الشمائل المحمدية

33. باب كيف كان كلام رسول الله صلى الله عليه وسلم

அஷ்-ஷமாயில் அல்-முஹம்மதிய்யா

33. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேச்சு

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ الْبَصْرِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا حُمَيْدُ بْنُ الأَسْوَدِ، عَنِ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ‏:‏ مَا كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَسْرُدُ سرْدَكُمْ هَذَا، وَلَكِنَّهُ كَانَ يَتَكَلَّمُ بِكَلامٍ بَيِّنٍ فَصْلٍ، يَحْفَظُهُ مَنْ جَلَسَ إِلَيْهِ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் பேசுவதைப் போன்று (விரைவாகத்) தொடர்ந்து பேச மாட்டார்கள். மாறாக, அவர்கள் தெளிவான, (வார்த்தைகளைப்) பிரித்துப் பேசுவார்கள்; அவர்களுடன் அமர்ந்திருப்பவர்கள் அதை மனனம் செய்துகொள்வார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (ஸுபைர் அலீ ஸயீ)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ سَلْمُ بْنُ قُتَيْبَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْمُثَنَّى، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ‏:‏ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، يُعِيدُ الْكَلِمَةَ ثَلاثًا لِتُعْقَلَ عَنْهُ‏.‏
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தாம் பேசிய) வார்த்தை தெளிவாகப் புரிய வேண்டும் என்பதற்காக அதை மூன்று முறை திரும்பக் கூறுவார்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (ஸுபைர் அலீ ஸயீ)
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا جُمَيْعُ بْنُ عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْعِجْلِيُّ، قَالَ‏:‏ حدَّثنِي رَجُلٌ مِنْ بَنِي تَمِيمٍ مِنْ وَلَدِ أَبِي هَالَةَ زَوْجِ خَدِيجَةَ يُكْنَى أَبَا عَبْدِ اللهِ، عَنِ ابْنٍ لأَبِي هَالَةَ، عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ، قَالَ‏:‏ سَأَلْتُ خَالِي هِنْدُ بْنُ أَبِي هَالَةَ، وَكَانَ وَصَّافًا، فَقُلْتُ‏:‏ صِفْ لِي مَنْطِقَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، قَالَ‏:‏ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مُتَوَاصِلَ الأَحْزَانِ، دَائِمَ الْفِكْرَةِ، لَيْسَتْ لَهُ رَاحَةٌ، طَوِيلُ السَّكْتِ، لا يَتَكَلَّمُ فِي غَيْرِ حَاجَةٍ، يَفْتَتِحُ الْكَلامَ، وَيَخْتِمُهُ بِاسْمِ اللهِ تَعَالَى، وَيَتَكَلَّمُ بِجَوَامِعِ الْكَلِمِ، كَلامُهُ فَصْلٌ، لا فُضُولَ، وَلا تَقْصِيرَ، لَيْسَ بِالْجَافِي، وَلا الْمُهِينِ، يُعَظِّمُ النِّعْمَةَ وَإِنْ دَقَّتْ لا يَذُمُّ مِنْهَا شَيْئًا، غَيْرَ أَنَّهُ لَمْ يَكُنْ يَذُمُّ ذَوَّاقًا وَلا يَمْدَحُهُ، وَلا تُغْضِبُهُ الدُّنْيَا، وَلا مَا كَانَ لَهَا، فَإِذَا تُعُدِّيَ الْحَقُّ، لَمْ يَقُمْ لِغَضَبِهِ شَيْءٌ، حَتَّى يَنْتَصِرَ لَهُ، وَلا يَغْضَبُ لِنَفْسِهِ، وَلا يَنْتَصِرُ لَهَا، إِذَا أَشَارَ بِكَفِّهِ كُلِّهَا، وَإِذَا تَعَجَّبَ قَلَبَهَا، وَإِذَا تَحَدَّثَ اتَّصَلَ بِهَا، وَضَرَبَ بِرَاحَتِهِ الْيُمْنَى بَطْنَ إِبْهَامِهِ الْيُسْرَى، وَإِذَا غَضِبَ أَعْرَضَ وَأَشَاحَ، وَإِذَا فَرِحَ غَضَّ طَرْفَهُ، جُلُّ ضَحِكِهِ التَّبَسُّمُ، يَفْتَرُّ عَنْ مِثْلِ حَبِّ الْغَمَامِ‏.‏
அல்-ஹஸன் இப்னு அலீ (ரழி) கூறினார்கள்:

“மக்களை வர்ணிப்பதில் வல்லவரான என் தாய்மாமன் ஹிந்த் இப்னு அபீ ஹாலா (ரழி) அவர்களிடம் நான், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பேச்சின் தன்மையை எனக்கு வர்ணித்துக் காட்டுங்கள்!’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:

‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ச்சியாக (மறுமை குறித்த) கவலையுடனும், எந்நேரமும் சிந்தனையிலும் இருப்பார்கள். அவர்களுக்கு ஓய்வு என்பதே இருக்காது. அவர்கள் நீண்ட நேரம் மௌனமாக இருப்பார்கள்; தேவையின்றிக் பேசமாட்டார்கள்.

அவர்கள் தங்கள் பேச்சை ‘பிஸ்மில்லாஹி தஆலா’ (உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்று கூறித் தொடங்குவார்கள்; அவ்வாறே முடிப்பார்கள். அவர்கள் ‘ஜவாமிஉல் கலிம்’ (குறைந்த வார்த்தைகளில் நிறைந்த கருத்துக்கள்) கொண்ட சொற்களால் பேசுவார்கள். அவர்களது பேச்சுத் தெளிவாக இருக்கும்; அதில் மிகையோ, குறையோ இருக்காது.

அவர்கள் கறாரான சுபாவம் கொண்டவராகவோ, பிறரை இழிவுபடுத்துபவராகவோ இருக்கமாட்டார்கள். அல்லாஹ்வின் அருட்கொடை சிறியதாக இருந்தாலும் அதைப் பெரிதாக மதிுப்பார்கள்; அதில் எதையும் இகழமாட்டார்கள். அவர்கள் சுவையைக் குறை கூறவோ அல்லது (அளவுக்கு அதிகமாகப்) புகழவோ மாட்டார்கள்.

உலக விஷயங்களுக்காகவோ, அது சார்ந்தவற்றுக்காகவோ அவர்கள் கோபப்பட மாட்டார்கள். ஆனால், சத்தியம் மீறப்பட்டால், அதற்குப் பரிகாரம் காணும் வரை அவர்களது கோபத்திற்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது. அவர்கள் தமக்காகக் கோபப்படவோ, தம் சொந்த விஷயத்திற்காகப் பழிவாங்கவோ மாட்டார்கள்.

அவர்கள் (ஏதேனும் ஒன்றைச்) சுட்டிக்காட்டினால் முழுக் கையைக்கொண்டு சைகை செய்வார்கள்; ஆச்சரியப்படும்போது கையைத் திருப்பிக் காட்டுவார்கள். பேசும்போது கையை அசைத்து, வலது உள்ளங்கையால் இடது கட்டைவிரலின் உட்பகுதியைத் தட்டுவார்கள்.

அவர்கள் கோபப்படும்போது (முகத்தை) வேறுபக்கம் திருப்பிக்கொள்வார்கள்; மகிழ்ச்சியாக இருக்கும்போது பார்வையைத் தாழ்த்திக் கொள்வார்கள். அவர்களது சிரிப்பு பெரும்பாலும் புன்னகையாகவே இருக்கும். (அப்போது) ஆலங்கட்டி மழையைப் போன்று (பற்கள்) ஒளிரும்.’”

ஹதீஸ் தரம் : பலவீனமான அறிவிப்பாளர் தொடர் (ஸுபைர் அலீ ஸயீ)