45. ஸூரத்துல் ஜாஸியா(முழந்தாளிடுதல்)
மக்கீ, வசனங்கள்: 37

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
45:1
45:1 حٰمٓ‌‌ ۚ‏
حٰمٓ‌ ۚ‏ ஹா மீம்
45:1. ஹா, மீம்.
45:1. ஹா மீம்.
45:1. ஹாமீம்.
45:1. ஹாமீம்.
45:2
45:2 تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ‏
تَنْزِيْلُ இறக்கப்பட்டது الْكِتٰبِ இந்த வேதம் مِنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து الْعَزِيْزِ மிகைத்தவன் الْحَكِيْمِ‏ மகா ஞானவான்
45:2. இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
45:2. (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் இறக்கப்பட்டது.
45:2. இந்த வேதம், வல்லமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும்.
45:2. (யாவரையும்) மிகைத்தோன் தீர்க்கமான அறிவுடையோன் ஆகிய அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறக்கப்பட்டுள்ளது.
45:3
45:3 اِنَّ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّلْمُؤْمِنِيْنَؕ‏
اِنَّ நிச்சயமாக فِى السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِ இன்னும் பூமியில் لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّلْمُؤْمِنِيْنَؕ‏ நம்பிக்கையாளர்களுக்கு
45:3. முஃமின்களுக்கு நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
45:3. நம்பிக்கை கொண்டவர்களுக்கு, வானங்களிலும் பூமியிலும் நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
45:3. உண்மை யாதெனில், இறைநம்பிக்கையுள்ளவர்களுக்கு வானங்களிலும் பூமியிலும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
45:3. விசுவாசங்கொண்டோர்க்கு நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகளிருக்கின்றன.
45:4
45:4 وَفِىْ خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِنْ دَآبَّةٍ اٰيٰتٌ لِّقَوْمٍ يُّوْقِنُوْنَۙ‏
وَفِىْ خَلْقِكُمْ உங்களைப் படைத்திருப்பதிலும் وَمَا يَبُثُّ பரப்பி இருப்பதிலும் مِنْ دَآبَّةٍ உயிரினங்களை اٰيٰتٌ பல அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يُّوْقِنُوْنَۙ‏ உறுதியாக நம்பிக்கை கொள்கின்றனர்
45:4. இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
45:4. உங்களைப் படைத்திருப்பதிலும், (பூமியில்) பல ஜீவராசிகளை(ப் பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருப்பதிலும், (நம்பிக்கையில்) உறுதியான (நல்ல) மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
45:4. மேலும், உங்களைப் படைப்பதிலும், (பூமியில்) அல்லாஹ் பரப்பியிருக்கின்ற உயிரினங்களிலும், உறுதிகொள்ளும் மக்களுக்கு பெரும் சான்றுகள் உள்ளன.
45:4. இன்னும், உங்களைப் படைத்திருப்பதிலும், ஜீவராசிகளை அவன் பரவச்செய்திருப்பதிலும், (விசுவாசத்தில்) உறுதிகொள்கின்ற சமூகத்தார்க்கு அத்தாட்சிகளிருக்கின்றன.
45:5
45:5 وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ رِّزْقٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَ تَصْرِيْفِ الرِّيٰحِ اٰيٰتٌ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
وَاخْتِلَافِ மாறிமாறிவருவதிலும் الَّيْلِ وَالنَّهَارِ இரவு, பகல் وَمَاۤ இன்னும் எது اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مِنْ رِّزْقٍ மழையை فَاَحْيَا உயிர்ப்பித்தான் بِهِ அதன் மூலம் الْاَرْضَ பூமியை بَعْدَ பின்னர் مَوْتِهَا அது இறந்த وَ تَصْرِيْفِ திருப்புவதிலும் الرِّيٰحِ காற்றுகளை اٰيٰتٌ பல அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يَّعْقِلُوْنَ‏ சிந்தித்து புரிகின்றனர்
45:5. மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
45:5. இரவு, பகல் மாறிமாறி வரும்படி அல்லாஹ் செய்திருப்பதிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி வைத்து, அதைக்கொண்டு (வறண்டு) இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும், (பல திசைகளுக்கு) காற்றுகளை திருப்பி விடுவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
45:5. இரவும் பகலும் வேறுபட்டு இருப்பதிலும், அல்லாஹ், வானத்திலிருந்து மழையை இறக்கி பிறகு அதனைக் கொண்டு இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும் மேலும், காற்றுகளின் சுழற்சியிலும் அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்குப் பல்வேறு அத்தாட்சிகள் உள்ளன.
45:5. மேலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், இன்னும் வானத்திலிருந்து மழையை அல்லாஹ் இறக்கிவைத்து, அதனைக் கொண்டு பூமியை அது (வறட்சியினால்) இறந்துபோனபின் உயிர்ப்பிப்பதிலும் (நாலாபாகங்களிலும் பருவத்திற்குத்தக்கவாறு) காற்றுகளைத் திருப்பிவிடுவதிலும் விளங்கிக் கொள்ளும் சமூகத்தார்க்கு அத்தாட்சிகளிருக்கின்றன.
45:6
45:6 تِلْكَ اٰيٰتُ اللّٰهِ نَـتْلُوْهَا عَلَيْكَ بِالْحَقِّ‌ ‌ۚ فَبِاَىِّ حَدِيْثٍۢ بَعْدَ اللّٰهِ وَاٰيٰتِهٖ يُؤْمِنُوْنَ‏
تِلْكَ இவை اٰيٰتُ வசனங்களாகும் اللّٰهِ அல்லாஹ்வின் نَـتْلُوْهَا இவற்றை ஓதுகிறோம் عَلَيْكَ உம்மீது بِالْحَقِّ‌ ۚ உண்மையாகவே فَبِاَىِّ حَدِيْثٍۢ எந்த செய்தியை بَعْدَ பின்னர் اللّٰهِ அல்லாஹ் وَاٰيٰتِهٖ இன்னும் அவனது அத்தாட்சிகளுக்கு يُؤْمِنُوْنَ‏ இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்
45:6. இவை அல்லாஹ்வுடைய வசனங்கள், இவற்றை (நபியே!) உம்மீது உண்மையுடன் ஓதிக் காண்பிக்கிறோம்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எதனைத் தான் நம்பப் போகிறார்கள்.
45:6. (நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். மெய்யாகவே உம் மீது நாம் இவற்றை ஓதிக் காண்பிக்கிறோம். அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எவ்விஷயத்தைத்தான் நம்புவார்கள்?
45:6. இவை அல்லாஹ்வின் அத்தாட்சிகள். இவற்றை உம்மிடம் நாம் மிகச் சரியாக எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். இனி, அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பிறகு, இவர்கள் எந்த விஷயத்தின் மீது நம்பிக்கை கொள்ளப் போகிறார்கள்?
45:6. அவை(களைத் தன்னகத்தே கொண்ட குர் ஆன்) அல்லாஹ்வுடைய வசனங்களாகும், உண்மையைக் கொண்டு அவற்றை உம்மீது நாம் ஓதிக்காண்பிக்கிறோம், எனவே அல்லாஹ்வுக்கும், அவனுடைய வசனங்களுக்கும் பின்னர், இவர்கள் எச்செய்தியைத்தான் நம்புவார்கள்?
45:7
45:7 وَيْلٌ لِّـكُلِّ اَفَّاكٍ اَثِيْمٍۙ‏
وَيْلٌ நாசம்தான் لِّـكُلِّ எல்லோருக்கும் اَفَّاكٍ பாவிகள் اَثِيْمٍۙ‏ பொய் பேசுகின்ற
45:7. (சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான்.
45:7. (இவ்வாறு நிராகரித்துவிட்டுப் பொய்யான தெய்வங்களைக்) கற்பனையாகக் கூறும் பாவிகளுக்கெல்லாம் கேடுதான்!
45:7. பொய்யனாகவும் கெட்டவனாகவும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அழிவுதான்.
45:7. (நாவால்) பெரும் பொய்கூறி, (செயலால்) பாவியான ஒவ்வொருவருக்கும் கேடுதான்.
45:8
45:8 يَّسْمَعُ اٰيٰتِ اللّٰهِ تُتْلٰى عَلَيْهِ ثُمَّ يُصِرُّ مُسْتَكْبِرًا كَاَنْ لَّمْ يَسْمَعْهَا‌ ۚ فَبَشِّرْهُ بِعَذَابٍ اَ لِيْمٍ‏
يَّسْمَعُ செவியுறுகின்றான் اٰيٰتِ வசனங்கள் اللّٰهِ அல்லாஹ்வின் تُتْلٰى ஓதப்படுவதை عَلَيْهِ தன் மீது ثُمَّ பிறகு يُصِرُّ பிடிவாதம் காட்டுகின்றான் مُسْتَكْبِرًا பெருமை பிடித்தவனாக كَاَنْ لَّمْ يَسْمَعْهَا‌ ۚ அவனோ அவற்றை செவியுறாதவனைப் போல فَبَشِّرْهُ அவனுக்கு நற்செய்தி கூறுங்கள்! بِعَذَابٍ வேதனையைக் கொண்டு اَ لِيْمٍ‏ வலி தரக்கூடிய(து)
45:8. தன் மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கிறான்; பின்பு பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக் கேளாதது போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதம் செய்கிறான்; அ(த்தகைய)வனுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயம் கூறுவீராக.
45:8. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டதை செவிமடுத்து விட்டு பின்னர், அதை செவிமடுக்காதவர்களைப்போல் கர்வம் கொண்டு (நிராகரிப்பின் மீதே) பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நற்செய்தி கூறுவீராக.
45:8. அவன் முன்னிலையில் ஓதிக் காட்டப்படும் இறைவசனங்களை அவன் செவியேற்கிறான்; பிறகு முழு ஆணவத்துடன் (தன் நிராகரிப்பில்) அவன் பிடிவாதமாய் இருக்கின்றான், அவ்வசனங்களை அவன் செவியேற்காதது போன்று! இத்தகைய மனிதனுக்குத் துன்புறுத்தும் வேதனையைப் பற்றிய ‘நற்செய்தியை’ அறிவித்து விடும்.
45:8. தன்மீது ஓதிக்காண்பிக்கப்படும் அல்லாஹ்வின் வசனங்களை அவன் (செவியேற்றுக்) கேட்கிறான், பின்னர் கர்வங்கொண்டு அவற்றைக் (காதால்) கேட்காதவனைப்போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதமாக இருக்கின்றான், அ(த்தகைய)வனுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
45:9
45:9 وَاِذَا عَلِمَ مِنْ اٰيٰتِنَا شَيْــٴًـــا اۨتَّخَذَهَا هُزُوًا‌ ؕ اُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ ؕ‏
وَاِذَا عَلِمَ அவன் அறிந்து கொண்டால் مِنْ اٰيٰتِنَا நமது வசனங்களில் شَيْــٴًـــا எதையும் اۨتَّخَذَهَا அதை எடுத்துக்கொள்கிறான் هُزُوًا‌ ؕ கேலியாக اُولٰٓٮِٕكَ لَهُمْ இவர்களுக்கு உண்டு عَذَابٌ வேதனை مُّهِيْنٌ ؕ‏ இழிவுதரும்
45:9. நம் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவன் அறிந்து கொண்டால், அதைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறான்; அ(த்தகைய)வர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
45:9. நம் வசனங்களில் எதை அவர்கள் அறிந்த போதிலும், அதை அவர்கள் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.
45:9. நம்முடைய வசனங்களிலிருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை அவன் தெரிந்து கொள்ளும்போது அதனை பரிகாசமாய் ஆக்கிக் கொள்கிறான். இத்தகையோர் அனைவர்க்கும் இழிவு தரும் வேதனை இருக்கிறது.
45:9. மேலும், நம்முடைய வசனங்களில் எதனையாவது அவன் அறிந்து கொண்டால், அதனை அவன் பரிகாசமாக எடுத்துக்கொள்கிறான். அத்தகையோர்_அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.
45:10
45:10 مِنْ وَّرَآٮِٕهِمْ جَهَنَّمُۚ وَلَا يُغْنِىْ عَنْهُمْ مَّا كَسَبُوْا شَيْــٴًـــا وَّلَا مَا اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِيَآءَ‌ ۚ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌؕ‏
مِنْ وَّرَآٮِٕهِمْ இவர்களுக்கு முன்னால் இருக்கின்றது جَهَنَّمُۚ நரகம் وَلَا يُغْنِىْ எதையும் தடுக்காது عَنْهُمْ அவர்களை விட்டும் مَّا كَسَبُوْا அவர்கள் சம்பாதித்தது شَيْــٴًـــا எதையும் وَّلَا مَا اتَّخَذُوْا இன்னும் எவற்றை/அவர்கள் எடுத்துக் கொண்டார்களோ مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اَوْلِيَآءَ‌ ۚ பாதுகாவலர்களாக وَلَهُمْ அவர்களுக்கு உண்டு عَذَابٌ வேதனை عَظِيْمٌؕ‏ பெரிய(து)
45:10. அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது; அவர்கள் சம்பாதித்துக் கொண்டதில் எப்பொருளும் அவர்களுக்குப் பயன் தராது; அல்லாஹ்வையன்றி, எவற்றை அவர்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களுக்குப் பயன் தராது); மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனையுமுண்டு.
45:10. இவர்களுக்கு (இவர்கள் மரணித்த) பின்னால் நரகம்தான் இருக்கிறது. அவர்கள் சேகரித்திருப்பவையோ அல்லது தங்களுக்குப் பாதுகாப்பாளர்கள் என்று அவர்கள் எடுத்துக்கொண்ட அல்லாஹ் அல்லாதவையோ, அவர்களுக்கு ஒரு பயனும் அளிக்காது. அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.
45:10. அவர்களுக்கு எதிரில் நரகம் உள்ளது. (உலகில்) அவர்கள் சம்பாதித்தது எதுவும் எந்தப் பயனும் அவர்களுக்கு அளிக்காது. அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் யாரை பாதுகாவலர்களாய் எடுத்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது. மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனை இருக்கிறது.
45:10. அவர்களுக்கு முன்னால் நரகந்தான் இருக்கின்றது, அவர்கள் சம்பாதித்துக் கொண்டவை எவையும் அவர்களுக்குப் பயனளிக்காது, அல்லாஹ்வையன்றி பாதுகாப்பாளர்களாக அவர்கள் எடுத்துக் கொண்டவர்களும் (அவர்களுக்குப் பயன் அளிப்பவர்) அல்லர், மேலும், அவர்களுக்கு மகத்தான வேதனையுமுண்டு.
45:11
45:11 هٰذَا هُدًى‌ ‌ۚ وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِيْمٌ‏
هٰذَا هُدًى‌ ۚ இதுதான்/நேர்வழி وَالَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் بِاٰيٰتِ அத்தாட்சிகளை رَبِّهِمْ தங்கள் இறைவனின் لَهُمْ அவர்களுக்கு உண்டு عَذَابٌ வேதனை مِّنْ رِّجْزٍ தண்டனை اَلِيْمٌ‏ வலி தரக்கூடிய(து)
45:11. இது (குர்ஆன்)தான் நேர்வழிகாட்டியாகும். எவர்கள் தம்முடைய இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டார்களோ, அவர்களுக்கு நோவினை மிகுந்த கடினமான வேதனையுண்டு.  
45:11. இவ்வேதம்தான் நேரான பாதை. ஆகவே, எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு மிக கடினமான துன்புறுத்தும் வேதனை உண்டு.
45:11. இந்தக் குர்ஆன் முற்றிலும் நேர்வழியாய்த் திகழ்கின்றது. தங்கள் இறைவனின் வசனங்களை ஏற்க மறுத்தவர்களுக்கோ பெரும் வேதனை தரும் தண்டனை இருக்கிறது.
45:11. (குர் ஆனாகிய) இது நேர் வழியாகும், இன்னும், தங்களுடைய இரட்சகனின் வசனங்களை நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்_ அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையிலிருந்து துன்புறுத்தும் வேதனையுண்டு.
45:12
45:12 اَللّٰهُ الَّذِىْ سَخَّرَ لَـكُمُ الْبَحْرَ لِتَجْرِىَ الْفُلْكُ فِيْهِ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‌ۚ‏
اَللّٰهُ அல்லாஹ் الَّذِىْ எப்படிப்பட்டவன் سَخَّرَ வசப்படுத்தினான் لَـكُمُ உங்களுக்கு الْبَحْرَ கடலை لِتَجْرِىَ செல்வதற்காகவும் الْفُلْكُ கப்பல்கள் فِيْهِ அதில் بِاَمْرِهٖ அவனது கட்டளைப்படி وَلِتَبْتَغُوْا நீங்கள் தேடுவதற்காகவும் مِنْ فَضْلِهٖ அவனுடைய அருளிலிருந்து وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‌ۚ‏ நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும்
45:12. கப்பல்கள் அவன் கட்டளையைக் கொண்டு (கடலில்) செல்லும் பொருட்டும், நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக்கொள்ளும் பொருட்டும்; மேலும் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டும் உங்களுக்குக் கடலை வசப்படுத்திக் கொடுத்தவன் அல்லாஹ்வே ஆவான்.
45:12. அல்லாஹ், கடலை உங்களுக்கு வசதியாக அமைத்திருக்கிறான். அவன் கட்டளையைக் கொண்டு (பல நாடுகளுக்குக்) கப்பலில் சென்று (அதன் மூலம்) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (அதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
45:12. அல்லாஹ்தான் உங்களுக்குக் கடலினை வசப்படுத்தித் தந்தான். அவனது கட்டளைப்படிக் கப்பல்கள் அதில் செல்வதற்காகவும், நீங்கள் அவனது அருளைத் தேடுவதற்காகவும்! மேலும், நீங்கள் நன்றி செலுத்துவோராகத் திகழ்வதற்காகவும்.
45:12. அல்லாஹ் எத்தகையவனென்றால், கடலை_அதில் அவன் கட்டளையைக் கொண்டு கப்பல்கள் செல்வதற்காகவும், மேலும் (அதன் மூலம்), அவனின் பேரருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் உங்களுக்காக அவன் வசப்படுத்திக் கொடுத்தான்.
45:13
45:13 وَسَخَّرَ لَـكُمْ مَّا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ جَمِيْعًا مِّنْهُ‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏
وَسَخَّرَ இன்னும் வசப்படுத்தினான் لَـكُمْ உங்களுக்கு مَّا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவற்றை(யும்) وَمَا فِى الْاَرْضِ பூமியில் உள்ளவற்றையும் جَمِيْعًا அனைத்தையும் مِّنْهُ‌ ؕ தன் புறத்திலிருந்து اِنَّ فِىْ ذٰ لِكَ நிச்சயமாக இதில் உள்ளன لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يَّتَفَكَّرُوْنَ‏ சிந்திக்கின்ற
45:13. அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன.
45:13. (அவ்வாறே) வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தையுமே அவன் தன் அருளால் உங்களு(டைய நன்மை)க்கு (உழைக்கும்படி) கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான். கவனித்து ஆராயும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
45:13. வானங்கள் மற்றும் பூமியின் அனைத்தையுமே உங்களுக்கு அவன் வசப்படுத்திக் கொடுத்தான். அனைத்தையும் தன் சார்பாகவே செய்தான். சிந்திக்கக்கூடிய மக்களுக்குத் திண்ணமாக இதில் பெரும் சான்றுகள் இருக்கின்றன.
45:13. இன்னும், வானங்களில் உள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன்னிடமிருந்து உங்களுக்கு அவனே வசப்படுத்திக் கொடுத்தான், நிச்சயமாக இதில் சிந்திக்கும் சமூகத்தார்க்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
45:14
45:14 قُلْ لِّلَّذِيْنَ اٰمَنُوْا يَغْفِرُوْا لِلَّذِيْنَ لَا يَرْجُوْنَ اَيَّامَ اللّٰهِ لِيَجْزِىَ قَوْمًۢا بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏
قُلْ கூறுவீராக! لِّلَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களுக்கு يَغْفِرُوْا அவர்கள் மன்னித்து விடட்டும் لِلَّذِيْنَ لَا يَرْجُوْنَ ஆதரவு வைக்காதவர்களை اَيَّامَ اللّٰهِ அல்லாஹ்வின் நடவடிக்கைகளை لِيَجْزِىَ இறுதியாக தண்டனை கொடுப்பான் قَوْمًۢا ஒரு கூட்டத்திற்கு بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏ அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு
45:14. ஈமான் கொண்டவர்களுக்கு (நபியே!) நீர் கூறிவிடும்: அல்லாஹ்வுடைய (தண்டனைக்கான) நாட்களை நம்பாதவர்களை அவர்கள் மன்னித்து (அவர்களைப் பற்றி அல்லாஹ்விடம் பரஞ் சாட்டிவிடட்டும்); ஜனங்களுக்கு அவர்கள் தேடிக் கொண்ட வினைக்குத் தக்கபலனை அவன் கொடுப்பான்.  
45:14. (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நீர் கூறுவீராக: “அவர்கள் அல்லாஹ்வுடைய தண்டனைகளை நம்பாத மக்களை மன்னித்து (அவர்கள் விஷயத்தை அல்லாஹ்விடமே விட்டு) விடுவார்களாக. (நன்மையோ, தீமையோ செய்யும்) மக்களுக்கு அவர்கள் செய்யும் செயலுக்குத் தக்க பலனை அவன் கொடுப்பான்.
45:14. (நபியே!) இறைநம்பிக்கையாளர்களிடம் நீர் கூறிவிடும்: “யார் அல்லாஹ்விடமிருந்து கெட்ட நாள் வருவது பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிருக்கின்றார்களோ அவர்களின் நடவடிக் கைகளைக் கண்டுகொள்ளாது விட்டுவிடுங்கள் ஒரு சமுதாயத்திற்கு அவர்கள் சம்பாதித்ததற்கான கூலியை அல்லாஹ் கொடுப்பதற்காக!
45:14. (நபியே!) விசுவாசங்கொண்டோருக்கு நீர் கூறுவீராக: அல்லாஹ்வுடைய (தண்டனைகளின்) நாட்களை நம்பாதவர்களை, அவர்கள் மன்னித்துவிடட்டும், ஏனென்றால், அவர்கள் சம்பாதித்துக் கொண்டவற்றிற்குப் பிரதியாக கூட்டத்தினருக்கு அவன் கூலி கொடுப்பதற்காக.
45:15
45:15 مَنْ عَمِلَ صَالِحًـا فَلِنَفْسِهٖ‌ۚ وَمَنْ اَسَآءَ فَعَلَيْهَا‌ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ‏
مَنْ عَمِلَ யார் செய்வாரோ صَالِحًـا ஒரு நன்மையை فَلِنَفْسِهٖ‌ۚ அது அவருக்குத்தான் நல்லது وَمَنْ எவர் اَسَآءَ தீமை செய்வாரோ فَعَلَيْهَا அது அவருக்குத்தான் கேடாகும் ثُمَّ பிறகு اِلٰى رَبِّكُمْ உங்கள் இறைவனிடம் تُرْجَعُوْنَ‏ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
45:15. எவர் ஸாலிஹான (நல்ல) அமலை செய்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும்; அன்றியும், எவர் தீமையைச் செய்கிறாரோ, அது அவருக்கே தீமையாகும், பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
45:15. எவர் நன்மை செய்கிறாரோ அது அவருக்கே நன்று. எவன் தீமை செய்கிறானோ அது அவனுக்கே கேடாகும். பின்னர், நீங்கள் உங்கள் இறைவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்.
45:15. ஒருவர் ஏதேனும் நற்செயல்கள் செய்தால், அவற்றை அவர் தமக்காகவே செய்து கொள்கிறார். ஒருவர் ஏதேனும் தீய செயல் செய்தால் அவற்றின் விளைவை அவரே அனுபவிப்பார். பின்னர், நீங்கள் அனைவரும் உங்கள் அதிபதியிடமே திரும்பக் கொண்டு சொல்லப்பட இருக்கின்றீர்கள்.”
45:15. எவர் நற்செயல் செய்கின்றாரோ, (அது) அவருக்கே நன்று, எவர் தீமை செய்கின்றாரோ (அது) அவருக்கே கேடாகும், பின்னர் நீங்கள் உங்கள் இரட்சகனின் பக்கமே மீட்டப்படுவீர்கள்.
45:16
45:16 وَلَقَدْ اٰتَيْنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلَى الْعٰلَمِيْنَ‌ۚ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் கொடுத்தோம் بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களுக்கு الْكِتٰبَ வேதங்களை(யும்) وَالْحُكْمَ ஞானத்தையும் وَالنُّبُوَّةَ நபித்துவத்தையும் وَرَزَقْنٰهُمْ இன்னும் அவர்களுக்கு நாம் வழங்கினோம் مِّنَ الطَّيِّبٰتِ நல்ல உணவுகளை وَفَضَّلْنٰهُمْ அவர்களை மேன்மையாக்கினோம் عَلَى الْعٰلَمِيْنَ‌ۚ‏ அக்கால மக்களைவிட
45:16. நிச்சயமாக நாம், இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நுபுவ்வத்தையும் கொடுத்தோம்; அவர்களுக்கு மணமான உணவு (வசதி)களையும் கொடுத்தோம் - அன்றியும் அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம்.
45:16. நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வேதத்தையும், (ஞானத்தையும்,) அதிகாரத்தையும், நபிப்பட்டத்தையும் கொடுத்து மேலான உணவுகளையும் கொடுத்தோம். மேலும், உலகத்தார் அனைவரிலும் அவர்களை மேன்மையாக்கி வைத்தோம்.
45:16. இதற்கு முன்பு இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நாம் வேதம், ஞானம், தூதுத்துவம் ஆகியவற்றை வழங்கியிருந்தோம். நாம், அவர்களுக்குச் சிறந்த வாழ்வாதாரங்களையும் வழங்கியிருந்தோம். மேலும், உலக மக்கள் அனைவரைக் காட்டிலும், அவர்களுக்குச் சிறப்பை வழங்கியிருந்தோம்.
45:16. நிச்சயமாக, நாம் இஸ்ராயீலின் மக்களுக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம், மேலும் (உண்ணுவதற்கு) நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு உணவும் கொடுத்தோம், அன்றியும் அகிலத்தாரைவிட அவர்களை நாம் மேன்மையாக்கியும் வைத்தோம்.
45:17
45:17 وَاٰتَيْنٰهُمْ بَيِّنٰتٍ مِّنَ الْاَمْرِ‌ ۚ فَمَا اخْتَلَفُوْۤا اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ ۙ بَغْيًاۢ بَيْنَهُمْ‌ؕ اِنَّ رَبَّكَ يَقْضِىْ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏
وَاٰتَيْنٰهُمْ நாம் அவர்களுக்குக் கொடுத்தோம் بَيِّنٰتٍ தெளிவான சட்டங்களை مِّنَ الْاَمْرِ‌ ۚ இந்த மார்க்கத்தின் فَمَا اخْتَلَفُوْۤا அவர்கள் கருத்து வேறுபடவில்லை اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ தவிர/அவர்களிடம் வந்த பின்னர் الْعِلْمُ ۙ கல்வி بَغْيًاۢ பொறாமையினால் بَيْنَهُمْ‌ؕ தங்களுக்கு மத்தியில் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உமது இறைவன் يَقْضِىْ தீர்ப்பளிப்பான் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏ அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றில்
45:17. அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்.
45:17. மேலும், நம் கட்டளைகளைப் பற்றித் தெளிவான வசனங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்களுக்கிடையிலுள்ள பொறாமையின் காரணமாக, அவர்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னர், அவர்கள் தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) பிரிந்து விட்டனர். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் அவர்கள் தர்க்கித்துக் கொண்டவற்றைப் பற்றி மறுமையில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்.
45:17. தீன் இறைமார்க்கம் சம்பந்தமாக அவர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினோம். பின்னர், அவர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது (அறியாமையின் காரணத்தினால் அல்ல; மாறாக) அறிவு ஞானம் வந்த பின்னர்தான் அதுவும் அவர்கள் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்க விரும்பிய காரணத்தால்தான் ஏற்பட்டது! திண்ணமாக, உம் இறைவன் மறுமைநாளில், அவர்கள் கருத்து முரண்பாடு கொண்டிருக்கின்ற விஷயங்களில் தீர்ப்பு வழங்குவான்.
45:17. இன்னும், (மார்க்கக்) காரியத்தில் (சான்றுகளிலிருந்து) தெளிவானவைகளை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம், பின்னர், அவர்கள் தங்களுக்கிடையே உண்டான பொறாமையின் காரணமாக, அவர்களுக்கு (வேத) அறிவு வந்ததன் பின்னரே தவிர அவர்கள் அபிப்பிராயபேதம் கொள்ளவில்லை, (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன், அவர்கள் எதில் அபிப்பிரயாபேதம் கொண்டிருந்தார்களோ அதில், மறுமை நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.
45:18
45:18 ثُمَّ جَعَلْنٰكَ عَلٰى شَرِيْعَةٍ مِّنَ الْاَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‏
ثُمَّ பிறகு جَعَلْنٰكَ உம்மை அமைத்தோம் عَلٰى شَرِيْعَةٍ தெளிவான சட்டங்கள் மீது مِّنَ الْاَمْرِ இந்த மார்க்கத்தினுடைய فَاتَّبِعْهَا ஆகவே அதையே பின்பற்றுவீராக! وَلَا تَتَّبِعْ பின்பற்றாதீர் اَهْوَآءَ மன விருப்பங்களை الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‏ அறியாதவர்களின்
45:18. இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.
45:18. பிறகு, (நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உம்மை ஆக்கியிருக்கிறோம். ஆகவே, அதையே நீர் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பங்களை நீர் பின்பற்றாதீர்.
45:18. பிறகு (நபியே!) இப்போது தீன் சம்பந்தமான விஷயங்களில் தெளிவான, பிரதான மார்க்கத்தில் (ஷரீஅத்தில்) உம்மை நாம் நிலை நிறுத்தியிருக்கிறோம். எனவே, நீர் அதையே பின்பற்றும். அறியாத மக்களின் மன இச்சைகளைப் பின்பற்றாதீர்.
45:18. இதன் பின்னர் (மார்க்கக்) காரியத்தில் (தெளிவான) ஒரு வழியின் மீது உம்மை நாம் ஆக்கி இருக்கின்றோம், ஆகவே, அதனை(யே) நீர் பின்பற்றுவீராக! (உண்மையை) அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்.
45:19
45:19 اِنَّهُمْ لَنْ يُّغْنُوْا عَنْكَ مِنَ اللّٰهِ شَيْــٴًـــا‌ ؕ وَ اِنَّ الظّٰلِمِيْنَ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ ۚ وَاللّٰهُ وَلِىُّ الْمُتَّقِيْنَ‏
اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَنْ يُّغْنُوْا அறவே தடுக்க மாட்டார்கள் عَنْكَ உம்மை விட்டு مِنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து شَيْــٴًـــا‌ ؕ وَ اِنَّ எதையும்/நிச்சயமாக الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள் بَعْضُهُمْ அவர்களில் சிலர் اَوْلِيَآءُ بَعْضٍ‌ ۚ நண்பர்கள்/சிலருக்கு وَاللّٰهُ அல்லாஹ் وَلِىُّ நண்பன் الْمُتَّقِيْنَ‏ இறையச்சமுள்ளவர்களின்
45:19. நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு யாதோர் உதவியும் செய்து விட முடியாது. இன்னும் நிச்சயமாக அநியாயக்காரர்களில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையவர்களுக்கு அல்லாஹ்வே பாதுகாவலன் ஆவான்
45:19. நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதமாக உமக்கு ஒரு உதவியும் செய்துவிட முடியாது. நிச்சயமாக அநியாயக்காரர்கள் சிலர், (அவர்களில்) சிலருக்குத்தான் நண்பர்கள். (நம்பிக்கையாளர்களுக்கு அல்ல.) அல்லாஹ்தான் இறையச்சமுடையவர்களின் நண்பன் ஆவான்.
45:19. அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு அவர்களால் எந்தப் பயனும் தர முடியாது. மேலும், கொடுமை புரிபவர்களே தங்களுக்குள் ஒருவருக்கொருவர் தோழர்களாக இருக்கின்றார்கள். மேலும், இறையச்சமுடையோர்க்கு அல்லாஹ் தோழனாக இருக்கின்றான்.
45:19. நிச்சயமாக, அவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதமாக உம்மைவிட்டு எதனையும் தடுத்து விடவேமாட்டார்கள், நிச்சயமாக, அநியாயக்காரர்கள் _ அவர்களில் சிலர், சிலருக்கு உதவியாளர்களாகவும் இருக்கிறார்கள், இன்னும் அல்லாஹ் பயபக்தியுடைவர்களின் பாதுகாவலன்.
45:20
45:20 هٰذَا بَصَاٮِٕرُ لِلنَّاسِ وَهُدًى وَّرَحْمَةٌ لِّقَوْمٍ يُّوْقِنُوْنَ‏
هٰذَا இது بَصَاٮِٕرُ தெளிவான ஆதாரங்களும் لِلنَّاسِ மக்களுக்கு وَهُدًى நேர்வழியும் وَّرَحْمَةٌ கருணையுமாகும் لِّقَوْمٍ மக்களுக்கு يُّوْقِنُوْنَ‏ உறுதி கொள்கின்றனர்
45:20. இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
45:20. இது மனிதர்களுக்கு தெளிவான விளக்கமாகவும் நம்பக்கூடிய மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கிறது.
45:20. இவை, மனிதர்கள் அனைவருக்கும் பகுத்துணரும் சான்றுகளாய் இருக்கின்றன. மேலும், உறுதி கொள்ளக்கூடிய மக்களுக்கு வழிகாட்டியாகவும் கருணையாகவும் இருக்கின்றது.
45:20. (குர் ஆனாகிய) இது மனிதர்களுக்குத் தெளிவான ஆதாரங்களாகவும், உறுதி கொள்கின்ற சமூகத்தார்க்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.
45:21
45:21 اَمْ حَسِبَ الَّذِيْنَ اجْتَـرَحُوا السَّيِّاٰتِ اَنْ نَّجْعَلَهُمْ كَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ سَوَآءً مَّحْيَاهُمْ وَمَمَاتُهُمْ‌ ؕ سَآءَ مَا يَحْكُمُوْنَ‏
اَمْ حَسِبَ எண்ணுகின்றார்களா? الَّذِيْنَ எவர்கள் اجْتَـرَحُوا செய்தார்கள் السَّيِّاٰتِ பாவங்களை اَنْ نَّجْعَلَهُمْ அவர்களை ஆக்குவோம் என்று كَالَّذِيْنَ எவர்களைப் போன்று اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا செய்தவர்களை الصّٰلِحٰتِ ۙ நன்மைகளை سَوَآءً சமமாக்கிவிடுவோம் مَّحْيَا வாழ்க்கையும் هُمْ இவர்களின் وَمَمَاتُهُمْ‌ ؕ இவர்களின் மரணத்தையும் سَآءَ அது மிகக் கெட்டது مَا يَحْكُمُوْنَ‏ எதை தீர்ப்பளிக்கின்றார்களோ
45:21. எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா? அவர்கள் உயிருடனிருப்பதும், மரணமடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும்.  
45:21. எவர்கள் பாவத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்களை, நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் உயிருடன் இருப்பதும் அவர்கள் இறந்துவிடுவதும் சமமே. அவர்கள் (இதற்கு மாறாகச்) செய்து கொண்ட முடிவு மகா கெட்டது.
45:21. தீமைகளைச் செய்தவர்களையும், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களையும் இரு சாராரின் வாழ்வும் மரணமும் சமமாகும் விதத்தில் ஒன்றுபோல் ஆக்கி விடுவோம் என்று எண்ணிக்கொண்டார்களா என்ன? இவர்கள் செய்யும் முடிவு எவ்வளவு கெட்டது!
45:21. தீமைகளைச் சம்பாதித்து கொண்டார்களே அத்தகையோர்_ விசுவாசங் கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களே அத்தகையோரைப் போன்று அவர்களையும் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் ஜீவித்து இருப்பதும், அவர்கள் மரணித்துவிடுவதும், சமமே, அவர்கள் (இதற்கு மாறாகத் தீர்ப்புச் செய்து கொண்டது மிகக் கெட்டதாகிவிட்டது.
45:22
45:22 وَ خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزٰى كُلُّ نَفْسٍۢ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
وَ خَلَقَ படைத்தான் اللّٰهُ அல்லாஹ் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ பூமியையும் بِالْحَقِّ உண்மையான காரணத்திற்காக(வும்) وَلِتُجْزٰى கூலி கொடுக்கப்படுவதற்காகவும் كُلُّ نَفْسٍۢ ஒவ்வொரு ஆன்மாவும் بِمَا كَسَبَتْ அது எதை செய்ததோ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏ இன்னும் அவர்கள்/அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
45:22. வானங்களையும் பூமியையும் அல்லாஹ் உண்மையுடன் (தக்க காரணத்தைக் கொண்டே) படைத்துள்ளான்; ஒவ்வோர் ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க கூலி கொடுக்கப்படுவதற்காக; அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
45:22. வானங்களையும் பூமியையும் அல்லாஹ் தக்க காரணத்தின் மீதே படைத்திருக்கிறான். ஆகவே, (அவர்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவற்றின் செயலுக்குத்தக்க கூலியே கொடுக்கப்படும். அவை (அணுவளவும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.
45:22. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் சத்தியத்துடன் படைத்திருக்கிறான் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் சம்பாதித்த கூலி வழங்கப்பட வேண்டும்; மக்கள் மீது சிறிதும் அநீதி இழைக்கப்படக் கூடாது என்பதற்காக!
45:22. வானங்களையும் பூமியையும் அல்லாஹ் நீதியைக் கொண்டு (தக்க காரணத்திற்காகவே) படைத்திருக்கிறான், இன்னும், ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்ததைக்கொண்டு கூலி கொடுக்கப்படுவதற்காகவும் (படைத்துள்ளான்), அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.
45:23
45:23 اَفَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰى عِلْمٍ وَّخَتَمَ عَلٰى سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰى بَصَرِهٖ غِشٰوَةً  ؕ فَمَنْ يَّهْدِيْهِ مِنْۢ بَعْدِ اللّٰهِ‌ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ‏
اَفَرَءَيْتَ நீர் அறிவிப்பீராக! مَنِ اتَّخَذَ எடுத்துக்கொண்டவனைப் பற்றி اِلٰهَهٗ தனது கடவுளாக هَوٰٮهُ தனது மனவிருப்பத்தை وَاَضَلَّهُ அவனை வழிகெடுத்தான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى عِلْمٍ அறிவு வந்ததன் பின்னர் وَّخَتَمَ இன்னும் முத்திரையிட்டான் عَلٰى سَمْعِهٖ அவனது செவியிலும் وَقَلْبِهٖ அவனது உள்ளத்திலும் وَجَعَلَ இன்னும் ஆக்கினான் عَلٰى بَصَرِهٖ அவனது பார்வையில் غِشٰوَةً  ؕ திரையை فَمَنْ ஆகவே, யார் يَّهْدِيْهِ அவனுக்கு நேர்வழி காட்டுவார் مِنْۢ بَعْدِ பின் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்விற்கு اَفَلَا تَذَكَّرُوْنَ‏ நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
45:23. (நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
45:23. (நபியே!) தன் இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக் கொண்ட ஒருவனை நீர் கவனித்தீரா? அவனுக்கு(ப் போதுமான) கல்வி இருந்தும் (அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டுவிட்டான். அவனுடைய செவியின் மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை அமைத்து விட்டான். அல்லாஹ் இவ்வாறு செய்த பின்னர், அவனை யாரால்தான் நேரான வழியில் செலுத்த முடியும்? நீங்கள் நல்லுணர்வு பெற வேண்டாமா?
45:23. தனது மன இச்சையைத் தன்னுடைய கடவுளாக்கிக் கொண்ட மனிதனின் நிலையை எப்போதேனும் நீர் சிந்தித்ததுண்டா? அறிவுடனேயே அல்லாஹ் அவனை வழிகேட்டில் தள்ளிவிட்டான். மேலும், அவனுடைய காதுகளிலும், இதயத்திலும் முத்திரையிட்டுவிட்டான். மேலும் அவனுடைய கண்கள்மீது திரையிட்டு விட்டான். இனி அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு நேர்வழிகாட்டக்கூடியவர் யார்? என்ன, நீங்கள் எந்தப் படிப்பினையும் பெறுவதில்லையா?
45:23. (நபியே!) தன்னுடைய (மனோ) இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக்கொண்டானே அவனை நீர் பார்த்தீரா? (அவன் வழி கெடுவதற்கு உரியவன் என்ற தன்) அறிவினால் அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டு விட்டான், அவனுடைய செவியின் மீதும், அவனுடைய இதயத்தின் மீதும் முத்திரையிட்டுவிட்டான், அன்றியும், அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை ஆக்கிவிட்டான், அல்லாஹ்வுக்குப்பிறகு அவனுக்கு நேர் வழிகாட்டுபவர் யார்? நீங்கள் நினைவு கூர்ந்து உணர மாட்டீர்களா?
45:24
45:24 وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ‌ؕ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ‌ ۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ‏
وَقَالُوْا இன்னும் கூறினார்கள் مَا வேறு இல்லை هِىَ இது اِلَّا தவிர حَيَاتُنَا நமது வாழ்க்கையை الدُّنْيَا உலக نَمُوْتُ மரணிக்கின்றோம் وَنَحْيَا இன்னும் வாழ்கின்றோம் وَمَا يُهْلِكُنَاۤ நம்மை அழிக்காது اِلَّا الدَّهْرُ‌ؕ காலத்தைத் தவிர وَمَا لَهُمْ அவர்களுக்கு இல்லை بِذٰلِكَ இதைப் பற்றி مِنْ عِلْمٍ‌ ۚ அறிவு اِنْ هُمْ அவர்கள் இல்லை اِلَّا يَظُنُّوْنَ‏ வீண் எண்ணம் எண்ணுபவர்களே தவிர
45:24. மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.
45:24. ‘‘இவ்வுலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைத் தவிர வேறொரு வாழ்க்கை இல்லை'' என்றும், ‘‘(இதில்தான்) நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; பின்னர் இறந்து விடுகிறோம். காலத்தைத் தவிர (வேறு எதுவும்) நம்மை அழிப்பதில்லை'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதைப்பற்றி இவர்களுக்கு ஒரு ஞானமும் இல்லை. இவர்கள் வீண் சந்தேகத்தில் ஆழ்ந்திருப்போரைத் தவிர வேறில்லை.
45:24. மேலும், இந்த மக்கள் கூறுகிறார்கள்: “வாழ்க்கை என்பது நம்முடைய இந்த உலக வாழ்க்கைதான். இங்குதான் நாம் மரணிக்கவும் உயிர்வாழவும் செய்கின்றோம். கால ஓட்டமல்லாமல் வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” உண்மையில் இது சம்பந்தமாக இவர்களிடம் எந்த ஞானமும் இல்லை. இவர்கள் வெறும் ஊகத்தின் அடிப்படையில்தான் இப்படிக் கூறுகிறார்கள்.
45:24. “இது நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) இல்லை,” (இதில்தான்) நாம் இறந்துவிடுகின்றோம், இன்னும், ஜீவிக்கின்றோம், காலத்தைத் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்றும் அவர்கள் கூறுகின்றனர், அது பற்றிய எவ்வித அறிவும் அவர்களுக்கில்லை, அவர்கள் (வீண் கற்பனையாக) எண்ணுகிறார்களே தவிர (வேறு) இல்லை.
45:25
45:25 وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ مَّا كَانَ حُجَّتَهُمْ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتُوْا بِاٰبَآٮِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَاِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் மீது اٰيٰتُنَا நமது வசனங்கள் بَيِّنٰتٍ தெளிவான ஆதாரங்களாக مَّا كَانَ இருக்கவில்லை حُجَّتَهُمْ அவர்களின் ஆதாரம் اِلَّاۤ தவிர اَنْ قَالُوا அவர்கள் சொல்வதே ائْتُوْا بِاٰبَآٮِٕنَاۤ எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
45:25. அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்” என்பது தவிர வேறில்லை.
45:25. அவர்களுக்கு தெளிவான நமது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘மெய்யாகவே (மரணித்தவர்கள் உயிர்பெற்று எழும்புவார்கள் என்ற விஷயத்தில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (இறந்து போன) எங்கள் மூதாதைகளை (உயிர்ப்பித்துக்) கொண்டு வாருங்கள்'' என்று கூறுவதைத் தவிர, (வேறு) பதில் கூற அவர்களுக்கு முடிவதில்லை.
45:25. மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் இவர்களிடம் ஓதிக் காட்டப்படும்போது “நீங்கள் உண்மையாளர்கள் என்றால் எங்கள் முன்னோரை எழுப்பிக் கொண்டுவாருங்கள்” என்று கூறுவதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இவர்களிடம் இருப்பதில்லை.
45:25. மேலும், அவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்களின் வாதம் “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (உயிர்ப்ப்பித்து)க் கொண்டுவாருங்கள்” என்று அவர்கள் கூறுவதைத் தவிர (வேறெதுவும்) இல்லை.
45:26
45:26 قُلِ اللّٰهُ يُحْيِيْكُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَا رَيْبَ فِيْهِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ‏
قُلِ கூறுவீராக! اللّٰهُ அல்லாஹ்தான் يُحْيِيْكُمْ உங்களை உயிர்ப்பிக்கின்றான் ثُمَّ பிறகு يُمِيْتُكُمْ உங்களை மரணிக்க வைப்பான் ثُمَّ பிறகு يَجْمَعُكُمْ அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாளில் لَا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهِ அதில் وَلٰكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.  
45:26. (நபியே!) நீர் அவர்களை நோக்கி கூறுவீராக: ‘‘அல்லாஹ்தான் உங்களை உயிர்ப்பித்தான்; (நானல்ல.) அவனே உங்களை மரணிக்கவைப்பான். பின்னர், மறுமை நாளில் (உயிர் கொடுத்து) உங்களை ஒன்று சேர்ப்பான். இதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதை அறிந்து கொள்வதில்லை.''
45:26. (நபியே, இவர்களிடம்) கூறும்: அல்லாஹ்தான் உங்களை உயிர் வாழச் செய்கின்றான். பின்னர் அவனே உங்களை மரணமடையச் செய்கின்றான். பின்னர், அந்த மறுமைநாளின்போது அவனே உங்களை ஒன்றுதிரட்டுவான். அந்நாளின் வருகையில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும் பெரும்பாலோர் அறிவதில்லை.
45:26. (நபியே!) நீர் (அவர்களிடம்) கூறுவீராக: ”அல்லாஹ்(தான்) உங்களை உயிர்ப்பிக்கிறான், பின்னர், உங்களை அவன் மரணிக்கச்செய்கிறான், பின்னர், மறுமை நாளுக்காக_(உயிர் கொடுத்து) உங்களை அவன் ஒன்று சேர்ப்பான்,_இதில் சந்தேகமில்லை, எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்.
45:27
45:27 وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يَوْمَٮِٕذٍ يَّخْسَرُ الْمُبْطِلُوْنَ‏
وَلِلّٰهِ அல்லாஹ்விற்கே உரியது مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமியின் وَيَوْمَ நாளில் تَقُوْمُ நிகழ்கின்றது السَّاعَةُ மறுமை நாள் يَوْمَٮِٕذٍ அந்நாளில் يَّخْسَرُ நஷ்டமடைவார்கள் الْمُبْطِلُوْنَ‏ பொய்யர்கள்
45:27. அன்றியும், வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; மேலும், இறுதித் தீர்ப்புக்கான வேளை வந்து வாய்க்கும் நாளில், பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்.
45:27. வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. விசாரணை நாள் வரும் அன்று (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்கள் அந்நாளில் நஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பார்கள்.
45:27. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், மறுமைநாள் வந்துவிடும்போது அசத்தியவாதிகள் நஷ்டத்திலேயே கிடப்பார்கள்.
45:27. அன்றியும் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது, மறுமை நாள் நிலைபெறும் நாளில் பொய்யாக்குவோர் அந்நாளில் நஷ்டமடைவார்கள்.
45:28
45:28 وَتَرٰى كُلَّ اُمَّةٍ جَاثِيَةً‌ كُلُّ اُمَّةٍ تُدْعٰۤى اِلٰى كِتٰبِهَا ؕ اَلْيَوْمَ تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
وَتَرٰى நீர் பார்ப்பீர் كُلَّ ஒவ்வொரு اُمَّةٍ சமுதாயத்தையும் جَاثِيَةً‌ முழந்தாளிட்ட வர்களாக كُلُّ ஒவ்வொரு اُمَّةٍ சமுதாயமும் تُدْعٰۤى அழைக்கப்படும் اِلٰى كِتٰبِهَا ؕ தமது பதிவு புத்தகத்தின் பக்கம் اَلْيَوْمَ இன்று تُجْزَوْنَ கூலி கொடுக்கப்படுவீர்கள் مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்கு
45:28. (அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள் (உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள்.
45:28. (நபியே! அந்நாளில்) ஒவ்வொரு வகுப்பாரும், முழந்தாளிட்டிருக்கக் காண்பீர். ஒவ்வொரு வகுப்பாரும் (விசாரணைக்காக) அவர்களுடைய (பதிவுப்) புத்தகத்தை நோக்கி அழைக்கப்படுவார்கள். (அவர்களை நோக்கி) ‘‘இன்றைய தினம் நீங்கள் உங்கள் செயலுக்குரிய கூலியை கொடுக்கப்படுவீர்கள்'' (என்றும்),
45:28. அந்நேரம் ஒவ்வொரு சமூகமும் முழந்தாளிட்டு விழுந்திருப்பதை நீர் காண்பீர். “வாருங்கள், உங்கள் வினைச்சுவடியைப் பாருங்கள்” என்று ஒவ்வொரு சமுதாயத்தினரும் அழைக்கப்படுவர் (அவர்களிடம் கூறப்படும்:) “நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குப் பிரதிபலன் இன்று உங்களுக்குக் கொடுக்கப்படும்.
45:28. (நபியே! அந்நாளில்) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்கும் நிலையில் நீர் காண்பீர். ஒவ்வொரு சமுதாயமும் (விசாரணைக்காக) அதனதன் பதிவுப் புத்தகத்தின்பால் அழைக்கப்படும்_”இன்றையத்தினம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்குக் கூலி கொடுக்கப்படுவீர்கள்” (என்றும்).
45:29
45:29 هٰذَا كِتٰبُنَا يَنْطِقُ عَلَيْكُمْ بِالْحَقِّ‌ؕ اِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
هٰذَا இதோ كِتٰبُنَا நமது பதிவேடு يَنْطِقُ அது பேசும் عَلَيْكُمْ உங்கள் மீது بِالْحَقِّ‌ؕ உண்மையாக اِنَّا நிச்சயமாக நாம் كُنَّا نَسْتَنْسِخُ எழுதிக் கொண்டிருந்தோம் مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை
45:29. “இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம்; நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” (என்று கூறப்படும்).
45:29. ‘‘இது (உங்கள் செயலைப் பற்றிய) நமது (பதிவுப்) புத்தகம். இது உங்களைப் பற்றிய உண்மையையே கூறும். நிச்சயமாக நாம், நீங்கள் செய்தவற்றையெல்லாம் எழுதி வைத்திருக்கிறோம்'' (என்றும் கூறப்படும்).
45:29. இது, நாம் தயாரித்த வினைச்சுவடி. உங்கள் மீது மிகச் சரியாக சாட்சியம் அளித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் செய்துவந்த செயல்களை நாம் எழுதச் செய்துகொண்டிருந்தோம்.
45:29. “இது உங்களைப் பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய (பதிவுப்) புத்தகம், நிச்சயமாக நாம், நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை (அதில்) பதிவு செய்பவர்களாக இருந்தோம்” (என்றும் கூறப்படும்).
45:30
45:30 فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِىْ رَحْمَتِهٖ‌ ؕ ذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْمُبِيْنُ‏
فَاَمَّا ஆகவே الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை فَيُدْخِلُهُمْ அவர்களை நுழைவிப்பான் رَبُّهُمْ அவர்களது இறைவன் فِىْ رَحْمَتِهٖ‌ ؕ தனது அருளில் ذٰ لِكَ هُوَ இதுதான் الْفَوْزُ வெற்றி الْمُبِيْنُ‏ மிகத் தெளிவான(து)
45:30. ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து வந்தார்களோ, அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான வெற்றியாகும்.
45:30. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களை, அவர்களுடைய இறைவன் தன் அருளில் புகுத்துவான். இதுதான் மிகத் தெளிவான வெற்றியாகும்.
45:30. இனி எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை, அவர்களின் அதிபதி தன் கருணையில் நுழைவிப்பான். இதுவே தெளிவான வெற்றியாகும்.”
45:30. ஆகவே, விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களே அத்தகையோர்_ அவர்களை, அவர்களுடைய இரட்சகன் தன்னுடைய அருளில் நுழைவிக்கிறான், அதுதான் தெளிவான வெற்றியாகும்.
45:31
45:31 وَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْۤا اَفَلَمْ تَكُنْ اٰيٰتِىْ تُتْلٰى عَلَيْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُّجْرِمِيْنَ‏
وَاَمَّا ஆக الَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரித்தவர்கள் اَفَلَمْ تَكُنْ இருக்கவில்லையா? اٰيٰتِىْ எனது வசனங்கள் تُتْلٰى ஓதப்படுகின்றன عَلَيْكُمْ உங்கள் மீது فَاسْتَكْبَرْتُمْ நீங்கள் பெருமை அடித்தீர்கள் وَكُنْتُمْ இன்னும் நீங்கள் இருந்தீர்கள் قَوْمًا மக்களாக مُّجْرِمِيْنَ‏ குற்றம் புரிகின்றவர்கள்
45:31. ஆனால், நிராகரித்தவர்களிடம்: “உங்களுக்கு என் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டுக் கொண்டு இருக்கவில்லையா? அப்பொழுது நீங்கள் பெருமையடித்துக் கொண்டு குற்றவாளிகளாக இருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்).
45:31. எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்தார்களோ (அவர்களை நோக்கி) உங்களுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அச்சமயம் நீங்கள் பெருமைகொண்டு (அதைப் புறக்கணித்து) விட்டீர்கள். இன்னும் நீங்கள் குற்றவாளிகளாக இருந்தீர்கள்'' (என்றும் கூறப்படும்).
45:31. மேலும், எவர்கள் நிராகரித்தார்களோ (அவர்களிடம் சொல்லப்படும்:) “என்னுடைய வசனங்கள் உங்களிடம் ஓதிக்காட்டப்படவில்லையா? ஆனால், நீங்கள் பெருமையடித்தீர்கள். மேலும், குற்றம்செய்யும் மக்களாய் இருந்தீர்கள்.
45:31. இன்னும், நிராகரித்தார்களே அத்தகையோர்_ (அவர்களிடம்,) “உங்களுக்கு என்னுடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கவில்லையா? பின்னர் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள், அன்றியும், நீங்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவும் இருந்தீர்கள்” (என்றும் கூறப்படும்).
45:32
45:32 وَاِذَا قِيْلَ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّالسَّاعَةُ لَا رَيْبَ فِيْهَا قُلْتُمْ مَّا نَدْرِىْ مَا السَّاعَةُ ۙ اِنْ نَّـظُنُّ اِلَّا ظَنًّا وَّمَا نَحْنُ بِمُسْتَيْقِنِيْنَ‏
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் اِنَّ وَعْدَ நிச்சயமாக வாக்கு اللّٰهِ அல்லாஹ்வின் حَقٌّ உண்மையானது وَّالسَّاعَةُ இன்னும் மறுமை لَا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهَا அதில் قُلْتُمْ நீங்கள் கூறுவீர்கள் مَّا نَدْرِىْ அறியமாட்டோம் مَا السَّاعَةُ ۙ மறுமை என்றால் என்ன? اِنْ نَّـظُنُّ நாங்கள் எண்ணவில்லை اِلَّا தவிர ظَنًّا ஒரு எண்ணமாகவே وَّمَا نَحْنُ بِمُسْتَيْقِنِيْنَ‏ நாங்கள் உறுதிசெய்பவர்களாக இல்லை
45:32. மேலும் “நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; மறுமை நாள் அது பற்றியும் சந்தேகமில்லை” என்று கூறப்பட்ட போது; “(மறுமை) நாள் என்ன என்று நாங்கள் அறியோம்; அது ஒரு வெறும் கற்பனை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே (அதை) நாங்கள் உறுதியென நம்புபவர்களல்லர்” என்று நீங்கள் கூறினீர்கள்.
45:32. மேலும், ‘‘ நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது, மறுமை வருவதில் அறவே சந்தேகமில்லை'' என்று (உங்களுக்குக்) கூறப்பட்டால் அதற்கு, ‘‘மறுமை இன்னதென்றே நாங்கள் அறியோம். அது (வீணான) வெறும் எண்ணத்தைத் தவிர வேறில்லை என்றே எண்ணுகிறோம். அதை (மெய்யென்று) நாங்கள் நம்பவுமில்லை'' என்று நீங்கள் கூறினீர்கள் (அல்லவா?) என்று (அவர்களிடம்) கேட்கப்படும்.
45:32. மேலும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும் மறுமைநாள் வருவதில் எவ்வித ஐயமும் இல்லை என்றும் சொல்லப்பட்டால் “மறுமை என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. நாங்கள் வெறும் ஊகம்தான் கொண்டிருக்கின்றோம்; உறுதிகொள்ளக் கூடியவர்களாய் இல்லை” என்று நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்கள்.
45:32. மேலும், “நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது, மறுமைநாள்_அ(து வருமென்ப)தில் யாதொரு சந்தேகமுமில்லை” என்று கூறப்பட்டால், “மறுமைநாள் இன்னதென்றே நாங்கள் அறியோம், அது வெறும் எண்ணத்தைத் தவிர (வேறு) இல்லை என்றே எண்ணுகிறோம், (அதனை உண்மையென்று) நாங்கள் உறுதியாக நம்புகிறவர்களாகவும் இல்லை என்று நீங்கள் கூறினீர்கள் (அல்லவா?” என்று அவர்களிடம் கேட்கப்படும்.)
45:33
45:33 وَبَدَا لَهُمْ سَيِّاٰتُ مَا عَمِلُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏
وَبَدَا வெளிப்படும் لَهُمْ அவர்களுக்கு سَيِّاٰتُ தீமைகள் مَا عَمِلُوْا அவர்கள் செய்தவற்றின் وَحَاقَ இன்னும் சூழ்ந்துகொள்ளும் بِهِمْ அவர்களை مَّا எது كَانُوْا இருந்தார்களோ بِهٖ அதை يَسْتَهْزِءُوْنَ‏ பரிகாசம் செய்பவர்களாக
45:33. அவர்கள் செய்த தீமையெல்லாம் (அந்நாளில்) அவர்களுக்கு வெளியாகும்; எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
45:33. அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்கள் அனைத்தும், அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தவை அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்.
45:33. அந்த நேரம் அவர்களுடைய செயல்களின் தீய விளைவு அவர்களுக்குத் தென்பட்டுவிடும். மேலும், அவர்கள் எதைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
45:33. மேலும், அவர்கள் செய்துகொண்டிருந்த தீயவைகள் (யாவும்) அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும், எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அது அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்.
45:34
45:34 وَقِيْلَ الْيَوْمَ نَنْسٰٮكُمْ كَمَا نَسِيْتُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا وَمَاْوٰٮكُمُ النَّارُ وَمَا لَـكُمْ مِّنْ نّٰصِرِيْنَ‏
وَقِيْلَ கூறப்படும் الْيَوْمَ இன்று نَنْسٰٮكُمْ உங்களை விட்டுவிடுவோம் كَمَا نَسِيْتُمْ நீங்கள் விட்டதுபோன்று لِقَآءَ சந்திப்பை يَوْمِكُمْ هٰذَا உங்களது இன்றைய தினத்தின் وَمَاْوٰٮكُمُ உங்கள் ஒதுங்குமிடம் النَّارُ நரகம்தான் وَمَا لَـكُمْ உங்களுக்கு இல்லை مِّنْ نّٰصِرِيْنَ‏ உதவியாளர்கள் யாரும்
45:34. இன்னும், “நீங்கள் உங்களுடைய இந்நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்றே, இன்றைய தினம் நாம் உங்களை மறக்கிறோம்; அன்றியும் நீங்கள் தங்குமிடம் நரகம் தான்; மேலும், உங்களுக்கு உதவி செய்பவர் எவருமில்லை” என்று (அவர்களுக்குக்) கூறப்படும்.
45:34. (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இந்நாளை சந்திப்பதை மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் உங்களை மறந்துவிட்டோம். உங்கள் தங்குமிடம் நரகம்தான். (இன்றைய தினம்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை'' என்றும் கூறப்படும்.
45:34. மேலும், அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் இந்நாளின் சந்திப்பை எப்படி மறந்திருந்தீர்களோ அப்படியே இன்று நாம் உங்களை மறந்துவிடுகின்றோம். உங்கள் இருப்பிடம் இனி நரகம்தான். மேலும், உங்களுக்கு உதவி செய்வோர் எவரும் இல்லை.
45:34. அன்றியும் (அவர்களிடம்) “நீங்கள் உங்களுடைய இந்நாளின் சந்திப்பை மறந்தவாறே நாமும் இன்றையத் தினம் உங்களை மறந்துவிட்டோம், மேலும், உங்கள் தங்குமிடம் நரகமாகும், உங்களுக்கு எந்த உதவியாளர்களுமில்லை” என்றும் கூறப்படும்.
45:35
45:35 ذٰلِكُمْ بِاَنَّكُمُ اتَّخَذْتُمْ اٰيٰتِ اللّٰهِ هُزُوًا وَّغَرَّتْكُمُ الْحَيٰوةُ الدُّنْيَا‌ ۚ فَالْيَوْمَ لَا يُخْرَجُوْنَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ‏
ذٰلِكُمْ بِاَنَّكُمُ இதற்கு காரணம் நிச்சயமாக நீங்கள் اتَّخَذْتُمْ எடுத்துக்கொண்டீர்கள் اٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் هُزُوًا கேலியாக وَّغَرَّتْكُمُ இன்னும் உங்களை மயக்கிவிட்டது الْحَيٰوةُ الدُّنْيَا‌ ۚ உலக வாழ்க்கை فَالْيَوْمَ ஆகவே, இன்று لَا يُخْرَجُوْنَ வெளியேற்றப்பட மாட்டார்கள் مِنْهَا அதிலிருந்து وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ‏ இன்னும் அவர்களிடமிருந்து காரணங்கள் அங்கீகரிக்கப்படாது
45:35. நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏளனமாக எடுத்துக் கொண்டதனாலும் இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி ஏமாற்றி விட்டதினாலுமே இந்த நிலை. இன்றைய தினத்தில் அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்; மன்னிப்பளிக்கப்படவும் மாட்டார்கள்.
45:35. இதன் காரணமாவது: நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள். இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட்டது (என்றும் கூறப்படும்). இன்றைய தினம் நரகத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள். அவர்களுடைய மன்னிப்புக் கோரலும் அங்கீகரிக்கப்படாது.
45:35. உங்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டதற்குக் காரணம், நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தீர்கள். மேலும், உலக வாழ்வு உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருந்தது. எனவே இன்று இவர்கள் நரகத்திலிருந்து விடுவிக்கப்படவும் மாட்டார்கள். மன்னிப்புக்கோரி (உங்கள் அதிபதியின்) உவப்பைப் பெறுங்கள் என்று இவர்களிடம் கூறப்படவும் மாட்டாது.
45:35. “இ(ந்தத் தண்டனையான)து நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக்கொண்டீர்கள் என்பதினாலாகும், இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கியும்விட்டது” (என்று கூறப்படும்), இன்றையத் தினம் அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள், மேலும், (அந்நாளில் நற்செயல்கள் செய்து இரட்சகனைத்) திருப்திப்படுத்த அவர்கள் தேடப்படமாட்டார்கள்.
45:36
45:36 فَلِلّٰهِ الْحَمْدُ رَبِّ السَّمٰوٰتِ وَرَبِّ الْاَرْضِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
فَلِلّٰهِ அல்லாஹ்விற்கே الْحَمْدُ எல்லாப் புகழும் رَبِّ அதிபதி السَّمٰوٰتِ வானங்களின் وَرَبِّ இன்னும் அதிபதி الْاَرْضِ பூமியின் رَبِّ அதிபதி الْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களின்
45:36. ஆகவே வானங்களுக்கும் இறைவனான - பூமிக்கும் இறைவனான - அகிலத்தாருக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
45:36. வானங்களின் இறைவனும், பூமியின் இறைவனும், இன்னும் அகிலத்தார் அனைவரின் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும்.
45:36. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும், அகிலத்தார் அனைவரையும் பரிபாலிப்பவனுமாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!
45:36. ஆகவே, வானங்களில் இரட்சகனும், பூமியின் இரட்சகனும் அகிலத்தாரின் இரட்சகனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும்.
45:37
45:37 وَلَهُ الْكِبْرِيَآءُ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
وَلَهُ இன்னும் அவனுக்கே உரியது الْكِبْرِيَآءُ பெருமை فِى السَّمٰوٰتِ வானங்களிலும் وَالْاَرْضِ‌ பூமியிலும் وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
45:37. இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது; மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.
45:37. வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா பெருமைகளும் அவனுக்கே சொந்தமானவை. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
45:37. வானங்களிலும் பூமியிலும் பெருமை அவனுக்கே உரியதாகும். மேலும் அவன் மிகவும் வல்லமை மிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
45:37. வானங்களிலும், பூமியிலும் (உள்ள) பெருமை அவனுக்கே உரியது, அவனே (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.