51. ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)
மக்கீ, வசனங்கள்: 60

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
51:1
51:1 وَالذّٰرِيٰتِ ذَرْوًا ۙ‏
وَالذّٰرِيٰتِ ذَرْوًا ۙ‏ வேகமாக வீசக்கூடிய காற்றுகள் மீது சத்தியமாக!
51:1. (புழுதியைக் எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!
51:1. (கடல் நீரை ஆவியாக்கிச் சிதறடிக்கும்) சூறாவளிகள் மீதும்,
51:1. புழுதியைக் கிளப்பக் கூடிய (காற்றுகளின் மீது) பிறகு,
51:1. புழுதியை பறக்கவிடும் காற்றுகளின் மீது சத்தியமாக!
51:2
51:2 فَالْحٰمِلٰتِ وِقْرًا ۙ‏
فَالْحٰمِلٰتِ وِقْرًا ۙ‏ சுமையை சுமக்கின்ற மேகங்கள் மீது சத்தியமாக!
51:2. (மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்,
51:2. (அந்த நீராவியை) சுமந்து செல்லும் மேகங்கள் மீதும்,
51:2. நீர் நிரம்பிய மேகங்களைச் சுமக்கக்கூடிய,
51:2. (மழையின் கனத்தை) சுமந்து வரும் மேகங்களின் மீதும் சத்தியமாக!
51:3
51:3 فَالْجٰرِيٰتِ يُسْرًا ۙ‏
فَالْجٰرِيٰتِ يُسْرًا ۙ‏ மென்மையாக செல்கின்ற கப்பல்கள் மீது சத்தியமாக!
51:3. பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும்,
51:3. (பல பாகத்திற்கு அதை) எளிதாக(த் தாங்கிச்) செல்லும் மேகங்கள் மீதும்,
51:3. மெதுவான வேகத்தில் செல்லக்கூடிய,
51:3. (கடல்களில்) இலகுவாகச் செல்கின்றவைகளின் மீதும் சத்தியமாக!
51:4
51:4 فَالْمُقَسِّمٰتِ اَمْرًا ۙ‏
فَالْمُقَسِّمٰتِ اَمْرًا ۙ‏ கட்டளைகளை பிரிப்பவர்கள் மீது சத்தியமாக!
51:4. (பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக
51:4. அதை (பூமியின் பல பாகங்களில்) மழையாக பிரித்துவிடும் வானவர்கள் மீதும் சத்தியமாக!
51:4. பெரும் பணியை (மழையை)ப் பகிர்ந்தளிக்கக்கூடிய காற்றுகளின் மீது சத்தியமாக!
51:4. கட்டளையைப் பங்கிடுவோர்(களான வானவர்)கள் மீதும் சத்தியமாக!
51:5
51:5 اِنَّمَا تُوْعَدُوْنَ لَصَادِقٌ ۙ‏
اِنَّمَا تُوْعَدُوْنَ நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் لَصَادِقٌ ۙ‏ உண்மைதான்
51:5. நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும்.
51:5. (செயலுக்குத் தக்க கூலி கொடுக்கப்படுமென்று) உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமாக உண்மையானதே.
51:5. எது பற்றி உங்களுக்கு அச்சுறுத்தப்படுகின்றதோ அது உண்மையானதே!
51:5. (நற்செயலுக்கு நற்கூலியும், தீயசெயலுக்கு தண்டனையும் உண்டென்று) நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையானதாகும்.
51:6
51:6 وَّاِنَّ الدِّيْنَ لَوَاقِعٌ ؕ‏
وَّاِنَّ நிச்சயமாக الدِّيْنَ கூலி கொடுக்கப்படுவது لَوَاقِعٌ ؕ‏ நிகழ்ந்தே தீரும்
51:6. அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும்.
51:6. நிச்சயமாக (செயல்களுக்குரிய) கூலி கொடுக்கப்பட்டே தீரும்.
51:6. மேலும், செயல்களுக்குக் கூலி வழங்குவதென்பது அவசியம் நிகழக்கூடியதே!
51:6. நிச்சயமாக, (செயலுக்குத் தக்க) கூலி கொடுக்கப்படுவது நடந்தே தீரும்.
51:7
51:7 وَالسَّمَآءِ ذَاتِ الْحُـبُكِ ۙ‏
وَالسَّمَآءِ வானத்தின் மீது சத்தியமாக! ذَاتِ الْحُـبُكِ ۙ‏ அழகிய படைப்புடைய
51:7. அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!
51:7. (நட்சத்திரங்களின்) அழகிய பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக!
51:7. பலவகையான தோற்றங்களையுடைய வானத்தின் மீது சத்தியமாக!
51:7. பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக,
51:8
51:8 اِنَّـكُمْ لَفِىْ قَوْلٍ مُّخْتَلِفٍ ۙ‏
اِنَّـكُمْ நிச்சயமாக நீங்கள் لَفِىْ قَوْلٍ பேச்சில் இருக்கின்றனர் مُّخْتَلِفٍ ۙ‏ மாறுபட்ட
51:8. நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.
51:8. நிச்சயமாக நீங்கள் (சத்தியத்திற்கு) முரணாகப் பேசுவதில்தான் நிலைத்து விட்டீர்கள்.
51:8. (மறுமையைப் பற்றிய) உங்களுடைய கூற்று ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கின்றது.
51:8. நிச்சயமாக நீங்கள், (நபியைப்பற்றி) மாறுபட்ட கூற்றில் இருக்கின்றீர்கள்.
51:9
51:9 يُّـؤْفَكُ عَنْهُ مَنْ اُفِكَ ؕ‏
يُّـؤْفَكُ திருப்பப்படுகிறார் عَنْهُ இதை விட்டும் مَنْ எவர் اُفِكَ ؕ‏ திருப்பப்பட்டார்
51:9. அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.
51:9. (ஏற்கனவே, அல்லாஹ்வுடைய விதியின்படி) திருப்பப்பட்டவனே சத்தியத்தை விட்டும் திருப்பப்படுவான்.
51:9. எவன் சத்தியத்திலிருந்து பிறழ்ந்திருக்கின்றானோ அவன் மட்டுமே அதனால் தடுமாற்றம் அடைவான்.
51:9. (அல்லாஹ்வுடைய தூதர் கொண்டுவந்த உண்மையான விஷயங்கள் ஏற்பதைவிட்டும்) திருப்பபட்டவர் (வேதமாகிய) அதை விட்டும் திருப்பப்படுகிறார்.
51:10
51:10 قُتِلَ الْخَـرّٰصُوْنَۙ‏
قُتِلَ அழிந்து போகட்டும் الْخَـرّٰصُوْنَۙ‏ பொய்யை கற்பனை செய்பவர்கள்
51:10. பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.
51:10. பொய் சொல்பவர்கள் அழிந்தே போவர்.
51:10. அழிந்துவிட்டார்கள்; கணிப்பு மற்றும் ஊகத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பவர்கள்!
51:10. பொய்யர்கள் அழிந்தேபோவர்.
51:11
51:11 الَّذِيْنَ هُمْ فِىْ غَمْرَةٍ سَاهُوْنَۙ‏
الَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் فِىْ غَمْرَةٍ மயக்கத்தில் سَاهُوْنَۙ‏ மறதியாளர்களாக
51:11. அவர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.
51:11. அவர்கள் தங்கள் மடமையால் (மறுமையையே) மறந்துவிட்டனர்.
51:11. அவர்கள் எத்தகையவர்களெனில், அறியாமையில் மூழ்கி, அலட்சியத்தினால் மதியிழந்து இருப்பவர்கள்.
51:11. அவர்கள் எத்தகையோரென்றால் (தங்கள்) மடமையால், (மறுமையையே மறந்தோராய் இருப்போர் (ஆவர்).
51:12
51:12 يَسْــٴَـــلُوْنَ اَيَّانَ يَوْمُ الدِّيْنِؕ‏
يَسْــٴَـــلُوْنَ அவர்கள் கேட்கின்றனர் اَيَّانَ எப்போது يَوْمُ நாள் الدِّيْنِؕ‏ கூலி கொடுக்கப்படும்
51:12. (நன்மை, தீமைக்குக்) “கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?” என்று அவர்கள் கேட்கின்றனர்.
51:12. அவர்கள், ‘‘கூலி கொடுக்கும் நாள் எப்பொழுது வரும்?'' என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.
51:12. “கூலி கொடுக்கப்படும் அந்நாள் எப்போது வரும்?” என வினவுகின்றனர்.
51:12. “கூலி கொடுக்கும் நாள் எப்பொழுது (வரும்)?” என்று அவர்கள் (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.
51:13
51:13 يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُوْنَ‏
يَوْمَ நாளில்... هُمْ அவர்கள் عَلَى النَّارِ நெருப்பின் மீது يُفْتَنُوْنَ‏ வேதனை செய்யப்படுகின்றனர்
51:13. நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).
51:13. அந்நாளில் அவர்கள், நெருப்பில் பொசுக்கி வேதனை செய்யப்படுவார்கள்.
51:13. இவர்கள் நெருப்பில் வதைக்கப்படும் நாளில் அது வரும்.
51:13. (அந்நாள்) அவர்கள் நெருப்பில் (பொசுக்கப்பட்டு) தண்டிக்கப்படும் நாள்.
51:14
51:14 ذُوْقُوْا فِتْنَتَكُمْؕ هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ‏
ذُوْقُوْا சுவையுங்கள்! فِتْنَتَكُمْؕ உங்கள் வேதனையை هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ‏ இது நீங்கள் அவசரமாகத் தேடிக்கொண்டிருந்தது
51:14. “உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்;” எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.
51:14. (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் வேதனையை சுவைத்துப் பாருங்கள். நீங்கள் (எப்பொழுது வருமென்று) அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது இதுதான்'' (என்றும் கூறப்படும்).
51:14. (அவர்களிடம் கூறப்படும்:) “இப்போது சுவையுங்கள்; உங்களுடைய வேதனையை! எதற்காக நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது.”
51:14. (அவர்களிடம்) “உங்கள் தண்டனையைச் சுவைத்துப் பாருங்கள் (எப்பொழுது வருமென்று) நீங்கள் எதனை அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது இது தான்” (என்றும் கூறப்படும்).
51:15
51:15 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ‏
اِنَّ الْمُتَّقِيْنَ நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் فِىْ جَنّٰتٍ சொர்க்கங்களில் وَّعُيُوْنٍۙ‏ இன்னும் நீரூற்றுகளில்
51:15. நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
51:15. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கங்களிலும், நீரருவிகளுக்கு அருகிலும் இருப்பார்கள்.
51:15. இறையச்சம் கொண்டவர்கள் (அந்த நாளில்) திண்ணமாகத் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
51:15. நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (சுவனபதிகளின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
51:16
51:16 اٰخِذِيْنَ مَاۤ اٰتٰٮهُمْ رَبُّهُمْ‌ؕ اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُحْسِنِيْنَؕ‏
اٰخِذِيْنَ பெற்றுக்கொள்வார்கள் مَاۤ اٰتٰٮهُمْ அவர்களுக்கு கொடுத்ததை رَبُّهُمْ‌ؕ அவர்களின் இறைவன் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தார்கள் قَبْلَ ذٰلِكَ இதற்கு முன்னர் مُحْسِنِيْنَؕ‏ நல்லவர்களாக
51:16. அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.
51:16. அவர்கள் தங்கள் இறைவன் கொடுப்பதை(த் திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்பவர்களாகவே இருந்தார்கள்.
51:16. அவர்களின் அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அந்நாள் வருவதற்கு முன்னரே நல்லவர்களாக இருந்தார்கள்.
51:16. அவர்கள், தங்களிரட்சகன் அவர்களுக்குக் கொடுத்ததை (திருப்தியுடன்) எடுத்துக் கொண்டோராக (இருப்பர்), நிச்சயமாக, அவர்கள் அதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தார்கள்.
51:17
51:17 كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ‏
كَانُوْا இருந்தார்கள் قَلِيْلًا மிகக் குறைவாக مِّنَ الَّيْلِ இரவில் مَا يَهْجَعُوْنَ‏ தூங்குபவர்களாக
51:17. அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
51:17. அவர்கள் இரவில் வெகு சொற்ப (நேர)மே நித்திரை செய்பவர்களாக இருந்தனர்.
51:17. இரவு நேரங்களில் குறைவாகவே தூங்குபவர்களாகவும்
51:17. இரவில் வெகு சொற்ப(நேர)மே தூங்கக் கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள்.
51:18
51:18 وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ‏
وَبِالْاَسْحَارِ அதிகாலையில் هُمْ يَسْتَغْفِرُوْنَ‏ அவர்கள் பாவமன்னிப்புத் தேடுவார்கள்
51:18. அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.
51:18. அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்து தங்கள் இறைவனை வணங்கி, அவனிடம் பாவ) மன்னிப்புக் கோருவார்கள்.
51:18. பின்னிரவு நேரங்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருந்தார்கள்.
51:18. மேலும், அவர்கள் விடியற்காலை(ஸஹர் நேரங்)களில் (எழுந்து அல்லாஹ்வை வணங்கி, தங்களிரட்சகனிடம்) மன்னிப்புக்கோரிக் கொண்டிருப்பார்கள்.
51:19
51:19 وَفِىْۤ اَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّآٮِٕلِ وَالْمَحْرُوْمِ‏
وَفِىْۤ اَمْوَالِهِمْ இன்னும் அவர்களது செல்வங்களில் حَقٌّ உரிமை لِّلسَّآٮِٕلِ யாசிப்பவருக்கு(ம்) وَالْمَحْرُوْمِ‏ இல்லாதவருக்கும்
51:19. அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.
51:19. அவர்களுடைய பொருள்களில், (வாய் திறந்து) யாசகம் கேட்பவர்களுக்கும், (கேட்காத) வறியவர்களுக்கும் பாகமுண்டு. (அனைவருக்கும் அவர்கள் தானம் செய்வார்கள்.)
51:19. மேலும், அவர்களின் செல்வங்களில் உரிமை இருந்தது, யாசிப்பவருக்கும் இல்லாதவருக்கும்!
51:19. இன்னும், அவர்களுடைய செல்வங்களில் கேட்போருக்கும், கேட்காதோருக்கும் உரிமையுண்டு.
51:20
51:20 وَفِى الْاَرْضِ اٰيٰتٌ لِّلْمُوْقِنِيْنَۙ‏
وَفِى الْاَرْضِ இன்னும் பூமியில் اٰيٰتٌ பல அத்தாட்சிகள் لِّلْمُوْقِنِيْنَۙ‏ உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு
51:20. உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
51:20. உறுதி(யாக நம்பிக்கை) கொண்டவர்களுக்குப் பூமியில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
51:20. உறுதியாக நம்புபவர்களுக்கு பூமியில் பல சான்றுகள் உள்ளன.
51:20. மேலும், உறுதி(யாக விசுவாசங்)கொண்டவர்களுக்குப் பூமியில் அத்தாட்சிகளிருக்கின்றன.
51:21
51:21 وَفِىْۤ اَنْفُسِكُمْ‌ؕ اَفَلَا تُبْصِرُوْنَ‏
وَفِىْۤ اَنْفُسِكُمْ‌ؕ இன்னும் உங்களிலும் اَفَلَا تُبْصِرُوْنَ‏ நீங்கள் உற்று நோக்க மாட்டீர்களா?
51:21. உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?
51:21. உங்களுக்கு உள்ளாகவும் (பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றை) நீங்கள் ஆழ்ந்து கவனித்துப் பார்க்க வேண்டாமா?
51:21. ஏன், உங்களிடத்திலும்கூட! உங்களுக்குப் புலப்படுவதில்லையா, என்ன?
51:21. உங்களுக்குள்ளேயும்_(பல அத்தாட்சிகள் இருக்கின்றன, அவைகளை) நீங்கள் (கவனித்துப்) பார்க்கமாட்டீர்களா?
51:22
51:22 وَفِى السَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ‏
وَفِى السَّمَآءِ இன்னும் வானத்தில் رِزْقُكُمْ உங்கள் உணவும் وَمَا تُوْعَدُوْنَ‏ நீங்கள் வாக்களிக்கப்படுவதும்
51:22. அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.
51:22. உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவையும் உங்கள் உணவும் வானத்தில் தான் இருக்கின்றன.
51:22. வானத்தில்தான் இருக்கின்றன, உங்கள் வாழ்வாதாரமும், உங்களுக்கு வாக்களிக்கப்படுகின்றவையும்!
51:22. மேலும், உங்களுடைய உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கபட்டீர்களே அவையும் வானத்திலிருக்கின்றன.
51:23
51:23 فَوَرَبِّ السَّمَآءِ وَالْاَرْضِ اِنَّهٗ لَحَـقٌّ مِّثْلَ مَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَ‏
فَوَرَبِّ அதிபதியின் மீது சத்தியமாக السَّمَآءِ وَالْاَرْضِ வானம், பூமியுடைய اِنَّهٗ நிச்சயமாக இது لَحَـقٌّ உண்மைதான் مِّثْلَ போன்றே مَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَ‏ நிச்சயமாக நீங்கள் பேசுவது
51:23. ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக்கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.  
51:23. வானம், பூமியின் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக இது, (உங்கள் வார்த்தைகளை) நீங்கள்தான் கூறுகிறீர்கள் என்பதில் சந்தேகமில்லாதிருப்பதைப் போல் (இந்த குர்ஆனில் உள்ள அனைத்தும்) உண்மையானதாகும்.
51:23. வானம் மற்றும் பூமியினுடைய அதிபதியின் மீது ஆணையாக! திண்ணமாக, இந்த விஷயம் சத்தியமானது; நீங்கள் பேசிக் கொண்டிருப்பது எவ்வாறு உறுதியானதோ அவ்வாறே இதுவும் உறுதியானது.
51:23. ஆகவே, வானம், மற்றும் பூமியுடைய இரட்சகன் மீது சத்தியமாக, (உங்கள் வார்த்தைகளை) நிச்சயமாக நீங்கள் தாம் கூறுகின்றீர்கள் என்ப(தில் சந்தேகமில்லாதிருப்ப)தைப்போல, நிச்சயமாக இது_(இந்த குர் ஆனில் உள்ள யாவும்) உண்மையானதாகும்.
51:24
51:24 هَلْ اَتٰٮكَ حَدِيْثُ ضَيْفِ اِبْرٰهِيْمَ الْمُكْرَمِيْنَ‌ۘ‏
هَلْ اَتٰٮكَ உமக்கு வந்ததா? حَدِيْثُ செய்தி ضَيْفِ விருந்தினர்களின் اِبْرٰهِيْمَ இப்ராஹிமுடைய الْمُكْرَمِيْنَ‌ۘ‏ கண்ணியமான(வர்கள்)
51:24. இப்ராஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
51:24. (நபியே!) இப்ராஹீமுடைய மிக்க கண்ணியமுள்ள விருந்தினர்களின் விஷயம் உமக்கு எட்டியிருக்கிறதா?
51:24. (நபியே!) இப்ராஹீமிடம் வந்த கண்ணியத்துக்குரிய விருந்தாளிகளின் செய்தி உமக்குக் கிடைத்ததா?
51:24. (நபியே!) கௌரவத்திற்குரியவர்களான இப்றாஹீமுடைய விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
51:25
51:25 اِذْ دَخَلُوْا عَلَيْهِ فَقَالُوْا سَلٰمًا‌ؕ قَالَ سَلٰمٌ ۚ قَوْمٌ مُّنْكَرُوْنَ‌‏
اِذْ دَخَلُوْا அவர்கள் நுழைந்த போது عَلَيْهِ அவரிடம் فَقَالُوْا அவர்கள் கூறினர் سَلٰمًا‌ؕ ஸலாம் قَالَ கூறினார் سَلٰمٌ ۚ “ஸலாம்” قَوْمٌ மக்கள் مُّنْكَرُوْنَ‌‏ அறியாத
51:25. அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி: “உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார்கள்; (அதற்கவர்), “(உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார். “இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே” என்று எண்ணிக் கொண்டார்).
51:25. அவர்கள் அவரிடம் வந்தபோது (அவரை நோக்கி “உமக்கு) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!'' என்று கூறினார்கள். அதற்கு (இப்ராஹீம், “உங்களுக்கும்) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!'' என்று கூறி, (இவர்கள் நாம்) அறியாத மக்களாக இருக்கின்றனரே! (என்று தன் மனத்தில் எண்ணினார்.)
51:25. அவர்கள் அவரிடம் வந்தபோது, “உம்மீது சாந்தி நிலவட்டும்!” என்று அவர்கள் கூறினார்கள். அவர் கூறினார்: “உங்கள் மீதும் சாந்தி நிலவுக! அறிமுகமில்லாத ஆட்களாக இருக்கிறார்களே!”
51:25. அவர்கள், அவரிடம் நுழைந்தபொழுது “சாந்தி உண்டாவதாக!” என்று கூறினார்கள். (அதற்கு இப்றாஹீம் உங்களுக்கும்)” சாந்தி உண்டாவதாக!” என்று கூறி (இவர்கள் நமக்கு) அறிமுகமில்லாத சமூகத்தார் (என்று தன் மனதில் எண்ணிக்கொண்டு,)
51:26
51:26 فَرَاغَ اِلٰٓى اَهْلِهٖ فَجَآءَ بِعِجْلٍ سَمِيْنٍۙ‏
فَرَاغَ திரும்பிச் சென்றார் اِلٰٓى اَهْلِهٖ தனது குடும்பத்தாரிடம் فَجَآءَ வந்தார் بِعِجْلٍ سَمِيْنٍۙ‏ கொழுத்த காளைக் கன்றைக் கொண்டு
51:26. எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார்.
51:26. பிறகு, விரைவாகத் தன் வீட்டினுள் சென்று கொழுத்ததொரு கன்றுவின் (பொரித்த) மாமிசத்தைக் கொண்டுவந்தார்.
51:26. பின்னர், அவர் சந்தடியில்லாமல் தம் வீட்டாரிடம் சென்றார்; (பொரிக்கப்பட்ட) கொழுத்த காளைக்கன்றைக் கொண்டு வந்து
51:26. பின்னர் தன் இல்லத்தாரிடம் விரைவாகச் சென்று (நெருப்பில் சுடப்பட்ட) கொழுத்தகாளைக் கன்றைக் கொண்டு வந்தார்.
51:27
51:27 فَقَرَّبَهٗۤ اِلَيْهِمْ قَالَ اَلَا تَاْكُلُوْنَ‏
فَقَرَّبَهٗۤ அதை நெருக்கமாக்கினார் اِلَيْهِمْ அவர்கள் பக்கம் قَالَ கூறினார் اَلَا تَاْكُلُوْنَ‏ நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?
51:27. அதை அவர்கள் முன் வைத்து, “நீங்கள் புசிக்க மாட்டீர்களா?” என்று கூறினார்.
51:27. அதை அவர்கள் முன் வைத்தார். (ஆனால், அதை அவர்கள் புசிக்கவில்லை. ஆதலால், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் புசிக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார்.
51:27. அதனை விருந்தினர் முன்வைத்தார். பிறகு கூறினார்: “சாப்பிடாமல் இருக்கின்றீர்களே!”
51:27. பின்னர், அதனை அவர்கள் அருகில் வைத்தார். (அவர்கள் உண்ணாததால்) அவர்களிடம், “நீங்கள் உண்ணமாட்டீர்களா” என்று கேட்டார்.
51:28
51:28 فَاَوْجَسَ مِنْهُمْ خِيْفَةً ‌ؕ قَالُوْا لَا تَخَفْ‌ ؕ وَبَشَّرُوْهُ بِغُلٰمٍ عَلِيْمٍ‏
فَاَوْجَسَ ஆகவே, உணர்ந்தார் مِنْهُمْ அவர்களினால் خِيْفَةً ؕ பயத்தை قَالُوْا கூறினார்கள் لَا تَخَفْ‌ ؕ பயப்படாதீர் وَبَشَّرُوْهُ இன்னும் அவருக்கு நற்செய்தி கூறினார்கள் بِغُلٰمٍ ஓர் ஆண் குழந்தையைக்கொண்டு عَلِيْمٍ‏ கல்வியாளரான
51:28. (அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்பட்டது, “(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!” எனக் கூறினர்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.
51:28. (இருப்பினும், அவர்கள் புசிக்காமலிருப்பதைக் கண்ட) அவர், அவர்களைப் பற்றி பயந்தார். (இதை அறிந்த அவர்கள் ‘‘இப்ராஹீமே!) பயப்படாதீர்'' என்று கூறி, (இஸ்ஹாக் என்னும்) மிக்க ஞானமுள்ள மகனை அவருக்கு நற்செய்தி கூறினார்கள்.
51:28. பின்னர், அவர்களைக் குறித்து அவர் மனத்திற்குள் அஞ்சினார். அவர்களோ, “அஞ்சாதீர்!” என்று கூறினார்கள். மேலும், அறிவுள்ள ஒரு மகன் பிறக்கப் போவதாக அவருக்கு நற்செய்தி அறிவித்தார்கள்.
51:28. (பின்னும் புசிக்காமல் இருந்ததால் தன் மனதில்) அவர்கள் பற்றிய பயத்தை உணர்ந்தார். அப்போது “(இப்ராஹீமே! நீர் பயப்படாதீர்,” என்று அவர்கள் கூறினர், மேலும், (இஸ்ஹாக் என்னும்) அறிவார்ந்த ஆண் குழந்தை (அவருக்குப் பிறக்குமென்ற செய்தி)யைக் கொண்டு அவருக்கு நன்மாராயம் கூறினார்கள்.
51:29
51:29 فَاَقْبَلَتِ امْرَاَتُهٗ فِىْ صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوْزٌ عَقِيْمٌ‏
فَاَقْبَلَتِ முன்னோக்கி வந்தால் امْرَاَتُهٗ அவருடைய மனைவி فِىْ صَرَّةٍ சப்தத்தோடு فَصَكَّتْ இன்னும் அறைந்தார் وَجْهَهَا தனது முகத்தை وَقَالَتْ இன்னும் கூறினாள் عَجُوْزٌ கிழவி ஆயிற்றே عَقِيْمٌ‏ மலடியான(வள்)
51:29. பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே!” என்று கூறினார்.
51:29. (இதைச் செவியுற்ற) அவருடைய மனைவி (ஸாரா) கூச்சலுடன் அவர்கள் முன்வந்து, தன் முகத்தில் அறைந்துகொண்டு ‘‘(நானோ) தள்ளாடிய கிழவி; அதிலும் மலடி. (எவ்விதம் எனக்குக் குழந்தை பிறக்கும்?)'' என்று கூறினார்.
51:29. (அதனைக் கேட்டு) அவருடைய மனைவி கூச்சலிட்டவாறு முன்னே வந்தாள்; தன் முகத்தில் அறைந்து கொண்டு கிழவி, மலடி என்று கூறினாள்.
51:29. பின்னர், (இதனைச் செவியுற்ற) அவருடைய மனைவி (ஸாரா) உரத்த சப்தத்தில் அவர்கள் எதிரில் வந்து, தன் முகத்தில் அடித்துக் கொண்டு, “(நானோ) மலட்டுக்கிழவி (எவ்விதம் எனக்குக் குழந்தை பிறக்கும்?”) என்று கூறினார். (அதற்கவர்கள்),
51:30
51:30 قَالُوْا كَذٰلِكِ ۙ قَالَ رَبُّكِ‌ؕ اِنَّهٗ هُوَ الْحَكِيْمُ الْعَلِيْمُ‏
قَالُوْا கூறினார்கள் كَذٰلِكِ ۙ அவ்வாறுதான் قَالَ கூறினான் رَبُّكِ‌ؕ உமது இறைவன் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْحَكِيْمُ மகா ஞானவான் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
51:30. (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று:) “இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்” என்று கூறினார்கள்.  
51:30. அதற்கவர்கள், ‘‘இவ்வாறே, உமது இறைவன் கூறுகிறான். நிச்சயமாக அவன்தான் மிக ஞானமுள்ளவன், அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்'' என்றார்கள்.
51:30. அவர்கள் கூறினர்: “ ஆம், அவ்வாறுதான் (நடைபெறும்) என்று உன் இறைவன் கூறியுள்ளான். அவன் நுண்ணறிவாளனாகவும், அனைத்தும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.”
51:30. “இவ்வாறே உமதிரட்சகன் கூறுகின்றான், நிச்சயமாக, அவனே தீர்க்கமான அறிவுடையோன், (யாவையும்) நன்கறிந்தோன் என்று கூறினார்கள்.
51:31
51:31 قَالَ فَمَا خَطْبُكُمْ اَيُّهَا الْمُرْسَلُوْنَ‏
قَالَ அவர் கூறினார் فَمَا خَطْبُكُمْ உங்கள் காரியம்தான் என்ன? اَيُّهَا الْمُرْسَلُوْنَ‏ தூதர்களே!
51:31. (பின்னர் இப்ராஹீம்:) “தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?” என்று வினவினார்.
51:31. (பின்னர் இப்ராஹீம் வானவர்களை நோக்கி) ‘‘தூதர்களே! உங்கள் காரியமென்ன? (எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்?)'' என்று கேட்டார்.
51:31. இப்ராஹீம் கேட்டார்: “இறைத்தூதர்களே! நீங்கள் எந்தப் பணியை ஆற்ற அனுப்பப்பட்டுள்ளீர்கள்?”
51:31. (பின்னர் இப்றாஹீம் மலக்குகளிடம்) “தூதர்களே! உங்கள் காரியமென்ன? (எதற்கு நீங்கள் இங்கு வந்தீர்கள்?) என்று கேட்டார்.
51:32
51:32 قَالُـوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰى قَوْمٍ مُّجْرِمِيْنَۙ‏
قَالُـوْۤا கூறினார்கள் اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اُرْسِلْنَاۤ அனுப்பப்பட்டுள்ளோம் اِلٰى قَوْمٍ மக்கள் பக்கம் مُّجْرِمِيْنَۙ‏ குற்றவாளிகளான
51:32. “குற்றவாளிகளான ஒரு சமூகத்தினர் பால் நாங்கள் நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
51:32. அதற்கவர்கள் ‘‘நிச்சயமாக நாங்கள் (பெரும்) குற்றவாளிகளான (லூத் நபியின்) மக்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறினர்.
51:32. அவர்கள் கூறினர்: “குற்றம் புரிந்த ஒரு சமுதாயத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றோம்.”
51:32. அ(தற்க)வர்கள் நிச்சயமாக நாங்கள் குற்றவாளிகளான ஒரு சமூகத்தார் பால் அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினார்கள்.
51:33
51:33 لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ طِيْنٍۙ‏
لِنُرْسِلَ நாங்கள் எறிவதற்காக عَلَيْهِمْ அவர்கள் மீது حِجَارَةً கல்லை مِّنْ طِيْنٍۙ‏ களிமண்ணினால்ஆன
51:33. “அவர்கள் மீது (சுட்ட) களிமண் கற்களை எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-
51:33. ‘‘நாங்கள், அவர்கள் மீது களி மண்ணால் செய்த (சுட்ட) கற்களை எறிவதற்காக (அனுப்பப்பட்டுள்ளோம்).''
51:33. சுட்ட கற்களை அவர்கள்மீது பொழிவதற்காக!
51:33. “நாங்கள், அவர்களின் மீது களிமண்ணால் செய்த (சுட்ட) கற்களை எறிவதற்காக (அனுப்பப்பட்டுள்ளோம்).
51:34
51:34 مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِيْنَ‏
مُّسَوَّمَةً அடையாளமிடப்பட்ட عِنْدَ رَبِّكَ உமது இறைவனிடம் لِلْمُسْرِفِيْنَ‏ பாவிகளுக்காக
51:34. “வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை.”
51:34. ‘‘(அவை) உமது இறைவனிடம் வரம்பு மீறியவர்களுக்கென (பெயர்கள் எழுதப்பட்டு) அடையாளமிடப்பட்டவையாகும்.''
51:34. அவை வரம்பு மீறிச் செல்வோருக்காக உம் இறைவனிடத்தில் அடையாளமிடப்பட்ட கற்களாகும்.
51:34. வரம்பு மீறியவர்களுக்காக, உமது இரட்சகனிடத்தில் (பெயர்கள் எழுதப்பட்டு) அடையாளமிடப்பட்டவைகளாக (அவை இருக்கின்றன.)”
51:35
51:35 فَاَخْرَجْنَا مَنْ كَانَ فِيْهَا مِنَ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏
فَاَخْرَجْنَا ஆக, நாம் வெளியேற்றி விட்டோம் مَنْ كَانَ இருந்தவர்களை فِيْهَا அதில் مِنَ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏ நம்பிக்கையாளர்களாக
51:35. ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம்.
51:35. ஆகவே, (அவர்கள் அழிவதற்கு முன்னதாகவே அவ்வூரில் இருந்த) நம்பிக்கை கொண்டவர்களை அதிலிருந்து நாம் வெளிப்படுத்தி விட்டோம்.
51:35. பின்னர், அந்த ஊரில் இருந்த இறைநம்பிக்கையாளர்கள் அனைவரையும் நாம் வெளியேற்றினோம்.
51:35. ஆகவே (அவர்கள் அழிக்கப்படுவதற்கு முன்,) விசுவாசங்கொண்டவர்களிலிருந்து அ(ந்நரகத்)திலிருந்தவர்களை நாம் வெளியேற்றிவிட்டோம்.
51:36
51:36 فَمَا وَجَدْنَا فِيْهَا غَيْرَ بَيْتٍ مِّنَ الْمُسْلِمِيْنَ‌ۚ‏
فَمَا وَجَدْنَا ஆனால் நாம் காணவில்லை فِيْهَا அதில் غَيْرَ بَيْتٍ ஒரு வீட்டைத் தவிர مِّنَ الْمُسْلِمِيْنَ‌ۚ‏ முஸ்லிம்களுடைய
51:36. எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை.
51:36. எனினும், அதில் (லூத்துடைய) ஒரு வீட்டாரைத் தவிர, நம்பிக்கை கொண்ட ஒருவரையும் நாங்கள் காணவில்லை.
51:36. மேலும், அங்கு ஒரேயொரு வீட்டைத் தவிர முஸ்லிம் வீடுகள் வேறு எதையும் நாம் காணவில்லை.
51:36. பின்னர், அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டைத் தவிர (மற்றெதையும்) நாம் காணவில்லை.
51:37
51:37 وَتَرَكْنَا فِيْهَاۤ اٰيَةً لِّـلَّذِيْنَ يَخَافُوْنَ الْعَذَابَ الْاَلِيْمَؕ‏
وَتَرَكْنَا நாம் விட்டுள்ளோம் فِيْهَاۤ அதில் اٰيَةً ஓர் அத்தாட்சியை لِّـلَّذِيْنَ يَخَافُوْنَ பயப்படுகின்றவர்களுக்கு الْعَذَابَ தண்டனையை الْاَلِيْمَؕ‏ வலி தரக்கூடிய(து)
51:37. நோவினை தரும் வேதனையை அஞ்சுகிறார்களே அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சியை விட்டு வைத்தோம்.
51:37. துன்புறுத்தும் வேதனையை பயப்படுகிறவர்களுக்கு அதில் ஒரு படிப்பினையை விட்டு வைத்தோம்.
51:37. இதன் பின்னர், நாம் அங்கு ஒரு சான்றினை விட்டு வைத்தோம், துன்புறுத்தும் வேதனைக்கு அஞ்சுகின்ற மக்களுக்காக!
51:37. மேலும், துன்புறுத்தும் வேதனையை பயப்படுகிறார்களே அவர்களுக்கு அதில் ஓர் அத்தாட்சியை நாம் விட்டு வைத்தோம்.
51:38
51:38 وَفِىْ مُوْسٰۤی اِذْ اَرْسَلْنٰهُ اِلٰى فِرْعَوْنَ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ‏
وَفِىْ مُوْسٰۤی இன்னும் மூஸாவிலும் اِذْ اَرْسَلْنٰهُ நாம் அவரை அனுப்பிய போது اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் بِسُلْطٰنٍ ஆதாரத்தைக் கொண்டு مُّبِيْنٍ‏ தெளிவான(து)
51:38. மேலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர் அத்தாட்சி இருக்கிறது; நாம் அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிய போது:
51:38. மூஸாவுடைய (சரித்திரத்)திலும் (ஒரு படிப்பினை) இருக்கிறது. தெளிவான அத்தாட்சிகளுடன் அவரை ஃபிர்அவ்னிடம் நாம் அனுப்பிய சமயத்தில்,
51:38. மேலும், மூஸாவின் வரலாற்றில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) நாம் தெளிவான சான்றுடன் அவரை ஃபிர்அவ்னிடம் அனுப்பியபோது
51:38. மேலும், மூஸாவி(ன் சரித்திரத்தி)லும்_(ஒரு படிப்பினை இருக்கின்றது), தெளிவான சான்றுடன் ஃபிர் அவ்னின்பால் அவரை நாம் அனுப்பியபோது,
51:39
51:39 فَتَوَلّٰى بِرُكْنِهٖ وَقَالَ سٰحِرٌ اَوْ مَجْنُوْنٌ‏
فَتَوَلّٰى விலகினான் بِرُكْنِهٖ தனது பலத்தினால் وَقَالَ இன்னும் கூறினான் سٰحِرٌ ஒரு சூனியக்காரர்(தான்) اَوْ அல்லது مَجْنُوْنٌ‏ ஒரு பைத்தியக்காரர்(தான்)
51:39. அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து: “இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான்.
51:39. அவன் வலுவான தன் ஆட்சியின் கர்வத்தால் அவரைப் புறக்கணித்து, ‘‘இவரொரு சூனியக்காரர்; அல்லது பைத்தியக்காரர்'' என்று கூறினான்.
51:39. அவன் தன் வலிமையின் காரணமாக செருக் குற்றுப் புறக்கணித்தான். மேலும், “இவர் ஒரு சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான்.
51:39. அவன் தன்னுடைய (பக்கபலமென்று நினைத்த படைகள், அதிகாரம் ஆகியவற்றின்) பலத்தால் (அவரைப்) புறக்கணித்தான், இன்னும் (இவர்) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று அவன் கூறினான்.
51:40
51:40 فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّ وَهُوَ مُلِيْمٌؕ‏
فَاَخَذْنٰهُ அவனையும் நாம் பிடித்தோம் وَجُنُوْدَهٗ அவனுடைய ராணுவங்களையும் فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّ அவர்களை எறிந்தோம்/கடலில் وَهُوَ அவனோ مُلِيْمٌؕ‏ பழிப்புக்குள்ளானவன்
51:40. ஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும் பிடித்து அவர்களைக் கடலில் எறிந்தோம்; அவன் நிந்தனைக்கும் ஆளாகி விட்டான்.
51:40. ஆதலால், அவனையும் அவனுடைய படைகளையும் நாம் பிடித்துக் கடலில் எறிந்துவிட்டோம். அவன் என்றென்றுமே நிந்தனைக்குள்ளாகி விட்டான்.
51:40. இறுதியில் நாம் அவனையும் அவனுடைய படைகளையும் பிடித்தோம். அவர்கள் அனைவரையும் கடலில் எறிந்துவிட்டோம். மேலும், அவன் பழிப்புக்குரியவனாகிவிட்டான்.
51:40. ஆதலால், அவனையும், அவனுடைய படைகளையும் நாம் பிடித்தோம், பின்னர் அவர்களைக் கடலில் எறிந்துவிட்டோம், அவனோ (என்றென்றுமே) நிந்தனைக்குள்ளாக்கப்பட்டுவிட்டான்.
51:41
51:41 وَفِىْ عَادٍ اِذْ اَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيْحَ الْعَقِيْمَ‌ۚ‏
وَفِىْ عَادٍ இன்னும் ஆதிலும் اِذْ اَرْسَلْنَا நாம் அனுப்பியபோது عَلَيْهِمُ அவர்கள் மீது الرِّيْحَ الْعَقِيْمَ‌ۚ‏ மலட்டுக் காற்றை
51:41. இன்னும், “ஆது” (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக்காற்றை அனுப்பிய போது;
51:41. ‘ஆது' என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு). அவர்கள் மீது நாம் (நாசகரமான) மலட்டுக் காற்றை அனுப்பிய சமயத்தில்,
51:41. மேலும், ஆத் சமூகத்தினரில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) அவர்கள் மீது நாம் நாசத்தை ஏற்படுத்தும் காற்றை அனுப்பினோம்.
51:41. ‘ஆது’ வி(ன் சமூகத்தார்களி)லும்_(ஓர் அத்தாட்சி உண்டு) அவர்கள் மீது, நாம் (நாசகரமான) மலட்டுக் காற்றை அனுப்பிய சமயத்தில்,
51:42
51:42 مَا تَذَرُ مِنْ شَىْءٍ اَتَتْ عَلَيْهِ اِلَّا جَعَلَتْهُ كَالرَّمِيْمِؕ‏
مَا تَذَرُ அது விடாது مِنْ شَىْءٍ எதையும் اَتَتْ செல்கிறதோ عَلَيْهِ அதன் மீது اِلَّا جَعَلَتْهُ அதை ஆக்காமல் كَالرَّمِيْمِؕ‏ பழைய மக்கிப்போன பொருளைப் போன்று
51:42. அ(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.
51:42. அது பட்டதையெல்லாம் தூசியா(க்கிப் பறக்கடி)க்காமல் விடவில்லை.
51:42. அது எந்த ஒரு பொருளின்மீது பட்டபோதிலும் அதனைச் சிதைத்து அழித்துவிட்டது.
51:42. எப்பொருளிலிருந்தும் அதன்மீது அ(க்காற்றன)து (கடந்து) வந்து, அதை மக்கிப் போனதைப் போன்று ஆக்கியே தவிர அது விட்டு வைக்கவில்லை.
51:43
51:43 وَفِىْ ثَمُوْدَ اِذْ قِيْلَ لَهُمْ تَمَتَّعُوْا حَتّٰى حِيْنٍ‏
وَفِىْ ثَمُوْدَ இன்னும் சமூதிலும் اِذْ قِيْلَ சொல்லப்பட்ட போது لَهُمْ அவர்களுக்கு تَمَتَّعُوْا சுகமாக இருங்கள் என்று حَتّٰى வரை حِيْنٍ‏ சிறிது காலம்
51:43. மேலும் “ஸமூது” (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); “ஒரு காலம் சுகம் அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது:
51:43. ‘ஸமூது' என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு). ‘‘நீங்கள் ஒரு காலம் வரை சுகமாக வாழ்ந்திருங்கள்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு,
51:43. மேலும், ஸமூத் கூட்டத்தாரில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) “ஒரு குறிப்பிட்ட காலம் வரை சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டபோது;
51:43. ‘ஸமூது’ வி(ன் கூட்டத்தாரி)லும் (ஓர் அத்தாட்சியுண்டு) “நீங்கள் ஒரு காலம் வரையில் சுகம் அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது,
51:44
51:44 فَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ وَ هُمْ يَنْظُرُوْنَ‏
فَعَتَوْا பெருமை அடித்தனர் عَنْ اَمْرِ கட்டளையை ஏற்காமல் رَبِّهِمْ தங்கள் இறைவனின் فَاَخَذَتْهُمُ அவர்களைப் பிடித்தது الصّٰعِقَةُ இடிமுழக்கம் وَ هُمْ அவர்களோ يَنْظُرُوْنَ‏ எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்
51:44. அவர்கள் தங்கள் இறைவனுடைய கட்டளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
51:44. அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை மீறினார்கள். ஆகவே, அவர்கள் (தங்களை அழிக்க வந்த மேகத்தைப்) பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களை ஓர் இடி முழக்கம் பிடித்துக் கொண்டது.
51:44. (இந்த எச்சரிக்கைக்குப் பிறகும்) அவர்கள் தங்கள் அதிபதியின் கட்டளையை ஆணவத்துடன் மீறினார்கள். இறுதியில், அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென்று உடைந்துவிழும் வேதனை ஒன்று அவர்களைப் பிடித்துக் கொண்டது.
51:44. தங்கள் இரட்சகனின் கட்டளையை அவர்கள் மீறினார்கள், ஆகவே, அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக்கொண்டது.
51:45
51:45 فَمَا اسْتَطَاعُوْا مِنْ قِيَامٍ وَّمَا كَانُوْا مُنْتَصِرِيْنَۙ‏
فَمَا اسْتَطَاعُوْا இயலாமல் ஆகிவிட்டார்கள் مِنْ قِيَامٍ நிற்பதற்கு وَّمَا كَانُوْا இருக்கவில்லை مُنْتَصِرِيْنَۙ‏ பழிதீர்ப்பவர்களாகவும்
51:45. ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்தி பெற்றார்களில்லை; (எத்தகைய) உதவியும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர்.
51:45. ஆகவே, அவர்கள் நிற்கவும் முடியவில்லை. (உட்காரவும் முடியவில்லை;) நம்மிடம் பழிவாங்கவும் முடியவில்லை. (இருந்தவாறே அழிந்து விட்டனர்.)
51:45. பின்னர், அவர்களால் எழுந்து நிற்கவும் முடியவில்லை; தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடியவில்லை.
51:45. ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்திபெறவில்லை, (நம்முடைய வேதனையிலிருந்து தப்பிக்க எவரிடமிருந்தும்) உதவி பெறுபவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை.
51:46
51:46 وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ‌ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ‏
وَقَوْمَ இன்னும் மக்களையும் نُوْحٍ நூஹூடைய مِّنْ قَبْلُ‌ؕ இதற்கு முன்னர் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தனர் قَوْمًا மக்களாக فٰسِقِيْنَ‏ பாவிகளான
51:46. அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்.
51:46. இதற்கு முன்னர் (இருந்த) நூஹுடைய மக்களையும் (அழித்து விட்டோம்). நிச்சயமாக அவர்களும் பாவம் செய்யும் மக்களாகவே இருந்தனர்.
51:46. மேலும், இவர்கள் அனைவருக்கும் முன்பு நூஹின் சமூகத்தினரை நாம் அழித்தோம்; ஏனெனில், அவர்கள் தீய மக்களாய் இருந்தனர்.
51:46. (இவர்கள் அனைவருக்கும்) முன்னர் நூஹுடைய சமூகத்தாரையும் (நாம் அழித்துவிட்டோம்) நிச்சயமாக அவர்கள், பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தனர்.
51:47
51:47 وَ السَّمَآءَ بَنَيْنٰهَا بِاَيْٮدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ‏
وَ السَّمَآءَ வானத்தை بَنَيْنٰهَا அதை நாம் உயர்த்தினோம் بِاَيْٮدٍ பலத்தால் وَّاِنَّا நிச்சயமாக நாம் لَمُوْسِعُوْنَ‏ மிகவும் வசதி படைத்தவர்கள் ஆவோம்
51:47. மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
51:47. (எவருடைய உதவியுமின்றி) நம் சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் (அதை அவர்களின் அறிவிற்கெல்லாம் எட்டாதவாறு) மிக்க விசாலமாக்கியும் வைத்திருக்கிறோம்.
51:47. வானத்தை நாம் நம் வலிமையினால் படைத்துள்ளோம்.மேலும், நாம் அதற்கான ஆற்றல் உடையவராக இருக்கின்றோம்.
51:47. மேலும், வானத்தை (எவருடைய உதவியுமின்றி) நம்முடைய சக்தியைக் கொண்டே அதை நாம் அமைத்தோம், நிச்சயமாக நாம் (படைக்கின்ற காரியத்தில்) மிக்க விசாலத்தை உடையோராக இருக்கிறோம் (யாவும் நம் சக்திக்குட்பட்டதே).
51:48
51:48 وَالْاَرْضَ فَرَشْنٰهَا فَنِعْمَ الْمٰهِدُوْنَ‏
وَالْاَرْضَ பூமியை فَرَشْنٰهَا அதை நாம் விரித்தோம் فَنِعْمَ நாம் மிகச் சிறந்தவர்கள் الْمٰهِدُوْنَ‏ விரிப்பவர்களில்
51:48. இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.
51:48. பூமியை நாம் (விசாலமாக) விரித்தோம். விரிப்பவர்களிலெல்லாம் மிக்க மேலான விதத்தில் விரிப்பவர் நாமே.
51:48. பூமியை நாம் விரித்திருக்கின்றோம். நாம் மிகச் சிறந்த முறையில் செம்மைப்படுத்துபவர்களாய் இருக்கின்றோம்.
51:48. அன்றியும், பூமியை_அதனை நாம் (விசாலமாக) விரித்தோம், (அதனைச் சீர்படுத்தி செவ்வையாக்கி) விரிப்போரில் (நாம்) நல்லோராவோம்.
51:49
51:49 وَمِنْ كُلِّ شَىْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏
وَمِنْ كُلِّ شَىْءٍ ஒவ்வொன்றிலும் خَلَقْنَا படைத்தோம் زَوْجَيْنِ இரண்டு ஜோடிகளை لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏ நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
51:49. நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.
51:49. ஒவ்வொரு வஸ்துக்களையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாகவே நாம் படைத்திருக்கிறோம். (இதைக்கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக!
51:49. மேலும், நாம் ஒவ்வொன்றையும் இணைகளாய்ப் படைத்திருக்கின்றோம். நீங்கள் இதிலிருந்து படிப்பினை பெறக்கூடும்!
51:49. நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக ஒவ்வொரு பொருளிலிருந்தும் (ஆண், பெண் கொண்ட) இருவகையை நாம் படைத்திருக்கின்றோம்.
51:50
51:50 فَفِرُّوْۤا اِلَى اللّٰهِ‌ؕ اِنِّىْ لَـكُمْ مِّنْهُ نَذِيْرٌ مُّبِيْنٌ‌ۚ‏
فَفِرُّوْۤا ஆகவே விரண்டு ஓடுங்கள் اِلَى اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் பக்கம் اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு مِّنْهُ அவனிடமிருந்து نَذِيْرٌ எச்சரிப்பாளர் مُّبِيْنٌ‌ۚ‏ தெளிவான(வர்)
51:50. ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக).
51:50. ஆகவே, (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் வெகு தீவிரமாக நீங்கள் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் அவனைப் பற்றி உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.
51:50. எனவே, ஓடி வாருங்கள், அல்லாஹ்வின் பக்கம்! நான் அவனுடைய சார்பாக உங்களுக்குத் தெள்ளத்தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன்.
51:50. ஆகவே, “(நிராகரிப்பு, பாவம் ஆகியவற்றிலிருந்து விலகி), அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் விரைந்து செல்லுங்கள், நிச்சயமாக நான், அவனிடமிருந்து உங்களுக்குக் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவ(னாக இருக்கிறே)ன்,
51:51
51:51 وَلَا تَجْعَلُوْا مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ‌ؕ اِنِّىْ لَـكُمْ مِّنْهُ نَذِيْرٌ مُّبِيْنٌ‌ۚ‏
وَلَا تَجْعَلُوْا ஏற்படுத்தாதீர்கள் مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اِلٰهًا اٰخَرَ‌ؕ வேறு ஒரு கடவுளை اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு مِّنْهُ அவனிடமிருந்து نَذِيْرٌ எச்சரிப்பாளர் مُّبِيْنٌ‌ۚ‏ தெளிவான(வர்)
51:51. மேலும், அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே - இருக்கின்றேன் (என்றும் கூறும்).
51:51. அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனை ஆக்காதீர்கள். நிச்சயமாக நான், அவனிடமிருந்து உங்களுக்கு (இதைப் பற்றியும்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராக இருக்கிறேன்.
51:51. அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக நான் அவனுடைய சார்பில் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன்!
51:51. மேலும், அல்லாஹ்வுடன் வேறொரு (வணக்கத்திற்குரிய) நாயனை ஆக்காதீர்கள், நிச்சயமாக நான், அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் (என்று நபியே! நீர் கூறுவீராக!).
51:52
51:52 كَذٰلِكَ مَاۤ اَتَى الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا قَالُوْا سَاحِرٌ اَوْ مَجْنُوْنٌ‌ۚ‏
كَذٰلِكَ இவ்வாறுதான் مَاۤ اَتَى வந்ததில்லை الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்கு مِّنْ رَّسُوْلٍ ஒரு தூதரும் اِلَّا قَالُوْا இவர்கள் கூறாமல் سَاحِرٌ ஒருசூனியக்காரர் اَوْ مَجْنُوْنٌ‌ۚ‏ அல்லது ஒரு பைத்தியக்காரர்
51:52. இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.
51:52. இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதிலும், அவரை சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமலிருக்கவில்லை.
51:52. இப்படித்தான் நடந்துகொண்டு வருகின்றது. இவர்களுக்கு முன்னிருந்த சமூகத்தாரிடம் எந்த ஓர் இறைத்தூதர் வந்தாலும் அவரை அம்மக்கள் “இவர் ஒரு சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்” என்றுதான் கூறினார்கள்.
51:52. இவ்வாறே அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களுக்கு எந்த தூதரும் வந்ததில்லை, (அவர்களிடம் வந்த அத்தூதரை) சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று அவர்கள் கூறியே தவிர
51:53
51:53 اَتَوَاصَوْا بِهٖ‌ۚ بَلْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ‌ۚ‏
اَتَوَاصَوْا இவர்கள் தங்களுக்குள் உபதேசித்துக் கொண்டார்களா? بِهٖ‌ۚ இதை بَلْ மாறாக هُمْ இவர்கள் قَوْمٌ மக்கள் طَاغُوْنَ‌ۚ‏ வரம்பு மீறிய(வர்கள்)
51:53. இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.
51:53. (இவ்வாறு கூறும்படியே) அவர்கள் தங்களுக்குள் (பரம்பரை பரம்பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனர் போலும்! இல்லை, அவர்கள் (இயற்கையிலேயே இவ்வாறு கூறக் கூடிய) அநியாயக்கார மக்களாக இருந்தனர்.
51:53. இவர்கள் அனைவரும் இது தொடர்பாக தமக்குள் ஏதேனும் ஒப்பந்தம் செய்துகொண்டார்களா, என்ன? அவ்வாறில்லை. மாறாக, இவர்கள் வரம்புமீறிச் செல்கின்ற மக்களாவர்.
51:53. இவ்வாறு (கூறுமாறே) அவர்கள் (தங்களுக்குள் பரம்பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனரா? இல்லை! அவர்கள் (இயற்கையிலேயே) அட்டூழியம் செய்யும் கூட்டத்தாராவர்.
51:54
51:54 فَتَوَلَّ عَنْهُمْ فَمَاۤ اَنْتَ بِمَلُوْمٍ‏
فَتَوَلَّ ஆகவே விலகுவீராக عَنْهُمْ அவர்களை விட்டு فَمَاۤ اَنْتَ நீர் இல்லை بِمَلُوْمٍ‏ பழிக்கப்பட்டவராக
51:54. ஆகவே (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர்.
51:54. (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. (அவர்கள் நிராகரிப்பதைப் பற்றி) நீர் நிந்திக்கப்பட மாட்டீர்.
51:54. ஆகவே (நபியே!) இவர்களை விட்டு முகம் திருப்பிக் கொள்ளும். நீர் பழிப்புக்குரியவரல்லர்.
51:54. ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! (அதற்காக) நீர் நிந்திக்கபடுபவரல்லர்.
51:55
51:55 وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ‏
وَّذَكِّرْ நீர் நல்லுபதேசம் செய்வீராக! فَاِنَّ நிச்சயமாக الذِّكْرٰى நல்லுபதேசம் تَنْفَعُ பலனளிக்கும் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
51:55. மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.
51:55. (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக. நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும்.
51:55. ஆயினும், அறிவுரை கூறிக்கொண்டிருப்பீராக! ஏனெனில், அறிவுரை இறைநம்பிக்கை கொள்வோருக்குப் பயனளிக்கக் கூடியதாகும்.
51:55. மேலும் (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனென்றால் நிச்சயமாக நல்லுபதேசம் விசுவாசிகளுக்குப் பயனளிக்கும்.
51:56
51:56 وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏
وَمَا خَلَقْتُ நான் படைக்கவில்லை الْجِنَّ ஜின்களையும் وَالْاِنْسَ மனிதர்களையும் اِلَّا தவிர لِيَعْبُدُوْنِ‏ அவர்கள் என்னை வணங்குவதற்கே
51:56. இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
51:56. ஜின்களையும், மனிதர்களையும் (அவர்கள் என்னை அறிந்து) என்னை வணங்குவதற்கே தவிர (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை.
51:56. நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை.
51:56. மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை.
51:57
51:57 مَاۤ اُرِيْدُ مِنْهُمْ مِّنْ رِّزْقٍ وَّمَاۤ اُرِيْدُ اَنْ يُّطْعِمُوْنِ‏
مَاۤ اُرِيْدُ நான் நாடவில்லை مِنْهُمْ அவர்களிடம் مِّنْ رِّزْقٍ எவ்வித உணவையும் وَّمَاۤ اُرِيْدُ நான் நாடவில்லை اَنْ يُّطْعِمُوْنِ‏ அவர்கள் எனக்கு உணவளிப்பதையும்
51:57. அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.
51:57. அவர்களிடத்தில் நான் ஒரு பொருளையும் கேட்கவில்லை. அவர்கள் எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் நான் கோரவில்லை. (ஆகவே,)
51:57. நான் அவர்களிடமிருந்து எந்த வாழ்வாதாரத்தையும் நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளித்திட வேண்டுமென்றும் நான் நாடவில்லை.
51:57. அவர்களிடத்தில் (என் படைப்புகளுக்காக) நான் யாதொரு உணவையும் நாடவில்லை, அன்றியும், எனக்கு அவர்கள் உணவளிப்பதையும் நான் நாடவில்லை.
51:58
51:58 اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ‏
اِنَّ நிச்சயமாக اللّٰهَ هُوَ அல்லாஹ்தான் الرَّزَّاقُ (எல்லோருக்கும்) உணவளிப்பவன் ذُو الْقُوَّةِ பலமுள்ளவன் الْمَتِيْنُ‏ மிக உறுதியுடையவன்
51:58. நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.
51:58. (நபியே! நீர் கூறுவீராக:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்க முடியாத பலசாலியுமாவான்.
51:58. நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப்பவனாகவும், பெரும் ஆற்றலுடையவனாகவும், வலிமைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
51:58. (நபியே! நீர் கூறுவீராக:) “நிச்சயமாக அல்லாஹ்_அவன்தான் (யாவருக்கும்) மிக்க உணவளிப்பவன், பலமுடையவன், உறுதியானவன்.”
51:59
51:59 فَاِنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا ذَنُوْبًا مِّثْلَ ذَنُوْبِ اَصْحٰبِهِمْ فَلَا يَسْتَعْجِلُوْنِ‏
فَاِنَّ நிச்சயமாக لِلَّذِيْنَ ظَلَمُوْا அநியாயம் செய்தவர்களுக்கு ذَنُوْبًا பெரிய பங்குண்டு مِّثْلَ போல ذَنُوْبِ பெரிய பங்கு اَصْحٰبِهِمْ அவர்களின் கூட்டாளிகளுடைய فَلَا يَسْتَعْجِلُوْنِ‏ ஆகவே, அவர்கள் அவசரமாகத் தேடவேண்டாம்
51:59. எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு; ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.
51:59. இவ்வக்கிரமக்காரர்களின் நண்பர்களுக்கு இருந்த (நன்மை, தீமையை அளக்கக்கூடிய) அளவுப் படிகளைப் போலவே, நிச்சயமாக இவர்களுக்கும் அளவுப் படிகளுண்டு. (அவை நிறைந்ததும் வேதனையைக் கொண்டு இவர்களைப் பிடித்துக் கொள்வோம்.) ஆதலால், அவர்கள் அவசரப்பட வேண்டாம்.
51:59. இவர்களுக்கு முன்னிருந்த கொடுமைக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட வேதனையின் பங்கு போலவே, இந்தக் கொடுமைக்காரர்களுக்கும், அவர்களுடைய வேதனை தயாராக இருக்கின்றது. அதற்காக இவர்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்.
51:59. எனவே, நிச்சயமாக அநியாயம் செய்து விட்டார்களே, அவர்களுக்கு (முன் வாழ்ந்த) அவர்களுடைய சிநேகிதர்களுக்கிருந்த பங்கைப்போன்று (வேதனையில்) பங்குண்டு ஆகவே, அவர்கள் (தண்டனைக்காக என்னிடம்) அவசரப்படவேண்டாம்.
51:60
51:60 فَوَيْلٌ لِّـلَّذِيْنَ كَفَرُوْا مِنْ يَّوْمِهِمُ الَّذِىْ يُوْعَدُوْنَ‏
فَوَيْلٌ ஆகவே, நாசம் உண்டாகட்டும் لِّـلَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களுக்கு مِنْ يَّوْمِهِمُ அவர்களின் நாளில் الَّذِىْ எது يُوْعَدُوْنَ‏ அவர்கள் வாக்களிக்கப்பட்டார்கள்
51:60. ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான்.
51:60. (விசாரணைக்காக பாவிகளுக்கு) வாக்களிக்கப்பட்ட நாளில் இந்நிராகரிப்பவர்களுக்குக் கேடுதான்.
51:60. நிராகரிப்பாளர்களுக்கு இறுதியில் எந்த நாளைக் குறித்து அவர்களுக்கு அச்சுறுத்தப்பட்டு வருகின்றதோ, அந்த நாளில் மாபெரும் அழிவு இருக்கின்றது.
51:60. ஆகையால், நிராகரித்தோருக்கு_ அவர்கள் வாக்களிக்கப்பட்டுள்ளார்களே அத்தகைய அவர்களுடைய நாளில் கேடுதான்.