|
|
|
| தொழுகையின் சிறப்பும் அதை விட்டால் ஏற்படும் இறைவனின் தண்டனையும் |
பாங்கின் அர்த்தம்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன்
இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன்
இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின்
தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின்
தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) :
தொழுகையின் பக்கம் வாருங்கள்,
தொழுகையின் பக்கம் வாருங்கள்
ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் :
வெற்றியின் பக்கம், வாருங்கள்,
வெற்றியின் பக்கம் வாருங்கள்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
லா இலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை
அறிவிப்பவர் : அபூமஹ்தூரா(ரழி)
நூல் : முஸ்லிம்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரழி)
நூல் : இப்னுமாஜா,அபூதாவூத்
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி
பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள்
தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள்
தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
அல்குர்ஆன் 23:1,2,9
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள்
பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்
இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.
அல்குர்ஆன் 5:58
தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி
நடங்கள் அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 6:72
எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு,
தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின்
கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். அல்குர்ஆன்
7:170
“நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு
நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும்
பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன்
20:14
“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று
கேட்பார்கள்.). அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில்
நின்றும் நாங்கள் இருக்கவில்லை”. அல்குர்ஆன் 74:42,43
உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத்
தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை அடைந்த(தும் தொழமலிருந்தால்)
அதற்காக அவர்களை அடியுங்கள். என நபி (ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷூஜபு.
நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.
யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை
பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும்
ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ
அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ
இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன்,
காமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி
(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு,
அம்ருஇப்னு ஆஸ் (ரழி)
நூல் : அஹ்மத்
சிறந்த அமல்:
அமல்களில் சிறந்தது எது என்று நபி (ஸல்) அவர்களிடம்
கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது
என்றார்கள்.
அறிவிப்பாளர்: உம்முஃபர்வா (ரழி)
நூல்கள் : திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்.
பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புகள்:
(பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர்
தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம்
நரகில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அடுத்த பக்கம்
|
|
Supports only Unicode and Transliteration. Type a word and hit space to get it in Tamil. Click on a word to see more options.

Download Wallpaper |