தேடல்


2:125
2:125 وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّى‌ ؕ وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ‏
وَاِذْ இன்னும் சமயம் جَعَلْنَا ஆக்கினோம் الْبَيْتَ (வீடு) கஅபாவை مَثَابَةً ஒரு திரும்புமிடமாக لِّلنَّاسِ மனிதர்களுக்கு وَاَمْنًا ؕ இன்னும் பாதுகாப்பாக وَاتَّخِذُوْا இன்னும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் مِنْ مَّقَامِ நின்ற இடத்தில் اِبْرٰهٖمَ இப்ராஹீம் مُصَلًّى‌ ؕ தொழுமிடத்தை وَعَهِدْنَآ இன்னும் கட்டளையிட்டோம் اِلٰٓى اِبْرٰهٖمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் اَنْ طَهِّرَا நீங்கள் இருவரும் சுத்தப்படுத்துங்கள் بَيْتِىَ என் வீட்டை لِلطَّآٮِٕفِيْنَ தவாஃப் சுற்றுபவர்களுக்கு وَالْعٰكِفِيْنَ இன்னும் தங்குபவர்கள் وَالرُّکَّعِ இன்னும் குனிபவர்கள் السُّجُوْدِ‏ சிரம் பணிபவர்கள்
2:125. (இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
2:127
2:127 وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُؕ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ‌ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
وَاِذْ இன்னும் சமயம் يَرْفَعُ உயர்த்தினார் اِبْرٰهٖمُ இப்ராஹீம் الْقَوَاعِدَ அஸ்திவாரங்கள் مِنَ الْبَيْتِ வீட்டின் وَاِسْمٰعِيْلُؕ இன்னும் இஸ்மாயீல் رَبَّنَا எங்கள் இறைவா تَقَبَّلْ ஏற்றுக் கொள் مِنَّا ؕ எங்களிடமிருந்து اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ மிக அறிந்தவன்
2:127. இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்)
2:133
2:133 اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ يَعْقُوْبَ الْمَوْتُۙ اِذْ قَالَ لِبَنِيْهِ مَا تَعْبُدُوْنَ مِنْۢ بَعْدِىْؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآٮِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
اَمْ அல்லது كُنْتُمْ இருந்தீர்கள் شُهَدَآءَ சாட்சிகளாக اِذْ போது حَضَرَ வந்தது يَعْقُوْبَ யஃகூபுக்கு الْمَوْتُۙ மரணம் اِذْ போது قَالَ கூறினார் لِبَنِيْهِ பிள்ளைகளை நோக்கி/தன் مَا யாரை تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குவீர்கள் مِنْۢ بَعْدِىْؕ எனக்குப் பின்னர் قَالُوْا கூறினார்கள் نَعْبُدُ வணங்குவோம் اِلٰهَكَ கடவுளை/உம் وَاِلٰهَ இன்னும் கடவுளை اٰبَآٮِٕكَ மூதாதைகளின்/உம் اِبْرٰهٖمَ இப்ராஹீம் وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் اِلٰهًا ஒரு கடவுளை وَّاحِدًا ۖۚ ஒரே وَّنَحْنُ இன்னும் நாங்கள் لَهٗ அவனுக்கு مُسْلِمُوْنَ‏ முஸ்லிம்கள்
2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.
2:136
2:136 قُوْلُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَ الْاَسْبَاطِ وَمَآ اُوْتِىَ مُوْسٰى وَعِيْسٰى وَمَآ اُوْتِىَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ‌ۚ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
قُوْلُوْٓا கூறுங்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வைக் கொண்டு وَمَآ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْنَا நமக்கு وَمَآ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلٰٓى اِبْرٰهٖمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَ الْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَمَآ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார்(கள்) مُوْسٰى மூசா وَعِيْسٰى இன்னும் ஈஸா وَمَآ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார்(கள்) النَّبِيُّوْنَ நபிமார்களுக்கு مِنْ இருந்து رَّبِّهِمْ‌ۚ இறைவன்/தங்கள் لَا نُفَرِّقُ பிரிக்க மாட்டோம் بَيْنَ மத்தியில் اَحَدٍ ஒருவருக்கு مِّنْهُمْ அவர்களில் وَنَحْنُ இன்னும் நாம் لَهٗ அவனுக்கு مُسْلِمُوْنَ‏ முஸ்லிம்கள் (முற்றிலும் பணிந்தவர்கள்)
2:136. (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
2:140
2:140 اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰى‌ؕ قُلْ ءَاَنْـتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ‌ ؕ وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
اَمْ அல்லது تَقُوْلُوْنَ கூறுகிறீர்கள் اِنَّ நிச்சயமாக اِبْرٰهٖمَ இப்ராஹீம் وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطَ இன்னும் சந்ததிகள் كَانُوْا இருந்தார்கள் هُوْدًا யூதர்களாக اَوْ அல்லது نَصٰرٰى‌ؕ கிறித்துவர்களாக قُلْ கூறுவீராக ءَاَنْتُمْ நீங்களா? اَعْلَمُ மிக அறிந்தவர்(கள்) اَمِ அல்லது اللّٰهُ‌ ؕ அல்லாஹ்வா? وَمَنْ இன்னும் யார்? اَظْلَمُ மகா அநியாயக்காரர் مِمَّنْ எவரைவிட كَتَمَ மறைத்தார் شَهَادَةً சாட்சியத்தை عِنْدَهٗ தன்னிடத்தில் مِنَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَمَا இல்லை اللّٰهُ அல்லாஹ் بِغَافِلٍ கவனமற்றவனாக عَمَّا பற்றி/அல்லாஹ் تَعْمَلُوْنَ‏ செய்கிறீர்கள்
2:140. “இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.”
3:84
3:84 قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَيْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰٓى اِبْرٰهِيْمَ وَ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِىَ مُوْسٰى وَ عِيْسٰى وَالنَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
قُلْ கூறுவீராக اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை عَلَيْنَا எங்கள் மீது وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை عَلٰٓى மீது اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَ اِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَمَاۤ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார் مُوْسٰى وَ عِيْسٰى மூஸா/இன்னும் ஈஸா وَالنَّبِيُّوْنَ இன்னும் நபிமார்கள் مِنْ رَّبِّهِمْ தங்கள் இறைவனிடமிருந்து لَا نُفَرِّقُ பிரிக்க மாட்டோம் بَيْنَ اَحَدٍ ஒருவருக்கு மத்தியில் مِّنْهُمْ இவர்களில் وَنَحْنُ இன்னும் நாங்கள் لَهٗ அவனுக்கே مُسْلِمُوْنَ‏ முற்றிலும் பணிந்தவர்கள்
3:84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
4:163
4:163 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ‌ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ۚ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு كَمَاۤ போன்றே اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلٰى نُوْحٍ நூஹுக்கு وَّالنَّبِيّٖنَ இன்னும் நபிமார்களுக்கு مِنْۢ بَعْدِهٖ‌ ۚ அவருக்குப் பின்னர் وَاَوْحَيْنَاۤ இன்னும் வஹீ அறிவித்தோம் اِلٰٓى اِبْرٰهِيْمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَعِيْسٰى இன்னும் ஈஸா وَاَيُّوْبَ இன்னும் அய்யூப் وَيُوْنُسَ இன்னும் யூனுஸ் وَهٰرُوْنَ இன்னும் ஹாரூன் وَسُلَيْمٰنَ‌ ۚ இன்னும் ஸுலைமான் وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் دَاوٗدَ தாவூதுக்கு زَبُوْرًا‌ ஸபூரை
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
6:86
6:86 وَاِسْمٰعِيْلَ وَالْيَسَعَ وَيُوْنُسَ وَلُوْطًا‌ ؕ وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعٰلَمِيْنَۙ‏
وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீலை وَالْيَسَعَ இன்னும் அல்யஸஉவை وَيُوْنُسَ இன்னும் யூனுஸ் وَلُوْطًا‌ ؕ இன்னும் லூத்தை وَكُلًّا எல்லோரையும் فَضَّلْنَا மேன்மைப்படுத்தினோம் عَلَى الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தாரை விட
6:86. இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.
14:39
14:39 اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ وَهَبَ لِىْ عَلَى الْـكِبَرِ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ‌ؕ اِنَّ رَبِّىْ لَسَمِيْعُ الدُّعَآءِ‏
اَلْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே الَّذِىْ எத்தகையவன் وَهَبَ வழங்கினான் لِىْ எனக்கு عَلَى الْـكِبَرِ வயோதிகத்தில் اِسْمٰعِيْلَ இஸ்மாயீலை وَاِسْحٰقَ‌ؕ இன்னும் இஸ்ஹாக்கை اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் لَسَمِيْعُ நன்கு செவியுறுபவன் الدُّعَآءِ‏ பிரார்த்தனையை
14:39. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.
19:54
19:54 وَاذْكُرْ فِى الْـكِتٰبِ اِسْمٰعِيْلَ‌ اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِيًّا‌ ۚ‏
وَاذْكُرْ நினைவு கூர்வீராக فِى الْـكِتٰبِ இவ்வேதத்தில் اِسْمٰعِيْلَ‌ இஸ்மாயீலை اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருக்கிறார் صَادِقَ உண்மையாளராக الْوَعْدِ வாக்கில் وَكَانَ இன்னும் இருக்கிறார் رَسُوْلًا தூதராக نَّبِيًّا‌ ۚ‏ நபியாக
19:54. (நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.