55. ஸூரத்துர் ரஹ்மான்(அளவற்ற அருளாளன்)
மதனீ, வசனங்கள்: 78

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
55:1
55:1 اَلرَّحْمٰنُۙ‏
اَلرَّحْمٰنُۙ‏ விசாலமான கருணையாளன்
55:1. அளவற்ற அருளாளன்,
55:1. (நபியே! அல்லாஹ்தான்) அளவற்ற அருளாளன்,
55:1. அளவிலாக் கருணையுள்ள (இறை)வன்
55:1. அளவற்ற அருளாளன்.
55:2
55:2 عَلَّمَ الْقُرْاٰنَؕ‏
عَلَّمَ அவன் கற்பித்தான் الْقُرْاٰنَؕ‏ குர்ஆனை
55:2. இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.
55:2. (அவன்தான்) இந்த குர்ஆனை (உங்களுக்குக்) கற்றுக் கொடுத்தான்.
55:2. இந்தக் குர்ஆனைக் கற்றுத் தந்தான்.
55:2. குர் ஆனை அவன் கற்றுக் கொடுத்தான்.
55:3
55:3 خَلَقَ الْاِنْسَانَۙ‏
خَلَقَ படைத்தான் الْاِنْسَانَۙ‏ மனிதனை
55:3. அவனே மனிதனைப் படைத்தான்.
55:3. அவனே மனிதனைப் படைத்தான்.
55:3. அவனே மனிதனைப் படைத்தான்;
55:3. அவனே மனிதனைப் படைத்தான்.
55:4
55:4 عَلَّمَهُ الْبَيَانَ‏
عَلَّمَهُ அவனுக்குகற்பித்தான் الْبَيَانَ‏ தெளிவான விளக்கங்களை
55:4. அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
55:4. அவனே மனிதனுக்குப் பேசவும் கற்பித்தான்.
55:4. அவனுக்குப் பேசக் கற்றுக்கொடுத்தான்.
55:4. அவனே அவனுக்கு (அவன் பேசும் மொழியின்) விளக்கத்தைக் கற்றுக்கொடுத்தான்.
55:5
55:5 اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ‏
اَلشَّمْسُ சூரியனும் وَالْقَمَرُ சந்திரனும் بِحُسْبَانٍ‏ ஒரு கணக்கில் ஓடுகின்றன
55:5. சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
55:5. சூரியனும் சந்திரனும் (அவற்றுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே (செல்கின்றன).
55:5. சூரியனும், சந்திரனும் ஓர் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டிருக்கின்றன.
55:5. சூரியனும், சந்திரனும் கணக்கின் படி (செல்கின்றன).
55:6
55:6 وَّالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدٰنِ‏
وَّالنَّجْمُ செடிகொடிகளும் وَالشَّجَرُ மரங்களும் يَسْجُدٰنِ‏ சிரம் பணிகின்றன
55:6. (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.
55:6. செடிகள், (கொடிகள்,) மரங்கள் (ஆகிய அனைத்தும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டுச்) சிரம் பணிகின்றன.
55:6. மேலும், நட்சத்திரங்கள், மரங்கள் ஆகிய அனைத்தும் சிரம்பணிந்து கொண்டிருக்கின்றன.
55:6. செடி (கொடி)யும், மரமும் _அவ்விரண்டும் (அல்லாஹ்வுக்கு வழிபட்டுச்)சிரம் பணிகின்றன.
55:7
55:7 وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيْزَانَۙ‏
وَالسَّمَآءَ வானத்தை رَفَعَهَا அதை உயர்த்தினான் وَوَضَعَ இன்னும் அமைத்தான் الْمِيْزَانَۙ‏ தராசை
55:7. மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.
55:7. அவனே வானத்தை உயர்த்தினான். மேலும் (உங்கள் வியாபாரத்திற்காக) தராசை அமைத்தான். ஆகவே, நீங்கள் நிறுவையில் அநியாயம் செய்யாதீர்கள்.
55:7. அவன் வானத்தை உயர்த்தினான். தராசை நிலைநாட்டினான்,
55:7. இன்னும், வானத்தை_அதனை அவன் உயர்த்தி தராசை (நீதியை)யும் வைத்தான்.
55:8
55:8 اَلَّا تَطْغَوْا فِى الْمِيْزَانِ‏
اَلَّا تَطْغَوْا நீங்கள் எல்லை மீறாதீர்கள் فِى الْمِيْزَانِ‏ தராசில்
55:8. நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.
55:8. அவனே வானத்தை உயர்த்தினான். மேலும் (உங்கள் வியாபாரத்திற்காக) தராசை அமைத்தான். ஆகவே, நீங்கள் நிறுவையில் அநியாயம் செய்யாதீர்கள்.
55:8. நீங்கள் தராசில் நீதி தவறிவிடக்கூடாது என்பதற்காக!
55:8. நீங்கள் தராசில் (நிறுப்பதில்) வரம்பு மீறாதிருப்பதற்காக,
55:9
55:9 وَاَقِيْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيْزَانَ‏
وَاَقِيْمُوا நிறுத்துங்கள்! الْوَزْنَ நிறுவையை بِالْقِسْطِ நீதமாக وَلَا تُخْسِرُوا நஷ்டப்படுத்தாதீர்கள் الْمِيْزَانَ‏ தராசில்
55:9. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.
55:9. ஆகவே, நீங்கள் நீதமாக நிறுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்.
55:9. மேலும், நீதியுடன் மிகச் சரியாக நிறுங்கள்; தராசில் எடைக்குறைவு ஏற்படுத்தாதீர்கள்!
55:9. அன்றியும், நீங்கள் எடையை நீதியுடன் நிறுங்கள், தராசில் (அளவையில்) குறைத்தும் விடாதீர்கள்.
55:10
55:10 وَالْاَرْضَ وَضَعَهَا لِلْاَنَامِۙ‏
وَالْاَرْضَ பூமி وَضَعَهَا அதை அமைத்தான் لِلْاَنَامِۙ‏ படைப்பினங்களுக்காக
55:10. இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
55:10. படைப்புகள் வசித்திருக்க வசதியாகப் பூமியை அமைத்தான்.
55:10. பூமியை அவன் எல்லாப் படைப்புகளுக்காகவும் அமைத்தான்.
55:10. மேலும், பூமியை படைப்புகளுக்காக (வசித்திருக்க வசதியாக) அவனே அதனை (விரித்து) வைத்தான்.
55:11
55:11 فِيْهَا فَاكِهَةٌ  ۙ وَّالنَّخْلُ ذَاتُ الْاَكْمَامِ‌ ۖ‏
فِيْهَا அதில் இருக்கின்றன فَاكِهَةٌ  ۙ பழங்களும் وَّالنَّخْلُ பேரீச்ச மரங்களும் ذَاتُ الْاَكْمَامِ‌ ۖ‏ குலைகளுடைய
55:11. அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-
55:11. அதில் (பலவகை) கனிவர்க்கங்களும் (குலைகள் நிறைந்த) பாளைகளை உடைய பேரீச்சை மரங்களும் உற்பத்தியாகின்றன.
55:11. அதில் விதவிதமான சுவைமிகு கனிகள் ஏராளமாய் இருக்கின்றன. பேரீத்த மரங்களும் இருக்கின்றன. அவற்றின் பழங்கள் பாளைகளால் மூடப்பட்டு இருக்கின்றன.
55:11. அதில் (பலவகை)கனியும், (குலைகள் நிறைந்த) பாளைகளையுடைய பேரீச்சை மரங்களும் இருக்கின்றன.
55:12
55:12 وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ‌ۚ‏
وَالْحَبُّ தானியங்களும் ذُو الْعَصْفِ வைக்கோல் உடைய وَالرَّيْحَانُ‌ۚ‏ உணவுகளும்
55:12. தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.
55:12. உமியால் மூடப்பட்ட தானியங்களும், வாசனைப் புற்பூண்டுகளும் உண்டாகின்றன.
55:12. விதவிதமான தானியங்கள் உள்ளன. அவற்றில் உமியும் உண்டு; மணியும் உண்டு.
55:12. தொலியால் மூடப்பட்ட தானியங்களும், நறுமணமுள்ள செடியும் (இருக்கின்றன).
55:13
55:13 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:13. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:13. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:13. ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த அருட்கொடைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:13. ஆகவே, (மனு, ஜின்வர்க்கத்தினராகிய) நீங்கள் இரு வ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:14
55:14 خَلَقَ الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِۙ‏
خَلَقَ படைத்தான் الْاِنْسَانَ மனிதனை مِنْ صَلْصَالٍ சுடாத காய்ந்த களிமண்ணிலிருந்து كَالْفَخَّارِۙ‏ சுட்ட களிமண்ணைப் போல்
55:14. சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.
55:14. சுட்ட பாத்திரத்தைப் போல் (அதை தட்டும்போது ‘கன் கன்' என்று) சப்தமிடும் களிமண்ணால் அவன் (முதல்) மனிதரைப் படைத்தான்.
55:14. ஓடு போன்று, தட்டினால் ஓசை வரக்கூடிய பேதகமடைந்த களிமண்ணிலிருந்து மனிதனைப் படைத்தான்.
55:14. சுட்டெடுத்த மண் பாண்டத்தைப்போல் (தட்டினால்) சப்தமிடும் களிமண்ணால், அவன் (முதல்) மனிதரைப் படைத்தான்.
55:15
55:15 وَخَلَقَ الْجَآنَّ مِنْ مَّارِجٍ مِّنْ نَّارٍ‌ۚ‏
وَخَلَقَ இன்னும் படைத்தான் الْجَآنَّ ஜின்களை مِنْ مَّارِجٍ நடு ஜுவாலையில் இருந்து مِّنْ نَّارٍ‌ۚ‏ நெருப்பின்
55:15. நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.
55:15. நெருப்பின் கொழுந்தினால் அவன் ஜின்னைப் படைத்தான்.
55:15. மேலும், ஜின்களைத் தீப்பிழம்பிலிருந்து படைத்தான்.
55:15. இன்னும், நெருப்பின் ஜுவாலையினால் அவன் ஜின்னைப் படைத்தான்.
55:16
55:16 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:16. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:16. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:16. ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த ஆற்றல்மிக்க விநோதங்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:16. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:17
55:17 رَبُّ الْمَشْرِقَيْنِ وَ رَبُّ الْمَغْرِبَيْنِ‌ۚ‏
رَبُّ இறைவன் الْمَشْرِقَيْنِ இரு கிழக்கு திசைகளின் وَ رَبُّ இன்னும் இறைவன் الْمَغْرِبَيْنِ‌ۚ‏ இரு மேற்கு திசைகளின்
55:17. இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே; இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
55:17. (சூரியன், சந்திரன் இரண்டும்) உதிக்கும் இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன். மேலும், (அவை) மறைகின்ற இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன்.
55:17. இரு கிழக்குகள், இரு மேற்குகள் அனைத்தின் அதிபதியும் பரிபாலகனும் அவனே!
55:17. இரு கீழ்த்திசைகளுக்கும் (அவனே) இரட்சகன், இரு மேல்திசைகளுக்கும் (அவனே) இரட்சகன்.
55:18
55:18 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:18. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:18. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:18. ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த ஆற்றல்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:18. ஆகவே, நீங்கள் இருவ(குப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:19
55:19 مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيٰنِۙ‏
مَرَجَ அவன் விட்டுவிட்டான் الْبَحْرَيْنِ இரு கடல்களும் يَلْتَقِيٰنِۙ‏ சந்திப்பதற்கு
55:19. அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
55:19. இரு கடல்களையும் அவை சந்தித்துக் கொள்ளுமாறு அவனே இணைத்தான்.
55:19. அவன் இரு கடல்களையும் ஒன்றோடொன்று சங்கமிக்கச் செய்தான்;
55:19. இரு கடல்களை_அவை இரண்டும் ஒன்றோடுடொன்று சந்திக்க அவனே விட்டு விட்டான்.
55:20
55:20 بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيٰنِ‌ۚ‏
بَيْنَهُمَا அவ்விரண்டுக்கும் இடையில் بَرْزَخٌ தடை இருக்கிறது لَّا يَبْغِيٰنِ‌ۚ‏ அவை இரண்டும் எல்லையைக் கடக்காது
55:20. (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.
55:20. ஆயினும், அவை இரண்டுக்கிடையில் ஒரு தடுப்புண்டு. (அத்தடுப்பை) அவ்விரண்டும் மீறாது.
55:20. ஆயினும், அவ்விரண்டுக்குமிடையே ஒரு தடுப்பு இருக்கின்றது. அதனை அவை மீறுவதில்லை.
55:20. (ஆயினும்,) அவை இரண்டுக்கிடையில் ஒரு தடுப்புண்டு, (அத்தடுப்பானதை) அவ்விரண்டும் மீறிவிடாது.
55:21
55:21 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:21. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:21. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:21. ஓ, ஜின்களே! மனிதர்களே! நீங்கள் உங்கள் அதிபதியுடைய வல்லமையின் எந்த எந்த விநோதங்களைப் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:21. ஆகவே, (மனு, ஜின்களே!) நீங்கள் இருவ(குப்பா)ரும், உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:22
55:22 يَخْرُجُ مِنْهُمَا اللُّـؤْلُـؤُ وَالْمَرْجَانُ‌ۚ‏
يَخْرُجُ உற்பத்தியாகின்றன مِنْهُمَا அவை இரண்டிலிருந்தும் اللُّـؤْلُـؤُ முத்தும் وَالْمَرْجَانُ‌ۚ‏ பவளமும்
55:22. அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.
55:22. அவ்விரு கடல்களிலிருந்தே முத்து, பவளம் (போன்றவை) உற்பத்தியாகின்றன.
55:22. இந்தக் கடல்களிலிருந்து முத்துக்களும், பவளங்களும் வெளிப்படுகின்றன.
55:22. அவ்விரண்டிலிருந்தே முத்தும், பவளமும் வெளிப்படுகின்றன.
55:23
55:23 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:23. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  
55:23. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:23. ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியுடைய வல்லமையின் எந்த எந்த சிறப்புகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:23. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:24
55:24 وَلَهُ الْجَوَارِ الْمُنْشَئٰتُ فِى الْبَحْرِ كَالْاَعْلَامِ‌ۚ‏
وَلَهُ அவனுக்கே உரியன الْجَوَارِ கப்பல்கள் الْمُنْشَئٰتُ فِى الْبَحْرِ விரிக்கப்பட்ட/கடலில் كَالْاَعْلَامِ‌ۚ‏ மலைகளைப் போல்
55:24. அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.
55:24. கடலில் மலைகளைப் போல செல்லும் உயர்ந்த கப்பல்களும் அவனுக்குரியனவே.
55:24. மேலும், கடலில் மலைகளைப் போன்று உயர்ந்து நிற்கும் இந்தக் கப்பல்களும் அவனுக்கே உரியன.
55:24. மலைகளைப் போல் (அதன் சில பகுதிகள்) உயர்த்தப்பட்டதாக கடலில் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.
55:25
55:25 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:25. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:25. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:25. ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த பேருபகாரங்களை நீங்கள் பொய்யென மறுப்பீர்கள்?
55:25. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:26
55:26 كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ‌ ۚ‌ ۖ‏
كُلُّ எல்லோரும் مَنْ எவர்கள் عَلَيْهَا அதன்மீது فَانٍ‌ ۚ‌ ۖ‏ அழிபவர்கள்தான்
55:26. (பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -
55:26. பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தேபோகும்.
55:26. இந்தப் பூமியின் மேல் உள்ள ஒவ்வொரு பொருளும் அழியக்கூடியதே!
55:26. பூமியின் மேலுள்ள அனைவரும் அழிந்து போகக்கூடியவர்களே!
55:27
55:27 وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ‌ۚ‏
وَّيَبْقٰى நிலையாக நீடித்து இருக்கும் وَجْهُ முகம்தான் رَبِّكَ உமது இறைவனின் ذُو الْجَلٰلِ கம்பீரத்திற்கு(ம்) உரியவனாகிய وَالْاِكْرَامِ‌ۚ‏ கண்ணியத்திற்கும்
55:27. மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
55:27. மிக கண்ணியமும் பெருமையும் உடைய உமது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும்.
55:27. கம்பீரமும், கண்ணியமும் உடைய உம் அதிபதி மட்டுமே நிலைத்திருப்பவன் ஆவான்.
55:27. கண்ணியமும், பெருமையும் உடைய உமது இரட்சகனின் முகம் (அழியாது) நிலைத்திருக்கும்.
55:28
55:28 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:28. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:28. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:28. ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த சிறப்பம்சங்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:28. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:29
55:29 يَسْأَلُهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ كُلَّ يَوْمٍ هُوَ فِىْ شَاْنٍ‌ۚ‏
يَسْأَلُهٗ அவனிடமே யாசிக்கின்றன مَنْ فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவர்கள் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமியில் كُلَّ يَوْمٍ ஒவ்வொரு நாளும் هُوَ அவன்இருக்கின்றான் فِىْ شَاْنٍ‌ۚ‏ ஒரு காரியத்தில்
55:29. வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும்; (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர்; ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.
55:29. வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றன. (அவன் செயலற்றிருக்கவில்லை.) ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வேலையில் இருக்கிறான்.
55:29. பூமியிலும் வானங்களிலும் உள்ளவை அனைத்தும் தம் தேவைகளை அவனிடமே வேண்டிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கணமும், அவன் ஒரு புதிய மாட்சிமையின் நிலையில் இருக்கின்றான்.
55:29. வானங்கள் மற்றும் பூமியிலுள்ளோர் (தங்கள் தேவைகளை) அவனிடமே கேட்கின்றனர், ஒவ்வொரு நாளிலும் அவன் ஒவ்வொரு காரியத்திலும் இருப்பான்.
55:30
55:30 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:30. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:30. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:30. ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் பெரும் புகழ்மிக்க எந்த எந்தத் தன்மைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:30. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:31
55:31 سَنَفْرُغُ لَـكُمْ اَيُّهَ الثَّقَلٰنِ‌ۚ‏
سَنَفْرُغُ நாம் ஒதுங்குவோம் لَـكُمْ உங்களுக்காக اَيُّهَ الثَّقَلٰنِ‌ۚ‏ மனித, ஜின் வர்க்கத்தினரே
55:31. இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்.
55:31. (மனித, ஜின் ஆகிய) இரு வகுப்பார்களே! நிச்சயமாக அதிசீக்கிரத்தில் நாம் உங்களை கவனிக்க முன்வருவோம்.
55:31. பூமிக்குச் சுமையாய் இருப்பவர்களே! அதிவிரைவில் நாம் உங்களை விசாரணை செய்வதற்காக ஓய்வாகிவிடுவோம்.
55:31. (மனு, ஜின்களாகிய) இரு வகுப்பார்களே! நிச்சயமாக நாம் உங்க(ளின் கேள்வி கணக்குக)ளை கவனிக்க நாடுவோம்.
55:32
55:32 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:32. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:32. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:32. பின்னர் உங்கள் அதிபதியின் எந்த எந்த பேருபகாரங்களை நீங்கள் பொய்யென மறுப்பீர்கள் (என்பதை நாம் பார்த்துக் கொள்வோம்.)
55:32. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:33
55:33 يٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اِنِ اسْتَطَعْتُمْ اَنْ تَنْفُذُوْا مِنْ اَقْطَارِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ فَانْفُذُوْا‌ؕ لَا تَنْفُذُوْنَ اِلَّا بِسُلْطٰنٍ‌ۚ‏
يٰمَعْشَرَ சமூகத்தவர்களே! الْجِنِّ ஜின் وَالْاِنْسِ இன்னும் மனித اِنِ اسْتَطَعْتُمْ உங்களால் முடிந்தால் اَنْ تَنْفُذُوْا நீங்கள் விரண்டு ஓட مِنْ اَقْطَارِ கோடிகளில் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமியின் فَانْفُذُوْا‌ؕ ஓடுங்கள்! لَا تَنْفُذُوْنَ நீங்கள் ஓட முடியாது اِلَّا بِسُلْطٰنٍ‌ۚ‏ அதிகாரத்தை கொண்டே தவிர
55:33. “மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
55:33. மனித, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் இன்னும் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும், (அவற்றை ஆட்சி புரியக்கூடிய) மிகப் பெரும் பலத்தைக் கொண்டே தவிர நீங்கள் செல்ல முடியாது.
55:33. ஓ, ஜின் மற்றும் மனிதக்கூட்டங்களே! வானங்கள் மற்றும் பூமியின் எல்லைகளை விட்டு ஓடிச் செல்ல உங்களால் முடியுமானால் ஓடிப் பாருங்கள். உங்களால் ஓடிச் செல்லவே முடியாது; அதற்கெனப் பெரும் வலிமை வேண்டும்.
55:33. ஜின், மனு கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் மற்றும் பூமியின் ஓரங்களைக் கடந்து சென்றுவிட நீங்கள் ஆற்றல் பெற்றால் (அவ்வாறு) கடந்து சென்று விடுங்கள், ஆயினும், (மிகப்பெரும் வல்லமையாளனின்) வல்லமையுடனன்றி, நீங்கள் கடந்து செல்லமுடியாது.
55:34
55:34 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:34. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:34. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:34. உங்கள் இறைவனின் எந்த எந்த வல்லமைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:34. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:35
55:35 يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّنْ نَّارٍ ۙ وَّنُحَاسٌ فَلَا تَنْتَصِرٰنِ‌ۚ‏
يُرْسَلُ அனுப்பப்படும் عَلَيْكُمَا உங்கள் இருவர்மீதும் شُوَاظٌ ஜுவாலை(யும்) مِّنْ نَّارٍ ۙ நெருப்பின் وَّنُحَاسٌ உருக்கப்பட்ட செம்பும் فَلَا تَنْتَصِرٰنِ‌ۚ‏ நீங்கள் பழிதீர்க்க முடியாது
55:35. (மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
55:35. (நீங்கள் அவற்றை விட்டும் வெளிப்பட விரும்பிச் சென்றால்) உங்கள் மீது அக்னி ஜூவாலையும், உருக்கப்பட்ட செம்பும் எறியப்படும். அதை நீங்கள் தடுத்துக்கொள்ள முடியாது.
55:35. (அவ்விதம் நீங்கள் தப்பியோட முயன்றால்) உங்கள் மீது தீ ஜுவாலையும் புகையும் ஏவிவிடப்படும். அவற்றை எதிர்த்து நிற்க உங்களால் இயலாது.
55:35. (மறுமையில்,) உங்கள் இருவர்மீது நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும். அப்போது (அதனை நீங்கள் தடுத்துக் கொள்ள எவரிலிருந்தும்) நீங்கள் உதவி பெற்றுக் கொள்ளமாட்டீர்கள்.
55:36
55:36 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:36. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:36. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:36. (ஓ, ஜின்களே! மனிதர்களே!) உங்கள் இறைவனின் எந்த எந்த வல்லமைகளை நீங்கள் மறுப்பீர்கள்?
55:36. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:37
55:37 فَاِذَا انْشَقَّتِ السَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ‌ۚ‏
فَاِذَا انْشَقَّتِ பிளந்து விட்டால் السَّمَآءُ வானம் فَكَانَتْ ஆகிவிடும் وَرْدَةً ரோஜா நிறத்தில் كَالدِّهَانِ‌ۚ‏ காய்ந்த எண்ணையைப்போல்
55:37. எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.
55:37. (யுக முடிவுக்காக) வானம் பிளக்கும் சமயத்தில் அது (ஜைத்தூன்) எண்ணெய்யைப் போல் ரோஜா வர்ணமாகிவிடும்.
55:37. பின்னர், வானம் பிளந்து செந்தோலைப் போன்று சிவப்பாகிவிடும்போது (என்ன நிகழும்?)
55:37. ஆகவே, (இறுதிநாள் ஏற்படுவதற்காக) வானம்பிளந்துவிடும்போது, அது (உருகிஓடுவதில்) எண்ணெயைப்போல் (சிவப்பில்) ரோஜா நிறமாகிவிடும்.
55:38
55:38 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:38. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:38. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:38. ஓ, ஜின்களே! மனிதர்களே! அப்போது நீங்கள் உங்கள் இறைவனின் எந்த எந்த ஆற்றல்களைப் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:38. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:39
55:39 فَيَوْمَٮِٕذٍ لَّا يُسْــٴَــلُ عَنْ ذَنْۢبِهٖۤ اِنْسٌ وَّلَا جَآنٌّ‌ۚ‏
فَيَوْمَٮِٕذٍ அந்நாளில் لَّا يُسْــٴَــلُ விசாரிக்கப்பட மாட்டார்கள் عَنْ ذَنْۢبِهٖۤ தத்தமது குற்றங்களைப் பற்றி اِنْسٌ மனிதர்களோ وَّلَا جَآنٌّ‌ۚ‏ ஜின்களோ
55:39. எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.
55:39. அந்நாளில், மனிதனிடமும், ஜின்னிடமும் அவர்களின் பாவத்தைப் பற்றிக் கேட்கப்பட மாட்டாது. (அவர்களின் குறிப்பைக் கொண்டே அறிந்து கொள்ளப்படும்.).
55:39. அந்நாளில், எந்த மனிதனிடமும் எந்த ஜின்னிடமும் அவரவருடைய பாவத்தைப் பற்றி வினவ வேண்டிய அவசிய மிராது!
55:39. அந்நாளில், மனிதனோ, ஜின்னோ தம் பாவத்தைப்பற்றி (வாய் மொழியாக)க் கேட்கப்படமாட்டார்கள்.
55:40
55:40 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:40. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:40. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:40. நீங்கள் இரு கூட்டத்தாரும் உங்களுடைய இறைவனின் எந்த எந்த பேருபகாரங்களை மறுக்கிறீர்கள்? (எனத் தெரிந்துவிடும்).
55:40. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:41
55:41 يُعْرَفُ الْمُجْرِمُوْنَ بِسِيْمٰهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِىْ وَ الْاَقْدَامِ‌ۚ‏
يُعْرَفُ அறியப்பட்டு விடுவார்கள் الْمُجْرِمُوْنَ குற்றவாளிகள் بِسِيْمٰهُمْ அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு فَيُؤْخَذُ பிடிக்கப்படும் بِالنَّوَاصِىْ உச்சிமுடிகளை(யும்) وَ الْاَقْدَامِ‌ۚ‏ பாதங்களையும்
55:41. குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்
55:41. குற்றவாளிகள், அவர்களின் முகக் குறியைக் கொண்டே அறிந்து கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய உச்சி மயிரையும், பாதங்களையும் பிடிக்கப்(பட்டு பின்னர், நரகத்தில் தூக்கி எறியப்)படும்.
55:41. அங்கு குற்றவாளிகள் தங்களின் முகக்கூறுகளால் அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்கள். மேலும், அவர்களின் உச்சி முடிகளையும் கால்களையும் பிடித்து இழுக்கப்படும்.
55:41. குற்றவாளிகள் அவர்களின் (முக) அடையாளங்களைக்கொண்டு அறிந்து கொள்ளப்படுவார்கள், பின்னர், முன்நெற்றி முடிகளையும் கால்களையும் கொண்டு பிடி(த்திழு)க்கப்(பட்டு நரகத்தில் எறியப்)படும்.
55:42
55:42 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:42. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:42. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:42. (அவ்வேளை) உங்கள் இறைவனின் எந்த எந்த வல்லமைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:42. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:43
55:43 هٰذِهٖ جَهَنَّمُ الَّتِىْ يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُوْنَ‌ۘ‏
هٰذِهٖ جَهَنَّمُ இதுதான் நரகம் الَّتِىْ எது يُكَذِّبُ பொய்ப்பிக்கின்றனர் بِهَا அதை الْمُجْرِمُوْنَ‌ۘ‏ அந்த குற்றவாளிகள்
55:43. அன்று அவர்களிடம்: “இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்” (என்று கூறப்படும்).
55:43. இதுதான் குற்றவாளிகள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரகம்.
55:43. அப்பொழுது கூறப்படும்: ஆம்! இதுவேதான் அந்த நரகம்! இதனைத்தான் குற்றவாளிகள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்தார்கள்.
55:43. “குற்றவாளிகள் எதனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தார்களோ அத்தகைய நரகம் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
55:44
55:44 يَطُوْفُوْنَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيْمٍ اٰنٍ‌ۚ‏
يَطُوْفُوْنَ அவர்கள் சுற்றிவருவார்கள் بَيْنَهَا அதற்கு இடையிலும் وَبَيْنَ حَمِيْمٍ சுடு நீருக்கு இடையிலும் اٰنٍ‌ۚ‏ கடுமையாக கொதிக்கின்ற
55:44. அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
55:44. இதற்கும், கொதித்த தண்ணீருக்கும் இடையில் (இரு தலைக்கொள்ளியில் சிக்கிய எறும்பைப் போல் அவர்கள்) சுற்றித் திரிவார்கள்.
55:44. அதே நரகத்துக்கும், மிகக் கடுமையாக கொதிக்கும் நீருக்கும் இடையே அவர்கள் சுற்றிக் கொண்டிருப் பார்கள்.
55:44. அதற்கிடையிலும் கடினமாகக் கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்குமிடையிலும் அவர்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
55:45
55:45 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:45. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  
55:45. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:45. பின்னர், உங்கள் இறைவனின் எந்த எந்த வலிமைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:45. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:46
55:46 وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِ‌ۚ‏
وَلِمَنْ خَافَ பயந்தவருக்கு مَقَامَ தான் நிற்பதை رَبِّهٖ தன் இறைவனுக்கு முன் جَنَّتٰنِ‌ۚ‏ இரண்டு சொர்க்கங்கள்
55:46. தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.
55:46. எவன் தன் இறைவனின் சந்திப்பைப் பற்றிப் பயப்படுகின்றானோ, அவனுக்குச் (சொர்க்கத்தில்) இரு சோலைகள் உண்டு.
55:46. மேலும், தன் அதிபதியின் திருமுன் நிற்க வேண்டியது குறித்து அச்சம் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இரண்டு சுவனங்கள் உள்ளன.
55:46. தன் இரட்சகனின் சன்னிதானத்தை பயந்தவருக்கு(ச்சுவனபதியில்) இரு சோலைகளுண்டு.
55:47
55:47 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۙ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِۙ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:47. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:47. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:47. உங்கள் இறைவனின் எந்த எந்த வெகு மதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:47. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:48
55:48 ذَوَاتَاۤ اَفْنَانٍ‌ۚ‏
ذَوَاتَاۤ அந்த இரண்டு சொர்க்கங்களும் اَفْنَانٍ‌ۚ‏ பல நிறங்களுடையவையாகும்
55:48. அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.
55:48. அவ்விரண்டும், கிளைகள் அடர்ந்து நிறைந்த மரங்களை உடைய சோலைகள்.
55:48. அவையிரண்டும் பசுமையான கிளைகள் நிறைந்தவை!
55:48. (இவ்விரண்டு சோலைகளும்) அடர்ந்த கிளைகளுடையவையாகும்.
55:49
55:49 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:49. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:49. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:49. உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:49. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:50
55:50 فِيْهِمَا عَيْنٰنِ تَجْرِيٰنِ‌ۚ‏
فِيْهِمَا அவை இரண்டிலும் عَيْنٰنِ இரண்டு ஊற்றுகள் تَجْرِيٰنِ‌ۚ‏ ஓடும்
55:50. அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.
55:50. அவ்விரண்டிலும் இரு ஊற்றுக்கள் ஓடிக் கொண்டே இருக்கும்.
55:50. அந்த இரண்டு சுவனங்களிலும் இரண்டு ஊற்றுகள் ஓடிக்கொண்டிருக்கும்.
55:50. அவ்விரண்டிலும் இரு (நீர்) ஊற்றுகள் (உதித்து) ஓடிக்கொண்டிருக்கும்.
55:51
55:51 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:51. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:51. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:51. உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:51. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:52
55:52 فِيْهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجٰنِ‌ۚ‏
فِيْهِمَا அவை இரண்டிலும் مِنْ كُلِّ فَاكِهَةٍ எல்லாக் கனிவர்க்கங்களில் இருந்தும் زَوْجٰنِ‌ۚ‏ இரண்டு வகைகள்
55:52. அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.
55:52. அவ்விரண்டிலும் ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் (உலர்ந்தும், பச்சையுமாக) இரு வகை உண்டு.
55:52. அந்த இரண்டு சுவனங்களில் இருக்கும் ஒவ்வொரு பழமும் இரு வகையானவை.
55:52. அவ்விரண்டிலும் ஒவ்வொரு கனி வர்க்கத்திலும் இரு வகைகள் உண்டு.
55:53
55:53 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:53. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:53. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:53. உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:53. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:54
55:54 مُتَّكِـــِٕيْنَ عَلٰى فُرُشٍۢ بَطَآٮِٕنُهَا مِنْ اِسْتَبْرَقٍ‌ؕ وَجَنَی الْجَـنَّتَيْنِ دَانٍ‌ۚ‏
مُتَّكِـــِٕيْنَ சாய்ந்தவர்களாக இருப்பார்கள் عَلٰى فُرُشٍۢ விரிப்புகளில் بَطَآٮِٕنُهَا அவற்றின் உள்பக்கங்கள் مِنْ اِسْتَبْرَقٍ‌ؕ மொத்தமான பட்டினால் ஆனதாக இருக்கும் وَجَنَی இன்னும் கனிகளும் الْجَـنَّتَيْنِ இரண்டு சொர்க்கங்களின் دَانٍ‌ۚ‏ நெருக்கமாக இருக்கும்
55:54. அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள் பாகங்கள் “இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.
55:54. 'இஸ்தப்ரக்' என்னும் பட்டு விரிப்பின் மீது (உள்ள பஞ்சணைகளில்) சாய்ந்தவர்களாய் இருப்பார்கள். அவ்விரு சோலைகளில் கனிவர்க்கங்கள் அடர்ந்திருக்கும்.
55:54. சுவனவாசிகள் விரிப்புகளில் தலையணைகளை வைத்து சாய்ந்திருப்பார்கள். அவற்றின் உட்பாகங்கள் அடர்த்தியான பட்டுத்துணியால் ஆனவையாகும். மேலும், இரு தோட்டங்களின் கிளைகள் பழங்களால் நிரம்பித் தாழ்ந்துவிட்டிருக்கும்.
55:54. அவர்கள் (பட்டு) விரிப்புகளின் மீது (உள்ள பஞ்சனைகளில்) சாய்ந்தவர்களாக (இருப்பார்கள்) அவற்றின் உட்பகுதிகள் ‘இஸ்தப்ரக்’ (எனும் கனத்த) பட்டினாலுள்ளவையாக இருக்கும், அவ்விரு சோலைகளில் பழங்கள் (பறிக்க) நெருங்கியிருக்கும்.
55:55
55:55 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:55. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:55. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:55. உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:55. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்கள் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:56
55:56 فِيْهِنَّ قٰصِرٰتُ الطَّرْفِۙ لَمْ يَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ‌ۚ‏
فِيْهِنَّ அவற்றில் قٰصِرٰتُ தாழ்த்திய பெண்கள் الطَّرْفِۙ لَمْ يَطْمِثْهُنَّ பார்வைகளை/ அவர்களைதொட்டு இருக்க மாட்டார்கள் اِنْسٌ எந்த ஒரு மனிதரும் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் وَلَا جَآنٌّ‌ۚ‏ எந்த ஒரு ஜின்னும்
55:56. அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
55:56. அவற்றில், கீழ் நோக்கிய பார்வையையுடைய (அழகிய) கன்னிகைகளும் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர், அவர்களை மனிதர்களோ ஜின்களோ தீண்டியதில்லை.
55:56. இந்த அருட்கொடைகளுக்கு மத்தியில் நாணும் விழிகளைக் கொண்ட பெண்களும் இருப்பார்கள்; இந்தச் சுவனவாசிகளுக்கு முன்னர் எந்த மனிதனும், ஜின்னும் அவர்களைத் தொட்டுக்கூடப் பார்த் திருக்க மாட்டார்கள்.
55:56. அவற்றில் கீழ் நோக்கிய பார்வைகளுயுடைய (அழகிய) கன்னிகைகளும் இருப்பார்கள், இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
55:57
55:57 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۚ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ ۚ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:57. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:57. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:57. உங்கள் இறைவனின் எந்த எந்த வெகு மதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:57. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:58
55:58 كَاَنَّهُنَّ الْيَاقُوْتُ وَالْمَرْجَانُ‌ۚ‏
كَاَنَّهُنَّ போலும்/அவர்கள் இருப்பார்கள் الْيَاقُوْتُ மாணிக்கத்தை وَالْمَرْجَانُ‌ۚ‏ பவளத்தை
55:58. அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.
55:58. அவர்கள், சிகப்பு மாணிக்கத்தைப்போலும் பவளங்களைப்போலும் இருப்பார்கள்.
55:58. அந்தப் பெண்கள் மிக்க அழகானவர்கள், மாணிக்கத்தையும் முத்தையும் போன்று!
55:58. (அழகிகளான) அவர்கள் (ஒளியில்) வெண்முகத்தையும், (பளபளப்பில்) பவளத்தையும் போன்று இருப்பார்கள்.
55:59
55:59 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:59. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:59. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:59. உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:59. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்கள் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:60
55:60 هَلْ جَزَآءُ الْاِحْسَانِ اِلَّا الْاِحْسَانُ‌ۚ‏
هَلْ جَزَآءُ கூலி உண்டா? الْاِحْسَانِ நன்மைக்கு اِلَّا தவிர الْاِحْسَانُ‌ۚ‏ நன்மையைத்
55:60. நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
55:60. (உங்களின்) நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
55:60. நன்மையின் கூலி நன்மையைத் தவிர வேறெதுவாய் இருக்க முடியும்?
55:60. (உலகத்தில் செய்த) நன்மைக்கு (மறுமையில்) நன்மையைத் தவிர (வேறு கூலி) உண்டா?
55:61
55:61 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:61. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:61. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:61. பின்னர் ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் பெரும் புகழுக்குரிய எந்த எந்தத் தன்மைகளை நீங்கள் பொய்யென மறுப்பீர்கள்?
55:61. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:62
55:62 وَمِنْ دُوْنِهِمَا جَنَّتٰنِ‌ۚ‏
وَمِنْ دُوْنِهِمَا அந்த இரண்டையும் விட தகுதியால் குறைந்த جَنَّتٰنِ ‌ۚ‏ இரண்டு சொர்க்கங்களும் உண்டு
55:62. மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.
55:62. இவ்விரண்டைத் தவிர, (சொர்க்கத்தில் அவர்களுக்கு) மேலும் இரு சோலைகளுண்டு.
55:62. அந்த இரு தோட்டங்களைத் தவிர வேறு இரண்டு தோட்டங்களும் இருக்கும்.
55:62. அவ்விரண்டுமின்றி (சுவனபதியில் அவர்களுக்கு வேறு) இரு சோலைகளுமுண்டு.
55:63
55:63 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۙ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِۙ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:63. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:63. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:63. உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:63. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:64
55:64 مُدْهَآمَّتٰنِ‌ۚ‏
مُدْهَآمَّتٰنِ‌ۚ‏ அவை இரண்டும் கருமையாக இருக்கும்
55:64. அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.
55:64. அவ்விரண்டும், கரும் பச்சை நிறமுடையன.
55:64. அடர்த்தியான, பசுமையான சுவனங்கள்!
55:64. அவ்விரண்டும் கரும்பச்சையான நிறமுடையனவாகும்.
55:65
55:65 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‌ۚ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:65. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:65. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:65. உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:65. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:66
55:66 فِيْهِمَا عَيْنٰنِ نَضَّاخَتٰنِ‌ۚ‏
فِيْهِمَا அவை இரண்டிலும் இருக்கும் عَيْنٰنِ இரு ஊற்றுகள் نَضَّاخَتٰنِ‌ۚ‏ பொங்கி எழக்கூடிய
55:66. அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.
55:66. அவ்விரண்டிலும், தொடர்ந்து பொங்கிக்கொண்டே இருக்கின்ற இரு ஊற்றுக்கண்கள் உண்டு.
55:66. அவ்விரு தோட்டங்களிலும் இரு ஊற்றுகள் நீர்த்தாரைகளைப் போன்று பீறிட்டுப் பொங்கிக் கொண்டிருக்கும்.
55:66. அவ்விரண்டிலும், பொங்கிக்கொண்டிருக்கும் இரு ஊற்றுகள் இருக்கும்.
55:67
55:67 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:67. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:67. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:67. உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:67. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:68
55:68 فِيْهِمَا فَاكِهَةٌ وَّنَخْلٌ وَّرُمَّانٌ‌ۚ‏
فِيْهِمَا அவை இரண்டிலும் فَاكِهَةٌ பழங்களும் وَّنَخْلٌ பேரித்த மரங்களும் وَّرُمَّانٌ‌ۚ‏ மாதுளை மரங்களும்
55:68. அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.
55:68. அவ்விரண்டிலும், (பலவகை) கனிகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.
55:68. அவ் விரண்டிலும் ஏராளமான கனிகளும், பேரீச்சம் பழங்களும், மாதுளங்கனிகளும் இருக்கும்.
55:68. அவ்விரண்டிலும் (பற்பல) கனியும், பேரீச்சைகளும், மாதுளையும் உண்டு.
55:69
55:69 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‌ۚ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:69. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:69. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:69. உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:69. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:70
55:70 فِيْهِنَّ خَيْرٰتٌ حِسَانٌ‌ۚ‏
فِيْهِنَّ அவற்றில் خَيْرٰتٌ சிறந்த பெண்கள் حِسَانٌ‌ۚ‏ பேரழகிகள்
55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.
55:70. அவற்றில், சிறந்த குணமுடைய அழகிகள் உள்ளனர்.
55:70. இந்த அருட்கொடைகளுடன் நன்னடத்தையும், பேரழகும் கொண்ட மனைவிகளும் இருப்பர்.
55:70. அவைகளில், அழகான முகங்களுடைய, நற்குணமுள்ள கன்னிகைகள் இருப்பர்.
55:71
55:71 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‌ۚ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:71. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:71. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:71. உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:71. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:72
55:72 حُوْرٌ مَّقْصُوْرٰتٌ فِى الْخِيَامِ‌ۚ‏
حُوْرٌ வெள்ளைநிற அழகிகள் مَّقْصُوْرٰتٌ ஒதுக்கப்பட்டவர்கள் فِى الْخِيَامِ‌ۚ‏ இல்லங்களில்
55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.
55:72. (அவர்கள்தான்) ‘ஹூர்' (என்னும் வெந்நிற) கண்ணழகிகள் (முத்து மற்றும் பவளங்களால் ஆன) கூடாரங்களில் வசித்திருப்பார்கள்.
55:72. கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட அழகிய பெண்களும் (ஹூரிகள்) இருப்பர்.
55:72. (அவர்கள் தாம் முத்துக்களினாலான) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருக்கக் கூடிய “ஹூர்” (என்னும் கன்னிகை)கள்.
55:73
55:73 ‌فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‌ۚ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:73. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:73. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:73. உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:73. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:74
55:74 لَمْ يَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ‌ۚ‏
لَمْ يَطْمِثْهُنَّ அவர்களைத்தொட்டு இருக்க மாட்டார்கள் اِنْسٌ எந்த ஒரு மனிதரும் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் وَلَا جَآنٌّ‌ۚ‏ எந்த ஒரு ஜின்னும்
55:74. அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
55:74. இவர்களுக்கு முன்னர் அப்பெண்களை, மனிதர்களோ ஜின்களோ தீண்டியதில்லை.
55:74. இந்தச் சுவனவாசிகளுக்கு முன்னர் எந்த மனிதனும் ஜின்னும் அந்தப் பெண்களைத் தொட்டுக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
55:74. இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
55:75
55:75 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‌ۚ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:75. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:75. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:75. உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:75. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:76
55:76 مُتَّكِــِٕيْنَ عَلٰى رَفْرَفٍ خُضْرٍ وَّعَبْقَرِىٍّ حِسَانٍ‌ۚ‏
مُتَّكِــِٕيْنَ சாய்ந்தவர்களாக இருப்பார்கள் عَلٰى رَفْرَفٍ தலையணைகளின்மீது خُضْرٍ பச்சை நிற وَّعَبْقَرِىٍّ விரிப்புகளின் மீதும் حِسَانٍ‌ۚ‏ மிக அழகான
55:76. (அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
55:76. (அவர்களின் கணவர்கள்) சிறந்த பசுமையான, இரத்தினக் கம்பளங்களில் திண்டு தலையணைகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
55:76. அந்தச் சுவனவாசிகள், பச்சைக் கம்பளங்களிலும், விலைமதிப்பற்ற அழகிய விரிப்புகளிலும் தலையணைகளை வைத்து சாய்ந்திருப்பார்கள்.
55:76. (சுவன வாசிகள்) பசுமையான இரத்தினக் கம்பளங்கள், இன்னும் அழகிய விரிப்புகள் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
55:77
55:77 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:77. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:77. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:77. உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:77. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்கள் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
55:78
55:78 تَبٰـرَكَ اسْمُ رَبِّكَ ذِى الْجَـلٰلِ وَالْاِكْرَامِ‏
تَبٰـرَكَ மிக அருள் நிறைந்தது اسْمُ பெயர் رَبِّكَ உமது இறைவனின் ذِى الْجَـلٰلِ கம்பீரத்திற்கு(ம்) உரியவனாகிய وَالْاِكْرَامِ‏ கண்ணியத்திற்கும்
55:78. மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.
55:78. (நபியே!) மிக்க சிறப்பும், கண்ணியமும் உள்ள உமது இறைவனின் திருப்பெயர் மிக பாக்கியமுடையது.
55:78. பெரும் அருட்பாக்கியங்கள் கொண்டதாக இருக்கின்றது, மாட்சிமையும் கண்ணியமும் மிக்க உம் இறைவனின் திருப்பெயர்!
55:78. (நபியே!) மிக்க கீர்த்தியும், கண்ணியமும் உடைய உமது இரட்சகனின் பெயர் மிக்க பாக்கியமுடையது.