90. ஸூரத்துல் பலத்(நகரம்)
மக்கீ, வசனங்கள்: 20

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
90:1
90:1 لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِۙ‏
لَاۤ اُقْسِمُ சத்தியம் செய்கிறேன்! بِهٰذَا الْبَلَدِۙ‏ இந்த நகரத்தின் மீது
90:1. இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
90:1. (நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
90:1. இல்லை! இந்த (மக்கா) நகரின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்!
90:1. (நபியே!) இந்த (மக்கா) நகரத்தின்மீது நான் சத்தியம் செய்கிறேன்.
90:2
90:2 وَاَنْتَ حِلٌّ ۢ بِهٰذَا الْبَلَدِۙ‏
وَاَنْتَ நீர் حِلٌّ ۢ அனுமதிக்கப்பட்டவர் بِهٰذَا الْبَلَدِۙ‏ இந்நகரத்தில்
90:2. நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
90:2. அதிலும் நீர் இந்நகரத்தில் தங்கக்கூடிய சமயத்தில்.
90:2. மேலும், நிலைமை என்னவெனில், (நபியே!) இந்நகரத்தில் நீர் ஆகுமாக்கப்பட்டுள்ளீர்!
90:2. இந்நகரத்தில் (போர்செய்வது சற்று நேரம் உமக்கு ஆகுமாக்கப்பட்டதாக இருக்க) நீர் தங்கியிருக்கும் நிலையில்,
90:3
90:3 وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۙ‏
وَوَالِدٍ தந்தையின் மீது சத்தியமாக وَّمَا وَلَدَ ۙ‏ அவர் பெற்றெடுத்ததின் மீது சத்தியமாக
90:3. பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
90:3. (மனிதர்களின்) தந்தை மீதும், அவர் பெற்றெடுத்த சந்ததிகள் மீதும் சத்தியமாக!
90:3. மேலும் தந்தை (ஆதம்) மீதும் அவரிலிருந்து பிறந்த மக்கள் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
90:3. தந்தையின்மீதும் பிறந்தோ(ராகிய சந்ததியின)ரின் மீதும் சத்தியமாக,
90:4
90:4 لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْ كَبَدٍؕ‏
لَقَدْ திட்டவட்டமாக خَلَقْنَا படைத்தோம் الْاِنْسَانَ மனிதனை فِىْ كَبَدٍؕ‏ சிரமத்தில்
90:4. திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
90:4. மெய்யாகவே நாம் மனிதனை சிரமத்தில் மூழ்கியவனாகவே படைத்திருக்கிறோம்.
90:4. திண்ணமாக, நாம் மனிதனைப் பெரும் கஷ்டத்தில் படைத்திருக்கின்றோம்.
90:4. திட்டமாக நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்திருக்கின்றோம்.
90:5
90:5 اَيَحْسَبُ اَنْ لَّنْ يَّقْدِرَ عَلَيْهِ اَحَدٌ‌ ۘ‏
اَيَحْسَبُ எண்ணுகின்றானா اَنْ لَّنْ يَّقْدِرَ ஆற்றல் பெறவே மாட்டான் عَلَيْهِ اَحَدٌ ۘ‏ தன்மீது/ஒருவனும்
90:5. “ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்” என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
90:5. (அவ்வாறிருக்க,) அவன் தன்னை அடக்க எவராலும் முடியாது என்று எண்ணிக் கொண்டானா?
90:5. ‘அவன் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது’ என்று அவன் நினைத்திருக்கின்றானா?
90:5. “நிச்சயமாக ஒருவரும் (தன்னை தண்டிக்க) தன்மீது சக்தி பெறவே மாட்டார்” என அவன் எண்ணிக் கொள்கிறானா?
90:6
90:6 يَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًا ؕ‏
يَقُوْلُ கூறுகிறான் اَهْلَكْتُ நான் அழித்தேன் مَالًا செல்வத்தை لُّبَدًا ؕ‏ அதிகமான
90:6. “ஏராளமான பொருளை நான் அழித்தேன்” என்று அவன் கூறுகிறான்.
90:6. ‘‘ஏராளமான பொருளை நான் (சம்பாதித்துச் செலவு செய்து) அழித்துவிட்டேன்'' என்று, அவன் (கர்வம் கொண்டு பெருமையாகக்) கூறுகிறான்.
90:6. “ஏராளமான செல்வங்களை வாரி இறைத்துவிட்டேன்” என்று அவன் கூறுகின்றான்.
90:6. “ஏராளமான பொருளை நான் (முஹம்மதின் விரோதத்திற்காக) அழித்திருக்கிறேன்” என்று (ஹாரிஸாகிய) அவன் (ஆணவமாகக்) கூறுகின்றான்.
90:7
90:7 اَيَحْسَبُ اَنْ لَّمْ يَرَهٗۤ اَحَدٌ ؕ‏
اَيَحْسَبُ எண்ணுகின்றானா اَنْ لَّمْ يَرَهٗۤ அவனைப் பார்க்கவில்லை اَحَدٌ ؕ‏ ஒருவனும்
90:7. தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
90:7. அவ்வளவு பொருளை ஒருவருமே பார்த்திருக்கவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானோ?
90:7. யாருமே அவனைப் பார்க்கவில்லை என்று அவன் கருதுகின்றானா?
90:7. நிச்சயமாக ஒருவருமே தன்னை பார்க்கவில்லையென்று அவன் எண்ணிக் கொள்கின்றானா?
90:8
90:8 اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَيْنَيْنِۙ‏
اَلَمْ نَجْعَلْ நாம் ஆக்கவில்லையா? لَّهٗ அவனுக்கு عَيْنَيْنِۙ‏ இரு கண்களை
90:8. அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?
90:8. (பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? (அவ்வாறிருந்தும் உண்மையை அவன் கண்டுகொள்ளவில்லை.)
90:8. அவனுக்கு நாம் இரு கண்களையும்
90:8. இரு கண்களை அவனுக்கு நாம் அமைக்கவில்லையா?
90:9
90:9 وَلِسَانًا وَّشَفَتَيْنِۙ‏
وَلِسَانًا இன்னும் ஒரு நாவை وَّشَفَتَيْنِۙ‏ இன்னும் இரு உதடுகளை
90:9. மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
90:9. (பேசக்கூடிய) ஒரு நாவையும், இரு உதடுகளையும் (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதைத் தானாகவே அவன் அடைந்துவிட்டானா?)
90:9. ஒரு நாவையும் இரு உதடுகளையும் அளிக்கவில்லையா?
90:9. ஒரு நாவையும் இரு உதடுகளையும் (நாம் அவனுக்கு அமைக்கவில்லையா?)
90:10
90:10 وَهَدَيْنٰهُ النَّجْدَيْنِ‌ۚ‏
وَهَدَيْنٰهُ இன்னும் அவனுக்கு வழி காட்டினோம் النَّجْدَيْنِ‌ۚ‏ இரு பாதைகளை
90:10. அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
90:10. (நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம்;
90:10. மேலும், (நன்மை, தீமையின்) தெளிவான இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டிவிட்டோம். (இல்லையா?)
90:10. மேலும், (நன்மை, தீமையாகிய) இரு வழிகளை நாம் அவனுக்குக் காண்பித்துவிட்டோம்.
90:11
90:11 فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ۖ‏
فَلَا اقْتَحَمَ அவன் கடக்கவில்லை الْعَقَبَةَ ۖ‏ அகபா (மலை)
90:11. ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
90:11. எனினும், (இதுவரை) அவன் ‘அகபா'வை (கணவாயை)க் கடக்கவில்லை.
90:11. ஆயினும், அவன் கடினமான மலைப் பாதையைக் கடந்து செல்லத் துணியவில்லை.
90:11. எனினும், (இதுவரையில்) அவன் “அகபா”வைக் கடக்கவில்லை.
90:12
90:12 وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْعَقَبَةُ ؕ‏
وَمَاۤ எது? اَدْرٰٮكَ உமக்கு அறிவித்தது مَا என்ன? الْعَقَبَةُ ؕ‏ அகபா
90:12. (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
90:12. (நபியே!) ‘அகபா' என்னவென்று நீர் அறிவீரா?
90:12. கடினமான அந்த மலைப்பாதை எதுவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
90:12. (நபியே!) “அகபா” என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
90:13
90:13 فَكُّ رَقَبَةٍ ۙ‏
فَكُّ விடுதலை செய்தல் رَقَبَةٍ ۙ‏ ஓர் அடிமையை
90:13. (அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
90:13. அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது.
90:13. (அதுதான்) ஒருவனை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பது ஆகும்;
90:13. (அது தான்) ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும்.
90:14
90:14 اَوْ اِطْعٰمٌ فِىْ يَوْمٍ ذِىْ مَسْغَبَةٍ ۙ‏
اَوْ அல்லது اِطْعٰمٌ உணவளித்தல் فِىْ يَوْمٍ நாளில் ذِىْ مَسْغَبَةٍ ۙ‏ கடும் பசியுடைய
90:14. அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
90:14-16,14. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
90:14. அல்லது பட்டினி நாளில் உணவளிப்பதும் ஆகும்.
90:14. அல்லது பசியுடைய நாளில் உணவளித்தலாகும்.
90:15
90:15 يَّتِيْمًا ذَا مَقْرَبَةٍ ۙ‏
يَّتِيْمًا ஓர் அனாதைக்கு ذَا مَقْرَبَةٍ ۙ‏ உறவினரான
90:15. உறவினனான ஓர் அநாதைக்கோ,
90:14-16,15. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
90:15. உறவினரான அநாதைக்கோ
90:15. (யாருக்கெனில்) நெருங்கிய உறவுடைய ஒரு அநாதைக்கு.
90:16
90:16 اَوْ مِسْكِيْنًا ذَا مَتْرَبَةٍ ؕ‏
اَوْ அல்லது مِسْكِيْنًا ஓர் ஏழைக்கு ذَا مَتْرَبَةٍ ؕ‏ வறியவரான
90:16. அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
90:14-16,16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
90:16. அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ (உணவளிப்பதும் ஆகும்!)
90:16. அல்லது (வறுமையால்) மண்ணில் உழலும் ஏழைக்கு (உணவளிப்பதாகும்.)
90:17
90:17 ثُمَّ كَانَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ؕ‏
ثُمَّ பிறகு كَانَ அவர் ஆகிவிடவேண்டும் مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا எவர்களில்/நம்பிக்கை கொண்டார்கள் وَتَوَاصَوْا இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள் بِالصَّبْرِ பொறுமையை கொண்டும் وَتَوَاصَوْا இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள் بِالْمَرْحَمَةِ ؕ‏ கருணையை கொண்டும்
90:17. பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
90:17. பிறகு, எவர்கள் நம்பிக்கை கொண்டும் ஒருவருக்கொருவர் பொறுமையைக் கடைபிடிக்குமாறு நல்லுபதேசம் செய்துகொண்டும், கருணை காட்டவேண்டும் என்று ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்துகொண்டும் இருக்கிறார்களோ அவர்களிலும் அவர் சேர்ந்துவிடுவார்.
90:17. பின்னர் (அத்துடன்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, பொறுமையை மேற்கொள்ளவும் (மக்கள் மீது) இரக்கம் காட்டவும், ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுகின்றார்களோ, அவர்களில் ஒருவனாக அவன் இருக்கவேண்டும்.
90:17. பின்னர் விசுவாசங்கொண்டு பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், (அல்லாஹ்வின் அடியார்களுக்கு) அன்பு செலுத்துமாறு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துகொண்டும் இருந்தோரில் உள்ளவராக அவர் இருப்பதாகும்.
90:18
90:18 اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْمَيْمَنَةِ ؕ‏
اُولٰٓٮِٕكَ இவர்கள் اَصْحٰبُ الْمَيْمَنَةِ ؕ‏ வலப்பக்கமுடையவர்கள்
90:18. அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
90:18. இவர்கள்தான் வலது பக்கத்தில் இருப்பவர்கள்.
90:18. இத்தகையோர்தாம் வலப்பக்கத்தார்.
90:18. இத்தகையோர் தாம் வலப்புறத்தை உடையோர்.
90:19
90:19 وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْــٴَــمَةِ ؕ‏
وَالَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள்தான் بِاٰيٰتِنَا நம் வசனங்களை هُمْ அவர்கள் اَصْحٰبُ الْمَشْــٴَــمَةِ ؕ‏ இடபக்கமுடையவர்கள்
90:19. ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
90:19. எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள்தான் இடப்பக்கத்தில் இருப்பவர்கள்.
90:19. மேலும், எவர்கள் நம்முடைய வசனங்களை ஏற்க மறுத்தார்களோ அவர்கள் இடப் பக்கத்தார்.
90:19. இன்னும், நம்முடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களே, அத்தகையோர் - அவர்கள் இடப்புறத்தையுடையோர்,
90:20
90:20 عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ‏
عَلَيْهِمْ அவர்கள் மீது نَارٌ நரகம் مُّؤْصَدَةٌ‏ மூடப்படும்
90:20. அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.
90:20. அவர்களை நரகத்தில் போட்டு (எல்லா வழிகளும்) மூடப்பட்டுவிடும்.
90:20. அவர்கள் மீது நெருப்பு படர்ந்திருக்கும்.
90:20. அவர்கள்மீது (எல்லாப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கும்.