94. ஸூரத்து அலம் நஷ்ரஹ்(விரிவாக்கல்)
மக்கீ, வசனங்கள்: 8

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
94:1
94:1 اَلَمْ نَشْرَحْ لَـكَ صَدْرَكَۙ‏
اَلَمْ نَشْرَحْ நாம் விரிவாக்கவில்லையா لَـكَ உமக்கு صَدْرَكَۙ‏ உம் நெஞ்சத்தை
94:1. நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
94:1. (நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா?
94:1. (நபியே!) நாம் உம்முடைய இதயத்தை உமக்காக விரிவாக்கித் தரவில்லையா?
94:1. (நபியே!) உமது நெஞ்சை உமக்காக நாம் விரிவாக்கவில்லையா?
94:2
94:2 وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ‏
وَوَضَعْنَا இன்னும் அகற்றினோம் عَنْكَ உம்மை விட்டு وِزْرَكَۙ‏ உம் சுமையை
94:2. மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
94:2. உமது சுமையையும் உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம்.
94:2. மேலும், உம்முடைய சுமையை உம்மைவிட்டு நாம் இறக்கிவைத்தோம்.
94:2. மேலும், உமது சுமையை உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம்.
94:3
94:3 الَّذِىْۤ اَنْقَضَ ظَهْرَكَۙ‏
الَّذِىْۤ எது اَنْقَضَ முறித்தது ظَهْرَكَۙ‏ உம் முதுகை
94:3. அது உம் முதுகை முறித்துக் கொண்டிருந்தது.
94:3. அது, உமது இடுப்பையே முறித்துக் கொண்டிருந்தது.
94:3. (அது) உம்முடைய முதுகை முறித்துக் கொண்டிருந்தது.
94:3. அ(ச்சுமையான)து எத்தகையதென்றால், உமது முதுகை முறித்து(உமக்குப் பளுவாகி) விட்டது.
94:4
94:4 وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَؕ‏
وَرَفَعْنَا இன்னும் உயர்த்தினோம் لَـكَ உமக்கு ذِكْرَكَؕ‏ உம் நினைவை
94:4. மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
94:4. உமது கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம்.
94:4. மேலும், உமக்காக உம் புகழினை உயர்த்தினோம்.
94:4. உமது நினைவை (கீர்த்தியை) உமக்காக நாமே உயர்த்தினோம்.
94:5
94:5 فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ‏
فَاِنَّ ஆகவே,நிச்சயமாக مَعَ உடன் الْعُسْرِ சிரமம் يُسْرًا ۙ‏ இலேசு
94:5. ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
94:5. நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
94:5. உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.
94:5. ஆகவே, நிச்சயமாக கஷ்டத்துடன் இலேசு இருக்கிறது.
94:6
94:6 اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ؕ‏
اِنَّ நிச்சயமாக مَعَ உடன் الْعُسْرِ சிரமம் يُسْرًا ؕ‏ இலேசு
94:6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
94:6. மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
94:6. திண்ணமாக, சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது.
94:6. நிச்சயமாக கஷ்டத்துடன் இலேசு இருக்கிறது.
94:7
94:7 فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ‏
فَاِذَا ஆகவே நீர் ஓய்வு பெற்றால் فَرَغْتَ فَانْصَبْۙ‏ களைப்படைவீராக
94:7. எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
94:7. ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக.
94:7. எனவே, நீர் ஓய்வு பெறும்போது வணக்க வழிபாட்டின் கடும் உழைப்பில் முனைப்புடன் ஈடுபடுவீராக!
94:7. ஆகவே, நீர் (உலகக் காரியங்களிலிருந்து விடுபட்டால் (தொழுவதற்கு) நீர் சிரத்தை எடுத்துக் கொள்வீராக!
94:8
94:8 وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ‏
وَاِلٰى இன்னும் பக்கம் رَبِّكَ உம் இறைவன் فَارْغَبْ‏ ஆர்வம் கொள்வீராக
94:8. மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
94:8. மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக!
94:8. மேலும், உம் இறைவனின் பக்கமே ஆர்வம் கொள்வீராக!
94:8. மேலும், உமதிரட்சகன் பக்கம் நீர் விருப்பம் கொள்வீராக!