3. ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)
மதனீ, வசனங்கள்: 200

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
3:1
3:1 الٓمّٓ ۚۙ‏
الٓمّٓ ۚۙ‏ அலிஃப், லாம், மீம்
3:1. அலிஃப், லாம், மீம்.
3:1. அலிஃப் லாம் மீம்.
3:1. அலிஃப், லாம், மீம்.
3:1. அலிப் லாம் மீம்.
3:2
3:2 اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَىُّ الْقَيُّوْمُؕ‏
اللّٰهُ அல்லாஹ் لَاۤ அறவே இல்லை اِلٰهَ இறைவன் اِلَّا தவிர هُوَۙ அவன் الْحَىُّ என்றும் உயிருள்ளவன் الْقَيُّوْمُؕ‏ நிலையானவன்
3:2. அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.
3:2. அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை. அவன் நிரந்தரமானவன்; என்றும் நிலையானவன்.
3:2. அல்லாஹ் நித்திய ஜீவன் (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.
3:2. அல்லாஹ் (அவன் எத்தகையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை. (அவன்) நித்திய ஜீவன். (என்றும்) நிலையானவன்.
3:3
3:3 نَزَّلَ عَلَيْكَ الْـكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَاَنْزَلَ التَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَۙ‏
نَزَّلَ இறக்கினான் عَلَيْكَ உம்மீது الْـكِتٰبَ வேதத்தை بِالْحَقِّ சத்தியத்துடன் مُصَدِّقًا உண்மைப்படுத்தக் கூடியதாக لِّمَا بَيْنَ يَدَيْهِ தனக்கு முன்னுள்ளதை وَاَنْزَلَ இன்னும் இறக்கினான் التَّوْرٰٮةَ தவ்றாத்தை وَالْاِنْجِيْلَۙ‏ இன்னும் இன்ஜீலை
3:3. (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.
3:3. (நபியே!) இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உறுதிப்படுத்துகின்ற (முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் உம்மீது இறக்கிவைத்தான். இதற்கு முன்னரும் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக இருந்த தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கிவைத்தான்.
3:3. (நபியே!) அவனே உம்மீது இந்த வேதத்தை இறக்கியுள்ளான். அதுவோ சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும்
3:3. (நபியே முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை-இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உண்மைப்படுத்தக்கூடியதாக (இது) இருக்க, உம்மீது அ(த்தகயை)வன்தான் இறக்கி வைத்தான், தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.
3:4
3:4 مِنْ قَبْلُ هُدًى لِّلنَّاسِ وَاَنْزَلَ الْفُرْقَانَ  ؕ‌ اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ  ‌ؕ وَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍؕ‏
مِنْ قَبْلُ (இதற்கு) முன்னர் هُدًى நேர்வழியாக لِّلنَّاسِ மக்களுக்கு وَاَنْزَلَ இன்னும் இறக்கினான் الْفُرْقَانَ  ؕ பிறித்தறிவிக்கக் கூடியதை اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் لَهُمْ அவர்களுக்கு عَذَابٌ வேதனை شَدِيْدٌ  ؕ கடினமானது وَاللّٰهُ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் ذُو انْتِقَامٍؕ‏ தண்டிப்பவன்
3:4. மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன்னரும் (வேதங்களை இறக்கினான்); (நன்மை, தீமைகளைப்) பிரித்துக் காட்டுகிறதையும் இறக்கிவைத்தான்; ஆகவே. எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு கடும் தண்டனையுண்டு; அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், தண்டிப்போனாகவும் இருக்கின்றான்.
3:4. (மேலும், நன்மை தீமைகளைப்) பிறித்தறிவிக்கக்கூடிய (மற்ற)வற்றையும் அருள் புரிந்திருக்கிறான். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய (அவ்)வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், (தீயவர்களைத்) தண்டிப்பவன்.
3:4. இது தனக்கு முன்னர் அருளப்பட்ட வேத நூல்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவன் இறக்கியிருக்கின்றான். மெய்யையும், பொய்யையும் வேறுபடுத்திக் காட்டும் (உரைகல்லான) இந்த ஃபுர்கானையும் இறக்கியுள்ளான். (இனி) எவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்க மறுக்கின்றார்களோ அவர்களுக்குத் திண்ணமாய்க் கடுமையான தண்டனை உண்டு. மேலும், அல்லாஹ் வல்லமை மிக்கவனும் தீய செயல்களுக்கு பழிவாங்குபவனும் ஆவான்.
3:4. முன்னர் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (வேதங்களை அவனே இறக்கிவைத்தான்.) மேலும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக் கூடிய புர்க்கா(ன் எனும் குர்ஆ)னையும் அவனே இறக்கிவைத்தான். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்-அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு. இன்னும், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன், (தீயவர்களை) தண்டித்தலையுடையவன்.
3:5
3:5 اِنَّ اللّٰهَ لَا يَخْفٰى عَلَيْهِ شَىْءٌ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَآءِ ؕ‏
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يَخْفٰى மறையாது عَلَيْهِ அவனுக்கு شَىْءٌ எதுவும் فِى الْاَرْضِ பூமியில் وَلَا فِى السَّمَآءِ ؕ‏ இன்னும் வானத்தில்
3:5. வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை.
3:5. நிச்சயமாக பூமியிலோ, வானத்திலோ (உள்ள) எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல.
3:5. திண்ணமாக வானத்திலும் பூமியிலும் உள்ள எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததன்று!
3:5. நிச்சயமாக அல்லாஹ்-அவனுக்கு பூமியில் மற்றும் வானத்தில் (உள்ள) எப்பொருளும் மறைந்ததன்று.
3:6
3:6 هُوَ الَّذِىْ يُصَوِّرُكُمْ فِى الْاَرْحَامِ كَيْفَ يَشَآءُ ‌ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
هُوَ அவன் الَّذِىْ எவன் يُصَوِّرُكُمْ உங்களை உருவமைக்கிறான் فِى الْاَرْحَامِ கர்ப்பப் பைகளில் كَيْفَ எவ்வாறு يَشَآءُ ؕ நாடுகிறான் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَ அவன் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ ஞானவான்
3:6. அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
3:6. அவன்தான் கர்ப்பப்பைகளில் தான் விரும்பியவாறு உங்களை (ஆணாக, பெண்ணாகவோ) உருவம் அமைக்கிறான். (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை.
3:6. அவனே (உங்கள் அன்னை யரின்) கருவறைகளில் தான் நாடுகின்றவாறு உங்கள் உருவங்களை அமைக்கின்றான். மிக்க வல்லமையும் நுண்ணறிவும் கொண்ட அவனேயன்றி வேறு இறைவன் இல்லை.
3:6. அவன் எத்தகையவனென்றால், கர்ப்பப்பைகளில் தான் எவ்வாறு நாடுகிறானோ, அவ்வாறு உங்களை அவன் வடிவமைக்கிறான். அவனையன்றி (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன், (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
3:7
3:7 هُوَ الَّذِىْۤ اَنْزَلَ عَلَيْكَ الْكِتٰبَ مِنْهُ اٰيٰتٌ مُّحْكَمٰتٌ هُنَّ اُمُّ الْكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌ‌ؕ فَاَمَّا الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُوْنَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَآءَ الْفِتْنَةِ وَابْتِغَآءَ تَاْوِيْلِهٖۚؔ وَمَا يَعْلَمُ تَاْوِيْلَهٗۤ اِلَّا اللّٰهُ ؔ‌ۘ وَ الرّٰسِخُوْنَ فِى الْعِلْمِ يَقُوْلُوْنَ اٰمَنَّا بِهٖۙ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا ‌ۚ وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏
هُوَ அவன் الَّذِىْۤ எப்படிப்பட்ட اَنْزَلَ இறக்கினான் عَلَيْكَ உம்மீது الْكِتٰبَ வேதத்தை مِنْهُ அதில் اٰيٰتٌ வசனங்கள் مُّحْكَمٰتٌ பொருள் தெளிவானவை هُنَّ அவை اُمُّ அடிப்படை الْكِتٰبِ வேதம் وَاُخَرُ இன்னும் வேறு مُتَشٰبِهٰتٌ‌ؕ பொருள் தெரியாதவை فَاَمَّا ஆகவே الَّذِيْنَ எவர்கள் فِىْ قُلُوْبِهِمْ தங்கள் உள்ளங்களில் زَيْغٌ கோணல் فَيَتَّبِعُوْنَ பின்பற்றுகிறார்கள் مَا எதை تَشَابَهَ பொருள் தெரிய முடி யாமல்ஆகிவிட்டது مِنْهُ அதில் ابْتِغَآءَ தேடி الْفِتْنَةِ குழப்பத்தை وَابْتِغَآءَ இன்னும் தேடி تَاْوِيْلِهٖۚؔ அதன் விளக்கத்தை وَمَا يَعْلَمُ இன்னும் அறியமாட்டார் تَاْوِيْلَهٗۤ அதன் விளக்கத்தை اِلَّا தவிர اللّٰهُ ؔ‌ۘ அல்லாஹ் وَ الرّٰسِخُوْنَ தேர்ச்சி அடைந்தவர்கள் فِى الْعِلْمِ கல்வியில் يَقُوْلُوْنَ கூறுவார்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِهٖۙ அதை كُلٌّ எல்லாம் مِّنْ இருந்து عِنْدِ இடம் رَبِّنَا ۚ எங்கள் இறைவன் وَمَا يَذَّكَّرُ இன்னும் நல்லறிவுபெறமாட்டார் اِلَّاۤ தவிர اُولُوا الْاَلْبَابِ‏ அறிவுள்ளவர்கள்
3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
3:7. (நபியே!) அவனே இவ்வேதத்தை(யும்) உம் மீது இறக்கிவைத்தான். இதில் முற்றிலும் தெளிவான பொருள் கொண்ட வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும், (உங்களுக்கு) முழுமையான பொருள் தெரியமுடியாத வசனங்களும் இருக்கின்றன. எவர்களுடைய உள்ளங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள் தெளிவற்ற பொருள்களுடைய வசனங்களையே தேடிப் பின்பற்றுவார்கள். குழப்பத்தை உண்டுபண்ணக் கருதியும் அதை (தங்களின் தவறான நோக்கத்திற்கேற்ப) மாற்றுவதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். ஆயினும், இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வைத் தவிர ஒருவரும் அறிய மாட்டார். உறுதிமிக்க கல்விமான்களோ (அதன் கருத்து தங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும்) இதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இவ்விருவகை வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான் என்று கூறுவார்கள். அறிவுடையவர்களைத் தவிர மற்ற எவரும் (இவற்றைக் கொண்டு) நல்லுபதேசம் அடையமாட்டார்கள்.
3:7. (நபியே!) அ(ந்த இறை)வனே இவ்வேத நூலை உம்மீது இறக்கியருளினான். இதில் இருவிதமான வசனங்கள் உள்ளன. ஒன்று: “முஹ்கமாத்”* எனும் வசனங்களாகும். அவைதாம் வேதத்தின் அடிப்படை. இரண்டாவது: “முதஷாபிஹாத்”• எனும் வசனங்களாகும். எவர்களுடைய இதயங்களில் கோளாறு உள்ளதோ அவர்கள் குழப்பம் செய்யும் நோக்கில் முதஷாபிஹான வசனங்களைத் தேடித்திரிந்து கொண்டும், அவற்றின் கருத்தைத் திரித்துக் கூற முயற்சி செய்து கொண்டுமிருப்பார்கள். எனினும், அவற்றின் உண்மைப் பொருளை அல்லாஹ்வை அன்றி எவரும் அறியார்! இதற்கு மாறாக, அறிவுத் திறன் மிக்கவர்கள், “இவற்றை நாங்கள் நம்புகின்றோம்; இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டவைதாம்” என்று கூறுகிறார்கள். மேலும் உண்மை யாதெனில், அறிவாளிகள் தாம் (எதிலும்) சரியான படிப்பினை பெறுகின்றார்கள்.
3:7. அவன் எத்தகையவனென்றால், இவ்வேதத்தை உம்மீது அவன் இறக்கி வைத்தான். இதில் தெளிவான கருத்துக்களுடைய வசனங்களும் இருக்கின்றன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை, பலபொருள்களைக் கொண்டவையாகும். ஆகவே, எவர்களுடைய இதயங்களில் சறுகுதல் இருக்கிறதோ அத்தகையோர் அதில் குழப்பத்தை உண்டு பண்ணக்கருதி அதில் பல பொருள்கள் கொண்டவைகளையே தேடிப் பின்பற்றுவார்கள். மேலும், இதன் உண்மைக்கருத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியமாட்டார்கள். கல்வியறிவில் நிலை பெற்றவர்களோ (அதன் கருத்து தங்களுக்குப் பூரணமாக விளங்காவிடினும்) இதனையும் நாங்கள் விசுவாசித்திருக்கிறோம். (இவ்விருவகை வசனங்கள்) ஒவ்வொன்றும் எங்கள் இரட்சகனிடமிருந்து உள்ளவைதாம்” என்று கூறுவார்கள். அறிவுடையோர்களையன்றி மற்றெவரும் (இவைகளைக் கொண்டு) நல்லுபதேசமடையமாட்டார்கள்.
3:8
3:8 رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ‌ ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏
رَبَّنَا எங்கள் இறைவா لَا تُزِغْ கோணலாக்கி விடாதே قُلُوْبَنَا எங்கள் உள்ளங்களை بَعْدَ பின்னர் اِذْ هَدَيْتَنَا எங்களை நேர்வழியில் செலுத்தினாய் وَهَبْ இன்னும் வழங்கு لَنَا எங்களுக்கு مِنْ لَّدُنْكَ உன்னிடமிருந்து رَحْمَةً  ۚ கருணையை اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْوَهَّابُ‏ வாரி வழங்குபவன்
3:8. “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)
3:8. (மேலும், அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்கள் உள்ளங்கள் (அதில் இருந்து) தவறி விடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!''
3:8. அவர்கள் இவ்வாறு அல்லாஹ்விடம் இறைஞ்சிய வண்ணம் இருக்கிறார்கள்: “எங்கள் இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்திடாதே! மேலும், எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கின்றாய்.
3:8. (அறிவுடைய அவர்கள்) “எங்கள் இரட்சகனே! நீ எங்களுக்கு நேர்வழி காட்டிய பின்னர், எங்களுடைய இதயங்களை (அதிலிருந்து) சறுகிவிடுமாறு செய்து விடாதிருப்பாயாக! மேலும், உன் புறத்திலிருந்து அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளியாவாய் (என்றும்),
3:9
3:9 رَبَّنَاۤ اِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيْهِ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُخْلِفُ الْمِيْعَادَ‏
رَبَّنَاۤ எங்கள் இறைவா اِنَّكَ நிச்சயமாக நீ جَامِعُ ஒன்று சேர்ப்பவன் النَّاسِ மக்களை لِيَوْمٍ ஒரு நாளில் لَّا அறவே இல்லை رَيْبَ சந்தேகம் فِيْهِ‌ؕ அதில் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُخْلِفُ மாற்ற மாட்டான் الْمِيْعَادَ‏ வாக்கை
3:9. “எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்” (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்).
3:9. ‘‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஒரு நாளில் மனிதர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பாய். அ(ந்நாள் வருவ)தில் சந்தேகமேயில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் தவறுபவனல்ல'' (என்று கூறுவார்கள்.)
3:9. எங்கள் இறைவனே! திண்ணமாக நீ எல்லா மனிதர்களையும் ஒருநாளில் ஒன்று திரட்டக்கூடியவனாய் இருக்கின்றாய்; அந்நாள் வருவதில் எத்தகைய ஐயமும் இல்லை. நிச்சயமாக நீ வாக்குறுதி மீறுபவன் அல்லன்.”
3:9. “எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ ஒரு நாளைக்காக மனிதர்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். அ(ந் நாள் வருவ)தில் சந்தேகமேயில்லை. (ஏனென்றால்,) நிச்சயமாக, அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் மாறு செய்யமாட்டான்” (என்றும் பிரார்த்திப்பார்கள்).
3:10
3:10 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِىَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْئًا‌ ؕ وَاُولٰٓٮِٕكَ هُمْ وَقُوْدُ النَّارِۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் لَنْ تُغْنِىَ அறவே தடுக்காது عَنْهُمْ அவர்களை விட்டும் اَمْوَالُهُمْ அவர்களுடைய செல்வங்கள் وَلَاۤ اَوْلَادُهُمْ இன்னும் அவர்களுடைய சந்ததிகள் مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடம் شَيْئًا‌ ؕ எதையும் وَاُولٰٓٮِٕكَ هُمْ இன்னும் அவர்கள்தான் وَقُوْدُ எரிபொருள்கள் النَّارِۙ‏ நரகத்தின்
3:10. நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்.
3:10. நிச்சயமாக எவர்கள் (அந்நாளை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு (அந்நாளில்) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து எதையும் அறவே தவிர்த்துவிட முடியாது. இவர்கள்தான் (உண்மையாகவே) நரகத்தின் எரிகட்டைகள்.
3:10. நிச்சயமாக, இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டவர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் அல்லாஹ்விடத்தில் சிறிதும் பலன் அளித்திட மாட்டா. அவர்கள் நரகின் எரிபொருளாய்த்தான் இருப்பார்கள்.
3:10. நிச்சயமாக (அந்நாளை) நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்_(அந்நாளில்) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய பிள்ளைகளும், அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து யாதொன்றையும் அவர்களைவிட்டும் ஒரு போதும் தேவையறச் செய்து விடாது. இன்னும் இவர்கள்தாம் (உண்மையாகவே நரக) நெருப்பின் எரிபொருட்கள் ஆவர்.
3:11
3:11 كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ كَذَّبُوْا بِاٰيٰتِنَا ‌ۚ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ‌ؕ وَاللّٰهُ شَدِيْدُ الْعِقَابِ‏
كَدَاْبِ தன்மையைப் போன்று اٰلِ கூட்டத்தாரின் فِرْعَوْنَۙ ஃபிர்அவ்னுடைய وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் مِنْ قَبْلِهِمْ‌ؕ அவர்களுக்கு முன்னர் كَذَّبُوْا பொய்ப்பித்தார்கள் بِاٰيٰتِنَا ۚ நம் வசனங்களை فَاَخَذَهُمُ எனவே அவர்களைப் பிடித்தான் اللّٰهُ அல்லாஹ் بِذُنُوْبِهِمْ‌ؕ அவர்களுடைய பாவங்களின் காரணமாக وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ‏ தண்டிப்பதில்
3:11. (இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும், இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தோரையும் போன்றே இருக்கிறது; அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்; ஆகவே அவர்களை, அவர்களுடைய பாவங்களின் காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான் - அல்லாஹ் வேதனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன்.
3:11. (இவர்களின் நிலை) ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு முன் இருந்தவர்களின் நிலை போன்று உள்ளது. அவர்களும் நம் வசனங்களைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அல்லாஹ் அவர்களின் (இப்)பாவங்களின் காரணமாக அவர்களை தண்டித்தான். அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான்.
3:11. ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்களுக்கும், அவர்களுக்கு முன் (இறைவனுக்கு அடிபணியாமல்) வாழ்ந்தவர்களுக்கும் நேர்ந்த கதியைப் போல்தான் (இவர்களுக்கும்) நேரும்! அவர்கள் நம் வசனங்களைப் பொய்யென்று கூறினார்கள். எனவே அவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். (உண்மையில்) அல்லாஹ் கடுமையாகத் தண்டிக்கக் கூடியவனாக இருக்கின்றான்.
3:11. (இவர்களின் நிலை செயல் யாவும்) ஃபிர் அவ்னைச் சார்ந்தவர்கள். இன்னும் அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் நிலை போன்று இருக்கின்றது. அவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கினார்கள்; ஆதலால், அல்லாஹ் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடித்துக் கொண்டான். இன்னும் அல்லாஹ் தண்டிப்பதில் மிகக்கடுமையானவன்.
3:12
3:12 قُلْ لِّلَّذِيْنَ كَفَرُوْا سَتُغْلَبُوْنَ وَتُحْشَرُوْنَ اِلٰى جَهَنَّمَ‌ؕ وَبِئْسَ الْمِهَادُ‏
قُلْ கூறுவீராக لِّلَّذِيْنَ எவர்களுக்கு كَفَرُوْا நிராகரித்தார்கள் سَتُغْلَبُوْنَ வெற்றி கொள்ளப்படுவீர்கள் وَتُحْشَرُوْنَ இன்னும் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் اِلٰى جَهَنَّمَ‌ؕ நரகத்தின் பக்கம் وَبِئْسَ இன்னும் கெட்டு விட்டது الْمِهَادُ‏ தங்குமிடம்
3:12. நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக: “வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள்; அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள்; இன்னும், (நரகமான அவ்விரிப்பு) கெட்ட படுக்கையாகும்.
3:12. எவர்கள் இவ்வேதத்தை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘அதிசீக்கிரத்தில் நீங்கள் வெற்றி கொள்ளப்படுவீர்கள். மேலும், (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக்கெட்ட தங்குமிடமாகும்.''
3:12. எனவே (நபியே!) உமது அழைப்பை ஏற்க மறுத்தவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் வெகு விரைவில் கீழடக்கப்படுவீர்கள். மேலும், நீங்கள் நரகத்தை நோக்கி கூட்டமாக விரட்டிச் செல்லப்படுவீர்கள்; அதுவோ மிகக் கெட்ட தங்குமிடமாகும்!”
3:12. இவ்வேதத்தை நிராகரிக்கின்றார்களே, அத்தகையோருக்கு (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் (விசுவாசிகளால்) வெற்றி கொள்ளப்படுவீர்கள். (மறுமையில்) நரகத்தின் பாலும் நீங்கள் (எழுப்பி) ஒன்று திரட்டப்படுவீர்கள். இன்னும், தங்குமிடமான (அ)து மிகக்கெட்டதாகும்.
3:13
3:13 قَدْ كَانَ لَـكُمْ اٰيَةٌ فِىْ فِئَتَيْنِ الْتَقَتَا ؕ فِئَةٌ تُقَاتِلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَاُخْرٰى كَافِرَةٌ يَّرَوْنَهُمْ مِّثْلَيْهِمْ رَاْىَ الْعَيْنِ‌ؕ وَاللّٰهُ يُؤَيِّدُ بِنَصْرِهٖ مَنْ يَّشَآءُ  ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَعِبْرَةً لِّاُولِى الْاَبْصَارِ‏
قَدْ كَانَ திட்டமாக இருந்தது لَـكُمْ உங்களுக்கு اٰيَةٌ ஓர் அத்தாட்சி فِىْ فِئَتَيْنِ இரு கூட்டங்களில் الْتَقَتَا ؕ சந்தித்தன فِئَةٌ ஒரு கூட்டம் تُقَاتِلُ போர் புரிகிறது فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வுடைய وَاُخْرٰى இன்னும் மற்றொன்று كَافِرَةٌ நிராகரிக்கக் கூடியது يَّرَوْنَهُمْ இவர்களை காண்கின்றனர் مِّثْلَيْهِمْ தங்களைப் போன்று இரு மடங்குகளாக رَاْىَ பார்ப்பது الْعَيْنِ‌ؕ கண் وَاللّٰهُ அல்லாஹ் يُؤَيِّدُ பலப்படுத்துகிறான் بِنَصْرِهٖ தன் உதவியால் مَنْ எவர்களை يَّشَآءُ  ؕ நாடுகிறான் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَعِبْرَةً திட்டமாக ஒரு படிப்பினை لِّاُولِى الْاَبْصَارِ‏ பார்வை உடையோருக்கு
3:13. (பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.
3:13. (பத்ரு போர்க்களத்தில்) சந்தித்த இரு சேனைகளில் மெய்யாகவே உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருந்தது. (ஒன்று) அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் கூட்டம், மற்றொரு கூட்டத்தினர் நிராகரிப்பவர்கள். (நிராகரிப்பவர்கள் ஆகிய) இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களை தங்களைவிட இரு மடங்காக(த் தங்கள்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் விரும்பியவர்களைத் தன் உதவியைக் கொண்டு (இவ்வாறு) பலப்படுத்துகிறான். (படிப்பினை பெறும்) பார்வையுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது.
3:13. (பத்ரில்) மோதிக் கொண்ட இரு பிரிவினரிடம் திண்ணமாக உங்களுக்குப் படிப்பினை தரும் சான்று இருக்கிறது. ஒரு பிரிவினர் அல்லாஹ்வுடைய வழியில் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். மற்றொரு பிரிவினர் (அவனை) நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். நம்பிக்கையாளர்களைவிட நிராகரிப்பாளர்கள் இரு மடங்கு அதிகமாய் இருந்ததை பார்ப்பவர்கள் தம் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும், அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு உதவி செய்து வலுவூட்டுகின்றான் (என்பதைப் போரின் முடிவு நிரூபித்து விட்டது). திண்ணமாக அகப்பார்வை உடையோருக்கு இதில் மாபெரும் படிப்பினை (பொதிந்து) இருக்கிறது.
3:13. (பத்ரு யுத்த களத்தில்) சந்தித்த இரு சேனைகளில் திட்டமாக உங்களுக்கோர் அத்தாட்சி இருந்தது. (அதில் ஒன்று) அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் சேனையுமாகும், மற்றொன்று (அல்லாஹ்வை) நிராகரிக்கக் கூடியது(மான சேனையு)மாகும். (நிராகரிப்போர்) தம்மை விட (முஸ்லீம்களான) அவர்களை இரு மடங்காகத் தங்கள் கண்களால் (நேரடியாகக்) கண்டனர். அல்லாஹ்வோ, தான் நாடியவர்களை தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; பார்வைகள் உடையோருக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கின்றது.
3:14
3:14 زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَـرْثِ‌ؕ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ‌ۚ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ‏
زُيِّنَ அலங்கரிக்கப்பட்டுள்ளது لِلنَّاسِ மக்களுக்கு حُبُّ நேசிப்பது الشَّهَوٰتِ விருப்பங்கள் مِنَ இருந்து النِّسَآءِ பெண்கள் وَالْبَـنِيْنَ இன்னும் ஆண் பிள்ளைகள் وَالْقَنَاطِيْرِ இன்னும் குவியல்கள் الْمُقَنْطَرَةِ குவிக்கப்பட்டவை مِنَ இருந்து الذَّهَبِ தங்கம் وَالْفِضَّةِ இன்னும் வெள்ளி وَالْخَـيْلِ இன்னும் குதிரைகள் الْمُسَوَّمَةِ அடையாளமிடப் பட்டவை وَالْاَنْعَامِ இன்னும் கால்நடைகள் وَالْحَـرْثِ‌ؕ இன்னும் விளை நிலம் ذٰ لِكَ இவை مَتَاعُ இன்பம் الْحَيٰوةِ வாழ்வின் الدُّنْيَا ۚ உலகம் وَاللّٰهُ அல்லாஹ் عِنْدَهٗ அவனிடம்தான் حُسْنُ அழகிய الْمَاٰبِ‏ தங்குமிடம்
3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.
3:14. பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளிகளின் பெரும் குவியல்கள், உயர்ந்த குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகள், பயிர் நிலங்கள் ஆகியவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. எனினும் இவை (அனைத்தும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே! அல்லாஹ்விடத்திலோ (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு.
3:14. பெண்கள், பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளியினாலான பெருங் குவியல்கள், உயர்ரகக் குதிரைகள், கால்நடைகள் மற்றும் வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றின் மீது மோகம் கொள்வது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் இவ்வுலகின் சில நாள் வாழ்க்கைக்குரிய சாதனங்களே ஆகும். திண்ணமாக அழகிய உறைவிடம் அல்லாஹ்விடம்தான் இருக்கின்றது.
3:14. பெண்கள், ஆண்மக்கள், பொன் வெள்ளிகளினால் சேர்த்து வைக்கப்பட்ட பெருங்குவியல்கள் அடையாளமிடப்பட்ட குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால் நடைகள், வேளாண்மை ஆகிய (மனதுக்கு) ஆசையூட்டப்பட்டவற்றை நேசிப்பது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை(யாவும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே. அல்லாஹ்வோ-அவனிடத்தில் (நிலையான) அழகிய திரும்பிச் செல்லுமிடம் உண்டு.
3:15
3:15 قُلْ اَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِّنْ ذٰ لِكُمْ‌ؕ لِلَّذِيْنَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَاَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّرِضْوَانٌ مِّنَ اللّٰهِ‌ؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِالْعِبَادِ‌ۚ‏
قُلْ கூறுவீராக اَؤُنَبِّئُكُمْ உங்களுக்கு நான் அறிவிக்கவா? بِخَيْرٍ சிறந்ததை مِّنْ ذٰ لِكُمْ‌ؕ இவற்றைவிட لِلَّذِيْنَ اتَّقَوْا அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கு عِنْدَ இடம் رَبِّهِمْ தங்கள் இறைவன் جَنّٰتٌ சொர்க்கங்கள் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ ஆறுகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَا அவற்றில் وَاَزْوَاجٌ இன்னும் மனைவிகள் مُّطَهَّرَةٌ பரிசுத்தமானவள் وَّرِضْوَانٌ இன்னும் பொருத்தம் مِّنَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَاللّٰهُ அல்லாஹ் بَصِيْرٌۢ உற்று நோக்குபவன் بِالْعِبَادِ‌ۚ‏ அடியார்களை
3:15. (நபியே!) நீர் கூறும்: “அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு; இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.
3:15. (நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘இவற்றைவிட மேலானதொன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? (இறைவனுக்குப்) பயந்து நடக்கிறவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (அங்கு அவர்களுக்குப்) பரிசுத்தமான மனைவிகளும் உண்டு. இன்னும், அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்.
3:15. (நபியே!) நீர் கூறும்: “இவற்றைவிடச் சிறந்தது எது என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? யார் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் சுவனங்கள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கேயே நிலையாகத் தங்கி வாழ்வார்கள். தூய்மையான மனைவியரும் உடனிருப்பர். அல்லாஹ்வின் உவப்பையும் பெறுவார்கள்.” அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் நடத்தையை ஆழ்ந்து கவனிப்பவனாக இருக்கின்றான்.
3:15. (நபியே! மனிதர்களிடம்) நீர் கூறுவீராக! (இவற்றைவிட மேலானதொன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கின்றார்களே அத்தகையவர்களுக்கு அவர்களின் இரட்சகனிடத்தில் சுவனபதிகள் உண்டு, அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றில் (அவர்கள்) நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள். (அங்கு அவர்களுக்குப்) பரிசுத்தமான மனைவியரும் (இவைகளன்றி, மகத்தான) அல்லாஹ்விடமிருந்து பொருத்தமும் உண்டு. மேலும் அல்லாஹ் தன் அடியார்களைப் பார்க்கிறவன்
3:16
3:16 اَلَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ‌ۚ‏
اَلَّذِيْنَ எவர்கள் يَقُوْلُوْنَ கூறுவார்கள் رَبَّنَاۤ எங்கள் இறைவா اِنَّنَاۤ நிச்சயமாக நாங்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் فَاغْفِرْ எனவே மன்னி لَنَا எங்களுக்கு ذُنُوْبَنَا எங்கள் பாவங்களை وَقِنَا இன்னும் எங்களை காப்பாற்று عَذَابَ வேதனையிலிருந்து النَّارِ‌ۚ‏ நரக நெருப்பின்
3:16. இத்தகையோர் (தம் இறைவனிடம்): “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” என்று கூறுவார்கள்.
3:16. இவர்கள் (தங்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம். ஆதலால், நீ எங்கள் பாவங்களை மன்னித்து (அருள் புரிந்து, நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை காப்பாற்றுவாயாக!'' என்றும் (தொடர்ந்து) பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்.
3:16. இவர்கள் பிரார்த்தனை புரிந்தவண்ணம் இருப்பார்கள்: “எங்களுடைய இறைவனே! திண்ணமாக நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களுடைய பாவங்களை நீ மன்னித்தருள்; இன்னும் நரக வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்!”
3:16. இத்தகையோர் “எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் (உன்னை) விசுவாசிக்கின்றோம். ஆதலால், நீ எங்களுக்கு எங்களுடைய பாவங்களை மன்னித்து (அருள் புரிந்து நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் நீ எங்களை (ஈடேற்றம் பெற)க்காத்தருள்வாயாக” என்றும்(பிரார்த்தித்துக்) கூறுவார்கள்.
3:17
3:17 اَلصّٰــبِرِيْنَ وَالصّٰدِقِــيْنَ وَالْقٰنِتِــيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ‏
اَلصّٰــبِرِيْنَ பொறுமையாளர்கள் وَالصّٰدِقِــيْنَ இன்னும் உண்மையாளர்கள் وَالْقٰنِتِــيْنَ இன்னும் பணிந்தவர்கள் وَالْمُنْفِقِيْنَ இன்னும் தர்மம்புரிபவர்கள் وَالْمُسْتَغْفِرِيْنَ இன்னும் மன்னிப்புக் கோருபவர்கள் بِالْاَسْحَارِ‏ இரவின்இறுதிகளில்
3:17. (இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.
3:17. (அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுகிறவர்களாகவும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பவர்களாகவும், தானம் செய்கிறவர்களாகவும், ‘ஸஹர்' நேரங்களில் (வைகறைப் பொழுதில் அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருகிறவர்களாகவும் இருக்கின்றனர்.
3:17. இவர்கள் பொறுமையாளர்களாகவும், உண்மையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும் மற்றும் (இறைவழியில் தாராளமாகச்) செலவழிப்பவர்களாகவும் இருப்பதுடன் பின்னிரவு நேரங்களில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பிற்காக இறைஞ்சுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
3:17. (இன்னும், அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மையாளர்களாகவும் (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பவர்களாகவும், தர்மம் செய்கின்றவர்களாகவும், “ஸஹர்” நேரங்களில் (அல்லாஹ்விடம் பாவ) மன்னிப்புக் கோருகின்றவர்களாகவும் இருப்பர்.
3:18
3:18 شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالْمَلٰٓٮِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَآٮِٕمًا ۢ بِالْقِسْطِ‌ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُؕ‏
شَهِدَ சாட்சி கூறினான் اللّٰهُ அல்லாஹ் اَنَّهٗ நிச்சயமாக அவன் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَۙ அவன் وَالْمَلٰٓٮِٕكَةُ இன்னும் வானவர்கள் وَاُولُوا الْعِلْمِ இன்னும் கல்விமான்கள் قَآٮِٕمًا ۢ بِالْقِسْطِ‌ؕ நீதத்தை நிலை நிறுத்துபவன் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا هُوَ அவனைத் தவிர الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُؕ‏ ஞானவான்
3:18. அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
3:18. (நபியே! நீதவானாகிய) அல்லாஹ் சாட்சி கூறுகிறான்: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் (இல்லவே) இல்லை.'' அப்படியே வானவர்களும் (வேதத்தை கற்றுத் தேர்ந்த) கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்றனர்; (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை.
3:18. வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதற்கு அல்லாஹ்வே சான்று பகர்கின்றான். மேலும், அந்த வல்லமைமிக்க நுண்ணறிவாளனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதற்கு வானவர்களும், அறிவுடையோரும் நேர்மையிலும் நீதியிலும் நிலைத்தவண்ணம் சான்று பகர்கின்றனர்.
3:18. (நபியே!) அல்லாஹ் சாட்சி கூறுகின்றான், “நிச்சயமாக அவன்-அவனைத்தவிர (வேறு) வணக்கத்திற்குரியவன் இல்லை” (அவ்வாறே) மலக்குகளும், (வேத ஞானம் பெற்ற) கல்விமான்களும் (சாட்சி கூறுகின்றனர்.) நீதத்தை நிலை நிறுத்தியவனாக (அல்லாஹ் சாட்சி கூறுகிறான்) “அவனைத் தவிர (வேறு) வணக்கத்திற்குரியவன் இல்லை, (அவனே யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.”
3:19
3:19 اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏
اِنَّ நிச்சயமாக الدِّيْنَ மார்க்கம் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் الْاِسْلَامُ இஸ்லாம் وَمَا اخْتَلَفَ மாறுபடவில்லை الَّذِيْنَ எவர்கள் اُوْتُوا கொடுக்கப்பட்டார்கள் الْكِتٰبَ வேதம் اِلَّا தவிர مِنْۢ بَعْدِ பின்னர் مَا جَآءَهُمُ அவர்களுக்கு வந்த الْعِلْمُ அறிவு بَغْيًا ۢ பொறாமையினால் بَيْنَهُمْ‌ؕ தங்களுக்கு மத்தியில் وَمَنْ இன்னும் எவர் يَّكْفُرْ நிராகரிப்பார் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَرِيْعُ விரைவானவன் الْحِسَابِ‏ கணக்கெடுப்பதில்
3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
3:19. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் அளிக்கப்பட்டவர்கள் (‘இதுதான் உண்மையான வேதம்' என்ற) ஞானம் அவர்களுக்கு கிடைத்த பின்னர் தங்களுக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே (இதற்கு) மாறுபட்டனர். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுடைய கணக்கை நிச்சயமாக அல்லாஹ் வெகு சீக்கிரத்தில் எடுப்பான்.
3:19. திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) வாழ்க்கை நெறி (தீன்) ஆகும். வேதம் அருளப்பட்டவர்கள் இந்த இஸ்லாமிய வாழ்க்கை நெறியிலிருந்து பிறழ்ந்து பல்வேறு வழிகளை மேற்கொண்டது, அவர்களுக்கு சத்தியம் இன்னதென்று தெளிவுபடுத்தப்படாததனால் அல்ல. மாறாக, தம்மிடம் மெய்யறிவு வந்த பிறகுதான் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டார்கள்; தங்களுக்கிடையே அநீதி இழைப்பதற்காக! மேலும் யாரேனும் அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அவர்களிடம் கணக்கு வாங்குவதில் திண்ணமாக அல்லாஹ் விரைவானவனாய் இருக்கின்றான்.
3:19. நிச்சயமாக, அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும். மேலும், வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கிடையே உள்ள (பிடிவாதம்) பொறாமையால் (இதுதான் உண்மையான மார்க்கம் என்ற) அறிவு அவர்களுக்கு வந்ததன் பின்னரே தவிர மாறுபடவில்லை. இன்னும், எவர் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கின்றாரோ-(அவரைப் பற்றி) நிச்சயமாக, அல்லாஹ் கணக்கெடுப்பதில் துரிதமானவன்.
3:20
3:20 فَاِنْ حَآجُّوْكَ فَقُلْ اَسْلَمْتُ وَجْهِىَ لِلّٰهِ وَمَنِ اتَّبَعَنِ‌ؕ وَقُلْ لِّلَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْاُمِّيّٖنَ ءَاَسْلَمْتُمْ‌ؕ فَاِنْ اَسْلَمُوْا فَقَدِ اهْتَدَوْا ‌ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ ‌ ؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِالْعِبَادِ‏
فَاِنْ حَآجُّوْكَ அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் فَقُلْ கூறுவீராக اَسْلَمْتُ பணியவைத்தேன் وَجْهِىَ என் முகத்தை لِلّٰهِ அல்லாஹ்வுக்கு وَمَنِ اتَّبَعَنِ‌ؕ இன்னும் என்னைப் பின்பற்றியவர்கள் وَقُلْ இன்னும் கூறுவீராக لِّلَّذِيْنَ எவர்களுக்கு اُوْتُوا الْكِتٰبَ வேதம் கொடுக்கப் பட்டார்கள் وَالْاُمِّيّٖنَ இன்னும் பாமரர்கள் ءَاَسْلَمْتُمْ‌ؕ பணிய வைக்கிறீர்களா? فَاِنْ اَسْلَمُوْا அவர்கள் பணியவைத்தால் فَقَدِ اهْتَدَوْا ۚ திட்டமாக நேர்வழி அடைவார்கள் وَاِنْ تَوَلَّوْا அவர்கள் திரும்பினால் فَاِنَّمَا عَلَيْكَ உம்மீது எல்லாம் الْبَلٰغُ  ؕ தெரிவிப்பதுதான் وَاللّٰهُ அல்லாஹ் بَصِيْرٌۢ உற்று நோக்குபவன் بِالْعِبَادِ‏ அடியார்களை
3:20. (இதற்கு பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக: “நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)” தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்: “நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா?” என்று கேளும்; அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான்.
3:20. (நபியே!) இதற்குப் பின்னும் அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வு(டைய கட்டளைகளு)க்கு முற்றிலும் தலை சாய்த்துவிட்டோம் என்று கூறி வேதமளிக்கப்பட்டவர்களையும், (சிலையை வணங்கும்) பாமரர்களையும் நோக்கி ‘‘நீங்களும் (அவ்வாறே) அல்லாஹ்வுக்குத் தலை சாய்க்கிறீர்களா?'' என்று கேட்பீராக. (அவ்வாறே) அவர்களும் தலைசாய்த்தால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள். அவர்கள் புறக்கணித்து விட்டால் (அதற்காக நீர் கவலைப்படாதீர். நம் தூதை அவர்களுக்குத்) தெரிவிப்பதுதான் உம் மீது கடமையாக இருக்கிறது. அல்லாஹ் (தன்) அடியார்களை உற்று நோக்குகிறான்.
3:20. (நபியே! இனி) அவர்கள் உம்மோடு தர்க்கம் புரிந்தால் அவர்களிடம், “நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வின் முன் அடிபணிந்து விட்டோம்” என்று கூறுவீராக! இன்னும் வேதம் அருளப்பட்டவர்களையும் வேதம் அருளப்படாதவர்களையும் நோக்கி, “நீங்களும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழ்வதை ஏற்றுக்கொண்டீர்களா?” என்று கேளுங்கள். அவர்கள் ஏற்றுக்கொண்டால் திண்ணமாக நேர்வழி அடைந்தவர்களாவர். அவர்கள் புறக்கணித்தாலோ (இறைத்தூதை அவர்களிடம்) எடுத் துரைப்பது மட்டுமே உம்மீது கடமையாகும். அல்லாஹ் தன் அடிமைகளின் செயற்பாடுகளை நன்கு பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
3:20. எனவே, (நபியே! இதற்குப்)பின்னும் அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் அப்போது (அவர்களிடம்) நான் என் முகத்தைத்திருப்பி அல்லாஹ்வு(டைய கட்டளைகளு)க்கு முற்றிலும் பணிந்து விட்டேன். (அவ்வாறே) என்னைப் பின்பற்றியவர்களும் (பணிந்து விட்டனர்) என்று கூறுவீராக! மேலும், வேதமளிக்கப்பட்டவர்களிடமும், பாமரர்களிடமும் “நீங்களும் (அவ்வாறே) அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்துவிட்டீர்களா” என்று கேட்பீராக; (அவ்வாறே) அவர்கள் பணிந்து விட்டால், திட்டமாக அவர்கள் நேரான வழியை அடைந்துவிட்டார்கள். அன்றியும் அவர்கள் புறக்கணித்துவிட்டால்-அதற்காக நீர் கவலைப்படாதீர்). உம்மீதுள்ள கடமையெல்லாம் (நம்முடைய தூதை) எத்திவைப்பதுதான். மேலும், அல்லாஹ் தன், அடியார்களைப் பார்க்கிறவன்.
3:21
3:21 اِنَّ الَّذِيْنَ يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ النَّبِيّٖنَ بِغَيْرِ حَقٍّۙ وَّيَقْتُلُوْنَ الَّذِيْنَ يَاْمُرُوْنَ بِالْقِسْطِ مِنَ النَّاسِۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَ لِيْمٍ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يَكْفُرُوْنَ நிராகரிக்கிறார்கள் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் وَيَقْتُلُوْنَ இன்னும் கொலை செய்கிறார்கள் النَّبِيّٖنَ நபிமார்களை بِغَيْرِ حَقٍّۙ நியாயமின்றி وَّيَقْتُلُوْنَ இன்னும் கொலை செய்கிறார்கள் الَّذِيْنَ எவர்கள் يَاْمُرُوْنَ ஏவுகிறார்கள் بِالْقِسْطِ நீதத்தை مِنَ النَّاسِۙ மக்களில் فَبَشِّرْهُمْ அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக بِعَذَابٍ வேதனையைக் கொண்டு اَ لِيْمٍ‏ துன்புறுத்தக்கூடியது
3:21. “நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும் மனிதர்களிடத்தில் நீதமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு” என்று (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
3:21. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து, நியாயமின்றி இறைத்தூதர்களையும், நீதத்தை ஏவுகின்ற (மற்ற) மனிதர்களையும் கொலை செய்கிறார்களோ அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக்கொண்டு (நபியே!) நற்செய்தி கூறுவீராக.
3:21. நிச்சயமாக யார் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களையும் நல்லொழுக்க அறிவுரைகளையும் ஏற்க மறுத்து, இறைத்தூதர்களை அநியாயமாகக் கொலை புரிகிறார்களோ, இன்னும் மனிதர்களில் நீதியைக் கைக்கொள்ளுமாறு ஏவியவர்களை கொலை செய்கின்றார்களோ, அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு எனும் “நற்செய்தி” சொல்வீராக!
3:21. நிச்சயமாக அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து, உரிமையின்றி நபிமார்களையும் கொலை செய்து, மனிதர்களில் நீதத்தைக் கொண்டு ஏவுகின்றோர்களையும் கொலை செய்கிறார்களே அத்தகையோர்-அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீர் நன்மாராயங்கூறுவீராக!
3:22
3:22 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ‏
اُولٰٓٮِٕكَ இவர்கள் الَّذِيْنَ எவர்கள் حَبِطَتْ அழிந்தன اَعْمَالُهُمْ இவர்களுடைய செயல்கள் فِى الدُّنْيَا இம்மையில் وَالْاٰخِرَةِ இன்னும் மறுமையில் وَمَا இன்னும் இல்லை لَهُمْ அவர்களுக்கு مِّنْ نّٰصِرِيْنَ‏ உதவியாளர்களில் ஒருவரும்
3:22. அவர்கள் புரிந்த செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் (பலனற்றவையாக) அழிந்து விட்டன; இன்னும் அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமிலர்.
3:22. இவர்கள் செய்த (நற்) செயல்கள் (அனைத்தும்) இம்மையிலும் மறுமையிலும் (எத்தகைய பலனுமின்றி, முற்றிலும்) அழிந்துவிட்டன. (மறுமையில்) இவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை.
3:22. இவர்களின் செயல்கள் இம்மை, மறுமை இரண்டிலும் வீணாகி விட்டன. மேலும் இவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்.
3:22. அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களுடைய செயல்கள் (யாவும்) இம்மையிலும், மறுமையிலும் (எத்தகைய பலனுமின்றி முற்றிலும்) அழிந்துவிட்டன. (மறுமையில்) அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமில்லை.
3:23
3:23 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يُدْعَوْنَ اِلٰى كِتٰبِ اللّٰهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ وَهُمْ مُّعْرِضُوْنَ‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? اِلَى الَّذِيْنَ اُوْتُوْا கொடுக்கப் பட்டவர்களை نَصِيْبًا ஒரு பகுதி مِّنَ الْكِتٰبِ வேதத்தில் يُدْعَوْنَ அழைக்கப் படுகிறார்கள் اِلٰى பக்கம் كِتٰبِ வேதம் اللّٰهِ அல்லாஹ்வின் لِيَحْكُمَ அது தீர்ப்பளிப்பதற்கு بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் ثُمَّ பிறகு يَتَوَلّٰى விலகிவிடுகிறார்(கள்) فَرِيْقٌ ஒரு பிரிவினர் مِّنْهُمْ அவர்களில் وَهُمْ இன்னும் அவர்கள் مُّعْرِضُوْنَ‏ புறக்கணிப்பவர்கள்
3:23. வேதத்திலும் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான யூதர்)களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களிடையே (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவார் (இதைப்) புறக்கணித்து விலகிக் கொண்டனர்.
3:23. (நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தைத் தீர்த்து வைக்க அவர்களிடமுள்ள) அல்லாஹ்வின் வேதத்தின் மூலமே தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் இதைப் புறக்கணித்து விலகிக் கொண்டார்கள்.
3:23. வேதத்திலிருந்து சிறிதளவு அறிவு கொடுக்கப்பட்டோரின் நிலை என்னவென்று நீர் கவனிக்கவில்லையா? அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் (வாருங்கள் என) அவர்கள் அழைக்கப்படும் போது, அவர்களில் ஒரு பிரிவினர் அதனைப் புறக்கணித்துத் திரும்பிச் செல்கிறார்கள்.
3:23. (நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீர் (கவனித்துப்) பார்க்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்க அல்லாஹ்வின் வேதத்தின்பால் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் (இதனைப் புறக்கணித்தவர்களாக திரும்பிச்செல்கின்றனர்.
3:24
3:24 ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَيَّامًا مَّعْدُوْدٰتٍ‌ وَغَرَّهُمْ فِىْ دِيْنِهِمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ‏
ذٰ لِكَ இது بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் قَالُوْا கூறினார்கள் لَنْ تَمَسَّنَا எங்களை அறவே தீண்டாது النَّارُ நரக நெருப்பு اِلَّاۤ தவிர اَيَّامًا நாட்கள் مَّعْدُوْدٰتٍ‌ எண்ணப்பட்டவை وَغَرّ இன்னும் ஏமாற்றிவிட்டது هُمْ அவர்களை فِىْ دِيْنِهِمْ அவர்களுடைய மார்க்கத்தில் مَّا எது كَانُوْا இருந்தார்கள் يَفْتَرُوْنَ‏ பொய் கூறுவார்கள்
3:24. இதற்குக் காரணம்: எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான்; (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றி விட்டது.
3:24. இதன் காரணம்: ‘‘சில நாள்களைத் தவிர நரகத்தின் நெருப்பு நிச்சயமாக எங்களைத் தீண்டாது'' என்று அவர்கள் கூறிக்கொண்டிருப்பதுதான். மேலும், தங்கள் மார்க்க (விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறி வந்ததும் அவர்களையே ஏமாற்றிவிட்டது.
3:24. அவர்களின் இந்நடத்தைக்குக் காரணம், “சில குறிப்பிட்ட நாட்களைத் தவிர நரக நெருப்பு எங்களைத் திண்ணமாகத் தீண்டாது” என்று அவர்கள் கூறி வந்ததேயாகும். தாமே இயற்றிக் கொண்ட கோட்பாடுகள்தாம் அவர்களின் சமய விவகாரங்களில் அவர்களைப் பல தவறான கருத்துகளில் உழல வைத்திருக்கின்றன.
3:24. இது “எண்ணிக் கணக்கிடப்பட்ட சில நாட்களைத் தவிர, (நரகத்தின்) நெருப்பு நிச்சயமாக ஒருபோதும் எங்களைத் தீண்டாது” என்று அவர்கள் கூறிக்கொண்டிருந்த காரணத்தினாலாகும். தங்கள் மார்க்க (விஷயத்தில், அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து (கூறி) வந்ததும் அவர்களை ஏமாற்றிவிட்டது.
3:25
3:25 فَكَيْفَ اِذَا جَمَعْنٰهُمْ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيْهِ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
فَكَيْفَ எப்படி? اِذَا جَمَعْنٰهُمْ நாம் அவர்களை ஒன்றுசேர்த்தால் لِيَوْمٍ ஒரு நாளில் لَّا அறவே இல்லை رَيْبَ சந்தேகம் فِيْهِ அதில் وَوُفِّيَتْ இன்னும் முழுமையாக அளிக்கப்பட்டால் كُلُّ نَفْسٍ எல்லா ஆத்மா مَّا எது كَسَبَتْ அது செய்தது وَهُمْ இன்னும் அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
3:25. சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
3:25. (நபியே!) சந்தேகமற்ற ஒரு (விசாரணை) நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து (அவர்களுடைய) ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குத் தக்க பலன் முழுமையாக அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்? அவர்கள் (தங்கள் பிரதிபலனை அடைவதில்) சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
3:25. ஆனால் ஐயமின்றி வரவிருக்கின்ற ஒருநாளில் நாம் அவர்களை ஒன்று திரட்டும்போது அவர்களின் நிலை என்னவாகும்? அந்நாளில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் சம்பாதித்ததற்குரிய கூலி முழுமையாய் வழங்கப்படும். மேலும் யார் மீதும் அநீதி இழைக்கப்படமாட்டாது.
3:25. (நபியே!) எது நடந்தேறுமென்ப)தில் சந்தேகமில்லையோ, அந்நாளைக்காக நாம் அவர்களை ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவும் அது சம்பாதித்தவற்றை (அதன் பலனை)ப்பூரணமாக அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எவ்வாறிருக்கும்? அவர்களும் (தங்கள் பிரதிபலனை அடைவதில் சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
3:26
3:26 قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌ ؕ بِيَدِكَ الْخَيْرُ‌ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
قُلِ கூறுவீராக اللّٰهُمَّ அல்லாஹ்வே مٰلِكَ உரிமையாளனே الْمُلْكِ ஆட்சிகளுக்கெல்லாம் تُؤْتِى கொடுக்கிறாய் الْمُلْكَ ஆட்சியை مَنْ எவர் تَشَآءُ நாடுகிறாய் وَتَنْزِعُ இன்னும் பறிக்கிறாய் الْمُلْكَ ஆட்சியை مِمَّنْ எவரிடமிருந்து تَشَآءُ நாடுகிறாய் وَتُعِزُّ இன்னும் கண்ணியப் படுத்துகிறாய் مَنْ எவர் تَشَآءُ நாடுகிறாய் وَتُذِلُّ இன்னும் இழிவுபடுத்துகிறாய் مَنْ எவர் تَشَآءُ‌ ؕ நாடுகிறாய் بِيَدِكَ உன் கையில்தான் الْخَيْرُ‌ؕ நன்மை اِنَّكَ நிச்சயமாக நீ عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
3:26. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
3:26. (நபியே! பிரார்த்தித்து) கூறுவீராக: ‘‘எங்கள் அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகிறாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகிறாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவாய்.
3:26. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடுகின்றவர்களுக்குக் கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. திண்ணமாக, நீ ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்.
3:26. (நபியே!) பிரார்த்தித்து) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே (இம்மை மறுமையின் சகல) ஆட்சிக்கும் அதிபதியே” நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய், நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகின்றாய். மேலும், நீ நாடியவரை கண்ணியப்படுத்துகின்றாய், இன்னும் நீ நாடியவரை இழிவு படுத்துகின்றாய் நன்மை(யாவும்) உன் கைவசமே (இருக்கின்றது). நிச்சயமாக, நீ ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
3:27
3:27 تُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ‌ وَتُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ‌ وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏
تُوْلِجُ நுழைக்கிறாய் الَّيْلَ இரவை فِى النَّهَارِ பகலில் وَتُوْلِجُ இன்னும் நுழைக்கிறாய் النَّهَارَ பகலை فِى الَّيْلِ‌ இரவில் وَتُخْرِجُ இன்னும் வெளியாக்குகிறாய் الْحَـىَّ உயிருள்ளதை مِنَ الْمَيِّتِ இறந்ததிலிருந்து وَتُخْرِجُ இன்னும் வெளியாக்குகிறாய் الْمَيِّتَ இறந்ததை مِنَ الْحَـىِّ‌ உயிருள்ளதிலிருந்து وَتَرْزُقُ இன்னும் வழங்குகிறாய் مَنْ تَشَآءُ நீ நாடியவருக்கு بِغَيْرِ حِسَابٍ‏ கணக்கின்றி
3:27. (நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்; நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்; மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்; நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்; மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.
3:27. நீதான் இரவைப் பகலில் நுழையவைக்கிறாய். நீதான் பகலை இரவில் நுழையவைக்கிறாய். இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குவதும் நீயே! உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குவதும் நீயே! நீ விரும்பியவர்களுக்கு கணக்கின்றியே அளிக்கிறாய்.''
3:27. நீயே இரவைப் பகலில் கோக்கச் செய்கின்றாய்; மேலும் பகலை இரவிலும் கோக்கச் செய்கின்றாய்; இன்னும் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளியாக்குகின்றாய். மேலும் நீ நாடுபவர்களுக்குக் கணக்கின்றி வழங்குகின்றாய்.”
3:27. “நீ இரவைப் பகலில் நுழையச் செய்கின்றாய், இன்னும் நீ பகலை இரவில் நுழையச் செய்கின்றாய், உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும் நீயே வெளியாக்குகின்றாய், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் நீயே வெளியாக்குகின்றாய், மேலும் நீ நாடியவர்களுக்குக் கணக்கின்றியே அளிக்கின்றாய்.”
3:28
3:28 لَا يَتَّخِذِ الْمُؤْمِنُوْنَ الْكٰفِرِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ‌ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ فَلَيْسَ مِنَ اللّٰهِ فِىْ شَىْءٍ اِلَّاۤ اَنْ تَتَّقُوْا مِنْهُمْ تُقٰٮةً  ؕ وَيُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ‌ ؕوَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ‏
لَا يَتَّخِذِ எடுத்துக் கொள்ள வேண்டாம் الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களை اَوْلِيَآءَ பாதுகாவலர்களாக مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ‌ۚ நம்பிக்கையாளர்களைத் தவிர وَمَنْ இன்னும் எவர் يَّفْعَلْ ذٰ لِكَ இதை செய்வார் فَلَيْسَ அவர் இல்லை مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் فِىْ شَىْءٍ எதிலும் اِلَّاۤ தவிர اَنْ تَتَّقُوْا நீங்கள் அஞ்சுவது مِنْهُمْ அவர்களை تُقٰٮةً  ؕ அஞ்சுதல்(கடுமையாக) وَيُحَذِّرُكُمُ இன்னும் எச்சரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் نَفْسَهٗ‌ தன்னை ؕوَاِلَى اللّٰهِ இன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான் الْمَصِيْرُ‏ மீளுமிடம்
3:28. முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.
3:28. நம்பிக்கையாளர்கள் (தங்களைப் போன்ற) நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவே தவிர எவரேனும் இவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கிறான். (நீங்கள்) அல்லாஹ்விடம்தான் (இறுதியாகச்) செல்ல வேண்டியதிருக்கிறது.
3:28. இறைநம்பிக்கையாளர்கள், (தங்களைப் போன்ற) நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்போரை (ஒருபோதும் தம்) நேசர்களாய், ஆதரவாளர்களாய் ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களுடைய கொடுமைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி! உங்களில் எவரேனும் அவ்வாறு நட்புகொண்டால், அவர்களுக்கு அல்லாஹ்வுடன் எத்தகைய தொடர்பும் இல்லை. மேலும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான். இன்னும் அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.
3:28. விசுவாசிகள் (தங்களைப்போன்ற) விவசுவாசிகளையன்றி, நிராகரிப்போரை(த் தங்களுக்கு)ப் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து (தங்களைக்) காப்பாற்றிக் கொள்வதை நீங்கள் பயந்தாலன்றி, எவரேனும் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை; மேலும் அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான்; அல்லாஹ்விடமே மீளுதலும் இருக்கின்றது.
3:29
3:29 قُلْ اِنْ تُخْفُوْا مَا فِىْ صُدُوْرِكُمْ اَوْ تُبْدُوْهُ يَعْلَمْهُ اللّٰهُ‌ؕ وَيَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِؕ‌ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
قُلْ கூறுவீராக اِنْ تُخْفُوْا நீங்கள் மறைத்தாலும் مَا எதை فِىْ صُدُوْرِكُمْ உங்கள் நெஞ்சங்களில் اَوْ அல்லது تُبْدُوْهُ அதை வெளிப்படுத்தினாலும் يَعْلَمْهُ அதைஅறிவான் اللّٰهُ‌ؕ அல்லாஹ் وَيَعْلَمُ இன்னும் அறிவான் مَا எதை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَمَا فِى الْاَرْضِؕ‌ இன்னும் பூமியில் உள்ளது وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
3:29. (நபியே!) நீர் கூறும்: “உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்; இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.”
3:29. (நபியே!) கூறுவீராக: உங்கள் மனங்களில் நீங்கள் மறைத்துக் கொண்டாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். (இது மட்டிலுமா?) வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் அறிகிறான். (அறிவது மட்டுமல்ல) அல்லாஹ் (இவை) அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.
3:29. நபியே! (மக்களை) எச்சரிப்பீராக: “உங்களின் நெஞ்சங்களில் இருப்பவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அவற்றை நன்கறிகின்றான்.” மேலும், வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றை அவன் அறிகின்றான். அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்.
3:29. “உங்கள் நெஞ்சங்களில் இருப்பதை நீங்கள் மறைத்தாலும் அல்லது அதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அதை அறிவான்; (என்றும்) வானங்களில் மற்றும், பூமியில் உள்ளவற்றை அவன் அறிவான்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக! மேலும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
3:30
3:30 يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُّحْضَرًا ۖۚ ۛ وَّمَا عَمِلَتْ مِنْ سُوْٓءٍ ۚۛ  تَوَدُّ لَوْ اَنَّ بَيْنَهَا وَبَيْنَهٗۤ اَمَدًاۢ بَعِيْدًا ‌ؕ وَيُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ‌ؕ وَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ ‏
يَوْمَ நாள் تَجِدُ பெற்றுக்கொள்ளும் كُلُّ ஒவ்வொரு نَفْسٍ ஆத்மா مَّا எதை عَمِلَتْ (அது) செய்தது مِنْ خَيْرٍ நன்மையில் مُّحْضَرًا ۖۚ ۛ சமர்ப்பிக்கப்பட்டதாக وَّمَا இன்னும் எது عَمِلَتْ செய்தது مِنْ سُوْٓءٍ ۚۛ தீமையில் تَوَدُّ விரும்பும் لَوْ இருக்க வேண்டுமே! اَنَّ நிச்சயமாக بَيْنَهَا அதற்கு மத்தியில் وَبَيْنَهٗۤ இன்னும் அதற்கு மத்தியில் اَمَدًاۢ தூரம் بَعِيْدًا ‌ؕ நீண்ட وَيُحَذِّرُكُمُ இன்னும் உங்களை எச்சரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் نَفْسَهٗ‌ؕ தன்னை وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் رَءُوْفٌۢ மிக இரக்கமுடையவன் بِالْعِبَادِ ‏ அடியார்களிடம்
3:30. ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன் முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்; அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்; இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்.
3:30. ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து) தனக்கும், தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே? என்று விரும்பும். ஆகவே, அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப்பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கிறான். (ஏனென்றால்,) அல்லாஹ் (தன்) அடியார்களிடம் மிக்க இரக்கமுடையவன் ஆவான்.
3:30. ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த நன்மைகளும், தான் செய்த தீமைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதைக் காணும் நாள் வந்தே தீரும். அப்போது, “அந்தோ! தனக்கும் அந்நாளுக்குமிடையே மிக தூரமான இடைவெளி இருந்திருக்கக் கூடாதா!” என மனிதன் ஆவலுறுவான். அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான். மேலும் அல்லாஹ் தன் அடிமைகள் மீது மிகவும் இரக்கமுள்ளவனாய் இருக்கின்றான்.
3:30. ஓவ்வோர் ஆத்மாவும் நன்மையில் தான் செய்தவற்றையும், தீமையில் தான் செய்தவற்றையும் தன் முன் ஆஜராக்கப்பட்டதாகப் பெறும் (அந்)நாளில், அது தான் செய்தவைகளுக்கும் தனக்கும் மத்தியில் வெகுதூரம் இருந்திருக்க வேண்டுமே என விரும்பும். அன்றியும், அல்லாஹ் தன்னைப் பற்றி (அவனது தண்டனையை நினைவு கூருமாறு) உங்களை எச்சரிக்கை செய்கிறான். இன்னும், அல்லாஹ் (தன்) அடியார்கள் மீது மிக்க இரக்கமுடையவன்.
3:31
3:31 قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
قُلْ கூறுவீராக اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تُحِبُّوْنَ நேசிப்பீர்கள் اللّٰهَ அல்லாஹ்வை فَاتَّبِعُوْنِىْ என்னைப் பின்பற்றுங்கள் يُحْبِبْكُمُ உங்களைநேசிப்பான் اللّٰهُ அல்லாஹ் وَيَغْفِرْ இன்னும் மன்னிப்பான் لَـكُمْ உங்களுக்கு ذُنُوْبَكُمْؕ‌ உங்கள் பாவங்களை وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
3:31. (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
3:31. (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவன், பெரும் கருணையாளன் ஆவான்.''
3:31. (நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் பெருங்கருணையுடையவனுமாவான்.”
3:31. (நபியே! மனிதர்களிடம்,) நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின்பற்றுங்கள்; (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்துவிடுவான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
3:32
3:32 قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ‌‌ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ‏
قُلْ கூறுவீராக اَطِيْعُوا கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَالرَّسُوْلَ‌ ۚ இன்னும் தூதருக்கு فَاِنْ تَوَلَّوْا (நீங்கள்) திரும்பினால் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களை
3:32. (நபியே! இன்னும்) நீர் கூறும்: “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.
3:32. (நபியே! மேலும்,) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படியுங்கள். நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை''.
3:32. (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.” பிறகு அவர்கள் (உம்முடைய இந்த அழைப்பை) புறக்கணிப்பார்களாயின் திண்ணமாக அல்லாஹ் (தனக்கும் தன் தூதருக்கும் கீழ்ப்படிய) மறுப்பவர்களை நேசிக்க மாட்டான்.
3:32. (நபியே! மேலும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வுக்கும் (அவனுடைய) தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடங்கள். பின்னர் அவர்கள் புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரை நேசிக்கமாட்டான்.
3:33
3:33 اِنَّ اللّٰهَ اصْطَفٰۤى اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِيْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَى الْعٰلَمِيْنَۙ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் اصْطَفٰۤى தேர்ந்தெடுத்தான் اٰدَمَ ஆதமை وَنُوْحًا இன்னும் நூஹை وَّاٰلَ இன்னும் குடும்பத்தை اِبْرٰهِيْمَ இப்றாஹீமின் وَاٰلَ عِمْرٰنَ இன்னும் இம்ரானின் குடும்பத்தை عَلَى الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தாரை விட
3:33. ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
3:33. நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், (அவருக்குப் பின்னர்) நூஹையும் இப்ராஹீமுடைய குடும்பத்தையும், இம்ரானுடைய குடும்பத்தையும் அகிலத்தாரைவிட மேலாக (உயர்வாக) தேர்ந்தெடுத்தான்.
3:33. திண்ணமாக அல்லாஹ், அகிலத்தார்களைக் காட்டிலும் (முன்னுரிமை வழங்கி தனது தூதுப் பணிக்காக) ஆதத்தையும், நூஹையும், இப்ராஹீமின் வழித்தோன்றல்களையும், இம்ரானின் வழித்தோன்றல்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
3:33. நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், நூஹையும், இப்ராஹீமுடைய குடும்பத்தினரையும், இம்ரானுடைய குடும்பத்தினரையும் அகிலத்தாரைவிட மேலாகத் தேர்ந்தெடுத்தான்.
3:34
3:34 ذُرِّيَّةًۢ بَعْضُهَا مِنْۢ بَعْضٍ‌ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‌ۚ‏
ذُرِّيَّةًۢ ஒரு சந்ததி بَعْضُهَا அதில் சிலர் مِنْۢ بَعْضٍ‌ؕ சிலரைச் சேர்ந்தவர் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌ‌ۚ‏ நன்கறிந்தவன்
3:34. (அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
3:34. அவர்களில் ஒருவர் மற்றவருடைய சந்ததிதான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கு செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்.
3:34. இவர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய வழித்தோன்றல்களாவர். அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும், நன்கறிபவனுமாய் இருக்கின்றான்.
3:34. அவற்றில் சில, சிலரிலுள்ள சந்ததிதான். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
3:35
3:35 اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرٰنَ رَبِّ اِنِّىْ نَذَرْتُ لَـكَ مَا فِىْ بَطْنِىْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّىْ ۚ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‌‏
اِذْ قَالَتِ கூறியசமயம் امْرَاَتُ மனைவி عِمْرٰنَ இம்ரானுடைய رَبِّ என் இறைவா اِنِّىْ நிச்சயமாக நான் نَذَرْتُ நேர்ச்சை செய்தேன் لَـكَ உனக்கு مَا எது فِىْ بَطْنِىْ என் வயிற்றில் مُحَرَّرًا அர்ப்பணிக்கப்பட்டதாக فَتَقَبَّلْ ஆகவே ஏற்றுக்கொள் مِنِّىْ ۚ என்னிடமிருந்து اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‌‏ மிக அறிந்தவன்
3:35. இம்ரானின் மனைவி “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறியதையும்-
3:35. இம்ரானுடைய மனைவி (கர்ப்பமானபொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (பிரார்த்தனைகளை) நன்கு செவியுறுபவன், (மனதில் உள்ளவற்றை) நன்கறிபவன்'' என்று (பிரார்த்தித்துக்) கூறியபின்,
3:35. இம்ரானைச் சார்ந்த பெண் “என் இறைவனே! நான் எனது வயிற்றில் இருக்கும் குழந்தையை உனது திருப்பணிக்காக அர்ப்பணிக்க நேர்ச்சை செய்துள்ளேன். எனவே இதனை (காணிக்கையை) என்னிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! திண்ணமாக நீ நன்கு செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று இறைஞ்சிக் கொண்டிருந்ததையும் அல்லாஹ் செவியுற்றவனாகவே இருந்தான்.
3:35. இம்ரானுடைய மனைவி (கர்ப்பமானபொழுது ஆண்குழந்தை பெற விரும்பி இரட்சகனிடம்,) “என் இரட்சகனே! நிச்சயமாக நான் என் வயிற்றிலுள்ளதை உனக்காக உரிமை விடப்பட்டதாக நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால் (அதனை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (பிரார்த்தனைகளைச்) செவியுறுகிறவன், (மனத்திலுள்ளவற்றை) நன்கறிகிறவன்” என்று) பிரார்த்தித்துக் கூறியதை (நினைவு கூர்வீராக!)
3:36
3:36 فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّىْ وَضَعْتُهَاۤ اُنْثٰىؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْؕ وَ لَيْسَ الذَّكَرُ كَالْاُنْثٰى‌‌ۚ وَاِنِّىْ سَمَّيْتُهَا مَرْيَمَ وَاِنِّىْۤ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ‏
فَلَمَّا போது وَضَعَتْهَا அவளைப் பெற்றெடுத்தாள் قَالَتْ கூறினாள் رَبِّ என் இறைவா اِنِّىْ நிச்சயமாக நான் وَضَعْتُهَاۤ அவளைப் பெற்றெடுத்தேன் اُنْثٰىؕ ஒரு பெண்ணாக وَاللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا وَضَعَتْؕ அவள் பெற்றெடுத்ததை وَ لَيْسَ இன்னும் இல்லை الذَّكَرُ ஆண் كَالْاُنْثٰى‌ۚ பெண்ணைப்போன்று وَاِنِّىْ இன்னும் நிச்சயமாக நான் سَمَّيْتُهَا அவளுக்குப் பெயரிட்டேன் مَرْيَمَ மர்யம் وَاِنِّىْۤ இன்னும் நிச்சயமாக நான் اُعِيْذُهَا அவளை பாதுகாக்கிறேன் بِكَ உன்னைக்கொண்டு وَذُرِّيَّتَهَا இன்னும் அவளுடைய சந்ததியை مِنَ இருந்து الشَّيْطٰنِ ஷைத்தான் الرَّجِيْمِ‏ விரட்டப்பட்டவன்
3:36. (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
3:36. அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது ‘‘என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றேன்'' என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ்(தான்) நன்கறிவான். (பிறகு இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு ‘மர்யம்' எனப் பெயரிட்டேன். அதையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனைகளி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக்கிறேன்!'' (என்றார்.)
3:36. பிறகு அவள் அதைப் (பெண் குழந்தையாகப்) பெற்றெடுத்தபோது கூறினாள்: “என் இறைவா! நான் அதைப் பெண் குழந்தையாய்ப் பெற்றுவிட்டேனே!” ஆயினும் அவள் எதைப் பெற்றெடுத்தாளோ அதைப் பற்றி அல்லாஹ் மிகவும் அறிந்தவன் “மேலும் ஆண் குழந்தை, பெண் குழந்தையைப் போலன்று; நான் அக்குழந்தைக்கு ‘மர்யம்’ எனப் பெயர் சூட்டியுள்ளேன். மேலும் நான் அக்குழந்தைக்காகவும் அதன் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தா(னின் தீங்கி)னை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.”
3:36. பின்னர், அதனை அவள் (தன் விருப்பத்திற்கு மாறாக ஒரு பெண்குழந்தையாகப்) பெற்றபோது, “என் இரட்சகனே! நிச்சயமாகவே நான் (என் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண்ணையே பெற்றுள்ளேன்” என்று கூறினாள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ்வே மிக்க அறிந்தவன். ஆயினும், ஆண் (இந்தப்) பெண்ணைப் போன்றதல்ல, (பிறகு இம்ரானின் மனைவி) “நிச்சயமாக நான் அதற்கு மர்யம் எனப் பெயரிட்டுள்ளேன். அதனையும் அதன் சந்ததியையும், வெருட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனைகளி)லிருந்து உன்னிடம் நிச்சயமாக நான் காக்கத் தேடுகிறேன்!” என்றாள்.
3:37
3:37 فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِيَّا ‌ؕ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ‌ۚ‌ قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا ؕ‌ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏
فَتَقَبَّلَهَا ஆகவே அவளை ஏற்றான் رَبُّهَا அவளுடைய இறைவன் بِقَبُوْلٍ ஏற்பாக حَسَنٍ அழகியது وَّاَنْۢبَتَهَا இன்னும் அவளை வளர்த்தான் نَبَاتًا வளர்ப்பாக حَسَنًا ۙ அழகியது وَّكَفَّلَهَا இன்னும் அவளுக்கு பொறுப்பாளராக்கினான் زَكَرِيَّا ؕ ஸகரிய்யாவை كُلَّمَا دَخَلَ நுழையும் போதெல்லாம் عَلَيْهَا அவளிடம் زَكَرِيَّا ஸகரிய்யா الْمِحْرَابَۙ மாடத்தில் وَجَدَ பெற்றார் عِنْدَهَا அவளிடம் رِزْقًا ۚ‌ ஓர் உணவை قَالَ கூறினார் يٰمَرْيَمُ மர்யமே! اَنّٰى எங்கிருந்து? لَـكِ உனக்கு هٰذَا ؕ‌ இது قَالَتْ கூறினாள் هُوَ இது مِنْ عِنْدِ اللّٰهِ‌ؕ அல்லாஹ்விடமிருந்து اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَرْزُقُ வழங்குவான் مَنْ எவர் يَّشَآءُ நாடுகிறான் بِغَيْرِ حِسَابٍ‏ கணக்கின்றி
3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.
3:37. ஆகவே, அவருடைய இறைவன் அதை அன்பாய் அங்கீகரித்து பரிசுத்தமாகவும், அழகாகவும் அதை வளரச் செய்து அதை (வளர்க்க) ஜகரிய்யா பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் செய்தான். ஜகரிய்யா அப்பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும் போதெல்லாம், அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு ‘‘மர்யமே! இது உனக்கு ஏது? (எங்கிருந்து வந்தது?)'' என்று கேட்பார். அதற்கவள் ‘‘இது அல்லாஹ்விடமிருந்துதான் (வருகிறது). ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கிறான்'' என்று கூறுவாள்.
3:37. ஆகவே அவளுடைய இறைவன் அ(ந்தப் பெண் குழந்தை)தனை அன்போடு ஏற்றுக்கொண்டான். மேலும் அதைச் சிறப்புடன் வளர்த்தான். ஜகரிய்யாவை அக்குழந்தைக்குப் பாதுகாவலராகவும் ஆக்கினான். மர்யம் இருந்த மாடத்தினுள் ஜகரிய்யா செல்லும் போதெல்லாம், ஏதேனும் உணவுப் பொருள் அவளிடத்தில் இருப்பதைக் காண்பார். “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” எனக் கேட்பார். “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. தான் நாடியவர்களுக்குத் திண்ணமாக அல்லாஹ் கணக்கின்றி வழங்குகின்றான்” என்று மர்யம் பதிலுரைப்பார்.
3:37. ஆகவே, அவளுடைய இரட்சகன் அவளை அழகான முறையில் அங்கீகரித்து (பரிசுத்தமாகவும்) அழகான வளர்ச்சியாகவும் அவளை வளரச்செய்தான். மேலும், அவளுக்கு (பாதுகாவலராக) ஜகரிய்யாவைப் பொறுப்பேற்கச் செய்தான். ஜகரிய்யா அவளிடம் மாடத்திற்குள் நுழையும்போதெல்லாம் அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப்பொருள் இருப்பதைக் கண்டு “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று கேட்டார் அ(தற்க)வள் “இது அல்லாஹ்விடமிருந்துதான் (வருகின்றது ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்” என்று கூறினாள்.
3:38
3:38 هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهٗ‌ ‌ۚ قَالَ رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً‌ ‌ ۚ اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ‏
هُنَالِكَ அவ்விடத்தில் دَعَا பிரார்த்தித்தார் زَكَرِيَّا ஸகரிய்யா رَبَّهٗ‌ ۚ அவரின் இறைவனை قَالَ கூறினார் رَبِّ என் இறைவா هَبْ لِىْ எனக்கு தா! مِنْ لَّدُنْكَ உன் புறத்திலிருந்து ذُرِّيَّةً ஒரு சந்ததியை طَيِّبَةً‌  ۚ اِنَّكَ நல்லது/நிச்சயமாக நீ سَمِيْعُ நன்கு செவியுறுபவன் الدُّعَآءِ‏ பிரார்த்தனை
3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
3:38. (அப்பொழுது) ஜகரிய்யா, அவ்விடத்தில் (தனக்காகத்) தன் இறைவனிடம் பிரார்த்தித்து ‘‘என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவன்'' என்று கூறினார்.
3:38. அங்கு இந்நிலையைக் கண்ட ஜகரிய்யா தம் இறைவனிடம் இறைஞ்சினார்: “என் இறைவனே! எனக்குத் தூய ஒரு வழித் தோன்றலை உனது ஆற்றலால் வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பிரார்த்தனையைச் செவியேற்பவன்!”
3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா, தன் இரட்சகனை (பிரார்த்தித்து) அழைத்தார். “என் இரட்சகனே! உன்பாலிருந்து எனக்கொரு பரிசுத்தமான சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியுறுகிறவன்” என்று கூறினார்.
3:39
3:39 فَنَادَتْهُ الْمَلٰٓٮِٕكَةُ وَهُوَ قَآٮِٕمٌ يُّصَلِّىْ فِى الْمِحْرَابِۙ اَنَّ اللّٰهَ يُبَشِّرُكَ بِيَحْيٰى مُصَدِّقًۢا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَيِّدًا وَّحَصُوْرًا وَّنَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ‏
فَنَادَتْهُ ஆகவேஅழைத்தா(ர்க)ள் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் وَهُوَ قَآٮِٕمٌ அவர் நின்று தொழுதுகொண்டிருக்க يُّصَلِّىْ தொழுகிறார் فِى الْمِحْرَابِۙ மாடத்தில் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُبَشِّرُكَ உமக்கு நற்செய்தி கூறுகிறான் بِيَحْيٰى யஹ்யாவைக் கொண்டு مُصَدِّقًۢا உண்மைப்படுத்துபவராக بِكَلِمَةٍ ஒரு வாக்கியத்தை مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَسَيِّدًا இன்னும் தலைவராக وَّحَصُوْرًا இன்னும் இன்பத்தைத் துறந்தவராக وَّنَبِيًّا இன்னும் நபியாக مِّنَ الصّٰلِحِيْنَ‏ நல்லோரைச்சேர்ந்தவர்
3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர்.
3:39. ஆகவே, அவர் மாடத்தி(‘மிஹ்ராப்')ல் நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) வானவர்கள் சப்தமிட்டுக் கூறினார்கள்: (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் ‘யஹ்யா' (என்ற ஒரு மக)வை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகிறான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை (முன்னறிக்கையை) உண்மைப்படுத்திவைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார்.
3:39. அதற்கு மறுமொழியாக அவர், மிஹ்ராபில் மாடத்தினுள் நின்று தொழுது கொண்டிருக்கும்போது, வானவர்கள் குரல் கொடுத்தார்கள்: “அல்லாஹ் உமக்கு யஹ்யா (என்ற மக)வைக் கொண்டு நிச்சயமாக நற்செய்தி சொல்கின்றான். அவர் அல்லாஹ்விடமிருந்து வரப்போகும் ஒரு வாக்கினை, மெய்ப்படுத்தக் கூடியவராய் விளங்குவார். மேலும், அவரிடம் தலைமைத்துவம் மற்றும் மகத்துவத்தின் பண்புகள் காணப்படும். மனக்கட்டுப்பாடு கொண்டவராகவும் இருப்பார்; நபித்துவம் அருளப்பட்டவராகவும் இருப்பார். மேலும் ஒழுக்க சீலர்களில் ஒருவராகவும் திகழ்வார்.”
3:39. பின்னர் மாடத்தில் நின்று அவர் தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரிடம்) மலக்குகள், (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ், யஹ்யா (என்ற ஒரு மக)வை உமக்கு (அளிப்பதாக) நன்மாராயங் கூறுகின்றான். அவர்(தகப்பனின்றி) அல்லாஹ்விடமிருந்து(ள்ள) ஒரு வார்த்தையை(க் கொண்டு உண்டாகக் கூடிய ஈஸா நபியை_முன்னறிக்கையாக) உண்மைப் படுத்தக் கூடியவராகவும், (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண் இன்பத்தைத்)துறந்தவராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” என்று (கூறி) அவரை சப்தமிட்டு அழைத்தனர்.
3:40
3:40 قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّقَدْ بَلَغَنِىَ الْكِبَرُ وَامْرَاَتِىْ عَاقِرٌ‌ؕ قَالَ كَذٰلِكَ اللّٰهُ يَفْعَلُ مَا يَشَآءُ‏
قَالَ கூறினார் رَبِّ என் இறைவா! اَنّٰى எவ்வாறு يَكُوْنُ உண்டாகும் لِىْ எனக்கு غُلٰمٌ ஒரு குழந்தை وَّقَدْ بَلَغَنِىَ என்னையோ அடைந்து விட்டிருக்க الْكِبَرُ முதுமை وَامْرَاَتِىْ இன்னும் என்மனைவியோ عَاقِرٌ‌ؕ மலடி قَالَ கூறினான் كَذٰلِكَ இவ்வாறு اللّٰهُ அல்லாஹ் يَفْعَلُ செய்வான் مَا எதை يَشَآءُ‏ நாடுகிறான்
3:40. அவர் கூறினார்: “என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது; என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;” அதற்கு (இறைவன்), “அவ்வாறே நடக்கும்; அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்” என்று கூறினான்.
3:40. (அதற்கு) ஜகரிய்யா (அல்லாஹ்வை நோக்கி) ‘‘என் இறைவனே! எனக்கு எப்படி சந்ததி உண்டாகும். நிச்சயமாக நானோ முதுமையை அடைந்துவிட்டேன். என் மனைவியோ மலடியாயிருக்கிறாள்'' என்று கூறினார். (அதற்கு இறைவன்) ‘‘இப்படியே (நடைபெறும்). அல்லாஹ், தான் விரும்பியதை (அவசியம்) செய்(தே தீரு)வான்'' என்று கூறினான்.
3:40. ஜகரிய்யா வினவினார்: “என் இறைவா! எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்? நானோ முதுமையடைந்து விட்டேன்; என் மனைவியோ மலடியாய் இருக்கின்றாள்.” அதற்கு இறைவன் “இவ்வாறே நடைபெறும்! அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைச் செய்(தே தீரு)வான்” என்று பதிலளித்தான்.
3:40. (அதற்கு ஜகரிய்யாவாகிய) அவர் (அல்லாஹ்விடம்,) என் இரட்சகனே! எனக்கு எவ்வாறு மகன் உண்டாக முடியும்? நிச்சயமாக முதுமையும் என்னை அடைந்துவிட்டது. என் மனைவியோ மலடியாயிருக்கின்றாள்!” என்று கூறினார். “அவ்வாறே (நடைபெறும்), அல்லாஹ் தான் நாடியதை (அவசியம்) செய்(தே தீரு)வான் என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
3:41
3:41 قَالَ رَبِّ اجْعَلْ لِّىْۤ اٰيَةً ‌ؕ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَيَّامٍ اِلَّا رَمْزًا ؕ‌ وَاذْكُرْ رَّبَّكَ كَثِيْرًا وَّسَبِّحْ بِالْعَشِىِّ وَالْاِبْكَارِ‏
قَالَ கூறினார் رَبِّ என் இறைவா اجْعَلْ ஆக்கு لِّىْۤ எனக்கு اٰيَةً ؕ ஓர் அத்தாட்சியை قَالَ கூறினான் اٰيَتُكَ உம் அத்தாட்சி اَلَّا تُكَلِّمَ நீர் பேசமால் இருப்பது النَّاسَ மக்களிடம் ثَلٰثَةَ اَيَّامٍ மூன்று நாட்கள் اِلَّا தவிர رَمْزًا ؕ‌ சாடையாக وَاذْكُرْ இன்னும் நினைவு கூறுவீராக رَّبَّكَ உம் இறைவனை كَثِيْرًا அதிகம் وَّسَبِّحْ இன்னும் துதித்து தூய்மைப்படுத்துவீராக بِالْعَشِىِّ மாலையில் وَالْاِبْكَارِ‏ இன்னும் காலையில்
3:41. “என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது: மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!” என்று கூறினான்.
3:41. (அதற்கு) ஜகரிய்யா ‘‘என் இறைவனே! இதற்கு எனக்கொரு அத்தாட்சி அளிப்பாயாக'' என்று கேட்டார். அதற்கு (இறைவன்) ‘‘உமக்கு அளிக்கப்படும் அத்தாட்சியாவது மூன்று நாள்கள் வரை ஜாடையாகவே தவிர நீர் மனிதர்களுடன் பேசமாட்டீர். (அந்நாள்களில்) நீர் உமது இறைவனை அதிகமாக நினைத்துக் கொண்டும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதிசெய்து கொண்டும் இருப்பீராக'' என்று கூறினான்.
3:41. அதற்கு அவர், “என் இறைவனே! எனக்கு ஓர் அடையாளத்தை நிர்ணயம் செய்!” என்று (பணிந்து) கேட்டார். அதற்கு, “நீர் மூன்று நாட்கள் வரை சைகையினாலே அன்றி மக்களிடம் பேச மாட்டீர் (பேச இயலாது) என்பதே அடையாளமாகும். இக்கால கட்டத்தில் உம் இறைவனை அதிகமாய் நினைவுகூருவீராக! மேலும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருப்பீராக!” எனக் கூறினான்.
3:41. அ(தற்க)வர், “என் இரட்சகனே! (இதற்கு) எனக்கோர் அடையாளத்தை ஆக்குவாயாக!” என்று கேட்டார். (அதற்கு) அவன் “உமக்கு (அளிக்கப்படும்) அடையாளமாவது, மூன்று நாட்கள் வரையில் சைகை மூலமன்றி நீர் மனிதர்களுடன் பேசாமல் இருப்பதாகும். (அந்நாட்களில்) நீர் உமதிரட்சகனை அதிகமாக நினைவுகூர்வீராக! காலையிலும், மாலையிலும் (அவனைப்போற்றி) துதி செய்து கொண்டுமிருப்பீராக!” என்று கூறினான்.
3:42
3:42 وَاِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰٮكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰٮكِ عَلٰى نِسَآءِ الْعٰلَمِيْنَ‏
وَاِذْ சமயம் قَالَتِ கூறினா(ர்க)ள் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் يٰمَرْيَمُ மர்யமே! اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் اصْطَفٰٮكِ உம்மைத் தேர்ந்தெடுத்தான் وَطَهَّرَكِ இன்னும் உம்மைப் பரிசுத்தப்படுத்தினான் وَاصْطَفٰٮكِ இன்னும் உம்மைத் தேர்ந்தெடுத்தான் عَلٰى نِسَآءِ பெண்களைவிட الْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களின்
3:42. (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்),
3:42. (நபியே! மர்யமை நோக்கி) வானவர்கள் கூறிய சமயத்தில் ‘‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மை தேர்ந்தெடுத்திருக்கிறான். உம்மை பரிசுத்தமாகவும் ஆக்கியிருக்கிறான். உலகத்திலுள்ள பெண்கள் அனைவரையும்விட உம்மை மேன்மையாக்கியும் வைத்திருக்கிறான், (என்றும்)
3:42. மேலும், அந்நேரம் வந்தபோது வானவர்கள் கூறினார்கள்: “மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உன்னைத் தேர்ந்தெடுத்துத் தூய்மையாக்கினான். மேலும் அகிலத்துப் பெண்கள் அனைவரினும் (உனக்கு முதலிடம் அளித்து, தனது திருப்பணிக்காக) உன்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
3:42. இன்னும், மலக்குகள் (மர்யமிடம்) “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான், உன்னைப் பரிசுத்தமாகவும் ஆக்கியிருக்கின்றான், அகிலத்தாரிலுள்ள பெண்களை விட உன்னைத் தேர்ந்தெடுத்துமிருக்கின்றான்” என்று கூறிய சமயத்தில் (நடந்தவற்றை நபியே! நினைவு கூர்வீராக! அப்போது)
3:43
3:43 يٰمَرْيَمُ اقْنُتِىْ لِرَبِّكِ وَاسْجُدِىْ وَارْكَعِىْ مَعَ الرّٰكِعِيْنَ‏
يٰمَرْيَمُ மர்யமே! اقْنُتِىْ பணிவீராக لِرَبِّكِ உம் இறைவனுக்கு وَاسْجُدِىْ இன்னும் சிரம் தாழ்த்துவீராக وَارْكَعِىْ இன்னும் குனிவீராக مَعَ உடன் الرّٰكِعِيْنَ‏ குனிபவர்களுடன்
3:43. “மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக” (என்றும்) கூறினர்.
3:43. (ஆகவே,) மர்யமே! நீர் உமது இறைவனுக்கு வழிப்பட்டு குனிந்து (சிரம் பணிந்து) வணங்குபவர்களுடன் நீரும் குனிந்து (சிரம் பணிந்து) வணங்குவீராக!'' (என்று கூறினார்கள்.)
3:43. மர்யமே! உன் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடப்பாயாக! மேலும் ஸஜ்தா செய்வாயாக! (அவனது திருமுன்) பணிபவர்களுடன் சேர்ந்து நீயும் பணிவாயாக!”
3:43. “மர்யமே! நீர் உன்னுடைய இரட்சகனுக்கு வழிபாடு செய்வீராக! சாஷ்டாங்கமும் செய்வீராக! குனிந்து (சிரம்பணிந்து) வணங்குபவர்களுடன் நீரும் குனிந்து (சிரம்பணிந்து) வணங்குவீராக!” (என்றும் கூறினார்கள்.)
3:44
3:44 ذٰ لِكَ مِنْ اَنْۢـبَآءِ الْغَيْبِ نُوْحِيْهِ اِلَيْكَ‌ؕ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يُلْقُوْنَ اَقْلَامَهُمْ اَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يَخْتَصِمُوْنَ‏
ذٰ لِكَ இவை مِنْ இருந்து اَنْۢـبَآءِ செய்திகள் الْغَيْبِ மறைவானவை نُوْحِيْهِ இவற்றை வஹீ அறிவிக்கிறோம் اِلَيْكَ‌ؕ உமக்கு وَمَا كُنْتَ நீர் இருக்கவில்லை لَدَيْهِمْ அவர்களிடம் اِذْ போது يُلْقُوْنَ எறிகிறார்கள் اَقْلَامَهُمْ தங்கள் எழுது கோல்களை اَيُّهُمْ அவர்களில் யார் يَكْفُلُ பொறுப்பேற்பார் مَرْيَمَ மர்யமை وَمَا كُنْتَ நீர் இருக்கவில்லை لَدَيْهِمْ அவர்களிடம் اِذْ போது يَخْتَصِمُوْنَ‏ தர்க்கிக்கிறார்கள்
3:44. (நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
3:44. (நபியே!) இவை (அனைத்தும் நீர் அறியாத) மறைவான விஷயங்களாகும். இவற்றை நாம் உமக்கு வஹ்யின் மூலம் அறிவிக்கிறோம். மர்யமை (வளர்க்க) யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று (அறிய) அவர்கள் தங்கள் எழுது கோல்களை (ஆற்றில்) எறிந்தபோதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தர்க்கித்துக் கொண்டபோதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
3:44. (நபியே!) இவை யாவும் மறைவான செய்திகள். இவற்றை உமக்கு, வஹி மூலம் நாம் அறிவிக்கின்றோம். (வழிபாட்டில்லத்தின் பணியாளர்களான அவர்கள்) தங்களில் யார் மர்யத்திற்குப் பொறுப்பு ஏற்பவர் என்று முடிவு செய்ய, தத்தமது எழுதுகோல்களை எறிந்து கொண்டிருந்தபோது அவர்களிடையே நீர் இருக்கவில்லை. மேலும் அவர்கள் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்திலும் அவர்களிடையே நீர் இருக்கவில்லை.
3:44. (நபியே!) இவை (யாவும் நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளவையாகும். இவைகளை நாம் உமக்கு வஹீயின் மூலம் அறிவிக்கின்றோம். இன்னும், மர்யமுக்கு (அவரை வளர்க்க) அவர்களில் எவர் பொறுப்பேற்றுக் கொள்வதென்று (முடிவுசெய்ய) அவர்கள் தங்கள் எழுதுகோல்களை (ஆற்றில்) எறிந்தபோதும்) நீர் அவர்களிடத்தில் இருக்கவில்லை, (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்துக் கொண்டபோதும் அவர்களிடத்தில் நீர் இருக்கவில்லை.
3:45
3:45 اِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ۖ اسْمُهُ الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ وَجِيْهًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ‏
اِذْ قَالَتِ கூறியசமயம் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் يٰمَرْيَمُ மர்யமே! اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُبَشِّرُكِ உமக்கு நற்செய்தி கூறுகிறான் بِكَلِمَةٍ ஒரு வார்த்தையைக் கொண்டு مِّنْهُ ۖ அவனிடமிருந்து اسْمُهُ அதன் பெயர் الْمَسِيْحُ அல் மஸீஹ் عِيْسَى ஈஸா ابْنُ مَرْيَمَ மர்யமுடைய மகன் وَجِيْهًا கம்பீரமானவராக فِى الدُّنْيَا இம்மையில் وَالْاٰخِرَةِ இன்னும் மறுமை وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ‏ நெருக்கமானவர்களில்
3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
3:45. (மேலும், மர்யமை நோக்கி) வானவர்கள் ‘‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன் (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான்'' என்றும் ‘‘அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம்'' என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்'' என்றும் கூறினார்கள்.
3:45. வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உனக்கு தனது கட்டளை பற்றி நற்செய்தி சொல்கின்றான். அதன் பெயர் மர்யத்தின் குமாரர் ஈஸா ‘அல் மஸீஹ்’ என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும், அல்லாஹ்விடம் நெருங்கிய நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார்.
3:45. (மேலும், மர்யமிடம்) மலக்குகள் “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து (ஆகுக!என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உனக்கு (ஒரு மகவை அளிக்க) நன்மாராயங் கூறுகின்றான். அவரின் பெயர் மஸீஹ்_ மர்யமுடைய மகன் ‘ஈஸா’ என்பதாகும், அவர் இம்மையிலும், மறுமையிலும் மிக்க அந்தஸ்தையுடையவராகவும் (இரட்சகனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்” என்று கூறியபோது.
3:46
3:46 وَيُكَلِّمُ النَّاسَ فِى الْمَهْدِ وَكَهْلًا وَّمِنَ الصّٰلِحِيْنَ‏
وَيُكَلِّمُ இன்னும் பேசுவார் النَّاسَ فِى الْمَهْدِ மக்களிடம்தொட்டிலில் وَكَهْلًا இன்னும் வாலிபராக وَّمِنَ الصّٰلِحِيْنَ‏ இன்னும் நல்லோரில்
3:46. “மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”
3:46. மேலும், ‘‘அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும் பொழுது (தன் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றியு)ம், (தன் நபித்துவத்தைப் பற்றி) வாலிபத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர, நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராகவும் இருப்பார்'' (என்றும் கூறினார்கள்.)
3:46. மேலும் அவர் தொட்டில் பருவத்திலும் பக்குவமான வயதை அடைந்த பின்பும் மக்களிடம் பேசுவார். மேலும் நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராயும் திகழ்வார்.”
3:46. “அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும்பொழுது (தன் தாயின் பரிசுத்த தன்மையைப்பற்றியு)ம், (தன் நபித்துவத்தைப்பற்றி) பருவ வயதிலும் மனிதர்களுடன் பேசுவார். இன்னும், நல்லொழுக்கமுடையோரில் உள்ளவராகவுமிருப்பார்” (என்றும் கூறினார்கள்).
3:47
3:47 قَالَتْ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ وَلَدٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ ‌ؕ قَالَ كَذٰلِكِ اللّٰهُ يَخْلُقُ مَا يَشَآءُ‌ ؕ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
قَالَتْ கூறினாள் رَبِّ என் இறைவா اَنّٰى எவ்வாறு يَكُوْنُ ஏற்படும் لِىْ எனக்கு وَلَدٌ குழந்தை وَّلَمْ يَمْسَسْنِىْ என்னைத் தொடாமல் இருக்க بَشَرٌ ؕ ஓர் ஆடவர் قَالَ கூறினான் كَذٰلِكِ இவ்வாறு اللّٰهُ அல்லாஹ் يَخْلُقُ படைக்கிறான் مَا எதை يَشَآءُ‌ ؕ நாடுகிறான் اِذَا قَضٰٓى (அவன்) முடிவு செய்தால் اَمْرًا ஒரு காரியத்தை فَاِنَّمَا يَقُوْلُ அவன் கூறுவதெல்லாம் لَهٗ அதற்கு كُنْ ஆகுக فَيَكُوْنُ‏ உடனே ஆகிவிடும்
3:47. (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”
3:47. (அதற்கு மர்யம், தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! (மனிதர்களில்) ஒருவருமே என்னைத் தீண்டாதிருக்கும் போது, எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டு விடும்?'' என்று கூறினார். (அதற்கு) ‘‘இப்படித்தான், அல்லாஹ் தான் நாடியதை படைக்கிறான். அவன் ஒரு பொருளை (படைக்க) நாடினால் அதை ‘ஆகுக' என அவன் கூறியவுடனே அது ஆகிவிடும்'' என்று கூறினான்.
3:47. (இதனைக் கேட்ட) மர்யம், “என் இறைவனே! என்னை எந்த மனிதனும் தீண்டாமலிருக்க, எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்?” என்று வினவினார். அல்லாஹ் கூறினான்: “அவ்வாறுதான் நடக்கும்! அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான். அவன் எதையேனும் (செய்யத்) தீர்மானித்தால் ‘ஆகுக’ என்றுதான் அதற்குக் கட்டளை இடுவான். உடனே அது ஆகிவிடுகின்றது.” (பிறகு வானவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்தார்கள்:)
3:47. (அதற்கு மர்யம்) “என் இரட்சகனே! எந்த ஒரு மனிதருமே என்னைத் தீண்டாதிருக்க எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்? என்று கூறினாள். (அதற்கு) “அவ்வாறே அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தை முடிவெடுத்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் “ஆகுக” என்பதுதான், அது ஆகிவிடும்” என்று கூறினான்.
3:48
3:48 وَيُعَلِّمُهُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ‌ۚ‏
وَيُعَلِّمُهُ இன்னும் அவருக்கு கற்பிப்பான் الْكِتٰبَ எழுதுவதை وَالْحِكْمَةَ இன்னும் ஞானத்தை وَالتَّوْرٰٮةَ இன்னும் தவ்றாத் وَالْاِنْجِيْلَ‌ۚ‏ இன்ஜீல்
3:48. இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.
3:48. மேலும், அவருக்கு வேதத்தையும் ஞானத்தையும், தவ்றாத்தையும் இன்ஜீலையும் கற்பிப்பான்.
3:48. “இன்னும் அல்லாஹ் அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிப்பான். தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுத்தருவான்.
3:48. மேலும், அவன் அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் கற்பிப்பான்.
3:49
3:49 وَرَسُوْلًا اِلٰى بَنِىْۤ اِسْرٰٓءِيْلَ ۙ اَنِّىْ قَدْ جِئْتُكُمْ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكُمْ ۙۚ اَنِّىْۤ  اَخْلُقُ لَـكُمْ مِّنَ الطِّيْنِ كَهَیْــٴَــةِ الطَّيْرِ فَاَنْفُخُ فِيْهِ فَيَكُوْنُ طَيْرًاۢ بِاِذْنِ اللّٰهِ‌‌ۚ وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْىِ الْمَوْتٰى بِاِذْنِ اللّٰهِ‌ۚ وَ اُنَبِّئُكُمْ بِمَا تَاْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَۙ فِىْ بُيُوْتِكُمْ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَۚ‏
وَرَسُوْلًا இன்னும் தூதராக اِلٰى பக்கம் بَنِىْۤ اِسْرٰٓءِيْلَ இஸ்ரவேலர்கள் ۙ اَنِّىْ நிச்சயமாக நான் قَدْ جِئْتُكُمْ உங்களிடம் வந்திருக்கின்றேன் بِاٰيَةٍ ஓர் அத்தாட்சியைக் கொண்டு مِّنْ رَّبِّكُمْ ۙۚ உங்கள் இறைவனிடமிருந்து اَنِّىْۤ நிச்சயமாக நான் اَخْلُقُ படைப்பேன் لَـكُمْ உங்களுக்கு مِّنَ الطِّيْنِ களிமண்ணிலிருந்து كَهَیْــٴَــةِ அமைப்பைப் போல் الطَّيْرِ பறவையின் فَاَنْفُخُ இன்னும் ஊதுவேன் فِيْهِ அதில் فَيَكُوْنُ (அது) ஆகிவிடும் طَيْرًاۢ பறவையாக بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِ‌ۚ அல்லாஹ்வின் وَاُبْرِئُ இன்னும் குணப்படுத்துவேன் الْاَكْمَهَ பிறவிக் குருடரை وَالْاَبْرَصَ இன்னும் வெண்குஷ்டரை وَاُحْىِ இன்னும் உயிர்ப்பிப்பேன் الْمَوْتٰى மரணித்தோரை بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِ‌ۚ அல்லாஹ்வின் وَ اُنَبِّئُكُمْ இன்னும் உங்களுக்கு அறிவிப்பேன் بِمَا எதை تَاْكُلُوْنَ புசிக்கிறீர்கள் وَمَا இன்னும் எது تَدَّخِرُوْنَۙ சேமிக்கிறீர்கள் فِىْ بُيُوْتِكُمْ‌ؕ உங்கள் வீடுகளில் اِنَّ فِىْ ذٰ لِكَ நிச்சயமாக/இதில் لَاٰيَةً திட்டமாக ஓர் அத்தாட்சி لَّـكُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَۚ‏ நம்பிக்கையாளர்களாக
3:49. இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).
3:49. இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அவரை) ஒரு தூதராகவும் ஆக்குவான் (என்றும் இறைவன் கூறினான். பின்னர், ஈஸா பிறந்து தன் வாலிபத்தை அடைந்து இஸ்ராயீலின் சந்ததிகளிடம் சென்றபொழுது அவர்களை நோக்கிக் கூறியதாவது:) ‘‘நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட ஒரு தூதர். அதற்காக) உங்களுக்கு ஓர் அத்தாட்சி கொண்டு வந்திருக்கிறேன். உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையைப் போல் செய்து அதில் நான் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது (பறக்கும்) பறவையாக ஆகிவிடும். பிறவிக் குருடனையும் வெண் குஷ்டரோகியையும் நான் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மரணித்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். நீங்கள் புசித்தவற்றையும், உங்கள் வீட்டில் நீங்கள் சேகரித்து வைத்திருப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு (திருப்தி அளிக்கக்கூடிய) ஓர் அத்தாட்சி இருக்கிறது (என்றும்,)
3:49. மேலும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அவரைத் தன் தூதராகவும் நியமிப்பான்.” (இறைத்தூதர் எனும் அந்தஸ்தில் அவர் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் வந்தபோது கூறினார்:) “திண்ணமாக நான் உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்று கொண்டு வந்துள்ளேன். நான் உங்கள் முன் களிமண்ணிலிருந்து பறவையின் உருவத்தைப் போல் ஒன்றைச் செய்து அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் கட்டளையினால் பறவையாகி விடும். மேலும் நான் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டமுடையவனையும் குணமாக்குவேன். இன்னும் இறந்தவர்களை அவனது அனுமதி கொண்டு உயிர்பெற்றெழச் செய்வேன். அதுமட்டுமன்று! நீங்கள் உண்பவற்றையும் உங்கள் இல்லங்களில் சேமித்து வைப்பவற்றையும் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின் இவற்றிலெல்லாம் உங்களுக்குப் போதிய சான்று உண்டு.
3:49. இஸ்ராயீலின் மக்களுக்கு (அவரை) ஒரு தூதராகவும் (அனுப்புவான் என்றும் அல்லாஹ் கூறினான். பின்னர் ஈஸா பிறந்து தன் வாலிபத்தையடைந்து, இஸ்ராயீலின் மக்களிடம் சென்றபொழுது அவர்களிடம் கூறியதாவது) “திட்டமாக நான் உங்கள் இரட்சகனிடமிருந்து (அனுப்பப்பட்ட ஒரு தூதன் என்பதற்குரிய!) ஓர் அத்தாட்சியுடன் உங்களிடம் வந்திருக்கிறேன். உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையின் கோலத்தைப்போல் செய்து பின்னர் அதில் நான் ஊதுவேன், அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது (உயிருள்ள) பறவையாகிவிடும், பிறவிக்குருடனையும், வெண்குஷ்டரோகியையும் நான் குணப்படுத்துவேன்; மேலும், அல்லாஹ்வின் அனுமதிகொண்டு இறந்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன்; மேலும், நீங்கள் சேகரித்து வைத்திருப்பவைகளையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன்; மெய்யாகவே நீங்கள் விசுவாசங்கொள்பவர்களாக இருந்தால் நிச்சயமாக இதில் உங்களுக்கு(த் திருப்தி அளிக்கக்கூடிய) ஓர் அத்தாட்சி இருக்கின்றது.
3:50
3:50 وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ التَّوْرٰٮةِ وَلِاُحِلَّ لَـكُمْ بَعْضَ الَّذِىْ حُرِّمَ عَلَيْكُمْ‌وَجِئْتُكُمْ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكُمْ فَاتَّقُوْا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‏
وَمُصَدِّقًا இன்னும் உண்மைப்படுத்துபவராக لِّمَا بَيْنَ يَدَىَّ எனக்கு முன்னுள்ளதை مِنَ التَّوْرٰٮةِ தவ்றாத்திலிருந்து وَلِاُحِلَّ இன்னும் நான் ஆகுமாக்குவதற்காக لَـكُمْ உங்களுக்கு بَعْضَ சிலவற்றை الَّذِىْ எது حُرِّمَ தடுக்கப்பட்டது عَلَيْكُمْ உங்கள் மீது وَجِئْتُكُمْ இன்னும் உங்களிடம் வந்திருக்கிறேன் بِاٰيَةٍ ஓர் அத்தாட்சியைக் கொண்டு مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனிடமிருந்து فَاتَّقُوْا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَطِيْعُوْنِ‏ இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்
3:50. “எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.”
3:50. என் முன்னால் உள்ள தவ்றாத்தை(யும்) நான் உண்மையாக்கி வைத்து (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்கி வைப்பதற் காகவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து என்னைப் பின்பற்றுங்கள்.
3:50. மேலும் தற்பொழுது தவ்ராத்தின் அறிவுரைகளிலிருந்து எவை என் முன் உள்ளனவோ அவற்றை மெய்ப்படுத்திடவும், உங்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கும் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக்கி வைத்திடவும் நான் வந்துள்ளேன். நான் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்றினைக் கொண்டு வந்துள்ளேன். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
3:50. மேலும், “என் முன் இருக்கும் தவ்றாத்தையும் நான்) உண்மையாக்கி வைக்கிறவனாகவும், (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்டவைகளில் சிலவற்றை உங்களுக்கு நான் ஆகுமாக்கி வைப்பதற்காகவும், மேலும் உங்கள் இரட்சகனிடமிருந்து (இத்தகைய) ஓர் அத்தாட்சியைக்கொண்டு உங்களிடம் நான் வந்திருக்கின்றேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுககுப் பயந்து எனக்கும் கீழ்ப்படியுங்கள்” (என்றும்,)
3:51
3:51 اِنَّ اللّٰهَ رَبِّىْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ‌ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் رَبِّىْ என் இறைவன் وَرَبُّكُمْ இன்னும் உங்கள் இறைவன் فَاعْبُدُوْهُ‌ ؕ ஆகவே அவனை வணங்குங்கள் هٰذَا இது صِرَاطٌ ஒரு வழி مُّسْتَقِيْمٌ‏ நேர்
3:51. “நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.”
3:51. நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள். இதுதான் நேரான வழி'' (என்றும் கூறினார்.)
3:51. உறுதியாக அல்லாஹ்தான் என்னுடைய அதிபதியும் உங்களுடைய அதிபதியுமாவான்! எனவே நீங்கள் அவனுக்கே பணிந்து வாழுங்கள்! இதுதான் நேரான வழியாகும்.”
3:51. “நிச்சயமாக அல்லாஹ்தான் என் இரட்சகனும், உங்கள் இரட்சகனும் ஆவான். ஆகவே அவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி” (என்றும் கூறினார்).
3:52
3:52 فَلَمَّاۤ اَحَسَّ عِيْسٰى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِ‌ؕ قَالَ الْحَـوَارِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ‌ۚ اٰمَنَّا بِاللّٰهِ‌ۚ وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ‏
فَلَمَّاۤ போது اَحَسَّ உணர்ந்தார் عِيْسٰى ஈஸா مِنْهُمُ அவர்களில் الْكُفْرَ நிராகரிப்பை قَالَ கூறினார் مَنْ யார் اَنْصَارِىْۤ என் உதவியாளர்கள் اِلَى اللّٰهِ‌ؕ அல்லாஹ்விற்காக قَالَ கூறினார் الْحَـوَارِيُّوْنَ தோழர்கள் نَحْنُ நாங்கள் اَنْصَارُ உதவியாளர்கள் اللّٰهِ‌ۚ அல்லாஹ்வின் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ‌ۚ அல்லாஹ்வை وَاشْهَدْ சாட்சி அளிப்பீராக بِاَنَّا நிச்சயமாக நாங்கள் مُسْلِمُوْنَ‏ முஸ்லிம்கள்
3:52. அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.
3:52. அவர்களில் பலர் (தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்த பொழுது (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?'' எனக் கேட்டார். (அதற்கு) அவருடைய தோழர்கள் ‘‘நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்களுக்கு) உதவி செய்கிறோம். மெய்யாகவே! அல்லாஹ்வை நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். (ஆதலால்,) நிச்சயமாக நாங்கள் (முஸ்லிம்கள்) முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டோம் என்பதாக நீர் சாட்சி கூறுவீராக' என்று கூறினார்கள்.
3:52. இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் நிராகரிக்க முனைந்து விட்டதை ஈஸா உணர்ந்து கொண்டபோது, “அல்லாஹ்வின் வழியில் எனக்கு உதவி புரிவோர் யார்?” என வினவினார். ‘ஹவாரிகள்’* பதிலளித்தார்கள்: “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாய் இருக்கின்றோம். நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். திண்ணமாக நாங்கள் இறை ஆணைக்கு முற்றிலும் அடிபணிந்து நடக்கும் முஸ்லிம்களாக இருக்கின்றோம் என்பதற்கு நீரே சாட்சியாக இரும்.
3:52. அவர்களிலிருந்து (ஒரு சிலர் தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்தபொழுது (அவர்களை நோக்கி,) “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர்கள் யார்? எனக் கேட்டார். (அதற்கு அவருடைய) சீடர்கள் “நாங்கள் அல்லாஹ்வுடைய உதவியாளர்கள்; அல்லாஹ்வை நாங்கள் விசுவாசிக்கின்றோம். நிச்சயமாக நாங்கள் (முற்றிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லீம்கள் என்பதாகவும் நீர் சாட்சி கூறுவீராக” என்று கூறினார்கள்.
3:53
3:53 رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ‏
رَبَّنَاۤ எங்கள் இறைவா اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِمَاۤ எதை اَنْزَلْتَ நீ இறக்கினாய் وَاتَّبَعْنَا இன்னும் பின்பற்றினோம் الرَّسُوْلَ தூதர் فَاكْتُبْنَا ஆகவே எங்களை பதிவு செய் مَعَ الشّٰهِدِيْنَ‏ சாட்சியாளர்களுடன்
3:53. “எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)
3:53. ‘‘எங்கள் இறைவனே! நீ அருட்செய்த (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம். (உன்) இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கிறோம். ஆதலால், (அவரை) உண்மைப்படுத்தியவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!'' (என்றும் அந்தத் தோழர்கள் பிரார்த்தித்தனர்.)
3:53. எங்கள் இறைவனே! நீ இறக்கியருளிய கட்டளைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்; தூதரையும் பின்பற்றுகின்றோம். எனவே நீ எங்கள் பெயர்களை சத்தியத்திற்குச் சான்று வழங்குவோருடன் சேர்த்து எழுதுவாயாக!”
3:53. “எங்கள் இரட்சகனே! நீ (இவருக்கு) இறக்கிவைத்த(வேதத்)தை நாங்கள் விசுவாசிக்கின்றோம். (உன்னுடைய) இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கின்றோம். ஆதலால், (சத்தியத்திற்காக) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக” (என்றும் சீடர்கள் பிரார்த்தித்தனர்.)
3:54
3:54 وَمَكَرُوْا وَمَكَرَاللّٰهُ ‌ؕ وَاللّٰهُ خَيْرُ الْمَاكِرِيْنَ‏
وَمَكَرُوْا சதி செய்தார்கள் وَمَكَر இன்னும் சதி செய்தான் اللّٰهُ ؕ அல்லாஹ் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் خَيْرُ மிக மேலானவன் الْمَاكِرِيْنَ‏ சதி செய்பவர்களில்
3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
3:54. (ஈஸாவை நிராகரித்த) அவர்கள் (அவரைக் கொலை செய்ய) சதி செய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரைக் காப்பாற்றி தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்து விடும்படி) அல்லாஹ் (அவர்களுக்குச்) சதி செய்து விட்டான். அல்லாஹ், சதி செய்பவர்களில் மிக மேலான(சதி செய்ப)வன்.
3:54. பிறகு இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் (ஈஸாவிற்கெதிராக) சதித் திட்டங்கள் தீட்டினார்கள். (அதற்குப் பதிலாக) அல்லாஹ்வும் தகுந்த திட்டங்களைத் தீட்டினான். மேலும் இத்தகைய திட்டங்களைத் தீட்டுவதில் அல்லாஹ் யாவரினும் வல்லவன்.
3:54. மேலும், (ஈஸாவை நிராகரித்த) அவர்கள், (அவரைக் கொலை செய்யச்) சதிசெய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரை இரட்சித்துக்கொண்டு, தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்துவிடும்படி) அல்லாஹ்வும், (அவர்களுக்குச்) சதி செய்துவிட்டான். இன்னும் அல்லாஹ், சதிசெய்பவர்களின் சதியை முறியடித்துக் கூலி கொடுப்பவர்களில் மிகச்சிறந்தவன்.
3:55
3:55 اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسٰۤى اِنِّىْ مُتَوَفِّيْكَ وَرَافِعُكَ اِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِيْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ‌‌ۚ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَيْنَكُمْ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ‏
اِذْ சமயம் قَالَ கூறினான் اللّٰهُ அல்லாஹ் يٰعِيْسٰۤى ஈஸாவே اِنِّىْ நிச்சயமாக நான் مُتَوَفِّيْكَ உம்மை கைப்பற்றுவேன் وَرَافِعُكَ இன்னும் உம்மை உயர்த்துவேன் اِلَىَّ என் பக்கம் وَمُطَهِّرُكَ இன்னும் உம்மை பரிசுத்தப்படுத்துவேன் مِنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَجَاعِلُ இன்னும் ஆக்குவேன் الَّذِيْنَ எவர்களை اتَّبَعُوْكَ உம்மைப் பின்பற்றினார்கள் فَوْقَ மேல் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْۤا நிராகரித்தார்கள் اِلٰى வரை يَوْمِ الْقِيٰمَةِ ۚ மறுமை நாள் ثُمَّ பிறகு اِلَىَّ என் பக்கம் مَرْجِعُكُمْ உங்கள் மீளுமிடம் فَاَحْكُمُ இன்னும் தீர்ப்பளிப்பேன் بَيْنَكُمْ உங்களுக்கு மத்தியில் فِيْمَا எதில் كُنْتُمْ இருந்தீர்கள் فِيْهِ அதில் تَخْتَلِفُوْنَ‏ தர்க்கம் செய்கிறீர்கள்
3:55. “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
3:55. (ஈஸாவை நோக்கி) அல்லாஹ் கூறியதை (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துவீராக!: ‘‘ஈஸாவே நிச்சயமாக நான் உமக்கு (உமது) ஆயுளை முழுமைப்படுத்துவேன். உம்மை நம்மளவில் உயர்த்திக்கொள்வேன். நிராகரிப்பவர்களி(ன் அவதூறி)லிருந்து உங்களைப் பரிசுத்தமாக்கிவைப்பேன். உங்களைப் பின்பற்றுபவர்களை நிராகரிப்பவர்கள் மீது இறுதி நாள்வரை மேலாக்கியும் வைப்பேன்'' (என்று கூறி, ஈஸாவே! அந்நிராகரிப்பவர்களை நோக்கி, நான் கூறியதாக நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வாகிய) என்னிடமே நீங்கள் மீண்டும் வருவீர்கள். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவற்றைப் பற்றி (அந்நேரத்தில்) நான் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்'' (என்றும் கூறினான்.)
3:55. (அத்தகையதோர் திட்டத்தை நிறைவேற்றவே) அவன் கூறினான்: “ஈஸாவே! நிச்சயமாக நான் இப்போது உம்மைத் திரும்ப அழைத்துக் கொள்வேன். மேலும் உம்மை என்னிடம் உயர்த்திக் கொள்வேன்; உம்மை நிராகரித்தவர்களிடமிருந்து (அதாவது அவர்களுடைய தொடர்பிலிருந்தும், அவர்களுடைய தூய்மையற்ற சூழ்நிலையில் நீர் வாழ்வதிலிருந்தும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; இறுதித் தீர்ப்புநாள்வரை உம்மைப் பின்பற்றுவோரை நிராகரிப்பவர்களைவிட உயர்த்தியே வைப்பேன். இறுதியில் என்னிடம் நீங்கள் அனைவரும் வந்தேயாக வேண்டும். அப்போது நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்தவற்றில் நான் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன்;
3:55. (ஈஸாவை நோக்கி) ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றிக் கொள்பவனாகவும், உம்மை என்னிடம் உயர்த்திக் கொள்பவனாகவும் இருக்கிறேன். மேலும், நிராகரிப்போரி(ன் அவதூறி)லிருந்து உம்மையும் பரிசுத்தப்படுத்துகிறவனாகவும், மேலும் உம்மைப் பின்பற்றுவோரை நிராகரிப்போரை விட மறுமை நாள்வரை மேலாக்கி வைப்பவனாகவும் இருக்கிறேன் – பின்னர், உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. அப்போது எதில் நீங்கள் மாறுபட்டவர்களாக இருந்தீர்களோ அதில் நான் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்” என்று கூறியதை (நினைவு கூர்வீராக!)
3:56
3:56 فَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْا فَاُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ‏
فَاَمَّا ஆகவே الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் فَاُعَذِّبُهُمْ அவர்களை வேதனை செய்வேன் عَذَابًا வேதனையால் شَدِيْدًا கடினமானது فِى الدُّنْيَا இம்மையில் وَالْاٰخِرَةِ இன்னும் மறுமையில் وَمَا இன்னும் இல்லை لَهُمْ அவர்களுக்கு مِّنْ نّٰصِرِيْنَ‏ உதவியாளர்களில் எவரும்
3:56. எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்; அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
3:56. ஆகவே, (அவர்களில்) எவர்கள் (உம்மை) நிராகரிக்கிறார்களோ அவர்களை நான் இம்மையிலும் மறுமையிலும் கடினமாக வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
3:56. ஆகவே அவர்களில் எவர் நிராகரிக்கும் போக்கினை மேற்கொண்டார்களோ அவர்களுக்கு இம்மை, மறுமை இரண்டிலும் கடுமையான தண்டனை அளிப்பேன். மேலும், அவர்களுக்கு உதவி புரிவோர் எவரும் இரார்.
3:56. ஆகவே, (உம்மை) நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்_அவர்களை நான் இம்மையிலும், மறுமையிலும் கடினமான வேதனையாக வேதனை செய்வேன். அன்றியும், அவர்களுக்கு உதவி செய்வோர் (எவரும்) இல்லை.
3:57
3:57 وَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُوَفِّيْهِمْ اُجُوْرَهُمْ‌ؕ وَ اللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ‏
وَاَمَّا ஆக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நற்செயல்களை فَيُوَفِّيْهِمْ முழுமையாக வழங்குவான்/அவர்களுக்கு اُجُوْر கூலிகளை هُمْ‌ؕ அவர்களின் وَ اللّٰهُ அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களை
3:57. ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
3:57. எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்களின் (நற்)கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாக வழங்குவான். அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை.
3:57. ஆனால், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர்களுக்குரிய கூலி முழுமையாக வழங்கப்படும். மேலும் (நன்கு அறிந்து கொள்ளுங்கள்:) அநீதி இழைப்போரை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை.
3:57. மேலும், விசுவாசித்து நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்- அவர்களின் (நற்)கூலியை அவர்களுக்குப் பூரணமாக (அல்லாஹ்) அளிப்பான். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிக்கமாட்டான்.
3:58
3:58 ذٰ لِكَ نَـتْلُوْهُ عَلَيْكَ مِنَ الْاٰيٰتِ وَ الذِّكْرِ الْحَكِيْمِ‏
ذٰ لِكَ இது نَـتْلُوْهُ இதை ஓதுகிறோம் عَلَيْكَ உம்மீது مِنَ இருந்து الْاٰيٰتِ வசனங்கள் وَ الذِّكْرِ இன்னும் உபதேசம் الْحَكِيْمِ‏ ஞானமிகுந்தது
3:58. (நபியே!) நாம் உம் மீது ஓதிக்காட்டிய இவை (நற்சான்றுகளைக் கொண்ட) இறை வசனங்களாகவும்; ஞானம் நிரம்பிய நற்செய்தியாகவும் இருக்கின்றன.
3:58. (நபியே!) நாம் உம் மீது ஓதிய இவை (இறைவனுடைய) வசனங்களாகவும், ஞான(ம் நிறைந்த) உபதேசங்களாகவும் இருக்கின்றன.
3:58. (நபியே!) நாம் எடுத்துரைக்கும் இவை, சான்றுகளும் ஞானமும் நிறைந்த அறிவுரைகளாகும்.
3:58. (நபியே! மேற்கூறப்பட்ட) அது (என்னுடைய) வசனங்களிலிருந்தும், தீர்க்கமான அறிவுகள் நிறைந்த உபதேசத்திலிருந்தும் (உள்ளவையாகும்) அதை நாம் உம்மீது ஓதிக்காட்டுகிறோம்.
3:59
3:59 اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ‌ؕ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
اِنَّ நிச்சயமாக مَثَلَ உதாரணம் عِيْسٰى ஈஸாவின் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் كَمَثَلِ உதாரணத்தைப் போன்று اٰدَمَ‌ؕ ஆதம் خَلَقَهٗ அவரைப் படைத்தான் مِنْ இருந்து تُرَابٍ மண் ثُمَّ பிறகு قَالَ கூறினான் لَهٗ அவருக்கு كُنْ ஆகு فَيَكُوْنُ‏ ஆகிவிட்டார்
3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
3:59. நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன் அவரை மண்ணால் உற்பத்தி செய்து (மனிதனாக) ‘ஆகு' என்று கூறினான். உடனே (அப்படி) ஆகிவிட்டது.
3:59. திண்ணமாக, அல்லாஹ்விடத்தில் ஈஸாவின் உவமை ஆதமின் உதாரணம் போன்றதாகும். அல்லாஹ் அவரை மண்ணினால் படைத்தான். பிறகு ‘ஆகுக’ என்று கட்டளையிட்டான். உடனே அவர் ஆகிவிட்டார்.
3:59. நிச்சயமாக, அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம்: ஆதமுடைய உதாரணத்தைப்போன்றதே! அவன், அவரை மண்ணால் படைத்துப் பின் அதற்கு (மனிதனாக!) “ஆகுக” என்று கூறினான், அவர்(அவ்வாறு) ஆகிவிட்டார்.
3:60
3:60 اَلْحَـقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ مِّنَ الْمُمْتَرِيْنَ‏
اَلْحَـقُّ உண்மை مِنْ இருந்து رَّبِّكَ உம் இறைவன் فَلَا تَكُنْ ஆகவே ஆகிவிடாதீர் مِّنَ الْمُمْتَرِيْنَ‏ சந்தேகிப்பவர்களில்
3:60. (நபியே! ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்; எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர்.
3:60. (நபியே! ஈஸாவைப் பற்றி) உமது இறைவனிடமிருந்து கிடைத்த இவ்விஷயங்கள் தான் உண்மையானவை. ஆகவே (இதைப்பற்றி) சந்தேகப்படுபவர்களில் நீரும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம்.
3:60. இந்த உண்மைகள் உம்முடைய இறைவனிடமிருந்து எடுத்துரைக்கப்படுகின்றன. எனவே ஐயம் கொள்வோரில் நீரும் ஒருவராகிவிடாதீர்.
3:60. (நபியே! ஈஸாவைப் பற்றிய இந்த) உண்மை உமதிரட்சகனிடமிருந்துள்ளதாகும். ஆகவே, (இதைப் பற்றிச்) சந்தேகப்படுவோரில் உள்ளவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
3:61
3:61 فَمَنْ حَآجَّكَ فِيْهِ مِنْۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ اَبْنَآءَنَا وَاَبْنَآءَكُمْ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَاَنْفُسَنَا وَاَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَل لَّعْنَتَ اللّٰهِ عَلَى الْكٰذِبِيْنَ‏
فَمَنْ ஆகவே யாராவது حَآجَّكَ உம்மிடம்தர்க்கித்தால் فِيْهِ இதில் مِنْۢ بَعْدِ பின்னர் مَا جَآءَكَ உமக்கு வந்தது مِنَ الْعِلْمِ கல்வி فَقُلْ கூறுவீராக تَعَالَوْا வாருங்கள் نَدْعُ அழைப்போம் اَبْنَآءَنَا எங்கள் பிள்ளைகளை وَاَبْنَآءَكُمْ இன்னும் உங்கள் பிள்ளைகளை وَنِسَآءَنَا இன்னும் எங்கள்பெண்களை وَنِسَآءَكُمْ இன்னும் உங்கள்பெண்களை وَاَنْفُسَنَا இன்னும் எங்களை وَاَنْفُسَكُمْ இன்னும் உங்களை ثُمَّ பிறகு نَبْتَهِلْ பிரார்த்திப்போம் فَنَجْعَل ஆக்குவோம் لَّعْنَتَ اللّٰهِ அல்லாஹ்வின் சாபத்தை عَلَى الْكٰذِبِيْنَ‏ பொய்யர்கள் மீது
3:61. (நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: “வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) ”பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம்!” என நீர் கூறும்.
3:61. (நபியே!) இதைப் பற்றி உமக்கு உண்மையான விவரம் கிடைத்த பின்னரும், உம்மிடம் எவரும் தர்க்கித்தால் (அவர்களுக்கு) கூறுவீராக: ‘‘வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று சேர்த்து) வைத்துக் கொண்டு (ஒவ்வொருவரும் நாம் கூறுவதுதான் உண்மையென) சத்தியம் செய்து (இதற்கு மாறாகக் கூறும்) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என பிரார்த்திப்போம்'' (என்று கூறும்படி கட்டளையிட்டான். இவ்வாறு நபியவர்கள் அழைத்த சமயத்தில் ஒருவருமே இப்படி சத்தியம் செய்ய முன்வரவில்லை.)
3:61. இந்த அறிவு உம்மிடம் வந்த பின்பு யாரேனும் உம்மிடம் இவ்விவகாரத்தில் தர்க்கம் செய்தால் (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “வாருங்கள்! உங்கள் மக்களையும் எங்கள் மக்களையும், உங்கள் பெண்களையும், எங்கள் பெண்களையும், நாங்களும் நீங்களும் அழைத்துக் கொண்டு ‘பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்று பணிந்து இறைஞ்சுவோம்.”
3:61. (நபியே! இதுபற்றி) உண்மையான அறிவு உமக்கு வந்த பின் இதைப் பற்றி உம்மிடம் எவரும் தர்க்கித்தால் நீர் கூறுவீராக! “வாருங்கள்; நாம் எங்களுடைய புதல்வர்களையும், உங்களுடைய புதல்வர்களையும், எங்களுடைய பெண்களையும், உங்களுடைய பெண்களையும் எங்களையும், உங்களையும் அழைத்து, பிறகு நாம் பிரார்த்திப்போம். பொய்யர்கள்மீது அல்லாஹ்வின் சாபத்தை நாம் ஆக்குவோம்” (என்று கூறும்படிக்கு கட்டளையிட்டான்).
3:62
3:62 اِنَّ هٰذَا لَهُوَ الْقَصَصُ الْحَـقُّ ‌‌ۚ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ‌ؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
اِنَّ நிச்சயமாக هٰذَا لَهُوَ இதுதான் الْقَصَصُ வரலாறு الْحَـقُّ ‌‌ۚ உண்மையானது وَمَا இல்லை مِنْ அறவே اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர اللّٰهُ‌ؕ அல்லாஹ் وَاِنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ ஞானவான்
3:62. நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு; அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை; நிச்சயமாக அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன்; மிக்க ஞானமுடையோன்.
3:62. நிச்சயமாக இதுதான் உண்மை வரலாறு. வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் (இல்லவே) இல்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
3:62. இவை யாவும் முற்றிலும் சரியான நிகழ்ச்சிகளாகும். மேலும் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. உண்மை யாதெனில், திண்ணமாக அல்லாஹ்வுடைய வலிமையே அனைத்தையும்விட மேலோங்கியிருக்கிறது. மேலும், அவனுடைய நுண்ணறிவே இப்பேரண்டத்தின் அமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
3:62. நிச்சயமாக இதுவேதான் உண்மையான சரித்திரம். அல்லாஹ்வைத்தவிர வேறு எந்த வணக்கத்துக்குரியவனுமில்லை. மேலும், நிச்சயமாக அல்லாஹ் – அவனே (யாவற்றையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
3:63
3:63 فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ عَلِيْمٌۢ بِالْمُفْسِدِيْنَ‏
فَاِنْ تَوَلَّوْا அவர்கள் விலகினால் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَلِيْمٌۢ மிக அறிந்தவன் بِالْمُفْسِدِيْنَ‏ விஷமிகளை
3:63. அவர்கள் புறக்கணித்தால் - திடமாக அல்லாஹ் (இவ்வாறு) குழப்பம் செய்வோரை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
3:63. (நபியே! இதற்குப் பின்னரும் உம்மை நம்பிக்கை கொள்ளாமல்) அவர்கள் புறக்கணிப்பார்களேயானால், நிச்சயமாக அல்லாஹ் (இந்த) விஷமிகளை நன்கறிவான்.
3:63. எனவே அவர்கள் (மேற்கூறப்பட்ட நிபந்தனையின்படி தர்க்கம் புரிய) முன் வராமல் புறக்கணித்து விட்டால் (அவர்கள் குழப்ப வாதிகள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும்.) குழப்ப வாதிகளை அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
3:63. (நபியே! இதற்குப் பின்னரும் உம்மை விசுவாசிக்காது) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், நிச்சயமாக அல்லாஹ் (இவ்வாறு) குழப்பம் செய்பவர்களை மிக்க அறிந்தவன்.
3:64
3:64 قُلْ يٰۤـاَهْلَ الْكِتٰبِ تَعَالَوْا اِلٰى كَلِمَةٍ سَوَآءٍۢ بَيْنَـنَا وَبَيْنَكُمْ اَلَّا نَـعْبُدَ اِلَّا اللّٰهَ وَلَا نُشْرِكَ بِهٖ شَيْئًا وَّلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ‌ؕ فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ‏
قُلْ கூறுவீராக يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே تَعَالَوْا வாருங்கள் اِلٰى பக்கம் كَلِمَةٍ ஒரு விஷயம் سَوَآءٍۢ சமமானது بَيْنَـنَا எங்கள் மத்தியில் وَبَيْنَكُمْ இன்னும் உங்கள் மத்தியில் اَلَّا نَـعْبُدَ வணங்க மாட்டோம் اِلَّا தவிர اللّٰهَ அல்லாஹ்வை وَلَا نُشْرِكَ இன்னும் இணையாக்க மாட்டோம் بِهٖ அவனுக்கு شَيْئًا எதையும் وَّلَا يَتَّخِذَ இன்னும் எடுத்துக் கொள்ள மாட்டார்(கள்) بَعْضُنَا நம்மில் சிலர் بَعْضًا சிலரை اَرْبَابًا கடவுள்களாக مِّنْ دُوْنِ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வைத் தவிர فَاِنْ تَوَلَّوْا (அவர்கள்) விலகினால் فَقُوْلُوا கூறுங்கள் اشْهَدُوْا சாட்சியாக இருங்கள் بِاَنَّا நிச்சயமாக நாம் مُسْلِمُوْنَ‏ முஸ்லிம்கள்
3:64. (நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
3:64. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்கமாட்டோம். நாம் அவனுக்கு எதையும் இணையாக்கமாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வைத் தவிர எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ளமாட்டோம்'' (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதையும்) அவர்கள் புறக்கணித்தால் ‘‘நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அவன் ஒருவனுக்கே வழிப்பட்டவர்கள்) என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
3:64. (நபியே!) நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள்: ‘அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் நாம் அடிபணிய மாட்டோம். அவனோடு எதனையும் எவரையும் நாம் இணைவைக்க மாட்டோம். மேலும் நம்மில் எவரும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் இறைவனாய் ஆக்கிக் கொள்ளக்கூடாது.’ அவர்கள் (இந்த அழைப்பினை) ஏற்க மறுப்பார்களேயானால், திண்ணமாக நாங்கள் முஸ்லிம்கள் (அதாவது அல்லாஹ்வுக்கு மட்டுமே கீழ்ப்படிகின்றவர்கள்) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (தெளிவாகக்) கூறி விடுங்கள்.
3:64. (நபியே! பின்னும் அவர்களிடம்) நீர் கூறுவீராக: “வேதத்தையுடையவர்களே! எங்களுக்கும், இன்னும் உங்களுக்குமிடையே, நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்ககூடாது; நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கவும் கூடாது; நம்மில் சிலர், சிலரை அல்லாஹ்வையன்றி தெய்வங்களாக எடுத்துக் கொள்ளவும் கூடாது என்ற சமமானதொரு வார்த்தையின் பால் வாருங்கள்; (இதை ஏற்காது) அவர்கள் புறக்கணித்தால், (அவர்களிடம்,) “நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லிம்கள் என நீங்கள் சாட்சியம் கூறுவீர்களாக!” என்று நீங்கள் கூறி(விட்டு) விடுங்கள்.
3:65
3:65 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تُحَآجُّوْنَ فِىْۤ اِبْرٰهِيْمَ وَمَاۤ اُنْزِلَتِ التَّوْرٰٮةُ وَالْاِنْجِيْلُ اِلَّا مِنْۢ بَعْدِهٖؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே لِمَ ஏன் تُحَآجُّوْنَ தர்க்கம்செய்கிறீர்கள் فِىْۤ اِبْرٰهِيْمَ இப்றாஹீம் விஷயத்தில் وَمَاۤ اُنْزِلَتِ இறக்கப்படவில்லை التَّوْرٰٮةُ தவ்றாத்து وَالْاِنْجِيْلُ இன்னும் இன்ஜீல் اِلَّا தவிர مِنْۢ بَعْدِهٖؕ அவருக்கு பின்னரே اَفَلَا تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
3:65. வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே; (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?
3:65. வேதத்தையுடையவர்களே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோதான் இருந்தார் என்று) ஏன் வீணே தர்க்கம் செய்து கொள்கிறீர்கள். (யூதர்களுடைய வேதமாகிய) தவ்றாத்தும், (கிறிஸ்தவர்களுடைய வேதமாகிய) இன்ஜீலும் அவருக்கு (வெகு காலத்திற்குப்) பின்னரே அருளப்பட்டன. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
3:65. வேதம் அருளப்பட்டவர்களே! இப்ராஹீம் (உடைய தீனைப்) பற்றி ஏன் தர்க்கம் புரிகின்றீர்கள்? அவருக்குப் பின்னர் தாம் தவ்ராத்தும் இன்ஜீலும் இறக்கியருளப்பட்டன. (இதனைக் கூட) நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா?
3:65. வேதத்தையுடையவர்களே! இப்ராஹீமுடைய விஷயத்தில் (அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்துவராகவோ தான் இருந்தாரென்று) ஏன் வீணே தர்க்கம் செய்துகொள்கின்றீர்கள் ? (யூதர்களுடைய வேதமாகிய) தவ்றாத்தும், கிறிஸ்தவர்களுடைய வேதமாகிய) இன்ஜீலும் அவருக்கு (வெகுகாலத்திற்கு)ப் பின்னரேயன்றி இறக்கிவைக்கப்படவில்லை; (இவ்வளவு கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?
3:66
3:66 هٰۤاَنْـتُمْ هٰٓؤُلَآءِ حٰجَجْتُمْ فِيْمَا لَـكُمْ بِهٖ عِلْمٌ فَلِمَ تُحَآجُّوْنَ فِيْمَا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏
هٰۤاَنْـتُمْ நீங்களோ هٰٓؤُلَآءِ இவர்கள் حٰجَجْتُمْ தர்க்கம் செய்தீர்கள் فِيْمَا எதில் لَـكُمْ உங்களுக்கு بِهٖ அதில் عِلْمٌ அறிவு فَلِمَ ஆகவே ஏன் تُحَآجُّوْنَ தர்க்கம்செய்கிறீர்கள் فِيْمَا எதில் لَـيْسَ இல்லை لَـكُمْ உங்களுக்கு بِهٖ அதில் عِلْمٌ‌ؕ அறிவு وَاللّٰهُ அல்லாஹ் يَعْلَمُ அறிவான் وَاَنْـتُمْ நீங்கள் لَا تَعْلَمُوْنَ‏ அறியமாட்டீர்கள்
3:66. உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
3:66. நீங்கள் கொஞ்சம் அறிந்த விஷயத்தில் வீணாக இதுவரை தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் ஒரு சிறிதும் அறியாத விஷயத்திலும் ஏன் தர்க்கிக்க முன்வந்துவிட்டீர்கள். அல்லாஹ்தான் (இவை அனைத்தையும்) நன்கறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
3:66. நீங்கள் எவற்றை அறிந்து வைத்திருக்கின்றீர்களோ, அவற்றில் நன்கு தர்க்கம் புரிந்துவிட்டீர்கள். (இப்போது) நீங்கள் முற்றிலும் அறியாதவற்றில் தர்க்கம் புரிய ஏன் முற்படுகின்றீர்கள்? அல்லாஹ் நன்கறிகின்றான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
3:66. அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள்தான் அவர்கள்_ உங்களுக்கு எதில் அறிவு இருக்கிறதோ அதில் நீங்கள் தர்க்கித்துக்கொண்டிருந்தீர்கள்; இப்போது எதில் உங்களுக்கு அறிவு இல்லையோ அதில் நீங்கள் ஏன் தர்க்கிக்கிறீர்கள்? மேலும், அல்லாஹ்தான் (இவை யாவற்றையும்) நன்கறிந்தவன்; நீங்களோ அறியமாட்டீர்கள்.
3:67
3:67 مَا كَانَ اِبْرٰهِيْمُ يَهُوْدِيًّا وَّلَا نَصْرَانِيًّا وَّ لٰكِنْ كَانَ حَنِيْفًا مُّسْلِمًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ‏
مَا كَانَ இருக்கவில்லை اِبْرٰهِيْمُ இப்றாஹீம் يَهُوْدِيًّا யூதராக وَّلَا இன்னும் இல்லை نَصْرَانِيًّا கிறித்தவராக وَّ لٰكِنْ كَانَ எனினும் இருந்தார் حَنِيْفًا அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றுபவராக مُّسْلِمًا ؕ முஸ்லிமாக وَمَا كَانَ அவர்இருக்கவில்லை مِنَ الْمُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களில்
3:67. இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்; அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
3:67. இப்றாஹீம் யூதராகவும் இருக்கவில்லை, கிறிஸ்தவராகவும் இருக்கவில்லை. எனினும், இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட நேரான கொள்கையுடைய முஸ்லிமாகவே இருந்தார். மேலும், அவர் இணைவைத்து வணங்குபவராகவும் இருக்கவில்லை.
3:67. இப்ராஹீம் யூதராகவோ கிறிஸ்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் ஒருமனப்பட்ட முஸ்லிமாக இருந்தார். மேலும் அவர் இறைவனுக்கு இணைவைப்போரில் ஒருவராய் எப்போதும் இருந்ததில்லை.
3:67. இப்ராஹீம் யூதராக இருக்கவில்லை; அல்லது கிறிஸ்துவராகவும் இல்லை. எனினும், அவர் ஹனீஃபாக (அசத்திய மார்கங்கள் அனைத்தையும் விட்டும் நீங்கி சத்திய மார்கத்தின்பால் சார்ந்தவராக), முஸ்லிமாக (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்படிந்தவராக) இருந்தார்; மேலும், அவர் இணைவைப்போரில் (உள்ளவராகவும்) இருக்கவில்லை.
3:68
3:68 اِنَّ اَوْلَى النَّاسِ بِاِبْرٰهِيْمَ لَـلَّذِيْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِىُّ وَالَّذِيْنَ اٰمَنُوْا ‌ؕ وَاللّٰهُ وَلِىُّ الْمُؤْمِنِيْنَ‏
اِنَّ நிச்சயமாக اَوْلَى மிக நெருங்கியவர் النَّاسِ மக்களில் بِاِبْرٰهِيْمَ இப்ராஹீமுக்கு لَـلَّذِيْنَ உறுதியாக எவர்கள் اتَّبَعُوْهُ அவரைப் பின்பற்றினார்கள் وَهٰذَا النَّبِىُّ இன்னும் இந்த நபி وَالَّذِيْنَ اٰمَنُوْا ؕ இன்னும் நம்பிக்கையாளர்கள் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் وَلِىُّ பாதுகாவலன் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களின்
3:68. நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.
3:68. நிச்சயமாக இப்ராஹீமுக்கு மனிதர்களில் நெருங்கியவர் (எவர் என்றால்) அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இவரை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் இந்த நம்பிக்கையாளர்களை (நேசித்து) பாதுகாப்பான்.
3:68. இப்ராஹீமுடன் தமக்குத் தொடர்பு இருப்பதாக உரிமை கொண்டாடுவதற்கு மனிதர்களிலே மிகவும் அருகதையானவர்கள் (யாரெனில்) அவரைப் பின்பற்றி வாழ்ந்தவர்களும், (இப்போது) இந்த நபியும், இவரது தூதுத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுமே ஆவர். அல்லாஹ், நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே உதவியாளனாகவும், ஆதரவாளனாகவும் இருக்கின்றான்.
3:68. நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிக்க நெருங்கியவர் (எவர் என்றால்) அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (இவரை) விசுவாசங் கொண்டார்களே அவர்களும் ஆவர்; இன்னும் அல்லாஹ் விசுவாசிகளின் பாதுகாவலன்.
3:69
3:69 وَدَّتْ طَّآٮِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ يُضِلُّوْنَكُمْؕ وَمَا يُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَ‏
وَدَّتْ விரும்பியது طَّآٮِٕفَةٌ ஒரு கூட்டம் مِّنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் لَوْ يُضِلُّوْنَكُمْؕ அவர்கள் உங்களை வழிகெடுக்க வேண்டும் وَمَا يُضِلُّوْنَ வழிகெடுக்க மாட்டார்கள் اِلَّاۤ தவிர اَنْفُسَهُمْ தங்களை وَمَا يَشْعُرُوْنَ‏ இன்னும் உணரமாட்டார்கள்
3:69. வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது; எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை.
3:69. வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தார் உங்களை வழி கெடுத்திட விரும்புகிறார்கள். அவர்கள் தங்களையே தவிர (உங்களை) வழி கெடுத்து விட முடியாது. (இதை) அவர்கள் உணர்வதில்லை.
3:69. (இறைநம்பிக்கை கொண்டோரே!) வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் உங்களை நேரிய வழியிலிருந்து பிறழச் செய்திட வேண்டும் என விரும்புகிறார்கள். ஆயினும், அவர்கள் தங்களைத் தாங்களே வழிகேட்டிலாழ்த்திக் கொள்கின்றார்கள். ஆனால் இதனை அவர்கள் உணர்வதில்லை!
3:69. வேதத்தையுடையோர்களில் ஒரு கூட்டத்தார் உங்களை வழி கெடுத்துவிடவேண்டுமே என்று விரும்புகின்றார்கள்; அவர்கள் தங்களையே தவிர (உங்களை) வழி கெடுத்துவிடவும் முடியாது; (இதனை) அவர்கள் உணர்ந்துகொள்வதுமில்லை.
3:70
3:70 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَاَنْـتُمْ تَشْهَدُوْنَ‏
يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே لِمَ ஏன் تَكْفُرُوْنَ நிராகரிக்கிறீர்கள் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் وَاَنْـتُمْ நீங்களே تَشْهَدُوْنَ‏ சாட்சியளிக்கிறீர்கள்
3:70. வேதத்தையுடையவர்களே! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?
3:70. வேதத்தையுடையவர்களே! நீங்கள் (பல அத்தாட்சிகளைக்) கண்டதன் பின்னரும், அல்லாஹ்வுடைய வசனங்களை ஏன் நிராகரிக்கிறீர்கள்?
3:70. வேதம் அருளப்பட்டவர்களே! நீங்கள் கண்கூடாகப் பார்த்துக்கொண்டே அல்லாஹ்வின் சான்றுகளை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?
3:70. “வேதத்தையுடையோர்களே! (பல அத்தாட்சிகளைக்) கண்கூடாகக் கண்டவர்களாக நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ்வுடைய வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?”
3:71
3:71 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تَلْبِسُوْنَ الْحَـقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوْنَ الْحَـقَّ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏
يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே لِمَ تَلْبِسُوْنَ ஏன் கலக்கிறீர்கள் الْحَـقَّ உண்மையை بِالْبَاطِلِ பொய்யுடன் وَتَكْتُمُوْنَ இன்னும் மறைக்கிறீர்கள் الْحَـقَّ உண்மையை وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏ நீங்கள் அறிந்து கொண்டே
3:71. வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?
3:71. வேதத்தையுடையவர்களே! உண்மையை பொய்யுடன் ஏன் கலக்கிறீர்கள். நீங்கள் நன்கறிந்துகொண்டே உண்மையை ஏன் மறைக்கிறீர்கள்.
3:71. வேதம் அருளப்பட்டவர்களே! சத்தியத்தை அசத்தியத்தோடு கலந்து ஏன் அதனைச் சந்தேகத்துக்குரியதாய் ஆக்குகின்றீர்கள்? நீங்கள் நன்கு அறிந்துகொண்டே சத்தியத்தை ஏன் மறைக்கின்றீர்கள்?
3:71. “வேதத்தையுடையோர்களே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் கலந்துவிடுகிறீர்கள்?” இன்னும், நீங்கள் (நன்கு) அறிந்து கொண்டே மெய்யை (ஏன்) மறைக்கின்றீர்கள்?
3:72
3:72 وَقَالَتْ طَّآٮِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اٰمِنُوْا بِالَّذِىْۤ اُنْزِلَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوْۤا اٰخِرَهٗ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‌‌ۚ‌ ۖ‏
وَقَالَتْ கூறினர் طَّآٮِٕفَةٌ ஒரு கூட்டத்தினர் مِّنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் اٰمِنُوْا நம்பிக்கை கொள்ளுங்கள் بِالَّذِىْۤ எதை اُنْزِلَ இறக்கப்பட்டது عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَجْهَ النَّهَارِ பகலின் ஆரம்பம் وَاكْفُرُوْۤا இன்னும் நிராகரியுங்கள் اٰخِرَهٗ அதன் இறுதியில் لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‌ۚ‌ ۖ‏ அவர்கள் திரும்புவதற்காக
3:72. வேதத்தையுடையோரில் ஒரு சாரார் (தம் இனத்தாரிடம்): “ஈமான் கொண்டோர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தைக் காலையில் நம்பி, மாலையில் நிராகரித்து விடுங்கள்; இதனால் (ஈமான் கொண்டுள்ள) அவர்களும் ஒரு வேளை (அதை விட்டுத்) திரும்பி விடக்கூடும்” என்று கூறுகின்றனர்.
3:72. வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் இனத்தாரை நோக்கிக்) கூறுகின்றனர்: ‘‘நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளப்பட்ட (இவ் வேதத்)தைக் காலையில் நம்பிக்கை கொண்டு மாலையில் (அதை) நிராகரித்து விடுங்கள். (இதனால் நம்பிக்கைகொண்ட) அவர்களும் (குழப்பமடைந்து தங்கள் நம்பிக்கையிலிருந்து) விலகி விடக்கூடும்'' (என்றும்)
3:72. வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் (தங்களுக்கிடையே) கூறிக் கொள்கிறார்கள்: “(இந்த நபியை) நம்பியவர்கள் மீது இறக்கியருளப்பட்டவற்றை முற்பகலில் நம்பி, பிற்பகலில் நிராகரித்து விடுங்கள்! (இப்படிச் செய்வதால்) நம்பிக்கையாளர்கள் (தம் நம்பிக்கையை விட்டு) திரும்பிவிடக்கூடும்.
3:72. வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் இனத்தாரை நோக்கி) “நீங்கள் விசுவாசங் கொண்டவர்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட (இவ்வேதத்)தை பகலின் துவக்கத்தில் (காலையில்) விசுவாசித்து, அதன் முடிவில் (மாலையில் அதனை) நிராகரித்து விடுங்கள்; (இதனால் விசுவாசங் கொண்ட) அவர்களும் (குழப்பமடைந்து தங்கள் விசுவாசத்திலிருந்து) திரும்பிவிடக் கூடும்” எனவும் கூறுகின்றனர்.
3:73
3:73 وَلَا تُؤْمِنُوْۤا اِلَّا لِمَنْ تَبِعَ دِيْنَكُمْؕ قُلْ اِنَّ الْهُدٰى هُدَى اللّٰهِۙ اَنْ يُّؤْتٰٓى اَحَدٌ مِّثْلَ مَاۤ اُوْتِيْتُمْ اَوْ يُحَآجُّوْكُمْ عِنْدَ رَبِّكُمْ‌ؕ قُلْ اِنَّ الْفَضْلَ بِيَدِ اللّٰهِۚ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ ‌ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ ۚۙ‏
وَلَا تُؤْمِنُوْۤا இன்னும் நம்பாதீர்கள் اِلَّا தவிர لِمَنْ எவரை تَبِعَ பின்பற்றினார் دِيْنَكُمْؕ உங்கள் மார்க்கத்தை قُلْ கூறுவீராக اِنَّ நிச்சயமாக الْهُدٰى நேர்வழி هُدَى நேர்வழி اللّٰهِۙ அல்லாஹ்வின் اَنْ يُّؤْتٰٓى கொடுக்கப்படுவார் اَحَدٌ ஒருவர் مِّثْلَ போன்று مَاۤ எது اُوْتِيْتُمْ கொடுக்கப்பட்டீர்கள் اَوْ அல்லது يُحَآجُّوْكُمْ உங்களோடு தர்க்கிப்பார்கள் عِنْدَ இடம் رَبِّكُمْ‌ؕ உங்கள் இறைவன் قُلْ கூறுவீராக اِنَّ நிச்சயமாக الْفَضْلَ அருள் بِيَدِ கையில் اللّٰهِۚ அல்லாஹ்வின் يُؤْتِيْهِ அதை கொடுக்கின்றான் مَنْ எவருக்கு يَّشَآءُ ؕ நாடுகிறான் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் وَاسِعٌ விசாலமானவன் عَلِيْمٌ ۚۙ‏ மிக அறிந்தவன்
3:73. “உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்” (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்: நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்; உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும் கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?” (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது; அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக.
3:73. ‘‘உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் நம்பாதீர்கள்'' (என்றும் கூறுகின்றனர்). இதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘உண்மையான நேர்வழி அல்லாஹ்வின் நேர்வழிதான்.'' (மேலும், அவர்கள் தங்கள் இனத்தாரை நோக்கி) ‘‘உங்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்று (ஒரு வேதம்) மற்றெவருக்கும் கொடுக்கப்படும் என்பதையோ அல்லது அந்த நம்பிக்கையாளர்கள் உங்கள் இறைவன் முன்பாக தர்க்கித்து உங்களை வெற்றி கொள்வார்கள் என்பதையோ நம்பாதீர்கள்!'' (என்றும் கூறுகின்றனர். அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘(வேதம் என்னும்) பெரும்பாக்கியம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. அதை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக்கிறான். அல்லாஹ் மிக விசாலமானவன், (மனிதர்களின் தகுதியை) நன்கறிந்தவன் ஆவான்.
3:73. மேலும் உங்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர வேறு யாரையும் நம்பாதீர்கள்!” (நபியே!) நீர் கூறும்: “திண்ணமாக, அல்லாஹ்வுடைய வழிகாட்டுதல்தான் உண்மையான வழிகாட்டுதலாகும். மேலும் உங்களுக்குக் கிடைத்திருப்பது போலவே மற்றவர்களுக்கும் கிடைத்திருக்கிறது என்றால் அல்லது உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக சமர்ப்பிப்பதற்காக வலுவான வாதங்கள் மற்றவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன என்றால், அது இறைவன் வழங்கியதேயாகும்.” (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “திண்ணமாக, சிறப்பனைத்தும் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளன. தான் நாடுபவர்களுக்கே அதனை அவன் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் பரந்த நோக்குடையவனும் யாவற்றையும் நன்கு அறிபவனுமாவான்.
3:73. மேலும், “உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர (மற்றெவரையும்), நீங்கள் நம்பாதீர்கள்” (என்றும்) கூறுகின்றனர். இதற்கு நபியே! நீர் கூறுவீராக: நிச்சயமாக நேர்வழி(யானது) அல்லாஹ்வின் நேர்வழி(யே)யாகும். (அன்றி அவர்கள் தங்கள் இனத்தாரை நோக்கி,) நீங்கள் கொடுக்கப்பட்ட (வேதத்தைப் போன்று வேறொருவரும் கொடுக்கப்படுவார் என்பதையோ அல்லது அவர்கள் உங்கள் இரட்சகன் முன்பாக வாதிப்பார்கள் (அல்லது உங்களை வெற்றி கொள்வார்கள்) என்பதையோ (நம்பாதீர்கள்!”) என்றும் கூறுகின்றனர். அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: (பெரும் பாக்கியமெனும்) பேரருள் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில்தான் இருக்கின்றது. அதனை அவன் நாடியவர்களுக்கே கொடுக்கின்றான். இன்னும், அல்லாஹ் விசாலமானவன், யாவற்றையும் நன்கறிகிறவன்.
3:74
3:74 يَّخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ يَّشَآءُ ‌ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏
يَّخْتَصُّ சொந்தமாக்குகிறான் بِرَحْمَتِهٖ தனது அருளுக்கு مَنْ எவரை يَّشَآءُ ؕ நாடுகிறான் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் ذُو الْفَضْلِ அருளுடையவன் الْعَظِيْمِ‏ மகத்தானது
3:74. அவன் தன் ரஹ்மத்தை(அருளை)க் கொண்டு தான் நாடியோரைச் சொந்தமாக்கிக் கொள்கின்றான்; இன்னும் அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.
3:74. அல்லாஹ் தான் விரும்பியவர்களை தன் அருளுக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான். அவன் மகத்தான கொடையுடையவன் ஆவான்.
3:74. தான் நாடுபவர்களைத் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக்குகின்றான். மேலும் அல்லாஹ்வின் அருள் மகத்தானதாகும்.”
3:74. (அல்லாஹ்வாகிய) அவன், தான் நாடியவர்களைத் தன் அருளுக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான். இன்னும், அல்லாஹ் மகத்தான பேரருளுடையவன்.
3:75
3:75 وَمِنْ اَهْلِ الْكِتٰبِ مَنْ اِنْ تَاْمَنْهُ بِقِنْطَارٍ يُّؤَدِّهٖۤ اِلَيْكَ‌ۚ وَمِنْهُمْ مَّنْ اِنْ تَاْمَنْهُ بِدِيْنَارٍ لَّا يُؤَدِّهٖۤ اِلَيْكَ اِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَآٮِٕمًا ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَيْسَ عَلَيْنَا فِىْ الْاُمِّيّٖنَ سَبِيْلٌۚ وَيَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ وَ هُمْ يَعْلَمُوْنَ‏
وَمِنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் مَنْ எவர் اِنْ تَاْمَنْهُ நீர் அவரை நம்பினால் بِقِنْطَارٍ ஒரு பொற்குவியலில் يُّؤَدِّهٖۤ அதை நிறைவேற்றுவார் اِلَيْكَ‌ۚ உமக்கு وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ எவர் اِنْ تَاْمَنْهُ (நீர்) அவரை நம்பினால் بِدِيْنَارٍ ஒரு நாணயத்தால் لَّا يُؤَدِّهٖۤ அதை நிறைவேற்ற மாட்டார் اِلَيْكَ உமக்கு اِلَّا தவிர مَا دُمْتَ (நீர்) தொடர்ந்தால் عَلَيْهِ அவரிடம் قَآٮِٕمًا ؕ நிற்பவராக ذٰ لِكَ இது بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் قَالُوْا கூறினார்கள் لَيْسَ இல்லை عَلَيْنَا நம்மீது فِىْ الْاُمِّيّٖنَ பாமரர்கள்விஷயத்தில் سَبِيْلٌۚ குற்றம் وَيَقُوْلُوْنَ இன்னும் கூறுகின்றனர் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது الْكَذِبَ பொய்யை وَ هُمْ يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறிந்து கொண்டே
3:75. (நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லாமல், கேட்கும்போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்; அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு (காசை) தீனாரை ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள்; அதற்குக் காரணம், “பாமரர்களிடம் (இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும்) நம்மை குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லை” என்று அவர்கள் கூறுவதுதான்; மேலும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள்.
3:75. (நபியே!) வேதத்தையுடையவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலையே நம்பி ஒப்படைத்தபோதிலும் (ஒரு குறைவுமின்றி) உம்மிடம் திரும்ப செலுத்தி விடுவார்கள். அவர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்களிடம் நீர் ஓர் அற்ப நாணயத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதற்காக நீர் (வம்பு செய்து) அவர்கள் (தலை) மேல் நிற்காத வரை அதைத் திரும்பக் கொடுக்கமாட்டார்கள். இதன் காரணம்: (தங்கள் இனம் அல்லாத மற்ற) ‘‘பாமரர் விஷயத்தில் (நாம் என்ன கொடுமை செய்தபோதிலும் அதற்காக) நம்மை குற்றம் பிடிக்க வழியில்லை'' என்று அவர்கள் (பகிரங்கமாகக்) கூறுவதுதான். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டே (அல்லாஹ் தங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர்.
3:75. வேதம் அருளப்பட்டவர்களில் சிலர் உள்ளனர்; அவர்களை நம்பி நீர் ஒரு செல்வக் குவியலை அவர்களிடம் ஒப்படைத்தாலும், உம்மிடம் அதனைத் திருப்பித் தந்துவிடுவார்கள். அவர்களில் இன்னும் சிலர் உள்ளனர்; அவர்களை நம்பி ஒரு காசைக் கொடுத்தாலும்கூட நீர் அதற்காக விடாப்பிடியாய் நின்றாலேயொழிய அதனை உம்மிடம் திருப்பித் தரமாட்டார்கள். இதற்கு (அவர்களின் இந்த நாணயமின்மைக்குக்) காரணம் அவர்கள் இவ்வாறு கூறிக் கொண்டிருந்ததுதான்: “உம்மிகள் (யூதர் அல்லாதவர்) விஷயத்தில் நாங்கள் அல்லாஹ்வினால் விசாரிக்கப்பட மாட்டோம்!” இவ்வாறு அல்லாஹ்வின் மீது அவர்கள் அப்பட்டமான பொய்யைப் புனைந்துரைக்கின்றார்கள். ஆனால் (உண்மையில் அல்லாஹ் இதுபோன்ற எதையும் சொல்லவில்லை என்பதை) அவர்கள் நன்கு அறிந்தே இருக்கின்றார்கள்.
3:75. (நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள். நீர் அவரிடம் ஒரு (பொற்)குவியலையே நம்பி ஒப்படைத்த போதிலும், (யாதொரு குறைவுமின்றி) அதை உம்மிடம் திரும்பச் செலுத்தி விடுவார். இன்னும் அவர்களில் சிலர் இருக்கிறார்கள்; அவரிடம் ஒரு தங்க நாணயத்தை நம்பி ஒப்படைத்த போதிலும் நீர் அவரிடம் (வம்புசெய்து) தொடர்ந்து நின்றிருந்தாலே தவிர, அதை உமக்குத் திரும்பச் செலுத்த மாட்டார். இது பாமரர்கள் விஷயத்தில் (நாம் என்ன செய்தபோதிலும் அதற்காக) நம்மை(க் குற்றம்) பிடிக்க வழியில்லை” என்று அவர்கள் (பகிரங்கமாகக்) கூறுகின்ற காரணத்தினாலாகும். அவர்கள் அறிந்துகொண்டே (தங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய்யையும் கூறுகின்றனர்.
3:76
3:76 بَلٰى مَنْ اَوْفٰى بِعَهْدِهٖ وَاتَّقٰى فَاِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ‏
بَلٰى ஏனில்லை مَنْ எவர் اَوْفٰى நிறைவேற்றினார் بِعَهْدِهٖ தன் வாக்குறுதியை وَاتَّقٰى இன்னும் அல்லாஹ்வை அஞ்சினார் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُتَّقِيْنَ‏ அஞ்சுபவர்களை
3:76. அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்); நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்.
3:76. (உண்மை) அவ்வாறல்ல. எவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறை வேற்றி, (இறைவனுக்கு) பயந்து நடக்கிறார்களோ (அவர்கள்தான் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்.) நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) இறையச்சம் உடையவர்களை நேசிக்கிறான்.
3:76. அவ்வாறல்ல, (அவர்கள் ஏன் விசாரிக்கப்படக் கூடாது?) எவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, தீவினையிலிருந்து விலகிக்கொள்கின்றாரோ அவரே, அல்லாஹ்வின் நேசத்திற்குரியவராவார். ஏனெனில், தீவினையிலிருந்து விலகிக் கொள்பவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:76. ஏன் இல்லை? எவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றி (அல்லாஹ்வுக்குப்) பயந்தும் நடக்கிறாரோ அப்போது (அவர் தான் குற்றம் பிடிக்கப்படமாட்டார்.) நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பயபக்தியுடையவர்களை நேசிக்கின்றான்.
3:77
3:77 اِنَّ الَّذِيْنَ يَشْتَرُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَاَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيْلًا اُولٰٓٮِٕكَ لَا خَلَاقَ لَهُمْ فِى الْاٰخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللّٰهُ وَلَا يَنْظُرُ اِلَيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَكِّيْهِمْ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يَشْتَرُوْنَ வாங்குகிறார்கள் بِعَهْدِ வாக்குறுதிக்குபகரமாக اللّٰهِ அல்லாஹ்வின் وَاَيْمَانِهِمْ இன்னும் அவர்களுடைய சத்தியங்கள் ثَمَنًا விலையை قَلِيْلًا சொற்பமானது اُولٰٓٮِٕكَ அவர்கள் لَا خَلَاقَ அறவே (நற்)பாக்கியமில்லை لَهُمْ அவர்களுக்கு فِى الْاٰخِرَةِ மறுமையில் وَلَا يُكَلِّمُهُمُ இன்னும் அவர்களுடன் பேசமாட்டான் اللّٰهُ அல்லாஹ் وَلَا يَنْظُرُ இன்னும் பார்க்கமாட்டான் اِلَيْهِمْ அவர்கள் பக்கம் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் وَلَا يُزَكِّيْهِمْ இன்னும் அவர்களைத் தூய்மைப்படுத்தமாட்டான் وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَ لِيْمٌ‏ துன்புறுத்தக்கூடியது
3:77. யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை; அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்; இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான்; அவர்களைப்(பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான்; மேலும் அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையும் உண்டு.
3:77. எவர்கள் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தங்கள் சத்தியங்களையும் சொற்பவிலைக்கு விற்றுவிடுகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் நிச்சயமாக ஒரு (நற்)பாக்கியமுமில்லை. மேலும், அல்லாஹ் (மறுமையில்) அவர்களுடன் (விரும்பிப்) பேசவுமாட்டான்; (அன்புடன்) அவர்களை இறுதி நாளில் திரும்பிப்பார்க்கவும் மாட்டான்; அவர்களைப் புனிதப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
3:77. எவர்கள் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும், தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ, அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது.
3:77. நிச்சயமாக, அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதிக்கும், தங்கள் சத்தியங்களுக்கும் பகரமாக சொற்பக் கிரயத்தை வாங்குகின்றார்களே அத்தகையோர்-அவர்களுக்கு மறுமையில் நிச்சயமாக யாதொரு (நற்)பாக்கியமுமில்லை. அல்லாஹ் (மறுமை நாளில்) அவர்களுடன் (விரும்பிப்) பேசவுமாட்டான், (அன்புடன்) அவர்களை மறுமை நாளில் பார்க்கவுமாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான் மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
3:78
3:78 وَاِنَّ مِنْهُمْ لَـفَرِيْقًا يَّلْوٗنَ اَلْسِنَتَهُمْ بِالْكِتٰبِ لِتَحْسَبُوْهُ مِنَ الْكِتٰبِ‌ وَمَا هُوَ مِنَ الْكِتٰبِۚ وَيَقُوْلُوْنَ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ۚ وَيَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ وَ هُمْ يَعْلَمُوْنَ‏
وَاِنَّ நிச்சயமாக مِنْهُمْ அவர்களில் لَـفَرِيْقًا உறுதியாக ஒரு பிரிவினர் يَّلْوٗنَ கோணுகின்றனர் اَلْسِنَتَهُمْ தங்கள் நாவை بِالْكِتٰبِ வேதத்தில் لِتَحْسَبُوْهُ (நீங்கள்) அதை எண்ணுவதற்காக مِنَ الْكِتٰبِ‌ வேதத்தில் وَمَا இன்னும் இல்லை هُوَ مِنَ الْكِتٰبِۚ அது/வேதத்தில் وَيَقُوْلُوْنَ இன்னும் கூறுகின்றனர் هُوَ அது مِنْ عِنْدِ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து وَمَا இல்லை هُوَ அது مِنْ இருந்து عِنْدِ اللّٰهِ‌ۚ அல்லாஹ்விடம் وَيَقُوْلُوْنَ இன்னும் கூறுகின்றனர் عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் الْكَذِبَ பொய் وَ هُمْ يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறிந்து கொண்டே
3:78. நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக; ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல; “அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல; இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள்.
3:78. நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். (அவர்கள்)வேதத்தை ஓதும்போது (அத்துடன் பல வாக்கியங்களைக் கலந்து, அதுவும்) வேதத்திலுள்ளதுதான் என நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக தங்கள் நாவைக் கோணி உளறுகின்றனர். எனினும் அது வேதத்திலுள்ளது அல்ல. இன்னும், ‘‘அது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அவர்கள் நன்கறிந்துகொண்டே அல்லாஹ்வின் மீது இப்படி பொய் கூறுகின்றனர்.
3:78. அவர்களில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள்; வேதத்தைப் படிக்கும்போது தம் நாவுகளை அவர்கள் சுழற்றுகின்றார்கள்; அவர்கள் படிக்கின்ற யாவும் வேதத்தில் உள்ளவையே என்று நீங்கள் எண்ணிக் கொள்ள வேண்டும் என்பதற்காக! உண்மை யாதெனில், அவர்கள் படிப்பவை வேதத்திலுள்ளவையல்ல. (நாங்கள் படிக்கின்ற) “இவை யாவும் இறைவனிட மிருந்து வந்தவை” என்று அவர்கள் கூறுகின்றார்கள்; ஆனால் அவை உண்மையில் இறைவனிடமிருந்து வந்தவையல்ல! அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்கின்றார்கள்.
3:78. நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர்-அவர்கள் வேதத்தைக்கொண்டு-(ஓதும்போது அத்துடன் பல வாக்கியங்களைக் கலந்து) அதுவும் வேதத்திலுள்ளதுதான் என நீங்கள் எண்ணிக் கொள்ளும் பொருட்டு தங்கள் நாவுகளைச் சாய்த்துக் கொள்கின்றனர். அது வேதத்தில் உள்ளதும் அல்ல, அன்றியும் அவர்கள் அது அல்லாஹ்விடமிருந்துள்ளது” என்றும் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடமிருந்துள்ளதும் அல்ல, இன்னும் அவர்கள் நன்கறிந்தவர்களாக, அல்லாஹ்வின்மீது (இவ்வாறு) பொய்யைக் கூறுகின்றனர்.
3:79
3:79 مَا كَانَ لِبَشَرٍ اَنْ يُّؤْتِيَهُ اللّٰهُ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُوْلَ لِلنَّاسِ كُوْنُوْا عِبَادًا لِّىْ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰـكِنْ كُوْنُوْا رَبَّانِيّٖنَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُوْنَ الْكِتٰبَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُوْنَۙ‏
مَا كَانَ உசிதமில்லை لِبَشَرٍ ஒரு மனிதருக்கு اَنْ يُّؤْتِيَهُ அவருக்கு கொடுக்க اللّٰهُ அல்லாஹ் الْكِتٰبَ வேதத்தை وَالْحُكْمَ இன்னும் ஞானம் وَالنُّبُوَّةَ இன்னும் நபித்துவம் ثُمَّ பிறகு يَقُوْلَ கூறுவார் لِلنَّاسِ மக்களுக்கு كُوْنُوْا ஆகிவிடுங்கள் عِبَادًا அடியார்களாக لِّىْ என் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வைத் தவிர்த்து وَلٰـكِنْ என்றாலும் كُوْنُوْا ஆகிவிடுங்கள் رَبَّانِيّٖنَ சீர்திருத்தம் செய்யும் இறையச்சமுள்ள நிர்வாகிகளாக بِمَا كُنْتُمْ நீங்கள் இருப்பதால் تُعَلِّمُوْنَ கற்பிக்கிறீர்கள் الْكِتٰبَ வேதத்தை وَبِمَا كُنْتُمْ இன்னும் நீங்கள் இருப்பதால் تَدْرُسُوْنَۙ‏ கற்றுக் கொள்கிறீர்கள்
3:79. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் “அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்” என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது; ஆனால் அவர் (பிற மனிதரிடம்) “நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்” (என்று தான் சொல்லுவார்).
3:79. ஒரு மனிதருக்கு, வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் கொடுத்த பின்னர் அவர் மனிதர்களை நோக்கி ‘‘அல்லாஹ்வை அன்றி என்னை வணங்குங்கள்'' என்று கூறமாட்டார். ஆயினும் (மனிதர்களை நோக்கி) ‘‘நீங்கள் வேதத்தை (மற்றவர்களுக்குக்) கற்றுக் கொடுத்துக் கொண்டும், ஓதிக்கொண்டும் இருப்பதன் காரணமாக, (அதில் உள்ளவாறு) இறைவன் ஒருவனையே வணங்கும் இறையச்சமுடைய நல்லவர்களாக ஆகிவிடுங்கள்'' என்றுதான் கூறுவார்.
3:79. ஒருவருக்கு அல்லாஹ் வேதத்தையும், இறைத்தூதுத் துவத்தையும், ஞானத்தையும் வழங்கியிருக்க அதனைப் பெற்ற பின்னர், “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து எனக்கு அடிமைகளாகி விடுங்கள்!” என்று மக்களிடம் கூறுவது அவருக்கு அனுமதிக்கப்பட்டதன்று. மாறாக, “நீங்கள் ஓதிக்கொண்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருக்கும் வேத அறிவுரைகளின் தேட்டப்படி ரப்பானீகளாய்த் திகழுங்கள்!” என்றே அவர் கூறுவார்.
3:79. எந்த ஒரு மனிதருக்கும், வேதத்தையும் ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் அவருக்குக் கொடுத்திருக்க, பின்னர் அவர், மனிதர்களிடம், “அல்லாஹ்வையன்றி எனக்கே அடியார்களாகி (என்னையே வணங்கி) விடுங்கள்” என்று கூற இயலாது. எனினும், (மனிதர்களிடம்) “நீங்கள் வேதத்தை (மற்றவர்களுக்கு)க் கற்றுக்கொடுத்துக்கொண்டும், கற்றுக்கொண்டும் இருப்பதன் காரணமாக, (அதிலுள்ளவாறு) இரட்சக(ன் ஒருவனையே வணங்கி அவ)னைச் சார்ந்த அடியார்களாக ஆகிவிடுங்கள்” (என்றுதான் கூறுவார்கள்.)
3:80
3:80 وَلَا يَاْمُرَكُمْ اَنْ تَتَّخِذُوا الْمَلٰٓٮِٕكَةَ وَالنَّبِيّٖنَ اَرْبَابًا‌ ؕ اَيَاْمُرُكُمْ بِالْكُفْرِ بَعْدَ اِذْ اَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏
وَلَا يَاْمُر அவர் ஏவுவது இல்லை كُمْ உங்களை اَنْ تَتَّخِذُوا நீங்கள்எடுத்துக்கொள்வது الْمَلٰٓٮِٕكَةَ வானவர்களை وَالنَّبِيّٖنَ இன்னும் நபிமார்களை اَرْبَابًا‌ ؕ கடவுள்களாக اَيَاْمُرُكُمْ உங்களை ஏவுவாரா? بِالْكُفْرِ நிராகரிக்கும்படி بَعْدَ பின்னர் اِذْ اَنْـتُمْ நீங்கள் ஆகிய مُّسْلِمُوْنَ‏ முஸ்லிம்களாக
3:80. மேலும் அவர், “மலக்குகளையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் - நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடமே முற்றிலும் சரணடைந்தவர்கள்) ஆகிவிட்ட பின்னர் (நீங்கள் அவனை) நிராகரிப்போராகி விடுங்கள் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா?.
3:80. தவிர ‘‘வானவர்களையும், நபிமார்களையும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றும் அவர் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் என்னே! இறைவன் ஒருவனையே நீங்கள் அங்கீகரித்த பின்னர் (அவனை) நிராகரிக்கும்படி அவர் உங்களை ஏவுவாரா?
3:80. வானவர்களையோ இறைத்தூதர்களையோ உங்கள் கடவுளர்களாய் ஆக்கிக்கொள்ளும்படி உங்களுக்கு ஒருபோதும் அவர் கட்டளையிடமாட்டார். நீங்கள் முற்றிலும் இறைவனுக்குப் பணிந்துவிட்ட பிறகு (முஸ்லிம்களாய்த் திகழும்போது) நிராகரிக்கும் போக்கை மேற்கொள்ளும்படி ஒரு நபி உங்களுக்குக் கட்டளையிடுவாரா, என்ன?
3:80. மேலும், “மலக்குகளையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய தெய்வங்களான) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும், உங்களுக்கு அவர் கட்டளையிட மாட்டார். (அல்லாஹ் ஒருவனுக்கே) நீங்கள் முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக (முஸ்லீம்களாக) ஆனதன் பின்னர் (அதனை) நிராகரிக்கும்படி உங்களுக்கு அவர் கட்டளையிடுவாரா?
3:81
3:81 وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَاۤ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَـتُؤْمِنُنَّ بِهٖ وَلَـتَـنْصُرُنَّهٗ ‌ؕ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰ لِكُمْ اِصْرِىْ‌ؕ قَالُوْۤا اَقْرَرْنَا ‌ؕ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ‏
وَاِذْ اَخَذَ வாங்கிய சமயம் اللّٰهُ அல்லாஹ் مِيْثَاقَ வாக்குறுதியை النَّبِيّٖنَ நபிமார்களின் لَمَاۤ اٰتَيْتُكُمْ உங்களுக்குக் கொடுத்தபோதெல்லாம் مِّنْ كِتٰبٍ வேதத்தை وَّحِكْمَةٍ இன்னும் ஞானம் ثُمَّ பிறகு جَآءَكُمْ உங்களிடம் வந்தார் رَسُوْلٌ ஒரு தூதர் مُّصَدِّقٌ உண்மைப்படுத்துபவர் لِّمَا مَعَكُمْ உங்களுடனுள்ளதை لَـتُؤْمِنُنَّ بِهٖ நிச்சயமாகஅவரை நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும் وَلَـتَـنْصُرُنَّهٗ ؕ இன்னும் நிச்சயமாக நீங்கள் அவருக்கு உதவவேண்டும் قَالَ கூறினான் ءَاَقْرَرْتُمْ ஏற்றீர்களா? وَاَخَذْتُمْ இன்னும் ஏற்றீர்களா? عَلٰى ذٰ لِكُمْ மீது/இது اِصْرِىْ‌ؕ என்உடன்படிக்கையை قَالُوْۤا கூறினார்கள் اَقْرَرْنَا ؕ ஒப்புக்கொண்டோம் قَالَ கூறினான் فَاشْهَدُوْا சாட்சி பகருங்கள் وَاَنَا இன்னும் நான் مَعَكُمْ உங்களுடன் مِّنَ الشّٰهِدِيْنَ‏ சாட்சியாளர்களில்
3:81. (நினைவு கூறுங்கள்:) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக” (எனக் கூறினான்). “நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?” என்றும் கேட்டான்; ”நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்” என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) “நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்” என்று கூறினான்.
3:81. நபிமார்களிடம் அல்லாஹ் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களை நோக்கி) ‘‘வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். இதற்குப் பின்னர் உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் உண்மையாக நம்பிக்கை கொண்டு நிச்சயமாக அவருக்கு உதவி செய்யவேண்டும்'' (என்று கூறி) ‘‘இதை நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? என் இக்கட்டளையை எடுத்துக் கொண்டீர்களா?'' என்று கேட்டதற்கு, அவர்கள் ‘‘நாங்கள் (அதை) அங்கீகரித்துக் கொண்டோம்'' என்றே கூறினார்கள். அப்போது (இறைவன் ‘‘இதற்கு) நீங்கள் சாட்சியாயிருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கிறேன்'' என்று கூறினான்.
3:81. அல்லாஹ் நபிமார்களிடம் இவ்வாறு உறுதிமொழி வாங்கிய நேரத்தை நினைவுகூருங்கள்: “நான் (இப்போது) உங்களுக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் வழங்கியிருக்கின்றேன். இனி ஏற்கனவே உங்களிடமுள்ள அறிவுரைகளை மெய்ப்படுத்தக்கூடிய வேறோர் இறைத்தூதர் உங்களிடம் வந்தால் கண்டிப்பாக அவர் மீது நம்பிக்கை கொண்டு நீங்கள் அவருக்கு உதவி புரிந்திடவும் வேண்டும்” (இவ்வாறு கூறிவிட்டு) அல்லாஹ் வினவினான்: “இதனை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? மேலும், இதற்காக என்னுடன் நீங்கள் செய்துகொண்ட பெரும் ஒப்பந்தத்தை (அதனால் ஏற்படும் மாபெரும் பொறுப்புகளை) ஏற்றுக் கொள்கிறீர்களா?” அவர்கள், “(ஆம்!) நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்றார்கள். அல்லாஹ் கூறினான்: “அப்படியானால் நீங்கள் (இதற்கு) சாட்சியாக இருங்கள். நானும் உங்களோடு சாட்சியாக இருக்கின்றேன்.
3:81. மேலும், அல்லாஹ் நபிமார்களிடம்: வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களிடம்,) “வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்து, (இதற்குப்) பின்னர், உங்களிடமுள்ளதை உண்மைப் படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால், அவரை நீங்கள் உண்மையாக விசுவாசித்து, நிச்சயமாக அவருக்கு உதவி செய்வீர்கள் (என்று கூறி, “இதனை) நீங்களும் உறுதிப்படுத்தினீர்களா?” இதன்மீது என்னுடைய வாக்குறுதியை எடுத்துக் கொண்டீர்களா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “நாங்கள் (அதனை) உறுதிப்படுத்துகிறோம்” என்றே கூறினார்கள். (“இதற்கு) நீங்கள் சாட்சியாக இருங்கள், நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
3:82
3:82 فَمَنْ تَوَلّٰى بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ‏
فَمَنْ எவர் تَوَلّٰى விலகினார் بَعْدَ பின்னர் ذٰ لِكَ இது فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْفٰسِقُوْنَ‏ பாவிகள்
3:82. எனவே, இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் தாம்.
3:82. இதற்குப் பின்னரும் எவரேனும் புறக்கணித்தால் அவர்கள்தான் பெரும் பாவிகள் ஆவர்.
3:82. இதன் பிறகு (அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையிலிருந்து) யார் பின்வாங்கிச் செல்கின்றார்களோ அவர்களே பாவிகளாவர்.”
3:82. எனவே, இதற்குப் பின்னர் எவரேனும் புறக்கணித்தால், நிச்சயமாக அவர்கள்தாம் பாவிகள்.
3:83
3:83 اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ‏
اَفَغَيْرَ அல்லாததையா? دِيْنِ மார்க்கம் اللّٰهِ அல்லாஹ்வின் يَبْغُوْنَ விரும்புகிறார்கள் وَلَهٗۤ அவனுக்கே اَسْلَمَ பணிந்தார்(கள்) مَنْ எவர்கள் فِى السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِ இன்னும் பூமியில் طَوْعًا விரும்பி وَّكَرْهًا இன்னும் நிர்பந்தம் وَّاِلَيْهِ இன்னும் அவன் பக்கமே يُرْجَعُوْنَ‏ திருப்பப்படுவார்கள்
3:83. அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
3:83. அல்லாஹ்வுடைய மார்க்கத்தையன்றி (வேறு மார்க்கத்தை)யா இவர்கள் விரும்புகிறார்கள்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்துமே (அவை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவனுக்குக் கீழ்ப்படிந்தே நடக்கின்றன. மேலும், (அவையனைத்தும்) அவன் பக்கமே திரும்பக் கொண்டு வரப்படும்.
3:83. இனி அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் தீனை (வாழ்க்கை நெறியை) விட்டு வேறொரு வாழ்க்கை நெறியையா இவர்கள் விரும்புகின்றார்கள்? உண்மை என்னவெனில், வானங்கள், பூமி ஆகியவற்றில் உள்ள அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே கீழ்ப்படிந்து (முஸ்லிமாக) இருக்கின்றன; மேலும் அவனிடமே அவர்கள் அனைவரும் திரும்ப வேண்டியவராய் இருக்கின்றனர்.
3:83. அல்லாஹ்வுடைய மார்க்கமல்லாத (வேறு மார்க்கத்)தையா அவர்கள் தேடுகின்றார்கள்? வானங்கள், மற்றும் பூமியில் உள்ளவை, (அவை) விரும்பினாலும், வெறுத்தாலும் அவனுக்கே முழுமையாகக் கீழ்ப்படிந்து (தங்களை ஒப்படைத்து) விட்டன. மேலும், அவனளவிலேயே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.
3:84
3:84 قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَيْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰٓى اِبْرٰهِيْمَ وَ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِىَ مُوْسٰى وَ عِيْسٰى وَالنَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
قُلْ கூறுவீராக اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை عَلَيْنَا எங்கள் மீது وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை عَلٰٓى மீது اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَ اِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَمَاۤ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார் مُوْسٰى وَ عِيْسٰى மூஸா/இன்னும் ஈஸா وَالنَّبِيُّوْنَ இன்னும் நபிமார்கள் مِنْ رَّبِّهِمْ தங்கள் இறைவனிடமிருந்து لَا نُفَرِّقُ பிரிக்க மாட்டோம் بَيْنَ اَحَدٍ ஒருவருக்கு மத்தியில் مِّنْهُمْ இவர்களில் وَنَحْنُ இன்னும் நாங்கள் لَهٗ அவனுக்கே مُسْلِمُوْنَ‏ முற்றிலும் பணிந்தவர்கள்
3:84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
3:84. (நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையும், நம்மீது அருளப்பட்டதையும்; இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியவர்கள் மீதும், அவர்கள் சந்ததிகள் மீது அருளப்பட்டவற்றையும்; மூஸா, ஈஸா மற்றும் அனைத்து நபிமார்களுக்கு அவர்கள் இறைவனால் அளிக்கப்பட்டவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். இவர்களில் ஒருவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அல்லாஹ் ஒருவனுக்கே நாங்கள் (முற்றிலும்) கீழ்ப்படிந்து நடப்போம்.''
3:84. நீர் கூறுவீராக: “நாங்கள் அல்லாஹ்வையும் எங்கள் மீது இறக்கியருளப்பட்டிருக்கும் அறிவுரைகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் யஃகூபின் வழித்தோன்றல்கள் ஆகியோர் மீது இறக்கியருளப்பட்டவற்றையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். இன்னும் மூஸா, ஈஸா மற்றுமுள்ள நபிமார்களுக்கு அவர்களுடைய அதிபதியிடமிருந்து இறக்கியருளப்பட்டவற்றையும் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். இவர்களுக்கிடையே நாங்கள் எவ்வித வேற்றுமையும் காட்டுவதில்லை. மேலும் நாங்கள் அல்லாஹ்வுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்கும் முஸ்லிம்களாக இருக்கின்றோம்.
3:84. “அல்லாஹ்வையும், நம்மீது இறக்கி வைக்கப் பட்டதையும், இன்னும், இப்ராஹீம், இஸ்மாயீல் இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்கள் மீதும், அவர்கள் சந்ததிகள்மீதும், இறக்கி வைக்கப்பட்டவைகளையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும், நபிமார்களுக்கும் அவர்கள் இரட்சகனால் கொடுக்கப் பட்டவைகளையும் நாம் விசுவாசிக்கிறோம். அவர்களில் எவருக்குமிடையில் நாம் (பிரித்து) வேற்றுமை பாராட்ட மாட்டோம். அ(ல்லாஹ் ஒரு)வனுக்கே நாங்கள் (முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லீம்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
3:85
3:85 وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ‌ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ‏
وَمَنْ எவர் يَّبْتَغِ விரும்புவார் غَيْرَ الْاِسْلَامِ இஸ்லாமல்லாததை دِيْنًا மார்க்கமாக فَلَنْ يُّقْبَلَ அறவே அங்கீகரிக்கப்படாது مِنْهُ‌ ۚ அவரிடமிருந்து وَهُوَ இன்னும் அவர் فِى الْاٰخِرَةِ மறுமையில் مِنَ الْخٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளில்
3:85. இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
3:85. இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கவே படமாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்த வராகவே இருப்பார்.
3:85. இவ்வாறு அவனுக்குப் பணிந்து வாழும் நடத்தையை (இஸ்லாத்தை) விடுத்து வேறொரு வாழ்க்கை நெறியை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால், அவனிடமிருந்து ஒருபோதும் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவரில் ஒருவனாக இருப்பான்.
3:85. “இன்னும் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவராவது தேடினால், அப்பொழுது அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்படவே மாட்டாது. மேலும், மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் இருப்பார்”
3:86
3:86 كَيْفَ يَهْدِى اللّٰهُ قَوْمًا كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ وَشَهِدُوْۤا اَنَّ الرَّسُوْلَ حَقٌّ وَّجَآءَهُمُ الْبَيِّنٰتُ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
كَيْفَ எவ்வாறு يَهْدِى நேர்வழி செலுத்துவான் اللّٰهُ அல்லாஹ் قَوْمًا ஒரு கூட்டத்தை كَفَرُوْا நிராகரித்தார்கள் بَعْدَ பின்னர் اِيْمَانِهِمْ தாங்கள் நம்பிக்கை கொண்டதற்கு وَشَهِدُوْۤا இன்னும் சாட்சி கூறினர் اَنَّ الرَّسُوْلَ நிச்சயமாக தூதர் حَقٌّ உண்மையானவர் وَّجَآءَهُمُ இன்னும் அவர்களிடம் வந்தது الْبَيِّنٰتُ‌ؕ தெளிவான சான்றுகள் وَاللّٰهُ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்கள்
3:86. அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.
3:86. அல்லாஹ் எப்படி ஒரு சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவான். அவர்களோ, தங்களிடம் வந்த பல அத்தாட்சிகளின் மூலம் நிச்சயமாக (அல்லாஹ்வுடைய) தூதர் உண்மையானவர் என சாட்சியம் கூறி நம்பிக்கை கொண்டதன் பின்னரும் (அத்தூதரை) நிராகரிக்கின்றனர். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவதில்லை.
3:86. இறைநம்பிக்கை கொண்ட பிறகு நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்ட மக்களுக்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்? அவர்களோ இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சியம் அளித்திருந்தார்கள். மேலும் தெளிவான சான்றுகளும் அவர்களிடம் வந்திருந்தன. இவ்வாறு கொடுமை புரியும் சமுதாயத்தவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
3:86. தங்களுடைய விசுவாசத்திற்குப் பின்னர் நிராகரித்து விட்ட ஒரு சமூகத்தினருக்கு அல்லாஹ் எவ்வாறு நேர் வழிகாட்டுவான்? நிச்சயமாக (அல்லாஹ்வுடைய) தூதர் உண்மையானவர் என்றும் அவர்கள் சாட்சியமும் கூறினர். அவர்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளும் வந்திருந்தன. அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார சமூகத்தாரை நேரான வழியில் செலுத்த மாட்டான்.
3:87
3:87 اُولٰٓٮِٕكَ جَزَآؤُهُمْ اَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللّٰهِ وَالْمَلٰٓٮِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَۙ‏
اُولٰٓٮِٕكَ இவர்கள் جَزَآؤُهُمْ இவர்களுடைய கூலி اَنَّ நிச்சயமாக عَلَيْهِمْ இவர்கள் மீது لَعْنَةَ اللّٰهِ அல்லாஹ்வின் சாபம் وَالْمَلٰٓٮِٕكَةِ இன்னும் வானவர்கள் وَالنَّاسِ இன்னும் மக்கள் اَجْمَعِيْنَۙ‏ அனைவர்
3:87. நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும்.
3:87. இவர்களுக்கு (அவர்கள் செயலுக்குத் தக்க) பிரதிபலனாவது: இவர்கள் மீது நிச்சயமாக அல்லாஹ், வானவர்கள், மனிதர்கள் ஆகிய அனைவருடைய சாபம் உண்டாகுவதுதான்.
3:87. (அவர்கள் புரிந்த கொடுமைக்காக) அல்லாஹ்வும் வானவர்களும், மக்கள் அனைவரும் அவர்கள் மீது இடுகின்ற சாபம்தான் அவர்களுக்குரிய சரியான கூலியாகும்!
3:87. அத்தகையோர் - அவர்களுக்குரிய கூலி, நிச்சயமாக அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் (ஆகிய!) யாவருடைய சாபம் அவர்கள் மீது உண்டு என்பதுதான்.
3:88
3:88 خٰلِدِيْنَ فِيْهَا ‌ۚ لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُوْنَۙ‏
خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَا ۚ அதில் لَا يُخَفَّفُ இலேசாக்கப்படாது عَنْهُمُ அவர்களை விட்டு الْعَذَابُ வேதனை وَلَا هُمْ يُنْظَرُوْنَۙ‏ இன்னும் அவர்கள் தவனை அளிக்கப்படமாட்டார்கள்
3:88. இ(ந்த சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; அவர்களுக்கு (வேதனை) தாமதப்படுத்தப் படவும் மாட்டாது.
3:88. இ(ச்சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படவும் மாட்டாது. அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படவும் மாட்டாது.
3:88. சாபக்கேடான நிலையிலேயே அவர்கள் என்றென்றும் மூழ்கிக் கிடப்பார்கள்; தண்டனை அவர்களுக்குக் குறைக்கப்படவும் மாட்டாது. மேலும் அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படமாட்டாது.
3:88. இ(ச்சாபத்)திலேயே அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள், அவர்களை விட்டும் வேதனை இலேசாக்கப்படவுமாட்டாது. (வேதனை செய்யப்படுவதிலிருந்து) அவர்கள் கால அவகாசம் கொடுக்கப்படவுமாட்டார்கள்.
3:89
3:89 اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰ لِكَ وَاَصْلَحُوْا  فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் تَابُوْا திரும்பினார்கள்; மன்னிப்புக் கோரினார்கள் مِنْۢ بَعْدِ ذٰ لِكَ அதற்கு பின்னர் وَاَصْلَحُوْا இன்னும் சீர்திருத்தினார்கள்  فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
3:89. எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
3:89. எனினும், இதற்குப் பின்னரும் எவரேனும் வருத்தப்பட்டு (பாவங்களில் இருந்து) விலகி நற்செயல்களைச் செய்தவர்களைத் தவிர (அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுவான்). ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
3:89. ஆயினும் அதற்குப் பின்னர் பாவமன்னிப்புக் கோரி, தமது நடத்தையைத் திருத்திக் கொண்டவர்களைத் தவிர! (அவர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.) ஏனெனில் திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், கருணை பொழிபவனும் ஆவான்.
3:89. அதன்பின்னர் பச்சாதாபப்பட்டு, (பாவங்களிலிருந்து விலகி) தங்களை சீர்திருத்திக் கொண்டார்களே அத்தகையோரைத் தவிர-(அல்லாஹ் அவர்களை மன்னித்துவிடுவான். ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கின்றவன், மிக்க கிருபையுடையவன்.
3:90
3:90 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ‌ۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الضَّآ لُّوْنَ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் بَعْدَ பின்னர் اِيْمَانِهِمْ தாங்கள் நம்பிக்கை கொண்டதற்கு ثُمَّ பிறகு ازْدَادُوْا அதிகப்படுத்தினார்கள் كُفْرًا நிராகரிப்பை لَّنْ تُقْبَلَ அறவே அங்கீகரிக்கப்படாது تَوْبَتُهُمْ‌ۚ அவர்களுடைய மன்னிப்புக் கோருதல் وَاُولٰٓٮِٕكَ هُمُ இன்னும் அவர்கள்தான் الضَّآ لُّوْنَ‏ வழிகெட்டவர்கள்
3:90. எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.
3:90. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்துவிட்டு மென்மேலும், அந்நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறார்களோ, அவர்களுடைய மன்னிப்புக் கோருதல் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள்தான் (முற்றிலும்) வழி கெட்டவர்கள்.
3:90. ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டபின் நிராகரிப்பை மேற்கொண்டனரோ, மேலும் நிராகரிப்பிலேயே மூழ்கிக் கொண்டு போகின்றனரோ அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அவர்கள்தான் (முதிர்ந்த) வழிகேடர்கள்.
3:90. நிச்சயமாக, தங்களுடைய விசுவாசத்திற்கு பின்னர் நிராகரித்து, மேலும் நிராகரிப்பை அதிகமாக்கிக் கொண்டார்களே அத்தகையோர்-அவர்களுடைய தவ்பா(மன்னிப்புக்கோருதல்) அங்கீகரிக்கப்படவேமாட்டாது. மேலும், அவர்கள் தாம் (முற்றிலும்)வழி கெட்டவர்கள்.
3:91
3:91 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُّقْبَلَ مِنْ اَحَدِهِمْ مِّلْءُ الْاَرْضِ ذَهَبًا وَّلَوِ افْتَدٰى بِهٖ ؕ اُولٰٓٮِٕكَ لَـهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ وَّمَا لَـهُمْ مِّــنْ نّٰصِــرِيْنَ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَمَاتُوْا இன்னும் இறந்தார்கள் وَهُمْ كُفَّارٌ அவர்கள் நிராகரிப்பாளர்களாகவே فَلَنْ يُّقْبَلَ அறவே அங்கீகரிக்கப்படாது مِنْ இருந்து اَحَدِهِمْ அவர்களில் ஒருவர் مِّلْءُ الْاَرْضِ பூமி நிறைய ذَهَبًا தங்கத்தை وَّلَوِ افْتَدٰى بِهٖ ؕ அதை ஈடாக கொடுத்தாலும் சரியே اُولٰٓٮِٕكَ இவர்கள் لَـهُمْ இவர்களுக்கு عَذَابٌ வேதனை اَلِيْمٌۙ துன்புறுத்தக் கூடியது وَّمَا இன்னும் இல்லை لَـهُمْ அவர்களுக்கு مِّــنْ نّٰصِــرِيْنَ‏ உதவியாளர்களில் ஒருவரும்
3:91. எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு; இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
3:91. நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகின்றனரோ அவர்களில் ஒருவனுக்கு இப்பூமி நிறைய தங்கம் இருந்து, அதைத் (தன் குற்றத்தை மன்னிப்பதற்குத்) தனக்கு ஈடாக அவன் கொடுத்த போதிலும் (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. இவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அங்கு) ஒருவரும் இருக்கமாட்டார்!
3:91. திண்ணமாக, எவர்கள் நிராகரிப்பை மேற்கொண்டு அதே நிலையில் மரணமடைந்து விடுகின்றார்களோ அவர்கள் தம்மைத் தண்டனையிலிருந்து காப்பாற்றிக்கொள்ள பூமி நிரம்பப் பொன்னை ஈட்டுத் தொகையாகத் தந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இத்தகையோருக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது. மேலும் அவர்களுக்கு உதவி புரிவோர் எவரும் இரார்.
3:91. நிச்சயமாக, நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்தவர்களாகவே இறந்தும் விடுகின்றனரே, அத்தகையோர்-பொன்னால் இப்பூமி நிறைய உள்ளதை-அதனை(த்தன் குற்றம் மன்னிக்கப்படுவதற்கு) ஈடாக அவர் கொடுத்த போதிலும், (அது) அவர்களில் எவரிடமிருந்தும் அங்கீகரிக்கப்படவேமாட்டாது. அத்தகையோருக்கே துன்புறுத்தும் வேதனையுமுண்டு. அவர்களுக்கு உதவிசெய்வோரும் எவரும் இல்லை.
3:92
3:92 لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ ؕ  وَمَا تُنْفِقُوْا مِنْ شَىْءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏
لَنْ تَنَالُوا அறவே அடைய மாட்டீர்கள் الْبِرَّ நன்மையை حَتّٰى வரை تُنْفِقُوْا தர்மம் செய்கிறீர்கள் مِمَّا எதிலிருந்து تُحِبُّوْنَ ؕ  நேசிக்கிறீர்கள் وَمَا تُنْفِقُوْا எதை (நீங்கள்) தர்மம் செய்தாலும் مِنْ ஒரு பொருள் شَىْءٍ இல் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் بِهٖ அதை عَلِيْمٌ‏ மிக நன்கறிந்தவன்
3:92. நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
3:92. உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் (தானமாக) செலவு செய்யாத வரை நிச்சயமாக நீங்கள் நன்மையை அடைய மாட்டீர்கள். நீங்கள் எதை தானம் செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான்.
3:92. உங்களுக்கு விருப்பமானவற்றை (இறைவழியில்) செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும் எதனை நீங்கள் செலவழித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
3:92. (தர்மம் செய்தால்) நீங்கள் விரும்புகின்றனவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யாதவரையில், நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள். நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் நிச்சயமாக, அல்லாஹ் அதனை நன்கறிந்தவன்.
3:93
3:93 كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِلَّا مَا حَرَّمَ اِسْرَآءِيْلُ عَلٰى نَفْسِهٖ مِنْ قَبْلِ اَنْ تُنَزَّلَ التَّوْرٰٮةُ ‌ؕ قُلْ فَاْتُوْا بِالتَّوْرٰٮةِ فَاتْلُوْهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
كُلُّ எல்லா(ம்) الطَّعَامِ உணவு(ம்) كَانَ இருந்தது حِلًّا ஆகுமானதாக لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களுக்கு اِلَّا தவிர مَا எவை حَرَّمَ விலக்கினார் اِسْرَآءِيْلُ இஸ்ராயீல் عَلٰى نَفْسِهٖ தன் மீது مِنْ قَبْلِ முன்னர் اَنْ تُنَزَّلَ இறக்கப்படுவதற்கு التَّوْرٰٮةُ ؕ தவ்றாத் قُلْ கூறுவீராக فَاْتُوْا வாருங்கள் بِالتَّوْرٰٮةِ தவ்றாத்தைக்கொண்டு فَاتْلُوْهَاۤ இன்னும் ஓதுங்கள்/அதை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
3:93. இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டு வந்து அதை ஓதிக்காண்பியுங்கள்” என்று.
3:93. இஸ்ரவேலர்களுக்கு தவ்றாத் அருளப்படுவதற்கு முன்னர் எல்லா உணவும் ஆகுமானதாகவே இருந்தது. எனினும், இஸ்ராயீல் தனக்கு விலக்கிக் கொண்டவற்றைத் தவிர. (ஆகவே, இதற்கு மாறாகக் கூறும் யூதர்களை நோக்கி நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் தவ்றாத்தைக் கொண்டு வந்து ஓதிக் காண்பியுங்கள்.''
3:93. (முஹம்மத் நபியுடைய ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும்) உண்பொருள்கள் அனைத்தும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால் தவ்ராத் அருளப்படுவதற்கு முன் சில பொருட்களை இஸ்ராயீல் (அதாவது யஃகூப்) தாமாகவே தமக்கு தடுக்கப்பட்டனவாய் (ஹராமாய்) ஆக்கிக் கொண்டிருந்தார். எனவே நபியே! அவர்களிடம் நீர் கூறும்: (“உங்கள் ஆட்சேபணையில்) நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், தவ்ராத்தைக் கொண்டுவந்து அதிலிருந்து ஒரு வாசகத்தையேனும் படித்துக் காட்டுங்கள்!”
3:93. தவ்றாத் இறக்கப்படுவதற்கு முன்னர் இஸ்ராயீல் (எனும் யாஃகூப்) தன் மீது விலக்கிக் கொண்டதைத் தவிர, எல்லா உணவுகளும் இஸ்ராயீலின் மக்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக இருந்தது. (ஆகவே, இதற்கு மாறாகக் கூறும் யூதர்களிடம், நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், தவ்றாத்தைக் கொண்டு வந்து அதனை ஓதுங்கள்” (அதன் மூலம் உண்மை தெளிவாகும்.)
3:94
3:94 فَمَنِ افْتَرٰى عَلَى اللّٰهِ الْكَذِبَ مِنْۢ بَعْدِ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَؔ‏
فَمَنِ எவர்(கள்) افْتَرٰى கற்பனை செய்கிறார்(கள்) عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் الْكَذِبَ பொய்யை مِنْۢ بَعْدِ ذٰ لِكَ இதற்குப் பின்னர் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الظّٰلِمُوْنَؔ‏ அநியாயக்காரர்கள்
3:94. இதன் பின்னரும் எவரேனும் ஒருவர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறினால் நிச்சயமாக அவர்கள் அக்கிரமக்காரர்களே ஆவார்கள்.
3:94. இதற்குப் பின்னரும் எவரேனும் அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறினால் அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவர்.
3:94. எனவே அதற்குப் பின்னரும் யார் அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்துரைத்தவாறு இருக்கின்றார்களோ, அவர்கள்தாம் உண்மையில் கொடுமையாளர்கள் ஆவர்.
3:94. எனவே, இதற்குப் பின்னரும் எவரேனும் அல்லாஹ்வின்மீது பொய்யைக் கற்பனை செய்தால் அவர்கள் தாம் அநியாயக்காரர்களாவார்கள்.
3:95
3:95 قُلْ صَدَقَ اللّٰهُ‌ فَاتَّبِعُوْا مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ‏
قُلْ கூறுவீராக صَدَقَ உண்மை கூறி விட்டான் اللّٰهُ‌ அல்லாஹ் فَاتَّبِعُوْا ஆகவே பின்பற்றுங்கள் مِلَّةَ மார்க்கத்தை اِبْرٰهِيْمَ இப்றாஹீமின் حَنِيْفًا ؕ இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவர் وَمَا كَانَ இன்னும் அவர் இருக்கவில்லை. مِنَ الْمُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களில்
3:95. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்; அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை.”
3:95. (நபியே!) கூறுவீராக: ‘‘(இவற்றைப் பற்றி) அல்லாஹ் கூறியவைதான் (முற்றிலும்) உண்மை. ஆகவே, (நம்பிக்கையாளர்களே! இவர்களைப் புறக்கணித்துவிட்டு) நேரான வழியில் சென்ற இப்ராஹீமுடைய மார்க்கத்தையே பின்பற்றுங்கள். அவர் இணைவைத்து வணங்குபவராக இருக்கவில்லை.
3:95. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ் உண்மையே உரைக்கின்றான். நீங்கள் ஒருமனப்பட்ட இப்ராஹீமின் வழிமுறையைப் பின்பற்றுங்கள்! மேலும் இப்ராஹீம் இறைவனுக்கு இணைவைப்போரில் ஒருவராய் இருந்ததில்லை.”
3:95. (நபியே!) நீர் கூறுவீராக! (இவைகளைப் பற்றி) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான். ஆகவே (விசுவாசிகளே! இவர்களைப் புறக்கணித்து விட்டு) சத்தியவழியைச் சார்ந்தவரான இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். அவர் இணைவைத்துக் கொண்டிருப்போரில் (ஒருவராக) இருக்கவில்லை.
3:96
3:96 اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌ۚ‏
اِنَّ நிச்சயமாக اَوَّلَ முதல் بَيْتٍ இல்லம் وُّضِعَ அமைக்கப்பட்டது لِلنَّاسِ மக்களுக்கு لَـلَّذِىْ எதுதான் بِبَكَّةَ பக்கா வில் مُبٰرَكًا அருள்செய்யப்பட்டது وَّهُدًى இன்னும் நேர்வழி لِّلْعٰلَمِيْنَ‌ۚ‏ அகிலத்தார்களுக்கு
3:96. (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
3:96. (இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக ‘பக்கா' (மக்கா)வில் இருப்பதுதான். அது மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
3:96. திண்ணமாக, மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வணக்கத்தலம் மக்காவிலுள்ளதேயாகும். அருள்நலம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும் அது உள்ளது.
3:96. (இவ்வுலகில், அல்லாஹ்வை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு வைக்கப்பட்ட முதல் வீடு நிச்சயமாக பக்கா (மக்கா)வில் இருப்பது தான். பரக்கத்துச் செய்யப்பட்டதாக (அதில் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக)வும், அகிலத்தார்க்கு நேர்வழியாகவும் இருக்கின்றது.
3:97
3:97 فِيْهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَۚ  وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ؕ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏
فِيْهِ அதில் اٰيٰتٌ ۢ அத்தாட்சிகள் بَيِّنٰتٌ தெளிவானவை مَّقَامُ நின்ற இடம் اِبْرٰهِيْمَۚ இப்றாஹீம் وَمَنْ இன்னும் எவர் دَخَلَهٗ நுழைகிறார்/அதில் كَانَ ஆகி விட்டார் اٰمِنًا ؕ அச்சமற்றவராக وَلِلّٰهِ அல்லாஹ்வுக்காக عَلَى மீது النَّاسِ மக்கள் حِجُّ ஹஜ் செய்வது الْبَيْتِ இல்லத்தை مَنِ எவர் اسْتَطَاعَ சக்தி பெற்றார் اِلَيْهِ அதன் பக்கம் سَبِيْلًا ؕ பாதையால் وَمَنْ இன்னும் எவர் كَفَرَ நிராகரித்தார் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَنِىٌّ தேவையற்றவன் عَنِ விட்டு الْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களை
3:97. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.
3:97. அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கிறது. எவர் அதில் நுழைகிறாரோ அவர் (பாதுகாப்புப் பெற்று) அச்சமற்றவராகி விடுகிறார். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கிறார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவன் ஆவான்.
3:97. அங்குத் தெளிவான சான்றுகளும் இப்ராஹீம் நின்று தொழுத இடமும் உள்ளன. மேலும் (அது எத்தகைய ஆலயமெனில்) அங்கு எவர் நுழைந்தாலும் அவர் அச்சமற்றவராகி விடுகின்றார். மேலும், அந்த ஆலயத்திற்குச் சென்றுவர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்காக ஆற்றவேண்டிய கடமையாகும். ஆனால் யாரேனும் இக்கட்டளையைச் செயல்படுத்த மறுத்தால் (அவர் தெரிந்து கொள்ளட்டும்) உலகத்தார் அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாய் இருக்கின்றான்.
3:97. அதில் தெளிவான அத்தாட்சிகளும், இப்ராஹீம் (தொழுகைக்காக) நின்ற இட(மான ‘மகாம் இப்ராஹீ’)மும் இருக்கின்றது, மேலும் எவர் அதில் நுழைகின்றாரோ அவர், (அபயம் பெற்று) அச்சமற்றவராகி விடுகின்றார். (ஆகவே) எவர்கள் அங்கு யாத்திரை செல்லச் சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ, அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று அவ்)வீட்டை ஹஜ்ஜுச் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் அப்போது (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் அனைவரை விட்டும் தேவையற்றவன்.
3:98
3:98 قُلْ يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ ۖ وَاللّٰهُ شَهِيْدٌ عَلٰى مَا تَعْمَلُوْنَ‏
قُلْ கூறுவீராக يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே لِمَ ஏன் تَكْفُرُوْنَ நிராகரிக்கிறீர்கள் بِاٰيٰتِ اللّٰهِ ۖ வசனங்களை/ அல்லாஹ்வின் وَاللّٰهُ அல்லாஹ் شَهِيْدٌ சாட்சியாளன் عَلٰى مَا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்வதற்கு
3:98. “வேதத்தையுடையோரே! அல்லாஹ்வின் ஆயத்கள் (என்னும் அத்தாட்சிகளையும், வசனங்களையும்) ஏன் நிராகரிக்கின்றீர்கள்? அல்லாஹ்வே நீங்கள் செய்யும் (அனைத்துச்) செயல்களையும் நோட்டமிட்டுப் பார்ப்பவனாக இருக்கிறானே!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
3:98. (நபியே!) கூறுவீராக: ‘‘வேதத்தை உடையவர்களே! அல்லாஹ்வின் வசனங்களை நீங்கள் ஏன் நிராகரிக்கிறீர்கள். அல்லாஹ்வோ நீங்கள் செய்யும் அனைத்திற்கும் சாட்சியாவான்.''
3:98. (நபியே!) நீர் கூறுவீராக: “வேதம் அருளப்பட்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான்”
3:98. (நபியே!) நீர் கூறுவீராக! “வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின், வசனங்களை நீங்கள் ஏன் நிராகரிக்கின்றீர்கள்? அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றிற்கு சாட்சியாக (நேருக்குநேர் பார்ப்பவனாக) இருக்கின்றான்.
3:99
3:99 قُلْ يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ تَبْغُوْنَهَا عِوَجًا وَّاَنْتُمْ شُهَدَآءُ ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
قُلْ கூறுவீராக يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே لِمَ ஏன் تَصُدُّوْنَ தடுக்கிறீர்கள் عَنْ விட்டும் سَبِيْلِ பாதை اللّٰهِ அல்லாஹ்வின் مَنْ எவரை اٰمَنَ நம்பிக்கை கொண்டார் تَبْغُوْنَهَا அதில் தேடுகிறீர்கள் عِوَجًا கோணலை وَّاَنْتُمْ நீங்களே شُهَدَآءُ ؕ சாட்சிகள் وَمَا இல்லை اللّٰهُ அல்லாஹ் بِغَافِلٍ கவனமற்றவனாக عَمَّا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்வதைப் பற்றி
3:99. “வேதத்தையுடையோரே! நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து ஏன் தடுக்கிறீர்கள்? (அல்லாஹ்வின் ஒப்பந்தத்திற்கு) நீங்களே சாட்சியாக இருந்து கொண்டு அதைக் கோணலாக்க எண்ணுகிறீர்களா? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
3:99. (மேலும்,) கூறுவீராக: வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின் பாதையை விட்டும் நம்பிக்கையாளர்களை ஏன் தடுக்கிறீர்கள். (அது உண்மைதான் என்று) நீங்கள் சாட்சி கூறிக்கொண்டே அதைக் கோணலாக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்வதைப்பற்றி அல்லாஹ் பராமுகமாய் இல்லை.
3:99. (நபியே!) நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்றுக்கொண்டவரை அல்லாஹ்வுடைய வழியில் செல்லவிடாமல் ஏன் தடுக்கின்றீர்கள்? (அவர்கள் நேரான வழியில்தான் செல்கின்றார்கள் என்பதற்கு) நீங்களே சான்று வழங்குவோராயிருந்தும், அவர்கள் கோணலான வழியில் செல்ல வேண்டுமென ஏன் விரும்புகின்றீர்கள்? உங்கள் செயல்களைக் குறித்து அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.”
3:99. (நபியே!) நீர் கூறுவீராக: “வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின் பாதையிலிருந்து விசுவாசிகளை ஏன் தடை செய்கின்றீர்கள்? (அது உண்மைதான் என்று) நீங்கள் சாட்சியம் கூறிக்கொண்டே, அதனைக் கோணலாக்கத் தேடுகின்றீர்கள். இன்னும் நீங்கள் செய்பவைகளைப் பற்றி அல்லாஹ் பாராமுகமானவனல்லன்.
3:100
3:100 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِيْعُوْا فَرِيْقًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ يَرُدُّوْكُمْ بَعْدَ اِيْمَانِكُمْ كٰفِرِيْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِنْ تُطِيْعُوْا நீங்கள் கீழ்ப்படிந்தால் فَرِيْقًا ஒரு பிரிவினருக்கு مِّنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் اُوْتُوا கொடுக்கப்பட்டார்கள் الْكِتٰبَ வேதம் يَرُدُّوْكُمْ மாற்றிடுவார்கள்/ உங்களை بَعْدَ பின்னர் اِيْمَانِكُمْ நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு كٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களாக
3:100. நம்பிக்கை கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவாரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை, நீங்கள் ஈமான் கொண்டபின், காஃபிர்களாக திருப்பி விடுவார்கள்.
3:100. நம்பிக்கையாளர்களே! வேதத்தையுடையவர்களில் (உள்ள) ஒரு பிரிவினருக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டதற்கு பின் உங்களை அவர்கள் நிராகரிப்பவர்களாக மாற்றிவிடுவார்கள்.
3:100. இறைநம்பிக்கை கொண்டவர்களே! வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினரின் கருத்துகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால், அவர்கள் உங்களுடைய நம்பிக்கையிலிருந்து உங்களைப் பிறழச் செய்து இறைமறுப்பின்பால் உங்களைக் கொண்டுபோய் விடுவார்கள்.
3:100. விசுவாசங் கொண்டோரே! வேதங்கொடுக்கப்பட்டோரில் (உள்ள) ஒரு பிரிவினருக்கு நீங்கள் கீழ்படிந்து நடந்தால், உங்களுடைய விசுவாசத்திற்குப் பின்னரும் நிராகரிப்போராக உங்களை அவர்கள் திருப்பிவிடுவார்கள்.
3:101
3:101 وَكَيْفَ تَكْفُرُوْنَ وَاَنْـتُمْ تُتْلٰى عَلَيْكُمْ اٰيٰتُ اللّٰهِ وَفِيْكُمْ رَسُوْلُهٗ ‌ؕ وَمَنْ يَّعْتَصِمْ بِاللّٰهِ فَقَدْ هُدِىَ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
وَكَيْفَ எவ்வாறு تَكْفُرُوْنَ நிராகரிப்பீர்கள் وَاَنْـتُمْ நீங்களோ تُتْلٰى ஓதப்பட عَلَيْكُمْ உங்கள் மீது اٰيٰتُ வசனங்கள் اللّٰهِ அல்லாஹ்வின் وَفِيْكُمْ உங்களுடன் இருக்க رَسُوْلُهٗ ؕ அவனுடைய தூதர் وَمَنْ எவர் يَّعْتَصِمْ பலமாகப் பற்றிக் கொள்கிறார் بِاللّٰهِ அல்லாஹ்வை فَقَدْ هُدِىَ திட்டமாக நேர்வழி காட்டப்படுவார் اِلٰى பக்கம் صِرَاطٍ ஒரு பாதை مُّسْتَقِيْمٍ‏ நேரானது
3:101. அவனுடைய ரஸூல் உங்களிடையே இருந்து கொண்டு; - அல்லாஹ்வின் ஆயத்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கக்கூடிய (நிலையில்) இருந்து கொண்டு, நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? மேலும், எவர் அல்லாஹ்வை (அவன் மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்.
3:101. நீங்கள் எப்படி (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களாக ஆகிவிட முடியும்? உங்கள் மத்தியில் அல்லாஹ்வுடைய தூதர் இருக்கிறார். அவனுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்றன. ஆகவே, எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தை) பலமாகப் பற்றிக் கொள்கிறாரோ அவர் நிச்சயமாக நேரான பாதையில் செலுத்தப்பட்டுவிட்டார்.
3:101. உங்களுக்கு அல்லாஹ்வின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன. மேலும் அவனுடைய தூதரும் உங்களிடையே இருக்கின்றார். அவ்வாறிருக்க, இறைமறுப்பின்பால் செல்ல உங்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? யார் அல்லாஹ்வை இறுகப் பற்றிக் கொள்கின்றாரோ, அவர் நேரான வழியினை நிச்சயம் பெற்றுக் கொள்வார்.
3:101. இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டிருக்க, உங்களுக்கு மத்தியில் அவனுடைய தூதரும் இருக்க, நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? இன்னும், எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தைப்) பலமாகப் பற்றிக் கொள்கின்றாரோ அப்போது அவர் திட்டமாக நேரான பாதையில் செலுத்தப்பட்டு விட்டார்.
3:102
3:102 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே اتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை حَقَّ உண்மையான முறை تُقٰتِهٖ அவனைஅஞ்சுதல் وَلَا تَمُوْتُنَّ இன்னும் இறந்துவிடாதீர்கள் اِلَّا وَاَنْـتُمْ நீங்கள் இருந்தே தவிர مُّسْلِمُوْنَ‏ முஸ்லிம்கள்
3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்.
3:102. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம்.
3:102. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம்.
3:102. விசுவாசங் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை-அவனைப் பயப்பட வேண்டிய முறைப்படி பயப்படுங்கள், மேலும், நிச்சயமாக (முற்றிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லீம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம்.
3:103
3:103 وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌ وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا ۚ وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏
وَاعْتَصِمُوْا இன்னும் பற்றிப்பிடியுங்கள் بِحَبْلِ கயிற்றை اللّٰهِ அல்லாஹ்வின் جَمِيْعًا அனைவரும் وَّلَا تَفَرَّقُوْا‌ இன்னும் பிரிந்து விடாதீர்கள் وَاذْكُرُوْا இன்னும் நினைவு கூருங்கள் نِعْمَتَ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ உங்கள் மீது اِذْ போது كُنْتُمْ இருந்தீர்கள் اَعْدَآءً எதிரிகளாக فَاَ لَّفَ இணக்கத்தை ஏற்படுத்தினான் بَيْنَ மத்தியில் قُلُوْبِكُمْ உள்ளங்கள்/உங்கள் فَاَصْبَحْتُمْ ஆகவே ஆகிவிட்டீர்கள் بِنِعْمَتِهٖۤ அவனுடைய அருட் கொடையால் اِخْوَانًا ۚ சகோதரர்களாக وَكُنْتُمْ இன்னும் இருந்தீர்கள் عَلٰى شَفَا ஓரத்தில் حُفْرَةٍ ஒரு குழியின் مِّنَ النَّارِ நரகத்தின் فَاَنْقَذَ காப்பாற்றினான் كُمْ உங்களை مِّنْهَا ؕ அதிலிருந்து كَذٰلِكَ இவ்வாறு يُبَيِّنُ தெளிவுப்படுத்துகிறான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு اٰيٰتِهٖ தன் வசனங்களை لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏ நீங்கள் நேர்வழி பெறுவதற்காக
3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
3:103. மேலும், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) எதிரிகளாக(ப் பிரிந்து) இருந்த சமயத்தில் உங்கள் உள்ளங்களுக்குள் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே, அல்லாஹ்வின் அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக்கிடங்கிற்கு அருகில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களை காப்பாற்றிக் கொண்டான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இப்படி தெளிவுபடுத்திக் காண்பிக்கிறான்.
3:103. நீங்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள். மேலும், அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாய் இருந்த நேரத்தில் அவன் உங்களுக்கிடையே உளப்பூர்வமான இணக்கத்தை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள். மேலும், நெருப்புப் படுகுழியின் விளிம்பில் நீங்கள் நின்று கொண்டிருந்தீர்கள். அல்லாஹ் உங்களை அதிலிருந்து காப்பாற்றி விட்டான். இவ்விதம் அல்லாஹ் தன் சான்றுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்; இதன் மூலம் நீங்கள் வெற்றிக்கான பாதையை அடைந்து கொள்ளக்கூடும் என்பதற்காக!
3:103. மேலும், நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள், (உங்களுக்குள் கருத்துவேறுபட்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம், மேலும், உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள், நீங்கள் (ஒருவர் மற்றவருக்கு) விரோதிகளாக இருந்த சமயத்தில், அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப் பிணைப்பை உண்டாக்கினான், ஆகவே., அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள், (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக்குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள், அதிலிருந்தும் அவன் உங்களை ஈடேறச்செய்தான், நீங்கள் நேர்வழிப் பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகின்றான்.
3:104
3:104 وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
وَلْتَكُنْ இருக்கட்டும் مِّنْكُمْ உங்களில் اُمَّةٌ ஒரு குழு يَّدْعُوْنَ அழைக்கிறார்கள் اِلَى பக்கம் الْخَيْرِ சிறந்தது وَيَاْمُرُوْنَ இன்னும் ஏவுகிறார்கள் بِالْمَعْرُوْفِ நன்மையை وَيَنْهَوْنَ இன்னும் தடுக்கிறார்கள் عَنِ الْمُنْكَرِ‌ؕ பாவத்திலிருந்து وَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُفْلِحُوْنَ‏ வெற்றியாளர்கள்
3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
3:104. (நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.
3:104. நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவவேண்டும்; தீயவற்றிலிருந்து தடுத்தவண்ணம் இருக்கவேண்டும். எவர்கள் இப்பணியை புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்.
3:104. இன்னும், (விசுவாசங்கொண்டோரே!) உங்களில் ஒரு கூட்டத்தார்-அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக்கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும், அவர்களே தாம் வெற்றி பெற்றோர்.
3:105
3:105 وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ تَفَرَّقُوْا وَاخْتَلَفُوْا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْبَيِّنٰتُ‌ؕ وَاُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ‏
وَلَا تَكُوْنُوْا ஆகிவிடாதீர்கள் كَالَّذِيْنَ எவர்கள் போல் تَفَرَّقُوْا பிரிந்தார்கள் وَاخْتَلَفُوْا இன்னும் முரண்பட்டார்கள் مِنْۢ بَعْدِ مَا جَآء வந்த பின்னர் هُمُ தங்களிடம் الْبَيِّنٰتُ‌ؕ தெளிவான அத்தாட்சிகள் وَاُولٰٓٮِٕكَ இன்னும் அவர்கள் لَهُمْ அவர்களுக்கு عَذَابٌ வேதனை عَظِيْمٌۙ‏ பெரியது
3:105. (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.
3:105. எவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். இவர்களுக்கே (மறுமையில்) மகத்தான வேதனையும் உண்டு.
3:105. எவர்கள் தம்மிடம் தெளிவான அறிவுரைகள் வந்த பின்னர் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பற்பல பிரிவினராய்ச் சிதறுண்டு விட்டார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகி விடாதீர்கள். (யார் இத்தகைய நடத்தையை மேற்கொள்கிறார்களோ) அவர்களுக்கு மறுமைநாளில் மாபெரும் தண்டனை உண்டு.
3:105. மேலும், தங்களிடம் தெளிவான சான்றுகள் வந்ததன் பின்னரும் தங்களுக்குள் பிரிவை உண்டாக்கிக்கொண்டு, (கருத்து) வேறுபட்டுப் போனார்களே, அத்தகையோரைப்போல நீங்களும் ஆகிவிட வேண்டாம், அத்தகையோருக்குத்தான் மறுமையில் மகத்தான வேதனையுமுண்டு
3:106
3:106 يَّوْمَ تَبْيَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ  ؕ فَاَمَّا الَّذِيْنَ اسْوَدَّتْ وُجُوْهُهُمْ اَكَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏
يَّوْمَ நாள் تَبْيَضُّ வெண்மையாகும் وُجُوْهٌ (சில) முகங்கள் وَّتَسْوَدُّ இன்னும் கறுக்கும் وُجُوْهٌ  ؕ (சில) முகங்கள் فَاَمَّا ஆக الَّذِيْنَ எவர்கள் اسْوَدَّتْ கறுத்தன وُجُوْهُهُمْ அவர்களுடைய முகங்கள் اَكَفَرْتُمْ நிராகரித்தீர்களா? بَعْدَ பின்னர் اِيْمَانِكُمْ நீங்கள் நம்பிக்கை கொள்ளுதல் فَذُوْقُوا ஆகவே சுவையுங்கள் الْعَذَابَ வேதனையை بِمَا كُنْتُمْ நீங்கள் இருந்த காரணத்தால் تَكْفُرُوْنَ‏ நிராகரிக்கிறீர்கள்
3:106. அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து: நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்).
3:106. அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கறுத்து (வாடியு)மிருக்கும். எவர்களுடைய முகங்கள் கறுத்து (வாடி) இருக்கின்றனவோ (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் நம்பிக்கை கொண்டபின் (அதை) நிராகரித்து விட்டீர்களா? ஆகவே, உங்கள் நிராகரிப்பின் காரணமாக நரக வேதனையை சுவைத்துக் கொண்டு இருங்கள்'' (என்று கூறப்படும்.)
3:106. அந்நாளில் சிலரின் முகங்கள் மகிழ்ச்சியால் மின்னிக் கொண்டிருக்கும். மற்றும் சிலரின் முகங்களோ துயரத்தால் கறுத்துப் போயிருக்கும். எவர்களுடைய முகங்கள் கறுத்திருக்குமோ அவர்களை நோக்கி, “நீங்கள் நம்பிக்கை எனும் அருட்கொடையைப் பெற்றுக் கொண்ட பின்னர், நன்றி கொல்லும் போக்கினை மேற்கொண்டீர்களல்லவா? இவ்வாறு நீங்கள் நன்றி மறந்து வாழும் போக்கினை மேற்கொண்டதால் இப்போது நரக வேதனையைச் சுவையுங்கள்!” என்று சொல்லப்படும்.
3:106. சில முகங்கள் (மலர்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்), கறுத்து (வாடியு)மிருக்கும் நாளில் அவர்களுக்கு மகத்தான வேதனை உண்டு, ஆகவே, எவர்களுடைய முகங்கள் கறுத்து(வாடி) இருக்கின்றனவோ, (அவர்களிடம்,) “நீங்கள் விசுவாசங் கொண்டபின் (அதனை) நிராகரித்து விட்டீர்களா? ஆகவே, நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்ததன் காரணமாக (நரக) வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறப்படும்.
3:107
3:107 وَاَمَّا الَّذِيْنَ ابْيَـضَّتْ وُجُوْهُهُمْ فَفِىْ رَحْمَةِ اللّٰهِ ؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
وَاَمَّا الَّذِيْنَ ஆக, எவர்கள் ابْيَـضَّتْ வெண்மையாகின وُجُوْهُهُمْ அவர்களுடைய முகங்கள் فَفِىْ رَحْمَةِ அருளில் اللّٰهِ ؕ அல்லாஹ்வின் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
3:107. எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள்.
3:107. எவர்களுடைய முகங்கள் (மகிழ்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாக இருக் கின்றனவோ (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் அல்லாஹ்வின் அருளில் தங்கிவிடுங்கள்'' (என்று கூறப்படும்.) அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
3:107. எவருடைய முகங்கள் மின்னிக் கொண்டிருக்குமோ, அவர்கள் அல்லாஹ்வுடைய அருளில் இருப்பார்கள். மேலும் அதிலே அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்.
3:107. இன்னும், எவர்களுடைய முகங்கள் (மலர்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
3:108
3:108 تِلْكَ اٰيٰتُ اللّٰهِ نَـتْلُوْهَا عَلَيْكَ بِالْحَـقِّ‌ؕ وَمَا اللّٰهُ يُرِيْدُ ظُلْمًا لِّلْعٰلَمِيْنَ‏
تِلْكَ இவை اٰيٰتُ வசனங்கள் اللّٰهِ அல்லாஹ்வின் نَـتْلُو ஓதுகிறோம் هَا அவற்றை عَلَيْكَ உம்மீது بِالْحَـقِّ‌ؕ உண்மையாகவே وَمَا இல்லை اللّٰهُ அல்லாஹ் يُرِيْدُ நாடுகிறான் ظُلْمًا அநியாயத்தை لِّلْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களுக்கு
3:108. (நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக்காண்பிக்கின்றோம்; மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைக்க நாட மாட்டான்.
3:108. (நபியே!) இவையனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். அவற்றை உண்மையாகவே நாம் உமக்கு ஓதிக் காண்பிக்கிறோம். மேலும், அல்லாஹ் உலகத்தாருக்கு சிறிதளவும் அநியாயம் (செய்ய) நாடமாட்டான்.
3:108. இவை அல்லாஹ்வின் அருளுரைகள்! இவற்றை மிகச் சரியாக உமக்கு நாம் எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில், அல்லாஹ் அகிலத்தாருக்குக் கொடுமைபுரிய நாடுவதில்லை.
3:108. (நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும், உண்மையைக் கொண்டுள்ள அவற்றை நாம் உமக்கு ஓதிக்காண்பிக்கின்றோம், மேலும் அல்லாஹ் அகிலத்தார்க்கு அநீதியை (ச்செய்ய) நாட மாட்டான்.
3:109
3:109 وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ‏
وَلِلّٰهِ அல்லாஹ்விற்கு مَا எவை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَمَا فِى الْاَرْضِ‌ؕ இன்னும் எவை/பூமியில் وَاِلَى பக்கம் اللّٰهِ அல்லாஹ் تُرْجَعُ திருப்பப்படும் الْاُمُوْرُ‏ காரியங்கள்
3:109. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - அனைத்தும் - அல்லாஹ்வுக்கே உரியவை; எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்.
3:109. வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (இவை சம்பந்தமான) எல்லா காரியங்களும் அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும்.
3:109. வானங்கள், பூமி இவற்றிலுள்ள அனைத்துப் பொருள்களின் உரிமையாளன் அல்லாஹ்வே ஆவான். மேலும் எல்லா விவகாரங்களும் அல்லாஹ்விடமே திரும்பக் கொண்டுவரப்படுகின்றன.
3:109. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அல்லாஹ்வுக்கே உரியன, (இவை சம்பந்தமான) சகல காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்.
3:110
3:110 كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ‌ؕ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَڪَانَ خَيْرًا لَّهُمْ‌ؕ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ‏
كُنْتُمْ இருக்கிறீர்கள் خَيْرَ சிறந்த(வர்கள்) اُمَّةٍ சமுதாயம் اُخْرِجَتْ வெளியாக்கப்பட்டது لِلنَّاسِ மக்களுக்காக تَاْمُرُوْنَ ஏவுகிறீர்கள் بِالْمَعْرُوْفِ நன்மையைக்கொண்டு وَتَنْهَوْنَ இன்னும் தடுக்கிறீர்கள் عَنِ الْمُنْكَرِ தீமையை விட்டும் وَتُؤْمِنُوْنَ இன்னும் நம்பிக்கை கொள்கிறீர்கள் بِاللّٰهِ‌ؕ அல்லாஹ்வை وَلَوْ اٰمَنَ நம்பிக்கைகொண்டால் اَهْلُ الْكِتٰبِ வேதக்காரர்கள் لَڪَانَ உறுதி ஆகிவிட்டது خَيْرًا சிறந்ததாக لَّهُمْ‌ؕ அவர்களுக்கு مِنْهُمُ அவர்களில் الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் وَاَكْثَر இன்னும் அதிகமானவர்கள் هُمُ அவர்களில் الْفٰسِقُوْنَ‏ பாவிகள்
3:110. மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
3:110. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை நன்மையான) காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கிறீர்கள். வேதத்தையுடையவர்களும் (இவ்வாறே) நம்பிக்கைகொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்டவர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகள்தான்.
3:110. இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதம் அருளப்பட்ட இவர்களும் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குத்தான் நன்மை யாக இருந்திருக்கும். ஆனால் அவர்களில் சிலரே நம்பிக்கை யாளராய் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறுபவர்களாய் இருக்கின்றனர்.
3:110. (விசுவாசங்கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள், (ஏனெனில் நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும், நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள், மேலும், (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் விசுவாசித்து நடந்தால் அது அவர்களுக்கு நன்மையாக இருந்திருக்கும், விசுவாசிப்போரும் அவர்களில் (சிலா்) இருக்கின்றனர்; இன்னும், அவர்களில் அதிகமானவர்கள், (அல்லாஹ்வின் கட்டளையை மீறும்) பாவிகளாவர்.
3:111
3:111 لَنْ يَّضُرُّوْكُمْ اِلَّاۤ اَذًى‌ؕ وَاِنْ يُّقَاتِلُوْكُمْ يُوَلُّوْكُمُ الْاَدْبَارَ ثُمَّ لَا يُنْصَرُوْنَ‏
لَنْ அறவே அவர்கள் தீங்கு செய்யமுடியாது يَّضُرُّوْكُمْ உங்களுக்கு اِلَّاۤ தவிர اَذًى‌ؕ சிரமம் وَاِنْ இன்னும் அவர்கள் உங்களிடம் போரிட்டால் يُّقَاتِلُوْكُمْ திருப்புவார்கள் يُوَلُّوْكُمُ உங்களுக்கு الْاَدْبَارَ பின்புறங்களை ثُمَّ பிறகு لَا يُنْصَرُوْنَ‏ உதவி செய்யப்பட மாட்டார்கள்
3:111. இத்தகையோர் உங்களுக்குச் சிறிது தொல்லைகள் உண்டு பண்ணுவதைத் தவிர (பெரும்) தீங்கு எதுவும் செய்துவிட முடியாது. அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்; இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
3:111. (நம்பிக்கையாளர்களே!) இவர்கள் ஒரு சொற்பச் சிரமத்தைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்திடமுடியாது. உங்களை எதிர்த்து அவர்கள் போர்புரிய முற்பட்டாலோ புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் அவர்கள் (சென்ற இடத்திலும்) எவருடைய உதவியும் பெறமாட்டார்கள்.
3:111. அவர்களால் உங்களுக்குத் தீங்கு எதையும் இழைத்துவிட முடியாது; சிறுசிறு தொல்லைகள் தருவதைத் தவிர! ஆயினும் உங்களோடு போரிட்டால் அவர்கள் புறங்காட்டி ஓடுவார்கள். பிறகு எங்கிருந்தும் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது.
3:111. (விசுவாசிகளே! இத்தகையோர்) உங்களுக்குச் சிறிது தொல்லையிழைப்பதைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்துவிடவே முடியாது, மேலும், உங்களுடன் அவர்கள் யுத்தம் புரிய முற்பட்டாலோ, அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டியே ஓடுவார்கள், பின்னர் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படமாட்டார்கள்.
3:112
3:112 ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ اَيْنَ مَا ثُقِفُوْۤا اِلَّا بِحَبْلٍ مِّنَ اللّٰهِ وَحَبْلٍ مِّنَ النَّاسِ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ  ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ كَانُوْا يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ الْاَنْۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ‌ؕ ذٰ لِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ‏
ضُرِبَتْ விதிக்கப்பட்டது عَلَيْهِمُ அவர்கள் மீது الذِّلَّةُ இழிவு اَيْنَ مَا எங்கெல்லாம் ثُقِفُوْۤا பெற்றுக் கொள்ளப்பட்டார்கள் اِلَّا தவிர بِحَبْلٍ கயிற்றைக் கொண்டு مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَحَبْلٍ இன்னும் கயிறு مِّنَ النَّاسِ மக்களின் وَبَآءُوْ இன்னும் திரும்பி விட்டார்கள் بِغَضَبٍ கோபத்தில் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَضُرِبَتْ இன்னும் விதிக்கப்பட்டது عَلَيْهِمُ அவர்கள் மீது الْمَسْكَنَةُ  ؕ ஏழ்மை ذٰ لِكَ அது بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தார்கள் يَكْفُرُوْنَ நிராகரிக்கிறார்கள் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் وَيَقْتُلُوْنَ இன்னும் கொலை செய்கிறார்கள் الْاَنْۢبِيَآءَ நபிமார்களை بِغَيْرِ حَقٍّ‌ؕ நியாயம் இன்றி ذٰ لِكَ அது بِمَا عَصَوْا அவர்கள் மாறு செய்த காரணத்தால் وَّكَانُوْا இன்னும் இருந்தார்கள் يَعْتَدُوْنَ‏ வரம்பு மீறுகிறார்கள்
3:112. அவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது; அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது); அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்; ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது; இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்; அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்; இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை ) மீறி நடந்து கொண்டும் இருந்ததுதான் (காரணமாகும்).
3:112. அவர்கள் எங்கு சென்றபோதிலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. (இவ்வேதமாகிய) அல்லாஹ்வின் கயிற்றைக் கொண்டும் (நம்பிக்கை கொண்ட) மனிதர்கள் (அளிக்கும் அபயமென்னும்) கயிற்றைக் கொண்டுமே தவிர (அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது). அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். (வீழ்ச்சி என்னும்) துர்ப்பாக்கியமும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இதன் காரணம் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (எப்பொழுதுமே) நிராகரித்துக் கொண்டும், நியாயமின்றி இறைத் தூதர்களைக் கொலை செய்து கொண்டும் இருந்ததுதான். தவிர, வரம்பு கடந்து பாவம் செய்து கொண்டிருந்ததும் இதற்குக் காரணமாகும்.
3:112. அவர்கள் எங்கு காணப்படினும், அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டிருக்கும். அல்லாஹ்வின் பொறுப்பில் அல்லது மனிதர்களின் பொறுப்பில் எங்கேனும் அவர்களுக்கு பாதுகாப்புக் கிட்டினாலே தவிர! மேலும் அவர்கள் அல்லாஹ்வின் சினத்திற்கும் ஆளாகிவிட்டனர். இழிவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுவிட்டன. இவற்றிற்கெல்லாம் காரணம், அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து வந்ததும் அவனுடைய தூதர்களை நியாயமின்றிக் கொலை செய்ததும்தான்; அவர்கள் (இறைவனுக்கு) மாறு செய்ததாலும் வரம்பு மீறிச் செயல்பட்டதாலும் ஏற்பட்ட விளைவுகளாகும் இவை!
3:112. அவர்கள் எங்கு காணப்பட்டபோதிலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது, (இவ்வேதமாகிய) அல்லாஹ்வின் உடன்படிக்கையைக் கொண்டும் (விசுவாசங் கொண்ட) மனிதர்கள் (அளிக்கும் அபயமென்னும்) உடன்படிக்கையைக் கொண்டுமேயன்றி (அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது.) மேலும், அல்லாஹ்விடமிருந்துள்ள கோபத்தைக்கொண்டு அவர்கள் திரும்பிவிட்டார்கள், ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டது, இது (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (எப்பொழுதுமே) நிராகரித்துக்கொண்டும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்துகொண்டும் இருந்ததின் காரணத்தினாலாகும், (மேலும்) அது அவர்கள் மாறு செய்துகொண்டும் வரம்பு மீறிக்கொண்டும் இருந்த காரணத்தினாலாகும்.
3:113
3:113 لَـيْسُوْا سَوَآءً ‌ؕ مِنْ اَهْلِ الْكِتٰبِ اُمَّةٌ قَآٮِٕمَةٌ يَّتْلُوْنَ اٰيٰتِ اللّٰهِ اٰنَآءَ الَّيْلِ وَ هُمْ يَسْجُدُوْنَ‏
لَـيْسُوْا அவர்கள் இல்லை سَوَآءً ؕ சமமானவர்களாக مِنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் اُمَّةٌ ஒரு கூட்டத்தினர் قَآٮِٕمَةٌ காயிமா (நீதமானவர்கள்) يَّتْلُوْنَ ஓதுகிறார்கள் اٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் اٰنَآءَ நேரங்கள் الَّيْلِ இரவின் وَ هُمْ இன்னும் அவர்கள் يَسْجُدُوْنَ‏ சிரம் பணிகிறார்கள்
3:113. (எனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர்; வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள்; இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள்.
3:113. அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான (தீய)வர்கள் அல்லர். வேதத்தையுடைய இவர்களில் நல்லோரான ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். அவர்கள் இரவு காலங்களில் அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதி நின்று சிரம்பணிந்து வணங்குகின்றனர்.
3:113. ஆனால், வேதம் அருளப்பட்டோர் அனைவரும் ஒரே மாதிரியானவர்களாய் இல்லை. அவர்களில் நேரிய வழியில் நிலைத்து நிற்கும் ஒரு குழுவினரும் இருக்கின்றனர்; அவர்கள் இராக்காலங்களில் இறைவசனங்களை ஓதுகின்றனர். (அல்லாஹ்வின் முன்னிலையில்) ஸுஜூது சிரம்தாழ்த்திப் பணிகின்றனர்.
3:113. அவர்கள் (அனைவரும்) சமமானவர்களல்லர், வேதத்தையுடையவர்களில் (நேர்வழியில்) நிற்கும் ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர், அவர்கள் இரவுக்காலங்களில் சிரம் பணிந்தவர்களாக (தொழுபவர்களாக) அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதுகின்றனர்.
3:114
3:114 يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَ يَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُسَارِعُوْنَ فِىْ الْخَيْرٰتِ ؕ وَاُولٰٓٮِٕكَ مِنَ الصّٰلِحِيْنَ‏
يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறார்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِ இன்னும் இறுதி நாளை وَ يَاْمُرُوْنَ இன்னும் ஏவுகிறார்கள் بِالْمَعْرُوْفِ நன்மையைக்கொண்டு وَيَنْهَوْنَ இன்னும் தடுக்கிறார்கள் عَنِ الْمُنْكَرِ தீமையை விட்டும் وَيُسَارِعُوْنَ இன்னும் விரைகிறார்கள் فِىْ الْخَيْرٰتِ ؕ நன்மைகளில் وَاُولٰٓٮِٕكَ இன்னும் இவர்கள்தான் مِنَ الصّٰلِحِيْنَ‏ நல்லோரில்
3:114. அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்று முள்ளவர்கள்.
3:114. அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, (மனிதர்களுக்கு) நன்மையான காரியங்களை ஏவி, தீமையான காரியங்களிலிருந்து தடுத்து, நன்மையான காரியங்களைச் செய்ய விரை(ந்தும் செல்)கின்றனர். இவர்களும் நல்லவர்களில் உள்ளவர்களே.
3:114. இன்னும் அல்லாஹ்வையும், மறுமைநாளையும் நம்புகின்றனர். நல்லவை புரியுமாறு ஏவி, தீயவற்றிலிருந்து தடுக்கின்றனர். மேலும், நற்பணிகளில் முனைப்புடன் ஈடுபடுகின்றனர். இவர்கள்தாம் நன் மக்களில் உள்ளவர்களாவர்.
3:114. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் விசுவாசிக்கின்றனர், இன்னும், நன்மையைக் கொண்டும் (மனிதர்களை) ஏவுகின்றனர், தீமையை (விட்டும்) தடுக்கின்றனர், இன்னும், நன்மையானவற்றில் விரைந்தும் செல்கின்றனர், மேலும், இவர்கள் நல்லோர்களில் உள்ளோராவர்.
3:115
3:115 وَمَا يَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَلَنْ يُّكْفَرُوْهُ ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالْمُتَّقِيْنَ‏
وَمَا يَفْعَلُوْا அவர்கள் எதைச் செய்தாலும் مِنْ خَيْرٍ நன்மையில் فَلَنْ يُّكْفَرُوْهُ ؕ அதை அறவே நிராகரிக்கப்பட மாட்டார்கள் وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِالْمُتَّقِيْنَ‏ அல்லாஹ்வை அஞ்சுபவர்களை
3:115. இவர்கள் செய்யும் எந்த நன்மையும் (நற்கூலி கொடுக்கப்படாமல்) புறக்கணிக்கப்படாது; அன்றியும், அல்லாஹ் பயபக்தியுடையோரை நன்றாக அறிகிறான்.
3:115. இவர்கள் எந்த நன்மையைச் செய்தபோதிலும் அது நிராகரிக்கப்பட மாட்டாது. (அதற்குரிய பிரதிபலனை அடைந்தே தீருவார்கள். ஏனென்றால், இத்தகைய) இறையச்சமுடையவர்களை அல்லாஹ் நன்கறிவான்.
3:115. மேலும், இவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அது புறக்கணிக்கப்படமாட்டாது. இறையச்சமுள்ளவர்களை அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
3:115. இவர்கள் எந்த நன்மையைச் செய்தபோதிலும் அதற்காக நற்கூலி பெறுவதை மறுக்கப்படமாட்டார்கள், இத்தகைய பயபக்தியுடையோரை அல்லாஹ் நன்கறிகிறவன்.
3:116
3:116 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِىَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْئًا  ؕ وَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் لَنْ تُغْنِىَ தடுக்காது عَنْهُمْ அவர்களை விட்டு اَمْوَالُهُمْ அவர்களின் செல்வங்கள் وَلَاۤ اَوْلَادُهُمْ இன்னும் அவர்களின்சந்ததிகள் مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து شَيْئًا  ؕ எதையும் وَاُولٰٓٮِٕكَ இன்னும் அவர்கள் اَصْحٰبُ النَّارِ‌ۚ நரகவாசிகள் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
3:116. நிச்சயமாக எவர் நிராகரிக்கின்றார்களோ, அவர்களைவிட்டு அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு பொருளையும் காப்பாற்ற முடியாது - அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
3:116. நிச்சயமாக (வேதத்தையுடையவர்களில்) எவர்கள் (மறுமையை) நிராகரிக்கிறார் களோ அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், (அந்நாளில்) அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து அவர்களை ஒரு சிறிதும் காப்பாற்றி விடாது. அவர்கள் நரகவாசிகள்தான். அதில் என்றென்றும் அவர்கள் தங்கி விடுவார்கள்.
3:116. எவர்கள் நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்டார்களோ அவர்களுக்கு அவர்களுடைய பொருள்களும் சரி, பிள்ளைகளும் சரி அல்லாஹ்விடத்தில் சிறிதும் பலனளிக்கமாட்டா! அவர்கள்தாம் நரகவாசிகள்! மேலும் அதிலேயே அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.
3:116. நிச்சயமாக நிராகரிக்கின்றார்களே அத்தகையோர், அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய மக்களும். அல்லாஹ்வினுடைய வேதனையிலிருந்து அவர்களை விட்டு எந்த ஒன்றையும் தேவையுறச் செய்யாது, மேலும், அவர்கள் நரகவாசிகள்தாம், அதில் நிரந்தரமாக அவர்கள் (தங்கி) இருப்பவர்கள்.
3:117
3:117 مَثَلُ مَا يُنْفِقُوْنَ فِىْ هٰذِهِ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَثَلِ رِيْحٍ فِيْهَا صِرٌّ اَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَاَهْلَكَتْهُ ‌ؕ وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰـكِنْ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏
مَثَلُ உதாரணம் مَا எது يُنْفِقُوْنَ தர்மம் செய்கிறார்கள் فِىْ هٰذِهِ இதில் الْحَيٰوةِ வாழ்வு الدُّنْيَا உலகம் كَمَثَلِ உதாரணத்தைப் போல் رِيْحٍ காற்று فِيْهَا அதில் صِرٌّ கடுமையான குளிர் اَصَابَتْ அடைந்தது حَرْثَ விளை நிலத்தை قَوْمٍ ஒரு கூட்டத்தாரின் ظَلَمُوْۤا அநீதியிழைத்தனர் اَنْفُسَهُمْ தங்களுக்குத்தாமே فَاَهْلَكَتْهُ ؕ அதை அழித்தது وَمَا இல்லை ظَلَمَهُمُ அவர்களுக்கு அநீதியிழைக்க اللّٰهُ அல்லாஹ் وَلٰـكِنْ எனினும் اَنْفُسَهُمْ தங்களுக்கே يَظْلِمُوْنَ‏ அநீதியிழைக்கின்றனர்
3:117. இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பது ஒரு காற்றுக்கு ஒப்பாகும்; அது (மிகவும்) குளிர்ந்து (பனிப்புயலாக மாறி) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட அக்கூட்டத்தாரின் (வயல்களிலுள்ள) விளைச்சலில்பட்டு அதை அழித்துவிடுகிறது - அவர்களுக்கு அல்லாஹ் கொடுமை செய்யவில்லை; அவர்கள் தமக்குத் தாமே கொடுமையிழைத்துக் கொள்கிறார்கள்.
3:117. இவ்வுலக வாழ்க்கையில் (இஸ்லாமிற்கு எதிராக) அவர்கள் செலவு செய்யும் பொருளின் உதாரணம், ஒரு காற்றைப்போல் இருக்கிறது. அது (அளவு கடந்து) குளிர்ந்து (பனிப்புயலாகித்) தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு வகுப்பாரின் பயிரில் பட்டு அதை அழித்து விட்டது. அல்லாஹ் இவர்களுக்கு ஒன்றும் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், இவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
3:117. இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பதற்கான உவமை கடும் பனிப்புயல் போன்றதாகும். அதுவோ தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் வேளாண்மை நிலத்தைத் தாக்கி நாசப்படுத்துகிறது. அல்லாஹ் அவர்களுக்குக் கொடுமை இழைக்கவில்லை; உண்மையில் அவர்கள் தமக்குத்தாமே கொடுமை இழைத்துக் கொள்கிறார்கள்.
3:117. இவ்வுலக வாழ்க்கையில் (இஸ்லாத்திற்கு விரோதமாக) அவர்கள் செலவு செய்யும் பொருளின் உதாரணம்: ஒரு காற்றைப் போல் இருக்கின்றது, அதில் கடுமையான குளிர் இருக்கிறது, தமககுத் தாமே அநியாயமிழைத்துக்கொண்ட ஒரு கூட்டத்தாரின் பயிரில் பட்டு அப்போது அதனை அது அழித்துவிடுகிறது, அல்லாஹ்வோ அவர்களுக்கு அநியாயமிழைத்து விடவில்லை, எனினும் இவர்கள் தமக்குத்தாமே அநியாயமிழைத்துக் கொள்கின்றனர்.
3:118
3:118 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا يَاْلُوْنَكُمْ خَبَالًا ؕ وَدُّوْا مَا عَنِتُّمْ‌ۚ قَدْ بَدَتِ الْبَغْضَآءُ مِنْ اَفْوَاهِهِمْ  ۖۚ وَمَا تُخْفِىْ صُدُوْرُهُمْ اَكْبَرُ‌ؕ قَدْ بَيَّنَّا لَـكُمُ الْاٰيٰتِ‌ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَتَّخِذُوْا ஆக்காதீர்கள் بِطَانَةً உற்ற நண்பர்களை مِّنْ இருந்து دُوْنِكُمْ உங்கள்அல்லாதவர்கள் لَا மாட்டார்கள் يَاْلُوْنَكُمْ உங்களுக்கு குறைக்க خَبَالًا ؕ தீங்கிழைப்பதை وَدُّوْا விரும்பினார்கள் مَا عَنِتُّمْ‌ۚ நீங்கள் துன்பப்படுவதை قَدْ بَدَتِ வெளிப்பட்டுவிட்டது الْبَغْضَآءُ பகைமை مِنْ இருந்து اَفْوَاهِهِمْ  ۖۚ அவர்கள் வாய்கள் وَمَا இன்னும் எது تُخْفِىْ மறைக்கிறது صُدُوْرُهُمْ நெஞ்சங்கள்/அவர்கள் اَكْبَرُ‌ؕ மிகப் பெரியது قَدْ بَيَّنَّا திட்டமாக விவரித்தோம் لَـكُمُ உங்களுக்கு الْاٰيٰتِ‌ அத்தாட்சிகளை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْقِلُوْنَ‏ புரிகிறீர்கள்
3:118. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்; நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்; அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது; அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்; நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்; நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).
3:118. நம்பிக்கையாளர்களே! உங்(கள் மார்க்கத்தை சேர்ந்தவர்)களையன்றி (மற்றவர்களை) உங்களுக்கு மிக நெருக்கமானவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. உங்களுக்குத் துன்பம் ஏற்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்(ச் சொற்)களைக் கொண்டே (அவர்களுடைய) பகைமை வெளிப்பட்டுவிட்டது. (உங்களைப் பற்றி) அவர்களுடைய உள்ளங்கள் மறைத்திருப்பவையோ மிகக் கொடியவை. நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்கு விவரித்துவிட்டோம். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளலாம்.).
3:118. இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்களை உங்கள் அந்தரங்க நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் நழுவவிடுவதில்லை. உங்களைத் துன்புறுத்தக்கூடியது அவர்களுக்கு விருப்பமானதாய் இருக்கிறது. அவர்களுடைய வாய் மூலமாகவே அவர்களுடைய காழ்ப்புணர்வு வெளிப்படுகிறது. இன்னும் அவர்கள் தங்கள் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருப்பவை (இவற்றைவிட) அதிகக் கொடியனவாக இருக்கின்றன. நிச்சயமாக நாம் தெளிவான அறிவுரைகளை உங்களுக்கு அளித்திருக்கின்றோம். நீங்கள் அறிவுடையோராயின் (அவர்களோடு தொடர்பு கொள்வதில் விழிப்புடன் இருங்கள்!)
3:118. விசுவாசங்கொண்டோரே! உங்கள் இனத்தவர்களையன்றி (மற்றவர்களை) உங்களுடைய அந்தரங்கச்செய்திகளை அறிபவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள், (ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறை செய்வதில்லை, மேலும், நீங்கள் துன்புறுவதை அவர்கள் விரும்புகிறார்கள், அவர்களுடைய வாய்ச் சொற்களிலிருந்தே (அவர்களுடைய) வெறுப்பு திட்டமாக வெளிப்பட்டுவிட்டது, (உங்களைப்பற்றி) அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பவையோ மிகப்பெரிதாகும், நீங்கள் விளங்கிக்கொள்பவர்களாக இருந்தால், நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்குத் தெளிவாக்கி விட்டோம்.
3:119
3:119 هٰۤاَنْتُمْ اُولَاۤءِ تُحِبُّوْنَهُمْ وَلَا يُحِبُّوْنَكُمْ وَتُؤْمِنُوْنَ بِالْكِتٰبِ كُلِّهٖ ‌ۚ وَاِذَا لَقُوْكُمْ قَالُوْۤا اٰمَنَّا  ۖۚ وَاِذَا خَلَوْا عَضُّوْا عَلَيْكُمُ الْاَنَامِلَ مِنَ الْغَيْظِ‌ؕ قُلْ مُوْتُوْا بِغَيْظِكُمْؕ‌ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ ۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
هٰۤاَنْتُمْ நீங்கள் اُولَاۤءِ எப்படிப்பட்டவர்கள் تُحِبُّوْنَهُمْ நேசிக்கிறீர்கள்/ இவர்களை وَلَا ஆனால் இல்லை يُحِبُّوْنَكُمْ அவர்கள் உங்களை நேசிப்பது وَتُؤْمِنُوْنَ இன்னும் நம்பிக்கை கொள்கிறீர்கள் بِالْكِتٰبِ வேதத்தை كُلِّهٖ ۚ அவை எல்லாம் وَاِذَا لَقُو இன்னும் அவர்கள் சந்தித்தால் كُمْ உங்களை قَالُوْۤا கூறுகின்றனர் اٰمَنَّا  ۖۚ நம்பிக்கை கொண்டோம் وَاِذَا خَلَوْا இன்னும் அவர்கள் தனித்தால் عَضُّوْا கடித்தனர் عَلَيْكُمُ உங்கள் மீது الْاَنَامِلَ விரல் நுனிகளை مِنَ الْغَيْظِ‌ؕ கோபத்தினால் قُلْ கூறுவீராக مُوْتُوْا சாவுங்கள் بِغَيْظِكُمْؕ‌ உங்கள்கோபத்தினால் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَلِيْمٌ ۢ நன்கறிந்தவன் بِذَاتِ உள்ளவற்றை الصُّدُوْرِ‏ நெஞ்சங்களில்
3:119. (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் இவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை; நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்; ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது: “நாங்களும் நம்புகிறோம்” என்று கூறுகிறார்கள்; எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்.
3:119. (நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கிறீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும் நம்பிக்கை கொள்கிறீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை. எனினும்) அவர்கள் உங்களைச் சந்தித்தால், ‘‘(உங்கள் வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்'' என்று (பொய்) கூறுகின்றனர். உங்களைவிட்டு விலகினாலோ (உங்கள் மீதுள்ள) கோபத்தினால் தங்கள் (கை) விரல்களையே கடித்துக் கொள்கின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்கள் கோபத்திலேயே நீங்கள் சாவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிவான்.''
3:119. அவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்கள்; ஆனால் அவர்கள் உங்களை நேசிப்பதில்லை. நீங்களோ எல்லா இறைவேதங்களின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள்! அவர்கள் உங்களைச் சந்திக்கும்போது, “நாங்களும் (உங்களுடைய தூதரையும், வேதத்தையும்) நம்புகின்றோம்” எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்றதுமே, உங்கள் மீது மன எரிச்சல் கொண்டு தம் விரல் நுனிகளைக் கடிக்கின்றார்கள். அவர்களிடம் நீர் கூறுவீராக: “நீங்கள் உங்கள் எரிச்சலிலேயே மூழ்கிச் சாகுங்கள். திண்ணமாக, அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களில் மறைந்திருப்பவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”
3:119. (விசுவாசங்கொண்டோரே! தெரிந்து கொள்ளுங்கள்) நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள், அவர்களோ, உங்களை நேசிப்பதில்லை, நீங்கள் வேதங்கள் யாவற்றையும் விசுவாசிக்கிறீர்கள். இன்னும், அவர்கள் உங்களைச் சந்தித்தால், “நாங்கள் விசுவாசிக்கிறோம்”, என்று கூறுகின்றனர், இன்னும் (உங்களிலிருந்து விலகி) அவர்கள் தனித்துவிட்டாலோ (உங்கள் மீதுள்ள) ஆத்திரத்தினால் (தங்கள் கை) விரல்களின் நுனிகளை கடித்துக் கொள்கின்றனர், ஆகவே, (நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக! “உங்கள் ஆத்திரத்திலேயே நீங்கள் இறந்து விடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிகிறவன்”
3:120
3:120 اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَاِنْ تُصِبْكُمْ سَيِّئَةٌ يَّفْرَحُوْا بِهَا ‌ۚ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا ؕ اِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ‏
اِنْ تَمْسَسْكُمْ உங்களைஅடைந்தால் حَسَنَةٌ ஒரு நல்லது تَسُؤْهُمْ வருத்தம் தருகிறது/ அவர்களுக்கு اِنْ تَمْسَسْكُمْ உங்களைஅடைந்தால் سَيِّئَةٌ ஒரு தீங்கு يَّفْرَحُوْا மகிழ்ச்சி அடைகிறார்கள் بِهَا ۚ அதன் மூலம் وَاِنْ تَصْبِرُوْا நீங்கள் பொறுத்தால் وَتَتَّقُوْا இன்னும் நீங்கள் அஞ்சினால் لَا يَضُرّ தீங்கிழைக்காது كُمْ உங்களுக்கு كَيْدُهُمْ அவர்களின் சூழ்ச்சி شَيْئًا ؕ சிறிதளவும் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் بِمَا يَعْمَلُوْنَ அவர்கள் செய்வதை مُحِيْطٌ‏ சூழ்ந்துள்ளான்
3:120. ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.
3:120. உங்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களை வருந்தச் செய்கிறது. உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே, நீங்கள் பொறுமையுடன் இருந்து (அவர்களை விட்டு) விலகியிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எத்தகைய தீங்கையும் விளைவித்து விடாது. (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய செயல்களை நன்கு சூழ்ந்து கொள்வான்.
3:120. உங்களுக்கு நன்மை ஏதும் கிட்டிவிட்டால் அது அவர்களை வருந்தச் செய்கின்றது. மேலும், உங்களுக்குத் துன்பம் நேர்ந்து விட்டாலோ அது அவர்களை மகிழ்வுறச் செய்கிறது. ஆனால் நீங்கள் நிலைகுலையாமலும், அல்லாஹ்வுக்கு அஞ்சியும் வாழ்ந்தால் (உங்களுக்கெதிராக) அவர்கள் கையாளுகின்ற சூழ்ச்சி எந்தப் பலனையும் தரப்போவதில்லை. திண்ணமாக, அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற அனைத்தையும் அல்லாஹ் சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.
3:120. உங்களுக்கு யாதொரு நன்மை ஏற்படின் (அது) அவர்களை வருந்தச் செய்கின்றது. உங்களுக்கு யாதொரு தீங்கு ஏற்பட்டாலோ, அதற்காக அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர், ஆகவே, நீங்கள் பொறுமையுடனிருந்து (அல்லாஹ்வை) பயந்தும் கொள்வீர்களாயின் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு யாதொரு தீங்கையும் விளைவித்து விடாது, (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவற்றைச் சூழ்ந்து அறிகிறவன்.
3:121
3:121 وَاِذْ غَدَوْتَ مِنْ اَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِيْنَ مَقَاعِدَ لِلْقِتَالِ‌ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌۙ‏
وَاِذْ غَدَوْتَ நீர் காலையில் புறப்பட்ட சமயத்தை مِنْ இருந்து اَهْلِكَ உம் குடும்பம் تُبَوِّئُ தங்கவைக்கிறீர் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை مَقَاعِدَ இடங்களில் لِلْقِتَالِ‌ؕ போருக்காக وَاللّٰهُ அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌۙ‏ நன்கறிந்தவன்
3:121. (நபியே!) நினைவு கூர்வீராக:) நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக (உஹது களத்தில் அவரவர்) இடத்தில் நிறுத்தினீர்; அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
3:121. (நபியே!) நீர் உமது குடும்பத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டு(ச் சென்று) நம்பிக்கை கொண்டவர்களை போர்க்களத்தில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்ப்பீராக!. (அனைத்தையும்) அல்லாஹ் செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
3:121. (நபியே!) நீர் அதிகாலையில் உமது வீட்டை விட்டுப் புறப்பட்டு முஸ்லிம்களை (உஹதுப் போர்க்களத்தில் அவரவருக்குரிய அணிவகுப்பு) இடங்களில் போருக்காக நிறுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தை (முஸ்லிம்களுக்கு) நினைவூட்டுவீராக! அல்லாஹ் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
3:121. (நபியே! நீர் உம் குடும்பத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டுச் சென்று) விசுவாசங் கொண்டவர்களை (உஹத் யுத்த களத்தில்) போருக்காக (அவரவருக்குரிய) இடங்களில் அமர்த்தி ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்ததை (நினைத்துப் பார்ப்பீராக! யாவற்றையும்) அல்லாஹ் செவியுறுகிறவன், உங்கள் இதயங்களில் இருப்பதை நன்கறிகிறவன்.
3:122
3:122 اِذْ هَمَّتْ طَّآٮِٕفَتٰنِ مِنْكُمْ اَنْ تَفْشَلَا ۙ وَاللّٰهُ وَلِيُّهُمَا‌ ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏
اِذْ هَمَّتْ நாடிய சமயம் طَّآٮِٕفَتٰنِ இரு பிரிவினர் مِنْكُمْ உங்களில் اَنْ تَفْشَلَا ۙ அவர்கள் கோழையாகி பின்னடைவதற்கு وَاللّٰهُ அல்லாஹ் وَلِيُّهُمَا‌ ؕ அவ்விருவரின் பொறுப்பாளன் وَعَلَى மீது اللّٰهِ அல்லாஹ் فَلْيَتَوَكَّلِ நம்பிக்கை வைப்பார்களாக الْمُؤْمِنُوْنَ‏ நம்பிக்கையாளர்கள்
3:122. (அந்தப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து (ஓடி விடலாமா) என்று எண்ணியபோது - அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் (உதவி செய்து) காப்போனாக இருந்தான்; ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.
3:122. உங்களில் இரு பிரிவினர் தைரியமிழந்து (‘உஹுத்' என்னும் போர்க்களத்தை விட்டுச் சென்று) விட(லாமா என்று) இருந்தனர். அல்லாஹ் அவர்களின் உதவியாளன் (பாதுகாவலன்). (ஆகவே,) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பார்களாக!
3:122. உங்களில் இரு பிரிவினர் கோழைத்தனம் காட்ட முனைந்த நேரத்தை நினைவுகூரும். அல்லாஹ்வோ அவர்களுக்கு உதவி செய்ய இருந்தான். எனவே இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பவர்களாய்த் திகழ வேண்டும்.
3:122. (அந்த யுத்தத்தில்) உங்களிலிருந்து இரு பிரிவினர் தைரியம் இழந்து (“உஹத்” என்னும் யுத்த களத்தை விட்டுச் சென்று) விட(லாமா என்று நாடிய சமயத்தில்) போர்க்களத்தில் அவர்களை அமர்த்திக் கொண்டிருந்தீர், மேலும் அல்லாஹ் அவ்விருசாராருக்கும் உதவியாளன், இன்னும் அல்லாஹ்வின் மீதே விசுவாசிகள் (தங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கவும்.
3:123
3:123 وَلَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْـتُمْ اَذِلَّةٌ  ۚ فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
وَلَقَدْ இன்னும் திட்டவட்டமாக نَصَرَكُمُ உதவினான்/ உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் بِبَدْرٍ பத்ரில் وَّاَنْـتُمْ இன்னும் நீங்கள் இருக்க اَذِلَّةٌ  ۚ குறைந்தவர்களாக فَاتَّقُوا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
3:123. “பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
3:123. பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளைவிட ஆயுதத்திலும், தொகையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்குப் பயந்து (வழிப்பட்டு) நடங்கள்.
3:123. (இதற்கு முன்) பத்ரு போரிலே அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருந்தான். அப்போது நீங்கள் மிகவும் வலுவற்றவர்களாய் இருந்தீர்கள். எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி கொல்வதிலிருந்து விலகி வாழுங்கள். (இதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழக்கூடும்.
3:123. பத்ரில் (நடந்த யுத்தத்தில்) நீங்கள் (எண்ணிக்கையிலும், ஆயுத பலத்திலும் மிகக்) குறைந்தவர்களாகயிருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தான், ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்.
3:124
3:124 اِذْ تَقُوْلُ لِلْمُؤْمِنِيْنَ اَلَنْ يَّكْفِيَكُمْ اَنْ يُّمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلٰثَةِ اٰلَافٍ مِّنَ الْمَلٰٓٮِٕكَةِ مُنْزَلِيْنَؕ‏
اِذْ تَقُوْلُ நீர் கூறியபோது لِلْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு اَلَنْ يَّكْفِيَكُمْ உங்களுக்குப்போதாதா? اَنْ يُّمِدَّكُمْ உங்களுக்கு உதவுவது رَبُّكُمْ உங்கள் இறைவன் بِثَلٰثَةِ اٰلَافٍ மூவாயிரத்தைக் கொண்டு مِّنَ الْمَلٰٓٮِٕكَةِ வானவர்களிலிருந்து مُنْزَلِيْنَؕ‏ இறக்கப்படுபவர்கள்
3:124. (நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: “உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று.
3:124. (நபியே! அப்பொழுது) நீர் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘(வானத்திலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?'' என்று கூறியதையும் நினைவு கூருவீராக!
3:124. “உங்களுடைய இறைவன் மூவாயிரம் வானவர்களை இறக்கி உங்களுக்கு உதவி செய்திருந்தது போதுமானதில்லையா?” என்று நீர் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டதை நினைவுகூரும்.
3:124. (நபியே!) விசுவாசங்கொண்டோரிடம், “(வானத்திலிருந்து) இறக்கி வைக்கப்பட்ட மூவாயிரம் மலக்குகளைக் கொண்டு, உங்கள் இரட்சகன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று நீர் கூறியதையும் நினைவுகூர்வீராக!
3:125
3:125 بَلٰٓى ۙ اِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا وَيَاْتُوْكُمْ مِّنْ فَوْرِهِمْ هٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ اٰلَافٍ مِّنَ الْمَلٰٓٮِٕكَةِ مُسَوِّمِيْنَ‏
بَلٰٓى ۙ ஆம் اِنْ تَصْبِرُوْا நீங்கள் பொறுத்தால் وَتَتَّقُوْا இன்னும் நீங்கள் அஞ்சினால் وَيَاْتُوْكُمْ இன்னும் அவர்கள் வந்தால் /உங்களிடம் مِّنْ فَوْرِهِمْ هٰذَا அவர்களுடைய இதே அவசரத்தில் يُمْدِدْكُمْ உங்களுக்குஉதவுவான் رَبُّكُمْ உங்கள் இறைவன் بِخَمْسَةِ اٰلَافٍ ஐந்தாயிரங்களைக் கொண்டு مِّنَ الْمَلٰٓٮِٕكَةِ வானவர்களிலிருந்து مُسَوِّمِيْنَ‏ அடையாளமிடக் கூடியவர்கள்
3:125. ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்.
3:125. நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து பொறுமையுடன் இருந்தால், இதே சமயத்தில் (எதிரிகள்) உங்கள் மீது அடர்ந்தேறிய போதிலும் (மூவாயிரம் என்ன?) அடையாள மிடப்பட்ட ஐயாயிரம் வானவர்களால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவிசெய்வான்.
3:125. ஆம். நீங்கள் நிலைகுலையாமலிருந்து இறைவனுக்கு அஞ்சிப் பணியாற்றினால் எந்தக் கணத்தில் பகைவர்கள் உங்கள் மீது படையெடுத்து வருகின்றார்களோ, அந்தக் கணத்தில் உங்கள் இறைவன் (மூவாயிரம் என்ன) போர் அடையாளமுடைய ஐயாயிரம் வானவர்களின் மூலம் உங்களுக்கு உதவி செய்வான்.
3:125. “ஆம், நீங்கள் பொறுமையுடனிருந்து (அல்லாஹ்வுக்கு) பயந்தும் கொள்வீர்களானால், அந்நேரத்திலேயே உங்களிடம் (உங்களைத்தாக்க) அவர்கள் வந்தபோதிலும், (மூவாயிரமென்ன?) போர்க்குறிகள் கொண்டவர்களான மலக்குகளில் ஐயாயிரத்தைக் கொண்டு உங்கள் இரட்சகன் உங்களுக்கு உதவி செய்வான்”
3:126
3:126 وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى لَـكُمْ وَلِتَطْمَٮِٕنَّ قُلُوْبُكُمْ بِهٖ‌ؕ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِۙ‏
وَمَا جَعَلَهُ இன்னும் ஆக்கவில்லை / அதை اللّٰهُ அல்லாஹ் اِلَّا தவிர بُشْرٰى நற்செய்தியாக لَـكُمْ உங்களுக்கு وَلِتَطْمَٮِٕنَّ இன்னும் நிம்மதி அடைவதற்காக قُلُوْبُكُمْ உங்கள் உள்ளங்கள் بِهٖ‌ؕ அதன் மூலம் وَمَا النَّصْرُ இன்னும் உதவி இல்லை اِلَّا தவிர مِنْ عِنْدِ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து الْعَزِيْزِ மிகைத்தவன் الْحَكِيْمِۙ‏ ஞானவான்
3:126. உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை; அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை; அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன்.
3:126. உங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவுமே அல்லாஹ் இவ்வுதவியைப் புரிந்தான். (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர (வேறுயாரிடம் இருந்தும் இந்த) உதவி (உங்களுக்கு) கிடைக்கவில்லை. (கிடைக்கவும் செய்யாது.)
3:126. அல்லாஹ் இந்தச் செய்தியை உங்களுக்கு அறிவித்தது, நீங்கள் மகிழ்ச்சி அடைவதற்காகவும், உங்கள் இதயங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காகவுமே! வெற்றி என்பது மிக்க வலிமையுடையவனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றது.
3:126. உங்களுக்கு ஒரு நன்மாராயமாகவும், இதைக் கொண்டு உங்களுடைய இதயங்கள் திருப்தியடைவதற்காகவுமே, தவிர அல்லாஹ் இதை ஆக்கவில்லை, இன்னும் மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன், ஆகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி (உங்களுக்கு) இல்லை.
3:127
3:127 لِيَقْطَعَ طَرَفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَوْ يَكْبِتَهُمْ فَيَنْقَلِبُوْا خَآٮِٕبِيْنَ‏
لِيَقْطَعَ அழிப்பதற்காக طَرَفًا ஒரு பகுதியை مِّنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْۤا நிராகரித்தார்கள் اَوْ அல்லது يَكْبِتَهُمْ அவர்களை கேவலப்படுதுவதர்க்காக فَيَنْقَلِبُوْا திரும்புவார்கள் خَآٮِٕبِيْنَ‏ ஆசை நிறைவேறாதவர்களாக
3:127. (அல்லாஹ்வுடைய உதவியின் நோக்கம்) நிராகரிப்போரில் ஒரு பகுதியினரை அழிப்பதற்கு, அல்லது அவர்கள் சிறுமைப்பட்டுத் தோல்வியடைந்தோராய்த் திரும்பிச் செல்வதற்காகவுமேயாகும்.
3:127. (அவன் உங்களுக்கு இவ்வுதவி புரிந்ததெல்லாம்) நிராகரிப்பவர்களில் ஒரு பாகத்தினரைக் குறைக்கவோ அல்லது அவர்கள் சிறுமைப்பட்டு (தோல்வி அடைந்தவர்களாகத்) திரும்பிச் சென்று விடுவதற்காகவேதான்.
3:127. அல்லாஹ் இத்தகைய உதவியை உங்களுக்குச் செய்வதெல்லாம், நிராகரித்தவர்களில் ஒரு பகுதியினரை அழிப்பதற்காக அல்லது அவர்களைப் படுதோல்வியில் ஆழ்த்தி அவர்கள் ஏமாற்றமடைந்தவர்களாய் திரும்பிச் செல்வதற்காகத்தான்!
3:127. (அவன் உங்களுக்கு இவ்வுதவி புரிந்ததன் நோக்கம்) நிராகரிப்போரில் ஒரு பகுதியினரை அழித்துவிடுவதற்காக, அல்லது அவர்களைச் சிறுமைபடுத்துவதற்காகவேயாகும், அப்போது அவர்கள் நஷ்டமடைந்தவர்களாக (ஏமாந்து) திரும்பிச் சென்று விடுவர்.
3:128
3:128 لَيْسَ لَكَ مِنَ الْاَمْرِ شَىْءٌ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ اَوْ يُعَذِّبَهُمْ فَاِنَّهُمْ ظٰلِمُوْنَ‏
لَيْسَ இல்லை لَكَ உமக்கு مِنَ இருந்து الْاَمْرِ அதிகாரம் شَىْءٌ எதுவும் اَوْ يَتُوْبَ அல்லது மன்னிப்பதற்காக عَلَيْهِمْ அவர்களை اَوْ அல்லது يُعَذِّبَهُمْ அவர்களை வேதனை செய்வதற்காக فَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் ظٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
3:128. (நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம்; அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் - நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக.
3:128. (நபியே!) இவ்விஷயத்தில் உமக்கு ஓர் அதிகாரமுமில்லை. (அல்லாஹ்) அவர் களை (இஸ்லாமைத் தழுவும்படிச் செய்து) மன்னித்துவிடலாம். அல்லது அவர்கள் அநியாயக்காரர்களாக இருப்பதனால் அவர்களை வேதனையும் செய்யலாம்.
3:128. (நபியே! தீர்ப்பு வழங்குவதற்கான) அதிகாரத்தில் உமக்கு யாதொரு பங்குமில்லை; அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதோ அல்லது அக்கிரமக்காரர்களாய் இருப்பதால் அவர்களுக்கு தண்டனை அளிப்பதோ அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாகும்.
3:128. (நபியே!) இக்காரியத்தில் (நாம் கட்டளையிட்டதைத் தவிர) உமக்கு யாதோர் அதிகாரமுமில்லை, ஒன்று அவன் அவர்களின் தவ்பாவை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது அவர்களை வேதனையும் செய்யலாம், அதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களாவர்.
3:129
3:129 وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ يَغْفِرُ لِمَنْ يَّشَآءُ وَ يُعَذِّبُ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
وَلِلّٰهِ அல்லாஹ்விற்கே مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَمَا فِى الْاَرْضِ‌ؕ இன்னும் பூமியிலுள்ளவை يَغْفِرُ மன்னிப்பான் لِمَنْ எவருக்கு يَّشَآءُ நாடுகிறான் وَ يُعَذِّبُ இன்னும் வேதனைசெய்வான் مَنْ எவர் يَّشَآءُ‌ ؕ நாடுகிறான் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
3:129. வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியவை. தான் நாடியவர்களை அவன் மன்னிக்கின்றான்; இன்னும் தான் நாடியவர்களை வேதனைப்படுத்தவும் செய்கின்றான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், பெருங்கருணையாளன்.
3:129. (ஏனென்றால்) வானங்களில் உள்ளவை அனைத்தும், பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களைத் தண்டிப்பான். ஆனால், அல்லாஹ் மிக மன்னிப்பவன் மகா கருணையாளன் ஆவான்.
3:129. வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். தான் நாடுகின்றவர்களுக்கு அவன் மன்னிப்பை அருள்வான்; மேலும் தான் நாடுகின்றவர்களுக்கு வேதனையை அளிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் கருணை பொழிபவனுமாய் இருக்கின்றான்.
3:129. வானங்களிலுள்ளவை, மற்றும் பூமியிலுள்ளவை அல்லாஹ்வுக்கே உரியவை, அவன் நாடியவருக்கு மன்னிப்பளிப்பான்; இன்னும் அவன் நாடியவரை வேதனை செய்வான், அல்லாஹ்வோ மிக்க மன்னிப்பவன். மிக கிருபையுடையவன்.
3:130
3:130 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوا الرِّبٰٓوا اَضْعَافًا مُّضٰعَفَةً ‌ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَاْكُلُوا தின்னாதீர்கள் الرِّبٰٓوا வட்டியை اَضْعَافًا பன்மடங்கு مُّضٰعَفَةً இரட்டிப்பாக்கப்பட்டது  وَاتَّقُوا اللّٰهَ அல்லாஹ்வை அஞ்சுங்கள் لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏ நீங்கள் வெற்றி பெறுவதற்காக
3:130. ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.
3:130. நம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக்கூடிய வட்டியை (வாங்கி)த் தின்னாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
3:130. இறைநம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காகப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நீங்கள் வெற்றி பெறக்கூடும்.
3:130. விசுவாசங்கொண்டோரே! அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டியாகவும் இரட்டிப்பாக்கப்பட்டு பன்மடங்காக்கப்பட்ட நிலையில் வட்டியை உண்ணாதீர்கள், இன்னும் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், (இதனைத் தவிர்த்துக்கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
3:131
3:131 وَاتَّقُوا النَّارَ الَّتِىْۤ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ‌ۚ‏
وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் النَّارَ நெருப்பை الَّتِىْۤ எது اُعِدَّتْ தயார்படுத்தப்பட்டது لِلْكٰفِرِيْنَ‌ۚ‏ நிராகரிப்பாளர் களுக்காக
3:131. தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
3:131. (நரக) நெருப்பிற்குப் பயந்துகொள்ளுங்கள். அது (இறைவனுடைய இக்கட்டளையை) நிராகரிப்பவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது.
3:131. இன்னும் இறை மறுப்பாளர்களுக்குத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள நெருப்புக்கு அஞ்சுங்கள்.
3:131. இன்னும் (நரக நெருப்பிற்குப் பயந்து கொள்ளுங்கள்.) அது எத்தகையதென்றால் நிராகரிப்போருக்காகத் தயார் படுத்தப்பட்டுள்ளது.
3:132
3:132 وَاَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‌ۚ‏
وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَالرَّسُوْلَ இன்னும் தூதருக்கு لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‌ۚ‏ நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
3:132. அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.
3:132. அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள். அதனால் நீங்கள் (அல்லாஹ்வின்) அன்பை அடையலாம்.
3:132. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (அதனால்) நீங்கள் கருணை காட்டப்படலாம்.
3:132. அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், (அதனால்) நீங்கள் (அல்லாஹ்வின்) கிருபைக்குள்ளாக்கப்படுவீர்கள்.
3:133
3:133 وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ‏
وَسَارِعُوْۤا இன்னும் விரையுங்கள் اِلٰى பக்கம் مَغْفِرَةٍ மன்னிப்பு مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனின் وَجَنَّةٍ இன்னும் சொர்க்கம் عَرْضُهَا அதன் அகலம் السَّمٰوٰتُ வானங்கள் وَالْاَرْضُۙ இன்னும் பூமி اُعِدَّتْ தயார்படுத்தப்பட்டுள்ளது لِلْمُتَّقِيْنَۙ‏ அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
3:133. இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
3:133. உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சொர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறையச்சம் உடையவர்களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது.
3:133. இறைவனிடமிருந்து வழங்கப்படும் மன்னிப்பு மற்றும் சுவனத்தின் பக்கம் (செல்லும் பாதையில்) விரைந்து செல்லுங்கள்! அது வானங்கள், பூமியின் அளவிற்கு விரிவானது. மேலும் அது இறையச்சமுடையோர்க்காக தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
3:133. உங்கள் இரட்சகனின் மன்னிப்பின்பாலும், சுவனபதியின்பாலும் விரைந்து கொள்ளுங்கள், அதன் அகலமாகிறது வானங்களும், பூமியுமாகும், அது பயபக்தியுடையவர்களுக்காக(வே) தயார் செய்யப்பட்டுள்ளது.
3:134
3:134 الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‌ۚ‏
الَّذِيْنَ எவர்கள் يُنْفِقُوْنَ தர்மம் புரிவார்கள் فِى السَّرَّآءِ செல்வத்தில் وَالضَّرَّآءِ இன்னும் வறுமையில் وَالْكٰظِمِيْنَ இன்னும் மென்றுவிடுபவர்கள் الْغَيْظَ கோபத்தை وَالْعَافِيْنَ இன்னும் மன்னித்து விடுபவர்கள் عَنِ النَّاسِ‌ؕ மக்களை وَاللّٰهُ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُحْسِنِيْنَ‌ۚ‏ நல்லறம் புரிவோரை
3:134. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:134. அவர்கள் (எவர்கள் என்றால்) செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்கள். கோபத்தை விழுங்கிவிடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்துவிடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) அழகிய குணமுடையவர்களை நேசிக்கிறான்.
3:134. அவர்கள் எத்தகையோர் எனில் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள். மேலும் அவர்கள் சினத்தை அடக்கிக் கொள்வார்கள். மேலும் மக்(களின் தவறு)களை மன்னித்து விடுவார்கள். இத்தகைய உயர்ந்த பண்பினரை (முஹ்ஸின்களை) அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:134. அவர்கள் எத்தகையோரென்றால், செல்வ நிலையிலும், வறுமை நிலையிலும் செலவு செய்து கொண்டிருப்பார்கள், கோபத்தையும் அடக்கிக்கொள்ளக் கூடியவர்கள், மனிதர்(களின் குற்றங்)களையும் மன்னித்து விடக்கூடியவர்கள், அல்லாஹ்வோ (இத்தகைய) நன்மை செய்வோரை நேசிக்கின்றான்.
3:135
3:135 وَالَّذِيْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ  وَلَمْ يُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اِذَا فَعَلُوْا செய்தால் فَاحِشَةً ஒரு மானக்கேடானதை اَوْ அல்லது ظَلَمُوْۤا அநீதியிழைத்தால் اَنْفُسَهُمْ தங்களுக்கு ذَكَرُوا நினைவுகூர்வார்கள் اللّٰهَ அல்லாஹ்வை فَاسْتَغْفَرُوْا இன்னும் மன்னிப்புத் தேடுவார்கள் لِذُنُوْبِهِمْ தங்கள் பாவங்களுக்கு وَمَنْ யார்? يَّغْفِرُ மன்னிப்பார் الذُّنُوْبَ பாவங்களை اِلَّا தவிர اللّٰهُ அல்லாஹ்  وَلَمْ يُصِرُّوْا இன்னும் நிலைத்திருக்க மாட்டார்கள் عَلٰى மீது مَا எது فَعَلُوْا செய்தார்கள் وَهُمْ அவர்களுமோ يَعْلَمُوْنَ‏ அறிந்து கொண்டு
3:135. தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.
3:135. இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்கள் பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வைத் தவிர (இவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.)
3:135. மேலும் அவர்கள் எத்தகையோர் எனில், மானக்கேடான செயலைச் செய்துவிட்டால் அல்லது (ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டால், உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து, தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். (ஏனெனில்) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? மேலும் தாம் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக இருக்கமாட்டார்கள்.
3:135. இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், யாதொரு மானக்கேடான காரியத்தை அவர்கள் செய்து விட்டால், அல்லது (ஏதும் பாவமிழைத்துத்) தங்களுக்குத் தாங்களே அநீதமிழைத்துக் கொண்டால், (உடனே) அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள், இன்னும் (அவனிடமே) தங்களுடைய பாவங்களுக்காக மன்னிக்கத்தேடுவார்கள், (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்) அல்லாஹ்வைத் தவிர, (இத்தகையோரின்) குற்றங்களை மன்னிப்பவனும் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை(த்தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டே, (அதில்) நிலைத்திருக்கவுமாட்டார்கள். (உடனே அதிலிருந்து விலகி விடுவார்கள்).
3:136
3:136 اُولٰٓٮِٕكَ جَزَآؤُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا‌ ؕ وَنِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَؕ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் جَزَآؤُهُمْ அவர்களின் கூலி مَّغْفِرَةٌ மன்னிப்பு مِّنْ رَّبِّهِمْ அவர்களுடைய இறைவனிடமிருந்து وَ جَنّٰتٌ இன்னும் சொர்க்கங்கள் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின்கீழிருந்து الْاَنْهٰرُ ஆறுகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَا‌ ؕ அதில் وَنِعْمَ இன்னும் சிறந்ததாகிவிட்டது اَجْرُ கூலி الْعٰمِلِيْنَؕ‏ நன்மைபுரிவோர்
3:136. அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.
3:136. இவர்களுக்குப் பிரதிபலன், அவர்களின் இறைவனுடைய மன்னிப்பும், நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களும் ஆகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கிவிடுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலியும் நன்றே!
3:136. இத்தகையோரின் கூலி, அவர்களுடைய இறைவனிட மிருந்து கிடைக்கின்ற மன்னிப்பும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களுமாகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். நற்செயல்கள் புரிவோருக்கான கூலி எத்துணை நன்றாய் இருக்கின்றது!
3:136. அத்தகையோர் - அவர்களுடைய கூலி அவர்களுடைய இரட்சகனிடமிருந்து மன்னிப்பு, மற்றும் சுவனபதிகாளாகும், இவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், அவர்கள் அவற்றில் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள், (இத்தகு) காரியங்கள் செய்தோரின் கூலி அது மிக நல்லது.
3:137
3:137 قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ سُنَنٌ ۙ فَسِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ‏
قَدْ خَلَتْ சென்றுவிட்டன مِنْ قَبْلِكُمْ உங்களுக்குமுன்னர் سُنَنٌ ۙ வரலாறுகள் فَسِيْرُوْا ஆகவே சுற்றுங்கள் فِى الْاَرْضِ فَانْظُرُوْا பூமியில்/இன்னும் பாருங்கள் كَيْفَ كَانَ எப்படி இருந்தது عَاقِبَةُ முடிவு الْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பிப்பவர்களின்
3:137. உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன; ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள்.
3:137. உங்களுக்கு முன்னரும் (இப்படி) பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. (ஆகவே,) நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இறைவனுடைய வசனங்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி ஆனது என்பதைப் பாருங்கள்.
3:137. உங்களுக்கு முன் பல்வேறு காலகட்டங்கள் கடந்து சென்றிருக்கின்றன. பூமியில் சுற்றித் திரிந்து (அல்லாஹ்வின் சட்டதிட்டங்களையும், அறிவுரைகளையும்) பொய் என்று கூறியவர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதைப் பாருங்கள்!
3:137. திட்டமாக உங்களுக்கு முன்னரும் (இத்தகைய) பலவழிமுறைகள் சென்றிருக்கின்றன, ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து (அல்லாஹ்வுடைய வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்.
3:138
3:138 هٰذَا بَيَانٌ لِّلنَّاسِ وَهُدًى وَّمَوْعِظَةٌ لِّلْمُتَّقِيْنَ‏
هٰذَا இது بَيَانٌ தெளிவுரையாகும் لِّلنَّاسِ மக்களுக்கு وَهُدًى இன்னும் நேர்வழி وَّمَوْعِظَةٌ இன்னும் நல்லுபதேசம் لِّلْمُتَّقِيْنَ‏ அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
3:138. இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது.
3:138. இது (பொதுவாக) மனிதர்களுக்கு (உண்மையைத்) தெளிவாக்கக் கூடியதும், (சிறப்பாக) இறையச்சமுடையவர்களுக்கு நேர்வழி காட்டியும், நல்லுபதேசமும் ஆகும்.
3:138. இது மக்களுக்குரிய தெளிவான விளக்கமாகும். மேலும், இறைவனை அஞ்சி வாழ்வோர்க்கு வழிகாட்டியும், அறவுரையுமாகும்.
3:138. இது, (பொதுவாக) மனிதர்களுக்கு (உண்மை) விளக்கமாகவும், (குறிப்பாக) பயபக்தியுடையோர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும், நல்லுபதேசமாகவும் இருக்கிறது.
3:139
3:139 وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
وَلَا تَهِنُوْا துணிவிழக்காதீர்கள் وَ لَا تَحْزَنُوْا இன்னும் கவலைப்படாதீர்கள் وَاَنْتُمُ நீங்கள் الْاَعْلَوْنَ உயர்ந்தவர்கள்தான் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
3:139. எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
3:139. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள்.
3:139. நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்.
3:139. (விசுவாசங்கொண்டோரே!) நீங்கள் தைரியத்தை இழந்துவிட வேண்டாம், கவலையும் பட வேண்டாம், (உண்மையாகவே) நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் தாம் மிக்க மேலானவர்கள்.
3:140
3:140 اِنْ يَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ‌ؕ وَتِلْكَ الْاَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِۚ وَلِيَـعْلَمَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَۙ‏
اِنْ يَّمْسَسْكُمْ உங்களைஅடைந்தால் قَرْحٌ காயம் فَقَدْ مَسَّ அடைந்துள்ளது الْقَوْمَ (அக்)கூட்டத்திற்கு قَرْحٌ காயம் مِّثْلُهٗ ؕ அது போன்ற وَتِلْكَ அந்த الْاَيَّامُ நாள்கள் نُدَاوِلُهَا அவற்றை சுழற்றுகிறோம் بَيْنَ மத்தியில் النَّاسِۚ மக்கள் وَلِيَـعْلَمَ இன்னும் அறிவதற்காக اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَيَتَّخِذَ இன்னும் எடுப்பதற்காக مِنْكُمْ உங்களில் شُهَدَآءَ‌ؕ தியாகிகளை وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الظّٰلِمِيْنَۙ‏ அநியாயக்காரர்களை
3:140. உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.
3:140. நீங்கள் (தோல்வியுற்றுக்) காயமடைந்தால் (அதன் காரணமாக தைரியம் இழக்காதீர்கள். ஏனென்றால்,) அந்த மக்களும் இதைப்போன்றே (தோல்வியுற்றுக்) காயமடைந்திருக்கின்றனர். இத்தகைய கஷ்டகாலம் மனிதர்களுக்கு இடையில் மாறிமாறி வரும்படி நாம்தான் செய்கிறோம். ஏனென்றால், உங்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறி(வித்து விடு)வதற்காகவும், உங்களில் (மார்க்கத்திற்காக உயிரை அர்ப்பணம் செய்யும்) மாபெரும் தியாகியை அவன் எடுத்த(றிவிப்ப)தற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்). அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
3:140. (இப்பொழுது) உங்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்றால், இதற்கு முன்னர் (உங்கள்) எதிரணியினருக்கும் இதேபோன்ற காயம் ஏற்படத்தான் செய்தது. இவையெல்லாம் கால(த்தின் மாற்ற)ங்கள் ஆகும். இவற்றை மக்களிடையே நாம் மாறிமாறி வரச் செய்கின்றோம். (உங்களுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வரக் காரணம்) உங்களில் உண்மையான நம்பிக்கையுடையவர்கள் யார் என்பதனை அல்லாஹ் கண்டறிந்து உண்மையிலேயே சத்தியத்திற்குச் சான்று பகர்கின்றவர்களை (ஷுஹதா) உங்களிலிருந்து வேறுபடுத்துவதற்காகத் தான்! ஏனெனில் அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
3:140. உங்களுக்கு (உஹதுப்போரில் தோல்வியுற்றுக்) காயம் ஏற்பட்டதென்றால் (அதைப் பற்றி அதைரியமடையாதீர்கள், ஏனென்றால்,) அந்த ஜனங்களுக்கும், இதைப் போன்றே (பத்ரில் தோல்வியுற்றுக்) காயம் ஏற்பட்டுள்ளது, அந்த (சோதனையான) நாட்களை மனிதர்களுக்கிடையில் மாறி மாறி வரும்படி நாம் செய்கின்றோம், ஏனென்றால், (உங்களில்) உண்மையாகவே விசுவாசங் கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறிவித்து விடு)வதற்காகவும், உங்களில் (மார்க்கத்திற்காக உயிரைத் தத்தம் செய்யும் மாபெரும்) தியாகிகளை அவன் எடு(த்தறிவி)ப்பதற்காகவுமே இவ்வாறு செய்கின்றான்). இன்னும், அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
3:141
3:141 وَلِيُمَحِّصَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَمْحَقَ الْكٰفِرِيْنَ‏
وَلِيُمَحِّصَ இன்னும் சோதிப்பதற்காக اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ எவர்களை اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَيَمْحَقَ இன்னும் அழிப்பதற்காக الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களை
3:141. நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.
3:141. அல்லாஹ் நிராகரிப்பவர்களை அழித்து உண்மை நம்பிக்கையாளர்களை வடிகட்டி எடுப்பதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்).
3:141. (இவ்வாறெல்லாம் சோதனை செய்வதன் மூலம்) நம்பிக்கையாளர்களைப் பிரித்துத் தேர்ந்தெடுக்கவும், நிராகரிப்போரை நசுக்கவும் அல்லாஹ் நாடியிருந்தான்.
3:141. விசுவாசங்கொண்டிருந்தார்களே, அவர்களை அல்லாஹ் பரிசுத்தமாக்குவதற்காகவும், நிராகரிப்போர்களை அழிப்பதற்காகவும் (இவ்வாறு செய்கின்றான்).
3:142
3:142 اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللّٰهُ الَّذِيْنَ جَاهَدُوْا مِنْكُمْ وَيَعْلَمَ الصّٰبِرِيْنَ‏
اَمْ حَسِبْتُمْ நினைத்தீர்களா? اَنْ تَدْخُلُوا நீங்கள் நுழைய الْجَـنَّةَ சொர்க்கத்தில் وَلَمَّا يَعْلَمِ اللّٰهُ அல்லாஹ் அறியாமல் الَّذِيْنَ جَاهَدُوْا போர் புரிந்தவர்களை مِنْكُمْ உங்களில் وَيَعْلَمَ (அவன்) அறிவதுடன் الصّٰبِرِيْنَ‏ பொறுமையாளர்களை
3:142. உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?
3:142. (நம்பிக்கையாளர்களே!) உங்களில் (அல்லாஹ்வுக்காக) போர் புரிபவர்கள் யார்? (சிரமங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொள்பவர்கள் யார்? என்பதை அல்லாஹ் (பரிசோதித்து) அறிவதற்கு முன்னதாகவே நீங்கள் சொர்க்கம் நுழைந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா?
3:142. உங்களில் யார் அவனுடைய பாதையில் முனைப்போடு போராடுபவர்கள் என்பதை அல்லாஹ் அறியாமலும், உங்களில் நிலைகுலையாமல் நிற்பவர்கள் யார் என்பதை அவன் அறியாமலும் நீங்கள் (எளிதில்) சுவனம் புகுந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா?
3:142. (விசுவாசங்கொண்டோரே!) உங்களில் (அல்லாஹ்வுக்காக) யுத்தம் செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் பரிசோதித்து அறியாமலும் இன்னும் (துன்பங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொள்பவர்கள் யார், என்பதை அவன் அறியாமலும் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா?
3:143
3:143 وَلَقَدْ كُنْتُمْ تَمَنَّوْنَ الْمَوْتَ مِنْ قَبْلِ اَنْ تَلْقَوْهُ فَقَدْ رَاَيْتُمُوْهُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏
وَلَقَدْ كُنْتُمْ இன்னும் திட்டமாக இருந்தீர்கள் تَمَنَّوْنَ ஆசைவைக்கிறீர்கள் الْمَوْتَ மரணத்தை مِنْ قَبْلِ முன்னர் اَنْ تَلْقَوْهُ அதைச் சந்திப்பதற்கு فَقَدْ رَاَيْتُمُوْهُ அதைப் பார்த்தும் விட்டீர்கள் وَاَنْتُمْ நீங்களோ تَنْظُرُوْنَ‏ காண்கிறீர்கள்
3:143. நீங்கள் மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னமே நிச்சயமாக நீங்கள் அதை விரும்பினீர்களே! இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம்?)
3:143. நீங்கள் இறந்து விடுவதற்கு முன்னதாகவே, (அல்லாஹ்வின் பாதையில் உங்கள்) உயிரை அர்ப்பணம் செய்ய விரும்பிக் கொண்டிருந்தீர்களே! (இப்போது) அது உங்கள் கண் முன் இருப்பதைத் திட்டமாகப் பார்த்துவிட்டீர்கள். (ஆகவே, இந்த போரில் ஏன் தயங்குகிறீர்கள்?)
3:143. மரணம் உங்கள் எதிரில் வருவதற்கு முன்பு நீங்கள் நிச்சயமாக அதனை விரும்பிக் கொண்டிருந்தீர்கள். இதோ, இப்பொழுது அது உங்கள் முன் வந்துவிட்டது! அதனை நீங்கள் கண்கூடாய்ப் பார்த்துவிட்டீர்கள்.
3:143. மேலும், நீங்கள் மரணத்தை – அதை நீங்கள் சந்திப்பதற்கு முன்னதாக திட்டமாக ஆசிக்கக் கூடியவர்களாக இருந்தீர்கள், ஆகவே (கண்ணுக்கெதிரில்) நீங்கள் கண்டவர்களாக இருக்க, அதை திட்டமாக நீங்கள் பார்த்து விட்டீர்கள், (எனவே, இந்த யுத்தத்தில் ஏன் தயங்குகின்றீர்கள்?)
3:144
3:144 وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ  ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ‌ؕ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ‌ؕ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْئًا‌ ؕ وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ‏
وَمَا இல்லை مُحَمَّدٌ முஹம்மது اِلَّا தவிர رَسُوْلٌ  ۚ ஒரு தூதரே قَدْ خَلَتْ சென்று விட்டனர் مِنْ قَبْلِهِ அவருக்கு முன்னர் الرُّسُلُ‌ؕ தூதர்கள் افَا۟ٮِٕنْ مَّاتَ அவர் இறந்தால் اَوْ அல்லது قُتِلَ கொல்லப்பட்டால் انْقَلَبْتُمْ புரண்டு விடுவீர்கள் عَلٰٓى மீது اَعْقَابِكُمْ‌ؕ உங்கள் குதிங்கால்கள் وَمَنْ இன்னும் எவர் يَّنْقَلِبْ புரண்டு விடுவாரோ عَلٰى மீது عَقِبَيْهِ தன் குதிங்கால்கள் فَلَنْ يَّضُرَّ அறவே தீங்கு செய்யமுடியாது اللّٰهَ அல்லாஹ்விற்கு شَيْئًا‌ ؕ எதையும் وَسَيَجْزِى கூலி வழங்குவான் اللّٰهُ அல்லாஹ் الشّٰكِرِيْنَ‏ நன்றி செலுத்துபவர்களுக்கு
3:144. முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.
3:144. முஹம்மது (நபி) ஒரு தூதரே தவிர வேறில்லை. (ஆகவே, அவர் மரணமற்ற இறைவன் இல்லை.) அவருக்கு முன்னரும் (இவ்வாறே) (பல) தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டுவிட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்றுவிட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கிவிட மாட்டான். நன்றியறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான்.
3:144. முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறல்லர். திண்ணமாக, அவருக்கு முன்பும் தூதர்கள் பலர் சென்றுள்ளனர். எனவே அவர் மரணமெய்திவிட்டால், அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் முந்திய வாழ்க்கைக்குத் திரும்பிச் சென்று விடுவீர்களா? நினைவிருக்கட்டும்! எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின்றானோ, அவனால் அல்லாஹ்விற்கு எத்தகையத் தீங்கும் செய்துவிட முடியாது. ஆயினும், நன்றி செலுத்தி வாழ்பவர்க்கு அல்லாஹ் மிக விரைவில் அதற்குரிய கூலியை வழங்குவான்.
3:144. இன்னும், முஹம்மது ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக்கூடியவர்) இல்லை, அவருக்கு முன்னரும், (இவ்வாறே) தூதர்கள் பலர் திட்டமாகச் சென்றிருக்கின்றனர், அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் உங்கள் குதிங்கால்களின் மேல் (புறங்காட்டித்)திரும்பிச் சென்று) விடுவீர்களா? (அவ்வாறு) எவரேனும் தனது இரு குதிங்கால்களின் மீது (புறங்காட்டித்)திரும்பிச் சென்று) விட்டால், அதனால் அவர் அல்லாஹ்வுக்கு எந்த இடையூரும் செய்யவேமாட்டார், மேலும், நன்றி செலுத்துவோருக்கு அல்லாஹ் (நற்)கூலியைத் தருவான்.
3:145
3:145 وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تَمُوْتَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ كِتٰبًا مُّؤَجَّلًا ؕ وَ مَنْ يُّرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهٖ مِنْهَا ‌ۚ وَمَنْ يُّرِدْ ثَوَابَ الْاٰخِرَةِ نُؤْتِهٖ مِنْهَا ‌ؕ وَسَنَجْزِى الشّٰكِرِيْنَ‏
وَمَا كَانَ (சாத்தியம்) இல்லை لِنَفْسٍ ஓர் ஆத்மாவிற்கு اَنْ تَمُوْتَ மரணிப்பது اِلَّا தவிர بِاِذْنِ அனுமதியுடன் اللّٰهِ அல்லாஹ்வின் كِتٰبًا விதிக்கு ஏற்ப مُّؤَجَّلًا ؕ காலம் குறிக்கப்பட்ட وَ مَنْ يُّرِدْ இன்னும் எவர்/நாடுவாரோ ثَوَابَ நன்மையை الدُّنْيَا உலகத்தின் نُؤْتِهٖ அவருக்கு கொடுப்போம் مِنْهَا ۚ அதிலிருந்து وَمَنْ இன்னும் எவர் يُّرِدْ நாடுவாரோ ثَوَابَ நன்மையை الْاٰخِرَةِ மறுமையின் نُؤْتِهٖ அவருக்கு கொடுப்போம் مِنْهَا ؕ அதிலிருந்து وَسَنَجْزِى கூலி வழங்குவோம் الشّٰكِرِيْنَ‏ நன்றி செலுத்துபவர்கள்
3:145. மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹ்வின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை; எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்; இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்; நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாக நற்கூலி கொடுக்கிறோம்.
3:145. ஓர் ஆத்மா அல்லாஹ்வின் அனுமதியின்றி இறப்பதில்லை. இது தவணை நிர்ணயிக்கப்பட்ட விதியாகும். எவர் (தன் செயலுக்கு) இந்த உலகத்தின் நன்மையை (மட்டும்) விரும்புகிறாரோ அவருக்கு அதை (மட்டும்) அளிப்போம். எவர் மறுமையின் நன்மையை(யும்) விரும்புகிறாரோ அவருக்கு அதை(யும்) வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் அதிசீக்கிரத்தில் நற்பயனை வழங்குவோம்.
3:145. எந்த உயிரினமும் அல்லாஹ்வுடைய உத்தரவின்றி இறக்க முடியாது. மரண நேரம் விதிக்கப்பட்டுவிட்டது. எவர் உலகாயத லாபங்களைக் கருதிச் செயலாற்றுகின்றாரோ அவருக்கு அதிலிருந்தே நாம் வழங்குவோம். எவர் மறுமைப் பேற்றைக் கருதிச் செயலாற்றுகின்றாரோ அவருக்கு அதிலிருந்தே நாம் வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துவோர்க்கு அதிவிரைவில் நாம் கூலி வழங்கிடுவோம்.
3:145. மேலும், எந்த ஆன்மாவுக்கும் ஏற்கனவே (அதற்கு) நேரம் குறிக்கப்பட்ட (அல்லாஹ்வின்) எழுத்துப்படி, அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டே தவிர, அது மரணிப்பதற்கில்லை, மேலும், எவர் (தன் செயலுக்கு) இவ்வுலகத்தின் நன்மையை நாடுகிறாரோ) அவருக்கு, அதிலிருந்தே வழங்குவோம், இன்னும் எவர் மறுமையின் நன்மையை நாடுகிறாரோ அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம், நன்றி செலுத்துவோருக்கு நாம் நற்கூலியும் அளிப்போம்.
3:146
3:146 وَكَاَيِّنْ مِّنْ نَّبِىٍّ قٰتَلَ ۙ مَعَهٗ رِبِّيُّوْنَ كَثِيْرٌ ۚ فَمَا وَهَنُوْا لِمَاۤ اَصَابَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الصّٰبِرِيْنَ‏
وَكَاَيِّنْ எத்தனையோ مِّنْ இருந்து نَّبِىٍّ நபி قٰتَلَ ۙ போர் புரிந்தார் مَعَهٗ அவருடன் رِبِّيُّوْنَ நல்லடியார்கள் كَثِيْرٌ ۚ அதிகமான فَمَا وَهَنُوْا அவர்கள் துணிவிழக்கவில்லை لِمَاۤ اَصَابَهُمْ அவர்களுக்கு ஏற்பட்டதின் காரணமாக فِىْ سَبِيْلِ اللّٰهِ அல்லாஹ்வின் பாதையில் وَمَا ضَعُفُوْا இன்னும் அவர்கள் பலவீனமடையவில்லை وَمَا اسْتَكَانُوْا ؕ இன்னும் அவர்கள் பணியவில்லை وَاللّٰهُ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الصّٰبِرِيْنَ‏ பொறுமையாளர்களை
3:146. மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.
3:146. எத்தனையோ இறைத்தூதர்களும், அவர்களுடன் இறைவனின் பல நல்லடியார்களும் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் புரிந்திருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்ததனால்) தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக அவர்கள் தங்கள் தைரியத்தை இழந்திடவுமில்லை; பலவீனமாகிவிடவுமில்லை; (எதிரிகளுக்கு) பணிந்துவிடவுமில்லை. (இவ்வாறு சிரமங்களைச்) சகித்துக் கொள்பவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கிறான்.
3:146. (இதற்கு முன்பு) எத்தனையோ இறைத்தூதர்(களும் அவர்)களோடு சேர்ந்து இறை அன்பர்கள் பலரும் போர் புரிந்துள்ளார்கள். அல்லாஹ்வின் வழியில், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களினால் அவர்கள் மனந்தளர்ந்து விடவில்லை; ஊக்கம் குன்றிவிடவுமில்லை. (அசத்தியத்திற்கு முன்) அவர்கள் பணிந்திடவுமில்லை. நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:146. மேலும், எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் அல்லாஹ்வின் நல்லடியார்கள் கொண்ட அநேகம்பேர் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) யுத்தம் செய்திருக்கின்றனர், ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்ததனால்) தங்களுக்கு (துன்பங்கள்) ஏற்பட்டவற்றின் காரணமாக அவர்கள் தைரியமிழந்துவிடவில்லை, பலவீவனமடைந்துவிடவுமில்லை, (எதிரிகளுக்கு) ஐக்கியப்பட்டுவிடவுமில்லை, மேலும், (இவ்வாறு துன்பங்களைச் சகித்துக் கொள்ளும்) பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:147
3:147 وَمَا كَانَ قَوْلَهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَاِسْرَافَنَا فِىْۤ اَمْرِنَا وَ ثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏
وَمَا كَانَ இருக்கவில்லை قَوْلَهُمْ அவர்களுடைய கூற்றாக اِلَّاۤ தவிர اَنْ قَالُوْا அவர்கள் கூறியது رَبَّنَا எங்கள் இறைவா اغْفِرْ لَنَا எங்களுக்கு மன்னி ذُنُوْبَنَا எங்கள் பாவங்களை وَاِسْرَافَنَا இன்னும் எங்கள்வரம்பு மீறலை فِىْۤ اَمْرِنَا எங்கள் காரியத்தில் وَ ثَبِّتْ இன்னும் உறுதிப்படுத்து اَقْدَامَنَا எங்கள் பாதங்களை وَانْصُرْنَا இன்னும் எங்களுக்கு உதவு عَلَى எதிராக الْقَوْمِ மக்களுக்கு الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்கள்
3:147. மேலும், “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக” என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை.
3:147. (இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் செயல்களில் நாங்கள் வரம்புமீறிய (குற்றத்)தையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை (போரில் நழுவாது) நீ உறுதிபடுத்தியும் வைப்பாயாக! (உன்னை) நிராகரிக்கும் மக்களை வெற்றிபெற நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!'' என்று அவர்கள் (பிரார்த்தித்துக்) கூறியதைத் தவிர (வேறொன்றும்) கூறியதில்லை.
3:147. அவர்களுடைய பிரார்த்தனை இதுவாகத்தான் இருந்தது: “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் பிழைகளையும் நீ மன்னித்தருள்வாயாக! எங்கள் பணிகளில் உன் வரம்பை மீறி நாங்கள் செய்தவற்றை நீ மன்னிப்பாயாக! மேலும் எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! சத்தியத்தை நிராகரிப்பவர்களை வெற்றிகொள்ள எங்களுக்கு நீ உதவி செய்வாயாக!”
3:147. (இத்தகைய சந்தர்ப்பங்களில், அவர்கள் தங்கள் இரட்சகனிடம்,) “எங்கள் இரட்சகனே! எங்கள் பாவங்களையும், எங்கள் செயல்களில் நாங்கள் வரம்புமீறிய (குற்றத்)தையும் நீ எங்களுக்கு மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை (யுத்தத்தில் நழுவாது) நீ உறுதிப்படுத்தியும் வைப்பாயாக! (உன்னை) நிராகரிக்கும் சமுதாயத்தினர்க்கு எதிராக (வெற்றி கொள்ள) நீ எங்களுக்கு உதவியும் புரிவாயாக” என்று அவர்கள் (பிரார்த்தித்துக்) கூறியதைத் தவிர (வேறொன்றும்) அவர்களின் கூற்றாக இருக்கவில்லை.
3:148
3:148 فَاٰتٰٮهُمُ اللّٰهُ ثَوَابَ الدُّنْيَا وَحُسْنَ ثَوَابِ الْاٰخِرَةِ‌ ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏
فَاٰتٰٮهُمُ ஆகவே அவர்களுக்கு கொடுத்தான் اللّٰهُ அல்லாஹ் ثَوَابَ நன்மையை الدُّنْيَا உலகத்தின் وَحُسْنَ இன்னும் அழகான ثَوَابِ நன்மை(யை) الْاٰخِرَةِ‌ ؕ மறுமையின் وَاللّٰهُ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُحْسِنِيْنَ‏ நல்லறம் புரிவோரை
3:148. ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்; இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்.
3:148. ஆதலால், அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தின் நன்மையையும், மறுமையின் அழகான நன்மையையும் வழங்கினான். அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கிறான்.
3:148. இறுதியில் இவர்களுக்கு அல்லாஹ் இவ்வுலக நன்மைகளையும் அளித்தான்; அதைவிட உன்னதமான மறுமைப் பேறுகளையும் வழங்கினான். இத்தகைய நற்செயல்கள் புரியும் முஹ்ஸின்கள் தாம் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு உரியவர்கள்.
3:148. ஆதலால், அவர்களுக்கு இவ்வுலகத்தின் நன்மையையும் மறுமையின் நன்மையில் அழகானதையும் கொடுத்தான், இன்னும் அல்லாஹ் (இத்தகைய) நற்கருமங்கள் செய்வோரை நேசிக்கின்றான்.
3:149
3:149 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِيْعُوا الَّذِيْنَ كَفَرُوْا يَرُدُّوْكُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ فَتَـنْقَلِبُوْا خٰسِرِيْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِنْ تُطِيْعُوا நீங்கள் கீழ்ப்படிந்தால் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்களுக்கு يَرُدُّوْكُمْ திருப்பி விடுவார்கள்/ உங்களை عَلٰٓى மீது اَعْقَابِكُمْ உங்கள் குதிங்கால்கள் فَتَـنْقَلِبُوْا திரும்பி விடுவீர்கள் خٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளாக
3:149. நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்; அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.
3:149. நம்பிக்கையாளர்களே! (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை நீங்கள் பின்பற்றினால் அவர்கள் உங்களை (உங்கள் நம்பிக்கையிலிருந்து நீங்கள் விலகி)ப் பின் செல்லும்படி திருப்பிவிடுவார்கள். அதனால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே மாறிவிடுவீர்கள்.
3:149. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிராகரிக்கும் போக்கினை மேற்கொண்டவர்களின் கூற்றுகளை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை முந்திய வாழ்க்கைக்குத் திருப்பி விடுவார்கள். மேலும் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள். (அவர்களுடைய கூற்று தவறானவையே!
3:149. விசுவாசங்கொண்டோரே! (அல்லாஹ்வை) நிராகரிப்போருக்கு நீங்கள் கீழ்படிந்து நடந்தால் அவர்கள் உங்களை (உங்கள் விசுவாசத்திலிருந்து நீங்கள் விலகி) குதிங்கால்களின் மீது (பின் செல்லும்படி) திருப்பிவிடுவார்கள், அதனால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகத் திரும்பிவிடுவீர்கள்.
3:150
3:150 بَلِ اللّٰهُ مَوْلٰٮكُمْ‌ۚ وَهُوَ خَيْرُ النّٰصِرِيْنَ‏
بَلِ மாறாக اللّٰهُ அல்லாஹ் مَوْلٰٮكُمْ‌ۚ உங்கள் எஜமான் وَهُوَ அவன் خَيْرُ சிறந்தவன் النّٰصِرِيْنَ‏ உதவியாளர்களில்
3:150. (இவர்களல்ல.) அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன்.
3:150. (இவர்கள்) அல்ல, அல்லாஹ்தான் உங்கள் பாதுகாவலன். அவன் உதவி செய்பவர்களில் மிகச் சிறந்தவன்.
3:150. உண்மை என்னவெனில்) அல்லாஹ்தான் உங்களின் பாதுகாவலன். மேலும் அவன் உதவி செய்வோரில் மிகச் சிறந்தவன்.
3:150. (இவர்கள் அல்ல, அல்லாஹ்தான்) உங்கள் பாதுகாவலன், இன்னும், அவனே உதவிசெய்வோரில் மிகச்சிறந்தவன்.
3:151
3:151 سَنُلْقِىْ فِىْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ بِمَاۤ اَشْرَكُوْا بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا ‌‌ۚ وَمَاْوٰٮهُمُ النَّارُ‌ؕ وَ بِئْسَ مَثْوَى الظّٰلِمِيْنَ‏
سَنُلْقِىْ போடுவோம் فِىْ قُلُوْبِ உள்ளங்களில் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوا நிராகரித்தார்கள் الرُّعْبَ திகிலை بِمَاۤ اَشْرَكُوْا அவர்கள் இணைவைத்த காரணத்தால் بِاللّٰهِ அல்லாஹ்விற்கு مَا لَمْ يُنَزِّلْ எது/இறக்கவில்லை بِهٖ அதற்கு سُلْطٰنًا ۚ ஓர் ஆதாரத்தை وَمَاْوٰٮهُمُ இன்னும் அவர்களுடைய தங்குமிடம் النَّارُ‌ؕ நரகம்தான் وَ بِئْسَ கெட்டுவிட்டது مَثْوَى தங்குமிடம் الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களின்
3:151. விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம்; ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்; அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.
3:151. நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் அதிசீக்கிரத்தில் நாம் திகிலை உண்டுபண்ணி விடுவோம். ஏனென்றால், அவர்கள் இணைவைப்பதற்கு அல்லாஹ் எவ்வித ஆதாரமும் அவர்களுக்கு அளிக்காதிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்கள். இவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். (நரகத்திலும்) அநியாயக்காரர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது.
3:151. (சத்தியத்தை) நிராகரிப்போரின் உள்ளங்களில் வெகுவிரைவில் நாம் பேரச்சத்தை ஏற்படுத்துவோம். ஏனெனில், இறைவனுக்கு இணையானவை என்று நிரூபிக்கும் எந்த ஆதாரத்தையும் எவற்றுக்கு அல்லாஹ் இறக்கிடவில்லையோ அவற்றை அவனுடன் இணையாக்கிவிட்டார்கள். இவர்கள் இறுதியாகப் போய்ச் சேருமிடம் நரகமே! அக்கிரமக்காரர்கள் சேர இருக்கும் இந்த இடம் எத்துணைக் கெட்டது!
3:151. எதற்கு அவன் சான்றை இறக்கி வைக்கவில்லையோ, அதை அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்ததன் காரணமாக நிராகரித்து விட்டார்களே, அவர்களுடைய இதயங்களில், நாம் திகிலைப் போடுவோம், அன்றியும் அவர்கள் தங்குமிடம் நரகந்தான், மேலும், இந்த அநியாயக்காரர்களின் தங்குமிடம் (அது) மிகக் கெட்டது.
3:152
3:152 وَلَقَدْ صَدَقَكُمُ اللّٰهُ وَعْدَهٗۤ اِذْ تَحُسُّوْنَهُمْ بِاِذْنِهٖ‌ۚ حَتّٰۤی اِذَا فَشِلْتُمْ وَتَـنَازَعْتُمْ فِى الْاَمْرِ وَعَصَيْتُمْ مِّنْۢ بَعْدِ مَاۤ اَرٰٮكُمْ مَّا تُحِبُّوْنَ‌ؕ مِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الْاٰخِرَةَ  ‌‌‌ۚ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ‌ۚ وَلَقَدْ عَفَا عَنْكُمْ‌ؕ وَ اللّٰهُ ذُوْ فَضْلٍ عَلَى الْمُؤْمِنِيْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக صَدَقَكُمُ உங்களுக்கு உண்மையாக்கினான் اللّٰهُ அல்லாஹ் وَعْدَهٗۤ தன் வாக்குறுதியை اِذْ போது تَحُسُّوْنَهُمْ அவர்களை வெட்டி வீழ்த்துகிறீர்கள் بِاِذْنِهٖ‌ۚ அவனுடைய அனுமதியுடன் حَتّٰۤی வரை اِذَا போது فَشِلْتُمْ கோழையாகி விட்டீர்கள் وَتَـنَازَعْتُمْ இன்னும் தர்க்கித்தீர்கள் فِى الْاَمْرِ கட்டளையில் وَعَصَيْتُمْ இன்னும் மாறு செய்தீர்கள் مِّنْۢ بَعْدِ பின்னர் مَاۤ اَرٰٮكُمْ அவன் உங்களுக்குக் காண்பித்ததற்கு مَّا எதை تُحِبُّوْنَ‌ؕ விரும்புகிறீர்கள் مِنْكُمْ உங்களில் مَّنْ எவர் يُّرِيْدُ நாடுகிறார் الدُّنْيَا உலகத்தை وَمِنْكُمْ இன்னும் உங்களில் مَّنْ எவர் يُّرِيْدُ நாடுகிறார் الْاٰخِرَةَ  ۚ மறுமையை ثُمَّ صَرَفَكُمْ பிறகு/திருப்பினான்/உங்களை عَنْهُمْ அவர்களை விட்டும் لِيَبْتَلِيَكُمْ‌ۚ அவன் சோதிப்பதற்காக/உங்களை وَلَقَدْ عَفَا திட்டமாக மன்னித்தான் عَنْكُمْ‌ؕ உங்களை وَ اللّٰهُ அல்லாஹ் ذُوْ فَضْلٍ عَلَى அருளுடையவன்/மீது الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்கள்
3:152. இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்தரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்; நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்; பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்; நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான்; மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.
3:152. (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் கட்டளைப்படி (உஹுத் போரில்) நீங்கள் எதிரிகளை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்த சமயத்தில் (உங்களுக்கு உதவி புரிந்து) அல்லாஹ் தன் வாக்கை நிச்சயமாக நிறைவேற்றி வைத்தான். ஆனால், நீங்கள் விரும்பியதை (அதாவது வெற்றியை) அல்லாஹ் உங்களுக்குக் காண்பித்ததன் பின்னர் (நபியின் கட்டளைக்கு) மாறுசெய்து அவ்விஷயத்தில் நீங்கள் உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (நபி உங்களை நிறுத்திவைத்திருந்த மலையிலிருந்து விலகி இறுதியில்) தைரியத்தை இழந்துவிட்டீர்கள். உங்களில் இவ்வுலகை விரும்புபவர்களும் உள்ளனர். உங்களில் மறுமையை விரும்புகிறவர்களும் உள்ளனர். ஆகவே, உங்களைச் சோதிப்பதற்காக (அவர்களைத் துரத்திச் சென்ற உங்களை) அவர்களைவிட்டு பின்னடையும்படி செய்தான். (இதன் பின்னரும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களை மன்னித்துவிட்டான். ஏனென்றால், அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது அருளுடையவன் ஆவான்.
3:152. அல்லாஹ் உங்களுக்கு (உதவி செய்வதாகக் கூறிய) தனது வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டான். துவக்கத்தில் அவனது அனுமதியின்படி அவர்களை நீங்கள்தாம் (போரில்) வெட்டி வீழ்த்தினீர்கள்! ஆனால் இறுதியில் நீங்கள் ஊக்கமிழந்து உங்களுடைய பணிகள் குறித்து ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டீர்கள்; மேலும் நீங்கள் மோகம் கொண்டிருந்தவற்றை (போர்ப் பொருட்களை) அல்லாஹ் உங்கள் கண்ணெதிரே காட்டிய உடனேயே (உங்கள் தலைவரின் கட்டளைக்கு) நீங்கள் மாறு செய்தீர்கள். ஏனெனில் உங்களில் சிலர் இம்மையை விரும்புவோராய் இருந்தனர்; வேறு சிலர் மறுமையை விரும்புவோராய் இருந்தனர். பிறகு அல்லாஹ் உங்களைச் சோதிக்கும் பொருட்டு இறைமறுப்பாளர்களை எதிர்த்து நிற்க முடியாத வண்ணம் உங்களை திசை திருப்பிவிட்டான். இதன் பிறகும் அவன் உங்களை மன்னித்தருளினான். ஏனெனில், அல்லாஹ் இறைநம்பிக்கையுடையோர் மீது பெரிதும் கருணை பொழிபவனாக இருக்கின்றான்.
3:152. இன்னும், அவன் அனுமதிகொண்டு (எதிரிகளாகிய) அவர்களை நீங்கள் கொன்றழித்த சமயத்தில் அல்லாஹ் திட்டமாக தனது வாக்குறுதியை உங்களுக்கு உண்மையாக்கி வைத்தான், முடிவாக நீங்கள் கோழைகளாகி உங்களுக்கிடப்பட்ட கட்டளையில் தர்க்கித்துக் கொண்டுமிருந்தீர்கள், நீங்கள் எதை விரும்பினீர்களோ அதை அவன் உங்களுக்குக் காட்டிய பிறகும் மாறு செய்யலானீர்கள், உங்களில் இம்மையை விரும்புவோரும் உண்டு, உங்களில் மறுமையை விரும்புவோரும் உண்டு, பின்னர் உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளை விட்டும் உங்களைத் திருப்பினான், மேலும், திட்டமாக அவன் உங்களுடைய குற்றங்களை மன்னித்துவிட்டான். அல்லாஹ்வே விசுவாசிகள் மீது பேரருளுடையவன்.
3:153
3:153 اِذْ تُصْعِدُوْنَ وَلَا تَلْوٗنَ عَلٰٓى اَحَدٍ وَّالرَّسُوْلُ يَدْعُوْكُمْ فِىْۤ اُخْرٰٮكُمْ فَاَثَابَكُمْ غَمًّا ۢ بِغَمٍّ لِّـكَيْلَا تَحْزَنُوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا مَاۤ اَصَابَكُمْ‌ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏
اِذْ சமயம் تُصْعِدُوْنَ வேகமாக ஓடுகிறீர்கள் وَلَا تَلْوٗنَ நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் عَلٰٓى اَحَدٍ ஒருவரையும் وَّالرَّسُوْلُ தூதர் يَدْعُوْكُمْ உங்களை அழைக்கிறார் فِىْۤ اُخْرٰٮكُمْ உங்களுக்குஇறுதியில் فَاَثَابَكُمْ உங்களுக்கு கூலியாக்கினான் غَمًّا ۢ துயரத்தை بِغَمٍّ துயரத்தின்காரணமாக لِّـكَيْلَا تَحْزَنُوْا நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவே عَلٰى மீது مَا எது فَاتَكُمْ உங்களுக்கு தவறியது وَلَا مَاۤ اَصَابَكُمْ‌ؕ இன்னும் உங்களுக்கு ஏற்பட்டது وَاللّٰهُ அல்லாஹ் خَبِيْرٌۢ ஆழ்ந்தறிந்தவன் بِمَا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்பவற்றை
3:153. (நினைவு கூறுங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள்; ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான்; ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
3:153. (உஹுத் போரில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்களுக்கு பின்னால் இருந்தவாறு ‘‘(என்னிடம் வாருங்கள்!) வாருங்கள்'' என்று உங்களை(க் கூவி) அழைத்துக் கொண்டிருந்த சமயத்தில் நீங்கள் ஒருவரையுமே திரும்பிப்பாராது வெருண்டோடிக் கொண்டிருந்ததையும் சிந்தித்துப் பாருங்கள். (நம் தூதருக்கும் நீங்கள் உண்டு பண்ணிய) இத்துயரத்தின் காரணமாக உங்களுக்கும் (தோல்வியின்) துயரத்தையே பிரதிபலனாகக் கொடுத்தான். ஏனென்றால், உங்களிடமிருந்து (ஒரு பொருள்) தவறி விட்டதைப் பற்றியும், உங்களுக்கு ஏற்பட்ட (நஷ்டத்)தைப் பற்றியும் நீங்கள் துயரத்தில் ஆழ்ந்துவிடாமல் இருப்பதற்(குரிய சகிப்புத்தன்மையை உங்களுக்கு உண்டு பண்ணுவதற்)காகவே (இத்தகைய சிரமத்தை உங்களுக்குக் கொடுத்தான்). நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.
3:153. இறைத்தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காதவாறு ஓடிக் கொண்டிருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். இதன் விளைவாக அல்லாஹ் உங்களுக்குத் துன்பத்திற்கு மேல் துன்பத்தைக் கொடுத்தான். ஏனெனில், உங்களை விட்டு நழுவிப் போனவை பற்றியும், உங்களுக்குத் துன்பம் ஏற்பட்டது பற்றியும், (இனிமேல்) நீங்கள் வருந்தக் கூடாது எனும் படிப்பினையை இதிலிருந்து பெறவேண்டும் என்பதற்காக! அல்லாஹ் நீங்கள் செய்வதனைத்தையும் நன்கறிபவனாக இருக்கின்றான்.
3:153. (உஹத் யுத்தத்தில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்கள் பின்னிருந்துக்கொண்டு (“என்னிடம் வாருங்கள்” என்று) உங்களை அழைத்துக் கொண்டிருந்த சமயத்தில்) நீங்கள் ஒருவரையுமே திரும்பிப் பாராது (வெருண்டோடி மலையில்) ஏறிக்கொண்டிருந்ததை (நினைத்துப் பாருங்கள், அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் உண்டு பண்ணிய இத்) துக்கத்தின் காரணமாக, உங்களுக்கும் (தோல்வியின்) துக்கத்தையே பிரதிபலனாகக் கொடுத்தான், ஏனென்றால் (இனி) உங்களுக்கு எது தவறிவிட்டதோ, அதன் மீதும், உங்களுக்கு எது ஏற்பட்டுவிட்டதோ, அதன் மீதும் நீங்கள் கவலை கொள்ளாதிருப்பதற்காகவேயாகும், மேலும், நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு உணர்பவன்.
3:154
3:154 ثُمَّ اَنْزَلَ عَلَيْكُمْ مِّنْۢ بَعْدِ الْغَمِّ اَمَنَةً نُّعَاسًا يَّغْشٰى طَآٮِٕفَةً مِّنْكُمْ‌ۙ وَطَآٮِٕفَةٌ قَدْ اَهَمَّتْهُمْ اَنْفُسُهُمْ يَظُنُّوْنَ بِاللّٰهِ غَيْرَ الْحَـقِّ ظَنَّ الْجَـاهِلِيَّةِ‌ؕ يَقُوْلُوْنَ هَلْ لَّنَا مِنَ الْاَمْرِ مِنْ شَىْءٍ‌ؕ قُلْ اِنَّ الْاَمْرَ كُلَّهٗ لِلّٰهِ‌ؕ يُخْفُوْنَ فِىْۤ اَنْفُسِهِمْ مَّا لَا يُبْدُوْنَ لَكَ‌ؕ يَقُوْلُوْنَ لَوْ كَانَ لَنَا مِنَ الْاَمْرِ شَىْءٌ مَّا قُتِلْنَا هٰهُنَا ‌ؕ قُلْ لَّوْ كُنْتُمْ فِىْ بُيُوْتِكُمْ لَبَرَزَ الَّذِيْنَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ اِلٰى مَضَاجِعِهِمْ‌ۚ وَلِيَبْتَلِىَ اللّٰهُ مَا فِىْ صُدُوْرِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِىْ قُلُوْبِكُمْ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
ثُمَّ பிறகு اَنْزَلَ இறக்கினான் عَلَيْكُمْ உங்கள் மீது مِّنْۢ بَعْدِ பின்னர் الْغَمِّ துயரம் اَمَنَةً மன நிம்மதிக்காக نُّعَاسًا சிறு நித்திரையை يَّغْشٰى அது சூழ்ந்தது طَآٮِٕفَةً ஒரு வகுப்பாரை مِّنْكُمْ‌ۙ உங்களில் وَطَآٮِٕفَةٌ இன்னும் ஒரு வகுப்பார் قَدْ திட்டமாக اَهَمَّتْهُمْ அவர்களுக்கு கவலையைத் தந்தன اَنْفُسُهُمْ ஆன்மாக்கள்/தங்கள் يَظُنُّوْنَ எண்ணுகின்றனர் بِاللّٰهِ அல்லாஹ்வை غَيْرَ அல்லாத الْحَـقِّ உண்மை ظَنَّ எண்ணத்தைப் போன்று الْجَـاهِلِيَّةِ‌ؕ மடத்தனம் يَقُوْلُوْنَ கூறுகின்றனர் هَلْ لَّنَا நமக்கு உண்டா ? مِنَ இருந்து الْاَمْرِ அதிகாரத்தில் مِنْ شَىْءٍ‌ؕ ஏதும் قُلْ கூறுவீராக اِنَّ நிச்சயமாக الْاَمْرَ அதிகாரம் كُلَّهٗ அது எல்லாம் لِلّٰهِ‌ؕ அல்லாஹ்வுக்குரியதே يُخْفُوْنَ மறைக்கின்றனர் فِىْۤ اَنْفُسِهِمْ தங்களுக்குள் مَّا لَا يُبْدُوْنَ எதை/வெளிப்படுத்த மாட்டார்கள் لَكَ‌ؕ உமக்கு يَقُوْلُوْنَ கூறுகின்றனர் لَوْ كَانَ لَنَا இருந்திருந்தால்/நமக்கு مِنَ الْاَمْرِ அதிகாரத்தி லிருந்து شَىْءٌ ஏதும் مَّا எதுவும் قُتِلْنَا கொல்லப் பட்டிருக்க மாட்டோம் هٰهُنَا ؕ இங்கு قُلْ கூறுவீராக لَّوْ كُنْتُمْ நீங்கள் இருந்தாலும் فِىْ بُيُوْتِكُمْ உங்கள் வீடுகளில் لَبَرَزَ வெளியாகியே தீருவார் الَّذِيْنَ எவர்கள் كُتِبَ விதிக்கப்பட்டது عَلَيْهِمُ அவர்கள் மீது الْقَتْلُ கொலை اِلٰى பக்கம் مَضَاجِعِهِمْ‌ۚ தாங்கள் கொல்லப்படும் இடங்கள் وَلِيَبْتَلِىَ இன்னும் பரிசோதிப்பதற்காக اللّٰهُ அல்லாஹ் مَا எவை فِىْ صُدُوْرِ நெஞ்சங்களில் كُمْ உங்கள் وَلِيُمَحِّصَ இன்னும் பரிசுத்தமாக்க مَا فِىْ قُلُوْبِكُمْ‌ؕ எவை/இல்/உள்ளங்கள்/உங்கள் وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌۢ மிக அறிபவன் بِذَاتِ الصُّدُوْرِ‏ நெஞ்சங்களில் உள்ளதை
3:154. பிறகு, அத்துக்கத்திற்குப்பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான்; உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது; மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி விட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; (அதனால்) அவர்கள் கூறினார்கள்: “இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?” (என்று, அதற்கு) “நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது” என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தம் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்; அவர்கள் (தமக்குள்) கூறிக்கொள்ளுகிறார்கள்: “இக்காரியத்தால் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்க மாட்டோம்;” “நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!” என்று (நபியே!) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சுத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
3:154. (நம்பிக்கையாளர்களே!) இத் துயரத்திற்குப் பின்னர் (அல்லாஹ்) உங்களுக்கு ஆறுதலை அளிக்கக்கூடிய நித்திரையை இறக்கிவைத்தான். உங்களில் ஒரு கூட்டத்தினரை அது சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினருக்கோ அவர்களுடைய கவலையே பெரிதாகி மடையர்கள் எண்ணுவதைப்போல அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாதவற்றை எல்லாம் (தவறாக) எண்ண ஆரம்பித்து ‘‘நம்மிடம் (இதற்குப் பரிகாரம் செய்ய) அதிகாரம் ஏதும் உண்டா?'' என்று கேட்டனர். (இதற்கு,) ‘‘எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுடையதே!'' என்று (நபியே! பதில்) கூறுவீராக. (இவையன்றி) அவர்கள் உங்களுக்கு வெளியாக்காத பல விஷயங்களையும் தங்கள் மனதில் மறைத்துக் கொண்டு ‘‘நம்மிடம் ஏதும் அதிகாரம் இருந்திருந்தால், இங்கு வந்து (இவ்வாறு) நாம் வெட்டப்பட்டிருக்க மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர். (இதற்கு நபியே! அந்நயவஞ்சகர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘நீங்கள் உங்கள் வீட்டில் (தங்கி) இருந்தபோதிலும் எவர்கள் மீது வெட்டப்பட்டே இறக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளதோ அவர்கள் தாங்கள் வெட்டப்படவேண்டிய இடங்களுக்கு(த் தாமாக) வந்தே தீருவார்கள்'' என்றும், (நம்பிக்கையாளர்களை நோக்கி) அல்லாஹ் உங்கள் மனதிலுள்ளதைப் பரிசோதனை செய்வதற்காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றைப் பரிசுத்தமாக்குவதற்காகவும் (இவ்வாறு சம்பவிக்கும்படிச் செய்தான் என்றும் கூறுவீராக. உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான்.
3:154. பின்னர் இத் துன்பத்திற்குப் பிறகு மன ஆறுதலை அளிக்கக்கூடிய சிற்றுறக்கத்தை அல்லாஹ் உங்களுக்கு அருளினான். உங்களில் ஒரு குழுவினரை அது ஆட்கொண்டது. ஆனால் மற்றும் சிலரோ தமது நலன்களையே முக்கியமாகக் கருதி உண்மைக்குப் புறம்பாக, அல்லாஹ்வைப் பற்றி அறியாமை மிக்க பல யூகங்களைக் கொண்டிருந்தனர். “இந்த விவகாரங்களில் எங்களுக்கும் ஏதாவது பங்குண்டா?” என்று அவர்கள் வினவுகின்றனர். நீர் கூறும்: “(யாருக்கும் எத்தகையப் பங்குமில்லை.) இவற்றின் அனைத்து அதிகாரங்களும் நிச்சயமாக அல்லாஹ்வின் கைவசமே உள்ளன.” உண்மையில் அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்திருப்பவற்றை உம்மிடம் வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் கேட்டதன் பொருள் இதுதான்: “தலைமையதிகாரங்களில் எங்களுக்கும் சிறிது பங்கு இருந்திருந்தால், நாங்கள் இங்குக் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்” என்று அவர்கள் சொல்கின்றார்கள். அதற்கு நீர் கூறும்: “நீங்கள் உங்கள் வீடுகளில் அடைந்திருந்தாலும் யாருடைய விதியில் மரணம் எழுதப்பட்டு விட்டதோ, அவர்கள் தம் மரணக்களங்களை நோக்கி வந்தே தீருவர்!” மேலும் அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றைச் சோதிக்கவும் உங்கள் இதயங்களில் படிந்திருக்கும் மாசுகளை அகற்றவுமே இவ்வாறெல்லாம் நிகழும்படிச் செய்தான். அல்லாஹ் உங்கள் உள்ளங்களின் நிலையை நன்கறிபவனாக இருக்கின்றான்.
3:154. பிறகு, விசுவாசங்கொண்டோரே! இத்துக்கத்திற்குப் பின்னர், (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுக்கு அமைதியை அளிக்கக் கூடிய சிறு தூக்கத்தை இறக்கி வைத்தான், உங்களில் ஒரு கூட்டத்தினரை அது சூழ்ந்து கொண்டது, மற்றதொரு கூட்டத்தினரோ, திட்டமாக அவர்களுடைய மனங்கள் அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி விட்டன, அறியாமைக் காலத்தின் எண்ணம் போல, அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாததை (தவறாக) எண்ண ஆரம்பித்து “காரியத்தில் நமக்கேதும் உண்டா?” என்று அவர்கள் கூறினர், (அதற்கு) “நிச்சயமாக காரியம்-அது அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (இவையன்றி) அவர்கள் உமக்கு வெளியிடாததை தங்கள் மனங்களில் மறைத்திருக்கின்றனர், நம்மிடம் ஏதும் அதிகாரம் இருந்திருந்தால் இங்கு வந்து (இவ்வாறு) நாம் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்” எனக் கூறுகின்றனர், (இதற்கு நபியே! அந்த முனாஃபிக்குகளிடம்) நீர் கூறுவீராக! “நீங்கள் உங்கள் வீடுகளில் (தங்கி) இருந்திருந்த போதிலும் கொல்லப்பட்டே இறக்க வேண்டுமென்று எவர்கள்மீது விதிக்கப்பட்டுள்ளதோ அவர்கள், தாங்கள் (கொல்லப்பட்டு) விழ வேண்டிய இடங்களுக்கு(த் தாமாக) வந்தே இருப்பார்கள்” உங்கள் நெஞ்சங்களிலுள்ளவற்றை அல்லாஹ் பரிசோதனை செய்வதற்காகவும், உங்கள் இதயங்களில் உள்ளவற்றைச் சுத்தப்படுத்தி விடுவதற்காகவும் (இவ்வாறு சம்பவிக்கும்படி செய்தான்), மேலும், (உங்கள்) நெஞ்சங்களிலுள்ளவற்றை அல்லாஹ் நன்கறிகிறவன்.
3:155
3:155 اِنَّ الَّذِيْنَ تَوَلَّوْا مِنْكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِۙ اِنَّمَا اسْتَزَلَّهُمُ الشَّيْطٰنُ بِبَعْضِ مَا كَسَبُوْا ‌ۚ وَلَقَدْ عَفَا اللّٰهُ عَنْهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் تَوَلَّوْا திரும்பினார்கள் مِنْكُمْ உங்களில் يَوْمَ நாள் الْتَقَى சந்தித்தார்(கள்) الْجَمْعٰنِۙ இரு கூட்டங்கள் اِنَّمَا சறுகச் செய்ததெல்லாம் اسْتَزَلَّهُمُ அவர்களை الشَّيْطٰنُ ஷைத்தான் بِبَعْضِ சிலதின் காரணமாக مَا எவை كَسَبُوْا ۚ செய்தார்கள் وَلَقَدْ عَفَا திட்டமாக மன்னித்தான் اللّٰهُ அல்லாஹ் عَنْهُمْ‌ؕ அவர்களை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் حَلِيْمٌ‏ மகா சகிப்பாளன்
3:155. இரு கூட்டத்தாரும் (போருக்காகச்) சந்தித்த அந்நாளில், உங்களிலிருந்து யார் திரும்பி விட்டர்களோ அவர்களை, அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக, ஷைத்தான் கால் தடுமாற வைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் - மெய்யாகவே அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பொறுமையுடையோனாகவும் இருக்கின்றான்.
3:155. (நம்பிக்கையாளர்களே!) இரு கூட்டத்தாரும் (உஹுது போருக்காகச்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் அதிலிருந்து வெருண்டோடினார்களோ, (அவர்கள் நிராகரிப்பின் காரணமாக ஓடவில்லை.) அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக ஷைத்தான்தான் அவர்களுடைய கால்களைச் சறுக்கும்படிச் செய்தான். எனினும், அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க பொறுமையுடையவன் ஆவான்.
3:155. இரு கூட்டத்தாரும் மோதிக் கொண்ட நாளில் உங்களில் யார் புறங்காட்டி ஓடினார்களோ, அவர்கள் செய்த சில தவறுகள் காரணமாகத்தான் ஷைத்தான் அவர்களை அடிசறுக்கச் செய்தான். எனினும் அல்லாஹ் அவர்களைப் பொறுத்தருளினான். திண்ணமாக, அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் சகிப்புத்தன்மையுடையவனுமாய் இருக்கின்றான்.
3:155. (விசுவாசங்கொண்டோரே!) இரு கூட்டத்தாரும் (போர்முனையில்) சந்தித்த நாளில் உங்களில் (அதிலிருந்து) திரும்பிவிட்டார்களே அவர்கள்- அவர்கள் சம்பாதித்துக்கொண்ட (தீவினைகள்) சிலவற்றின் காரணமாக - அவர்களை (அதிலிருந்து திரும்பி)ச் சறுகுமாறு செய்ததெல்லாம் ஷைத்தானே. திட்டமாக அல்லாஹ் அவர்(களின் குற்றங்)களை மன்னித்தும் விட்டான், நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், சகிப்புத் தன்மையுடையவன்.
3:156
3:156 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ كَفَرُوْا وَقَالُوْا لِاِخْوَانِهِمْ اِذَا ضَرَبُوْا فِى الْاَرْضِ اَوْ كَانُوْا غُزًّى لَّوْ كَانُوْا عِنْدَنَا مَا مَاتُوْا وَمَا قُتِلُوْا ۚ لِيَجْعَلَ اللّٰهُ ذٰ لِكَ حَسْرَةً فِىْ قُلُوْبِهِمْ‌ؕ وَاللّٰهُ يُحْىٖ وَيُمِيْتُ‌ؕ وَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَكُوْنُوْا ஆகாதீர்கள் كَالَّذِيْنَ போன்று/எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَقَالُوْا இன்னும் கூறினார்கள் لِاِخْوَانِهِمْ சகோதரர்களுக்கு/ அவர்களுடைய اِذَا ضَرَبُوْا அவர்கள் பயணித்தால் فِى الْاَرْضِ பூமியில் اَوْ அல்லது كَانُوْا இருந்தார்கள் غُزًّى போர் புரிபவர்களாக لَّوْ كَانُوْا அவர்கள் இருந்திருந்தால் عِنْدَنَا நம்மிடமே مَا مَاتُوْا அவர்கள் மரணித்திருக்க மாட்டார்கள் وَمَا قُتِلُوْا ۚ இன்னும் அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் لِيَجْعَلَ ஆக்குவதற்காக اللّٰهُ அல்லாஹ் ذٰ لِكَ அதை حَسْرَةً கைசேதமாக فِىْ قُلُوْبِهِمْ‌ؕ அவர்களுடைய உள்ளங்களில் وَاللّٰهُ அல்லாஹ் يُحْىٖ வாழவைக்கிறான் وَيُمِيْتُ‌ؕ இன்னும் மரணிக்க வைக்கிறான் وَ اللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்பவற்றை بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
3:156. முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்; பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்: “அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்” என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான்; மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.
3:156. நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். வெளியூருக்கோ அல்லது போருக்கோ சென்று (இறந்து)விட்ட தங்கள் சகோதரர்களைப் பற்றி ‘‘அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் இறந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்'' என்று (அந்நிராகரிப்பாளர்கள்) கூறுகின்றனர். அவர்களுடைய உள்ளங்களில் (என்றென்றுமே) இதை ஒரு கடும் துயரமாக்குவதற்காகவே இவ்வாறு (அவர்கள் நினைக்கும்படி) அல்லாஹ் தருகிறான். அல்லாஹ்வே உயிருடன் வாழச் செய்பவன்; மரணிக்கவும் வைப்பவன். நீங்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ் உற்று நோக்குகிறான்.
3:156. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிராகரிப்போரைப் போன்று பேசாதீர்கள்! அவர்கள், தங்களுடைய உற்றார் உறவினர் எப்போதேனும் பயணம் சென்றால், அல்லது போரில் கலந்து (ஏதேனும் துன்பத்திற்குள்ளாகி) விட்டால், “இவர்கள் எங்களுடன் இருந்திருந்தால் மரணமடைந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்” என்று கூறுகின்றார்கள். அவர்களுடைய இப்படிப்பட்ட பேச்சுகளின் காரணமாக, அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் கடுந்துயரத்தை ஏற்படுத்துகிறான். உண்மையில் உயிரைக் கொடுப்பவனும், உயிரைப் பறிப்பவனும் அல்லாஹ்வே ஆவான்; மேலும், நீங்கள் செய்கின்றவற்றையெல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
3:156. விசுவாசங்கொண்டோரே! நிராகரித்துக்கொண்டிருப்போரைப் போல் நீங்கள் ஆகிவிட வேண்டாம், அவர்கள், பூமியில் பிரயாணம் செய்தோ, அல்லது யுத்தம் செய்வோராகவோ இருந்து (இறந்து)விட்ட தங்கள் சகோதரர்களைப் பற்றி “அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால், அவர்கள் இறந்திருக்கவுமாட்டார்கள், கொல்லப்படடிருக்கவுமாட்டார்கள்” என்று கூறுகின்றனர், அவர்களுடைய இதயங்களில், (என்றென்றுமே) இதை ஒரு (கடும்) துக்கமாக்குவதற்காகவே இவ்வாறு (அவர்கள் நினைக்கும்படி) அல்லாஹ் செய்கின்றான், அல்லாஹ்வே உயிர் கொடுக்கின்றான், அவனே மரணிக்கச் செய்கின்றான், மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்க்கிறவன்.
3:157
3:157 وَلَٮِٕنْ قُتِلْتُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ‏
وَلَٮِٕنْ قُتِلْتُمْ நீங்கள் கொல்லப்பட்டால் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் اَوْ அல்லது مُتُّمْ நீங்கள் இறந்தாலும் لَمَغْفِرَةٌ திட்டமாக மன்னிப்பு مِّنَ இருந்து اللّٰهِ அல்லாஹ் وَرَحْمَةٌ இன்னும் கருணை خَيْرٌ மிகச் சிறந்தது مِّمَّا எதைவிட يَجْمَعُوْنَ‏ சேகரிக்கிறார்கள்
3:157. இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்.
3:157. அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும் (அதற்காக உங்களுக்கு) நிச்சயமாக அல்லாஹ்விடம் கிடைக்கும் மன்னிப்பும், அவனுடைய அன்பும் அவர்கள் சேகரித்து(க் குவித்து) வைத்திருக்கும் பொருள்களைவிட மிக மேலானதாகும்.
3:157. நீங்கள் அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டாலோ அல்லது மரணமடைந்தாலோ, அப்போது உங்களுக்கு வழங்கப்படவிருக்கும் அல்லாஹ்வின் மன்னிப்பும் கருணையும் இ(ந்நிராகரிப்ப)வர்கள் திரட்டி வைத்துக் கொண்டிருக்கின்ற அனைத்தையும்விட மிகச் சிறந்தவையாகும்.
3:157. அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும், அல்லது இறந்துவிட்டாலும் (அதற்காக) நிச்சயமாக அல்லாஹ்விடம் கிடைக்கும் மன்னிப்பும் (அவனுடைய) அருளும், அவர்கள் சேகரித்து வைத்திருப்பவைகளைவிட மிக மேலானதாகும்.
3:158
3:158 وَلَٮِٕنْ مُّتُّمْ اَوْ قُتِلْتُمْ لَا۟ اِلَى اللّٰهِ تُحْشَرُوْنَ‏
وَلَٮِٕنْ مُّتُّمْ நீங்கள் இறந்தால் اَوْ அல்லது قُتِلْتُمْ கொல்லப்பட்டீர்கள் لَا۟ திட்டமாக اِلَى பக்கம் اللّٰهِ அல்லாஹ் تُحْشَرُوْنَ‏ ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
3:158. நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடமே நீங்கள் ஒரு சேரக் கொண்டு வரப்படுவீர்கள்.
3:158. நீங்கள் (அல்லாஹ்வுடைய பாதையில்) இறந்துவிட்டாலும் அல்லது கொல்லப்பட்டாலும் (அதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்? ஏனெனில், கருணைமிக்க) அல்லாஹ்விடம்தான் நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்.
3:158. நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
3:158. நீங்கள் (அல்லாஹ்வுடைய பாதையில்) இறந்து விட்டாலும் அல்லது கொல்லப் பட்டாலும் (கூட) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமே ஒன்றுதிரட்டப்படுவீர்கள்.
3:159
3:159 فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏
فَبِمَا رَحْمَةٍ கருணையினால் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் لِنْتَ மென்மையானீர் لَهُمْ‌ۚ அவர்களுக்கு وَلَوْ كُنْتَ நீர் இருந்திருந்தால் فَظًّا கடுகடுப்பானவராக غَلِيْظَ கடுமையானவராக الْقَلْبِ உள்ளம் لَانْفَضُّوْا பிரிந்திருப்பார்கள் مِنْ இருந்து حَوْلِكَ‌ உம் சுற்றுப் புறம் فَاعْفُ ஆகவே மன்னிப்பீராக عَنْهُمْ அவர்களை وَاسْتَغْفِرْ இன்னும் மன்னிப்புத் தேடுவீராக لَهُمْ அவர்களுக்காக وَشَاوِرْهُمْ இன்னும் ஆலோசிப்பீராக / அவர்களுடன் فِى الْاَمْرِ‌ۚ காரியத்தில் فَاِذَا عَزَمْتَ (நீர்) உறுதிசெய்தால் فَتَوَكَّلْ நம்பிக்கை வைப்பீராக عَلَى اللّٰهِ‌ؕ அல்லாஹ் மீது اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُتَوَكِّلِيْنَ‏ நம்பிக்கை வைப்பவர்களை
3:159. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
3:159. (நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீர் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! மேலும், (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வருவீராக! (ஒரு விஷயத்தை செய்ய) நீர் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைப்பீராக. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கிறான்.
3:159. (நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளினாலேயே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பானவராகவும் வன்னெஞ்சராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லோரும் உம்மை விட்டு விலகிப் போயிருப்பார்கள். ஆகவே இவர்(களின் தவறு)களைப் பொறுத்துக் கொள்வீராக! மேலும் இவர்களுக்காக (இறைவனிடம்) மன்னிப்புக் கோருவீராக! மேலும் தீனுடைய பணிகளில் இவர்களையும் கலந்தாலோசிப்பீராக! (ஏதாவதொரு விஷயத்தில்) நீர் உறுதியான முடிவுக்கு வந்துவிட்டால், அப்பொழுது அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! திண்ணமாக, தன்னை முழுமையாகச் சார்ந்திருந்து செயல்படுவோரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:159. (நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (இரக்கமுள்ளவராக) நடந்து கொள்கிறீர், மேலும், சொல்லில் கடுகடுப்பானவராக இரக்கமற்ற இதயமுள்ளவராக நீர் இருந்திருப்பீரானால், உம்மிடமிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள், ஆகவே, அவர்(களின் பிழை)களை நீர் மன்னித்து, (அல்லாஹ்விடம்) அவர்களுக்காக மன்னிக்க கோருவீராக! மேலும் (யுத்தம், சமாதானம் முதலிய மற்ற) காரியத்தில் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக! (யாதொரு காரியத்தை) நீர் முடிவு செய்தால், அல்லாஹ்வின் மீது நீர் (உம்முடைய காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பீராக! (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (தம் காரியங்களை அவனிடம் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான்.
3:160
3:160 اِنْ يَّنْصُرْكُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَـكُمْ‌ۚ وَاِنْ يَّخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِىْ يَنْصُرُكُمْ مِّنْۢ بَعْدِهٖ ‌ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏
اِنْ يَّنْصُرْ உதவினால் كُمُ உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் فَلَا அறவே இல்லை غَالِبَ மிகைப்பவர் لَـكُمْ‌ۚ உங்களை وَاِنْ يَّخْذُلْكُمْ அவன் உங்களை கைவிட்டால் فَمَنْ ذَا யார் / அவர் الَّذِىْ எவர் يَنْصُرُكُمْ உங்களுக்கு உதவுவார் مِّنْۢ بَعْدِهٖ ؕ அதற்குப் பின்னர் وَعَلَى மீது اللّٰهِ அல்லாஹ் فَلْيَتَوَكَّلِ நம்பிக்கை வைக்கவும் الْمُؤْمِنُوْنَ‏ நம்பிக்கையாளர்கள்
3:160. (முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.
3:160. (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர் எவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்விடமே நம்பிக்கையாளர்கள் பொறுப்பை ஒப்படைக்கவும்.
3:160. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாகில், பிறகு எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது! மேலும் உங்களுக்கு அவன் உதவி செய்யாவிட்டாலோ, அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர் யார்? எனவே வாய்மையான இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்வை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டும்.
3:160. (விசுவாசிகளே!) அல்லாஹ் உங்களுக்கு உதவிசெய்தால், உங்களை மிகைப்பவர் எவருமில்லை; உங்களுக்கு அவன் (உதவிசெய்யாது) விட்டுவிட்டாலோ, அதற்குப் பின்னர், உங்களுக்கு உதவி செய்பவர் யார்? இன்னும் அல்லாஹ்வின் மீதே விசுவாசிகள் (தங்களின் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கவும்.
3:161
3:161 وَمَا كَانَ لِنَبِىٍّ اَنْ يَّغُلَّ‌ؕ وَمَنْ يَّغْلُلْ يَاْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيٰمَةِ‌ ۚ ثُمَّ تُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
وَمَا كَانَ தகுதி இல்லை لِنَبِىٍّ ஒரு நபிக்கு اَنْ يَّغُلَّ‌ؕ மோசம் செய்வது وَمَنْ எவர் يَّغْلُلْ மோசம் செய்வாரோ يَاْتِ வருவார் بِمَا எதைக் கொண்டு غَلَّ மோசம் செய்தார் يَوْمَ الْقِيٰمَةِ‌ ۚ மறுமை நாளில் ثُمَّ பிறகு تُوَفّٰى கொடுக்கப்படும் كُلُّ ஒவ்வொரு نَفْسٍ ஆன்மா مَّا எதை كَسَبَتْ செய்தது وَهُمْ இன்னும் அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
3:161. எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
3:161. மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசம் செய்தால் அவர் அந்த மோசம் செய்த பொருளையும் மறுமையில் (தம்முடன்) கொண்டுவர வேண்டியதாகும். பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்கு(ரிய பலனை) முழுமையாக அளிக்கப்படும். அவை அநீதி செய்யப்பட மாட்டாது.
3:161. வஞ்சனை செய்தல் எந்த ஒரு நபிக்குரிய செயலாகவும் இருக்க முடியாது. எனவே எவர் வஞ்சனை செய்கின்றாரோ அவர் மறுமைநாளில் தான் செய்த வஞ்சனையுடன்தான் வருவார். பின்னர் ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் சம்பாதித்ததற்கான கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். அவர்களில் யார் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.
3:161. மேலும், (போரில் கிடைத்த பொருட்களில்) மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுமானதன்று; எவரேனும் மோசம் செய்தால் அவர், அந்த மோசம் செய்ததுடன் மறுமை நாளில் வருவார்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்த வினைக்கு(ரிய பயனை)ப் பூரணமாக அளிக்கப்படும். (அவை செய்த நன்மையைக் குறைத்தோ, தீமையை அதிகரித்தோ எவ்வகையிலும்) அவர்கள் அநீதி செய்யப்படவுமாட்டார்கள்.
3:162
3:162 اَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللّٰهِ كَمَنْۢ بَآءَ بِسَخَطٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰٮهُ جَهَنَّمُ‌ؕ وَ بِئْسَ الْمَصِيْرُ‏
اَفَمَنِ اتَّبَعَ பின்பற்றியவர் رِضْوَانَ விருப்பத்தை اللّٰهِ அல்லாஹ்வின் كَمَنْۢ بَآءَ திரும்பியவனைப் போல் بِسَخَطٍ கோபத்துடன் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَمَاْوٰٮهُ இன்னும் தங்குமிடம்/ அவனுடைய جَهَنَّمُ‌ؕ நரகம் وَ بِئْسَ இன்னும் கெட்டுவிட்டது الْمَصِيْرُ‏ மீளுமிடம்
3:162. அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின் பற்றி நடப்போர், அல்லாஹ்வின் கோபத்தைத் தம்மேல் வரவழைத்துக் கொண்டவர் போல் ஆவாரா? (அல்ல - கோபத்தை வரவழைத்துக் கொண்டோருடைய) அவனது இருப்பிடம் நரகமேயாகும்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டதுமாகும்.
3:162. அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றுபவர் அல்லாஹ்வின் கோபத்தில் சிக்கியவனைப் போல் ஆவாரா? (அல்ல! கோபத்தில் சிக்கிய) அவனின் தங்குமிடம் நரகமாகும். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்.
3:162. எப்பொழுதுமே அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றி நடக்கும் ஒருவர் அல்லாஹ்வின் சினத்துக்கு ஆளானவரைப் போலவும், மிகவும் கெட்ட இருப்பிடமான நரகத்தைப் புகலிடமாகப் பெற்றிருப்பவரைப் போலவும் செயல்படுவாரா?
3:162. அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பின்பற்றியவர் அல்லாஹ்வின் கோபத்தைக் கொண்டு மீண்டவரைப் போன்றவரா? (அன்று! கோபத்தில் சிக்கிய) அவருடைய ஒதுங்குமிடமோ நரகமாகும், மேலும், சேருமிடத்தில் (அது) மிகக் கெட்டது.
3:163
3:163 هُمْ دَرَجٰتٌ عِنْدَ اللّٰهِ ‌ؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا يَعْمَلُوْنَ‏
هُمْ அவர்கள் دَرَجٰتٌ (பல) தரங்கள் عِنْدَ இடம் اللّٰهِ ؕ அல்லாஹ் وَاللّٰهُ அல்லாஹ் بَصِيْرٌۢ உற்று நோக்குபவன் بِمَا எதை يَعْمَلُوْنَ‏ செய்கிறார்கள்
3:163. அல்லாஹ்விடத்தில் அவர்களுக்குப் பல நிலைகள் உள்ளன - இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.
3:163. (அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றிய) அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல (உயர்) பதவிகளை அடைகின்றனர். அல்லாஹ் அவர்களின் செய்கைகளை உற்று நோக்குகிறான்.
3:163. அல்லாஹ்விடம் இவ்விரு வகை மனிதர்களுக்கும் இடையில் வேறுபட்ட படித்தரங்கள் இருக்கின்றன. மேலும், அல்லாஹ் இவர்கள் அனைவரின் செயல்களையும் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான்.
3:163. (அல்லாஹ்வின் பொருத்தத்தைப்பின்பற்றிய) அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல படித்தரங்களில் உள்ளனர், இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்க்கிறவன்.
3:164
3:164 لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ  ۚ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
لَقَدْ مَنَّ திட்டமாக அருள்புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَى மீது الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்கள் اِذْ بَعَثَ (ஏ) அனுப்பினான் فِيْهِمْ அவர்களுக்கு மத்தியில் رَسُوْلًا ஒரு தூதரை مِّنْ اَنْفُسِهِمْ அவர்களில் இருந்தே يَتْلُوْا ஓதுகிறார் عَلَيْهِمْ அவர்கள் மீது اٰيٰتِهٖ வசனங்களை/ அவனுடைய وَيُزَكِّيْهِمْ இன்னும் பரிசுத்தப்படுத்து கிறார்/அவர்களை وَيُعَلِّمُهُمُ இன்னும் கற்பிக்கிறார் / அவர்களுக்கு الْكِتٰبَ வேதத்தை وَالْحِكْمَةَ  ۚ இன்னும் ஞானம் وَاِنْ நிச்சயமாக كَانُوْا இருந்தனர் مِنْ قَبْلُ (இதற்கு) முன்னர் لَفِىْ ضَلٰلٍ வழிகேட்டில்தான் مُّبِيْنٍ‏ பகிரங்கமானது
3:164. நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.
3:164. அல்லாஹ், நம்பிக்கையாளர்களின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கிறான். அவர்களுக்காக ஒரு தூதரை (அதுவும்) அவர்களில் இருந்தே அனுப்பினான். அவர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களை பரிசுத்தமாக்கியும் வைக்கிறார். மேலும், அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர்.
3:164. திண்ணமாக, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு மகத்தான பேருதவி புரிந்துள்ளான். அதாவது, அவர்களிடையே தன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பவரும், அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துபவரும், அவர்களுக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் கற்றுக்கொடுப்பவருமான ஒரு தூதரை அவர்களிலிருந்தே அவன் தோற்றுவித்தான். ஆனால், அவர்களோ இதற்கு முன் அப்பட்டமான வழிகேட்டில்தான் இருந்தார்கள்.
3:164. அல்லாஹ் விசுவாசிகள் மீது – அவர்களில் ஒரு தூதரை, (அதுவும்) அவர்களிலிருந்தே அவன் அனுப்பிவைத்த சமயத்தில் திட்டமாக பேரருள் செய்துவிட்டான். அவர், அவர்களுக்கு அவனுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களைப் (பாவத்திலிருந்து) பரிசுத்தமாக்கியும் வைக்கின்றார், அவர்களுக்கு வேதத்தையும், (குர் ஆனையும்) ஞானத்தையும், (ஸுன்னத்தையும்) கற்றுக் கொடுக்கின்றார், நிச்சயமாக அவர்கள் இதற்குமுன் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.
3:165
3:165 اَوَلَمَّاۤ اَصَابَتْكُمْ مُّصِيْبَةٌ قَدْ اَصَبْتُمْ مِّثْلَيْهَا ۙ قُلْتُمْ اَنّٰى هٰذَا‌ؕ قُلْ هُوَ مِنْ عِنْدِ اَنْفُسِكُمْ ‌ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
اَوَلَمَّاۤ இன்னும் / போது اَصَابَتْكُمْ ஏற்பட்டது/உங்களுக்கு مُّصِيْبَةٌ ஒரு சோதனை قَدْ اَصَبْتُمْ திட்டமாக அடைந்தீர்கள் مِّثْلَيْهَا ۙ அது போன்று இரு மடங்கை قُلْتُمْ கூறினீர்கள் اَنّٰى எங்கிருந்து هٰذَا‌ؕ இது قُلْ கூறுவீராக هُوَ அது مِنْ عِنْدِ اَنْفُسِكُمْ ؕ உங்களிடமிருந்துதான் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَلٰى மீது كُلِّ எல்லாம் شَىْءٍ பொருள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
3:165. இன்னும் உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம் வந்துற்றபோது, நீங்கள் (பத்ரில்) அவர்களுக்கு இது போன்று இருமடங்குத் துன்பம் உண்டு பண்ணியிருந்த போதிலும், “இது எப்படி வந்தது?” என்று கூறுகிறிர்கள்; (நபியே!) நீர் கூறும்: இது (வந்தது) உங்களிடமிருந்தேதான் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்,”
3:165. (நம்பிக்கையாளர்களே! ‘‘பத்ரு' போரில்) இதைவிட இருமடங்கு சிரமத்தை நீங்கள் அவர்களுக்கு உண்டு பண்ணியிருந்தும் இந்த சிரமம் (உஹுத் போரில்) உங்களுக்கு ஏற்பட்ட சமயத்தில் இது எப்படி (யாரால்) ஏற்பட்டது? என நீங்கள் கேட்(க ஆரம்பித்துவிட்)டீர்கள். (நீங்கள் செய்த தவறின் காரணமாக) உங்களால்தான் இது ஏற்பட்டதென்றும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் என்றும் (நபியே!) கூறுவீராக.
3:165. (என்னே உங்கள் நிலை!) உங்களுக்கு ஏதேனும் துன்பம் வரும்போது, “அது எங்கிருந்து வந்தது?” என்று கேட்கிறீர்கள். (ஆனால் பத்ருப் போரில்) இது போன்ற இரு மடங்கு துன்பம் உங்கள் கைகளால் எதிரிகளுக்கு ஏற்பட்டிருந்ததே! (நபியே!) நீர் அவர்களுக்குக் கூறும்: “இத்துன்பம் உங்களால்தான் வந்தது. திண்ணமாக, அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.”
3:165. இன்னும், உங்களுக்கு (உஹதுப் போரில்) ஒரு துன்பம் ஏற்பட்டபோது நிச்சயமாக நீங்கள் (பத்ருப்போரில்) இதுபோன்று இருமடங்குத் துன்பத்தை ஏற்படுத்தி விட்டிருந்தீர்கள், (இவ்வாறு செய்துவிட்டு) இது எவ்வாறு (யாரால்) ஏற்பட்டது?” என நீங்கள் கேட்கிறீர்களா? “நீங்கள் நம் தூதருக்கு மாறு செய்ததால்) உங்களிடமிருந்தேதான் இது ஏற்பட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
3:166
3:166 وَمَاۤ اَصَابَكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِ فَبِاِذْنِ اللّٰهِ وَلِيَعْلَمَ الْمُؤْمِنِيْنَۙ‏
وَمَاۤ எது اَصَابَكُمْ ஏற்பட்டது/உங்களுக்கு يَوْمَ நாளில் الْتَقَى சந்தித்தார்(கள்) الْجَمْعٰنِ இரு கூட்டங்கள் فَبِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِ அல்லாஹ்வின் وَلِيَعْلَمَ இன்னும் அறிவதற்காக الْمُؤْمِنِيْنَۙ‏ நம்பிக்கையாளர்களை
3:166. மேலும், (நீங்களும் முஷ்ரிக்குகளும் ஆகிய) இரு கூட்டத்தினரும் சந்தித்த நாளையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தான் (ஏற்பட்டன; இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின்களை (சோதித்து) அறிவதற்காகவேயாம்.
3:166. இரு படைகளும் சந்தித்த அன்று உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அல்லாஹ்வின் கட்டளைப்படியேதான் (ஏற்பட்டது). உண்மை நம்பிக்கையாளர்களையும், நயவஞ்சகர்களையும் பிரித்தறிவிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்).
3:166. இரு சாராரும் மோதிக் கொண்ட நாளில் உங்களுக்கு வந்த துன்பங்கள் அல்லாஹ்வின் நாட்டத்தினால்தான் ஏற்பட்டன.
3:166. இன்னும் இரு படைகளும் சந்தித்த நாளன்று, உங்களுக்கு ஏற்பட்டவை(களான துன்பங்)கள் அல்லாஹ்வின் கட்டளைப்படியேதான் (ஏற்பட்டது) இன்னும், உண்மை விசுவாசிகளை(ப் பிரித்து) அறிவித்து விடு)வதற்காகவே (இவ்வாறு செய்)தான்.
3:167
3:167 ‌وَلِيَعْلَمَ الَّذِيْنَ نَافَقُوْا  ۖۚ وَقِيْلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَوِ ادْفَعُوْا ‌ۚ قَالُوْا لَوْ نَعْلَمُ قِتَالًا لَّا تَّبَعْنٰكُمْ‌ؕ هُمْ لِلْكُفْرِ يَوْمَٮِٕذٍ اَقْرَبُ مِنْهُمْ لِلْاِيْمَانِ‌ۚ يَقُوْلُوْنَ بِاَفْوَاهِهِمْ مَّا لَيْسَ فِىْ قُلُوْبِهِمْ‌ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يَكْتُمُوْنَ‌ۚ‏
وَلِيَعْلَمَ இன்னும் அறிவதற்காக الَّذِيْنَ எவர்கள் نَافَقُوْا  ۖۚ நயவஞ்சகம்செய்தனர் وَقِيْلَ இன்னும் கூறப்பட்டது لَهُمْ அவர்களுக்கு تَعَالَوْا வாருங்கள் قَاتِلُوْا போர் புரியுங்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் اَوِ ادْفَعُوْا ۚ அவர்கள் தடுங்கள் قَالُوْا கூறினார்கள் لَوْ نَعْلَمُ நாங்கள் அறிந்திருந்தால் قِتَالًا போரை لَّا تَّبَعْنٰكُمْ‌ؕ திட்டமாக பின்பற்றி இருப்போம் / உங்களை هُمْ அவர்கள் لِلْكُفْرِ நிராகரிப்புக்கு يَوْمَٮِٕذٍ அன்றைய தினம் اَقْرَبُ நெருக்கமானவர்(கள்) مِنْهُمْ அவர்களில் لِلْاِيْمَانِ‌ۚ நம்பிக்கைக்கு يَقُوْلُوْنَ கூறுகிறார்கள் بِاَفْوَاهِهِمْ வாய்களால்/தங்கள் مَّا எது لَيْسَ இல்லை فِىْ قُلُوْبِهِمْ‌ؕ தங்கள் உள்ளங்களில் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا எதை يَكْتُمُوْنَ‌ۚ‏ மறைக்கின்றனர்
3:167. இன்னும் (முனாஃபிக் தனம் செய்யும்) நயவஞ்சகரை(ப் பிரித்து) அறிவதற்கும் தான்; அவர்களிடம் கூறப்பட்டது: “வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள் அல்லது (பகைவர்கள் அணுகாதவாறு) தடுத்து விடுங்கள்,” (அப்போது) அவர்கள் சொன்னார்கள்: “நாங்கள் போரைப் பற்றி அறிந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம்.” அன்றையதினம் அவர்கள் ஈமானைவிட குஃப்ரின் பக்கமே அதிகம் நெருங்கியிருந்தார்கள்; தம் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் வாய்களினால் கூறினர்; அவர்கள் (தம் உள்ளங்களில்) மறைத்து வைப்பதையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.
3:167. (நம்பிக்கையாளர்களே! அந்நயவஞ்சகர்களை நோக்கி நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் போர்புரிய வாருங்கள் அல்லது அ(ந்த நிராகரிப்ப)வர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டதற்கு ‘‘(இதை) நாங்கள் போர் என்று கருதியிருந்தால் நிச்சயமாக உங்களைத் தொடர்ந்(தே வந்)திருப்போம்'' என்று அவர்கள் கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையைவிட நிராகரிப்புக்கே மிகவும் நெருங்கி இருந்தார்கள். தங்கள் மனதில் இல்லாதவற்றையே அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள். அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிவான்.
3:167. மேலும் உங்களில் நம்பிக்கையாளர்கள் யார், நயவஞ்சகர்கள் யார் என்று அல்லாஹ் இனங்கண்டு கொள்வதற்காகவும்தான் (ஏற்பட்டன). “வாருங்கள், இறைவழியில் போர்புரியுங்கள்; அல்லது குறைந்த பட்சம் (உங்களின் நகரத்தையாவது) தற்காத்துக் கொள்ளுங்கள்” என்று இந்த நயவஞ்சகர்களிடம் கூறப்பட்டது. அதற்கு, “இன்று போர் நடைபெறும் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால் நாங்களும் உங்களை நிச்சயம் பின்தொடர்ந்து வந்திருப்போம்” என்று அவர்கள் கூறினார்கள். இவ்வாறு அவர்கள் கூறிய நேரத்தில் இறைநம்பிக்கையைவிட நிராகரிப்புடன் (குஃப்ருடன்) அவர்கள் மிக நெருக்கமாய் இருந்தார்கள். தம் உள்ளங்களில் இல்லாதவற்றை நாவினால் கூறுகின்றார்கள்; மேலும், அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.
3:167. இன்னும் முனாஃபிக்குகளாக (வேஷதாரிகளாக) ஆகி விட்டார்களே அவர்களையும் (பிரித்து) அறி(வித்துவிடு)வதற்காகத்தான் (இவ்வாறு செய்தான். விசுவாசிகளே! அந்த முனாஃபிக்குகளிடம், நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிய வாருங்கள், அல்லது (அந்த நிராகரிப்பவர்களை) நீங்கள் தடுத்துக்கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டதற்கு, “யுத்தம் பற்றியதுதான் என்று இதனை) நாங்கள் அறிந்திருந்தால் உங்களைத் தொடர்ந்தே வந்திருப்போம், என்று அவர்கள் கூறினார்கள், அன்றையத்தினம் அவர்கள், விசுவாசத்தைவிட, நிராகரிப்புக்கே மிகவும் சமீபத்திலிருந்தார்கள், தங்கள் இதயங்களில் இல்லாதவைகளையே அவர்கள் தங்கள் வாய்களால் கூறுகிறார்கள், மேலும், அவர்கள் (தங்கள் இதயங்களில்) மறைத்துக்கொண்டிருப்பதை அல்லாஹ் மிக அறிபவன்.
3:168
3:168 اَلَّذِيْنَ قَالُوْا لِاِخْوَانِهِمْ وَقَعَدُوْا لَوْ اَطَاعُوْنَا مَا قُتِلُوْا ‌ؕ قُلْ فَادْرَءُوْا عَنْ اَنْفُسِكُمُ الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
اَلَّذِيْنَ எவர்கள் قَالُوْا கூறினார்கள் لِاِخْوَانِهِمْ தங்கள் சகோதரர்களுக்கு وَقَعَدُوْا இன்னும் உட்கார்ந்தார்கள் لَوْ ஆல் اَطَاعُوْنَا அவர்கள் எங்களுக்கு கீழ்ப்படிந்திருந்து مَا قُتِلُوْا ؕ அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் قُلْ கூறுவீராக فَادْرَءُوْا தடுங்கள் عَنْ விட்டு اَنْفُسِكُمُ உங்களை الْمَوْتَ மரணத்தை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
3:168. (போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி: “அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறுகிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரணம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள் (பார்ப்போம் என்று).
3:168. இவர்கள் (தங்கள் வீட்டில்) இருந்து கொண்டே (போரில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி ‘‘அவர்களும் எங்களைப் பின்பற்றி இருந்தால் (போருக்குச் சென்று இப்படி) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்'' என்றும் கூறினார்கள். (ஆகவே, நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அவர்களை என்ன, முதலில்!) நீங்கள் உங்களை விட்டு மரணத்தைத் தடுத்துப் பாருங்கள்!''
3:168. இவர்கள் எத்தகையவர்களென்றால், தாம் போரில் கலந்து கொள்ளாததுடன் (அதில் பங்கு பெற்று கொல்லப்பட்ட தம் சகோதரர்களைப் பற்றி) “அவர்கள் எங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருந்தால், கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்றும் கூறினார்கள். (நபியே!) நீர் அவர்களிடம் கூறும்: “நீங்கள் வாய்மையுடையோராயின், மரணம் வரும்போது உங்களை விட்டு அதனைத் தடுத்து விடுங்கள் பார்ப்போம்!”
3:168. அத்தகையோர், (யுத்தத்திற்குச் செல்லாமல் தங்கள் வீட்டில்) இருந்து கொண்டே (யுத்தத்தில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி “அவர்களும் எங்களுக்கு கீழப்படிந்திருந்தால் (யுத்தத்திற்குச் சென்று இவ்வாறு) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்றும் கூறினார்கள். (ஆகவே) “நீங்கள் உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாகயிருந்தால், (அவர்களிடம்) நீங்கள் உங்களுக்கே மரணம் அணுகாதவாறு தடுத்துவிடுங்கள் (பார்ப்போம்) என்று (நபியே!) நீர் கூறுவீராக!
3:169
3:169 وَلَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتًا ‌ؕ بَلْ اَحْيَآءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَۙ‏
وَلَا تَحْسَبَنَّ எண்ணாதீர் الَّذِيْنَ எவர்கள் قُتِلُوْا கொல்லப்பட்டார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் اَمْوَاتًا ؕ இறந்தவர்களாக بَلْ மாறாக اَحْيَآءٌ உயிருள்ளவர்கள் عِنْدَ இடம் رَبِّهِمْ இறைவன்/தங்கள் يُرْزَقُوْنَۙ‏ உணவளிக்கப்படுகிறார்கள்
3:169. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.
3:169. (நபியே!) அல்லாஹ்வின் பாதையில் (போர்செய்து) வெட்டப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என நீர் ஒருபோதும் எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தங்கள் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கிறார்கள். (மேலும்,) அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது.
3:169. இறைவழியில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களாக ஒருபோதும் கருதாதீர்! உண்மையில் அவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள். அவர்கள் தம் இறைவனிடமிருந்து தங்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
3:169. (விசுவாசங்கொண்டோரே!) அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்து) கொல்லப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நீங்கள் நிச்சயமாக எண்ண வேண்டாம், மாறாக அவர்கள் தங்களின் இரட்சகனிடத்தில் உயிருள்ளோராக இருக்கிறார்கள், அவனால் அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.
3:170
3:170 فَرِحِيْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۙ وَيَسْتَبْشِرُوْنَ بِالَّذِيْنَ لَمْ يَلْحَقُوْا بِهِمْ مِّنْ خَلْفِهِمْۙ اَ لَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‌ۘ‏
فَرِحِيْنَ மகிழ்ச்சியடைந்தவர்கள் بِمَاۤ எதைக் கொண்டு اٰتٰٮهُمُ கொடுத்தான்/அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் مِنْ فَضْلِهٖ ۙ தன் அருளால் وَيَسْتَبْشِرُوْنَ இன்னும் மகிழ்ச்சியடைவார்கள் بِالَّذِيْنَ எவர்களைக் கொண்டு لَمْ يَلْحَقُوْا அவர்கள் வந்துசேரவில்லை بِهِمْ அவர்களுடன் مِّنْ خَلْفِهِمْۙ அவர்களுக்குப் பின்னால் اَ لَّا خَوْفٌ ஒரு பயமும் இல்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ‌ۘ‏ இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
3:170. தன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்; மேலும் (போரில் ஈடுபட்டிருந்த தன் முஃமினான சகோதரர்களில் மரணத்தில்) தம்முடன் சேராமல் (இவ்வுலகில் உயிருடன்) இருப்போரைப் பற்றி “அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” என்று கூறி மகிழ்வடைகிறார்கள்.
3:170. அல்லாஹ் தன் அருளால் (வீரமரணம் எய்திய) அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைகிறார்கள். இன்னும், தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவர்களைப் பற்றி ‘‘அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்'' என்று மகிழ்ச்சியடைகின்றனர்.
3:170. அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார்கள். தங்களுக்குப் பின் உலகில் வாழ்ந்து வருகின்ற இன்னும் தங்களுடன் வந்து சேராமல் இருக்கின்ற இறைநம்பிக்கையாளர்கள் குறித்து, அவர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள் என்று இவர்கள் மனநிறைவு பெறுகின்றார்கள்.
3:170. அல்லாஹ் தன் பேரருளால் அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைந்தவர்களாக இருக்கின்றார்கள், (மேலும், யுத்தத்தில் இறக்காது) தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவர்களைப் பற்றி, “அவர்களுக்கு எவ்விதப் பயமும் இல்லை, அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள்” என்றும் மகிழ்ச்சியடைந்து கொண்டிருப்பார்கள்.
3:171
3:171 يَسْتَبْشِرُوْنَ بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍۙ وَّاَنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُؤْمِنِيْنَ  ۛۚ‏
يَسْتَبْشِرُوْنَ மகிழ்ச்சியடைவார்கள் بِنِعْمَةٍ அருட்கொடையைக் கொண்டு مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து وَفَضْلٍۙ இன்னும் அருள் وَّاَنَّ اللّٰهَ இன்னும் நிச்சயமாக அல்லாஹ் لَا يُضِيْعُ வீணாக்க மாட்டான் اَجْرَ கூலியை الْمُؤْمِنِيْنَ  ۛۚ‏ நம்பிக்கையாளர்களின்
3:171. அல்லாஹ்விடமிருந்து தாங்கள் பெற்ற நிஃமத்துகள் (நற்பேறுகள்) பற்றியும், மேன்மையைப் பற்றியும் நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்குரிய நற்கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடுவதில்லை என்பதைப் பற்றியும் மகிழ்வடைந்தோராய் இருக்கின்றார்கள்.
3:171. அல்லாஹ்வி(ன் அருளி)னால் தாங்கள் அடைந்த பாக்கியத்தைப் பற்றியும், மேன்மையைப் பற்றியும் ‘‘நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் (நற்)கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடவில்லை'' என்றும் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்.
3:171. அல்லாஹ் அளித்த கொடையினாலும், அருளினாலும் அவர்கள் அகமகிழ்வுடன் இருக்கின்றார்கள். இறைநம்பிக்கை கொண்டோரின் நற்கூலி வீணாகி விடுவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்து விட்டிருக்கிறது.
3:171. அல்லாஹ்விடமிருந்துள்ள அருட்கொடையைக் கொண்டும், பேரருளைக் கொண்டும்; நிச்சயமாக அல்லாஹ் விசுவாசிகளின் (நற்) கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கமாட்டான் என்பதைப் பற்றியும் மகிழ்ச்சியடைந்து கொண்டிருப்பார்கள்.
3:172
3:172 اَلَّذِيْنَ اسْتَجَابُوْا لِلّٰهِ وَالرَّسُوْلِ مِنْۢ بَعْدِ مَاۤ اَصَابَهُمُ الْقَرْحُ  ۛؕ لِلَّذِيْنَ اَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا اَجْرٌ عَظِيْمٌ‌ۚ‏
اَلَّذِيْنَ எவர்கள் اسْتَجَابُوْا பதிலளித்தார்கள் لِلّٰهِ அல்லாஹ்விற்கு وَالرَّسُوْلِ இன்னும் தூதர் مِنْۢ இருந்து بَعْدِ பின்னர் مَاۤ اَصَابَهُمُ அவர்களுக்கு ஏற்பட்டது الْقَرْحُ  ۛؕ காயம் لِلَّذِيْنَ எவர்களுக்கு اَحْسَنُوْا நல்லறம் புரிந்தார்கள் مِنْهُمْ அவர்களில் وَاتَّقَوْا இன்னும் அஞ்சினார்கள் اَجْرٌ கூலி عَظِيْمٌ‌ۚ‏ மகத்தானது
3:172. அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுக்கு(ப் போரில்) காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடையவும், (அவனுடைய) ரஸூலுடையவும் அழைப்பை ஏற்(று மீண்டும் போருக்குச் சென்)றனர்;அத்தகையோரில் நின்றும் யார் அழகானவற்றைச் செய்து, இன்னும் பாவத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மகத்தான நற்கூலியிருக்கிறது.
3:172. அவர்கள் எத்தகையவர்கள் என்றால், காயமடைந்த பின்னரும் அல்லாஹ்வுடைய, (அவனுடைய) தூதருடைய அழைப்பை ஏற்று (போருக்கு)ச் சென்றனர். (அல்லாஹ்வுக்குப்) பயந்து நன்மை செய்த இவர்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு.
3:172. (அவர்கள் எத்தகைய நம்பிக்கையாளர்கள் என்றால்) அவர்கள் (போரில்) தமக்குக் காயங்கள் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வு(டைய அழைப்பு)க்கும் தூதரு(டைய அழைப்பு)க்கும் மறுமொழியளித்தார்கள். அவர்களில் யார் நற்செயல் புரிந்து பாவங்களிலிருந்து விலகி வாழ்கின்றார்களோ அவர்களுக்கு மாபெரும் கூலியுண்டு.
3:172. அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுக்குக் காயம் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடைய மற்றும் தூதருடைய அழைப்பை ஏற்றனர், (ஆகவே யுத்தத்திற்குச் சென்றனர்) இவர்களில் யார் அழகானவற்றைச் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து (பாவத்திலிருந்து தங்களைக் காத்துக்) கொண்டார்களோ அத்தகையவர்களுக்கு மகத்தான (நற்) கூலியுண்டு.
3:173
3:173 اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَـكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًا  ۖ وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ‏
اَلَّذِيْنَ எவர்கள் قَالَ கூறினார்(கள்) لَهُمُ அவர்களுக்கு النَّاسُ மக்கள் اِنَّ நிச்சயமாக النَّاسَ மக்கள் قَدْ جَمَعُوْا உறுதியாக ஒன்று சேர்த்துள்ளனர் لَـكُمْ உங்களுக்கு فَاخْشَوْهُمْ ஆகவே பயப்படுங்கள்/ அவர்களைப் فَزَادَهُمْ அதிகப்படுத்தியது/ அவர்களுக்கு اِيْمَانًا  ۖ நம்பிக்கையை وَّقَالُوْا இன்னும் கூறினார்கள் حَسْبُنَا போதுமானவன்/ எங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் وَنِعْمَ இன்னும் சிறந்து விட்டான் الْوَكِيْلُ‏ பொறுப்பாளன்
3:173. மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்.
3:173. (சில) மக்கள் அவர்களிடம் (வந்து) ‘‘உங்களுக்கு எதிராக (போர்புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர் (ஆதலால்,) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. மேலும், ‘‘அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவன் (பாதுகாவலன்)'' என்றும் கூறினார்கள்.
3:173. “உங்களுக்கு எதிராகப் பகைவர்கள் (பெரும்படையாகத்) திரண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு அஞ்சுங்கள்!” என்று மக்கள் அவர்களிடம் கூறினார்கள். அதனைக் கேட்டு அவர்களின் இறைநம்பிக்கை இன்னும் அதிகமாகிவிட்டது. அதுமட்டுமல்ல, “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்” என்றும் கூறினார்கள்.
3:173. அவர்கள் எத்தகையோரென்றால்,(ஒருசில) மனிதர்கள் அவர்களிடம் (வந்து) உங்களுக்கு விரோதமாக (யுத்தம் புரிய) நிச்சயமாக மனிதர்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றனர்; ஆதலால், அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறினர். அப்போது இ(க்)கூற்றானது அவர்களுக்கு(ப் பயம் ஏற்படுத்துவதற்கு பதிலாக) விசுவாசத்தை (-ஈமானை) அதிகப்படுத்தியது. மேலும், "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன், பாதுகாவலரில் அவன் மிக்க நல்லவன்” என்றும் அவர்கள் கூறினார்கள்.
3:174
3:174 فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوْٓءٌ ۙ وَّاتَّبَعُوْا رِضْوَانَ اللّٰهِ ‌ؕ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَظِيْمٍ‏
فَانْقَلَبُوْا திரும்பினார்கள் بِنِعْمَةٍ அருட்கொடையுடன் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَفَضْلٍ இன்னும் அருள் لَّمْ يَمْسَسْهُمْ அணுகவில்லை / அவர்களை سُوْٓءٌ ۙ ஒரு தீங்கு وَّاتَّبَعُوْا இன்னும் பின்பற்றினார்கள் رِضْوَانَ விருப்பத்தை اللّٰهِ ؕ அல்லாஹ்வின் وَاللّٰهُ அல்லாஹ் ذُوْ فَضْلٍ அருளுடையவன் عَظِيْمٍ‏ மகத்தானது
3:174. இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.
3:174. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பாக்கியத்தையும் பெற்றுத் திரும்பி வந்தார்கள். அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை. (ஏனென்றால்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தையே பின்பற்றிச் சென்றார்கள். (பொருளை விரும்பிச் செல்லவில்லை.) அல்லாஹ்வோ மகத்தான கொடையுடையவன். (ஆகவே, பொருளையும் அவர்களுக்கு அளித்தான்.)
3:174. இறுதியில் அவர்கள் அல்லாஹ்வின் பெருங் கொடைகளையும் அருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. இன்னும் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தின்படி நடந்தார்கள் (எனும் சிறப்பும் அவர்களுக்குக் கிடைத்தது). மேலும், அல்லாஹ் மகத்தான கொடையாளனாக இருக்கின்றான்.
3:174. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பேரருளையும் பெற்றுத்திரும்பினார்கள், அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை, இன்னும் அவர்கள், அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பின்பற்றிச் சென்றார்கள், அல்லாஹ்வோ மகத்தான பேரருளுடையோன்.
3:175
3:175 اِنَّمَا ذٰلِكُمُ الشَّيْطٰنُ يُخَوِّفُ اَوْلِيَآءَهٗ فَلَا تَخَافُوْهُمْ وَخَافُوْنِ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
اِنَّمَا ذٰلِكُمُ அவனெல்லாம் الشَّيْطٰنُ ஷைத்தான் தான் يُخَوِّفُ பயமுறுத்துகிறான் اَوْلِيَآءَهٗ தன் நண்பர்களை فَلَا تَخَافُوْهُمْ ஆகவே பயப்படாதீர்கள் / அவர்களை وَخَافُوْنِ பயப்படுங்கள்/ என்னை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
3:175. ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான்; ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.
3:175. இவ்வாறு (அவர்களைப் பயமுறுத்தச்) செய்தது ஒரு ஷைத்தான் தான். அவன் தன் நண்பர்களைப் பற்றி (அவர்களுக்குப்) பயமுறுத்தினான். ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; எனக்கே பயப்படுங்கள்.
3:175. தன் நண்பர்களைக் கொண்டு உங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஷைத்தானே அவ்வாறு கூறியவன் (என்பது இப்போது உங்களுக்குப் புரிந்துவிட்டது). எனவே நீங்கள் உண்மையிலேயே இறைநம்பிக்கையுடையோராயின் (இனி) அம்மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்!
3:175. இது ஒரு ஷைத்தான்தான், அவன் தன் நண்பர்களைப்பற்றி (அவர்கள் பலசாலிகள், கடுமையானவர்கள் என உங்களைப்) பயமுறுத்துகிறான், ஆகவே, நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருந்தால், அவர்களுக்குப் பயப்பட வேண்டாம் எனக்கே பயப்படுங்கள்.
3:176
3:176 وَلَا يَحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِى الْكُفْرِ‌ۚ اِنَّهُمْ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْئًا ؕ يُرِيْدُ اللّٰهُ اَلَّا يَجْعَلَ لَهُمْ حَظًّا فِى الْاٰخِرَةِ ۚ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ‏
وَلَا வேண்டாம் يَحْزُنْكَ உம்மை கவலைப்படுத்த الَّذِيْنَ எவர்கள் يُسَارِعُوْنَ விரைகிறார்கள் فِى الْكُفْرِ‌ۚ நிராகரிப்பில் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَنْ يَّضُرُّوا அறவே தீங்கிழைக்க மாட்டார்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு شَيْئًا ؕ எதையும் يُرِيْدُ நாடுகிறான் اللّٰهُ அல்லாஹ் اَلَّا يَجْعَلَ ஏற்படுத்தாமல் இருக்க لَهُمْ அவர்களுக்கு حَظًّا நற்பாக்கியத்தை فِى الْاٰخِرَةِ மறுமையில் وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை عَظِيْمٌ‏ மகத்தானது
3:176. “குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது; அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்; அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு.
3:176. (நபியே!) நிராகரிப்பில் விரைந்து செல்பவர்களைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். (ஏனென்றால், அதனால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. மறுமையில் அவர்களுக்கு எத்தகைய பாக்கியமும் கிடைக்காமல் இருக்கும்படிச்செய்ய அல்லாஹ் விரும்புகிறான். (ஆகவேதான் அவர்கள் நிராகரிக்கின்றனர்.) அவர்களுக்கு பெரிய வேதனையும் உண்டு.
3:176. (நபியே! இன்று) இறைநிராகரிப்பின் வழியில் மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்(களின் நடவடிக்கை)கள் உம்மைத் துயரத்தில் ஆழ்த்திட வேண்டாம். நிச்சயமாக அவர்களால் அல்லாஹ்வுக்குச் சிறிதும் தீங்கு விளைவித்திட முடியாது. அவர்களுக்கு மறுமையில் எத்தகைய நற்பேறும் கிடைக்கக்கூடாது என்பது அல்லாஹ்வின் நாட்டமாகும். இறுதியில் அவர்களுக்கு மிகப்பெரும் தண்டனையும் கிடைக்கும்.
3:176. இன்னும், (நபியே!) நிராகரிப்பில் விரைந்து செல்கிறார்களே அத்தகையோர் உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம், (ஏனென்றால், அதனால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு யாதொரு இடரும் செய்து விடவே முடியாது, மறுமையில், அவர்களுக்கு எத்தகைய பாக்கியத்தையும் ஆக்காதிருப்பதை அல்லாஹ் நாடுகின்றான், அவர்களுக்கு மகத்தான வேதனையுண்டு.
3:177
3:177 اِنَّ الَّذِيْنَ اشْتَرَوُا الْكُفْرَ بِالْاِيْمَانِ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْئًا ‌ۚ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اشْتَرَوُا வாங்கினார்கள் الْكُفْرَ நிராகரிப்பை بِالْاِيْمَانِ நம்பிக்கைக்குப் பகரமாக لَنْ يَّضُرُّوا அறவே தீங்கிழைக்க மாட்டார்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு شَيْئًا ۚ எதையும் وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَ لِيْمٌ‏ துன்புறுத்தக்கூடியது
3:177. யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு.
3:177. எவர்கள் (தங்கள்) நம்பிக்கையைக் கொடுத்து நிராகரிப்பைப் பெற்றுக் கொண்டார்களோ, அவர்கள் (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒரு அற்ப அளவும் தீங்கிழைத்துவிட முடியாது. தவிர, அவர்களுக்குத்தான் துன்புறுத்தும் வேதனை உண்டு.
3:177. எவர்கள் இறைநம்பிக்கைக்குப் பதிலாக நிராகரிப்பை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ அவர்களால் அல்லாஹ்வுக்கு எத்தகைய தீங்கினையும் திண்ணமாக ஏற்படுத்திட முடியாது. துன்புறுத்தும் வேதனைதான் அவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.
3:177. (தங்கள்) விசுவாசத்திற்கு பதிலாக நிராகரிப்பை நிச்சயமாக விலைக்கு வாங்கிக் கொண்டார்களே அத்தகையோர் - அவர்கள் அல்லாஹ்வுக்கு ஓர் அணுவளவும் தீங்கிழைத்துவிடவே முடியாது, அவர்களுக்கு (அதனால்) துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
3:178
3:178 وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّمَا نُمْلِىْ لَهُمْ خَيْرٌ لِّاَنْفُسِهِمْ‌ؕ اِنَّمَا نُمْلِىْ لَهُمْ لِيَزْدَادُوْۤا اِثْمًا‌ ۚ وَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ‏
وَلَا يَحْسَبَنَّ நிச்சயமாக எண்ணவேண்டாம் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْۤا நிராகரித்தார்கள் اَنَّمَا نُمْلِىْ நாம் அவகாசமளிப்ப தெல்லாம் لَهُمْ அவர்களுக்கு خَيْرٌ நல்லது لِّاَنْفُسِهِمْ‌ؕ தங்களுக்கு اِنَّمَا نُمْلِىْ நாம் அவகாசமளிப்ப தெல்லாம் لَهُمْ அவர்களுக்கு لِيَزْدَادُوْۤا அவர்கள் அதிகரிப்பதற்காக اِثْمًا‌ ۚ பாவத்தால் وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை مُّهِيْنٌ‏ இழிவூட்டக்கூடியது
3:178. இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
3:178. நிராகரிப்பவர்களை (தண்டிக்காமல்) நாம் தாமதப்படுத்துவது தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக அவர்கள் எண்ணிவிட வேண்டாம். (வேதனையை) நாம் அவர்களுக்குத் தாமதப்படுத்துவதெல்லாம் (அவர்களுடைய) பாவம் (மேன்மேலும்,) அதிகரிப்பதற்காகவேதான். மேலும், (முடிவில்) அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.
3:178. இவ்வாறு அவர்களை நாம் (உடனடியாகத் தண்டிக்காமல்) விட்டு வைப்பது தங்களுக்கு நன்மையாகும் என நிராகரிப்பவர்கள் எண்ணிவிட வேண்டாம்! அவர்களை நாம் விட்டு வைப்பதெல்லாம் பாவச் சுமையை அவர்கள் அதிகமாக்கிக் கொள்ளட்டும் என்பதற்காகத்தான்! பின்னர் அவர்களுக்கு இழிவு மிக்க வேதனை இருக்கிறது.
3:178. இன்னும் நிராகரித்து விட்டார்களே அத்தகையோர்-அவர்களை தாமதப்படுத்துவதெல்லாம் தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக அவர்கள் எண்ணிவிட வேண்டாம், நாம் அவர்களுக்கு வேதனையைத் தாமதப்படுத்துவதெல்லாம், பாவத்தை (பின்னும்) அவர்கள் அதிகப்படுத்துவதற்காகவேதான், (முடிவில்) அவர்களுக்கு இழிவு தரும் வேதனையுமுண்டு.
3:179
3:179 مَا كَانَ اللّٰهُ لِيَذَرَ الْمُؤْمِنِيْنَ عَلٰى مَاۤ اَنْـتُمْ عَلَيْهِ حَتّٰى يَمِيْزَ الْخَبِيْثَ مِنَ الطَّيِّبِ‌ؕ وَمَا كَانَ اللّٰهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَ لٰكِنَّ اللّٰهَ يَجْتَبِىْ مِنْ رُّسُلِهٖ مَنْ يَّشَآءُ‌ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ‌ۚ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا فَلَـكُمْ اَجْرٌ عَظِيْمٌ‏
مَا كَانَ இல்லை اللّٰهُ அல்லாஹ் لِيَذَرَ விட்டுவிடுபவனாக الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை عَلٰى மீது مَاۤ எது اَنْـتُمْ நீங்கள் عَلَيْهِ அதன் மீது حَتّٰى இறுதியாக يَمِيْزَ பிரிப்பான் الْخَبِيْثَ தீயவர்(களை) مِنَ இருந்து الطَّيِّبِ‌ؕ நல்லவர்(கள்) وَمَا كَانَ இன்னும் இல்லை اللّٰهُ அல்லாஹ் لِيُطْلِعَكُمْ அறிவிப்பவனாக/உங்களுக்கு عَلَى الْغَيْبِ மறைவானவற்றை وَ لٰكِنَّ எனினும் اللّٰهَ அல்லாஹ் يَجْتَبِىْ தேர்ந்தெடுக்கிறான் مِنْ رُّسُلِهٖ தன் தூதர்களில் مَنْ எவரை يَّشَآءُ‌ நாடுகிறான் فَاٰمِنُوْا ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَرُسُلِهٖ‌ۚ இன்னும் அவனுடைய தூதர்களை وَاِنْ تُؤْمِنُوْا நீங்கள் நம்பிக்கை கொண்டால் وَتَتَّقُوْا இன்னும் அஞ்சினால் فَلَـكُمْ உங்களுக்கு اَجْرٌ கூலி عَظِيْمٌ‏ மகத்தானது
3:179. (காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.
3:179. (நயவஞ்சகர்களே!) நீங்கள் இருக்கும் இந்த நிலைமையில் நல்லவர்கள் இன்னாரென்றும் தீயவர்கள் இன்னாரென்றும் பிரித்தறிவிக்கும் வரை (உங்களுடன் கலந்திருக்க) அல்லாஹ் (நம்பிக்கையாளர்களை) விட்டுவைக்க மாட்டான். மறைவானவற்றையும் அல்லாஹ் உங்களுக்கு அறிவிக்கமாட்டான். எனினும் தன் தூதர்களில் தான் விரும்பியவர்களை (இதை அறிவிக்க) அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொள்வான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கைகொள்ளுங்கள். நீங்கள் (உண்மையாகவே அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து (நடந்து)கொண்டால் உங்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு.
3:179. இப்பொழுது நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ, அதே நிலையில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை ஒருபோதும் வைத்திருக்க மாட்டான். தூய்மையானவர்களை தூய்மையற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியே தீருவான். மேலும், மறைவானவற்றை உங்களுக்கு அறிவிப்பது அல்லாஹ்வின் நியதியல்ல. எனினும் (அவற்றை அறிவித்துக் கொடுப்பதற்காக) தன்னுடைய தூதர்களில் தான் நாடுகின்றவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுக்கின்றான். எனவே (மறைவானவற்றில்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு இறையச்சத்தோடும் வாழ்வீர்களாயின் உங்களுக்கு மகத்தான கூலி இருக்கிறது.
3:179. (நயவஞ்சகர்களே!) நல்லோரிலிருந்து தீயோரை பிரித்தறிவிக்கும்வரை நீங்கள் எதன் மீதிருக்கிறீர்களோ அதன்மீது, விசுவாசிகளை விட்டு வைப்பவனாக இல்லை, மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பவனாகவுமில்லை, எனினும், தன் தூதர்களில் தான் நாடியவர்களை (இதனை அறிவிக்க) அல்லாஹ் தேர்ந்தெடுக்கிறான், ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் விசுவாசியுங்கள், நீங்கள் (உண்மையாகவே) விசுவாசித்தும், (அவனுக்குப்) பயந்தும் (நடந்து) கொணடால் உங்களுக்கு மகத்தான (நற்) கூலியுண்டு.
3:180
3:180 وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ هُوَ خَيْـرًا لَّهُمْ‌ؕ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ‌ؕ سَيُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِهٖ يَوْمَ الْقِيٰمَةِ ‌ؕ وَ لِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏
وَلَا يَحْسَبَنَّ எண்ண வேண்டாம் الَّذِيْنَ எவர்கள் يَبْخَلُوْنَ கஞ்சத்தனம் செய்கிறார்கள் بِمَاۤ எதில் اٰتٰٮهُمُ கொடுத்தான்/அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் مِنْ இருந்து فَضْلِهٖ தன் அருள் هُوَ அது خَيْـرًا நல்லது لَّهُمْ‌ؕ அவர்களுக்கு بَلْ மாறாக هُوَ அது شَرٌّ தீமை لَّهُمْ‌ؕ அவர்களுக்கு سَيُطَوَّقُوْنَ அரிகண்டமாக மாட்டப்படுவார்கள் مَا எதை بَخِلُوْا கஞ்சத்தனம் செய்தார்கள் بِهٖ அதை يَوْمَ الْقِيٰمَةِ ؕ மறுமை நாளில் وَ لِلّٰهِ அல்லாஹ்விற்கு مِيْرَاثُ வாரிசுரிமை السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமி وَاللّٰهُ அல்லாஹ் بِمَا எதை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் خَبِيْرٌ‏ ஆழ்ந்தறிபவன்
3:180. அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்; வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.
3:180. எவர்கள், அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லது என்று எண்ணிவிட வேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். வானங்கள் பூமியின் வாரிசுரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கறிந்தவன் ஆவான்.
3:180. அல்லாஹ் தனது அருளிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் புரிகின்றார்களோ அவர்கள் அதனைத் தமக்கு நல்லது என எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு மிகவும் கெட்டதாகும். தமது கஞ்சத்தனத்தின் மூலம் அவர்கள் சேமித்து வைத்தவை எல்லாம் மறுமைநாளில் அவர்களின் கழுத்தில் விலங்காகப் பூட்டப்படும். வானங்களும், பூமியும் அல்லாஹ்வுக்கே உரித்தானவையாய் இருக்கின்றன. மேலும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.
3:180. மேலும், தன் பேரருளால் அவர்களுக்குக் கொடுத்தவைகளில் உலோபித்தனம் செய்கின்றார்களே அத்தகையவர்கள், அது தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீங்காகும், எதை அவர்கள் உலோபித்தனம் செய்தார்களோ அதைக் கொண்டு மறுமை நாளில் அவர்கள் கழுத்தில் மாலையாக மாட்டப்படுவார்கள், இன்னும் வானங்கள், மற்றும் பூமியின் அனந்தர உரிமை அல்லாஹ்வுக்கே உரியது, மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்கிறவன்.
3:181
3:181 لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ فَقِيْرٌ وَّنَحْنُ اَغْنِيَآءُ ‌ۘ سَنَكْتُبُ مَا قَالُوْا وَقَتْلَهُمُ الْاَنْۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ ۙۚ وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ‏
لَقَدْ سَمِعَ திட்டமாக கேட்டான் اللّٰهُ அல்லாஹ் قَوْلَ கூற்றை الَّذِيْنَ எவர்கள் قَالُوْۤا கூறினார்கள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் فَقِيْرٌ ஏழை وَّنَحْنُ இன்னும் நாங்கள் اَغْنِيَآءُ ۘ சீமான்கள் سَنَكْتُبُ பதிவு செய்வோம் مَا எதை قَالُوْا கூறினார்கள் وَقَتْلَهُمُ இன்னும் கொலை செய்ததை/அவர்கள் الْاَنْۢبِيَآءَ நபிமார்களை بِغَيْرِ حَقٍّ ۙۚ நியாயமின்றி وَّنَقُوْلُ இன்னும் கூறுவோம் ذُوْقُوْا சுவையுங்கள் عَذَابَ வேதனையை الْحَرِيْقِ‏ எரிக்கக் கூடியது
3:181. “நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள் தாம் சீமான்கள்” என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான்; (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும் அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொள்வோம், “சுட்டுப் பொசுக்கும் நரக நெருப்பின் வேதனையைச் சுவையுங்கள்” என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம்.
3:181. எவர்கள் ‘‘நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள்தான் சீமான்கள்'' என்று கூறினார்களோ, அவர்களுடைய சொல்லை திட்டமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். (இப்படி) அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நிச்சயமாக நாம் பதிவு செய்கிறோம். (ஆகவே, மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப்பாருங்கள்'' என நாம் கூறுவோம்.
3:181. “அல்லாஹ் வறியவன்; நாங்கள் செல்வந்தர்கள்!” என்று கூறியவர்களின் சொல்லை நிச்சயமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். இவ்வாறு அவர்கள் கூறியதை நாம் பதிவு செய்கின்றோம். (இதற்கு முன்) தூதர்களை நியாயமின்றி அவர்கள் கொலை செய்து வந்ததும் செயலேட்டில் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், (தீர்ப்புக் கூறும் நேரம் வரும்போது) நாம் அவர்களிடம் கூறுவோம்: “இதோ, சுட்டுப் பொசுக்கும் நரக வேதனையை இப்பொழுது சுவையுங்கள்!”
3:181. “நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள் தான் சீமான்கள்” என்று கூறினார்களே, அத்தகையவர்களுடைய சொல்லைத் திட்டமாக அல்லாஹ் செவியேற்றுவிட்டான், (இவ்வாறு) அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம், மேலும், (மறுமையில் அவர்களிடம்) “எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்” என நாம் கூறுவோம்.
3:182
3:182 ذٰ لِكَ بِمَا قَدَّمَتْ اَيْدِيْكُمْ وَاَنَّ اللّٰهَ لَيْسَ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ‌ۚ‏
ذٰ لِكَ அது بِمَا எதன் காரணத்தால் قَدَّمَتْ முற்படுத்தியது اَيْدِيْكُمْ உங்கள் கரங்கள் وَاَنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَيْسَ இல்லை بِظَلَّامٍ அநீதியிழைப்பவன் لِّلْعَبِيْدِ‌ۚ‏ அடியார்களுக்கு
3:182. இதற்கு காரணம் முன்னமேயே உங்கள் கைகள் செய்து அனுப்பிய கெட்ட செயல்களேயாகும்; நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு எவ்வித அநீதியும் செய்பவனல்லன்.
3:182. ‘‘நீங்கள் உங்கள் கைகளால் தேடிக் கொண்டதுதான் இதற்குக் காரணமாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு சிறிதும் அநியாயம் செய்வதில்லை'' (என்றும் கூறுவோம்).
3:182. இது உங்கள் கைகள் சம்பாதித்ததுதான்! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய அடிமைகள்மீது கொடுமை புரிபவன் அல்லன்.
3:182. அது “உங்கள் கைகள் முற்படுத்தி வைத்த (செய்கைகளின்) காரணத்தினாலாகும், நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு எவ்வித அநியாயமும் செய்பவனல்ல”
3:183
3:183 اَلَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَيْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰى يَاْتِيَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُ‌ؕ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِىْ بِالْبَيِّنٰتِ وَبِالَّذِىْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
اَلَّذِيْنَ எவர்கள் قَالُوْۤا கூறினார்கள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَهِدَ உறுதிமொழி வாங்கினான் اِلَيْنَاۤ எங்களிடம் اَلَّا نُؤْمِنَ நாங்கள் நம்பிக்கை கொள்ளக்கூடாது என்று لِرَسُوْلٍ ஒரு தூதருக்கு حَتّٰى வரை يَاْتِيَنَا வருவார்/எங்களிடம் بِقُرْبَانٍ ஒரு பலியைக்கொண்டு تَاْكُلُهُ சாப்பிடும்/அதை النَّارُ‌ؕ நெருப்பு قُلْ கூறுவீராக قَدْ திட்டமாக جَآءَ வந்தார்(கள்) كُمْ உங்களிடம் رُسُلٌ பல தூதர்கள் مِّنْ قَبْلِىْ எனக்கு முன்னர் بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு وَبِالَّذِىْ இன்னும் எதைக்கொண்டு قُلْتُمْ கூறினீர்கள் فَلِمَ قَتَلْتُمُوْهُمْ ஆகவே ஏன்?/கொலை செய்தீர்கள்/அவர்களை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
3:183. மேலும் அவர்கள், “எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறுகிறார்கள். (நபியே!): “எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும்.
3:183. இவர்கள் ‘‘எத்தூதராயினும், அவர் கொடுக்கும் பலியை நெருப்பு (கரித்து) புசிப்பதை அவர் நமக்குக் காட்டும்வரை அவரை நாங்கள் நம்பிக்கை கொள்ளக் கூடாது என்று நிச்சயமாக அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியிருக்கிறான்'' என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘எனக்கு முன்னர் உங்களிடம் வந்த நபிமார்களில் பலர் நீங்கள் கேட்ட இதையும் (வேறு பல) தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்தார்கள். (அப்படி இருக்க, உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?''
3:183. “(திடீரென்று வரும்) நெருப்பு கரித்து விடுகின்ற வண்ணம் ஒரு குர்பானியை (பலியை) எங்கள் கண்ணெதிரே கொண்டு வரும் வரை எந்த ஒருவரையும் இறைத்தூதராக ஏற்றுக்கொள்ள வேண்டாமென்று திண்ணமாக அல்லாஹ் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று சொன்னவர்களிடம் (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக எனக்கு முன்பு உங்களிடையே தூதர்கள் பலர் தெளிவான பல சான்றுகளுடன் வந்திருந்தனர். (ஏன்) நீங்கள் இப்பொழுது குறிப்பிடுகின்ற சான்றினையும் கூட அவர்கள் கொண்டு வந்தனர். (இறைநம்பிக்கை கொள்வதற்கு இதனை ஒரு நிபந்தனையாய்க் கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால், பிறகு அத்தகைய தூதர்களை ஏன் கொலை செய்தீர்கள்?”
3:183. (யூதர்களாகிய) அத்தகையோர் “எத்தூதராயினும் நம்மிடம் அவர் ஒரு “குர்பானி”யைக் கொண்டுவந்து அதை நெருப்பு உண்ணும்வரை நாங்கள் விசுவாசம் (ஈமான்) கொள்ள வேண்டாம் என, நிச்சயமாக அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி எடுத்துள்ளான்” என்று அவர்கள் கூறுகிறார்கள், (நபியே!) நீர் “எனக்கு முன்னர் வந்த தூதர்கள், தெளிவான அத்தாட்சிகளையும் இன்னும் நீங்கள் கேட்டதையும் உங்களுக்குத் திட்டமாகக் கொண்டு வந்தார்கள், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை ஏன் கொலை செய்தீர்கள்?” என்று கேட்பீராக.
3:184
3:184 فَاِنْ كَذَّبُوْكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّنْ قَبْلِكَ جَآءُوْ بِالْبَيِّنٰتِ وَالزُّبُرِ وَالْكِتٰبِ الْمُنِيْرِ‏
فَاِنْ كَذَّبُوْكَ ஆகவே அவர்கள் உம்மை பொய்ப்பித்தால் فَقَدْ كُذِّبَ திட்டமாகபொய்பிக்கப் பட்டார்(கள்) رُسُلٌ தூதர்கள் مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் جَآءُوْ வந்தார்கள் بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு وَالزُّبُرِ இன்னும் வேத நூல்கள் وَالْكِتٰبِ இன்னும் வேதம் الْمُنِيْرِ‏ ஒளி வீசக்கூடியது
3:184. எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர்.
3:184. (இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறினால் (அதைப்பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்,) உமக்கு முன்னர் வந்த பல தூதர்களையும் அவர்கள் (இவ்வாறே) பொய்யரெனக் கூறினார்கள். அவர்களோ தெளிவான அத்தாட்சிகளையும், வேத நூல்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்தே இருந்தனர்.
3:184. (முஹம்மதே! இப்போது) இவர்கள் உம்மைப் பொய்யர் எனக் கூறுகின்றார்கள். ஆனால், உமக்கு முன் தெள்ளத் தெளிவான சான்றுகளையும் ஆகமங்களையும், ஒளியூட்டும் வேதங்களையும் கொணர்ந்த தூதர்களில் பலரும் பொய்யர்கள் எனக் கூறப்பட்டனர்.
3:184. (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதற்காக கவலைப்பட வேண்டாம், ஏனென்றால்) உமக்கு முன்னர் தெளிவான அத்தாட்சிகளையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டுவந்த தூதர்கள் பலரும் (அவர்கள் கூட்டத்தினரால் இவ்வாறே) பொய்ப்பிக்கப்பட்டிருக்கின்றனர்.
3:185
3:185 كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ؕ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ‌ؕ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَـنَّةَ فَقَدْ فَازَ ‌ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏
كُلُّ ஒவ்வொரு نَفْسٍ ஆன்மா ذَآٮِٕقَةُ சுவைக்கக் கூடியது الْمَوْتِ‌ؕ மரணத்தை وَاِنَّمَا எல்லாம் تُوَفَّوْنَ முழுமையாக நிறைவேற்றப்படுவீர்கள் اُجُوْرَكُمْ உங்கள் கூலிகளை يَوْمَ الْقِيٰمَةِ‌ؕ மறுமை நாளில் فَمَنْ ஆகவே, எவர் زُحْزِحَ தூரமாக்கப்பட்டார் عَنِ النَّارِ நெருப்பி லிருந்து وَاُدْخِلَ இன்னும் நுழைக்கப்பட்டார் الْجَـنَّةَ சொர்க்கத்தில் فَقَدْ فَازَ ؕ திட்டமாக வெற்றிபெற்றார் وَمَا இன்னும் இல்லை الْحَيٰوةُ வாழ்க்கை الدُّنْيَاۤ இவ்வுலகம் اِلَّا தவிர مَتَاعُ இன்பம் الْغُرُوْرِ‏ மயக்கக் கூடியது
3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை.
3:185. ஆக ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனாய் இருக்கின்றான். நீங்கள் அனைவரும் உங்களுடைய கூலியை மறுமைநாளன்றுதான் முழுமையாகப் பெறுவீர்கள். (அங்கு) எவன் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டு, சுவனத்தில் நுழைவிக்கப் படுகின்றானோ அவனே உண்மையில் வெற்றி பெற்றவன் ஆவான்! இவ்வுலக வாழ்வென்பது ஏமாற்றக்கூடிய அற்ப இன்பமேயன்றி வேறில்லை!
3:185. ஓவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதாகும், இன்னும், உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் பூரணமாக்கப்படுவதெல்லாம் மறுமை நாளில்தான், ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பை விட்டும் தூரமாக்கப்பட்டு சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்யப்படுகிறாரோ அவர், திட்டமாக வெற்றியடைந்து விட்டார், மேலும், இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத்தவிர வேறில்லை.
3:186
3:186 لَـتُبْلَوُنَّ فِىْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا‌ؕ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‏
لَـتُبْلَوُنَّ நிச்சயம் சோதிக்கப்படுவீர்கள் فِىْۤ اَمْوَالِكُمْ செல்வங்களில் / உங்கள் وَاَنْفُسِكُمْ இன்னும் ஆன்மாக்கள்/ உங்கள் وَلَـتَسْمَعُنَّ இன்னும் நிச்சயமாகசெவியுறுவீர்கள் مِنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் اُوْتُوا கொடுக்கப்பட்டார்கள் الْكِتٰبَ வேதம் مِنْ قَبْلِكُمْ முன்னர் / உங்களுக்கு وَمِنَ இன்னும் இருந்து الَّذِيْنَ எவர்கள் اَشْرَكُوْۤا இணைவைத்தார்கள் اَذًى வசை மொழியை كَثِيْـرًا‌ؕ அதிகமானது وَاِنْ تَصْبِرُوْا நீங்கள் பொறுத்தால் وَتَتَّقُوْا இன்னும் நீங்கள்அஞ்சினால் فَاِنَّ ذٰلِكَ நிச்சயமாக அதுதான் مِنْ இல் عَزْمِ உறுதிமிக்க الْاُمُوْرِ‏ காரியங்கள்
3:186. (முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.
3:186. (நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம் இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணைவைத்து வணங்குபவர்களாலும், பல வசை மொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (ஆகவே, இத்தகைய சிரமங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்தவர்களாகவும், அல்லாஹ்வை பயந்தவர்களாகவும் வாழ்ந்துவந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்)... நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும்.
3:186. (முஸ்லிம்களே!) உங்கள் உடைமைகளிலும் உயிர்களிலும் நீங்கள் நிச்சயமாக சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும் அதிகமான வேதனை தரும் பல வார்த்தைகளைத் திண்ணமாக நீங்கள் கேட்பீர்கள். (இத்தகைய நிலைமைகளில்) நீங்கள் பொறுமையும், இறையச்சமும் கொண்ட நடத்தையை வலுவாகக் கடைப்பிடித்தால் திண்ணமாக அது ஊக்கமுடைய செயலாக இருக்கும்.
3:186. (விசுவாசங்கொண்டோரே!) உங்கள் செல்வங்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்டடவர்களாலும், இணைவைப்பவர்களாலும் (வசைமொழி நிந்தனைகளான) அதிகமான நோவினையை நிச்சயமாக நீங்கள் செவியேற்பீர்கள், மேலும், (இத்தகைய கஷ்டங்களில்) நீங்கள் பொறுமையை மேற்கொண்டு பயபக்தியோடும் இருந்தீர்களானால், நிச்சயமாக அதுதான் அனைத்துக் காரியங்களிலும் ஆக்கமான செயலாகும்.
3:187
3:187 وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ الَّذِيْنَ اُوْتُوْا الْكِتٰبَ لَتُبَيِّنُنَّهٗ لِلنَّاسِ وَلَا تَكْتُمُوْنَهٗ فَنَبَذُوْهُ وَرَآءَ ظُهُوْرِهِمْ وَ اشْتَرَوْا بِهٖ ثَمَنًا قَلِيْلًاؕ فَبِئْسَ مَا يَشْتَرُوْنَ‏
وَاِذْ சமயம் اَخَذَ வாங்கினான் اللّٰهُ அல்லாஹ் مِيْثَاقَ உறுதிமொழியை الَّذِيْنَ எவர்கள் اُوْتُوْا கொடுக்கப்பட்டார்கள் الْكِتٰبَ வேதம் لَتُبَيِّنُنَّهٗ நிச்சயமாக நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்/அதை لِلنَّاسِ மக்களுக்கு وَلَا இன்னும் கூடாது تَكْتُمُوْنَهٗ நீங்கள் அதை மறைக்க فَنَبَذُوْهُ எறிந்தனர்/அதை وَرَآءَ பின்னால் ظُهُوْرِ முதுகுகள் هِمْ அவர்களுடைய وَ اشْتَرَوْا இன்னும் வாங்கினர் بِهٖ அதற்குப் பகரமாக ثَمَنًا கிரயத்தை قَلِيْلًاؕ சொற்பம் فَبِئْسَ மிகக் கெட்டது مَا எது يَشْتَرُوْنَ‏ வாங்குகிறார்கள்
3:187. தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.
3:187. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் ‘‘(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதை மூடி மறைத்துவிடக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (எனினும்) அவர்கள் (தங்களின்) இவ்வுறுதிமொழியைத் தங்கள் முதுகுப்புறமாக எறிந்துவிட்டு இதற்குப் பிரதியாகச் சொற்ப கிரயத்தைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் பெற்றுக்கொண்டது மகா கெட்டதாகும்.
3:187. வேதம் அருளப்பட்டவர்களிடம், “வேதக் கருத்துகளை மக்களிடையே நீங்கள் பரப்பிட வேண்டும்; அவற்றை மறைத்து வைக்கக் கூடாது” என்று அல்லாஹ் வாக்குறுதி வாங்கியதை நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக! எனினும் அவர்கள் வேதத்தைத் தம் முதுகுக்குப் பின்னே எறிந்து விட்டார்கள்! மேலும் அதனை அற்ப ஆதாயத்திற்காக விற்று விட்டார்கள். அவர்களுடைய கொடுக்கல் வாங்கல் எத்துணைத் தரங்கெட்டது!
3:187. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம், “(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மறைத்துவிடாது ஜனங்களுக்குத் தெளிவாக நீங்கள் எடுத்துரைக்க வேண்டும்” என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவுபடுத்துவீராக!) பினனர் அவர்கள் (தங்களின்) இவ்வுறுதிமொழியைத் தங்கள் முதுகுகளுக்கு அப்பால் எறிந்துவிட்டு இதற்குப் பிரதியாகச் சொற்பக் கிரயத்தை வாங்கிக் கொண்டார்கள், அவர்கள் இவ்வாறு வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.
3:188
3:188 لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ يَفْرَحُوْنَ بِمَاۤ اَتَوْا وَّيُحِبُّوْنَ اَنْ يُّحْمَدُوْا بِمَا لَمْ يَفْعَلُوْا فَلَا تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِ‌ۚ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
لَا تَحْسَبَنَّ நிச்சயம் எண்ணாதீர் الَّذِيْنَ எவர்கள் يَفْرَحُوْنَ மகிழ்ச்சி அடைகிறார்கள் بِمَاۤ اَتَوْا எதை செய்தார்கள் وَّيُحِبُّوْنَ இன்னும் விரும்புகிறார்கள் اَنْ يُّحْمَدُوْا அவர்கள் புகழப்படுவதை بِمَا لَمْ يَفْعَلُوْا எதன் மூலம்/அவர்கள் செய்யவில்லை فَلَا تَحْسَبَنَّهُ ஆகவே நிச்சயமாக எண்ணாதீர் / அவர்களை بِمَفَازَةٍ பாதுகாப்பில் مِّنَ இருந்து الْعَذَابِ‌ۚ வேதனை وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَ لِيْمٌ‏ துன்புறுத்தக்கூடியது
3:188. எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் - அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
3:188. (நபியே!) எவர்கள் தாங்கள் செய்த (அற்ப) காரியத்தைப் பற்றி மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாத (நன்மையான) காரியங்களைப் பற்றியும், (தாம் செய்ததாக மக்கள்) தம்மைப் புகழ்வதை விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்று நிச்சயமாக (ஒரு காலமும்) நீர் எண்ண வேண்டாம். கண்டிப்பாக அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
3:188. தாம் செய்கின்ற இழிசெயல்களைக் குறித்து மகிழ்ந்திருப்பவர்கள் செய்யாத செயல்களுக்காகத் தாம் பாராட்டப்பட வேண்டுமென்று விரும்புகின்றவர்கள் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள் என்று ஒருபோதும் நீர் கருதிவிட வேண்டாம். (உண்மையில்) அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது.
3:188. (நபியே!) தாங்கள் செய்த (அற்பக்) காரியத்தைப் பற்றி மகிழ்ச்சியடைகிறார்களே அவர்களையும், தாம் செய்யாத (நன்மையான) காரியங்களைப் பற்றி புகழப்படுவதை விரும்புகின்றவர்களையும் பற்றி நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம், (அல்லாஹ்வின்) தண்டனையை விட்டும் (தப்பித்து-) வெற்றியில் இருக்கிறார்கள் என்று அவர்களை நீர் திண்ணமாக எண்ண வேண்டாம், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
3:189
3:189 وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
وَلِلّٰهِ அல்லாஹ்விற்கு مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்களின் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமி وَاللّٰهُ அல்லாஹ் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லா பொருள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
3:189. வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
3:189. வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அனைத்தின் மீதும் அல்லாஹ் பேராற்றலுடையவன் ஆவான்.
3:189. வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், அவனுடைய பேராற்றல் யாவற்றையும் உள்ளடக்கியுள்ளது!
3:189. வானங்கள், மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது, இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
3:190
3:190 اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ لَاٰيٰتٍ لِّاُولِى الْاَلْبَابِ ۚۖ‏
اِنَّ நிச்சயமாக فِىْ خَلْقِ படைத்திருப்பதில் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضِ இன்னும் பூமி وَاخْتِلَافِ இன்னும் மாறுவது الَّيْلِ இரவு وَالنَّهَارِ இன்னும் பகல் لَاٰيٰتٍ திட்டமாக அத்தாட்சிகள் لِّاُولِى الْاَلْبَابِ ۚۖ‏ அறிவுடையவர்களுக்கு
3:190. நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
3:190. வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
3:190. திண்ணமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவுபகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன.
3:190. நிச்சயமாக, வானங்கள், மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி, மாறி வருவதிலும், அறிவுடையோர்க்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
3:191
3:191 الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ‏
الَّذِيْنَ எவர்கள் يَذْكُرُوْنَ நினைவுகூர்வார்கள் اللّٰهَ அல்லாஹ்வை قِيَامًا நின்றவர்களாக وَّقُعُوْدًا இன்னும் உட்கார்ந்தவர்களாக وَّعَلٰى இன்னும் மீது جُنُوْبِهِمْ விலாக்கள்/ அவர்களுடைய وَيَتَفَكَّرُوْنَ இன்னும் சிந்திப்பார்கள் فِىْ خَلْقِ படைக்கப் பட்டிருப்பதில் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ۚ இன்னும் பூமி رَبَّنَا எங்கள் இறைவா مَا خَلَقْتَ நீ படைக்கவில்லை هٰذَا بَاطِلًا ۚ இதை/வீணாக سُبْحٰنَكَ தூய்மைப்படுத்துகிறோம்/உன்னை فَقِنَا ஆகவே காப்பாற்று/எங்களை عَذَابَ வேதனையிலிருந்து النَّارِ‏ (நரக) நெருப்பின்
3:191. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;)
3:191. இவர்கள் நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதை ஆராய்ச்சி செய்வார்கள். மேலும், ‘‘எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணாக படைக்கவில்லை. நீ மிகத்தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக!
3:191. அவர்கள் எத்தகையவர்கள் எனில் நிற்கும்போதும், உட்காரும்போதும், படுத்திருக்கும்போதும் ஆக எல்லா நிலைகளிலும், அல்லாஹ்வை நினைக்கின்றார்கள்; மேலும், வானங்கள் மற்றும் பூமியின் அமைப்பைக் குறித்துச் சிந்திக்கின்றார்கள். (பிறகு அவர்கள் உணர்ச்சி பொங்க இப்படிப் பிரார்த்திக்கின்றார்கள்:) “எங்கள் இறைவனே! இவையனைத்தையும் நீ வீணாக (யாதொரு நோக்கமுமின்றிப்) படைக்கவில்லை. (வீணான செயல்களை விட்டு) நீ தூய்மையானவன். எனவே, நரக வேதனையிலிருந்து நீ எங்களைக் காப்பாற்றுவாயாக!
3:191. (அறிவுடைய) அத்தகையோர், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களின் மீது (சாய்ந்து)ம் அல்லாஹ்வையே நினைத்து வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இரட்சகனே! நீ இவற்றை வீணுக்காகப் படைத்துவிடவில்லை, நீ மிகத் தூயவன், (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக” (என்றும்),
3:192
3:192 رَبَّنَاۤ اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَيْتَهٗ ‌ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ‏
رَبَّنَاۤ எங்கள்இறைவா اِنَّكَ நிச்சயமாக நீ مَنْ எவரை تُدْخِلِ நுழைக்கிறாய் النَّارَ நரக நெருப்பில் فَقَدْ திட்டமாக اَخْزَيْتَهٗ ؕ இழிவு படுத்தினாய்/அவரை وَمَا இன்னும் இல்லை لِلظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு مِنْ اَنْصَارٍ‏ உதவியாளர்களில்
3:192. “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!” (என்றும்;)
3:192. எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ எவர்களை (நரக) நெருப்பில் நுழைத்து விட்டாயோ அவர்களை நிச்சயமாக நீ இழிவுபடுத்திவிட்டாய். (அத்தகைய) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவரும்) இல்லை.
3:192. எங்கள் இறைவனே! நீ யாரை நரகத்தில் புகுத்தினாயோ, அவனை நீ உண்மையில் மிகக் கேவலப்படுத்திவிட்டாய். மேலும் இப்படிப்பட்ட அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்.
3:192. “எங்கள் இரட்சகனே!! நிச்சயமாக நீ எவரை (நரக) நெருப்பில் புகுத்தினாயோ, அவரை நிச்சயமாக நீ இழிவு படுத்திவிட்டாய், இன்னும் அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் (ஒருவரும்) இல்லை” (என்றும்),
3:193
3:193 رَبَّنَاۤ اِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُّنَادِىْ لِلْاِيْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا  ۖ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ‌ۚ‏
رَبَّنَاۤ எங்கள் இறைவா اِنَّنَا நிச்சயமாக நாங்கள் سَمِعْنَا செவிமடுத்தோம் مُنَادِيًا ஓர் அழைப்பாளரை يُّنَادِىْ அழைக்கிறார் لِلْاِيْمَانِ நம்பிக்கையின் பக்கம் اَنْ اٰمِنُوْا நம்பிக்கை கொள்ளுங்கள் என்று بِرَبِّكُمْ உங்கள் இறைவனை فَاٰمَنَّا  ۖ ஆகவே நம்பிக்கை கொண்டோம் رَبَّنَا எங்கள் இறைவா فَاغْفِرْ ஆகவே மன்னி لَنَا எங்களுக்கு ذُنُوْبَنَا எங்கள் பாவங்களை وَكَفِّرْ இன்னும் அகற்றிடு عَنَّا எங்களை விட்டு سَيِّاٰتِنَا தீமைகளை/எங்கள் وَتَوَفَّنَا இன்னும் மரணத்தைத் தா/எங்களுக்கு مَعَ உடன் الْاَبْرَارِ‌ۚ‏ நல்லோர்
3:193. “எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” (என்றும்;)
3:193. எங்கள் இறைவனே! (உன்) தூதரின் அழைப்பை நாங்கள் நிச்சயமாக செவியுற்றோம். (அவர்) எங்களை நம்பிக்கையின்பக்கம் அழைத்து ‘‘உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள்'' என்று கூறினார். நாங்களும் (அவ்வாறே) நம்பிக்கை கொண்டோம். ஆதலால், எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக! எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக! (முடிவில்) நல்லவர்களுடன் எங்கள் உயிரை கைப்பற்றுவாயாக!
3:193. எங்கள் அதிபதியே! இறைநம்பிக்கையின் பக்கம் அழைக்கக் கூடிய ஒருவரின் அழைப்பினை நாங்கள் செவியேற்றோம். ‘உங்கள் இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று அவர் கூறினார். நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எனவே, “எங்கள் அதிபதியே! எங்கள் குற்றங்குறைகளை மன்னித்து அருள்வாயாக! எங்களிடம் உள்ள தீமைகளை அகற்றுவாயாக! மேலும், எங்களை நல்லவர்களுடன் மரணிக்கச் செய்வாயாக!
3:193. “எங்கள் இரட்சகனே! ‘உங்கள் இரட்சகனை விசுவாசியுங்கள்!’ என்று (எங்களை) விசுவாசத்தின்பால் அழைத்தோரின் அழைப்பை நிச்சயமாக நாங்கள் செவியேற்று நாங்களும் (அவ்வாறே) விசுவாசங் கொண்டோம், எங்கள் இரட்சகனே! ஆதலால், நீ எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக! எங்களுடைய தீமைகளை எங்களை விட்டு நீக்கியும் விடுவாயாக! மேலும், (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கச் செய்வாயாக” (என்றும்),
3:194
3:194 رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدتَّنَا عَلٰى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيٰمَةِ ‌ؕ اِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ‏
رَبَّنَا எங்கள் இறைவா وَاٰتِنَا இன்னும் தா/எங்களுக்கு مَا وَعَدتَّنَا எதை/நீ வாக்களித்தாய்/எங்களுக்கு عَلٰى மூலம் رُسُلِكَ உன் தூதர்கள் وَلَا تُخْزِ இழிவுபடுத்தாதே نَا எங்களை يَوْمَ الْقِيٰمَةِ ؕ மறுமை நாளில் اِنَّكَ நிச்சயமாக நீ لَا تُخْلِفُ மாற்றமாட்டாய் الْمِيْعَادَ‏ வாக்குறுதியை
3:194. “எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).
3:194. எங்கள் இறைவனே! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்கு தந்தருள் புரிவாயாக! மறுமை நாளில் நீ எங்களை இழிவுபடுத்தி விடாதே! நிச்சயமாக நீ வாக்குறுதி தவறுபவனல்ல'' (என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.)
3:194. எங்கள் இறைவா! மேலும், தூதர்களின் வாயிலாக நீ அளித்த வாக்குறுதிகளை எங்களுக்கு நிறைவேற்றித் தந்தருள்வாயாக! மேலும், மறுமைநாளில் எங்களைக் கேவலப்படுத்தி விடாதே! திண்ணமாக, நீ வாக்குறுதி மீறாதவன் ஆவாய்!”
3:194. “எங்கள் இரட்சகனே! இன்னும் உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள் புரிவாயாக! மறுமை நாளில் நீ எங்களை இழிவுபடுத்தாதிருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதியில் மாறு செய்யமாட்டாய்” (என்றும் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்)
3:195
3:195 فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ اَنِّىْ لَاۤ اُضِيْعُ عَمَلَ عَامِلٍ مِّنْكُمْ مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى‌‌ۚ بَعْضُكُمْ مِّنْۢ بَعْضٍ‌‌ۚ فَالَّذِيْنَ هَاجَرُوْا وَاُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاُوْذُوْا فِىْ سَبِيْلِىْ وَقٰتَلُوْا وَقُتِلُوْا لَاُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَاُدْخِلَنَّهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ۚ ثَوَابًا مِّنْ عِنْدِ اللّٰهِ ‌ؕ وَ اللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الثَّوَابِ‏
فَاسْتَجَابَ பதிலளித்தான் لَهُمْ அவர்களுக்கு رَبُّهُمْ அவர்களுடைய இறைவன் اَنِّىْ நிச்சயமாக நான் لَاۤ اُضِيْعُ வீணாக்கமாட்டேன் عَمَلَ (நற்)செயலை عَامِلٍ (நற்)செயல்புரிபவரின் مِّنْكُمْ உங்களில் مِّنْ இருந்து ذَكَرٍ ஆண் اَوْ அல்லது اُنْثٰى‌ۚ பெண்கள் بَعْضُكُمْ உங்களில் சிலர் مِّنْۢ இருந்து بَعْضٍ‌ۚ சிலர் فَالَّذِيْنَ எவர்கள் هَاجَرُوْا ஹிஜ்ரா சென்றார்கள் وَاُخْرِجُوْا இன்னும் வெளியேற்றப்பட்டார்கள் مِنْ இருந்து دِيَارِهِمْ ஊர்கள்/தங்கள் وَاُوْذُوْا இன்னும் துன்புறுத்தப் பட்டார்கள் فِىْ سَبِيْلِىْ எனது பாதையில் وَقٰتَلُوْا இன்னும் போர்செய்தார்கள் وَقُتِلُوْا இன்னும் கொல்லப்பட்டார்கள் لَاُكَفِّرَنَّ நிச்சயமாக அகற்றிடுவேன் عَنْهُمْ அவர்களை விட்டு سَيِّاٰتِهِمْ தீமைகளை/ அவர்களுடைய وَلَاُدْخِلَنَّهُمْ இன்னும் நிச்சயம் அவர்களை நுழைப்பேன் جَنّٰتٍ சொர்க்கங்கள் تَجْرِىْ ஓடும் مِنْ இருந்து تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ‌ۚ நதிகள் ثَوَابًا நன்மை مِّنْ இருந்து عِنْدِ اللّٰهِ ؕ அல்லாஹ்விடம் وَ اللّٰهُ அல்லாஹ் عِنْدَهٗ அவனிடத்தில்தான் حُسْنُ அழகிய الثَّوَابِ‏ நற்கூலி
3:195. ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.
3:195. ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டதுடன் ‘‘உங்களில் ஆண், பெண் (இரு பாலரிலும்) எவர்கள் நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக நான் அதை வீணாக்கிவிடமாட்டேன். (ஏனென்றால்) உங்களில் (ஆணோ பெண்ணோ) ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தான். (ஆகவே, கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை. உங்களில்) எவர்கள் தங்கள் ஊரிலிருந்து வெளியேறியும், (பிறரால்) வெளியேற்றப்பட்டும், என் பாதையில் துன்புறுத்தப்பட்டும், போர் செய்து அதில் கொல்லப்பட்டும் (இறந்து) விடுகின்றனரோ அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டு நிச்சயமாக நாம் அகற்றிடுவோம். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் நிச்சயமாக நாம் அவர்களை நுழையவைப்போம்'' (என்று கூறுவான். இது) அல்லாஹ்வினால் (அவர்களுக்குக்) கொடுக்கப்படும் நன்மையாகும். அல்லாஹ்விடத்தில் (இன்னும் இதைவிட) மிக்க அழகான வெகுமதியும் இருக்கிறது.
3:195. அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு இவ்வாறு மறுமொழி கூறினான்: “உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன் அவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி! நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய (ஒரே இனத்த)வர்களே! எனவே (எனக்காக) நாட்டைத் துறந்தவர்கள், மேலும் என் வழியில் தம் இல்லங்களை விட்டு வெளியேற்றப்பட்டு துன்பத்திற்குள்ளாக்கப்பட்டவர்கள், இன்னும் (எனக்காக) போர் புரிந்தவர்கள், கொல்லப்பட்டவர்கள் ஆகியோரின் குற்றங்குறைகளையும் நான் மன்னிப்பேன். இன்னும் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களில் திண்ணமாக அவர்களை நுழைவிப்பேன். இது, அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் நற்கூலியாகும். மேலும் அழகிய நற்கூலி அல்லாஹ்விடமேயுள்ளது.
3:195. ஆதலால், அவர்களுடைய இரட்சகன், அவர்களுடைய (இந்தப்) பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டான், (காரணம்) “உங்களில் ஆண், பெண் (இரு பாலரிலும்) எவர் நன்மை செய்தபோதிலும், நிச்சயமாக நான் அதை வீணாக்கி விட மாட்டேன், (ஏனென்றால்) உங்களில் (ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்தபோதிலும்) சிலர் மற்ற சிலரில் உள்ளவர்தான், (ஆகவே கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை, உங்களில்) (ஹிஜ்ரத்துச் செய்து) தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியும் (பிறரால்) வெளியேற்றப்பட்டும், என்னுடைய பாதையில் துன்புறுத்தப்பட்டும், யுத்தம் செய்தும், (அதில்) கொல்லப்பட்டும் விட்டனரே அத்தகையோர், அவர்களுடைய (பாவங்களான) தீயவைகளை நிச்சயமாக நான் அவர்களை விட்டும் நீக்கிவிடுவேன், நிச்சயமாக அவர்களை நான் சுவனபதிகளிலும் பிரவேசிக்கச் செய்வேன், அவற்றின்மீது ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், (என்று கூறுவான். இது) அல்லாஹ்விடமிருந்துள்ள நற்கூலியாக அவர்களுக்குக் கிடைக்கும்) அல்லாஹ்விடத்தில் இன்னும் (இதனைவிட) மிக்க அழகான வெகுமதியும் இருக்கின்றது.
3:196
3:196 لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِيْنَ كَفَرُوْا فِى الْبِلَادِؕ‏
لَا வேண்டாம் يَغُرَّنَّكَ உம்மை நிச்சயம் மயக்கிட تَقَلُّبُ சுற்றித்திரிவது الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் فِى الْبِلَادِؕ‏ நகரங்களில்
3:196. காஃபிர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!) உம்மை மயக்கி விடவேண்டாம்.
3:196. (நபியே!) நிராகரிப்பவர்கள் (பெரும் வியாபாரிகளாகவும் செல்வந்தர்களாகவும் ஆடம்பரமாக) நகரங்களில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது உம்மை மயக்கி (ஏமாற்றி) விடவேண்டாம்.
3:196. உலகின் பல பகுதிகளில் (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவர்களின் நடமாட்டம் உம்மை ஒருபோதும் ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம்.
3:196. (நபியே!) நிராகரிப்போர், (பெரும் வர்த்தகர்களாகவும், தனவந்தர்களாகவும் ஆடம்பரமாக) நகரங்களில் திரிந்து கொண்டிருப்பது உம்மை ஏமாற்றிவிட வேண்டாம்.
3:197
3:197 مَتَاعٌ قَلِيْلٌ ثُمَّ مَاْوٰٮهُمْ جَهَنَّمُ‌ؕ وَ بِئْسَ الْمِهَادُ‏
مَتَاعٌ ஓர் இன்பம் قَلِيْلٌ அற்பம் ثُمَّ பிறகு مَاْوٰ தங்குமிடம் ٮهُمْ அவர்களுடைய جَهَنَّمُ‌ؕ நரகம் وَ بِئْسَ இன்னும் கெட்டது الْمِهَادُ‏ தங்குமிடம்
3:197. (அது) மிகவும் அற்ப சுகம்; பிறகு அவர்கள் தங்குமிடம் நரகமே யாகும்; (இது) மிகவும் கெட்ட தங்குமிடமும் ஆகும்.
3:197. (இது) அற்ப சுகமாகும். இதற்குப் பின்னர் அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக்கெட்டது.
3:197. இது (சில நாள் வாழ்க்கையின்) அற்ப இன்பம்தான். பிறகு அவர்கள் சேருமிடம் நரகமேயாகும். எத்துணை இழிவான தங்குமிடம் அது!
3:197. (இது) குறைந்த சுகமாகும், பின்னர், அவர்கள் ஒதுங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடத்தில் மிகக் கெட்டது.
3:198
3:198 لٰكِنِ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا نُزُلًا مِّنْ عِنْدِ اللّٰهِ‌ؕ وَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ لِّلْاَبْرَارِ‏
لٰكِنِ எனினும் الَّذِيْنَ எவர்கள் اتَّقَوْا அஞ்சினர் رَبَّهُمْ தங்கள் இறைவனை لَهُمْ அவர்களுக்கு جَنّٰتٌ சொர்க்கங்கள் تَجْرِىْ ஓடும் مِنْ இருந்து تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَا அதில் نُزُلًا விருந்தோம்பலாக مِّنْ இருந்து عِنْدِ இடம் اللّٰهِ‌ؕ அல்லாஹ் وَمَا இன்னும் எது عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் خَيْرٌ சிறந்தது لِّلْاَبْرَارِ‏ நல்லோருக்கு
3:198. ஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் உண்டு அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்: (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்; மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்மையுடையதாகும்.
3:198. ஆயினும், எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து (ஒழுங்காக நடந்து) கொள்கிறார்களோ அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களுண்டு. அதில் அல்லாஹ்வின் விருந்தினராக (என்றென்றுமே) தங்கிவிடுவார்கள். நல்லோருக்காக அல்லாஹ்விடம் இருப்பது மிகச் சிறந்ததாகும்.
3:198. இதற்கு மாறாக எவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சிய வண்ணம் வாழ்ந்து வருகின்றார்களோ அவர்களுக்கு, கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இது அல்லாஹ்விடமிருந்து அளிக்கப்படும் மிகச் சிறந்த உபசரிப்பாகும். மேலும், நல்லவர்களுக்கு அல்லாஹ்விடம் இருப்பவையே மிகவும் சிறந்தவையாகும்.
3:198. ஆயினும், தங்கள் இரட்சகனுக்குப் பயந்து (ஒழுங்காக நடந்து) கொள்கின்றார்களே அத்தகையோர் - அவர்களுக்கு சுவனபதிகளுண்டு, அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றில் அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள், (இது) அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் விருந்தாகும், இன்னும் அல்லாஹ்விடம் இருப்பது நல்லோர்க்கு மிகச் சிறந்ததாகும்.
3:199
3:199 وَاِنَّ مِنْ اَهْلِ الْكِتٰبِ لَمَنْ يُّؤْمِنُ بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَيْكُمْ وَمَاۤ اُنْزِلَ اِلَيْهِمْ خٰشِعِيْنَ لِلّٰهِ ۙ لَا يَشْتَرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِيْلًا ‌ؕ اُولٰٓٮِٕكَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏
وَاِنَّ நிச்சயமாக مِنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் لَمَنْ திட்டமாக எவர் يُّؤْمِنُ நம்பிக்கைகொள்கிறார் بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَاۤ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكُمْ உங்களுக்கு وَمَاۤ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْهِمْ அவர்களுக்கு خٰشِعِيْنَ பணிந்தவர்களாக لِلّٰهِ ۙ அல்லாஹ்விற்கு لَا يَشْتَرُوْنَ வாங்க மாட்டார்கள் بِاٰيٰتِ வசனங்களுக்கு பகரமாக اللّٰهِ அல்லாஹ்வின் ثَمَنًا கிரயத்தை قَلِيْلًا ؕ சொற்பம் اُولٰٓٮِٕكَ அவர்கள் لَهُمْ அவர்களுக்கு اَجْرُهُمْ கூலி/அவர்களுடைய عِنْدَ رَبِّهِمْ‌ؕ அவர்களின் இறைவனிடம் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَرِيْعُ மிக விரைவானவன் الْحِسَابِ‏ கணக்கெடுப்பதில்
3:199. மேலும் நிச்சயமாக வேதமுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீதும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)திலும், அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள்; இத்தகையோருக்கு நற்கூலி அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிகவும் தீவிரமானவன்.
3:199. (நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களில் நிச்சயமாக (இப்படியும்) சிலர் இருக்கின்றனர்; அவர்கள் அல்லாஹ்வையும், உங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், அவர்களுக்கு அருளப்பட்ட (மற்ற)வற்றையும் நம்பிக்கைகொண்டு அல்லாஹ்வுக்கும் பயந்து நடக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கொடுத்து சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொள்வதுமில்லை. இவர்களுக்கு இவர்களுடைய கூலி இவர்களது இறைவனிடத்தில் (மகத்தானதாக) இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத்தீவிரமானவன்.
3:199. திண்ணமாக, வேதம் அருளப்பட்டவர்களில் இப்படிச் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் அல்லாஹ்வையும், உம்மீது இறக்கியருளப்பட்டதையும், (முன்னர்) தங்கள் மீது இறக்கியருளப்பட்டதையும் நம்புகிறார்கள். அல்லாஹ்வின் திருமுன் பணிந்த வண்ணமிருக்கின்றார்கள். மேலும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்பதில்லை. அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. திண்ணமாக, அல்லாஹ் கணக்கு வாங்குவதில் விரைவானவனாக இருக்கின்றான்.
3:199. (விசுவாசங்கொண்டோரே!) நிச்சயமாக வேதத்தையுடையோரில் அல்லாஹ்வையும், உங்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், அவர்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட (மற்ற)வைகளையும் அல்லாஹ்வுக்கு பயந்தவர்களாக விசுவாசம் கொள்கின்றவரும் இருக்கின்றனர், அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை சொற்பக் கிரயத்திற்கு விற்றுவிட மாட்டார்கள், இத்தகையோருக்கு அவர்களுடைய கூலி அவர்கள் இரட்சகனிடத்தில் (மகத்தானதாக) இருக்கின்றது, நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.
3:200
3:200 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே اصْبِرُوْا பொறுங்கள் وَصَابِرُوْا இன்னும் அதிகம் பொறுத்துக் கொள்ளுங்கள் وَرَابِطُوْا இன்னும் போருக்குத் தயாராகுங்கள் وَاتَّقُوا اللّٰهَ இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள் لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ நீங்கள் வெற்றி பெறுவதற்காக
3:200. முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
3:200. நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். (எதிரிகளை விட) நீங்கள் அதிகம் சகித்துக் கொள்ளுங்கள். (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் தயாராக இருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நீங்கள் (இம்மையிலும், மறுமையிலும்) வெற்றியடைவீர்கள்!
3:200. இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை கைக்கொள்வீர்களாக! அசத்தியவாதிகளுக்கு எதிரில் உறுதியாக நிலைத்து நிற்பீர்களாக! (சத்தியத்திற்காக தொண்டு புரிய) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருப்பீர்களாக! மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சியே வாழ்வீர்களாக! (இதனால்) நீங்கள் வெற்றியாளர்களாய்த் திகழக்கூடும்!
3:200. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் பொறுமையைக் கடைப் பிடியுங்கள், மேலும் (எதிரியை சந்திக்கும் போது) ஒருவருக்கொருவர் உறுதியாக இருந்து கொள்ளுங்கள், மேலும் (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் சித்தமாயிருங்கள், அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்தும் கொள்ளுங்கள், நீங்கள் (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றியடைவீர்கள்.