பொருள் அட்டவணை: அல்லாஹ் செய்த சத்தியம்
فَلَا وَرَبِّكَ لَا یُؤْمِنُوْنَ حَتّٰی یُحَكِّمُوْكَ فِیْمَا شَجَرَ بَیْنَهُمْ ثُمَّ لَا یَجِدُوْا فِیْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَیْتَ وَیُسَلِّمُوْا تَسْلِیْمًا ۟
உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.
لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِیْ سَكْرَتِهِمْ یَعْمَهُوْنَ ۟
(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.
فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّیٰطِیْنَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِیًّا ۟ۚ
ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَا تَاْتِیْنَا السَّاعَةُ ؕ قُلْ بَلٰی وَرَبِّیْ لَتَاْتِیَنَّكُمْ ۙ عٰلِمِ الْغَیْبِ ۚ لَا یَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ وَلَاۤ اَصْغَرُ مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْبَرُ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟ۗۙ
எனினும் நிராகரிப்பவர்கள்: “(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது” என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.
وَالْقُرْاٰنِ الْحَكِیْمِ ۟ۙ
ஞானம் நிரம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!
صٓ وَالْقُرْاٰنِ ذِی الذِّكْرِ ۟ؕ
ஸாத். (நல்லுபதேசங்களின்) நினைவுறுத்தலைக் கொண்ட இக்குர்ஆன் மீது சத்தியமாக.
وَالْكِتٰبِ الْمُبِیْنِ ۟ۙۛ
விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக.
وَالْكِتٰبِ الْمُبِیْنِ ۟ۙۛ
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
وَالذّٰرِیٰتِ ذَرْوًا ۟ۙ
(புழுதியைக் எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!
فَالْحٰمِلٰتِ وِقْرًا ۟ۙ
(மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்,
فَالْجٰرِیٰتِ یُسْرًا ۟ۙ
பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும்,
وَالسَّمَآءِ ذَاتِ الْحُبُكِ ۟ۙ
அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!
فَوَرَبِّ السَّمَآءِ وَالْاَرْضِ اِنَّهٗ لَحَقٌّ مِّثْلَ مَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَ ۟۠
ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக்கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.  
وَالطُّوْرِ ۟ۙ
தூர் (மலை) மீது சத்தியமாக!
وَكِتٰبٍ مَّسْطُوْرٍ ۟ۙ
எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!
فِیْ رَقٍّ مَّنْشُوْرٍ ۟ۙ
விரித்து வைக்கப்பட்ட ஏட்டில்- 
وَّالْبَیْتِ الْمَعْمُوْرِ ۟ۙ
பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
وَالسَّقْفِ الْمَرْفُوْعِ ۟ۙ
உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
وَالْبَحْرِ الْمَسْجُوْرِ ۟ۙ
பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
وَالنَّجْمِ اِذَا هَوٰی ۟ۙ
விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
وَاِنَّهٗ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُوْنَ عَظِیْمٌ ۟ۙ
நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும்.
زَعَمَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنْ لَّنْ یُّبْعَثُوْا ؕ قُلْ بَلٰی وَرَبِّیْ لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْ ؕ وَذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟
(மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராகரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்; “அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
نٓ وَالْقَلَمِ وَمَا یَسْطُرُوْنَ ۟ۙ
நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
فَلَاۤ اُقْسِمُ بِمَا تُبْصِرُوْنَ ۟ۙ
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.
وَمَا لَا تُبْصِرُوْنَ ۟ۙ
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)
فَلَاۤ اُقْسِمُ بِرَبِّ الْمَشٰرِقِ وَالْمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوْنَ ۟ۙ
எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
كَلَّا وَالْقَمَرِ ۟ۙ
(ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.
وَالَّیْلِ اِذْ اَدْبَرَ ۟ۙ
இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.
وَالصُّبْحِ اِذَاۤ اَسْفَرَ ۟ۙ
விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,
لَاۤ اُقْسِمُ بِیَوْمِ الْقِیٰمَةِ ۟ۙ
கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَلَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ ۟ؕ
நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۟ۙ
தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக-
فَالْعٰصِفٰتِ عَصْفًا ۟ۙ
வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۟ۙ
(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
فَالْفٰرِقٰتِ فَرْقًا ۟ۙ
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
فَالْمُلْقِیٰتِ ذِكْرًا ۟ۙ
(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
وَالنّٰزِعٰتِ غَرْقًا ۟ۙ
(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
وَّالنّٰشِطٰتِ نَشْطًا ۟ۙ
(நல்லோர் உயிர்களை) இலேசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
وَّالسّٰبِحٰتِ سَبْحًا ۟ۙ
வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
فَالسّٰبِقٰتِ سَبْقًا ۟ۙ
முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
فَالْمُدَبِّرٰتِ اَمْرًا ۟ۘ
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
یَّصْلَوْنَهَا یَوْمَ الدِّیْنِ ۟
நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
وَمَا هُمْ عَنْهَا بِغَآىِٕبِیْنَ ۟ؕ
மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ۙ
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
ثُمَّ مَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ؕ
பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِ ۟ۙ
இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَالَّیْلِ وَمَا وَسَقَ ۟ۙ
மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
وَالْقَمَرِ اِذَا اتَّسَقَ ۟ۙ
பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
وَالسَّمَآءِ ذَاتِ الْبُرُوْجِ ۟ۙ
கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
وَالْیَوْمِ الْمَوْعُوْدِ ۟ۙ
இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
وَشَاهِدٍ وَّمَشْهُوْدٍ ۟ؕ
மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
وَالسَّمَآءِ وَالطَّارِقِ ۟ۙ
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
وَالسَّمَآءِ ذَاتِ الرَّجْعِ ۟ۙ
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
وَالْاَرْضِ ذَاتِ الصَّدْعِ ۟ۙ
(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
وَالْفَجْرِ ۟ۙ
விடியற் காலையின் மீது சத்தியமாக,
وَلَیَالٍ عَشْرٍ ۟ۙ
பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
وَّالشَّفْعِ وَالْوَتْرِ ۟ۙ
இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
وَالَّیْلِ اِذَا یَسْرِ ۟ۚ
செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
هَلْ فِیْ ذٰلِكَ قَسَمٌ لِّذِیْ حِجْرٍ ۟ؕ
இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۟ۙ
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
وَالشَّمْسِ وَضُحٰىهَا ۟
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
وَالْقَمَرِ اِذَا تَلٰىهَا ۟
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
وَالنَّهَارِ اِذَا جَلّٰىهَا ۟
(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
وَالَّیْلِ اِذَا یَغْشٰىهَا ۟
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
وَالسَّمَآءِ وَمَا بَنٰىهَا ۟
வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
وَالْاَرْضِ وَمَا طَحٰىهَا ۟
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
وَنَفْسٍ وَّمَا سَوّٰىهَا ۟
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
وَالَّیْلِ اِذَا یَغْشٰی ۟ۙ
(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
وَالنَّهَارِ اِذَا تَجَلّٰی ۟ۙ
பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُ ۟ۙ
ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
وَالضُّحٰی ۟ۙ
முற்பகல் மீது சத்தியமாக-
وَالَّیْلِ اِذَا سَجٰی ۟ۙ
ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
وَالتِّیْنِ وَالزَّیْتُوْنِ ۟ۙ
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
وَطُوْرِ سِیْنِیْنَ ۟ۙ
“ஸினாய்” மலையின் மீதும் சத்தியமாக-
وَهٰذَا الْبَلَدِ الْاَمِیْنِ ۟ۙ
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
وَالْعٰدِیٰتِ ضَبْحًا ۟ۙ
மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
فَالْمُوْرِیٰتِ قَدْحًا ۟ۙ
பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
فَالْمُغِیْرٰتِ صُبْحًا ۟ۙ
பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
فَاَثَرْنَ بِهٖ نَقْعًا ۟ۙ
மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
فَوَسَطْنَ بِهٖ جَمْعًا ۟ۙ
அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
وَالْعَصْرِ ۟ۙ
காலத்தின் மீது சத்தியமாக.