88. ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்)
மக்கீ, வசனங்கள்: 26

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
88:1
88:1 هَلْ اَتٰٮكَ حَدِيْثُ الْغَاشِيَةِؕ‏
هَلْ اَتٰٮكَ உமக்கு வந்ததா? حَدِيْثُ செய்தி الْغَاشِيَةِؕ‏ சூழக்கூடியதின்
88:1. சூழ்ந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
88:1. (நபியே! அனைவரையும்) சூழ்ந்து கொள்ளக்கூடிய (மறுமையைப் பற்றிய) செய்தி உமக்குக் கிடைத்ததா?
88:1. சூழ்ந்து கொள்ளக் கூடிய துன்பம் (அதாவது மறுமை) பற்றிய செய்தி உமக்கு வந்ததா?
88:1. (நபியே!) சூழ்ந்து கொள்ளக்கூடியதின் மறுமைநாளின்) செய்தி உமக்கு வந்ததா?
88:2
88:2 وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ خَاشِعَةٌ ۙ‏
وُجُوْهٌ முகங்கள் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் خَاشِعَةٌ ۙ‏ இழிவடையும்
88:2. அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
88:2. அந்நாளில், சில முகங்கள் இழிவடைந்து இருக்கும்.
88:2. அந்நாளில் சில முகங்கள் பீதியுற்றிருக்கும்;
88:2. அந்நாளில் (பல) முகங்கள் இழிவினால் வாடி பணிவுடையனவாயிருக்கும்.
88:3
88:3 عَامِلَةٌ نَّاصِبَةٌ ۙ‏
عَامِلَةٌ அனுபவிக்கும் نَّاصِبَةٌ ۙ‏ களைப்படையும்
88:3. அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
88:3. அவை (தவறான வழியில்) அமல் செய்து (அதிலேயே) நிலைத்திருந்தவை.
88:3. கடுமையான சிரமத்தை மேற் கொண்டிருக்கும்; களைத்துப் போயிருக்கும்;
88:3. அவை (தவறானவற்றை நல்லவை என நினைத்து) செயல்பட்டவையும் (அதற்காக) உறுதியாக நின்றவையுமாகும்.
88:4
88:4 تَصْلٰى نَارًا حَامِيَةً ۙ‏
تَصْلٰى பற்றி எரியும் نَارًا நெருப்பில் حَامِيَةً ۙ‏ கடுமையாக எரியக்கூடிய
88:4. கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
88:4. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கே அவை செல்லும்.
88:4. கனன்றெழும் நெருப்பில் கருகிக் கொண்டிருக்கும்;
88:4. கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் அவை பிரவேசிக்கும்.
88:5
88:5 تُسْقٰى مِنْ عَيْنٍ اٰنِيَةٍؕ‏
تُسْقٰى புகட்டப்படும் مِنْ இருந்து عَيْنٍ ஊற்று اٰنِيَةٍؕ‏ கொதிக்கக்கூடிய
88:5. கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
88:5. (அவை) கொதிக்கின்ற ஓர் ஊற்றிலிருந்து நீர் புகட்டப்படும்.
88:5. கொதிக்கும் ஊற்றுநீர் அவர்களுக்கு அருந்தக் கொடுக்கப்படும்;
88:5. கொதிக்கும் ஊற்றிலிருந்து (அவர்களுக்கு நீர்) புகட்டப்படும்.
88:6
88:6 لَـيْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِيْعٍۙ‏
لَـيْسَ இல்லை لَهُمْ அவர்களுக்கு طَعَامٌ உணவு اِلَّا தவிர مِنْ ضَرِيْعٍۙ‏ விஷச் செடியிலிருந்து
88:6. அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
88:6. அதில் அவர்களுக்கு(க் கருவேல) முட்களைத் தவிர, வேறொன்றும் உணவாகக் கிடைக்காது.
88:6. முட்கள் நிறைந்த காய்ந்துபோன புற்பூண்டைத் தவிர வேறெந்த உணவும் அவர்களுக்குக் கிடைக்காது.
88:6. (அதில்) அவர்களுக்கு (கசப்பான) முட்செடிகளிலிருந்தே தவிர (வேறொன்றும்) உணவுமில்லை.
88:7
88:7 لَّا يُسْمِنُ وَلَا يُغْنِىْ مِنْ جُوْعٍؕ‏
لَّا يُسْمِنُ கொழுக்க வைக்காது وَلَا يُغْنِىْ இன்னும் போக்காது مِنْ جُوْعٍؕ‏ பசியை
88:7. அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது; அன்றியும் பசியையும் தணிக்காது.
88:7. (அது அவர்களுடைய உடலைக்) கொழுக்கவும் வைக்காது; (அவர்களுடைய) பசியையும் தீர்த்து வைக்காது.
88:7. அது ஊட்டமும் தராது; பசியையும் போக்காது!
88:7. அது கொழுக்கவும் வைக்காது, அவர்களுடைய பசியையும் தீர்க்காது.
88:8
88:8 وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ نَّاعِمَةٌ ۙ‏
وُجُوْهٌ முகங்கள் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் نَّاعِمَةٌ ۙ‏ இன்புற்றிருக்கும்
88:8. அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
88:8. எனினும், அந்நாளில் வேறு சில முகங்களோ, மிக்க செழிப்பாக இருக்கும்.
88:8. வேறு சில முகங்கள் அந்நாளில் பொலிவுற்றிருக்கும்;
88:8. (எனினும்) அந்நாளில் (வேறு) சில முகங்கள் மிக்க மலர்ச்சியுடையனவாக இருக்கும்.
88:9
88:9 لِّسَعْيِهَا رَاضِيَةٌ ۙ‏
لِّسَعْيِهَا தன் செயலுக்காக رَاضِيَةٌ ۙ‏ திருப்தியடைந்திருக்கும்
88:9. தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
88:9. (இம்மையில்) தாங்கள் செய்த (நல்ல) காரியங்களைப் பற்றித் திருப்தியடையும்.
88:9. தன் செயல்கள் குறித்து திருப்தியடைந்திருக்கும்;
88:9. (இம்மையில்) நாங்கள் செய்த முயற்சி (நற்பயனைத் தந்தது) பற்றி திருப்தியுடையனவாக இருக்கும்.
88:10
88:10 فِىْ جَنَّةٍ عَالِيَةٍۙ‏
فِىْ جَنَّةٍ சொர்க்கத்தில் عَالِيَةٍۙ‏ உயர்வான
88:10. உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
88:10. (அவை) மேலான சொர்க்கத்தில் இருக்கும்.
88:10. உன்னதமான சுவனத்தில் இருக்கும்;
88:10. மேலான சுவனபதியில் (அவை) இருக்கும்.
88:11
88:11 لَّا تَسْمَعُ فِيْهَا لَاغِيَةً ؕ‏
لَّا تَسْمَعُ செவியுறாது فِيْهَا அதில் لَاغِيَةً ؕ‏ வீண் பேச்சை
88:11. அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
88:11. அதில் வீண் வார்த்தையை அவை செவியுறாது.
88:11. அவை அங்கு வீணானவற்றைச் செவியுற மாட்டா.
88:11. அதில் யாதொரு வீண் வார்த்தையையும் (அவை) செவியுறாது.
88:12
88:12 فِيْهَا عَيْنٌ جَارِيَةٌ‌ ۘ‏
فِيْهَا அதில் இருக்கும் عَيْنٌ ஊற்று جَارِيَةٌ‌ ۘ‏ ஓடக்கூடிய
88:12. அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
88:12. அதில் (இவர்கள் அருந்துவதற்கு) தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்ற (தெளிவான) ஒரு சுனையுண்டு.
88:12. ஓடிக்கொண்டிருக்கும் நீரூற்று அங்கு உண்டு;
88:12. அதில் (இவர்கள் பருகுவதற்கு) ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சுனையுண்டு.
88:13
88:13 فِيْهَا سُرُرٌ مَّرْفُوْعَةٌ ۙ‏
فِيْهَا அதில் இருக்கும் سُرُرٌ கட்டில்கள் مَّرْفُوْعَةٌ ۙ‏ உயர்வான
88:13. அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
88:13. அதில் (இவர்கள் அமருவதற்கு) உயர்ந்த இருக்கைகளுண்டு.
88:13. உயர்ந்த கட்டில்கள் அங்கு இருக்கும்;
88:13. அதில் உயர்ந்த ஆசனங்களுண்டு.
88:14
88:14 وَّاَكْوَابٌ مَّوْضُوْعَةٌ ۙ‏
وَّاَكْوَابٌ இன்னும் குவளைகள் مَّوْضُوْعَةٌ ۙ‏ (நிரப்பி) வைக்கப்பட்ட
88:14. (அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
88:14. (பல வகை இன்பமான பானங்கள் நிறைந்த) கெண்டிகள் (இவர்கள் முன்) வைக்கப்பட்டிருக்கும்.
88:14. மேலும், கிண்ணங்களும் வைக்கப்பட்டிருக்கும்.
88:14. (அதன் பானங்களையருந்த) வைக்கப்பட்ட குவளைகளும் (உண்டு) –
88:15
88:15 وَّنَمَارِقُ مَصْفُوْفَةٌ ۙ‏
وَّنَمَارِقُ இன்னும் தலையணைகள் مَصْفُوْفَةٌ ۙ‏ வரிசையாக வைக்கப்பட்ட
88:15. மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
88:15. (இவர்கள் சாய்ந்து கொள்வதற்காகத்) திண்டு தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்.
88:15. தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்;
88:15. வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகளும் -
88:16
88:16 وَّزَرَابِىُّ مَبْثُوْثَةٌ ؕ‏
وَّزَرَابِىُّ இன்னும் உயர்ரக விரிப்புகள் مَبْثُوْثَةٌ ؕ‏ விரிக்கப்பட்ட
88:16. விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
88:16. உயர்ந்த விரிப்புகள் இவர்களின் கீழ் விரிக்கப்பட்டிருக்கும். (இத்தகைய சுகபோகத்தில் நல்லடியார்கள் இருப்பார்கள்.)
88:16. எழிலான விரிப்புகளும் விரிக்கப்பட்டிருக்கும்.
88:16. விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் (உண்டு.)
88:17
88:17 اَفَلَا يَنْظُرُوْنَ اِلَى الْاِ بِلِ كَيْفَ خُلِقَتْ‏
اَفَلَا يَنْظُرُوْنَ பார்க்கமாட்டார்களா? اِلَى பக்கம் الْاِ بِلِ ஒட்டகத்தின் كَيْفَ எவ்வாறு خُلِقَتْ‏ அது படைக்கப்பட்டுள்ளது
88:17. (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
88:17. (நபியே! இந்நிராகரிப்பவர்கள் தங்களிடமுள்ள) ஒட்டகத்தையேனும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது?
88:17. (இம்மக்கள் நம்பிக்கை கொள்வதில்லை எனில்,) ஒட்டகங்களை இவர்கள் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று!
88:17. ஓட்டகத்தை – அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது? என்பதை அவர்கள் (கவனித்துப்) பார்க்க மாட்டார்களா?
88:18
88:18 وَاِلَى السَّمَآءِ كَيْفَ رُفِعَتْ‏
وَاِلَى இன்னும் பக்கம் السَّمَآءِ வானத்தின் كَيْفَ எவ்வாறு رُفِعَتْ‏ அது உயர்த்தப்பட்டுள்ளது
88:18. மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
88:18. (அவர்களுக்கு மேல் உள்ள) வானத்தையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
88:18. மேலும், வானத்தைப் பார்க்க வில்லையா, அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று!
88:18. மேலும், வானத்தின் பால்_ அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? (என்பதையும்)
88:19
88:19 وَاِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ‏
وَاِلَى இன்னும் பக்கம் الْجِبَالِ மலைகளின் كَيْفَ எவ்வாறு نُصِبَتْ‏ அது நிறுவப்பட்டுள்ளது
88:19. இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
88:19. (அவர்கள் கண்முன் தோன்றும்) மலைகளையும் அவர்கள் (கவனிக்க வேண்டாமா?) அவை எவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன?
88:19. மேலும், மலைகளைப் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு ஊன்றப்பட்டுள்ளன என்று!
88:19. (அசையாது ஸ்திரப்படுத்தப்பட்ட) மலைகள் பால் அவை எவ்வாறு நடப்பட்டுள்ளன? (என்பதையும்)-
88:20
88:20 وَاِلَى الْاَرْضِ كَيْفَ سُطِحَتْ‏
وَاِلَى இன்னும் பக்கம் الْاَرْضِ பூமியின் كَيْفَ எவ்வாறு سُطِحَتْ‏ அது விரிக்கப்பட்டுள்ளது
88:20. இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
88:20. (அவர்கள் வசிக்கும்) பூமியையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது?
88:20. மேலும், பூமியைப் பார்க்கவில்லையா, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று!
88:20. இன்னும், (அவர்கள் வசிக்கும்) பூமியின் பால் - அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் அவர்கள் கவனிக்கமாட்டார்களா?)
88:21
88:21 فَذَكِّرْ ؕ اِنَّمَاۤ اَنْتَ مُذَكِّرٌ ؕ‏
فَذَكِّرْ ؕ ஆகவே, அறிவுரை கூறுவீராக اِنَّمَاۤ اَنْتَ நீரெல்லாம் مُذَكِّرٌ ؕ‏ அறிவுரை கூறுபவர்தான்
88:21. ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக; நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
88:21. (ஆகவே, நபியே!) இவற்றை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்து, இவற்றைப் படைத்தவனின் அருள்களை, அவர்களுக்கு நீர் கூறி) நல்லுபதேசம் செய்வீராக! (இவற்றைக்கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறாவிடில் அதற்காக நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) நீர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தான்,
88:21. சரி (நபியே!) நீர் அறிவுரை புரிந்தவண்ணம் இருப்பீராக! திண்ணமாக, நீர் அறிவுரை புரிபவர் மட்டுமே ஆவீர்!
88:21. ஆகவே, நபியே! நல்லுபதேசம் செய்வீராக! நிச்சயமாக நீர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தாம்.
88:22
88:22 لَـسْتَ عَلَيْهِمْ بِمُصَۜيْطِرٍۙ‏
لَـسْتَ நீர் இல்லை عَلَيْهِمْ அவர்களை بِمُصَۜيْطِرٍۙ‏ நிர்ப்பந்திப்பவராக
88:22. அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
88:22. (அவ்வாறே நடக்கும்படி) அவர்களை நீர் நிர்ப்பந்திக்கக்கூடியவர் அல்ல.
88:22. அவர்களை நீர் நிர்ப்பந்திப்பவர் அல்லர்.
88:22. அவ்வாறே நடக்கும்படி அவர்கள் மீது நீர் பொறுப்புச்சாட்டப்பட்டவரல்லர்.
88:23
88:23 اِلَّا مَنْ تَوَلّٰى وَكَفَرَۙ‏
اِلَّا எனினும் مَنْ யார் تَوَلّٰى விலகினாரோ وَكَفَرَۙ‏ இன்னும் நிராகரித்தாரோ
88:23. ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
88:23. எனினும், எவர்கள் புறக்கணித்து நிராகரிக்கிறார்களோ,
88:23. ஆனால், எவன் புறக்கணித்தானோ மேலும், நிராகரித்தானோ
88:23. ஆயினும் எவர் புறக்கணித்து நிராகரிக்கின்றாரோ –
88:24
88:24 فَيُعَذِّبُهُ اللّٰهُ الْعَذَابَ الْاَكْبَرَؕ‏
فَيُعَذِّبُهُ அவரை வேதனைசெய்வான் اللّٰهُ அல்லாஹ் الْعَذَابَ வேதனையால் الْاَكْبَرَؕ‏ மிகப்பெரும்
88:24. அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
88:24. அவர்களை அல்லாஹ் பெரும் வேதனை செய்வான்.
88:24. அவனுக்கு அல்லாஹ் கடினமான தண்டனை அளிப்பான்.
88:24. அவரை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையாக வேதனை செய்வான்.
88:25
88:25 اِنَّ اِلَيْنَاۤ اِيَابَهُمْۙ‏
اِنَّ நிச்சயமாக اِلَيْنَاۤ நம் பக்கம்தான் اِيَابَهُمْۙ‏ அவர்களின் திரும்புதல்
88:25. நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
88:25. நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம்தான் வர வேண்டும்.
88:25. திண்ணமாக, இவர்கள் நம் பக்கமே திரும்பி வர வேண்டியுள்ளது.
88:25. நிச்சயமாக அவர்களின் மீட்சி நம் பக்கமேயாகும்.
88:26
88:26 ثُمَّ اِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ‏
ثُمَّ பிறகு اِنَّ عَلَيْنَا நிச்சயமாக நம்மீதே حِسَابَهُمْ‏ அவர்களை விசாரிப்பது
88:26. பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.
88:26. நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்குக் கேட்பதும் நம் மீதுதான் கடமையாகும்.
88:26. பிறகு, இவர்களிடம் கணக்கு வாங்கும் பொறுப்பு நம்மீதே உள்ளது.
88:26. பின்னர், நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பது நம்மீதேயாகும்.