52. ஸூரத்துத் தூர் (மலை)
மக்கீ, வசனங்கள்: 49

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
52:1
52:1 وَالطُّوْرِۙ‏
وَالطُّوْرِۙ‏ தூர் மலையின் மீது சத்தியமாக!
52:1. தூர் (மலை) மீது சத்தியமாக!
52:1. தூர் (என்னும்) மலையின் மீது சத்தியமாக!
52:1. தூர் மலையின் மீது சத்தியமாக!
52:1. தூர் (மலை) மீது சத்தியமாக!
52:2
52:2 وَكِتٰبٍ مَّسْطُوْرٍۙ‏
وَكِتٰبٍ புத்தகத்தின் மீது சத்தியமாக! مَّسْطُوْرٍۙ‏ எழுதப்பட்டது
52:2. எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!
52:2,3,2. விரித்த ஏட்டில் வரி வரியாக எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக!
52:2. மெல்லிய தோலில் எழுதப்பட்ட
52:2. எழுதப்பட்ட நூலின் மீது சத்தியமாக!
52:3
52:3 فِىْ رَقٍّ مَّنْشُوْرٍۙ‏
فِىْ رَقٍّ காகிதத்தில் مَّنْشُوْرٍۙ‏ விரிக்கப்பட்டது
52:3. விரித்து வைக்கப்பட்ட ஏட்டில்- 
52:2,3,3. விரித்த ஏட்டில் வரி வரியாக எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக!
52:3. திறந்த புத்தகத்தின் மீது சத்தியமாக!
52:3. விரித்துவைக்கப்பட்ட ஏட்டில்_
52:4
52:4 وَالْبَيْتِ الْمَعْمُوْرِۙ‏
وَالْبَيْتِ ஆலயத்தின் மீது சத்தியமாக! الْمَعْمُوْرِۙ‏ செழிப்பான(து)
52:4. பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
52:4. பைத்துல் மஃமூர் (என்னும் ஆலயத்தின்) மீது சத்தியமாக!
52:4. மக்கள் நடமாட்டமுள்ள இல்லத்தின்மீது சத்தியமாக!
52:4. பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
52:5
52:5 وَالسَّقْفِ الْمَرْفُوْعِۙ‏
وَالسَّقْفِ முகட்டின் மீது சத்தியமாக! الْمَرْفُوْعِۙ‏ உயர்த்தப்பட்ட(து)
52:5. உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
52:5. உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக!
52:5. உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக!
52:5. உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
52:6
52:6 وَالْبَحْرِ الْمَسْجُوْرِۙ‏
وَالْبَحْرِ கடலின் மீது சத்தியமாக! الْمَسْجُوْرِۙ‏ நீரால் நிரம்பிய(து)
52:6. பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
52:6. (தொடர்ந்து) அலைகள் மோதிக் கொண்டிருக்கும் சமுத்திரத்தின் மீது சத்தியமாக!
52:6. அலைபுரளும் கடலின் மீது சத்தியமாக!
52:6. (நெருப்பினால்) மூட்டப்பட்ட கடலின் மீது சத்தியமாக!
52:7
52:7 اِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ ۙ‏
اِنَّ நிச்சயமாக عَذَابَ தண்டனை رَبِّكَ உமது இறைவனின் لَوَاقِعٌ ۙ‏ நிகழ்ந்தே தீரும்
52:7. நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.
52:7. (நபியே!) நிச்சயமாக உமது இறைவனின் வேதனை (அவர்களுக்கு) வந்தே தீரும்.
52:7. உம்முடைய இறைவன் தரும் வேதனை நிச்சயம் வந்தே தீரும்.
52:7. (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகனின் வேதனை (அவர்களுக்கு) நிகழும்_
52:8
52:8 مَّا لَهٗ مِنْ دَافِعٍۙ‏
مَّا இல்லை لَهٗ அதை مِنْ دَافِعٍۙ‏ தடுப்பவர்
52:8. அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
52:8. எவராலும் அதைத் தடுக்க முடியாது.
52:8. அதனைத் தடுப்பவர் எவருமிலர்.
52:8. அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
52:9
52:9 يَّوْمَ تَمُوْرُ السَّمَآءُ مَوْرًا ۙ‏
يَّوْمَ நாளில் تَمُوْرُ குலுங்குகின்ற السَّمَآءُ مَوْرًا ۙ‏ வானம்/குலுங்குதல்
52:9. வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்;
52:9. வானமும் துடிதுடித்துக் குமுறும் நாளில்,
52:9. அது நிகழும் நாளில் வானம் கடுமையாக நடுங்கும்;
52:9. வானம் கடுமையாக அசைந்து (திருகையைப் போன்று) சுற்றும் நாளில்,
52:10
52:10 وَّتَسِيْرُ الْجِبَالُ سَيْرًا ؕ‏
وَّتَسِيْرُ இன்னும் செல்லும் الْجِبَالُ மலைகள் سَيْرًا ؕ‏ செல்வது
52:10. இன்னும், மலைகள் தூள் தூளாகி விடும் போது,
52:10. மலைகள் (பெயர்ந்து) பறந்தோடும் (நாளில்)
52:10. மலைகள் பறந்து கொண்டிருக்கும்.
52:10. இன்னும், மலைகள் (இடம் பெயர்ந்து) ஒரே நடையாக நடக்கும்.
52:11
52:11 فَوَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّـلْمُكَذِّبِيْنَۙ‏
فَوَيْلٌ ஆகவே நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّـلْمُكَذِّبِيْنَۙ‏ பொய்ப்பிப்பவர்களுக்கு
52:11. (சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.
52:11. (நபியே! உம்மைப்) பொய்யாக்கும் இவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
52:11. கேடுதான் இருக்கிறது அந்நாளில், பொய் என்று தூற்றியவர்களுக்கு!
52:11. (நபியே! உம்மைப்) பொய்ப்பித்துக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.
52:12
52:12 الَّذِيْنَ هُمْ فِىْ خَوْضٍ يَّلْعَبُوْنَ‌ۘ‏
الَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் فِىْ خَوْضٍ குழப்பத்தில் இருந்துகொண்டு يَّلْعَبُوْنَ‌ۘ‏ விளையாடுகிறார்கள்
52:12. எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ,
52:12. அவர்கள் (வீண் விதண்டாவாதத்தில்) மூழ்கி விளையாடிக்கொண்டு இருக்கின்றனர்.
52:12. அவர்களோ இன்று வீண் வாதங்களில் விளையாட்டாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
52:12. அவர்கள் எத்தகையோரென்றால், வீண் விதண்டாவாதத்தில் (மூழ்கி) விளையாடுகின்றனர்.
52:13
52:13 يَوْمَ يُدَعُّوْنَ اِلٰى نَارِ جَهَنَّمَ دَعًّاؕ‏
يَوْمَ நாளில் يُدَعُّوْنَ அவர்கள் தள்ளப்படுகின்ற(னர்) اِلٰى نَارِ جَهَنَّمَ நரக நெருப்பின் பக்கம் دَعًّاؕ‏ தள்ளப்படுதல்
52:13. அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.
52:13. அவர்கள் நரகத்தின் பக்கம் (அடித்து) வெருட்டி ஓட்டப்படும் நாளில்,
52:13. எந்நாளில் அவர்கள் நெட்டித் தள்ளப்பட்டு நரக நெருப்பின் பக்கம் விரட்டப்படுவார்களோ அந்நாளில்;
52:13. அவர்கள் நரகத்தின்பால் ஒரே தள்ளாகத் தள்ளப்படும் நாளில்.
52:14
52:14 هٰذِهِ النَّارُ الَّتِىْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ‏
هٰذِهِ இது النَّارُ நெருப்பு الَّتِىْ எது كُنْتُمْ நீங்கள் இருந்தீர்கள் بِهَا அதை تُكَذِّبُوْنَ‏ பொய்ப்பிப்பவர்களாக
52:14. அந்நாளில்: (அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான்.
52:14. (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக நெருப்பு இதுதான்'' என்று கூறப்படும்.
52:14. அவர்களிடம் கூறப்படும்: “இதுதான் அந்த நரக நெருப்பு; இதனைத்தான் நீங்கள் பொய்யென வாதித்தீர்கள்.
52:14. (அவர்களிடம்) “நீங்கள் எதனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அந்(நரக) நெருப்பு இதுதான்” (என்று கூறப்படும்.)
52:15
52:15 اَفَسِحْرٌ هٰذَاۤ اَمْ اَنْتُمْ لَا تُبْصِرُوْنَ‌ۚ‏
اَفَسِحْرٌ என்ன சூனியமா? هٰذَاۤ இது اَنْتُمْ நீங்கள் لَا تُبْصِرُوْنَ‌ۚ‏ பார்க்கவில்லையா
52:15. “இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா?
52:15. இது வெறும் சூனியம்தானா? அல்லது, இதை நீங்கள் (உங்கள் கண்ணால்) பார்க்கவில்லையா?
52:15. இப்போது கூறுங்கள், இது சூனியமா அல்லது உங்களுக்குப் புலப்படவில்லையா?
52:15. “எனவே இது (வெறும்) சூனியம்தானா? அல்லது (இதனை) நீங்கள் (உங்கள் கண்ணால்) காணமுடியாதவர்களாகி விட்டீர்களா?”
52:16
52:16 اِصْلَوْهَا فَاصْبِرُوْۤا اَوْ لَا تَصْبِرُوْا‌ۚ سَوَآءٌ عَلَيْكُمْ‌ؕ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
اِصْلَوْهَا இதில் எரிந்து பொசுங்குங்கள்! فَاصْبِرُوْۤا பொறுமையாக இருங்கள்! اَوْ அல்லது لَا تَصْبِرُوْا‌ۚ பொறுக்காதீர்கள்! سَوَآءٌ இரண்டும் சமம்தான் عَلَيْكُمْ‌ؕ உங்களுக்கு اِنَّمَا تُجْزَوْنَ நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்
52:16. “நீங்கள் அதில் நுழையுங்கள்; பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள்; (இரண்டும்) உங்களுக்குச் சமமே; நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.”
52:16. அதில் நுழைந்து விடுங்கள். (அதன் வேதனையைப் பொறுத்துச்) சகித்துக் கொண்டிருங்கள்; அல்லது சகிக்காதிருங்கள். (இரண்டும்) உங்களுக்குச் சமமே! (வேதனையில் ஓர் அணுவளவும் குறையாது.) நீங்கள் செய்தவற்றுக்குரிய கூலிதான் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
52:16. இப்போது அதனுள் நுழைந்து எரிந்து விடுங்கள். நீங்கள் சகித்துக்கொண்டாலும் சரி, சகிக்காவிட்டாலும் சரி. இரண்டும் உங்களுக்குச் சமம்தான். நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்களோ அவ்வாறே உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுகின்றது.”
52:16. “இதில் நீங்கள் நுழைந்து விடுங்கள், (இதன் வேதனையைச் சகித்துப்) பொறுமையாயிருங்கள், அல்லது பொறுமையாய் இல்லாதிருங்கள், (இரண்டும்) உங்களுக்குச் சமமே, (வேதனையில் ஓர் அணுவளவும் குறைக்கப் படமாட்டீர்கள்). நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்குத்தான்” (என்று கூறப்படும்).
52:17
52:17 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّنَعِيْمٍۙ‏
اِنَّ நிச்சயமாக الْمُتَّقِيْنَ இறையச்சமுடையவர்கள் فِىْ جَنّٰتٍ சொர்க்கங்களிலும் وَّنَعِيْمٍۙ‏ இன்பங்களிலும்
52:17. நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.
52:17. அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்தவர்கள் நிச்சயமாக சொர்க்கங்களிலும் இன்பத்திலும் இருப்பார்கள்.
52:17. இறையச்சமுள்ளவர்கள் அங்கு சுவனங்களிலும் அருட்பேறுகளிலும் இருப்பார்கள்.
52:17. நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், (அல்லாஹ்வின்) அருட்கொடையிலும் (திளைத்து) இருப்பார்கள்.
52:18
52:18 فٰكِهِيْنَ بِمَاۤ اٰتٰٮهُمْ رَبُّهُمْ‌ۚ وَوَقٰٮهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِيْمِ‏
فٰكِهِيْنَ அவர்களிடம் பழங்கள் بِمَاۤ اٰتٰٮهُمْ அவர்களுக்கு வழங்கியதால் رَبُّهُمْ‌ۚ அவர்களின் இறைவன் وَوَقٰٮهُمْ இன்னும் அவர்களை பாதுகாப்பான் رَبُّهُمْ அவர்களின் இறைவன் عَذَابَ الْجَحِيْمِ‏ நரக வேதனையை விட்டும்
52:18. அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.
52:18. தங்கள் இறைவன் தங்களுக்கு அளித்திருப்பவற்றைப் பற்றியும், நரக வேதனையிலிருந்து தங்களைத் தங்கள் இறைவன் பாதுகாத்துக் கொண்டதைப் பற்றியும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள்.
52:18. அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றிலிருந்து இன்பம் துய்த்துக் கொண்டிருப்பார்கள். மேலும், அவர்களுடைய இறைவன் அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவான்.
52:18. தங்கள் இரட்சகன் தங்களுக்கு அளித்திருப்பவைகளை அனுபவித்தவர்களாக இருப்பர், மேலும், அவர்களின் இரட்சகன் அவர்களை நரக வேதனையிலிருந்து காத்துக் கொண்டான்.
52:19
52:19 كُلُوْا وَاشْرَبُوْا هَـنِٓـيـْئًا ۢ بِمَا كُنْـتُمْ تَعْمَلُوْنَۙ‏
كُلُوْا உண்ணுங்கள் وَاشْرَبُوْا இன்னும் பருகுங்கள் هَـنِٓـيـْئًا ۢ மகிழ்ச்சியாக بِمَا كُنْـتُمْ تَعْمَلُوْنَۙ‏ நீங்கள் செய்துகொண்டிருந்த காரணத்தால்
52:19. (அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.”
52:19. (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாக (இதில் உள்ளவற்றை) மிக்க தாராளமாகப் புசித்துக் கொண்டும், பருகிக் கொண்டும் இருங்கள்'' (என்றும் கூறப்படும்).
52:19. (அவர்களிடம் கூறப்படும்:) “உண்ணுங்கள், பருகுங்கள் மகிழ்வோடு; நீங்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்குரிய வெகுமதியாக!”
52:19. (அவர்களிடம் உலகில் நன்மைகளிலிருந்து) “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்காக மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள் இன்னும் பருகுங்கள்” (என்றும் கூறப்படும்).
52:20
52:20 مُتَّكِـــِٕيْنَ عَلٰى سُرُرٍ مَّصْفُوْفَةٍ‌ ۚ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِيْنٍ‏
مُتَّكِـــِٕيْنَ சாய்ந்தவர்களாக இருப்பார்கள் عَلٰى سُرُرٍ கட்டில்களில் مَّصْفُوْفَةٍ‌ ۚ வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகளில் وَزَوَّجْنٰهُمْ அவர்களுக்கு நாம் மணமுடித்துவைப்போம் بِحُوْرٍ عِيْنٍ‏ கண்ணழகிகளான கருவிழிகளுடைய பெண்களை
52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.
52:20. வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களின் மீது சாய்ந்(து படுத்)தவர்களாக இருப்பர். நாம் அவர்களுக்கு (‘ஹூருல்ஈன்' என்னும்) கண்ணழகிக(ளாகிய கன்னி)களை திருமணம் செய்து வைப்போம்.
52:20. எதிரெதிரே விரித்து வைக்கப்பட்டிருக்கும் கட்டில்களில் மெத்தைகள் வைத்து அவர்கள் அமர்ந்திருப்பார்கள். அழகிய கண்களைக் கொண்ட மங்கையரை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்போம்.
52:20. அணியணியாகப் போடப்பட்ட கட்டில்களி(ல் உள்ள மஞ்சங்களி)ன் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள், நாம் அவர்களுக்கு (ஹூருல் ஈன் என்னும்) கண்ணழகி(களாகிய கன்னிகை)களை மணமுடித்து வைப்போம்.
52:21
52:21 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِاِيْمَانٍ اَلْحَـقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَاۤ اَلَـتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَىْءٍ‌ؕ كُلُّ امْرِیءٍۢ بِمَا كَسَبَ رَهِيْنٌ‏
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்களோ وَاتَّبَعَتْهُمْ இன்னும் அவர்களைப் பின்பற்றினார்களோ ذُرِّيَّتُهُمْ அவர்களின் சந்ததிகளும் بِاِيْمَانٍ இறை நம்பிக்கையில் اَلْحَـقْنَا بِهِمْ அவர்களுடன் சேர்த்து வைப்போம் ذُرِّيَّتَهُمْ அவர்களின் சந்ததிகளை وَمَاۤ اَلَـتْنٰهُمْ அவர்களுக்கு நாம் குறைக்க மாட்டோம் مِّنْ عَمَلِهِمْ அவர்களின் அமல்களில் مِّنْ شَىْءٍ‌ؕ எதையும் كُلُّ ஒவ்வொரு امْرِیءٍۢ மனிதனும் بِمَا كَسَبَ தான் செய்த செயலுக்காக رَهِيْنٌ‏ தடுத்து வைக்கப்பட்டிருப்பான்
52:21. எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.
52:21. எந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள், தங்கள் பெற்றோர்களைப் பின்பற்றி நம்பிக்கை கொள்கிறார்களோ (அந்தச் சந்ததிகளின் நன்மைகள் குறைவாக இருந்தும் அவர்களின் பெற்றோர்கள் திருப்தியடையும் பொருட்டு) அவர்களுடைய சந்ததிகளையும் அவர்களுடன் (சொர்க்கத்தில்) சேர்த்துவிடுவோம். இதனால் அவர்களுடைய பெற்றோர்களின் நன்மைகளில் எதையும் நாம் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்த செயலுக்குப் பிணையாக இருக்கிறான்.
52:21. எவர்கள் இறைநம்பிக்கை கொண்டார்களோ, அவர்களையும், இறைநம்பிக்கையில் ஓரளவாவது அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய அவர்களின் வழித்தோன்றல்களையும் நாம் (சுவனத்தில்) ஒன்று சேர்த்து வைப்போம். மேலும், அவர்களின் செயல்களில் எந்த இழப்பையும் அவர்களுக்கு நாம் ஏற்படுத்தமாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவற்றுக்குப் பணயமாக இருக்கின்றான்.
52:21. இன்னும் விசுவாசங்கொண்டார்களே அத்தகையோர், அவர்களுடைய சந்ததிகளும் விசுவாசத்தின் மூலம் அவர்களை பின்பற்றினார்கள், (அத்தகைய அந்தச் சந்ததியினரின் படித்தரங்கள் குறைவாக இருப்பினும் அவர்களின் பெற்றோர்கள் இருக்கும் உயர் பதவிக்கு) அவர்களுடன் (சுவனபதியில்) அவர்களின் சந்ததியினரை சேர்த்து விடுவோம், (இதனால்) அவர்களுடைய (பெற்றோர்களின் நன்மையான) செயல்களில் எதனையும் அவர்களுக்கு நாம் குறைத்து விடமாட்டோம், ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்ததைக் கொண்டு பிணையாக்கபட்டிருக்கின்றான்.
52:22
52:22 وَاَمْدَدْنٰهُمْ بِفَاكِهَةٍ وَّلَحْمٍ مِّمَّا يَشْتَهُوْنَ‏
وَاَمْدَدْنٰهُمْ நாம் இவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்போம் بِفَاكِهَةٍ பழங்களை(யும்) وَّلَحْمٍ மாமிசங்களையும் مِّمَّا يَشْتَهُوْنَ‏ அவர்கள் விரும்புகின்றவற்றின்
52:22. இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்.
52:22. அவர்கள் விரும்பிய (பற்பல வகை) கனிவர்க்கங்களையும், மாமிசங்களையும் அவர்களுக்கு (நாள்தோறும்) நாம் (ஏராளமாகக்) கொடுத்து வருவோம்.
52:22. மேலும், நாம் எல்லாவிதமான பழங்களையும், இறைச்சியையும், அவர்களின் உள்ளம் விரும்புகின்றவற்றையும் அவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்துக்கொண்டே இருப்போம்.
52:22. (பல வகையான) பழத்தையும், அவர்கள் விரும்பக்கூடியதிலிருந்து (பலவகையான) இறைச்சியையும் கொண்டு அவர்களும் நாம் (ஏராளமாகக் கொடுத்து) அதிகப்படுத்துவோம்.
52:23
52:23 يَـتَـنَازَعُوْنَ فِيْهَا كَاْسًا لَّا لَغْوٌ فِيْهَا وَلَا تَاْثِيْمٌ‏
يَـتَـنَازَعُوْنَ فِيْهَا அதில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்கள் كَاْسًا குடிபானம் நிறைந்த குவளைகளை لَّا لَغْوٌ فِيْهَا அதில் பொய் இருக்காது وَلَا تَاْثِيْمٌ‏ பிறரை பாவத்தில் தள்ளுகின்ற செயல்கள் இருக்காது
52:23. (அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர்; ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை.
52:23. ஒருவருடைய கிண்ணத்தை மற்றொருவர் (களிப்பால்) பிடுங்கிக் கொள்வார். (அதனால்) மனத்தாங்கலோ அல்லது மரியாதைக்குறைவோ ஏற்படாது.
52:23. அங்கே அவர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து மதுக்கிண்ணத்தைப் பாய்ந்து பாய்ந்து வாங்கிக் கொண்டிருப்பார்கள். அங்கு வீணான பேச்சும் இருக்காது; தீய நடத்தையும் இருக்காது.
52:23. அ(ச்சுவனத்)தில் ஒருவருக்கொருவர் (மதுக்) கோப்பையை பரிமாறிக் கொள்வர், (அதில்) வீணானது இருக்காது, (அதை அருந்துவதால்) குற்றமிழைப்பதோ ஏற்படுவதில்லை.
52:24
52:24 وَيَطُوْفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَاَنَّهُمْ لُـؤْلُـؤٌ مَّكْنُوْنٌ‏
وَيَطُوْفُ சுற்றி வருவார்கள் عَلَيْهِمْ அவர்களை غِلْمَانٌ சிறுவர்கள் لَّهُمْ அவர்களுக்குரிய كَاَنَّهُمْ அவர்களோ இருப்பார்கள் لُـؤْلُـؤٌ முத்துக்களைப் போன்று مَّكْنُوْنٌ‏ பாதுகாக்கப்பட்ட
52:24. அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).
52:24. அவர்களைச் சுற்றி (அவர்களுக்குப் பணி செய்ய எந்நேரமும்) சிறுவர்கள் பலர் சுற்றி வருவார்கள். அவர்கள் பதிந்த முத்துக்களைப் போல் (பிரகாசமாக) இருப்பார்கள்.
52:24. அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்கென்று நியமிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்களுக்குச் சேவைபுரிய ஓடியாடிக் கொண்டிருப்பார்கள். அந்தச் சிறுவர்கள் மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அழகாய் இருப்பார்கள்.
52:24. மேலும், அவர்களுக்குரிய (பணிபுரியும்) சிறுவர்கள் அவர்களைச் சுற்றிகொண்டே இருப்பார்கள், அவர்கள் (சிப்பிகளில்) மறைத்து வைக்கப்பட்ட (கைபடாத) முத்துக்களைப் போல் (பிரகாசமான தோற்றமளிப்பவர்களாக) இருப்பர்.
52:25
52:25 وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ‏
وَاَقْبَلَ முன்னோக்கி வருவார்கள் بَعْضُهُمْ அவர்களில் சிலர் عَلٰى بَعْضٍ சிலரை يَّتَسَآءَلُوْنَ‏ தங்களுக்குள் கேட்டவர்களாக
52:25. அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.
52:25. அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கி (அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக) உரையாடுவார்கள்.
52:25. மேலும், அவர்கள் (உலகில் நடந்த) நிலைமைகளைக் குறித்து பரஸ்பரம் விசாரிப்பார்கள்.
52:25. மேலும், அவர்கள் ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்பவர்களாக அவர்களில் சிலர் (மற்ற) சிலரின் பால் முன்னோக்கியிருப்பார்கள்.
52:26
52:26 قَالُـوْۤا اِنَّا كُـنَّا قَبْلُ فِىْۤ اَهْلِنَا مُشْفِقِيْنَ‏
قَالُـوْۤا அவர்கள் கூறுவார்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் كُـنَّا இருந்தோம் قَبْلُ இதற்கு முன்னர் فِىْۤ اَهْلِنَا எங்கள் குடும்பங்களில் مُشْفِقِيْنَ‏ பயந்தவர்களாகவே
52:26. “இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.
52:26. ‘‘இதற்கு முன்னர், நாம் நம் குடும்பத்தைப் பற்றி (அவர்களுடைய கதி என்னவாகுமோ என்று) மெய்யாகவே பயந்துகொண்டே இருந்தோம்.
52:26. அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் முன்பு எங்கள் குடும்பத்தாரிடையே அஞ்சிய வண்ணம் வாழ்ந்து வந்தோம்.
52:26. “நாங்கள் முன்பு, எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களுடைய நிலை என்னவாகுமோ என்று) நிச்சயமாக பயந்தவர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள்.
52:27
52:27 فَمَنَّ اللّٰهُ عَلَيْنَا وَوَقٰٮنَا عَذَابَ السَّمُوْمِ‏
فَمَنَّ ஆக, உபகாரம் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْنَا எங்கள் மீது وَوَقٰٮنَا இன்னும் எங்களை பாதுகாத்தான் عَذَابَ வேதனையை விட்டும் السَّمُوْمِ‏ நரகத்தின்
52:27. “ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான்.
52:27. ஆயினும், அல்லாஹ் நம்மீது அருள் புரிந்து கொடிய வேதனையிலிருந்து நம்மை(யும் நம் குடும்பத்தினரையும்) காப்பாற்றினான்.
52:27. இறுதியில், அல்லாஹ் எங்கள்மீது அருள்புரிந்தான்; மேலும், பொசுக்கிவிடும் காற்றின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றிவிட்டான்.
52:27. “ஆயினும், அல்லாஹ் எங்கள் மீது பேருபகாரம் செய்து நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்துவிட்டான்.
52:28
52:28 اِنَّا كُـنَّا مِنْ قَبْلُ نَدْعُوْهُ‌ ؕ اِنَّهٗ هُوَ الْبَـرُّ الرَّحِيْمُ‏
اِنَّا நிச்சயமாக நாங்கள் كُـنَّا இருந்தோம் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் نَدْعُوْهُ‌ ؕ அவனை அழைப்பவர்களாக اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْبَـرُّ மிகவும் அருளுடையவன் الرَّحِيْمُ‏ மகா கருணையாளன்
52:28. “நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்; நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன்; பெருங்கிருபையுடையவன்.”  
52:28. இதற்கு முன்னர் (வேதனையிலிருந்து நம்மை காக்கும்படி) மெய்யாகவே நாம் அவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தோம். மெய்யாகவே அவன்தான் நன்மை செய்பவன், பேரன்புடையவன் ஆவான்'' என்று கூறுவார்கள்.
52:28. திண்ணமாக, நாங்கள் முந்தைய வாழ்க்கையில் அவனிடமே இறைஞ்சிக்கொண்டிருந்தோம். அவன் உண்மையில் பேருபகாரியும் கருணையாளனும் ஆவான்.”
52:28. நிச்சயமாக (இதற்கு) முன்னர் (வேதனையிலிருந்து எங்களைக் காக்குமாறு) நாங்கள் அவனை (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக, அவனே மிகக் கூடுதலாக உபகாரம் செய்பவன், மிகக்கிருபையுடையவன்” (என்றும் கூறுவார்கள்).
52:29
52:29 فَذَكِّرْ فَمَاۤ اَنْتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَّلَا مَجْنُوْنٍؕ‏
فَذَكِّرْ ஆகவே, நல்லுபதேசம் செய்வீராக! فَمَاۤ اَنْتَ நீர் இல்லை بِنِعْمَتِ அருட்கொடையால் رَبِّكَ உமது இறைவனின் بِكَاهِنٍ குறிசொல்பவராக(வும்) وَّلَا مَجْنُوْنٍؕ‏ பைத்தியக்காரராகவும்
52:29. எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர்; பைத்தியக்காரருமல்லர்.
52:29. (நபியே!) (நிராகரிப்பவர்களுக்கு வேதனையை) ஞாபகமூட்டிக் கொண்டே இருப்பீராக. உமது இறைவனின் அருளால் நீர் குறி சொல்பவருமல்ல; பைத்தியக்காரருமல்ல.
52:29. (நபியே!) நீர் அறிவுரை வழங்கிய வண்ணம் இருப்பீராக! உம் இறைவனின் அருளால் நீர் சூனியக்காரருமல்லர்; பைத்தியக்காரரும் அல்லர்.
52:29. ஆகவே, (நபியே! அல்லாஹ்வின் தூதை எத்திவைத்து, அவன் இறக்கிவைத்த குர் ஆனின் மூலம்) அவர்களுக்கு நினைவுபடுத்துவீராக! உமது இரட்சகனின் அருளால் நீர் குறிகாரரல்லர், பைத்திக்காரருமல்லர்.
52:30
52:30 اَمْ يَقُوْلُوْنَ شَاعِرٌ نَّتَـرَبَّصُ بِهٖ رَيْبَ الْمَنُوْنِ‏
اَمْ يَقُوْلُوْنَ அல்லது கூறுகிறார்களா? شَاعِرٌ ஒரு கவிஞர் نَّتَـرَبَّصُ நாங்கள் எதிர்பார்க்கின்றோம் بِهٖ அவருக்கு رَيْبَ அசம்பாவிதங்களை الْمَنُوْنِ‏ காலத்தின்
52:30. அல்லது அவர்கள் (உம்மைப் பற்றி, “அவர்) புலவர்; அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்துக் இருக்கிறோம்” என்று கூறுகிறார்களா?
52:30. (உம்மைப் பற்றி) அவர்கள் (நீர்) ஒரு கவிஞர்தான் என்று கூறுகின்றனரா? (இக்கூற்றுக்குத் தண்டனையாக அவர்கள் மீது சம்பவிக்கக்கூடிய சோதனையின்) காலச்சக்கரத்தை எதிர்பார்த்திருப்போம்.
52:30. “இவர் ஒரு கவிஞர்; இவர் விஷயத்தில் சுழற்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்” என்று இவர்கள் கூறுகின்றார்களா, என்ன?
52:30. அல்லது_(உம்மைப்பற்றி, ”அவர்) ஒரு கவிஞர் தாம், அவருக்கு (இறப்பெனும்) காலச்சூழலை நாம் எதிர்பார்த்திருப்போம்” என்று அவர்கள் கூறுகின்றனரா?
52:31
52:31 قُلْ تَرَبَّصُوْا فَاِنِّىْ مَعَكُمْ مِّنَ الْمُتَـرَبِّصِيْنَ ؕ‏
قُلْ கூறுவீராக! تَرَبَّصُوْا நீங்கள் எதிர்பாருங்கள் فَاِنِّىْ நிச்சயமாக நானும் مَعَكُمْ உங்களுடன் مِّنَ الْمُتَـرَبِّصِيْنَ ؕ‏ எதிர்பார்ப்பவர்களில்
52:31. “நீங்களும் வழி பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.
52:31. ஆகவே (அவர்களை நோக்கி, அதை) ‘‘நீங்களும் எதிர்பார்த்திருங்கள். (என்ன நடக்கிறது என்பதை) நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்'' என்று கூறுவீராக.
52:31. இவர்களிடம் நீர் கூறும்: “சரி, எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்க்கிறேன்.”
52:31. (ஆகவே, அவர்களிடம் “அதனை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள், (என்ன நடக்கிறதென்பதை நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களிலுள்ளவன்” என்று கூறுவீராக!
52:32
52:32 اَمْ تَاْمُرُهُمْ اَحْلَامُهُمْ بِهٰذَآ‌ اَمْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ‌ۚ‏
اَمْ تَاْمُرُهُمْ அவர்களை ஏவுகின்றதா? اَحْلَامُهُمْ அவர்களது அறிவுகள் بِهٰذَآ‌ இதற்கு اَمْ هُمْ அல்லது அவர்கள் قَوْمٌ மக்களா? طَاغُوْنَ‌ۚ‏ வரம்பு மீறுகின்ற(வர்கள்)
52:32. அல்லது, அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா?
52:32. (நபியே! உம்மை குறிகாரர் என்றும், பைத்தியக்காரர் என்றும் கூறும்படி) அவர்களுடைய அறிவுதான் அவர்களைத் தூண்டுகிறதா? அல்லது (இயற்கையாகவே) அவர்கள் விஷமிகள்தானா?
52:32. இவர்களின் அறிவுதான் இவ்வாறெல்லாம் இவர்களைப் பேசத் தூண்டுகிறதா? அல்லது உண்மையில் இவர்கள் பகைமையில் வரம்புமீறிச் செல்கின்ற மக்களாய் இருக்கின்றார்களா?
52:32. “அல்லது (நபியே! உம்மை பற்றி கவிஞர், பைத்தியக்காரர், குறிகாரர் என்றெல்லாம் கூறுமாறு) அவர்களுடைய அறிவுகள்தான் இவ்வாறு அவர்களை ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்புமீறிய கூட்டத்தினரா?”
52:33
52:33 اَمْ يَقُوْلُوْنَ تَقَوَّلَهٗ‌ ۚ بَلْ لَّا يُؤْمِنُوْنَ‌ ۚ‏
اَمْ يَقُوْلُوْنَ அல்லது கூறுகிறார்களா? تَقَوَّلَهٗ‌ ۚ இதை புனைந்து கூறுகிறார் بَلْ لَّا يُؤْمِنُوْنَ‌ ۚ‏ மாறாக/நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்
52:33. அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
52:33. அல்லது (நம் நபியாகிய) இவர் பொய்யாகவே அதைக் கற்பனை செய்து கொண்டாரென்று அவர்கள் கூறுகின்றனரா? மாறாக (மனமுரண்டாகவே) இதை அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.
52:33. அல்லது, “இந்த மனிதர் இந்தக் குர்ஆனை சுயமாகப் புனைந்திருக்கின்றார்” என்று இவர்கள் கூறுகின்றார்களா? உண்மை யாதெனில், இவர்கள் நம்பிக்கை கொள்ள விரும்பவில்லை.
52:33. அல்லது, “அவர் அதனைக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகின்றனரா? இல்லை! அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள்.
52:34
52:34 فَلْيَاْتُوْا بِحَدِيْثٍ مِّثْلِهٖۤ اِنْ كَانُوْا صٰدِقِيْنَؕ‏
فَلْيَاْتُوْا بِحَدِيْثٍ مِّثْلِهٖۤ இது போன்ற ஒரு பேச்சை அவர்கள் கொண்டு வரட்டும்! اِنْ كَانُوْا صٰدِقِيْنَؕ‏ இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால்
52:34. ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
52:34. (நபியே! இதை நீர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீரென்று கூறுவதில்) அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (அவர்களும் கற்பனை செய்து கொண்டு) இதைப்போன்ற ஒரு வாக்கியத்தைக்கொண்டு வரவும்.
52:34. இவர்கள் உண்மையானவர்களாய் இருந்தால், இதே போன்ற மகத்துவமிக்க ஒரு வாக்கை இவர்கள் இயற்றிக்கொண்டு வரட்டும்!
52:34. எனவே, (நபியே! இவ்வாறு கூறுவதில்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதைப்போன்ற செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
52:35
52:35 اَمْ خُلِقُوْا مِنْ غَيْرِ شَىْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَؕ‏
اَمْ خُلِقُوْا இவர்கள் படைக்கப்பட்டார்களா? مِنْ غَيْرِ شَىْءٍ ஏதும் இன்றி اَمْ அல்லது هُمُ இவர்கள்தான் الْخٰلِقُوْنَؕ‏ படைத்தவர்களா?
52:35. அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
52:35. அல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத்தாமே படைத்துக் கொண்டனரா?
52:35. படைப்பாளன் யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா?
52:35. அல்லது, அவர்கள் எப்பொருளுமின்றி (தாமகாவே) படைக்கப்பட்டு விட்டனரா? அல்லது அவர்கள்தான் படைக்கின்றவர்களா?
52:36
52:36 اَمْ خَلَـقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌ۚ بَلْ لَّا يُوْقِنُوْنَؕ‏
اَمْ خَلَـقُوا இவர்கள்தான் படைத்தார்களா? السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضَ‌ۚ பூமியையும் بَلْ மாறாக لَّا يُوْقِنُوْنَؕ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
52:36. அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.
52:36. அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? மாறாக, (இவற்றை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான். அவனை) இவர்கள் நம்புவதில்லை.
52:36. அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? உண்மை யாதெனில், இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை!
52:36. அல்லது, வானங்களையும், பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல! (இவைகளையெல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான்! அவனை) இவர்கள் உறுதி கொள்ள மாட்டார்கள்.
52:37
52:37 اَمْ عِنْدَهُمْ خَزَآٮِٕنُ رَبِّكَ اَمْ هُمُ الْمُصَۜيْطِرُوْنَؕ‏
اَمْ عِنْدَهُمْ இவர்களிடம் இருக்கின்றனவா? خَزَآٮِٕنُ பொக்கிஷங்கள் رَبِّكَ உமது இறைவனின் اَمْ هُمُ الْمُصَۜيْطِرُوْنَؕ‏ அல்லது அவர்கள் அடக்கிவிடக் கூடியவர்களா?
52:37. அல்லது, அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா?
52:37. அல்லது இவர்களிடம்தான் உமது இறைவனின் பொக்கிஷங்கள் அனைத்தும் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் அதைப் பங்கிடக்கூடிய அதிகாரிகளா?
52:37. உம் அதிபதியின் கருவூலங்கள் இவர்களின் பிடியில் உள்ளனவா? அல்லது அவற்றின் மீது இவர்களின் ஆதிக்கம்தான் நடைபெறுகின்றதா?
52:37. அல்லது, அவர்களிடம் உமதிரட்சகனின் களஞ்சியங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்களே (அவற்றை) ஆதிக்கம் செலுத்துபவர்களா?
52:38
52:38 اَمْ لَهُمْ سُلَّمٌ يَّسْتَمِعُوْنَ فِيْهِ‌ ۚ فَلْيَاْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍؕ‏
لَهُمْ அவர்களுக்கு سُلَّمٌ ஓர் ஏணி يَّسْتَمِعُوْنَ செவியுறுகின்றனரா فِيْهِ‌ ۚ அதில் فَلْيَاْتِ வரட்டும் مُسْتَمِعُهُمْ அவர்களில் செவியுற்றவர் بِسُلْطٰنٍ مُّبِيْنٍؕ‏ தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டு
52:38. அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.
52:38. அல்லது இவர்களுக்கு (வானத்தில் ஏறக்கூடிய) ஏணி இருந்து, அதில் (ஏறிச் சென்று, அங்கு நடைபெறும் பேச்சுகளைக்) கேட்டு வருகின்றனரா? அவ்வாறாயின், (அவற்றை) கேட்டு வந்தவர் (அதற்குத்) தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டுவரவும்.
52:38. அல்லது இவர்களிடம் ஏணி ஏதும் இருந்து அதில் ஏறிச்சென்று (மேலுலகின் செய்திகளை) இவர்கள் ஒட்டுக்கேட்டு வருகின்றார்களா, என்ன? இவர்களில் எவரேனும் அப்படிக் கேட்டிருந்தால் அவர் ஏதேனும் தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரட்டும்!
52:38. அல்லது, இவர்களுக்கு (வானத்தில் ஏறிச்செல்ல) ஏணி இருந்து, அதில் (ஏறி அங்கு பேசப்படுபவற்றைச்) செவிமடுக்கிறார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் தெளிவான ஒரு சான்றைக் கொண்டு வரட்டும்.
52:39
52:39 اَمْ لَـهُ الْبَنٰتُ وَلَـكُمُ الْبَنُوْنَؕ‏
لَـهُ அவனுக்கு الْبَنٰتُ பெண் பிள்ளைகளும் وَلَـكُمُ உங்களுக்கு الْبَنُوْنَؕ‏ ஆண் பிள்ளைகளும்
52:39. அல்லது, அவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண் மக்களுமா?
52:39. அல்லது (நீங்கள் கூறுகின்றபடி) அல்லாஹ்வுக்குப் பெண் சந்ததிகள்; உங்களுக்கு மட்டும் ஆண் சந்ததிகளா?
52:39. என்ன, அல்லாஹ்விற்கு மட்டும் பெண்மக்கள்; உங்களுக்கு ஆண் மக்களா?
52:39. அல்லது, (உங்கள் கற்பனைகளில் உள்ளவாறு அல்லாஹ்வாகிய) அவனுக்குப் பெண் மக்களும், உங்களுக்கு (மட்டும்) ஆண் மக்களுமா?
52:40
52:40 اَمْ تَسْــٴَــلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَؕ‏ ‏
اَمْ تَسْــٴَــلُهُمْ அவர்களிடம் நீர் கேட்கின்றீரா? اَجْرًا கூலி எதையும் فَهُمْ அவர்கள் مِّنْ مَّغْرَمٍ கடன் தொகையினால் مُّثْقَلُوْنَؕ‏ ‏ சுமைக்குள்ளாகி விட்டார்களா?
52:40. அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா,
52:40. அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்டு அந்தப் பளுவை அவர்கள் சுமக்க முடியாமல் இருக்கின்றனரா?
52:40. நீர் அவர்களிடம் ஏதாவது கூலியைக் கேட்கின்றீரா? அதன் சுமையால் அவர்கள் அழுத்தப்படுகின்றார்களா, என்ன?
52:40. அல்லது, அவர்களிடம் நீர் ஏதேனும் கூலி கேட்கிறீரா? எனவே அவர்கள் கடனால் பளுவாக்கப்பட்டவர்களா?
52:41
52:41 اَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُوْنَؕ‏
اَمْ عِنْدَهُمُ அவர்களிடம் இருக்கின்றதா الْغَيْبُ மறைவானவற்றின் அறிவு فَهُمْ அதை அவர்கள் يَكْتُبُوْنَؕ‏ எழுதுகின்றார்களா?
52:41. அல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா,
52:41. அல்லது இவர்களிடம் மறைவான விஷய(த்தின் ஞான)ம் இருக்கிறதா? இவர்கள் (அதை அல்லாஹ்வைப் போல்) எழுதி வருகின்றனரா?
52:41. அல்லது, இவர்களிடம் மறைவான உண்மைகளின் ஞானம் இருக்கின்றதா? (அதன் அடிப்படையில்) இவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்களா?
52:41. அல்லது, அவர்களிடம் (அல்லாஹ்வைப் போல்) மறைவானது (அது பற்றிய அறிவு) இருக்கிறதா? எனவே அவர்கள் (அதனை) எழுதுகிறார்களா?
52:42
52:42 اَمْ يُرِيْدُوْنَ كَيْدًا‌ؕ فَالَّذِيْنَ كَفَرُوْا هُمُ الْمَكِيْدُوْنَؕ‏
اَمْ ? يُرِيْدُوْنَ நாடுகின்றனர் كَيْدًا‌ؕ சூழ்ச்சியை فَالَّذِيْنَ كَفَرُوْا ஆனால், நிராகரித்தவர்கள்தான் هُمُ الْمَكِيْدُوْنَؕ‏ சூழ்ச்சி செய்யப்பட்டவர்கள்
52:42. அல்லது, அவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள்.
52:42. அல்லது ஒரு சூழ்ச்சி செய்ய இவர்கள் கருதுகின்றனரா? அவ்வாறாயின், இந்நிராகரிப்பவர்கள்தான் சூழ்ச்சிக்குள்ளாவார்கள்.
52:42. அல்லது, இவர்கள் சூழ்ச்சி ஏதும் செய்ய விரும்புகின்றார்களா, என்ன? அப்படியென்றால், நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சி அவர்களையே திருப்பித் தாக்கும்.
52:42. அல்லது ஏதேனுமொரு சூழ்ச்சி செய்ய அவர்கள் நாடுகிறார்களா? அவ்வாறாயின், நிராகரித்தார்களே அவர்கள்தாம் சூழ்ச்சிக்குள்ளாக்கப்படுபவர்கள்.
52:43
52:43 اَمْ لَهُمْ اِلٰهٌ غَيْرُ اللّٰهِ‌ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ‏
اَمْ لَهُمْ அவர்களுக்கு உண்டா? اِلٰهٌ (வேறு) கடவுள் غَيْرُ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வை அன்றி سُبْحٰنَ மகா பரிசுத்தமானவன் اللّٰهِ அல்லாஹ் عَمَّا يُشْرِكُوْنَ‏ அவர்கள் இணைவைப்பதை விட்டும்
52:43. அல்லது, அவர்கள் அல்லாஹ் அல்லாமல் (வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன்.
52:43. அல்லது அல்லாஹ்வையன்றி இவர்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் இருக்கிறானா? இவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.
52:43. அல்லாஹ்வைத் தவிர, வேறு ஒரு கடவுள் இவர்களுக்கு உண்டா? அல்லாஹ் தூய்மையானவன், இவர்களின் இணை வைப்பை விட்டு!
52:43. அல்லது, அவர்களுக்கு அல்லாஹ் அல்லாத (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இருக்கின்றானா? அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன்.
52:44
52:44 وَاِنْ يَّرَوْا كِسْفًا مِّنَ السَّمَآءِ سَاقِطًا يَّقُوْلُوْا سَحَابٌ مَّرْكُوْمٌ‏
وَاِنْ يَّرَوْا அவர்கள் பார்த்தால் كِسْفًا துண்டுகளை مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து سَاقِطًا விழக்கூடிய(து) يَّقُوْلُوْا அவர்கள் கூறுவார்கள் سَحَابٌ மேகங்கள் مَّرْكُوْمٌ‏ ஒன்று சேர்ந்த(வை)
52:44. வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள்.
52:44. வானம் இடிந்து அதிலிருந்த ஒரு துண்டு விழுவதை இவர்கள் கண்ணால் கண்டபோதிலும் (அது வானமல்ல;) மேகம்தான் என்றும், ஆனால் அது உறைந்து இறுகிவிட்டதென்றும் கூறுவார்கள்.
52:44. வானத்தின் துண்டுகள் கீழே வீழ்வதை இவர்கள் பார்த்தாலும், “இவை அடர்த்தியாய் வந்து கொண்டிருக்கும் மேகங்கள்” என்றுதான் கூறுவார்கள்.
52:44. மேலும், வானத்திலிருந்து (இடிந்து) துண்டுகள் விழுவதை அவர்கள் (கண்ணால்) காண்பார்களானால், (அது வானமல்ல,) அது அடர்த்தியான மேகம்தான்” என்று கூறுவார்கள்.
52:45
52:45 فَذَرْهُمْ حَتّٰى يُلٰقُوْا يَوْمَهُمُ الَّذِىْ فِيْهِ يُصْعَقُوْنَۙ‏
فَذَرْهُمْ ஆகவே, அவர்களை விட்டுவிடுவீராக! حَتّٰى வரை يُلٰقُوْا அவர்கள் சந்திக்கின்ற يَوْمَهُمُ அவர்களுடைய நாள் الَّذِىْ எது فِيْهِ அதில் يُصْعَقُوْنَۙ‏ அழிந்துவிடுகின்ற
52:45. ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக.
52:45. (நபியே!) இவர்களுடைய அறிவு பறந்துவிடக்கூடிய நாளை இவர்கள் சந்திக்கும் வரை நீர் இவர்களை விட்டு விடுவீராக.
52:45. எனவே (நபியே!) இவர்களை இவர்களுடைய நிலையிலேயே விட்டுவிடும்; இவர்கள் எந்நாளில் அடித்து வீழ்த்தப்படுவார்களோ அந்நாளை அடையும் வரையில்!
52:45. ஆகவே, (நபியே!) எதில் அவர்கள் அழிக்கப்படுவார்களோ, அத்தகைய அவர்களுடைய நாளை அவர்கள் சந்திக்கும் வரையில் நீர் அவர்களை விட்டுவிடுவீராக!
52:46
52:46 يَوْمَ لَا يُغْنِىْ عَنْهُمْ كَيْدُهُمْ شَيْـٴًـــا وَّلَا هُمْ يُنْصَرُوْنَؕ‏
يَوْمَ அந்நாளில் لَا يُغْنِىْ தடுக்காது عَنْهُمْ அவர்களை விட்டும் كَيْدُهُمْ அவர்களின் சூழ்ச்சி شَيْـٴًـــا எதையும் وَّلَا هُمْ يُنْصَرُوْنَؕ‏ அவர்கள் உதவியும் செய்யப்பட மாட்டார்கள்
52:46. அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது; அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
52:46. அந்நாளில் இவர்களுடைய சூழ்ச்சிகள் ஒன்றுமே இவர்களுக்குப் பயனளிக்காது. எவர்களுடைய உதவியும் இவர்களுக்குக் கிடைக்காது.
52:46. அந்நாளில் இவர்களின் எந்த சூழ்ச்சியும் இவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்காது. மேலும், இவர்களுக்கு உதவி செய்திட யாரும் வரமாட்டார்கள்.
52:46. அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயனளிக்காது, (எவராலும்) அவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
52:47
52:47 وَاِنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا عَذَابًا دُوْنَ ذٰلِكَ وَلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏
وَاِنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு عَذَابًا வேதனை دُوْنَ ذٰلِكَ அதற்கு முன்னரே وَلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَهُمْ அவர்களில் அதிகமானவர்கள் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
52:47. அன்றியும், அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.
52:47. நிச்சயமாக இவ்வக்கிரமக்காரர்களுக்கு (மறுமையின்) வேதனைக்கு முன்னால் (இம்மையிலும்) வேதனை இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ள மாட்டார்கள்.
52:47. மேலும், அந்த நாள் வருவதற்கு முன்பும் கூட கொடுமைக்காரர்களுக்கு ஒரு வேதனை இருக்கின்றது. ஆனால், அவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
52:47. அன்றியும், நிச்சயமாக அநியாயம் செய்துகொண்டிருந்தோர்க்கு (மறுமையின் வேதனையாகிய) அதுமட்டுமின்றி (இம்மையில்) மற்றொரு வேதனையுமிருக்கின்றது, எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்துகொள்ளமாட்டார்கள்.
52:48
52:48 وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْيُنِنَا‌ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِيْنَ تَقُوْمُۙ‏
وَاصْبِرْ பொறுமையாக இருப்பீராக! لِحُكْمِ தீர்ப்புக்காக رَبِّكَ உமது இறைவனின் فَاِنَّكَ நிச்சயமாக நீர் بِاَعْيُنِنَا‌ நமது கண்களுக்கு முன்னால் وَسَبِّحْ நீர் துதிப்பீராக بِحَمْدِ புகழ்ந்து رَبِّكَ உமது இறைவனை حِيْنَ நேரத்தில் تَقُوْمُۙ‏ எழும்
52:48. எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக; நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,
52:48. (நபியே!) உமது இறைவனின் தீர்ப்பைப் பொறுமையாக எதிர்பார்த்திருப்பீராக. நிச்சயமாக நீர் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கிறீர். (ஆகவே, அவர்கள் உம்மைத் தங்கள் விருப்பப்படி துன்புறுத்த முடியாது.) ஆயினும், நீர் (நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உமது இறைவனின் புகழைக்கூறித் துதி செய்வீராக!
52:48. (நபியே!) உம் அதிபதியின் தீர்ப்பு வரும்வரை பொறுமையாய் இருப்பீராக! நீர் எம் கண்காணிப்பில் இருக்கின்றீர். நீர் எழும்போது உம் இறைவனைப் புகழ்வதுடன் அவனைத் துதிப்பீராக!
52:48. மேலும், (நபியே!) உமதிரட்சகனின் தீர்ப்பை (எதிர்பார்த்துப்) பொருத்திருப்பீராக! நிச்சயமாக நீர் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கின்றீர், (ஆகவே, அவர்கள் உமக்கு எவ்வித இடையூறும் செய்து விட முடியாது.) மேலும் (நீர் நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உமதிரட்சகனின் புகழைக்கொண்டு துதி செய்து கொண்டிருப்பீராக!
52:49
52:49 وَمِنَ الَّيْلِ فَسَبِّحْهُ وَاِدْبَارَ النُّجُوْمِ‏
وَمِنَ الَّيْلِ இன்னும் இரவில் فَسَبِّحْهُ அவனை துதிப்பீராக! وَاِدْبَارَ இன்னும் மறைந்த பின்னர் النُّجُوْمِ‏ நட்சத்திரங்கள்
52:49. இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக!
52:49. இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் மறையும் (காலை) நேரத்திலும் அவனை துதி செய்வீராக!
52:49. இரவிலும் அவனைத் துதி செய்வீராக. தாரகைகள் மறையும் வேளையிலும் (துதிப்பீராக!)
52:49. இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் மறையும் (காலை) நேரத்திலும் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக!