83. ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்)
மக்கீ, வசனங்கள்: 36

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
83:1
83:1 وَيْلٌ لِّلْمُطَفِّفِيْنَۙ‏
وَيْلٌ கேடுதான் لِّلْمُطَفِّفِيْنَۙ‏ மோசடிக்காரர்களுக்கு
83:1. அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.
83:1. அளவில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான்.
83:1. அளவில் மோசடி செய்பவருக்குக் கேடுதான்!
83:1. (அளவையிலும், எடையிலும் மோசம் செய்து) குறைக்கக் கூடியவர்களுக்குக் கேடு உண்டாவதாக!
83:2
83:2 الَّذِيْنَ اِذَا اكْتَالُوْا عَلَى النَّاسِ يَسْتَوْفُوْنَۖ‏
الَّذِيْنَ எவர்கள் اِذَا اكْتَالُوْا அவர்கள் அளந்து வாங்கும் போது عَلَى النَّاسِ மக்களிடம் يَسْتَوْفُوْنَۖ‏ நிறைவாக வாங்குகின்றனர்
83:2. அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.
83:2. அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர்.
83:2. அவர்கள் எத்தகையோர் என்றால், மக்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்குகின்றார்கள்.
83:2. அவர்கள் எத்தகையோரென்றால், (தங்களுக்காக) மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கினால், நிறைவாக (அளந்து) வாங்கிக் கொள்கின்றனர்.
83:3
83:3 وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَّزَنُوْهُمْ يُخْسِرُوْنَؕ‏
وَاِذَا كَالُوْهُمْ இன்னும் அவர்கள் அவர்களுக்காக அளந்து கொடுக்கும் போது اَوْ அல்லது وَّزَنُوْهُمْ அவர்களுக்காக நிறுத்து கொடுக்கும் போது يُخْسِرُوْنَؕ‏ குறைத்துக் கொடுக்கிறார்கள்
83:3. ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
83:3. மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர்.
83:3. அவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறைத்துக் கொடுக்கின்றார்கள்.
83:3. (ஆனால்) தாங்கள் அவர்களுக்கு (-மற்ற மனிதர்களுக்கு) அளந்து கொடுத்தாலும், அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தாலும் (குறைத்து மோசடி செய்து அவர்களை) நஷ்டப்படுத்தி விடுகின்றனர்.
83:4
83:4 اَلَا يَظُنُّ اُولٰٓٮِٕكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَۙ‏
اَلَا يَظُنُّ நம்பவில்லையா? اُولٰٓٮِٕكَ அவர்கள் اَنَّهُمْ நிச்சயமாக தாங்கள் مَّبْعُوْثُوْنَۙ‏ எழுப்பப்படுவோம்
83:4. நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
83:4,5,4. மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா?
83:4. திண்ணமாக, அவர்கள் ஒரு மாபெரும் நாளில் எழுப்பிக் கொண்டுவரப்படவிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லையா?
83:4. அத்தகையோர் - நிச்சயமாக, தாம் (மறுமையில் உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லையா?
83:5
83:5 لِيَوْمٍ عَظِيْمٍۙ‏
لِيَوْمٍ ஒரு நாளில் عَظِيْمٍۙ‏ மகத்தான
83:5. மகத்தான ஒரு நாளுக்காக,
83:4,5,5. மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா?
83:5. ஒரு மாபெரும் நாளில்,
83:5. மகத்தான ஒரு நாளைக்காக-
83:6
83:6 يَّوْمَ يَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعٰلَمِيْنَؕ‏
يَّوْمَ அந்நாளில் يَقُوْمُ நிற்பார்கள் النَّاسُ மக்கள் لِرَبِّ இறைவனுக்கு முன் الْعٰلَمِيْنَؕ‏ அகிலத்தார்களின்
83:6. அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-
83:6. அந்நாளில், மனிதர்கள் அனைவருமே உலகத்தாரின் இறைவன் முன் (விசாரணைக்காக) நின்று கொண்டிருப்பார்கள்.
83:6. அந்நாளில், அனைத்துலகின் அதிபதியின் முன்னால் மாந்தர்கள் அனைவரும் நின்றுகொண்டிருப்பார்கள்.
83:6. (அந்நாளோ) அகிலத்தாரின் இரட்சகன் முன்னிலையில் மனிதர்கள் நிற்கும் நாள்.
83:7
83:7 كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْفُجَّارِ لَفِىْ سِجِّيْنٍؕ‏
كَلَّاۤ அவ்வாறல்ல اِنَّ كِتٰبَ நிச்சயமாக பதிவேடு الْفُجَّارِ தீயவர்களின் لَفِىْ سِجِّيْنٍؕ‏ சிஜ்ஜீனில்தான் இருக்கும்
83:7. ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது
83:7. நிச்சயமாக பாவிகளின் பதிவேடு (நரகத்தின்) சிறைக்கூடத்தில் இருக்கும்.
83:7. ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, தீயவர்களின் வினைப்பட்டியல் சிறைப்பதிவேட்டில் உள்ளது.
83:7. (தீயோர்கள் எண்ணுவது போல்) அல்ல! நிச்சயமாக (தீயோர்களான) பாவிகளின் (பதிவுப்) புத்தகம் ஸிஜ்ஜீனில் இருக்கிறது.
83:8
83:8 وَمَاۤ اَدْرٰٮكَ مَا سِجِّيْنٌؕ‏
وَمَاۤ இன்னும் எது اَدْرٰٮكَ உமக்கு அறிவித்தது مَا என்ன(வென்று) سِجِّيْنٌؕ‏ சிஜ்ஜீன்
83:8. “ஸிஜ்ஜீன்” என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
83:8. (நபியே!) அச்சிறைக்கூடத்தின் பதிவேட்டை நீர் அறிவீரா?
83:8. சிறைப்பதிவேடு என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
83:8. (நபியே!) ஸிஜ்ஜீன் என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
83:9
83:9 كِتٰبٌ مَّرْقُوْمٌؕ‏
كِتٰبٌ ஒரு பதிவேடு مَّرْقُوْمٌؕ‏ எழுதப்பட்ட
83:9. அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.
83:9. அது ஒரு பதிவுப்புத்தகம் (தண்டிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்கள் எல்லாம்) அதில் பதியப்பட்டிருக்கும்.
83:9. அது எழுதப்பட்ட ஒரு புத்தகமாகும்.
83:9. (பாவிகளின் செயல்கள்) எழுதப்பட்ட புத்தகமாகும்.
83:10
83:10 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَۙ‏
وَيْلٌ கேடுதான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَۙ‏ பொய்ப்பிப்பவர்களுக்கு
83:10. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
83:10. (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
83:10. அந்நாளில், பொய்யெனத் தூற்றுபவர்களுக்குக் கேடுதான்!
83:10. பொய்யாக்குபவருக்கு அந்நாளில் கேடுதான்!
83:11
83:11 الَّذِيْنَ يُكَذِّبُوْنَ بِيَوْمِ الدِّيْنِؕ‏
الَّذِيْنَ எவர்கள் يُكَذِّبُوْنَ பொய்ப்பிக்கின்றனர் بِيَوْمِ الدِّيْنِؕ‏ கூலி நாளை
83:11. அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.
83:11. அவர்கள் (இதை மட்டுமா பொய்யாக்குகின்றனர்?) கூலி கொடுக்கும் நாளையும் பொய்யாக்குகின்றனர்.
83:11. அவர்கள் எத்தகையவர்கள் எனில், கூலி கொடுக்கப்படும் நாளினை பொய் யென வாதிடுகின்றார்கள்.
83:11. அவர்கள் எத்தகையோரென்றால், கூலி கொடுக்கப்படும் நாளைப் பொய்யாக்குகின்றனர்.
83:12
83:12 وَمَا يُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِيْمٍۙ‏
وَمَا يُكَذِّبُ இன்னும் பொய்ப்பிக்க மாட்டார் بِهٖۤ அதை اِلَّا தவிர كُلُّ எல்லோரையும் مُعْتَدٍ வரம்பு மீறுகிறவன் اَثِيْمٍۙ‏ பெரும் பாவி
83:12. வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.
83:12. வரம்புமீறிய பாவியைத் தவிர (மற்றெவரும்) அதைப் பொய்யாக்க மாட்டான்.
83:12. அதை யாரும் பொய் யெனக் கூறுவதில்லை, வரம்பு மீறக்கூடிய தீய செயல்கள் செய்யக்கூடிய ஒவ்வொருவனையும் தவிர!
83:12. வரம்பு மீறிய பாவியான ஒவ்வொருவனையும் தவிர (மற்றெவனும்) அதனைப் பொய்யாக்கமாட்டான்.
83:13
83:13 اِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَؕ‏
اِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِ அவன் மீது اٰيٰتُنَا நம் வசனங்கள் قَالَ கூறுகிறான் اَسَاطِيْرُ கட்டுக் கதைகள் الْاَوَّلِيْنَؕ‏ முன்னோரின்
83:13. நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், “அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே” என்று கூறுகின்றான்.
83:13. அவனுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகள் தான் என்று கூறுகிறான்.
83:13. நம்முடைய வசனங்கள் அவனிடம் ஓதிக் காண்பிக்கப்பட்டால், “இவை பண்டைக் காலத்துக் கட்டுக்கதைகள்” என்று சொல்கின்றான்.
83:13. அவனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், (இது) முன்னோர்களின் கட்டுக்கதைகள் என அவன் கூறுகின்றான்.
83:14
83:14 كَلَّا ٚ ‌ بَلْ رَانَ عَلٰى قُلُوْبِهِمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ‏
كَلَّا அவ்வாறல்ல ٚ بَلْ மாறாக رَانَ மூடின عَلٰى மீது قُلُوْبِهِمْ அவர்களின் உள்ளங்கள் مَّا எது كَانُوْا இருந்தார்கள் يَكْسِبُوْنَ‏ செய்கிறார்கள்
83:14. அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.
83:14. நிச்சயமாக அவ்வாறல்ல. அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்களே அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப்படிந்து) மூடிக் கொண்டன. (ஆதலால்தான், இவ்வாறு கூறுகின்றனர்.)
83:14. ஒருபோதும் அவ்வாறில்லை. மாறாக, உண்மை யாதெனில், அவர்களுடைய தீயசெயல்களின் கறை அவர்களின் உள்ளங்களில் படிந்து விட்டிருக்கின்றது.
83:14. அவ்வாறன்று! பின்னர் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களின் இதயங்களின் மீது துருவாகப்படிந்து விட்டன. (ஆதலால்தான், இவ்வாறு கூறுகின்றனர்).
83:15
83:15 كَلَّاۤ اِنَّهُمْ عَنْ رَّبِّهِمْ يَوْمَٮِٕذٍ لَّمَحْجُوْبُوْنَ‌ؕ‏
كَلَّاۤ அவ்வாறல்ல اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் عَنْ رَّبِّهِمْ அவர்களுடைய இறைவனை விட்டு يَوْمَٮِٕذٍ அந்நாளில் لَّمَحْجُوْبُوْنَ‌ؕ‏ தடுக்கப்பட்டவர்கள்தான்
83:15. (தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.
83:15. அவ்வாறல்ல. (விசாரணைக்காகக் கொண்டு வரப்படும்) அந்நாளில் நிச்சயமாக இவர்கள் தங்கள் இறைவனை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள்.
83:15. ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, அவர்கள் அந்நாளில் தம் இறைவனைக் காணும் பேற்றினை விட்டு தடுத்து வைக்கப்படுவார்கள்.
83:15. (காஃபிர்கள் தங்களுக்கு இரட்சகனிடம் நெருக்கமிருப்பதாகக் கூறிக் கொண்டிருந்தார்களே அது) அவ்வாறல்ல! (விசாரணைக்காகக் கொண்டு வரப்படும்) அந்நாளில் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய இரட்சகனை (ப் பார்ப்பதை) விட்டும் மறைக்கப்பட்டவர்களாவர்.
83:16
83:16 ثُمَّ اِنَّهُمْ لَصَالُوا الْجَحِيْمِؕ‏
ثُمَّ பிறகு اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَصَالُوا எரியக் கூடியவர்கள்தான் الْجَحِيْمِؕ‏ ஜஹீம் என்ற நரகத்தில்
83:16. பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.
83:16. பின்னர், நிச்சயமாக இவர்கள் நரகத்தில் நுழைவார்கள்.
83:16. பின்னர், அவர்கள் உறுதியாக நரகில் வீழ்வார்கள்.
83:16. பின்னர், நிச்சயமாக அவர்கள் நரகத்தில் நுழையக்கூடியவர்கள் (ஆவர்.)
83:17
83:17 ثُمَّ يُقَالُ هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَؕ‏
ثُمَّ பிறகு يُقَالُ கூறப்படும் هٰذَا இதுதான் الَّذِىْ எது كُنْتُمْ இருந்தீர்கள் بِهٖ அதை تُكَذِّبُوْنَؕ‏ நீங்கள் பொய்ப்பித்தீர்கள்
83:17. “எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது” என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.
83:17. பின்னர், (இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தது இதுதான்'' என்று கூறப்படும்.
83:17. பின்னர், அவர்களிடம் “நீங்கள் பொய்யெனத் தூற்றிக் கொண்டிருந்தது இதுதான்” என்று கூறப்படும்.
83:17. பின்னர், (அவர்களிடம்)” எதை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அது இதுதான்” என்று கூறப்படும்.
83:18
83:18 كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْاَبْرَارِ لَفِىْ عِلِّيِّيْنَؕ‏
كَلَّاۤ அவ்வாறல்ல اِنَّ كِتٰبَ நிச்சயமாக பதிவேடு الْاَبْرَارِ நல்லோரின் لَفِىْ عِلِّيِّيْنَؕ‏ இல்லிய்யூனில்தான்
83:18. நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் “இல்லிய்யீ”னில் இருக்கிறது.
83:18. அவ்வாறல்ல! நிச்சயமாக நன்மை செய்தவர்களின் பதிவேடு ‘‘இல்லிய்யூன்' என்ற (மேலான) இடத்தில் இருக்கும்.
83:18. ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, நல்லோரின் வினைப்பட்டியல் மேன்மக்களின் பதிவேட்டில் உள்ளது.
83:18. (நல்லோர், தீயோர் ஆகியோரின் முடிவு ஒன்றுபோல்) அல்ல! நிச்சயமாக நன்மை செய்தோரின் பதிவேடு ‘இல்லிய்யூன்’ என்ற இடத்தில் இருக்கும்.
83:19
83:19 وَمَاۤ اَدْرٰٮكَ مَا عِلِّيُّوْنَؕ‏
وَمَاۤ எது اَدْرٰٮكَ உமக்கு அறிவித்தது مَا என்ன(வென்று) عِلِّيُّوْنَؕ‏ இல்லிய்யூன்
83:19. “இல்லிய்யுன்” என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
83:19. (நபியே!) ‘இல்லிய்யூன்' என்னும் (மேலான) இடத்தில் இருக்கும் பதிவேடு என்னவென்று நீர் அறிவீரா?
83:19. அந்த மேன்மக்களின் பதிவேடு என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
83:19. (நபியே!) ‘இல்லிய்யூன்’ என்றால் என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
83:20
83:20 كِتٰبٌ مَّرْقُوْمٌۙ‏
كِتٰبٌ ஒரு பதிவேடு مَّرْقُوْمٌۙ‏ எழுதப்பட்ட
83:20. (அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.
83:20. அது ஒரு பதிவுப் புத்தகம். அதில் (நல்லவர்களின் பெயர்களெல்லாம்) பதியப்பட்டிருக்கும்.
83:20. அது எழுதப்பட்ட ஒரு புத்தகம்;
83:20. (அது நல்லோர்களின் செயல்கள்) பதியப்பட்ட புத்தகம்.
83:21
83:21 يَّشْهَدُهُ الْمُقَرَّبُوْنَؕ‏
يَّشْهَدُهُ அதைக் கண்காணிக்கிறார்கள் الْمُقَرَّبُوْنَؕ‏ நெருக்கமானவர்கள்
83:21. (அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள்.
83:21. ‘முகர்ரப்' (இறைநெருக்கத்திற்குரிய) வானவர்கள் அதை(க் காத்து)ப் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
83:21. (இறைவனிடம்) நெருக்கமான வானவர்கள் அதனைப் பாதுகாக்கின்றார்கள்.
83:21. (அல்லாஹ்விடம்) நெருக்கமான(வான)வர்கள் அதனைப் பார்ப்பார்கள்.
83:22
83:22 اِنَّ الْاَبْرَارَ لَفِىْ نَعِيْمٍۙ‏
اِنَّ நிச்சயமாக الْاَبْرَارَ நல்லோர் لَفِىْ نَعِيْمٍۙ‏ நயீம் என்ற சொர்க்கத்தில்
83:22. நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) “நயீம்” என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
83:22. ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள் (அந்நாளில்) இன்பம் நிறைந்த சொர்க்கத்தில்,
83:22. திண்ணமாக, நல்லவர்கள் பேரின்பத்தில் இருப்பார்கள்.
83:22. நிச்சயமாக நல்லோர்கள் நயீமில் (சுவனபதிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கையில்) இருப்பா்.
83:23
83:23 عَلَى الْاَرَآٮِٕكِ يَنْظُرُوْنَۙ‏
عَلَى மீது الْاَرَآٮِٕكِ கட்டில்கள் يَنْظُرُوْنَۙ‏ பார்ப்பார்கள்
83:23. ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள்.
83:23. உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்த வண்ணம் சொர்க்கத்தின் காட்சிகளைப்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
83:23. உயர்தரமான சாய்வு இருக்கைகளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
83:23. (உயர்ந்த) சாய்வு இருக்கைகளின் மீது (இருந்தவாறு சுவனத்தின் காட்சிகளைப்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
83:24
83:24 تَعْرِفُ فِىْ وُجُوْهِهِمْ نَضْرَةَ النَّعِيْمِ‌ۚ‏
تَعْرِفُ அறிவீர் فِىْ وُجُوْهِهِمْ அவர்களின் முகங்களில் نَضْرَةَ செழிப்பை النَّعِيْمِ‌ۚ‏ இன்பத்தின்
83:24. அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.
83:24. அவர்கள் முகங்களில் அவர்களின் சுகவாசத்தின் செழிப்பை (நபியே!) நீர் அறிந்து கொள்வீர்.
83:24. அவர்களின் முகங்களில் சுகவாழ்வின் பொலிவை நீர் கண்டறிவீர்.
83:24. அவர்கள் முகங்களில் சுகபோகத்தின் செழிப்பை (நபியே) நீர் அறிந்து கொள்வீர்.
83:25
83:25 يُسْقَوْنَ مِنْ رَّحِيْقٍ مَّخْتُوْمٍۙ‏
يُسْقَوْنَ புகட்டப்படுவார்கள் مِنْ رَّحِيْقٍ மதுவிலிருந்து مَّخْتُوْمٍۙ‏ முத்திரையிடப்பட்ட
83:25. (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
83:25. முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற திராட்சை ரசம் அவர்களுக்குப் புகட்டப்படும்.
83:25. முத்திரையிடப்பட்ட மிகச்சிறந்த மதுபானம் அவர்களுக்குப் புகட்டப்படும்.
83:25. முத்திரையிடப்பட்ட கலப்பற்ற மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
83:26
83:26 خِتٰمُهٗ مِسْكٌ ‌ؕ وَفِىْ ذٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُوْنَ‏
خِتٰمُهٗ அதன் முத்திரை مِسْكٌ ؕ கஸ்தூரி وَفِىْ ذٰلِكَ இன்னும் அதில் فَلْيَتَنَافَسِ ஆகவே ஆசை வைக்கவும் الْمُتَنَافِسُوْنَ‏ ஆசை வைப்போர்
83:26. அதன் முத்திரை கஸ்தூரியாகும்; எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.
83:26. அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். (பானத்தை) ஆசை கொள்ள விரும்புவோர் அதையே ஆசை கொள்ளவும்.
83:26. அதன் மீது கஸ்தூரி முத்திரை பதிந்திருக்கும். போட்டியிட்டு முந்திக்கொள்ள முயல்பவர்கள், இதனை அடைந்து கொள்வதில் முந்திக்கொள்ள முயலட்டும்!
83:26. அதன் முத்திரை கஸ்தூரியினால் ஆனதாகும், (ஆகவே) இன்னும் (நல்லறங்கள் செய்து) அதற்கு முந்திக் கொள்பவர்கள் முந்திக் கொள்ளட்டும்.
83:27
83:27 وَ مِزَاجُهٗ مِنْ تَسْنِيْمٍۙ‏
وَ مِزَاجُهٗ இன்னும் அதன் கலவை مِنْ இருந்து تَسْنِيْمٍۙ‏ தஸ்னீம்
83:27. இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும்.
83:27. அதில் ‘தஸ்னீம்' என்ற (வடிகட்டிய) பானமும் கலந்திருக்கும்.
83:27. மேலும், அந்த பானத்தில் ‘தஸ்னீம்’ கலந்திருக்கும்.
83:27. இன்னும், அதன் கலவை (உயரத்திலிருந்து ஊற்றப்படும் சிறந்த நீரான) தஸ்னீம் (எனும் சுனை நீர்) ஆகும்.
83:28
83:28 عَيْنًا يَّشْرَبُ بِهَا الْمُقَرَّبُوْنَؕ‏
عَيْنًا ஒரு நீரூற்று يَّشْرَبُ بِهَا அதில்பருகுவார்கள் الْمُقَرَّبُوْنَؕ‏ நெருக்கமாக்கப்பட்டவர்கள்
83:28. அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.
83:28. (தஸ்னீம் என்பது அல்லாஹ்வுக்குச்) சமீபமானவர்கள் அருந்துவதற்கென ஏற்பட்ட ஒரு (சிறப்பான) சுனையின் நீராகும்.
83:28. அது ஒரு நீரூற்று. (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் அதன் நீருடன் மது அருந்துவார்கள்.
83:28. (தஸ்னீம் எனும்) நீர் ஊற்றை (அல்லாஹ்வுக்கு) நெருக்கமானவர்கள் அதனைப் பருகுவார்கள்.
83:29
83:29 اِنَّ الَّذِيْنَ اَجْرَمُوْا كَانُوْا مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا يَضْحَكُوْنَ  ۖ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ اَجْرَمُوْا குற்றம் புரிந்தவர்கள் كَانُوْا இருந்தார்கள் مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களைப் பார்த்து يَضْحَكُوْنَ  ۖ‏ சிரிப்பவர்களாக
83:29. நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
83:29. நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கை கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர்.
83:29. திண்ணமாக, குற்றம் புரிந்தவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களை (உலகில்) ஏளனம் செய்து கொண்டிருந்தார்கள்.
83:29. நிச்சயமாக குற்றமிழைத்தவர்கள், (உலகில்) விசுவாசங்கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிப்பவர்களாக இருந்தனர்.
83:30
83:30 وَاِذَا مَرُّوْا بِهِمْ يَتَغَامَزُوْنَ  ۖ‏
وَاِذَا مَرُّوْا இன்னும் அவர்கள் கடந்து செல்லும் போது بِهِمْ يَتَغَامَزُوْنَ  ۖ‏ அவர்களை/கண் ஜாடை காட்டுகிறார்கள்
83:30. அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.
83:30. அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக்கொள்கின்றனர்.
83:30. மேலும், அவர்களை இவர்கள் கடந்து செல்லும்போது கண்களால் சாடை காட்டிக் கொண்டிருந்தார்கள்.
83:30. அவர்கள் பக்கமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண்சாடை காட்டிக் கொள்ளவும் செய்வார்கள்.
83:31
83:31 وَاِذَا انْقَلَبُوْۤا اِلٰٓى اَهْلِهِمُ انْقَلَبُوْا فَكِهِيْنَ  ۖ‏
وَاِذَا انْقَلَبُوْۤا இன்னும் அவர்கள் திரும்பும் போது اِلٰٓى اَهْلِهِمُ தங்கள் குடும்பத்தாரிடம் انْقَلَبُوْا திரும்புகிறார்கள் فَكِهِيْنَ  ۖ‏ மகிழ்ச்சியாளர்களாக
83:31. இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.
83:31. (அவர்களை விட்டும் விலகித்) தங்கள் குடும்பத்தார்களிடம் சென்று விட்டபோதிலும், இவர்களுடைய விஷயங்களையே (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர்.
83:31. மேலும், தம் குடும்பத்தாரிடம் திரும்பும்போது மகிழ்ச்சி ஆரவாரத்துடன் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்.
83:31. மேலும், தங்கள் குடும்பத்தார்பால் திரும்பிச் செல்வார்களாயின் (தாங்கள் செய்ததைப்பற்றி மகிழ்ச்சியடைந்தவர்களாகத் திரும்புகின்றனர்.
83:32
83:32 وَاِذَا رَاَوْهُمْ قَالُوْۤا اِنَّ هٰٓؤُلَاۤءِ لَـضَآلُّوْنَۙ‏
وَاِذَا رَاَوْهُمْ இன்னும் அவர்கள் அவர்களைப் பார்க்கும் போது قَالُوْۤا கூறுகிறார்கள் اِنَّ நிச்சயமாக هٰٓؤُلَاۤءِ இவர்கள் لَـضَآلُّوْنَۙ‏ வழிதவறியவர்கள்தான்
83:32. மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், “நிச்சயமாக இவர்களே வழி தவறியவர்கள்” என்றும் கூறுவார்கள்.
83:32. (வழியில்) இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) ‘‘நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள்'' என்றும் கூறுகின்றனர்.
83:32. மேலும், அவர்களைப் பார்க்கும்போது, நிச்சயமாக இவர்கள் வழிகெட்டவர்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
83:32. (விசுவாசிகளாகிய) அவர்களை இவர்கள் பார்த்தால், “நிச்சயமாக இவர்கள் வழி தவறியவர்கள்” என்றும் கூறுகின்றனர்.
83:33
83:33 وَمَاۤ اُرْسِلُوْا عَلَيْهِمْ حٰفِظِيْنَۙ‏
وَمَاۤ اُرْسِلُوْا இன்னும் இவர்கள் அனுப்பப்படவில்லையே عَلَيْهِمْ அவர்கள் மீது حٰفِظِيْنَۙ‏ கண்காணிப் பவர்களாக
83:33. (முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!
83:33. (நம்பிக்கையாளர்களைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே!
83:33. ஆனால், அவர்களோ இறைநம்பிக்கையாளர்களை கண்காணிக்கக் கூடியவர்களாய் அனுப்பப்படவில்லை.
83:33. மேலும், (விசுவாசிகளான) அவர்கள் மீது (காஃபிர்களான) இவர்கள் பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லை.
83:34
83:34 فَالْيَوْمَ الَّذِيْنَ اٰمَنُوْا مِنَ الْكُفَّارِ يَضْحَكُوْنَۙ‏
فَالْيَوْمَ ஆகவே, இன்று الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்கள் مِنَ الْكُفَّارِ நிராகரிப்பாளர்களைப் பார்த்து يَضْحَكُوْنَۙ‏ சிரிப்பார்கள்
83:34. ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.
83:34. எனினும், (மறுமை நாளாகிய) இன்றைய தினம் நம்பிக்கை கொண்டவர்கள் அந்நிராகரிப்பவர்களைக் கண்டு சிரிக்கின்றனர்.
83:34. இன்று இறைநம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்களைப் பார்த்து சிரிக்கின்றார்கள்.
83:34. ஆனால் (மறுமை நாளாகிய) இன்றையத்தினம் விசுவாசங்கொண்டவர்கள் அந்நிராகரிப்போரைக் கண்டு சிரிப்பார்கள்.
83:35
83:35 عَلَى الْاَرَآٮِٕكِۙ يَنْظُرُوْنَؕ‏
عَلَى மீது الْاَرَآٮِٕكِۙ கட்டில்கள் يَنْظُرُوْنَؕ‏ பார்ப்பார்கள்
83:35. ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.
83:35. (சொர்க்கத்திலுள்ள சிறந்த) இருக்கைகள் மீது (சாய்ந்த வண்ணம்) இருந்து கொண்டு, இந்தப் பாவிகள் படும் வேதனையைப்) பார்த்துக்கொண்டு,
83:35. சாய்வு நாற்காலிகளில் சாய்ந்தவாறு (அவர்களின் நிலைகளைப்) பார்க்கின்றார்கள்.
83:35. (சுவனபதியிலுள்ள உயர்தரமான) சாய்வு இருக்கைகள் மீது இருந்து (கொண்டு, தீயவர்கள் படும் வேதனையைப்) பார்ப்பார்கள்.
83:36
83:36 هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوْا يَفْعَلُوْنَ‏
هَلْ ثُوِّبَ கூலி கொடுக்கப்பட்டார்களா? الْكُفَّارُ நிராகரிப்பாளர்கள் مَا எது كَانُوْا இருந்தார்கள் يَفْعَلُوْنَ‏ செய்கிறார்கள்
83:36. காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)
83:36. (மறுமையை) நிராகரித்த இவர்களுக்கு, இவர்களுடைய செயலுக்குத்தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்பார்கள்.)
83:36. கிடைத்துவிட்டதல்லவா, நிராகரிப்பாளர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்கான நற்கூலி!
83:36. (மறுமையை) நிராகரித்தோர், அவர்கள் செய்து கொண்டிருந்தவைக்கு(த் தக்க) கூலி கொடுக்கப்பட்டார்களா? (என்றும் பார்ப்பார்கள்,)