63. ஸூரத்துல் முனாஃபிஃகூன் (நயவஞ்சகர்கள்)
மதனீ, வசனங்கள்: 11

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
63:1
63:1 اِذَا جَآءَكَ الْمُنٰفِقُوْنَ قَالُوْا نَشْهَدُ اِنَّكَ لَرَسُوْلُ اللّٰهِ ‌ۘ وَاللّٰهُ يَعْلَمُ اِنَّكَ لَرَسُوْلُهٗ ؕ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّ الْمُنٰفِقِيْنَ لَـكٰذِبُوْنَ‌ ۚ‏
اِذَا جَآءَكَ உம்மிடம் வந்தால் الْمُنٰفِقُوْنَ நயவஞ்சகர்கள் قَالُوْا கூறுவார்கள் نَشْهَدُ நாங்கள் சாட்சி பகருகிறோம் اِنَّكَ நிச்சயமாக நீர் لَرَسُوْلُ தூதர்தான் என்று اللّٰهِ ۘ அல்லாஹ்வின் وَاللّٰهُ அல்லாஹ் يَعْلَمُ நன்கறிவான் اِنَّكَ நிச்சயமாக நீர் لَرَسُوْلُهٗ ؕ அவனது தூதர்தான் என்று وَاللّٰهُ அல்லாஹ் يَشْهَدُ சாட்சி பகருகின்றான் اِنَّ நிச்சயமாக الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்கள் لَـكٰذِبُوْنَ‌ ۚ‏ பொய்யர்கள்தான்
63:1. “(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, “நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்” என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்” என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், “நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்” என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்” என்பதாகச் சாட்சி சொல்கிறான்.
63:1. (நபியே! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்து, ‘‘நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர்தான் என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்'' என்பதாகக் கூறுகின்றனர். நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். எனினும், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயமாகப் பொய்யையே கூறுகின்றனர் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகிறான்.
63:1. (நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது கூறுகின்றனர்: “திண்ணமாக நீர் அல்லாஹ்வின் தூதராவீர் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம்.” திண்ணமாக நீர் அவனுடைய தூதர்தாம் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயம் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சியம் அளிக்கின்றான்.
63:1. (நபியே! வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் உம்மிடம் வந்தால், “நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர் தான் என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்பதாகக் கூறுகின்றனர், இன்னும், நிச்சயமாக நீர் அவனுடைய தூதர் தான் என்பதை அல்லாஹ் நன்கறிவான். இன்னும் நிச்சயமாக, இந்த முனாஃபிக்குகள் பொய்யர்களாவர் என்று அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்.
63:2
63:2 اِتَّخَذُوْۤا اَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
اِتَّخَذُوْۤا ஆக்கிக் கொண்டனர் اَيْمَانَهُمْ தங்கள் சத்தியங்களை جُنَّةً கேடயமாக فَصَدُّوْا தடுத்தனர் عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் سَآءَ மிகக் கெட்டுவிட்டன مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்துகொண்டிருந்தவை
63:2. இவர்கள் தங்களுடைய (பொய்ச்)சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர்; நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது.
63:2. (தவிர, இவர்கள்) தங்கள் (பொய்) சத்தியங்களை ஒரு கேடயமாக வைத்துக் கொண்டு (மக்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து தடுக்கின்றனர். நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியம் மகா கெட்டது.
63:2. இவர்கள் தங்களுடைய ‘சத்தியங்களை’க் கேடயமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்விதமாக அல்லாஹ்வின் வழியிலிருந்து தாங்களும் விலகி, பிறமக்களையும் அதில் (செல்லவிடாமல்) தடுக்கின்றார்கள். இவர்கள் செய்து கொண்டிருப்பவை எத்துணை மோசமான செயல்!
63:2. “இவர்கள் தங்களுடைய (பொய்ச்) சத்தியங்களை ஒரு கேடயமாக எடுத்துக்கொண்டு அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (அதில் செல்வோரைத்) தடுக்கின்றனர், நிச்சயமாக அவர்கள்_அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகக் கெட்டது.
63:3
63:3 ذٰلِكَ بِاَنَّهُمْ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا فَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُوْنَ‏
ذٰلِكَ அதற்கு காரணம் بِاَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் ثُمَّ பிறகு كَفَرُوْا நிராகரித்தனர் فَطُبِعَ ஆகவே, முத்திரை இடப்பட்டுவிட்டது عَلٰى قُلُوْبِهِمْ அவர்களின் உள்ளங்கள் மீது فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يَفْقَهُوْنَ‏ புரிய மாட்டார்கள்
63:3. இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும்; ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது; எனவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
63:3. இதற்குரிய காரணமாவது: இவர்கள் ‘‘நம்பிக்கைக் கொண்டோம்'' என்று (வாயினால்) கூறிப் பின்னர் அதை நிராகரித்துவிட்டது தான் (காரணம்). ஆகவே, அவர்களுடைய உள்ளங்களில் முத்திரையிடப்பட்டு விட்டது. ஆகவே, (எதையும்) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.
63:3. இவை அனைத்திற்கும் காரணம், இவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் நிராகரித்துவிட்டதுதான். இதனால் அவர்களின் உள்ளங்களின் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது. இனி இவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை.
63:3. அது, நிச்சயமாக அவர்கள் விசுவாசங்கொண்டு, பின்னர் அவர்கள் (அதனை) நிராகரித்துவிட்டார்கள் என்பதினாலேயாகும், எனவே, அவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது, ஆகவே (ஈமானின் உண்மை நிலையை) அவர்கள் விளங்கிக்கொள்ளமாட்டார்கள்.
63:4
63:4 وَاِذَا رَاَيْتَهُمْ تُعْجِبُكَ اَجْسَامُهُمْ‌ ؕ وَاِنْ يَّقُوْلُوْا تَسْمَعْ لِقَوْلِهِمْ‌ ؕ كَاَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ   ‌ؕ يَحْسَبُوْنَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ‌ ؕ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ‌ ؕ قَاتَلَهُمُ اللّٰهُ‌ اَنّٰى يُـؤْفَكُوْنَ‏
وَاِذَا رَاَيْتَهُمْ நீர் அவர்களைப் பார்த்தால் تُعْجِبُكَ உம்மைக் கவரும் اَجْسَامُهُمْ‌ ؕ அவர்களின் உடல்கள் وَاِنْ يَّقُوْلُوْا அவர்கள் கூறினால் تَسْمَعْ நீர் செவியுறுவீர் لِقَوْلِهِمْ‌ ؕ அவர்களின் கூற்றை كَاَنَّهُمْ خُشُبٌ அவர்கள் மரப்பலகைகளைப் போல் مُّسَنَّدَةٌ   ؕ சாய்த்து வைக்கப்பட்ட يَحْسَبُوْنَ எண்ணுவார்கள் كُلَّ ஒவ்வொரு صَيْحَةٍ சப்தத்தையும் عَلَيْهِمْ‌ ؕ தங்களுக்கு பாதகமாகவே هُمُ அவர்கள்தான் الْعَدُوُّ எதிரிகள் فَاحْذَرْهُمْ‌ ؕ ஆகவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக! قَاتَلَهُمُ அவர்களை அழிப்பான் اللّٰهُ‌ அல்லாஹ் اَنّٰى எவ்வாறு يُـؤْفَكُوْنَ‏ அவர்கள் திருப்பப்படுகின்றார்கள்
63:4. இவர்களை நீர் பார்த்தால், இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால், இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர்; சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர்; ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள்; இவர்கள்தாம் (உம்) பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?
63:4. (நபியே!) அவர்களை நீர் பார்த்தால், அவர்களுடைய தேகங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். அவர்கள் பேச ஆரம்பித்தால், அவர்களுடைய வார்த்தையையே நீங்கள் கேட்கும்படி ஏற்படும். (நீர் பேசுவதற்கு வாய்ப்பளிக்காது பேசுவார்கள்.) சுவற்றில் சாய்ந்த மரங்களைப்போல் அவர்கள் (அசையாது) இருப்பார்கள். (அவர்கள் செவியுறும்) எந்தச் சப்தத்தையும் தங்களுக்கு விரோதமாகப் பேசுவதாகவே எண்ணிக் கொள்வார்கள். (நபியே!) இவர்கள்தான் (உமது உண்மையான) எதிரிகள். ஆகவே, இவர்களைப் பற்றி நீர் எச்சரிக்கையாக இருந்து கொள்வீராக. அல்லாஹ் அவர்களை அழித்துவிடுவான். (சத்தியத்திலிருந்து) அவர்கள் எங்கு செல்கின்றனர்?
63:4. நீர் இவர்களைப் பார்த்தால் இவர்களின் உடலமைப்பு உமக்குக் கம்பீரமாகத் தெரியும். இவர்கள் பேச ஆரம்பித்தால் நீர் இவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்துவிடுவீர். ஆனால், உண்மையில் இவர்கள், சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்கள். இவர்கள் ஒவ்வோர் உரத்த ஓசையையும் தங்களுக்கு எதிரானதாய்க் கருதுகின்றனர். இவர்கள்தாம் கடும் பகைவர்களாவர். இவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இரும். அல்லாஹ் இவர்களை நாசமாக்கட்டும்! இவர்கள் எங்கே திசைமாறிச் சென்று கொண்டிருக்கின்றார்கள்?
63:4. மேலும், (நபியே!) அவர்களை நீர் பார்த்தால், அவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை, ஆச்சரியத்திலாழ்த்தும், அவர்கள் பேசினால் அவர்களுடைய சொல்லையே நீர் கேட்டுக்கொண்டிருப்பீர், (உமக்குச் செவியேற்காத) அவர்கள் (சுவரின் மீது) சாய்த்துவைக்கப்பட்ட மரக்கட்டைகளைப் போல் இருக்கின்றனர், மேலும், (அவர்கள் செவியேற்கும்) ஒவ்வொரு சப்தத்தையும் தங்களுக்கு விரோதமானது என எண்ணிக் கொள்வார்கள், (நபியே!) அவர்கள் தாம் (உம்முடைய கடுமையான) பகைவர்கள், ஆகவே, அவர்களைப் பற்றி நீர் எச்சரிக்கையாக இருந்துகொள்வீராக! அல்லாஹ் அவர்களை அழித்துவிடுவானாக! (உண்மையை ஏற்பதிலிருந்து) அவர்கள் எங்கு திருப்பப்படுகின்றனர்?
63:5
63:5 وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَـكُمْ رَسُوْلُ اللّٰهِ لَـوَّوْا رُءُوْسَهُمْ وَرَاَيْتَهُمْ يَصُدُّوْنَ وَهُمْ مُّسْتَكْبِرُوْنَ‏
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمْ அவர்களிடம் تَعَالَوْا வாருங்கள் يَسْتَغْفِرْ மன்னிப்புத் தேடுவார் لَـكُمْ உங்களுக்காக رَسُوْلُ தூதர் اللّٰهِ அல்லாஹ்வின் لَـوَّوْا வேகமாக அசைக்கிறார்கள் رُءُوْسَهُمْ தங்கள் தலைகளை وَرَاَيْتَهُمْ இன்னும் அவர்களை நீர் பார்ப்பீர் يَصُدُّوْنَ புறக்கணிப்பவர்களாகவே وَهُمْ அவர்கள் مُّسْتَكْبِرُوْنَ‏ கர்வம் கொள்பவர்கள்
63:5. இன்னும், “வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (இறைவனிடம்) பாவமன்னிப்புத் தேடுவார் என்று இவர்களிடம் கூறப்பட்டால், இவர்கள் தங்கள் தலைகளைச் சாய்த்துக் கொண்டு, பெருமை கொண்டவர்களாகத் திருப்பிச் செல்வதை நீர் காண்பீர்.
63:5. அவர்களை நோக்கி, ‘‘வாருங்கள்; அல்லாஹ்வுடைய தூதர் உங்கள் குற்றங்களை மன்னிக்க, (இறைவனிடம்) கோருவார்'' என்று கூறப்பட்டால், அவர்கள் தங்கள் தலைகளை அசைத்துக் கர்வம்கொண்டு (உங்களைப் பார்க்காதவர்களைப் போல்) திரும்பிச் செல்வதை நீர் காண்பீர்.
63:5. “வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரி இறைஞ்சுவார்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், தங்களுடைய தலைகளைத் திருப்பிக் கொள்கின்றார்கள். மேலும், இவர்கள் பெரும் ஆணவத்தால் வராமல் நின்றுவிடுவதை நீர் காண்பீர்.
63:5. மேலும், “வாருங்கள்: அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (உங்களுடைய இரட்சகனிடம் பாவ) மன்னிப்பைத் தேடுவார் என்று அவர்களிடம் கூறப்பட்டால், தங்கள் தலைகளை அவர்கள் சாய்த்துக்கொள்கின்றனர், இன்னும் அவர்கள் பெருமை கொண்டோராக (எதன்பால் அழைக்கப்பட்டார்களோ) அதைவிட்டும் புறகணித்து(த்திரும்பிச்) செல்வதை (நபியே!) நீர் காண்பீர்.
63:6
63:6 سَوَآءٌ عَلَيْهِمْ اَسْتَغْفَرْتَ لَهُمْ اَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْؕ لَنْ يَّغْفِرَ اللّٰهُ لَهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ‏
سَوَآءٌ சமம்தான் عَلَيْهِمْ அவர்களுக்கு اَسْتَغْفَرْتَ நீர் பாவமன்னிப்புத் தேடினாலும் لَهُمْ அவர்களுக்காக اَمْ لَمْ تَسْتَغْفِرْ நீர் பாவமன்னிப்புத் தேடவில்லை என்றாலும் لَهُمْؕ அவர்களுக்காக لَنْ يَّغْفِرَ மன்னிக்கவே மாட்டான் اللّٰهُ அல்லாஹ் لَهُمْ‌ؕ அவர்களை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الْفٰسِقِيْنَ‏ பாவிகளான
63:6. அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும்; அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் - பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
63:6. (நபியே!) நீர் அவர்களுக்குப் பிழைபொறுக்கத் தேடுவதும் அல்லது, அவர்களுக்குப் பிழை பொறுக்கத் தேடாதிருப்பதும் அவர்களுக்குச் சமமே. அல்லாஹ் அவர்களுக்குப் பிழை பொறுக்கவே மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் பாவம் செய்யும் (இத்தகைய) மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.
63:6. (நபியே!) நீர் இவர்களுக்குப் பாவமன்னிப்புக்காக இறைஞ்சினாலும், இறைஞ்சாவிட்டாலும் இவர்களைப் பொறுத்து சமம்தான். அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான். பாவிகளான மக்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் நேர்வழி காட்டுவதில்லை!
63:6. (நபியே!) அவர்களுக்காக நீர் மன்னிப்புத் தேடுவதும் அல்லது அவர்களுக்காக நீர் மன்னிப்புத் தேடாமலிருப்பதும் அவர்களுக்குச் சமமேயாகும், அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான், நிச்சயமாக அல்லாஹ், பாவிகளான சமூகத்தாரை நேர் வழியில் செலுத்தமாட்டான்.
63:7
63:7 هُمُ الَّذِيْنَ يَقُوْلُوْنَ لَا تُنْفِقُوْا عَلٰى مَنْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ حَتّٰى يَنْفَضُّوْا‌ؕ وَلِلّٰهِ خَزَآٮِٕنُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلٰـكِنَّ الْمُنٰفِقِيْنَ لَا يَفْقَهُوْنَ‏
هُمُ الَّذِيْنَ இவர்கள்தான் يَقُوْلُوْنَ கூறுகிறார்கள் لَا تُنْفِقُوْا தர்மம் செய்யாதீர்கள் عَلٰى மீது مَنْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ அல்லாஹ்வின் தூதரிடம் இருப்பவர்கள் حَتّٰى இறுதியாக يَنْفَضُّوْا‌ؕ பிரிந்து விடுவார்கள் وَلِلّٰهِ அல்லாஹ்விற்கே خَزَآٮِٕنُ பொக்கிஷங்கள் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமியின் وَلٰـكِنَّ என்றாலும் الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்கள் لَا يَفْقَهُوْنَ‏ புரிய மாட்டார்கள்
63:7. இவர்கள் தாம், அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்கள்; (அவரை விட்டுப்) பிரிந்து செல்லும் வரை அவர்களுக்காக நீங்கள் செலவு செய்யாதீர்கள்” என்று கூறியவர்கள்; வானங்களிலும், பூமியிலுமுள்ள பொக்கிஷங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை; ஆனால் இந்நயவஞ்சகர்கள் (அதை) உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
63:7. இவர்கள்தான் (மற்ற மக்களை நோக்கி,) ‘‘அல்லாஹ்வுடைய தூதருடன் இருக்கும் மக்களுக்கு நீங்கள் தர்மம் செய்யாதீர்கள். அதனால், அவர்கள் அவரை விட்டும் விலகிவிடுவார்கள்'' என்று கூறுகின்றனர். (நபியே! நீர் கூறுவீராக:) ‘‘வானங்கள் பூமியிலுள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையே; எனினும், இந்த நயவஞ்சகர்கள் (இதை) உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.''
63:7. இவர்கள்தான் இவ்வாறு சொல்கிறார்கள்; “இறைத்தூதரின் தோழர்களுக்குச் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால் அவர்கள் சிதறிப் போகட்டும்!” உண்மையில், வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் புரிந்து கொள்வதில்லை.
63:7. அவர்கள் எத்தகையோரென்றால், “அல்லாஹ்வுடைய தூதருடன் இருப்பவர்கள் (அவரைவிட்டுப்) பிரிந்து செல்லும் வரை அவர்களுக்கு நீங்கள் செலவு செய்யாதீர்கள்” என்று (மற்றவர்களிடம்) கூறுகிறார்கள், (நபியே! நீர் கூறுவீராக) “வானங்கள் மற்றும் பூமியிலுள்ள களஞ்சியங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவையாகும், எனினும், இந்த (வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் (இதனை) விளங்கிக் கொள்ளமாட்டார்கள்.”
63:8
63:8 يَقُوْلُوْنَ لَٮِٕنْ رَّجَعْنَاۤ اِلَى الْمَدِيْنَةِ لَيُخْرِجَنَّ الْاَعَزُّ مِنْهَا الْاَذَلَّ ‌ؕ وَلِلّٰهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهٖ وَلِلْمُؤْمِنِيْنَ وَلٰـكِنَّ الْمُنٰفِقِيْنَ لَا يَعْلَمُوْنَ‏
يَقُوْلُوْنَ கூறுகின்றனர் لَٮِٕنْ رَّجَعْنَاۤ நாம் திரும்பினால் اِلَى الْمَدِيْنَةِ மதீனாவிற்கு لَيُخْرِجَنَّ நிச்சயமாக வெளியேற்றவேண்டும் الْاَعَزُّ கண்ணியவான்கள் مِنْهَا அதிலிருந்து الْاَذَلَّ ؕ தாழ்ந்தவர்களை وَلِلّٰهِ அல்லாஹ்விற்கு(ம்) الْعِزَّةُ கண்ணியம் وَلِرَسُوْلِهٖ அவனது தூதருக்கும் وَلِلْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கும்தான் وَلٰـكِنَّ என்றாலும் الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்கள் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
63:8. “நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.  
63:8. மேலும், ‘‘நாங்கள் மதீனாவிற்குத் திரும்ப வந்தால், கண்ணியமுள்ள நாங்கள் (நம்பிக்கை கொண்ட இந்த) இழிவானவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றி விடுவோம்'' என்றும் கூறுகின்றனர். (நபியே! நீர் கூறுவீராக:) கண்ணியமெல்லாம், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் சொந்தமானது. எனினும், இந்த நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளவில்லை.
63:8. மேலும், அவர்கள் கூறுகின்றார்கள்: “நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் எவர் கண்ணியமிக்கவரோ அவர் கேவலமானவரை அங்கிருந்து வெளியேற்றி விடுவார்.” ஆயினும், கண்ணியமானது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் உரியதாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் அறிவதில்லை.
63:8. “நாங்கள் மதீனாவிற்குத் திரும்பி வந்தால், மிகக் கண்ணியமானவர் மிக இழிவானவரை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்” என்று அவர்கள் கூறுகின்றனர், (நபியே! நீர் கூறுவீராக:)” கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விசுவாசிகளுக்கும் உரியதாகும், எனினும், (வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் (இதனை) அறியமாட்டார்கள்.”
63:9
63:9 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ‌ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! لَا تُلْهِكُمْ உங்களை ஈடுபடுத்தி விடவேண்டாம் اَمْوَالُكُمْ உங்கள் செல்வங்களும் وَلَاۤ اَوْلَادُكُمْ உங்கள் பிள்ளைகளும் عَنْ ذِكْرِ اللّٰهِ‌ۚ அல்லாஹ்வின் நினைவை விட்டும் وَمَنْ யார் يَّفْعَلْ செய்துவிடுவார்களோ ذٰلِكَ அப்படி فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْخٰسِرُوْنَ‏ நஷ்டவாளிகள்
63:9. ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.
63:9. நம்பிக்கையாளர்களே! உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் அல்லாஹ்வுடைய ஞாபகத்தை உங்களுக்கு மறக்கடித்துவிட வேண்டாம். எவரேனும், இவ்வாறு செய்தால் அத்தகையவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்தான்.
63:9. இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் செல்வங்களும், உங்கள் பிள்ளைகளும் அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டு உங்களை அலட்சியத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். எவர்கள் அவ்வாறு செய்கிறார்களோ, அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.
63:9. விசுவாசங்கொண்டோரே! உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய மக்களும் அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து உங்களை(த் திருப்பி) வீணாக்கி விட வேண்டாம், இன்னும், எவர் அதைக் செய்கிறாரோ அவர்கள் தாம் நஷ்டமடைந்தவர்களாவர்.
63:10
63:10 وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏
وَاَنْفِقُوْا தர்மம் செய்யுங்கள் مِنْ مَّا رَزَقْنٰكُمْ நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து مِّنْ قَبْلِ முன்னர் اَنْ يَّاْتِىَ வருவதற்கு اَحَدَكُمُ உங்களில் ஒருவருக்கு الْمَوْتُ மரணம் فَيَقُوْلَ அவர் கூறுவார் رَبِّ என் இறைவா! لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ நீ என்னை பிற்படுத்தி வைக்கமாட்டாயா! اِلٰٓى اَجَلٍ தவணை வரை قَرِيْبٍۙ கொஞ்சம் சமீபமான فَاَصَّدَّقَ நான் தர்மம் செய்வேனே وَاَكُنْ இன்னும் ஆகிவிடுவேனே مِّنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில்
63:10. உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.
63:10. உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்,) ‘‘என் இறைவனே! ஒரு சொற்ப காலத்திற்கு என்னை விட்டுவைக்க வேண்டாமா? (அவ்வாறு விட்டால்,) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேன்'' என்று கூறுவான்.
63:10. நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள், உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக! மேலும், அந்த நேரத்தில் அவர் கூறுவார்: “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிதுகாலம் அவகாசம் அளிக்கக்கூடாதா! நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!”
63:10. உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே நாம் உங்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து (தர்மமாக) செலவு செய்யுங்கள்; (அவ்வாறு செய்யாதவர் தன் மரண தறுவாயில்) “என் இரட்சகனே! சமீப தவணையின்பால் என்னை நீ பிற்படுத்த வேண்டாமா? (அவ்வாறு பிற்படுத்தினால்) நான் தர்மம் செய்வேன், (இன்னபிற நற்கருமங்களைச் செய்து) நல்லோர்களிலும் உள்ளவனாக நான் ஆகிவிடுவேன்” என்று கூறுவான்.
63:11
63:11 وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا‌ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏
وَلَنْ يُّؤَخِّرَ தாமதப்படுத்தவே மாட்டான் اللّٰهُ அல்லாஹ் نَفْسًا ஓர் உயிரை اِذَا جَآءَ வந்துவிட்டால் اَجَلُهَا‌ؕ அதற்குரிய தவணை وَاللّٰهُ அல்லாஹ் خَبِيْرٌۢ ஆழ்ந்தறிபவன் بِمَا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்பவற்றை
63:11. ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.
63:11. (எனினும்) ஓர் ஆத்மாவுடைய (மரணத்தின்) தவணை வரும்போது அதை அல்லாஹ் பிற்படுத்தவே மாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.
63:11. ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்துவிட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும் கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக அளிப்பதில்லை. மேலும், நீங்கள் என்னென்ன செய்துகொண்டிருக்கின்றீர்களோ அவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.
63:11. இன்னும், அல்லாஹ், எந்த ஆத்மாவையும்_அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்தமாட்டான், மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவன்.