38. ஸூரத்து ஸாத்
மக்கீ, வசனங்கள்: 88

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
38:1
38:1 صٓ‌ وَالْقُرْاٰنِ ذِى الذِّكْرِؕ‏
صٓ‌ ஸாத் وَالْقُرْاٰنِ குர்ஆன் மீது சத்தியமாக! ذِى الذِّكْرِؕ‏ அறிவுரைகள் நிறைந்த
38:1. ஸாத். (நல்லுபதேசங்களின்) நினைவுறுத்தலைக் கொண்ட இக்குர்ஆன் மீது சத்தியமாக.
38:1. ஸாத்; நல்லுபதேசங்கள் நிறைந்த இந்த குர்ஆன் மீது சத்தியமாக!
38:1. ஸாத், அறிவுரை நிறைந்த குர்ஆனின் மீது சத்தியமாக!
38:1. ஸாத் (நல்லுபதேசங்களின்) நினைவுறுத்தலையுடைய இக்குர் ஆனின் மீது சத்தியமாக!
38:2
38:2 بَلِ الَّذِيْنَ كَفَرُوْا فِىْ عِزَّةٍ وَّشِقَاقٍ‏
بَلِ மாறாக الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பவர்கள் فِىْ عِزَّةٍ பிடிவாதத்திலும் وَّشِقَاقٍ‏ முரண்பாட்டிலும்
38:2. ஆனால், நிராகரிப்பவர்களோ பெருமையிலும், மாறுபாட்டிலும் (ஆழ்ந்து) கிடக்கின்றனர்.
38:2. (இது நம்மால்தான் அருளப்பட்டது. இதை) நிராகரிப்பவர்கள் பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் (மூழ்கி) இருக்கின்றனர்.
38:2. ஆயினும், எவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ அவர்கள்தாம் பெரும் ஆணவத்திலும், பிடிவாதத்திலும் உழன்று கொண்டு இருக்கின்றார்கள்.
38:2. ஆனால், நிராகரித்தோர் பெருமையிலும், முரண்பாட்டிலும் (மூழ்கி) இருக்கின்றனர்.
38:3
38:3 كَمْ اَهْلَـكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ فَنَادَوْا وَّلَاتَ حِيْنَ مَنَاصٍ‏
كَمْ எத்தனையோ اَهْلَـكْنَا நாம் அழித்தோம் مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் مِّنْ قَرْنٍ பல தலைமுறை فَنَادَوْا அழைத்தனர் وَّلَاتَ அந்த நேரம் அல்ல حِيْنَ مَنَاصٍ‏ தப்பித்து ஓடுவதற்குரிய நேரம்
38:3. இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; அப்போது, அவர்கள் தப்பி ஓட வழியில்லாத நிலையில் (உதவி தேடிக்) கூக்குரலிட்டனர்.
38:3. இவர்களுக்கு முன்னர், (இவ்வாறு இருந்த) எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்திருக்கிறோம். (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் எல்லோரும் உதவி தேடிக் கூச்சலிட்டார்கள். அது (வேதனையிலிருந்து) தப்பித்துக் கொள்ளக்கூடிய நேரமாய் இருக்கவில்லை.
38:3. இவர்களுக்கு முன் எத்தனையோ சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம். (அவர்களுடைய தீயகதி வந்தபோது) அவர்கள் கூக்குரலிட்டார்கள். ஆயினும், அது தப்பிப்பதற்கான நேரமாய் இருக்கவில்லை.
38:3. இவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருகின்றோம், (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் (உதவி தேடி) அழைத்தார்கள், (அது வேதனையிலிருந்து) தப்பித்துக்கொள்ளக்கூடிய நேரமாகவும் இருக்கவில்லை.
38:4
38:4 وَعَجِبُوْۤا اَنْ جَآءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ‌ وَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا سٰحِرٌ كَذَّابٌ‌ ۖ‌ۚ‏
وَعَجِبُوْۤا ஆச்சரியப்பட்டனர் اَنْ جَآءَ வந்ததால் هُمْ அவர்களிடம் مُّنْذِرٌ ஓர் எச்சரிப்பாளர் مِّنْهُمْ‌ அவர்களில் இருந்தே وَقَالَ கூறினர் الْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள் هٰذَا இவர் سٰحِرٌ ஒரு சூனியக்காரர் كَذَّابٌ‌ ۖ‌ۚ‏ ஒரு பெரும் பொய்யர்
38:4. அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர்; “இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!” என்றும் காஃபிர்கள் கூறினர்.
38:4. (அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர் (ஆகிய நீர்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டு, ‘‘இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்'' என்று (உங்களைப் பற்றி) அந்த நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
38:4. அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் இவர்களிலிருந்தே வந்துவிட்டார் என்பது குறித்து இவர்களுக்குப் பெரும்வியப்பு ஏற்பட்டது. நிராகரிப்பாளர்கள் கூறலாயினர்: “இவர் ஒரு சூனியக்காரர்; சுத்தப் பொய்யர்;
38:4. மேலும் (அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவர் (ஆகிய நீர்) அவர்களி(ன் இனத்தி)லிருந்து அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டனர்; ”இவர் பெரும் பொய்யரான சூனியக்காரர்” என்றும் (உம்மைப்பற்றி) நிராகரிப்போர் கூறினர்.
38:5
38:5 اَجَعَلَ الْاٰلِهَةَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ اِنَّ هٰذَا لَشَىْءٌ عُجَابٌ‏
اَجَعَلَ இவர் ஆக்கிவிட்டாரா? الْاٰلِهَةَ தெய்வங்களை اِلٰهًا தெய்வமாக وَّاحِدًا ۖۚ ஒரே ஒரு اِنَّ நிச்சயமாக هٰذَا இது لَشَىْءٌ ஒரு விஷயம்தான் عُجَابٌ‏ ஆச்சரியமான
38:5. “இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).
38:5. ‘‘என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே ஓர் இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே, இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்'' (என்று கூறி,)
38:5. என்ன, இவர் அத்தனை கடவுளருக்கும் பகரமாக ஒரே கடவுள்தான் என்று ஆக்கிவிட்டாரா? இது மிகவும் வியப்புக்குரிய விஷயம்தான்!”
38:5. (என்ன!) இவர் (நம்முடைய வணக்கத்திற்குரிய) தெய்வங்களை (நிராகரித்து விட்டு) ஒரே ஒரு வணக்கதிற்குரியவனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்” (என்றும் கூறினர்).
38:6
38:6 وَانْطَلَقَ الْمَلَاُ مِنْهُمْ اَنِ امْشُوْا وَاصْبِرُوْا عَلٰٓى اٰلِهَتِكُمْ‌ ‌ۖۚ‌ اِنَّ هٰذَا لَشَىْءٌ يُّرَادُ ۖ‌ۚ‏
وَانْطَلَقَ சென்றனர் الْمَلَاُ தலைவர்கள் مِنْهُمْ அவர்களில் உள்ள اَنِ امْشُوْا நீங்கள் சென்று விடுங்கள் وَاصْبِرُوْا உறுதியாக இருங்கள்! عَلٰٓى اٰلِهَتِكُمْ‌ ۖۚ‌ உங்கள் தெய்வங்கள் மீது اِنَّ நிச்சயமாக هٰذَا இது لَشَىْءٌ ஒரு விஷயம்தான் يُّرَادُ ۖ‌ۚ‏ நாடப்பட்ட
38:6. “(இவரை விட்டும் விலகிச்) செல்லுங்கள். உங்கள் தெய்வங்களை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக இதில் (இவரது பிரச்சாரத்தில்) ஏதோ (சுயநலம்) நாடப்படுகிறது” என்று அவர்களின் தலைவர்கள் (கூறிச்) சென்றனர்.
38:6. அவர்களிலுள்ள தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி, ‘‘இவரை விட்டு) நீங்கள் சென்றுவிடுங்கள். உங்கள் தெய்வங்களை ஆராதனை செய்வதில் நீங்கள் உறுதியாயிருங்கள். (உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்)இவ்விஷயத்தில் ஏதோ (ஒரு சுயநலம்தான்) கருதப்படுகிறது'' என்று கூறிக் கொண்டே சென்று விட்டனர்.
38:6. மேலும், சமுதாயத் தலைவர்கள் பின்வருமாறு கூறிக்கொண்டு வெளியேறிச் சென்றார்கள்: “செல்லுங்கள்; உங்களுடைய தெய்வங்களை வணங்குவதில் உறுதியாய் இருங்கள். திண்ணமாக, இவ்விஷயம் ஏதோ ஓர் உள்நோக்கத்துடன் கூறப்படுகின்றது;
38:6. அவர்களிலுள்ள தலைவர்கள், (மற்றவர்களிடம், “இவரை விட்டு உங்கள் வழியில்) நீங்கள் சென்றுவிடுங்கள், இன்னும், உங்கள் தெய்வங்களின் மீது நீங்கள் (உறுதியுடன்) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக, (உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்) இ(க் கூற்றான)து ஏதோ ஒன்றை (சுயநலத்தை கருத்தில் கொண்டு) நாடப்பட்டதாக உள்ளது” என்று (கூறிக்கொண்டே) சென்றுவிட்டனர்.
38:7
38:7 مَا سَمِعْنَا بِهٰذَا فِى الْمِلَّةِ الْاٰخِرَةِ ۖۚ اِنْ هٰذَاۤ اِلَّا اخْتِلَاقٌ ‌ ۖ‌ۚ‏
مَا سَمِعْنَا நாங்கள் கேள்விப்பட்டதில்லை بِهٰذَا இதை فِى الْمِلَّةِ மார்க்கத்தில் الْاٰخِرَةِ ۖۚ வேறு اِنْ هٰذَاۤ இது இல்லை اِلَّا اخْتِلَاقٌ ۖ‌ۚ‏ கற்பனையாக இட்டுக்கட்டப்பட்டதைத் தவிர
38:7. “வேறு (எந்த) சமுதாயத்திலும் நாம் இது (போன்று) கேள்விப்பட்டதில்லை; இது (இவருடைய) கற்பனையேயன்றி வேறில்லை (என்றும்).
38:7. ‘‘முன்னுள்ள வகுப்பார்களிலும், இதை நாம் கேள்விப்பட்டதில்லை. இது (இவரால்) புனையப்பட்டதே தவிர வேறில்லை'' என்றும்,
38:7. அண்மைக்காலத்து எந்தச் சமுதாயத்திடமும் இதனை நாம் கேள்விப்பட்டதில்லை. இது கற்பனைசெய்து கூறப்பட்டதே தவிர வேறொன்றுமில்லை.
38:7. “கடைசிமார்க்க(மான கிறிஸ்தவ மத)த்திலும் இது பற்றி நாம் கேள்விப்பட்டதில்லை, இது (இவரால் உண்டாக்கப்பட்ட) பொய்யைத் தவிர வேறில்லை” (என்றும்),
38:8
38:8 ءَاُنْزِلَ عَلَيْهِ الذِّكْرُ مِنْۢ بَيْنِنَا‌ؕ بَلْ هُمْ فِىْ شَكٍّ مِّنْ ذِكْرِىْ‌ۚ بَلْ لَّمَّا يَذُوْقُوْا عَذَابِؕ‏
ءَاُنْزِلَ இறக்கப்பட்டதா? عَلَيْهِ அவர் மீது الذِّكْرُ வேதம் مِنْۢ بَيْنِنَا‌ؕ நமக்கு மத்தியில் بَلْ மாறாக هُمْ அவர்கள் فِىْ شَكٍّ சந்தேகத்தில் مِّنْ ذِكْرِىْ‌ۚ எனது வேதத்தில் بَلْ மாறாக, لَّمَّا يَذُوْقُوْا அவர்கள் சுவைக்கவில்லை عَذَابِؕ‏ எனது வேதனையை
38:8. “நம்மில், இவர் பேரில்தான் நினைவுறுத்தும் நல்லுபதேசம் இறக்கப்பட்டு விட்டதோ?” (என்றும் கூறுகிறார்கள்.) அவ்வாறல்ல! அவர்கள் எனது போதனையில் சந்தேகத்தில் இருக்கின்றனர்; அவ்வாறல்ல! இன்னும் அவர்கள் என் வேதனையை அனுபவித்ததில்லை.
38:8. ‘‘நம்மைவிட்டு இவர் பேரில் மட்டும்தானா (வேத) உபதேசம் இறக்கப்பட்டு விட்டது'' (என்றும் கூறினார்கள்). அவ்வாறன்று. உண்மையில் இவர்கள் நம் எச்சரிக்கையைப் பற்றியே பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர். மேலும், இதுவரை அவர்கள் நம் வேதனையைச் சுவைத்துப் பார்க்கவே இல்லை.
38:8. நம்மிடையே, அல்லாஹ்வுடைய அறிவுரை இறக்கி வைக்கப்படுவதற்கு இவர் ஒருவர் மட்டும்தான் இருந்தாரா, என்ன?” உண்மை என்னவெனில், இவர்கள் என்னுடைய அறிவுரையின் மீது சந்தேகம் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறெல்லாம் இவர்கள் பேசுவதற்குக் காரணம், இவர்கள் நான் தரும் வேதனையைச் சுவைக்கவில்லை என்பதுதான்!
38:8. “நம்மவர்களுக்கிடையில் இவர் மீது (வேத) உபதேசம் இறக்கப்பட்டுவிட்டதா” (என்றும் கூறினார்கள்.) அவ்வாறன்று! உண்மையில் இவர்கள் என்னுடைய (வேத) உபதேசத்தைப் பற்றி சந்தேகத்திலிருகின்றனர். இல்லை, இதுவரையில் அவர்கள் என்னுடைய வேதனையைச் சுவைத்(துப்பார்த்)ததில்லை.
38:9
38:9 اَمْ عِنْدَهُمْ خَزَآٮِٕنُ رَحْمَةِ رَبِّكَ الْعَزِيْزِ الْوَهَّابِ‌ۚ‏
اَمْ ? عِنْدَهُمْ அவர்களிடம் خَزَآٮِٕنُ பொக்கிஷங்கள் رَحْمَةِ அருளுடைய رَبِّكَ உமது இறைவனின் الْعَزِيْزِ கண்ணியமிக்க(வன்) الْوَهَّابِ‌ۚ‏ மகா கொடை வள்ளல்
38:9. அல்லது, யாவரையும் மிகைத்தவனும் மிகப்பெருங் கொடையாளியுமாகிய உமது இறைவனின் கிருபைக் கருவூலங்கள் - அவர்களிடம் இருக்கின்றனவா,
38:9. (வேத உபதேசம் தங்கள் மீது இறங்க வேண்டுமென்று இவர்கள் கூறுவதற்கு) அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியாகிய, உமது இறைவனின் அருள் பொக்கிஷம் அவர்களிடம்தான் இருக்கிறதா?
38:9. என்ன, யாவற்றையும் மிகைத்தவனும் பெருங்கொடையாளனுமான உம் இறைவனின் அருட்களஞ்சியங்கள் இவர்களின் கைவசத்தில்தான் உள்ளனவா?
38:9. அல்லது (யாவரையும்) மிகைத்த, பெருங்கொடையாளனாகிய உமதிரட்சகனின் அருள் பொக்கிஷங்கள் அவர்களிடம் இருக்கின்றனவா?
38:10
38:10 اَمْ لَهُمْ مُّلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا‌فَلْيَرْتَقُوْا فِى الْاَسْبَابِ‏
اَمْ لَهُمْ அவர்களுக்கு இருக்கின்றதா? مُّلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا‌ இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் فَلْيَرْتَقُوْا அவர்கள் ஏறட்டும் فِى الْاَسْبَابِ‏ வாசல்களில்
38:10. அல்லது வானங்களுடையவும், பூமியினுடையவும் அவ்விரண்டிற்கும் இடையேயும் இருப்பவற்றின் மீதுள்ள ஆட்சி அவர்களிடம் இருக்கிறதா? அவ்வாறாயின் அவர்கள் (ஏணி போன்ற) சாதனங்களில் ஏறிச் செல்லட்டும்.
38:10. அல்லது வானங்கள், பூமி, இன்னும் இவற்றின் மத்தியில் உள்ளவற்றின் ஆட்சி அவர்களுக்கு உரியதுதானா? அவ்வாறாயின், அவர்கள் (இறைவனுடன் போர் புரிவதற்காக) ஏணி வைத்து மேலே ஏறவும்.
38:10. அல்லது இவர்கள் வானம், பூமி மற்றும் இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள பொருள்கள் அனைத்திற்கும் உரிமையாளர்களா? அவ்வாறாயின், இவர்கள் உலகாயத ரீதியான உச்சகட்ட சாதனங்கள் அனைத்தையும் பயன்படுத்திப் பார்க்கட்டும்.
38:10. அல்லது வானங்கள் மற்றும் பூமி, இன்னும் இவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி அவர்களுக்கு இருக்கிறதா? அவ்வாறாயின், (வானங்களின்) வழிகளில் (ஏறும் சாதனங்கள் மூலம்) அவர்கள் ஏரிச்செல்லட்டும்.
38:11
38:11 جُنْدٌ مَّا هُنَالِكَ مَهْزُوْمٌ مِّنَ الْاَحْزَابِ‏
جُنْدٌ இராணுவம்தான் مَّا هُنَالِكَ அந்த விஷயத்தில் مَهْزُوْمٌ தோற்கடிக்கப்படுகின்ற(வர்) مِّنَ الْاَحْزَابِ‏ கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள்
38:11. ஆனால் இங்கிருக்கும் படையினரும் (முன் தலைமுறைகளில்) முறியடிக்கப்பட்ட ஏனைய கூட்டங்களைப் போலவே ஆவார்கள்.
38:11. (கேவலம்!) இங்கிருக்கும் இவர்களுடைய கூட்டத்தினர் (எம்மாத்திரம்?) மற்ற கூட்டத்தினர்களைப் போலவே இவர்களும் முறியடிக்கப்படுவார்கள்.
38:11. பல கூட்டத்தினரிடையே இவர்கள் ஒரு சிறு கூட்டத்தினர்தாம்; இவர்கள் இதே இடத்தில் தோல்வி அடைய இருக்கின்றார்கள்.
38:11. (முன்சென்ற நபிமார்களைப் பொய்யாக்கிய) கூட்டதார்களில், இங்கிருப்பவர்கள் தோற்கடிக்கப்படும் ஓர் அற்பப்படை,
38:12
38:12 كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّفِرْعَوْنُ ذُو الْاَوْتَادِۙ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் قَوْمُ மக்களும் نُوْحٍ நூஹூடைய وَّعَادٌ ஆதும் وَّفِرْعَوْنُ ஃபிர்அவ்னும் ذُو الْاَوْتَادِۙ‏ ஆணிகளை உடைய
38:12. (இவ்வாறு) இவர்களுக்கு முன் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ஆது(சமூகத்தாரு)ம், முளைகளுடைய ஃபிர்அவ்னும் நம் தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
38:12. (இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்களும், ‘ஆத்' என்னும் மக்களும், பெரும் படையுடைய ஃபிர்அவ்னும், (நம் தூதர்களைப்) பொய்யாக்கினார்கள்.
38:12. இவர்களுக்கு முன் நூஹுடைய சமூகத்தினரும், ஆத் சமூகத்தினரும், முளைகளுடைய ஃபிர்அவ்னும்,
38:12. (இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் (இருந்த) நூஹ்வுடைய சமூகத்தாரும், ஆது (சமூகத்தாரு)ம், முளைகளுடைய(_பெரும் படைகளுடைய) ஃபிர் அவ்னும் (நம்முடைய தூதர்களைப்) பொய்யாக்கினார்கள்.
38:13
38:13 وَثَمُوْدُ وَقَوْمُ لُوْطٍ وَّاَصْحٰبُ لْئَیْكَةِ‌ ؕ اُولٰٓٮِٕكَ الْاَحْزَابُ‏
وَثَمُوْدُ ஸமூதும் وَقَوْمُ மக்களும் لُوْطٍ லூத்துடைய وَّاَصْحٰبُ لْئَیْكَةِ‌ ؕ தோட்டமுடையவர்களும் اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் الْاَحْزَابُ‏ கோஷ்டிகள்
38:13. (இவ்வாறு) “ஸமூது”ம் லூத்துடைய சமூகத்தவரும், (மத்யன்) தோப்பு வாசிகளும் (பொய்யாக்கினார்கள்); இவர்கள் (எல்லோரும் முன் தலைமுறைகளில் முறியடிக்கப்பட்ட) கூட்டத்தினர் ஆவார்கள்.
38:13. அவ்வாறே ‘ஸமூத்' என்னும் மக்களும், லூத்துடைய மக்களும், (மத்யன்) தோப்புவாசிகளும் (பொய்யாக்கினார்கள்). இவர்கள்தான் (முறியடிக்கப்பட்ட) அந்தக் கூட்டத்தினர்கள்.
38:13. மற்றும் ஸமூத் சமூகம், லூத்தின் சமூகம், ஐக்காவாசிகள் ஆகியோரும் கூட பொய்யெனத் தூற்றியிருக்கின்றார்கள்.
38:13. (அவ்வாறே) ஸமூதும், லூத்துடைய சமூகத்தாரும், (மத்யன்) தோப்புவாசிகளும் (பொய்யாக்கினார்கள்). இவர்கள் தாம் (முறியடிக்கப்பட்ட) அக்கூட்டதினர்கள் ஆவார்கள்.
38:14
38:14 اِنْ كُلٌّ اِلَّا كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ عِقَابِ‏
اِنْ இல்லை كُلٌّ எல்லோரும் اِلَّا தவிர كَذَّبَ பொய்ப்பித்தார்(கள்) الرُّسُلَ தூதர்களை فَحَقَّ ஆகவே, உறுதியானது عِقَابِ‏ எனது தண்டனை
38:14. இவர்கள் ஒவ்வொருவரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்படாமல் இல்லை; எனவே என்னுடைய தண்டனை (அவர்கள் மீது) உறுதியாயிற்று.  
38:14. இவர்கள் ஒவ்வொரு கூட்டத்தினரும் தூதர்களைப் பொய்யாக்காமல் இருந்ததில்லை. (ஆகவே, அவர்கள் மீது) என் வேதனை உறுதியாயிற்று.
38:14. கூட்டத்தினர் என்பது அவர்கள்தாம்! அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தூதர்களைப் பொய்யர்கள் என வாதிட்டார்கள். எனவே, என்னுடைய தண்டனையின் தீர்ப்பு (அவர்கள் மீது) விதிக்கப்பட்டுவிட்டது.
38:14. இவர்கள் ஒவ்வொருவரும் (நம்முடைய) தூதர்களைப் பொய்யாக்கியே தவிர இருக்கவில்லை, ஆகவே, (அவர்களுக்கு) என்னுடைய தண்டனை நிச்சயமாகிவிட்டது.
38:15
38:15 وَمَا يَنْظُرُ هٰٓؤُلَاۤءِ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً مَّا لَهَا مِنْ فَوَاقٍ‏
وَمَا يَنْظُرُ எதிர்பார்க்கவில்லை هٰٓؤُلَاۤءِ இவர்கள் اِلَّا தவிர صَيْحَةً சப்தத்தை وَّاحِدَةً ஒரே ஒரு مَّا لَهَا அதற்கு இருக்காது مِنْ فَوَاقٍ‏ துண்டிப்பு, இடைவெளி
38:15. இன்னும் இவர்களும் ஒரே ஒரு பேரொளியைத் தவிர (வேறெதனையும்) எதிர் பார்க்கவில்லை. அதில் தாமதமும் இராது.
38:15. ஆகவே, (அரபிகளாகிய) இவர்களும் (தங்களை அழிக்கக்கூடிய) ஒரே ஒரு சப்தத்தைத் தவிர (வேறெதனை) எதிர்பார்க்கின்றனர். (அது வரும் சமயம்) அதைத் தாமதப்படுத்தவும் வழி இருக்காது.
38:15. இந்த மக்களும் ஒரே ஓர் உரத்த ஓசையையே எதிர்பார்த்திருக்கின்றார்கள். அதற்குப் பிறகு மற்றோர் உரத்த ஓசை இராது.
38:15. மேலும், இவர்கள் ஒரே ஒரு சப்தத்தைப் தவிர (வேறெதனையும்) எதிர்பார்க்கவில்லை, அ(துவருவ)தில் தாமதமும் இராது.
38:16
38:16 وَقَالُوْا رَبَّنَا عَجِّلْ لَّنَا قِطَّنَا قَبْلَ يَوْمِ الْحِسَابِ‏
وَقَالُوْا அவர்கள் கூறினர் رَبَّنَا எங்கள் இறைவா! عَجِّلْ தீவிரப்படுத்து لَّنَا எங்களுக்கு قِطَّنَا எங்கள் பத்திரத்தை, ஆவணத்தை قَبْلَ முன்பாக يَوْمِ الْحِسَابِ‏ விசாரணை நாளுக்கு
38:16. “எங்கள் இறைவா! கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளுக்கு முன்னரே, எங்கள் (வேதனையின்) பாகத்தை துரிதப்படுத்தி(க் கொடுத்து) விடுவாயாக” என்றும் (ஏளனமாகக்) கூறுகின்றனர்.
38:16. இவர்கள், கேள்வி கணக்குக் கேட்கும் நாள் வருவதற்கு முன்னதாகவே, ‘‘எங்கள் இறைவனே! எங்கள் (வேதனையின்) பாகத்தை எங்களுக்குக் கொடுத்துத் தீர்த்துவிடு!'' என்று (பரிகாசமாகக்) கேட்கிறார்கள்.
38:16. இவர்கள் கூறுகிறார்கள்: “எங்கள் இறைவனே! கேள்வி கணக்கிற்குரிய நாளுக்கு முன்பே எங்களின் பங்கினை எங்களுக்கு விரைவாகத் தந்துவிடு!”
38:16. மேலும், “எங்கள் இரட்சகனே! (கேள்வி) கணக்குடைய நாளைக்கு முன்னதாகவே, எங்களுடைய (வேதனையின்) பங்கை எங்களுக்குத் துரிதப் படுத்திவிடுவாயாக!” என்று இவர்கள் (பரிகாசமாகக்) கேட்கின்றார்கள்.
38:17
38:17 اِصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَاذْكُرْ عَبْدَنَا دَاوٗدَ ذَا الْاَيْدِ‌ۚ اِنَّـهٗۤ اَوَّابٌ‏
اِصْبِرْ சகிப்பீராக! عَلٰى مَا يَقُوْلُوْنَ அவர்கள் கூறுவதை وَاذْكُرْ இன்னும் நினைவு கூறுவீராக عَبْدَنَا நமது அடியார் دَاوٗدَ தாவூதை ذَا الْاَيْدِ‌ۚ மிக வலிமை, உறுதி உடைய اِنَّـهٗۤ நிச்சயமாக அவர் اَوَّابٌ‏ முற்றிலும் திரும்பக்கூடியவர்
38:17. இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவராக இருந்தார்.
38:17. (நபியே!) இவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையாக சகித்துக்கொண்டு இருப்பீராக. மேலும், மிக பலசாலியாகிய நம் அடியார் தாவூதை நினைத்துப் பார்ப்பீராக. நிச்சயமாக அவர் (எத்தகைய சிரமத்திலும்) நம்மையே நோக்கி நின்றார்.
38:17. (நபியே!) இவர்கள் பேசும் பேச்சுகளை பொறுத்துக் கொள்ளும். மேலும், பெரும் ஆற்றல்களைக் கொண்டிருந்த நம்முடைய அடியார் தாவூதின் வரலாற்றை இவர்களுக்கு நீர் எடுத்துக்கூறும். அவர் (ஒவ்வொரு விவகாரத்திலும் அல்லாஹ்விடமே) திரும்பக் கூடியவராக இருந்தார்.
38:17. (நபியே!) அவர்கள் கூறுவதின் மீது நீர் பொறுமையாக இருப்பீராக! அன்றியும், மிக்க பலசாலியாகிய நமது அடியார் தாவூதை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் (நம் பக்கமே) மிகுதியாகத் திரும்பக்கூடியவராக இருந்தார்.
38:18
38:18 اِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهٗ يُسَبِّحْنَ بِالْعَشِىِّ وَالْاِشْرَاقِۙ‏
اِنَّا நிச்சயமாக நாம் سَخَّرْنَا வசப்படுத்தினோம் الْجِبَالَ மலைகளை مَعَهٗ அவருடன் يُسَبِّحْنَ (அவை) துதிக்கும் بِالْعَشِىِّ மாலையிலும் وَالْاِشْرَاقِۙ‏ காலையிலும்
38:18. நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்; மாலை வேளையிலும், காலை வேளையிலும் அவை அவருடன் சேர்ந்து (நம்மைத் துதித்து) தஸ்பீஹு செய்தன.
38:18. நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்தித் தந்தோம். காலையிலும், மாலையிலும் அவை அவருடன் சேர்ந்து துதி செய்து கொண்டிருந்தன.
38:18. நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அவை காலையிலும், மாலையிலும் அவருடன் சேர்ந்து (இறைவனைத்) துதி செய்த வண்ணம் இருந்தன.
38:18. நிச்சயமாக, மலைகளை நாம் அவருக்கு வசப்படுத்தித் தந்தோம், அவை அவருடன் சேர்ந்து மாலையிலும், காலையிலும் துதித்துக்கொண்டிருந்தன.
38:19
38:19 وَالطَّيْرَ مَحْشُوْرَةً ؕ كُلٌّ لَّـهٗۤ اَوَّابٌ‏
وَالطَّيْرَ இன்னும் பறவைகளை مَحْشُوْرَةً ؕ ஒன்று சேர்க்கப்பட்ட كُلٌّ لَّـهٗۤ அவை எல்லாம் அவருக்கு اَوَّابٌ‏ கீழ்ப்படிபவையாக
38:19. மேலும் பறவைகளை ஒன்று திரட்டி (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அனைத்தும் அவனையே நோக்குபவையாக இருந்தன.
38:19. பறவைகளின் கூட்டத்தையும், (நாம் அவருக்கு வசப்படுத்தித் தந்தோம்.) அவை, அவருடைய சப்தத்தைப் பின்பற்றி அவரை சூழ்ந்து (அவ்வாறே) சப்தமிட்டன.
38:19. பறவைகளும் ஒன்று திரண்டு வந்தன. அவை அனைத்தும் அல்லாஹ்வைத் துதிப்பதில் கவனம் செலுத்தக் கூடியனவாய் இருந்தன.
38:19. இன்னும், தடுக்கப்பட்டவையாக இருக்கும் நிலையில் பறவைகளையும் (அவருக்கு நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவை ஒவ்வொன்றும் (அவருடன் அல்லாஹ்வைத் துதிசெய்து அவனுக்கு வழிப்படுவதின் மூலம்) அவனின் பக்கம் திரும்பக்கூடியவையாக இருந்தன.
38:20
38:20 وَشَدَدْنَا مُلْكَهٗ وَاٰتَيْنٰهُ الْحِكْمَةَ وَفَصْلَ الْخِطَابِ‏
وَشَدَدْنَا பலப்படுத்தினோம் مُلْكَهٗ அவருடைய ஆட்சியை وَاٰتَيْنٰهُ இன்னும் அவருக்கு கொடுத்தோம் الْحِكْمَةَ ஞானத்தை وَفَصْلَ இன்னும் மிகத்தெளிவான, மிக உறுதியான الْخِطَابِ‏ பேச்சை(யும்)
38:20. மேலும், நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்தினோம்; இன்னும் அவருக்கு ஞானத்தையும், தெளிவான சொல்லாற்றலையும் அளித்தோம்.
38:20. அவருடைய ஆட்சியை நாம் பலப்படுத்தி, அவருக்கு ஞானத்தையும் பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தியையும் கொடுத்தோம்.
38:20. நாம் அவருடைய அரசாட்சியை வலுப்படுத்தியிருந்தோம்; நுண்ணறிவையும் அவருக்கு வழங்கியிருந்தோம். மிக நுட்பமான தீர்ப்பளிக்கும் ஆற்றலையும் நல்கி இருந்தோம்.
38:20. இன்னும், அவருடைய ஆட்சியை நாம் வலுப்படுத்தினோம், அவருக்கு (ஆழ்ந்து சிந்தித்து செயல்படும் உறுதியான) அறிவையும், (விவகாரங்களைத் தீர்க்கும்) தெளிவான விளக்கத்தையும் கொடுத்தோம்.
38:21
38:21 وَهَلْ اَتٰٮكَ نَبَؤُا الْخَصْمِ‌ۘ اِذْ تَسَوَّرُوا الْمِحْرَابَۙ‏
وَهَلْ اَتٰٮكَ உம்மிடம் வந்ததா? نَبَؤُا செய்தி الْخَصْمِ‌ۘ வழக்காளிகளுடைய اِذْ تَسَوَّرُوا அவர்கள் சுவர் ஏறி வந்த சமயத்தை நினைவு கூர்வீராக! الْمِحْرَابَۙ‏ வீட்டின் முன்பக்கமாக
38:21. அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைந்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி -
38:21. (நபியே!) அந்த வழக்காளிகளின் செய்தி உமக்குக் கிடைத்திருக்கிறதா? அவர்கள் (தாவூது வணங்கிக் கொண்டிருந்த) மடத்து அறையின் சுவற்றைத்தாண்டி (வந்து),
38:21. மேலும், சுவர் ஏறி மாடத்தில் நுழைந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா?
38:21. (நபியே!) அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்திருக்கிறதா? (அவர் வணங்கிக்கொண்டிருந்த) தொழுமிடத்தின் சுவரை அவர்கள் தாண்டிய சமயம்_
38:22
38:22 اِذْ دَخَلُوْا عَلٰى دَاوٗدَ فَفَزِعَ مِنْهُمْ‌ قَالُوْا لَا تَخَفْ‌ۚ خَصْمٰنِ بَغٰى بَعْضُنَا عَلٰى بَعْضٍ فَاحْكُمْ بَيْنَنَا بِالْحَقِّ وَلَا تُشْطِطْ وَاهْدِنَاۤ اِلٰى سَوَآءِ الصِّرَاطِ‏
اِذْ دَخَلُوْا அவர்கள் நுழைந்த போது عَلٰى دَاوٗدَ தாவூத் (நபி) இடம் فَفَزِعَ அவர் திடுக்கிற்றார் مِنْهُمْ‌ அவர்களைப் பார்த்து قَالُوْا அவர்கள் கூறினர் لَا تَخَفْ‌ۚ பயப்படாதீர் خَصْمٰنِ நாங்கள் இரு வழக்காளிகள் بَغٰى அநியாயம் செய்தார் بَعْضُنَا எங்களில் ஒருவர் عَلٰى بَعْضٍ ஒருவர் மீது فَاحْكُمْ ஆகவே தீர்ப்பளிப்பீராக! بَيْنَنَا எங்களுக்கு மத்தியில் بِالْحَقِّ நீதமாக وَلَا تُشْطِطْ அநீதி இழைத்து விடாதீர் وَاهْدِنَاۤ எங்களுக்கு வழிகாட்டுவீராக! اِلٰى سَوَآءِ பாதையின் பக்கம் الصِّرَاطِ‏ நேரான
38:22. தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; “பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!”
38:22. தாவூதிடம் நுழைந்தபோது, அவர் அவர்களைப் பற்றி(ப் பயந்து) திடுக்கமுற்றார். அதற்கவர்கள் ‘‘(தாவூதே!) பயப்படாதீர். (நாங்கள் இருவரும்) இரு கட்சிக்காரர்கள். எங்களில் ஒருவர் மற்றொருவர் மீது அநியாயம் செய்திருக்கிறார். எங்களுக்கிடையில் நீர் நீதமாகத் தீர்ப்பளிப்பீராக. அதில் தவறிழைத்து விடாதீர். எங்களை நேரான வழியில் செலுத்துவீராக.
38:22. அவர்கள் தாவூதிடம் வந்தபோது அவர், அவர்களைப் பார்த்துத் திடுக்கிட்டார். அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர்! நாங்கள் ஒரு வழக்கு சம்பந்தமான இரு பிரிவினராவோம். எங்களில் ஒருவர் இன்னொருவருக்கு அநீதி இழைத்துள்ளார். நீர் எங்களிடையே மிகச்சரியாகத் தீர்ப்பு வழங்குவீராக! நேர்மை தவறிவிடாதீர்; எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவீராக!
38:22. தாவூதிடம் அவர்கள் நுழைந்த போது அவர், அவர்களைப்பற்றி திடுக்கமுற்றார். அ(தற்க)வர்கள் (“தாவூதே!) நீர் பயப்படாதீர், (நாங்களிருவரும்) இரு வழக்காளிகள், எங்களில் சிலர் சிலரின் மீது அநியாயம் செய்திருக்கின்றனர், ஆகவே, எங்களுக்கிடையில் உண்மையைக் கொண்டு நீர் தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்தும் விடாதீர், எங்களை நேரான வழியிலும் செலுத்துவீராக!” என்று கூறினார்கள்.
38:23
38:23 اِنَّ هٰذَاۤ اَخِىْ لَهٗ تِسْعٌ وَّتِسْعُوْنَ نَعْجَةً وَّلِىَ نَعْجَةٌ وَّاحِدَةٌ فَقَالَ اَكْفِلْنِيْهَا وَعَزَّنِىْ فِى الْخِطَابِ‏
اِنَّ “நிச்சயமாக هٰذَاۤ இவர் اَخِىْ எனது சகோதரர் لَهٗ அவருக்கு تِسْعٌ وَّتِسْعُوْنَ தொண்ணூற்றி ஒன்பது نَعْجَةً ஆடு(கள்) وَّلِىَ எனக்கு உள்ளது نَعْجَةٌ ஆடுதான் وَّاحِدَةٌ ஒரே ஓர் فَقَالَ அவர் கூறுகிறார் اَكْفِلْنِيْهَا அதை(யும்) எனக்கு தருவாயாக! وَعَزَّنِىْ என்னை மிகைத்துவிட்டார் فِى الْخِطَابِ‏ வாதத்தில்
38:23. (அவர்களில் ஒருவர் கூறினார்:) “நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன; ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது; அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெனச் சொல்லி, வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்.”
38:23. இவர் என் சகோதரர். அவருக்கு தொண்ணூற்றி ஒன்பது ஆடுகள் இருக்கின்றன. என்னிடம் ஒரே ஒரு ஆடுதான் இருக்கிறது. (அவ்வாறிருந்தும்) அவர் அதையும் (தனக்குக்) கொடுத்துவிட வேண்டும் என்று கூறி வாதத்தில் அவர் என்னை ஜெயித்து விட்டார்'' என்று கூறினார்.
38:23. இதோ! இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது செம்மறி ஆடுகள் இருக்கின்றன. என்னிடமோ ஒரே ஒரு செம்மறி ஆடுதான் இருக்கின்றது. ‘இந்த ஒரு செம்மறி ஆட்டையும் என்னிடம் ஒப்படைத்துவிடு!’ என்று என்னிடம் இவர் கூறுகின்றார். பேச்சுசாதுர்யத்தால் இவர் என்னை மடக்கிவிட்டார்.”
38:23. “நிச்சயமாக இவர், என்னுடைய சகோதரர், இவருக்கு தொண்ணூற்றொன்பது பெண் ஆடுகள் இருக்கின்றன, எனக்கு ஒரே ஒரு பெண் ஆடு தான் இருக்கிறது, பின்னர் அவர், “அதனை என் பொறுப்பில் ஆக்கி (எனக்கு கொடுத்து) விடு” என்று கூறி, வாதத்தில் அவர் என்னை மிகைத்தும் விட்டார்“ (என்று கூறினார்).
38:24
38:24 قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ اِلٰى نِعَاجِهٖ‌ ؕ وَاِنَّ كَثِيْرًا مِّنَ الْخُلَـطَآءِ لَيَبْغِىْ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَلِيْلٌ مَّا هُمْ‌ ؕ وَظَنَّ دَاوٗدُ اَنَّمَا فَتَنّٰهُ فَاسْتَغْفَرَ رَبَّهٗ وَخَرَّ رَاكِعًا وَّاَنَابَ ۩
قَالَ கூறினார் لَقَدْ ظَلَمَكَ அவர் உனக்கு அநீதி இழைத்துவிட்டார் بِسُؤَالِ (அவர்) கேட்டதினால் نَعْجَتِكَ உனது ஆட்டை اِلٰى نِعَاجِهٖ‌ ؕ தனது ஆடுகளுடன் சேர்க்க وَاِنَّ நிச்சயமாக كَثِيْرًا அதிகமானவர்கள் مِّنَ الْخُلَـطَآءِ பங்காளிகளில் لَيَبْغِىْ அநீதிஇழைக்கின்றனர் بَعْضُهُمْ அவர்களில் சிலர் عَلٰى بَعْضٍ சிலர் மீது اِلَّا தவிர الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை وَقَلِيْلٌ مَّا மிகக் குறைவானவர்களே! هُمْ‌ ؕ அவர்கள் وَظَنَّ அறிந்தார் دَاوٗدُ தாவூத் اَنَّمَا فَتَنّٰهُ நாம் அவரை சோதித்தோம் என்பதை فَاسْتَغْفَرَ ஆகவே, அவர் மன்னிப்புக் கேட்டார் رَبَّهٗ தன் இறைவனிடம் وَخَرَّ இன்னும் விழுந்தார் رَاكِعًا சிரம் பணிந்தவராக وَّاَنَابَ ۩‏ இன்னும் அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்
38:24. (அதற்கு தாவூது:) “உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்சயமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர; இத்தகையவர் சிலரே” என்று கூறினார்; இதற்குள்: “நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்” என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக் குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார்.
38:24. அதற்கு தாவூத், ‘‘உன் ஆட்டை, அவர் தன் ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்பது நிச்சயமாக அவர் உம் மீது செய்யும் அநியாயமாகும். கூட்டாளிகளில் பெரும்பாலானவர்கள், ஒருவர் ஒருவரை மோசம் செய்து விடுகின்றனர்; நம்பிக்கை கொண்டு நற்செயல் செய்கிறவர்களைத் தவிர, (நம்பிக்கையாளர்கள் அவ்வாறு செய்வதில்லை. மோசம் செய்யாத) இத்தகையவர்கள் வெகு சிலரே!'' என்று கூறினார். இதற்குள் நிச்சயமாக நாம் தாவூதை சோதனைக்குள்ளாக்கி விட்டோம் என்று தாவூத் எண்ணி, தன் இறைவனிடம் தன் குற்றத்தை மன்னிக்கும்படி கோரி, சிரம் பணிந்து வணங்கி தன் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தார்.
38:24. தாவூத் பதிலளித்தார்: “இவர் தன்னுடைய செம்மறி ஆடுகளுடன் உம்முடைய செம்மறி ஆட்டையும் இணைத்துக் கொள்வதாகக் கோரியதன் மூலம் திண்ணமாக உமக்கு அநீதி இழைத்து விட்டார். உண்மையில் ஒன்றுகூடி வாழும் மக்களில் பெரும்பாலோர், ஒருவர் மற்றவர் மீது வரம்புமீறி நடந்து கொள்கின்றார்கள். ஆயினும் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ, அவர்கள்தாம் இதிலிருந்து தப்பித்திருக்கின்றார்கள். இத்தகையோர் மிகச்சிலரே ஆவர்.” (இவ்வாறு கூறிக்கொண்டிருந்தபோதே) உண்மையில் நாம் அவரை சோதித்திருக்கின்றோம் என்பதை தாவூத் உணர்ந்து விட்டார். உடனே தம்முடைய இறைவனிடம் மன்னிப்புக் கோரினார். மேலும் ஸஜ்தாவில்* விழுந்து விட்டார்; இறைவன் பக்கம் மீண்டார்.
38:24. (அதற்கு தாவூத்) “உம்முடைய பெண் ஆட்டை அவர் தன்னுடைய பெண் ஆடுகளுடன் சேர்த்துவிடுமாறு கேட்டதனால், நிச்சயமாக அவர் உமக்கு அநியாயமிழைத்து விட்டார்; இன்னும் நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர், அவர்களில் சிலர் மற்ற சிலரின் மீது வரம்பு மீறிவிடுகின்றனர், விசுவாசங் கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களே அத்தகையோர்களைத் தவிர, இவர்கள் குறைந்தவர்களே” என்று கூறினார், (இதற்குள்) தாவூத் நிச்சயமாக நாமே (அவர் தீர்ப்பு செய்யும் திறன் படைத்தவரா? என) அவரைச் சோதனைக்குள்ளாக்கிவிட்டோம் என்று எண்ணினார், ஆகவே, தன் இரட்சகனிடம் மன்னிப்புத் தேடி, குனிந்தவராக (ஸஜ்தாவில்) விழுந்தார், மேலும், (அல்லாஹ்வின் பால் தவ்பா செய்து) மீண்டார்.
38:25
38:25 فَغَفَرْنَا لَهٗ ذٰ لِكَ‌ ؕ وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰى وَحُسْنَ مَاٰبٍ‏
فَغَفَرْنَا மன்னித்தருளினோம் لَهٗ அவருக்கு ذٰ لِكَ‌ ؕ அதை وَاِنَّ لَهٗ நிச்சயமாக அவருக்கு عِنْدَنَا நம்மிடம் لَزُلْفٰى மிக நெருக்கமும் وَحُسْنَ அழகிய مَاٰبٍ‏ மீளுமிடமும் உண்டு
38:25. ஆகவே, நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னித்தோம்; அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.
38:25. ஆதலால், நாம் அவருடைய குற்றத்தை மன்னித்து விட்டோம். நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் மிக நெருங்கிய பெரும் பதவியும் அழகான இருப்பிடமும் உண்டு.
38:25. அப்போது நாம் அவருடைய அந்தத் தவறை மன்னித்து விட்டோம். திண்ணமாக நம்மிடத்தில் அவருக்கு நெருக்கமும் நல்ல முடிவும் இருக்கின்றன.
38:25. எனவே, (தாம் குற்றம் இழைத்துவிட்டதாக) அ(வர் கருதிய)தை அவருக்கு நாம் மன்னித்துவிட்டோம், நிச்சயமாக அவருக்கு, நம்மிடத்தில் (மிக்க) நெருக்கமும், அழகான இருப்பிடமும் உண்டு.
38:26
38:26 يٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِيْفَةً فِى الْاَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰى فَيُضِلَّكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ اِنَّ الَّذِيْنَ يَضِلُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌۢ بِمَا نَسُوْا يَوْمَ الْحِسَابِ‏
يٰدَاوٗدُ தாவூதே! اِنَّا நிச்சயமாக நாம் جَعَلْنٰكَ உம்மை ஆக்கினோம் خَلِيْفَةً அதிபராக فِى الْاَرْضِ இந்த பூமியில் فَاحْكُمْ ஆகவே தீர்ப்பளிப்பீராக! بَيْنَ மத்தியில் النَّاسِ மக்களுக்கு بِالْحَقِّ சத்தியத்தைக் கொண்டு وَلَا تَتَّبِعِ பின்பற்றிவிடாதீர் الْهَوٰى ஆசையை فَيُضِلَّكَ அது உம்மை வழிகெடுத்து விடும் عَنْ سَبِيْلِ மார்க்கத்தில் இருந்து اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ يَضِلُّوْنَ வழிகெடுபவர்கள் عَنْ سَبِيْلِ மார்க்கத்தில் இருந்து اللّٰهِ அல்லாஹ்வின் لَهُمْ அவர்களுக்கு عَذَابٌ வேதனை شَدِيْدٌۢ கடுமையான(து) بِمَا نَسُوْا அவர்கள் மறந்ததால் يَوْمَ நாளை الْحِسَابِ‏ விசாரணை
38:26. (நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.  
38:26. ஆதலால், (நாம் அவரை நோக்கி) ‘‘தாவூதே! நிச்சயமாக நாம் உம்மைப் பூமியில் (நம்) பிரதிநிதியாக ஆக்கினோம். ஆதலால், நீர் மனிதர்களுக்கிடையில், நியாயமாகத் தீர்ப்பு கூறுவீராக. சரீர இச்சையைப் பின்பற்றாதீர். அது உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்தும் தவறி விடும்படி செய்யும். எவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து தவறுகிறார்களோ அவர்கள் கேள்வி கணக்குக் கேட்கும் நாளை மறந்து விடுவார்கள். அதன் காரணமாக, அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு'' (என்று கூறினோம்).
38:26. (நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நாம் உம்மை பூமியில் பிரதிநிதியாக ஆக்கியிருக்கின்றோம். எனவே, நீர் மக்களிடையே நீதியுடன் ஆட்சி செலுத்தும். மேலும், மன இச்சைகளைப் பின்பற்றாதீர். அது, அல்லாஹ்வின் வழியிலிருந்து உம்மைப் பிறழச் செய்துவிடும். எவர்கள் அல்லாஹ்வுடைய வழியிலிருந்து பிறழ்ந்துவிடுகின்றார்களோ, அவர்களுக்குத் திண்ணமாக கடும் தண்டனை இருக்கிறது; கேள்வி கணக்கிற்குரிய நாளை அவர்கள் மறந்துவிட்ட காரணத்தால்!
38:26. “தாவூதே! நிச்சயமாக நாம், உம்மை பூமியில் பிரதிநிதியாக ஆக்கினோம், ஆகவே நீர் மனிதர்களுக்கிடையில், சத்தியத்தைக் கொண்டுத் தீர்ப்புச் செய்வீராக! மனோ இச்சையைப் பின்பற்றவேண்டாம். (பின்பற்றினால்,) அது உம்மை அல்லாஹ்வுடைய பாதையைவிட்டும் வழிதவறச் செய்துவிடும், நிச்சயமாக அல்லாஹ்வின் பாதையைவிட்டு வழி தவறி விடுகின்றார்களே அத்தகையவர்கள்_ (கேள்வி) கணக்கு (க்கேட்கும்) நாளை அவர்கள் மறந்து விட்டதன் காரணமாக, அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு” (என்று கூறினோம்).
38:27
38:27 وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا ‌ؕ ذٰ لِكَ ظَنُّ الَّذِيْنَ كَفَرُوْا‌ۚ فَوَيْلٌ لِّلَّذِيْنَ كَفَرُوْا مِنَ النَّارِؕ‏
وَمَا خَلَقْنَا நாம் படைக்கவில்லை السَّمَآءَ வானத்தையும் وَالْاَرْضَ பூமியையும் وَمَا بَيْنَهُمَا அவ்விரண்டுக்கு மத்தியில் உள்ளவற்றையும் بَاطِلًا ؕ ذٰ لِكَ அது/வீணாக ظَنُّ எண்ணமாகும் الَّذِيْنَ كَفَرُوْا‌ۚ நிராகரிப்பவர்களின் فَوَيْلٌ நாசம் لِّلَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பவர்களுக்கு مِنَ النَّارِؕ‏ நரகத்தில்
38:27. மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு.
38:27. வானங்களையும் பூமியையும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) நிராகரிப்பவர்களின் எண்ணமே ஆகும். நிராகரிக்கும் இவர்களுக்குக் கேடுதான்; இவர்களுக்கு நரகமே கிடைக்கும்.
38:27. நாம் இந்த வானத்தையும், பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள இந்த உலகத்தையும் வீணாகப் படைத்திடவில்லை. நிராகரிப்பாளர்களின் கருத்தாகும் இது. இத்தகைய நிராகரிப் பாளர்களுக்கு நரக நெருப்பின் மூலம் அழிவுதான் இருக்கின்றது.
38:27. வானத்தையும், பூமியையும், இவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றையும் வீணாக நாம் படைக்கவில்லை, இது நிராகரித்தார்களே அத்தகையோரின் எண்ணமேயாகும், ஆகவே, நிராகரித்துவிட்டார்களே அத்தகையவர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் (உண்டு).
38:28
38:28 اَمْ نَجْعَلُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَالْمُفْسِدِيْنَ فِى الْاَرْضِ اَمْ نَجْعَلُ الْمُتَّقِيْنَ كَالْفُجَّارِ‏
اَمْ نَجْعَلُ ஆக்குவோமா? الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை كَالْمُفْسِدِيْنَ குழப்பம் செய்பவர்களைப் போன்று فِى الْاَرْضِ பூமியில் اَمْ نَجْعَلُ ஆக்குவோமா? الْمُتَّقِيْنَ இறையச்சமுடையவர்கள் كَالْفُجَّارِ‏ பாவிகளைப் போன்று
38:28. அல்லது ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம் செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது, பயபக்தியுடையோரைப் பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?
38:28. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களை பூமியில் விஷமம் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது இறையச்சமுடையவர்களை (குற்றம்புரியும்) பாவிகளைப்போல் நாம் ஆக்கி விடுவோமா?
38:28. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்களையும் பூமியில் அராஜகம் செய்து திரிபவர்களையும் நாம் சமமாக்கிவிடுவோமா, என்ன? இறையச்சமுள்ளோரை ஒழுக்கக்கேடர்களைப் போன்று ஆக்குவோமா, என்ன?
38:28. அல்லது விசுவாசங்கொண்டு, நற்கருமங்களும் செய்தார்களே அத்தகையோரை, பூமியில் குழப்பம் செய்கிறவர்களைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது பயபக்தியுடைவர்களை (குற்றம் புரியும்) பாவிகளைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா?
38:29
38:29 كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِهٖ وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ‏
كِتٰبٌ ஒரு வேதமாகும் اَنْزَلْنٰهُ இதை நாம் இறக்கினோம் اِلَيْكَ உமக்கு مُبٰرَكٌ அருள் நிறைந்த(து) لِّيَدَّبَّرُوْۤا அவர்கள் சிந்திப்பதற்காக(வும்) اٰيٰتِهٖ இதன் வசனங்களை وَلِيَتَذَكَّرَ அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக اُولُوا الْاَلْبَابِ‏ அறிவுள்ளவர்கள்
38:29. (நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.
38:29. (நபியே!) இவ்வேதத்தை நாமே உம் மீது இறக்கிவைத்தோம். இது மிக பாக்கியமுள்ளது. அறிவுடையவர்கள் இதன் வசனங்களை கவனித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக!
38:29. இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். (நபியே!) இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக!
38:29. (நபியே! குர் ஆனாகிய இது, அதன் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக இருக்க) பாக்கியமிக்க வேதமாகும், இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், (இதனை கொண்டு) அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் நாம் இதை உம்மீது இறக்கிவைத்தோம்.
38:30
38:30 وَوَهَبْنَا لِدَاوٗدَ سُلَيْمٰنَ‌ ؕ نِعْمَ الْعَبْدُ‌ ؕ اِنَّـهٗۤ اَوَّابٌ ؕ ‏
وَوَهَبْنَا நாம் வழங்கினோம் لِدَاوٗدَ தாவூதுக்கு سُلَيْمٰنَ‌ ؕ சுலைமானை نِعْمَ الْعَبْدُ‌ ؕ அவர் சிறந்த அடியார் اِنَّـهٗۤ நிச்சயமாக அவர் اَوَّابٌ ؕ அல்லாஹ்வின் பக்கம் அதிகம் திரும்புகின்றவர்
38:30. இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.
38:30. தாவூதுக்கு, ஸுலைமானை நாம் மகனாகத் தந்தருள் புரிந்தோம். அவர் மிக நல்லடியார். மெய்யாகவே அவர் (ஒவ்வொரு விஷயத்திலும்) நம்மையே நோக்கி நின்றார்.
38:30. நாம் தாவூதுக்கு ஸுலைமா(ன் போன்ற மைந்த)னை வழங்கினோம். அவர் மிகச்சிறந்த அடியாராகவும், தம்முடைய இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக்கூடியவராகவும் திகழ்ந்தார்.
38:30. மேலும் தாவூதுக்கு, ஸுலைமானை அன்பளிப்பாக நாம் வழங்கினோம்; (அவர்) மிக்க நல்லடியார்_நிச்சயமாக அவர், (நம்பக்கமே) மிகுதியாகத் திரும்புபவர்.
38:31
38:31 اِذْ عُرِضَ عَلَيْهِ بِالْعَشِىِّ الصّٰفِنٰتُ الْجِيَادُ ۙ‏
اِذْ عُرِضَ சமர்ப்பிக்கப்பட்ட போது عَلَيْهِ அவருக்கு முன் بِالْعَشِىِّ மாலை நேரத்தில் الصّٰفِنٰتُ குதிரைகள் الْجِيَادُ ۙ‏ விரைந்து ஓடக்கூடிய, அமைதியாக நிற்கக்கூடிய
38:31. நன்கு பயிற்சியளிக்கப்பட்ட உயர்ந்த குதிரைகள் (ஒரு) மாலை நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்ட பொழுது:
38:31. (யுத்தத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த) உயர்ந்த குதிரைகள் (ஒரு நாளன்று) மாலை நேரத்தில், அவர் முன் கொண்டு வரப்பட்டபொழுது (அதைப் பார்த்துக் கொண்டிருந்ததனால், சூரியன் அஸ்தமித்து அவருடைய அஸர் தொழுகை தவறி விட்டது. அதற்கவர்:)
38:31. அந்தச் சந்தர்ப்பம் நினைவு கூரத்தக்கதாகும். நன்கு பயிற்சி பெற்ற குதிரைகள் மாலை நேரத்தில் அவர் முன்னால் கொண்டு வரப்பட்டபோது,
38:31. மூன்று கால்களிலும், நான்காவது காலின் குழம்பிலும் நின்று, துரிதமாகச் செல்லும் (பயிற்சி அளிக்கப்பட்ட) குதிரைகள் (ஒரு நாளன்று) மாலை நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்டபொழுது,
38:32
38:32 فَقَالَ اِنِّىْۤ اَحْبَبْتُ حُبَّ الْخَيْرِ عَنْ ذِكْرِ رَبِّىْ‌ۚ حَتّٰى تَوَارَتْ بِالْحِجَابِ‏
فَقَالَ அவர் கூறினார் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَحْبَبْتُ பிரியம் வைத்து விட்டேன் حُبَّ பிரியத்தை الْخَيْرِ செல்வத்தின் عَنْ ذِكْرِ தொழுவதை விட்டு رَبِّىْ‌ۚ என் இறைவனை حَتّٰى இறுதியாக تَوَارَتْ மறைந்து விட்டது بِالْحِجَابِ‏ திரையில்
38:32. “நிச்சயமாக நான் (சூரியன் இரவாகிய) திரைக்குள் மறைந்து விடும்வரை, என்னுடைய இறைவனை நினைப்பது விட்டும் இந்த நல்ல பொருட்களின் மேல் அதிக அன்பாக அன்பு பாராட்டிவிட்டேன்” என அவர் கூறினார்.
38:32. ‘‘நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறைந்துவிடும் வரை, அல்லாஹ்வின் திருப்பெயரை நினைவுகூர்வதை விட்டுப் பொருளை அதிகமாக அன்பு கொண்டு விட்டேனே (என்று மனம் வருந்தி),
38:32. அவர் கூறினார்: “என்னுடைய இறைவனை நினைவுகூர்வதற்காகவே நான் இச்செல்வத்தை நேசிக்கின்றேன்.” இறுதியாக அக்குதிரைகள் கண்ணைவிட்டு மறைந்தபோது (அவர்கட்டளையிட்டார்:)
38:32. (அதன் மேல் கவனம் கொண்டதனால், சூரியன் அஸ்தமித்து, அவருடைய தியான நேரம் தவறிவிட்டது, அதற்கவர்) ”நிச்சயமாக நான் (சூரியன்) திரையினுள் மறைந்துவிடும் வரை என் இரட்சகனை நினைவுகூர்வதைவிட்டும் இந்த நல்ல பொருள்களை அதிகமாக அன்பு கொண்டுவிட்டேன்” என்று கூறினார்.
38:33
38:33 رُدُّوْهَا عَلَىَّ ؕ فَطَفِقَ مَسْحًۢا بِالسُّوْقِ وَ الْاَعْنَاقِ‏
رُدُّوْهَا அவற்றை திரும்பக் கொண்டு வாருங்கள் عَلَىَّ ؕ என்னிடம் فَطَفِقَ ஆரம்பித்தார் مَسْحًۢا அவற்றைத் தடவ بِالسُّوْقِ கெண்டை கால்களிலும் وَ الْاَعْنَاقِ‏ கழுத்துகளிலும்
38:33. “என்னிடம் அவற்றை திரும்ப கொண்டு வாருங்கள் (என்று கூறினார்; அவை திரும்ப கொண்டு வரப்பட்டபின்) அவற்றின் பின்னங்கால்களையும் கழுத்துகளையும் தடவிக் கொடுத்தார்.”
38:33. அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள்'' எனக் கூறி, அவற்றின் பின்னங்கால்களையும், கழுத்துக்களையும் (கையினால் நீவி) தடவிக் கொடுத்தார்.
38:33. “அவற்றை என்னிடம் திரும்பக் கொண்டு வாருங்கள்!” பிறகு அவற்றின் கெண்டைக் கால்களையும், பிடரிகளையும் கையினால் தடவினார்.
38:33. “அவற்றை என்னிடம் திரும்பக்கொண்டுவாருங்கள்” எனக் கூறி அவைகளின் பின்னங்கால்களையும் கழுத்துகளையும் (கையால்) தடவிக்கொடுத்தார்.
38:34
38:34 وَلَقَدْ فَتَنَّا سُلَيْمٰنَ وَاَلْقَيْنَا عَلٰى كُرْسِيِّهٖ جَسَدًا ثُمَّ اَنَابَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக فَتَنَّا நாம் சோதித்தோம் سُلَيْمٰنَ சுலைமானை وَاَلْقَيْنَا போட்டோம் عَلٰى كُرْسِيِّهٖ அவருடை நாற்காலியில் جَسَدًا ஓர் உடலை ثُمَّ பிறகு اَنَابَ‏ அவர் திரும்பிவிட்டார்
38:34. இன்னும் நாம் ஸுலைமானைத் திட்டமாகச் சோதித்தோம்; அவருடைய அரியணையில் ஒரு முண்டத்தை எறிந்தோம் - ஆகவே அவர் (நம்மளவில்) திரும்பினார்.
38:34. நிச்சயமாக நாம் ஸுலைமானை (மற்றொரு விதத்திலும்) சோதனை செய்து, அவருடைய சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தை எறிந்தோம். பிறகு, அவர் நம்மளவில் திரும்பிவிட்டார்.
38:34. பிறகு (பாருங்கள்) நாம் ஸுலைமானையும் சோதனைக்குள்ளாக்கினோம்; அவருடைய அரியணையில் ஒரு சடலத்தைக் கொண்டு வந்து போட்டோம். பிறகு அவர் (தம்முடைய இறைவன் பக்கம்) திரும்பினார்.
38:34. இன்னும் நிச்சயமாக, நாம் ஸுலைமானை (மற்றொரு விதத்திலும்) சோதித்தோம், மேலும், அவருடைய சிம்மாசனத்தில் ஒரு சடலத்தை நாம் போட்டோம், பின்னர் அவர், (நம்மளவில்) திரும்பினார்.
38:35
38:35 قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْۢبَغِىْ لِاَحَدٍ مِّنْۢ بَعْدِىْ‌ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! اغْفِرْ لِىْ என்னை மன்னிப்பாயாக! وَهَبْ لِىْ இன்னும் எனக்குத் தா مُلْكًا ஓர் ஆட்சியை لَّا يَنْۢبَغِىْ தகுதியாகாத لِاَحَدٍ வேறு ஒருவருக்கும் مِّنْۢ بَعْدِىْ‌ۚ எனக்குப் பிறகு اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْوَهَّابُ‏ மகா பெரிய கொடைவள்ளல்
38:35. “என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்” எனக் கூறினார்.
38:35. ஆகவே, அவர் ‘‘என் இறைவனே! என் குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ தந்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீதான் பெரும் கொடையாளி'' என்று பிரார்த்தனை செய்தார்.
38:35. “என்னுடைய இறைவா! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையான கொடையாளன்!”
38:35. (ஆகவே) “என் இரட்சகனே! என்னை மன்னித்து விடுவாயாக! எனக்குப் பின்னர், எவருக்குமே கிடைக்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ அன்பளிப்புச் செய்வாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய்” என்று (பிரார்த்தனை செய்து) அவர் கூறினார்.
38:36
38:36 فَسَخَّرْنَا لَهُ الرِّيْحَ تَجْرِىْ بِاَمْرِهٖ رُخَآءً حَيْثُ اَصَابَۙ‏
فَسَخَّرْنَا ஆகவே, நாம் கட்டுப்படுத்திக் கொடுத்தோம் لَهُ அவருக்கு الرِّيْحَ காற்றை تَجْرِىْ அது வீசும் بِاَمْرِهٖ அவருடைய கட்டளைக்கிணங்க رُخَآءً மென்மையாக حَيْثُ اَصَابَۙ‏ அவர் விரும்புகின்ற இடத்திற்கு
38:36. ஆகவே, நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்; அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.
38:36. ஆதலால், (அவர் விரும்பிய ஆட்சியைக் கொடுத்துக்) காற்றையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய கட்டளையின் படி, அவர் செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் மிக்க சௌகரியமாகவே (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.
38:36. அப்போது நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய ஆணையால் அவர் விரும்பிய திசையில் மென்மையாய் வீசிக்கொண்டிருந்தது.
38:36. ஆதலால், காற்றை அவருக்கு நாம் வசப்படுத்திக் கொடுத்தோம், அது அவருடைய கட்டளையின் பிரகாரம் அவர் நாடியவாறு (பல இடங்களுக்கும்) மிக்க இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.
38:37
38:37 وَالشَّيٰطِيْنَ كُلَّ بَنَّآءٍ وَّغَوَّاصٍۙ‏
وَالشَّيٰطِيْنَ இன்னும் ஷைத்தான்களை كُلَّ அனைவரையும் بَنَّآءٍ கட்டிட சிற்பிகள் وَّغَوَّاصٍۙ‏ இன்னும் முத்துக்குளிப்பவர்கள்
38:37. மேலும், ஷைத்தான்களிலுள்ள கட்டடங்கட்டுவோர், முத்துக்குளிப்போர் ஆகிய யாவரையும்;
38:37. மேலும், ஷைத்தான்களில் உள்ள சிற்பிகள், முத்துக் குளிப்பவர்கள் ஆகிய அனைவரையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்.
38:37. கட்டடம் கட்டக்கூடிய, நீரில் மூழ்கக்கூடிய வகைவகையான ஷைத்தான்களையும்,
38:37. அன்றியும், ஷைத்தான்களிலுள்ள கட்டடங்கட்டுவோர் (இன்னும் விலை உயர்ந்த முத்துக்கள் போன்ற சாதனங்களை எடுத்து வரக் கடலில்) மூழ்குவோர் ஆகிய ஒவ்வொருவரையும்_
38:38
38:38 وَّاٰخَرِيْنَ مُقَرَّنِيْنَ فِىْ الْاَصْفَادِ‏
وَّاٰخَرِيْنَ இன்னும் மற்றவர்களை مُقَرَّنِيْنَ பிணைக்கப்பட்ட(வர்கள்) فِىْ الْاَصْفَادِ‏ சங்கிலிகளில்
38:38. சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்த வேறு பலரையும் (நாம் அவருக்குக் வசப்படுத்திக் கொடுத்தோம்).
38:38. மேலும், சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வேறு (மூர்க்கர்கள்) பலரையும் அவருக்கு வசப்படுத்தித் தந்தோம்.
38:38. சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்.
38:38. _சங்கிலிகளில் பிணைக்கப்பட்டவர்களான மற்றவர்களையும் (நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்).
38:39
38:39 هٰذَا عَطَآؤُنَا فَامْنُنْ اَوْ اَمْسِكْ بِغَيْرِ حِسَابٍ‏
هٰذَا இது عَطَآؤُنَا நமது அருட்கொடையாகும் فَامْنُنْ ஆகவே நீர் கொடுப்பீராக! اَوْ அல்லது اَمْسِكْ நீரே வைத்துக்கொள்வீராக! بِغَيْرِ حِسَابٍ‏ விசாரணை இருக்காது
38:39. “இது நம்முடைய நன்கொடையாகும்; (நீர் விரும்பினால் இவற்றைப் பிறருக்குக்) கொடுக்கலாம், அல்லது கொடாது நிறுத்திக் கொள்ளலாம் - கேள்வி கணக்கில்லாத நிலையில் (என்று நாம் அவரிடம் கூறினோம்).
38:39. பின்னர், (அவரை நோக்கி) ‘‘இவையெல்லாம் நாம் உமக்கு வழங்கிய கொடைகளாகும். ஆகவே, (இவற்றை) நீர் கணக்கின்றி (எல்லோருக்கும் கொடுத்து) நன்றி செய்யவும். அல்லது (அவற்றை உம்மிடமே) நிறுத்திக் கொள்ளும். (அது உமது விருப்பத்தைப் பொறுத்த விஷயம்'' என்றோம்.)
38:39. (நாம் அவரிடம் கூறினோம்:) “இது நம்முடைய அன்பளிப்பு: இதை உம் விருப்பப்படி வழங்குவதற்கும், வழங்காமல் இருப்பதற்கும் உமக்கு முழு அதிகாரம் இருக்கின்றது. எந்தக் கேள்வி கணக்கும் இல்லை.”
38:39. “இது (உமக்கு கொடுக்கப்பட்ட) நம்முடைய அன்பளிப்பாகும், ஆகவே, (இதிலிருந்து பிறருக்கு கொடுத்து) உபகாரம் செய்யும், அல்லது (உம்மிடமே) நிறுத்திக்கொள்ளும், உம் மீது எந்த கேள்வி கணக்கும் இல்லை”.
38:40
38:40 وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰى وَحُسْنَ مَاٰبٍ‏
وَاِنَّ நிச்சயமாக لَهٗ அவருக்கு عِنْدَنَا நம்மிடம் இருக்கிறது لَزُلْفٰى நெருக்கமும் وَحُسْنَ அழகிய مَاٰبٍ‏ மீளுமிடமும்
38:40. மேலும், நிச்சயமாக அவருக்கு, நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.  
38:40. நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் மிக்க நெருங்கிய மேலான பதவியும் அழகான இருப்பிடமும் உண்டு.
38:40. திண்ணமாக அவருக்கு நம்மிடத்தில் நெருக்கமும் நல்ல முடிவும் இருக்கின்றன.
38:40. நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் (மிக்க) நெருக்கமும் அழகான இருப்பிடமும் உண்டு.
38:41
38:41 وَاذْكُرْ عَبْدَنَاۤ اَيُّوْبَۘ اِذْ نَادٰى رَبَّهٗۤ اَنِّىْ مَسَّنِىَ الشَّيْطٰنُ بِنُصْبٍ وَّعَذَابٍؕ‏
وَاذْكُرْ நினைவு கூர்வீராக عَبْدَنَاۤ நமது அடியார் اَيُّوْبَۘ அய்யூபை اِذْ نَادٰى அவர் அழைத்தபோது رَبَّهٗۤ தன் இறைவனை اَنِّىْ நிச்சயமாக நான் مَسَّنِىَ எனக்கு ஏற்படுத்தி விட்டான் الشَّيْطٰنُ ஷைத்தான் بِنُصْبٍ களைப்பையும் وَّعَذَابٍؕ‏ வலியையும்
38:41. மேலும் (நபியே!) நம்முடைய (நல்) அடியார் அய்யூபை நினைவு கூர்க! அவர் தம் இறைவனிடம், “நிச்சயமாக ஷைத்தான் எனக்குத் துன்பத்தையும், வேதனையையும் கொடுத்து விட்டான்” (என்று கூறிய போது);
38:41. (நபியே!) நம் அடியார் ஐயூபை நினைத்துப் பார்ப்பீராக. அவர் தன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தபொழுது ‘‘நிச்சயமாக எனக்கு ஷைத்தான் துன்பத்தையும் வேதனையையும் கொடுத்து விட்டான்'' (என்று கூறினார்.)
38:41. நம்முடைய அடியார் அய்யூபையும் நினைவுகூர்வீராக! ஒருபோது அவர், “ஷைத்தான் என்னைச் சிரமத்திலும், துன்பத்திலும் ஆழ்த்திவிட்டானே!” என்று தன்னுடைய இறைவனை அழைத்து முறையிட்டார்.
38:41. மேலும் (நபியே!) நமது அடியார் அய்யூபை நினைவு கூர்வீராக! அவர் தன் இரட்சகனை அழைத்(துப் பிரார்த்தனை செய்)து “நிச்சயமாக என்னை ஷைத்தான் துன்பத்தையும், வேதனையும் கொண்டு தீண்டிவிட்டான்” (என்று கூறியபோது, அதற்கு நாம்)
38:42
38:42 اُرْكُضْ بِرِجْلِكَ‌ ۚ هٰذَا مُغْتَسَلٌ ۢ بَارِدٌ وَّشَرَابٌ‏
اُرْكُضْ அடிப்பீராக! بِرِجْلِكَ‌ ۚ உமது காலால் هٰذَا இது مُغْتَسَلٌ ۢ குளிக்கின்ற நீராகும் بَارِدٌ குளிர்ந்த(து) وَّشَرَابٌ‏ இன்னும் குடிக்கின்ற நீராகும்
38:42. “உம்முடைய காலால் (பூமியைத்) தட்டும்” (அவ்வாறு தட்டவே ஒரு நீருற்றுப் பொங்கி வந்ததும்) “இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும், பானமும் (உமக்கு) இருக்கின்றன” (என்று சொன்னோம்).
38:42. (அதற்கு நாம்) ‘‘உமது காலை(ப் பூமியில்) தட்டுவீராக'' (என்று கூறினோம். அவர் தட்டவே ஓர் ஊற்று உதித் தோடியது. அவரை நோக்கி) ‘‘இதோ குளிப்பதற்கான குளிர்ந்த நீர். (இதுவே உமது) பானமுமாகும்'' (என்று கூறினோம். அதனால் அவருடைய நோய்கள் குணமாகி விட்டன.)
38:42. (அப்பொழுது நாம் அவருக்குக் கட்டளையிட்டோம்:) பூமியில் உம்முடைய கால்களைக் கொண்டு உதையும். இதோ குளிப்பதற்கும், குடிப்பதற்கும் குளிர்ந்த நீர்!
38:42. “உம்முடைய காலால் (பூமியில்) அடியும்” (என்று கூறினோம், அவர் அடிக்கவே அங்கு ஓர் ஊற்று உதித்தோடியது, அவரிடம்.) “இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும், பானமும் இருக்கின்றன (என்று கூறினோம், அதனால், அவருடைய நோய் குணமாகிவிட்டது).
38:43
38:43 وَوَهَبْنَا لَهٗۤ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنَّا وَذِكْرٰى لِاُولِى الْاَلْبَابِ‏
وَوَهَبْنَا நாம் கொடுத்தோம் لَهٗۤ அவருக்கு اَهْلَهٗ அவருடைய குடும்பத்தாரை(யும்) وَمِثْلَهُمْ அவர்கள் போன்றவர்களையும் مَّعَهُمْ அவர்களுடன் رَحْمَةً கருணையாகவும் مِّنَّا நம் புறத்தில் இருந்து وَذِكْرٰى இன்னும் ஓர் உபதேசமாக لِاُولِى الْاَلْبَابِ‏ அறிவுள்ளவர்களுக்கு
38:43. பின்னர் நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் அறிவுடையயோருக்கு நினைவூட்டுதலாகவும் அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம்.
38:43. பின்னர், நம் அருளாகவும் அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் நாம் அவருக்கு(ப் பிரிந்திருந்த) அவருடைய குடும்பத்தாரையும் அவர்கள் போன்றவர்களையும் அவர்களுடன் கொடுத்து அருள் புரிந்தோம்.
38:43. நாம் அவருக்கு அவருடைய குடும்பத்தாரைத் திருப்பிக் கொடுத்தோம். மேலும், அவர்களோடு அதே அளவுக்கு மற்றவர்களையும் அவருக்கு வழங்கினோம். நமது சார்பிலிருந்து அருளாகவும், அறிவுடையோருக்குப் படிப்பினையாகவும்!
38:43. மேலும், நம்மிடமிருந்து அருளாகவும், அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் அவருக்கு அவருடைய குடும்பத்தினரையும், அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நாம் அன்பளிப்பாக வழங்கினோம்.
38:44
38:44 وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِبْ بِّهٖ وَلَا تَحْنَثْ‌ؕ اِنَّا وَجَدْنٰهُ صَابِرًا‌ ؕ نِعْمَ الْعَبْدُ‌ ؕ اِنَّـهٗۤ اَوَّابٌ‏
وَخُذْ இன்னும் எடுப்பீராக بِيَدِكَ உமது கரத்தால் ضِغْثًا ஒரு பிடி புல்லை فَاضْرِبْ அடிப்பீராக! بِّهٖ அதன்மூலம் وَلَا تَحْنَثْ‌ؕ நீர் சத்தியத்தை முறிக்காதீர்! اِنَّا நிச்சயமாக நாம் وَجَدْنٰهُ அவரைக் கண்டோம் صَابِرًا‌ ؕ பொறுமையாளராக نِعْمَ الْعَبْدُ‌ ؕ அவர் சிறந்த அடியார் اِنَّـهٗۤ நிச்சயமாக அவர் اَوَّابٌ‏ அல்லாஹ்வின் பக்கமே திரும்பியவர்
38:44. “ஒரு பிடி புல் (கற்றையை) உம்கையில் எடுத்து, அதைக் கொண்டு (உம் மனைவியை) அடிப்பீராக; நீர் (உம்) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்” (என்று கூறினோம்). நிச்சயமாக நாம் அவரைப் பொறுமையுடையவராகக் கண்டோம்; அவர் சிறந்த நல்லடியார் - நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார்.
38:44. ‘‘ஒரு பிடி (புல்) கத்தையை எடுத்து, அதைக்கொண்டு (உமது மனைவியை) அடிப்பீராக. நீர் உமது சத்தியத்தை முறிக்க வேண்டியதில்லை'' (என்று கூறினோம்.) நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமை உடையவராகவே கண்டோம். அவர் மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை) நோக்கினவராகவே இருந்தார்.
38:44. மேலும், (நாம் அவரிடம் கூறினோம்:) ‘ஒருபிடி புல்லை எடுத்து அதைக்கொண்டு அடியும்; உம்முடைய சத்தியத்தை முறித்து விடாதிரும்.’ அவரை நாம் பொறுமையாளராய்க் கண்டோம். அவர் மிகச்சிறந்த அடியாராகவும் தம் இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக் கூடியவராகவும் திகழ்ந்தார்.
38:44. மேலும், “புல்லிலிருந்து ஒரு பிடியை உமது கையில் எடுத்து, அதனைக் கொண்டு (உம் மனைவியை) அடியும், நீர் (உம்முடைய) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்” (என்று கூறினோம்). நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமையாளராகவே கண்டோம், (அவர்) மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (நம்பால்) அதிகமாக மீளக்கூடியவராக இருந்தார்.
38:45
38:45 وَاذْكُرْ عِبٰدَنَاۤ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ اُولِى الْاَيْدِىْ وَالْاَبْصَارِ‏
وَاذْكُرْ நினைவு கூர்வீராக عِبٰدَنَاۤ நமது அடியார்களான اِبْرٰهِيْمَ இப்ராஹீம் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ யஃகூப் اُولِى الْاَيْدِىْ பலமும் உடையவர்களான وَالْاَبْصَارِ‏ அகப்பார்வையும்
38:45. (நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக!
38:45. (நபியே!) நம் அடியார்கள் இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூபையும் நினைத்துப் பார்ப்பீராக. இவர்கள் கொடையாளிகளாகவும், அகப்பார்வை உடையவர்களாகவும் இருந்தார்கள்.
38:45. மேலும், நம்முடைய அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரை நினைவுபடுத்துவீராக! அவர்கள் மிகுந்த செயலாற்றல் கொண்டவர்களாகவும், நுண்ணோக்கு உடையவர்களாகவும் இருந்தார்கள்.
38:45. (நபியே! அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும்) ஆற்றல்களும், (மார்க்கத்தின் நுணுக்கங்களை விளங்கும்) பார்வைகளும் உடையவர்களாக இருந்த நமது அடியார்களான இப்றாஹீமையும், இஸ்ஹாக்கையும், யஃகூபையும் நினைவு கூர்வீராக!
38:46
38:46 اِنَّاۤ اَخْلَصْنٰهُمْ بِخَالِصَةٍ ذِكْرَى الدَّارِ‌ۚ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَخْلَصْنٰهُمْ அவர்களை மிகத் தூய்மையாக தேர்ந்தெடுத்தோம் بِخَالِصَةٍ சிறப்பைக் கொண்டு ذِكْرَى உபதேசம் எனும் الدَّارِ‌ۚ‏ மறுமையின்
38:46. நிச்சயமாக, நாம் இவர்களை (மறுமை) வீட்டை நினைவூட்டுவதற்காகவே பூரண பரிசுத்தமானவர்களாக(த் தேர்ந்தெடுத்தோம்).
38:46. மறுமையை (மக்களுக்கு) எந்நேரமும் ஞாபகமூட்டுவதற்காக அவர்களை நாம் பிரத்யேகப்படுத்தினோம்.
38:46. மறுமையை நினைவுகூர்வது எனும் ஒரு தூய பண்பு அவர்களிடம் இருந்தமையால் நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்திருந்தோம்.
38:46. நிச்சயமாக (மறுமை) வீட்டை நினைவுகூருவதை நோக்கமாகக் கொண்டு (செயல்படுபவர்களாக) அவர்களை நாம் பிரத்தியேகப்படுத்தினோம்.
38:47
38:47 وَاِنَّهُمْ عِنْدَنَا لَمِنَ الْمُصْطَفَيْنَ الْاَخْيَارِؕ‏
وَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் عِنْدَنَا நம்மிடம் لَمِنَ الْمُصْطَفَيْنَ தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் الْاَخْيَارِؕ‏ மிகச்சிறந்தவர்களாகிய
38:47. நிச்சயமாக இவர்கள் நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லோர்களில் நின்றுமுள்ளவர்கள்.
38:47. அவர்கள், நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடியார்களில் உள்ளவர்களாகவே இருந்தனர்.
38:47. திண்ணமாக அவர்கள் நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றோர்கள் ஆவார்கள்.
38:47. மேலும், நிச்சயமாக அவர்கள், நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்தோரில் உள்ளவர்களாவார்கள்.
38:48
38:48 وَاذْكُرْ اِسْمٰعِيْلَ وَ الْيَسَعَ وَذَا الْكِفْلِ‌ؕ وَكُلٌّ مِّنَ الْاَخْيَارِؕ‏
وَاذْكُرْ இன்னும் நினைவு கூறுவீராக اِسْمٰعِيْلَ இஸ்மாயீலையும் وَ الْيَسَعَ அல்யசஉவையும் وَذَا الْكِفْلِ‌ؕ துல்கிஃப்லையும் وَكُلٌّ எல்லோரும் مِّنَ الْاَخْيَارِؕ‏ மிகச் சிறந்தவர்களில் உள்ளவர்கள்
38:48. இன்னும் (நபியே!) நினைவு கூர்வீராக; இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும் - (இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்.
38:48. (நபியே!) இஸ்மாயீல், அல்யஸஉ, துல்கிஃப்லு ஆகிய இவர்களையும் நினைவு கூர்வீராக. இவர்கள் அனைவரும் நல்லடியார்களில் உள்ளவர்கள் தான்.
38:48. இஸ்மாயீல், அல்யஸவு, துல்கிஃப்ல் ஆகியோரையும் நினைவுகூர்வீராக! இவர்கள் எல்லோரும் நன்மக்களாய் விளங்கினர்.
38:48. (நபியே!) இன்னும் இஸ்மாயீலையும், அல்யஸஉவையும், துல்கிப்லுவையும் நினைவு கூர்வீராக! (இவர்கள்) எல்லோரும் நல்லடியார்களில் உள்ளவர்களாவர்.
38:49
38:49 هٰذَا ذِكْرٌ‌ؕ وَاِنَّ لِلْمُتَّقِيْنَ لَحُسْنَ مَاٰبٍۙ‏
هٰذَا இது ذِكْرٌ‌ؕ ஒரு நினைவூட்டலாகும் وَاِنَّ நிச்சயமாக لِلْمُتَّقِيْنَ அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு لَحُسْنَ அழகிய مَاٰبٍۙ‏ மீளுமிடம்
38:49. இது நல்லுபதேசமாக இருக்கும்; நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு அழகிய இருப்பிடமுண்டு.
38:49. (மேற்கூறிய) இவையெல்லாம் (நம்பிக்கையாளர்களுக்கு) நல்ல அறிவுரையாகும். நிச்சயமாக (இத்தகைய) இறையச்சமுடையவர்களுக்கு (நல்ல) இருப்பிடமுண்டு.
38:49. இது ஒரு நல்லுரையாகும். (இப்போது கேளுங்கள்!) இறையச்சம் உள்ளவர்களுக்கு திண்ணமாக அழகிய தங்குமிடம் இருக்கிறது.
38:49. இது (விசுவாசிகளுக்கு) நல்லுபதேசமாகும், நிச்சயமாக (இத்தகைய) பயபக்தியாளர்களுக்கு அழகான இருப்பிடமும் உண்டு.
38:50
38:50 جَنّٰتِ عَدْنٍ مُّفَتَّحَةً لَّهُمُ الْاَبْوَابُ‌ۚ‏
جَنّٰتِ عَدْنٍ அத்ன் சொர்க்கங்கள் مُّفَتَّحَةً திறக்கப்பட்டிருக்கும் لَّهُمُ அவர்களுக்காக الْاَبْوَابُ‌ۚ‏ வாசல்கள்
38:50. “அத்னு” என்னும் சுவனபதிகளின் வாயில்கள் அவர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டவையாக இருக்கும்.
38:50. அது நிலையான சொர்க்கத்தில் இருக்கிறது. அதன் வாசல்கள் அவர்களுக்கு (எந்நேரமும்) திறக்கப்பட்டிருக்கும்.
38:50. நிலையாகத் தங்குகின்ற சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் வாயில்கள் அவர்களுக்காகத் திறந்திருக்கும்.
38:50. (அவ்விருப்பிடம் அத்னு எனும்) நிலையான சுவனபதிகளில் (இருக்கிறது,) அவர்களுக்காக (அதன்) வாயல்கள் (திறக்கப்பட்டவையாக இருக்கும்.
38:51
38:51 مُتَّكِـــِٕيْنَ فِيْهَا يَدْعُوْنَ فِيْهَا بِفَاكِهَةٍ كَثِيْرَةٍ وَّشَرَابٍ‏
مُتَّكِـــِٕيْنَ அவர்கள் சாய்ந்தவர்களாக இருப்பார்கள் فِيْهَا அவற்றில் يَدْعُوْنَ அழைப்பார்கள் فِيْهَا அவற்றில் بِفَاكِهَةٍ பழங்களை(யும்) كَثِيْرَةٍ அதிகமான وَّشَرَابٍ‏ பானங்களையும்
38:51. அதில் அவர்கள் (பஞ்சணைகள் மீது) சாய்ந்தவர்களாக, அங்கே ஏராளமான கனிவகைகளையும், பானங்களையும் கேட்(டு அருந்திக் கொண்டிருப்)பார்கள்.
38:51. அதில் (உள்ள தலையணைகளின் மீது) சாய்ந்த வண்ணமாக, ஏராளமான கனி வர்க்கங்களையும் (இன்பமான) பானங்களையும், கேட்டு (வாங்கிப் புசித்து) அருந்திக்கொண்டு இருப்பார்கள்.
38:51. அங்கே அவர்கள் மஞ்சங்களில் சாய்ந்திருப்பார்கள். நிறையக் கனிகளையும், பானங்களையும் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.
38:51. அதில் (தலையணைகளின் மீது) சாய்ந்தவர்களாக, ஏராளமான கனிகளையும் (இன்பமான) பானங்களையும் கேட்(டு வங்கிப் புசித்து அருந்திக் கொண்டிருப்)பார்கள்.
38:52
38:52 وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ اَتْرَابٌ‏
وَعِنْدَهُمْ அவர்களிடம் இருப்பார்கள் قٰصِرٰتُ الطَّرْفِ பார்வைகளை தாழ்த்திய பெண்கள் اَتْرَابٌ‏ சமவயதுடைய(வர்கள்)
38:52. அவர்களுடன் கீழ்நோக்கிய பார்வையும், ஒரே வயதுமுடைய அமர கன்னிகைகளும் இருப்பார்கள்.
38:52. அவர்களிடத்தில் கீழ்நோக்கிய பார்வையையுடைய ஒத்த வயதுடைய கன்னிகைகள் பலரும் இருப்பார்கள்.
38:52. மேலும், அவர்களின் அருகில் நாணமுடைய சமவயதுடைய மனைவியர் இருப்பர்.
38:52. மேலும், அவர்களிடத்தில், கீழ் நோக்கிய பார்வைகளயுடைய ஒத்த வயதுடைய கன்னிகைகள் (பலரும்) இருப்பார்கள்.
38:53
38:53 هٰذَا مَا تُوْعَدُوْنَ لِيَوْمِ الْحِسَابِ‏
هٰذَا இவை مَا تُوْعَدُوْنَ உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவைதான் لِيَوْمِ الْحِسَابِ‏ விசாரணை நாளில்
38:53. “கேள்வி கணக்குக்குரிய நாளுக்கென உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது இதுதான்.
38:53. (அவர்களை நோக்கி) கேள்வி கணக்குக் கேட்கும் நாளில் உங்களுக்கு(த் தருவதாக) வாக்களிக்கப்பட்டவை இவைதான்.
38:53. கேள்விகணக்கு கேட்கும் நாளில் உங்களுக்குத் தருவதாக வாக்களித்துக் கொண்டிருப்பவை இவைதாம்!
38:53. இது, (கேள்வி) “கணக்கிற்குரிய நாளுக்கென நீங்கள் வாக்களிக்கப்பட்டவையாகும்.”
38:54
38:54 اِنَّ هٰذَا لَرِزْقُنَا مَا لَهٗ مِنْ نَّـفَادٍ ‌ۖ ‌ۚ‏
اِنَّ هٰذَا நிச்சயமாக இவை لَرِزْقُنَا நமது கொடையாகும் مَا لَهٗ இவற்றுக்கு அறவே இல்லை مِنْ نَّـفَادٍ ۖ ۚ‏ அழிவு, முடிவு
38:54. “நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும்; இதற்கு (என்றும்) முடிவே இராது” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
38:54. நிச்சயமாக இவை நம் கொடையாகும். இதற்கு அழிவே இல்லை (என்று கூறப்படும்).
38:54. இது நாம் வழங்கும் நற்பேறாகும். இதற்கு என்றுமே முடிவில்லை.
38:54. “நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும், இதற்கு முடிவே இல்லை” (என்று அவர்களுக்குக் கூறப்படும்)
38:55
38:55 هٰذَا‌ ؕ وَاِنَّ لِلطّٰغِيْنَ لَشَرَّ مَاٰبٍ ۙ‏
هٰذَا‌ ؕ وَاِنَّ இவை/நிச்சயமாக لِلطّٰغِيْنَ வரம்பு மீறிகளுக்கு لَشَرَّ مَاٰبٍ ۙ‏ மிகக் கெட்டமீளுமிடம்தான்
38:55. இது (நல்லோருக்காக); ஆனால் நிச்சயமாகத் தீயவர்களுக்கு மிகக் கெட்ட தங்குமிடம் இருக்கிறது.
38:55. (நல்லவர்களின் முடிவு) இதுவாகும். வழிகெட்டவர்களின் தங்கும் இடம் நிச்சயமாக மகா தீயது.
38:55. இதுதான் இறையச்சம் உடையவர்களின் நல்ல முடிவாகும். வரம்புமீறிச் செல்வோருக்கு மிகத் தீய இருப்பிடம் இருக்கிறது,
38:55. இது(வே நல்லோரின் முடிவாகும்) மேலும் நிச்சயமாக, (அல்லாஹ்வின் கட்டளையை மீறிய) கெட்டவர்களுக்கு மிகக்கெட்ட தங்குமிடம் இருக்கிறது.
38:56
38:56 جَهَـنَّمَ‌ ۚ يَصْلَوْنَهَا‌ ۚ فَبِئْسَ الْمِهَادُ‏
جَهَـنَّمَ‌ ۚ (அதுதான்) நரகம் يَصْلَوْنَهَا‌ ۚ அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள் فَبِئْسَ الْمِهَادُ‏ விரிப்புகளில் மிகக் கெட்ட விரிப்பாகும்
38:56. (அதுவே நரகம்) ஜஹன்னம் -அதில் அவர்கள் நுழைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டது.
38:56. அது நரகம்தான். அதில்தான் அவர்கள் புகுவார்கள். அது தங்குமிடங்களில் மகா கெட்டது.
38:56. நரகம்! அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள். அது மிகத் தீய தங்குமிடம்!
38:56. (அதுவே) நரகம்_அதில் அவர்கள் புகுவார்கள், தங்குமிடமான அது மிகக் கெட்டது.
38:57
38:57 هٰذَا ۙ فَلْيَذُوْقُوْهُ حَمِيْمٌ وَّغَسَّاقٌ ۙ‏
هٰذَا ۙ فَلْيَذُوْقُوْهُ இவை, இவற்றை அவர்கள் சுவைக்கட்டும் حَمِيْمٌ கொதி நீரும் وَّغَسَّاقٌ ۙ‏ சீல் சலமும்
38:57. இது (தீயோர்களுக்காக); ஆகவே அவர்கள் அதனைச் சுவைத்துப் பார்க்கட்டும் - கொதிக்கும் நீரும்; சீழும் ஆகும்.
38:57. (அவர்களை நோக்கி,) ‘‘இதோ! கொதித்த நீரும், சீழ் சலமும்! அதை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறப்படும்).
38:57. இதுதான் அவர்களுக்கு உரியது. எனவே, அவர்கள் சுவைக்கட்டும்; கொதித்த நீரையும் சீழ்சலத்தையும்,
38:57. இது (தீயோரின் முடிவாகும்), ஆகவே, இதை அவர்கள் சுவைத்துப் பார்க்கட்டும்_ (இதுவே) கொதித்த நீரும், (நரகவாசிகளின் உடலிலிருந்து வடியும்) சீழ் ஜலமுமாகும்.
38:58
38:58 وَّاٰخَرُ مِنْ شَكْلِهٖۤ اَزْوَاجٌ ؕ‏
وَّاٰخَرُ மற்ற مِنْ شَكْلِهٖۤ இன்னும் தோற்றத்தில் பல வகையான اَزْوَاجٌ ؕ‏ வேதனைகளும்
38:58. இன்னும் (இதைத்தவிர) இது போன்ற பல (வேதனைகளும்) உண்டு.
38:58. இதைப் போன்ற (துன்பம் நிறைந்த) விதவிதமான வேறு (வேதனைகளு)ம் உண்டு.
38:58. இதுபோன்ற வேறு பல கழிவுகளையும்!
38:58. இதைப்போன்ற வேறு பலவகை (வேதனை)களும் உண்டு.
38:59
38:59 هٰذَا فَوْجٌ مُّقْتَحِمٌ مَّعَكُمْ‌ۚ لَا مَرْحَبًۢـا بِهِمْ‌ؕ اِنَّهُمْ صَالُوا النَّارِ‏
هٰذَا இது فَوْجٌ கூட்டமாகும் مُّقْتَحِمٌ நுழையக்கூடிய مَّعَكُمْ‌ۚ உங்களுடன் لَا مَرْحَبًۢـا (இங்கு) வசதி உண்டாகாமல் இருக்கட்டும் بِهِمْ‌ؕ அவர்களுக்கு اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் صَالُوا எரிந்து பொசுங்குவார்கள் النَّارِ‏ நரகத்தில்
38:59. (நரகவாதிகளின் தலைவர்களிடம்:) “இது உங்களுடன் நெருங்கிக் கொண்டு (நரகம்) புகும் சேனையாகும்; இவர்களுக்கு அங்கு சங்கை இருக்காது; நிச்சயமாக இவர்கள் நரகில் சேர்பவர்கள்” (என்று கூறப்படும்).
38:59. (இவர்களுடைய தலைவர்களை நோக்கி,) ‘‘இந்தக் கூட்டத்தாரும் உங்களுடன் (நரகத்தில்) தள்ளப்படுவார்கள்'' (என்று கூறப்படும். அதற்கு அவர்கள்) ‘‘இது அவர்களுக்கு நல்வரவாகாது. நிச்சயமாக இவர்கள் நரகம் செல்பவர்களே'' (என்று கூறுவார்கள்).
38:59. (அவர்கள், தம்மைப் பின்பற்றியவர்கள் நரகத்தை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டு தமக்கிடையே கூறிக்கொள்வார்கள்:) “இதோ! ஒரு படை முண்டியடித்துக் கொண்டு உங்களிடம் வருகின்றது. எந்த வரவேற்பும் இவர்களுக்கு இல்லை; இவர்கள் நெருப்பில் எரிந்து பொசுங்கக்கூடியவர்கள்தாம்!”
38:59. (இவர்களுடைய தலைவர்களிடம்) “இது உங்களுடன் (நரகத்தில்) புகும் படையாகும்” (என்று கூறப்படும் அதற்கு அவர்கள்,) ”இது அவர்களுக்கு நல்லவரவாகாது, நிச்சயமாக, அவர்கள் நரகத்தில் புகுந்து விட்டவர்களே!” (என்று கூறுவார்கள்).
38:60
38:60 قَالُوْا بَلْ اَنْتُمْ لَا مَرْحَبًۢـا بِكُمْ‌ؕ اَنْتُمْ قَدَّمْتُمُوْهُ لَنَا‌ۚ فَبِئْسَ الْقَرَارُ‏
قَالُوْا கூறுவார்கள் بَلْ மாறாக اَنْتُمْ நீங்கள்தான் لَا مَرْحَبًۢـا (இங்கு) வசதி கிடைக்காமல் போகட்டும் بِكُمْ‌ؕ உங்களுக்கு اَنْتُمْ நீங்கள்தான் قَدَّمْتُمُوْهُ இவற்றை முற்படுத்தினீர்கள் لَنَا‌ۚ எங்களுக்கு فَبِئْسَ الْقَرَارُ‏ தங்குமிடங்களில் நரகம் மிகக் கெட்ட இடமாகும்
38:60. அதற்கு அவர்கள்: “அப்படியல்ல, நீங்களும் தான்! உங்களுக்கும் சங்கை கிடையாது! நீங்கள் தாம் எங்களுக்கு இதை (இந் நிலையை) முற்படுத்தி வைத்தீர்கள்; (ஆதலால் நம் இரு கூட்டத்தாருக்கும்) தங்குமிடம் மிகவும் கெட்டது!” என்று கூறுவர்.
38:60. அதற்கு அ(த்தலை)வர்கள் (பின் தொடர்ந்த) அவர்களை நோக்கி, ‘‘(எங்களுக்கு) இல்லை. மாறாக, உங்களுக்குத்தான் நல்வரவில்லை. நீங்கள் தான் எங்களுக்கு இதைத் தேடித்தந்தீர்கள். (ஆதலால், நம்மிருவரின்) தங்குமிடம் மகா கெட்டதுதான்'' என்று கூறுவார்கள்.
38:60. அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள். “இல்லை! நீங்கள்தாம் எரிந்து பொசுங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்; எந்த வரவேற்பும் உங்களுக்குத்தான் இல்லை; நீங்கள்தாம் இந்தத் தீயகதிக்கு எங்களை ஆளாக்கினீர்கள். எவ்வளவு மோசமான தங்குமிடம் இது!”
38:60. அதற்கு அ(த்தலைவர்களைப் பின்பற்றிய)வர்கள் (தலைவர்களிடம், “எங்களுக்கு) அன்று! நீங்களும்தான், உங்களுக்கு நல்வரவில்லை, நீங்கள்தாம் எங்களுக்கு இதனை முற்படுத்தித்தந்தீர்கள், ஆதலால், (நம்மிருசாராரின்) தங்குமிடம் மிகக் கெட்டது” என்று கூறுவார்கள்.
38:61
38:61 قَالُوْا رَبَّنَا مَنْ قَدَّمَ لَنَا هٰذَا فَزِدْهُ عَذَابًا ضِعْفًا فِى النَّارِ‏
قَالُوْا கூறுவார்கள் رَبَّنَا எங்கள் இறைவா! مَنْ யார் قَدَّمَ முற்படுத்தினாரோ لَنَا எங்களுக்கு هٰذَا இவற்றை فَزِدْهُ நீ அதிகப்படுத்து/அவருக்கு عَذَابًا வேதனையை ضِعْفًا இரு மடங்கு فِى النَّارِ‏ நரகத்தில்
38:61. “எங்கள் இறைவா! எவர் எங்களுக்கு இதை (இந்நிலையை) முற்படுத்தி வைத்தாரோ அவருக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்காக அதிகப்படுத்துவாயாக!” என்று அவர்கள் கூறுவர்.
38:61. தவிர, ‘‘எங்கள் இறைவனே! எவன் இதை எங்களுக்குத் தேடி வைத்தானோ, அவனுக்கு நரகத்தில் (வேதனையை) இரு மடங்கு அதிகப்படுத்து'' என்று பிரார்த்திப்பார்கள்.
38:61. பிறகு அவர்கள் கூறுவார்கள்: “இறைவா! எவர்கள் எங்களை இந்தத் தீயகதிக்கு ஆளாக்கிடத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்களோ அவர்களுக்கு நரகத்தின் இருமடங்கு வேதனையை நீ கொடுப்பாயாக!”
38:61. எங்களிரட்சகனே! எவன் இதனை எங்களுக்கு முற்படுத்தி வைத்தானோ அவனுக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்கு அதிகப்படுத்துவாயாக! என்று கூறுவார்கள்.
38:62
38:62 وَقَالُوْا مَا لَنَا لَا نَرٰى رِجَالًا كُنَّا نَـعُدُّهُمْ مِّنَ الْاَشْرَارِؕ‏
وَقَالُوْا அவர்கள் கூறுவார்கள் مَا لَنَا لَا نَرٰى எங்களால் பார்க்க முடிவதில்லையே! رِجَالًا பல மனிதர்களை كُنَّا نَـعُدُّ நாங்கள் கருதி வந்தோம் هُمْ அவர்களை مِّنَ الْاَشْرَارِؕ‏ கெட்டவர்களில்
38:62. இன்னும், அவர்கள்: “நமக்கு என்ன நேர்ந்தது? மிகக் கெட்ட மனிதர்களிலுள்ளவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோமே, அவர்களை (நரகத்தில்) ஏன் காணவில்லை?
38:62. தவிர, ‘‘மிகக் கெட்ட மனிதர்கள் என்று (உலகத்தில்) எண்ணிக் கொண்டிருந்தோமே அவர்களை (நரகத்தில்) காணவில்லையே?'' என்று ஒருவர் ஒருவரைக் கேட்பார்கள்.
38:62. அவர்கள் தமக்கிடையில் பேசிக்கொள்வார்கள்: “என்ன நாம் உலகில் யாரைத் தீயவர்களென்று கருதியிருந்தோமோ அவர்களை எங்குமே காணவில்லையே?
38:62. இன்னும், “எங்களுகென்ன நேர்ந்தது? எவர்களை தீயவர்களில் உள்ளவர்கள் என்று (உலகத்தில்) எண்ணிக்கொண்டிருந்தோமோ அந்த மனிதர்களை (நரகத்தில்) காணவில்லையே!“ என்று கூறுவார்கள்.
38:63
38:63 اَ تَّخَذْنٰهُمْ سِخْرِيًّا اَمْ زَاغَتْ عَنْهُمُ الْاَبْصَارُ‏
اَ تَّخَذْنٰهُمْ அவர்களை நாங்கள் எடுத்துக் கொண்டோமா? سِخْرِيًّا பரிகாசமாக اَمْ அல்லது زَاغَتْ சோர்ந்துவிட்டனவா? عَنْهُمُ அவர்களை பார்க்க முடியாமல் الْاَبْصَارُ‏ பார்வைகள்
38:63. “நாம் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தோமா? அல்லது (அவர்களைக் காணமுடியாதவாறு) அவர்களை விட்டும் நம் பார்வைகள் சருகி விட்டனவா?” என்று கூறுவர்.
38:63. ‘‘எவர்களைப் பரிகாசம் பண்ணிக் கொண்டிருந்தோமோ (அவர்கள் இங்கிருந்தும்) அவர்களைப் பார்க்காதவாறு நம் கண்கள்தான் மங்கி விட்டனவோ!'' (என்றும் கூறுவார்கள்).
38:63. அவர்களை நாம் தாம் வெறுமனே பரிகாசம் செய்துகொண்டு இருந்தோமா? அல்லது அவர்கள் கண்ணில்படாமல் இருக்கின்றார்களா?”
38:63. “அவர்களைப் பரிகாசமாக நாம் எடுத்துக்கொண்டிருந்தோமோ? அல்லது (அவர்கள் இங்கிருந்தும்) அவர்களைப் பார்க்காதவாறு நம்முடைய பார்வைகள் தாம் சாய்ந்துவிட்டனவா!” (என்றும் கூறுவார்கள்).
38:64
38:64 اِنَّ ذٰ لِكَ لَحَقٌّ تَخَاصُمُ اَهْلِ النَّارِ‏
اِنَّ ذٰ لِكَ நிச்சயமாக இது لَحَقٌّ உண்மைதான் تَخَاصُمُ தங்களுக்குள் தர்க்கிப்பது اَهْلِ النَّارِ‏ நரகவாசிகள்
38:64. நிச்சயமாக இது தான் உண்மை. நரகவாசிகள் (இவ்வாறு தான்) ஒருவரோடு ஒருவர் தர்க்கம் செய்து கொள்வார்கள்.  
38:64. இவ்வாறு நரகவாசிகள் தர்க்கித்துக் கொள்வது நிச்சயமாக உண்மை தான்.
38:64. சந்தேகமின்றி இது உண்மையான விஷயமாகும்; இதேபோன்ற தர்க்கங்கள் தாம் நரகவாசிகளிடையே நடைபெற இருக்கின்றன.
38:64. நிச்சயமாக நரகவாசிகள் (இவ்வாறு) தர்க்கித்துக் கொள்ளும் இது திட்டமாக உண்மையாகும்.
38:65
38:65 قُلْ اِنَّمَاۤ اَنَا مُنْذِرٌ ‌‌ۖ  وَّمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ‌ ۚ‏
قُلْ கூறுவீராக! اِنَّمَاۤ اَنَا நான் எல்லாம் مُنْذِرٌ ஓர் எச்சரிப்பாளர்தான் ۖ  وَّمَا இல்லை مِنْ اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் யாரும் اِلَّا اللّٰهُ அல்லாஹ்வைத் தவிர الْوَاحِدُ ஒருவன் الْقَهَّارُ ۚ‏ அடக்கி ஆளுபவன்
38:65. (நபியே!) நீர் கூறுவீராக: “நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே, அன்றியும் ஏகனும், (யாவரையும்) அடக்கியாள்பவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை.
38:65. ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு (இதைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். (அனைவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒரே அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய) வேறு இறைவன் இல்லவே இல்லை.
38:65. (நபியே! இவர்களிடம்) கூறும்: “நான் எச்சரிக்கை செய்பவன் ஆவேன். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் ஏகன்; அடக்கியாள்பவன்;
38:65. “நிச்சயமாக நான் (இதனைப்பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவனே, (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை” என்றும் (நபியே!) நீர் கூர்வீராக!
38:66
38:66 رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيْزُ الْغَفَّارُ‏
رَبُّ இறைவன் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் الْعَزِيْزُ மிகைத்தவன் الْغَفَّارُ‏ மகா மன்னிப்பாளன்
38:66. “(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனாக இருக்கின்றான்; அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிகவும் மன்னிப்பவன்.”
38:66. அவன்தான் வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவை அனைத்திற்கும் உரிமையாளன். அவன் அனைவரையும் மிகைத்தவன், மிக்க மன்னிப்புடையவன்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.
38:66. மேலும் வானங்கள் மற்றும் பூமி இவ்விரண்டுக்குமிடையிலுள்ள பொருள்கள் அனைத்தின் அதிபதி; வலிமை மிக்கவன்; பெரிதும் பிழைபொறுப்பவன்.”
38:66. (அவன் தான்) வானங்கள் மற்றும் பூமி இன்னும், இவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றிற்கு இரட்சகன், (அவன் யாவற்றையும்) மிகைத்தோன், மிக்க மன்னிப்புடையோன்.
38:67
38:67 قُلْ هُوَ نَبَؤٌا عَظِيْمٌۙ‏
قُلْ கூறுவீராக! هُوَ இது نَبَؤٌا ஒரு செய்தியாகும் عَظِيْمٌۙ‏ மகத்தான
38:67. (நபியே?) கூறுவீராக: “(நான் உங்களுக்கு எடுத்துரைக்கும்) இது மகத்தான செய்தியாகும்.
38:67. (நபியே!) கூறுவீராக: ‘‘(உங்களுக்கு நான் எடுத்துரைக்கும்) இது மிக மகத்தானதொரு விஷயம்.
38:67. இவர்களிடம் கூறும்: “இது ஒரு மாபெரும் செய்தி!
38:67. “(உங்களுக்கு நான் எடுத்துரைக்கும்) இது, மிக மகத்தான செய்தியாகும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக:
38:68
38:68 اَنْتُمْ عَنْهُ مُعْرِضُوْنَ‏
اَنْتُمْ நீங்கள் عَنْهُ இதை مُعْرِضُوْنَ‏ புறக்கணிக்கின்றீர்கள்
38:68. “நீங்களோ அதைப் புறக்கணித்தவர்களாக இருக்கிறீர்கள்.
38:68. அதை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்.''
38:68. நீங்களோ இதனை(ச் செவியேற்றும்) புறக்கணிக்கின்றீர்களே!”
38:68. (ஆனால்) நீங்கள் அதனைப் புறக்கணிக்கின்றவர்களாக இருக்கிறீர்கள்.
38:69
38:69 مَا كَانَ لِىَ مِنْ عِلْمٍۢ بِالْمَلَاِ الْاَعْلٰٓى اِذْ يَخْتَصِمُوْنَ‏
مَا كَانَ இல்லை لِىَ எனக்கு مِنْ عِلْمٍۢ அறவே ஞானம் بِالْمَلَاِ வானவர்களைப் பற்றி الْاَعْلٰٓى மிக உயர்ந்த اِذْ يَخْتَصِمُوْنَ‏ அவர்கள் தர்க்கித்த போது
38:69. “மேலான கூட்டத்தார் தர்க்கித்துக் கொண்டது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
38:69. (ஆதமை இறைவன் படைத்தபோது,) மேலுலகத்தார் (ஆகிய வானவர்கள்) தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டது எனக்கொன்றும் தெரியாது. (அதைப் பற்றி) ‘‘எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டதைத் தவிர, (நான் அறியேன்.)
38:69. (இவர்களிடம் கூறுங்கள்:) “மேலுலகத்தில் தர்க்கம் நடைபெற்றபோது, அவர்களைப்பற்றிய எந்த விவரமும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
38:69. “(ஆதமை அல்லாஹ் படைத்தபோது,) மிக மேலான கூட்டத்தார் (ஆகிய மலக்குகள் தங்களுக்குள்) தர்க்கித்துக்கொண்டது பற்றி (அல்லாஹ் அறிவித்ததே தவிர) எனகொன்றும் தெரியாது (என்றும்),
38:70
38:70 اِنْ يُّوْحٰۤى اِلَىَّ اِلَّاۤ اَنَّمَاۤ اَنَا۟ نَذِيْرٌ مُّبِيْنٌ‏
اِنْ يُّوْحٰۤى வஹீ அறிவிக்கப்படுவதில்லை اِلَىَّ எனக்கு اِلَّاۤ தவிர اَنَّمَاۤ اَنَا۟ நிச்சயமாக நான் எல்லாம் نَذِيْرٌ ஓர் எச்சரிப்பாளர்தான் مُّبِيْنٌ‏ தெளிவான
38:70. “நிச்சயமாக நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்” என்பதற்காக அல்லாமல் எனக்கு வஹீ அறிவிக்கப்படவில்லை.
38:70. நிச்சயமாக நான் பகிரங்கமாக, அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை என்றுதான் எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டுள்ளது.''(என்று கூறுவீராக)
38:70. நான் வெளிப்படையாய் எச்சரிக்கை செய்யக்கூடியவனாய் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வஹியின் மூலம் இவ்விஷயங்கள் எனக்கு அறிவிக்கப்படுகின்றன.”
38:70. “நிச்சயமாக நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன், என்பதைத்தவிர (வேறு எதையும்) எனக்கு (வஹீமூலம்) அறிவிக்கப்படவில்லை” (என்றும் கூறுவீராக!)
38:71
38:71 اِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ خَالِـقٌ ۢ بَشَرًا مِّنْ طِيْنٍ‏
اِذْ قَالَ கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! رَبُّكَ உமது இறைவன் لِلْمَلٰٓٮِٕكَةِ வானவர்களை நோக்கி اِنِّىْ நிச்சயமாக நான் خَالِـقٌ ۢ படைக்கப்போகிறேன் بَشَرًا ஒரு மனிதரை مِّنْ طِيْنٍ‏ களிமண்ணிலிருந்து
38:71. (நபியே! நினைவு கூர்வீராக!) “நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்:
38:71. உமது இறைவன் வானவர்களை நோக்கி, ‘‘நான் மனிதனைக் களிமண்ணால் படைக்கப் போகிறேன்'' என்று கூறிய சமயத்தில்,
38:71. உம்முடைய இறைவன் வானவர்களிடம் “நான் களிமண்ணால் ஒரு மனிதனைப் படைக்கப்போகின்றேன்;
38:71. உமதிரட்சகன் மலக்குகளிடம் நிச்சயமாக “நான் மனிதனைக் களிமண்ணால் படைக்கப்போகிறேன்” என்று கூறிய வேளையை (நபியே நீர் நினைவு கூர்வீராக!)
38:72
38:72 فَاِذَا سَوَّيْتُهٗ وَنَفَخْتُ فِيْهِ مِنْ رُّوْحِىْ فَقَعُوْا لَهٗ سٰجِدِيْنَ‏
فَاِذَا سَوَّيْتُهٗ ஆக, நான் அவரை சிறப்பாக படைத்து(விட்டால்) وَنَفَخْتُ இன்னும் ஊதினால் فِيْهِ அவரில் مِنْ رُّوْحِىْ என் உயிர்களிலிருந்து فَقَعُوْا விழுந்து விடுங்கள்! لَهٗ அவருக்கு முன் سٰجِدِيْنَ‏ சிரம் பணிந்தவர்களாக
38:72. “நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது: அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்” (எனக் கூறியதும்);
38:72. நான் அவரைச் செப்பனிட்டு, அவருக்குள் (நான் படைத்த) என் உயிரிலிருந்து ஊதினால் அவருக்குமுன் நீங்கள் சிரம் பணிந்தவர்களாக விழுந்துவிடுங்கள் என்றும் கூறினான்.''
38:72. நான் அவரை முழுமையாகப் படைத்து, அவருக்குள் என்னுடைய உயிரை ஊதினால், அவருக்கு முன்னால் சிரம் பணியுங்கள் எனக் கூறியபோது
38:72. பிறகு நான் அவரை (அவருடைய தோற்றத்தை உருவாக்கி)ச்சரிப்படுத்தி என் உயிரிலிருந்தும் அவரில் ஊதியபோது, அவருக்கு சிரம் பணிந்தவர்களாக விழுங்கள் (எனக் கூறியதும்).
38:73
38:73 فَسَجَدَ الْمَلٰٓٮِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَۙ‏
فَسَجَدَ சிரம் பணிந்தனர் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் كُلُّهُمْ அவர்கள் எல்லோரும் اَجْمَعُوْنَۙ‏ அனைவரும்
38:73. அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள்.
38:73. (அச்சமயம்) வானவர்கள் எல்லோரும் அனைவருமே சிரம் பணிந்தார்கள்.
38:73. (இக்கட்டளைக்கு இணங்கி) வானவர்கள் அனைவருமே சிரம் பணிந்தார்கள்.
38:73. (அது சமயம்) மலக்குகள்_அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சிரம்பணிந்தார்கள்_
38:74
38:74 اِلَّاۤ اِبْلِيْسَؕ اِسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ‏
اِلَّاۤ اِبْلِيْسَؕ இப்லீஸைத் தவிர اِسْتَكْبَرَ அவன் பெருமை அடித்தான் وَكَانَ இன்னும் ஆகிவிட்டான் مِنَ الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களில்
38:74. இப்லீஸைத் தவிர; அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.
38:74. இப்லீஸைத் தவிர, அவன் கர்வம்கொண்டு (நம் கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான்.
38:74. ஆனால், இப்லீஸைத் தவிர! அவன் தன்னைப் பெரியவனென்று கருதி கர்வம் கொண்டான். மேலும், நிராகரிப்பவர்களுடன் சேர்ந்துவிட்டான்.
38:74. இப்லீஸைத்தவிர_அவன் கர்வங்கொண்டான், நிராகரிப்பவர்களிலும் ஆகிவிட்டான்.
38:75
38:75 قَالَ يٰۤـاِبْلِيْسُ مَا مَنَعَكَ اَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَىَّ‌ ؕ اَسْتَكْبَرْتَ اَمْ كُنْتَ مِنَ الْعَالِيْنَ‏
قَالَ அவன் கூறினான் يٰۤـاِبْلِيْسُ இப்லீஸே! مَا مَنَعَكَ உன்னை தடுத்தது எது? اَنْ تَسْجُدَ நீ ஸஜ்தா செய்வதிலிருந்து لِمَا خَلَقْتُ நான் படைத்தவருக்கு بِيَدَىَّ‌ ؕ எனது இரு கரத்தால் اَسْتَكْبَرْتَ நீ பெருமையடிக்கிறாயா? اَمْ كُنْتَ நீ இருந்தாயா? مِنَ الْعَالِيْنَ‏ பெருமையடிப்பவர்களில்தான்
38:75. “இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான்.
38:75. அதற்கு இறைவன், ‘‘இப்லீஸே! நானே என் இரு கரங்களால் படைத்தவருக்கு முன் நீ சிரம் பணிய உன்னைத் தடுத்தது எது? நீ உன்னை மிகப் பெரியவனாக மதித்துக் கொண்டாயா? அல்லது நீ, (என் கட்டளைக்குக் கீழ்ப்படியக் கூடாத) உயர்ந்த பதவியுடையவனாகி விட்டாயா?'' என்றான்.
38:75. இறைவன் கூறினான்: “இப்லீஸே! நான் என்னுடைய இரு கைகளால் படைத்திருக்கும் இவருக்கு சிரம் பணிவதை விட்டு உன்னைத் தடுத்தது எது? நீ கர்வம் கொண்டு விட்டாயா? அல்லது நீ உயர் அந்தஸ்து உடையவர்களுள் ஒருவனாகி விட்டாயா?”
38:75. (அதற்கு அல்லாஹ்,) ”இப்லீஸே! என் இருகரங்களால் நான் படைத்ததற்கு நீ சிரம் பணியாது உன்னைத் தடுத்தது எது? நீ கர்வங்கொண்டுவிட்டாயா? அல்லது, நீ உயர்ந்த (பதவியுடைய)வர்களில் ஆகிவிட்டாயா?” என்றான்.
38:76
38:76 قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ‌ ؕ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ‏
قَالَ அவன் கூறினான் اَنَا நான் خَيْرٌ சிறந்தவன் مِّنْهُ‌ ؕ அவரை விட خَلَقْتَنِىْ என்னை படைத்தாய் مِنْ نَّارٍ நெருப்பில் இருந்து وَّخَلَقْتَهٗ அவரை படைத்தாய் مِنْ طِيْنٍ‏ களிமண்ணிலிருந்து
38:76. “நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று (இப்லீஸ்) கூறினான்.
38:76. அதற்கவன், ‘‘அவரைவிட நானே மேலானவன். என்னை நீயே நெருப்பால் படைத்தாய்; அவரை களிமண்ணால் படைத்தாய்'' என்றான்.
38:76. அவன் (இப்லீஸ்) பதிலளித்தான்: “நான் அவரை விடச் சிறந்தவன்; என்னை நீ நெருப்பினால் படைத்தாய்; அவரையோ களிமண்ணால்!”
38:76. அ(தற்க)வன், ‘நான் அவரை விட மிக்க மேலானவன், என்னை, நெருப்பிலிருந்து நீ படைத்தாய், இன்னும், அவரைக் களிமண்ணிலிருந்து நீ படைத்தாய்” என்றான்.
38:77
38:77 قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِيْمٌ  ۖ‌ ۚ‏
قَالَ அவன் கூறினான் فَاخْرُجْ வெளியேறி விடு! مِنْهَا அதில் இருந்து فَاِنَّكَ رَجِيْمٌ  ۖ‌ ۚ‏ நிச்சயமாக நீசபிக்கப்பட்டவன்
38:77. (அப்போது இறைவன்) “இதிலிருந்து நீ வெளியேறு! ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய்” எனக் கூறினான்.
38:77. அதற்கு இறைவன், ‘‘அவ்வாறாயின், நீ இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டு விட்டாய்.
38:77. அல்லாஹ் கூறினான்: “சரி! நீ இங்கிருந்து வெளியேறி விடு; நீ விரட்டப்பட வேண்டியவனாய் இருக்கின்றாய்.
38:77. (அதற்கு அல்லாஹ், “அவ்வாறாயின்,) நீ இதிலிருந்து வெளியேறி விடு, நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன்” என்று கூறினான்.
38:78
38:78 وَّاِنَّ عَلَيْكَ لَعْنَتِىْۤ اِلٰى يَوْمِ الدِّيْنِ‏
وَّاِنَّ நிச்சயமாக عَلَيْكَ உம்மீது لَعْنَتِىْۤ என் சாபம் اِلٰى يَوْمِ الدِّيْنِ‏ கூலி நாள் வரை
38:78. “இன்னும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என் சாபம் இருக்கும்” (எனவும் இறைவன் கூறினான்).
38:78. தீர்ப்பு நாள் வரை என் சாபம் உன்மீது நிச்சயமாக நிலைத்திருக்கும்'' என்றான்.
38:78. மேலும், கூலி வழங்கும் நாள் வரை உன்மீது என்னுடைய சாபம் உண்டாகும்.”
38:78. “என்னுடைய சாபமும் தீர்ப்பு நாள்வரை நிச்சயமாக உன்மீது இருக்கும்”, (என்று கூறினான்.)
38:79
38:79 قَالَ رَبِّ فَاَنْظِرْنِىْۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏
قَالَ அவன் கூறினான் رَبِّ என் இறைவா! فَاَنْظِرْنِىْۤ எனக்கு அவகாசம் அளி! اِلٰى يَوْمِ நாள் வரை يُبْعَثُوْنَ‏ அவர்கள் எழுப்பப்படுகின்றார்கள்
38:79. “இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என்று அவன் கேட்டான்.
38:79. அதற்கவன், ‘‘என் இறைவனே! (மரணித்தவர்கள்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடு'' என்றான்.
38:79. அதற்கு அவன் கூறினான்: “என் இறைவா! அவ்வாறாயின் இவர்களை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பும் நாள் வரையில் எனக்கு அவகாசம் அளித்திடுவாயாக!”
38:79. அ(தற்க)வன், “என் இரட்சகனே! (இறந்தோர்) எழுப்பப்படும் நாள்வரையில் நீ எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று கூறினான்.
38:80
38:80 قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَۙ‏
قَالَ கூறினான் فَاِنَّكَ நிச்சயமாக நீ مِنَ الْمُنْظَرِيْنَۙ‏ அவகாசமளிக்கப்பட்டவர்களில்
38:80. “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் உள்ளவனே” என (அல்லாஹ்) கூறினான்.
38:80. அதற்கு இறைவன் கூறினான்: ‘‘நிச்சயமாக உனக்கு அவகாசம் அளிக்கப்பட்டு விட்டது,
38:80. அல்லாஹ் கூறினான்: “சரி! உனக்கு அந்நாள்வரை அவகாசம் இருக்கிறது.
38:80. (அதற்கு அல்லாஹ்,) “நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டவர்களில் உள்ளாய்” என்று கூறினான்.
38:81
38:81 اِلٰى يَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ‏
اِلٰى يَوْمِ நாள் வரை الْوَقْتِ நேரம் الْمَعْلُوْمِ‏ அறியப்பட்ட
38:81. “குறிப்பிட்டகாலத்தின் நாள்வரையில்” (உனக்கு அவகாசம் உண்டு எனவும் கூறினான்).
38:81. குறிப்பிட்ட அந்நாள் வரை (உன் தவணை)''
38:81. அந்நாள் வரும் நேரம் எனக்குத் தெரியும்.”
38:81. குறிப்பிட்ட நேரத்தின் நாள்வரையில் (உன் தவணை உண்டு என்று கூறினான்).
38:82
38:82 قَالَ فَبِعِزَّتِكَ لَاُغْوِيَنَّهُمْ اَجْمَعِيْنَۙ‏
قَالَ அவன் கூறினான் فَبِعِزَّتِكَ உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக لَاُغْوِيَنَّهُمْ அவர்களை நிச்சயமாக நான் வழிகெடுப்பேன் اَجْمَعِيْنَۙ‏ அனைவரையும்
38:82. அப்பொழுது: “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
38:82. அதற்கவன், ‘‘உன் மகத்துவத்தின் மீது சத்தியமாக நான் (மனிதர்கள்) அனைவரையும் வழி கெடுத்து விடுவேன்.''
38:82. அவன் கூறினான்: “உன்னுடைய கண்ணியத்தின் மீது ஆணையாக! இம்மக்கள் அனைவரையும் நான் வழிகெடுத்துக் கொண்டிருப்பேன்;
38:82. (அப்போது) அவன், “உன் மகத்துவத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் அனைவரையும் வழிகெடுத்துவிடுவேன்” என்றான்.
38:83
38:83 اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ‏
اِلَّا عِبَادَكَ உனது அடியார்களை தவிர مِنْهُمُ அவர்களில் الْمُخْلَصِيْنَ‏ பரிசுத்தமான(வர்கள்)
38:83. “(எனினும்) அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத் தவிர” (என்றான்).
38:83. ‘‘(எனினும்,) அவர்களில் பரிசுத்த மனதுடைய உன் அடியார்களைத் தவிர'' என்றான்.
38:83. ஆனால், இவர்களில் நீ தூய்மைப்படுத்தியுள்ள உன்னுடைய அடியார்களைத் தவிர!”
38:83. “அவர்களில் (உன்னால்) தேர்ந்தெடுக்கப்பட்ட உன் அடியார்களைத் தவிர”.
38:84
38:84 قَالَ فَالْحَقُّ  وَالْحَقَّ اَ قُوْلُ‌ ۚ‏
قَالَ அவன் கூறினான் فَالْحَقُّ  உண்மை وَالْحَقَّ உண்மையைத்தான் اَ قُوْلُ‌ ۚ‏ நான் கூறுவேன்
38:84. (அதற்கு இறைவன்:) “அது உண்மை; உண்மையையே நான் கூறுகிறேன் என்று இறைவன் கூறினான்.
38:84. அதற்கு இறைவன், ‘‘நான் உண்மையே கூறுபவன். உண்மை என்னவென்றால்,
38:84. இறைவன் கூறினான்: “அவ்வாறாயின், உண்மை இதுதான்: உண்மையைத்தான் நான் கூறுகின்றேன்
38:84. (அதற்கு) “உண்மையே! இன்னும், நான் உண்மையையே கூறுகிறேன்” என்று (அல்லாஹ்) கூறினான்.
38:85
38:85 لَاَمْلَئَنَّ جَهَنَّمَ مِنْكَ وَمِمَّنْ تَبِعَكَ مِنْهُمْ اَجْمَعِيْنَ‏
لَاَمْلَئَنَّ நிச்சயமாக நிரப்புவேன் جَهَنَّمَ நரகத்தை مِنْكَ உன்னைக்கொண்டும் وَمِمَّنْ تَبِعَكَ உன்னை பின்பற்றியவர்களைக் கொண்டும் مِنْهُمْ அவர்களில் اَجْمَعِيْنَ‏ அனைவர்களையும்
38:85. “நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்” (என்றான்)
38:85. உன்னையும் உன்னைப் பின்பற்றிய அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்'' என்றான்.
38:85. உன்னைக் கொண்டும் மனிதர்களில் யார் யார் உன்னைப் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் அனைவரைக் கொண்டும் நான் நிச்சயம் நரகத்தை நிரப்புவேன்.”
38:85. (அதாவது) “நிச்சயமாக உன்னாலும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்களாலும் ஆகிய (உங்கள்) அனைவர்களாலும் நரகத்தைத் திண்ணமாக நான் நிரப்புவேன்” (என்றான்).
38:86
38:86 قُلْ مَاۤ اَسْــٴَـــلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ وَّمَاۤ اَنَا مِنَ الْمُتَكَلِّفِيْنَ‏
قُلْ கூறுவீராக! مَاۤ اَسْــٴَـــلُكُمْ நான் உங்களிடம் கேட்கவில்லை عَلَيْهِ இதற்காக مِنْ اَجْرٍ கூலி எதையும் وَّمَاۤ اَنَا இன்னும் நான் இல்லை مِنَ الْمُتَكَلِّفِيْنَ‏ வரட்டு கௌரவம் தேடுபவர்களில்
38:86. (நபியே!) நீர் கூறும்: (“இக் குர்ஆனுக்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; அன்றியும், (இதை இட்டுக் கட்டி) சிரமம் எடுத்துக் கொண்டவனும் அல்லன்.
38:86. ஆகவே, (நபியே!) கூறுவீராக: (மனிதர்களே! இதை ஓதிக் காண்பிப்பதற்காக) நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. மேலும், (நீங்கள் சுமக்க முடியாத ஒரு சுமையை) நான் உங்கள் மீது சுமத்தவும் இல்லை. இவ்வேதத்தை நான் கற்பனையாக கட்டிக் கொள்ளவும் இல்லை.
38:86. (நபியே!) இவர்களிடம் நீர் கூறும்: “இந்த அழைப்புப் பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. மேலும், நான் போலிக்குணம் உடையவர்களில் உள்ளவனல்லன்.
38:86. (மனிதர்களே!) இ(வ்வேதத்தை ஓதிக் காண்பிப்ப)தற்காக உங்களிடத்தில் எவ்விதக் கூலியையும் நான் கேட்கவில்லை, (எதையும்) உண்டாக்கி (பொய்யாக)க் கூறுபவர்களில் நான் உள்ளவனுமல்லன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
38:87
38:87 اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَ‏
اِنْ هُوَ இது இல்லை اِلَّا அன்றி ذِكْرٌ ஓர் அறிவுரையே لِّلْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களுக்கு
38:87. “இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.”
38:87. உலகத்தார் அனைவருக்குமே இது ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.
38:87. இது உலகமக்கள் அனைவருக்கும் நல்லுரையேயாகும்.
38:87. அகிலத்தார்க்கெல்லாம் இது நல்லுபதேசமே தவிர இல்லை.
38:88
38:88 وَلَتَعْلَمُنَّ نَبَاَهٗ بَعْدَ حِيْنِ‏
وَلَتَعْلَمُنَّ நிச்சயமாகநீங்கள்அறிவீர்கள் نَبَاَهٗ இதன் செய்தியை بَعْدَ பின்னர் حِيْنِ‏ சில காலத்திற்கு
38:88. “நிச்சயமாக (சிறிது) காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொள்வீர்கள்.”
38:88. நிச்சயமாக சிறிது காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொள்வீர்கள்.
38:88. மேலும், சிறிது காலம் கழிவதற்குள்ளாக இதன் நிலைமை நிச்சயமாக உங்களுக்குத் தெரிந்துவிடும்.”
38:88. நிச்சயமாக, சிறிது காலத்திற்குப் பின், நீங்கள் இதன் (உண்மைச்) செய்தியைத் திட்டமாக அறிந்துகொள்வீர்கள்.