72. ஸூரத்துல் ஜின்னு(ஜின்கள்)
மக்கீ, வசனங்கள்: 28

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
72:1
72:1 قُلْ اُوْحِىَ اِلَىَّ اَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوْۤا اِنَّا سَمِعْنَا قُرْاٰنًاعَجَبًا ۙ‏
قُلْ கூறுவீராக! اُوْحِىَ வஹீ அறிவிக்கப்பட்டது اِلَىَّ எனக்கு اَنَّهُ நிச்சயமாக செய்தியாவது اسْتَمَعَ செவியுற்றனர் نَفَرٌ சில நபர்கள் مِّنَ الْجِنِّ ஜின்களில் فَقَالُوْۤا மேலும் அவர்கள் கூறினார்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் سَمِعْنَا செவியுற்றோம் قُرْاٰنًا குர்ஆனை عَجَبًا ۙ‏ அதிசயமான
72:1. நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்:) “நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்” என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.
72:1. (நபியே!) கூறுவீராக: வஹ்யி மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதாவது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியுற்று(த் தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி) கூறினார்கள்: ‘‘நிச்சயமாக நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம்.
72:1. (நபியே!) நீர் கூறும்: எனக்கு இவ்வாறு வஹி* அனுப்பப்பட்டிருக்கின்றது: ஜின்களில் ஒரு குழுவினர் கவனமாகக் கேட்டனர். பின்னர் (தம் சமூக மக்களிடம் சென்று) கூறினர்: “நாங்கள் மிகவும் அற்புதமானதொரு குர்ஆனைச் செவியுற்றோம்.
72:1. (நபியே!) நீர் கூறுவீராக! “நிச்சயமாக ஜின்களில் சில நபர்கள், (இவ்வேதத்தைச்) செவியுற்றனர்; பிறகு (தங்கள் இனத்தாரிடம் சென்று,) நிச்சயமாக நாங்கள் மிக்க ஆச்சரியமான குர்ஆனை செவியுற்றோம் என்று கூறினார்கள்” என வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.”
72:2
72:2 يَّهْدِىْۤ اِلَى الرُّشْدِ فَاٰمَنَّا بِهٖ‌ ؕ وَلَنْ نُّشْرِكَ بِرَبِّنَاۤ اَحَدًا ۙ‏
يَّهْدِىْۤ அது வழிகாட்டுகிறது اِلَى الرُّشْدِ நேர்வழிக்கு فَاٰمَنَّا بِهٖ‌ ؕ ஆகவே, நாங்கள் நம்பிக்கை கொண்டோம்/அதை وَلَنْ نُّشْرِكَ இன்னும் நாங்கள் இணையாக்க மாட்டோம் بِرَبِّنَاۤ எங்கள் இறைவனுக்கு اَحَدًا ۙ‏ ஒருவரையும்
72:2. “அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது; ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்” (என்று அந்த ஜின் கூறலாயிற்று).
72:2. அது நேரான வழியை அறிவிக்கிறது. ஆகவே, அதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இனி) நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் அறவே இணையாக்க மாட்டோம்.
72:2. அது நேரிய பாதையின் பக்கம் வழிகாட்டுகின்றது. ஆகையால், நாங்கள் அதன் மீது நம்பிக்கை கொண்டோம். மேலும், நாங்கள் எங்களுடைய இறைவனுடன் எவரையும் இணையாக்கமாட்டோம்.
72:2. “அ(ந்தக் குர் ஆனாகிற)து நேர்வழியின்பால் வழிகாட்டுகிறது; ஆகவே, அதனை நாங்கள் விசுவாசித்தோம்; (இனி) நாங்கள் எங்ளுடைய இரட்சகனுக்கு ஒருவரையும் இணையாக்கவே மாட்டோம்”-
72:3
72:3 وَّاَنَّهٗ تَعٰلٰى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَّلَا وَلَدًا ۙ‏
وَّاَنَّهٗ இன்னும் நிச்சயமாக செய்தியாவது تَعٰلٰى மிக உயர்ந்தது جَدُّ மதிப்பு رَبِّنَا எங்கள் இறைவனின் مَا اتَّخَذَ அவன் எடுத்துக் கொள்ளவில்லை صَاحِبَةً மனைவியை(யும்) وَّلَا وَلَدًا ۙ‏ பிள்ளைகளையும்
72:3. “மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது; அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.
72:3. நிச்சயமாக எங்கள் இறைவனுடைய மகத்துவம் மிக்க மேலானது. அவன் எவரையும் (தன்) மனைவியாகவோ, குழந்தையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.
72:3. மேலும், எங்களுடைய இறைவனின் மாட்சிமை மிகவும் உயர்ந்தது; உன்னதமானது. அவன் எவரையும் மனைவியாகவோ, மகனாகவோ எடுத்துக்கொள்ளவில்லை.
72:3. இன்னும், “நிச்சயமாகக் காரியம்: எங்கள் இரட்சகனுடைய மகத்துவம் உயர்ந்துவிட்டது, அவன் மனைவியையோ, புதல்வரையுயோ எடுத்துக் கொள்ளவில்லை” (என்றும் கூறினார்கள்,)
72:4
72:4 وَّ اَنَّهٗ كَانَ يَقُوْلُ سَفِيْهُنَا عَلَى اللّٰهِ شَطَطًا ۙ‏
وَّ اَنَّهٗ இன்னும் நிச்சயமாக செய்தியாவது كَانَ இருந்தான் يَقُوْلُ கூறுபவனாக سَفِيْهُنَا எங்களில் உள்ள மூடன் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது شَطَطًا ۙ‏ அநியாயமான விஷயத்தை
72:4. “ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
72:4. மேலும், நிச்சயமாக நம்மிடமுள்ள மடையன் அல்லாஹ்வின் மீது (அவனுடைய பரிசுத்தத் தன்மைக்குத்) தகாத விஷயங்களைக் கூறுகிறவனாக இருந்தான்.
72:4. மேலும், நம்மிலுள்ள அறிவிலிகள் அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்குப் புறம்பான பல விஷயங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
72:4. “மேலும், நிச்சயமாகக் காரியம் நம்மிலுள்ள மடையன் அல்லாஹ்வின் மீது (அவனுக்கு மனைவி மக்கள் உண்டென்று கூறி நிராகரிப்பில் அளவு கடந்து) பொய்யைக் கூறுபவனாக இருந்தான்.”
72:5
72:5 وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ تَقُوْلَ الْاِنْسُ وَالْجِنُّ عَلَى اللّٰهِ كَذِبًا ۙ‏
وَّاَنَّا இன்னும் நிச்சயமாக நாங்கள் ظَنَنَّاۤ நம்பினோம் اَنْ لَّنْ تَقُوْلَ சொல்ல மாட்டார்கள் الْاِنْسُ மனிதர்களும் وَالْجِنُّ ஜின்களும் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا ۙ‏ பொய்
72:5. மேலும் “மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்” என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.
72:5. மனிதர்களும், ஜின்களும் நிச்சயமாக அல்லாஹ் மீது பொய் கூறமாட்டார்கள் என்று மெய்யாகவே (இது வரை) நாங்கள் எண்ணிக்கொண்டு இருந்தோம்.
72:5. மேலும், அல்லாஹ்வின் விஷயத்தில் பொய் சொல்ல முடியாது என்று நாங்கள் கருதியிருந்தோம்.
72:5. இன்னும், “மனிதர்களும், ஜின்களும், நிச்சயமாக அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்களென்று நிச்சயமாக (இதுவரை) நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம்.”
72:6
72:6 وَّاَنَّهٗ كَانَ رِجَالٌ مِّنَ الْاِنْسِ يَعُوْذُوْنَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوْهُمْ رَهَقًا ۙ‏
وَّاَنَّهٗ இன்னும் நிச்சயமாக செய்தியாவது كَانَ இருந்தார்(கள்) رِجَالٌ ஆண்கள் சிலர் مِّنَ الْاِنْسِ மனிதர்களில் உள்ள يَعُوْذُوْنَ பாதுகாவல் தேடுபவர்களாக بِرِجَالٍ ஆண்கள் சிலரிடம் مِّنَ الْجِنِّ ஜின்களில் உள்ள فَزَادُوْهُمْ எனவே அவர்கள் அவர்களுக்கு அதிகப்படுத்தினர் رَهَقًا ۙ‏ கர்வத்தை
72:6. “ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர்; இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.
72:6. மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள பல ஆண்களிடம் மெய்யாகவே (தங்களை) பாதுகாக்கக் கோருகின்றனர். எனவே, மனிதர்கள் அந்த ஜின்களுக்கு கர்வத்தை அதிகப்படுத்தி விட்டனர்.
72:6. மேலும், மனிதர்களில் சிலர் சில ஜின்களிடம் பாதுகாவல் கோரக் கூடியவர்களாய் இருந்தனர். இவ்வாறு செய்து அவர்கள் ஜின்களின் ஆணவத்தை இன்னும் அதிகமாக்கிவிட்டார்கள்.
72:6. “இன்னும், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள ஆண்கள் பலரிடம் (தங்களைக்) காக்கத் தேடிக் கொண்டிருந்தனர்; இதனால் அவர்கள் அவர்களுக்கு கர்வத்தை அதிகமாக்கி விட்டார்கள்.
72:7
72:7 وَّاَنَّهُمْ ظَنُّوْا كَمَا ظَنَنْتُمْ اَنْ لَّنْ يَّبْعَثَ اللّٰهُ اَحَدًا ۙ‏
وَّاَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் ظَنُّوْا எண்ணினர் كَمَا ظَنَنْتُمْ நீங்கள் எண்ணுவது போன்றுதான் اَنْ لَّنْ يَّبْعَثَ அறவே எழுப்ப மாட்டான் اللّٰهُ அல்லாஹ் اَحَدًا ۙ‏ ஒருவரையும்
72:7. “இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே, அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர்.
72:7. நீங்கள் எண்ணுகிறபடியே அவர்களும் (இறந்த பின்னர்) அல்லாஹ், ஒருவரையும் (உயிர்கொடுத்து) எழுப்பமாட்டான் என்று நிச்சயமாக எண்ணிக் கொண்டனர்.
72:7. மேலும், மனிதர்களும் நீங்கள் நினைத்திருந்தது போன்றுதான் நினைத்திருந்தார்கள்;
72:7. “மேலும், (இறந்த பின்னர்,) அல்லாஹ் ஒருவரையும் (உயிர்கொடுத்து) எழுப்பவே மாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தது போன்றே அவர்களும் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
72:8
72:8 وَّاَنَّا لَمَسْنَا السَّمَآءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِيْدًا وَّشُهُبًا ۙ‏
وَّاَنَّا இன்னும் நிச்சயமாக நாங்கள் لَمَسْنَا தேடினோம் السَّمَآءَ வானத்தை فَوَجَدْنٰهَا அதை நாங்கள் கண்டோம் مُلِئَتْ நிரப்பப்பட்டிருப்பதாக حَرَسًا காவல்களாலும் شَدِيْدًا கடுமையான وَّشُهُبًا ۙ‏ இன்னும் எரி நட்சத்திரங்களாலும்
72:8. “நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.
72:8. நிச்சயமாக நாங்கள் வானத்தைத் தடவிப் பார்த்தோம். அது பலமான பாதுகாவலர்களாலும், எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்.
72:8. அல்லாஹ் எவரையும் தூதராக அனுப்பமாட்டான் என்று! மேலும், நாங்கள் வானத்தைத் துளாவிப் பார்த்தோம்.
72:8. இன்னும், “நிச்சயமாக நாங்கள் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம், அப்போது வலிமைமிக்க பாதுகாவலர்களாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டதாக அதை நாங்கள் கண்டோம்.”
72:9
72:9 وَّاَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ‌ ؕ فَمَنْ يَّسْتَمِعِ الْاٰنَ يَجِدْ لَهٗ شِهَابًا رَّصَدًا ۙ‏
وَّاَنَّا இன்னும் நிச்சயமாக நாங்கள் كُنَّا இருந்தோம் نَقْعُدُ உட்காருபவர்களாக مِنْهَا அதில் مَقَاعِدَ பல இடங்களில் لِلسَّمْعِ‌ ؕ ஒட்டுக்கேட்க فَمَنْ யார் يَّسْتَمِعِ ஒட்டுக் கேட்பாரோ الْاٰنَ இப்போது يَجِدْ لَهٗ தனக்கு காண்பார் شِهَابًا எரி நட்சத்திரத்தை رَّصَدًا ۙ‏ எதிர்பார்த்திருக்கின்ற
72:9. “(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே காண்பான்.
72:9. (முன்னர்) அங்கு (நடைபெறும் விஷயங்களைச்) செவியுறக்கூடிய பல இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம். இப்பொழுதோ, (அவற்றைச்) செவியுற எவனும் சென்றால், நெருப்பின் ஒரு கங்கு அவனை (அடிப்பதற்காக) எதிர்பார்த்திருப்பதை அவன் காண்பான்.
72:9. அது பலமான காவலர்களால் நிரப்பப்பட்டிருப்பதையும் எரி நட்சத்திரங்கள் பொழிந்து கொண்டிருப்பதையும் கண்டோம். மேலும், இதற்கு முன் ஒட்டுக் கேட்பதற்கு வானத்தில் அமர்விடங்கள் நமக்குக் கிடைத்துக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது யாரேனும் ஒட்டுக் கேட்க முயன்றால் ஓர் எரிநட்சத்திரம் அவருக்காகக் குறி வைத்துக் காத்திருப்பதைக் காண்கின்றார்.”
72:9. “(முன்னர்) அங்கு (பேசப்படுபவற்றைச்) செவியேற்பதற்காக, பல இடங்களில் நாங்கள் அமர்பவர்களாகவும் இருந்தோம், எனவே, இப்பொழுது (அவைகளை) எவர் செவியேற்கிறாரோ அவர், குறிவைத்துக் காத்திருக்கும் நெருப்புப் பந்தத்தை தமக்காக அவர் காண்பார்”
72:10
72:10 وَّاَنَّا لَا نَدْرِىْۤ اَشَرٌّ اُرِيْدَ بِمَنْ فِى الْاَرْضِ اَمْ اَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا ۙ‏
وَّاَنَّا இன்னும் நிச்சயமாக நாங்கள் لَا نَدْرِىْۤ அறியமாட்டோம் اَشَرٌّ اُرِيْدَ தீமை ஏதும் நாடப்பட்டதா? بِمَنْ فِى الْاَرْضِ பூமியில் உள்ளவர்களுக்கு اَمْ اَرَادَ அல்லது நாடினானா? بِهِمْ அவர்களுக்கு رَبُّهُمْ அவர்களின் இறைவன் رَشَدًا ۙ‏ நேர்வழியை
72:10. “அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.
72:10. பூமியிலுள்ளவர்களுக்கு (இதனால்) தீங்கு விரும்பப்படுகிறதோ, அல்லது அவர்களின் இறைவன் (இதனால்) அவர்களுக்கு நன்மையை நாடியிருக்கிறானோ என்பதை நிச்சயமாக நாங்கள் அறிய மாட்டோம்.
72:10. மேலும், (கூறினார்:) “பூமியிலுள்ளவர்களுக்கு ஏதேனும் தீமை நாடப்பட்டுள்ளதா அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நேர்வழி காட்ட விரும்புகின்றானா என்பதை நாம் அறியோம்.
72:10. “மேலும், பூமியில் இருப்பவர்களுககு (இதைக்கொண்டு) தீங்கு நாடப்பட்டிருக்கிறதா? அல்லது அவர்களின் இரட்சகன் அவர்களுக்கு நன்மையை நாடியிருக்கின்றானா என்பதை நிச்சயமாக நாங்கள் அறியமாட்டோம்.”
72:11
72:11 وَّاَنَّا مِنَّا الصّٰلِحُوْنَ وَمِنَّا دُوْنَ ذٰلِكَ‌ؕ كُنَّا طَرَآٮِٕقَ قِدَدًا ۙ‏
وَّاَنَّا இன்னும் நிச்சயமாக நாங்கள் مِنَّا எங்களில் الصّٰلِحُوْنَ நல்லவர்களும் وَمِنَّا இன்னும் எங்களில் دُوْنَ ذٰلِكَ‌ؕ மற்றவர்களும் كُنَّا நாங்கள் இருந்தோம் طَرَآٮِٕقَ பிரிவுகளாக قِدَدًا ۙ‏ பலதரப்பட்ட
72:11. “மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர்; அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர்; நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்.
72:11. நிச்சயமாக நம்மில் நல்லவர்களும் சிலர் இருக்கின்றனர்; மற்றவர்களும் நம்மில் சிலர் இருக்கின்றனர். நாம் பல பிரிவுகளாகப் பிரிந்துவிட்டோம்.
72:11. மேலும், நம்மில் சில நல்லவர்களும் இருக்கின்றனர். அவ்வாறு அல்லாதோரும் இன்னும் சிலர் நம்மில் இருக்கின்றனர்.
72:11. “நிச்சயமாக நாம்-நம்மில் நல்லோரும் இருக்கின்றனர் அதல்லாதோரும் நம்மில் (சிலர்) இருக்கின்றனர் நாம் பல்வேறு வழிகளையுடையோராகவும் இருந்தோம்.
72:12
72:12 وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ نُّعْجِزَ اللّٰهَ فِى الْاَرْضِ وَلَنْ نُّعْجِزَهٗ هَرَبًا ۙ‏
وَّاَنَّا இன்னும் நிச்சயமாக நாங்கள் ظَنَنَّاۤ அறிந்தோம் اَنْ لَّنْ نُّعْجِزَ நாங்கள் அறவே இயலாமல் ஆக்கிவிட முடியாது اللّٰهَ அல்லாஹ்வை فِى الْاَرْضِ பூமியில் وَلَنْ نُّعْجِزَهٗ هَرَبًا ۙ‏ இன்னும் அவனை இயலாமல் ஆக்கிவிட முடியாது/ஓடி
72:12. “அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமாலாக்க முடியாது என்பதையும், அவனை விட்டு ஓடி (ஒளிந்து ) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம் அறிந்து கொண்டோம்.
72:12. நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், (பூமியிலிருந்து) ஓடி அவனை விட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் உறுதியாக அறிந்து கொண்டோம்.
72:12. நாம் பல வழிகளில் பிளவுண்டு கிடக்கின்றோம். மேலும், நம்மால் பூமியில் அல்லாஹ்வை வென்றிட முடியாது என்பதையும், எங்கேனும் ஓடிச் சென்று அவனைத் தோல்வியுறச் செய்திட முடியாது என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம்.
72:12. “இன்னும், நிச்சயமாக பூமியில் அல்லாஹ்வை நாம் இயலாமையிலாக்கவே முடியாதென்பதையும், (பூமியிலிருந்து அவனைவிட்டும் ஓடியவர்களாக அவனை இயலாமையிலாக்கவே முடியாதென்பதையும், உறுதியாக அறிந்து கொண்டோம்.
72:13
72:13 وَّاَنَّا لَمَّا سَمِعْنَا الْهُدٰٓى اٰمَنَّا بِهٖ‌ ؕ فَمَنْ يُّؤْمِنْۢ بِرَبِّهٖ فَلَا يَخَافُ بَخْسًا وَّلَا رَهَقًا ۙ‏
وَّاَنَّا இன்னும் நிச்சயமாக நாங்கள் لَمَّا سَمِعْنَا நாங்கள் செவியுற்ற போது الْهُدٰٓى நேர்வழியை اٰمَنَّا நாங்கள் நம்பிக்கை கொண்டோம் بِهٖ‌ ؕ அதை فَمَنْ எவர் يُّؤْمِنْۢ நம்பிக்கை கொள்வாரோ بِرَبِّهٖ தன் இறைவனை فَلَا يَخَافُ பயப்படமாட்டார் بَخْسًا குறைவதையும் وَّلَا رَهَقًا ۙ‏ அநியாயத்தையும்
72:13. “இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம்.” எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.
72:13. (இந்த குர்ஆனிலுள்ள) நேரான வழிகளைச் செவியுற்றபோதே அதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எவன் தன் இறைவனை நம்பிக்கை கொள்கிறானோ, அவன் நஷ்டத்தைப் பற்றியும், துன்பத்தைப் பற்றியும் பயப்படமாட்டான்.
72:13. மேலும், நேர்வழி காட்டும் அறிவுரையை நாங்கள் கேள்விப்பட்டபோது அதன் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம். இனி, எவரேனும் தன்னுடைய இறைவன் மீது நம்பிக்கை கொள்வாராயின் அவருக்கு இழப்பு அல்லது அநீதி பற்றி எந்த அச்சமும் இருக்காது.
72:13. “இன்னும், நிச்சயமாக நாங்கள் (இந்தக்குர்ஆனாகிய) நேர் வழியைச் செவியுற்றபோது அதனை விசுவாசங்கொண்டோம். ஆகவே, எவர் தன் இரட்சகனை விசுவாசிக்கின்றாரோ அவர், (தன் நன்மையில்) குறைவையும் அநீதத்தையும் பயப்படமாட்டார்.
72:14
72:14 وَّاَنَّا مِنَّا الْمُسْلِمُوْنَ وَمِنَّا الْقٰسِطُوْنَ‌ؕ فَمَنْ اَسْلَمَ فَاُولٰٓٮِٕكَ تَحَرَّوْا رَشَدًا‏
وَّاَنَّا இன்னும் நிச்சயமாக நாங்கள் مِنَّا எங்களில் الْمُسْلِمُوْنَ முஸ்லிம்களும் وَمِنَّا இன்னும் எங்களில் الْقٰسِطُوْنَ‌ؕ அநியாயக்காரர்களும் فَمَنْ யார் اَسْلَمَ இஸ்லாமை ஏற்றாரோ فَاُولٰٓٮِٕكَ அவர்கள்தான் تَحَرَّوْا நன்கு தேடினார்கள் رَشَدًا‏ நேர்வழியை
72:14. “இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.
72:14. முற்றிலும் (அவனுக்கு) பணிந்து வழிப்பட்டவர்களும் நிச்சயமாக நம்மில் பலர் இருக்கின்றனர்; வரம்பு மீறியவர்களும் நம்மில் பலர் இருக்கின்றனர். எவர்கள் முற்றிலும் பணிந்து வழிப்படுகிறார்களோ, அவர்கள்தான் நேரான வழியைத் தெரிந்து கொண்டவர்கள்.
72:14. மேலும், நம்மில் சிலர் முஸ்லிம்களாயும் (அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர்களாயும்) வேறு சிலர் சத்தியத்திலிருந்து பிறழ்ந்தவர்களாயும் உள்ளனர். எவர்கள் இஸ்லாத்தை (இறைவனுக்குக் கீழ்ப்படியும் மார்க்கத்தை) தேர்ந்தெடுத்துக் கொண்டார்களோ அவர்கள் ஈடேற்றத்தின் பாதையை தேடிப் பெற்றுக் கொண்டனர்.
72:14. “(முற்றிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லிம்களும், நிச்சயமாக நம்மில் இருக்கின்றனர் (உண்மையை விட்டுத் திரும்பிய) அநியாயக்காரர்களும் நம்மில் இருக்கின்றனர்; எவர்கள் (முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்களாகி விடுகின்றார்களோ, அவர்கள் தாம் நேர் வழியைத் தேடிக் கொண்டார்கள்.
72:15
72:15 وَاَمَّا الْقٰسِطُوْنَ فَكَانُوْا لِجَهَنَّمَ حَطَبًا ۙ‏
وَاَمَّا الْقٰسِطُوْنَ ஆக, அநியாயக்காரர்கள் فَكَانُوْا இருக்கின்றனர் لِجَهَنَّمَ நரகத்தின் حَطَبًا ۙ‏ எரி கொல்லிகளாக
72:15. “அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர்” (என்று அந்த ஜின் கூறிற்று).
72:15. வரம்பு மீறியவர்களோ, நரகத்தின் எரி கட்டைகளாக ஆகிவிட்டனர்'' (இவ்வாறு ஜின்கள் கூறினர்.)
72:15. ஆனால், எவர்கள் சத்தியத்திலிருந்து விலகிக் கொண்டார்களோ, அவர்கள் நரகத்தின் எரிபொருள்களாய் ஆகிவிட்டார்கள்.”
72:15. “அநியாயக்காரர்களோ நரகத்திற்கு (எரிக்கப்படும்) விறகுகளாகிவிட்டனர்” (என்றும் அந்த ஜின்கள் கூறினர்).
72:16
72:16 وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَى الطَّرِيْقَةِ لَاَسْقَيْنٰهُمْ مَّآءً غَدَقًا ۙ‏
وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا அவர்கள் நிலையாக இருந்திருந்தால் عَلَى الطَّرِيْقَةِ நேரான மார்க்கத்தில் لَاَسْقَيْنٰهُمْ நாம் அவர்களுக்கு புகட்டி இருப்போம் مَّآءً நீரை غَدَقًا ۙ‏ பலன்தரக்கூடிய அதிகமான
72:16. “(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்.
72:16. (நபியே! இந்த மனிதர்கள்) நேரான பாதையில் உறுதியாக இருந்தால், தடையின்றியே அவர்களுக்கு தண்ணீரைப் புகட்டிக் கொண்டிருப்போம்.
72:16. மேலும், (நபியே! நீர் கூறும்: “இன்னும் எனக்கு வஹி அனுப்பப்பட்டிருப்பது என்னவெனில்) மக்கள் நேர்வழியில் நிலைகுலையாமல் இருந்திருந்தால் நாம் அவர்களுக்கு மழையை தாராளமாகப் பொழியச் செய்திருப்போம்.
72:16. (நபியே! மனித, ஜின் இனத்தவர்களாகிய) அவர்கள் (இஸ்லாமிய மார்க்க) வழியின்மீது உறுதியாகவும் (நிலைத்து) இருந்தால் (தடையின்றியே) அவர்களுக்கு அதிகமான தண்ணீரை நாம் புகட்டியிருப்போம் (என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறுவீராக!)
72:17
72:17 لِّنَفْتِنَهُمْ فِيْهِ‌ ؕ وَمَنْ يُّعْرِضْ عَنْ ذِكْرِ رَبِّهٖ يَسْلُكْهُ عَذَابًا صَعَدًا ۙ‏
لِّنَفْتِنَهُمْ நாம் சோதிப்பதற்காக/அவர்களை فِيْهِ‌ ؕ وَمَنْ அதன்மூலம்/எவர் يُّعْرِضْ புறக்கணிப்பாரோ عَنْ ذِكْرِ அறிவுரையை رَبِّهٖ தன் இறைவனின் يَسْلُكْهُ புகுத்துவான்/அவரை عَذَابًا صَعَدًا ۙ‏ தண்டனையில்/ கடினமான
72:17. “அதைக் கொண்டு நாம் அவர்களைச் சோதிப்பதற்காக; ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கிறானோ, அவனைக் கொடிய வேதனையில் அவன் புகுத்தி விடுவான்.
72:17. இதில் அவர்களை நாம் சோதிப்போம். ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதையே புறக்கணிக்கின்றானோ அவனைக் கடினமான வேதனையில் அவன் புகுத்திவிடுவான்.
72:17. இந்த அருட்கொடையின் மூலம் அவர்களைச் சோதிப்பதற்காக! மேலும், எவரேனும் தன்னுடைய இறைவனின் அறிவுரையைப் புறக்கணித்தால் அவரை அவருடைய இறைவன் கடுமையான வேதனையில் ஆழ்த்தி விடுவான்.
72:17. (எவ்வாறு நன்றி செய்கிறார்கள் என) அதில் அவர்களை நாம் சோதிப்பதற்காக; மேலும், எவர் தன் இரட்சகனின் நினைப்பை விட்டும் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கடினமான வேதனையில் அவன் புகுத்தி விடுவான்.
72:18
72:18 وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا ۙ‏
وَّاَنَّ இன்னும் நிச்சயமாக الْمَسٰجِدَ மஸ்ஜிதுகள் لِلّٰهِ அல்லாஹ்விற்கு فَلَا تَدْعُوْا ஆகவேஅழைக்காதீர்கள் مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اَحَدًا ۙ‏ வேறு ஒருவரை
72:18. “அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.
72:18. நிச்சயமாக பள்ளிவாசல் (மஸ்ஜிது)களெல்லாம், அல்லாஹ்வை வணங்குவதற்காக உள்ளன. ஆகவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (பெயர் கூறி) அழைக்காதீர்கள்.
72:18. மேலும், மஸ்ஜித்கள் பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். எனவே, அங்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்காதீர்கள்”
72:18. மேலும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வின் வணக்கத்திற்கே உரியன; ஆகவே, (அவைகளில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்க வேண்டாம்.
72:19
72:19 وَّاَنَّهٗ لَمَّا قَامَ عَبْدُ اللّٰهِ يَدْعُوْهُ كَادُوْا يَكُوْنُوْنَ عَلَيْهِ لِبَدًا ؕ‏
وَّاَنَّهٗ நிச்சயமாக செய்தி لَمَّا قَامَ நின்ற போது عَبْدُ اللّٰهِ அல்லாஹ்வின் அடியார் يَدْعُوْهُ அவனை அழைப்பதற்காக كَادُوْا முயற்சித்தனர் يَكُوْنُوْنَ ஆகிவிட عَلَيْهِ அவருக்கு எதிராக لِبَدًا ؕ‏ எல்லோரும் சேர்ந்து
72:19. “மேலும், நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார் அவனைப் பிரார்த்தித்தவராக நின்றபோது, அவர்பால் அவர்கள் கூட்டம் கூட்டமாக (வந்து) நெருங்கிவிடுகின்றனர்.”  
72:19. நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியா(ராகிய நம் தூத)ர், அவனைப் பிரார்த்தனை செய்து தொழ ஆரம்பித்தால், (இதைக் காணும் ஜின்களும், மக்களும் ஆச்சரியப்பட்டுக்) கூட்டம் கூட்டமாக வந்து அவரைச் சூழ்ந்துகொள்கின்றனர்.
72:19. அல்லாஹ்வின் அடியார் அவனை அழைப்பதற்காக எழுந்து நின்றபோது மக்கள் அவர் மீது பாய முனைந்துவிட்டார்கள்.
72:19. மேலும், நிச்சயமாகக் காரியம் அல்லாஹ்வுடைய அடியாராகிய தூதர், அவனை அழைப்பவராக (தொழுபவராக) நிற்கும்பொழுது; (இதைக் காணும் ஜனங்கள் ஆச்சரியப்பட்டு) கூட்டங்கூட்டமாக (வந்து) அவரை நெருங்கிவிடுகின்றனர்.
72:20
72:20 قُلْ اِنَّمَاۤ اَدْعُوْا رَبِّىْ وَلَاۤ اُشْرِكُ بِهٖۤ اَحَدًا‏
قُلْ கூறுவீராக! اِنَّمَاۤ اَدْعُوْا நான் அழைப்பதெல்லாம் رَبِّىْ என் இறைவனை وَلَاۤ اُشْرِكُ இன்னும் இணையாக்க மாட்டேன் بِهٖۤ அவனுக்கு اَحَدًا‏ ஒருவரையும்
72:20. (நபியே!) நீர் கூறும்: “நான் பிரார்த்திப்பதெல்லாம் என்னுடைய இறைவனைத் தான்; அன்றியும், நான் அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டேன்.”
72:20. (நபியே! அவர்களுக்கு) கூறுவீராக: ‘‘நான் பிரார்த்தனை செய்து அழைப்பதெல்லாம் என் இறைவனையே! அவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன்.
72:20. (நபியே!) நீர் கூறும்: “நான் என் இறைவனையே அழைக்கின்றேன். மேலும், அவனுடன் யாரையும் நான் இணையாக்குவதில்லை.”
72:20. “நான் பிரார்த்தனை செய்து அழைப்பதெல்லாம் என் இரட்சகனையே! அவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்கமாட்டேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
72:21
72:21 قُلْ اِنِّىْ لَاۤ اَمْلِكُ لَـكُمْ ضَرًّا وَّلَا رَشَدًا‏
قُلْ கூறுவீராக! اِنِّىْ நிச்சயமாக நான் لَاۤ اَمْلِكُ உரிமை பெறமாட்டேன் لَـكُمْ உங்களின் ضَرًّا கெட்டதற்கும் وَّلَا رَشَدًا‏ நல்லதற்கும்
72:21. கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.”
72:21. நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மை செய்யவோ, தீமை செய்யவோ ஒரு சிறிதும் சக்தியற்றவன்'' என்றும் கூறுவீராக!
72:21. கூறும்: “உங்களுக்கு ஏதேனும் தீமையோ, நன்மையோ செய்திடும் ஆற்றல் எனக்கில்லை.”
72:21. “நிச்சயமாக நான் உங்களுக்குத் தீங்கையோ, நன்மையையோ (செய்ய சக்தி பெறமாட்டேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
72:22
72:22 قُلْ اِنِّىْ لَنْ يُّجِيْرَنِىْ مِنَ اللّٰهِ اَحَدٌ  ۙ وَّلَنْ اَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا ۙ‏
قُلْ கூறுவீராக! اِنِّىْ நிச்சயமாக நான் لَنْ يُّجِيْرَنِىْ என்னை அறவே காப்பாற்ற மாட்டார் مِنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து اَحَدٌ  ۙ ஒருவரும் وَّلَنْ اَجِدَ இன்னும் அறவே காணமாட்டேன் مِنْ دُوْنِهٖ அவனையன்றி مُلْتَحَدًا ۙ‏ ஒதுங்குமிடத்தை
72:22. கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.
72:22. ‘‘நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒருவனுமே என்னை பாதுகாக்க முடியாது. அவனையன்றி அண்டும் இடத்தையும் நான் காணமாட்டேன்.'' என்றும் கூறுவீராக!
72:22. கூறும்: “அல்லாஹ்வின் பிடியிலிருந்து எவராலும் என்னைக் காப்பாற்ற முடியாது. மேலும், அவனைத் தவிர வேறு எந்தப் புகலிடத்தையும் என்னால் பெற முடியாது.
72:22. “நிச்சயமாக நான்-என்னை அல்லாஹ்விடமிருந்து ஒருவரும் காப்பாற்றவே மாட்டார்; அவனையன்றி ஒதுங்குமிடத்தையும் நான் பெற்றுக் கொள்ளவே மாட்டேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
72:23
72:23 اِلَّا بَلٰغًا مِّنَ اللّٰهِ وَرِسٰلٰتِهٖ‌ ؕ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ؕ‏
اِلَّا தவிர بَلٰغًا எடுத்துரைப்பதற்கும் مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து وَرِسٰلٰتِهٖ‌ ؕ அவனுடைய தூதுத்துவ செய்திகளுக்கும் وَمَنْ எவர் يَّعْصِ மாறு செய்வாரோ اللّٰهَ அல்லாஹ்விற்கு(ம்) وَرَسُوْلَهٗ அவனது தூதருக்கும் فَاِنَّ நிச்சயமாக لَهٗ அவருக்கு نَارَ நெருப்புதான் جَهَنَّمَ நரக خٰلِدِيْنَ அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள் فِيْهَاۤ அதில் اَبَدًا ؕ‏ எப்போதும்
72:23. “அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்” என (நபியே!) நீர் கூறும்.
72:23. ஆயினும், அல்லாஹ்விடமிருந்து (எனக்குக் கிடைத்த) அவனுடைய தூதை எடுத்துரைப்பதைத் தவிர (எனக்கு வேறு வழியில்லை.) ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறுசெய்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக நெருப்பு தான் (கூலியாகும்). அதில் அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்.
72:23. அல்லாஹ்வின் வார்த்தைகளையும் அவனுடைய தூதுச் செய்திகளையும் சேர்ப்பித்து விடுவதைத் தவிர வேறு எந்தப் பணியும் எனக்கில்லை.” இனி, எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தால் திண்ணமாக அவருக்கு நரக நெருப்பு இருக்கின்றது. மேலும் இப்படிப்பட்டவர்கள் அதில் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.
72:23. “(ஆயினும்,) அல்லாஹ்விடமிருந்து (எனக்குக் கிடைத்ததை) எத்தி வைப்பதையும், அவனின் தூதுச் செய்திகளை (அறிவிப்பதை)யும் தவிர (வேறெதற்கும் நான் சக்தி பெற மாட்டேன்). எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றாரோ, நிச்சயமாக அவருக்கு (க்கூலி) நரக நெருப்புதான். அவர்கள் அதில் என்றென்றும் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள்” (என்று நபியே! நீர் கூறுவீராக!)
72:24
72:24 حَتّٰٓى اِذَا رَاَوْا مَا يُوْعَدُوْنَ فَسَيَعْلَمُوْنَ مَنْ اَضْعَفُ نَاصِرًا وَّاَقَلُّ عَدَدًا‏
حَتّٰٓى இறுதியாக اِذَا رَاَوْا அவர்கள் பார்த்தால் مَا يُوْعَدُوْنَ தாங்கள் எச்சரிக்கப்பட்டதை فَسَيَعْلَمُوْنَ அறி(ந்து கொள்)வார்கள் مَنْ எவர் اَضْعَفُ மிக பலவீனமானவர் نَاصِرًا உதவியாளரால் وَّاَقَلُّ இன்னும் மிக குறைவானவர் عَدَدًا‏ எண்ணிக்கையால்
72:24. அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) அவர்கள் பார்க்கும் போது, எவருடைய உதவியாளர்கள் மிக பலஹீனமானவர்கள் என்பதையும்; எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
72:24. பயமுறுத்தப்பட்ட வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் சமயத்தில், எவனுடைய உதவியாளர், மிக்க பலவீனமானவர்கள் என்பதையும் (எவருடைய உதவியாளர்) மிக்க குறைந்த தொகையினர் என்பதையும் சந்தேகமின்றி அறிந்து கொள்வார்கள்.
72:24. இந்த மக்கள் தங்களுடைய நடத்தையைக் கைவிட மாட்டார்கள்; எதுவரையெனில், அவர்களுக்கு வாக்களிக்கப்படும் விஷயத்தை அவர்கள் நேரில் காணும் வரை! அப்போது, எவருடைய உதவியாளர்கள் பலவீனர்கள், எவருடைய கூட்டம் எண்ணிக்கையில் குறைவானது என்பதை அவசியம் அறிந்துகொள்வார்கள்.
72:24. முடிவாக அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையான)தை அவர்கள் காணும் சமயத்தில், உதவி பெறுவதால் மிகப் பலவீனமானவரும் எண்ணிக்கையால் மிகக் குறைந்தவரும் யார் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்வார்கள்.
72:25
72:25 قُلْ اِنْ اَدْرِىْۤ اَقَرِيْبٌ مَّا تُوْعَدُوْنَ اَمْ يَجْعَلُ لَهٗ رَبِّىْۤ اَمَدًا‏
قُلْ கூறுவீராக! اِنْ اَدْرِىْۤ அறியமாட்டேன் اَقَرِيْبٌ சமீபமாக உள்ளதா مَّا تُوْعَدُوْنَ நீங்கள் எச்சரிக்கப்படுவது اَمْ يَجْعَلُ لَهٗ அல்லது ஆக்கி இருக்கின்றானா?/அதற்கு رَبِّىْۤ என் இறைவன் اَمَدًا‏ ஒரு அவகாசத்தை
72:25. (நபியே!) நீர் கூறும்: “உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா, அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்.
72:25. (நபியே!) கூறுவீராக: ‘‘உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை சமீபத்தில் இருக்கிறதா? அல்லது எனதிறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தி இருக்கிறானா என்பதை நான் அறிய மாட்டேன்.
72:25. மேலும், கூறும்: “உங்களுக்கு வாக்களிக்கப்படும் விஷயம் அண்மையில் உள்ளதா அல்லது என் இறைவன் அதற்கென நீண்டதொரு காலத்தை நிர்ணயித்துள்ளானா என்பதை நான் அறியேன்.
72:25. “நீங்கள் வாக்களிக்கப்படுகின்ற (அவ்வேதனையான)து மிகச் சமீபத்திலிருக்கின்றதா?” அல்லது என் இரட்சகன், அதற்குத் தவணையை ஆக்குவானா? என்பதை நான் அறியமாட்டேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
72:26
72:26 عٰلِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلٰى غَيْبِهٖۤ اَحَدًا ۙ‏
عٰلِمُ நன்கறிந்தவன் الْغَيْبِ மறைவான ஞானங்களை فَلَا يُظْهِرُ வெளிப்படுத்த மாட்டான் عَلٰى غَيْبِهٖۤ அவன் தன் மறைவான ஞானங்களை اَحَدًا ۙ‏ ஒருவருக்கும்
72:26. “(அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான்.
72:26. அவன்தான் மறைவான இவ்விஷயங்களையெல்லாம் நன்கறிந்தவன் ஆவான். மறைவாக உள்ள இவ்விஷயங்களை அவன் ஒருவருக்கும் வெளிப்படுத்துவது இல்லை.
72:26. அவன் மறைவானவற்றை அறிந்தவன். தான் மறைவாக வைத்திருப்பவற்றை எவருக்கும் அறிவித்துக் கொடுப்பதில்லை.
72:26. “(என் இரட்சகனாகிய அவன்) மறைவானவற்றை அறிகிறவன்; எனவே தான் மறைத்திருப்பவற்றை ஒருவருக்கும் அவன் வெளிப்படுத்தமாட்டான்-
72:27
72:27 اِلَّا مَنِ ارْتَضٰى مِنْ رَّسُوْلٍ فَاِنَّهٗ يَسْلُكُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖ رَصَدًا ۙ‏
اِلَّا தவிர مَنِ எவர்(களை) ارْتَضٰى திருப்திகொண்டானோ مِنْ رَّسُوْلٍ தூதர்களில் فَاِنَّهٗ நிச்சயமாக அவன் يَسْلُكُ அனுப்புவான் مِنْۢ بَيْنِ يَدَيْهِ அவர்களுக்கு முன்னும் وَمِنْ خَلْفِهٖ அவர்களுக்குப் பின்னும் رَصَدًا ۙ‏ பாதுகாவலர்களை
72:27. “தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான்.
72:27. ஆயினும், தன் தூதர்களில் எவர்களைத் தேர்ந்தெடுத்தானோ அவர்களுக்கு அதை அவன் அறிவிக்கக் கூடும். (அதை அவன் அவர்களுக்கு அறிவித்த சமயத்தில்) நிச்சயமாக அவன் அவர்களுக்கு முன்னும் பின்னும் (ஒரு மலக்கைப்) பாதுகாப்பவராக அனுப்பிவைக்கிறான்.
72:27. அவன் விரும்பிய தூதருக்கே தவிர! பிறகு, அவருக்கு முன்பும் பின்பும் பாதுகாவலரை நியமிக்கின்றான்;
72:27. “தூதரில், தான் (தேர்வு செய்து) பொருந்திக்கொண்டவருக்கே தவிர- ஆகவே, நிச்சயமாக அவன் (தூதராகிய) அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாப்பவரை (மலக்குகளிலிருந்து) ஆக்குகிறான்.
72:28
72:28 لِّيَـعْلَمَ اَنْ قَدْ اَبْلَغُوْا رِسٰلٰتِ رَبِّهِمْ وَاَحَاطَ بِمَا لَدَيْهِمْ وَاَحْصٰى كُلَّ شَىْءٍ عَدَدًا‏
لِّيَـعْلَمَ அவர் அறிவதற்காக اَنْ என்று قَدْ திட்டமாக اَبْلَغُوْا எடுத்துரைத்தார்கள் رِسٰلٰتِ தூதுத்துவ செய்திகளை رَبِّهِمْ தங்கள் இறைவனின் وَاَحَاطَ இன்னும் சூழ்ந்து அறிவான் بِمَا لَدَيْهِمْ அவர்களிடம் உள்ளவற்றை وَاَحْصٰى இன்னும் கணக்கிட்டுள்ளான் كُلَّ شَىْءٍ எல்லா பொருள்களையும் عَدَدًا‏ எண்ணிக்கையால்
72:28. “தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.”
72:28. (அத்தூதர்கள்) தங்கள் இறைவனின் தூதுகளை மெய்யாகவே எடுத்துரைத்தார்கள் என்பதை, தான் அறிந்து கொள்வதற்காக (அவ்வாறு பாதுகாப்பாளரை அனுப்புகிறான்). அவர்களிடம் உள்ளவற்றை அவன் தன் ஞானத்தால் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், ஒவ்வொரு பொருளின் கணக்கையும் முழுமையாக அறிந்தவனாக இருக்கிறான்.
72:28. அந்தத் தூதர்கள் தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளைச் சேர்ப்பித்துவிட்டார்கள் என்பதை அவன் அறிந்துகொள்வதற்காக! மேலும், அவன் அவர்களிடம் உள்ளவை அனைத்தையும் சூழ்ந்து அறிந்திருக்கின்றான். மேலும், ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக் கணக்கிட்டு வைத்துள்ளான்.
72:28. (அத்தூதர்கள்) தங்கள் இரட்சகனின் தூதுச் செய்திகளை, திட்டமாகவே எடுத்துரைத்தார்கள் என்பதை, தான் அறிந்து கொள்வதற்காக அவர்களிடமுள்ளவற்றை அவன் (தன் அறிவால்) சூழ்ந்தறிந்து கொண்டவனாக இருக்க, ஒவ்வொரு பொருளையும் எண்ணிக்கையால் பூரணமாகக் கணக்கிட்டும் வைத்துள்ளான்.