95. ஸூரத்துத் தீன் (அத்தி)
மக்கீ, வசனங்கள்: 8

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
95:1
95:1 وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ‏
وَالتِّيْنِ அத்தி மரத்தின் மீது சத்தியமாக وَالزَّيْتُوْنِۙ‏ ஜைதூன் மரத்தின் மீது சத்தியமாக
95:1. அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
95:1. அத்தியின் மீதும்,ஜெய்தூனின் மீதும் சத்தியமாக!
95:1. அத்தியின் மீதும் ஒலிவத்தின் மீதும் சத்தியமாக!
95:1. அத்தியின்மீதும் ஜைதூனின் (ஒலிவத்தின்) மீதும் சத்தியமாக –
95:2
95:2 وَطُوْرِ سِيْنِيْنَۙ‏
وَطُوْرِ மலையின் மீது சத்தியமாக سِيْنِيْنَۙ‏ சினாய்
95:2. “ஸினாய்” மலையின் மீதும் சத்தியமாக-
95:2. ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக!
95:2. சினாய் மலையின் மீதும்
95:2. ஸினாய் மலையின்மீதும் சத்தியமாக –
95:3
95:3 وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِۙ‏
وَ சத்தியமாக هٰذَا இந்த الْبَلَدِ நகரம் الْاَمِيْنِۙ‏ அபயமளிக்கக்கூடிய
95:3. மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
95:3. அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக,
95:3. மேலும், அமைதியான இந்த (மக்கா) நகரத்தின் மீதும் சத்தியமாக!
95:3. (மக்காவாகிய) அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக –
95:4
95:4 لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏
لَقَدْ خَلَقْنَا திட்டமாக படைத்தோம் الْاِنْسَانَ மனிதனை فِىْۤ இல் اَحْسَنِ மிக அழகிய تَقْوِيْمٍ‏ அமைப்பு
95:4. திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
95:4. நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம்.
95:4. திண்ணமாக, நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம்.
95:4. நிச்சயமாக நாம் மனிதனை மிக அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்.
95:5
95:5 ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سَافِلِيْنَۙ‏
ثُمَّ பிறகு رَدَدْنٰهُ அவனைத் திருப்பினோம் اَسْفَلَ மிகத் தாழ்ந்தவனாக سَافِلِيْنَۙ‏ தாழ்ந்தோரில்
95:5. பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
95:5. (அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகிறோம்.
95:5. பிறகு, நேர்மாறாக, தாழ்ந்தவர்களில் மிகவும் தாழ்ந்தவனாக அவனை ஆக்கினோம்.
95:5. பின்னர், அவனைத் தாழ்ந்தோரிலும் மிகத் தாழ்ந்தோனாக்கினோம்
95:6
95:6 اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍؕ‏
اِلَّا தவிர الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நற்செயல்களை فَلَهُمْ ஆகவே அவர்களுக்கு اَجْرٌ நன்மை غَيْرُ مَمْنُوْنٍؕ‏ முடிவுறாத
95:6. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு.
95:6. ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு.
95:6. ஆனால், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து கொண்டிருந்தவர்களைத் தவிர! அவர்களுக்கு முடிவில்லாத நற்கூலி இருக்கின்றது.
95:6. விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோரைத் தவிர, அவர்களுக்கு முடிவடையாத (நற்) கூலியுண்டு.
95:7
95:7 فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّيْنِ‏
فَمَا يُكَذِّبُكَ ஆகவே யார்தான் உம்மை பொய்ப்பிப்பார் بَعْدُ (இதற்குப்) பின்னர் بِالدِّيْنِ‏ மார்க்கத்தில்
95:7. எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
95:7. கூலி கொடுக்கும் நாளைப் பற்றி (நபியே!) இதற்குப் பின்னர், உம்மை எவர்தான் பொய்யாக்க முடியும்?
95:7. எனவே (நபியே!) இதன் பிறகும், நற்கூலி தண்டனை வழங்கப்படும் விஷயத்தில் உம்மை யாரால் பொய்யர் எனத் தூற்ற முடியும்?
95:7. (சான்றுகளுக்குப்) பின் (நபியே!) நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மை எது பொய்யக்க முடியும்?
95:8
95:8 اَلَيْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِيْنَ‏
اَلَيْسَ இல்லையா? اللّٰهُ அல்லாஹ் بِاَحْكَمِ மிக மேலான தீர்ப்பளிப்பவனாக الْحٰكِمِيْنَ‏ தீர்ப்பளிப்பவர்களில்
95:8. அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?
95:8. தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?
95:8. அல்லாஹ் ஆட்சியாளர்கள் அனைவரிலும் மாபெரும் ஆட்சியாளன் இல்லையா?
95:8. தீர்ப்பளிப்போர்களிலெல்லாம் அல்லாஹ் மிக்க மேலாகத் தீர்ப்பளிப்போனாக இல்லையா?