்டு விலகிக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியலாம். (அப்படி இல்லாமல் உங்கள் விஷமத்தின் பக்கமே) பின்னும் நீங்கள் திரும்பினால் நாமும் (உங்களை முன் போல தண்டிக்க) முன் வருவோம். நிராகரிப்பவர்களுக்கு நரகத்தை விரிப்பாக ஆக்கி விடுவோம்.
17:8. இனி, உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை பொழியக்கூடும். ஆயினும், நீங்கள் உங்களுடைய முந்தைய நடத்தையை மீண்டும் மேற்கொள்வீர்களாயின் நாமும் மீண்டும் உங்களைத் தண்டிப்போம். மேலும், நன்றி கொல்லும் மக்களுக்கு நரகத்தைச் சிறையாக நாம் ஆக்கி வைத்துள்ளோம்.
17:8. (நீங்கள் குழப்பம் செய்வதைவிட்டு விலகிக் கொண்டால்,) உங்கள் இரட்சகன் உங்கள் மீது கருணை புரியப் போதுமானவன், (அவ்வாறின்றி, உங்கள் குழப்பத்தின் பாலே) பின்னும் நீங்கள் திரும்புவீர்களானால், நாமும் (தண்டிக்கத்) திரும்புவோம், இன்னும், நிராகரிப்போருக்கு நரகத்தைச் சிறைச்சாலையாக நாம் ஆக்கியுள்ளோம்.
17:9
17:9 اِنَّ هٰذَا الْقُرْاٰنَ يَهْدِىْ لِلَّتِىْ هِىَ اَقْوَمُ وَ يُبَشِّرُ الْمُؤْمِنِيْنَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا كَبِيْرًا ۙ‏
اِنَّ நிச்சயமாக هٰذَا இது الْقُرْاٰنَ குர்ஆன் يَهْدِىْ நேர்வழி காட்டுகிறது لِلَّتِىْ எதன் பக்கம் هِىَ அது اَقْوَمُ மிக சரியானது وَ يُبَشِّرُ இன்னும் நற்செய்தி கூறுகிறது الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு الَّذِيْنَ எவர்கள் يَعْمَلُوْنَ செய்வார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை اَنَّ நிச்சயமாக لَهُمْ அவர்களுக்கு اَجْرًا கூலி كَبِيْرًاۙ‏ பெரியது
17:9. நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.
17:9. நிச்சயமாக இந்த குர்ஆன் மிக நேரான, நீதமான பாதைக்கு வழி காட்டுகிறது; மேலும், (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது.
17:9. உண்மையில் இந்தக் குர்ஆன் முற்றிலும் நேரான வழியினைக் காண்பிக்கிறது. மேலும், இதனை ஏற்றுக் கொண்டு நற்செயல் செய்பவர்களுக்குத் திண்ணமாகப் பெரும் கூலி உண்டு என்று இது நற்செய்தி அறிவிக்கிறது.
17:9. நிச்சயமாக இந்தக் குர் ஆன், (மனிதர்களுக்கு) எது மிகமிக நேர்மையானதோ அதன்பால் வழிகாட்டுகிறது, நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகைய விசுவாசிகள் - அவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய நற்கூலி உண்டென்று நன்மாராயமும் கூறுகின்றது.
17:10
17:10 وَّاَنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَلِيْمًا‏
وَّاَنَّ இன்னும் நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِالْاٰخِرَةِ மறுமையை اَعْتَدْنَا ஏற்படுத்தி இருக்கிறோம் لَهُمْ அவர்களுக்கு عَذَابًا வேதனையை اَلِيْمًا‏ துன்புறுத்தக்கூடியது
17:10. மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம்.  
17:10. (உங்களில்) எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக நாம் மிகத் துன்புறுத்தும் வேதனையை தயார்படுத்தி இருக்கிறோம் (என்றும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது).
17:10. ஆனால், மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறோம் என்று அறிவிக்கிறது.
17:10. மேலும், நிச்சயமாக மறுமையை விசுவாசங்கொள்ளவில்லையே அத்தகையோர்-அவர்களுக்கு நாம் மிகத் துன்புறுத்தும் வேதனையை தயாராக்கி வைத்திருக்கிறோம் (என்று எச்சரிக்கையும் செய்கிறது)
17:11
17:11 وَيَدْعُ الْاِنْسَانُ بِالشَّرِّ دُعَآءَهٗ بِالْخَيْرِ‌ ؕ وَكَانَ الْاِنْسَانُ عَجُوْلًا‏
وَيَدْعُ பிரார்த்திக்கிறான் الْاِنْسَانُ மனிதன் بِالشَّرِّ தீமைக்கு دُعَآءَهٗ அவன் பிரார்த்திப்பதைப் (போலவே) بِالْخَيْرِ‌ ؕ நன்மைக்கு وَكَانَ இன்னும் இருக்கின்றான் الْاِنْسَانُ மனிதன் عَجُوْلًا‏ அவசரக்காரனாக
17:11. மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.
17:11. மனிதன் நன்மையைக் கோரி பிரார்த்திப்பதைப் போலவே (சில சமயங்களில் அறியாமையினால்) தீமையைக் கோரியும் பிரார்த்திக்கிறான். ஏனென்றால், மனிதன் (இயற்கையாகவே பொறுமையிழந்த) அவசரக்காரனாக இருக்கிறான்.
17:11. நன்மையை எவ்வாறு கோர வேண்டுமோ அவ்வாறு தீமையை மனிதன் கோருகின்றான். மனிதன் பெரிதும் அவசரக்காரனாக இருக்கின்றான்.
17:11. மேலும், மனிதன் – நன்மையைக் கோரி அவன் பிரார்த்திப்பதைப் போலவே (சில சமயங்களில்) தீமையைக் கோரியும் பிரார்த்திக்கின்றான், மனிதன் (பொறுமையிழந்த) அவசரக்காரனாகவே இருக்கின்றான்.
17:12
17:12 وَجَعَلْنَا الَّيْلَ وَالنَّهَارَ اٰيَتَيْنِ‌ فَمَحَوْنَاۤ اٰيَةَ الَّيْلِ وَجَعَلْنَاۤ اٰيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّكُمْ وَلِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَ‌ؕ وَكُلَّ شَىْءٍ فَصَّلْنٰهُ تَفْصِيْلًا‏
وَجَعَلْنَا ஆக்கினோம் الَّيْلَ இரவை وَالنَّهَارَ இன்னும் பகலை اٰيَتَيْنِ‌ இரு அத்தாட்சிகளாக فَمَحَوْنَاۤ இன்னும் மங்கச்செய்தோம் اٰيَةَ அத்தாட்சியை الَّيْلِ இரவின் وَجَعَلْنَاۤ இன்னும் ஆக்கினோம் اٰيَةَ அத்தாட்சியை النَّهَارِ பகலின் مُبْصِرَةً ஒளிரக்கூடியதாக لِّتَبْتَغُوْا நீங்கள் தேடுவதற்காக فَضْلًا அருளை مِّنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் وَلِتَعْلَمُوْا இன்னும் அறிவதற்காக عَدَدَ எண்ணிக்கையை السِّنِيْنَ ஆண்டுகளின் وَالْحِسَابَ‌ؕ இன்னும் கணக்கை وَكُلَّ شَىْءٍ எல்லா விஷயங்களையும் فَصَّلْنٰهُ விவரித்தோம்/ அவற்றை تَفْصِيْلًا‏ விரிவாக
17:12. இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம்; பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.
17:12. இரவையும் பகலையும் நாம் அத்தாட்சிகளாக ஆக்கினோம். (அதில்) இரவின் அத்தாட்சியை மங்கச் செய்தோம். (பல இடங்களிலும் சுற்றித் திரிந்து) உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம். ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் (இதன் மூலம்) நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவே நாம் விவரித்துள்ளோம்.
17:12. (பாருங்கள்) நாம் இரவையும் பகலையும் இரு சான்றுகளாய் அமைத்துள்ளோம். இரவு எனும் சான்றினை ஒளியற்றதாய் ஆக்கினோம். பகல் எனும் சான்றினை ஒளிரக்கூடியதாய்ச் செய்தோம். இதன் மூலம் நீங்கள் உங்கள் இறைவனின் அருட் கொடையைத் தேட வேண்டும்; மேலும், மாதங்கள், ஆண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக. இவ்வாறு ஒவ்வொன்றையும் மிகத் தெளிவாக நாம் வகைப்படுத்தி வைத்துள்ளோம்.
17:12. இரவையும், பகலையும் இரு சான்றுகளாக நாம் ஆக்கினோம்.) (அதில்) இரவின் சான்றினை மங்கச் செய்தோம், (பல பகுதிகளுக்கும் சென்று) நீங்கள் உங்கள் இரட்சகனின் பேரருளைத் தேடிக் கொள்வதற்காகவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்துகொள்வதற்காகவும், பகலின் சான்றினை பார்ப்பதற்குரிய (பிரகாசமான)தாக ஆக்கினோம், ஒவ்வொரு பொருளையும் - அதைத் தெளிவாக நாம் விவரித்துள்ளோம்.
17:13
17:13 وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰۤٮِٕرَهٗ فِىْ عُنُقِهٖ‌ؕ وَنُخْرِجُ لَهٗ يَوْمَ الْقِيٰمَةِ كِتٰبًا يَّلْقٰٮهُ مَنْشُوْرًا‏
وَكُلَّ இன்னும் எல்லா اِنْسَانٍ மனிதன் اَلْزَمْنٰهُ இணைத்தோம்/அவனுக்கு طٰۤٮِٕرَهٗ அவனுடையசெயலை فِىْ عُنُقِهٖ‌ؕ அவனுடைய கழுத்தில் وَنُخْرِجُ வெளிப்படுத்துவோம் لَهٗ அவனுக்கு يَوْمَ நாளில் الْقِيٰمَةِ மறுமை كِتٰبًا ஒரு புத்தகம் يَّلْقٰٮهُ அதை சந்திப்பான் مَنْشُوْرًا‏ விரிக்கப்பட்டதாக
17:13. ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் - திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான்.
17:13. ஒவ்வொரு மனிதனின் (செயலைப் பற்றிய விரிவான தினசரிக்) குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் அதை விரிக்கப்பட்டதாகப் பார்ப்பான்.
17:13. மேலும், ஒவ்வொரு மனிதனின் சகுனத்தையும் நாம் அவனது கழுத்திலேயே மாட்டிவிட்டிருக்கின்றோம். மேலும் மறுமைநாளில், ஒரு வினைச் சுவடியை அவனுக்காக வெளிப் படுத்துவோம். அதனை அவன் ஒரு திறந்த புத்தகத்தைப் போன்று காண்பான்.
17:13. மேலும், ஒவ்வொரு மனிதனின் செயலைப்பற்றிய (தினசரிக்)குறிப்பை அவனுடைய கழுத்தில் அவனுக்கு நாம் மாட்டி இருக்கின்றோம், மறுமை நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தையும் வெளிப்படுத்துவோம், அவன் அதனை விரிக்கப்பட்டதாகப் பெற்றுக் கொள்வான்.
17:14
17:14 اِقْرَاْ كِتٰبَك َؕ كَفٰى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيْبًا ؕ‏
اِقْرَاْ நீ படி! كِتٰبَك ؕ உன் புத்தகத்தை كَفٰى போதுமானவன் بِنَفْسِكَ நீயே الْيَوْمَ இன்று عَلَيْكَ உனக்கெதிராக حَسِيْبًا ؕ‏ விசாரிப்பாளன்
17:14. “நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்” (என்று அப்போது நாம் கூறுவோம்).
17:14. (அச்சமயம் அவனை நோக்கி) ‘‘இன்றைய தினம் உன் கணக்கைப் பார்க்க நீயே போதுமானவன். ஆகவே, உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படித்துப் பார்'' (என்று கூறுவோம்.)
17:14. “படித்துப்பார், உன்னுடைய இந்த வினைப்பட்டியலை! இன்று உன்னுடைய கணக்கைப் பரிசீலிக்க நீயே போதுமானவன்!”
17:14. “உன்னுடைய புத்தகத்தை நீயே படித்துப்பார், இன்றையத்தினம் உனக்கு (எதிராக) நீயே கணக்குப் பார்ப்பவனாக இருக்கப்போதும்” (என்று அவனிடம் கூறப்படும்.)
17:15
17:15 مَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِىْ لِنَفْسِهٖ ‌ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا‌ ؕ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى‌ ؕ وَمَا كُنَّا مُعَذِّبِيْنَ حَتّٰى نَبْعَثَ رَسُوْلًا‏
مَنِ எவர் اهْتَدٰى நேர்வழிசெல்வார் فَاِنَّمَا يَهْتَدِىْ அவர் நேர்வழி செல்வதெல்லாம் لِنَفْسِهٖ ۚ தன் நன்மைக்காக وَمَنْ இன்னும் எவர் ضَلَّ வழிகெடுவார் فَاِنَّمَا يَضِلُّ அவர் வழிகெடுவதெல்லாம் عَلَيْهَا‌ ؕ தனக்கெதிராக وَلَا تَزِرُ சுமக்காது وَازِرَةٌ சுமக்கக்கூடியது وِّزْرَ (பாவச்) சுமையை اُخْرٰى‌ ؕ மற்றொன்றின் وَمَا كُنَّا நாம் இருக்கவில்லை مُعَذِّبِيْنَ வேதனை செய்பவர்களாக حَتّٰى نَبْعَثَ நாம் அனுப்பும் வரை رَسُوْلًا‏ ஒரு தூதரை
17:15. எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை.
17:15. எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான். (நமது) தூதர் ஒருவரை அனுப்பாத வரை நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை.
17:15. ஒருவன் நேரான வழியை மேற்கொள்கிறானெனில், அவனது நேரான வழி அவனுக்கே பயனளிக்கும். ஒருவன் நெறிதவறிப் போகிறானெனில், அவனுடைய நெறிதவறிய போக்கு அவனுக்கே தீங்கு விளைவிக்கும். சுமையைச் சுமக்கும் எவரும் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். மேலும் (சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உள்ள வேறுபாட்டை மக்களுக்கு உணர்த்திட) ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் யாரையும் தண்டிப்பவர் அல்லர்!
17:15. எவர் நேர் வழியில் செல்கின்றாரோ, அவர் நேர் வழியில் செல்வதெல்லாம் தன(து நன்மை)க்காகவேதான், எவர் வழிகேட்டில் செல்கின்றாரோ அவர் வழி கெடுவதெல்லாம் தனக்கே (தீங்கிழைத்துக் கொள்ளத்)தான், இன்னும், (பாவத்தைச்) சுமக்கக்கூடிய (ஒரு ஆத்மாவான)து மற்றொன்றின் (பாவச்) சுமையைச் சுமக்காது, மேலும், (நம்முடைய) தூதரை அனுப்பாத வரையில் நாம் (எவரையும்) வேதனை செய்பவர்களாக இல்லை.
17:16
17:16 وَاِذَاۤ اَرَدْنَاۤ اَنْ نُّهْلِكَ قَرْيَةً اَمَرْنَا مُتْرَفِيْهَا فَفَسَقُوْا فِيْهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنٰهَا تَدْمِيْرًا‏
وَاِذَا اَرَدْنَاۤ நாம் நாடினால் اَنْ نُّهْلِكَ நாம் அழிக்க قَرْيَةً ஓர் ஊரை اَمَرْنَا ஏவுவோம் مُتْرَفِيْهَا அதன் சுகவாசிகளை فَفَسَقُوْا ஆகவேபாவம்புரிவார்கள் فِيْهَا அதில் فَحَقَّ ஆகவே நிகழ்ந்துவிடும் عَلَيْهَا அதன் மீது الْقَوْلُ வாக்கு فَدَمَّرْنٰهَا தரைமட்டமாக்கி விடுவோம்/அதை تَدْمِيْرًا‏ தரைமட்டமாக்குதல்
17:16. நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம்; ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப் படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள். அப்போது, அவ்வூரின் மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம்.
17:16. ஓர் ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நன்மையைக் கொண்டு நாம் ஏவுகிறோம். ஆனால், அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம் வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.
17:16. நாம் ஓர் ஊரை அழித்திட நாடினால் அங்கு சொகுசாக வாழ்வோருக்கு நாம் கட்டளையிடுகின்றோம்; அவர்கள் அங்கு (இக்கட்டளைக்கு) மாறு செய்யத் தலைப்படுகிறார்கள். அப்போது தண்டனைக்குரிய தீர்ப்பு அவ்வூரின் மீது விதிக்கப்பட்டு விடுகின்றது. ஆகவே, அதனை நாம் அழித்தொழித்து விடுகின்றோம்.
17:16. மேலும், ஏதேனும் ஓர் ஊரை நாம் அழித்துவிட நாடினால், அதில் சுகமாக வாழ்வோரை (நம் கட்டளைகளுக்குக் கீழப்படிந்து நடக்குமாறு) நாம் ஏவுவோம், (ஆனால்,) அவர்கள் (நம் கட்டளைகளை மீறி) அதில் பாவம் செய்(ய ஆரம்பித்து விடு)வார்கள், பின்னர், அதன் மீது (வேதனை பற்றிய) நம்முடைய வாக்கு உறுதியாகிவிடுகிறது, ஆகவே, அதனை நாம் அடியோடு அழித்துவிடுகிறோம்.
17:17
17:17 وَكَمْ اَهْلَكْنَا مِنَ الْقُرُوْنِ مِنْۢ بَعْدِ نُوْحٍ‌ؕ وَكَفٰى بِرَبِّكَ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِيْرًۢا بَصِيْرًا‏
وَكَمْ எத்தனை اَهْلَكْنَا அழித்தோம் مِنَ الْقُرُوْنِ தலைமுறைகளை مِنْۢ بَعْدِ பின்னர் نُوْحٍ‌ؕ நூஹூக்கு وَكَفٰى இன்னும் போதுமானவன் بِرَبِّكَ உம் இறைவனே بِذُنُوْبِ பாவங்களை عِبَادِهٖ தன் அடியார்களின் خَبِيْرًۢا ஆழ்ந்தறிபவனாக بَصِيْرًا‏ உற்று நோக்குபவனாக
17:17. நூஹுக்குப்பின் எத்தனை தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்? இன்னும், தன் அடியார்களின் பாவங்களை நன்கறிந்தவனாகவும், கூர்ந்து நோக்குபவனாகவும் இருப்பதற்கு உம் இறைவன் போதுமானவன்.
17:17. நூஹ்வுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை உற்று நோக்கி அறிந்து கொள்வதற்கு உமது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் அவனுக்குத் தேவையில்லை.)
17:17. (பாருங்கள்!) நூஹுக்குப் பிறகு வாழ்ந்த எத்தனையோ தலைமுறையினர் நம் கட்டளைக்கேற்ப அழிக்கப்பட்டிருக்கிறார்கள். தன் அடிமைகளின் பாவச் செயல்கள் குறித்து உம் இறைவன் நன்கறிந்தே இருக்கின்றான். மேலும் அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டும் இருக்கிறான்.
17:17. நூஹுவுக்குப் பின் நாம் எத்தனையோ தலை முறையினரை அழித்திருக்கிறோம், தன் அடியார்களின் பாவங்களை நன்கு உணர்பவனாக பார்க்கிறவனாக இருப்பதற்கு உமதிரட்சகனே போதுமானவன்.
17:18
17:18 مَنْ كَانَ يُرِيْدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهٗ فِيْهَا مَا نَشَآءُ لِمَنْ نُّرِيْدُ ثُمَّ جَعَلْنَا لَهٗ جَهَنَّمَ‌ۚ يَصْلٰٮهَا مَذْمُوْمًا مَّدْحُوْرًا‏
مَنْ எவர் كَانَ இருப்பார் يُرِيْدُ நாடுகின்றவராக الْعَاجِلَةَ இம்மையை عَجَّلْنَا முற்படுத்தி கொடுப்போம் لَهٗ அவருக்கு فِيْهَا அதில் مَا எதை نَشَآءُ நாடுவோம் لِمَنْ எவருக்கு نُّرِيْدُ நாடுவோம் ثُمَّ பிறகு جَعَلْنَا ஆக்குவோம் لَهٗ அவருக்கு جَهَنَّمَ‌ۚ நரகத்தை يَصْلٰٮهَا எரிந்து பொசுங்குவார்/அதில் مَذْمُوْمًا இகழப்பட்டவராக مَّدْحُوْرًا‏ தூரமாக்கப்பட்டவராக
17:18. எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப் பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார்.
17:18. எவர்கள், (மறுமையைப் புறக்கணித்துவிட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள்.
17:18. விரைவில் கிடைக்கக்கூடிய (உலகப்) பலன்களை ஒருவன் விரும்புகிறான் எனில், அவனுக்கு இங்கேயே நாம் அதனைக் கொடுத்துவிடுகிறோம் நாம் நாடுகின்றவற்றை நாம் நாடுபவர்க்கு மட்டும்! பிறகு, நாம் அவனுடைய பங்கில் நரகத்தை எழுதிவிடுகின்றோம். சபிக்கப்பட்டவனாகவும் இறையருளை இழந்தவனாகவும் அவன் அதில் கிடந்து எரிவான்.
17:18. எவர் (மறுமையை மறந்துவிட்டு) இம்மையை நாடுகிறவராக இருக்கிறாரோ, அவருக்கு அதில் நாம் நாடியவருக்குத் துரிதமாக கொடுத்துவிடுகிறோம், பின்னர், மறுமையில் அ(த்தகைய)வருக்காக நரகத்தை நாம் ஆக்குகின்றோம், அத்தகையவர் நிந்திக்கப்பட்டவராக, (அல்லாஹ்வின் அருளிலிருந்து) தூரமாக்கப்பட்டவராக அதில் நுழைவார்.
17:19
17:19 وَمَنْ اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰۤٮِٕكَ كَانَ سَعْيُهُمْ مَّشْكُوْرًا‏
وَمَنْ எவர்(கள்) اَرَادَ நாடுவார்(கள்) الْاٰخِرَةَ மறுமையை وَسَعٰى இன்னும் முயற்சி செய்வார்(கள்) لَهَا அதற்கு سَعْيَهَا அதற்குரிய முயற்சி وَهُوَ அவர்(கள்) مُؤْمِنٌ நம்பிக்கை கொண்டவர்(களாக) فَاُولٰۤٮِٕكَ அவர்கள் كَانَ இருந்தது سَعْيُهُمْ அவர்களுடைய முயற்சி مَّشْكُوْرًا‏ நன்றி செலுத்தப்பட்டதாக
17:19. இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும்.
17:19. எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படுபவையாக இருக்கின்றன.
17:19. மேலும், இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில், யார் மறுமையை விரும்புகின்றாரோ அதற்காகப் பாடுபடுகின்ற முறைப்படி பாடுபடுகின்றாரோ அத்தகைய ஒவ்வொருவரின் முயற்சியும் மதிக்கப்படக்கூடியதாகவே இருக்கும்.
17:19. இன்னும், எவர் மறுமையை நாடி அவர் விசுவாசியாக இருக்க, அதற்குரிய முயற்சியையும் அதன் பொருட்டு முயன்றாரோ அத்தகையோர் - அவர்களின் முயற்சி (அல்லாஹ்விடம்) அங்கீகரிக்கப்பட்டதாகும்.
17:20
17:20 كُلًّا نُّمِدُّ هٰٓؤُلَاۤءِ وَهٰٓؤُلَاۤءِ مِنْ عَطَآءِ رَبِّكَ‌ ؕ وَمَا كَانَ عَطَآءُ رَبِّكَ مَحْظُوْرًا‏
كُلًّا எல்லோருக்கும் نُّمِدُّ கொடுத்துதவுவோம் هٰٓؤُلَاۤءِ இவர்களுக்கு وَهٰٓؤُلَاۤءِ இன்னும் இவர்களுக்கு مِنْ இருந்து عَطَآءِ கொடை رَبِّكَ‌ ؕ உம் இறைவனின் وَمَا كَانَ இருக்கவில்லை عَطَآءُ கொடை رَبِّكَ உம் இறைவனின் مَحْظُوْرًا‏ தடுக்கப்பட்டதாக
17:20. இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம்; உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை.
17:20. (இம்மையை விரும்புகிற) அவர்களுக்கும் (மறுமையை விரும்புகிற) இவர்களுக்கும் ஆக அனைவருக்கும் உமது இறைவன் தன் கொடையைக் கொண்டே உதவி செய்கிறான். உமது இறைவனின் கொடை (இவ்விருவரில் எவருக்குமே) தடை செய்யப்பட்டதாக இல்லை.
17:20. (இம்மையை விரும்பும்) அவர்களுக்கும் (மறுமையை விரும்பும்) இவர்களுக்கும் ஆக இரு சாரார்க்கும் (உலகில்) நாம் வாழ்க்கை வசதிகளை அளித்துக்கொண்டிருக்கிறோம். இது உம் இறைவனின் கொடையாகும். மேலும், உம் இறைவனின் கொடையைத் தடுக்கக் கூடியவர் யாருமில்லை.
17:20. (இம்மையை விரும்பும்) இவர்களுக்கும், (மறுமையை விரும்பும்) அவர்களுக்கும் (இவ்விருவரில்) – ஒவ்வொருவருக்கும், உம்முடைய இரட்சகனின் அன்பளிப்பிலிருந்து நாம் அதிகப்படுத்துகின்றோம், மேலும் உமதிரட்சகனின் அன்பளிப்பு (இவ்விருசாராருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை.
17:21
17:21 اُنْظُرْ كَيْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ‌ ؕ وَلَـلْاٰخِرَةُ اَكْبَرُ دَرَجٰتٍ وَّاَكْبَرُ تَفْضِيْلًا‏
اُنْظُرْ கவனிப்பீராக كَيْفَ எப்படி فَضَّلْنَا மேன்மையாக்கினோம் بَعْضَهُمْ அவர்களில் சிலரை عَلٰى விட بَعْضٍ‌ ؕ சிலரை وَلَـلْاٰخِرَةُ மறுமைதான் اَكْبَرُ மிகப் பெரியது دَرَجٰتٍ பதவிகளால் وَّاَكْبَرُ இன்னும் மிகப் பெரியது تَفْضِيْلًا‏ மேன்மையால்
17:21. (நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரிது, மேன்மையிலும் மிகப் பெரிதாகும்.
17:21. (நபியே!) அவர்களில் சிலரை சிலர் மீது எவ்வாறு மேன்மையாக்கி வைத்திருக்கிறோம் என்பதை கவனிப்பீராக! மறுமை (வாழ்க்கை)யோ பதவிகளாலும் மிகப் பெரிது; சிறப்பிப்பதாலும் மிகப்பெரிது.
17:21. ஆயினும், (இம்மையிலேயே) அவர்களில் சிலருக்கு வேறு சிலரைவிட எவ்வாறு நாம் சிறப்பு அளித்துள்ளோம் என்பதைப் பாருங்கள். மேலும், மறுமையிலோ அவர்களுக்கு இன்னும் அதிக அந்தஸ்து உண்டு; பெரும் சிறப்பும் கிடைக்கும்.
17:21. (நபியே! இவர்களில்) சிலரைச் சிலரை விட எவ்வாறு மேன்மையாக்கி வைத்திருக்கின்றோம் என்பதை நீர் (கவனித்துப்) பார்ப்பீராக! மறுமையோ, பதவிகளால் மிகப் பெரியதும், சிறப்பால் மிகப் பெரியதுமாகும்.
17:22
17:22 لَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَقْعُدَ مَذْمُوْمًا مَّخْذُوْلًا‏
لَا تَجْعَلْ ஆக்காதீர் مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اِلٰهًا ஒரு கடவுளை اٰخَرَ வேறு فَتَقْعُدَ அமர்ந்து விடுவீர் مَذْمُوْمًا இகழப்பட்டவராக مَّخْذُوْلًا‏ கைவிடப்பட்டவராக
17:22. அல்லாஹ்வுடன் மற்றோர் ஆண்டவனை நீர் (இணை) ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர்.  
17:22. (நபியே!) அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற்குரியவனாக ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் உதவியற்றவராகவும் அமர்ந்து விடுவீர்.
17:22. அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்தாதீர்! அவ்வாறு செய்தால் நீர் இழிந்தவராயும் நாதியற்றவராயும் ஆகிவிடுவீர்!
17:22. (நபியே!) அல்லாஹ்வுடன் மற்றோர் வணக்கத்திற்குரியவனை (இணையாக) நீர் ஆக்க வேண்டாம், (அவ்வாறு செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராக உதவியற்றவராக, அமர்ந்து விடுவீர்.
17:23
17:23 وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏
وَقَضٰى கட்டளையிட்டு இருக்கின்றான் رَبُّكَ உம் இறைவன் اَلَّا تَعْبُدُوْۤا வணங்காதீர்கள் என்று اِلَّاۤ اِيَّاهُ அவனைத் தவிர وَبِالْوَالِدَيْنِ இன்னும் பெற்றோருக்கு اِحْسَانًا‌ ؕ நன்மை புரியுங்கள் اِمَّا يَـبْلُغَنَّ நிச்சயமாக அடைந்தால் عِنْدَكَ உன்னிடம் الْكِبَرَ முதுமையை اَحَدُهُمَاۤ அவ்விருவர்களில் ஒருவர் اَوْ அல்லது كِلٰهُمَا அவர்கள் இருவரும் فَلَا تَقُلْ சொல்லாதே! لَّهُمَاۤ அவ்விருவரையும் اُفٍّ “சீ” وَّلَا تَنْهَرْ இன்னும் வெருட்டாதே! هُمَا அவ்விருவரை وَقُلْ இன்னும் சொல்! لَّهُمَا அவ்விருவருக்கும் قَوْلًا சொல்லை كَرِيْمًا‏ மரியாதையானது
17:23. அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
17:23. (நபியே!) உமது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உம்மிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ' என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுவீராக.
17:23. உம் அதிபதி விதித்துள்ளான்: “அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள். தாய் தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்துகொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை ‘சீ’ என்று கூடக் கூறாதீர்! மேலும், அவர்களைக் கடிந்து பேசாதீர்! மாறாக, அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக!
17:23. (நபியே!) உமதிரட்சகன் - அவனைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்றும், பெற்றோர்க்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றும், கட்டளையிட்டிருக்கின்றான், அவ்விருவரில் ஒருவரோ, அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால், அவ்விருவருக்கும் (இழித்துக் கூறப்படும் வார்த்தைகளிலுள்ள) “சீ” என்று (கூட) நீ சொல்ல வேண்டாம், (உம்மிடமிருந்து) அவ்விருவரையும் விரட்டி விடவும் வேண்டாம், அவ்விருவருக்கும் மரியாதையான வார்த்தையைக் கூறுவீராக!
17:24
17:24 وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ‏
وَاخْفِضْ இன்னும் தாழ்த்து لَهُمَا அவர்களுக்கு முன் جَنَاحَ இறக்கையை الذُّلِّ பணிவின் مِنَ الرَّحْمَةِ கருணையுடன் وَقُلْ இன்னும் கூறு! رَّبِّ என் இறைவா ارْحَمْهُمَا நீயும் கருணை புரி!/அவ்விருவருக்கு كَمَا அவர்கள் வளர்த்தவாறே رَبَّيٰنِىْ என்னை صَغِيْرًا ؕ‏ சிறியவனாக
17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
17:24. அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! மேலும், ‘‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்றும் பிரார்த்திப்பீராக!
17:24. மேலும், பணிவுடனும், கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்வீராக! மேலும், நீர் இறைஞ்சிய வண்ணம் இருப்பீராக: “என் இறைவனே! சிறுவயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும் பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறு இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக!”
17:24. இன்னும், இவ்விருவருக்காக இரக்கத்துடன் பணிவு எனும் இறக்கையை நீர் தாழ்த்துவீராக! மேலும் “என் இரட்சகனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்தது போன்று நீயும் அவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!” என்றும் பிரார்த்தித்துக்) கூறுவீராக.!
17:25
17:25 رَّبُّكُمْ اَعْلَمُ بِمَا فِىْ نُفُوْسِكُمْ‌ؕ اِنْ تَكُوْنُوْا صٰلِحِيْنَ فَاِنَّهٗ كَانَ لِلْاَوَّابِيْنَ غَفُوْرًا‏
رَّبُّكُمْ உங்கள் இறைவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا எதை فِىْ نُفُوْسِكُمْ‌ؕ உங்கள் மனங்களில் اِنْ تَكُوْنُوْا நீங்கள் இருந்தால் صٰلِحِيْنَ நல்லவர்களாக فَاِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் لِلْاَوَّابِيْنَ மீளுகிறவர்களுக்கு غَفُوْرًا‏ மகா மன்னிப்பாளனாக
17:25. (பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.
17:25. உங்கள் மனதிலுள்ளதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான். நீங்கள் நன்னடத் தையுடையவர்களாக இருந்து (உங்களில் எவர்) மன்னிப்புக் கோரிய(போதிலும் அ)வர்களின் குற்றங்களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவே இருக்கிறான்.
17:25. உங்கள் இதயங்களில் என்ன இருக்கின்றன என்பதை உங்கள் இறைவன் நன்கறிவான். நீங்கள் உத்தமர்களாய் வாழ்வீர்களாயின் தம் தவறை உணர்ந்து, அடிபணிந்து வாழ்வதன் பக்கம் திரும்புவோரை திண்ணமாக, அவன் மன்னித்தருளக்கூடியவனாக இருக்கின்றான்.
17:25. (பெற்றோரை நடத்துவது பற்றி) உங்கள் உள்ளங்களில் இருப்பதை உங்கள் இரட்சகன் மிக்க அறிந்தவன், நீங்கள் நன்னடத்தையுடையவர்களாக இருந்தால் அப்போது நிச்சயமாக (மன்னிப்புக் கோரி, அல்லாஹ்வின்பால்) திரும்புகின்றவர்களுக்கு அவன் மன்னிப்பவனாகவே இருக்கின்றான்.
17:26
17:26 وَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَالْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيْرًا‏
وَاٰتِ இன்னும் கொடு! ذَا الْقُرْبٰى உறவினருக்கு حَقَّهٗ அவருடைய உரிமையை وَالْمِسْكِيْنَ இன்னும் ஏழைக்கு وَابْنَ السَّبِيْلِ இன்னும் வழிப்போக்கருக்கு وَلَا تُبَذِّرْ இன்னும் மிதமிஞ்சி செலவழிக்காதே! تَبْذِيْرًا‏ மித மிஞ்சி, மிக வீணாக செலவழித்தல்
17:26. இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக; மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்.
17:26. உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்யவேண்டாம்.
17:26. உறவினர்களுக்கும் வறியவர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் அவரவர்க்குரிய உரிமையை வழங்கிவிடுங்கள். ஆனால், வீண் செலவு செய்யாதீர்!
17:26. இன்னும், உறவினருக்கு அவரின் உரிமையை வழங்குவீராக! மேலும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் (அவரவர்களுடைய உரிமையை வழங்குவீராக! செல்வத்தை) அளவு கடந்து வீண் விரயம் செய்யாதுமிருப்பீராக!
17:27
17:27 اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌ ؕ وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏
اِنَّ الْمُبَذِّرِيْنَ நிச்சயமாக மிதமிஞ்சி செலவழிப்பவர்கள் كَانُوْۤا இருக்கின்றனர் اِخْوَانَ சகோதரர்களாக الشَّيٰطِيْنِ‌ ؕ ஷைத்தான்களின் وَكَانَ இன்னும் இருக்கின்றான் الشَّيْطٰنُ ஷைத்தான் لِرَبِّهٖ தன் இறைவனுக்கு كَفُوْرًا‏ நன்றி கெட்டவனாக
17:27. நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
17:27. ஏனென்றால், மிதமிஞ்சி செலவு செய்பவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இறைவனுக்குக்கூட நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கிறான்.
17:27. திண்ணமாக, வீண் செலவு செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர். ஷைத்தானோ தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கொன்றவனாய் இருக்கின்றான்.
17:27. நிச்சயமாக வீண் விரயம் செய்வோர், ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர், ஷைத்தானோ, தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கின்றான்.
17:28
17:28 وَاِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَآءَ رَحْمَةٍ مِّنْ رَّبِّكَ تَرْجُوْهَا فَقُلْ لَّهُمْ قَوْلًا مَّيْسُوْرًا‏
وَاِمَّا تُعْرِضَنَّ நீ புறக்கணித்தால் عَنْهُمُ அவர்களை ابْتِغَآءَ நாடி رَحْمَةٍ ஓர் அருளை مِّنْ இருந்து رَّبِّكَ உம் இறைவன் تَرْجُوْهَا ஆதரவு வைத்தவனாக/ அதை فَقُلْ ஆகவே சொல் لَّهُمْ அவர்களுக்கு قَوْلًا சொல்லை مَّيْسُوْرًا‏ மென்மையானது
17:28. (உம்மிடம் பொருளில்லாமல் அதற்காக) நீர் உம்முடைய இறைவனின் அருளை ஆதரவு வைத்து (அதை) எதிர்ப்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் எவரேனும் எதுவும் கேட்டு,) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால், (அப்போது) அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக!
17:28. (நபியே! உம்மிடம் பொருள்கள் இல்லாமல் அதற்காக) நீர் உமது இறைவனின் அருளை எதிர் பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் யாரேனும் வந்து ஏதும் கேட்டு) அவர்களை நீர் புறக்கணிக்கும் படி நேரிட்டால் (அவர்களுடன் கடுகடுப்பாகப் பேசாதீர்.) மிக்க அன்பான வார்த்தைகளையே அவர்களுக்குக் கூறுவீராக.
17:28. உம் இறைவனின் அருளை நீர் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை (உறவினர்கள், வறியவர்கள் மற்றும் வழிப்போக்கர்களில் தேவையுடையோரை) நீர் புறக்கணிக்க நேரிட்டால், அவர்களுக்கு இதமாகப் பதில் சொல்வீராக!
17:28. (நபியே!) நீர் உமதிரட்சகனின் அருளை எதிர்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் யாரேனும் வந்து ஏதேனும் பொருள் கேட்டு, நீர் ஒன்றும் கொடுக்க இயலாமல் போய்) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால் அவர்களுக்கு (அன்பான) கடினமில்லாச் சொல்லையே கூறுவீராக!
17:29
17:29 وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُوْلَةً اِلٰى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُوْمًا مَّحْسُوْرًا‏
وَلَا تَجْعَلْ ஆக்காதே يَدَكَ உனது கையை مَغْلُوْلَةً விலங்கிடப்பட்டதாக اِلٰى عُنُقِكَ உன் கழுத்தில் تَبْسُطْهَا அதை كُلَّ الْبَسْطِ முற்றிலும் விரித்ததாக فَتَقْعُدَ அதனால் தங்கிவிடுவாய் مَلُوْمًا பழிக்கப்பட்டவராக مَّحْسُوْرًا‏ முடக்கப்பட்டவராக
17:29. (உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்.
17:29. (உமது பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உமது கைகளைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்! (உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உமது கையை முற்றிலும் விரித்து விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும் முடைப்பட்டவராகவும் தங்கிவிடுவீர்.
17:29. உமது கையை கழுத்தோடு சேர்த்துக் கட்டிவிடாதீர்; முற்றிலும் அதனை விரித்து விடாதீர். அப்படிச் செய்தால் பழிப்புக்குரியவராகவும் இயலாதவராகவும் நீர் ஆகிவிடுவீர்.
17:29. மேலும், (உலோபியைப் போன்று செலவு செய்யாது) உம்முடைய கையை உம்முடைய கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர்! அன்றியும் (உம்மிடம் இருப்பதை செலவழித்துவிட்டு) அ(க்கையான)தை ஒரே விரிப்பாக விரித்தும் விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராக முடைப்பட்டவராக உட்கார்ந்துவிடுவீர்.
17:30
17:30 اِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ؕ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًۢا بَصِيْرًا‏
اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் يَبْسُطُ விரிவாக்குகின்றான் الرِّزْقَ வாழ்வாதாரத்தை لِمَنْ يَّشَآءُ தான் நாடியவர்களுக்கு وَيَقْدِرُ‌ؕ இன்னும் அளவாகக் கொடுக்கின்றான் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் بِعِبَادِهٖ தன் அடியார்களை خَبِيْرًۢا ஆழ்ந்தறிபவனாக بَصِيْرًا‏ உற்று நோக்குபவனாக
17:30. நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.  
17:30. நிச்சயமாக உமது இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்து) அளவாக கொடுக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்கறிந்தவனாகவும், உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான். (ஆதலால், ஒவ்வொருவரின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கிறான்.)
17:30. திண்ணமாக உம் இறைவன், தான் நாடுவோர்க்குத் தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான். திண்ணமாக, அவன் தன்னுடைய அடிமைகளை நன்கறிபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
17:30. நிச்சயமாக உமதிரட்சகன், தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விரிவாகக் கொடுக்கின்றான், (தான் நாடியவர்களுக்கு) அளவாகவும் கொடுக்கின்றான், (ஏனென்றால்) நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் தன்மை)களை நன்குணர்ந்தவனாக பார்ப்பவனாக இருக்கின்றான்.
17:31
17:31 وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ خَشْيَةَ اِمْلَاقٍ‌ؕ نَحْنُ نَرْزُقُهُمْ وَاِيَّاكُمْ‌ؕ اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْاً كَبِيْرًا‏
وَلَا تَقْتُلُوْۤا கொல்லாதீர்கள் اَوْلَادَكُمْ குழந்தைகளை/உங்கள் خَشْيَةَ பயந்து اِمْلَاقٍ‌ؕ வறுமையை نَحْنُ نَرْزُقُهُمْ நாம்/உணவளிக்கின்றோம்/அவர்களுக்கு وَاِيَّاكُمْ‌ؕ இன்னும் உங்களுக்கு اِنَّ நிச்சயமாக قَتْلَهُمْ கொல்வது/அவர்களை كَانَ இருக்கிறது خِطْاً குற்றமாக كَبِيْرًا‏ பெரியது
17:31. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
17:31. (மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள். நாம்தான் அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறோம். அவர்களைக் கொலை செய்வது நிச்சயமாக (அடாத) பெரும் பாவமாகும்.
17:31. வறுமைக்கு அஞ்சி உங்கள் பிள்ளைகளைக் கொலை செய்யாதீர்கள்! நாம்தாம் அவர்களுக்கும் உணவளிக்கிறோம்; உங்களுக்கும் உணவளிக்கிறோம். உண்மையில், அவர்களைக் கொலை செய்வது பெரும் பாவமாகும்.
17:31. (மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள், அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கைத் தேவைகளை) வழங்குகிறோம், நிச்சயமாக அவர்களைக் கொலை செய்வது பெரும் குற்றமாக இருக்கிறது.
17:32
17:32 وَلَا تَقْرَبُوا الزِّنٰٓى اِنَّهٗ كَانَ فَاحِشَةً  ؕ وَسَآءَ سَبِيْلًا‏
وَلَا تَقْرَبُوا நெருங்காதீர்கள் الزِّنٰٓى விபச்சாரத்தை اِنَّهٗ நிச்சயமாக அது كَانَ இருக்கின்றது فَاحِشَةً  ؕ மானக்கேடானதாக وَسَآءَ இன்னும் கெட்ட(து) سَبِيْلًا‏ வழி
17:32. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
17:32. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்கவும் வேண்டாம்.ஏனென்றால், நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
17:32. மேலும், விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்! திண்ணமாக, அது மானங்கெட்ட செயலாகவும், மிகத் தீய வழியாகவும் இருக்கிறது.
17:32. (விசுவாசங்கொண்டோரே! நீங்கள் விபச்சாரத்தையும் நெருங்காதீர்கள், நிச்சயமாக அது, மானக்கேடானதாக இருக்கிறது, இன்னும், அது (மனித குலத்திற்கு பெரும்கேடு விளைவிக்கும்) வழியால் மிகக் கெட்டது.
17:33
17:33 وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ‌ ؕ وَمَنْ قُتِلَ مَظْلُوْمًا فَقَدْ جَعَلْنَا لِـوَلِيِّهٖ سُلْطٰنًا فَلَا يُسْرِفْ فِّى الْقَتْلِ‌ ؕ اِنَّهٗ كَانَ مَنْصُوْرًا‏
وَلَا تَقْتُلُوا கொல்லாதீர்கள் النَّفْسَ உயிரை الَّتِىْ எது حَرَّمَ தடுத்தான் اللّٰهُ அல்லாஹ் اِلَّا بِالْحَـقِّ‌ ؕ உரிமையின்றி وَمَنْ எவர் قُتِلَ கொல்லப்பட்டார் مَظْلُوْمًا அநீதி செய்யப்பட்டவராக فَقَدْ جَعَلْنَا ஏற்படுத்தினோம் لِـوَلِيِّهٖ உறவினருக்கு/ அவருடைய سُلْطٰنًا அதிகாரத்தை فَلَا يُسْرِفْ ஆகவே, அவர் அளவு கடக்க வேண்டாம் فِّى الْقَتْلِ‌ ؕ கொல்வதில் اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருக்கிறார் مَنْصُوْرًا‏ உதவி செய்யப்பட்டவராக
17:33. (கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்.
17:33. (எவரையும் கொலை செய்வது ஆகாதென்று) அல்லாஹ் தடுத்திருக்க, நீங்கள் எம்மனிதனையும் நியாயமின்றி கொலை செய்து விடாதீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டுவிட்டால், அவனுடைய வாரிசுகளுக்கு(ப் பழிவாங்க) நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம். ஆனால், (கொலையாளியான) அவனைப் பழிவாங்குவதில் அளவு கடந்து (சித்திரவதை செய்து)விட வேண்டாம். நிச்சயமாக அவன் (பழிவாங்க) உதவி செய்யப்படுவான். (அதாவது: கொலைக்கு பழிவாங்க வாரிசுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.)
17:33. மேலும், இறைவன் தடுத்துள்ள எந்த ஓர் உயிரையும் கொலை செய்யாதீர்கள்; நியாயத்தின் அடிப்படையிலன்றி! மேலும், யாரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டால், அதற்குப் பழிவாங்கக் கோரும் உரிமையை அவருடைய பொறுப்பாளருக்கு நாம் அளித்திருக்கின்றோம். ஆனால் (பழிக்குப் பழியாகச் செய்யும்) கொலையில், அவர் வரம்பு மீற வேண்டாம். நிச்சயமாக அவர் உதவி செய்யப்படுவார்.
17:33. மேலும் அல்லாஹ் தடுத்துள்ள எந்த உயிரையும் உரிமையின்றிக் கொலை செய்யாதீர்கள், எவரேனும் அநீதியிழைக்கப்பட்டவராக கொலை செய்யப்பட்டு விட்டால், (பழி வாங்க) அவனுடைய வாரிசுக்கு நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம்; ஆகவே (பழிவாங்க) கொலை செய்வதில் அவன் வரம்பு கடந்துவிட வேண்டாம், நிச்சயமாக (கொலையுண்டவரின் வாரிசாகிய) அவர் (நீதியைக்கொண்டு) உதவி செய்யப்பட்டவராவார்.
17:34
17:34 وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِىْ هِىَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّهٗ‌ وَاَوْفُوْا بِالْعَهْدِ‌ۚ اِنَّ الْعَهْدَ كَانَ مَسْــــٴُـوْلًا‏
وَلَا تَقْرَبُوْا நெருங்காதீர்கள் مَالَ செல்வத்தை الْيَتِيْمِ அநாதையின் اِلَّا தவிர بِالَّتِىْ எதில் هِىَ அது اَحْسَنُ மிக அழகியது حَتّٰى வரை يَبْلُغَ அவர் அடையும் اَشُدَّهٗ‌ தன் வாலிபத்தை وَاَوْفُوْا இன்னும் நிறைவேற்றுங்கள் بِالْعَهْدِ‌ۚ ஒப்பந்தத்தை اِنَّ நிச்சயமாக الْعَهْدَ ஒப்பந்தம் كَانَ இருக்கிறது مَسْــــٴُـوْلًا‏ விசாரிக்கப்படுவதாக
17:34. அநாதைகள் பிராயமடையும் வரை, (அவர்களின் பொறுப்பேற்றிருக்கும்) நீங்கள், நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள், இன்னும் (நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்.
17:34. (நம்பிக்கையாளர்களே!) அநாதைக் குழந்தைகள் வாலிபத்தை அடையும் வரை (அவர்களுடைய பொருளுக்குப் பாதுகாப்பாளராக இருந்தால்) நீங்கள் நியாயமான முறையிலேயே தவிர அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள். உங்கள் வாக்குறுதியை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், மறுமையில் வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும்.
17:34. நேர்மையான முறையிலன்றி அநாதைகளின் சொத்தை நெருங்காதீர்கள்; அவர்கள் வாலிபத்தை அடையும்வரை! மேலும், ஒப்பந்தத்தை முறையாகப் பேணி வாழுங்கள். ஏனெனில், ஒப்பந்தம் குறித்து நீங்கள் விசாரணை செய்யப்பட்டே தீருவீர்கள்!
17:34. மேலும், (விசுவாசங்கொண்டோரே! அநாதையின் செல்வத்திற்கு – அவர் தன் பருவ வயதை எய்தும் வரையில் எது அழகிய முறையோ அதைத் தவிர – (வேறு வழியில் அதை அனுபவிக்க) நீங்கள் நெருங்காதீர்கள், இன்னும், வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள், (ஏனெனில்) நிச்சயமாக வாக்குறுதி (மறுமையில்) விசாரிக்கப்படக் கூடியதாக இருக்கின்றது.
17:35
17:35 وَاَوْفُوا الْـكَيْلَ اِذَا كِلْتُمْ وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيْمِ‌ؕ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا‏
وَاَوْفُوا இன்னும் முழுமையாக்குங்கள் الْـكَيْلَ அளவையை اِذَا كِلْتُمْ நீங்கள் அளந்தால் وَزِنُوْا இன்னும் நிறுங்கள் بِالْقِسْطَاسِ தராசைக் கொண்டு الْمُسْتَقِيْمِ‌ؕ சரியானது ذٰ لِكَ அது خَيْرٌ மிகச் சிறந்தது وَّاَحْسَنُ மிக அழகியது تَاْوِيْلًا‏ முடிவால்
17:35. மேலும் நீங்கள் அளந்தால், அளவைப் பூர்த்தியாக அளவுங்கள்; (இன்னும்) சரியான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள். இதுவே நன்மையுடையதாகவும், முடிவில் (பலன் தருவதில்) அழகானதுமாகும்.
17:35. நீங்கள் அளந்தால் முழுமையாக அளங்கள்; (நிறுத்தால்) சரியான எடையைக் கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) மிக்க நன்று; மிக்க அழகான பலனையும் தரும்.
17:35. மேலும் நீங்கள் அளந்து கொடுக்கும்போது நிறைவாக அளந்து கொடுங்கள். எடைபோடும்போது சரியான தராசு கொண்டு எடை போடுங்கள். இதுவே முறையானதும் (இறுதி முடிவைப் பொறுத்து) மிக நல்லதுமாகும்.
17:35. நீங்கள் அளந்தால், அளவை (குறைவின்றி) நிறைவு செய்யுங்கள், (நிறுத்தால்) சரியான தராசைக் கொண்டு நிறுங்கள், இது (உங்களுக்கு) மிக்க சிறந்ததும், முடிவால் மிக அழகானதுமாகும்.
17:36
17:36 وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌ ؕ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا‏
وَلَا تَقْفُ பின் தொடராதே مَا எதை لَـيْسَ இல்லை لَـكَ உனக்கு بِهٖ அதில் عِلْمٌ‌ ؕ கல்வி அறிவு اِنَّ நிச்சயமாக السَّمْعَ செவி وَالْبَصَرَ இன்னும் பார்வை وَالْفُؤَادَ இன்னும் உள்ளம் كُلُّ எல்லாம் اُولٰۤٮِٕكَ இவை كَانَ இருக்கின்றன عَنْهُ அவற்றைப் பற்றி مَسْــٴُـوْلًا‏ விசாரிக்கப் படுபவையாக
17:36. எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.
17:36. (நபியே!) நீர் அறியாத ஒரு விஷயத்தை பின் தொடராதீர்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்.
17:36. உங்களிடம் எதைப்பற்றிய அறிவு இல்லையோ அதைப் பின்தொடராதீர்கள். திண்ணமாக காது, கண், இதயம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் விசாரிக்கப்பட்டே தீரும்.
17:36. (நபியே!) எதைப் பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின் தொடராதீர்! (ஏனெனில்) நிச்சயமாக செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் - அதனைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.
17:37
17:37 وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا‌ ۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا‏
وَلَا تَمْشِ இன்னும் நடக்காதே فِى الْاَرْضِ பூமியில் مَرَحًا‌ ۚ கர்வம் கொண்டவனாக اِنَّكَ நிச்சயமாக நீ لَنْ تَخْرِقَ அறவே நீ கிழிக்க(வும்) முடியாது الْاَرْضَ பூமியை وَلَنْ تَبْلُغَ இன்னும் அறவே நீ அடைய(வும்) முடியாது الْجِبَالَ மலைகளின் طُوْلًا‏ உயரத்தை
17:37. மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.
17:37. பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உம்மால் முடியாது.
17:37. மேலும், பூமியில் செருக்காக நடக்காதீர்கள். ஏனெனில், உம்மால் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையளவுக்கு உயர்ந்துவிடவும் முடியாது!
17:37. மேலும், பூமியில் கர்வம் கொண்டு நீர் நடக்க வேண்டாம், (அவ்வாறு நீர் நடப்பதால்), நிச்சயமாக நீர் பூமியை (ஆழத்தால்) பிளந்து விடவே மாட்டீர், இன்னும், உயரத்தால் மலைகளை அடைந்துவிடவே மாட்டீர்.
17:38
17:38 كُلُّ ذٰ لِكَ كَانَ سَيِّئُهٗ عِنْدَ رَبِّكَ مَكْرُوْهًا‏
كُلُّ எல்லாம் ذٰ لِكَ இவை كَانَ இருக்கின்றது سَيِّئُهٗ இவற்றின் தீமை عِنْدَ இடம் رَبِّكَ உமது இறைவன் مَكْرُوْهًا‏ வெறுக்கப்பட்டதாக
17:38. இவையனைத்தின் தீமையும் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கிறது.
17:38. இவை அனைத்தும் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்ட தீய காரியங்களாகும்.
17:38. இவை ஒவ்வொன்றிலுமுள்ள தீமை உம் இறைவனிடம் வெறுப்புக்குரியதாகும்.
17:38. (மேற் கூறப்பட்ட) அவை ஒவ்வொன்றும் - அதன் தீமை உமதிரட்சகனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கின்றது.
17:39
17:39 ذٰ لِكَ مِمَّاۤ اَوْحٰۤى اِلَيْكَ رَبُّكَ مِنَ الْحِكْمَةِ‌ ؕ وَلَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتُلْقٰى فِىْ جَهَنَّمَ مَلُوْمًا مَّدْحُوْرًا‏
ذٰ لِكَ இவை مِمَّاۤ எதிலிருந்து اَوْحٰۤى வஹீ அறிவித்தான் اِلَيْكَ உமக்கு رَبُّكَ உம் இறைவன் مِنَ இருந்து الْحِكْمَةِ‌ ؕ ஞானம் وَلَا تَجْعَلْ இன்னும் ஆக்காதீர் مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اِلٰهًا ஒரு கடவுளை اٰخَرَ வேறு فَتُلْقٰى எறியப்படுவீர் فِىْ جَهَنَّمَ நரகில் مَلُوْمًا இகழப்பட்டவராக مَّدْحُوْرًا‏ தூரமாக்கப்பட்டவராக
17:39. இவையெல்லாம் உம்முடைய இறைவன் உமக்கு வஹீ (மூலம்) அறிவித்துள்ள ஞான உபதேசங்களாகும். ஆகவே அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஏற்படுத்தாதீர்; (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் துரத்தப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்.
17:39. (நபியே!) இவை உமது இறைவனால் உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்ட ஞான (உபதேச)ங்களாகும். ஆகவே, அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற்குரியவனாக ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும், சபிக்கப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்.
17:39. உம் இறைவன் உமக்கு வஹி மூலம் அறிவித்திருக்கின்ற அறிவார்ந்த விஷயங்களாகும் இவை. மேலும் (பாரீர்) அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்தாதீர்! அவ்வாறு செய்தால் பழிக்கப்பட்டவராயும் நன்மைகள் அனைத்தையும் இழந்தவராயும் நரகில் போடப்பட்டு விடுவீர்.
17:39. (நபியே! மேற்கூறப்பட்ட) அவை, தீர்க்கமான அறிவிலிருந்து உம்முடைய இரட்சகன் உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தவற்றில் உள்ளவையாகும், ஆகவே, அல்லாஹ்வுடன், மற்றோர் வணக்கத்திற்குரியவனை (இணையாக) ஆக்காதீர், (அவ்வாறு செய்தால்), அப்பொழுது நிந்திக்கப்பட்டவராக, (அல்லாஹ்வின் அனைத்து நன்மைகளிலிருந்து) தூரமாக்கப்பட்டவராக நரகத்தில் நீர் எறியப்படுவீர்.
17:40
17:40 اَفَاَصْفٰٮكُمْ رَبُّكُمْ بِالْبَـنِيْنَ وَ اتَّخَذَ مِنَ الْمَلٰۤٮِٕكَةِ اِنَاثًا‌ ؕ اِنَّكُمْ لَتَقُوْلُوْنَ قَوْلًا عَظِيْمًا‏
اَفَاَصْفٰٮكُمْ சொந்தமாக்கினானா?/உங்களுக்கு رَبُّكُمْ உங்கள் இறைவன் بِالْبَـنِيْنَ ஆண் பிள்ளைகளை وَ اتَّخَذَ இன்னும் ஆக்கிக் கொண்டான் مِنَ الْمَلٰۤٮِٕكَةِ வானவர்களிலிருந்து اِنَاثًا‌ ؕ பெண்களை اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَتَقُوْلُوْنَ உறுதியாக கூறுகின்றீர்கள் قَوْلًا கூற்றை عَظِيْمًا‏ பெரிய(து)
17:40. (முஷ்ரிக்குகளே!) உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் மக்களை அளித்து விட்டு (தனக்கு மட்டும்) மலக்குகளிலிருந்து பெண் மக்களை எடுத்துக்கொண்டானா? நிச்சயமாக நீங்கள் மிகப்பெரும் (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.  
17:40. (மனிதர்களே!) உங்கள் இறைவன், ஆண் மக்களை உங்களுக்குச் சொந்தமாக்கி விட்டு, வானவர்களைத் தனக்குப் பெண் மக்களாக ஆக்கிக் கொண்டானா? (இவ்வாறு கூறுகின்ற) நீங்கள் நிச்சயமாக மகத்தான (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.
17:40. எத்துணை ஆச்சரியமான விஷயம்! உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் மக்களை வழங்கி, தனக்கு வானவர்களைப் பெண் மக்களாய் எடுத்துக்கொண்டானா? திண்ணமாக உங்கள் நாவிலிருந்து நீங்கள் வெளிப்படுத்துவது பெரும் பொய்தான்!
17:40. (மனிதர்களே!) உங்கள் இரட்சகன் உங்களுக்கு (மட்டும்) ஆண் மக்களைத் தேர்ந்தெடுத்து விட்டு(த் தனக்கு மட்டும்) மலக்குகளிலிருந்து பெண் மக்களை ஆக்கிக் கொண்டானா? (இவ்வாறு கூறும்) நீங்கள், நிச்சயமாக, மகத்தான (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.
17:41
17:41 وَلَقَدْ صَرَّفْنَا فِىْ هٰذَا الْقُرْاٰنِ لِيَذَّكَّرُوْا ؕ وَمَا يَزِيْدُهُمْ اِلَّا نُفُوْرًا‏
وَلَقَدْ صَرَّفْنَا திட்டமாக விவரித்தோம் فِىْ هٰذَا الْقُرْاٰنِ இந்த குர்ஆனில் لِيَذَّكَّرُوْا ؕ அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக وَمَا அதிகப்படுத்தவில்லை يَزِيْدُهُمْ அவர்களுக்கு اِلَّا தவிர نُفُوْرًا‏ வெறுப்பை
17:41. இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை!
17:41. இவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்த குர்ஆனில் நிச்சயமாக நாம் பற்பல வகைகளில் (நல்லுபதேசங்களைக்) கூறியிருக்கிறோம். எனினும், (இவை அனைத்தும்) அவர்களுக்கு வெறுப்பையே தவிர அதிகப்படுத்தவில்லை.
17:41. மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் குர்ஆனில் (உண்மைகளை) விதவிதமாக நாம் விளக்கினோம். ஆனால், அவர்கள் சத்தியத்தை விட்டு மேலும் மேலும் விலகி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
17:41. இன்னும், அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக (இந்தக்) குர் ஆனில் நிச்சயமாக நாம் பற்பல வகையில் (நல்லுபதேசங்களைத் திரும்பத்திரும்பக்) கூறி இருக்கின்றோம், மேலும் புறக்கணிப்பைத் தவிர, (வேறெதனையும் அது அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.
17:42
17:42 قُلْ لَّوْ كَانَ مَعَهٗۤ اٰلِهَةٌ كَمَا يَقُوْلُوْنَ اِذًا لَّابْتَغَوْا اِلٰى ذِى الْعَرْشِ سَبِيْلًا‏
قُلْ கூறுவீராக لَّوْ كَانَ இருந்திருந்தால் مَعَهٗۤ அவனுடன் اٰلِهَةٌ பல கடவுள்கள் كَمَا يَقُوْلُوْنَ அவர்கள் கூறுவது போல் اِذًا அப்போது لَّابْتَغَوْا தேடியிருப்பார்கள் اِلٰى பக்கம் ذِى الْعَرْشِ அர்ஷ் உடையவன் سَبِيْلًا‏ ஒரு வழியை
17:42. (நபியே!) நீர் சொல்வீராக: அவர்கள் கூறுவதுபோல் அவனுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அப்போது அவை அர்ஷுடையவன் (அல்லாஹ் தஆலாவின்) அளவில் ஒரு வழியைத் தேடிக்கண்டு பிடித்துச் (சென்று) இருக்கும் என்று.
17:42. (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: நீங்கள் சொல்வது போல் அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அவை அர்ஷையுடைய (அல்லாஹ்வாகிய அ)வன் பக்கம் செல்லக்கூடிய வழியைக் கண்டுபிடித்து (அவனிடம் சென்றே) இருக்கும்.
17:42. (நபியே! இவர்களிடம்) நீர் கூறுவீராக: “இவர்கள் சொல்வது போல் அல்லாஹ்வுடன் வேறு கடவுளரும் இருந்திருந்தால், நிச்சயமாக அவர்கள் அர்ஷுடைய அதிபதியின் இடத்தை அடைவதற்குத் திண்ணமாக வழிவகையைத் தேடியிருப்பார்கள்.
17:42. (ஆகவே, நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக! அவர்கள் சொல்லுகின்றதைப்போன்று அவனுடன் வேறு வணக்கத்திற்குரியவர்கள் (தெய்வங்கள்) இருந்தால், அப்போது அர்ஷுடைய (அல்லாஹ்வாகிய அ)வனின் பக்கம் (அவனை மிகைக்க) ஒரு வழியை அவர்கள் தேடி இருப்பார்கள்.
17:43
17:43 سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يَقُوْلُوْنَ عُلُوًّا كَبِيْرًا‏
سُبْحٰنَهٗ அவன் மிகப் பரிசுத்தமானவன் وَتَعٰلٰى இன்னும் உயர்ந்துவிட்டான் عَمَّا எதை விட்டு يَقُوْلُوْنَ கூறுகிறார்கள் عُلُوًّا உயர்வாக كَبِيْرًا‏ மிகப் பெரியது
17:43. அவன் மிகவும் பரிசுத்தமானவன்; இன்னும் அவர்கள் கூறும் கூற்றுக்களை விட்டு அப்பாற்பட்டவனாக இருக்கின்றான்.
17:43. அவன் மிகப் பரிசுத்தமானவன். இவர்கள் கூறுகின்ற கூற்றில் இருந்து அவன் மிக்க உயர்ந்தவன்.
17:43. அவன் மிகத் தூய்மையானவனும், மிக உயர்ந்தவனும், மேலானவனும் ஆவான்; இவர்கள் கூறிக்கொண்டிருப்பதை விட்டு!
17:43. அவன் மிகப் பரிசுத்தமானவன், அவர்கள் கூறுவதை விட்டும் மிகப் பெரும் உயர்வாக (அவன்) உயர்ந்து விட்டான்.
17:44
17:44 تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبْعُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّ‌ؕ وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا يُسَبِّحُ بِحَمْدِهٖ وَلٰـكِنْ لَّا تَفْقَهُوْنَ تَسْبِيْحَهُمْ‌ؕ اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا‏
تُسَبِّحُ துதிக்கின்றன(ர்) لَهُ அவனையே السَّمٰوٰتُ வானங்கள் السَّبْعُ ஏழு وَالْاَرْضُ இன்னும் பூமி وَمَنْ இன்னும் எவர் فِيْهِنَّ‌ؕ இவற்றில் وَاِنْ இல்லை مِّنْ شَىْءٍ எந்த ஒரு பொருளும் اِلَّا தவிர يُسَبِّحُ துதிக்கிறது بِحَمْدِهٖ அவனைப் புகழ்ந்து وَلٰـكِنْ எனினும் لَّا تَفْقَهُوْنَ அறிய மாட்டீர்கள் تَسْبِيْحَهُمْ‌ؕ அவர்களின் துதியை اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கிறான் حَلِيْمًا மகா சகிப்பாளனாக غَفُوْرًا‏ மகா மன்னிப்பாளனாக
17:44. ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
17:44. ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்க வில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாக, மன்னிப்புடையவனாக இருக்கிறான்.
17:44. ஏழு வானங்களும் பூமியும் மற்றும் இவற்றிலுள்ள அனைத்துமே அவனுடைய தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றன. அவனைப் புகழ்வதுடன் அவனைத் துதி செய்து கொண்டிராத எந்த ஒரு பொருளும் இல்லை. ஆயினும், அவை துதி செய்வதை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. உண்மையில், அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும், மன்னித்தருள்பவனாகவும் இருக்கின்றான்.
17:44. ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவையும் அவனைத் துதி செய்கின்றன, (இவற்றில்) எப்பொருளும் அவனின் புகழைக் கொண்டு துதி செய்து கொண்டே தவிர இல்லை, எனினும், அவற்றின் துதியை நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்கள், நிச்சயமாக அவன் மிகச் சகித்துக் கொள்ளக்கூடியவனாக, மிக்க மன்னிக்கக் கூடியவனாக இருக்கின்றான்.
17:45
17:45 وَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ حِجَابًا مَّسْتُوْرًا ۙ‏
وَاِذَا قَرَاْتَ நீர் ஓதினால் الْقُرْاٰنَ குர்ஆனை جَعَلْنَا ஆக்கிவிடுவோம் بَيْنَكَ உமக்கு இடையில் وَبَيْنَ இன்னும் இடையில் الَّذِيْنَ எவர்கள் لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِالْاٰخِرَةِ மறுமையை حِجَابًا ஒரு திரையை مَّسْتُوْرًا ۙ‏ மறைக்கப்பட்டது
17:45. (நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கிடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை அமைத்து விடுகிறோம்.
17:45. (நபியே!) நீர் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் உமக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் தடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு திரையை ஆக்கி விடுகிறோம்.
17:45. நீர் குர்ஆனை ஓதும்போது உமக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் நாம் ஒரு திரையைப் போட்டு விடுகிறோம்.
17:45. மேலும், (நபியே!) நீர் குர் ஆனை ஓதினால் உமக்கும், மறுமையை நம்பிக்கை கொள்ளாதோருக்குமிடையில் மறைக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு திரையை நாம் ஆக்கி விடுகிறோம்.
17:46
17:46 وَّجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِىْۤ اٰذَانِهِمْ وَقْرًا‌ ؕ وَاِذَا ذَكَرْتَ رَبَّكَ فِى الْقُرْاٰنِ وَحْدَهٗ وَلَّوْا عَلٰٓى اَدْبَارِهِمْ نُفُوْرًا‏
وَّجَعَلْنَا ஆக்கிவிடுவோம் عَلٰى قُلُوْبِهِمْ அவர்களின் உள்ளங்கள் மீது اَكِنَّةً மூடிகளை يَّفْقَهُوْهُ அதை وَفِىْۤ اٰذَانِهِمْ وَقْرًا‌ ؕ இன்னும் காதுகளில்/அவர்களுடைய/கனத்தை وَاِذَا ذَكَرْتَ நீர் நினைவுகூர்ந்தால் رَبَّكَ உம் இறைவனை فِى الْقُرْاٰنِ குர்ஆனில் وَحْدَهٗ அவனை மட்டும் وَلَّوْا திரும்புகின்றனர் عَلٰٓى மீது اَدْبَارِهِمْ தங்கள் பின்புறங்கள் نُفُوْرًا‏ வெறுத்து
17:46. இன்னும், அவர்கள் அதனை விளங்கிக் கொள்வதை விட்டும் அவர்களுடைய இருதயங்களின் மேல் மூடிகளையும், அவர்களுடைய காதுகளின் மீது செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகிறோம்; இன்னும் குர்ஆனில், உம்முடைய இறைவன் ஒருவனை மட்டும் நீர் குறிப்பிடும் போது, அவர்கள் வெறுப்படைந்து தம் பின்புறங்களில் (திரும்பி விரண்டவர்களாகப்) பின்வாங்கி விடுகிறார்கள்.
17:46. அவர்களுடைய உள்ளங்களிலும், (அவர்கள்) அதை விளங்கிக் கொள்ள முடியாதவாறு திரையை அமைத்து அவர்களுடைய காதுகளைச் செவிடாக்கி விடுகிறோம். திரு குர்ஆனில் உமது இறைவன் ஒருவனைப்பற்றியே நீர் கூறிக் கொண்டிருந்தால், அவர்கள் வெறுத்துத் தங்கள் முதுகுப்புறமே (திரும்பிச்) சென்று விடுகின்றனர்.
17:46. எதையும் அவர்கள் புரிந்து கொள்ளாதவாறு அவர்களின் இதயங்கள் மீது உறைபோட்டு விடுகிறோம். மேலும், அவர்களின் காதுகளை மந்தமாக்கி விடுகிறோம். நீர் குர்ஆனில் உம்முடைய ஏகனாகிய அதிபதியைப் பற்றி எடுத்துரைக்கும்போது அவர்கள் வெறுப்போடு முகம் திருப்பிச் சென்றுவிடுகிறார்கள்.
17:46. மேலும், அவர்களுடைய இதயங்களின் மீது, அதனை அவர்கள் விளங்கிக் கொள்ள முடியாதவாறு திரைகளையும் (அமைத்து) அவர்களுடைய காதுகளில் அடைப்பையும் ஆக்கிவிடுகின்றோம், மேலும், குர் ஆனில் உம்முடைய இரட்சகனை (மட்டும் அவர்களின் கூட்டுக்காரர்களைத் தவிர்த்து) அவனைத் தனித்தவனாக நீர் கூறினால், அவர்கள் வெறுப்படைந்து தங்கள் பின் புறங்களில் (திரும்பிச்) சென்று விடுகின்றனர்.
17:47
17:47 نَحْنُ اَعْلَمُ بِمَا يَسْتَمِعُوْنَ بِهٖۤ اِذْ يَسْتَمِعُوْنَ اِلَيْكَ وَاِذْ هُمْ نَجْوٰٓى اِذْ يَقُوْلُ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا‏
نَحْنُ நாம் اَعْلَمُ மிக அறிந்தவர்கள் بِمَا எதற்காக يَسْتَمِعُوْنَ செவிமடுக்கின்றனர் بِهٖۤ அதை اِذْ يَسْتَمِعُوْنَ அவர்கள் செவிமடுக்கும் போது اِلَيْكَ உமக்கு وَاِذْ இன்னும் /போது هُمْ அவர்கள் نَجْوٰٓى தனித்து பேசுபவர்கள் اِذْ يَقُوْلُ கூறும் போது الظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள் اِنْ تَتَّبِعُوْنَ நீங்கள் பின்பற்றவில்லை اِلَّا ஓர் ஆடவரை رَجُلًا தவிர مَّسْحُوْرًا‏ (மனித இனத்தை சேர்ந்தவர்,) உண்ணவும் குடிக்கவும் செய்பவர்
17:47. (நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.
17:47. அவர்கள் உமக்கு செவி சாய்த்தால் என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் (தங்களுக்குள் உம்மைப் பற்றி) இரகசியமாகப் பேசிக்கொண்டால், “சூனியத்திற்குள்ளான மனிதனைத் தவிர (வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை'' என்று இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கிக்) கூறுகின்றனர் (என்பதையும் நாம் நன்கறிவோம்).
17:47. நீர் கூறுகின்றவற்றை அவர்கள் செவிதாழ்த்திக் கேட்கும்போது உண்மையில் எதனைக் கேட்கிறார்கள் என்பதையும், அவர்கள் தமக்கிடையே கிசுகிசுக்கும்போது என்ன பேசுகிறார்கள் என்பதையும் நாம் நன்கறிவோம். இந்த அக்கிரமக்காரர்கள் தமக்கிடையே கூறுகிறார்கள்: “இவரோ சூனியம் செய்யப்பட்டுள்ள மனிதர்; இவரைப் போய் நீங்கள் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கிறீர்களே!”
17:47. அவர்கள் உமக்குச் செவி சாய்க்கின்றபொழுது எதற்கு (என்ன நோக்கத்துடன்) செவி சாய்க்கிறார்கள் என்பதையும், மேலும், அவர்கள் (தங்களுக்குள்) இரகசியமாக ஆலோசனை செய்யும் சமயத்தில், “சூனியம் செய்யப்பட்ட மனிதனையேயன்றி (வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று அநியாயக்காரர்கள் (உம்மைப் பற்றிக்) கூறுகின்றபோதும் நாம் மிக்க அறிவோம்.
17:48
17:48 اُنْظُرْ كَيْفَ ضَرَبُوْا لَكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا يَسْتَطِيْعُوْنَ سَبِيْلًا‏
اُنْظُرْ கவனிப்பீராக كَيْفَ எவ்வாறு ضَرَبُوْا விவரித்தார்கள் لَكَ உமக்கு الْاَمْثَالَ தன்மைகளை فَضَلُّوْا ஆகவே வழிகெட்டனர் فَلَا يَسْتَطِيْعُوْنَ இயலமாட்டார்கள் سَبِيْلًا‏ வழி(பெற)
17:48. (நபியே!) உமக்கு அவர்கள் எத்தகைய உவமைகளைச் சொல்கிறார்கள் என்பதை கவனித்துப்பாரும்! ஆகவே, அவர்கள் வழிகெட்டு விட்டார்கள்; (நேரான) வழிக்கு அவர்கள் சக்திப்பெற மாட்டார்கள்.
17:48. (நபியே!) உமக்கு எத்தகைய பட்டம் சூட்டுகிறார்கள் என்பதை நீர் கவனிப்பீராக. இவர்கள் வழிகெட்டே விட்டார்கள். (நேரான) வழியை அடைய இவர்களால் முடியாது.
17:48. பாரும்! எப்படிப்பட்ட விஷயங்களையெல்லாம் இவர்கள் உம்மீது அள்ளி வீசுகிறார்கள். இவர்கள் வழிபிறழ்ந்து விட்டார்கள். இனி இவர்களுக்கு நேர்வழி கிடைக்கப்போவதில்லை.
17:48. (நபியே!) உமக்கு எப்படி உதாரணங்களை அவர்கள் கூறுகிறார்கள் என்பதை நீர் கவனிப்பீராக! (அவ்வாறு கூறுவதால்) அவர்கள் வழிகெட்டு விட்டார்கள், ஆகவே, (நேர்) வழியை அடைய அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்.”
17:49
17:49 وَقَالُوْۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا‏
وَقَالُوْۤا கூறுகிறார்கள் ءَاِذَا كُنَّا நாங்கள் ஆகிவிட்டால்? عِظَامًا எலும்புகளாக وَّرُفَاتًا இன்னும் மக்கியவர்களாக ءَاِنَّا ?/நிச்சயமாக நாம் لَمَبْعُوْثُوْنَ எழுப்பப்படுவோம் خَلْقًا படைப்பாக جَدِيْدًا‏ புதிய
17:49. இன்னும:; “(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களா?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
17:49. ‘‘நாம் (இறந்து) எலும்பாகி, உக்கி, மக்கிப்போனதன் பின்னர் புதிய ஒரு படைப்பாக உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று அவர்கள் கேட்கிறார்கள்.
17:49. அவர்கள் கேட்கிறார்கள்: “நாங்கள் வெறும் எலும்புகளாகி மண்ணோடு மண்ணாகிய பிறகு மீண்டும் புதிய படைப்பாய் எழுப்பப்படுவோமா?”
17:49. “நாங்கள் (இறந்து) எலும்புகளாகவும், மக்கிப் போனவையாகவும் ஆகி விட்டாலுமா நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்கள்? என்றும் அவர்கள் கேட்கின்றார்கள்.
17:50
17:50 قُلْ كُوْنُوْا حِجَارَةً اَوْ حَدِيْدًا‏
قُلْ கூறுவீராக كُوْنُوْا ஆகிவிடுங்கள் حِجَارَةً கல்லாக اَوْ حَدِيْدًا‏ அல்லது இரும்பாக
17:50. (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்.
17:50. (அதற்கு நபியே!) கூறுவீராக: நீங்கள் (உக்கி, மக்கி, மண்ணாவது என்ன?) கல்லாகவோ இரும்பாகவோ ஆகிவிடுங்கள்.
17:50. (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகிவிடுங்கள்.
17:50. (அதற்கு, நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகிவிடுங்கள் -
17:51
17:51 اَوْ خَلْقًا مِّمَّا يَكْبُرُ فِىْ صُدُوْرِكُمْ‌ۚ فَسَيَـقُوْلُوْنَ مَنْ يُّعِيْدُنَا‌ ؕ قُلِ الَّذِىْ فَطَرَكُمْ اَوَّلَ مَرَّةٍ‌ ۚ فَسَيُنْغِضُوْنَ اِلَيْكَ رُءُوْسَهُمْ وَيَقُوْلُوْنَ مَتٰى هُوَ‌ ؕ قُلْ عَسٰٓى اَنْ يَّكُوْنَ قَرِيْبًا‏
اَوْ அல்லது خَلْقًا ஒரு படைப்பாக مِّمَّا உள்ளவற்றில் يَكْبُرُ பெரியதாக فِىْ صُدُوْرِكُمْ‌ۚ உங்கள் நெஞ்சங்களில் فَسَيَـقُوْلُوْنَ அவர்கள் கூறட்டும் مَنْ யார்? يُّعِيْدُنَا‌ மீட்பார் قُلِ கூறுவீராக الَّذِىْ எவன் فَطَرَكُمْ படைத்தான்/உங்களை اَوَّلَ முதல் مَرَّةٍ‌ ۚ முறையாக فَسَيُنْغِضُوْنَ ஆகவே ஆட்டுவார்கள் اِلَيْكَ உம் பக்கம் رُءُوْسَهُمْ தலைகளை/தங்கள் وَيَقُوْلُوْنَ பிறகு கூறுவார்கள் مَتٰى எப்போது هُوَ‌ ؕ அது قُلْ கூறுவீராக عَسٰٓى கூடும் اَنْ يَّكُوْنَ இருக்க قَرِيْبًا‏ சமீபமாக
17:51. “அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;” (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). “எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?” என்று அவர்கள் கேட்பார்கள். “உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!” என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக!
17:51. அல்லது மிகப் பெரிதென உங்கள் மனதில் தோன்றும் வேறொரு பொருளாக ஆகிவிடுங்கள். இவ்வாறு மாறிய பின்னர் ‘‘எங்களை எவன் உயிர்ப்பிப்பான்?'' என்று அவர்கள் கேட்கட்டும். (அவ்வாறு கேட்டால் நபியே! அவர்களை நோக்கி) ‘‘உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்னும் உங்களை எழுப்புவான்)'' என்று கூறுவீராக. அதற்கவர்கள் தங்கள் தலையை உங்கள் அளவில் சாய்த்து ‘‘அந்நாள் எப்பொழுது (வரும்)?'' என்று கேட்பார்கள். அதற்கு (அவர்களை நோக்கி ‘‘அது தூரத்தில் இல்லை,) வெகு சீக்கிரத்தில் வந்துவிடலாம்'' என்று கூறுவீராக.
17:51. அல்லது உயிர் பெறவே முடியாது என்று நீங்கள் கருதுகின்ற இதைவிடவும் கடினமான வேறொரு பொருளாய் ஆகிவிடுங்கள்!” (எப்படியானாலும் நீங்கள் எழுப்பப்படுவீர்கள்!) “மீண்டும் எங்களை வாழ்க்கையின் பக்கம் திரும்பக்கொண்டு வருபவர் யார்?” என்று அவர்கள் அவசியம் கேட்பார்கள். நீர் கூறும்: “எவன், உங்களை முதல் தடவை படைத்தானோ, அவன்தான்!” தங்களின் தலையை ஆட்டி ஆட்டி அவர்கள் உம்மிடம் கேட்பார்கள், “சரி, அது எப்போது நிகழும்?” என்று! நீர் பதில் கூறும்: “வியப்பென்ன? மிக விரைவிலேயே அது நிகழக்கூடும்.”
17:51. “அல்லது உங்கள் நெஞ்சங்களில் பெரிதாக இருப்பதிலிருந்து (அவ்வாறு தோன்றும்) ஒரு படைப்பாக ஆகிவிடுங்கள்.” (இவ்வாறு ஆகிய) பின்னர் எங்களை எவன் (உயிர் கொடுத்து) மீட்டுவான் என்று அவர்கள் கேட்பார்கள், (அவ்வாறு கேட்டால், நபியே! நீர்) “உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்னும் உங்களை எழுப்புவான்) என்று கூறுவீராக! அப்போது அவர்கள் தங்கள் சிரசுகளை உம் அளவில் சாய்த்து, “அது எப்பொழுது (வரும்)?” என்றும் கேட்பார்கள், (அதற்கு) “அது வெகு சமீபத்தில் ஏற்பட்டுவிடலாம்” என்று நீர் கூறுவீராக!
17:52
17:52 يَوْمَ يَدْعُوْكُمْ فَتَسْتَجِيْبُوْنَ بِحَمْدِهٖ وَتَظُنُّوْنَ اِنْ لَّبِثْتُمْ اِلَّا قَلِيْلًا‏
يَوْمَ يَدْعُوْكُمْ நாள்/அழைப்பான்/உங்களை فَتَسْتَجِيْبُوْنَ பதில் அளிப்பீர்கள் بِحَمْدِ புகழ்ந்து هٖ அவனுடைய وَتَظُنُّوْنَ இன்னும் எண்ணுவீர்கள் اِنْ لَّبِثْتُمْ நீங்கள் தங்கவில்லை اِلَّا தவிர قَلِيْلًا‏ சொற்பமாக
17:52. உங்களை (இறுதியில்) அவன் அழைக்கும் நாளில், நீங்கள் அவன் புகழை ஓதியவர்களாக பதில் கூறுவீர்கள்; (மரணத்திற்குப் பின்) சொற்ப(கால)மே தங்கியிருந்ததாக நீங்கள் நினைப்பீர்கள்.
17:52. (இன்றைய தினம் நீங்கள் இறைவனை வெறுத்தபோதிலும் அவன்) உங்களை (விசாரணைக்காக) அழைக்கின்ற நாளில் நீங்கள் அவனைப் புகழ்ந்து கொண்டே அவனிடம் வருவீர்கள். (இறந்த பின்) வெகு சொற்ப(நேர)மே தவிர தங்கியிருக்கவில்லை என்றும் (அன்றைய தினம்) நீங்கள் எண்ணுவீர்கள்!
17:52. எந்நாளில் அவன் உங்களை அழைப்பானோ அந்நாளில் அவனது அழைப்பிற்குப் பதில் அளிக்கும் வகையில், நீங்கள் அவனது புகழ்பாடிக் கொண்டு வருவீர்கள். ‘நாம் சிறிதுகாலமே இந்நிலையில் கிடந்திருந்தோம்’ என்பதுதான் அப்பொழுது உங்களுடைய நினைப்பாக இருக்கும்!
17:52. உங்களை அவன் அழைக்கும் நாளில், நீங்கள் அவனின் புகழைக்கொண்டு (அதைக் கூறியவர்களாக) பதில் கூறுவீர்கள், (இறந்த பின்) வெகு சொற்ப (நேர)மேயன்றி தங்கியிருக்கவில்லை – என்றும் (அன்றையத் தினம்) நீங்கள் எண்ணுவீர்கள்.
17:53
17:53 وَقُلْ لِّعِبَادِىْ يَقُوْلُوا الَّتِىْ هِىَ اَحْسَنُ‌ؕ اِنَّ الشَّيْطٰنَ يَنْزَغُ بَيْنَهُمْ‌ؕ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلْاِنْسَانِ عَدُوًّا مُّبِيْنًا‏
وَقُلْ கூறுவீராக لِّعِبَادِىْ என் அடியார்களுக்கு يَقُوْلُوا அவர்கள் கூறவும் الَّتِىْ எது هِىَ அது اَحْسَنُ‌ؕ மிக அழகியது اِنَّ நிச்சயமாக الشَّيْطٰنَ ஷைத்தான் يَنْزَغُ குழப்பம், கெடுதி செய்வான் بَيْنَهُمْ‌ؕ அவர்களுக்கிடையில் اِنَّ الشَّيْطٰنَ நிச்சயமாக ஷைத்தான் كَانَ இருக்கின்றான் لِلْاِنْسَانِ மனிதனுக்கு عَدُوًّا எதிரியாக مُّبِيْنًا‏ தெளிவான
17:53. (நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமஞ் செய்வான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான்.
17:53. (நபியே! எனக்கு கட்டுப்பட்ட) என் அடியார்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் (எந்த மனிதருடன் பேசியபோதிலும்) எது மிக அழகியதோ அதையே கூறவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (கெட்ட வார்த்தைகளைக் கூறும்படி செய்து) கெடுதலே செய்வான். (ஏனென்றால்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (ஆகவே, எச்சரிக்கையாக இருங்கள்.)
17:53. மேலும், (நபியே! நம்பிக்கையாளர்களான) என் அடியார்களிடம், அவர்கள் மிகவும் சிறந்த பேச்சைத்தான் பேச வேண்டும் என்று நீர் கூறுவீராக! உண்மையாதெனில், ஷைத்தான் மனிதர்களிடையே குழப்பம் உண்டாக்க முயற்சி செய்கிறான். திண்ணமாக, ஷைத்தான் மனிதர்களுக்கு வெளிப்படையான பகைவன் ஆவான்.
17:53. என்னுடைய அடியார்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! (எம் மனிதருடன் பேசியபோதிலும்) எது நல்லதோ அதையே அவர்கள் கூறவும் நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் குழப்பம் செய்வான், (ஏனென்றால்) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான விரோதியாக இருக்கின்றான்.
17:54
17:54 رَبُّكُمْ اَعْلَمُ بِكُمْ‌ؕ اِنْ يَّشَاْ يَرْحَمْكُمْ اَوْ اِنْ يَّشَاْ يُعَذِّبْكُمْ ‌ؕ وَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ وَكِيْلًا‏
رَبُّكُمْ உங்கள் இறைவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِكُمْ‌ؕ உங்களை اِنْ يَّشَاْ அவன் நாடினால் يَرْحَمْكُمْ اَوْ அருள் புரிவான்/உங்களுக்கு/அல்லது اِنْ يَّشَاْ அவன் நாடினால் يُعَذِّبْكُمْ வேதனை செய்வான் وَمَاۤ اَرْسَلْنٰكَ உம்மை நாம் அனுப்பவில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَكِيْلًا‏ பொறுப்பாளராக
17:54. உங்களுடைய இறைவன் உங்களைப் பற்றி நன்கறிவான்; அவன் நாடினால் உங்களுக்கு கிருபை செய்வான்; அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான்; நாம் உம்மை அவர்களுக்கு வகீலாக (பொறுப்பாளியாக) அனுப்பவில்லை.
17:54. (மனிதர்களே!) உங்களை உங்கள் இறைவன் நன்கறிந்தே இருக்கிறான். அவன் விரும்பினால் உங்களுக்கு அருள்புரிவான் அல்லது அவன் விரும்பினால் உங்களை வேதனை செய்வான். ஆகவே, (நபியே!) நாம் உம்மை அவர்களுக்குப் பொறுப்பாளியாக அனுப்பவில்லை.
17:54. உங்கள் இறைவன் உங்கள் நிலைமையை நன்கு அறிந்தவனாக இருக்கிறான். அவன் நாடினால் உங்களுக்கு அருள் புரிவான்; அவன் நாடினால் உங்களைத் தண்டிப்பான். மேலும் (நபியே!) மக்களுக்குப் பொறுப்பேற்பவராக நாம் உம்மை அனுப்பி வைக்கவில்லை.
17:54. உங்களுடைய இரட்சகன் உங்களைப் (பற்றி) மிக்க அறிந்தவன், அவன் நாடினால் உங்களுக்கு அவன் அருள் புரிவான், அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான். இன்னும், அவர்கள் மீது பொறுப்பாளராக (நபியே!) உம்மை நாம் அனுப்பவில்லை.
17:55
17:55 وَرَبُّكَ اَعْلَمُ بِمَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِيّٖنَ عَلٰى بَعْضٍ‌ وَّاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‏
وَرَبُّكَ உம் இறைவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَنْ எவர்களை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமி وَلَقَدْ திட்டவட்டமாக فَضَّلْنَا மேன்மைப்படுத்தினோம் بَعْضَ சிலரை النَّبِيّٖنَ நபிமார்களில் عَلٰى بَعْضٍ‌ சிலர் மீது وَّاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் دَاوٗدَ தாவூதுக்கு زَبُوْرًا‏ ஜபூரை
17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
17:55. வானங்களிலும் பூமியிலும் என்னென்ன இருக்கிறது என்பதை உம் இறைவன் நன்கறிவான். (நபியே! உமது இறைவனாகிய) நாம் நபிமார்களில் சிலரை சிலர்மீது மெய்யாகவே மேன்மையாக்கி வைத்து, தாவூது (நபி)க்கு ‘ஜபூர்' என்னும் வேதத்தைக் கொடுத்தோம்.
17:55. உம் இறைவன் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள படைப்புகள் பற்றி அதிகம் அறிந்திருக்கிறான். நாம் தூதர்களில் சிலருக்கு சிலரைவிட சிறப்பளித்திருக்கிறோம். மேலும், நாம் தாவூதுக்கு ஜபூர் வேதத்தை வழங்கியிருந்தோம்.
17:55. வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவர்களைப் பற்றியும் உமதிரட்சகன் மிக்க அறிந்தவன், நபிமார்களில் சிலரை, வேறு சிலரை விடவும் நிச்சயமாக நாம் மேன்மையாக்கி வைத்தோம், இன்னும் (நபி) தாவூதுக்கு ஜபூர் (என்னும்) வேதத்தை நாம் கொடுத்தோம்.
17:56
17:56 قُلِ ادْعُوا الَّذِيْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِهٖ فَلَا يَمْلِكُوْنَ كَشْفَ الضُّرِّ عَنْكُمْ وَلَا تَحْوِيْلًا‏
قُلِ கூறுவீராக ادْعُوا அழையுங்கள் الَّذِيْنَ எவர்களை زَعَمْتُمْ கூறினீர்கள் مِّنْ دُوْنِهٖ அவனையன்றி فَلَا يَمْلِكُوْنَ உரிமை, ஆற்றல் பெற மாட்டார்கள் كَشْفَ நீக்குவதற்கு الضُّرِّ துன்பத்தை عَنْكُمْ உங்களை விட்டு وَلَا تَحْوِيْلًا‏ இன்னும் திருப்புவதற்கும்
17:56. அவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பவர்களை அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை நிவர்த்திக்கவோ அல்லது திருப்பிவிடவோ சக்தி பெறவில்லை (என்பதை அறிவீர்கள்).
17:56. (நபியே! இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ்வைத் தவிர்த்து (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே அவற்றை நீங்கள் (உங்கள் சிரமங்களை நீக்க) அழையுங்கள். (அவ்வாறு அழைத்தால்) அவை உங்கள் சிரமத்தை நீக்கி வைக்கவோ அல்லது (அதைத்) தட்டிவிடவோ சக்திபெறாது (என்பதை அறிந்து கொள்வீர்கள்).
17:56. இவர்களிடம் கூறும்: “அல்லாஹ்வை விடுத்து (உங்கள் காரியங்களை நிறைவேற்றுபவர்களாய்) எந்தக் கடவுளர்களை நீங்கள் கருதுகிறீர்களோ அவர்களை அழைத்துப் பாருங்கள்! உங்களின் எந்தத் துன்பத்தையும் அவர்களால் அகற்றிவிட முடியாது; மாற்றிவிடவும் முடியாது.
17:56. “அல்லாஹ்வையன்றி (வேறு வணக்கத்திற்குரியவர்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றீர்களே, அத்தகையவர்களை நீங்கள் (உங்கள் கஷ்டங்களை நீக்க) அழையுங்கள், (அவ்வாறு அழைத்தால்) அவர்கள் உங்களை விட்டும் யாதொரு கஷ்டத்தை நீக்கி வைக்கவும் (அதனைத்) திருப்பி விடவும் சக்தி பெற மாட்டார்கள்” என்று நபியே! நீர் கூறுவீராக!
17:57
17:57 اُولٰۤٮِٕكَ الَّذِيْنَ يَدْعُوْنَ يَبْتَغُوْنَ اِلٰى رَبِّهِمُ الْوَسِيْلَةَ اَيُّهُمْ اَقْرَبُ وَيَرْجُوْنَ رَحْمَتَهٗ وَيَخَافُوْنَ عَذَابَهٗؕ اِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُوْرًا‏
اُولٰۤٮِٕكَ இவர்கள் الَّذِيْنَ எவர்களை يَدْعُوْنَ பிரார்த்திக்கிறார்கள் يَبْتَغُوْنَ தேடுகின்றனர் اِلٰى பக்கம் رَبِّهِمُ தங்கள் இறைவன் الْوَسِيْلَةَ நன்மையை اَيُّهُمْ தங்களில் யார் اَقْرَبُ மிக நெருங்கியவராக وَيَرْجُوْنَ இன்னும் ஆதரவு வைக்கின்றனர் رَحْمَتَهٗ அவனுடையஅருளை وَيَخَافُوْنَ இன்னும் பயப்படுகின்றனர் عَذَابَهٗؕ வேதனையை/அவனுடைய اِنَّ நிச்சயமாக عَذَابَ வேதனை رَبِّكَ உம் இறைவனின் كَانَ இருக்கின்றது مَحْذُوْرًا‏ பயப்படவேண்டியதாக
17:57. (அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள், ஏன் அவர்களில் மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் கூட தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களை செய்து கொண்டும் அவனது அருளை எதிர்பார்த்தும் அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது.
17:57. இவர்கள் யாரை பிரார்த்தித்து அழைக்கிறார்களோ அவர்களுமோ தங்கள் இறைவனிடம் தங்களில் மிக நெருக்கமானவராக யார் ஆகமுடியும் என்பதற்காக நன்மை செய்வதையே ஆசை வைத்துக்கொண்டும், அவனுடைய அருளையே எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயந்து கொண்டும் இருக்கிறார்கள். ஏனென்றால், நிச்சயமாக உமது இறைவனின் வேதனையோ, மிக மிக பயப்படக்கூடியதே!
17:57. அவர்களேகூட தம் இறைவனின் நெருக்கத்தை அடைவதற்கான வஸீலாவை வழிவகையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்; தங்களில் யார் அவனுக்கு அதிகம் நெருக்கமானவராய் ஆவது என்பதற்காக! மேலும், அவனுடைய அருளை எதிர்பார்த்துக் கொண்டும் அவன் தரக்கூடிய வேதனைக்கு அஞ்சிக் கொண்டும் இருக்கிறார்கள். உண்மையில் அஞ்ச வேண்டியது உம் அதிபதி தரும் வேதனைக்குத்தான்!
17:57. எவர்களை (இணைவைத்துக் கொண்‌‍‌டிருப்போரான) அவர்கள் அழைக்கிறார்களோ அத்தகையோர்– தங்கள் இரட்சகனின்பால், (நற்செயல்கள் செய்வது கொண்டு) அவர்களில் யார் அவனுக்கு மிக்க நெருக்கமானவர்கள் என்று நெருக்கத்தை தேடுகிறார்கள்; அவனது அருளை ஆதரவும் வைக்கிறார்கள்; அவனது வேதனையை பயப்படவும் செய்கிறார்கள்; நிச்சயமாக உமதிரட்சகனின் வேதனை எச்சரிக்கப்பட்டதாக இருக்கின்றது.
17:58
17:58 وَاِنْ مِّنْ قَرْيَةٍ اِلَّا نَحْنُ مُهْلِكُوْهَا قَبْلَ يَوْمِ الْقِيٰمَةِ اَوْ مُعَذِّبُوْهَا عَذَابًا شَدِيْدًا‌ ؕ كَانَ ذٰ لِكَ فِى الْـكِتٰبِ مَسْطُوْرًا‏
وَاِنْ مِّنْ அறவே இல்லை قَرْيَةٍ ஊர் اِلَّا தவிர نَحْنُ நாம் مُهْلِكُوْهَا அதை அழிப்பவர்களாக قَبْلَ முன்பு يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாளுக்கு اَوْ அல்லது مُعَذِّبُوْهَا வேதனை செய்பவர்களாக/அதை عَذَابًا வேதனை شَدِيْدًا‌ ؕ கடுமையானது كَانَ இருக்கின்றது ذٰ لِكَ இது فِى الْـكِتٰبِ புத்தகத்தில் مَسْطُوْرًا‏ எழுதப்பட்டதாக
17:58. இன்னும் கியாம நாளைக்கு முன்னே (அழிச்சாட்டியம் செய்யும்) எந்த ஊரையும் நாம் அழிக்காமலோ, அல்லது கடுமையான வேதனைக் கொண்டு வேதனை செய்யாமலோ இருப்பதில்லை; இது(லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் வரையப்பெற்றே இருக்கிறது.
17:58. (அநியாயக்காரர்கள் வசிக்கின்ற) எந்த ஊரையும் மறுமை நாள் வருவதற்கு முன்னதாக நாம் அழித்து விடாமல் அல்லது கடினமான வேதனை செய்யாமல் விடுவதில்லை. இவ்வாறே (நம்மிடமுள்ள நிகழ்ச்சிக் குறிப்பாகிய) ‘லவ்ஹுல் மஹ்ஃபூளி'ல் வரையப்பட்டு இருக்கிறது.
17:58. எந்த ஊரையும் மறுமைநாளைக்கு முன் அழித்தொழிக் காமலோ, கடுமையான வேதனையில் ஆழ்த்தாமலோ நாம் விட்டு விட மாட்டோம். இது இறைவனின் பதிவேட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
17:58. (அக்கிரமக்காரர்கள் வசிக்கும்) எந்த ஊரையும் - மறுமை நாளைக்கு முன்னதாக நாம் அதை – அழிப்போராகவோ, அல்லது அதனைக் கடினமான வேதனையாக வேதனை செய்வோராகவோ தவிர இல்லை, இது (நம்மிடமுள்ள) பதிவேட்டில் எழுதப்பட்டதாக இருக்கின்றது.
17:59
17:59 وَمَا مَنَعَنَاۤ اَنْ نُّرْسِلَ بِالْاٰيٰتِ اِلَّاۤ اَنْ كَذَّبَ بِهَا الْاَوَّلُوْنَ‌ؕ وَاٰتَيْنَا ثَمُوْدَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوْا بِهَا‌ؕ وَمَا نُرْسِلُ بِالْاٰيٰتِ اِلَّا تَخْوِيْفًا‏
وَمَا தடுக்கவில்லை مَنَعَنَاۤ நம்மை اَنْ نُّرْسِلَ நாம் அனுப்பிவைக்க بِالْاٰيٰتِ அத்தாட்சிகளை اِلَّاۤ தவிர اَنْ كَذَّبَ பொய்ப்பித்தார்(கள்) بِهَا அவற்றை الْاَوَّلُوْنَ‌ؕ முன்னோர் وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் ثَمُوْدَ ஸமூதுக்கு النَّاقَةَ பெண் ஒட்டகத்தை مُبْصِرَةً தெளிவான அத்தாட்சியாக فَظَلَمُوْا தீங்கிழைத்தனர் بِهَا‌ؕ அதற்கு وَمَا نُرْسِلُ அனுப்ப மாட்டோம் بِالْاٰيٰتِ அத்தாட்சிகளை اِلَّا தவிர تَخْوِيْفًا‏ பயமுறுத்தலாகவே
17:59. (நம்முடைய அத்தாட்சிகளை இவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை; (இதற்கு முன்) நாம் “ஸமூது” கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.
17:59. (இவர்களுக்கு) முன்னிருந்தவர்களும் (அவர்கள் விரும்பியவாறு நாம் கொடுத்த) அத்தாட்சிகளை பொய்யாக்கி விட்டனர் என்ற காரணத்தைத் தவிர, (இப்போதுள்ளவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்பிவைக்க வேறொன்றும் நமக்கு தடையாக இல்லை. (இதற்கு முன்னர்) ‘ஸமூது' என்னும் மக்களுக்கு (அவர்கள் விரும்பியவாறே) ஒரு பெண் ஒட்டகத்தை அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம். அவர்களோ வரம்பு மீறி அதற்குத் தீங்கிழைத்து விட்டனர். (அவர்கள் விரும்புகின்ற) அத்தாட்சிகளை (அவர்களைப்) பயமுறுத்துவதற்காகவே தவிர நாம் அனுப்புவதில்லை.
17:59. சான்றுகளை அனுப்புவதிலிருந்து நம்மைத் தடுக்க வில்லை; முன்பு வாழ்ந்தவர்கள் அவற்றைப் பொய்யெனத் தூற்றி விட்டார்கள் என்பதைத் தவிர! (பாருங்கள்:) ஸமூத் கூட்டத்தார்க்கு ஒரு பெண் ஒட்டகத்தை எல்லோரும் அறியும் வண்ணம் வெளிப்படையாக கொடுத்தோம். ஆனால், அவர்கள் அதற்குக் கொடுமை இழைத்தார்கள். நாம் சான்றுகளை அனுப்புவது, மக்கள் அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டும் என்பதற்காகவே!
17:59. (நம்முடைய அத்தாட்சிகளை) முன்னிருந்தவர்கள் பொய்யாக்கிவிட்டனர் என்பதைத் தவிர, (இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப (வேறெதுவும்) நம்மைத் தடுக்கவில்லை, (இதற்கு முன்னர்) ஸமூது சமூகத்தார்ககு ஒருபெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம், அவர்களோ, (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்து விட்டனர், (இத்தகைய) அத்தாட்சிகளை(யெல்லாம் மனிதர்களுக்குப்) பயமுறுத்துவதற்காகவே அன்றி நாம் அனுப்பவில்லை.
17:60
17:60 وَاِذْ قُلْنَا لَـكَ اِنَّ رَبَّكَ اَحَاطَ بِالنَّاسِ‌ ؕ وَمَا جَعَلْنَا الرُّءْيَا الَّتِىْۤ اَرَيْنٰكَ اِلَّا فِتْنَةً لِّلنَّاسِ وَ الشَّجَرَةَ الْمَلْعُوْنَةَ فِى الْقُرْاٰنِ‌ ؕ وَنُخَوِّفُهُمْۙ فَمَا يَزِيْدُهُمْ اِلَّا طُغْيَانًا كَبِيْرًا‏
وَاِذْ قُلْنَا நாம் கூறிய சமயம் لَـكَ உமக்கு اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் اَحَاطَ சூழ்ந்து கொண்டான் بِالنَّاسِ‌ ؕ மனிதர்களை وَمَا جَعَلْنَا இன்னும் நாம்ஆக்கவில்லை الرُّءْيَا காட்சியை الَّتِىْۤ எது اَرَيْنٰكَ உமக்குகாண்பித்தோம் اِلَّا தவிர فِتْنَةً சோதனையாக لِّلنَّاسِ மனிதர்களுக்கு وَ الشَّجَرَةَ இன்னும் மரத்தை الْمَلْعُوْنَةَ சபிக்கப்பட்டது فِى الْقُرْاٰنِ‌ ؕ குர்ஆனில் وَنُخَوِّفُهُمْۙ இன்னும் பயமுறுத்துகிறோம்/அவர்களை فَمَا يَزِيْدُ அதிகப்படுத்துவ தில்லை هُمْ அவர்களுக்கு اِلَّا தவிர طُغْيَانًا அட்டூழியத்தை كَبِيْرًا‏ பெரியது
17:60. (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான் என்று உமக்குக் கூறியதை (நினைவு கூர்வீராக! மிஃராஜின் போது) நாம் உமக்குக்காட்டிய காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்டும் (ஜக்கூம்) மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. இன்னும் நாம் அவர்களை அச்சுறுத்துகின்றோம்; ஆனால், இது அவர்களுடைய பெரும் அழிச்சாட்டியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது.  
17:60. (நபியே!) ‘‘உமது இறைவன் அம்மனிதர்களைச் சூழ்ந்துகொண்டான். (அவர்கள் உமக்குத் தீங்கிழைக்க முடியாது)'' என்று நாம் உமக்குக் கூறியதை கவனிப்பீராக. உமக்கு நாம் (மிஃராஜில்) காண்பித்த காட்சியும், சபிக்கப்பட்ட (கள்ளி) மரத்தை (அது மறுமையில் பாவிகளின் உணவென) குர்ஆனில் நாம் கூறியிருப்பதும் மனிதர்களை சோதிப்பதற்காகவே தவிர வேறில்லை. (நபியே! நம் வேதனையைப் பற்றி) நாம் அவர்களைப் பயமுறுத்துவது (அவர்களுடைய) பெரும் அட்டூழியத்தையே அவர்களுக்கு அதிகரிக்கச் செய்கிறது.
17:60. மேலும் (நபியே!) திண்ணமாக உம் இறைவன் மக்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறான் என்று நாம் உம்மிடம் கூறியிருந்ததை நினைத்துப் பாரும்! மேலும், இப்போது நாம் உமக்குக் காண்பித்துத் தந்தவற்றையும் குர்ஆனில் சபிக்கப்பட்டுள்ள மரத்தையும் இம்மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியிருக்கிறோம். நாம் மீண்டும் மீண்டும் இவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு அச்சுறுத்தலும் இவர்களுடைய வரம்பு மீறும் நடத்தையை அதிகப்படுத்தவே செய்கிறது.
17:60. மேலும், நிச்சயமாக உமதிரட்சகன் மனிதர்களை (தன் அறிவால், சக்தியால்) சூழ்ந்து கொண்டான், என்று நாம் உமக்கு கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக! மேலும், உமக்கு நாம் (மிஃராஜின் போது) காண்பித்த காட்சியையும், குர் ஆனில் சபிக்கப்பட்ட மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை, இன்னும், அவர்களை நாம் பயமுறுத்துகிறோம், ஆனால், பெரும் அழிச்சாட்டியத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்களுக்கு அது அதிகப்படுத்துவதில்லை.
17:61
17:61 وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَ قَالَ ءَاَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِيْنًا‌ ۚ‏
وَاِذْ قُلْنَا நாம் கூறிய சமயம் لِلْمَلٰۤٮِٕكَةِ வானவர்களுக்கு اسْجُدُوْا சிரம் பணியுங்கள் لِاٰدَمَ ஆதமுக்கு فَسَجَدُوْۤا சிரம் பணிந்தனர் اِلَّاۤ தவிர اِبْلِيْسَ இப்லீஸ் قَالَ கூறினான் ءَاَسْجُدُ நான் சிரம் பணிவதா? لِمَنْ எவருக்கு خَلَقْتَ நீ படைத்தாய் طِيْنًا‌ ۚ‏ மண்ணிலிருந்து
17:61. இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ: “களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?” என்று கூறினான்.
17:61. வானவர்களை நோக்கி, ‘‘ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என நாம் கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (வானவர்கள் அனைவரும் அவருக்குச்) சிரம் பணிந்தார்கள். அவனோ ‘‘நீ மண்ணால் படைத்தவனுக்கு நான் சிரம் பணிவதா?'' என்று கேட்டான்.
17:61. மேலும், நினைத்துப் பாரும்: ஆதத்துக்குச் சிரம் பணியுங்கள் என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, அனைவரும் சிரம் பணிந்தார்கள் இப்லீசைத் தவிர! அவன் கேட்டான்: “நீ மண்ணினால் படைத்த ஒருவருக்கு நான் சிரம் பணிவேனா?”
17:61. மேலும், மலக்குகளிடம், “ஆதமுக்கு நீங்கள் சிரம் பணியுங்கள்” என்று நாம் கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (மலக்குகளான) அவர்கள் சிரம் பணிந்தார்கள், அவனோ, “களிமண்ணால் நீ படைத்தவருக்கு நான் சிரம் பணிவேனா?” என்று கூறினான்.
17:62
17:62 قَالَ اَرَءَيْتَكَ هٰذَا الَّذِىْ كَرَّمْتَ عَلَىَّ لَٮِٕنْ اَخَّرْتَنِ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَاَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهٗۤ اِلَّا قَلِيْلًا‏
قَالَ கூறினான் اَرَءَيْتَكَ நீ அறிவிப்பாயாக هٰذَا இவர்தானா الَّذِىْ எவர் كَرَّمْتَ நீ கண்ணியப்படுத்தினாய் عَلَىَّ என்னை விட اَخَّرْتَنِ என்னை اِلٰى வரை يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாள் لَاَحْتَنِكَنَّ நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன் ذُرِّيَّتَهٗۤ இவருடைய சந்ததிகளை اِلَّا தவிர قَلِيْلًا‏ குறைவானவர்களை
17:62. “எனக்கு மேலாக கண்ணியப் படுத்திய இவரைப் பார்த்தாயா? நீ எனக்கு கியாம நாள்வரை அவகாசம் கொடுத்தால், நாம் இவருடைய சந்ததிகளில் சிலரைத் தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
17:62. (மேலும், இறைவனை நோக்கி) ‘‘என்னைவிட நீ கௌரவப்படுத்தி இருப்பவர் இவரல்லவா என்பதை நீ கவனித்தாயா?'' (என்று ஏளனமாக ஆதமைச் சுட்டிக் காண்பித்து) ‘‘நீ என்னை மறுமை நாள் வரை பிற்படுத்தி வைத்தால் வெகு சிலரைத் தவிர இவருடைய சந்ததிகள் அனைவரையும் நான் வழிகெடுத்து (வேரறுத்து) விடுவேன்'' என்று கூறினான்.
17:62. மேலும், அவன் கூறினான்: “சற்று நீயே பார்! என்னைவிட இவருக்கு நீ கண்ணியம் அளித்துள்ளாயே, அதற்கு அவர் தகுதியுடையவர்தானா? நீ எனக்கு மறுமை நாள் வரை அவகாசம் அளித்தால், அவருடைய வழித்தோன்றல்கள் அனைவரையும் அடியோடு நான் ஒழித்துக்கட்டுவேன். மிகக் குறைவான மக்கள்தாம் என்னிடமிருந்து தப்ப முடியும்!”
17:62. (அன்றியும்,) “என்னைவிட மேலாக நீ கண்ணியப் படுத்திய (ஆதமாகிய) இவரை நீ பார்த்தாயா? என்னை மறுமை நாள் வரையில் பிற்படுத்தி (வாழ) வைத்தால், சிலரைத் தவிர இவருடைய சந்ததியினரை நான் (வழி கெடுத்து) திண்ணமாக வேரறுத்து விடுவேன்?” என்று (இப்லீஸாகிய) அவன் கூறினான்.
17:63
17:63 قَالَ اذْهَبْ فَمَنْ تَبِعَكَ مِنْهُمْ فَاِنَّ جَهَـنَّمَ جَزَآؤُكُمْ جَزَآءً مَّوْفُوْرًا‏
قَالَ கூறினான் اذْهَبْ போய்விடு فَمَنْ تَبِعَكَ யார்/பின்பற்றினார்/உன்னை مِنْهُمْ அவர்களில் فَاِنَّ நிச்சயமாக جَهَـنَّمَ நரகம்தான் جَزَآؤُ கூலி كُمْ உங்கள் جَزَآءً கூலியாக مَّوْفُوْرًا‏ முழுமையானது
17:63. “நீ போய் விடு; அவர்களில் உன்னைப் பின்பற்றுபவர் இருந்தால் - நிச்சயமாக நரகம் தான் உங்கள் கூலியில் நிறப்பமான கூலியாக இருக்கும்.
17:63. (அதற்கு இறைவன், இங்கிருந்து) ‘‘நீ அப்புறப்பட்டு விடு. அவருடைய சந்ததிகளில் உன்னைப் பின்பற்றியவர்களுக்கும் (உனக்கும்) முற்றிலும் தகுதியான கூலி நிச்சயமாக நரகம்தான்'' என்றும்,
17:63. அல்லாஹ் கூறினான்: “சரி! நீ போய்விடு; அவர்களில் யார் உன்னைப் பின்பற்றினாலும் உன்னோடு சேர்த்து அவர்கள் அனைவர்க்கும் நரகம்தான் நிறைவான கூலியாகும்.
17:63. (அதற்கு) “நீ சென்று விடு, அவர்களில் யார் உன்னைப் பின்பற்றுகிறாரோ, (அவருக்கும் உனக்கும்) நிச்சயமாக நரகம்தான் நிரப்பமான கூலியாக உங்களுடைய கூலியாகும்” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
17:64
17:64 وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَاَجْلِبْ عَلَيْهِمْ بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ وَعِدْهُمْ‌ ؕ وَمَا يَعِدُهُمُ الشَّيْطٰنُ اِلَّا غُرُوْرًا‏
وَاسْتَفْزِزْ இன்னும் தூண்டிவிடு مَنِ எவர் اسْتَطَعْتَ நீ இயன்றாய் مِنْهُمْ அவர்களில் بِصَوْتِكَ உன் சப்தத்தைக் கொண்டு وَاَجْلِبْ இன்னும் ஏவிவிடு عَلَيْهِمْ அவர்கள் மீது بِخَيْلِكَ உன் குதிரைப் படைகளை وَرَجِلِكَ இன்னும் உன் காலாட்படைகள் وَشَارِكْهُمْ இன்னும் நீ இணைந்து விடு/அவர்களுடன் فِى الْاَمْوَالِ செல்வங்களில் وَالْاَوْلَادِ இன்னும் சந்ததிகளில் وَعِدْ இன்னும் வாக்களி هُمْ‌ ؕ அவர்களுக்கு وَمَا يَعِدُ வாக்களிக்க மாட்டான் هُمُ அவர்களுக்கு الشَّيْطٰنُ ஷைத்தான் اِلَّا தவிர غُرُوْرًا‏ ஏமாற்றுவதற்கே
17:64. “இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ அவர்களை உம் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்; உன்னுடைய குதிரைப் படையையும் காலாட் படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய், அவர்களுடைய செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ கூட்டாக இருந்து கொள்; அவர்களுக்கு(ப் பொய்யான) வாக்குறுதிகளையும் கொடு!” (என்றும் அல்லாஹ் கூறினான்); ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை.
17:64. ‘‘நீ உனக்குச் சாத்தியமான அளவு கூச்சல் போட்டு அவர்களைத் தூண்டிவிடு. உன் குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவிவிடு. அவர்களுடைய பொருளிலும் சந்ததியிலும் நீ கூட்டாக இருந்து கொண்டு அவர்களுக்கு (நயத்தையும் பயத்தையும் காட்டி) வாக்களி'' என்றும் கூறினான். ஆகவே, ஷைத்தான் (ஆகிய நீ) அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றமே தவிர வேறில்லை.
17:64. உனது பசப்பு வார்த்தையின் மூலம் அவர்களில் யாரை உன்னால் வழிபிறழச் செய்ய முடியுமோ வழிபிறழச் செய்! மேலும், உனது குதிரைப் படையையும் காலாட் படையையும் அவர்களுக்கு எதிராக அணிதிரட்டு! சொத்துக்களிலும் பிள்ளைகளிலும் நீ அவர்களுடன் பங்காளியாகிவிடு. உன்னுடைய வாக்குறுதி வலைக்குள் அவர்களைச் சிக்கவை! ஷைத்தானின் வாக்குறுதி பெரும் ஏமாற்றமே தவிர வேறொன்றுமில்லை
17:64. இன்னும், “அவர்களிலிருந்து (வழி தவறச்செய்ய) நீ சக்தி பெற்றிருக்கின்றவர்களை உன் கூப்பாட்டைக் கொண்டு வழி தவறச் செய், உன்னுடைய குதிரைப் படைகளையும், காலாட் படைகளையும் அவர்கள் மீது ஏவி விடு, (அவர்களுடைய) செல்வங்களிலும், பிள்ளைகளிலும் நீ கூட்டாகவும் இருந்து கொள், இன்னும், (பொய்யானவற்றைக் கொண்டு) அவர்களுக்கு வாக்களித்து விடு, ஏமாற்றத்தைத் தவிர, வேறு எதையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை” என்றும் (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
17:65
17:65 اِنَّ عِبَادِىْ لَـيْسَ لَـكَ عَلَيْهِمْ سُلْطٰنٌ‌ ؕ وَكَفٰى بِرَبِّكَ وَكِيْلًا‏
اِنَّ عِبَادِىْ நிச்சயமாக என் அடியார்கள் لَـيْسَ இல்லை لَـكَ உனக்கு عَلَيْهِمْ அவர்கள் மீது سُلْطٰنٌ‌ ؕ ஓர் அதிகாரம் وَكَفٰى போதுமாகி விட்டான் بِرَبِّكَ உம் இறைவனே وَكِيْلًا‏ பொறுப்பாளனாக
17:65. “நிச்சயமாக (முஃமினான) என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை” (என்றும் அல்லாஹ் கூறினான்; நபியே! அந்த என் நல்லடியார்களைக்) காத்துக் கொள்ள உம்முடைய இறைவன் போதுமானவன்.
17:65. நிச்சயமாக எனது (மனத்தூய்மையுடைய) அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை'' (என்றும் கூறினான். ஆகவே, அவர்களை) பொறுப்பேற்றுக் கொள்ள உமது இறைவ(னாகிய நா)னே போதுமானவன்.
17:65. திண்ணமாக, என் அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இருக்காது. மேலும் முற்றிலும் சார்ந்து இருப்பதற்கு உம் இறைவனே போதுமானவன்!”
17:65. “நிச்சயமாக என்னுடைய அடியார்கள் மீது ஷைத்தானே! உனக்கு எவ்வித அதிகாரமுமில்லை” (ஆகவே அவர்களுக்குப்) பொறுப்பேற்றுக் கொள்ள உமதிரட்சகனே போதுமானவன்.
17:66
17:66 رَبُّكُمُ الَّذِىْ يُزْجِىْ لَـكُمُ الْفُلْكَ فِى الْبَحْرِ لِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖؕ اِنَّهٗ كَانَ بِكُمْ رَحِيْمًا‏
رَبُّكُمُ உங்கள் இறைவன் الَّذِىْ எத்தகையவன் يُزْجِىْ செலுத்துகிறான் لَـكُمُ உங்களுக்காக الْفُلْكَ فِى الْبَحْرِ கப்பலை/கடலில் لِتَبْتَغُوْا நீங்கள் தேடுவதற்காக مِنْ فَضْلِهٖؕ அவனுடைய அருளிலிருந்து اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் بِكُمْ உங்கள் மீது رَحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
17:66. (மானிடர்களே!) உங்கள் இறைவன் எப்படிப்பட்டவன் என்றால் அவனுடைய அருட் கொடைகளை நீங்கள் தேடி(ச் சம்பாதித்து)க் கொள்ளும் பொருட்டுக் கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான்; நிச்சயமாக அவன் உங்கள் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.
17:66. (மனிதர்களே! கடலில் நீங்கள் பயணம் செய்யும் பொழுது) உங்கள் இறைவனே உங்கள் கப்பலைக் கடலில் செலுத்துகிறான். (அதன் மூலம் பல நாடுகளுக்கும் சென்று) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்கிறீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் மீது மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்.
17:66. உங்கள் (உண்மையான) இறைவன் யாரெனில், அவன்தான் உங்களுக்காக கடலில் கப்பலைச் செலுத்துகிறான்; நீங்கள் அவனது அருளைத் தேடும்பொருட்டு! திண்ணமாக, அவன் உங்களுக்கு மிகவும் கிருபை புரிபவனாக இருக்கின்றான்.
17:66. உங்களுடைய இரட்சகன் எத்தகையவனென்றால், (கடலில் நீங்கள் யாத்திரை செய்து) அவனது பேரருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காக அவனே உங்களுக்காக கடலில் கப்பலை செலுத்துகின்றான், நிச்சயமாக அவன் உங்கள் மீது மிகக் கிருபையுடையவனாக இருக்கின்றான்.
17:67
17:67 وَاِذَا مَسَّكُمُ الضُّرُّ فِى الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُوْنَ اِلَّاۤ اِيَّاهُ‌ ۚ فَلَمَّا نَجّٰٮكُمْ اِلَى الْبَرِّ اَعْرَضْتُمْ‌ ؕ وَكَانَ الْاِنْسَانُ كَفُوْرًا‏
وَاِذَا ஏற்பட்டால் مَسَّكُمُ உங்களுக்கு الضُّرُّ தீங்கு, துன்பம் فِى الْبَحْرِ கடலில் ضَلَّ மறைந்துவிடுகின்றனர் مَنْ எவர், எவை تَدْعُوْنَ பிரார்தித்தீர்கள் اِلَّاۤ தவிர اِيَّاهُ‌ ۚ அவனை فَلَمَّا அவன் பாதுகாத்தபோது نَجّٰٮكُمْ உங்களை اِلَى الْبَرِّ கரையில் اَعْرَضْتُمْ‌ ؕ புறக்கணிக்கின்றீர்கள் وَكَانَ இருக்கின்றான் الْاِنْسَانُ மனிதன் كَفُوْرًا‏ மகா நன்றி கெட்டவனாக
17:67. இன்னும், கடலில் உங்களை ஏதேனும் துன்பம் தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.
17:67. உங்களுக்கு கடலில் ஒரு தீங்கேற்படும் சமயத்தில், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்த அனைத்தும் மறைந்து விடுகின்றன. (இறைவன் ஒருவன்தான் உங்கள் கண் முன் இருப்பவன்.) அவன் உங்களைக் கரையில் சேர்த்து பாதுகாத்துக் கொண்டாலோ (அவனை) நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
17:67. கடலில் உங்களுக்குத் துன்பம் ஏற்படும்போது அந்த ஏகனை விடுத்து, நீங்கள் யார் யாரையெல்லாம் அழைக்கிறீர்களோ, அவர்கள் அனைவரும் மறைந்துபோய் விடுகிறார்கள். ஆனால், அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்துவிடும்போது நீங்கள் அவனைப் புறக்கணித்துவிடுகிறீர்கள். உண்மையில் மனிதன் மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
17:67. இன்னும், கடலில் உங்களை ஏதேனும் ஆபத்து அணுகினால், (அல்லாஹ்வாகிய) அவனையன்றி நீங்கள் யாரை (வணக்கத்திற்குரிய தெய்வங்கள் என்று) அழைக்கிறீர்களோ அவர்கள் (உங்களை விட்டும்) மறைந்து விடுவர், (அல்லாஹ்வாகிய) அவன் உங்களைக் கரையளவில் ஈடேற்றிச் சேர்க்கும்பொழுது (அல்லாஹ்வை) நீங்கள் புறக்கணித்து விடுகின்றீர்கள்! மேலும் மனிதன் மிக்க நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
17:68
17:68 اَفَاَمِنْتُمْ اَنْ يَّخْسِفَ بِكُمْ جَانِبَ الْبَرِّ اَوْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوْالَـكُمْ وَكِيْلًا ۙ‏
اَفَاَمِنْتُمْ நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? اَنْ يَّخْسِفَ அவன் சொருகிவிடுவதை بِكُمْ உங்களை جَانِبَ ஓரத்தில் الْبَرِّ பூமியில் اَوْ அல்லது يُرْسِلَ அவன் அனுப்புவதை عَلَيْكُمْ உங்கள் மீது حَاصِبًا கல் மழையை ثُمَّ பிறகு لَا تَجِدُوْا காணமாட்டீர்கள் لَـكُمْ உங்களுக்கு وَكِيْلًا ۙ‏ ஒரு பொறுப்பாளரை
17:68. (கரை சேர்ந்த) பின் அவன் உங்களை பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான் என்றோ, அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காண மாட்டீர்கள்.
17:68. (நன்றி கெட்ட) உங்களைப் பூமி விழுங்கிவிடாதென்றோ அல்லது உங்கள் மீது கல்மழை பொழியாதென்றோ நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? (அவ்வாறு நிகழ்ந்தால்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
17:68. கரை சேர்ந்த பிறகு என்றேனும் ஒருநாள் இறைவன் உங்களைப் பூமி விழுங்கும்படிச் செய்துவிடுவான் என்பது குறித்தும் அல்லது உங்கள் மீது கற்களைப் பொழியும் புயலை அனுப்பிவிடுவான் என்பது குறித்தும் பிறகு, அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற எந்தப் பாதுகாவலனையும் நீங்கள் காணமாட்டீர்கள் என்பதைக் குறித்தும் நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா என்ன?
17:68. (கரை சேர்ந்த பின்) கரையின் ஒரு பகுதியில் உங்களை அவன் விழுங்கச் செய்வதையோ அல்லது உங்கள் மீது கல் மாரியை அவன் அனுப்புவதையோ நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா?” (அவ்வாறு நிகழ்ந்தால் அதன்) பின்னர், உங்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீங்கள் காண மாட்டீர்கள்.
17:69
17:69 اَمْ اَمِنْتُمْ اَنْ يُّعِيْدَكُمْ فِيْهِ تَارَةً اُخْرٰى فَيُرْسِلَ عَلَيْكُمْ قَاصِفًا مِّنَ الرِّيْحِ فَيُغْرِقَكُمْ بِمَا كَفَرْتُمْ‌ۙ ثُمَّ لَا تَجِدُوْا لَـكُمْ عَلَيْنَا بِهٖ تَبِيْعًا‏
اَمْ اَمِنْتُمْ அல்லது பயமற்று இருக்கின்றீர்களா? اَنْ يُّعِيْدَ அவன் மீட்பதை كُمْ உங்களை فِيْهِ அதில் تَارَةً முறை اُخْرٰى மற்றொரு فَيُرْسِلَ அனுப்புவான் عَلَيْكُمْ உங்கள் மீது قَاصِفًا உடைத்தெரியக் கூடியது مِّنَ இருந்து الرِّيْحِ காற்று فَيُغْرِقَكُمْ அவன் மூழ்கடிப்பான்/உங்களை بِمَا كَفَرْتُمْ‌ۙ நீங்கள் நன்றி கெட்டதால் ثُمَّ பிறகு لَا تَجِدُوْا காணமாட்டீர்கள் لَـكُمْ உங்களுக்கு عَلَيْنَا நம்மிடம் بِهٖ அதற்காக تَبِيْعًا‏ பழிதீர்ப்பவரை
17:69. அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா? (அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என) நம்மைத் தொடர்ந்து உங்களுக்காக(க் கேட்போர்) எவரையும் காணமாட்டீர்கள்.
17:69. அல்லது மற்றொரு தடவை உங்களை கடலில் கொண்டு போய் கடினமான புயல் காற்றை உங்கள் மீது ஏவி, உங்கள் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்துவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? அச்சமயம் (நான் உங்களை அழித்து விடாது தடுக்க) என்னைப் பின்தொடர்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
17:69. அல்லது அல்லாஹ் மீண்டும் ஒருமுறை உங்களைக் கடலுக்குக் கொண்டு சென்று, நீங்கள் நன்றி கொன்றதற்குப் பதிலாக உங்கள் மீது கடும் புயல்காற்றை அனுப்பி, உங்களை மூழ்கடித்துவிடுவான்; அல்லது உங்களுக்கு ஏற்பட்ட இந்தக் கதி பற்றி அவனிடம் விசாரணை செய்யக்கூடிய எவரும் உங்களுக்குக் கிடைக்க மாட்டார்கள் என்பவற்றைக் குறித்தும் நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா?
17:69. அல்லது (அல்லாஹ்வாகிய) அவன் மீண்டும் ஒரு முறை உங்களைக் கடலில் திரும்ப (பிரயாணிக்க)ச் செய்து (நீங்கள் கடலில் இருக்கும் பொழுது எல்லாவற்றையும் அழித்து விடும்) புயல் காற்றை உங்கள் மீது அவன் அனுப்பி, நீங்கள் நிராகரித்ததன் காரணமாக உங்களை மூழ்கடித்து விடுவதை நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? (அவ்வாறெல்லாம் செய்ததன்) பின்னர், அதற்காக நம்மை(த் தொடர்ந்து) பழிவாங்குபவர் எவரையும் உங்களுக்காக நீங்கள் காண மாட்டீர்கள்.
17:70
17:70 وَلَـقَدْ كَرَّمْنَا بَنِىْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا‏
وَلَـقَدْ திட்டவட்டமாக كَرَّمْنَا நாம் கண்ணியப்படுத்தினோம் بَنِىْۤ சந்ததிகளை اٰدَمَ ஆதமுடைய وَحَمَلْنٰهُمْ இன்னும் வாகனிக்கச் செய்தோம்/அவர்களை فِى الْبَرِّ கரையில் وَالْبَحْرِ இன்னும் கடலில் وَرَزَقْنٰهُمْ இன்னும் உணவளித்தோம்/அவர்களுக்கு مِّنَ இருந்து الطَّيِّبٰتِ நல்லவை وَفَضَّلْنٰهُمْ இன்னும் மேன்மைப்படுத்தினோம்/அவர்களை عَلٰى விட كَثِيْرٍ அதிகமானது مِّمَّنْ எவற்றிலிருந்து خَلَقْنَا நாம் படைத்தோம் تَفْضِيْلًا‏ மேன்மையாக
17:70. நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.  
17:70. ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தான் அவர்களைப் பயணிக்க வைக்கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற உயிரினங்களில்) பலவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம்.
17:70. நாம் ஆதத்தின் வழித்தோன்றல்களுக்குக் கண்ணியம் அளித்துள்ளோம். மேலும், தரையிலும் கடலிலும் அவர்களுக்கு வாகனங்களை வழங்கினோம். தூய பொருள்களிலிருந்து அவர்களுக்கு ஆகாரம் வழங்கினோம். மேலும், நாம் படைத்த பெரும்பாலான படைப்புகளைவிட அவர்களுக்கு அதிகச் சிறப்புகளையும் வழங்கினோம். இவை நமது கொடைகளாகும்.
17:70. மேலும், ஆதமுடைய மக்களைத் திட்டமாக நாம் கண்ணியப்படுத்தினோம், கரையிலும், கடலிலும் நாம் அவர்களை சுமந்து சென்றோம், நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு நாமே உணவளித்தோம், நாம் படைத்தவற்றில் அனேகவற்றை விட (தகுதியில்) நாம் அவர்களை மிகமிக மேன்மையாக்கியும் வைத்திருக்கின்றோம்.
17:71
17:71 يَوْمَ نَدْعُوْا كُلَّ اُنَاسٍۢ بِاِمَامِهِمْ‌ۚ فَمَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖ فَاُولٰۤٮِٕكَ يَقْرَءُوْنَ كِتٰبَهُمْ وَلَا يُظْلَمُوْنَ فَتِيْلًا‏
يَوْمَ நாள் نَدْعُوْا நாம் அழைப்போம் كُلَّ ஒவ்வொரு اُنَاسٍۢ மனிதன் بِاِمَامِهِمْ‌ۚ அவர்களின் தலைவர்களுடன் فَمَنْ எவர்(கள்) اُوْتِىَ கொடுக்கப்பட்டார்(கள்) كِتٰبَهٗ தமது புத்தகத்தை بِيَمِيْنِهٖ தமது வலக்கையில் فَاُولٰۤٮِٕكَ அத்தகையவர்கள் يَقْرَءُوْنَ வாசிப்பார்கள் كِتٰبَهُمْ தங்கள் புத்தகத்தை وَلَا يُظْلَمُوْنَ இன்னும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் فَتِيْلًا‏ ஒரு நூல் அளவு
17:71. (நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
17:71. ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் (விசாரணைக்காக) நாம் அழைக்கும் நாளில், அவர்களின் (தினசரி குறிப்புப்) புத்தகம் அவர்களுடைய வலது கையில் கொடுக்கப்பட்டால் அவர்கள் தங்கள் (அதே தினசரி குறிப்புப்) புத்தகத்தை (மிக்க மகிழ்ச்சியோடு) வாசிப்பார்கள். (அவர்களுடைய கூலியில்) ஓர் நூல் அளவு (குறைத்து)ம் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
17:71. மேலும் ஒவ்வொரு சமூகத்தையும் அவர்களுடைய தலைவருடன் நாம் அழைக்கவிருக்கும் நாளினை நினைவு கூருங்கள்: அந்நாளில் எவர்களின் வினைப்பட்டியல் அவர்களுடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ அவர்கள் தமது வினைப்பட்டியலைப் படிப்பார்கள். மேலும், அவர்களுக்கு இம்மியளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது.
17:71. ஓவ்வொரு மனிதரையும் அவரவருடைய தலைவருடன் (அந்தந்த சமூகத்தாரின் நபியுடன் விசாரணைக்காக) நாம் அழைக்கும் நாளில், அவர்களின் (செயல்கள் எழுதப்பட்ட) புத்தகம், எவர்களுடைய வலது கையில் கொடுக்கப்பட்டதோ அவர்கள், தங்களுடைய அப்புத்தகத்தை (மிக்க மகிழ்ச்சியோடு வாசிப்பார்கள், (அவர்களுடைய கூலியில்) ஓர் அணுவளவும் (குறைத்து) அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.
17:72
17:72 وَمَنْ كَانَ فِىْ هٰذِهٖۤ اَعْمٰى فَهُوَ فِى الْاٰخِرَةِ اَعْمٰى وَاَضَلُّ سَبِيْلًا‏
وَمَنْ எவர் كَانَ இருந்தார் فِىْ هٰذِهٖۤ இம்மையில் اَعْمٰى குருடராக فَهُوَ فِى الْاٰخِرَةِ அவர் மறுமையில் اَعْمٰى குருடர் وَاَضَلُّ இன்னும் மிக வழிகெட்டவர் سَبِيْلًا‏ பாதையால்
17:72. யார் இம்மையில் (நேர்வழியடையாக்) குருடனாக இருக்கிறானோ அவன் மறுமையிலும் (நற்பேற்றைக் காணாக்) குருடன்தான்; இன்னும், அவன் நேர்வழியில் மிகவும் தவறியவனாவான்.
17:72. எவர்கள் இம்மையில் (நேரான வழியைக் காணாது) குருடர்களாகி விட்டார்களோ அவர்கள் மறுமையிலும் குருடர்களே! ஆகவே, அவர்கள் வழி தவறி விடுவார்கள்.
17:72. மேலும், எவன் இவ்வுலகில் குருடனாக இருந்தானோ அவன் மறுமையிலும் குருடனாகவே இருப்பான். ஏன், வழியை அறிவதில் குருடனை விட அதிகம் தோல்வியுற்றவனாக இருப்பான்.
17:72. எவர் இ(ம்மையான)தில் (நேர் வழியைக் காணாது) குருடராக இருக்கின்றாரோ, அவர் மறுமையிலும் குருடரே, இன்னும், பாதையால் அவர் மிகத் தவறியவராவார்.
17:73
17:73 وَاِنْ كَادُوْا لَيَـفْتِنُوْنَكَ عَنِ الَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ لِتَفْتَرِىَ عَلَيْنَا غَيْرَهٗ‌ ‌ۖ  وَاِذًا لَّاتَّخَذُوْكَ خَلِيْلًا‏
وَاِنْ كَادُوْا நிச்சயமாக நெருங்கி விட்டனர் لَيَـفْتِنُوْنَكَ அவர்கள் திருப்பிவிட/உம்மை عَنِ விட்டு الَّذِىْۤ எதை اَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு لِتَفْتَرِىَ ஏனெனில் நீர் இட்டுக்கட்டுவதற்காக عَلَيْنَا நம் மீது غَيْرَهٗ‌ அது அல்லாததை ۖ  وَاِذًا அப்போது لَّاتَّخَذُوْكَ எடுத்துக் கொண்டிருப்பார்கள்/உம்மை خَلِيْلًا‏ உற்ற நண்பராக
17:73. (நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே, அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்,) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
17:73. நாம் உமக்கு வஹ்யி மூலம் அறிவித்ததை நீர் விட்டு(விட்டு) அதல்லாததை நம்மீது நீர் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உம்மை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
17:73. (நபியே!) இம்மக்கள் உம்மைக் குழப்பத்திலாழ்த்தி, உம்மைத் திசை திருப்பும் முயற்சியில் எந்தக் குறையும் வைக்கவில்லை நாம் உமக்கு அனுப்பிய வஹியை விட்டு வேறு எதையாவது நீர் நம் மீது புனைந்துரைக்க வேண்டும் என்பதற்காக! நீர் அவ்வாறு புனைந்துரைத்திருந்தால் அவர்கள் உம்மை நண்பராக்கியிருப்பார்கள்.
17:73. நிச்சயமாக நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே, அதனை விட்டு (விட்டு) அதல்லாததை நீர் நம் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உம்மை அவர்கள் திசை திருப்பவே முனைந்தார்கள், (அவ்வாறு நீர் செய்திருந்தால்,) அப்போது உம்மை அவர்கள் (தங்கள்) உற்ற நண்பராகவும் ஆக்கிக் கொண்டிருப்பார்கள்.
17:74
17:74 وَلَوْلَاۤ اَنْ ثَبَّتْنٰكَ لَقَدْ كِدْتَّ تَرْكَنُ اِلَيْهِمْ شَيْــٴًـــا قَلِيْلًا  ۙ‏
وَلَوْلَاۤ اَنْ ثَبَّتْنٰكَ நாம் உறுதிபடுத்தி இருக்காவிட்டால்/உம்மை لَقَدْ كِدْتَّ நெருங்கி இருப்பீர் تَرْكَنُ நீர் சாய்ந்துவிட اِلَيْهِمْ அவர்கள் பக்கம் شَيْــٴًـــا ஓர் அளவு قَلِيْلًا  ۙ‏ கொஞ்சம்
17:74. மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்க வில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.
17:74. உம்மை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீர் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிட நெருங்கி இருப்பீர்.
17:74. நாம் உமக்கு உறுதிப்பாட்டை வழங்காதிருந்தால், நீர் அவர்களின் பக்கம் சிறிதேனும் சாய்ந்திருக்கக் கூடும்.
17:74. உம்மை நாம் உண்மை வழியில் நிலைப்படுத்தி வைக்காவிடில், நீர் ஒரு சிறிதேனும் அவர்களின் பக்கம் சாய்ந்து விட சமீபித்திருப்பீர்.
17:75
17:75 اِذًا لَّاَذَقْنٰكَ ضِعْفَ الْحَيٰوةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَـكَ عَلَيْنَا نَصِيْرًا‏
اِذًا அப்போது لَّاَذَقْنٰكَ சுவைக்க வைத்திருப்போம்/உம்மை ضِعْفَ இரு மடங்கு தண்டனையையும் الْحَيٰوةِ இவ்வாழ்க்கையில் وَضِعْفَ இன்னும் இரட்டிப்பு الْمَمَاتِ மரணத்திற்குப் பின் ثُمَّ பிறகு لَا تَجِدُ காணமாட்டீர் لَـكَ உமக்கு عَلَيْنَا நமக்கு எதிராக نَصِيْرًا‏ உதவக்கூடியவரை
17:75. (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்,) மரணத்தில் இரு மடங்கு (வேதனையு)ம் நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்.
17:75. (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீர் உயிராக இருக்கும் போதும் நீர் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உமக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீர் காணமாட்டீர்.
17:75. நீர் அவ்வாறு சாய்ந்திருந்தால், உலக வாழ்வில் இரு மடங்கு வேதனையையும் மரணத்திற்குப் பின்பு இரு மடங்கு வேதனையையும் நீர் சுவைக்கும்படிச் செய்திருப்போம். பிறகு நமக்கு எதிராக உதவிபுரிபவர் எவரையும் நீர் காணமாட்டீர்.
17:75. அப்பொழுது (அவ்வாறு நீர் சமீபித்திருந்தால்) ஜீவியத்தில் இருமடங்கு (வேதனையையும்), உமது மரணத்தில் இரு மடங்கு (வேதனையையும்) நாம் உம்மைச் சுவைக்கச் செய்திருப்போம்; பின்னர், நமக்கு எதிராக உமக்கு உதவியாளரை நீர் பெற்றுக் கொள்ள மாட்டீர்.
17:76
17:76 وَاِنْ كَادُوْا لَيَسْتَفِزُّوْنَكَ مِنَ الْاَرْضِ لِيُخْرِجُوْكَ مِنْهَا‌ وَاِذًا لَّا يَلْبَـثُوْنَ خِلٰفَكَ اِلَّا قَلِيْلًا‏
وَاِنْ كَادُوْا நிச்சயமாக முயற்சிக்கின்றனர் لَيَسْتَفِزُّوْنَكَ அவர்கள் தூண்டிவிட/உம்மை مِنَ الْاَرْضِ ஊரிலிருந்து لِيُخْرِجُوْكَ அவர்கள் வெளியேற்றுவதற்காக/உம்மை مِنْهَا‌ அதிலிருந்து وَاِذًا لَّا يَلْبَـثُوْنَ அப்போது வசித்திருக்க மாட்டார்கள் خِلٰفَكَ உமக்குப் பின்னால் اِلَّا قَلِيْلًا‏ சொற்ப காலமே தவிர
17:76. (நபியே!) உம்மை (உம்முடைய) பூமியிலிருந்து அடி பெயரச்செய்து, அதை விட்டும் உம்மை வெளியேற்றிவிட முனைகிறார்கள்; ஆனால் அவர்களோ உமக்குப்பின்னர் சொற்ப நாட்களேயன்றி (அங்கு) தங்கியிருக்க மாட்டார்கள்.
17:76. (நபியே! உமது) ஊரிலிருந்து உமது காலைப்பெயர்த்து அதிலிருந்து உம்மை வெளிப்படுத்திவிடவே அவர்கள் முடிவு கட்டியிருந்தார்கள். அப்படி அவர்கள் செய்திருந்தால் உமக்குப் பின்னர் வெகு சொற்ப நாள்களே தவிர அங்கு அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.
17:76. இந்த மண்ணிலிருந்து உமது பாதத்தைப் பெயர்த்திட வேண்டும்; உம்மை இங்கிருந்து வெளியேற்றிட வேண்டும் என்று அவர்கள் மும்முரமாக முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்தால் உமக்குப் பின் அவர்களும் இங்கு அதிக காலம் தங்கியிருக்க முடியாது!
17:76. நிச்சயமாக (நபியே! உம்முடைய) ஊரிலிருந்து உம்மை அடி பெயரச்செய்து அதிலிருந்து உம்மை வெளியேற்றிவிட அவர்கள் முனைகின்றார்கள், (அப்படிச் செய்திருந்தால்,) உமக்குப் பின்னர் வெகு சொற்பமேயன்றி அவர்களும் அங்கு (மக்காவில்) தங்கியிருக்க மாட்டார்கள்.
17:77
17:77 سُنَّةَ مَنْ قَدْ اَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رُّسُلِنَا‌ وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيْلًا‏
سُنَّةَ நடைமுறை مَنْ எவர் قَدْ திட்டமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் قَبْلَكَ உமக்கு முன்பு مِنْ رُّسُلِنَا‌ நம் தூதர்களில் وَلَا تَجِدُ நீர் காணமாட்டீர் لِسُنَّتِنَا நம் நடைமுறையில் تَحْوِيْلًا‏ மாற்றத்தை
17:77. திடமாக, உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம் தூதர்களைப் பொறுத்தும் இது வழிமுறையாக இருந்து வந்தது; நம்முடைய (இவ்)வழிமுறையில் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.  
17:77. உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களைப் பற்றி நடைபெற்ற வழக்கமும் (இதுவாகவே) இருந்தது. நமது அந்த வழக்கத்தில் ஒரு மாறுதலையும் நீர் காணமாட்டீர்.
17:77. உமக்கு முன்னால் அனுப்பப்பட்ட நம்முடைய அனைத்துத் தூதர்கள் விஷயத்திலும் நாம் கடைப்பிடித்து வந்த நிலையான நியதி இதுவே. நமது நியதியில் நீர் எந்த மாறுதலையும் காணமாட்டீர்!
17:77. நம்முடைய தூதர்களிலிருந்து உமக்கு முன்னர் திட்டமாக நாம் அனுப்பியவர்களின் வழி முறையாக (இதுவே) இருந்தது, நம்முடைய (அந்த) வழி முறையில் நீர் யாதொரு மாற்றத்தையும் காண மாட்டீர்.
17:78
17:78 اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ وَقُرْاٰنَ الْـفَجْرِ‌ؕ اِنَّ قُرْاٰنَ الْـفَجْرِ كَانَ مَشْهُوْدًا‏
اَقِمِ நிலை நிறுத்துவீராக الصَّلٰوةَ தொழுகையை لِدُلُوْكِ சாய்ந்ததிலிருந்து الشَّمْسِ சூரியன் اِلٰى غَسَقِ இருள் வரை الَّيْلِ இரவின் وَقُرْاٰنَ இன்னும் தொழுகை الْـفَجْرِ‌ؕ ஃபஜ்ர் உடைய اِنَّ قُرْاٰنَ நிச்சயமாக தொழுகை الْـفَجْرِ ஃபஜ்ர் كَانَ இருக்கின்றது مَشْهُوْدًا‏ வானவர்கள் கலந்து கொள்ளக்கூடியதாக
17:78. (நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக; இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக); நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.
17:78. (நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வருவீராக. ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வருவீராக. ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது வானவர்கள் கலந்துகொள்ளும் தொழுகையாகும்.
17:78. சூரியன் (நடுவானை விட்டு) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் வரை தொழுகையை நிலைநிறுத்தும்! அதிகாலையில் ஓதுவதைக் கடைப்பிடியும். திண்ணமாக அதிகாலையில் (குர்ஆன்) ஓதுவது சாட்சி சொல்லப்படக்கூடியதாகும்.
17:78. (நபியே!) சூரியன் (உச்சியை விட்டுச்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் (லுஹர், அஷர், மஃக்ரிப், இஷா நேரத்) தொழுகைகளை நிறைவேற்றுவீராக! ஃபஜ்ருத் தொழுகையையும் (நிறைவேற்றுவீராக!) இன்னும் நிச்சயமாக ஃபஜ்ருத் தொழுகையானது (இரவின் மலக்குகளும், பகலின் மலக்குகளும் ஒருமித்து) ஆஜராகும் தொழுகையாக உள்ளது.
17:79
17:79 وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَ ‌ۖ  عَسٰۤى اَنْ يَّبْعَـثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا‏
وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدْ இரவில்/உறங்கி எழுந்து தொழுவீராக بِهٖ அதை (ஓதி) نَافِلَةً உபரியா(னதா)க لَّكَ உமக்கு ۖ  عَسٰۤى اَنْ يَّبْعَـثَكَ எழுப்புவான்/உம்மை رَبُّكَ உம் இறைவன் مَقَامًا இடத்தில் مَّحْمُوْدًا‏ மஹ்மூது
17:79. இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதா” என்றும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்.
17:79. (தஹஜ்ஜுது தொழுகை உம் மீது கடமையாக இல்லாவிடினும்) நீர், நஃபிலாக இரவில் எழுந்து ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வருவீராக! (இதன் அருளால் ‘மகாமே மஹ்மூத்' என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உமது இறைவன் உம்மை அமர்த்தலாம்.
17:79. இரவில் தஹஜ்ஜுத் தொழுகையைக் கடைப்பிடியும். இது நீர் செய்யவேண்டிய அதிகப்படியான தொழுகையாகும். உம் இறைவன் உம்மை ‘மகாமே மஹ்மூத்’ எனும் அந்தஸ்துக்கு உயர்த்தலாம்.
17:79. நீர் உமக்கு உபரியாக இரவிலும் “தஹஜ்ஜுத்” தொழுகையை (குர் ஆனாகிய) இதை (ஓதுவதைக் கொண்டு நிறைவேற்றுவீராக! (இதனால் மக்காமே மஹ்மூத் என்னும்) மிக்க புகழ் பெற்ற இடத்தில் உம்மை உமதிரட்சகன் (மறுமையில்) எழுப்பப் போதுமானவன்.
17:80
17:80 وَقُلْ رَّبِّ اَدْخِلْنِىْ مُدْخَلَ صِدْقٍ وَّ اَخْرِجْنِىْ مُخْرَجَ صِدْقٍ وَّاجْعَلْ لِّىْ مِنْ لَّدُنْكَ سُلْطٰنًا نَّصِيْرًا‏
وَقُلْ இன்னும் கூறுவீராக رَّبِّ என் இறைவா اَدْخِلْنِىْ நுழையவை/என்னை مُدْخَلَ நுழைவிடத்தில் صِدْقٍ நல்லது اَخْرِجْنِىْ என்னை مُخْرَجَ வெளியேறுமிடத்தில் صِدْقٍ நல்லது وَّاجْعَلْ இன்னும் ஏற்படுத்து لِّىْ எனக்கு مِنْ لَّدُنْكَ உன்னிடமிருந்து سُلْطٰنًا ஓர் ஆதாரத்தை نَّصِيْرًا‏ உதவக்கூடியதாக
17:80. “என் இறைவனே! என்னை சிறந்த முறையில் நுழையச் செய்வாயாக! மேலும் சிறந்த முறையில் என்னை வெளிப்படுத்துவாயாக! மேலும் உன்புறத்திலிருந்து எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக! என்று கூறுவீராக.
17:80. அன்றி, ‘‘என் இறைவனே! என்னை (மதீனாவில் நுழைய வைக்க வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே நுழையவை. (மக்காவிலிருந்து என்னை வெளிப்படுத்த வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே என்னை வெளிப்படுத்திவை. உன்னிடமிருந்து ஒரு வெற்றியை நீ எனக்கு உதவியாக்கித் தந்தருள்'' என்று (நபியே!) பிரார்த்திப்பீராக!
17:80. மேலும், பிரார்த்தனை புரிவீராக: “என் இறைவனே! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் உண்மையுடன் கொண்டு செல்வாயாக! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் உண்மையுடன் வெளியேற்றுவாயாக! உன் தரப்பிலிருந்து எனக்குப் பக்கபலமாக ஓர் அதிகாரத்தை வழங்குவாயாக!”
17:80. அன்றியும், “என் இரட்சகனே! என்னை (மதீனாவில்) உண்மையான பிரவேசமாக பிரவேசிக்க வைப்பாயாக! (மக்காவிலிருந்து) உண்மையான வெளியேற்றுதலாக என்னை வெளியேற்றி வைப்பாயாக! உன்னிடமிருந்து உதவியைப் பெறும் அதிகாரத்தையும் எனக்கு நீ ஆக்கித் தருவாயாக!” என்று (நபியே!) நீர் (பிரார்த்தித்துக்) கூறுவீராக!
17:81
17:81 وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُ‌ؕ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا‏
وَقُلْ இன்னும் கூறுவீராக جَآءَ வந்தது الْحَـقُّ சத்தியம் وَزَهَقَ இன்னும் அழிந்தது الْبَاطِلُ‌ؕ அசத்தியம் اِنَّ الْبَاطِلَ நிச்சயமாகஅசத்தியம் كَانَ இருக்கின்றது زَهُوْقًا‏ அழியக்கூடியதாக
17:81. (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.
17:81. மேலும், ‘‘சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்'' என்றும் கூறுவீராக!.
17:81. மேலும், பிரகடனம் செய்வீராக: “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. திண்ணமாக அசத்தியம் அழியக் கூடியதே!”
17:81. அன்றியும், “சத்தியம் வந்து விட்டது, அசத்தியம் அழிந்துவிட்டது, நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” என்றும் கூறுவீராக!
17:82
17:82 وَنُنَزِّلُ مِنَ الْـقُرْاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَ‌ۙ وَلَا يَزِيْدُ الظّٰلِمِيْنَ اِلَّا خَسَارًا‏
وَنُنَزِّلُ இறக்குகிறோம் مِنَ الْـقُرْاٰنِ குர்ஆனில் مَا எது هُوَ அது شِفَآءٌ நோய் நிவாரணி وَّرَحْمَةٌ இன்னும் அருள் لِّـلْمُؤْمِنِيْنَ‌ۙ நம்பிக்கையாளர்களுக்கு وَلَا يَزِيْدُ அதிகப்படுத்தாது الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு اِلَّا خَسَارًا‏ நஷ்டத்தைத் தவிர
17:82. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.
17:82. நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் நோய் நிவாரணியாகவும் உள்ளவற்றையே இந்தத் திரு குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதையும்) அதிகரிப்பதில்லை.
17:82. இந்தக் குர்ஆனை இறக்கியருளும் தொடரில் இறைநம்பிக்கையாளர்களுக்கு நிவாரணமாகவும் அருளாகவும் உள்ளவற்றை நாம் இறக்கியருளிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், கொடுமை புரிபவர்களுக்கு அது பேரிழப்பைத் தவிர வேறு எதையும் அதிகப்படுத்துவதில்லை.
17:82. விசுவாசங்கொண்டோருக்கு எது குணப்படுத்துமோ அதையும், இன்னும் அருளையும் இந்தக் குர் ஆனிலிருந்து நாம் இறக்கி வைக்கிறோம், இன்னும், அக்கிரமக்காரர்களுக்கு இது நஷ்டத்தையே தவிர (வேறெதையும்) அதிகமாக்காது.
17:83
17:83 وَاِذَاۤ اَنْعَمْنَا عَلَى الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖ‌ۚ وَاِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَـــٴُـوْسًا‏
وَاِذَاۤ اَنْعَمْنَا நாம் அருள் புரிந்தால் عَلَى الْاِنْسَانِ மனிதனுக்கு اَعْرَضَ புறக்கணிக்கின்றான் وَنَاٰ بِجَانِبِهٖ‌ۚ இன்னும் தூரமாகி விடுகிறான் مَسَّهُ அவனை الشَّرُّ ஒரு தீங்கு كَانَ ஆகிவிடுகின்றான் يَـــٴُـوْسًا‏ நிராசையுடையவனாக
17:83. நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான்.
17:83. நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மை) புறக்கணித்து முகம் திரும்பிக் கொள்கிறான். அவனை ஒரு தீங்கு அணுகினாலோ நம்பிக்கை இழந்து விடுகிறான்.
17:83. மனிதனின் நிலை என்னவெனில், அவனுக்கு நாம் அருள்புரிந்தால் அகந்தையுடன் நடந்து கொள்கிறான்; மேலும், முகம் திருப்பிச் செல்கிறான். அவனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமாயின் நிராசை யடைந்து போகிறான்.
17:83. மேலும், நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால், அவன் புறக்கணித்து (நம்மை விட்டும்) அவன் வெகு தூரத்தில் சென்றும் விடுகின்றான், அவனை (ஏதேனும் ஒரு) தீங்கு அணுகினாலோ (நம்பிக்கை இழந்து) நிராசையுடையவனாகி விடுகிறான்.
17:84
17:84 قُلْ كُلٌّ يَّعْمَلُ عَلٰى شَاكِلَتِهٖؕ فَرَبُّكُمْ اَعْلَمُ بِمَنْ هُوَ اَهْدٰى سَبِيْلًا‏
قُلْ கூறுவீராக كُلٌّ ஒவ்வொருவரும் يَّعْمَلُ அமல் செய்கிறார் عَلٰى شَاكِلَتِهٖؕ தனது பாதையில் فَرَبُّكُمْ ஆகவே, உங்களது இறைவன்தான் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَنْ யார் என்பதை هُوَ அவர் اَهْدٰى மிக நேர்வழி பெற்றவர் سَبِيْلًا‏ பாதையால்
17:84. (நபியே!) நீர் கூறுவீராக: “ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்.”
17:84. (ஆகவே, நபியே!) கூறுவீராக: ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தோன்றியவற்றையே செய்கிறான். ஆகவே, நேரான வழியில் செல்பவன் யார் என்பதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்.
17:84. (நபியே! இவர்களிடம்) கூறிவிடும்: “ஒவ்வொருவரும் தத்தமது வழிமுறைப்படி செயலாற்றுகின்றனர். ஆனால், எவர் மிகவும் நேரான வழியில் உள்ளவர் என்பதை உம் அதிபதியே நன்கு அறிகின்றான்.”
17:84. “ஒவ்வொருவரும் தன் வழியிலேயே செயல்படுகிறார், ஆகவே, நேர் வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இரட்சகன்தான் மிக்க அறிந்தவன்” என்று (நபியே! நீர்) கூறுவீராக!
17:85
17:85 وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ‌ ؕ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا‏
وَيَسْــٴَــلُوْنَكَ கேட்கிறார்கள்/உம்மிடம் عَنِ பற்றி الرُّوْحِ‌ ؕ ரூஹ் قُلِ கூறுவீராக الرُّوْحُ ரூஹ் مِنْ اَمْرِ கட்டளையினால் رَبِّىْ என் இறைவன் وَمَاۤ اُوْتِيْتُمْ நீங்கள் கொடுக்கப்படவில்லை مِّنَ الْعِلْمِ கல்வியில் اِلَّا தவிர قَلِيْلًا‏ சொற்பமே
17:85. (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.
17:85. (நபியே!) ரூஹைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். அதற்கு நீர் “அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. (அதைப் பற்றி) வெகு சொற்ப ஞானமே தவிர உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. (ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது)'' என்று கூறுவீராக.
17:85. ‘ரூஹ்’ பற்றி இவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள். கூறுவீராக: “ரூஹ் என் இறைவனின் கட்டளையினால் வருகிறது. ஆனால், உங்களுக்கு மிகக் குறைவாகவே ஞானம் வழங்கப்பட்டுள்ளது.
17:85. (நபியே!) ரூஹை! ஆன்மாவை)ப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள், (அதற்கு) நீர் “ரூஹு எனது இரட்சகனின் கட்டளையில் உள்ளதாகும், (அதைப் பற்றிய) அறிவிலிருந்து வெகு சொற்பமே தவிர நீங்கள் கொடுக்கப்படவில்லை, (ஆதலால் அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது)” என்று கூறுவீராக!
17:86
17:86 وَلَٮِٕنْ شِئْنَا لَنَذْهَبَنَّ بِالَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ ثُمَّ لَا تَجِدُ لَـكَ بِهٖ عَلَيْنَا وَكِيْلًا ۙ‏
وَلَٮِٕنْ شِئْنَا நாம் நாடினால் لَنَذْهَبَنَّ நிச்சயம் போக்கி விடுவோம் بِالَّذِىْۤ எவற்றை اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு ثُمَّ பிறகு لَا تَجِدُ காணமாட்டீர் لَـكَ உமக்கு بِهٖ அதற்கு عَلَيْنَا நமக்கு எதிராக وَكِيْلًا ۙ‏ ஒரு பொறுப்பாளரை
17:86. (நபியே!) நாம் நாடினால் உமக்கு நாம் வஹீயாக நாம் அறிவித்ததை (குர்ஆனை) போக்கிவிடுவோம்; பின்னர், நமக்கெதிராக உமக்குப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர்.
17:86. (நபியே!) நாம் விரும்பினால் வஹ்யி மூலம் உமக்கு அறிவித்த இந்த குர்ஆனையே (உம்மிடமிருந்து) போக்கிவிடுவோம். பின்னர், (இதை உம்மிடம் கொண்டு வர) நமக்கு விரோதமாக உமக்கு உதவி செய்ய எவரையும் நீர் காணமாட்டீர்.
17:86. (நபியே!) நாம் நாடினால் வஹியின் மூலம் உமக்கு வழங்கியிருக்கும் அனைத்தையும் பறித்துவிடுவோம். பிறகு, நமக்கு எதிராக அவற்றைத் திரும்பப் பெற்றுத் தரக்கூடிய ஆதரவாளர் எவரையும் நீர் காணமாட்டீர்.
17:86. மேலும், நபியே! நாம் நாடினால் உமக்கு வஹீ மூலம் அறிவித்திருந்தோமே அத்தகைய (குர் ஆனாகிய)தை (உம்மிடமிருந்து) நிச்சயமாக நாம் போக்கி விடுவோம், பிறகு (இதனை உம்மிடம் கொண்டு வர) நமக்கு விரோதமாக அதற்காகப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காண மாட்டீர்.
17:87
17:87 اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ‌ ؕ اِنَّ فَضْلَهٗ كَانَ عَلَيْكَ كَبِيْرًا‏
اِلَّا ஆனால் رَحْمَةً அருள் مِّنْ رَّبِّكَ‌ ؕ உம் இறைவனுடைய اِنَّ நிச்சயமாக فَضْلَهٗ அவனுடைய அருள் كَانَ இருக்கிறது عَلَيْكَ உம்மீது كَبِيْرًا‏ மிகப் பெரிதாக
17:87. ஆனால் உம் இறைவனுடைய ரஹ்மத்தைத் தவிர (இவ்வாறு நிகழாமல் இருப்பதற்கு வேறெதுவுமில்லை); நிச்சயமாக உம் மீது அவனுடைய அருட்கொடை மிகப் பெரிதாகவே இருக்கிறது.
17:87. ஆனால், உமது இறைவனுடைய அருளின் காரணமாகவே (அவ்வாறு அவன் செய்யவில்லை.) நிச்சயமாக உம் மீது அவனுடைய அருள் மிகப்பெரிதாகவே இருக்கிறது.
17:87. உமக்குக் கிடைத்திருப்பவையெல்லாம், உம் அதிபதியின் கருணையால்தான் கிடைத்திருக்கின்றன. உண்மையாக, உம் மீது அவன் பொழியும் அருள் மாபெரியதாகும்.
17:87. உமதிரட்சகனின் அருளாகவே தவிர (அதை நாம் விட்டு வைத்திருக்கவில்லை). நிச்சயமாக உம்மீது அவனுடைய பேரருள் மிகப் பெரிதாகவே இருக்கிறது.
17:88
17:88 قُلْ لَّٮِٕنِ اجْتَمَعَتِ الْاِنْسُ وَالْجِنُّ عَلٰٓى اَنْ يَّاْتُوْا بِمِثْلِ هٰذَا الْقُرْاٰنِ لَا يَاْتُوْنَ بِمِثْلِهٖ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيْرًا‏
قُلْ கூறுவீராக لَّٮِٕنِ اجْتَمَعَتِ ஒன்று சேர்ந்தால் الْاِنْسُ மனிதர்கள் وَالْجِنُّ இன்னும் ஜின்கள் عَلٰٓى மீது اَنْ يَّاْتُوْا அவர்கள் வர بِمِثْلِ போன்றதைக் கொண்டு هٰذَا இது الْقُرْاٰنِ குர்ஆன் لَا يَاْتُوْنَ வர மாட்டார்கள் بِمِثْلِهٖ இது போன்றதைக் கொண்டு وَلَوْ كَانَ இருந்தாலும் சரியே بَعْضُهُمْ அவர்களில் சிலர் لِبَعْضٍ சிலருக்கு ظَهِيْرًا‏ உதவியாளராக
17:88. “இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” என்று (நபியே) நீர் கூறும்.
17:88. (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து, சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப்போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டுவர முயற்சித்தபோதிலும் இதைப்போல் கொண்டு வர அவர்களால் (முடியவே) முடியாது.
17:88. கூறும்: “மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தக் குர்ஆனைப் போன்று ஒன்றைக் கொண்டுவர முயன்றாலும் இதைப்போன்று அவர்களால் கொண்டுவர முடியாது; அவர்கள் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே!”
17:88. “இந்தக் குர் ஆனைப் போன்று கொண்டு வருவதற்கு மனிதர்களும், ஜின்களும் ஒன்று சேர்ந்தாலும் இதனைப் போன்று அவர்கள் கொண்டுவர மாட்டார்கள், அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே!” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
17:89
17:89 وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِىْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ فَاَبٰٓى اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا‏
وَلَقَدْ திட்டவட்டமாக صَرَّفْنَا விவரித்தோம் لِلنَّاسِ மக்களுக்கு فِىْ هٰذَا இதில் الْقُرْاٰنِ குர்ஆன் مِنْ كُلِّ مَثَلٍ எல்லா உதாரணங்களையும் فَاَبٰٓى மறுத்தனர் اَكْثَرُ அதிகமானவர்(கள்) النَّاسِ மக்களில் اِلَّا தவிர كُفُوْرًا‏ நிராகரிப்பதை
17:89. நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும், மனிதர்களில் மிகுதியானவர்கள் (இதை) நிராகரிக்காதிருக்கவில்லை.
17:89. இந்த குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் மனிதர்களுக்கு(த் திரும்பத் திரும்ப) விவரித்துக் கூறியிருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதை நிராகரிக்காமல் இருக்கவில்லை.
17:89. நாம் இந்தக் குர்ஆனில் பலவிதமான உவமைகளின் மூலம் மக்களுக்கு (உண்மைகளை) விவரித்துள்ளோம். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நிராகரிப்பிலேயே விடாப்பிடியாய் இருக்கிறார்கள்.
17:89. மேலும், இந்தக் குர் ஆனில், சகல உதாரணங்களையும் மனிதர்களுக்கு நாம் (திருப்பித் திருப்பி) விவரித்துத் தெளிவாக்கியுள்ளோம், ஆனால், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) நிராகரிப்பதைத் தவிர (வேறு எதையும்) ஏற்பதில்லை.
17:90
17:90 وَقَالُوْا لَنْ نُّـؤْمِنَ لَـكَ حَتّٰى تَفْجُرَ لَنَا مِنَ الْاَرْضِ يَنْۢبُوْعًا ۙ‏
وَقَالُوْا இன்னும் கூறினர் لَنْ نُّـؤْمِنَ நம்பிக்கை கொள்ளவே மாட்டோம் لَـكَ உம்மை حَتّٰى வரை تَفْجُرَ நீர் பிளந்து விடுவீர் لَنَا எங்களுக்கு مِنَ الْاَرْضِ பூமியில் يَنْۢبُوْعًا ۙ‏ ஓர் ஊற்றை
17:90. இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “நீர் எங்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு நீர் ஊற்றைப் பீறிட்டு வரும்படி செய்யும் வரையில், உம் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.
17:90. (நபியே!) ‘‘இப்பூமி வெடித்து, ஒரு ஊற்றுக்கண்ணை நீர் ஏற்படுத்தும் வரை நாம் உம்மை நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
17:90. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: நீர் பூமியைப் பிளந்து எங்களுக்காக ஒரு நீரூற்றை ஓடச் செய்யாதவரை,
17:90. இன்னும், “(நபியே! இப்)பூமியிலிருந்து, நீர் ஒரு நீரூற்றை எங்களுக்காக பீறிட்டு ஓடச் செய்யும் வரை உம்மை நாங்கள் விசுவாசிக்கவே மாட்டோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
17:91
17:91 اَوْ تَكُوْنَ لَـكَ جَنَّةٌ مِّنْ نَّخِيْلٍ وَّعِنَبٍ فَتُفَجِّرَ الْاَنْهٰرَ خِلٰلَهَا تَفْجِيْرًا ۙ‏
اَوْ அல்லது تَكُوْنَ இருக்கிறது لَـكَ உமக்கு جَنَّةٌ ஒரு தோட்டம் مِّنْ இருந்து نَّخِيْلٍ பேரிட்சை மரம் وَّعِنَبٍ இன்னும் திராட்சை செடி فَتُفَجِّرَ பிளந்தோடச் செய்கின்றீர் الْاَنْهٰرَ நதிகளை خِلٰلَهَا அதற்கு மத்தியில் تَفْجِيْرًا ۙ‏ பிளப்பதாக
17:91. “அல்லது பேரீச்சை மரங்களும், திராட்சைக் கொடிகளும் (நிரப்பி) உள்ள தோட்டம் ஒன்று உமக்கு இருக்க வேண்டும். அதன் நடுவே ஆறுகளை நீர் ஒலித்தோடச் செய்ய வேண்டும்.
17:91. ‘‘அல்லது மத்தியில் தொடர்ந்து நீரருவிகளை நீர் ஓடவைத்துக் கொண்டிருக்கக்கூடிய திராட்சை, பேரீச்சை மரங்களையுடைய ஒரு சோலை உமக்கு ஆகும் வரை (உம்மை நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்றும் கூறுகின்றனர்).
17:91. அல்லது பேரீச்சைகளும் திராட்சைகளும் கொண்ட ஒரு தோட்டம் உமக்கு இருந்து, அதன் நடுவே ஆறுகளை நீர் ஓடச்செய்யாதவரை நாங்கள் உமது பேச்சை நம்ப மாட்டோம்.
17:91. –அல்லது பேரீச்சை திராட்சை (மரங்களை)யுடைய ஒரு தோட்டம் உமக்கு இருந்து அவைகளுக்கிடையில் ஆறுகளை (ஏற்படுத்தி) நீர் ஓடச் செய்யும்வரை –
17:92
17:92 اَوْ تُسْقِطَ السَّمَآءَ كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسَفًا اَوْ تَاْتِىَ بِاللّٰهِ وَالْمَلٰۤٮِٕكَةِ قَبِيْلًا ۙ‏
اَوْ அல்லது تُسْقِطَ நீர் விழவைக்கின்றீர் السَّمَآءَ வானத்தை كَمَا போன்று زَعَمْتَ நீர் கூறியது عَلَيْنَا எங்கள் மீது كِسَفًا துண்டுகளாக اَوْ அல்லது تَاْتِىَ بِاللّٰهِ அல்லாஹ்வை வரவைக்கின்றீர் وَالْمَلٰۤٮِٕكَةِ இன்னும் வானவர்களை قَبِيْلًا ۙ‏ கண்முன்
17:92. “அல்லது நீர் எண்ணுவது போல் வானம் துண்டு துண்டாக இடிந்து எங்கள் மேல் விழச் செய்யும் வரை; அல்லது அல்லாஹ்வையும் மலக்குகளையும் (நமக்குமுன்) நேருக்கு நேராகக் கொண்டு வந்தாலன்றி.
17:92. ‘‘அல்லது நீர் எண்ணுகிற பிரகாரம் வானத்தை பல துண்டுகளாக எங்கள் (தலை) மீது விழவைக்கின்ற வரை அல்லது அல்லாஹ்வையும் வானவர்களையும் நம் (கண்) முன் நீர் கொண்டு வருகின்றவரை (உம்மை நாம் நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்றும் கூறுகின்றனர்).
17:92. அல்லது நீர் வாதிடுவதுபோல் வானத்தை துண்டு துண்டாக்கி எங்கள்மீது போடாதவரை, அல்லது அல்லாஹ்வையும் வானவர்களையும் நேரடியாக எங்கள் முன் கொண்டுவராத வரை உம்மை நாங்கள் நம்பமாட்டோம்.
17:92. – அல்லது நீர் எண்ணியது போன்று எங்களின்மீது வானத்திலிருந்து துண்டுகளை விழச்செய்யும்வரை – அல்லது அல்லாஹ்வையும், மலக்குகளையும் (நம்) முன்பாக நீர் கொண்டு வரும்வரை –
17:93
17:93 اَوْ يَكُوْنَ لَـكَ بَيْتٌ مِّنْ زُخْرُفٍ اَوْ تَرْقٰى فِى السَّمَآءِ ؕ وَلَنْ نُّـؤْمِنَ لِرُقِيِّكَ حَتّٰى تُنَزِّلَ عَلَيْنَا كِتٰبًا نَّـقْرَؤُهٗ‌ ؕ قُلْ سُبْحَانَ رَبِّىْ هَلْ كُنْتُ اِلَّا بَشَرًا رَّسُوْلًا‏
اَوْ அல்லது يَكُوْنَ இருக்கும் لَـكَ உமக்கு بَيْتٌ ஒரு வீடு مِّنْ زُخْرُفٍ தங்கத்தில் اَوْ அல்லது تَرْقٰى நீர் ஏறுவாய் فِى السَّمَآءِ ؕ வானத்தில் وَلَنْ نُّـؤْمِنَ அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம் لِرُقِيِّكَ உமது ஏறுதலுக்காக حَتّٰى வரை تُنَزِّلَ இறக்கி வைப்பீர் عَلَيْنَا எங்கள் மீது كِتٰبًا ஒரு வேதத்தை نَّـقْرَؤُهٗ‌ ؕ அதைப் படிக்கின்றோம் قُلْ கூறுவீராக سُبْحَانَ மிகப்பரிசுத்தமானவன் رَبِّىْ என் இறைவன் هَلْ ? كُنْتُ இருக்கின்றேன் اِلَّا தவிர بَشَرًا ஒரு மனிதராக رَّسُوْلًا‏ தூதரான
17:93. “அல்லது ஒரு தங்கமாளிகை உமக்கு இருந்தாலன்றி (உம் மீது நம்பிக்கை கொள்ளோம்); அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும், (அங்கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும் வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்ப மாட்டோம்” என்று கூறுகின்றனர். “என் இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?” என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக.  
17:93. ‘‘அல்லது (மிக்க அழகான) தங்கத்தினாலாகிய ஒரு மாளிகை உமக்கு ஆகும் வரை அல்லது வானத்தின் மீது நீர் ஏறுகின்ற வரை (நாம் உம்மை நம்பிக்கைகொள்ள மாட்டோம்). ஏறியபோதிலும் நாம் ஓதக்கூடிய ஒரு வேதத்தை (நேராக) நம்மீது நீர் இறக்கிவைக்காத வரை நீர் வானத்தில் ஏறியதையும் நாம் நம்பமாட்டோம்'' என்றும் கூறுகின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் (உங்களைப் போன்ற) ஒரு மனிதன்தான். எனினும், நான் (அவனால் அனுப்பப்பட்ட) ஒரு தூதர் என்பதைத் தவிர வேறெதுவும் உண்டா?''
17:93. அல்லது தங்கமாளிகை ஒன்று உமக்காக உருவாகாத வரை அல்லது வானத்தில் நீர் ஏறிச் செல்லாத வரை நீர் வானத்தில் ஏறினாலும்கூட நாங்கள் படிப்பதற்கு ஒரு நூலை எங்கள் மீது இறக்கித் தராத வரை உம்மை நம்பமாட்டோம்” (நபியே! இவர்களிடம்) கூறுவீராக: “தூய்மையானவனாக இருக்கிறான், என்னைப் பரிபாலிப்பவன்! நான் தூதுச் செய்தியைக் கொண்டுவருகின்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லையே!”
17:93. –அல்லது (மிக்க அழகான) பொன்னாலாகிய ஒரு (மாளிகை) வீடு உமக்கு ஆகும்வரை, அல்லது வானத்தில் நீர் உயர்ந்து செல்லும்வரை (உம்மை விசுவாசிக்க மாட்டோம்.) இன்னும், நாம் ஓதக்கூடிய ஒரு வேதத்தை நீர் (நேராக) நம் மீது இறக்கி வைக்கும் வரை (நீர் வானத்தில்) ஏறியதை நம்பவே மாட்டோம் (என்றும் கூறுகின்றனர், அதற்கு) “என் இரட்சகன் மிகப் பரிசுத்தமானவன், நான் (அல்லாஹ்வின்) தூதனாகிய ஒரு மனிதனாகவே தவிர இருக்கின்றேனா?” என்று நீர் கூறுவீராக!
17:94
17:94 وَمَا مَنَعَ النَّاسَ اَنْ يُّؤْمِنُوْۤا اِذْ جَآءَهُمُ الْهُدٰٓى اِلَّاۤ اَنْ قَالُـوْۤا اَبَعَثَ اللّٰهُ بَشَرًا رَّسُوْلًا‏
وَمَا مَنَعَ தடுக்கவில்லை النَّاسَ மனிதர்களை اَنْ يُّؤْمِنُوْۤا அவர்கள் நம்பிக்கைகொள்வது اِذْ போது جَآءَهُمُ அவர்களுக்கு வந்தது الْهُدٰٓى நேர்வழி اِلَّاۤ தவிர اَنْ قَالُـوْۤا அவர்கள் கூறியது اَبَعَثَ அனுப்பினானா? اللّٰهُ அல்லாஹ் بَشَرًا மனிதரை رَّسُوْلًا‏ தூதராக
17:94. மனிதர்களிடம் நேர்வழி (காட்டி) வந்த போது, “ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பினான்” என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை வேறெதுவும் தடுக்கவில்லை.
17:94. மனிதர்களிடம் ஒரு நேரான வழி வந்த சமயத்தில், ‘‘ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பி வைத்தான்?'' என்று கூறுவதைத் தவிர அவர்கள் நம்பிக்கை கொள்வதை விட்டும் அவர்களை எதுவும் தடுக்கவில்லை.
17:94. மக்களிடம் நேர்வழி வந்தபோதெல்லாம் அதன் மீது நம்பிக்கை கொள்ளவிடாமல் அவர்களைத் தடுத்தது, “அல்லாஹ் ஒரு மனிதரையா தூதராக அனுப்பியிருக்கிறான்?” என்று அவர்கள் கேட்டதுதான்.
17:94. மனிதர்களை – அவர்களிடம் நேர் வழி வந்த சமயத்தில், “அல்லாஹ் ஒரு மனிதரையா (தன்) தூதராக அனுப்பி வைத்தான்” என்று அவர்கள் கூறுவதைத் தவிர - அவர்கள் விசுவாசங்கொள்வதை (வேறெதுவும்) தடுக்கவில்லை.
17:95
17:95 قُلْ لَّوْ كَانَ فِى الْاَرْضِ مَلٰۤٮِٕكَةٌ يَّمْشُوْنَ مُطْمَٮِٕنِّيْنَ لَـنَزَّلْنَا عَلَيْهِمْ مِّنَ السَّمَآءِ مَلَـكًا رَّسُوْلًا‏
قُلْ கூறுவீராக لَّوْ كَانَ இருந்திருந்தால் فِى الْاَرْضِ பூமியில் مَلٰۤٮِٕكَةٌ வானவர்கள் يَّمْشُوْنَ நடக்கின்றனர் مُطْمَٮِٕنِّيْنَ நிம்மதியானவர்களாக لَـنَزَّلْنَا இறக்கியிருப்போம் عَلَيْهِمْ அவர்களிடம் مِّنَ இருந்து السَّمَآءِ வானம் مَلَـكًا வானவரை رَّسُوْلًا‏ ஒரு தூதராக
17:95. (நபியே!) நீர் கூறும்: “பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்” என்று.
17:95. (அதற்கு) நீர் கூறுவீராக: பூமியில் (மனிதர்களுக்குப் பதிலாக) வானவர்களே வசித்திருந்து, அதில் அவர்கள் நிம்மதியாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து (அவர்கள் இனத்தைச் சார்ந்த) ஒரு வானவரையே (நம்) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம். (ஆகவே, மனிதர்களாகிய அவர்களிடம் மனிதராகிய உம்மை நம் தூதராக அனுப்பியதில் தவறொன்றுமில்லை.)
17:95. அவர்களிடம் கூறும்: “பூமியில் வானவர்களே நிம்மதியுடன் நடந்து திரிந்து கொண்டிருப்பார்களேயானால், நாம் அவர்களுக்காக வானத்திலிருந்து திண்ணமாக ஒரு வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்!”
17:95. (அதற்கு) நீர் கூறுவீராக! “பூமியில் மலக்குகள் (வசித்து) இருந்து, (அதில் அவர்கள் நிம்மதியுடையோராக நடந்து திரிந்து கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் வானத்திலிருந்து ஒரு மலக்கையே (நம்முடைய) தூதராக அவர்களிடம் இறக்கி வைத்திருப்போம், (எனினும், அவர்கள் மனிதர்களாக இருப்பதனால் ஒரு மனிதரே தவிர அவர்களுக்குத் தூதராக வர மாட்டார்.)
17:96
17:96 قُلْ كَفٰى بِاللّٰهِ شَهِيْدًۢا بَيْنِىْ وَبَيْنَكُمْ‌ؕ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًۢا بَصِيْرًا‏
قُلْ கூறுவீராக كَفٰى போதுமாகி விட்டான் بِاللّٰهِ அல்லாஹ்வே شَهِيْدًۢا சாட்சியாளனாக بَيْنِىْ எனக்கிடையில் وَبَيْنَكُمْ‌ؕ இன்னும் உங்களுக்கிடையில் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் بِعِبَادِهٖ தன் அடியார்களை خَبِيْرًۢا ஆழ்ந்தறிந்தவனாக بَصِيْرًا‏ உற்று நோக்கினவனாக
17:96. “எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்; நிச்சயமாக அவன் தன் அடியார்களைப் பற்றி நன்கு அறிந்தவனாகவும், (யாவற்றையும்) பார்ப்பவனாகவும் இருக்கின்றான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
17:96. (இன்னும்,) நீர் கூறுவீராக: ‘‘எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ் ஒருவனே போதுமான சாட்சியாக இருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் தன் அடியார்களை நன்கறிந்தவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
17:96. (நபியே! அவர்களிடம்) கூறிவிடும்: “எனக்கும் உங்களுக்கு மிடையே அல்லாஹ்வின் சாட்சியமே போதுமானது. அவன் தன்னுடைய அடிமைகளின் நிலைமைகளை நன்கறிந்து கொண்டும் அனைத்தையும் பார்த்துக் கொண்டும் இருக்கின்றான்.”
17:96. (இன்னும்) நீர் கூறுவீராக! “எனக்கும் உங்களுக்குமிடையிலும் (உண்மையை நிலைநிறுத்த) சாட்சியாக அல்லாஹ் ஒருவனே போதுமானவன், (ஏனென்றால்,) நிச்சயமாக அவன் தன் அடியார்களைப்பற்றி நன்குணர்பவனாக, (சாட்சியாக இருக்க, யாவற்றையும்) பார்ப்பவனாக இருக்கின்றான்.
17:97
17:97 وَمَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ‌ ۚ وَمَنْ يُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ اَوْلِيَآءَ مِنْ دُوْنِهٖ‌ ؕ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيٰمَةِ عَلٰى وُجُوْهِهِمْ عُمْيًا وَّبُكْمًا وَّصُمًّا‌ ؕ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ ؕ كُلَّمَا خَبَتْ زِدْنٰهُمْ سَعِيْرًا‏
وَمَنْ எவரை يَّهْدِ நேர்வழி செலுத்துவான் اللّٰهُ அல்லாஹ் فَهُوَ அவர்தான் الْمُهْتَدِ‌ ۚ நேர்வழி பெற்றவர் وَمَنْ இன்னும் எவரை يُّضْلِلْ வழிகெடுப்பான் فَلَنْ تَجِدَ அறவே காணமாட்டீர் لَهُمْ அவர்களுக்கு اَوْلِيَآءَ உதவியாளர்களை مِنْ دُوْنِهٖ‌ ؕ அவனையன்றி وَنَحْشُرُ இன்னும் ஒன்றுசேர்ப்போம் هُمْ அவர்களை يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் عَلٰى وُجُوْهِهِمْ தங்கள் முகங்கள் மீது عُمْيًا குருடர்களாக وَّبُكْمًا இன்னும் ஊமையர்களாக وَّصُمًّا‌ ؕ இன்னும் செவிடர்களாக مَاْوٰٮهُمْ அவர்களுடைய தங்குமிடம் جَهَـنَّمُ‌ ؕ நரகம்தான் كُلَّمَا خَبَتْ அது அனல் தணியும் போதெல்லாம் زِدْنٰهُمْ அதிகப்படுத்துவோம்/அவர்களுக்கு سَعِيْرًا‏ கொழுந்து விட்டெரியும் நெருப்பை
17:97. அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்.
17:97. எவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்கள் தான் நேரான வழியை அடைவார்கள். எவர்களை (அல்லாஹ்) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர்களை அவனைத் தவிர்த்து வேறுயாரையும் நீர் காண மாட்டீர். மேலும், மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி) அவர்கள் தங்கள் முகத்தால் நடந்து வரும்படி (செய்து) அவர்களை ஒன்று சேர்ப்போம். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். (அதன்) அனல் தணியும் போதெல்லாம் மென்மேலும் கொழுந்து விட்டெரியும்படி செய்து கொண்டே இருப்போம்.
17:97. யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகின்றானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் எவர்களை வழிகேட்டிலே ஆழ்த்துகின்றானோ அவர்களுக்கு அல்லாஹ்வை விடுத்து வேறு எந்தப் பாதுகாவலரையும் நீர் காணமாட்டீர். மறுமைநாளில் நாம் அவர்களை முகம் குப்புற இழுத்து வருவோம்; குருடர்களாய்; செவிடர்களாய் மேலும், ஊமையர்களாய்! அவர்களின் இருப்பிடம் நரகமாகும். அதன் வெப்பம் தணியத் தொடங்கும்போது நாம் அதனை இன்னும் கொழுந்துவிட்டு எரியும்படிச் செய்வோம்.
17:97. மேலும், அல்லாஹ் எவரை நேர்வழியில் செலுத்துகிறானோ அவர் தாம் நேர் வழி பெற்றவராவார், எவர்களை (அல்லாஹ்) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவர்களுக்கு அவனையன்றி (வேறு) உதவியாளரை நீர் காணமாட்டீர், மேலும், அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி) அவர்கள் தங்கள் முகங்கள் மீது குப்புற வரும்படி(ச்செய்து) அவர்களை (மறுமை நாளில்) ஒன்று சேர்ப்போம், அவர்கள் தங்குமிடம் நரகந்தான், அ(தன் நெருப்பான)து தணியும் போதெல்லாம் (அது) கொழுந்து விட்டெரிவதை அவர்களுக்கு (பின்னும்) நாம் அதிகப்படுத்துவோம்.
17:98
17:98 ذٰلِكَ جَزَآؤُهُمْ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاٰيٰتِنَا وَقَالُوْۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا‏
ذٰلِكَ இது جَزَآؤُهُمْ கூலி, தண்டனை/அவர்களின் بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக/அவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் بِاٰيٰتِنَا நம் வசனங்களை وَقَالُوْۤا இன்னும் கூறினர் ءَاِذَا كُنَّا நாங்கள் ஆகிவிட்டால்? عِظَامًا எலும்புகளாக وَّرُفَاتًا இன்னும் மக்கியவர்களாக ءَاِنَّا ?/நிச்சயமாக நாம் لَمَبْعُوْثُوْنَ எழுப்பப்படுவோம் خَلْقًا படைப்பாக جَدِيْدًا‏ புதியது
17:98. அவர்கள் தம் வசனங்களை நிராகரித்து, “நாம் (மரித்து) எலும்புகளாகவும், உக்கி மண்ணோடு மண்ணாகவும் ஆகிவிடுவோமாயின், (மீண்டும்) புதியதொரு படைப்பாக எழுப்பபடுவோமா?” என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்களே அதற்காக அவர்களுடைய கூலி இது தான்.
17:98. அவர்கள், நம் வசனங்களை நிராகரித்து விட்டதுடன், ‘‘நாம் (மரணித்து)எலும்புகளாகவும், உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?'' என்று கூறிக் கொண்டிருந்ததும்தான் இத்தகைய (கொடிய) தண்டனையை அவர்கள் அடைவதற்குரிய காரணமாகும்.
17:98. அவர்கள் நம் சான்றுகளை நிராகரித்ததற்கும், “நாங்கள் வெறும் எலும்புகளாகி மக்கி மண்ணோடு மண்ணாய் ஆகிவிட்ட பிறகு புத்தம் புதிய படைப்பாய் நாங்கள் எழுப்பப்படுவோமா?” என்று கேட்டதற்கும் உரிய கூலியாகும் இது.
17:98. நிச்சயமாக, அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து விட்டனர் என்பதாலும் அன்றியும் “எலும்புகளாகவும், மக்கிவிட்டதாகவும் நாம் ஆகிவிட்டாலும், நிச்சயமாக நாங்கள் புதிய படைப்பாக (உருவாக்கப்பட்டு) எழுப்பப்படுபவர்களா?” எனக் கூறியதாலும் அது அவர்களுக்குரிய கூலியாகும்.
17:99
17:99 اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ قَادِرٌ عَلٰٓى اَنْ يَّخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ اَجَلًا لَّا رَيْبَ فِيْهِ ؕ فَاَبَى الظّٰلِمُوْنَ اِلَّا كُفُوْرًا‏
اَوَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் الَّذِىْ எத்தகையவன் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை قَادِرٌ ஆற்றலுடையவன் عَلٰٓى மீது اَنْ يَّخْلُقَ அவன் படைக்க مِثْلَهُمْ அவர்கள் போன்றவர்களை وَجَعَلَ இன்னும் ஆக்கினான் لَهُمْ அவர்களுக்கு اَجَلًا ஒரு தவணையை لَّا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهِ ؕ அதில் فَاَبَى ஏற்க மறுத்தார்(கள்) الظّٰلِمُوْنَ அக்கிரமக்காரர்கள் اِلَّا தவிர كُفُوْرًا‏ நிராகரிப்பை
17:99. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ் அவர்களைப் போன்றதைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? இன்னும் அவர்களுக்கு ஒரு குறிப்பட்ட தவணையையும் ஏற்படுத்தியிருக்கிறான்; இதில் சந்தேகமில்லை, எனினும், அக்கிரமக்காரர்கள் (இவ்வுண்மையை) நிராகரிக்காமல் இல்லை!
17:99. மெய்யாகவே வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் (மறுமுறையும்) அவர்களைப் போன்றே படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறிய வில்லையா? (இதற்காக) அவர்களுக்கு ஒரு தவணையை ஏற்படுத்தியிருக்கிறான். அதில் ஒரு சந்தேகமுமில்லை. (இவ்வாறிருந்தும்) இவ்வக்கிரமக்காரர்கள் இதை நிராகரிக்காமலில்லை!
17:99. வானங்களையும் பூமியையும் படைத்திருக்கின்ற அல்லாஹ் இவர்கள் போன்றவர்களைப் படைப்பதற்குத் திண்ணமாக வல்லமை பெற்றவன் என்பது இவர்களுக்குப் புலப்படவில்லையா, என்ன? அவனே அவர்களை ஒன்று சேர்ப்பதற்கென குறிப்பிட்ட ஒரு காலத்தை நிர்ணயித்துள்ளான்; அது வருவது திண்ணம்! ஆயினும், கொடுமை புரிபவர்கள் அதனை மறுப்பதிலேயே பிடிவாதமாக இருக்கின்றார்கள்.
17:99. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்தானே அத்தகைய அல்லாஹ் (மறுதடவையும் முன்னிருந்த) அவர்களைப் போன்றே படைக்க ஆற்றலுடையோன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? மேலும் (இதற்காக) அவர்களுக்கு ஒரு தவணையையும் ஏற்படுத்தியிருக்கிறான், அதில் யாதொரு சந்தேகமுமில்லை, ஆகவே அநியாயக்காரர்கள் நிராகரிப்பைத் தவிர வேறு எதையும் ஏற்பதில்லை.
17:100
17:100 قُلْ لَّوْ اَنْـتُمْ تَمْلِكُوْنَ خَزَآٮِٕنَ رَحْمَةِ رَبِّىْۤ اِذًا لَّاَمْسَكْتُمْ خَشْيَةَ الْاِنْفَاقِ‌ ؕ وَكَانَ الْاِنْسَانُ قَتُوْرًا‏
قُلْ கூறுவீராக لَّوْ اَنْـتُمْ تَمْلِكُوْنَ நீங்கள் சொந்தமாக்கி வைத்திருந்தால் خَزَآٮِٕنَ பொக்கிஷங்களை رَحْمَةِ அருளின் رَبِّىْۤ என் இறைவனுடைய اِذًا அப்போது لَّاَمْسَكْتُمْ தடுத்துக் கொண்டிருப்பீர்கள் خَشْيَةَ பயந்து الْاِنْفَاقِ‌ ؕ தர்மம் செய்வது وَكَانَ இருக்கின்றான் الْاِنْسَانُ மனிதன் قَتُوْرًا‏ மகா கஞ்சனாக
17:100. “என்னுடைய இறைவனின் (ரஹ்மத்து என்னும்) அருள் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தப்படுத்திக் கொண்டு இருப்பீர்களானாலும், அவை செலவாகி விடுமோ என்ற பயத்தினால், நீங்கள் (அவற்றைத்) தடுத்துக்கொள்வீர்கள் - மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்” என்று (நபியே!) நீர் கூறும்.  
17:100. (நபியே!) கூறுவீராக: என் இறைவனின் அருள் பொக்கிஷங்கள் அனைத்திற்கும் நீங்களே சொந்தக்காரர்களாக இருந்தால் அது செலவாகி விடுமோ! எனப் பயந்து (எவருக்கும் எதுவுமே கொடுக்காது) நீங்கள் தடுத்துக் கொள்வீர்கள். மனிதன் பெரும் கஞ்சனாக இருக்கிறான்.
17:100. (நபியே! இவர்களிடம்) கூறும்: ஒருவேளை என் அதிபதியின் அருட்களஞ்சியங்கள் உங்கள் கைவசத்தில் இருந்திருந்தால் செலவாகிவிடுமோ எனும் அச்சத்தில் நிச்சயம் அவற்றை நீங்கள் பதுக்கி வைத்திருப்பீர்கள். மனிதன் உண்மையிலேயே குறுகிய மனம் படைத்தவனாக இருக்கின்றான்.
17:100. (நபியே!) நீர் கூறுவீராக! என் இரட்சகனின் அருட்களஞ்சியங்களை நீங்களே சொந்தப்படுத்திக்கொண்டு இருப்பீர்களானால், அப்போது அது செலவாகி விடுவதைப் பயந்து (எவருக்கும் எதையும் கொடுக்காது) நீங்கள் தடுத்துக் கொள்வீர்கள்! மனிதன் பெரும் உலோபியாகவும் இருக்கிறான்.
17:101
17:101 وَلَقَدْ اٰتَيْنَا مُوْسٰى تِسْعَ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ‌ فَسْــٴَــلْ بَنِىْۤ اِسْرَاۤءِيْلَ اِذْ جَآءَهُمْ فَقَالَ لَهٗ فِرْعَوْنُ اِنِّىْ لَاَظُنُّكَ يٰمُوْسٰى مَسْحُوْرًا‏
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் கொடுத்தோம் مُوْسٰى மூஸாவிற்கு تِسْعَ ஒன்பது اٰيٰتٍۢ அத்தாட்சிகள் بَيِّنٰتٍ‌ தெளிவானவை فَسْــٴَــلْ ஆகவே கேட்பீராக بَنِىْۤ சந்ததிகளை اِسْرَاۤءِيْلَ இஸ்ராயீலின் اِذْ جَآءَ அவர் வந்த போது هُمْ அவர்களிடம் فَقَالَ கூறினான் لَهٗ அவரைக் நோக்கி فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் اِنِّىْ நிச்சயமாக நான் لَاَظُنُّكَ எண்ணுகிறேன்/உம்மை يٰمُوْسٰى மூஸாவே! مَسْحُوْرًا‏ சூனியக்காரராக
17:101. நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம்; அவர் அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே!) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி “மூஸாவே! நிச்சயமாக நாம் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்” என்று கூறினான்.
17:101. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம். (நபியே! இதைப்பற்றி) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக. (மூஸா) அவர்களிடம் வந்தபொழுது, ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி, ‘‘மூஸாவே! நிச்சயமாக நீர் சூனியத்தால் புத்தி மாறியவர் என நான் உம்மை எண்ணுகிறேன்'' என்று கூறினான்.
17:101. தெளிவாகப் புலப்படக்கூடிய ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு நாம் வழங்கியிருந்தோம். நீங்கள் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்களிடம் மூஸா வந்தபோது ஃபிர் அவ்ன் அவரிடம், “மூஸாவே! நான் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே கருதுகின்றேன்” என்றல்லவா கூறினான்!
17:101. மேலும், திட்டமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம், (அதைப் பெற்றுக் கொண்டு) அவர், (தன் சமூகத்தினரான) அவர்களிடம் (அதைக் கொண்டு) வந்தபொழுது (என்ன நடந்ததென) இஸ்ராயீலின் மக்களிடம் (நபியே!) நீர், கேட்பீராக! அப்போது ஃபிர் அவ்ன் அவரிடம், “மூஸாவே! நிச்சயமாக நீர் சூனியம் செய்யப்பட்டவரென நான் உம்மை எண்ணுகிறேன்” என்று கூறினான்.
17:102
17:102 قَالَ لَقَدْ عَلِمْتَ مَاۤ اَنْزَلَ هٰٓؤُلَاۤءِ اِلَّا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ بَصَآٮِٕرَ‌ ۚ وَاِنِّىْ لَاَظُنُّكَ يٰفِرْعَوْنُ مَثْبُوْرًا‏
قَالَ கூறினார் لَقَدْ திட்டவட்டமாக عَلِمْتَ நீ அறிந்தாய் مَاۤ اَنْزَلَ இறக்கிவைக்கவில்லை هٰٓؤُلَاۤءِ இவற்றை اِلَّا தவிர رَبُّ இறைவன் السَّمٰوٰتِ வானங்களின் وَالْاَرْضِ இன்னும் பூமி بَصَآٮِٕرَ‌ ۚ தெளிவான அத்தாட்சிகளாக وَاِنِّىْ இன்னும் நிச்சயமாக நான் لَاَظُنُّكَ எண்ணுகிறேன்/உன்னை يٰفِرْعَوْنُ ஃபிர்அவ்னே مَثْبُوْرًا‏ அழிந்துவிடுபவனாக
17:102. (அதற்கு) மூஸா “வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் எண்ணுகின்றேன்” என்று கூறினார்.
17:102. அதற்கு மூஸா (அவனை நோக்கி) ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனே இவ்வத்தாட்சிகளை மனிதர்களுக்குப் படிப்பினையாக இறக்கிவைத்தான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஃபிர்அவ்னே! உன்னை நிச்சயமாக அழிவு (காலம்) பிடித்துக்கொண்டது என நான் எண்ணுகிறேன்'' என்று கூறினார்.
17:102. அதற்கு மூஸா கூறினார்: “அகத் தெளிவை ஏற்படுத்தக்கூடிய சான்றுகளை வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இறக்கி வைக்கவில்லை என்பதை நீ நன்கறிவாய். ஃபிர்அவ்னே! திண்ணமாக, நான் உன்னை நாசத்திற்குள்ளாகக் கூடிய மனிதனாகவே கருதுகின்றேன்.”
17:102. (அதற்கு) மூஸா, வானங்கள், மற்றும் பூமியின் இரட்சகனைத் தவிர (வேறு எவரும்) இவற்றை உங்களுக்குத் தெளிவான சான்றுகளாக இறக்கி வைக்கவில்லை என்பதைத் திட்டமாக நீ அறிந்து விட்டாய், மேலும், ஃபிர் அவ்னே! நிச்சயமாக நான் உன்னை, அழிக்கப்படுபவன் என்றே நான் எண்ணுகிறேன்” என்று கூறினார்.
17:103
17:103 فَاَرَادَ اَنْ يَّسْتَفِزَّهُمْ مِّنَ الْاَرْضِ فَاَغْرَقْنٰهُ وَ مَنْ مَّعَهٗ جَمِيْعًا ۙ‏
فَاَرَادَ நாடினான் اَنْ يَّسْتَفِزَّ அவன் விரட்டிவிட هُمْ இவர்களை مِّنَ الْاَرْضِ பூமியிலிருந்து فَاَغْرَقْنٰهُ ஆகவே மூழ்கடித்தோம்/ அவனை وَ مَنْ இன்னும் எவர்கள் مَّعَهٗ அவனுடன் جَمِيْعًا ۙ‏ அனைவரையும்
17:103. ஆகவே (ஃபிர்அவ்ன்) அந்நாட்டை விட்டு (மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும்) விரட்டிவிட நாடினான்; ஆனால், நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.
17:103. (அதற்கு அவன் மூஸாவையும் அவருடைய மக்கள்) அனைவரையும் தன் நாட்டிலிருந்து விரட்டிவிடவே அவன் எண்ணினான். எனினும், (அதற்குள்ளாக) அவனையும் அவனுடன் இருந்த (அவனுடைய மக்கள்) அனைவரையும் நாம் மூழ்கடித்து விட்டோம்.
17:103. இறுதியில் மூஸாவையும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களையும் அந்தப் பூமியிலிருந்து அடியோடு வெளியேற்றிட வேண்டும் என்று ஃபிர்அவ்ன் எண்ணியிருந்தான். ஆயினும், நாம் அவனையும் அவனுடைய ஆட்களையும் கூண்டோடு மூழ்கடித்தோம்.
17:103. எனவே, (மூஸாவையும், அவருடைய சமூகத்தினருமான) அவர்களை தன் தேசத்திலிருந்து விரட்டி விடவே அவன் நாடினான், பின்னர், அவனையும் அவனுடனிருந்த (அவனுடைய சமூகத்தார்) யாவரையும் நாம் மூழ்கடித்து விட்டோம்.
17:104
17:104 وَّقُلْنَا مِنْۢ بَعْدِهٖ لِبَنِىْۤ اِسْرَاۤءِيْلَ اسْكُنُوا الْاَرْضَ فَاِذَا جَآءَ وَعْدُ الْاٰخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيْفًا ؕ‏
وَّقُلْنَا இன்னும் நாம் கூறினோம் مِنْۢ بَعْدِهٖ இதன் பின்னர் لِبَنِىْۤ சந்ததிகளுக்கு اِسْرَاۤءِيْلَ இஸ்ராயீலின் اسْكُنُوا நீங்கள் வசியுங்கள் الْاَرْضَ பூமியில் فَاِذَا جَآءَ வந்தால் وَعْدُ வாக்குறுதி الْاٰخِرَةِ மறுமையின் جِئْنَا بِكُمْ உங்களை வரவைப்போம் لَفِيْفًا ؕ‏ அனைவரையும், ஒன்றோடு ஒன்று கலந்தவர்களாக
17:104. இதன் பின்னர் நாம் பனூ இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவனின் கூட்டத்தையும் விசாரணைக்காக) நம்மிடம் ஒன்று சேர்ப்போம்.”
17:104. இதன் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: ‘‘நீங்கள் இப்பூமியில் வசித்திருங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் (விசாரணைக்காக) நம்மிடம் கொண்டு வந்து ஒன்று சேர்ப்போம்.
17:104. மேலும், அவனுக்குப் பின்னர் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் கூறினோம்: “நீங்கள் இந்தப் பூமியில் குடியிருங்கள். மறுமை பற்றி வாக்களிக்கப்பட்ட காலம் வரும்போது நாம் உங்கள் அனைவரையும் ஒன்று திரட்டிக் கொண்டு வருவோம்.”
17:104. இதன் பின்னர் இஸ்ராயீலின் மக்களுக்கு நாம் கூறினோம், “நீங்கள் இப்பூமியில் வசித்திருங்கள், மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் யாவரையும் (எல்லாக் கிளையினரிலிருந்தும் விசாரணைக்காக) ஒரு சேர நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்போம்.”
17:105
17:105 وَبِالْحَـقِّ اَنْزَلْنٰهُ وَبِالْحَـقِّ نَزَلَ‌ ؕ وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِيْرًا ‌ۘ‏
وَبِالْحَـقِّ இன்னும் உண்மையைக் கொண்டே اَنْزَلْنٰهُ இதை இறக்கினோம் وَبِالْحَـقِّ இன்னும் உண்மையைக் கொண்டே نَزَلَ‌ ؕ இது இறங்கியது وَمَاۤ நாம் அனுப்பவில்லை اَرْسَلْنٰكَ உம்மை اِلَّا தவிர مُبَشِّرًا நற்செய்தி கூறுபவராக وَّنَذِيْرًا ۘ‏ இன்னும் எச்சரிப்பவராக
17:105. இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கிவைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது; மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை.
17:105. முற்றிலும் உண்மையைக் கொண்டே இவ்வேதத்தை நாம் இறக்கினோம். அதுவும் உண்மையைக் கொண்டே இறங்கியது. (நபியே!) உம்மை நாம் (நன்மை செய்தவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும் (பாவம் செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே தவிர அனுப்பவில்லை.
17:105. இந்தக் குர்ஆனை நாம் சத்தியத்துடனேயே இறக்கியருளினோம்; அது சத்தியத்துடன்தான் இறங்கியுள்ளது. மேலும் (நபியே!) நாம் உம்மை, (ஏற்றுக் கொண்டவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பதற்கும் (ஏற்றுக் கொள்ளாதோருக்கு) எச்சரிக்கை செய்வதற்குமே அன்றி வேறு எதற்காகவும் அனுப்ப வில்லை.
17:105. இன்னும், உண்மையைக் கொண்டே (குர் ஆனாகிய) இதை நாம் இறக்கி வைத்தோம், அதுவும் உண்மையைக் கொண்டே இறங்கியது, மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே தவிர அனுப்பவில்லை.
17:106
17:106 وَقُرْاٰنًا فَرَقْنٰهُ لِتَقْرَاَهٗ عَلَى النَّاسِ عَلٰى مُكْثٍ وَّنَزَّلْنٰهُ تَنْزِيْلًا‏
وَقُرْاٰنًا இன்னும் குர்ஆனாக فَرَقْنٰهُ நாம் தெளிவு படுத்தினோம்/இதை لِتَقْرَاَهٗ நீர் ஓதுவதற்காக/இதை عَلَى النَّاسِ மக்களுக்கு عَلٰى مُكْثٍ கவனத்துடன் وَّنَزَّلْنٰهُ இன்னும் இறக்கினோம்/இதை تَنْزِيْلًا‏ கொஞ்சம் கொஞ்சமாக இறக்குதல்
17:106. இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம் அதனைப் படிப்படியாக இறக்கிவைத்தோம்.
17:106. (நபியே!) மனிதர்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிக்கும் பொருட்டு இந்த குர்ஆனை பல பாகங்களாக நாம் பிரித்தோம். அதற்காகவே நாம் இதைச் சிறுகச் சிறுகவும் இறக்கிவைக்கிறோம்.
17:106. நாம் இந்தக் குர்ஆனை எதற்காக கொஞ்சம் கொஞ்சமாக இறக்கியருளினோமெனில், நீர் இதனை மக்களுக்கு நிறுத்தி நிறுத்தி ஓதிக்காட்ட வேண்டும் என்பதற்காகத்தான்! மேலும், இதனை நாம் படிப்படியாக (சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு) இறக்கி வைத்தோம்.
17:106. குர் ஆனை மனிதர்களுக்கு அதனைச் சிறிது சிறிதாக நீர் ஓதிக் காண்பிப்பதற்காக, அதனை நாம் பிரித்து (இறக்கி) வைத்தோம், இன்னும், அதனைப் படிப்படியாக இறக்கி வைத்தோம்.
17:107
17:107 قُلْ اٰمِنُوْا بِهٖۤ اَوْ لَا تُؤْمِنُوْٓا‌ ؕ اِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهٖۤ اِذَا يُتْلٰى عَلَيْهِمْ يَخِرُّوْنَ لِلْاَذْقَانِ سُجَّدًا ۙ‏
قُلْ கூறுவீராக اٰمِنُوْا நம்பிக்கை கொள்ளுங்கள் بِهٖۤ இதை اَوْ அல்லது لَا تُؤْمِنُوْٓا‌ ؕ நம்பிக்கை கொள்ளாதீர்கள் اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اُوْتُوا கொடுக்கப்பட்டனர் الْعِلْمَ கல்வி مِنْ قَبْلِهٖۤ இதற்கு முன்னர் اِذَا يُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் மீது يَخِرُّوْنَ விழுவார்கள் لِلْاَذْقَانِ தாடைகள் மீது سُجَّدًا ۙ‏ சிரம்பணிந்தவர்களாக
17:107. (நபியே!) “அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல், குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
17:107. (நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் (இந்த குர்ஆனை) நம்பிக்கைகொள்ளுங்கள் அல்லது நம்பிக்கை கொள்ளாதிருங்கள். (அதைப் பற்றி நமக்கு ஒன்றும் குறைவில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னுள்ள (வேதங்களின்) மெய்யான ஞானம் எவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்களிடம் (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் (இதை நம்பிக்கை கொண்டு) முகங்குப்புற விழுந்து (எனக்கு) சிரம்பணிவார்கள்.
17:107. (நபியே! இவர்களிடம்) கூறிவிடும்; “இதனை நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி; இதற்கு முன்பு ஞானம் வழங்கப்பட்ட மக்களிடம் இது ஓதிக்காட்டப்பட்டால், அவர்கள் முகங்குப்புற ஸஜ்தாவில் வீழ்கிறார்கள்.
17:107. (நபியே!) நீர் கூறுவீராக! “இதனை நீங்கள் விசுவாசியுங்கள், அல்லது விசுவாசிக்காதிருங்கள், நிச்சயமாக இதற்கு முன் (வேத) அறிவு கொடுக்கப்பட்டிருந்தார்களே அத்தகையோர் - அவர்களுக்கு இது ஓதிக்காண்பிக்கப்பட்டால், (இதனை விசுவாசித்து பணிந்து) ஸுஜுது செய்தவர்களாக முகங்குப்புற விழுவார்கள்.
17:108
17:108 وَّيَقُوْلُوْنَ سُبْحٰنَ رَبِّنَاۤ اِنْ كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُوْلًا‏
وَّيَقُوْلُوْنَ இன்னும் கூறுவார்கள் سُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் رَبِّنَاۤ எங்கள் இறைவன் اِنْ நிச்சயமாக كَانَ இருக்கிறது وَعْدُ வாக்கு رَبِّنَا எங்கள் இறைவனின் لَمَفْعُوْلًا‏ நிறைவேற்றப்பட்டதாகவே
17:108. அன்றியும், “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறி விட்டது” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
17:108. மேலும், (அவர்கள்) ‘‘எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். எங்கள் இறைவனின் வாக்குறுதி நிச்சயமாக நிறைவேறிவிட்டது'' என்றும் கூறுவார்கள்.
17:108. மேலும், “தூய்மையானவன் எங்கள் இறைவன்; அவனுடைய வாக்குறுதி நிச்சயம் நிறை வேற வேண்டியிருந்தது” என்று கூறுகின்றார்கள்;
17:108. “எங்கள் இரட்சகன் மிகப் பரிசுத்தமானவன், எங்களுடைய இரட்சகனுடைய வாக்கு நிச்சயமாக நிறைவேற்றப்பட்டதாக ஆகிவிட்டது” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
17:109
17:109 وَيَخِرُّوْنَ لِلْاَذْقَانِ يَبْكُوْنَ وَيَزِيْدُهُمْ خُشُوْعًا ۩
وَيَخِرُّوْنَ இன்னும் விழுவார்கள் لِلْاَذْقَانِ தாடைகள் மீது يَبْكُوْنَ அழுவார்கள் (அழுதவர்களாக) وَيَزِيْدُ இன்னும் அதிகப்படுத்தும் هُمْ அவர்களுக்கு خُشُوْعًا ۩‏ அச்சத்தை, பணிவை
17:109. இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும்.
17:109. மேலும், அவர்கள் முகங்குப்புற விழுந்து அழுவார்கள். அவர்களுடைய உள்ளச்சமும் அதிகரிக்கும்.
17:109. அழுத வண்ணம் முகங்குப்புற விழுகின்றார்கள்! இதனைச் செவிமடுப்பது அவர்களின் இறையச்சத்தை இன்னும் அதிகப்படுத்திவிடுகின்றது.
17:109. இன்னும், அவர்கள் அழுதவர்களாக முகங்குப்புற விழுவார்கள், அவர்களுக்கு அது பயபக்தியை அதிகப்படுத்தும்.
17:110
17:110 قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ‌ ؕ اَ يًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى ‌ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذٰ لِكَ سَبِيْلًا‏
قُلِ கூறுவீராக ادْعُوا அழையுங்கள் اللّٰهَ அல்லாஹ் اَوِ அல்லது ادْعُوا அழையுங்கள் الرَّحْمٰنَ‌ ؕ பேரருளாளன் اَ يًّا مَّا எப்படி, எதை تَدْعُوْا அழைத்தாலும் فَلَهُ அவனுக்கு الْاَسْمَآءُ பெயர்கள் الْحُسْنٰى ۚ மிக அழகியவை وَلَا تَجْهَرْ மிக சப்தமிட்டு ஓதாதீர் بِصَلَاتِكَ உமது தொழுகையில் وَلَا تُخَافِتْ மிக மெதுவாகவும் ஓதாதீர் بِهَا அதில் وَابْتَغِ தேடுவீராக بَيْنَ இடையில் ذٰ لِكَ அது سَبِيْلًا‏ ஒரு வழியை
17:110. “நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறுவீராக; இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர் மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தயமான வழியைக் கடைப்பிடிப்பீராக.
17:110. (நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் அல்லாஹ் என்று அழையுங்கள் அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்; (இவ்விரண்டில்) எப்பெயர் கொண்டு நீங்கள் அவனை அழைத்தபோதிலும் (அழையுங்கள்.) அவனுக்கு அழகான (இன்னும்) பல திருப்பெயர்கள் இருக்கின்றன.'' (நபியே!) உமது தொழுகையில் நீர் மிக சப்தமிட்டு ஓதாதீர்! அதிக மெதுவாகவும் ஓதாதீர்! இதற்கு மத்திய வழியைக் கடைப்பிடிப்பீராக.
17:110. (நபியே! இவர்களிடம்) கூறும்: ‘நீங்கள் அல்லாஹ் என்று அழைத்தாலும் சரி; ரஹ்மான் என்று அழைத்தாலும் சரி; நீங்கள் எந்தப் பெயரைக் கூறியும் அழையுங்கள். அவனுக்குரிய பெயர்கள் அனைத்தும் நல்லவைதாம்’. மேலும், உமது தொழுகையில் உமது குரலை மிகவும் உயர்த்த வேண்டாம்; மிகத் தாழ்த்தவும் வேண்டாம். இவ்விரண்டுக்கும் இடையில் மிதமான தொனியைக் கடைப்பிடியும்.
17:110. (நபியே!) நீர் கூறுவீராக! “அல்லாஹ் என்று அழையுங்கள், அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள், (இவ்விரண்டில்) எதைக் கொண்டு நீங்கள் அவனை அழைத்த போதிலும் அவனுக்கு அழகான பெயர்கள் இருக்கின்றன, (நபியே!) உம்முடைய தொழுகையில் நீர் (மிக்க) சப்தமிட்டும் ஓத வேண்டாம், அதில் (மிக) மெதுவாகவும் ஓத வேண்டாம், இவற்றிற்கிடையே (மத்திய) ஒரு வழியைத் தேடிக் கொள்வீராக!
17:111
17:111 وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ لَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَّهٗ وَلِىٌّ مِّنَ الذُّلِّ‌ وَكَبِّرْهُ تَكْبِيْرًا‏
وَقُلِ இன்னும் கூறுவீராக الْحَمْدُ புகழனைத்தும் لِلّٰهِ அல்லாஹ்வுக்குரியதே الَّذِىْ எத்தகையவன் لَمْ يَتَّخِذْ அவன் ஆக்கிக் கொள்ளவில்லை وَلَدًا குழந்தையை وَّلَمْ يَكُنْ இன்னும் அறவே இல்லை لَّهٗ அவனுக்கு شَرِيْكٌ இணை فِى الْمُلْكِ ஆட்சியில் وَلَمْ يَكُنْ அறவே இல்லை لَّهٗ அவனுக்கு وَلِىٌّ நண்பன் مِّنَ الذُّلِّ‌ பலவீனத்தினால் وَكَبِّرْهُ இன்னும் பெருமைப்படுத்துவீராக/அவனை تَكْبِيْرًا‏ பெருமைப்படுத்துதல்
17:111. “அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக.
17:111. (நபியே!) கூறுவீராக: ‘‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவனுக்கு ஒரு சந்ததியுமில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி ஒருவருமில்லை. அவனுக்கு பலவீனம் இல்லை என்பதால் அவனுக்கு உதவியாளன் ஒருவனுமில்லை.'' ஆகவே, அவனை மிக மிகப் பெருமைப்படுத்திக் கூறுவீராக!
17:111. கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் எத்தகையவன் எனில், அவன் யாரையும் மகனாக்கிக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் யாரும் பங்கு கொண்டவராகவும் இல்லை; யாரேனும் அவனுக்கு உதவியாளராய் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு அவன் இயலாதவனும் அல்ல! மேலும், எடுத்துரைப்பீராக, அவனுடைய பரிபூரணமான பெருமையை!
17:111. இன்னும், “பிள்ளையை (தனக்கு) எடுத்துக் கொள்ளாதவனும், ஆட்சியில் தனக்கு துணைவன் இல்லாதவனும், உதவியாளன் தேவை என்ற தேவையே இல்லாதவனும் ஆகிய - இத்தகைய அல்லாஹவிற்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக” எனவும் (நபியே!) நீர் கூறுவீராக! ஆகவே (மாபெரும் மகத்துவத்திற்குரிய) அவனை மிக மிக பெருமைப்படுத்துவீராக!