76. ஸூரத்துத் தஹ்ர் (காலம்)
மதனீ, வசனங்கள்: 31

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
76:1
76:1 هَلْ اَتٰى عَلَى الْاِنْسَانِ حِيْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْـٴًـــا مَّذْكُوْرًا‏
هَلْ اَتٰى வரவில்லையா عَلَى الْاِنْسَانِ மனிதனுக்கு حِيْنٌ ஒரு நேரம் مِّنَ الدَّهْرِ காலத்தில் இருந்து لَمْ يَكُنْ அவன் இருக்கவில்லை شَيْـٴًـــا ஒரு பொருளாக مَّذْكُوْرًا‏ நினைவு கூறப்படுகின்ற
76:1. திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?
76:1. ஒவ்வொரு மனிதனுக்கும் (உலகில் அவன் வெளிவருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன், இன்ன பொருள் என்றும் கூறுவதற்கில்லாத நிலைமையில் இருந்தான்.
76:1. மனிதன் மீது, அவன் குறிப்பிடத்தக்கதொரு பொருளாகவே இல்லாதிருந்த ஒரு நீண்ட காலகட்டம் செல்லவில்லையா?
76:1. மனிதன் மீது காலத்திலிருந்து ஒரு நேரம் திட்டமாக வந்துவிட்டது, (அதில் இன்னதென்று கூறப்படும் ஒரு பொருளாக அவன் இருக்கவில்லை.
76:2
76:2 اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍۖ نَّبْتَلِيْهِ فَجَعَلْنٰهُ سَمِيْعًۢا بَصِيْرًا‏
اِنَّا நிச்சயமாக நாம் خَلَقْنَا படைத்தோம் الْاِنْسَانَ மனிதனை مِنْ نُّطْفَةٍ விந்துத் துளியிலிருந்து اَمْشَاجٍۖ கலக்கப்பட்ட نَّبْتَلِيْهِ அவனை நாம் சோதிக்கின்றோம் فَجَعَلْنٰهُ ஆகவே, அவனை ஆக்கினோம் سَمِيْعًۢا செவியுறுபவனாக بَصِيْرًا‏ பார்ப்பவனாக
76:2. (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
76:2. (பின்னர் ஆண், பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம்தான் மனிதனைப் படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காகவே, செவியுடையவனாகவும் பார்வையுடையவனாகவும் அவனை ஆக்கினோம்.
76:2. நாம் மனிதனை கலக்கப்பட்ட ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்; நாம் அவனைச் சோதிக்க வேண்டும் என்பதற்காக! மேலும், இந் நோக்கத்திற்காக நாம் அவனைச் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
76:2. நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) கலப்பான ஓர் இந்திரியத் துளியிலிருந்து நாம் சோதிப்ப(தற்கு நாடிய)வர்களாக அவனை படைத்தோம், எனவே, செவியுறுபவனாக, பார்ப்பவனாக அவனை நாம் ஆக்கினோம்.
76:3
76:3 اِنَّا هَدَيْنٰهُ السَّبِيْلَ اِمَّا شَاكِرًا وَّاِمَّا كَفُوْرًا‏
اِنَّا நிச்சயமாக நாம் هَدَيْنٰهُ அவனுக்கு வழிகாட்டினோம் السَّبِيْلَ பாதையை اِمَّا ஒன்று شَاكِرًا நன்றி உள்ளவனாக وَّاِمَّا كَفُوْرًا‏ அவர்கள் நன்றி கெட்டவனாக
76:3. நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.
76:3. பின்னர், நிச்சயமாக நாம் அவனுக்கு நேரான வழியையும் அறிவித்தோம். எனினும், (அதைப் பின்பற்றி நமக்கு) நன்றி செலுத்துபவர்களும் இருக்கின்றனர். (அதை) நிராகரித்துவிடுபவர்களும் இருக்கின்றனர்.
76:3. நாம் அவனுக்கு வழிகாட்டினோம். இனி, அவன் நன்றியுள்ளவனாகவும் இருக்கலாம் அல்லது நன்றி கொன்றவனாகவும் இருக்கலாம்.
76:3. நிச்சயமாக நாம் அவனுக்கு (நல்லது தீயது பற்றிய) வழியைத்தெளிவு செய்தோம்; (அதைப் பின்பற்றி)அவன் ஒன்று நன்றியுள்ளவனாக இருக்கலாம், அல்லது (அதைப் பின்பற்றாது நன்றியற்ற (நிராகரிப்ப)வனாக இருக்கலாம்.
76:4
76:4 اِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ سَلٰسِلَا۟ وَاَغْلٰلًا وَّسَعِيْرًا‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَعْتَدْنَا தயார் செய்துள்ளோம் لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு سَلٰسِلَا۟ சங்கிலிகளை(யும்) وَاَغْلٰلًا விலங்குகளையும் وَّسَعِيْرًا‏ கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும்
76:4. காஃபிர்களுக்குச் சங்கிலிகளையும், அரிகண்டங்களையும், கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம்.
76:4. நிராகரிப்பவர்களுக்கு நாம் சங்கிலிகளையும், (கை, கால்) விலங்குகளையும், நரகத்தையும் நிச்சயமாக தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
76:4. நன்றி கொல்பவர்களுக்குத் திண்ணமாக, நாம் சங்கிலிகளையும், விலங்குகளையும், கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
76:4. நிராகரிப்போர்க்கு சங்கிலிகளையும், விலங்குகளையும் (ஜுவாலை விட்டு எரியும்) நரகத்தையும், நிச்சயமாக நாம் தயார்செய்து வைத்திருக்கின்றோம்.
76:5
76:5 اِنَّ الْاَبْرَارَ يَشْرَبُوْنَ مِنْ كَاْسٍ كَانَ مِزَاجُهَا كَافُوْرًا‌ۚ‏
اِنَّ நிச்சயமாக الْاَبْرَارَ நல்லவர்கள் يَشْرَبُوْنَ பருகுவார்கள் مِنْ كَاْسٍ ஒரு மது குவளையிலிருந்து كَانَ இருக்கும் مِزَاجُهَا அதன் கலப்பு كَافُوْرًا‌ۚ‏ காஃபூர் நறுமணத்தால்
76:5. நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு காஃபூராக (கற்பூராக) இருக்கும்,
76:5. நல்லவர்கள், கிண்ணங்களிலுள்ள கற்பூரம் கலந்த பானத்தை அருந்துவார்கள்.
76:5. நன்மக்கள் (சுவனத்தில்) கிண்ணங்களிலிருந்து கற்பூரம் கலந்திருக்கும் மது அருந்துவார்கள்.
76:5. நிச்சயமாக நல்லோர்கள், குவளையில் (பானத்தை) அருந்துவார்கள், அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும்.
76:6
76:6 عَيْنًا يَّشْرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ يُفَجِّرُوْنَهَا تَفْجِيْرًا‏
عَيْنًا ஓர் ஊற்றாகும் يَّشْرَبُ அருந்துவார்கள் بِهَا அதில் இருந்து عِبَادُ அடியார்கள் اللّٰهِ அல்லாஹ்வின் يُفَجِّرُوْنَهَا அதை அவர்கள் ஓட வைப்பார்கள் تَفْجِيْرًا‏ ஓட வைத்தல்
76:6. (காஃபூர்) ஒரு சுனையாகும்; அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.
76:6. அது (சொந்தமாக) அல்லாஹ்வுடைய (நல்) அடியார்கள் அருந்துவதற்காக ஏற்பட்ட ஓர் ஊற்றின் நீராகும். அதை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடமெல்லாம்) ஓடச் செய்வார்கள்.
76:6. அது ஓடிக் கொண்டிருக்கும் ஊற்றின் நீராகும். இதன் நீரைக் கலந்தே அல்லாஹ்வின் அடியார்கள் மது அருந்துவார்கள். மேலும், தாம் விரும்பும் இடங்களுக்கு அதன் கிளைகளை எளிதாக ஏற்படுத்திக் கொள்வார்கள்.
76:6. (இவ்வாறு கலக்கப்பட்ட அது) ஒரு ஊற்றாகும், அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள், அதனை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடங்களுக்கெல்லாம்) ஓடையாக ஓடச் செய்வார்கள்.
76:7
76:7 يُوْفُوْنَ بِالنَّذْرِ وَيَخَافُوْنَ يَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِيْرًا‏
يُوْفُوْنَ நிறைவேற்றுவார்கள் بِالنَّذْرِ நேர்ச்சையை وَيَخَافُوْنَ இன்னும் பயப்படுவார்கள் يَوْمًا ஒரு நாளை كَانَ இருக்கும் شَرُّهٗ அதன் தீமை مُسْتَطِيْرًا‏ சூழ்ந்ததாக, பரவியதாக, கடுமையானதாக
76:7. அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும்.
76:7. இவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளையும் நிறைவேற்றுவார்கள். நீண்ட வேதனையுடைய (மறுமை) நாளை பயந்துகொள்வார்கள்.
76:7. இவர்கள் எத்தகையவர்கள் என்றால், (இந்த உலகத்தில்) நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் துன்பங்கள் பரவக்கூடிய அந்த (மறுமை) நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள்.
76:7. இவர்கள் (தங்கள்) நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்; இன்னும் ஒருநாளையும் பயப்படுவார்கள்; அதன் தீமை எங்கும் பரவியதாக இருக்கும்.
76:8
76:8 وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏
وَيُطْعِمُوْنَ இன்னும் உணவளிப்பார்கள் الطَّعَامَ உணவை عَلٰى حُبِّهٖ அதன் பிரியம் இருப்பதுடன் مِسْكِيْنًا ஏழைகளுக்கும் وَّيَتِيْمًا அனாதைகளுக்கும் وَّاَسِيْرًا‏ கைதிகளுக்கும்
76:8. மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.
76:8. மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள்.
76:8. மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பினால் வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவளிக்கின்றார்கள்.
76:8. மேலும், அல்லாஹ்வாகிய அவன் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைக்கும், அனாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள்.
76:9
76:9 اِنَّمَا نُطْعِمُكُمْ لِـوَجْهِ اللّٰهِ لَا نُرِيْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا‏
اِنَّمَا نُطْعِمُكُمْ நாங்கள் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் لِـوَجْهِ முகத்திற்காகத்தான் اللّٰهِ அல்லாஹ்வின் لَا نُرِيْدُ நாங்கள் நாடவில்லை مِنْكُمْ உங்களிடம் جَزَآءً கூலியையும் وَّلَا شُكُوْرًا‏ நன்றியையும்
76:9. “உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்).
76:9. (தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) ‘‘நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடம் நாம் ஒரு கூலியையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை (என்றும்),
76:9. (மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்:) “நாங்கள் அல்லாஹ்வுக்காகவே உங்களுக்கு உணவளிக்கின்றோம். நாங்கள் உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும், நன்றியையும் எதிர்பார்க்கவில்லை.
76:9. (உணவை உண்போரிடம்) “உங்களுக்காக நாம் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்தை நாடியேதான்; உங்களிடமிருந்து நாம் யாதொரு பிரதிபலனையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ நாங்கள் நாடவில்லை” என்றும்,
76:10
76:10 اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا يَوْمًا عَبُوْسًا قَمْطَرِيْرًا‏
اِنَّا நிச்சயமாக நாங்கள் نَخَافُ பயப்படுகின்றோம் مِنْ رَّبِّنَا எங்கள் இறைவனிடம் يَوْمًا ஒரு நாளை عَبُوْسًا கடுகடுக்கின்ற قَمْطَرِيْرًا‏ சுருங்கிவிடுகின்ற
76:10. “எங்கள் இறைவனிடமிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்” (என்றும் கூறுவர்).
76:10. ‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனின் ஒரு நாளைப் பற்றிப் பயப்படுகிறோம். அந்நாளில் முகம் கடுகடுத்துச் சுண்டி விடும்'' (என்றும் கூறுவார்கள்).
76:10. நீண்ட, கடும் துன்பத்திற்குரிய ஒருநாளின் வேதனையைக் குறித்துதான் எங்கள் இறைவனிடம் நாங்கள் அஞ்சுகின்றோம்.”
76:10. “(அந்நாளின் அமளியினால் முகங்கள்) மிக்க கடுகடுக்கக்கூடிய நெருக்கடியான ஒருநாளை நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகனிடமிருந்து பயப்படுகின்றோம்” (என்றும் கூறிக்கொண்டிருந்தனர்.)
76:11
76:11 فَوَقٰٮهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الْيَوْمِ وَ لَقّٰٮهُمْ نَضْرَةً وَّسُرُوْرًا‌ۚ‏
فَوَقٰٮهُمُ ஆகவே அவர்களை பாதுகாப்பான் اللّٰهُ அல்லாஹ் شَرَّ தீமையில் இருந்து ذٰلِكَ الْيَوْمِ وَ لَقّٰٮهُمْ அந்நாளின்/இன்னும் அவர்களுக்கு கொடுப்பான் نَضْرَةً முக செழிப்பையும் وَّسُرُوْرًا‌ۚ‏ மன மகிழ்ச்சியையும்
76:11. எனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும், மனமகிழ்வையும் அளிப்பான்.
76:11. ஆகவே, அல்லாஹ் அத்தகைய நாளின் தீங்கிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொண்டு, அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொடுத்தான்.
76:11. எனவே, அல்லாஹ் அவர்களை அந்நாளின் தீங்கிலிருந்து காப்பாற்றிக் கொள்வான்; அவர்களுக்குப் பொலிவையும் மகிழ்வையும் அளிப்பான்.
76:11. ஆகவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கிலிருந்து அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகமலர்ச்சியையும் (அவர்களின் இதயங்களில்) மகிழ்வையும் கொடுத்தான்.
76:12
76:12 وَجَزٰٮهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِيْرًا ۙ‏
وَجَزٰٮهُمْ இன்னும் அவன் அவர்களுக்கு கூலியாகக் கொடுப்பான் بِمَا صَبَرُوْا அவர்கள் பொறுமையாக இருந்ததால் جَنَّةً சொர்க்கத்தையும் وَّحَرِيْرًا ۙ‏ பட்டையும்
76:12. மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.
76:12. மேலும், அவர்கள் இம்மையில் (சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாகச் சொர்க்கத்தையும், (அணிவதற்குப்) பட்டாடைகளையும் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தான் (என்று கூறப்படும்).
76:12. மேலும், அவர்களின் பொறுமைக்குப் பகரமாக சுவனத்தையும் பட்டாடையையும் அவர்களுக்கு வழங்குவான்.
76:12. அன்றியும், அவர்கள் (இம்மையில் கஷ்டங்களைச் சகித்து) பொறுமையுடனிருந்ததன் காரணமாக சுவனத்தையும்) அணிவதற்குப் பட்டாடையையும் அவர்களுக்கு அவன் நற்கூலியாக வழங்குகிறான்.
76:13
76:13 مُّتَّكِـِٕـيْنَ فِيْهَا عَلَى الْاَرَآٮِٕكِ‌ۚ لَا يَرَوْنَ فِيْهَا شَمْسًا وَّلَا زَمْهَرِيْرًا‌ۚ‏
مُّتَّكِـِٕـيْنَ சாய்ந்தவர்களாக فِيْهَا அதில் عَلَى الْاَرَآٮِٕكِ‌ۚ கட்டில்களில் لَا يَرَوْنَ காண மாட்டார்கள் فِيْهَا அதில் شَمْسًا சூரியனையோ وَّلَا زَمْهَرِيْرًا‌ۚ‏ குளிரையோ
76:13. அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள்.
76:13. (அவர்கள்) அங்குள்ள கட்டில்களின் மீது(ள்ள பஞ்சணைகளின் மேல்) சாய்ந்து கொண்டிருப்பார்கள். அதில் சூரிய வெப்பத்தையும், பனியின் கொடிய குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்.
76:13. அங்கு அவர்கள் உயர்ந்த கட்டில்களில் தலையணைகள் வைத்து சாய்ந்திருப்பார்கள். வெயிலின் வெப்பமோ, கடும் குளிரோ அங்கு அவர்களைத் துன்புறுத்தாது.
76:13. (அவர்கள்) அச்சுவனத்தில்) ஆசனங்களின்மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அதில் சூரிய வெப்பத்தினையும் கடுங்குளிரையும் அவர்கள் காணமாட்டார்கள்.
76:14
76:14 وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلٰلُهَا وَذُلِّلَتْ قُطُوْفُهَا تَذْلِيْلًا‏
وَدَانِيَةً அருகில் இருக்கும் عَلَيْهِمْ அவர்களுக்கு ظِلٰلُهَا அதன் நிழல்கள் وَذُلِّلَتْ மிக தாழ்வாக ஆக்கப்பட்டிருக்கும் قُطُوْفُهَا அவற்றின் கனிகள் تَذْلِيْلًا‏ மிக தாழ்வாக
76:14. மேலும், அதன் (மர) நிழல்கள், அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும்.
76:14. அதிலுள்ள (மரங்களின்) நிழல்கள் அவர்கள் மீது தாழ்ந்து (சூழ்ந்து) கொண்டிருக்கும். அதன் கனிகள் (சுலபமாகப் பறிக்கக்கூடிய விதத்தில்) அவர்கள் முன் சாய்ந்து வரும்.
76:14. சுவனத்தின் நிழல்கள் அவர்களின் மீது தாழ்ந்திருக்கும். மேலும், அதன் கனிகள் எப்போதும் (அவர்கள் விரும்பியபடி பறித்துக் கொள்ளும் அளவில்) அவர்களின் அருகில் இருக்கும்.
76:14. அதன் (மரங்களின்) நிழல்கள் அவர்கள் மீது நெருங்கியவையாக இருக்கும், அதன் கனிகள் (அவர்கள் பறிப்பதற்கேற்றவாறு) தாழ்வாக்கப்பட்டுள்ளது.
76:15
76:15 وَيُطَافُ عَلَيْهِمْ بِاٰنِيَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِيْرَا۟ؔ ۙ‏
وَيُطَافُ عَلَيْهِمْ அவர்கள் முன் சுற்றி வரப்படும் بِاٰنِيَةٍ பாத்திரங்கள் مِّنْ فِضَّةٍ வெள்ளியினால் وَّاَكْوَابٍ கெண்டிகள் كَانَتْ இருக்கின்ற قَوَارِيْرَا۟ؔ ۙ‏ கண்ணாடிகளாக
76:15. (பானங்கள்) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் (கொண்டு) அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும்.
76:15. (பலவகை இன்பமான பானங்கள் நிறைந்த) பளிங்குக் கெண்டிகளும், வெள்ளிக் கிண்ணங்களும் அவர்கள் முன் சுற்றிக் கொண்டே இருக்கும்.
76:15. வெள்ளிப் பாத்திரங்களும் கண்ணாடிக் குவளைகளும் அவர்களுக்கு முன்னிலையில் சுற்றிச் சுற்றி வருமாறு செய்யப்பட்டிருக்கும்.
76:15. மேலும், வெள்ளியிலான பாத்திரங்களையும், பளிங்கினாலானக் கிண்ணங்களையும் கொண்டு (சிறார்களால்) அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும்.
76:16
76:16 قَوَارِيْرَا۟ؔ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِيْرًا‏
قَوَارِيْرَا۟ؔ கண்ணாடிகளாகும் مِنْ فِضَّةٍ வெள்ளிகலந்த قَدَّرُوْهَا அவற்றை நிர்ணயிப்பார்கள் تَقْدِيْرًا‏ துல்லியமாக
76:16. (அவை பளிங்கல்ல) வெள்ளியினாலான, பளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள். அவற்றைத் தக்க அளவாக அமைத்திருப்பார்கள்.
76:16. (அவை பளிங்குகளல்ல; எனினும்,) பளிங்குகளைப் போல் வெள்ளியினால் (அவர்களின் அவசியத்திற்குத்) தக்கவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
76:16. அந்தக் கண்ணாடிகளும் வெள்ளி வகையைச் சேர்ந்ததாக இருக்கும். அவற்றைச் (சுவனத்தின் ஊழியர்கள்) சரியான அளவில் நிரப்பியிருப்பார்கள்.
76:16. வெள்ளியிலான கிண்ணங்கள், அவற்றை (தாகம் தீர்க்கும் அளவிற்குத் தக்கவாறு) அளவை (வழங்கக்கூடிய) அவர்கள் நிர்ணயிப்பர்.
76:17
76:17 ‌ ‌ وَيُسْقَوْنَ فِيْهَا كَاْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيْلًا ۚ‏
وَيُسْقَوْنَ இன்னும் அவர்களுக்கு புகட்டப்படும் فِيْهَا அதில் كَاْسًا மதுக் குவளையில் كَانَ இருக்கும் مِزَاجُهَا அதன் கலவை زَنْجَبِيْلًا ۚ‏ இஞ்சியாக
76:17. மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.
76:17. (இஞ்சி கலந்த) ‘சன்ஜபீல்' என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்.
76:17. அந்தக் கிண்ணங்களில் இருந்து இஞ்சிச்சுவை கலந்திருக்கும் பானங்கள் அவர்களுக்கு அங்கு குடிப்பதற்கு வழங்கப்படும்.
76:17. இன்னும், அதில் அவர்கள் குவளையில் (மதுபானத்தைப்) புகட்டப்படுவார்கள், அதன் கலவை இஞ்சியாக இருக்கும்.
76:18
76:18 عَيْنًا فِيْهَا تُسَمّٰى سَلْسَبِيْلًا‏
عَيْنًا ஓர் ஊற்றாகும் فِيْهَا அதில் உள்ள تُسَمّٰى பெயர் கூறப்படும் سَلْسَبِيْلًا‏ சல்சபீல்
76:18. “ஸல்ஸபீல்” என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.
76:18. அது அங்குள்ள ஓர் ஊற்றின் நீர், அதற்கு ‘ஸல்ஸபீல்' என்றும் பெயர் கூறப்படும்.
76:18. அது சுவனத்தில் உள்ள ஒரு நீரூற்றாகும். அதன் பெயர் ‘ஸல்ஸபீல்.’
76:18. அங்குள்ள ஓர் ஊற்றிலிருந்து (அதனைப்) புகட்டப்படுவார்கள் – அதற்கு ஸல்ஸபீல் (மிக மதுரமான நீர்) என்று கூறப்படும்.
76:19
76:19 وَيَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ‌ۚ اِذَا رَاَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُـؤْلُـؤًا مَّنْثُوْرًا‏
وَيَطُوْفُ இன்னும் சுற்றி வருவார்(கள்) عَلَيْهِمْ அவர்களை وِلْدَانٌ சிறுவர்கள் مُّخَلَّدُوْنَ‌ۚ நிரந்தரமானவர்கள் اِذَا رَاَيْتَهُمْ நீர் அவர்களைப் பார்த்தால் حَسِبْتَهُمْ அவர்களை எண்ணுவீர் لُـؤْلُـؤًا முத்துக்களாக مَّنْثُوْرًا‏ பரப்பி வைக்கப்பட்ட
76:19. இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர்.
76:19. (என்றுமே) சிறுவர்களாக இருக்கக்கூடிய பணியாளர்கள் அவர்களைச் சுற்றிக்கொண்டே திரிவார்கள். (நபியே!) அவர்களை நீர் கண்டால் சிதறிய முத்துக்கள் என்றே கருதுவீர்.
76:19. மாறாத இளமையுடைய சிறுவர்கள் அவர்களுக்(கு ஊழியம் புரிவதற்)காக சுற்றித் திரிந்து கொண்டேயிருப்பார்கள். நீர் அவர்களைப் பார்த்தால் தெளித்துக் கிடக்கும் முத்துக்கள் என்று எண்ணுவீர்.
76:19. மேலும், என்றுமே (இளமை மாறாமல்) இருக்கும் சிறுவர்கள் அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; (நபியே!) அவர்களை நீர் காணுவீரானால் பரத்தப்பட்ட முத்துக்களென அவர்களை எண்ணுவீர்.
76:20
76:20 وَاِذَا رَاَيْتَ ثَمَّ رَاَيْتَ نَعِيْمًا وَّمُلْكًا كَبِيْرًا‏
وَاِذَا رَاَيْتَ நீர் பார்த்தாலும் ثَمَّ எந்த இடத்தை رَاَيْتَ நீர் பார்ப்பீர் نَعِيْمًا பேரின்பத்தை(யும்) وَّمُلْكًا ஆட்சியையும் كَبِيْرًا‏ பெரிய
76:20. அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்.
76:20. பின்னும் கவனித்துப் பார்த்தால், பெரிய அரச மாளிகையில் உள்ள சுகபோகங்களையெல்லாம் நீர் (அங்குக்) காண்பீர்.
76:20. அங்கு நீர் எந்தப் பக்கம் நோக்கினாலும் அருட்கொடைகள் நிறைந்திருப்பதையும், மாபெரும் பேரரசுக்கான அத்தனை சாதனங்களையும் காண்பீர்.
76:20. இன்னும், அங்கு நீர் பார்த்தால், (அவற்றின்) அருட்கொடைகளையும் பெரிய அரசாட்சியையும் நீர் காண்பீர்.
76:21
76:21 عٰلِيَهُمْ ثِيَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّاِسْتَبْرَقٌ‌ وَّحُلُّوْۤا اَسَاوِرَ مِنْ فِضَّةٍ ‌ۚوَسَقٰٮهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا‏
عٰلِيَهُمْ அவர்களுக்கு மேல் ثِيَابُ ஆடைகளும் سُنْدُسٍ மென்மையான பட்டும் خُضْرٌ பச்சை நிற وَّاِسْتَبْرَقٌ‌ இன்னும் தடிப்பான பட்டு وَّحُلُّوْۤا இன்னும் அலங்கரிக்கப் படுவார்கள் اَسَاوِرَ காப்புகளால் مِنْ فِضَّةٍ வெள்ளியினால் ۚوَسَقٰٮهُمْ புகட்டுவான்/ அவர்களுக்கு رَبُّهُمْ அவர்களின் இறைவன் شَرَابًا பானத்தை طَهُوْرًا‏ மிகத் தூய்மையான
76:21. அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்; அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.
76:21. அவர்கள் தேகத்தின் மேல் மெல்லிய பசும் பட்டாடையோ அல்லது தடிப்பான (பல நிற) பட்டாடையோ இருக்கும். (விருதாக) வெள்ளிக் காப்பும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். பரிசுத்தமான ஒரு பானத்தையும் அவர்களின் இறைவன் அவர்களுக்குப் புகட்டுவான்.
76:21. மென்மையான மற்றும் கனமான பச்சைநிறப் பட்டாடைகள் அவர்களின் மீதிருக்கும். மேலும், அவர்களுக்கு வெள்ளிக்காப்புகள் அணிவிக்கப்படும். அவர்களின் அதிபதி அவர்களுக்குத் தூய்மை மிக்க பானத்தைப் புகட்டுவான்.
76:21. அவர்கள் (தேகத்தின்) மேல் மென்மையான மற்றும் கனமான பச்சைப் பட்டாடைகள் இருக்கும், இன்னும், அவர்கள் வெள்ளியினால் (ஆகிய) கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பார்கள், அவர்களின் இரட்சகன் பரிசுத்தமான ஒரு பானத்தையும் அவர்களுக்குப் புகட்டுவான்; (மேலும் அவர்களிடம்),
76:22
76:22 اِنَّ هٰذَا كَانَ لَـكُمْ جَزَآءً وَّكَانَ سَعْيُكُمْ مَّشْكُوْرًا‏
اِنَّ நிச்சயமாக هٰذَا இவை كَانَ இருக்கும் لَـكُمْ உங்களுக்கு جَزَآءً கூலியாக وَّكَانَ இன்னும் இருக்கும் سَعْيُكُمْ உங்கள் உழைப்புகள் مَّشْكُوْرًا‏ நன்றிஅறியப்பட்டதாக
76:22. “நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று” (என்று அவர்களிடம் கூறப்படும்).  
76:22. (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இது உங்களுக்குக் கூலியாக கொடுக்கப்பட்டது; உங்கள் முயற்சியும் அங்கீகரிக்கப்பட்டது'' (என்றும் கூறுவான்).
76:22. திண்ணமாக, இதுதான் உங்களுக்குரிய கூலி. உங்களுடைய உழைப்பு மதிப்புக்குரியதாக ஆகிவிட்டிருக்கிறது.
76:22. “நிச்சயமாக இது உங்களுக்குக் கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் நன்றிக்குரியதாகி (அங்கீகரிக்கப்பட்டு) விட்டது” என்று கூறுவான்.
76:23
76:23 اِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ الْقُرْاٰنَ تَنْزِيْلًا ۚ‏
اِنَّا நிச்சயமாக نَحْنُ நாம்தான் نَزَّلْنَا இறக்கினோம் عَلَيْكَ உம்மீது الْقُرْاٰنَ இந்த குர்ஆனை تَنْزِيْلًا ۚ‏ கொஞ்சம் கொஞ்சமாக இறக்குதல்
76:23. நிச்சயமாக நாம் தான் உம்மீது இந்தக் குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம்.
76:23. (நபியே!) நிச்சயமாக நாம் இந்த குர்ஆனைச் சிறிது சிறிதாகவே உம்மீது இறக்கி வைக்கிறோம்.
76:23. (நபியே!) நாம்தாம் உம்மீது இந்தக் குர்ஆனை சிறிது சிறிதாக இறக்கியிருக்கின்றோம்.
76:23. (நபியே!) நிச்சயமாக நாம்தாம் இந்தக் குர் ஆனைச் சிறிது சிறிதாகவே உம்மீது இறக்கி வைத்தோம்.
76:24
76:24 فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًا‌ۚ‏
فَاصْبِرْ நீர் சகித்திருப்பீராக! لِحُكْمِ தீர்ப்புக்காக رَبِّكَ உமது இறைவனின் وَلَا تُطِعْ நீர் கீழ்ப்படியாதீர்! مِنْهُمْ அவர்களில் اٰثِمًا பாவிக்கும் اَوْ அல்லது كَفُوْرًا‌ۚ‏ நிராகரிப்பாளருக்கும்
76:24. ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர் பார்த்து) இருப்பீராக; அன்றியும், அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர்.
76:24. ஆகவே, உமது இறைவனின் கட்டளையை (பெற்றுக் கொள்ள) நீர் பொறுத்திருப்பீராக. அவர்களிலுள்ள பாவிகளையும், நன்றி கெட்டவர்களையும் நீர் பின்பற்றாதீர்.
76:24. எனவே, நீர் உம் அதிபதியின் கட்டளைப்படி பொறுமையை மேற்கொள்ளும்! இவர்களில் தீயசெயல் செய்பவனுக்கோ சத்தியத்தை நிராகரிப்பவனுக்கோ இணங்கிப் போகாதீர்!
76:24. ஆகவே, நீர் உமதிரட்சகனின் கட்டளைக்காகப் பொறுமையுடனிருப்பீராக! அவர்களிலுள்ள (யாதொரு) பாவிக்கோ, அல்லது நன்றி கெட்டவனுக்கோ நீர் கீழ்ப்படியாதீர்.
76:25
76:25 وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِيْلًا ۚ  ۖ‏
وَاذْكُرِ நினைவு கூர்வீராக اسْمَ பெயரை رَبِّكَ உமது இறைவனின் بُكْرَةً காலையிலும் وَّاَصِيْلًا ۚ  ۖ‏ மாலையிலும்
76:25. காலையிலும், மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருப்பீராக.
76:25. காலையிலும் மாலையிலும் உங்கள் இறைவனின் திருநாமத்தை(க் கூறி) நினைவு கூருவீராக.
76:25. உம் அதிபதியின் பெயரைக் காலையிலும் மாலையிலும் நினைவுகூரும்.
76:25. மேலும், காலையிலும், மாலையிலும் உமதிரட்சகனின் (சங்கையான) பெயரை நினைவு கூர்வீராக!
76:26
76:26 وَمِنَ الَّيْلِ فَاسْجُدْ لَهٗ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيْلًا‏
وَمِنَ الَّيْلِ இரவில் فَاسْجُدْ சிரம் பணிந்து தொழுவீராக! لَهٗ அவனுக்காக وَسَبِّحْهُ இன்னும் அவனை தொழுது வணங்குவீராக! لَيْلًا இரவில் طَوِيْلًا‏ நீண்ட நேரம்
76:26. இன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக; அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு (துதி) செய்வீராக.
76:26. இரவிலும், அவனுக்குச் சிரம் பணிந்து வணங்கி, இரவு நேரத்தில் நெடுநேரம் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக!
76:26. மேலும், இரவிலும் அவனது திருமுன் ஸஜ்தா செய்யும்! மேலும், இரவின் நீண்ட நேரங்களில் அவனைத் துதித்துக்கொண்டிரும்.
76:26. இன்னும், இரவில் அவனுக்கு (ஸுஜூது செய்து) சிரம் பணிவீராக! இரவில் நெடுநேரம் அவனைத் துதி செய்து கொண்டுமிருப்பீராக!
76:27
76:27 اِنَّ هٰٓؤُلَاۤءِ يُحِبُّوْنَ الْعَاجِلَةَ وَيَذَرُوْنَ وَرَآءَهُمْ يَوْمًا ثَقِيْلًا‏
اِنَّ நிச்சயமாக هٰٓؤُلَاۤءِ இவர்கள் يُحِبُّوْنَ நேசிக்கின்றனர் الْعَاجِلَةَ உலக வாழ்க்கையை وَيَذَرُوْنَ இன்னும் விட்டுவிடுகின்றனர் وَرَآءَهُمْ அவர்களுக்கு முன்னர் يَوْمًا ஒரு நாளை ثَقِيْلًا‏ மிக கனமான
76:27. நிச்சயமாக இவர்கள் விரைந்து சென்று விடுவ(தான இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர்; அப்பால் பளுவான (மறுமை) நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர்.
76:27. நிச்சயமாக இந்த மக்கள் இம்மையை விரும்பி, அவர்களுக்கு முன்னிருக்கும் (மறுமையின்) கடினமான நாளைப் புறக்கணித்து விடுகின்றனர்.
76:27. இவர்கள் உடனடியாகக் கிடைக்கக்கூடியதை (இம்மையை) நேசிக்கிறார்கள். ஆனால், பிறகு வரவிருக்கும் கடினமான நாளினை அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.
76:27. நிச்சயமாக இவர்கள் விரைவாகச் செல்லக்கூடிய (இம்மையான)தை விரும்புகின்றனர்; மேலும் கடினமான (மறுமை)நாளை அவர்களுக்குப் பின்னால் (புறக்கணித்து)விட்டு விடுகின்றனர்.
76:28
76:28 نَحْنُ خَلَقْنٰهُمْ وَشَدَدْنَاۤ اَسْرَهُمْ‌ۚ وَاِذَا شِئْنَا بَدَّلْنَاۤ اَمْثَالَهُمْ تَبْدِيْلًا‏
نَحْنُ நாம்தான் خَلَقْنٰهُمْ அவர்களை படைத்தோம் وَشَدَدْنَاۤ இன்னும் உறுதிப்படுத்தினோம் اَسْرَهُمْ‌ۚ அவர்களின் படைப்பை وَاِذَا شِئْنَا நாம் நாடினால் بَدَّلْنَاۤ பதிலாக கொண்டுவருவோம் اَمْثَالَهُمْ அவர்கள் போன்றவர்களை تَبْدِيْلًا‏ பதிலாக
76:28. நாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய அமைப்பையும் கெட்டிப்படுத்தினோம்; அன்றியும் நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டு வருவோம்.
76:28. நாம்தான் அவர்களைப் படைத்தோம். நாம்தான் அவர்களுடைய அமைப்பையும் உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால் (அவர்களை) மாற்றி அவர்களைப் போன்ற மற்றவர்களை (அவர்கள் இடத்தில்) அமர்த்திவிடுவோம்.
76:28. நாமே இவர்களைப் படைத்தோம். இவர்களுடைய எலும்பு மூட்டுக்களை உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால், இவர்களின் வடிவங்களை மாற்றி அமைத்துவிடுவோம்.
76:28. நாம்தாம் அவர்களைப் படைத்தோம், நாமே அவர்களுடைய படைப்பின் அமைப்பையும் உறுதிப்படுத்தினோம்; மேலும், நாம் நாடினால், அவர்களைப் போன்ற (மற்ற)வர்களை அவர்களுக்குப் பகரமாக மாற்றி விடுவோம்.
76:29
76:29 اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ‌ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ سَبِيْلًا‏
اِنَّ நிச்சயமாக هٰذِهٖ இது تَذْكِرَةٌ ۚ ஓர் அறிவுரையாகும் فَمَنْ شَآءَ யார் நாடுகிறாரோ اتَّخَذَ அவன் ஏற்படுத்திக் கொள்ளட்டும் اِلٰى رَبِّهٖ தன் இறைவனின் பக்கம் سَبِيْلًا‏ ஒரு பாதையை
76:29. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.
76:29. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும். விரும்பியவர் தன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய (நேரான) வழியைப் பலமாகப் பிடித்துக் கொள்ளவும்.
76:29. இது ஒரு நல்லுரையாகும். இனி, விருப்பமுள்ளவர் தன்னுடைய அதிபதியின் பக்கம் செல்லும் வழியை மேற்கொள்ளட்டும்.
76:29. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; ஆகவே யார் நாடுகிறாரோ அவர் தம் இரட்சகன் பக்கம் செல்லும் வழியை எடுத்துக்கொள்வாராக!
76:30
76:30 وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا  ۖ‏
وَمَا تَشَآءُوْنَ நீங்கள் நாடமுடியாது اِلَّاۤ தவிர اَنْ يَّشَآءَ நாடினால் اللّٰهُ ؕ அல்லாஹ் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கின்றான் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا  ۖ‏ மகா ஞானவானாக
76:30. எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.
76:30. எனினும், அல்லாஹ் நாடினால் தவிர நீங்கள் (எதையும்) விரும்ப முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் அனைவரின் தன்மைகளையும்) நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
76:30. மேலும், நீங்கள் விரும்புவதால் எதுவும் நடக்கப்போவதில்லை, அல்லாஹ் நாடினால் அன்றி! திண்ணமாக, அல்லாஹ் பேரறிவாளனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
76:30. இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (எதையும்) நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்களனைவரையும்பற்றி) நன்கறிகிறவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.
76:31
76:31 يُّدْخِلُ مَنْ يَّشَآءُ فِىْ رَحْمَتِهٖ‌ؕ وَالظّٰلِمِيْنَ اَعَدَّ لَهُمْ عَذَابًا اَلِيْمًا‏
يُّدْخِلُ நுழைக்கின்றான் مَنْ يَّشَآءُ அவன் நாடுகின்றவர்களை فِىْ رَحْمَتِهٖ‌ؕ தனது அருளில் وَالظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள் اَعَدَّ தயார்செய்து வைத்துள்ளான் لَهُمْ அவர்களுக்காக عَذَابًا தண்டனையை اَلِيْمًا‏ வலி தரக்கூடிய
76:31. அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.
76:31. (ஆகவே, உங்களில்) அவன் விரும்பியவர்களைத் தன் அருளில் புகுத்தி விடுகிறான். அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
76:31. தான் நாடுவோரை தனது கருணையில் நுழையச் செய்கின்றான். மேலும், கொடுமைக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயார் செய்து வைத்திருக்கின்றான்.
76:31. (ஆகவே, உங்களில்) அவன் நாடியவரை தன் அருளில் நுழைவிக்கிறான்; இன்னும், அநியாயக்காரர்கள் - அவர்களுக்காகத் துன்புறுத்தும் வேதனையை அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.