27. ஸூரத்துந் நம்லி(எறும்புகள்)
மக்கீ, வசனங்கள்: 93

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
27:1
27:1 طٰسٓ‌ تِلْكَ اٰيٰتُ الْقُرْاٰنِ وَكِتَابٍ مُّبِيْنٍۙ‏
طٰسٓ‌ தா, சீன். تِلْكَ இவை اٰيٰتُ வசனங்கள் الْقُرْاٰنِ இந்த குர்ஆனுடைய وَكِتَابٍ இன்னும் வேதத்தின் مُّبِيْنٍۙ‏ தெளிவான
27:1. தா, ஸீன். இவை குர்ஆனுடைய தெளிவான வேதத்துடைய - வசனங்களாகும்.
27:1. தா ஸீன். இவை இந்தத் திருகுர்ஆனின், தெளிவான வேதத்தின் (சில) வசனங்களாகும்.
27:1. தாஸீன். இவை குர்ஆன் மற்றும் தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
27:1. தா ஸீன் - இவை குர் ஆனுடைய - இன்னும் தெளிவான வேதத்தினுடைய – வசனங்களாகும்.
27:2
27:2 هُدًى وَّبُشْرٰى لِلْمُؤْمِنِيْنَۙ‏
هُدًى நேர்வழியாகவும் وَّبُشْرٰى நற்செய்தியாகவும் لِلْمُؤْمِنِيْنَۙ‏ நம்பிக்கையாளர்களுக்கு
27:2. (இது) முஃமின்களுக்கு நேர்வழி காட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது.
27:2. நம்பிக்கை கொண்டவர்களுக்கு (இது) ஒரு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இருக்கிறது.
27:2. இந்த வேதம் நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டியும் நற்செய்தியுமாகும்.
27:2. விசுவாசங்கொண்டோருக்கு ஒரு நேர்வழியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது.
27:3
27:3 الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَ هُمْ بِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ‏
الَّذِيْنَ எவர்கள் يُقِيْمُوْنَ நிலை நிறுத்துவார்கள் الصَّلٰوةَ தொழுகையை وَيُؤْتُوْنَ இன்னும் தருவார்கள் الزَّكٰوةَ ஸகாத்தை وَ هُمْ இன்னும் அவர்கள் بِالْاٰخِرَةِ மறுமையை هُمْ அவர்கள் يُوْقِنُوْنَ‏ நம்பிக்கை கொள்வார்கள்
27:3. (அவர்கள் எத்தகையோரென்றால்) அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; இன்னும், ஜகாத்தைக் கொடுப்பார்கள்; அன்றியும், அவர்கள் மறுமை வாழ்வின் மீது திட நம்பிக்கை கொள்வார்கள்.
27:3. அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித் தொழுவார்கள், ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். மேலும், மறுமையையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள்.
27:3. அவர்கள் எத்தகையவர்களெனில், தொழுகையை நிலை நாட்டுகின்றார்கள்; ஜகாத் கொடுக்கின்றார்கள். மேலும், மறுமையின் மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.
27:3. அவர்கள் எத்தகையோரென்றால், தொழுகையை நிறைவேற்றுவார்கள்; ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்; அன்றியும், மறுமையையும் அவர்கள் உறுதி கொள்வார்கள்.
27:4
27:4 اِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ زَيَّـنَّا لَهُمْ اَعْمَالَهُمْ فَهُمْ يَعْمَهُوْنَؕ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ளாதவர்கள் بِالْاٰخِرَةِ மறுமையை زَيَّـنَّا நாம் அலங்கரித்து விட்டோம் لَهُمْ அவர்களுக்கு اَعْمَالَهُمْ அவர்களுடைய செயல்களை فَهُمْ ஆகவே, அவர்கள் يَعْمَهُوْنَؕ‏ தறிகெட்டு அலைகிறார்கள்
27:4. நிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாக(த் தோன்றுமாறு) செய்தோம்; எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள்.
27:4. நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு (அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக) நாம் அவர்களுடைய (தீய) காரியங்களை அழகாக்கி விட்டோம். ஆகவே, அவர்கள் அதில் சீர்கெட்டு தட்டழிந்து திரிகின்றனர்.
27:4. உண்மை யாதெனில், யார் மறுமையை நம்புவதில்லையோ அவர்களுக்கு அவர்களின் தீயசெயல்களை நாம் அழகுபடுத்திக் காட்டினோம். எனவே, அவர்கள் தடுமாறித் திரிகின்றார்கள்.
27:4. நிச்சயமாக மறுமையைக் கொண்டு விசுவாசங்கொள்ளவில்லையே அத்தகையவர்கள் - (அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக) அவர்களுடைய செயல்களை நாம் அவர்களுக்கு அலங்கரித்துக் காண்பித்து விட்டோம், ஆகவே, அவர்கள் (அதில்) தட்டழிந்து திரிகின்றனர்.
27:5
27:5 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَهُمْ سُوْٓءُ الْعَذَابِ وَهُمْ فِى الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ‏
اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ அவர்கள்தான் لَهُمْ அவர்களுக்கு உண்டு سُوْٓءُ கெட்ட الْعَذَابِ தண்டனை وَهُمْ அவர்கள் فِى الْاٰخِرَةِ மறுமையில் هُمُ அவர்கள்தான் الْاَخْسَرُوْنَ‏ நஷ்டவாளிகள்
27:5. அத்தகையவர்களுக்குத் தீய வேதனை உண்டு; மறுமை வாழ்வில் அவர்கள் பெரும் நஷ்டமடைபவர்களாக இருப்பார்கள்.
27:5. இத்தகையவர்களுக்கு (அவர்கள் மரண காலத்தில்) தீய வேதனைதான் உண்டு. மறுமையிலோ அவர்கள்தான் பெரும் நஷ்டம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.
27:5. அவர்கள் எத்தகையவர்கள் எனில், அவர்களுக்கு மோசமான தண்டனை இருக்கின்றது; மேலும், மறுமையில் அவர்கள்தாம் அனைவரையும்விட அதிக இழப்புக்குரியவர்களாய் இருப்பார்கள்.
27:5. அவர்கள் எத்தகையோரென்றால், (இம்மையில்) அவர்களுக்குத் தீய வேதனை உண்டு, இன்னும், அவர்கள் மறுமையில் - அவர்களே பெரும் நஷ்டமடைந்தவர்கள்.
27:6
27:6 وَاِنَّكَ لَـتُلَـقَّى الْقُرْاٰنَ مِنْ لَّدُنْ حَكِيْمٍ عَلِيْمٍ‏
وَاِنَّكَ நிச்சயமாக நீர் لَـتُلَـقَّى மனனம் செய்விக்கப்படுகிறீர் الْقُرْاٰنَ இந்த குர்ஆனை مِنْ لَّدُنْ حَكِيْمٍ மகா ஞானவானிடமிருந்து عَلِيْمٍ‏ நன்கறிந்தவன்
27:6. (நபியே!) நிச்சயமாக மிக்க ஞானமுடைய (யாவற்றையும்) நன்கறிந்தவனிடமிருந்து இந்த குர்ஆன் உமக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.
27:6. (நபியே!) நிச்சயமாக மிக்க ஞானமுடைய, (அனைத்தையும்) நன்கு அறிந்தவனிடம் இருந்தே இந்த குர்ஆன் உமக்குக் கொடுக்கப்படுகிறது.
27:6. மேலும், (நபியே!) நுண்ணறிவாளனும் நன்கு அறிந்தவனுமான இறைவனிடமிருந்து திண்ணமாக இந்தக் குர்ஆனை நீர் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்.
27:6. (நபியே!) நிச்சயமாக தீர்க்கமான அறிவுடைய (யாவையும்) நன்கறிந்தவனிடமிருந்து நீர் இந்தக் குர் ஆனைக் கொடுக்கப்படுகிறீர்.
27:7
27:7 اِذْ قَالَ مُوْسٰى لِاَهْلِهٖۤ اِنِّىْۤ اٰنَسْتُ نَارًاؕ سَاٰتِيْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ اٰتِيْكُمْ بِشِهَابٍ قَبَسٍ لَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ‏
اِذْ قَالَ அந்த சமயத்தை நினைவு கூறினார் مُوْسٰى மூசா لِاَهْلِهٖۤ தன்குடும்பத்தினருக்கு اِنِّىْۤ நிச்சயமாக நான் اٰنَسْتُ நான் பார்த்தேன் نَارًاؕ நெருப்பை سَاٰتِيْكُمْ உங்களுக்கு கொண்டு வருகிறேன் مِّنْهَا அதிலிருந்து بِخَبَرٍ ஒரு செய்தியை اَوْ அல்லது اٰتِيْكُمْ உங்களுக்கு கொண்டு வருகிறேன் بِشِهَابٍ நெருப்பை قَبَسٍ எடுக்கப்பட்ட لَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ‏ நீங்கள் குளிர் காய்வதற்காக
27:7. மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி: “நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்” என்று கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக!
27:7. மூஸா (தூர் என்னும் மலையின் சமீபமாகச் சென்ற பொழுது) தன் குடும்பத்தினரை நோக்கி ‘‘ நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். (நீங்கள் இங்கு தாமதித்து இருங்கள்.) நான் சென்று (நம் வழியைப் பற்றி) ஒரு விஷயத்தை அதன் மூலம் அறிந்து வருகிறேன் அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கு ஓர் எரி கொள்ளியையேனும் கொண்டு வருவேன்'' என்று கூறி,
27:7. (அந்தச் சந்தர்ப்பத்தில் நடந்ததை இவர்களுக்கு நினைவூட்டுங்கள்) மூஸா தம் குடும்பத்தாரிடம் அப்பொழுது கூறினார்: “நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் இப்பொழுதே அங்கிருந்து ஏதேனும் செய்தியை உங்களிடம் கொண்டு வருகின்றேன். அல்லது தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு வருகின்றேன். நீங்கள் குளிர் காய்ந்து கொள்ளலாம்.”
27:7. மூஸா, தன் குடும்பத்தினரிடம், “நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன், (சென்றடைய வேண்டிய வழிபற்றி ஏதேனும் ஒரு செய்தியை அங்கிருந்து உங்களுக்குக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காய்வதற்கு ஒரு நெருப்புப் பந்தத்தை(யாவது) கொண்டு வருகிறேன்” என்று கூறியதை நபியே! நீர் நினைவு கூர்வீராக!
27:8
27:8 فَلَمَّا جَآءَهَا نُوْدِىَ اَنْۢ بُوْرِكَ مَنْ فِى النَّارِ وَ مَنْ حَوْلَهَا ؕ وَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
فَلَمَّا جَآءَهَا அவர் அதனிடம் வந்த போது نُوْدِىَ அழைக்கப்பட்டார் اَنْۢ بُوْرِكَ பரிசுத்தமானவன் مَنْ فِى النَّارِ நெருப்பில் இருப்பவன் وَ مَنْ حَوْلَهَا ؕ இன்னும் அதை சுற்றி உள்ளவர்களும் وَسُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் اللّٰهِ அல்லாஹ் رَبِّ இறைவன் الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
27:8. அவர் அதனிடம் வந்த போது: “நெருப்பில் இருப்பவர் மீதும், அதனைச் சூழ்ந்திருப்பவர் மீதும் பெரும் பாக்கியம் அளிக்கப் பெற்றுள்ளது; மேலும் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்” என்று அழைக்கப்பட்டார்.
27:8. அவர் அதன் சமீபமாக வந்த சமயத்தில் ‘‘ நெருப்பில் இருக்கின்ற (வான)வர் மீதும் அதன் சமீபமாக இருக்கின்றவர் (மூஸா) மீதும் பெரும் பாக்கியமளிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகத்தார் அனைவரின் இறைவனான அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்'' என்று சப்தமிட்டுக் கூறப்பட்டது.
27:8. அங்கு அவர் சென்றதும் ஓர் உருவிலி (அசரீரி) கேட்டது: “பாக்கியம் உள்ளவர்கள் ஆவர் இந்த நெருப்பில் உள்ளவரும் அதன் சுற்றுப்புறத்தில் இருப்பவர்களும்!” தூய்மையானவன் ஆவான்; அகிலத்தார் அனைவரையும் வளர்த்துப் பரிபாலிப்பவனாகிய அல்லாஹ்!
27:8. எனவே, அவர் அதனிடம் வந்த சமயத்தில், “நெருப்பில் இருப்பவர் மீதும் அதைச் சூழ இருப்பவர்(களான மலக்கு)கள் மீதும் பெரும் பாக்கியமளிக்கப்பட்டுள்ளது, மேலும், அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்” என்று அழைக்கப்பட்டார்.
27:9
27:9 يٰمُوْسٰۤى اِنَّـهٗۤ اَنَا اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُۙ‏
يٰمُوْسٰۤى மூஸாவே! اِنَّـهٗۤ நிச்சயமாக اَنَا நான்தான் اللّٰهُ அல்லாஹ் الْعَزِيْزُ மிகைத்தவனான الْحَكِيْمُۙ‏ மகா ஞானமுடையவனான
27:9. “மூஸாவே! நிச்சயமாக நானே அல்லாஹ்! (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
27:9. (மேலும்,) ‘‘ மூஸாவே! நிச்சயமாக நான்தான் அல்லாஹ். நான் அனைவரையும் மிகைத்தவன்; (அனைத்தையும் நன்கறிந்த) ஞானமுடையவன்.
27:9. “மூஸாவே! நான்தான் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்!
27:9. “மூஸாவே! நிச்சயமாக நான்தான் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்”.
27:10
27:10 وَاَ لْقِ عَصَاكَ‌ ؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰى مُدْبِرًا وَّلَمْ يُعَقِّبْ‌ ؕ يٰمُوْسٰى لَا تَخَفْ اِنِّىْ لَا يَخَافُ لَدَىَّ الْمُرْسَلُوْنَ ‌ۖ‏
وَاَ لْقِ போடுவீராக! عَصَاكَ‌ ؕ உமது தடியை فَلَمَّا رَاٰهَا அவர் அதை பார்த்த போது تَهْتَزُّ நெளிவதாக كَاَنَّهَا அது போன்று جَآنٌّ பாம்பை وَّلّٰى திரும்பினார் مُدْبِرًا புறமுதுகிட்டு وَّلَمْ يُعَقِّبْ‌ ؕ அவர் திரும்பவே இல்லை يٰمُوْسٰى மூஸாவே! لَا تَخَفْ பயப்படாதீர் اِنِّىْ நிச்சயமாக நான் لَا يَخَافُ பயப்பட மாட்டார்கள் لَدَىَّ என்னிடம் الْمُرْسَلُوْنَ ۖ‏ இறைத்தூதர்கள்
27:10. “உம் கைத்தடியைக் கீழே எறியும்;” (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார்; “மூஸாவே! பயப்படாதீர்! நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்.”
27:10. (மூஸாவே!) உமது தடியை நீர் எறிவீராக'' (என்றும் கூறப்பட்டது. அவ்வாறு அவர் அதை எறியவே) அது ஒரு பாம்பைப் போல் (ஆகி) நெளிவதைக் கண்டு அவர் திரும்பியும் பார்க்காது அதை விட்டும் விலகிச் சென்றார். (ஆகவே, நாம் மூஸாவை நோக்கி) மூஸாவே! பயப்படாதீர். நிச்சயமாக என்னிடத்தில் தூதர்கள் பயப்படமாட்டார்கள்.
27:10. மேலும், உமது கைத்தடியைச் சற்று எறியும்!” உடனே அது (அந்தத் தடி) பாம்பு போல் அசைவதை மூஸா கண்டபோது பின்னோக்கி ஓடினார்; திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. “மூஸாவே அஞ்சாதீர்! திண்ணமாக, என் முன்னிலையில் தூதர்கள் அஞ்சுவதில்லை;
27:10. மேலும் “நீர் உம்முடைய தடியைப் போடும்” (என்று கூறப்பட்டதும் அவர் அதைப் போட்டார்.) அது ஒரு மலைப்பாம்பைப்போல் மிகத்துரிதமாக நெளிந்து கொண்டிருக்க அதனைக் கண்டு, (பயந்து) அவர் திரும்பிப் பார்க்காது புறமுதுகிட்டுப் பின் சென்றார்; (அப்போது) மூஸாவே! நீர் பயப்படாதீர்!; நிச்சயமாக நான் (எத்தகையோனென்றால்) – தூதர்கள் என்னிடத்தில் பயப்படமாட்டார்கள்” என்று அவருக்குக் கூறப்பட்டது.
27:11
27:11 اِلَّا مَنْ ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسْنًۢا بَعْدَ سُوْٓءٍ فَاِنِّىْ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
اِلَّا தவிர مَنْ ظَلَمَ தவறிழைத்தவரை ثُمَّ பிறகு بَدَّلَ மாற்றி செய்தார் حُسْنًۢا அழகிய செயலை بَعْدَ பின்னர் سُوْٓءٍ தீமைக்கு فَاِنِّىْ ஏனெனில், நிச்சயமாக நான் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
27:11. ஆயினும், தீங்கிழைத்தவரைத் தவிர; அ(த்தகைய)வரும் (தாம் செய்த) தீமையை (உணர்ந்து அதை) நன்மையானதாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக நான் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றேன்.
27:11. ஆயினும் தவறிழைத்தவரைத் தவிர. (எனினும்) அவரும் தன் குற்றத்தை (உணர்ந்து அதை மாற்றி) நன்மை செய்தால் நிச்சயமாக நான் (அவரையும்) மன்னித்துக் கருணை செய்வேன்.
27:11. ஏதேனும் தவறு செய்திருந்தாலே தவிர! பின்னர் தீமை செய்த பிறகு (தன் செயலை) அவர் நன்மையாக மாற்றிக் கொண்டால் திண்ணமாக நான் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றேன்.
27:11. (ஆயினும்) எவர் அநியாயம் செய்து பின்னர் தீமைக்குப் பின் (அதனை) நன்மையாக மாற்றிக்கொள்கிறாரோ, அவரைத்தவிர – அப்பொழுது நிச்சயமாக நான் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
27:12
27:12 وَاَدْخِلْ يَدَكَ فِىْ جَيْبِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوْٓءٍ‌ فِىْ تِسْعِ اٰيٰتٍ اِلٰى فِرْعَوْنَ وَقَوْمِهٖؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ‏
وَاَدْخِلْ நுழைப்பீராக! يَدَكَ உமது கரத்தை فِىْ جَيْبِكَ உமது சட்டைப் பையில் تَخْرُجْ வெளிவரும் بَيْضَآءَ வென்மையாக மின்னும் مِنْ غَيْرِ سُوْٓءٍ‌ எவ்வித குறையுமின்றி فِىْ تِسْعِ ஒன்பது اٰيٰتٍ அத்தாட்சிகளில் اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னுக்கும் وَقَوْمِهٖؕ அவனதுமக்களுக்கும் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருக்கிறார்கள் قَوْمًا மக்களாக فٰسِقِيْنَ‏ பாவிகளான
27:12. “இன்னும் உம்முடைய கையை உமது (மார்பு பக்கமாக) சட்டைப் பையில் நுழைப்பீராக!” அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இவ்விரு அத்தாட்சிகளும்) ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் (நீர் காண்பிக்க வேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர்.
27:12. (மூஸாவே!) நீர் உமது கையை உமது சட்டைப்பைக்குள் புகுத்துவீராக. அது ஒரு மாசற்ற வெண்மையான (பிரகாசத்துடன்) வெளிவரும். (இவ்விரண்டும்) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (இவற்றுடன்) நீர் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும் செல்வீராக. நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் மக்களாக இருக்கின்றனர்'' (என்றும் கூறினோம்.)
27:12. மேலும், நீர் உமது கையை உமது (சட்டையின்) மார்புப் பகுதியில் நுழைப்பீராக! அது பிரகாசிக்கக் கூடியதாய் வெளிப்படும் எவ்விதக் கேடுமின்றி!” இவை (இந்த இரு சான்றுகளும்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய சமூகத்தாரிடமும் (கொண்டு செல்வதற்குரிய) ஒன்பது சான்றுகளில் உள்ளவையாகும். அவர்கள் மிகவும் தீய நடத்தை உடைய மக்களாய் இருக்கின்றார்கள்.
27:12. (“மூஸாவே!) இன்னும் நீர் உமது கையை உம்முடைய சட்டைப்பைக்குள் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக(ப் பிரகாசத்துடன்) வெளிவரும், (இவை இரண்டும்) ஃபிர் அவ்னிடமும், அவனுடைய சமூகத்தாரிடமும் (நீர் எடுத்துச் சென்று காண்பிப்பதற்குரிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும், நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தவராக இருக்கின்றனர்” என்றும் கூறப்பட்டது!
27:13
27:13 فَلَمَّا جَآءَتْهُمْ اٰيٰتُنَا مُبْصِرَةً قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ‌ۚ‏
فَلَمَّا جَآءَتْهُمْ ஆக, அது அவர்களிடம் வந்தபோது اٰيٰتُنَا நம் அத்தாட்சிகள் مُبْصِرَةً பார்க்கும்படியாக قَالُوْا கூறினர் هٰذَا இது سِحْرٌ சூனியம் مُّبِيْنٌ‌ۚ‏ தெளிவான
27:13. இவ்வாறு, நம்முடைய பிரகாசமான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்த போது, அவர்கள் “இது பகிரங்கமான சூனியமேயாகும்” என்று கூறினார்கள்.
27:13. (மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட) பார்த்து புரிந்து கொள்ளும்படியான நம் அத்தாட்சிகள் அவர்களிடம் வரவே ‘‘ இது சந்தேகமற்ற சூனியம்தான்'' என்று அவர்கள் கூறினார்கள்.
27:13. ஆயினும், நம்முடைய மிகத் தெளிவான சான்றுகள் அம்மக்களின் முன் வந்தபோது இது அப்பட்டமான சூனியமாகும் என்று அவர்கள் கூறிவிட்டார்கள்.
27:13. நம்முடைய அத்தாட்சிகள் (மிகத்தெளிவாக) பார்க்கக்கூடியவையாக அவர்களிடம் வந்தபொழுது “இது தெளிவான சூனியம்தான்” என்று அவர்கள் கூறினார்கள்.
27:14
27:14 وَجَحَدُوْا بِهَا وَاسْتَيْقَنَـتْهَاۤ اَنْفُسُهُمْ ظُلْمًا وَّعُلُوًّا‌ ؕ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِيْنَ‏
وَجَحَدُوْا அவர்கள் மறுத்தனர் بِهَا அவற்றை وَاسْتَيْقَنَـتْهَاۤ அவற்றை உறுதியாக நம்பின اَنْفُسُهُمْ அவர்களுடைய ஆன்மாக்களோ ظُلْمًا அநியாயமாக وَّعُلُوًّا‌ ؕ இன்னும் பெருமையாக فَانْظُرْ ஆகவே நீர் கவனிப்பீராக كَيْفَ كَانَ எவ்வாறுஆகிவிட்டது عَاقِبَةُ முடிவு الْمُفْسِدِيْنَ‏ விஷமிகளின்
27:14. அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதி கொண்ட போதிலும், அநியாயமாகவும், பெருமை கொண்டவர்களாகவும் அவர்கள் அவற்றை மறுத்தார்கள். ஆனால், இந்த விஷமிகளின் முடிவு என்ன வாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக.  
27:14. (அத்தாட்சிகளைக் கண்ட) அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதிகொண்ட போதிலும், கர்வம் கொண்டு அநியாயமாக அவற்றை அவர்கள் மறுத்தார்கள். ஆகவே, இந்த விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
27:14. அவர்கள் முற்றிலும் அநியாயமான முறையிலும் ஆணவத்தினாலும்தான் அந்தச் சான்றுகளை மறுத்தார்கள். ஆனால், அவர்களுடைய உள்ளங்களோ அவற்றை ஏற்றுக்கொண்டிருந்தன. அந்தக் குழப்பவாதிகளின் முடிவு என்னவாயிற்று என்பதை இப்போது நீர் பார்த்துக் கொள்ளும்.
27:14. அவர்களுடைய இதயங்கள் அதனை (உண்மையென) உறுதிகொண்ட நிலையில் அநியாயமாகவும், அகம்பாவத்தாலும் அதனை அவர்கள் மறுத்தார்கள், ஆகவே, இந்த குழப்பவாதிகளின் முடிவு எப்படி இருந்தது என்பதை (நபியே!) நீர் (கவனித்துப்) பார்ப்பீராக!
27:15
27:15 وَلَـقَدْ اٰتَيْنَا دَاوٗدَ وَ سُلَيْمٰنَ عِلْمًا‌ ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ فَضَّلَنَا عَلٰى كَثِيْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِيْنَ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் தந்தோம் دَاوٗدَ தாவூதுக்கும் وَ سُلَيْمٰنَ சுலைமானுக்கும் عِلْمًا‌ ۚ அறிவை وَقَالَا அவ்விருவரும் கூறினர் الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே الَّذِىْ எவன் فَضَّلَنَا எங்களை மேன்மைப்படுத்தினான் عَلٰى كَثِيْرٍ பலரைப் பார்க்கிலும் مِّنْ عِبَادِهِ தனது அடியார்களில் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களான
27:15. தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்” என்று கூறினார்கள்.
27:15. தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் (இம்மை மறுமையில் பயனளிக்கக்கூடிய) கல்வியைக் கொடுத்தோம். அதற்கு அவ்விருவரும், ‘‘ புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை. அவன்தான் நம்பிக்கை கொண்ட தன் நல்லடியார்களில் பலரைவிட எங்களை மேன்மையாக்கி வைத்தான்'' என்று கூறி (நன்றி செலுத்தி)னார்கள்.
27:15. (மற்றொரு புறம்) நாம் தாவூதுக்கும் ஸுலைமானுக்கும் ஞானத்தை வழங்கினோம். மேலும், அவ்விருவரும் கூறினார்கள்: “அல்லாஹ்வுக்கு நன்றி உரித்தாகட்டும்; அவனே, நம்பிக்கை கொண்ட தன் அடியார்கள் பலரைவிட எங்களுக்கு சிறப்பை வழங்கினான்.”
27:15. தாவூதுக்கும் ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வியைக் கொடுத்தோம், “விசுவாசங்கொண்ட தன்னுடைய (நல்ல) அடியார்களில் அநேகரைவிட எங்களை மேன்மையாக்கி வைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரியது” என்று அவ்விவரும் கூறி நன்றி செலுத்தினார்கள்.
27:16
27:16 وَوَرِثَ سُلَيْمٰنُ دَاوٗدَ‌ وَقَالَ يٰۤاَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَاُوْتِيْنَا مِنْ كُلِّ شَىْءٍؕ‌ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِيْنُ‏
وَوَرِثَ வாரிசாக ஆனார் سُلَيْمٰنُ சுலைமான் دَاوٗدَ‌ தாவூதுக்கு وَقَالَ இன்னும் , கூறினார் يٰۤاَيُّهَا النَّاسُ மக்களே! عُلِّمْنَا நாங்கள் கற்பிக்கப்பட்டோம் مَنْطِقَ பேச்சை الطَّيْرِ பறவைகளின் وَاُوْتِيْنَا வழங்கப்பட்டோம் مِنْ كُلِّ شَىْءٍؕ‌ எல்லாம் اِنَّ நிச்சயமாக هٰذَا لَهُوَ இதுதான் الْفَضْلُ மேன்மையாகும் الْمُبِيْنُ‏ தெளிவான
27:16. பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.
27:16. பின்னர் தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். (ஸுலைமான் மனிதர்களை நோக்கி) ‘‘ மனிதர்களே! எங்களுக்குப் பறவைகளின் மொழி கற்பிக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு (வேண்டிய) எல்லாப் பொருள்களும் (ஏராளமாகவே) கொடுக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயமாக இது (இறைவனின்) மிக்க தெளிவானதொரு அருளாகும்'' என்று கூறி(யும் நன்றி செலுத்தி)னார்.
27:16. பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார். அவர் கூறினார்: “மக்களே! எங்களுக்குப் பறவைகளின் பேச்சுகள் கற்றுத் தரப்பட்டுள்ளன. எல்லாவிதமான பொருள்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. திண்ணமாக, இது (அல்லாஹ்வின்) வெளிப்படையான அருளாகும்.”
27:16. மேலும், ஸுலைமான், தாவூதுக்கு வாரிசாக ஆனார், இன்னும், “மனிதர்களே! பறவைகளின் மொழியை நாங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளோம், இன்னும், (எங்களுக்கு வேண்டிய) ஒவ்வொரு பொருளிலிருந்தும் (ஏராளமாக) நாங்கள் கொடுக்கப்பட்டுள்ளோம், நிச்சயமாக இது - இதுதான் (அல்லாஹ்வின்) மிகத் தெளிவான பேரருளாகும்” என்று அவர் கூறி நன்றியும் செலுத்தினார்.
27:17
27:17 وَحُشِرَ لِسُلَيْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوْزَعُوْنَ‏
وَحُشِرَ ஒன்று திரட்டப்பட்டன لِسُلَيْمٰنَ சுலைமானுக்கு جُنُوْدُهٗ அவருடைய ராணுவங்கள் مِنَ الْجِنِّ ஜின்களிலிருந்து وَالْاِنْسِ இன்னும் மனிதர்கள் وَالطَّيْرِ இன்னும் பறவைகளில் فَهُمْ ஆகவே, அவர்கள் يُوْزَعُوْنَ‏ நிறுத்தப்படுவார்கள்
27:17. மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன.
27:17. ஸுலைமானுடைய ராணுவம் ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்டு அவை இனவாரியாகப் பிரிக்கப்பட்டு அணியணியாகப் புறப்பட்டன.
27:17. மேலும், ஸுலைமானுக்காக ஜின்கள், மனிதர்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் படைகள் திரட்டப்பட்டிருந்தன. மேலும், அவை முறையான முழுமையான கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன.
27:17. மேலும், ஸுலைமானுக்கு, ஜின்கள், மனிதர்கள், பறவைகள் முதலியவற்றிலிருந்து அவரது படைகள் அவர் முன் திரட்டப்பட்டது, பிறகு (அவர்களில் முன்னுள்ளவர்களுடன் அவர்களில் பின்னுள்ளவர்கள் சேர்ந்து கொள்வதற்காக) – அவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
27:18
27:18 حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ‌ۚ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ‏
حَتّٰٓى இறுதியாக اِذَاۤ اَتَوْا அவர்கள் வந்த போது عَلٰى وَادِ ஒரு பள்ளத்தாக்கில் النَّمْلِۙ எறும்புகளின் قَالَتْ கூறியது نَمْلَةٌ ஓர் எறும்பு يّٰۤاَيُّهَا النَّمْلُ எறும்புகளே! ادْخُلُوْا நுழைந்து விடுங்கள்! مَسٰكِنَكُمْ‌ۚ உங்கள் பொந்துகளுக்குள் لَا يَحْطِمَنَّكُمْ உங்களை மிதித்து அழித்து விடவேண்டாம் سُلَيْمٰنُ சுலைமானும் وَجُنُوْدُهٗۙ அவருடைய ராணுவங்களும் وَهُمْ அவர்களோ لَا يَشْعُرُوْنَ‏ உணர மாட்டார்கள்
27:18. இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.
27:18. அவை எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்தபொழுது அதிலொரு பெண் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) ‘‘எறும்புகளே! நீங்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது உங்களை(த் தங்கள் கால்களால்) மிதித்துவிடாமல் இருக்கட்டும்'' என்று கூறியது.
27:18. (ஒருமுறை ஸுலைமான் அப்படைகளுடன் சென்று கொண்டிருந்தார்.) அவர்கள் அனைவரும் எறும்புகளின் பள்ளத்தாக்கிற்கு வந்தபோது ஓர் எறும்பு கூறியது: “எறும்புகளே! உங்களுடைய புற்றுகளில் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய படையினரும் தெரியாமல் உங்களை மிதித்துவிடக்கூடாது.”
27:18. இறுதியாக அவர்கள் எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்தபொழுது (அவற்றில்) ஓர் எறும்பு (மற்ற எறும்புகளிடம்,) “எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள், ஸூலைமானும், அவருடைய படையினரும் உங்களைப்பற்றி உணராது, உங்களைத் திண்ணமாக மிதித்துவிட வேண்டாம்” என்று கூறியது.
27:19
27:19 فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ‏
فَتَبَسَّمَ ஆக, புன்முறுவல் பூத்தார் ضَاحِكًا அவர் சிரித்தவராக مِّنْ قَوْلِهَا அதன் பேச்சினால் وَقَالَ இன்னும் கூறினார் رَبِّ என் இறைவா! اَوْزِعْنِىْۤ எனக்கு நீ அகத்தூண்டுதலை ஏற்படுத்து! اَنْ اَشْكُرَ நான் நன்றி செலுத்துவதற்கு نِعْمَتَكَ உன் அருளுக்கு الَّتِىْۤ எது اَنْعَمْتَ நீ அருள்புரிந்தாய் عَلَىَّ என் மீதும் وَعَلٰى وَالِدَىَّ என் பெற்றோர் மீதும் وَاَنْ اَعْمَلَ நான் செய்வதற்கும் صَالِحًـا நல்லதை تَرْضٰٮهُ நீ மகிழ்ச்சியுறுகின்ற وَاَدْخِلْنِىْ இன்னும் என்னைநுழைத்துவிடு بِرَحْمَتِكَ உன் கருணையால் فِىْ عِبَادِكَ உன் அடியார்களில் الصّٰلِحِيْنَ‏ நல்லவர்கள்
27:19. அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.
27:19. அதன் சொல்லைக் கேள்வியுற்று ஸுலைமான் சிரித்தவராக புன்னகைப் பூத்தார். மேலும், ‘‘ என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த உன் அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ எனக்கு அருள் புரிவாயாக! உனக்குத் திருப்தியளிக்கக்கூடிய நற்செயல்களையும் நான் செய்ய(க்கூடிய பாக்கியத்தை எனக்கு) அருள் புரிந்து, உன் கருணையைக் கொண்டு உன் நல்லடியார்களுடனும் என்னைச் சேர்த்து விடுவாயாக!'' என்று பிரார்த்தனை செய்தார்.
27:19. ஸுலைமான் அது சொல்வதைக் கேட்டு புன்னகை பூத்து சிரிக்கலானார். மேலும், கூறினார்: “என் இறைவா! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ புரிந்த பேருதவிக்கு நான் நன்றி செலுத்திக் கொண்டிருப்பதற்காகவும் நீ திருப்திப்படுகின்ற நற்செயலை செய்து வருவதற்காகவும் என்னை நீ கட்டுப்படுத்தி வைப்பாயாக! மேலும், உன் அருளால் என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்து வைப்பாயாக!”
27:19. அப்போது அதனுடைய சொல்லால் சிரித்தவராக அவர் புன்னகை புரிந்தார், “என் இரட்சகனே! நீ என் மீதும், என் தாய் தந்தையர் மீதும், புரிந்த உன்னுடைய அருள்களுக்கு (உனக்கு) நான் நன்றி செலுத்துவதற்கும், எதனை நீ பொருந்திக்கொள்வாயோ அத்தகைய நற்செயலையும் நான் செய்யக்கூடிய நற்பேறை (எனக்கு) அருள் புரிவாயாக! இன்னும், உன்னுடைய கிருபையைக் கொண்டு உன்னுடைய நல்லடியார்களின் கூட்டத்தில் என்னைப் பிரவேசிக்கச் செய்வாயாக!” என்று (பிரார்த்தனை செய்து) அவர் கூறினார்.
27:20
27:20 وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِىَ لَاۤ اَرَى الْهُدْهُدَ ‌ۖ  اَمْ كَانَ مِنَ الْغَآٮِٕبِيْنَ‏
وَتَفَقَّدَ அவர் தேடினார் الطَّيْرَ பறவைகளில் فَقَالَ கூறினார் مَا لِىَ எனக்கென்ன لَاۤ اَرَى நான் காணமுடியவில்லை الْهُدْهُدَ ۖ  ஹூத்ஹூதை اَمْ அல்லது كَانَ அது இருக்கிறதா? مِنَ الْغَآٮِٕبِيْنَ‏ வராதவர்களில்
27:20. அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து: “நான் (இங்கே) ஹுத்ஹுத் (பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார்.
27:20. அவர் பறவைகளைப் பரிசீலனை செய்தபொழுது ‘‘என்ன காரணம்? ‘ஹுத்ஹுத்' பறவையை நான் காணவில்லையே! (அது பறவைகளின் நெருக்கடியில்) மறைந்திருக்கிறதா? (அல்லது என் அனுமதியின்றி எங்கேனும் சென்றுவிட்டதா?)
27:20. (மற்றொரு சமயம்) ஸுலைமான் பறவைகளின் நிலைமைகளை ஆராய்ந்தார். பின்னர் கூறினார்: “என்ன விஷயம்? நான் ஹுத்ஹுத் மரங்கொத்தி பறவையைக் காணவில்லையே! அது எங்காவது காணாமல் போய்விட்டதா?
27:20. இன்னும் அவர், பறவைகளைக் கணக்கெடுக்கப் பார்வையிட்டார், “எனக்கு என்ன ஆயிற்று? (பறவைகளில்) “ஹுத்ஹுதை” நான் காணவில்லையே! அல்லது அது (வராமல்) மறைந்தவற்றில் ஆகிவிட்டதா?” என்று கூறினார்.
27:21
27:21 لَاُعَذِّبَـنَّهٗ عَذَابًا شَدِيْدًا اَوْ لَا۟اَذْبَحَنَّهٗۤ اَوْ لَيَاْتِيَنِّىْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ‏
لَاُعَذِّبَـنَّهٗ عَذَابًا நிச்சயமாக நான் அதை தண்டிப்பேன் شَدِيْدًا கடுமையாக اَوْ அல்லது لَا۟اَذْبَحَنَّهٗۤ அதை நிச்சயமாக நான் அறுத்து விடுவேன் اَوْ அல்லது لَيَاْتِيَنِّىْ அது என்னிடம் கொண்டு வரவேண்டும் بِسُلْطٰنٍ ஆதாரத்தை مُّبِيْنٍ‏ தெளிவான
27:21. “நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றும் கூறினார்.
27:21. (அவ்வாறாயின்) நிச்சயமாக நான் அதைக் கடினமான வேதனை செய்வேன். அல்லது அதை அறுத்துவிடுவேன். அல்லது தக்க ஆதாரத்தை அது (என் முன்) கொண்டு வரவேண்டும்'' என்று கூறினார்.
27:21. நிச்சயம் அதனை நான் கடுமையாகத் தண்டிப்பேன் அல்லது அதனை அறுத்துவிடுவேன். இல்லாவிட்டால் பொருத்தமான காரணத்தை என்னிடம் அது சமர்ப்பிக்க வேண்டும்.”
27:21. “நிச்சயமாக நான் அதனைக் கடினமான வேதனையாக வேதனை செய்வேன், அல்லது அதனை நிச்சயமாக நான் அறுத்துவிடுவேன், அல்லது அது வராததற்குத் தெளிவான ஆதாரத்தைத் திட்டமாக அது (என் முன்) கொண்டுவர வேண்டும்” என்று கூறினார்.
27:22
27:22 فَمَكَثَ غَيْرَ بَعِيْدٍ فَقَالَ اَحَطْتُّ بِمَا لَمْ تُحِطْ بِهٖ وَ جِئْتُكَ مِنْ سَبَاٍۢ بِنَبَاٍ يَّقِيْنٍ‏
فَمَكَثَ அவர் தாமதித்தார் غَيْرَ بَعِيْدٍ சிறிது நேரம்தான் فَقَالَ ஆக, அது கூறியது اَحَطْتُّ அறிந்துள்ளேன் بِمَا لَمْ تُحِطْ بِهٖ எதை/நீ்ர் அறியவில்லை/அதை وَ جِئْتُكَ உம்மிடம் கொண்டு வந்துள்ளேன் مِنْ سَبَاٍۢ ‘சபா’ இனத்தாரிடமிருந்து بِنَبَاٍ செய்தியை يَّقِيْنٍ‏ உறுதியான
27:22. (இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுத்ஹுத் வந்து) கூறிற்று: “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”
27:22. (இவ்வாறு கூறி) அதிக நேரமாகவில்லை. (அதற்குள் ஹுத்ஹுத் பறவை அவர் முன் தோன்றி) ‘‘ நீர் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டு ‘ஸபா'வைப் பற்றி நிச்சயமான (உண்மைச்) செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.
27:22. அதிக தாமதமின்றி அது வந்து கூறியது: “தங்கள் அறிவுக்கு வராத சில செய்திகளை நான் பெற்றிருக்கின்றேன். நான் ஸபா பற்றி உறுதியான செய்தியைத் தங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன்.
27:22. (இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார், (அதற்குள் ஹுத் ஹுத் வந்து) “நீங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன் ஸபஉவிலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்” என்று அது கூறியது.
27:23
27:23 اِنِّىْ وَجَدْتُّ امْرَاَةً تَمْلِكُهُمْ وَاُوْتِيَتْ مِنْ كُلِّ شَىْءٍ وَّلَهَا عَرْشٌ عَظِيْمٌ‏
اِنِّىْ நிச்சயமாக நான் وَجَدْتُّ கண்டேன் امْرَاَةً ஒரு பெண்ணை تَمْلِكُهُمْ அவர்களை ஆட்சி செய்கின்றவளாக وَاُوْتِيَتْ அவள் வழங்கப்பட்டு இருக்கிறாள் مِنْ كُلِّ شَىْءٍ எல்லாம் وَّلَهَا அவளுக்கு சொந்தமான عَرْشٌ அரச கட்டிலும் عَظِيْمٌ‏ ஒரு பெரிய
27:23. “நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.
27:23. மெய்யாகவே அந்நாட்டு மக்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். எல்லா வசதிகளும் அவள் பெற்றிருக்கிறாள். மகத்தானதொரு அரசகட்டிலும் அவளுக்கு இருக்கிறது.
27:23. அங்கு அம்மக்கள் மீது ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் கண்டேன். அவளுக்கு எல்லாவிதமான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கம்பீரமான ஓர் அரியணையும் அவளுக்கு உள்ளது.
27:23. “அவர்களை (அங்கு) ஆட்சி செய்கின்ற ஒரு பெண்ணை நிச்சயமாக நான் கண்டேன், ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவள் கொடுக்கப்பட்டுள்ளாள், மகத்தான சிம்மாசனமும் அவளுக்கு இருக்கின்றது”
27:24
27:24 وَجَدْتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُوْنَ لِلشَّمْسِ مِنْ دُوْنِ اللّٰهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيْلِ فَهُمْ لَا يَهْتَدُوْنَۙ‏
وَجَدْتُّهَا அவளையும் கண்டேன் وَقَوْمَهَا அவளுடைய மக்களையும் يَسْجُدُوْنَ சிரம் பணிந்து வணங்குகின்றவர்களாக لِلشَّمْسِ சூரியனுக்கு مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி وَزَيَّنَ இன்னும் அலங்கரித்து விட்டான் لَهُمُ அவர்களுக்கு الشَّيْطٰنُ ஷைத்தான் اَعْمَالَهُمْ அவர்களின் செயல்களை فَصَدَّ ஆகவே, அவன் தடுத்து விட்டான் هُمْ அவர்களை عَنِ السَّبِيْلِ பாதையிலிருந்து فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يَهْتَدُوْنَۙ‏ நேர்வழி பெறவில்லை
27:24. “அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.
27:24. அவளும் அவளுடைய மக்களும் அல்லாஹ்வையன்றி சூரியனைச் சிரம் பணிந்து வணங்குவதை நான் கண்டேன். அவர்களுடைய இக்காரியத்தை ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விட்டான். ஆதலால், அவர்கள் நேரான வழியை அடையவில்லை.
27:24. அவளும் அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வை விடுத்து சூரியனுக்கு சிரம் பணிவதையும் நான் கண்டேன்.” ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காண்பித்து, நேரிய பாதையில் செல்லவிடாமல் அவர்களைத் தடுத்துவிட்டான்.
27:24. “அவளையும், அவளுடைய சமூகத்தாரையும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்குச் சிரம்பணிந்து வணங்குபவர்களாக நான் கண்டேன், அவர்களுடைய இக்காரியங்களை ஷைத்தான் அவர்களுக்கு அலங்காரமாகக் காண்பித்தும் விட்டான், எனவே, அவர்களை நேரான பாதையிலிருந்து அவன் தடுததுவிட்டான், ஆகவே, அவர்கள் நேர்வழி பெறவில்லை.
27:25
27:25 اَلَّا يَسْجُدُوْا لِلّٰهِ الَّذِىْ يُخْرِجُ الْخَبْءَ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُوْنَ وَمَا تُعْلِنُوْنَ‏
اَلَّا يَسْجُدُوْا அவர்கள் சிரம் பணியாமல் இருப்பதற்கா لِلّٰهِ அல்லாஹ்விற்கு الَّذِىْ எவன் يُخْرِجُ வெளிப்படுத்துகின்றான் الْخَبْءَ மறைந்திருப்பவற்றை فِى السَّمٰوٰتِ வானங்களிலும் وَالْاَرْضِ பூமியிலும் وَيَعْلَمُ இன்னும் அறிகின்றான் مَا تُخْفُوْنَ நீங்கள் மறைப்பதையும் وَمَا تُعْلِنُوْنَ‏ நீங்கள் வெளிப்படுத்துவதையும்
27:25. “வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா?
27:25. வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தக்கூடிய, நீங்கள் மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் நன்கறியக் கூடிய அல்லாஹ்வுக்கு அவர்கள் சிரம் பணிந்து வணங்க வேண்டாமா?
27:25. இதனால் வானங்கள் மற்றும் பூமியில் மறைந்திருப்பவற்றை வெளிக்கொணர்பவனும், நீங்கள் மறைத்து வைப்பவற்றையும் வெளிப்படுத்துகின்றவற்றையும் நன்கறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு சிரம் பணிய வேண்டும் எனும் நேர்வழியை அவர்கள் அடையாதவர்களாய் இருக்கின்றார்கள்.
27:25. “வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிக்கொணர்பவனும் நீங்கள் மறைத்துக் கொள்வதையும், நீங்கள் வெளியாக்குவதையும் நன்கறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் சிரம்பணியாமல் இருப்பதற்கு (ஷைத்தான் தடுத்துவிட்டதே) காரணமாகும்.
27:26
27:26 اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ ۩
اَللّٰهُ அல்லாஹ் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَ அவனை رَبُّ அதிபதி الْعَرْشِ அர்ஷுடைய الْعَظِيْمِ ۩‏ மகத்தான
27:26. “அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்” (என்று ஹுது ஹுது கூறிற்று).
27:26. அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன்தான் மகத்தான அர்ஷுடையவன்'' என்று கூறிற்று.
27:26. அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. அவனே மாபெரும் அர்ஷுக்கு* உரிமையாளன் ஆவான்.
27:26. அல்லாஹ்-அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, அவன்தான் மகத்தான அர்ஷுக்குரியவன்” (என்று ஹுத் ஹுது கூறிற்று)
27:27
27:27 قَالَ سَنَـنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِيْنَ‏
قَالَ அவர் கூறினார் سَنَـنْظُرُ ஆராய்ந்துபார்ப்போம் اَصَدَقْتَ நீ உண்மை கூறினாயா? اَمْ அல்லது كُنْتَ ஆகிவிட்டாயா? مِنَ الْكٰذِبِيْنَ‏ பொய்யர்களில்
27:27. (அதற்கு ஸுலைமான்:) “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” என்று கூறினார்.
27:27. (அதற்கு ஸுலைமான்) ‘‘ நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய் சொல்கிறாயா? என்பதை அதிசீக்கிரத்தில் நாம் கண்டு கொள்வோம்.
27:27. ஸுலைமான் கூறினார்: “நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய்யர்களோடு நீ சேர்ந்து விட்டாயா என்பதை இப் போதே நாம் பார்த்துவிடுகின்றோம்.
27:27. “நீ உண்மை சொல்கிறாயா, அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா? என்பதை நாம் காண்போம்” என்றும் ஸுலைமானாகிய அவர் கூறினார்.
27:28
27:28 اِذْهَبْ بِّكِتٰبِىْ هٰذَا فَاَلْقِهْ اِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا يَرْجِعُوْنَ‏
اِذْهَبْ எடுத்துச் செல்! بِّكِتٰبِىْ எனது இந்தக் கடிதத்தை هٰذَا இதை فَاَلْقِهْ அதைப் போடு! اِلَيْهِمْ அவர்கள் முன் ثُمَّ பிறகு تَوَلَّ விலகி இரு! عَنْهُمْ அவர்களை விட்டு فَانْظُرْ நீ பார்! مَاذَا என்ன يَرْجِعُوْنَ‏ அவர்கள் பதில் தருகிறார்கள்
27:28. “என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு; பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி; அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி” (என்று கூறினார்).
27:28. என் இக்கடிதத்தைக் கொண்டு போய் அவர்களின் முன் எறிந்துவிட்டு அவர்களை விட்டு விலகி (மறைவாக இருந்து கொண்டு) அவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை நீ கவனித்துவா'' என்று கூறினார்.
27:28. என்னுடைய இந்தக் கடிதத்தை எடுத்துச் சென்று அவர்களிடம் போட்டுவிடு. பிறகு, அவர்களை விட்டு விலகி நின்று அவர்கள் என்ன பதில் நட வடிக்கையை எடுக்கப் போகின்றார்கள் என்பதை நீ கவனி!”
27:28. “என்னுடைய இக்கடிதத்தைக் கொண்டு சென்று, அவர்கள்பால் போட்டுவிட்டுப் பின்னர் அவர்களை விட்டுப்பின்வாங்கி (இருந்து) அவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை நீ கவனித்து வா” என்று கூறினார்.
27:29
27:29 قَالَتْ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اِنِّىْۤ اُلْقِىَ اِلَىَّ كِتٰبٌ كَرِيْمٌ‏
قَالَتْ அவள் கூறினாள் يٰۤاَيُّهَا الْمَلَؤُا பிரமுகர்களே! اِنِّىْۤ நிச்சயமாக اُلْقِىَ அனுப்பப்பட்டுள்ளது اِلَىَّ என்னிடம் كِتٰبٌ ஒரு கடிதம் كَرِيْمٌ‏ கண்ணியமான
27:29. (அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்: “பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது.”
27:29. (அவ்வாறே அப்பறவை அவர்கள் முன் அக்கடிதத்தை எறியவே அதைக் கண்ணுற்ற அவ்வரசி தன் பிரதானிகளை நோக்கி) ‘‘ தலைவர்களே! மிக்க கண்ணியமுள்ள ஒரு கடிதம் என் முன் எறியப்பட்டிருக்கிறது.
27:29. அரசி கூறினாள்: “அரசவைப் பிரமுகர்களே! மிக முக்கியமான கடிதம் ஒன்று என்னிடம் போடப்பட்டிருக்கின்றது.
27:29. (அவ்வாறே அப்பறவை செய்தது, அக்கடிதத்தைப் பெற்ற அவ்வரசி) “பிரதானிகளே! மிக்க கண்ணியமுள்ள ஒரு கடிதம் என் முன் போடப்பட்டிருக்கின்றது” என்று அவள் கூறினாள்.
27:30
27:30 اِنَّهٗ مِنْ سُلَيْمٰنَ وَاِنَّهٗ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏
اِنَّهٗ நிச்சயமாக அது مِنْ سُلَيْمٰنَ சுலைமானிடமிருந்து وَاِنَّهٗ நிச்சயமாக செய்தியாவது بِسْمِ பெயரால் اللّٰهِ அல்லாஹ்வின் الرَّحْمٰنِ பேரருளாளன் الرَّحِيْمِۙ‏ பேரன்பாளன்
27:30. நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது.
27:30. மெய்யாகவே அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. நிச்சயமாக அ(தன் ஆரம்பத்)தில் ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்' என்றெழுதி,
27:30. நிச்சயமாக அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. மேலும், அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் அது தொடங்கப்பட்டுள்ளது.
27:30. “இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது, இன்னும், நிச்சயமாக அ(தன் ஆரம்பமான)து பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று” (எழுதப்பட்டு) இருக்கிறது.
27:31
27:31 اَلَّا تَعْلُوْا عَلَىَّ وَاْتُوْنِىْ مُسْلِمِيْنَ‏
اَلَّا تَعْلُوْا நீங்கள் பெருமை காட்டாதீர்கள்! عَلَىَّ என்னிடம் وَاْتُوْنِىْ என்னிடம் வந்து விடுங்கள்! مُسْلِمِيْنَ‏ பணிந்தவர்களாக
27:31. “நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்” (என்றும் எழுதப்பட்டிருக்கிறது).  
27:31. நீங்கள் (கர்வம் கொண்டு) என்னிடம் பெருமை பாராட்டாதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்'' (என்றும் எழுதப்பட்டிருக்கிறது) என்று கூறி
27:31. “எனக்கு எதிராக நீங்கள் ஆணவத்துடன் நடந்து கொள்ளாதீர்கள். மேலும், முஸ்லிம்களாய் பணிந்தவர்களாய் என்னிடம் வரவேண்டும்" எனும் வாசகம் அதில் உள்ளது.
27:31. “நீங்கள் என் மீது (எனக்கெதிராக) பெருமை பாராட்டாதீர்கள், (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக என்னிடம் வாருங்கள்” என்று(ம் எழுதப்பட்டு இருக்கின்றது (என அவள் கூறினாள்).
27:32
27:32 قَالَتْ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اَفْتُوْنِىْ فِىْۤ اَمْرِىْ‌ۚ مَا كُنْتُ قَاطِعَةً اَمْرًا حَتّٰى تَشْهَدُوْنِ‏
قَالَتْ அவள் கூறினாள் يٰۤاَيُّهَا الْمَلَؤُا பிரமுகர்களே! اَفْتُوْنِىْ நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள் فِىْۤ اَمْرِىْ‌ۚ எனது காரியத்தில் مَا كُنْتُ நான் இல்லை قَاطِعَةً முடிவு செய்பவளாக اَمْرًا ஒரு காரியத்தை حَتّٰى வரை تَشْهَدُوْنِ‏ நீங்கள் என்னிடம் ஆஜராகின்ற
27:32. எனவே பிரமுகர்களே! “என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்ல” என்று கூறினாள்.
27:32. (தன் பிரதானிகளை நோக்கி) ‘‘ தலைவர்களே என் இவ்விஷயத்தில் நீங்கள் (உங்கள்) ஆலோசனைகளைக் கூறுங்கள். என் சமூகத்தில் நீங்கள் நேராக வந்து (அபிப்பிராயம்) கூறாதவரை நான் எவ்விஷயத்தையும் முடிவு செய்பவளல்ல'' என்று அவள் கூறினாள்.
27:32. (கடிதத்தைப் படித்துக் காட்டிவிட்டு) அரசி கூறினாள்: “சமுதாயத் தலைவர்களே! என்னுடைய இந்த விவகாரத்தில் எனக்கு ஆலோசனை வழங்குங்கள். நீங்கள் இல்லாமல் எந்த விவகாரத்தையும் நான் முடிவு செய்வதில்லை.”
27:32. “பிரதானிகளே! என்னுடைய (இவ்) விஷயத்தில் நீங்கள் (உங்கள்) ஆலோசனையைக் கூறுவீர்களாக! எனக்கு நீங்கள் முன்னிலையாகி (அபிப்பிராயம்) கூறாதவரையில், நான் எவ்விஷயத்தையும் முடிவு செய்பவளல்ல” என்று அவள் கூறினாள்.
27:33
27:33 قَالُوْا نَحْنُ اُولُوْا قُوَّةٍ وَّاُولُوْا بَاْسٍ شَدِيْدٍ ۙ وَّالْاَمْرُ اِلَيْكِ فَانْظُرِىْ مَاذَا تَاْمُرِيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் نَحْنُ நாங்கள் اُولُوْا قُوَّةٍ பலமுடையவர்கள் وَّاُولُوْا بَاْسٍ இன்னும் வலிமை உடையவர்கள் شَدِيْدٍ ۙ கடும் وَّالْاَمْرُ இன்னும் முடிவு اِلَيْكِ உன்னிடம்இருக்கிறது فَانْظُرِىْ ஆகவே, நீ நன்கு யோசித்துக் கொள்! مَاذَا تَاْمُرِيْنَ‏ நீ உத்தரவிடுவதை
27:33. “நாங்கள் பெரும் பலசாலிகளாகவும், கடினமாக போர் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்; (ஆயினும்) முடிவு உங்களைப் பொறுத்தது, என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்கள் சொன்னார்கள்.
27:33. அதற்கவர்கள் ‘‘ நாங்கள் பலவான்களாகவும், கடுமையாக போர் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறோம். (போர் செய்வதோ, சமாதானம் செய்வதோ அதுபற்றிய) கட்டளை உமது விருப்பத்தைப் பொறுத்திருக்கிறது. ஆகவே, நீர் உத்தரவு செய்வ(திலுள்ள சாதக பாதகத்)தை நன்கு கவனித்துப் பார்'' என்று கூறினார்கள்.
27:33. அவர்கள் பதிலளித்தார்கள்: “நாம் வல்லமை மிக்கவர்களாகவும் கடுமையாகப் போரிடக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம். இதற்கு மேல் இறுதி முடிவெடுப்பது உங்கள் பொறுப்பு. என்ன ஆணையிடுவது என்பதைத் தாங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.”
27:33. அ(தற்க)வர்கள் “நாங்கள் பலசாலிகளாகவும், கடுமையாக போர் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம், இன்னும், கட்டளையிடுவது உங்களிடமுள்ளது, ஆகவே, நீங்கள் எதைக் கட்டளையிடுகிறீர்கள் என்பதை நன்கு கவனித்துப் பாருங்கள்” என்று கூறினார்கள்.
27:34
27:34 قَالَتْ اِنَّ الْمُلُوْكَ اِذَا دَخَلُوْا قَرْيَةً اَفْسَدُوْهَا وَجَعَلُوْۤا اَعِزَّةَ اَهْلِهَاۤ اَذِلَّةً  ‌ۚ وَكَذٰلِكَ يَفْعَلُوْنَ‏
قَالَتْ அவள் கூறினாள் اِنَّ الْمُلُوْكَ நிச்சயமாகமன்னர்கள் اِذَا دَخَلُوْا நுழைந்து விட்டால் قَرْيَةً ஓர் ஊருக்குள் اَفْسَدُوْهَا அதை சின்னா பின்னப்படுத்தி விடுவார்கள் وَجَعَلُوْۤا ஆக்கிவிடுவார்கள் اَعِزَّةَ கண்ணியவான்களை اَهْلِهَاۤ اَذِلَّةً  ۚ அந்த ஊர் வாசிகளில் உள்ள/இழிவானவர்களாக وَكَذٰلِكَ அப்படித்தான் يَفْعَلُوْنَ‏ செய்வார்கள்
27:34. அவள் கூறினாள்: “அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்.
27:34. அதற்கவள் ‘‘அரசர்கள் ஒரு ஊரில் நுழைந்தால் நிச்சயமாக அதை அழித்துவிடுகின்றனர். மேலும், அங்குள்ள கண்ணியவான்களை கேவலப்பட்டவர்களாக ஆக்கிவிடுகின்றனர். (ஆகவே,) இவர்களும் இவ்வாறே செய்யக்கூடும்.
27:34. அரசி கூறினாள்: “அரசர்கள் ஏதேனும் ஒரு நாட்டில் புகுந்தால் அதனை அழித்துவிடுவார்கள். மேலும், அங்கு கண்ணியத்துடன் வாழ்பவர்களைக் கேவலப்படுத்தி விடுவார்கள். இதைத்தான் அவர்கள் செய்கின்றார்கள்.
27:34. அ(தற்க)வள்: “நிச்சயமாக அரசர்கள் எந்த ஒரு ஊரிலும் (படையெடுத்து) நுழைவார்களானால்- அதனைப் பாழ்படுத்தி விடுகின்றனர்; அன்றியும், அங்குள்ள கண்ணியவான்களை (இழிவுபடுத்தி) சிறுமையாளர்களாக ஆக்கிவிடுகின்றனர், இவர்களும் அவ்வாறே செய்வார்கள்” என்று கூறினாள்.
27:35
27:35 وَاِنِّىْ مُرْسِلَةٌ اِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنٰظِرَةٌۢ بِمَ يَرْجِعُ الْمُرْسَلُوْنَ‏
وَاِنِّىْ நிச்சயமாக நான் مُرْسِلَةٌ அனுப்புகிறேன் اِلَيْهِمْ அவர்களிடம் بِهَدِيَّةٍ ஓர் அன்பளிப்பை فَنٰظِرَةٌۢ பார்க்கிறேன் بِمَ என்ன பதில் يَرْجِعُ திரும்ப கொண்டு வருகிறார்கள் الْمُرْسَلُوْنَ‏ தூதர்கள்
27:35. “ஆகவே, நிச்சயமாக நான் அவர்களுக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி, (அதைக் கொண்டு செல்லும்) தூதர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்.”
27:35. ஆகவே, நான் அவர்களிடம் (உயர்ந்த பொருள்களைக் கொண்ட) ஒரு காணிக்கையை அனுப்பி, (அதை எடுத்துச் செல்லும்) தூதர்கள் (அவரிடமிருந்து) என்ன பதில் கொண்டு வருகிறார்கள் என்பதை எதிர்பார்ப்பேன்'' என்று கூறினாள். (அவ்வாறே அனுப்பியும் வைத்தாள்.)
27:35. எனவே, அவர்களுக்கு நான் ஓர் அன்பளிப்பை அனுப்பப் போகின்றேன். பின்னர், என்னுடைய தூதுவர்கள் என்ன செய்தியைப் பெற்றுத் திரும்பி வருகின்றார்கள் என்பதைப் பார்க்கலாம்.”
27:35. மேலும், “நிச்சயமாக நான் அவர்களிடம் ஓர் அன்பளிப்பை அனுப்பி வைக்கக்கூடியவளாக இருக்கிறேன்; பின்னர், தூதர்கள் என்ன பதில் கொண்டு வருகிறார்கள் என்பதை நான் பார்க்கப் போகிறேன்” (என்றும் கூறினாள்)
27:36
27:36 فَلَمَّا جَآءَ سُلَيْمٰنَ قَالَ اَتُمِدُّوْنَنِ بِمَالٍ فَمَاۤ اٰتٰٮنَِۧ اللّٰهُ خَيْرٌ مِّمَّاۤ اٰتٰٮكُمْ‌ۚ بَلْ اَنْـتُمْ بِهَدِيَّتِكُمْ تَفْرَحُوْنَ‏
فَلَمَّا جَآءَ அவர் வந்தபோது سُلَيْمٰنَ சுலைமானிடம் قَالَ அவர் கூறினார் اَتُمِدُّوْنَنِ நீங்கள் எனக்கு தருகிறீர்களா? بِمَالٍ செல்வத்தை فَمَاۤ اٰتٰٮنَِۧ எனக்கு தந்திருப்பது اللّٰهُ அல்லாஹ் خَيْرٌ மிகச் சிறந்தது مِّمَّاۤ اٰتٰٮكُمْ‌ۚ அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட بَلْ மாறாக اَنْـتُمْ நீங்கள் بِهَدِيَّتِكُمْ உங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு تَفْرَحُوْنَ‏ பெருமிதம் அடைவீர்கள்
27:36. அவ்வாறே (தூதர்கள்) ஸுலைமானிடம் வந்தபோது; அவர் சொன்னார்: “நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்(ய நினைக்)கிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது, உங்களுக்கு அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்; எனினும், உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்கள் தான் மகிழ்ச்சி அடைகிறீர்கள்!
27:36. அந்தத் தூதர் ஸுலைமானிடம் வரவே (ஸுலைமான் அவரை நோக்கி) ‘‘ நீங்கள் பொருளைக் கொண்டு எனக்கு உதவி செய்யக் கருதுகிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்து இருப்பவை உங்களுக்குக் கொடுத்திருப்பவற்றை விட (அதிகமாகவும்) மேலானதாகவும் இருக்கின்றன. மாறாக, உங்கள் இக்காணிக்கையைக் கொண்டு நீங்களே சந்தோஷமடையுங்கள். (அது எனக்கு வேண்டியதில்லை) என்றும்,
27:36. அ(ரசியின் தூது)வர் ஸுலைமானிடம் வந்ததும் ஸுலைமான் கேட்டார்: “நீங்கள் பொருளால் எனக்கு உதவி புரிந் திட விரும்புகின்றீர்களா? அல்லாஹ் எனக்கு வழங்கியிருப்பது உங்களுக்கு வழங்கியிருப்பதைவிட எவ்வளவோ அதிகமாகும். எனவே, உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்களே மகிழ்ந்திருங்கள்.
27:36. அவர்கள் ஸுலைமானிடம் வரவே, “நீங்கள் பொருளைக் கொண்டு எனக்கு உதவி செய்கின்றீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பவைகள் உங்களுக்குக் கொடுத்திருப்பவைகளை விட மிகச் சிறந்ததாகும், மாறாக உங்களுடைய அன்பளிப்பைக் கொண்டு நீங்களே சந்தோஷமடைவீர்கள்” என்று கூறினார்.
27:37
27:37 اِرْجِعْ اِلَيْهِمْ فَلَنَاْتِيَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَـنُخْرِجَنَّهُمْ مِّنْهَاۤ اَذِلَّةً وَّهُمْ صٰغِرُوْنَ‏
اِرْجِعْ நீ திரும்பிப் போ! اِلَيْهِمْ அவர்களிடம் فَلَنَاْتِيَنَّهُمْ நாம் அவர்களிடம் கொண்டு வருவோம் بِجُنُوْدٍ இராணுவங்களை لَّا قِبَلَ அறவே வலிமை இருக்காது لَهُمْ அவர்களுக்கு بِهَا அவர்களை எதிர்க்க وَلَـنُخْرِجَنَّهُمْ நிச்சயமாக அவர்களை நாம் வெளியேற்றுவோம் مِّنْهَاۤ அதிலிருந்து اَذِلَّةً இழிவானவர்களாக وَّهُمْ அவர்கள் صٰغِرُوْنَ‏ சிறுமைப்படுவார்கள்
27:37. “அவர்களிடமே திரும்பிச் செல்க; நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள) ஒரு பெரும் படையைக் கொண்டு அவர்களிடம் வருவோம்; நாம் அவர்களைச் சிறுமைப் படுத்தி, அவ்வூரிலிருந்து வெளியேற்றிவிடுவோம், மேலும் அவர்கள் இழிந்தவர்களாவார்கள்” (என்று ஸுலைமான் கூறினார்).
27:37. (வந்தவர்களின் தலைவனை நோக்கி) நீ அவர்களிடம் திரும்பச் செல். அவர்களால் எதிர்க்க முடியாததொரு ராணுவத்துடன் நிச்சயமாக நாங்கள் அவர்களிடம் வருவோம். அவர்களை சிறுமைப்பட்டவர்களாக அவ்வூரிலிருந்து துரத்தி விடுவோம்'' என்று (கூறி அனுப்பிவிட்டு,)
27:37. (தூதரே!) உம்மை அனுப்பியவர்களிடம் நீர் திரும்பிச் செல்லும். அவர்களால் எதிர்த்து நிற்க முடியாத அளவுக்குப் பெரும் படைகளைத் திரட்டிக்கொண்டு அவர்களிடம் நாம் திண்ணமாக வரப்போகின்றோம். அவர்கள் கேவலப்பட்டுப் போகும் வகையில் அங்கிருந்து அவர்களை இழிவானவர்களாக வெளியேற்றி விடுவோம்!”
27:37. “நீர் அவர்களிடம் திரும்பிச் செல்வீராக! நிச்சயமாக நாங்கள் படைகளுடன் அவர்களிடம் வருவோம், அவர்களுக்கு அதை எதிர்க்க பலம் இல்லை, இன்னும், அவர்கள் சிறுமையடைந்தவர்களாக இருக்கும் நிலையில் கேவலமானவர்களாக அ(வர்களின் நகரத்)திலிருந்து அவர்களை நிச்சயமாக வெளியேற்றிவிடுவோம்” (என்றும் கூறினார்)
27:38
27:38 قَالَ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اَيُّكُمْ يَاْتِيْنِىْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ يَّاْتُوْنِىْ مُسْلِمِيْنَ‏
قَالَ அவர் கூறினார் يٰۤاَيُّهَا الْمَلَؤُا பிரமுகர்களே! اَيُّكُمْ உங்களில் யார் يَاْتِيْنِىْ என்னிடம் கொண்டு வருவார் بِعَرْشِهَا அவளுடைய அரச கட்டிலை قَبْلَ முன்னர் اَنْ يَّاْتُوْنِىْ அவர்கள் என்னிடம் வருவதற்கு مُسْلِمِيْنَ‏ பணிந்தவர்களாக
27:38. “பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார்.
27:38. (ஸுலைமான் தன் மந்திரிகளை நோக்கி) ‘‘ சான்றோர்களே! அவர்கள் கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அவளுடைய அரச கட்டிலை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?'' என்று கேட்டார்.
27:38. ஸுலைமான் கேட்டார்: “அவையோரே! அவர்கள் கீழ்ப் படிந்தவர்களாய் என்னிடம் வருமுன் அவளுடைய அரியணையை உங்களில் யார் என்னிடம் கொண்டு வரமுடியும்?”
27:38. “பிரதானிகளே! அவர்கள் முஸ்லிம்களாக என்னிடம் வந்து சேர்வதற்கு முன்னதாகவே உங்களில் யார் அவருடைய சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர்” என்று (ஸுலைமானாகிய) அவர் கேட்டார்.
27:39
27:39 قَالَ عِفْرِيْتٌ مِّنَ الْجِنِّ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ تَقُوْمَ مِنْ مَّقَامِكَ‌ۚ وَاِنِّىْ عَلَيْهِ لَـقَوِىٌّ اَمِيْنٌ‏
قَالَ கூறியது عِفْرِيْتٌ சாதுர்யமான ஒன்று مِّنَ الْجِنِّ ஜின்களில் اَنَا நான் اٰتِيْكَ உம்மிடம் கொண்டு வருவேன் بِهٖ அதை قَبْلَ முன்னர் اَنْ تَقُوْمَ நீர் எழுவதற்கு مِنْ مَّقَامِكَ‌ۚ உமது இடத்திலிருந்து وَاِنِّىْ நிச்சயமாக நான் عَلَيْهِ அதற்கு لَـقَوِىٌّ ஆற்றல் உள்ளவன் اَمِيْنٌ‏ நம்பிக்கைக்குரியவன்
27:39. ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.”
27:39. அதற்கு ஜின்களிலுள்ள ‘இஃப்ரீத்' (என்னும் ஒரு வீரன்) ‘‘ நீர் இந்தச் சபையை முடித்துக்கொண்டு எழுந்திருப்பதற்கு முன்னதாகவே அதை நான் உம்மிடம் கொண்டு வந்துவிடுவேன். நிச்சயமாக நான் இவ்வாறு செய்ய மிக்க சக்தியும் நம்பிக்கையும் உடையவன்'' என்று கூறினான்.
27:39. பலம் பொருந்திய ஒரு ஜின் கூறியது: “நீங்கள் உங்களுடைய இடத்தைவிட்டு எழுவதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுகின்றேன். நான் அதற்கு வலிமை பெற்றவனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இருக்கின்றேன்.”
27:39. அதற்கு ஜின்களிலுள்ள இஃப்ரீத் (-என்ற மிகப்பலம் பெற்ற ஜின்) “நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதனை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுவேன், நிச்சயமாக நான் இதற்கு மிக்க சக்தியுடையவன், மிக்க நம்பிக்கையும் உடையவன்” என்று கூறியது.
27:40
27:40 قَالَ الَّذِىْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْـكِتٰبِ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَ‌ؕ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّىْ‌ۖ لِيَبْلُوَنِىْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ‌ؕ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ‏
قَالَ ஒருவர் கூறினார் الَّذِىْ எவர் عِنْدَهٗ தன்னிடம் عِلْمٌ ஞானம் مِّنَ الْـكِتٰبِ வேதத்தின் اَنَا நான் اٰتِيْكَ உம்மிடம் கொண்டு வருவேன் بِهٖ அதை قَبْلَ முன்னர் اَنْ يَّرْتَدَّ திரும்புவதற்கு اِلَيْكَ உன் பக்கம் طَرْفُكَ‌ؕ உமது பார்வை فَلَمَّا رَاٰهُ அவர் பார்த்த போது مُسْتَقِرًّا நிலையாகி விட்டதாக عِنْدَهٗ தன்னிடம் قَالَ கூறினார் هٰذَا مِنْ فَضْلِ இது/அருளாகும் رَبِّىْ‌ۖ என் இறைவனின் لِيَبْلُوَنِىْٓ அவன் என்னை சோதிப்பதற்காக ءَاَشْكُرُ நான் நன்றி செலுத்துகிறேனா? اَمْ அல்லது اَكْفُرُ‌ؕ நன்றி கெடுகிறேனா? وَمَنْ யார் شَكَرَ நன்றிசெலுத்துகிறாரோ فَاِنَّمَا يَشْكُرُ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் لِنَفْسِهٖ‌ۚ அவருக்குத்தான் وَمَنْ யார் كَفَرَ நிராகரிப்பாரோ فَاِنَّ ஏனெனில் رَبِّىْ என் இறைவன் غَنِىٌّ முற்றிலும் தேவை அற்றவன் كَرِيْمٌ‏ பெரும் தயாளன்
27:40. இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார்.
27:40. (எனினும், அவர்களில்) வேத ஞானம் பெற்ற ஒருவர் (இருந்தார். அவர் ஸுலைமான் நபியை நோக்கி) “உமது பார்வை உம்மிடம் திரும்புவதற்கு முன் அதை நான் உம்மிடம் கொண்டு வந்துவிடுவேன்'' என்று கூறினார். (அவ்வாறே கொண்டு வந்து சேர்த்தார்.) அது தன் முன் (கொண்டு வந்து வைக்கப்பட்டு) இருப்பதை (ஸுலைமான்) கண்டதும், ‘‘ இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கிறானோ (அதனால் என் இறைவனுக்கு ஒரு நஷ்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (எவருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனும் ஆவான்'' என்று கூறி (தன் வேலைக்காரர்களை நோக்கி,)
27:40. அவர்களுள் ஓரளவு வேத அறிவைப் பெற்றிருந்த ஒருவர் “நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதை உங்களிடம் நான் கொண்டு வந்து விடுகின்றேன்” என்று கூறினார். அவ்வாறே அவ்வரியணை தம்மிடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதுமே ஸுலைமான் (உரக்கக்) கூறினார்: “இது என் இறைவனின் அருட்கொடையாகும்; நான் நன்றி செலுத்துகின்றேனா, நன்றி கொல்கின்றேனா என என்னை அவன் சோதிப்பதற்காக! மேலும், யாரேனும் நன்றி செலுத்தினால் அவருடைய நன்றி அவருக்கே நன்மை தரும். தவிர, யாரேனும் நன்றி கொன்றால் திண்ணமாக, என்னுடைய இறைவன் தேவைகள் அற்றவனாகவும், பெரும் கண்ணியமிக்கவனாகவும் இருக்கின்றான்!”
27:40. (எனினும்,) வேதத்திலிருந்து அறிவைத் தன்னிடம் கொண்டிருந்தவரான ஒருவர் “உம்முடைய பார்வை உம் பக்கம் திரும்புமுன் (கண் இமைப்பதற்குள்) அதனை நான் உம்மிடம் கொண்டு வந்துவிடுவேன்” என்று கூறினார், (அவ்வாறே கொண்டுவரப்பட்டு), அது தம் முன் நிலைபெற்றிருப்பதை (ஸுலைமானாகிய) அவர் கண்டபோது, “இது என் இரட்சகனின் பேரருளில் உள்ளதாகும், நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா, அல்லது நன்றி கெட்டவனாக இருக்கிறேனா? என்று என்னைச் சோதிப்பதற்காக (இவ்வாறு வழங்கியுள்ளான்.) மேலும், எவர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துகிறாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் (அதன் பலன்) அவருக்கே. இன்னும், எவர் (நன்றி செய்யாது) நிராகரிக்கிறாரோ (அது அவருக்கே கேடாகும், காரணம்) நிச்சயமாக என் இரட்சகன் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன், கண்ணியமுள்ளவன்” என்று கூறினார்.
27:41
27:41 قَالَ نَكِّرُوْا لَهَا عَرْشَهَا نَـنْظُرْ اَتَهْتَدِىْۤ اَمْ تَكُوْنُ مِنَ الَّذِيْنَ لَا يَهْتَدُوْنَ‏
قَالَ அவர் கூறினார் نَكِّرُوْا நீங்கள் மாற்றி விடுங்கள் لَهَا அவளுக்கு عَرْشَهَا அவளுடைய அரச கட்டிலை نَـنْظُرْ நாம் பார்ப்போம் اَتَهْتَدِىْۤ அவள் அறிந்து கொள்கிறாளா? اَمْ அல்லது تَكُوْنُ அவள் ஆகிவிடுகிறாளா? مِنَ الَّذِيْنَ لَا يَهْتَدُوْنَ‏ அறியாதவர்களில்
27:41. (இன்னும் அவர்) கூறினார்: “(அவள் கண்டு அறிந்து கொள்ள முடியாதபடி) அவளுடைய அரியாசன(த்தின் கோல)த்தை மாற்றி விடுங்கள்; அவள் அதை அறிந்து கொள்கிறாளா, அல்லது அறிந்து கொள்ள முடியாதவர்களில் ஒருத்தியாக இருக்கிறாளா என்பதை நாம் கவனிப்போம்.”
27:41. ‘‘அவளுடைய அரச கட்டிலை அவளுக்கு மாற்றி (அமைத்து) விடுங்கள். அவள் அதை(த் தனக்குரியதுதான் என்று) அறிந்து கொள்கிறாளா அல்லது அறிந்துகொள்ள முடியாதவளாகி விடுகிறாளா?'' என்று பார்ப்போம் எனக் கூறினார்.
27:41. ஸுலைமான் கூறினார்: “அரசியின் அரியணையை அடையாளம் காண முடியாத வகையில் அவள்முன் வைத்து விடுங்கள். உண்மை நிலையைத் தெரிந்து கொள்கின்றாளா, அல்லது சரியான வழியை அறிந்து கொள்ளாதவர்களுள் ஒருத்தியாய் இருக்கின்றாளா என்று நாம் பார்த்துவிடுவோம்.”
27:41. “அவளுடைய சிம்மாசனத்தை (அதன் அமைப்பை) மாற்றி விடுங்கள், அவள் (அதனை பற்றி) அறிந்து கொள்கிறாளா? அல்லது அறிந்துகொள்ள முடியாதவர்களில் (ஒருத்தியாக) இருக்கிறாளா? என்று பார்ப்போம்” என்று (ஸுலைமானாகிய) அவர் கூறினார்.
27:42
27:42 فَلَمَّا جَآءَتْ قِيْلَ اَهٰكَذَا عَرْشُكِ‌ؕ قَالَتْ كَاَنَّهٗ هُوَ‌ۚ وَاُوْتِيْنَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَ كُنَّا مُسْلِمِيْنَ‏
فَلَمَّا جَآءَتْ அவள் வந்தபோது, قِيْلَ கேட்கப்பட்டது اَهٰكَذَا இது போன்றா عَرْشُكِ‌ؕ உனது அரச கட்டில் قَالَتْ அவள் கூறினாள் كَاَنَّهٗ அதைப் போன்றுதான் هُوَ‌ۚ இது وَاُوْتِيْنَا நாம் கொடுக்கப்பட்டோம் الْعِلْمَ அறிவு مِنْ قَبْلِهَا இவளுக்கு முன்னரே وَ كُنَّا இன்னும் இருக்கிறோம் مُسْلِمِيْنَ‏ முஸ்லிம்களாக
27:42. ஆகவே, அவள் வந்த பொழுது, “உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்: “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது” என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று ஸுலைமான் கூறினார்).
27:42. அவள் வந்து சேரவே (அவளை நோக்கி) ‘‘ உனது அரச கட்டில் இவ்வாறுதானா இருக்கும்?'' என்று கேட்கப்பட்டதற்கு அவள் ‘‘ இது முற்றிலும் அதைப் போலவே இருக்கிறது. இதற்கு முன்னதாகவே (உமது மேன்மையைப் பற்றிய) விஷயம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டே வந்திருக்கிறோம்'' என்றாள்.
27:42. அரசி வருகை தந்ததும் ‘உம்முடைய அரியணை இப்படித்தான் உள்ளதா?’ என்று அவளிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவள் கூறினாள்: “இதுவோ, அதைப் போலவே இருக்கின்றது. நாங்கள் முன்பே அறிந்திருந்தோம். சிரம் தாழ்த்தி கீழ்ப்படிந்தவர்களாய் இருந்தோம் (அல்லது முஸ்லிம்களாகி விட்டிருந்தோம்.)”
27:42. அவள் வந்த பொழுது (அவளிடம்,) “உன்னுடைய சிம்மாசனம் இவ்வாறுதானா?” என்று கேட்கப்பட்டது, அ(தற்க)வள் “நிச்சயமாக இது அதைப்போலவே இருக்கின்றது” என்று கூறினாள், இதற்கு முன்னதாகவே (உங்களைப்பற்றிய) அறிவை நாம் கொடுக்கப்பட்டிருந்தோம், நாங்கள் முற்றிலும் (அல்லாஹ்வுக்கு) கீழ்ப்படிந்தவர்களாகவும் இருக்கிறோம்” (என்று ஸுலைமான் கூறினார்).
27:43
27:43 وَصَدَّهَا مَا كَانَتْ تَّعْبُدُ مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ اِنَّهَا كَانَتْ مِنْ قَوْمٍ كٰفِرِيْنَ‏
وَصَدَّهَا அவளைத் தடுத்து விட்டது مَا எது كَانَتْ இருந்தாள் تَّعْبُدُ அவள் வணங்கிக் கொண்டு مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வையன்றி اِنَّهَا நிச்சயமாக, அவள் كَانَتْ இருந்தாள் مِنْ قَوْمٍ மக்களில் كٰفِرِيْنَ‏ நிராகரிக்கின்ற
27:43. அல்லாஹ்வையன்றி (மற்றவர்களை) அவள் வணங்கிக் கொண்டிருந்ததுதான் அவளைத் தடுத்துக் கொண்டிருந்தது நிச்சயமாக அவள் காஃபிர்களின் சமூகத்திலுள்ளவளாக இருந்தாள்.
27:43. இதுவரை (நம்பிக்கை கொள்ளாது) அவளைத் தடுத்துக் கொண்டிருந்ததெல்லாம் அல்லாஹ்வை அன்றி அவள் வணங்கிக் கொண்டிருந்த (பொய்யான) தெய்வங்கள்தான். ஏனென்றால், நிச்சயமாக அவள் அல்லாஹ்வை நிராகரிக்கும் மக்களில் உள்ளவளாக இருந்தாள்.
27:43. அல்லாஹ்வை விட்டுவிட்டு அவள் எந்த தெய்வங்களை வணங்கிக் கொண்டிருந்தாளோ அந்த வணக்கம்தான் (நம்பிக்கை கொள்ளவிடாமல்) அவளைத் தடுத்துவிட்டிருந்தது. ஏனெனில், அவள் நிராகரிக்கக்கூடிய ஒரு சமூகத்தைச் சேர்ந்தவளாய் இருந்தாள்.
27:43. அல்லாஹ்வையன்றி அவள் (மற்றவைகளை) வணங்கிக் கொண்டிருந்தது அவளை (விசுவாசங்கொள்வதிலிருந்து) தடுத்துவிட்டது, (ஏனென்றால்,) நிச்சயமாக அவள் (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களின் சமூகத்தாரில் உள்ளவளாக இருந்தாள்.
27:44
27:44 قِيْلَ لَهَا ادْخُلِى الصَّرْحَ‌ ۚ فَلَمَّا رَاَتْهُ حَسِبَـتْهُ لُـجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَيْهَا ‌ؕ قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِيْرَ ۙ‌قَالَتْ رَبِّ اِنِّىْ ظَلَمْتُ نَـفْسِىْ وَ اَسْلَمْتُ مَعَ سُلَيْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
قِيْلَ கூறப்பட்டது لَهَا அவளுக்கு ادْخُلِى நீ நுழை! الصَّرْحَ‌ ۚ மாளிகையில் فَلَمَّا رَاَتْهُ அவள் அதைப் பார்த்த போது حَسِبَـتْهُ அவள் அதை கருதினாள் لُـجَّةً அலை அடிக்கும் நீராக وَّكَشَفَتْ அகற்றினாள் عَنْ سَاقَيْهَا ؕ தன் இரு கெண்டைக் கால்களை விட்டும் قَالَ கூறினார் اِنَّهٗ நிச்சயமாக இது صَرْحٌ மாளிகை مُّمَرَّدٌ சமப்படுத்தப்பட்டது مِّنْ قَوَارِيْرَ ۙ கண்ணாடிகளால் ‌قَالَتْ அவள் கூறினாள் رَبِّ என் இறைவா! اِنِّىْ நிச்சயமாக நான் ظَلَمْتُ அநீதி செய்து கொண்டேன் نَـفْسِىْ எனக்கே وَ اَسْلَمْتُ நானும் முஸ்லிமாகி விட்டேன் مَعَ سُلَيْمٰنَ சுலைமானுடன் لِلّٰهِ அல்லாஹ்விற்கு رَبِّ இறைவனான الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
27:44. அவளிடம்: “இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!” என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்; (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), “அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!” என்று கூறினார். (அதற்கு அவள்) “இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள்.  
27:44. பின்னர் ‘‘ இம்மாளிகையில் நுழை'' என்று அவளுக்குக் கூறப்பட்டது. அவள் அதைக் கண்டு (அதன் தரையில் பதிக்கப்பட்டிருந்த பளிங்கு கற்களை) தண்ணீர் என்று எண்ணி ஆடையை (அது நனைந்து போகாதிருக்க) இரு கெண்டைக்கால்களில் இருந்து உயர்த்தினாள். அதற்கு (ஸுலைமான்) ‘‘ நிச்சயமாக அது (தண்ணீரல்ல) பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட மாளிகைதான்'' என்று கூறினார். அதற்கவள் ‘‘ என் இறைவனே! நிச்சயமாக நானே எனக்குத் தீங்கிழைத்துக் கொண்டிருந்தேன். உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு ஸுலைமானுடன் நானும் முற்றிலும் கட்டுப்படுகிறேன்'' என்று கூறினாள்.
27:44. “மாளிகையினுள் நுழைவீராக!” என்று அவளிடம் கூறப்பட்டது. அதனைப் பார்த்தபோது தண்ணீர்த் தடாகம் என்று கருதிக் கொண்டாள். (இறங்குவதற்காகத்) தன் உடையை கெண்டைக்கால்களுக்கு மேல் உயர்த்தினாள். ஸுலைமான் கூறினார்: “இது பளபளக்கும் கண்ணாடி மாளிகையின் தரையாகும்!” அதற்கு அவள் கூறினாள்: “என் இறைவனே! (இன்று வரை) எனக்கு நானே கொடுமை புரிந்து கொண்டிருந்தேன். இனி நான் ஸுலைமானுடன் சேர்ந்து அகிலமனைத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழ ஏற்றுக் கொள்கின்றேன்!”
27:44. (பின்னர்) அவளிடம், “இம்மாளிகையில் பிரவேசிப்பாயாக!” எனக் கூறப்பட்டது, அவள் அதைப்பார்த்தபோது தண்ணீர் தடாகம் என்றெண்ணிவிட்டாள்; (நனைந்து போகாதிருக்க தன் ஆடையை) தனது, இரு கெண்டைக்கால்களுக்கு மேல் உயர்த்தினாள்; (இதைக் கண்ட ஸுலைமான், “அது, தண்ணீரல்ல! நிச்சயமாக இது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை” என்று கூறினார். அ(தற்க)வள், என் இரட்சகனே! நிச்சயமாக நான் எனக்கே அநியாயம் செய்து விட்டேன்; அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் கீழ்ப்படிந்து (இஸ்லாமாகி) விட்டேன்” என்று கூறினாள்.
27:45
27:45 وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا اَنِ اعْبُدُوْا اللّٰهَ فَاِذَا هُمْ فَرِيْقٰنِ يَخْتَصِمُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَاۤ நாம் அனுப்பினோம் اِلٰى ثَمُوْدَ ஸமூது (மக்களு)க்கு اَخَا சகோதரர் هُمْ அவருடைய صٰلِحًا ஸாலிஹை اَنِ اعْبُدُوْا நீங்கள்வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை فَاِذَا هُمْ ஆனால், அவர்கள் அப்போது فَرِيْقٰنِ இரண்டு பிரிவுகளாக يَخْتَصِمُوْنَ‏ தங்களுக்குள் தர்க்கித்துக் கொள்கின்றனர்
27:45. தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை: “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” (என்று போதிக்குமாறு) அனுப்பினோம்; ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள்.
27:45. நிச்சயமாக நாம் ஸமூது என்னும் மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். அவர், (அவர்களை நோக்கி) ‘‘ நீங்கள் அல்லாஹ் ஒருவனை வணங்குங்கள்'' என்று கூறினார். அச்சமயம் அவர்கள் இரு பிரிவினர்களாகி(த் தங்களுக்குள்) தர்க்கம் செய்துகொண்டார்கள்.
27:45. மேலும், நாம் ஸமூத் சமூகத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்” (என்னும் செய்தியுடன் தூதராக) அனுப்பினோம். அப்போது அவர்கள் இரு குழுவினராய்ப் பிரிந்து தர்க்கம் புரியத் தொடங்கிவிட்டார்கள்.
27:45. மேலும், நிச்சயமாக நாம் ஸமூது (கூட்டத்தார்)பால் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை அனுப்பிவைத்தோம், அவர், (அவர்களிடம்) “நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்” (என்று கூறினார்) அது சமயம் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து (தங்களுக்குள்) தர்க்கம் செய்து கொள்ளலாயினர்.
27:46
27:46 قَالَ يٰقَوْمِ لِمَ تَسْتَعْجِلُوْنَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ‌‌ۚ لَوْلَا تَسْتَغْفِرُوْنَ اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏
قَالَ அவர் கூறினார் يٰقَوْمِ என் மக்களே! لِمَ تَسْتَعْجِلُوْنَ ஏன் அவசரப்படுகிறீர்கள்? بِالسَّيِّئَةِ தீமையை قَبْلَ الْحَسَنَةِ‌ۚ நன்மைக்குமுன்னதாக لَوْلَا تَسْتَغْفِرُوْنَ நீங்கள் பாவமன்னிப்புத் தேடமாட்டீர்களா? اللّٰهَ அல்லாஹ்விடம் لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏ நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்
27:46. (அப்போது அவர்:) “என்னுடைய சமூகத்தாரே! நன்மைக்கு முன்னால், தீமைக்காக நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள், நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு அல்லாஹ்விடம் தவ்பா (செய்து மன்னிப்புக்) கேட்கமாட்டீர்களா?” எனக் கூறினார்.
27:46. (அதற்கு ஸாலிஹ்) ‘‘ என் மக்களே! நீங்கள் ஏன் அவசரப்பட்டு நன்மைக்கு முன்னதாகவே தண்டனையைத் தேடிக்கொள்கிறீர்கள்? அல்லாஹ்விடத்தில் நீங்கள் மன்னிப்புக் கோர வேண்டாமா? நீங்கள் கருணை செய்யப்படுவீர்களே!'' என்று கூறினார்.
27:46. ஸாலிஹ் கூறினார்: “என் சமூகத்தினரே! நன்மை வருமுன் தீமைக்காக ஏன் அவசரப்படுகின்றீர்கள்? நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரக்கூடாதா? உங்கள் மீது கருணை பொழியப்படக்கூடுமே!”
27:46. “என்னுடைய சமூகத்தாரே! நன்மைக்கு முன்னதாகத் தீமையைக் கொண்டு நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள்? நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோர வேண்டாமா? (அதன் மூலம்) நீங்கள் கிருபை செய்யப்பபடுவீர்கள்” என்று (ஸாலிஹாகிய) அவர் கூறினார்.
27:47
27:47 قَالُوا اطَّيَّرْنَا بِكَ وَبِمَنْ مَّعَكَ‌ ؕ قَالَ طٰٓٮِٕرُكُمْ عِنْدَ اللّٰهِ‌ بَلْ اَنْـتُمْ قَوْمٌ تُفْتَـنُوْنَ‏
قَالُوا அவர்கள் கூறினர் اطَّيَّرْنَا நாங்கள் துற்சகுணம் அடைந்தோம் بِكَ உம்மாலும் وَبِمَنْ مَّعَكَ‌ ؕ இன்னும் உம்முடன் உள்ளவர்களாலும் قَالَ அவர் கூறினார் طٰٓٮِٕرُكُمْ மாறாக உங்கள் துன்பத்தின் காரணம் عِنْدَ اللّٰهِ‌ அல்லாஹ்விடம்தான் இருக்கிறது بَلْ மாறாக اَنْـتُمْ நீங்கள் قَوْمٌ மக்கள் تُفْتَـنُوْنَ‏ சோதிக்கப்படுகின்ற
27:47. அதற்கவர்கள்: “உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுணமாகக் காண்கிறோம்” என்று சொன்னார்கள்; அவர் கூறினார்: “உங்கள் துர்ச்சகுணம் அல்லாஹ்விடம் இருக்கிறது; எனினும், நீஙகள் சோதனைக்குள்ளாக்கப்படும் சமூகத்தாராக இருக்கிறீர்கள்.”
27:47. அதற்கவர்கள் ‘‘ உம்மையும் உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் அபசகுணமாக எண்ணுகிறோம்'' என்று கூறினார்கள். அதற்கவர் ‘‘ அல்லாஹ்விடமிருந்துதான் உங்கள் துர்ச்சகுனம் வந்தது. நீங்கள் (அதிசீக்கிரத்தில் அல்லாஹ்வுடைய) சோதனைக்குள்ளாக வேண்டிய மக்கள்'' என்று கூறினார்.
27:47. அதற்கவர்கள், “நாங்கள் உம்மையும் உம்முடன் இருப்பவர்களையும் துர்ச் சகுனமாகக் கருதுகின்றோம்” என்றார்கள். ஸாலிஹ் பதிலளித்தார்: “உங்களின் (நல்ல, கெட்ட) சகுனம் பற்றிய விஷயம் அல்லாஹ்விடம் உள்ளது. உண்மை யாதெனில், நீங்கள் சோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்!”
27:47. அ(தற்க)வர்கள், “உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுனமாகக் கருதுகிறோம்” என்று கூறினார்கள், அதற்கவர், “உங்கள் துர்ச்சகுனம் (அதன் காரணம்) அல்லாஹ்விடம் இருக்கிறது, மாறாக, நீங்கள் (அல்லாஹ்வினால்) சோதனைக்குள்ளாக்கப்படும் சமூகத்தாராக இருக்கின்றீர்கள்” என்று கூறினார்.
27:48
27:48 وَكَانَ فِى الْمَدِيْنَةِ تِسْعَةُ رَهْطٍ يُّفْسِدُوْنَ فِى الْاَرْضِ وَلَا يُصْلِحُوْنَ‏
وَكَانَ இருந்தனர் فِى الْمَدِيْنَةِ அப்பட்டணத்தில் تِسْعَةُ ஒன்பது رَهْطٍ பேர் يُّفْسِدُوْنَ அவர்கள் குழப்பம் செய்தனர் فِى الْاَرْضِ பூமியில் وَلَا يُصْلِحُوْنَ‏ சீர்திருத்தம் செய்யவில்லை
27:48. இன்னும், அந்நகரில் ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் நன்மை எதுவும் செய்யாது பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிகிறார்கள்.
27:48. அவ்வூரில் (விஷமிகளுக்குத் தலைவர்களாக) ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் நன்மை செய்யாது அவ்வூரிலும் (மற்ற சுற்றுப்புறங்களிலும்) விஷமம் செய்து கொண்டே திரிந்தார்கள்.
27:48. அந்நகரில் ஒன்பது கலகத் தலைவர்கள் இருந்தனர். அவர்கள் நாட்டில் குழப்பத்தைப் பரப்பிக்கொண்டும், மேலும், எவ்விதச் சீர்திருத்தத்தை செய்யாமலும் இருந்தனர்.
27:48. (ஸாலிஹ் நபி வாழ்ந்து வந்த) அந்நகரில், ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள், அவர்கள் பூமியில் குழப்பம் செய்பவர்களாக, மற்றும் சீர்திருத்தம் செய்யாதவர்களாக இருந்தனர்.
27:49
27:49 قَالُوْا تَقَاسَمُوْا بِاللّٰهِ لَـنُبَيِّتَـنَّهٗ وَ اَهْلَهٗ ثُمَّ لَـنَقُوْلَنَّ لِوَلِيِّهٖ مَا شَهِدْنَا مَهْلِكَ اَهْلِهٖ وَاِنَّا لَصٰدِقُوْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் تَقَاسَمُوْا தங்களுக்குள் சத்தியம் செய்தனர் بِاللّٰهِ அல்லாஹ்வின் மீது لَـنُبَيِّتَـنَّهٗ நிச்சயமாக நாங்கள் அவரை கொன்று விடுவோம் وَ اَهْلَهٗ அவருடைய குடும்பத்தையும் ثُمَّ لَـنَقُوْلَنَّ பிறகு கூறுவோம் لِوَلِيِّهٖ அவருடைய பொறுப்பாளருக்கு مَا شَهِدْنَا நாம்ஆஜராகவில்லை مَهْلِكَ اَهْلِهٖ அவ(ரும் அவ)ரது குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்கு وَاِنَّا لَصٰدِقُوْنَ‏ நாங்கள் உண்மையாளர்கள்
27:49. அவர்கள்: “நாம் அவரையும் (ஸாலிஹையும்), அவருடைய குடும்பத்தாரையும் இரவோடிரவாக திட்டமாக அழித்து விடுவோம்; (இதனை யாரிடமும் சொல்வதில்லை) என்று நாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கொள்வோமாக!” பிறகு அவருடைய வாரிஸ்தாரிடம் (அவர்கள் பழிக்குப்பழி வாங்க வந்தால்) “உங்கள் குடும்பத்தார் அழிக்கப்பட்டதை நாங்கள் காணவேயில்லை; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்” என்று திட்டமாகக் கூறிவிடலாம் (எனச் சதி செய்தார்கள்).
27:49. அவர்கள் ஸாலிஹையும் அவருடைய குடும்பத்தையும் இரவோடு இரவாக நாம் அழித்து விடுவோம். (இதை ஒருவரிடமும் கூறுவதில்லை என்று) நாம் நமக்குள்ளாக அல்லாஹ் மீது சத்தியம் செய்துகொண்டு அவருடைய சொந்தக்காரர்களிடம், ‘‘ அவர் வெட்டுப்பட்ட இடத்திற்கு நாங்கள் வரவேயில்லை. நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகிறோம்'' என்று நாம் கூறிவிடலாம் என்று கூறிக் கொண்டார்கள்.
27:49. அவர்கள் தமக்கிடையே கூறினார்கள்: “நீங்கள் இறைவன் மீது சத்தியம் செய்து சபதம் எடுத்துக் கொள்ளுங்கள் நாம் ஸாலிஹ் மீதும் அவருடைய குடும்பத்தார் மீதும் இரவில் தாக்குதல் நடத்துவோம் என்று! பிறகு அவருடைய பாதுகாவலரிடம் கூறிவிடுவோம் ஸாலிஹுடைய குடும்பம் கொல்லப்பட்ட சமயத்தில் நாங்கள் அங்கு இருக்கவில்லை. நாங்கள் உண்மைதான் கூறுகின்றோம்.”
27:49. (குழப்பக்காரர்களான அவர்கள்) நிச்சயமாக (ஸாலிஹ் நபியாகிய) அவரையும், அவருடைய குடும்பத்தினரையும் நாம் இரவோடு இரவாக அழித்துவிடுவோம் என்று நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்து கொள்ளுங்கள், பின்னர் அவர் குடும்பத்தினர் அழிக்கப்பட்ட இடத்திற்கு நாங்கள் வரவேயில்லை, நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்கிறோம் என்று அவருடைய பாதுகாப்பாளரிடம் திட்டமாகக் கூறிக்கொள்வோம்” என்று (இவர்களுக்குள்) கூறினார்கள்.
27:50
27:50 وَمَكَرُوْا مَكْرًا وَّمَكَرْنَا مَكْرًا وَّهُمْ لَا يَشْعُرُوْنَ‏
وَمَكَرُوْا مَكْرًا அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர் وَّمَكَرْنَا مَكْرًا நாம் ஒரு சூழ்ச்சி செய்தோம் وَّهُمْ அவர்கள் لَا يَشْعُرُوْنَ‏ உணர மாட்டார்கள்
27:50. (இவ்வாறு) அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்; ஆனால் அவர்கள் அறியாதவாறு நாமும் சூழ்ச்சி செய்தோம்.
27:50. (இவ்வாறு) அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள். நாமும் ஒரு சூழ்ச்சி செய்தோம். அவர்கள் அதை உணர்ந்துகொள்ள முடியவில்லை.
27:50. அவர்கள் செய்தது இந்த சூழ்ச்சிதான்! பிறகு, அவர்கள் அறியாத வகையில் நாம் வேறொரு சூழ்ச்சியைச் செய்தோம்.
27:50. இன்னும், (இதுபோன்றே) அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள், நாமும் நம் தண்டனையைக் கொண்டு அவர்களின் சூழ்ச்சியை முறியடிக்க சூழ்ச்சி செய்தோம், அவர்களோ (அதனை) உணர்ந்து கொள்ளவில்லை.
27:51
27:51 فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ مَكْرِهِمْۙ اَنَّا دَمَّرْنٰهُمْ وَقَوْمَهُمْ اَجْمَعِيْنَ‏
فَانْظُرْ நீர் பார்ப்பீராக! كَيْفَ எப்படி என்று كَانَ ஆகியது عَاقِبَةُ முடிவு مَكْرِهِمْۙ அவர்கள் சூழ்ச்சியின் اَنَّا நிச்சயமாக நாம் دَمَّرْنٰهُمْ அவர்களை அழித்து விட்டோம் وَقَوْمَهُمْ அவர்களின் மக்கள் اَجْمَعِيْنَ‏ அனைவரையும்
27:51. ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (முடிவு) அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார் எல்லோரையும் நாம் அழித்தோம்.
27:51. ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனித்துப் பார்ப்பீராக. நிச்சயமாக நாம் அவர்களையும் அவர்களுடைய மக்கள் அனைவரையும் அழித்துவிட்டோம்.
27:51. அவர்களுடைய சூழ்ச்சியின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்த்துக் கொள்ளும். அவர்களையும் அவர்களுடைய சமுதாய மக்கள் அனைவரையும் நாம் அழித்துவிட்டோம்;
27:51. ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு எப்படி இருந்தது என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! நிச்சயமாக அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார் அனைவரையும் அடியோடு நாம் அழித்துவிட்டோம்.
27:52
27:52 فَتِلْكَ بُيُوْتُهُمْ خَاوِيَةً ۢ بِمَا ظَلَمُوْا‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّـقَوْمٍ يَّعْلَمُوْنَ‏
فَتِلْكَ இதோ بُيُوْتُهُمْ அவர்களது வீடுகள் خَاوِيَةً ۢ வெறுமையாக இருக்கின்றன بِمَا ظَلَمُوْا‌ ؕ அவர்கள் தீமை செய்ததால் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கிறது لَاٰيَةً ஓர் அத்தாட்சி لِّـقَوْمٍ மக்களுக்கு يَّعْلَمُوْنَ‏ அறிகின்ற
27:52. ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் (அதோ அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் அதோ பாழடைந்து கிடக்கின்றன; நிச்சயமாக இதிலே, அறியக் கூடிய சமூகத்தாருக்கு அத்தாட்சி இருக்கிறது.
27:52. அவர்கள் செய்து கொண்டிருந்த அநியாயங்களின் காரணமாக (அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் இதோ பாழடைந்து கிடக்கின்றன. அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது.
27:52. அவர்கள் செய்த கொடுமையின் காரணமாக! அதோ! அவர்களுடைய இல்லங்கள் வெறுமையாய்க் கிடக்கின்றன. திண்ணமாக, அறியக்கூடிய மக்களுக்கு இதில் (படிப்பினை மிக்க) சான்று இருக்கின்றது.
27:52. ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த அநியாயங்களின் காரணமாக அவர்களுடைய அந்த வீடுகள் குடியிருப்பற்றுக் கிடக்கின்றன, அறியக்கூடிய சமூகத்தார்க்கு நிச்சயமாக இதில் ஒரு படிப்பினை இருக்கின்றது.
27:53
27:53 وَاَنْجَيْنَا الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ‏
وَاَنْجَيْنَا நாம் பாதுகாத்தோம் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை وَكَانُوْا يَتَّقُوْنَ‏ அவர்கள் அஞ்சிக் கொண்டிருந்தனர்
27:53. மேலும், ஈமான் கொண்டு, (அல்லாஹ்விடம்) பயபக்தியுடையவர்களாக இருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்.
27:53. அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து கொண்டிருந்தார்களோ, அவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
27:53. மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு மாறு செய்வதை விட்டு விலகியும் இருந்தார்களோ அவர்களை நாம் காப்பாற்றிக் கொண்டோம்.
27:53. விசுவாசங்கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்தும் கொண்டிருந்தார்களே அத்தகையவர்களை நாமே காப்பாற்றினோம்.
27:54
27:54 وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْـفَاحِشَةَ وَاَنْـتُمْ تُبْصِرُوْنَ‏
وَلُوْطًا இன்னும் லூத்தையும் اِذْ கூறிய சமயத்தை قَالَ நினைவு கூறுவீராக! لِقَوْمِهٖۤ அவர் தம் மக்களுக்கு اَتَاْتُوْنَ நீங்கள் செய்கிறீர்களா? الْـفَاحِشَةَ மகா அசிங்கமான وَاَنْـتُمْ நீங்கள் تُبْصِرُوْنَ‏ அறியத்தான் செய்கிறீர்கள்
27:54. லூத்தையும் (நினைவு கூர்வீராக!) அவர் தம் சமூகத்தாரிடம்; “நீங்கள் பார்த்துக் கொண்டே மானக்கேடான செயலைச் செய்கின்றீர்களா?” என்று கூறினார்.
27:54. லூத்தையும் (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் மக்களை நோக்கி (மறைவு திரையின்றி) ‘‘ மக்கள் முன்பாகவே நீங்கள் மானக்கேடான காரியங்களைச் செய்கிறீர்களா!
27:54. மேலும், லூத்தை நாம் அனுப்பினோம். அவர்தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் கண்களால் பார்த்துக் கொண்டே ஒழுக்கக் கேடான செயல்களைச் செய்கின்றீர்களா?
27:54. லூத்தையும் - (நாம் நம்முடைய தூதராக அனுப்பி வைத்ததை நினைவு கூர்வீராக!) அவர் தன் ஜனங்களிடம், “நீங்கள் (உங்களில் சிலர் சிலரைப்) பார்த்தவர்களாக இருக்க, மானக்கேடான செயலைச் செய்கின்றீர்களா,” என்று அவர் கூறியபோது-
27:55
27:55 اَٮِٕنَّكُمْ لَـتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ‌ؕ بَلْ اَنْـتُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ‏
اَٮِٕنَّكُمْ ?/நீங்கள் لَـتَاْتُوْنَ தீர்க்கிறீர்கள் الرِّجَالَ ஆண்களிடமா شَهْوَةً இச்சையை مِّنْ دُوْنِ அன்றி النِّسَآءِ‌ؕ பெண்கள் بَلْ மாறாக اَنْـتُمْ நீங்கள் قَوْمٌ மக்கள் تَجْهَلُوْنَ‏ நீங்கள் அறிய மாட்டீர்கள்
27:55. “நீங்கள் பெண்களை விட்டு விட்டு, மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்” (என்றும் கூறினார்).
27:55. நீங்கள் பெண்களைவிட்டு ஆண்களிடம் மோகங்கொண்டு வருகிறீர்களே! எனினும் நீங்கள் முற்றிலும் அறிவீனமான மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்.
27:55. என்ன, பெண்களை விட்டுவிட்டு காம உணர்வைத் தீர்ப்பதற்காக ஆண்களையா தேடி அலைகின்றீர்கள்? உண்மையில் நீங்கள் மிகவும் அறிவீனமான செயல்புரியும் மக்கள் ஆவீர்.”
27:55. “நிச்சயமாக நீங்கள் பெண்களை தவிர்த்து(விட்டு) ஆண்களிடம் மோகங்கொண்டு வருகின்றீர்களா? மாறாக நீங்கள் முற்றிலும் அறிவில்லாதக் கூட்டத்தினராக இருக்கிறீர்கள்” (என்று கூறினார்.)
27:56
27:56 فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُـوْۤا اَخْرِجُوْۤا اٰلَ لُوْطٍ مِّنْ قَرْيَتِكُمْ‌ۚ اِنَّهُمْ اُنَاسٌ يَّتَطَهَّرُوْنَ‏
فَمَا كَانَ இருக்கவில்லை جَوَابَ பதிலோ قَوْمِهٖۤ அவருடைய மக்களின் اِلَّاۤ தவிர اَنْ قَالُـوْۤا கூறுவதாகவே اَخْرِجُوْۤا வெளியேற்றுங்கள் اٰلَ குடும்பத்தாரை لُوْطٍ லூத்துடைய مِّنْ قَرْيَتِكُمْ‌ۚ உங்கள் ஊரிலிருந்து اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اُنَاسٌ அந்த மக்கள் يَّتَطَهَّرُوْنَ‏ அசூசைப்படுகிறார்கள்
27:56. அதற்கவருடைய சமுதாயத்தவர் (தம் இனத்தாரிடம்) “லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரைவிட்டு நீங்கள் வெளியேற்றி விடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகவும் பரிசுத்தமான மனிதர்களே!” என்று (பரிகாசமாகக்) கூறினார்களே தவிர வேறொரு பதிலும் அவர்களிடமில்லை.
27:56. அதற்கவர்கள் (தங்கள் மக்களை நோக்கி) ‘‘ லூத்துடைய குடும்பத்தை உங்கள் ஊரை விட்டும் நீங்கள் ஓட்டிவிடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்கள் (போல் பேசுகின்றனர்)'' என்று (பரிகாசமாகக்) கூறியதுதான் அவருடைய மக்களின் பதிலாக இருந்தது.
27:56. ஆயினும், அவருடைய சமூகத்தார் இதைத் தவிர வேறு எந்த பதிலையும் கூறவில்லை; அது இதுதான்: “வெளியேற்றுங்கள் லூத்துடைய குடும்பத்தாரை, உங்களுடைய ஊரைவிட்டு! இவர்கள் பெரிய பரிசுத்தவான்கள்!” (என்று எள்ளினர்).
27:56. “லூத்துடைய குடும்பத்தை உங்கள் ஊரைவிட்டு நீங்கள் வெளியேற்றிவிடுங்கள், நிச்சயமாக அவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்கள் என்று (பரிகாசமாக) அவர்கள் கூறியதைத்தவிர, (வேறெதுவும்) அவருடைய சமூகத்தாரின் பதிலாக இருந்ததில்லை.
27:57
27:57 فَاَنْجَيْنٰهُ وَ اَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنٰهَا مِنَ الْغٰبِرِيْنَ‏
فَاَنْجَيْنٰهُ எனவே, நாம் அவரை(யும்) பாதுகாத்தோம் وَ اَهْلَهٗۤ அவருடைய குடும்பத்தையும் اِلَّا தவிர امْرَاَتَهٗ அவருடைய மனைவியை قَدَّرْنٰهَا அவளை முடிவு செய்தோம் مِنَ الْغٰبِرِيْنَ‏ மிஞ்சியவர்களில்
27:57. ஆனால், நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொண்டோம்; அவருடைய மனைவியைத் தவிர (ஈமான் கொள்ளாமல்) பின்தங்கி (அழிந்து) விட்டவர்களில் ஒருத்தியாக அவளை தீர்மானித்தோம்.
27:57. ஆகவே, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம். எனினும், அவருடைய மனைவியைத் தவிர. ஏனென்றால், அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட வேண்டுமென்று (ஏற்கனவே) தீர்மானித்து விட்டோம்.
27:57. இறுதியில், லூத்தையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம்; அவருடைய மனைவியைத் தவிர! அவள் பின்தங்கியவளாகிவிட வேண்டுமென நாம் முடிவு செய்துவிட்டிருந்தோம்.
27:57. ஆகவே, அவருடைய மனைவியைத் தவிர அவரையும், அவருடைய குடும்பத்தினரையும் நாம் காப்பாற்றிக்கொண்டோம்; அவளை (வேதனை செய்யப்படுபவர்களோடு) தங்கிவிடுபவர்களில் உள்ளவளாக நாம் நிர்ணயித்துவிட்டோம்.
27:58
27:58 وَاَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًا‌ۚ فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِيْنَ‏
وَاَمْطَرْنَا பொழிவித்தோம் عَلَيْهِمْ அவர்கள் மீது مَّطَرًا‌ۚ மழை فَسَآءَ மிகக் கெட்டதாகும் مَطَرُ அந்த மழை الْمُنْذَرِيْنَ‏ எச்சரிக்கப்பட்டவர்களின்
27:58. இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மழை பொழியச் செய்தோம்; எனவே, எச்சரிக்கப்பட்ட அவர்கள் மீது பெய்த அம்மழை மிகவும் கெட்டது.  
27:58. ஆகவே, அவர்கள் மீது கல்மழையை நாம் பொழிந்தோம். பயமுறுத்தப்பட்ட அவர்கள் மீது (பொழியப்பட்ட) கல்மழை மகா கெட்டது.
27:58. மேலும், பொழியச் செய்தோம் அம்மக்களின மீது ஒரு மழையை! எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மக்களுக்கு அது மிகவும் கெட்ட மழையாய் இருந்தது!
27:58. ஆகவே. அவர்கள் மீது (கல்)மாரியை நாம் பொழியச்செய்தோம், எச்சரிக்கப்பட்டவர்களின் (கல்)மாரி மிகக் கெட்டது.
27:59
27:59 قُلِ الْحَمْدُ لِلّٰهِ وَسَلٰمٌ عَلٰى عِبَادِهِ الَّذِيْنَ اصْطَفٰىؕ ءٰۤللّٰهُ خَيْرٌ اَمَّا يُشْرِكُوْنَؕ‏
قُلِ கூறுவீராக الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே وَسَلٰمٌ இன்னும் ஸலாம் عَلٰى عِبَادِهِ அவனுடைய அடியார்களுக்கு الَّذِيْنَ எவர்கள் اصْطَفٰىؕ அவன் தேர்ந்தெடுத்தான் ءٰۤللّٰهُ ?/அல்லாஹ் خَيْرٌ சிறந்தவையா اَمَّا يُشْرِكُوْنَؕ‏ அல்லது அவர்கள் இணைவைப்பவையா?
27:59. (நபியே!) நீர் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?”  
27:59. ஆகவே, (நபியே!) கூறுவீராக! புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. தன் அடியார்களில் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களின் மீது ‘ஸலாம்' உண்டாவதாக, அல்லாஹ் மேலானவனா அல்லது அவர்கள் அவனுக்கு இணையாக்குகின்றவை மேலானவையா?''
27:59. (நபியே!) நீர் கூறும்: “புகழ் அல்லாஹ்வுக்கே உரியது! மேலும், சாந்தி உண்டாகுக, அவன் தேர்ந்தெடுத்த அவனுடைய அடியார்கள் மீது!” (இவர்களிடம் கேளும்:) “அல்லாஹ் மேலானவனா அல்லது அவனுடன் இந்த மக்கள் இணைவைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்கள் மேலானவையா?”
27:59. (ஆகவே நபியே!) “புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது! இன்னும், அவன் தேர்ந்தெடுத்தோரான அவனுடைய அடியார்கள் மீது சாந்தி உண்டாவதாக” என்று கூறுவீராக! அல்லாஹ் மேலானவனா, அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றவைகளா?
27:60
27:60 اَمَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ لَـكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً‌ ۚ فَاَنْۢبَتْنَا بِهٖ حَدَآٮِٕقَ ذَاتَ بَهْجَةٍ‌ ۚ مَا كَانَ لَـكُمْ اَنْ تُـنْۢبِتُوْا شَجَرَهَا ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ‌ ؕ بَلْ هُمْ قَوْمٌ يَّعْدِلُوْنَ ؕ‏
اَمَّنْ ?/எவன் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ பூமியையும் وَاَنْزَلَ இன்னும் அவன் இறக்கினான் لَـكُمْ உங்களுக்கு مِّنَ السَّمَآءِ மேகத்திலிருந்து مَآءً‌ ۚ மழையை فَاَنْۢبَتْنَا நாம் முளைக்க வைத்தோம் بِهٖ அதன்மூலம் حَدَآٮِٕقَ தோட்டங்களை ذَاتَ بَهْجَةٍ‌ ۚ அழகிய காட்சியுடைய مَا كَانَ முடியாது لَـكُمْ உங்களால் اَنْ تُـنْۢبِتُوْا நீங்கள் முளைக்க வைக்க شَجَرَهَا ؕ அதன் மரங்களை ءَاِلٰـهٌ (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! مَّعَ اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வுடன் بَلْ மாறாக هُمْ அவர்கள் قَوْمٌ மக்கள் يَّعْدِلُوْنَ ؕ‏ இணைவைக்கின்றனர்
27:60. அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.
27:60. வானங்களையும் பூமியையும் படைத்து, மேகத்தில் இருந்து உங்களுக்காக மழை பொழியச் செய்பவன் யார்? நாமே அதைக் கொண்டு கண்ணைக் கவரும் அழகான தோட்டங்களையும் உற்பத்தி செய்கிறோம். (நம் உதவியின்றி) அதன் மரங்களை முளைக்கவைக்க உங்களால் முடியாது. ஆகவே, அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இவ்வாறிருந்தும்) இவர்கள் (தங்கள் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்குச்) சமமாக்குகின்றனர்.
27:60. வானங்களையும், பூமியையும் படைத்தவனும் மேலும், உங்களுக்காக வானத்திலிருந்து மழையைப் பொழிய வைத்தவனும் பிறகு, அதன் மூலம் அழகான தோட்டங்களை வளரச் செய்தவனும் யார்? அவற்றின் மரங்களை முளைக்கச் செய்வதற்கு உங்களால் இயலாதிருந்ததே! அல்லாஹ்வுடன் வேறேதாவது கடவுளும் (இப்பணிகளில் பங்கு கொண்டு) இருக்கின்றாரா? (இல்லை!) மாறாக, இதே மக்கள்தாம் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்து சென்று கொண்டிருக்கின்றார்கள்.
27:60. (உங்களுடைய தெய்வங்கள் சிறந்தவையா?) அல்லது வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து உங்களுக்காக தண்ணீரை (மழையை)யும் இறக்கி வைத்தவ(ன் சிறந்தவ)னா? (பின்னர்) நாமே அதனைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம்; (நாம் மழையை இறக்காவிட்டால்) அதன் மரங்களை முளைக்கச் செய்யவே உங்களால் முடியாது; ஆகவே, அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கின்றானா? இல்லை; இவர்கள் (தங்கள் தெய்வங்களாக கற்பனை செய்தவற்றை அல்லாஹ்வுக்கு) சமமாக்குகின்ற கூட்டத்தினராக இருக்கின்றனர்.
27:61
27:61 اَمَّنْ جَعَلَ الْاَرْضَ قَرَارًا وَّجَعَلَ خِلٰلَهَاۤ اَنْهٰرًا وَّجَعَلَ لَهَا رَوَاسِىَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا‌ ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ‌ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ ؕ‏
اَمَّنْ ?/எவன் جَعَلَ ஆக்கினான் الْاَرْضَ பூமியை قَرَارًا நிலையானதாக وَّجَعَلَ இன்னும் ஏற்படுத்தினான் خِلٰلَهَاۤ அதற்கிடையில் اَنْهٰرًا ஆறுகளை وَّجَعَلَ இன்னும் படைத்தான் لَهَا அதற்காக رَوَاسِىَ பெரும் மலைகளை وَجَعَلَ இன்னும் அமைத்தான் بَيْنَ இடையில் الْبَحْرَيْنِ இரு கடல்களுக்கு حَاجِزًا‌ ؕ தடுப்பை ءَاِلٰـهٌ (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! مَّعَ اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வுடன் بَلْ اَكْثَرُهُمْ மாறாக/அதிகமானவர்கள்/அவர்களில் لَا يَعْلَمُوْنَ ؕ‏ அறியமாட்டார்கள்
27:61. இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
27:61. பூமியை ஓர் உறுதியான தங்குமிடமாக அமைத்து, அதன் மத்தியில் ஆறுகளையும் அ(தை உறுதிப்படுத்துவ)தற்கு மலைகளையும் அமைத்தவன் யார்? இரு கடல்களுக்கிடையில் தடுப்பை ஏற்படுத்தியவன் யார்? (இவற்றைச் செய்த) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இல்லவே இல்லை.) அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை.
27:61. மேலும், பூமியைத் தங்குமிடமாக்கியவனும் அதனிடையே ஆறுகளை ஓடச் செய்தவனும் அதற்கு (மலைகளெனும்) முளைகளை அமைத்தவனும், மேலும், இரு கடல்களின் ஜலசந்திகளுக்கிடையில் தடுப்பை ஏற்படுத்தியவனும் யார்? அல்லாஹ்வுடன் வேறேதாவது கடவுளும் (இப்பணிகளில் பங்கு கொண்டு) இருக்கின்றாரா? இல்லவே இல்லை! மாறாக, இவர்களில் பெரும்பாலோர் அறிவற்றவர்களாய் இருக்கின்றார்கள்.
27:61. (உங்களுடைய தெய்வங்கள் சிறந்தவையா?) அல்லது பூமியை உறுதியானதாக்கி அதனிடையே ஆறுகளையும் உண்டாக்கி, அதற்காக (அதன் மீது) கனமான மலைகளையும் அமைத்து, இரு கடல்களுக்கிடையில் தடுப்பையும் ஏற்படுத்தியவ(ன் சிறந்தவ)னா? (இவைகளைச் செய்த) அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கின்றனா? இல்லை! அவர்களில் பெரும்பாலோர் இதுபற்றி அறியமாட்டார்கள்.
27:62
27:62 اَمَّنْ يُّجِيْبُ الْمُضْطَرَّ اِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوْٓءَ وَيَجْعَلُكُمْ خُلَفَآءَ الْاَرْضِ‌ ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ ‌ؕ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ ؕ‏
اَمَّنْ அல்லது/எவன் يُّجِيْبُ பதிலளிப்பான் الْمُضْطَرَّ சிரமத்தில் இருப்பவருக்கு اِذَا دَعَاهُ அவர் அவனை அழைக்கும்போது وَيَكْشِفُ மேலும், நீக்குகின்றான் السُّوْٓءَ துன்பத்தை وَيَجْعَلُكُمْ இன்னும் உங்களை ஆக்குகின்றான் خُلَفَآءَ பிரதிநிதிகளாக الْاَرْضِ‌ ؕ இப்பூமியின் ءَاِلٰـهٌ (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! مَّعَ اللّٰهِ ؕ அல்லாஹ்வுடன் قَلِيْلًا مَّا மிகக் குறைவாகவே تَذَكَّرُوْنَ ؕ‏ நீங்கள் நல்லுணர்வு பெறுகிறீர்கள்
27:62. கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.
27:62. (சிரமத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்பவர்கள் அபயமிட்டழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறி, அவர்களுடைய சிரமங்களை நீக்குபவன் யார்? பூமியில் உங்களை பிரதிநிதிகளாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இல்லவே இல்லை.) உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் வெகு சொற்பமே.
27:62. துயரங்களுக்கு ஆளானவர் இறைஞ்சும்போது அவருடைய இறைஞ்சுதலைக் கேட்டு பதிலளிப்பவன் யார்? மேலும், அவருடைய துயரத்தைக் களைபவன் யார்? மேலும், உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்த ஒரு கடவுளேனும் (இப்பணிகளைச் செய்யக்கூடியதாய்) உள்ளதா? நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள்!
27:62. (உங்களுடைய தெய்வங்கள் சிறந்தவையா?) அல்லது கடுந்துன்பதிற்குள்ளாக்கப் பட்டவனுக்கு அவனை இவன் அழைத்தல், (அவனுக்குப்) பதிலளித்து, மேலும், (அவனுடைய) அத்துன்பத்தை நீக்கி, பூமியில் உங்களை(த் தன்னுடைய) பிரதிநிதிகளாகவும் ஆக்கியவ(ன் சிறந்தவ)னா? (இத்தகைய) அல்லாஹ்வுடன், வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கின்றானா? (இல்லை!) நீங்கள் சிந்திப்பது மிகக் குறைவாகும்.
27:63
27:63 اَمَّنْ يَّهْدِيْكُمْ فِىْ ظُلُمٰتِ الْبَرِّ وَ الْبَحْرِ وَمَنْ يُّرْسِلُ الرِّيٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ‌ؕ تَعٰلَى اللّٰهُ عَمَّا يُشْرِكُوْنَؕ‏
اَمَّنْ ?/எவன் يَّهْدِيْكُمْ உங்களுக்கு வழிகாட்டுகிறான் فِىْ ظُلُمٰتِ இருள்களில் الْبَرِّ தரையின் وَ الْبَحْرِ மற்றும் கடலின் وَمَنْ இன்னும் எவன் يُّرْسِلُ அனுப்புகிறானோ الرِّيٰحَ காற்றுகளை بُشْرًۢا சுபச் செய்தியாக بَيْنَ يَدَىْ முன்னர் رَحْمَتِهٖؕ தனது அருளுக்கு ءَاِلٰـهٌ (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! مَّعَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடன் تَعٰلَى மிக்க உயர்ந்தவன் اللّٰهُ அல்லாஹ் عَمَّا يُشْرِكُوْنَؕ‏ அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு
27:63. கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய “ரஹ்மத்” என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.
27:63. கடலிலோ அல்லது கரையிலோ இருள்களில் (சிக்கிய) உங்களுக்கு வழி காண்பிப்பவன் யார்? அவனுடைய அருள் மழைக்கு முன்னதாக (குளிர்ந்த) காற்றுகளை நற்செய்தியாக அனுப்பிவைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இல்லவே இல்லை.) அவர்கள் இணை வைப்பதை விட்டு அவன் மிக்க உயர்ந்தவன்.
27:63. தரை மற்றும் கடலின் இருள்களில் உங்களுக்கு வழிகாட்டுபவன் யார்? மேலும், தன்னுடைய அருளுக்கு முன்னர் காற்றை நற்செய்தியாக அனுப்புகின்றவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளேனும் (இப்பணியைச் செய்துகொண்டு) இருக்கின்றதா? அல்லாஹ் மிக உயர்ந்தவனும் மேலானவனும் ஆவான்; இவர்கள் செய்கின்ற இணைவைப்புச் செயல்களை விட்டு!
27:63. (உங்களுடைய தெய்வங்கள் சிறந்தவையா?) அல்லது கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் உங்களுக்கு நேர்வழி காண்பித்து. (மழையெனும்) அவனுடைய அருள் மாரிக்கு முன்னதாகக் காற்றுகளையும் நன்மாராயமாக அனுப்பி வைப்பவ(ன் சிறந்தவ)னா? (இத்தகுதிகளுடைய) அல்லாஹ்வுடன் வேறு வணக்கதிற்குரியவன் இருக்கின்றானா? (இல்லை!) அவர்கள் இணை வைப்பவைகளை விட்டும் அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்.
27:64
27:64 اَمَّنْ يَّبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ وَمَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ‌ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ‌ؕ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
اَمَّنْ ?/எவன் يَّبْدَؤُا முதலில் உருவாக்குகின்றான் الْخَـلْقَ படைப்புகளை ثُمَّ பிறகு يُعِيْدُهٗ அவற்றை மீண்டும் உருவாக்குகின்றான் وَمَنْ இன்னும் எவன் يَّرْزُقُكُمْ உங்களுக்கு உணவளிக்கின்றான் مِّنَ السَّمَآءِ மேகத்திலிருந்தும் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமியிலிருந்தும் ءَاِلٰـهٌ ஒரு கடவுளா?! مَّعَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடன் قُلْ கூறுவீராக هَاتُوْا கொண்டு வாருங்கள் بُرْهَانَكُمْ உங்கள் ஆதாரத்தை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
27:64. முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.”
27:64. ஆரம்பத்தில் படைப்புகளை உற்பத்தி செய்தவன் யார்? (அவ்வாறே பின்னும்) பின்னும் உற்பத்தி செய்து கொண்டிருப்பவன் யார்? மேகத்தில் இருந்து (மழையை இறக்கியும்) பூமியில் இருந்து (தானியங்களை முளைக்கச் செய்தும்) உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? ‘‘ நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இதற்கு) உங்கள் அத்தாட்சிகளைக் கொண்டுவாருங்கள்'' என்று (நபியே!) கூறுவீராக.
27:64. முதன் முறையாய்ப் படைக்கின்றவனும் பிறகு, மீண்டும் படைக்கப் போகின்றவனும் யார்? மேலும், வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்த ஒரு கடவுளேனும் (இப்பணியில் பங்கு கொண்டு) உள்ளதா? கூறுவீராக: “கொண்டு வாருங்கள் உங்கள் அத்தாட்சியை, நீங்கள் உண்மையாளர்களாய் இருப்பின்!”
27:64. (உங்களுடைய தெய்வங்கள் சிறந்தவையா?) அல்லது ஆரம்பத்தில் (யாதொரு முன்மாதிரியும் இன்றியே) படைப்பைத்துவங்கி, பின்னர் அதனை மீட்டுபவனும் வானத்திலிருந்தும், பூமியிலிருந்து உங்களுக்கு உணவளிப்பவ(ன் சிறந்தவ)னா? அல்லாஹ்வுடன், வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கின்றானா? “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (இதற்கு) உங்களுடைய அத்தாட்சியைக் கொண்டுவாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
27:65
27:65 قُلْ لَّا يَعْلَمُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَيْبَ اِلَّا اللّٰهُ‌ؕ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ‏
قُلْ கூறுவீராக لَّا يَعْلَمُ அறியமாட்டார் مَنْ எவரும் فِى السَّمٰوٰتِ வானங்களிலும் وَالْاَرْضِ இன்னும் பூமியிலும் الْغَيْبَ மறைவானவற்றை اِلَّا தவிர اللّٰهُ‌ؕ அல்லாஹ்வை وَمَا يَشْعُرُوْنَ இன்னும் உணரமாட்டார்கள் اَيَّانَ எப்போது يُبْعَثُوْنَ‏ தாங்கள் எழுப்பப்படுவோம் என்பதை
27:65. (இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.”
27:65. (மேலும்) நீர் கூறுவீராக! ‘‘ வானங்களிலோ பூமியிலோ மறைந்திருப்பவற்றை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார். (மரணித்தவர்கள்) எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் இவர்கள் அறிய மாட்டார்கள்.
27:65. இவர்களிடம் கூறும்: “அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறியமாட்டார். மேலும், (உங்களுடைய கடவுளர்களான) அவர்கள் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதைக்கூட அறிவதில்லையே!”
27:65. அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் (எவரும்) மறைந்திருப்பவைகளை அறியமாட்டார்கள், மேலும், அவர்கள் எப்பொழுது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் உணர மாட்டார்கள்” என்று (நபியே) நீர் கூறுவீராக!
27:66
27:66 بَلِ ادّٰرَكَ عِلْمُهُمْ فِى الْاٰخِرَةِ‌ بَلْ هُمْ فِىْ شَكٍّ مِّنْهَا  بَلْ هُمْ مِّنْهَا عَمُوْنَ‏
بَلِ ادّٰرَكَ அல்லது மறைந்து விட்டதா? عِلْمُهُمْ அவர்களது அறிவு فِى الْاٰخِرَةِ‌ மறுமை விஷயத்தில் بَلْ மாறாக هُمْ அவர்கள் فِىْ شَكٍّ சந்தேகத்தில் இருக்கின்றனர் مِّنْهَا  அதில் بَلْ மாறாக هُمْ அவர்கள் مِّنْهَا அதில் عَمُوْنَ‏ குருடர்கள் ஆவர்
27:66. ஆனால் மறுமையைப் பற்றிய அவர்களுடைய அறிவோ மிகக் கீழ்நிலையிலே உள்ளது; அவர்கள் அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே இருக்கின்றனர்; அது மட்டுமா? அதைப்பற்றி அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர்.  
27:66. எனினும், மறுமையைப் பற்றிய இவர்களுடைய ஞானம் முற்றிலும் சூனியமாகி விட்டது. மாறாக, (அவ்விஷயத்தில்) அவர்கள் பெரும் சந்தேகத்தில்தான் இருக்கின்றனர். அதுமட்டுமா? அவர்கள் (அறிந்திருந்தும்) அதைப் புரியாத குருடர்களாகி விட்டனர்.
27:66. உண்மை யாதெனில், மறுமையைப் பற்றிய அறிவு இம் மக்களை விட்டு மறைந்தே போய்விட்டது. இல்லை, இவர்கள் அதைப் பற்றிய சந்தேகத்தில் உழல்கின்றார்கள்! இன்னும் சொல்வதானால், மறுமையைப் பற்றி இவர்கள் குருடர்களாயிருக்கின்றார்கள்.
27:66. எனினும், மறுமையைப் பற்றிய இவர்களுடைய அறிவோ (களைப்புற்றுக் கீழ் நிலைய அடைந்து) முடிவுபெற்றுவிட்டது, மாறாக அதுபற்றி இவர்கள் (பெரும்) சந்தேகத்தில் இருக்கின்றனர், இல்லை! அதைப்பற்றி இவர்கள் குருடர்களாகவே இருக்கிறார்கள்.
27:67
27:67 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْۤا ءَاِذَا كُنَّا تُرٰبًا وَّاٰبَآؤُنَاۤ اَٮِٕنَّا لَمُخْرَجُوْنَ‏
وَقَالَ இன்னும் கூறினர் الَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரித்தவர்கள் ءَاِذَا كُنَّا நாங்கள் மாறிவிட்டாலும் تُرٰبًا மண்ணாக وَّاٰبَآؤُنَاۤ எங்கள் மூதாதைகளும் اَٮِٕنَّا لَمُخْرَجُوْنَ‏ நிச்சயமாக நாங்கள் வெளியேற்றப்படுவோமா?
27:67. மேலும், நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்: “நாங்களும் எங்கள் மூதாதையரும் (மரித்து) மண்ணாகிப் போன பின்னர், மீண்டும் வெளியே கொண்டு வரப்படுவோமா?
27:67. ‘‘ (மரணித்து) உக்கி மண்ணாகிப் போனதன் பின்னர் நாங்களும், எங்கள் மூதாதைகளும் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோமா?'' என்று இந்நிராகரிப்பவர்கள் கேட்கின்றனர்.
27:67. மேலும், இந்நிராகரிப்போர் கூறுகின்றார்கள்: “நாங்களும் எங்களுடைய மூதாதையர்களும் மண்ணாகிப் போய்விட்டால் நாங்கள் உண்மையிலேயே மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவோமா?
27:67. “நாங்களும், எங்களுடைய மூதாதையர்களும் மண்ணாகிவிட்டால் நிச்சயமாக (மீண்டும் உயிர் பெற்று பூமியிலிருந்து) நாங்கள் வெளியேற்றப்படுவோர்களா?” என்று நிராகரிப்போர் கூறுகின்றனர்.
27:68
27:68 لَـقَدْ وُعِدْنَا هٰذَا نَحْنُ وَاٰبَآؤُنَا مِنْ قَبْلُۙ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ‏
لَـقَدْ திட்டவட்டமாக وُعِدْنَا நாங்கள் வாக்களிக்கப்பட்டோம் هٰذَا இதை نَحْنُ நாங்களும் وَاٰبَآؤُنَا எங்கள் மூதாதைகளும் مِنْ قَبْلُۙ இதற்கு முன்னர் اِنْ هٰذَاۤ இது (வேறு) இல்லை اِلَّاۤ அன்றி اَسَاطِيْرُ கட்டுக் கதைகள் الْاَوَّلِيْنَ‏ முன்னோர்களின்
27:68. நிச்சயமாக, இ(ந்த அச்சுறுத்தலான)து எங்களுக்கும் எங்களுக்கு முன் சென்று போன எங்கள் மூதாதையருக்கும் வாக்களிக்கப்பட்டே வருகிறது; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” (என்றுங் கூறுகின்றனர்).
27:68. ‘‘ நாங்களும் இதற்கு முன்னர் இருந்த எங்கள் மூதாதைகளும் இவ்வாறே பயமுறுத்தப்பட்டோம். இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை'' (என்றும் கூறுகின்றனர்.)
27:68. இந்த விஷயங்கள் பற்றி எங்களுக்கு (அதிகம்) எச்சரிக்கப்பட்டுள்ளது; முன்னர் எங்கள் மூதாதையர்களும் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர். உண்மையில் இவை முன்னோர்களின் காலத்திலிருந்து கேள்விப்பட்டு வருகின்ற வெறும் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை!”
27:68. “நிச்சயமாக இதுபற்றி நாங்களும், இதற்கு முன்னர் எங்கள் மூதாதையர்களும் வாக்களிக்கப்பட்டிருந்தோம், இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகளே தவிர (வேறு) இல்லை” (என்றும் கூறுகின்றனர்).
27:69
27:69 قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِيْنَ‏
قُلْ கூறுவீராக! سِيْرُوْا செல்வீர்களாக! فِى الْاَرْضِ பூமியில் فَانْظُرُوْا பார்ப்பீர்களாக! كَيْفَ எப்படி என்று كَانَ இருந்தது عَاقِبَةُ முடிவு الْمُجْرِمِيْنَ‏ குற்றவாளிகளின்
27:69. “பூமியில் பிராயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக.
27:69. ஆகவே ‘‘ பூமியில் சுற்றித் திரிந்து (உங்களைப் போன்று இருந்த) குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கவனித்துப் பாருங்கள்'' (என்று நபியே!) கூறுவீராக.
27:69. கூறுவீராக: “சற்று பூமியில் சுற்றித் திரிந்து குற்றவாளிகளின் கதி என்னவாயிற்று என்பதைப் பாருங்கள்.”
27:69. (ஆகவே,) “பூமியில் பிரயாணம் செய்து குற்றவாளிகளின் முடிவு எப்படி இருந்தது என்பதை (கவனித்து)ப் பாருங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக!”
27:70
27:70 وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُنْ فِىْ ضَيْقٍ مِّمَّا يَمْكُرُوْنَ‏
وَلَا تَحْزَنْ இன்னும் நீர் துக்கப்படாதீர்! عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا تَكُنْ இன்னும் நீர் ஆகிவிடாதீர்! فِىْ ضَيْقٍ நெருக்கடியில் مِّمَّا يَمْكُرُوْنَ‏ அவர்கள் சூழ்ச்சி செய்கின்ற காரணத்தால்
27:70. அவர்களுக்காக நீர் கவலைப்படாதீர்; மேலும், அவர்கள் செய்யும் சூழ்ச்சியைப் பற்றியும் நீர் சங்கடத்தில் ஆக வேண்டாம்.
27:70. (நபியே!) அவர்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர். அவர்களுடைய சூழ்ச்சிகளைப் பற்றியும் நீர் மனமொடிந்து விடாதீர்.
27:70. (நபியே!) இவர்களின் நிலை குறித்து வருந்தாதீர். இவர்கள் செய்யும் சூழ்ச்சிகளால் நீர் மனக்கஷ்டமும் அடையாதீர்!
27:70. மேலும், (நபியே!) அவர்களுக்காக நீர் கவலை கொள்ளாதீர், அவர்கள் செய்யும் சூழ்ச்சி பற்றி நீர் நெருக்கடியில் ஆகிவிடவும் வேண்டாம்.
27:71
27:71 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَيَقُوْلُوْنَ இன்னும் அவர்கள் கூறுகின்றனர் مَتٰى எப்போது هٰذَا இந்த الْوَعْدُ வாக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
27:71. இன்னும்: “நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்?)” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
27:71. (நம்பிக்கையாளர்களை நோக்கி) ‘‘ மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் நீங்கள் பயமுறுத்தும் வேதனை எப்பொழுது வரும்?'' என்று (நிராகரிப்பாளர்கள்) கேட்கிறார்கள்.
27:71. இவர்கள் கேட்கின்றனர்: “நீங்கள் உண்மையாளர்களாயின் இந்த எச்சரிக்கை எப்போது நிறைவேறும்?”
27:71. இன்னும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (வேதனை வருமென்று) இந்த வாக்கு எப்பொழுது வரும்?” என்று அவர்கள் கேட்கின்றார்கள்.
27:72
27:72 قُلْ عَسٰٓى اَنْ يَّكُوْنَ رَدِفَ لَـكُمْ بَعْضُ الَّذِىْ تَسْتَعْجِلُوْنَ‏
قُلْ கூறுவீராக عَسٰٓى اَنْ يَّكُوْنَ வரக்கூடும் رَدِفَ சமீபமாக لَـكُمْ உங்களுக்கு بَعْضُ சில الَّذِىْ எவை تَسْتَعْجِلُوْنَ‏ அவசரப்படுகின்றீர்கள்
27:72. “நீங்கள் அவசரப்படுபவற்றில் சில இப்பொழுதே உங்களுக்கு வந்து சேரக்கூடும்” என்று (நபியே!) நீர் கூறிவிடுவீராக.
27:72. அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘ நீங்கள் அவசரப்படுபவற்றில் சில இப்பொழுதே உங்களைப் பின் தொடரவும் கூடும்.''
27:72. நீர் கூறும்: “எந்த ஒரு தண்டனைக்காக நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்களோ அதன் ஒரு பகுதி உங்களுக்கு நெருக்கமாக வந்து விட்டிருந்தாலும் அதில் வியப்பொன்றுமில்லை!”
27:72. (அதற்கு) ”நீங்கள் அவசரப்படுகின்றீர்களே அத்தகையவை சில (இப்பொழுதே) உங்களை வந்தடையக் கூடும் என்று (நபியே!) நீர் கூறுவீராக!
27:73
27:73 وَاِنَّ رَبَّكَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَشْكُرُوْنَ‏
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ உமது இறைவன் لَذُوْ فَضْلٍ அருளுடையவன் عَلَى النَّاسِ மக்கள் மீது وَلٰكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் لَا يَشْكُرُوْنَ‏ நன்றி அறிய மாட்டார்கள்
27:73. இன்னும் நிச்சயமாக உம் இறைவன் மனிதர்கள் மீது மிக்க கிருபையுடையவனாகவே இருக்கின்றான்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
27:73. ஆயினும், நிச்சயமாக உமது இறைவன் மனிதர்கள் மீது மிக்க அருளையுடையவனாக இருக்கிறான். (ஆதலால், தண்டனையை இதுவரை தாமதப்படுத்தி இருக்கிறான்.) எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதற்கு) நன்றி செலுத்துவதில்லை.
27:73. உண்மையில் உம் அதிபதி மக்களின் மீது பெரிதும் அருள் புரிபவனாக இருக்கின்றான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
27:73. இன்னும், நிச்சயமாக உமதிரட்சகன் மனிதர்களின் மீது பேரருளுடையவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
27:74
27:74 وَاِنَّ رَبَّكَ لَيَـعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا يُعْلِنُوْنَ‏
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ உமது இறைவன் لَيَـعْلَمُ நன்கறிவான் مَا எவற்றை تُكِنُّ மறைக்கின்றன صُدُوْرُ உள்ளங்கள் هُمْ அவர்களது وَمَا இன்னும் எவற்றை يُعْلِنُوْنَ‏ வெளிப்படுத்துகின்றனர்
27:74. மேலும்: அவர்களின் இருதயங்கள் மறைத்து வைத்திருப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான்.
27:74. (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் அவர்கள் தங்கள் உள்ளங்களில் மறைத்திருப்பதையும், (அதற்கு மாறாக) அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான்.
27:74. அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்திருக்கின்றவற்றையும் அவை வெளிப்படுத்துகின்றவற்றையும் திண்ணமாக, உம் இறைவன் நன்கறிகின்றான்.
27:74. இன்னும், (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன், அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்துவைத்திருகின்றதையும், (அதற்கு மாறாக) அவர்கள் வெளிப்படுத்துகின்றதையும், நன்கறிவான்.
27:75
27:75 وَمَا مِنْ غَآٮِٕبَةٍ فِى السَّمَآءِ وَالْاَرْضِ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏
وَمَا இல்லை مِنْ غَآٮِٕبَةٍ மறைந்த எதுவும் فِى السَّمَآءِ வானத்திலும் وَالْاَرْضِ இன்னும் பூமியிலும் اِلَّا தவிர فِىْ كِتٰبٍ பதிவேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவான
27:75. வானத்திலும், பூமியிலும் மறைந்துள்ளவற்றில் நின்றும் எதுவும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான குறிப்பேட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை.
27:75. வானத்திலோ பூமியிலோ மறைவாக இருக்கும் எதுவுமே (‘லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) அவனுடைய தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதியப்படாமலில்லை.
27:75. வானத்திலும் பூமியிலும் மறைந்துள்ள எந்த ஒரு பொருளும் ஒரு தெளிவான பதிவேட்டில் எழுதப்படாமல் இல்லை.
27:75. வானத்தில் மற்றும் பூமியில் மறைவாக இருப்பதிலிருந்து எதுவும், (“லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும் அவனுடைய) தெளிவான புத்தகத்தில் இருந்தே தவிர இல்லை.
27:76
27:76 اِنَّ هٰذَا الْقُرْاٰنَ يَقُصُّ عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَكْثَرَ الَّذِىْ هُمْ فِيْهِ يَخْتَلِفُوْنَ‏
اِنَّ நிச்சயமாக هٰذَا இந்த الْقُرْاٰنَ குர்ஆன் يَقُصُّ விவரிக்கிறது عَلٰى மீது بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்கள் اَكْثَرَ பல விஷயங்களை الَّذِىْ எவை هُمْ அவர்கள் فِيْهِ அதில் يَخْتَلِفُوْنَ‏ முரண்படுகின்றனர்
27:76. நிச்சயமாக இந்த குர்ஆன் பனூ இஸ்ராயீல்களுக்கு அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததில் பெரும்பாலானதை விவரித்துக் கூறுகிறது.
27:76. நிச்சயமாக இந்த குர்ஆன், இஸ்ராயீலின் சந்ததிகள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ அவற்றில் பெரும்பாலானவற்றை அவர்களுக்கு விவரித்துக் கூறுகிறது.
27:76. உண்மை இதுவே: இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள பெரும்பாலான விஷயங்களின் உண்மை நிலையை அவர்களுக்கு இந்தக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது!
27:76. நிச்சயமாக இந்தக் குர்ஆன், இஸ்ராயீலின் மக்களுக்கு எதில் அவர்கள் வேறுபட்டு(த் தர்கித்து)க் கொண்டிருக்கிறார்களோ அதில் பெரும்பாலானவற்றை விவரித்துக் கூறுகிறது.
27:77
27:77 وَاِنَّهٗ لَهُدًى وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِيْنَ‏
وَاِنَّهٗ நிச்சயமாக இது لَهُدًى நேர்வழியும் وَّرَحْمَةٌ கருணையும் لِّلْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
27:77. மேலும்: நிச்சயமாக இது முஃமின்களுக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாக (நல்லருளாக)வும் இருக்கிறது.
27:77. ஆகவே, அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு இது நேர்வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கிறது.
27:77. மேலும், அது இறைநம்பிக்கையாளர்களுக்கு நேர்வழி காட்டியாகவும், கருணையாகவும் இருக்கின்றது.
27:77. இன்னும் நிச்சயமாக இ(ந்தக்குர் ஆனான)து, விசுவாசங்கொண்டோர்களுக்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கின்றது.
27:78
27:78 اِنَّ رَبَّكَ يَقْضِىْ بَيْنَهُمْ بِحُكْمِهٖ‌ۚ وَهُوَ الْعَزِيْزُ الْعَلِيْمُ ۙ‌ۚ‏
اِنَّ நிச்சயமாக رَبَّكَ உமது இறைவன் يَقْضِىْ தீர்ப்பளிப்பான் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் بِحُكْمِهٖ‌ۚ தனது சட்டத்தின் படி وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْعَلِيْمُ ۙ‌ۚ‏ நன்கறிந்தவன்
27:78. நிச்சயமாக உம் இறைவன் (இறுதியில்) தன் கட்டளையைக் கொண்டு அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான் - மேலும், அவன்தான் மிகைத்தவன்; நன்கறிந்தவன்.
27:78. நிச்சயமாக உமது இறைவன் தன் உத்தரவைக் கொண்டு (இந்த குர்ஆன் மூலம்) அவர்களுக்கிடையில் (ஏற்பட்ட விவகாரங்களைப் பற்றி) தீர்ப்பளிக்கிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத்தையும்) அறிந்தவனும் ஆவான்.
27:78. (இதேபோன்று) திண்ணமாக, உம் இறைவன் இந்த மக்களிடையேயும் தன்னுடைய கட்டளையால் தீர்ப்பு வழங்குவான். அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
27:78. நிச்சயமாக உமதிரட்சகன், தன் தீர்ப்பைக் கொண்டு அவர்களுக்கிடையில் (மறுமையில்) தீர்ப்பளிப்பான், அவன்தான் (யாவரையும்) மிகைத்தவன் (யாவற்றையும்) நன்கறிகிறவன்.
27:79
27:79 فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّكَ عَلَى الْحَـقِّ الْمُبِيْنِ‏
فَتَوَكَّلْ ஆகவே, நம்பிக்கை வைப்பீராக! عَلَى மீது اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் اِنَّكَ நிச்சயமாக நீர் عَلَى மீது الْحَـقِّ சத்தியத்தின் الْمُبِيْنِ‏ தெளிவான
27:79. எனவே, (நபியே!) அல்லாஹ்வின் மீதே (முற்றிலும்) நம்பிக்கை வைப்பீராக நிச்சயமாக நீர் தெளிவான உண்மையின் மீது இருக்கின்றீர்.
27:79. ஆகவே, (நபியே!) நீர் அல்லாஹ்வையே நம்புவீராக. நிச்சயமாக நீர் தெளிவான உண்மையின் மீதே இருக்கிறீர்.
27:79. எனவே (நபியே!) அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப் பீராக! திண்ணமாக, நீர் தெளிவான உண்மையில் இருக்கின்றீர்!
27:79. ஆகவே (நபியே! உமது காரியங்களை அவனிடமே ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீது நீர் நம்பிக்கை வைப்பீராக! நிச்சயமாக நீர் தெளிவான உண்மையின் மீது இருக்கின்றீர்.
27:80
27:80 اِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ‏
اِنَّكَ நிச்சயமாக நீர் لَا تُسْمِعُ நீர் செவியுறச் செய்யமுடியாது الْمَوْتٰى மரணித்தவர்களை وَلَا تُسْمِعُ இன்னும் நீர் செவியுறச் செய்ய முடியாது الصُّمَّ செவிடர்களுக்கும் الدُّعَآءَ அழைப்பை اِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ‏ அவர்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பினால்
27:80. நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது; - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது - (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது.
27:80. (நபியே!) மரணித்தவர்களை கேட்கவைக்க நிச்சயமாக உம்மால் முடியாது. (அவ்வாறே உமக்குப்) புறங்காட்டிச் செல்லும் செவிடர்களை, (நீர்) அழைக்கும் (உமது) சப்தத்தைக் கேட்க வைக்கவும் உம்மால் முடியாது.
27:80. இறந்தவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது. புறங்காட்டியோடும் செவிடர்களுக்கும் (உம்முடைய) அழைப்பை எடுத்துரைக்க முடியாது.
27:80. (நபியே!) நிச்சயமாக நீர் மரணித்தோரைச் செவியேற்கச் செய்யமாட்டீர், (அது உம்மால் முடியாது) மேலும் செவிடர்களுக்கும்_ அவர்கள் புறங்காட்டியவர்களாக திரும்பிச்சென்றால் (உம்முடைய) அழைப்பை நீர் செவியேற்கச் செய்யமாட்டீர்.
27:81
27:81 وَمَاۤ اَنْتَ بِهٰدِى الْعُمْىِ عَنْ ضَلٰلَتِهِمْ‌ؕ اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ يُّؤْمِنُ بِاٰيٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ‏
وَمَاۤ اَنْتَ நீர் முடியாது بِهٰدِى நேர்வழிபடுத்த الْعُمْىِ குருடர்களை عَنْ ضَلٰلَتِهِمْ‌ؕ அவர்களின் வழிகேட்டிலிருந்து اِنْ تُسْمِعُ நீர் செவியுறச் செய்ய முடியாது اِلَّا தவிர مَنْ எவர் يُّؤْمِنُ நம்பிக்கை கொள்வார் بِاٰيٰتِنَا நமது வசனங்களை فَهُمْ அவர்கள்தான் مُّسْلِمُوْنَ‏ முற்றிலும் பணிந்து நடப்பவர்கள்
27:81. இன்னும்: நீர் குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து (அகற்றி) நேர் வழியில் செலுத்த முடியாது - எவர்கள் நம் வசனங்களை நம்புகிறார்களோ அவர்களைத் தான் (அவற்றைக்) கேட்கும்படி நீர் செய்ய முடியும்; ஏனெனில் அவர்கள் (அவற்றை) முற்றிலும் ஏற்றுக்கொள்வர்.
27:81. குருடர்களை, அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேரான வழிக்குக் கொண்டுவரவும் உம்மால் முடியாது. எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொண்டு முற்றிலும் நமக்கு பணிந்து நடக்கிறார்களோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு நீர் (நம் வசனங்களைக்) கேட்க வைக்க முடியாது.
27:81. குருடர்களை வழிகேட்டிலிருந்து மீட்டு நேர்வழியில் சேர்த்திடவும் உம்மால் முடியாது! எவர்கள் நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கின்றார்களோ, மேலும், கீழ்ப்படிபவர்களாயும் விளங்குகின்றார்களோ அவர்களையே உம்மால் செவியேற்கச் செய்ய முடியும்.
27:81. குருடர்களுக்கு_ அவர்களுடைய வழிகேட்டை விட்டும் (நீக்கி) நேர்வழி காட்டுபவராகவும் நீர் இல்லை, நம்முடைய வசனங்களைக் கொண்டு விசுவாசம் கொள்கிறவரைத்தவிர (வேறெவரையும்) நீர் (அவற்றைச்) செவியுறச் செய்ய முடியாது. அவர்கள் (முற்றிலும்) கீழ்படிந்து நடப்பவர்கள்.
27:82
27:82 وَ اِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ اَخْرَجْنَا لَهُمْ دَآبَّةً مِّنَ الْاَرْضِ تُكَلِّمُهُمْۙ اَنَّ النَّاسَ كَانُوْا بِاٰيٰتِنَا لَا يُوْقِنُوْنَ‏
وَ اِذَا وَقَعَ நிகழ்ந்து விட்டால் الْقَوْلُ வாக்கு عَلَيْهِمْ அவர்கள் மீது اَخْرَجْنَا நாம் வெளிப்படுத்துவோம் لَهُمْ அவர்களுக்கு دَآبَّةً ஒரு மிருகத்தை مِّنَ الْاَرْضِ பூமியிலிருந்து تُكَلِّمُهُمْۙ அது பேசும்/அவர்களிடம் اَنَّ النَّاسَ நிச்சயமாக மக்கள் كَانُوْا இருந்தனர் بِاٰيٰتِنَا நமது அத்தாட்சிகளைக் கொண்டு لَا يُوْقِنُوْنَ‏ உறுதி கொள்ளாதவர்களாக
27:82. அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
27:82. இறுதிநாள் அவர்களை நெருங்கிய சமயத்தில், அவர்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு கால்நடையை நாம் வெளிப்படுத்துவோம். அது எந்தெந்த மனிதர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
27:82. மேலும், அவர்கள் மீது நம்முடைய ஆணை நிறைவேறும் நேரம் வந்துவிட்டால் நாம் அவர்களுக்கு பூமியிலிருந்து ஒரு மிருகத்தை வெளிப்படுத்துவோம். மக்கள் நம்முடைய வசனங்கள் மீது உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருந்தார்கள் என்று அது அவர்களிடம் எடுத்துக்கூறும்.
27:82. (இறுதி நாளைப் பற்றி நம்முடைய) கூற்று அவர்கள் மீது நிகழ்ந்தும் விட்டால், அவர்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு பிராணியை நாம் வெளிப்படுத்துவோம், நிச்சயமாக மனிதர்கள், நம்முடைய வசனங்களை உறுதி கொள்ளாதர்வர்களாக இருந்தார்கள் என்று அது அவர்களிடம் (தெளிவாகப்) பேசும்.
27:83
27:83 وَ يَوْمَ نَحْشُرُ مِنْ كُلِّ اُمَّةٍ فَوْجًا مِّمَّنْ يُّكَذِّبُ بِاٰيٰتِنَا فَهُمْ يُوْزَعُوْنَ‏
وَ يَوْمَ நாளில் نَحْشُرُ நாம்எழுப்புகின்றோம் مِنْ كُلِّ اُمَّةٍ ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் فَوْجًا கூட்டத்தை مِّمَّنْ يُّكَذِّبُ பொய்ப்பிக்கின்றவர்களின் بِاٰيٰتِنَا நமது அத்தாட்சிகளை فَهُمْ ஆகவே, அவர்கள் يُوْزَعُوْنَ‏ தடுத்து நிறுத்தப்படுவார்கள்
27:83. (அவர்களிலுள்ள) ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை(ப் பிரித்து) ஒரு படையாக நாம் சேகரிக்கும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக).
27:83. ஒவ்வொரு சமுதாயத்திலும் நமது வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை (தனித்தனி) கூட்டமாக (பிரித்து) நாம் (அவர்களை) ஒன்றுதிரட்டும் நாளை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. ஆகவே, அவர்கள் (அப்போது விசாரனைக்காக) நிறுத்தி வைக்கப்படுவார்கள்.
27:83. மேலும், சற்று சிந்தித்துப் பாருங்கள்; அந்நாளில் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ அவர்களை படைபடையாகத் திரட்டிக் கொண்டு வருவோம். பிறகு, அவர்கள் (வகை மற்றும் தகுதியைப் பொறுத்துப் பல படித்தரங்களில்) முறைப்படுத்தப்படுவார்கள்.
27:83. ஒவ்வொரு சமுதாயத்திலிருந்து நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களை, ஒரு படையாக நாம் ஒன்று திரட்டும் நாளை (நபியே நீர் நினைவு கூர்வீராக!) பின்னர் (மஹ்ஷர் மைதானத்தின் பால் செல்லும்போது அவர்களில் முன்னுள்ளவர்களுடன் அவர்களில் பின்னுள்ளவர்கள் சேர்ந்து கொள்வதற்காக) அவர்கள் நிறுத்திவைக்கப்படுவர்.
27:84
27:84 حَتّٰٓى اِذَا جَآءُوْ قَالَ اَكَذَّبْتُمْ بِاٰيٰتِىْ وَلَمْ تُحِيْطُوْا بِهَا عِلْمًا اَمَّاذَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
حَتّٰٓى இறுதியாக اِذَا جَآءُوْ அவர்கள் வந்து விடும்போது قَالَ அவன் கூறுவான் اَكَذَّبْتُمْ நீங்கள்பொய்ப்பித்தீர்களா? بِاٰيٰتِىْ எனதுஅத்தாட்சிகளை وَلَمْ تُحِيْطُوْا بِهَا عِلْمًا நீங்கள் முழுமையாக அறியாமல் இருக்க/அவற்றை اَمَّاذَا ?/அல்லது/என்ன كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்து கொண்டு இருந்தீர்கள்?
27:84. அவர்கள் யாவரும் வந்ததும்: “நீங்கள் என் வசனங்களைச் சூழ்ந்தறியாத நிலையில் அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களா? நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்பான்.
27:84. அவர்கள் அனைவரும் (தங்கள் இறைவனிடம்) வரும் சமயத்தில் (இறைவன் அவர்களை நோக்கி) ‘‘ நீங்கள் என் வசனங்களை நன்கறிந்து கொள்வதற்கு முன்னதாகவே அதைப் பொய்யாக்கி விட்டீர்களா? (அவ்வாறில்லையாயின்) பின்னர் என்னதான் நீங்கள் செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்பான்.
27:84. இவ்வாறாக, அவர்கள் அனைவரும் வந்துவிடும்போது (இறைவன் அவர்களிடம்) வினவுவான்: “என்னுடைய சான்றுகளை நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையில் அவற்றைப் பொய்யென்று கூறினீர்களா? இல்லை எனில், நீங்கள் வேறு என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள்?”
27:84. முடிவாக_அவர்கள் (யாவரும் தங்கள் இரட்சகனிடம்) வந்து விடுவார்களானால், (அவர்களிடம்) “நீங்கள் என்னுடைய வசனங்களை_அவற்றை முழுமையாக நீங்கள் அறிந்து கொள்ளாமல் இருந்தும் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களா? அல்லது என்னதான் நீங்கள் செய்துகொண்டிருந்தீர்கள்?” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கேட்பான்.
27:85
27:85 وَوَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ بِمَا ظَلَمُوْا فَهُمْ لَا يَنْطِقُوْنَ‏
وَوَقَعَ நிகழ்ந்து விட்டது الْقَوْلُ கூற்று عَلَيْهِمْ அவர்கள் மீது بِمَا ظَلَمُوْا அவர்களின் தீமைகளால் فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يَنْطِقُوْنَ‏ பேசமாட்டார்கள்
27:85. அன்றியும், அவர்கள் செய்து வந்த அக்கிரமத்தின் காரணத்தினால் அவர்கள் மீது (வேதனை பற்றிய) வாக்கு ஏற்பட்டு விட்டது; ஆகவே, அவர்கள் பேசமாட்டார்கள்.
27:85. அவர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக அவர்கள் மீது (வேதனையின்) கட்டளை உறுதியாகிவிடும். அச்சமயம் அவர்களால் பேசவும் முடியாது.
27:85. மேலும், அவர்கள் கொடுமை செய்த காரணத்தினால் வேதனை பற்றிய கட்டளை அவர்கள் மீது நிறைவேற்றப்படும். அப்போது, அவர்களால் எதுவும் பேச முடியாது.
27:85. மேலும், அவர்கள் அநியாயம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்கள் மீது (தண்டனையைப் பற்றிய) கூற்று ஏற்பட்டுவிட்டது, ஆகவே அவர்கள் பேசமாட்டார்கள்.
27:86
27:86 اَلَمْ يَرَوْا اَنَّا جَعَلْنَا الَّيْلَ لِيَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏
اَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? اَنَّا நிச்சயமாக நாம் جَعَلْنَا நாம் அமைத்தோம் الَّيْلَ இரவை لِيَسْكُنُوْا அவர்கள் ஓய்வு பெறுவதற்காக(வும்) فِيْهِ அதில் وَالنَّهَارَ இன்னும் பகலை مُبْصِرًا ؕ வெளிச்சமாகவும் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّـقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்கின்றனர்
27:86. நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
27:86. நிச்சயமாக நாம்தான் அவர்கள் சுகமடைவதற்கு இரவையும் (அனைத்தையும்) நன்கு பார்ப்பதற்குப் பகலையும் உண்டு பண்ணினோம் என்பதை அவர்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா? நிச்சயமாக இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
27:86. இரவை அவர்களுக்கு நிம்மதி அளிக்கக் கூடியதாகவும், பகலைப் பிரகாசிக்கக் கூடியதாகவும் ஆக்கியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இறைநம்பிக்கை கொண்ட சமூகத்தினர்க்கு இவற்றில் அநேக சான்றுகள் இருந்தன!
27:86. நிச்சயமாக நாம் இரவை, அதில் அவர்கள் அமைதி பெறுவதற்காகவும், பகலை (யாவற்றையும்) நன்கு பார்ப்பதற்காகவும் நாமே ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இதில் விசுவாசங்கொண்ட சமூகத்தார்க்குப் பல அத்ததாட்சிகள் இருக்கின்றன.
27:87
27:87 وَيَوْمَ يُنْفَخُ فِىْ الصُّوْرِ فَفَزِعَ مَنْ فِىْ السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ‌ؕ وَكُلٌّ اَتَوْهُ دٰخِرِيْنَ‏
وَيَوْمَ நாளில் يُنْفَخُ ஊதப்படும் فِىْ الصُّوْرِ ‘சூர்’ல் فَفَزِعَ திடுக்கிடுவார்(கள்) مَنْ فِىْ السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவர்களும் وَمَنْ فِى الْاَرْضِ பூமியில் உள்ளவர்களும் اِلَّا தவிர مَنْ شَآءَ எவர்களை நாடினான் اللّٰهُ‌ؕ அல்லாஹ் وَكُلٌّ எல்லோரும் اَتَوْهُ அவனிடம் வருவார்கள் دٰخِرِيْنَ‏ பணிந்தவர்களாக
27:87. இன்னும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் திகிலடைந்து விடுவார்கள்; அவ்வனைவரும் பணிந்தவர்களாக அவனிடம் வருவார்கள்.
27:87. சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவருமே திடுக்கிட்டு, நடுங்கித் தலை குனிந்தவர்களாக அவனிடம் வந்து சேருவார்கள்.
27:87. மேலும், அந்நாளில் எக்காளம் ஊதப்படும். அப்போது, வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைவரும் பெரும் திகில் அடைவார்கள். அந்த திகிலில் இருந்து எவர்களை அல்லாஹ் காப்பாற்ற நாடுவானோ அவர்களைத் தவிர! மேலும், அனைவரும் அடங்கி ஒடுங்கியவர்களாக அவன் திருமுன் வருவார்கள்.
27:87. ‌‍ஸுர் (குழல்) ஊதப்படும் நாளில், அல்லாஹ்(காப்பாற்ற) நாடியவர்களைத் தவிர வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும் திடுக்கிட்டு விடுவார்கள், ஒவ்வொருவரும் பணிந்தவர்களாக அவனிடம் வந்து விடுவர்.
27:88
27:88 وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَّهِىَ تَمُرُّ مَرَّ السَّحَابِ‌ؕ صُنْعَ اللّٰهِ الَّذِىْۤ اَتْقَنَ كُلَّ شَىْءٍ‌ؕ اِنَّهٗ خَبِيْرٌۢ بِمَا تَفْعَلُوْنَ‏
وَتَرَى பார்ப்பீர் الْجِبَالَ மலைகளை تَحْسَبُهَا அவற்றை நீர் கருதுவீர் جَامِدَةً உறுதியாக நிற்பதாக وَّهِىَ அவையோ تَمُرُّ செல்கின்றன مَرَّ செல்வதைப் போன்று السَّحَابِ‌ؕ மேகங்கள் صُنْعَ செயலாகும் اللّٰهِ அல்லாஹ்வின் الَّذِىْۤ எவன் اَتْقَنَ செம்மையாகச் செய்தான் كُلَّ شَىْءٍ‌ؕ எல்லாவற்றையும் اِنَّهٗ நிச்சயமாக அவன் خَبِيْرٌۢ ஆழ்ந்தறிபவன் بِمَا تَفْعَلُوْنَ‏ நீங்கள் செய்பவற்றை
27:88. இன்னும் நீர் மலைகளைப் பார்த்து அவை மிகவும் உறுதியாக இருப்பதாக எண்ணுகிறீர்; (எனினும் அந்நாளில்) அவை மேகங்களைப் போல் பறந்தோடும்; ஒவ்வொரு பொருளையும் உறுதியாக்கிய அல்லாஹ்வின் செயல்திறனாலேயே (அவ்வாறு நிகழும்.) நிச்சயமாக, அவன் நீங்கள் செய்வதை நன்கு அறிபவன்.
27:88. நீர் காணும் மலைகளை அவை வெகு உறுதியாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர். (எனினும், அந்நாளில்) அவை மேகத்தைப் போல் (ஆகாயத்தில்) பறந்தோடும். ஒவ்வொரு பொருளையும் (படைத்து) அதன் இயற்கை அமைப்பின் மீது உறுதிப்படுத்திய அல்லாஹ்வுடைய கட்டளையால் (அவ்வாறு நடைபெறும்). நிச்சயமாக அவன் நீங்கள் செய்து கொண்டிருக்கும் அனைத்தையும் நன்கறிபவன் ஆவான்.
27:88. (இன்று) நீர் மலைகளைப் பார்க்கும்போது அவை நன்கு நிலைகொண்டிருப்பதாகக் கருதுகின்றீர். ஆனால் (அன்றைய நாளில்) அவை மேகங்களைப் போன்று பறந்தோடிக் கொண்டிருக்கும்! ஒவ்வொரு பொருளையும் நுண்ணறிவினால் செம்மைப்படுத்திய அல்லாஹ்வுடைய பேராற்றலின் விந்தை இது! நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதை திண்ணமாக அவன் நன்கறிந்தவன்.
27:88. மேலும் நீர் மலைகளை_அவைகளைத்திடமானவையாக (அசையாததாக) நீர் எண்ணுகிறீர்_(எனினும் அந்நாளின்போது) அவை மேகம் நகர்வது போல் நகர்வதை நீர் காண்பீர், ஒவ்வொரு பொருளையும் (படைத்து,) உறுதியாக ஒழுங்குபடுத்திய, அல்லாஹ்வுடைய (கலைத்திறன் நிறைந்த) செயலாக (அவ்வாறு நடைபெறும்) நிச்சயமாக அவன், நீங்கள் செய்துகொண்டிருபவற்றை நன்கு உணர்பவன்.
27:89
27:89 مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَيْرٌ مِّنْهَا‌ۚ وَهُمْ مِّنْ فَزَعٍ يَّوْمَٮِٕذٍ اٰمِنُوْنَ‏
مَنْ யார் جَآءَ வருவரோ بِالْحَسَنَةِ நன்மையைக் கொண்டு فَلَهٗ அவருக்கு உண்டு خَيْرٌ சிறந்தது مِّنْهَا‌ۚ அதன் காரணமாக وَهُمْ அவர்கள் مِّنْ فَزَعٍ திடுக்கத்திலிருந்து يَّوْمَٮِٕذٍ அந்நாளில் اٰمِنُوْنَ‏ பாதுகாப்புப் பெறுவார்கள்
27:89. (அந்நாளில்) எவர் நன்மையைக் கொண்டு வருகிறாரோ, அவருக்கு அதைவிட மேலானது உண்டு - மேலும் அவர்கள் அந்நாளின் திடுக்கத்தை விட்டும் அச்சந் தீர்ந்து இருப்பார்கள்.
27:89. எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால், அதற்கு(ரிய கூலியைவிட) மேலானதே அவர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், அந்நாளின் திடுக்கத்திலிருந்தும் அவர்கள் அச்சமற்று விடுகிறார்கள்.
27:89. எவர் நன்மையைக் கொண்டு வருகின்றாரோ அவருக்கு அதைவிடச் சிறந்த பிரதிபலன் கிடைக்கும். அத்தகையவர்கள் அந்நாளின் திகிலில் இருந்து பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.
27:89. எவர் ஒரு நன்மையைக் கொண்டு வந்தாரோ, அதைவிட மிகச் சிறந்த (கூலியான)து அவருக்கு உண்டு, மேலும், (அவ்வாறு செய்யும்) அவர்கள் அந்நாளின் திடுக்கத்திலிருந்து அச்சமற்றவர்கள்.
27:90
27:90 وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَكُبَّتْ وُجُوْهُهُمْ فِى النَّارِؕ هَلْ تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
وَمَنْ இன்னும் யார் جَآءَ வருவாரோ بِالسَّيِّئَةِ தீமையைக் கொண்டு فَكُبَّتْ தள்ளப்படும் وُجُوْهُهُمْ அவர்களுடைய முகங்கள் فِى النَّارِؕ நரகத்தில் هَلْ تُجْزَوْنَ கூலி கொடுக்கப்படுவீர்களா? اِلَّا தவிர مَا كُنْتُمْ எதற்கு நீங்கள் இருந்தீர்கள் تَعْمَلُوْنَ‏ செய்கிறீர்கள்
27:90. இன்னும்: எவர் தீமையைக் கொண்டு வருகிறாரோ அவர்களுடைய முகங்கள் குப்புற (நரக) நெருப்பில் தள்ளப்படும்; “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு அன்றி (வேறு) நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று கூறப்படும்.)
27:90. எவரேனும் ஒரு பாவம் செய்தால், அவர்கள் நரகத்தில் முகங்குப்புறத் தள்ளப்பட்டு ‘‘நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர (வேறு எதற்கும்) உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுமா?'' (என்று கேட்கப்படும்.)
27:90. ஆனால், எவர்கள் தீமையைக் கொண்டு வருகின்றார்களோ அவர்கள் அனைவரும் முகங்குப்புற நெருப்பில் வீசி எறியப்படுவார்கள். நீங்கள் இதைத் தவிர ஏதேனும் கூலி பெறுவீர்களா என்ன செய்த வினைக்கு ஏற்பவே அனுபவிப்பதைத் தவிர?
27:90. மேலும், எவர் ஒரு தீமையைக்கொண்டு வந்தாரோ, அவர்களுடைய முகங்கள் நரகத்தில் குப்புறத்தள்ளப்படும், நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளுக்கன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்க்கப்படுகிறீர்களா? (என்று கேட்கப்படுவர்.)
27:91
27:91 اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ رَبَّ هٰذِهِ الْبَلْدَةِ الَّذِىْ حَرَّمَهَا وَلَهٗ كُلُّ شَىْءٍ‌ وَّاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِيْنَۙ‏
اِنَّمَاۤ اُمِرْتُ நான் கட்டளையிடப்பட்டதெல்லாம் اَنْ اَعْبُدَ வணங்குவதற்குத்தான் رَبَّ இறைவனை هٰذِهِ الْبَلْدَةِ இந்த ஊரின் الَّذِىْ حَرَّمَهَا எவன்/புனிதப்படுத்தியுள்ளான்/அதை وَلَهٗ அவனுக்குத்தான் كُلُّ எல்லா شَىْءٍ‌ பொருள்களும் وَّاُمِرْتُ இன்னும் , நான் கட்டளை இடப்பட்டுள்ளேன் اَنْ اَكُوْنَ நான் ஆகவேண்டும் என்று مِنَ الْمُسْلِمِيْنَۙ‏ முஸ்லிம்களில்
27:91. “இந்த ஊரை எவன் கண்ணியப் படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன; அன்றியும் அவனுக்கே முற்றிலும் வழிபட்டவானக இருக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று நபியே! நீர் கூறுவீராக).
27:91. (நபியே! நீர் கூறுவீராக!) இந்த (மக்கா) நகரத்தின் அதிபதியாகிய இறைவன் ஒருவனையே வணங்குமாறு நான் ஏவப்பட்டு உள்ளேன். அவன்தான் இதை மிக்க கண்ணியப்படுத்தியுள்ளான் எல்லாப் பொருள்களும் அவனுக்கு உரியனவே! மேலும், அவனுக்கே முற்றிலும் வழிபட்டவர்களில் நான் இருக்கும்படி நான் ஏவப்பட்டுள்ளேன்.
27:91. (நபியே! இவர்களிடம் கூறும்:) “எனக்கு இவ்வாறுதான் கட்டளை இடப்பட்டுள்ளது: இந்த (மக்கமா) நகரின் அதிபதிக்கு கீழ்ப்படியுங்கள்; அவனே அதை சங்கை மிக்கதாக ஆக்கினான். மேலும், ஒவ்வொரு பொருளுக்கும் அவனே உரிமையாளனாய் இருக்கின்றான். மேலும், நான் அடிபணிந்தவனாக (முஸ்லிமாக) விளங்க வேண்டும் என்றும்,
27:91. “நான் கட்டளையிடப்பட்டதெல்லாம் (மக்காவாகிய) இந்த ஊரின் இரட்சகனை நான் வணங்குவதைத்தான்; அவன் எத்தகையவனென்றால், இதை அவன் புனிதமாக்கிவைத்துள்ளான்; ஒவ்வொரு பொருளும் அவனுக்கே உரியது! இன்னும், அவனுக்கே முற்றிலும் கீழ்படிந்தவர்களில் உள்ளவனாக (முஸ்லிமாக) இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று நபியே! நீர் கூறுவீராக!)
27:92
27:92 وَاَنْ اَتْلُوَا الْقُرْاٰنَ‌ۚ فَمَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِىْ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ ضَلَّ فَقُلْ اِنَّمَاۤ اَنَا مِنَ الْمُنْذِرِيْنَ‏
وَاَنْ اَتْلُوَا இன்னும் நான் ஓதுவதற்கு الْقُرْاٰنَ‌ۚ குர்ஆனை فَمَنِ ஆகவே, யார் اهْتَدٰى நேர்வழி பெறுகிறாரோ فَاِنَّمَا يَهْتَدِىْ நிச்சயமாக அவர் நேர்வழி பெறுவதெல்லாம் لِنَفْسِهٖ‌ۚ அவரது நன்மைக்காகத்தான் وَمَنْ யார் ضَلَّ வழி கெடுகின்றானோ فَقُلْ கூறுவீராக! اِنَّمَاۤ اَنَا நான் எல்லாம் مِنَ الْمُنْذِرِيْنَ‏ எச்சரிப்பவர்களில் உள்ளவன்தான்
27:92. இன்னும்: குர்ஆனை ஓதி வரவும் (நான் ஏவப்பட்டுள்ளேன்); ஆகவே எவர் நேர்வழியை அடைகிறாரோ - அவர் நேர்வழியடைவது அவர் நன்மைக்கேயாகும்; அன்றியும் எவர் வழி கெடுகிறாரோ (அவருக்குக்) கூறுவீராக: “நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்.“
27:92. மேலும், திரு குர்ஆனை நான் (அனைவருக்கும்) ஓதிக் காண்பிக்குமாறும் (ஏவப்பட்டுள்ளேன்). (அதைக் கொண்டு) எவன் நேரான வழியை அடைகிறானோ அவன் தன் சுய நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவரேனும் (இதிலிருந்து விலகித்) தவறான வழியில் சென்றால் (நபியே! நீர் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்.) ‘‘ நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிப்பவர்களில் ஒருவன்தான் (நிர்ப்பந்திப்பவனல்ல)'' என்று கூறுவீராக.
27:92. இந்தக் குர்ஆனை ஓதிக் காண்பிக்க வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.” எவர் நேர்வழியை மேற்கொள்கின்றாரோ அவர் தம்முடைய நன்மைக்காகவே நேர்வழியை மேற்கொள்கின்றார். மேலும், எவன் வழிபிறழ்ந்து போகின்றானோ அவனிடம் கூறிவிடுவீராக: “நான் எச்சரிக்கை செய்யக்கூடியவனாய் மட்டுமே இருக்கின்றேன்.”
27:92. “அன்றியும், குர் ஆனை நான் ஓதிக்கொண்டிருக்குமாறும் (ஏவப்பட்டுள்ளேன். அதனைக் கொண்டு) எவர் நேர் வழியை அடைகின்றாரோ அவர் நேர்வழியடைவதெல்லாம் அவருக்கே (தன் சுய நன்மைக்ககாகவே) ஆகும், இன்னும் எவர் (இதிலிருந்து) வழி தவறி விடுகிறாரோ நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களில் உள்ளவனே” என்று கூறுவீராக!
27:93
27:93 وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ سَيُرِيْكُمْ اٰيٰتِهٖ فَتَعْرِفُوْنَهَا‌ ؕ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
وَقُلِ கூறுவீராக الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே سَيُرِيْكُمْ உங்களுக்கு காண்பிப்பான் اٰيٰتِهٖ தனது அத்தாட்சிகளை فَتَعْرِفُوْنَهَا‌ அச்சமயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள் وَمَا இல்லை رَبُّكَ உமது இறைவன் بِغَافِلٍ கவனிக்காதவனாக عَمَّا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்பவற்றை
27:93. இன்னும் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” மேலும் உம்முடைய இறைவன் நீங்கள் செய்வதை விட்டும் பராமுகமாக இல்லை.
27:93. புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (மறுமை வருவதற்குரிய) தன் அத்தாட்சிகளை அதி சீக்கிரத்தில் அவன் உங்களுக்குக் காண்பிப்பான். அச்சமயம், அவற்றை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள். (தற்சமயம்) நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றி (நபியே!) உமது இறைவன் பராமுகமாயில்லை'' என்று கூறுவீராக.
27:93. மேலும், (இம்மக்களிடம்) கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அதிவிரைவில் தன்னுடைய சான்றுகளை அவன் உங்களுக்குக் காண்பிப்பான். அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.” மேலும், உம்முடைய இறைவன் நீங்கள் செய்பவற்றைக் கவனிக்காமல் இல்லை!
27:93. மேலும், “புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது, தன்னுடைய அத்தாட்சிகளை அடுத்து அவன் உங்களுக்குக் காண்பிப்பான், அது சமயம் அவைகளை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள், என்று (நபியே!) நீர் கூறுவீராக! மேலும், நீங்கள் செய்துகொண்டிருப்பவற்றைப் பற்றி (நபியே!) உமதிரட்சகன் பராமுகமானவனாக இல்லை.