தேடல்


2:183
2:183 يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏
يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே كُتِبَ கடமையாக்கப்பட்டது عَلَيْکُمُ உங்கள் மீது الصِّيَامُ நோன்பு کَمَا போன்று كُتِبَ கடமையாக்கப்பட்டது عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِکُمْ உங்களுக்கு முன்னர் لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏ நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்
2:184
2:184 اَيَّامًا مَّعْدُوْدٰتٍؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ‌ؕ وَعَلَى الَّذِيْنَ يُطِيْقُوْنَهٗ فِدْيَةٌ طَعَامُ مِسْكِيْنٍؕ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهٗ ؕ وَاَنْ تَصُوْمُوْا خَيْرٌ لَّـکُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
اَيَّامًا நாட்களில் مَّعْدُوْدٰتٍؕ எண்ணப்பட்ட(வை) فَمَنْ எவர் كَانَ இருந்தார் مِنْكُمْ உங்களில் مَّرِيْضًا நோயாளியாக اَوْ அல்லது عَلٰى سَفَرٍ பயணத்தில் فَعِدَّةٌ கணக்கிடவும் مِّنْ اَيَّامٍ நாட்களில் اُخَرَ‌ؕ மற்ற(வை) وَعَلَى இன்னும் மீது الَّذِيْنَ எவர்கள் يُطِيْقُوْنَهٗ அதற்கு சிரமப்படுகிறார்கள் فِدْيَةٌ பரிகாரம் طَعَامُ உணவு مِسْكِيْنٍؕ ஓர் ஏழையின் فَمَنْ எவர் تَطَوَّعَ உபரியாகச் செய்வார் خَيْرًا நன்மையை فَهُوَ அது خَيْرٌ நன்மை لَّهٗ ؕ அவருக்கு وَاَنْ تَصُوْمُوْا இன்னும் நீங்கள் நோன்பு நோற்பது خَيْرٌ மிகச் சிறந்தது لَّـکُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْلَمُوْنَ‏ அறிந்தவர்களாக (அறிவீர்கள்)
2:184. (இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால், (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர்) அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை மற்ற நாட்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும். எனினும், அதற்கு சக்தி பெற்றிருப்போர் (அதற்குப்) பரிகாரமாக, ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்; எனினும், எவரேனும் உபரியாக நன்மைசெய்தால் அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை) அறிவீர்களானால் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்.
2:185
2:185 شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَؕ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏
شَهْرُ மாதம் رَمَضَانَ ரமழான் الَّذِىْٓ எது اُنْزِلَ இறக்கப்பட்டது فِيْهِ அதில் الْقُرْاٰنُ அல்குர்ஆன் هُدًى நேர்வழியாக لِّلنَّاسِ மக்களுக்கு وَ بَيِّنٰتٍ இன்னும் சான்றுகளாக مِّنَ الْهُدٰى நேர்வழியின் وَالْفُرْقَانِۚ இன்னும் பிரித்தறிவிப்பது فَمَنْ எவர் شَهِدَ தங்கி இருப்பார் مِنْكُمُ உங்களிலிருந்து الشَّهْرَ அம்மாதத்தில் فَلْيَـصُمْهُ ؕ அவர் அதில் நோன்பிருக்கவும் وَمَنْ இன்னும் எவர் کَانَ இருப்பார் مَرِيْضًا நோயாளியாக اَوْ அல்லது عَلٰى سَفَرٍ பயணத்தில் فَعِدَّةٌ கணக்கிடவும் مِّنْ இருந்து اَيَّامٍ நாட்கள் اُخَرَؕ மற்ற(வை) يُرِيْدُ நாடுவான் اللّٰهُ அல்லாஹ் بِکُمُ உங்களுக்கு الْيُسْرَ இலகுவை وَلَا يُرِيْدُ இன்னும் நாடமாட்டான் بِکُمُ உங்களுக்கு الْعُسْرَ சிரமத்தை وَلِتُکْمِلُوا இன்னும் நீங்கள் முழுமைப்படுத்துவதற்காக الْعِدَّةَ எண்ணிக்கையை وَلِتُکَبِّرُوا இன்னும் நீங்கள் பெருமைப்படுத்துவதற்காக اللّٰهَ அல்லாஹ்வை عَلٰى مَا هَدٰٮكُمْ உங்களை நேர்வழி நடத்தியதற்காக وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏ இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
2:187
2:187 اُحِلَّ لَـکُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ اِلٰى نِسَآٮِٕكُمْ‌ؕ هُنَّ لِبَاسٌ لَّـكُمْ وَاَنْـتُمْ لِبَاسٌ لَّهُنَّ ؕ عَلِمَ اللّٰهُ اَنَّکُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَکُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْۚ فَالْـــٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا کَتَبَ اللّٰهُ لَـكُمْ وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَـكُمُ الْخَـيْطُ الْاَبْيَضُ مِنَ الْخَـيْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ‌ؕ ثُمَّ اَتِمُّوا الصِّيَامَ اِلَى الَّيْلِ‌ۚ وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْـتُمْ عٰكِفُوْنَ فِى الْمَسٰجِدِؕ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَا ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏
اُحِلَّ அனுமதிக்கப்பட்டுள்ளது لَـکُمْ உங்களுக்கு لَيْلَةَ இரவில் الصِّيَامِ நோன்பு الرَّفَثُ சேர்வது اِلٰى نِسَآٮِٕكُمْ‌ؕ உங்கள் மனைவிகளுடன் هُنَّ அவர்கள் (பெண்கள்) لِبَاسٌ ஆடை لَّـكُمْ உங்களுக்கு وَاَنْـتُمْ இன்னும் நீங்கள்(ஆண்கள்) لِبَاسٌ ஆடை لَّهُنَّ ؕ அவர்களுக்கு (பெண்களுக்கு) عَلِمَ அறிவான் اللّٰهُ அல்லாஹ் اَنَّکُمْ நிச்சயமாக நீங்கள் كُنْتُمْ இருந்தீர்கள் تَخْتَانُوْنَ ஏமாற்றுகிறீர்கள் اَنْفُسَکُمْ உங்களை فَتَابَ عَلَيْكُمْ ஆகவே உங்கள் பிழை பொறுப்பை ஏற்றான் وَعَفَا இன்னும் மன்னித்தான் عَنْكُمْۚ உங்களை فَالْـــٰٔنَ ஆகவே இப்போது بَاشِرُوْهُنَّ அவர்களுடன் சேருங்கள் وَابْتَغُوْا இன்னும் தேடுங்கள் مَا எதை کَتَبَ விதித்தான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு وَكُلُوْا இன்னும் உண்ணுங்கள் وَاشْرَبُوْا இன்னும் பருகுங்கள் حَتّٰى يَتَبَيَّنَ தெளிவாகும் வரை لَـكُمُ உங்களுக்கு الْخَـيْطُ நூல் الْاَبْيَضُ வெள்ளை مِنَ இருந்து الْخَـيْطِ நூல் الْاَسْوَدِ கருப்பு مِنَ الْفَجْرِ‌ؕ அதிகாலையில் ثُمَّ பிறகு اَتِمُّوا முழுமையாக்குங்கள் الصِّيَامَ நோன்பை اِلَى الَّيْلِ‌ۚ இரவு வரை وَلَا تُبَاشِرُوْهُنَّ அவர்களுடன் சேராதீர்கள் وَاَنْـتُمْ போது/நீங்கள் عٰكِفُوْنَ தங்கியிருக்கிறீர்கள் فِى الْمَسٰجِدِؕ மஸ்ஜிதுகளில் تِلْكَ இவை حُدُوْدُ சட்டங்கள் اللّٰهِ அல்லாஹ்வுடைய فَلَا تَقْرَبُوْهَا ؕ எனவே அவற்றை நெருங்காதீர்கள் كَذٰلِكَ அவ்வாறே يُبَيِّنُ தெளிவுபடுத்துகிறான் اللّٰهُ அல்லாஹ் اٰيٰتِهٖ தன் வசனங்களை لِلنَّاسِ மக்களுக்கு لَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏ அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.
2:196
2:196 وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِؕ فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰى يَبْلُغَ الْهَدْىُ مَحِلَّهٗ ؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ بِهٖۤ اَذًى مِّنْ رَّاْسِهٖ فَفِدْيَةٌ مِّنْ صِيَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍۚ فَاِذَآ اَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ فِى الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْؕ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ  ؕ ذٰ لِكَ لِمَنْ لَّمْ يَكُنْ اَهْلُهٗ حَاضِرِىْ الْمَسْجِدِ الْحَـرَامِ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
وَاَتِمُّوا இன்னும் முழுமையாக்குங்கள் الْحَجَّ ஹஜ்ஜை وَالْعُمْرَةَ இன்னும் உம்றாவை لِلّٰهِؕ அல்லாஹ்வுக்காக فَاِنْ اُحْصِرْتُمْ நீங்கள் தடுக்கப்பட்டால் فَمَا எது اسْتَيْسَرَ சாத்தியமாகியது مِنَ இருந்து الْهَدْىِ‌ۚ பலி(கள்) وَلَا تَحْلِقُوْا இன்னும் சிரைக்காதீர்கள் رُءُوْسَكُمْ உங்கள் தலைகளை حَتّٰى வரை يَبْلُغَ அடைகிறது الْهَدْىُ பலி مَحِلَّهٗ ؕ தன் இடத்தை فَمَنْ இன்னும் எவர் كَانَ இருக்கிறார் مِنْكُمْ உங்களில் مَّرِيْضًا நோயாளியாக اَوْ அல்லது بِهٖۤ அவருக்கு اَذًى ஓர் இடையூறு/காயம், சிரங்கு مِّنْ رَّاْسِهٖ அவருடையதலையில் فَفِدْيَةٌ ஆகவே பரிகாரம் مِّنْ இருந்து صِيَامٍ நோன்பு اَوْ அல்லது صَدَقَةٍ தர்மம் اَوْ அல்லது نُسُكٍ ۚ பலி فَاِذَآ اَمِنْتُمْ நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் فَمَنْ இன்னும் எவர் تَمَتَّعَ சுகம் அனுபவித்தார் بِالْعُمْرَةِ உம்றாவைக் கொண்டு اِلَى الْحَجِّ ஹஜ்ஜு வரை فَمَا எது اسْتَيْسَرَ சாத்தியமானது مِنَ இருந்து الْهَدْیِ ۚ பலி பிராணி فَمَنْ எனவே எவர் لَّمْ يَجِدْ பெறவில்லை فَصِيَامُ ஆகவே நோன்பு ثَلٰثَةِ மூன்று اَیَّامٍ நாள்கள் فِى الْحَجِّ ஹஜ்ஜில் وَسَبْعَةٍ இன்னும் ஏழு اِذَا رَجَعْتُمْؕ நீங்கள் திரும்பினால் تِلْكَ அவை عَشَرَةٌ பத்து كَامِلَةٌ  ؕ முழுமையான ذٰلِكَ இது لِمَنْ எவருக்கு لَّمْ يَكُنْ இருக்கவில்லை اَهْلُهٗ அவருடைய குடும்பம் حَاضِرِىْ வசிப்பவர்களாக الْمَسْجِدِ அல் மஸ்ஜிது الْحَـرَامِ‌ؕ புனிதமான وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاعْلَمُوْٓا இன்னும் அறிந்துகொள்ளுங்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் شَدِيْدُ மிகக்கடுமையானவன் الْعِقَابِ‏ தண்டிப்பதில்
2:196. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்; அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும் பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
4:92
4:92 وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ يَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـــٴًــا‌ ۚ وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـــٴًــا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ يَّصَّدَّقُوْا‌ ؕ فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّـكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌ ؕ وَاِنْ كَانَ مِنْ قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ فَدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖ وَ تَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌ ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللّٰهِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا‏
وَمَا كَانَ ஆகுமானதல்ல لِمُؤْمِنٍ ஒரு நம்பிக்கையாளருக்கு اَنْ يَّقْتُلَ அவர் கொல்வது مُؤْمِنًا ஒரு நம்பிக்கையாளரை اِلَّا தவிர خَطَـــٴًــا‌ ۚ தவறுதலாக وَمَنْ எவராவது قَتَلَ கொன்றால் مُؤْمِنًا ஒரு நம்பிக்கையாளரை خَطَـــٴًــا தவறுதலாகவே فَتَحْرِيْرُ உரிமையிடவேண்டும் رَقَبَةٍ ஓர் அடிமையை مُّؤْمِنَةٍ நம்பிக்கையாளரான وَّدِيَةٌ இன்னும் நஷ்டஈடு مُّسَلَّمَةٌ ஒப்படைக்கப்பட்டது اِلٰٓى இடம் اَهْلِهٖۤ அவருடைய குடும்பத்தார் اِلَّاۤ தவிர اَنْ يَّصَّدَّقُوْا‌ ؕ அவர்கள் தானமாக்குவது فَاِنْ كَانَ இருந்தால் مِنْ قَوْمٍ ஒரு சமுதாயம் சேர்ந்தவராக عَدُوٍّ எதிரி لَّـكُمْ உங்கள் وَهُوَ அவர் مُؤْمِنٌ நம்பிக்கையாளர் فَتَحْرِيْرُ உரிமையிடவேண்டும் رَقَبَةٍ ஓர் அடிமை مُّؤْمِنَةٍ‌ ؕ நம்பிக்கையாளரான وَاِنْ كَانَ இருந்தால் مِنْ قَوْمٍۢ ஒரு சமுதாயத்தை சேர்ந்தவராக بَيْنَكُمْ உங்களுக்கிடையில் وَبَيْنَهُمْ இன்னும் அவர்களுக்கு இடையில் مِّيْثَاقٌ உடன்படிக்கை فَدِيَةٌ நஷ்டஈடு مُّسَلَّمَةٌ ஒப்படைக்கப்பட்டது اِلٰٓى اَهْلِهٖ அவருடைய குடும்பத்தாரிடம் وَ تَحْرِيْرُ இன்னும் உரிமையிடுவது வேண்டும் رَقَبَةٍ ஓர் அடிமை مُّؤْمِنَةٍ‌ ۚ நம்பிக்கையாளரான فَمَنْ எவர் لَّمْ يَجِدْ பெறவில்லை فَصِيَامُ நோன்பிருத்தல் شَهْرَيْنِ இரண்டு மாதங்கள் مُتَتَابِعَيْنِ தொடர்ந்து تَوْبَةً மன்னிப்புக் கோரி مِّنَ اللّٰهِ‌ ؕ அல்லாஹ்விடம் وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا‏ ஞானவானாக
4:92. தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
5:89
5:89 لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْۤ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَيْمَانَ‌ ۚ فَكَفَّارَتُهٗۤ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِيْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِيْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِيْرُ رَقَبَةٍ‌ ؕ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ‌ ؕ ذٰ لِكَ كَفَّارَةُ اَيْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ‌ ؕ وَاحْفَظُوْۤا اَيْمَانَكُمْ‌ ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
لَا மாட்டான் يُؤَاخِذُكُمُ உங்களை தண்டிக்க اللّٰهُ அல்லாஹ் بِاللَّغْوِ வீணானதற்காக فِىْۤ இல் اَيْمَانِكُمْ உங்கள் சத்தியங்கள் وَلٰـكِنْ எனினும் يُّؤَاخِذُكُمْ உங்களைத் தண்டிப்பான் بِمَا எதற்காக عَقَّدْتُّمُ உறுதிப்படுத்தினீர்கள் الْاَيْمَانَ‌ ۚ சத்தியங்களை فَكَفَّارَتُهٗۤ அதற்குப் பரிகாரம் اِطْعَامُ உணவளிப்பது عَشَرَةِ பத்து مَسٰكِيْنَ ஏழைகளுக்கு مِنْ இருந்து اَوْسَطِ நடுத்தரமானது مَا எது تُطْعِمُوْنَ உணவளிக்கிறீர்கள் اَهْلِيْكُمْ உங்கள் குடும்பத்திற்கு اَوْ அல்லது كِسْوَتُهُمْ அவர்களுக்கு ஆடையளிப்பது اَوْ அல்லது تَحْرِيْرُ விடுதலையிடுவது رَقَبَةٍ‌ ؕ ஓர் அடிமை فَمَنْ எவர் لَّمْ يَجِدْ பெறவில்லையெனில் فَصِيَامُ நோன்பிருத்தல் ثَلٰثَةِ மூன்று اَيَّامٍ‌ ؕ நாட்களுக்கு ذٰ لِكَ இது كَفَّارَةُ பரிகாரம் اَيْمَانِكُمْ உங்கள் சத்தியங்களின் اِذَا حَلَفْتُمْ‌ ؕ நீங்கள் சத்தியம் செய்தால் وَاحْفَظُوْۤا காப்பாற்றுங்கள் اَيْمَانَكُمْ‌ ؕ உங்கள் சத்தியங்களை كَذٰلِكَ இவ்வாறு يُبَيِّنُ விவரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு اٰيٰتِهٖ தன் வசனங்களை لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
5:89. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை - உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.
5:95
5:95 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَاَنْـتُمْ حُرُمٌ‌ ؕ وَمَنْ قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْيًاۢ بٰلِغَ الْـكَعْبَةِ اَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِيْنَ اَوْ عَدْلُ ذٰ لِكَ صِيَامًا لِّيَذُوْقَ وَبَالَ اَمْرِهٖ‌ ؕ عَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ‌ ؕ وَمَنْ عَادَ فَيَنْتَقِمُ اللّٰهُ مِنْهُ‌ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَقْتُلُوا கொல்லாதீர்கள் الصَّيْدَ வேட்டையை وَاَنْـتُمْ நீங்கள் حُرُمٌ‌ ؕ இஹ்ராமுடையவர்கள் وَمَنْ எவர் قَتَلَهٗ கொன்றார்/அதை مِنْكُمْ உங்களில் مُّتَعَمِّدًا வேண்டுமென்றே (நாடியவராக) فَجَزَآءٌ தண்டனை مِّثْلُ ஒப்பானது مَا எது قَتَلَ கொன்றார் مِنَ இருந்து النَّعَمِ கால்நடைகள் يَحْكُمُ தீர்ப்பளிப்பர் بِهٖ அதற்கு ذَوَا عَدْلٍ நேர்மையான இருவர் مِّنْكُمْ உங்களில் هَدْيًاۢ பலியாக بٰلِغَ அடையக் கூடியது الْـكَعْبَةِ கஅபா اَوْ அல்லது كَفَّارَةٌ பரிகாரம் طَعَامُ உணவளிப்பது مَسٰكِيْنَ ஏழைகள் اَوْ அல்லது عَدْلُ சமமானது ذٰ لِكَ அது صِيَامًا நோன்பால் لِّيَذُوْقَ அவன் அனுபவிப்பதற்காக وَبَالَ கெட்ட முடிவை اَمْرِهٖ‌ ؕ செயல் / தனது عَفَا மன்னித்தான் اللّٰهُ அல்லாஹ் عَمَّا سَلَفَ‌ ؕ முன் நடந்தவற்றை وَمَنْ எவன் عَادَ மீண்டான் فَيَنْتَقِمُ தண்டிப்பான் اللّٰهُ அல்லாஹ் مِنْهُ‌ ؕ அவனை وَاللّٰهُ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் ذُو انْتِقَامٍ‏ தண்டிப்பவன்
5:95. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது; அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும்; அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனதுவினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;) முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கிறான்.
9:112
9:112 اَلتَّاۤٮِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السّاۤٮِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰــفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰه ِ‌ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏
اَلتَّاۤٮِٕبُوْنَ திருந்தியவர்கள் الْعٰبِدُوْنَ வணக்கசாலிகள் الْحٰمِدُوْنَ புகழ்பவர்கள் السّاۤٮِٕحُوْنَ நோன்புநோற்பவர்கள் الرّٰكِعُوْنَ குனிபவர்கள் السّٰجِدُوْنَ சிரம் பணிபவர்கள் الْاٰمِرُوْنَ ஏவக்கூடியவர்கள் بِالْمَعْرُوْفِ நன்மையை وَالنَّاهُوْنَ இன்னும் தடுக்கக்கூடியவர்கள் عَنِ الْمُنْكَرِ பாவத்தை விட்டு وَالْحٰــفِظُوْنَ இன்னும் பாதுகாப்பவர்கள் لِحُدُوْدِ வரம்புகளை, சட்டங்களை اللّٰه ؕ அல்லாஹ்வுடைய وَبَشِّرِ இன்னும் நற்செய்தி கூறுவீராக الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
9:112. மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
33:35
33:35 اِنَّ الْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمٰتِ وَالْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ وَالْقٰنِتِيْنَ وَالْقٰنِتٰتِ وَالصّٰدِقِيْنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِيْنَ وَالصّٰبِرٰتِ وَالْخٰشِعِيْنَ وَالْخٰشِعٰتِ وَالْمُتَصَدِّقِيْنَ وَ الْمُتَصَدِّقٰتِ وَالصَّآٮِٕمِيْنَ وَالصّٰٓٮِٕمٰتِ وَالْحٰفِظِيْنَ فُرُوْجَهُمْ وَالْحٰـفِظٰتِ وَالذّٰكِرِيْنَ اللّٰهَ كَثِيْرًا وَّ الذّٰكِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا‏
اِنَّ الْمُسْلِمِيْنَ நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள் وَالْمُسْلِمٰتِ இன்னும் முஸ்லிமான பெண்கள் وَالْمُؤْمِنِيْنَ இன்னும் முஃமினான ஆண்கள் وَالْمُؤْمِنٰتِ இன்னும் முஃமினான பெண்கள் وَالْقٰنِتِيْنَ இன்னும் பணிவான ஆண்கள் وَالْقٰنِتٰتِ இன்னும் பணிவான பெண்கள் وَالصّٰدِقِيْنَ இன்னும் உண்மையான ஆண்கள் وَالصّٰدِقٰتِ இன்னும் உண்மையான பெண்கள் وَالصّٰبِرِيْنَ இன்னும் பொறுமையான ஆண்கள் وَالصّٰبِرٰتِ இன்னும் பொறுமையான பெண்கள் وَالْخٰشِعِيْنَ இன்னும் உள்ளச்சமுடைய ஆண்கள் وَالْخٰشِعٰتِ இன்னும் உள்ளச்சமுடைய பெண்கள் وَالْمُتَصَدِّقِيْنَ இன்னும் தர்மம் செய்கின்ற ஆண்கள் وَ الْمُتَصَدِّقٰتِ இன்னும் தர்மம் செய்கின்ற பெண்கள் وَالصَّآٮِٕمِيْنَ இன்னும் நோன்பாளியான ஆண்கள் وَالصّٰٓٮِٕمٰتِ இன்னும் நோன்பாளியான பெண்கள் وَالْحٰفِظِيْنَ இன்னும் பேணுகின்ற ஆண்கள் فُرُوْجَهُمْ இன்னும் தங்கள் மறைவிடங்களை وَالْحٰـفِظٰتِ இன்னும் பேணுகின்ற பெண்கள் وَالذّٰكِرِيْنَ இன்னும் நினைவு கூரக்கூடிய ஆண்கள் اللّٰهَ அல்லாஹ்வை كَثِيْرًا அதிகம் وَّ الذّٰكِرٰتِ ۙ இன்னும் நினைவு கூரக்கூடிய பெண்கள் اَعَدَّ ஏற்படுத்தி இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் لَهُمْ இவர்களுக்கு مَّغْفِرَةً மன்னிப்பை(யும்) وَّاَجْرًا கூலியையும் عَظِيْمًا‏ மகத்தான
33:35. நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.