صَحِيحُ ابْنِ حِبَّان

44. كِتَابُ الْحَظْرِ وَالْإِبَاحَةِ

ஸஹீஹ் இப்னு ஹிப்பான்

44. தடை செய்யப்பட்டவையும் அனுமதிக்கப்பட்டவையும்

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ وَرَّادٍ، مَوْلَى الْمُغِيرَةِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ §حَرَّمَ عَلَيْكُمْ عُقُوقَ الْأُمَّهَاتِ، وَوَأْدَ الْبَنَاتِ، وَمَنَعَ وَهَاتِ، وَكَرِهَ لَكُمْ ثَلَاثًا: قِيلَ وَقَالَ، وَكَثْرَةَ السُّؤَالِ، وَإِضَاعَةَ الْمَالِ»
முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குத் தாய்மார்களைத் துன்புறுத்துவதையும் (அவர்களுக்கு மாறுசெய்வதையும்), பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும், (பிறருக்கு வழங்க வேண்டிய கடமைகளைத்) தடுப்பதையும், (தனக்கு உரிமையில்லாததைப் பிறரிடம்) கேட்பதையும் ஹராம் (தடை) செய்துள்ளான். மேலும், அவன் உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுத்துள்ளான்: வீணான பேச்சுகளை (வதந்திகளைப் பரப்புவதை), அதிகப்படியான கேள்விகள் கேட்பதை (அல்லது பிறரிடம் யாசிப்பதை) மற்றும் செல்வத்தை வீணாக்குவதை."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمٍ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّ مُعَاوِيَةَ، كَتَبَ إِلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنِ اكْتُبْ إِلَيَّ بِحَدِيثٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَعَا غُلَامَهُ وَرَّادًا، فَقَالَ: اكْتُبْ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §يَنْهَى عَنْ وَأْدِ الْبَنَاتِ، وَعُقُوقِ الْأُمَّهَاتِ، وَعَنْ مَنْعٍ وَهَاتِ، وَعَنْ قِيلَ وَقَالَ، وَكَثْرَةِ السُّؤَالِ، وَإِضَاعَةِ الْمَالِ»
முஆவியா (ரலி) அவர்கள் முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு எழுதி அனுப்புங்கள்” என்று கடிதம் எழுதினார்கள்.

அப்போது முகீரா (ரலி) அவர்கள் தமது பணியாளர் வர்ராதை அழைத்து, "இவ்வாறு எழுதுக" என்று கூறினார்கள்:

“பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பது, தாய்மார்களுக்கு மாறு செய்வது, (பிறருக்குக் கொடுக்க வேண்டியதைக்) கொடுக்காமல் தடுப்பது மற்றும் (தனக்கு உரிமையில்லாததைக்) கேட்பது ஆகியவற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்பதை நான் செவியுற்றுள்ளேன். மேலும், வீண் பேச்சுகள் (அவர் சொன்னார், இவர் சொன்னார் எனக் கூறுவது), அதிகமாகக் கேள்விகள் கேட்பது மற்றும் செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றையும் அவர்கள் தடை செய்தார்கள்.”
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيَّ وَأَقْرَبَكُمْ مِنِّي فِي الْآخِرَةِ أَحَاسِنُكُمْ أَخْلَاقًا، وَإِنَّ أَبْغَضَكُمْ إِلَيَّ وَأَبْعَدَكُمْ مِنِّي فِي الْآخِرَةِ أَسْوَؤُكُمْ أَخْلَاقًا، الْمُتَشَدِّقُونَ الْمُتَفَيْهِقُونَ الثَّرْثَارُونَ»
அபு ஸஃலபா அல்-குஷனீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(நிச்சயமாக உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவரும்) மற்றும் மறுமை நாளில் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் (யாரெனில்), உங்களில் மிகச் சிறந்த நற்குணங்கள் உடையவர்களே ஆவர். மேலும், உங்களில் எனக்கு மிகவும் வெறுப்பிற்குரியவரும், மறுமை நாளில் என்னை விட்டும் மிகவும் தூரமானவரும் (யாரெனில்), உங்களில் மிக மோசமான குணமுடையவர்களே ஆவர்; (அவர்கள் யாரெனில்) பிறரை இகழும் வகையில் வாயை வளைத்து (ஆணவத்துடன்) பேசுபவர்களும் (அல்-முதஷத்திகூன்), பெருமைக்காக வாயை நிரப்பி அகம்பாவத்துடன் பேசுபவர்களும் (அல்-முதஃபைஹிகூன்), வீணாக அதிகம் பேசுபவர்களும் (அல்-ஸர்ஸாரூன்) ஆவர்."
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «أَرْبَعَةٌ يُبْغِضُهُمُ اللَّهُ: الْبَيَّاعُ الْحَلَّافُ، وَالْفَقِيرُ الْمُخْتَالُ، وَالشَّيْخُ الزَّانِي، وَالْإِمَامُ الْجَائِرُ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான்கு பேரை அல்லாஹ் வெறுக்கிறான்: (அதிகமாகச்) சத்தியம் செய்து (பொருட்களை) விற்கும் வியாபாரி, பெருமையடிக்கும் ஏழை, விபச்சாரம் செய்யும் முதியவர் மற்றும் அநீதி இழைக்கும் (அக்கிரமக்கார) ஆட்சியாளர்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ بْنِ الْجَهْمِ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا، وَالْمَكْرُ وَالْخِدَاعُ فِي النَّارِ» *
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் நம்மை (முஸ்லிம்களை) ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் (நம்முடைய வழியைப் பின்பற்றுபவர் அல்லர்). மேலும், வஞ்சகமும் மோசடியும் நரகத்திற்கு (இட்டுச் செல்பவை) ஆகும்."
ஹதீஸ் தரம் : நம்பகமானது
حسن
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا عَمَّارُ بْنُ رُزَيْقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عِكْرِمَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمُرَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «مَنْ خَبَّبَ عَبْدًا عَلَى أَهْلِهِ فَلَيْسَ مِنَّا، وَمَنْ أَفْسَدَ امْرَأَةً عَلَى زَوْجِهَا فَلَيْسَ مِنَّا»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"எவர் ஓர் அடிமையை அவனது எஜமானருக்கு எதிராகத் தூண்டிவிடுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர். மேலும், எவர் ஒரு பெண்ணை அவளது கணவனுக்கு எதிராகக் கெடுக்கிறாரோ (தூண்டிவிடுகிறாரோ) அவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْجُعْفِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الْأُوَيْسِيُّ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ؟ قَالَ: § «الشِّرْكُ بِاللَّهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ»
அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். (நபித்தோழர்கள்), "அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?" என்று கேட்டனர். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, சூனியம் செய்வது, (சட்ட ரீதியான) தக்க காரணமின்றி கொல்லக் கூடாது என அல்லாஹ் தடுத்துள்ள ஓர் உயிரைக் கொலை செய்வது, வட்டி உண்பது, அனாதையின் பொருளை உண்பது, (எதிரிகள் முன்னேறி வரும்) போர்க்களத்திலிருந்து புறமுதுகிட்டு ஓடுவது மற்றும் இறைநம்பிக்கை கொண்ட, (தீய எண்ணமற்ற) அப்பாவிகளான கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவது (ஆகியவை ஆகும்)" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ §مَا الْكَبَائِرُ؟ قَالَ: «الْإِشْرَاكُ بِاللَّهِ» قَالَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «ثُمَّ عُقُوقُ الْوَالِدَيْنِ» قَالَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «ثُمَّ الْيَمِينُ الْغَمُوسُ» قُلْتُ لِعَامِرٍ: مَا الْيَمِينُ الْغَمُوسُ؟ قَالَ: الَّذِي يَقْتَطِعُ مَالَ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينٍ صَبْرٍ، وَهُوَ فِيهَا كَاذِبٌ
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

கிராமவாசி ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! பெரும் பாவங்கள் (யாவை)?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணைவைப்பது" என்றார்கள். அவர், "பிறகு எது?" என்று கேட்டார். "(அதற்கு நபியவர்கள்) பெற்றோருக்கு மாறுசெய்வது" என்றார்கள். அவர், "பிறகு எது?" என்று கேட்டார். "(அதற்கு நபியவர்கள்) அல்-யமீனுல் ஃகமூஸ் (பாவத்தில் அல்லது நரகில் மூழ்கடிக்கும் பொய் சத்தியம்)" என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஃபிராஸ் கூறுகிறார்:) நான் (எனது ஆசிரியர்) ஆமிர் (அஷ்-ஷஅபீ) அவர்களிடம், "அல்-யமீனுல் ஃகமூஸ் என்றால் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர், "யார் ஒருவர் (வேண்டுமென்றே) பொய் சத்தியம் செய்து, அதன் மூலம் (அநியாயமாக) ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரிக்கிறாரோ (அதுவே அல்-யமீனுல் ஃகமூஸ் ஆகும்)" என்று கூறினார்.
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أُمَامَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «مِنْ أَكْبَرُ الْكَبَائِرِ الْإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَالْيَمِينُ الْغَمُوسُ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَحْلِفُ الرَّجُلُ عَلَى مِثْلِ جَنَاحِ بَعُوضَةٍ إِلَّا كَانَتْ كَيَّةً * فِي قَلْبِهِ يَوْمَ الْقِيَامَةِ»
அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பெரும் பாவங்களில் மிகப் பெரியவை: அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோருக்கு மாறுசெய்வது மற்றும் (மூழ்கடிக்கும்) பொய்சத்தியம் (அல்-யமீனுல் கமூஸ்) ஆகியவையாகும். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ஒருவர் ஒரு கொசுவின் இறக்கையளவு (அற்பமான பொருளுக்காகப்) பொய்சத்தியம் செய்தாலும், மறுமை நாளில் அது அவரது உள்ளத்தில் ஒரு சூட்டுத் தழும்பாக (பதிக்கப்படும்) இல்லாமல் போகாது."
ஹதீஸ் தரம் : நம்பகமானது, ஆதாரப்பூர்வமானது
حسن صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي جَعْفَرٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي سَالِمٍ الْجَيْشَانِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا ذَرٍّ، إِنِّي أَرَاكَ ضَعِيفًا، وَإِنِّي أُحِبُّ لَكَ مَا أُحِبُّ لِنَفْسِي، §لَا تَتَوَلَّيَنَّ مَالَ يَتِيمٍ، وَلَا تَتَأَمَّرَنَّ عَلَى اثْنَيْنِ»
அபுதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அபுதர்ரே! நான் உங்களைப் பலவீனமானவராகக் காண்கிறேன். மேலும், நான் எனக்காக விரும்புவதையே உங்களுக்காகவும் விரும்புகிறேன். (எனவே,) நீங்கள் அனாதையின் சொத்துக்களை நிர்வகிக்க வேண்டாம்; இருவர் மீதும் தலைவராக ஆக வேண்டாம்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ، بِمِصْرَ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ عَلَى الْمِنْبَرِ: § «أُحَرِّجُ مَالَ الضَّعِيفَيْنِ: الْيَتِيمِ وَالْمَرْأَةِ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பர் (சொற்பொழிவு மேடை) மீது (இருந்தவாறு): "அநாதை மற்றும் பெண் ஆகிய இரு பலவீனர்களின் சொத்துக்களை (அபகரிப்பதை அல்லது அவர்களுக்கு அநீதி இழைப்பதை) நான் பெரும் பாவமாக (தடுக்கப்பட்டதாக) அறிவிக்கிறேன்" என்று கூறுவார்கள்.
ஹதீஸ் தரம் : நம்பகமானது
حسن
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا زِيَادُ بْنُ الْمُنْذِرِ، عَنْ نَافِعِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي بَرْزَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ قَوْمٌ مِنْ قُبُورِهِمْ تَأَجَّجُ أَفْوَاهُهُمْ نَارًا» فَقِيلَ: مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَلَمْ تَرَ اللَّهَ يَقُولُ {§إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا} الْآيَةَ» .
அபூபர்ஸா (ரலி) அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் ஒரு கூட்டத்தினர், தங்களின் வாய்களிலிருந்து நெருப்பு கொழுந்துவிட்டு எரியும் நிலையில், தங்களின் மண்ணறைகளிலிருந்து (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவார்கள்."
அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள், "அல்லாஹ் (திருக்குர்ஆனில்), {அநாதைகளின் செல்வங்களை அநியாயமாக உண்பவர்கள், தங்கள் வயிறுகளில் உண்பதெல்லாம் நெருப்பைத் தான்} (என்று கூறுவதை) நீங்கள் பார்க்கவில்லையா?" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : இட்டுக் கட்டப்பட்ட செய்தி
موضوع
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ بْنَ أَبِي جَمِيلَةَ، يُحَدِّثُ عَنْ أَبِي بَكْرِ بْنِ بَشِيرٍ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا كَعْبُ بْنَ عُجْرَةَ، إِنَّهُ §لَا يَدْخُلُ الْجَنَّةَ لَحْمٌ وَدَمٌ نَبَتَا عَلَى سُحْتٍ النَّارُ أَوْلَى بِهِ، يَا كَعْبُ بْنَ عُجْرَةَ، النَّاسُ غَادِيَانِ: فَغَادٍ فِي فَكَاكِ نَفْسِهِ فَمُعْتِقُهَا، وَغَادٍ مُوبِقُهَا، يَا كَعْبُ بْنَ عُجْرَةَ، الصَّلَاةُ قُرْبَانٌ، وَالصَّدَقَةُ بُرْهَانٌ، وَالصَّوْمُ جُنَّةٌ، وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يَذْهَبُ الْجَلِيدُ عَلَى الصَّفَا»
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கஅப் பின் உஜ்ராவே! ஹராமான (சம்பாத்தியத்)திலிருந்து வளர்ந்த சதையும் இரத்தமும் சொர்க்கத்தில் நுழையாது; நரகமே அதற்கு மிகவும் தகுதியானதாகும். கஅப் பின் உஜ்ராவே! மனிதர்கள் காலையில் இரு வகையினராகப் புறப்படுகிறார்கள்: ஒருவர் (நற்செயல்கள் செய்து) தம் ஆன்மாவை மீட்டு, அதனை (நரகத்திலிருந்து) விடுதலை செய்கிறார். மற்றொருவர் (தீய செயல்கள் செய்து) அதனை அழித்து விடுகிறார். கஅப் பின் உஜ்ராவே! தொழுகை (இறைவனை நெருங்கும்) காணிக்கையாகும்; தர்மம் (ஈமானின்) சான்றாகும்; நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்; வழுவழுப்பான பாறையின் மீதுள்ள பனிக்கட்டி (உருகி) மறைவதைப் போன்று, தர்மம் பாவங்களை அழித்துவிடும்."
ஹதீஸ் தரம் : பலவீனமானது
ضعيف
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُسْلِمِ بْنِ بَانَكَ، قَالَ: سَمِعْتُ عَامِرَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ: حَدَّثَنِي عَوْفُ بْنُ الْحَارِثِ بْنِ الطُّفَيْلِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَائِشَةُ §إِيَّاكِ وَمُحَقَّرَاتِ الْأَعْمَالِ، فَإِنَّ لَهَا مِنَ اللَّهِ طَالِبًا»
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: "ஆயிஷாவே! (மக்களால்) சாதாரணமாகக் கருதப்படும் (சிறு) பாவங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவற்றைப் பின்தொடர்ந்து (கண்காணித்து) விசாரிப்பவர் (ஒரு மலக்கு) இருக்கிறார்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَيَّاشٍ الْقِتْبَانِيِّ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنِ الْحَارِثِ بْنِ يَزِيدَ الْعُكْلِيِّ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، أَنَّهُ سَمِعَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «اجْعَلُوا بَيْنَكُمْ وَبَيْنَ الْحَرَامِ سُتْرَةً مِنَ الْحَلَالِ، مَنْ فَعَلَ ذَلِكَ اسْتَبْرَأَ لِعِرْضِهِ وَدِينِهِ، وَمَنْ أَرْتَعَ فِيهِ كَانَ كَالْمُرْتِعِ إِلَى جَنْبِ الْحِمَى يُوشِكُ أَنْ يَقَعَ فِيهِ، وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، وَإِنَّ حِمَى اللَّهِ فِي الْأَرْضِ مَحَارِمُهُ»
நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்:

"உங்களுக்கும் ஹராமுக்கும் (தடுக்கப்பட்டவை) இடையே ஹலாலைக் (அனுமதிக்கப்பட்டவை) கொண்டு ஒரு திரையை (தடையை) ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எவர் அவ்வாறு செய்கிறாரோ அவர் தனது மானத்தையும் மார்க்கத்தையும் (குறைகளிலிருந்து) தூய்மைப்படுத்திக் கொள்கிறார். எவர் (சந்தேகத்திற்குரியவற்றில்) மேய்கிறாரோ, அவர் (அரசனால்) பாதுகாக்கப்பட்ட எல்லைக்கு அருகே (தமது கால்நடைகளை) மேய்க்கின்றவரைப் போன்றவர் ஆவார்; அவர் அதற்குள் விழுந்துவிடும் (நுழைந்துவிடும்) அபாயம் உள்ளது. நிச்சயமாக ஒவ்வொரு அரசனுக்கும் ஒரு பாதுகாக்கப்பட்ட எல்லை (மேய்ச்சல் நிலம்) உண்டு. பூமியில் அல்லாஹ்வின் பாதுகாக்கப்பட்ட எல்லைகள் என்பவை அவனால் தடுக்கப்பட்டவைகளாகும்."
ஹதீஸ் தரம் : நம்பகமானது
حسن
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى، بِعَسْكَرِ مُكْرَمٍ، عَبْدَانُ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ سَلَمَةَ بْنِ أَبِي الطُّفَيْلِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «يَا عَلِيُّ إِنَّ لَكَ كَنْزًا، وَإِنَّكَ ذُو قَرْنَيْهَا، §فَلَا تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الْأُولَى وَلَيْسَتْ لَكَ الْآخِرَةُ»
அலி பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: "அலியே! (சொர்க்கத்தில்) உங்களுக்கு ஒரு புதையல் இருக்கிறது. மேலும், நீங்கள் (இந்தச் சமுதாயத்தின்) இரு கொம்புகளை உடையவராக (தலைவராக) இருக்கிறீர்கள். (அந்நியப் பெண்ணை நோக்கும்போது) ஒரு பார்வைக்குப் பின் மற்றொரு பார்வையைத் தொடர வேண்டாம். ஏனெனில், முதல் பார்வை உங்களுக்கு (மன்னிக்கத்தக்கதாக) இருக்கிறது; ஆனால் இரண்டாவது பார்வை உங்களுக்கு (அனுமதிக்கப்பட்டது) அல்ல."
ஹதீஸ் தரம் : நம்பகமானது
حسن
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الْأَزْرَقُ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ أَبِي الزَّرْقَاءِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ جَرِيرٍ، قَالَ: § «سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَظْرَةِ الْفُجَاءَةِ، فَأَمَرَنِي أَنْ أَصْرِفَ بَصَرِي»
ஜரீர் (ரழி) அவர்கள் கூறியதாவது:

(அந்நியப் பெண்கள் மீது) தற்செயலாக (எதிர்பாராத விதமாக) விழும் பார்வையைப் பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, (உடனடியாக) எனது பார்வையைத் திருப்பிக் கொள்ளுமாறு அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى امْرَأَةً، فَدَخَلَ عَلَى زَيْنَبَ فَقَضَى حَاجَتَهُ وَخَرَجَ، وَقَالَ: § «إِنَّ الْمَرْأَةَ إِذَا أَقْبَلَتْ، أَقْبَلَتْ فِي صُورَةِ شَيْطَانٍ، فَإِذَا رَأَى أَحَدُكُمُ امْرَأَةً أَعْجَبَتْهُ فَلْيَأْتِ أَهْلَهُ فَإِنَّ مَعَهَا مِثْلَ الَّذِي مَعَهَا»
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (தற்செயலாக) ஒரு பெண்ணைக் கண்டார்கள். பின்னர் அவர்கள் (தம் மனைவி) ஜைனப் (ரலி) அவர்களிடம் சென்று, (தாம்பத்தியம் மூலம்) தம் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வெளியே வந்தார்கள். பிறகு, "நிச்சயமாக ஒரு பெண் (ஆண்களுக்கு முன்னே) வரும்போது ஷைத்தானின் தோற்றத்தில் (அதாவது ஆசையைத் தூண்டும் விதத்தில்) வருகிறாள். எனவே, உங்களில் எவரேனும் ஒரு பெண்ணைக் கண்டு, அவள் அவரைக் கவர்ந்துவிட்டால், அவர் தமது மனைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அப்பெண்ணிடம் இருப்பது போன்றே (உணர்ச்சிகளைத் தணிக்கும் விஷயம்) அவரது மனைவியிடமும் உள்ளது" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَدَقَةَ الْجُبْلَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ الْوَهْبِيُّ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «إِذَا رَأَى أَحَدُكُمُ الْمَرْأَةَ الَّتِي تُعْجِبُهُ فَلْيَرْجِعْ إِلَى أَهْلِهِ حَتَّى يَقَعَ بِهِمْ، فَإِنَّ ذَلِكَ مَعَهُمْ»
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் எவரேனும் தம்மைக் கவரக்கூடிய (அழகுள்ள) ஒரு பெண்ணைப் பார்த்தால், அவர் (உடனடியாகத்) தம் மனைவியிடம் திரும்பிச் சென்று அவளுடன் இல்லறத்தில் ஈடுபடட்டும். ஏனெனில், அப்பெண்ணிடம் (அவரைக் கவர்ந்த) எது இருந்ததோ, அதுவே தம் மனைவியிடமும் இருக்கின்றது."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عُرْيَةِ الرَّجُلِ، وَلَا تَنْظُرُ الْمَرْأَةُ إِلَى عُرْيَةِ الْمَرْأَةِ، وَلَا يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي الثَّوْبِ، وَلَا تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ»
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஓர் ஆண், மற்றொரு ஆணின் (மறைக்கப்பட வேண்டிய) உறுப்பைப் பார்க்கக் கூடாது. ஒரு பெண், மற்றொரு பெண்ணின் (மறைக்கப்பட வேண்டிய) உறுப்பைப் பார்க்கக் கூடாது. ஓர் ஆண், மற்றொரு ஆணுடன் ஒரே ஆடைக்குள் (தோலோடு தோல் படுமாறு) சேரக் கூடாது. ஒரு பெண், மற்றொரு பெண்ணுடன் ஒரே ஆடைக்குள் (தோலோடு தோல் படுமாறு) சேரக் கூடாது."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ نَبْهَانَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: كُنْتُ أَنَا وَمَيْمُونَةُ، عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ ابْنُ أُمِّ مَكْتُومٍ يَسْتَأْذِنُ، وَذَلِكَ بَعْدَ أَنْ ضُرِبَ الْحِجَابُ، فَقَالَ: «قُومَا» فَقُلْنَا: إِنَّهُ مَكْفُوفٌ وَلَا يُبْصِرُنَا، قَالَ: § «أَفَعَمْيَاوَانِ أَنْتُمَا لَا تُبْصِرَانِهِ؟! » *
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நானும் மைமூனா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்தோம். அப்போது இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் (உள்ளே வர) அனுமதி கேட்டு வந்தார்கள். இது (பெண்களுக்குத்) திரை (சட்டம்) விதிக்கப்பட்ட பிறகு (நடந்த நிகழ்வு) ஆகும். அப்போது நபி (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "நீங்கள் இருவரும் (எழுந்து உள்ளே) செல்லுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நாங்கள், "அவர் பார்வையற்றவர் (ஆயற்றே); அவர் எங்களைப் பார்க்க மாட்டாரே!" என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இருவரும் பார்வையற்றவர்களா என்ன? நீங்கள் அவரைப் பார்க்கவில்லையா?" என்று கேட்டார்கள்.
ஹதீஸ் தரம் : பலவீனமானது
ضعيف
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ نَبْهَانَ، حَدَّثَهُ أَنَّ أُمَّ سَلَمَةَ حَدَّثَتْهُ أَنَّهَا كَانَتْ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَيْمُونَةُ، قَالَتُ: فَبَيْنَا نَحْنُ عِنْدَهُ أَقْبَلَ ابْنُ أُمِّ مَكْتُومٍ، فَدَخَلَ عَلَيْهِ، وَذَلِكَ بَعْدَ أَنْ أُمِرَ بِالْحِجَابِ، قَالَتْ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «احْتَجِبَا مِنْهُ» فَقَالَتَا: يَا رَسُولَ اللَّهِ: أَلَيْسَ هُوَ أَعْمَى فَمَا يُبْصِرُنَا وَلَا يَعْرِفُنَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَلَسْتُمَا تُبْصِرَانِهِ؟ «
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் மைமூனா (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். நாங்கள் அவர்களிடம் இருந்தபோது, இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் வந்து, நபியவர்களிடம் நுழைந்தார்கள். இது ஹிஜாப் (திரையிடுதல்) சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரிடமிருந்து நீங்கள் இருவரும் திரையிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர் பார்வையற்றவர் அல்லவா? அவர் எங்களைப் பார்க்கவோ, எங்களை அறியவோ மாட்டாரே?" என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் இருவரும் அவரைப் பார்க்கிறீர்கள் அல்லவா?" என்று கேட்டார்கள்.
ஹதீஸ் தரம் : பலவீனமானது
ضعيف
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنِي عُتْبَةُ بْنُ أَبِي حَكِيمٍ، أَنَّهُ سَأَلَ سُلَيْمَانَ بْنَ مُوسَى عَنِ الرَّجُلِ يَنْظُرُ إِلَى فَرْجِ امْرَأَتِهِ، فَقَالَ: سَأَلْتُ عَنْهَا عَطَاءً، فَقَالَ: سَأَلْتُ عَنْهَا عَائِشَةَ، فَقَالَتْ: § «كُنْتُ اغْتَسِلُ أَنَا وَحِبِّي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْإِنَاءِ الْوَاحِدِ، تَخْتَلِفُ فِيهِ أَكُفُّنَا» وَأَشَارَتْ إِلَى إِنَاءٍ فِي الْبَيْتِ قَدْرَ سِتَّةِ أَقْسَاطٍ
ஆயிஷா (ரலி) அவர்களிடம், ஒரு மனிதன் தனது மனைவியின் மர்மஸ்தானத்தைப் பார்ப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் கூறினார்கள்:

'நானும் எனது அன்பிற்குரியவர் (நபி) ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (நீரை எடுத்து) குளிப்போம். அதில் எங்கள் கைகள் மாறி மாறிச் செல்லும்.'

மேலும், (அன்னை ஆயிஷா ரலி அவர்கள்) வீட்டிலிருந்த சுமார் ஆறு 'கிஸ்த்' (முகத்தல் அளவை) கொள்ளளவு கொண்ட ஒரு பாத்திரத்தை நோக்கிச் சைகை செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : நம்பகமானது
حسن
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ، وَعَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَا: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: حَدَّثَنَا أَبُو مِجْلَزٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «لَمَّا تَزَوَّجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْنَبَ بِنْتَ جَحْشٍ، دَعَا الْقَوْمَ فَطَعِمُوا، ثُمَّ جَلَسُوا يَتَحَدَّثُونَ، قَالَ: فَأَخَذَ كَأَنَّهُ يَتَهَيَّأُ لِلْقِيَامِ، قَالَ: فَلَمْ يَقُومُوا، فَلَمَّا رَأَى ذَلِكَ قَامَ، فَلَمَّا قَامَ قَامَ مَنْ قَامَ مِنَ الْقَوْمِ، وَقَعَدَ ثَلَاثَةٌ، وَإِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ فَإِذَا الْقَوْمُ جُلُوسٌ، فَرَجَعَ، ثُمَّ إِنَّهُمْ قَامُوا فَانْطَلَقُوا، فَجِئْتُ فَأَخْبَرْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ قَدِ انْطَلِقُوا، فَجَاءَ حَتَّى دَخَلَ فَذَهَبْتُ أَدْخُلُ، فَأَلْقَى الْحِجَابَ بَيْنِي وَبَيْنَهُ، وَأَنْزَلَ اللَّهُ {§يَا أَيُّهَا الَّذِينُ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ} إِلَى قَوْلِهِ {إِنَّ ذَلِكُمْ كَانَ عِنْدَ اللَّهِ عَظِيمًا} »
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களை மணமுடித்தபோது, மக்களை (விருந்துக்கு) அழைத்தார்கள்; அவர்கள் உணவருந்தினர். பின்னர் அவர்கள் (அங்கேயே) அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். (அவர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்த்து) நபியவர்கள் தாம் (அங்கிருந்து) எழத் தயாராவது போன்ற (ஒரு பாவனையைச் செய்தார்கள்). (ஆனாலும்) அவர்கள் எழவில்லை. அதைக் கண்டபோது அவர்கள் (உண்மையிலேயே) எழுந்து (வெளியே) சென்றார்கள். அவர்கள் எழுந்ததும் (அங்கிருந்த) மக்களில் எழுந்தவர்கள் (சிலர்) எழுந்து (சென்று) விட்டனர். (ஆனால்) மூவர் மட்டும் (அங்கேயே) அமர்ந்திருந்தனர்.

நபி (ஸல்) அவர்கள் (மீண்டும் உள்ளே நுழைய) வந்தார்கள். அப்போதும் அந்த மக்கள் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். எனவே நபியவர்கள் (உள்ளே செல்லாமல் மீண்டும்) திரும்பிச் சென்றார்கள். அதன் பிறகு அந்த (மூன்று) நபர்களும் எழுந்து சென்றுவிட்டனர். நான் (நபியவர்களிடம்) வந்து, அவர்கள் சென்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தேன். உடனே நபியவர்கள் வந்து (வீட்டிற்குள்) நுழைந்தார்கள். நானும் (அவர்களுடன்) நுழையச் சென்றேன். அப்போது எனக்கும் தமக்குமிடையே ஒரு திரையைத் தொங்கவிட்டார்கள் (மறைப்பை ஏற்படுத்தினார்கள்).

அப்போது அல்லாஹ், "ஈமான் கொண்டவர்களே! நபியுடைய வீடுகளில் (உணவருந்த) உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலன்றி (அங்கே நுழையாதீர்கள்)..." என்று தொடங்கி, "...நிச்சயமாக இது அல்லாஹ்விடம் மிகப் பெரிய (பாவமான) காரியமாகும்" என்பது வரையுள்ள (திருக்குர்ஆன் 33:53) வசனத்தை அருளினான்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَحْمُودٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، قَالَ: حَدَّثَنَا بَيَانُ بْنُ بِشْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ فِي هَذِهِ الْآيَةِ {لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ} قَالَ: «بَنَى نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَعْضِ نِسَائِهِ، فَصَنَعَ طَعَامًا، فَأَرْسَلَنِي، فَدَعَوْتُ رِجَالًا فَأَكَلُوا، ثُمَّ قَامَ فَخَرَجَ فَأَتَى بَيْتَ عَائِشَةَ، ثُمَّ تَبِعْتُهُ فَدَخَلَ فَوَجَدَ فِي بَيْتِهَا رَجُلَيْنِ، فَلَمَّا رَآهُمَا رَجَعَ وَلَمْ يُكَلِّمْهُمَا، فَقَامَا وَخَرَجَا، وَنَزَلَتْ آيَةُ الْحِجَابِ {§يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ}»
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (திருக்குர்ஆனின்) இந்த வசனத்தைக் குறித்துக் கூறுகிறார்கள்:

"{லா தத்ஹுலூ புயூதன் நபிய்யி இல்லா அன் யுஃதஸன லகும் இலா தஆமின்} (உங்களுக்கு உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டாலன்றி நபியின் வீடுகளில் நுழையாதீர்கள்)"

"அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரில் ஒருவரை மணமுடித்து (இல்லற வாழ்வைத் தொடங்கிய) போது, உணவு தயாரித்து, (மக்களை அழைப்பதற்காக) என்னை அனுப்பினார்கள். நான் சில ஆண்களை அழைத்தேன்; அவர்கள் (வந்து) உணவருந்தினர். பின்னர், நபி (ஸல்) அவர்கள் எழுந்து வெளியேறி, ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர்கள் (ஆயிஷாவின் இல்லத்திற்குள்) நுழைந்தபோது, அந்த இல்லத்தில் இரண்டு நபர்கள் (அமர்ந்து கொண்டிருப்பதை)க் கண்டார்கள். அவர்களைக் கண்டவுடன், அவர்களிடம் எதுவும் பேசாமல் நபி (ஸல்) அவர்கள் (வெளியே) திரும்பி விட்டார்கள். (இதைக் கண்ட) அந்த இருவரும் எழுந்து வெளியேறினர். (அதன் பின்னர்) ஹிஜாப் (திரை) தொடர்பான இந்த வசனம் அருளப்பட்டது:

{யா அய்யுஹல்லதீன ஆமனூ லா தத்ஹுலூ புயூதன் நபிய்யி இல்லா அன் யுஃதஸன லகும் இலா தஆமின் கய்ர நாழிரீன இனாஹு}
(நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டாலன்றி நபியின் வீடுகளில் நுழையாதீர்கள்; (அப்போதும்) உணவு தயாராவதை (முன்னதாகவே சென்று) எதிர்பார்த்துக்கொண்டிருக்காதீர்கள்)."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ: حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §لَمْ يُصَافِحِ امْرَأَةً قَطُّ»
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்நியப்) பெண்ணுடன் ஒருபோதும் கைகுலுக்கியதில்லை.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: § «مَا أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النِّسَاءِ قَطُّ إِلَّا بِمَا أَمَرَهُ اللَّهُ جَلَّ وَعَلَا، وَمَا مَسَّتْ كَفُّهُ كَفَّ امْرَأَةٍ قَطُّ، وَمَا كَانَ يَقُولُ لَهُنَّ إِذَا أَخَذَ عَلَيْهِنَّ إِلَّا قَدْ بَايَعْتُكُنَّ كَلَامًا»
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(வல்லமையும் மாண்பும் மிக்க) அல்லாஹ் (அவனுக்குக் கீழ்ப்படிவது குறித்து) கட்டளையிட்டதைத் தவிர வேறு எதன் அடிப்படையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடம் உறுதிப்பிரமாணம் (பைஅத்) பெற்றதில்லை. (உறுதிப்பிரமாணம் பெறும்போது) அவரது (முபாரக்கான) உள்ளங்கை எந்தவொரு (அந்நியப்) பெண்ணின் உள்ளங்கையையும் ஒருபோதும் தொட்டதே இல்லை. பெண்களிடம் உறுதிப்பிரமாணம் பெறும்போது, "உங்களிடம் நான் உறுதிப்பிரமாணம் பெற்றுக்கொண்டேன்" என்று (வாய்மொழி) வார்த்தையாக மட்டுமே கூறுவார்கள்.
ஹதீஸ் தரம் : இதன் அறிவிப்பாளர் தொடர் நம்பகமானது
إسناده حسن
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، يَرْفَعُ الْحَدِيثَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: § «لَا يُبَاشِرُ الرَّجُلُ الرَّجُلَ، وَلَا الْمَرْأَةُ الْمَرْأَةَ»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஒரு ஆண் மற்றொரு ஆணுடன் (தோலோடு தோல் படுமாறு ஒரே போர்வையில்) இணையக் கூடாது. ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் (தோலோடு தோல் படுமாறு ஒரே போர்வையில்) இணையக் கூடாது."
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، * عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «لَا تُبَاشِرُ الْمَرْأَةُ الْمَرْأَةَ، وَلَا الرَّجُلُ الرَّجُلَ إِلَّا الْوَالِدُ الْوَلَدَ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு பெண் மற்றொரு பெண்ணின் உடலோடு (ஆடையின்றி) தன் உடலை இணைக்க/உரசக் கூடாது. ஒரு ஆண் மற்றொரு ஆணின் உடலோடு (ஆடையின்றி) தன் உடலை இணைக்க/உரசக் கூடாது; தந்தை தனது பிள்ளையை (அணைப்பது) தவிர."
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ قَالَ حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ يَقُولُ «جَاءَ عَمْرُو بْنُ الْعَاصِ إِلَى مَنْزِلِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ يَلْتَمِسُهُ فَلَمْ يَقْدِرْ عَلَيْهِ ثُمَّ رَجَعَ فَوَجَدَهُ فَلَمَّا دَخَلَ كَلَّمَ فَاطِمَةَ فَقَالَ لَهُ عَلِيٌّ مَا أَرَى حَاجَتَكَ إِلَّا إِلَى الْمَرْأَةِ قَالَ أَجَلْ إِنَّ رَسُولَ اللَّهِ ﷺ نَهَانَا أَنْ نَدْخُلَ عَلَى الْمُغِيبَاتِ»
அபூ ஸாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

'அம்ர் பின் அல்-ஆஸ் (ரலி) அவர்கள் அலி பின் அபீ தாலிப் (ரலி) அவர்களைத் தேடி அவர்களது வீட்டிற்கு வந்தார்கள். (முதலில்) அவர்களை அங்கு காண முடியவில்லை. பின்னர் (அலி அவர்கள் வந்த பிறகு) மீண்டும் திரும்பி வந்து அவர்களைக் கண்டார்கள். அவர்கள் (வீட்டிற்குள்) நுழைந்தபோது (அலி அவர்களின் முன்னிலையில்) ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் பேசினார்கள். அப்போது அலி (ரலி) அவர்கள் ('அம்ர் அவர்களிடம்), "உமது தேவை இந்தப் பெண்ணிடம்தான் (ஃபாத்திமாவிடம்தான்) இருந்திருக்கும் என நான் கருதுகிறேன்" என்றார்கள். அதற்கு 'அம்ர் (ரலி) அவர்கள், "ஆம், (கணவர்கள்) வீட்டில் இல்லாத பெண்களிடம் நாங்கள் (தனியாக) நுழைவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை செய்துள்ளார்கள்" என்று கூறினார்கள்.'
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ بَكْرَ بْنَ سَوَادَةَ، حَدَّثَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرٍ حَدَّثَهُ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ حَدَّثَهُ: أَنَّ نَفَرًا مِنْ بَنِي هَاشِمٍ دَخَلُوا عَلَى أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ، فَدَخَلَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ وَهِيَ تَحْتَهُ يَوْمَئِذٍ فَرَآهُمْ فَكَرِهَ ذَلِكَ، وَذَكَرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: لَمْ أَرَ إِلَّا خَيْرًا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ قَدْ بَرَّأَهَا مِنْ ذَلِكَ» ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ، فَقَالَ: § «لَا يَدْخُلَنَّ رَجُلٌ بَعْدَ يَوْمِي هَذَا عَلَى مُغِيبَةٍ إِلَّا وَمَعَهُ رَجُلٌ»
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்-ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த சிலர் அஸ்மா பின்த் உமைஸ் (ரழி) அவர்களிடம் (அவர் வீட்டிற்குச்) சென்றனர். அப்போது அஸ்மா (ரழி) அவர்கள் அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (அங்கு வந்த) அபூபக்கர் (ரழி) அவர்கள், அவர்களைக் கண்டு அதனை வெறுத்தார்கள். இது குறித்து அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்துவிட்டு, "(அவரிடம்) நான் நன்மையை (ஒழுக்கத்தை) மட்டுமே கண்டேன்" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிச்சயமாக அல்லாஹ் அவரை அ(ந்தச் சந்தேகத்)திலிருந்து தூய்மையாக்கிவிட்டான்" என்று கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பர் (சொற்பொழிவு மேடை) மீது ஏறி நின்று, "இன்றைய தினத்திற்குப் பிறகு, கணவன் ஊரில் இல்லாத (அல்லது வீட்டில் இல்லாத) எந்தவொரு பெண்ணிடமும், அவனுடன் (துணையாக) மற்றொருவர் இல்லாமல் எந்த ஆணும் நுழைய வேண்டாம்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: خَطَبَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ، بِالْجَابِيَةِ، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فِي مِثْلِ مَقَامِي هَذَا، فَقَالَ: § «أَحْسِنُوا إِلَى أَصْحَابِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَفْشُو الْكَذِبُ حَتَّى يَحْلِفَ الرَّجُلُ عَلَى الْيَمِينِ قَبْلَ أَنْ يُسْتَحْلَفَ عَلَيْهَا، وَيَشْهَدَ عَلَى الشَّهَادَةِ قَبْلَ أَنْ يُسْتَشْهَدَ عَلَيْهَا، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَنَالَ بُحْبُوحَةَ الْجَنَّةِ فَلْيَلْزَمِ الْجَمَاعَةَ فَإِنَّ الشَّيْطَانَ مَعَ الْوَاحِدِ وَهُوَ مِنَ الِاثْنَيْنِ أَبْعَدُ، أَلَا لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ فَإِنَّ ثَالِثَهُمَا الشَّيْطَانُ، أَلَا وَمَنْ كَانَ مِنْكُمْ تَسُوؤُهُ سَيِّئَتُهُ، وَتَسُرُّهُ حَسَنَتُهُ فَهُوَ مُؤْمِنٌ»
ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் 'அல்-ஜாபியா' (எனும் ஊரில்) எங்களுக்கு உரை நிகழ்த்தியபோது கூறினார்கள்:

"நான் இப்போது நிற்பதைப் போன்று (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களுக்கு மத்தியில்) நின்று (பின்வருமாறு) கூறினார்கள்:
'எனது தோழர்களிடம் (சஹாபாக்களிடம்) நன்முறையில் நடந்து கொள்ளுங்கள்; பின்னர் அவர்களுக்குப் பின் வருபவர்களிடம் (தாபியீன்களிடம் அவ்வாறே நடந்து கொள்ளுங்கள்). அதன் பின்னர் (மக்களிடையே) பொய் பரவலாகும்; எவ்வாறெனில், ஒருவர் தன்னிடம் சத்தியம் செய்யக் கோரப்படுவதற்கு முன்னரே (தானாக முன்வந்து) சத்தியம் செய்வார்; தன்னிடம் சாட்சியம் கோரப்படுவதற்கு முன்னரே (அழைக்கப்படாமலேயே) சாட்சியம் அளிப்பார். உங்களில் எவர் சொர்க்கத்தின் மையப்பகுதியை (அல்லது மிகச் சிறந்த பகுதியை) அடைய விரும்புகிறாரோ, அவர் 'ஜமாஅத்'துடன் (முஸ்லிம்களின் கூட்டமைப்புடன்) உறுதியாக இருக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் தனித்து இருப்பவருடன் (நெருக்கமாக) இருக்கிறான்; அவன் இரண்டு நபர்களிடமிருந்து (ஒருவரை விட) வெகு தொலைவில் இருக்கிறான். அறிந்து கொள்ளுங்கள்! எந்தவொரு ஆணும் (அந்நியப்) பெண்ணுடன் ஒருபோதும் தனித்திருக்க வேண்டாம்; ஏனெனில், அவர்கள் இருவருக்கும் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான். அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் எவர் தமது நற்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைகிறாரோ, மற்றும் தமது தீய செயலைக் கண்டு மனவருத்தம் அடைகிறாரோ அவரே (உண்மையான) முஃமின் (நம்பிக்கையாளர்) ஆவார்.'"
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «أَلَا لَا يَبِيتَنَّ رَجُلٌ عِنْدَ امْرَأَةٍ فِي بَيْتٍ إِلَّا أَنْ يَكُونَ نَاكِحًا أَوْ ذَا مَحْرَمٍ»
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"அறிந்து கொள்ளுங்கள்! எந்தவொரு ஆணும் ஒரு பெண்ணுடன் (அவளது) வீட்டில் இரவைக் கழிக்க வேண்டாம்; அவன் அவளது கணவனாகவோ அல்லது மஹ்ரமாகவோ (திருமணம் செய்யத் தடைசெய்யப்பட்ட நெருங்கிய உறவினராகவோ) இருந்தாலே தவிர!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَا تَدْخُلُوا عَلَى النِّسَاءِ» فَقَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ: أَفَرَأَيْتَ الْحَمْوَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْحَمْوُ الْمَوْتُ»
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்களிடம் (அவர்கள் தனியாக இருக்கும்போது) செல்வதைத் தவிருங்கள்" என்று கூறினார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவனின் உறவினர்கள் (மைத்துனன் போன்றோர் வருவது) குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கணவனின் உறவினர் (என்பவர்) மரணத்திற்கு ஒப்பானவர் (அதாவது மிகவும் ஆபத்தானவர்)" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مَحْمُودِ بْنِ مُقَاتِلٍ الشَّيْخُ الْفَاضِلُ الصَّالِحُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ أَبَا مَعْبَدٍ، يَقُولُ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَخْطُبُ: § «لَا تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلَّا بِذِي مَحْرَمٍ، وَلَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا بِذِي مَحْرَمٍ»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) நின்று உரை நிகழ்த்தியபோது, "மஹ்ரம் (திருமணம் செய்யத் தடைசெய்யப்பட்ட நெருங்கிய உறவினர்) இல்லாமல் எந்தவொரு பெண்ணும் பயணம் செய்யக் கூடாது; மேலும், மஹ்ரமான உறவினர் உடனிருக்கும் நிலையிலே தவிர, எந்தவொரு ஆணும் ஒரு பெண்ணுடன் (அந்நியப் பெண்ணுடன்) தனித்திருக்கக் கூடாது" என்று கூறுவதை நான் செவியேற்றேன்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَا يَبِيتَنَّ رَجُلٌ عِنْدَ امْرَأَةٍ فِي بَيْتٍ إِلَّا أَنْ يَكُونَ نَاكِحًا أَوْ ذَا مَحْرَمٍ»
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எந்தவொரு ஆணும் ஒரு பெண்ணுடன் (அந்நியப் பெண்ணுடன்) ஒரு வீட்டில் இரவைக் கழிக்க வேண்டாம்; அவர் (அப்பெண்ணை) மணந்தவராகவோ அல்லது (அப்பெண்ணுக்குத் திருமணம் செய்யத் தகாத) 'மஹ்ரம்' உறவினராகவோ இருந்தாலே தவிர!"
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا الْمُسْتَمِرُّ بْنُ الرَّيَّانِ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ الدُّنْيَا فَقَالَ: «إِنَّ §الدُّنْيَا خَضِرَةٌ حُلْوَةٌ فَاتَّقُوهَا، وَاتَّقُوا النِّسَاءَ» ثُمَّ ذَكَرَ نِسْوَةً ثَلَاثَةً مِنْ بَنِي إِسْرَائِيلَ امْرَأَتَيْنِ طَوِيلَتَيْنِ، وَامْرَأَةً قَصِيرَةً لَا تُعْرَفُ، فَاتَّخَذَتْ رِجْلَيْنِ مِنْ خَشَبٍ، وَصَاغَتْ خَاتَمًا فَحَشَتْهُ مِنْ أَطْيَبِ الطِّيبِ، فَإِذَا مَرَّتْ بِالْمَسْجِدِ أَوْ بِالْمَلَأِ قَالَتْ بِهِ، فَفَتَحَتْهُ فَفَاحَ رِيحُهُ «
அபு ஸயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வுலகைப் பற்றிக் குறிப்பிட்ட போது பின்வருமாறு கூறினார்கள்: “நிச்சயமாக, இவ்வுலகம் பசுமையானதும் இனிமையானதுமாகும். எனவே, இவ்வுலகின் (மோகத்தின்) விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; மேலும் பெண்களின் (மூலம் ஏற்படும் சோதனைகள்) விஷயத்திலும் எச்சரிக்கையாக இருங்கள்.”

பின்னர், பனூ இஸ்ராயீல்களைச் சேர்ந்த மூன்று பெண்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: “(அவர்களில்) இருவர் உயரமான பெண்கள். மற்றொருத்தி குட்டையானவள்; (அவள் குட்டையாக இருந்ததால் எவராலும்) அடையாளம் காணப்படவில்லை (கவனிக்கப்படவில்லை). எனவே, அவள் மரத்தாலான இரண்டு கால்களைத் (தன் கால்களில் உயரமாகத் தெரிவதற்காகப்) பொருத்திக் கொண்டாள். மேலும் ஒரு மோதிரத்தை உருவாக்கி, அதில் மிகச் சிறந்த நறுமணப் பொருளை அடைத்துக் கொண்டாள். அவள் பள்ளிவாசலையோ அல்லது (மக்கள் கூடும்) சபையையோ கடந்து செல்லும்போது, அதனை (அந்த மோதிரத்தை) அசைத்துத் திறப்பாள்; அப்போது அதிலிருந்து நறுமணம் எங்கும் வீசும்.”
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا مُسْتَمِرُّ بْنُ الرَّيَّانِ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «إِنَّ امْرَأَةً مِنْ بَنِي إِسْرَائِيلَ كَانَتْ قَصِيرَةً، فَاتَّخَذَتْ لَهَا نَعْلَيْنِ مِنْ خَشَبِ فَكَانَتْ تَمْشِي بَيْنَ امْرَأَتَيْنِ طَوِيلَتَيْنِ تَطَاوَلُ بِهِمَا، وَاتَّخَذَتْ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَحَشَتْ تَحْتَ فَصِّهِ أَطْيَبَ الطِّيبِ الْمِسْكَ، فَكَانَتْ إِذَا مَرَّتْ بِالْمَجْلِسِ حَرَّكَتْهُ فَيَفُوحُ رِيحُهُ»
அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பனூ இஸ்ராயீல் (சமுதாயத்தைச்) சேர்ந்த ஒரு பெண் குள்ளமானவளாக இருந்தாள். அவள் தனக்காக மரத்தாலான இரண்டு காலணிகளைச் செய்து கொண்டாள். (அவற்றின் மூலம் உயரத்தை அதிகரித்துக்காட்டி) இரண்டு உயரமான பெண்களுக்கு மத்தியில் அவள் நடந்து செல்வாள். மேலும், அவள் ஒரு தங்க மோதிரத்தைச் செய்து, அதன் கல்லுக்கு அடியில் நறுமணங்களில் மிகச் சிறந்ததான கஸ்தூரியை (நிரப்பி) வைத்திருந்தாள். (ஆண்கள் அமர்ந்திருக்கும்) ஒரு சபையைக் கடந்து செல்லும் போது, அவள் அதனை (அந்த மோதிரத்தை) அசைப்பாள்; அப்போது அதிலிருந்து நறுமணம் வீசும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ عُمَيْرِ بْنِ إِسْحَاقَ*، قَالَ: كُنْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ فَقَالَ: لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ: أَرِنِي الْمَكَانَ الَّذِي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §يُقَبِّلُهُ مِنْكَ، قَالَ: فَكَشَفَ عَنْ سُرَّتِهِ، فَقَبَّلَهَا، فَقَالَ: شَرِيكٌ: لَوْ كَانَتِ السُّرَّةُ مِنَ الْعَوْرَةِ مَا كَشَفَهَا
உமைர் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உங்களது உடலில்) முத்தமிட்டதை நான் பார்த்த அந்த இடத்தை எனக்குக் காட்டுங்கள்" என்று கேட்டார்கள். உடனே ஹஸன் (ரலி) அவர்கள் தமது தொப்புளைத் திறந்து காட்டினார்கள்; அபூஹுரைரா (ரலி) அவர்கள் அதில் முத்தமிட்டார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷரீக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "தொப்புள் (ஆண்களுக்கு) மறைக்கப்பட வேண்டிய பகுதியாக (அவ்ரத்தாக) இருந்திருந்தால், அவர் (ஹஸன் ரலி) அதனைத் திறந்து காட்டியிருக்க மாட்டார்."
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ وَالْأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسٌ، فَقَالَ: الْأَقْرَعُ: إِنَّ لِيَ عَشَرَةً مِنَ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا قَطُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَمُ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அக்ரஉ பின் ஹாபிஸ் அத்தமீமீ (ரலி) அவர்கள் (அருகில்) அமர்ந்திருந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அக்ரஉ அவர்கள், "எனக்குப் பத்து குழந்தைகள் உள்ளனர். அவர்களில் எவரையும் நான் ஒருபோதும் முத்தமிட்டதில்லை" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவர் (பிறர் மீது) இரக்கம் காட்டவில்லையோ, அவர் (அல்லாஹ்வால்) இரக்கம் காட்டப்பட மாட்டார்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّغُولِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ الْفِرْيَابِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَتُقَبِّلُونَ الصِّبْيَانَ؟ فَمَا نُقَبِّلُهُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «وَمَا أَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ الرَّحْمَةَ مِنْ قَلْبِكَ»
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(ஒரு முறை) கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "(என்ன!) நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களோ அவர்களை முத்தமிடுவதில்லை" என்று (வியப்புடன்) கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உமது உள்ளத்திலிருந்து இரக்கத்தை அகற்றிவிட்டால், (அதை மீண்டும் உமக்கு வழங்க) நான் என்ன செய்ய முடியும்?" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُدْلِعُ لِسَانَهُ لِلْحُسَيْنِ، فَيَرَى الصَّبِيُّ حُمْرَةَ لِسَانِهِ، فَيَهَشُّ إِلَيْهِ، فَقَالَ لَهُ عُيَيْنَةُ بْنُ حِصْنِ بْنِ بَدْرٍ: أَلَا أَرَى تَصْنَعُ هَذَا بِهَذَا، وَاللَّهِ لَيَكُونُ لِيَ الِابْنُ قَدْ خَرَجَ وَجْهُهُ وَمَا قَبَّلْتُهُ قَطُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَمُ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேரர்) ஹுஸைன் (ரலி) அவர்களுக்குத் தமது நாக்கைத் துருத்திக் காட்டுவார்கள். அச்சிறுவர் (நபியவர்களின்) நாக்கின் சிவப்பைக் கண்டு (மகிழ்ச்சியில் அவர்களை நோக்கி) விரைவார். இதைக் கண்ட உயைனா பின் ஹிஸ்ன் பின் பத்ர் அவர்கள், "தாங்கள் இவரிடம் (இந்தக் குழந்தையிடம்) இவ்வாறு செய்வதை நான் பார்க்கிறேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு ஒரு மகன் இருக்கிறான், அவன் (முகத்தில் முடி முளைத்து) வாலிபப் பருவத்தை அடைந்துவிட்டான்; இருப்பினும், நான் அவனை ஒருபோதும் முத்தமிட்டதில்லை" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் (பிறர் மீது) இரக்கம் காட்டவில்லையோ, அவர் (அல்லாஹ்வினால்) இரக்கப்பட மாட்டார்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ الرَّبِيعِ بْنِ طَارِقٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ يَعْقُوبَ بْنَ إِبْرَاهِيمَ*، عَنْ مُحَمَّدِ بْنِ ثَابِتِ بْنِ شُرَحْبِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُوَيْدٍ الْخَطْمِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَدْخُلِ الْحَمَّامَ إِلَّا بِمِئْزَرٍ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتَ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ مِنْ نِسَائِكُمْ فَلَا تَدْخُلِ الْحَمَّامَ» قَالَ: فَنَمَيْتُ بِذَلِكَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فِي خِلَافَتِهِ، فَكَتَبَ إِلَى أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ أَنْ سَلَ مُحَمَّدَ بْنَ ثَابِتٍ عَنْ حَدِيثِهِ، فَإِنَّهُ رِضًا، فَسَأَلَهُ ثُمَّ كَتَبَ إِلَى عُمَرَ، فَمَنَعَ النِّسَاءَ عَنِ الْحَمَّامِ
அபூ அய்யூப் அல்-அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர், தம் அண்டை வீட்டாருக்குக் கண்ணியம் அளிக்கட்டும். அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர், இடுப்புத் துணி (கீழாடை) அணியாமல் குளியலகத்திற்குள் (பொதுக் குளியலிடங்களுக்குள்) நுழைய வேண்டாம். அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர், நல்லதைப் பேசட்டும் அல்லது அமைதியாக இருக்கட்டும். உங்கள் பெண்களில் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் குளியலகத்திற்குள் (பொதுக் குளியலிடங்களுக்குள்) நுழைய வேண்டாம்."

(இதனை அறிவித்த முஹம்மத் பின் ஸாபித் கூறுகிறார்:) உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இச்செய்தியை நான் அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன். அப்போது அவர் அபூபக்ர் பின் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் என்பவருக்கு, "முஹம்மத் பின் ஸாபித் (அறிவிக்கும் செய்திகள்) திருப்திகரமானவை; எனவே, அவரிடம் இந்த ஹதீஸைப் பற்றி (மீண்டும்) விசாரித்துக் கொள்ளுங்கள்" என்று கடிதம் எழுதினார். அவ்வாறே அவர் (விசாரித்துவிட்டு) உமர் அவர்களுக்குக் கடிதம் எழுதினார். இதையடுத்து பெண்கள் (பொதுக்) குளியலகத்திற்குச் செல்வதை உமர் அவர்கள் தடை செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ الْعِجْلِيُّ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «الْمَرْأَةُ عَوْرَةٌ، وَإِنَّهَا إِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ، وَإِنَّهَا لَا تَكُونُ إِلَى وَجْهِ اللَّهِ أَقْرَبَ مِنْهَا فِي قَعْرِ بَيْتِهَا»
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பெண் என்பவள் (முழுமையாக) மறைக்கப்பட வேண்டியவள் ஆவாள். அவள் (தன் வீட்டை விட்டு) வெளியேறும்போது, ஷைத்தான் அவளை உற்று நோக்குகிறான் (அல்லது பிறர் அவளை உற்று நோக்கும்படி செய்கிறான்). மேலும், அவள் தன் வீட்டின் மிக உட்பகுதியில் இருக்கும்போது இருப்பதை விட, (வேறு எங்கும்) அல்லாஹ்வின் திருமுகத்திற்கு (அவனது நெருக்கத்திற்கு) மிக நெருக்கமானவளாக இருப்பதில்லை."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ مُوَرِّقٍ الْعِجْلِيِّ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «الْمَرْأَةُ عَوْرَةٌ، فَإِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ، وَأَقْرَبُ مَا تَكُونُ مِنْ رَبِّهَا إِذَا هِيَ فِي قَعْرِ بَيْتِهَا»
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பெண் (முழுமையாக) மறைக்கப்பட வேண்டியவள் ஆவாள். அவள் (வெளியே) புறப்படும்போது, ஷைத்தான் அவளை (பிறர் பார்வைக்கு அழகாக்கிக் காட்ட அல்லது அவளைக் கொண்டு வழிகெடுக்க) உற்று நோக்குகிறான். அவள் தனது வீட்டின் உட்பகுதியில் இருக்கும்போதுதான், தனது இறைவனுக்கு மிக நெருக்கமானவளாக இருக்கிறாள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا غَسَّانُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ إِسْحَاقَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ اشْتَكَى، وَاشْتَكَى أَصْحَابُهُ، وَاشْتَكَى أَبُو بَكْرٍ وَعَامِرُ بْنُ فُهَيْرَةَ مَوْلَى أَبِي بَكْرٍ وَبِلَالٌ، فَاسْتَأْذَنَتْ عَائِشَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي عِيَادَتِهِمْ، فَأَذِنَ لَهَا، فَقَالَتْ لِأَبِي بَكْرٍ: كَيْفَ تَجِدُكَ؟ فَقَالَ:
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது (அவர்களுக்கு) உடல்நலக் குறைவு ஏற்பட்டது; அவர்களுடைய தோழர்களுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அபூபக்கர் (ரழி), அபூபக்கர் (ரழி) அவர்களின் விடுதலையளிக்கப்பட்ட அடிமையான (பணியாளரான) ஆமிர் பின் ஃபுஹைரா மற்றும் பிலால் (ரழி) ஆகியோரும் நோய்வாய்ப்பட்டனர். அவர்களை நலம் விசாரிப்பதற்காக (நோயாளிகளைப் பார்ப்பதற்காக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆயிஷா (ரழி) அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு (நபி (ஸல்) அவர்கள்) அனுமதி அளித்தார்கள். பிறகு (ஆயிஷா (ரழி) அவர்கள் தன் தந்தை) அபூபக்கர் (ரழி) அவர்களிடம், 'தங்களை எவ்வாறு உணர்கிறீர்கள்? (தங்கள் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது?)' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (பதிலாகக்) கூறினார்கள்:..."
ஹதீஸ் தரம் : நம்பகமானது
حسن
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى، قَالَ: حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا شَرِيكُ بْنُ أَبِي نَمِرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَيْسَ لِلنِّسَاءِ وَسَطُ الطَّرِيقِ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பெண்களுக்குச் சாலையின் நடுப்பகுதி (நடப்பதற்கு உரியது) அல்ல."
ஹதீஸ் தரம் : நம்பகமானது
حسن
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنِي اللَّيْثِيُّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ «أَنَّ أُمَّ سَلَمَةَ، اسْتَأْذَنَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحِجَامَةِ، §فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا طَيْبَةَ أَنْ يَحْجُمَهَا، وَقَالَ: حَسِبْتُ أَنَّهُ قَالَ: كَانَ أَخَاهَا مِنَ الرَّضَاعَةَ، أَوْ غُلَامًا لَمْ يَحْتَلِمْ»
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் (தமக்கு) இரத்தம் குத்தி எடுப்பதற்கு (ஹிஜாமா செய்துகொள்ள) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அப்போது, அவர்களுக்கு இரத்தம் குத்தி எடுக்கும்படி அபூதைபா என்பவருக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அறிவிப்பாளர் கூறுகிறார்:) "அவர் (அபூதைபா) உம்மு ஸலமாவின் பால்குடிச் சகோதரராகவோ அல்லது பருவமடையாத சிறுவனாகவோ இருந்தார் என்று (ஜாபிர் அவர்கள்) கூறியதாக நான் கருதுகிறேன்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
فَصْلٌ فِي التَّعْذِيبِ
வேதனை செய்வது பற்றிய பாடம்
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «أَجِيبُوا الدَّاعِيَ، وَلَا تَرُدُّوا الْهَدِيَّةَ، وَلَا تَضْرِبُوا الْمُسْلِمِينَ»
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அழைப்பவரின் அழைப்பை (விருந்து போன்றவற்றுக்கு அழைக்கும்போது) ஏற்றுக் கொள்ளுங்கள்; அன்பளிப்பை (அது சிறியதாக இருந்தாலும்) நிராகரிக்காதீர்கள்; முஸ்லிம்களை (அநியாயமாக) அடிக்காதீர்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «إِذَا قَاتَلَ أَحَدُكُمْ فَلْيَجْتَنِبِ الْوَجْهَ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் (யாரையாவது) சண்டையிட்டால் (அல்லது அடித்தால்), முகத்தில் (அடிப்பதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: § «إِذَا ضَرَبَ أَحَدُكُمْ فَلْيَجْتَنِبِ الْوَجْهَ، فَإِنَّ اللَّهَ خَلَقَ آدَمَ عَلَى صُورَتِهِ»
அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் யாரேனும் (ஒருவரை) அடித்தால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும். ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் ஆதாமை (அவனது/தனது) உருவத்திலேயே படைத்துள்ளான்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسَابٍ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ عِكْرِمَةَ أَنَّ عَلِيًّا أُتِيَ بِقَوْمٍ قَدِ ارْتَدُّوا عَنِ الْإِسْلَامِ أَوْ قَالَ زَنَادِقَةٍ مَعَهُمْ كُتُبٌ فَأَمَرَ بِنَارٍ فَأُجِّجَتْ فَأَلْقَاهُمْ فِيهَا بِكُتُبِهِمْ فَبَلَغَ ذَلِكَ ابْنَ عَبَّاسٍ فَقَالَ أَمَّا أَنَا لَوْ كُنْتُ لَمْ أُحَرِّقْهُمْ لِنَهْيِ رَسُولِ اللَّهِ ﷺ وَلَقَتَلْتُهُمْ لِقَوْلِ رَسُولِ اللَّهِ ﷺ «لَا تُعَذِّبُوا بِعَذَابِ اللَّهِ» وَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ»
அலி (ரலி) அவர்களிடம் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய (மதமாற்றம் செய்த) சில மக்கள் அல்லது 'ஜனாதிகா' (எனப்படும் நயவஞ்சகமான இறைமறுப்பாளர்கள்) கொண்டுவரப்பட்டனர். அவர்களிடம் (வழிகெடுத்தல் தொடர்பான) சில புத்தகங்களும் இருந்தன. அலி (ரலி) அவர்கள் தீ மூட்டுமாறு கட்டளையிட்டார்கள்; (அவ்வாறே) தீ மூட்டப்பட்டது. பின்னர், அவர்களை அவர்களின் புத்தகங்களோடு சேர்த்து அதில் வீசினார்கள் (எரித்தார்கள்).

இச்செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள் கூறினார்கள்: "நானாக இருந்திருந்தால் (அல்லாஹ்வின் தூதரின் தடையின் காரணமாக) அவர்களைத் தீயிட்டுக் கொளுத்தியிருக்க மாட்டேன்; ஏனெனில், 'அல்லாஹ் (மட்டுமே) அளிக்கும் வேதனையைக் கொண்டு (நெருப்பால் எவரையும்) நீங்கள் வேதனை செய்யாதீர்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். (மாறாக) நான் அவர்களைக் கொன்றிருப்பேன்; ஏனெனில், 'தனது (இஸ்லாமிய) மார்க்கத்தை மாற்றிக் கொள்பவனைக் கொன்றுவிடுங்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفَتْحِ الْعَائِدِيُّ، بِسَمَرْقَنْدَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «مَنْ رَمَانَا بِالنَّبْلِ * فَلَيْسَ مِنَّا»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"எவர் (முஸ்லிம்களாகிய) நம்மை நோக்கி அம்புகளை எய்கிறாரோ (தாக்குகிறாரோ), அவர் நம்மைச் சார்ந்தவர் (நம்முடைய வழியைப் பின்பற்றுபவர்) அல்லர்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «لَا تَتَّخِذُوا شَيْئًا فِيهِ الرُّوحُ غَرَضًا»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உயிருள்ள எதனையும் (அம்பெய்வது அல்லது சுடுவது போன்ற பயிற்சிகளுக்காக) இலக்காக ஆக்கிக் கொள்ளாதீர்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَشْجَعِ، عَنْ عُبَيْدِ بْنِ تِعْلَى، سَمِعَهُ يَقُولُ: سَمِعْتُ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ، يَقُولُ: § «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَبْرِ الدَّابَّةِ»
அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிராணிகளைக் கட்டி வைத்து (அம்புகள் எய்தோ அல்லது வேறு வழிகளிலோ சித்திரவதை செய்து கொல்வதைத்) தடை செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ عَنْ عُبَيْدِ بْنِ تِعْلَى أَنَّهُ قَالَ غَزَوْنَا مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ خَالِدِ بْنِ الْوَلِيدِ فَأُتِيَ بِأَرْبَعَةِ أَعْلَاجٍ مَعَ الْعَدُوِّ فَأَمَرَ بِهِمْ فَقُتِلُوا صَبْرًا بِالنَّبْلِ فَبَلَغَ ذَلِكَ أَبَا أَيُّوبَ فَقَالَ «سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَنْهَى عَنْ قَتْلِ الصَّبْرِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ كَانَتْ دَجَاجَةٌ مَا صَبَرْتُهَا» فَبَلَغَ ذَلِكَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ خَالِدٍ فَأَعْتَقَ أَرْبَعَ رِقَابٍ
உபைத் பின் திக்லா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் அப்துர்ரஹ்மான் பின் காலித் பின் அல்-வலீத் அவர்களுடன் இணைந்து போரிட்டோம். அப்போது எதிரிப் படையைச் சேர்ந்த நான்கு (அன்னிய) நபர்கள் அவரிடம் (கைதிகளாகக்) கொண்டுவரப்பட்டனர். அவரது உத்தரவின்பேரில், அவர்கள் (கைகால்கள்) கட்டப்பட்ட நிலையில் அம்புகளால் எய்து கொல்லப்பட்டனர். இச்செய்தி அபூ அய்யூப் (அல்-அன்சாரி - ரலி) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உயிரினங்களைக்) கட்டிவைத்து (வதைத்துக்) கொல்வதைத் (கத்லுஸ் ஸப்ர்) தடை செய்ததை நான் செவியுற்றுள்ளேன். என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! அது ஒரு கோழியாக இருந்தாலும்கூட, நான் அதைக் கட்டிவைத்துக் கொல்ல மாட்டேன்."

(நபி (ஸல்) அவர்கள் தடுத்த) இச்செய்தி அப்துர்ரஹ்மான் பின் காலித் அவர்களுக்கு எட்டியபோது, (தம் தவற்றை உணர்ந்து அதற்கான பரிகாரமாக) அவர் நான்கு அடிமைகளை விடுதலை செய்தார்.
ஹதீஸ் தரம் : பலவீனமானது
ضعيف
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي إِسْحَاقَ الدَّوْسِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا لَقِيتُمْ هَبَّارَ بْنَ الْأَسْوَدِ وَنَافِعَ بْنَ عَبْدِ الْقَيْسِ فَحَرِّقُوهُمَا بِالنَّارِ» ثُمَّ إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَعْدَ ذَلِكَ: § «لَا يُعَذِّبُ بِالنَّارِ إِلَّا اللَّهُ وَلَكِنْ إِذَا لَقِيتُمُوهُمَا فَاقْتُلُوهُمَا»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீங்கள் ஹப்பார் பின் அல்-அஸ்வத் மற்றும் நாஃபிஉ பின் அப்துல் கைஸ் ஆகிய இருவரையும் (போர்க்களத்தில் அல்லது அவர்கள் பிடிபடும்போது) சந்தித்தால், அவர்களை நெருப்பால் எரித்து விடுங்கள்" என்று (ஆரம்பத்தில்) கூறினார்கள். பின்னர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதன் பிறகு, "அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் நெருப்பால் தண்டிக்கக் கூடாது. எனவே, நீங்கள் அவர்களைச் சந்தித்தால், (நெருப்பால் எரிக்காமல்) அவர்களைக் கொன்று விடுங்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْكَلَاعِيُّ، قَالَ: حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، أَنَّ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ، وَجَدَ عِيَاضَ بْنَ غَنْمٍ وَهُوَ عَلَى حِمْصَ، شَمَّسَ نَاسًا مِنَ النَّبَطِ فِي أَخْذِ الْجِزْيَةِ، فَقَالَ: هِشَامُ بْنُ حَكِيمٍ: مَا هَذَا يَا عِيَاضُ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ §يُعَذِّبُ الَّذِينَ يُعَذِّبُونَ النَّاسَ فِي الدُّنْيَا»
ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள், ஹிம்ஸ் (நகரின் ஆளுநராக) இருந்த இயாத் பின் கன்ம் அவர்களைக் கண்டார்கள். அவர் 'ஜிஸ்யா' (வரி) வசூலிப்பதற்காக நபத் (குலத்தைச் சேர்ந்த) மக்கள் சிலரை வெயிலில் (நிற்க வைத்துத் துன்புறுத்திக்) கொண்டிருந்தார்.

அப்போது ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) அவர்கள், "இயாத்! இது என்ன (செயல்)? 'இவ்வுலகில் மக்களை வேதனைப்படுத்துபவர்களை நிச்சயமாக அல்லாஹ் (மறுமையில்) வேதனைப்படுத்துவான்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ، مَرَّ بِعُمَيْرِ بْنِ سَعْدٍ وَهُوَ يُعَذِّبُ النَّاسَ فِي الْجِزْيَةِ فِي الشَّمْسِ، فَقَالَ: يَا عُمَيْرُ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «إِنَّ اللَّهَ يُعَذِّبُ الَّذِينَ يُعَذِّبُونَ النَّاسَ فِي الدُّنْيَا»، قَالَ: اذْهَبْ فَخَلِّ سَبِيلَهُمْ.
ஹகீம் பின் ஹிஸாம் (ரழி) அவர்கள், உமைர் பின் ஸஅத் (என்பவர்) மக்களை ஜிஸ்யா (வரி வசூலிக்கும்) விவகாரத்தில் வெயிலில் (நிற்க வைத்து) தண்டித்துக் கொண்டிருந்ததைக் கடந்து சென்றார்கள்.

அப்போது (அவரிடம்), "உமைரே! 'நிச்சயமாக அல்லாஹ், இவ்வுலகில் மக்களைத் தண்டிப்பவர்களைத் தண்டிப்பான்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன்" என்று கூறினார்கள்.

(இதைக் கேட்ட) அவர், "சென்று அவர்களை விடுவித்து விடுங்கள்" என்று (தம் பணியாளர்களிடம்) கூறினார்.
ஹதீஸ் தரம் : நம்பகமானது
حسن
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَسَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ §نَمْلَةً قَرَصَتْ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ، فَأَمَرَ بِقَرْيَةِ النَّمْلِ فَأُحْرِقَتْ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ: أَنْ قَرَصَتْكَ نَمْلَةٌ أَهْلَكْتَ أُمَّةً مِنَ الْأُمَمِ تُسَبِّحُ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்கால) நபிமார்களில் ஒருவரை ஓர் எறும்பு கடித்துவிட்டது. எனவே, (அந்த) எறும்புகளின் புற்றை (அழித்து) எரித்துவிடும்படி அவர் கட்டளையிட்டார்; அவ்வாறே அது எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவருக்கு, "ஓர் எறும்பு உம்மைக் கடித்ததற்காக, (என்னைத்) துதித்துக் கொண்டிருந்த (உயிரினச்) சமுதாயங்களில் ஒரு சமுதாயத்தையா நீர் அழித்துவிட்டீர்?" என்று வஹீ (மூலம்) அறிவித்தான்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
بَابُ الْمُثْلَةِ
உடலுறுப்புகளைச் சிதைப்பது பற்றிய பாடம்
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «هَلْ تُنْتَجُ إِبِلُ قَوْمِكَ صِحَاحًا آذَانُهَا، فَتَعْمَدُ إِلَى الْمُوسَى فَتَقْطَعُ آذَانَهَا، فَتَقُولُ: هَذِهِ بُحُرٌ، أَوْ تَشُقُّ جُلُودَهَا، وَتَقُولَ: هَذِهِ صُرُمٌ، فَتُحَرِّمُهَا عَلَيْكَ وَعَلَى أَهْلِكَ؟ » قَالَ: قُلْتُ: نَعَمْ، قَالَ: § «فَكُلُّ مَا آتَاكَ اللَّهُ لَكَ حِلٌّ، سَاعِدُ اللَّهِ أَشَدُّ مِنْ سَاعِدِكَ، وَمُوسَى اللَّهِ أَحَدُّ مِنْ مُوسَاكَ»
அபுல் அஹ்வஸ் (ரஹ்) அவர்களின் தந்தை (மாலிக் இப்னு நழ்லா - ரலி) அறிவிக்கிறார்கள்:

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், "உமது சமூகத்தாரின் ஒட்டகங்கள் (எந்தக் குறையுமின்றி) முழுமையான காதுகளுடன் பிறக்கின்றனவா? (அவ்வாறு பிறக்கையில்) நீராகவே ஒரு சவரக் கத்தியை எடுத்து அதன் காதுகளை அறுத்துவிட்டு, 'இவை புஹுர்' (காது அறுக்கப்பட்டவை) என்று கூறுகிறீரா? அல்லது அவற்றின் தோல்களைக் கிழித்துவிட்டு, 'இவை ஸுரும்' (தடை செய்யப்பட்டவை) என்று கூறி, அவற்றை உமக்கும் உமது குடும்பத்தாருக்கும் ஹராமாக்கிக் (தடுக்கப்பட்டதாக ஆக்கிக்) கொள்கிறீரா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "ஆம்" என்றேன்.

அப்போது நபியவர்கள், "அல்லாஹ் உமக்கு வழங்கியவை அனைத்தும் உமக்கு ஹலாலானவை (அனுமதிக்கப்பட்டவை) ஆகும். அல்லாஹ்வின் கரம் (ஆற்றல்) உமது கரத்தை விட வலிமையானது; அல்லாஹ்வின் கத்தி (விதி/தீர்மானம்) உமது கத்தியை விடக் கூர்மையானது" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ قَالَ حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ عَنِ الْحَسَنِ قَالَ قَالَ رَجُلٌ لِعِمْرَانَ بْنِ حُصَيْنٍ إِنَّ عَبْدًا لِي أَبَقَ وَإِنِّي نَذَرْتُ إِنْ أَصَبْتُهُ لَأَقْطَعَنَّ يَدَهُ قَالَ «لَا تَقْطَعْ يَدَهُ فَإِنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَقُومُ فِينَا فَيَأْمُرُنَا بِالصَّدَقَةِ وَيَنْهَانَا عَنِ الْمُثْلَةِ»
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் ஒருவர், "என்னுடைய அடிமை ஒருவன் (என்னை விட்டுத்) தப்பியோடிவிட்டான். நான் அவனைப் பிடித்தால் நிச்சயமாக அவனது கையைத் துண்டிப்பேன் என்று (அல்லாஹ்வின் மீது) நேர்ச்சை செய்துள்ளேன்" என்று கூறினார்.

அதற்கு அவர்கள் (இம்ரான் பின் ஹுஸைன்), "அவனது கையைத் துண்டிக்க வேண்டாம்! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மத்தியில் (உரையாற்ற) எழுந்து நின்று, தர்மம் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிடுவார்கள்; மேலும், (உடலுறுப்புகளைத் துண்டித்துச்) சிதைப்பதைத் (முத்லா) தடை செய்வார்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «لَعَنَ اللَّهُ مَنْ مَثَّلَ بِالْحَيَوَانِ»
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"விலங்குகளை (உயிருடன் இருக்கும்போது அவற்றின் உறுப்புகளைத் துண்டித்து) அங்கவீனம் செய்பவரை அல்லாஹ் சபிக்கிறான் (அல்லது சபிக்கட்டும்)" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
فَصْلٌ فِيمَا يَتَعَلَّقُ بِالدَّوَابِّ
பிராணிகள் தொடர்பான பாடம்
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الرُّومِيِّ، قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا إِيَاسُ بْنُ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، عَنْ أَبِيهِ، قَالَ: § «لَقَدْ قُدْتُ بِنَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالْحَسَنِ وَالْحُسَيْنِ عَلَى بَغْلَتِهِ الشَّهْبَاءِ حَتَّى أَدْخَلْتُهُمْ حُجْرَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا قُدَّامَهُ وَهَذَا خَلْفَهُ»
ஸலமா பின் அல்-அக்வஃ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், (அவர்களுடன்) ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோரும் (நபியவர்களின்) வெள்ளை நிறக் கோவேறு கழுதையின் மீது (அமர்ந்திருக்க), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறைக்குள் அவர்களைக் கொண்டு சேர்க்கும் வரை அ(ந்தக் கழுதையி)னை நான் பிடித்துச் செலுத்தி (அழைத்துச்) சென்றேன். (அப்போது) இவர்களில் ஒருவர் (நபியவர்களுக்கு) முன்னாலும், மற்றவர் அவர்களுக்குப் பின்னாலும் (அமர்ந்திருந்தனர்).
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ الْمُؤَدِّبُ، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، وَكَانَ أَبُوهُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «ارْكَبُوا هَذِهِ الدَّوَابَّ سَالِمَةً، وَلَا تَتَّخِذُوهَا كَرَاسِيَّ»
நபி (ஸல்) அவர்களின் தோழரான முஆத் பின் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இந்தக் கால்நடைகள் (ஆரோக்கியமாக/பாதுகாப்பாக) இருக்கும் நிலையில் அவற்றின் மீது சவாரி செய்யுங்கள். மேலும், அவற்றை (வீதிகளிலும் சந்தைகளிலும் நின்று பேசிக் கொண்டிருப்பதற்காக) நாற்காலிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ مَرَّ عَلَيْهِ بِحِمَارٍ قَدْ كُوِيَ عَلَى وَجْهِهِ أَوْ وُسِمَ، فَلَعَنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ فَعَلَ ذَلِكَ، ثُمَّ قَالَ: «سُبْحَانَ اللَّهِ، §لَا تَضْرِبُوهَا عَلَى وُجُوهِهَا»
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு கழுதை கொண்டு செல்லப்பட்டது. அதன் முகத்தில் சூடு போடப்பட்டிருந்தது அல்லது (அடையாளத்திற்காக) முத்திரையிடப்பட்டிருந்தது. அப்போது, அவ்வாறு செய்தவரை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். பின்னர், "சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்துகிறேன்). அவற்றின் முகங்களில் (அடிக்காதீர்கள் அல்லது) காயப்படுத்தாதீர்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «دَخَلْتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَا هِيَ أَطْعَمَتْهَا، وَلَا هِيَ أَرْسَلَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ حَتَّى مَاتَتْ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு பெண் ஒரு பூனையின் காரணமாக (அதைச் சிறைப்படுத்தியதால்) நரகத்தில் நுழைந்தாள். அவள் அதைக் கட்டி வைத்திருந்தாள்; (அவள் அதை அடைத்து வைத்திருந்த போது) அதற்கு அவள் உணவும் அளிக்கவில்லை, பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்பதற்காக (அவளே தேடித் தின்னும் வகையில்) அதை அவள் அவிழ்த்து விடவுமில்லை. இறுதியில் அது (பசியால் வாடி) இறந்துவிட்டது."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، حَدَّثَنَا حَكِيمُ بْنُ سَيْفٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ: «انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ وَقُمْنَا، فَصَلَّى ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا يُحَدِّثُنَا، فَقَالَ: » لَقَدْ §عُرِضَتَ عَلَيَّ الْجَنَّةُ، حَتَّى لَوْ شِئْتُ لَتَعَاطَيْتُ مِنْ قُطُوفِهَا، وَعُرِضَتْ عَلَيَّ النَّارُ فَلَوْلَا أَنِّي دَفَعْتُهَا عَنْكُمْ لَغَشِيَتْكُمْ، وَرَأَيْتُ فِيهَا ثَلَاثَةً يُعَذَّبُونَ: امْرَأَةً حِمْيَرِيَّةً سَوْدَاءَ طَوِيلَةً، تُعَذَّبُ فِي هِرَّةٍ لَهَا، أَوْثَقَتْهَا فَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ، وَلَمْ تُطْعِمْهَا حَتَّى مَاتَتْ، فَهِيَ إِذَا أَقْبَلَتْ تَنْهَشُهَا وَإِذَا أَدْبَرَتْ تَنْهَشُهَا، وَرَأَيْتُ أَخَا بَنِي دَعْدَعٍ صَاحِبَ السَّائِبِتَيْنِ يُدْفَعُ بِعَمُودَيْنِ فِي النَّارِ، وَالسَّائِبَتَانِ بَدَنَتَانِ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرَقَهُمَا، وَرَأَيْتُ صَاحِبَ الْمِحْجَنِ مُتَّكِئًا عَلَى مِحْجَنِهِ، وَكَانَ صَاحِبُ الْمِحْجَنِ يَسْرِقُ مَتَاعَ الْجّاجِّ بِمِحْجَنِهِ، فَإِذَا خَفِيَ لَهُ ذَهَبَ بِهِ، وَإِذَا ظَهَرَ عَلَيْهِ، قَالَ: إِنِّي لَمْ أَسْرِقْ، إِنَّمَا تَعَلَّقَ بِمِحْجَنِي «
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் (தொழுகைக்காக) எழுந்து நின்றார்கள், நாங்களும் அவர்களுடன் எழுந்து நின்றோம். அவர்கள் தொழுதார்கள். பின்னர் எங்களை நோக்கித் திரும்பி (மார்க்க விஷயங்களை) உரையாற்றினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக எனக்குச் சொர்க்கம் எடுத்துக்காட்டப்பட்டது. நான் விரும்பியிருந்தால் அதிலுள்ள பழக் குலைகளிலிருந்து (சிலவற்றை) நான் பறித்திருப்பேன். நரகமும் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டது. நான் அதை உங்களை விட்டும் தள்ளிவிடவில்லை என்றால், அது உங்களைச் சூழ்ந்து (பொசுக்கி)யிருக்கும். அதில் மூவர் வேதனை செய்யப்படுவதை நான் கண்டேன்:

(முதலாவதாக,) நீண்ட உயரமும் கருத்த நிறமும் கொண்ட ஹிம்யர் குலத்துப் பெண் ஒருத்தி, தான் (வளர்த்த) ஒரு பூனையின் காரணமாக வேதனை செய்யப்படுகிறாள். அவள் அதைக் கட்டிப்போட்டு, பூமியில் உள்ள புழு பூச்சிகளைத் தின்னவும் விடவில்லை; அதற்கு உணவளிக்கவும் இல்லை; இறுதியில் அது செத்துவிட்டது. (நரகத்தில்) அந்தப் பெண் முன்னோக்கி வரும்போதும், பின்னோக்கிச் செல்லும்போதும் அப்பூனை அவளைக் கடித்துக் குதறுகிறது.

(இரண்டாவதாக,) பனூ தஃதஃ குலத்தைச் சேர்ந்த ஒருவனையும் ('ஸாயிபதைன்' எனப்படும் இரு ஒட்டகங்களைத் திருடியவனையும்) நான் கண்டேன். நரகத்தில் அவன் (நெருப்பாலான) இரண்டு தூண்களால் தள்ளப்பட்டு (வேதனை செய்யப்படுகிறான்). அந்த இரண்டு 'ஸாயிபா'க்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சொந்தமான, (ஹஜ்ஜின் போது) பலியிடப்படும் ஒட்டகங்களாகும்; அவற்றை அவன் திருடியிருந்தான்.

(மூன்றாவதாக,) வளைந்த கைத்தடியை (மிஹ்ஜன்) உடைய ஒருவனைத் தனது வளைந்த கைத்தடியின் மீது சாய்ந்தவாறு (நரகத்தில் வேதனை செய்யப்படுவதை) நான் கண்டேன். அவன், தனது கைத்தடியின் மூலம் ஹாஜிகளின் (புனிதப் பயணிகளின்) பொருட்களைத் திருடுபவனாக இருந்தான். (ஹாஜிகளுக்குத் தெரியாமல்) மறைவாக இருந்தால், அதை எடுத்துச் சென்றுவிடுவான். அவன் பிடிபட்டுவிட்டால், 'நான் திருடவில்லை; இது என் கைத்தடியில் (தற்செயலாகச்) சிக்கிக் கொண்டது' என்று கூறுவான்."
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ثَعْلَبَةَ بْنِ سَوَاءٍ، قَالَ: حَدَّثَنَا عَمِّي مُحَمَّدُ بْنُ سَوَاءٍ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ الْعَبَّاسَ، وَسَمَ بَعِيرًا أَوْ دَابَّةً فِي وَجْهِهِ، §فَرَآهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَغَضِبَ، فَقَالَ عَبَّاسٌ: لَا أَسِمُهُ إِلَّا فِي آخِرِهِ، فَوَسَمَهُ فِي جَاعِرَتَيْهِ»
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அப்பாஸ் (ரழி) அவர்கள் ஒரு ஒட்டகத்தின் அல்லது ஒரு (நான்கு கால்) விலங்கின் முகத்தில் (அடையாளத்திற்காகச்) சூடுபோட்டார்கள். அதனைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (முகத்தில் சூடுபோடுவது விலக்கப்பட்ட செயல் என்பதால்) கோபமடைந்தார்கள். அப்போது அப்பாஸ் (ரழி) அவர்கள், "(இனி) இதன் பின்பகுதியில் தவிர (வேறு எங்கும்) நான் சூடுபோட மாட்டேன்" என்று கூறினார்கள். (அதன்பின்) அவ்வாறே அதன் (தொடைக்கு மேலுள்ள) பின்பகுதியில் சூடுபோட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ نَاعِمًا أَبَا عَبْدِ اللَّهِ، مَوْلَى أُمِّ سَلَمَةُ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: §رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِمَارًا مَوْسُومَ الْوَجْهِ فَأَنْكَرَ ذَلِكَ، فَقَالَ الرَّجُلُ: وَاللَّهِ لَا أَسِمُهُ إِلَّا فِي أَقْصَى شَيْءٍ مِنَ الْوَجْهِ، فَأَمَرَ بِحِمَارٍ لَهُ فَكُوِيَ فِي جَاعِرَتَيْهِ، فَهُوَ أَوَّلُ مَنْ كَوَى الْجَاعِرَتَيْنِ
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முகத்தில் அடையாளமிடப்பட்ட (சூடுபோடப்பட்ட) ஒரு கழுதையைக் கண்டார்கள். அதனை அவர்கள் (மார்க்கத்திற்கு முரணானது என) வன்மையாகக் கண்டித்தார்கள். அப்போது அந்த (கழுதையின் உரிமையாளரான) மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! (இனி) முகத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ள பகுதியில் தவிர (வேறு எங்கும்) நான் அடையாளமிட (சூடுபோட) மாட்டேன்" என்று கூறினார். பின்னர் அவர் தமது கழுதைக்கு (அடையாளமிட) உத்தரவிட்டார்; அவ்வாறே அதன் பிட்டங்களில் (வாலுக்குக் கீழ் இருபுறமும்) சூடுபோடப்பட்டது. பிட்டங்களில் சூடுபோட்ட முதல் நபர் அவரே ஆவார்.
ஹதீஸ் தரம் : இதன் அறிவிப்பாளர் தொடர் நம்பகமானது
إسناده حسن
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ نَاعِمًا أَبَا عَبْدِ اللَّهِ، مَوْلَى أُمِّ سَلَمَةَ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى حِمَارًا مَوْسُومَ الْوَجْهِ فَأَنْكَرَ ذَلِكَ، قَالَ: «وَاللَّهِ §لَا أَسِمُهُ إِلَّا أَقْصَى شَيْءٍ مِنَ الْوَجْهِ، فَأَمَرَ بِحِمَارِهِ فَكُوِيَ فِي جَاعِرَتَيْهِ، فَهُوَ أَوَّلُ مَنْ كَوَى الْجَاعِرَتَيْنِ»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகத்தில் (அடையாளத்திற்காகச்) சூடுபோடப்பட்ட ஒரு கழுதையைக் கண்டார்கள்; அதனை அவர்கள் (வன்மையாகக்) கண்டித்தார்கள்.

(இதைக் கண்ட) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (இனி) முகத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ள ஒரு பகுதியிலேயன்றி (விலங்குகளுக்கு) நான் சூடுபோட மாட்டேன்" என்று கூறினார்கள். பின்னர், தமது கழுதைக்குச் சூடுபோடுமாறு அவர்கள் உத்தரவிட்டார்கள். அதன்படி அதன் இரு பிட்டங்களிலும் (தொடைப் பகுதியிலும்) சூடுபோடப்பட்டது. (விலங்குகளின்) பிட்டங்களில் சூடுபோட்ட முதல் நபர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே ஆவார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، صَاعِقَةُ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: مَرَّ حِمَارٌ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ كُوِيَ فِي وَجْهِهِ، تَفُورُ مَنْخِرَاهُ مِنْ دَمٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَعَنَ اللَّهُ مَنْ فَعَلَ هَذَا» ثُمَّ نَهَى عَنِ الْكَيِّ فِي الْوَجْهِ، وَالضَّرْبِ فِي الْوَجْهِ
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் கூறியதாவது:

முகத்தில் சூடு போடப்பட்டு (அடையாளமிடப்பட்டு), அதன் நாசித் துவாரங்களிலிருந்து இரத்தம் பீறிட்டுக் (கொட்டிக்) கொண்டிருந்த ஒரு கழுதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதைச் செய்தவனை அல்லாஹ் சபிப்பானாக!" என்று கூறினார்கள். பின்னர், (விலங்குகளின்) முகத்தில் சூடு போடுவதையும் (மனிதர்கள் அல்லது விலங்குகளின்) முகத்தில் அடிப்பதையும் அவர்கள் தடை செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا غَسَّانُ بْنُ الرَّبِيعِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى حِمَارًا قَدْ وُسِمَ فِي وَجْهِهِ، فَقَالَ: § «أَلَمْ أَنْهَ عَنْ هَذَا؟! لَعَنَ اللَّهُ مَنْ فَعَلَهُ»
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் முகத்தில் (நெருப்பால்) சூடுபோட்டு அடையாளமிடப்பட்ட ஒரு கழுதையைக் கண்டார்கள். அப்போது, "இதை நான் (ஏற்கனவே) தடை செய்யவில்லையா? இதைச் செய்தவரை அல்லாஹ் சபிப்பானாக!" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَعْيَنَ، قَالَ: حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى حِمَارٍ قَدْ وُسِمَ عَلَى وَجْهِهِ، فَقَالَ: § «لَعَنَ اللَّهُ مَنْ وَسَمَهُ»
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (அடையாளத்திற்காக) முகத்தில் சூடுபோடப்பட்ட (முத்திரையிடப்பட்ட) ஒரு கழுதையைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், "இதற்குச் (முகத்தில்) சூடுபோட்டவனை அல்லாஹ் சபிப்பானாக!" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ زَيْدِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَخٍ لِي يُرِيدُ أَنْ يُحَنِّكَهُ، §فَوَجَدْتُهُ فِي الْمِرْبَدِ، وَهُوَ يَسِمُ غَنَمًا، قَالَ شُعْبَةُ: أَكْثَرُ ظَنِّي أَنَّهُ قَالَ: فِي آذَانِهَا»
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

எனது சகோதரருக்கு 'தஹ்னீக்' (பேரீச்சம்பழத்தை மென்று குழந்தையின் மேல்வாயில் தடவுதல்) செய்வதற்காக அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் ஒரு தொழுவத்தில் (ஆடுகள் அடைக்கப்படும் இடத்தில்) ஆடுகளுக்கு (அடையாளமிடுவதற்காகச்) சூடுபோட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன்.

ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "(அந்த ஆடுகளின்) காதுகளில் (சூடுபோட்டார்கள்) என்றே அவர் (அனஸ்) கூறியதாக நான் உறுதியாக எண்ணுகிறேன்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
بَابُ قَتْلِ الْحَيَوَانِ
விலங்குகளைக் கொல்லுதல் பற்றிய பாடம்
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ أَبُو حَمْزَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْأَحْمَسِيُّ، قَالَ: حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، عَنِ الْمُسَيِّبِ بْنِ رَافِعٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «مَنْ قَتَلَ حَيَّةً فَلَهُ سَبْعُ حَسَنَاتٍ، وَمَنْ قَتَلَ وَزَغَةً فَلَهُ حَسَنَةٌ»
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"யார் ஒரு பாம்பைக் கொல்கிறாரோ அவருக்கு ஏழு நன்மைகள் உண்டு. யார் ஒரு பல்லியை (தீங்கு விளைவிக்கும் பல்லி வகையை)க் கொல்கிறாரோ அவருக்கு ஒரு நன்மை உண்டு."
ஹதீஸ் தரம் : பலவீனமானது
ضعيف
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى السَّخْتِيَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ نَافِعٍ، عَنْ سَائِبَةَ، مَوْلَاةٍ لِفَاكِهِ بْنِ الْمُغِيرَةِ، أَنَّهَا دَخَلَتْ عَلَى عَائِشَةَ فَرَأَتْ فِي بَيْتِهَا رُمْحًا مَوْضُوعَةً، فَقَالَتْ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ مَا تَصْنَعِينَ بِهَذَا؟ قَالَتْ: نَقْتُلُ بِهِ الْأَوْزَاغَ، فَإِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَنَا أَنَّ إِبْرَاهِيمَ لَمَّا أُلْقِيَ فِي النَّارِ لَمْ يَكُنْ فِي الْأَرْضِ دَابَّةٌ إِلَّا أَطْفَأَتِ النَّارَ عَنْهُ غَيْرَ الْوَزَغُ، فَإِنَّهُ كَانَ يَنْفُخُ عَلَيْهِ، §فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِهِ «
ஃபாகிஹ் பின் முஃகீராவின் (விடுதலை செய்யப்பட்ட) அடிமைப்பெண்ணான ஸாயிபா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றபோது, அவர்களின் வீட்டில் ஒரு ஈட்டி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். உடனே, "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! இதை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "இதைக் கொண்டு நாங்கள் பல்லிகளைக் கொல்கிறோம். ஏனெனில், இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்பில் வீசப்பட்டபோது, பூமியிலிருந்த அனைத்து உயிரினங்களும் அந்த நெருப்பை அணைக்க (முயற்சி செய்தன); பல்லியைத் தவிர! அது மட்டும் அந்த நெருப்பை (மேலும் எரியச் செய்வதற்காக) ஊதியது என்று அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தார்கள். எனவே, அதைக் கொல்லும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِيرَوَيْهِ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: § «أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ خَمْسِ فَوَاسِقَ فِي الْحِلِّ وَالْحَرَمِ: الْحِدَأَةُ، وَالْغُرَابُ، وَالْفَأْرَةُ، وَالْعَقْرَبُ، وَالْكَلْبُ الْعَقُورُ»
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"ஹில் (புனித எல்லைக்கு வெளியேயுள்ள பகுதி), ஹரம் (புனித எல்லைக்கு உட்பட்ட பகுதி) ஆகிய இரண்டிலும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஐந்து உயிரினங்களைக் கொல்லும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அவை:) பருந்து, காகம், எலி, தேள் மற்றும் வெறிநாய் (அல்லது கடிக்கக்கூடிய நாய்) ஆகியவையாகும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «خَمْسُ فَوَاسِقَ يُقْتَلْنَ فِي الْحِلِّ وَالْحَرَمِ: الْعَقْرَبُ، وَالْحِدَأَةُ، وَالْغُرَابُ الْأَبْقَعُ، وَالْفَأْرَةُ، وَالْكَلْبُ الْعَقُورُ»
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(மனிதர்களுக்குத்) தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்கள், (அவை) ஹரம் (புனித எல்லை) மற்றும் ஹரம் அல்லாத (இதர) பகுதிகளிலும் கொல்லப்படலாம்: (அவை) தேள், பருந்து, (முதுகிலும் வயிற்றிலும் வெள்ளை நிறம் கொண்ட) காகம், எலி மற்றும் (கடிக்கக்கூடிய) வெறிநாய்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا أَبُو طَاهِرٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جُبَيْرِ بْنِ شَيْبَةَ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، أَخْبَرَهُ قَالَ: أَخْبَرَتْنِي أُمُّ شَرِيكٍ إِحْدَى نِسَاءِ بَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ أَنَّهَا اسْتَأْمَرَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قَتْلِ الْوَزَغِ، §فَأَمَرَ بِقَتْلِهَا
பனூ ஆமிர் பின் லுஅய் குலத்துப் பெண்களில் ஒருவரான உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் (கூறினார்கள்):

(விஷத்தன்மை கொண்ட) பல்லிகளைக் கொல்வது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஆலோசனை/அனுமதி) கேட்டேன். அப்போது, அவற்றைக் கொல்லும்படி நபியவர்கள் உத்தரவிட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، قَالَ: § «أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْوَزَغِ، وَسَمَّاهُ فُوَيْسِقًا»
ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லிகளைக் (விஷத்தன்மை கொண்ட பல்லி வகைகளை) கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும், அதற்கு ‘சிறு தீங்கிழைக்கும் உயிரி’ (ஃபுவைஸிக்) என்று பெயரிட்டார்கள்.
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ بْنُ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، وَيُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «الْوَزَغُ فُوَيْسِقٌ»
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பல்லி (தீங்கு விளைவிக்கக்கூடிய) ஒரு சிறிய பாவியாகும் (தீய உயிரினமாகும்)" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ صَيْفِيٍّ، مَوْلَى ابْنِ أَفْلَحَ، عَنْ أَبِي السَّائِبِ، مَوْلَى هِشَامِ بْنِ زُهْرَةَ أَنَّهُ قَالَ: دَخَلْتُ عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ فِي بَيْتِهِ، قَالَ: فَوَجَدْتُهُ يُصَلِّي، فَجَلَسْتُ أَنْتَظِرُهُ حَتَّى قَضَى صَلَاتَهُ، فَسَمِعْتُ تَحْرِيكًا تَحْتَ السَّرِيرِ فِي بَيْتِهِ، فَإِذَا حَيَّةٌ، فَقُمْتُ لِأَقْتُلَهَا فَأَشَارَ إِلَيَّ أَنِ اجْلِسْ، فَلَمَّا انْصَرَفَ، أَشَارَ إِلَى بَيْتٍ فِي الدَّارِ، وَقَالَ: تَرَى هَذَا الْبَيْتَ؟ قَالَ: فَقُلْتُ: نَعَمْ، قَالَ: إِنَّهُ كَانَ فِيهِ فَتًى مِنَّا حَدِيثَ عَهْدٍ بِعُرْسٍ، فَخَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْخَنْدَقِ، فَكَانَ ذَلِكَ الْفَتَى يَسْتَأْذِنُهُ بِأَنْصَافِ النَّهَارِ، وَيَرْجِعُ إِلَى أَهْلِهِ، قَالَ: فَاسْتَأْذَنَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ لَهُ: «خُذْ سِلَاحَكَ فَإِنِّي أَخْشَى عَلَيْكَ» فَأَخَذَ سِلَاحَهُ ثُمَّ ذَهَبَ، فَإِذَا هُوَ بِامْرَأَتِهِ بَيْنَ الْبَابَيْنِ فَهَيَّأَ لَهَا الرُّمْحَ لِيَطْعَنَهَا بِهِ وَأَصَابَتْهُ الْغَيْرَةُ، فَقَالَتِ: اكْفُفْ عَنْكَ رُمْحَكَ حَتَّى تَرَى مَا فِي بَيْتِكَ، فَدَخَلَ فَإِذَا حَيَّةٌ عَظِيمَةٌ مُنْطَوِيَةٌ عَلَى فِرَاشِهِ، فَأَهْوَى إِلَيْهَا فَانْتَظَمَهَا فِيهِ، ثُمَّ خَرَجَ بِهِ فَرَكَزَهُ فِي الدَّارِ، فَاضْطَرَبَتِ الْحَيَّةُ فِي رَأْسِ الرُّمْحِ وَخَرَّ الْفَتَى صَرِيعًا، فَمَا يُدْرَى أَيُّهُمَا كَانَ أَسْرَعَ مَوْتًا الْفَتَى أَمِ الْحَيَّةُ، قَالَ: فَجِئْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْنَا ذَلِكَ لَهُ، وَقُلْنَا: ادْعُ اللَّهَ أَنْ يُحْيِيَهُ، فَقَالَ: § «اسْتَغْفِرُوا لِصَاحِبِكُمْ» ثُمَّ قَالَ: «إِنَّ بِالْمَدِينَةِ جِنًّا قَدْ أَسْلَمُوا، فَإِنْ رَأَيْتُمْ مِنْهَا شَيْئًا فَآذِنُوهُ ثَلَاثَةَ أَيَّامٍ، فَإِنْ بَدَا لَكُمْ بَعْدَ ذَلِكَ فَاقْتُلُوهُ، فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ»
அபூஸ் ஸாயிப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அப்போது அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். எனவே, அவர்கள் தொழுது முடிக்கும்வரை அவர்களுக்காகக் காத்தபடி அமர்ந்திருந்தேன். அப்போது வீட்டின் கட்டிலுக்குக் கீழே ஒரு சலசலப்பைக் கேட்டேன். அங்கே ஒரு பாம்பு இருந்தது. அதைக் கொல்வதற்காக நான் எழுந்தேன். ஆனால் அவர் (அபூ ஸயீத்), என்னை உட்காரும்படி சைகை செய்தார்கள். அவர் தொழுது முடித்ததும், வீட்டில் இருந்த ஓர் அறையைச் சுட்டிக்காட்டி, "இந்த அறையைப் பார்க்கிறீரா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "ஆம்" என்றேன்.

அப்போது அவர்கள் கூறினார்கள்:
"எங்களில் ஒரு இளைஞன் இருந்தான். அவனுக்குப் புதிதாகத் திருமணம் ஆகியிருந்தது. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அகழ்ப் போருக்காகச் சென்றிருந்தோம். அந்த இளைஞன் நண்பகலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டுத் தன் குடும்பத்தாரிடம் (வீட்டிற்குத்) திரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவ்வாறே ஒரு நாள் அவன் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டபோது, நபி (ஸல்) அவர்கள் அவனிடம், 'உன் ஆயுதங்களை எடுத்துக்கொள். (பனூ குறைளா போன்ற எதிரிகளால்) உனக்கு ஏதேனும் ஆபத்து நேருமோ என நான் அஞ்சுகிறேன்' என்று கூறினார்கள். எனவே, அவன் தன் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு சென்றான்.

(வீட்டிற்குச் சென்று பார்த்தபோது) அவனுடைய மனைவி (வீட்டின்) இரண்டு கதவுகளுக்கு இடையே (வெளியே) நின்றுகொண்டிருந்தாள். அவளைக் கண்ட அவனுக்கு (மனைவி ஏன் வெளியே நிற்கிறாள் என்ற) ரோஷம் ஏற்படவே, அவளைக் குத்துவதற்காகத் தன் ஈட்டியை ஓங்கினான். அப்போது அவள், 'உமது ஈட்டியைத் தாழ்த்திக்கொள்ளும். உமது வீட்டிற்குள் சென்று, என்னை (வெளியே) வரச் செய்தது எதுவென்று முதலில் பாரும்' என்றாள். அவன் உள்ளே சென்று பார்த்தபோது, அவனது படுக்கையில் ஒரு பெரிய பாம்பு சுருண்டு கிடப்பதைக் கண்டான்.

உடனே அவன் தன் ஈட்டியால் அதைக் குத்தினான். பின்னர் அதை அப்படியே (ஈட்டியோடு) தூக்கிக்கொண்டு வீட்டின் முற்றத்திற்கு வந்து ஈட்டியை நட்டான். அப்போது அந்தப் பாம்பு ஈட்டியின் முனையில் துடித்தவாறே (அவனைத் தீண்டியது). அந்த இளைஞனும் கீழே சுருண்டு விழுந்தான். அவர்களில் முதலில் இறந்தது யார், அந்தப் பாம்பா அல்லது அந்த இளைஞனா என்பது யாருக்கும் தெரியவில்லை.

பின்னர் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, இந்த நிகழ்வை அவர்களிடம் கூறினோம். மேலும், 'அந்த இளைஞன் மீண்டும் உயிர் பெற (அல்லது அவனது மரணத்தில் பரகத் செய்ய) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்' என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'உங்கள் தோழருக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடுங்கள்' என்று கூறினார்கள்.

பின்னர், 'மதீனாவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஜின்கள் சிலர் உள்ளனர். எனவே, அவர்களில் எவரையாவது (பாம்பின் தோற்றத்தில்) நீங்கள் கண்டால், மூன்று நாட்களுக்கு அவர்களை (வெளியேறுமாறு) எச்சரியுங்கள். அதன் பிறகும் அவர்கள் உங்களுக்குத் தென்பட்டால், அவர்களைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், நிச்சயமாக அது ஒரு ஷைத்தானாகவே (அல்லது தீய ஜின்னாகவே) இருக்கும்' என்று கூறினார்கள்."
ஹதீஸ் தரம் : இதன் அறிவிப்பாளர் தொடர் நம்பகமானது
إسناده حسن
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ وَغَيْرُهُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «اقْتُلُوا الْحَيَّاتِ، وَاقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ وَالْأَبْتَرَ، فَإِنَّهُمَا يَلْتَمِسَانِ الْبَصَرَ وَيُسْقِطَانِ الْحَبَلَ»
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பாம்புகளைக் கொல்லுங்கள். (குறிப்பாக) ‘தத்துஃப்யதைன்’ (முதுகில் இரண்டு வெண்கோடுகள் உள்ள பாம்பு) மற்றும் ‘அப்தர்’ (குட்டையான வால் கொண்ட பாம்பு) ஆகியவற்றைக் கொல்லுங்கள். ஏனெனில், அவையிரண்டும் (பார்வையைப் பறித்து) குருடாக்கிவிடும்; (கர்ப்பிணிகளின்) கர்ப்பத்தைக் கலைத்துவிடும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ أَبَا لُبَابَةَ، قَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §نَهَى عَنْ قَتْلِ الْحَيَّاتِ الَّتِي تَكُونُ فِي الْبُيُوتِ»
அபூலுபாபா (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"வீடுகளில் (குடியிருக்கக் கூடிய) பாம்புகளைக் கொல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى، بِعَسْكَرِ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «الْحَيَّاتُ مِنْ مَسْخِ الْجَانِّ كَمَا مُسِخَتِ الْخَنَازِيرُ وَالْقِرَدَةُ»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(முந்தைய சமுதாயங்களில்) பன்றிகளும் குரங்குகளும் உருமாற்றப்பட்டதைப் போன்று, பாம்புகளும் ஜின்கள் (உருமாற்றப்பட்டதன்) ஒரு பகுதியாகும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «هَذِهِ هَوَامٌّ مِنَ الْجِنِّ، فَإِذَا رَأَى أَحَدُكُمْ فِي بَيْتِهِ شَيْئًا فَلْيُحَرِّجْ عَلَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ، فَإِنْ رَآهَا بَعْدَ ذَلِكَ فَلْيَقْتُلْهَا، فَإِنَّمَا هِيَ شَيْطَانٌ»
அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இவை (வீடுகளில் காணப்படும் பாம்புகள் போன்றவை) ஜின்களில் உள்ள ஊர்வனவாகும். உங்களில் எவரேனும் தனது வீட்டில் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கண்டால், அதற்கு மூன்று முறை (வெளியேறிச் செல்லுமாறு) எச்சரிக்கை செய்யட்டும். அதன் பிறகும் அவர் அதைக் கண்டால், அதைக் கொன்று விடட்டும்; ஏனெனில், நிச்சயமாக அது (அடங்காத) ஒரு ஷைத்தான்தான்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «اقْتُلُوا الْحَيَّاتِ، وَاقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ، وَالْأَبْتَرَ فَإِنَّهُمَا يَلْتَمِسَانِ الْبَصَرَ وَيَسْتَسْقِطَانِ الْحَبَلَ»
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பாம்புகளைக் கொல்லுங்கள். (குறிப்பாக) முதுகில் இரண்டு (வெள்ளைக்) கோடுகள் உடைய பாம்பையும் (துத்-துஃப்யதைன்), வால் குட்டையான பாம்பையும் (அப்தர்) கொல்லுங்கள். ஏனெனில், அவையிரண்டும் பார்வையைப் பறித்துவிடும்; (கர்ப்பிணிப் பெண்களின்) கருவைச் சிதைத்துவிடும் (கர்ப்பத்தைக் கலைத்துவிடும்)."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَالِمًا، أَخْبَرَهُ، أَنَّ ابْنَ عُمَرَ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «اقْتُلُوا الْحَيَّاتِ، وَاقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ وَالْأَبْتَرَ، فَإِنَّهُمَا يَلْتَمِسَانِ الْبَصَرَ وَيَسْتَسْقِطَانِ الْحَبَلَ» قَالَ ابْنُ عُمَرَ: مَا كُنْتُ أَدَعُ حَيَّةً إِلَّا قَتَلْتُهَا حَتَّى رَآنِي أَبُو لُبَابَةَ بْنُ عَبْدِ الْمُنْذِرِ وَزَيْدُ بْنُ الْخَطَّابِ وَأَنَا أُطَارِدُ حَيَّةً مِنْ حَيَّاتِ الْبُيُوتِ، فَنَهَيَانِي عَنْ قَتْلِهَا، فَقُلْتُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِهِنَّ، فَقَالَا: «إِنَّهُ نَهَى عَنْ قَتْلِ ذَوَاتِ الْبُيُوتِ»
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "பாம்புகளைக் கொல்லுங்கள். (குறிப்பாக) முதுகில் இரண்டு (வெள்ளை) கோடுகள் உள்ள பாம்புகளையும், குட்டையான வால் கொண்ட பாம்புகளையும் கொல்லுங்கள். ஏனெனில், அவை (தமது விஷத்தன்மையால் மனிதப்) பார்வையைப் பறித்துவிடும்; மேலும் (கர்ப்பிணிப் பெண்களின்) கர்ப்பத்தைக் கலைத்துவிடும்."

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "அபூலுபாபா பின் அப்துல் முன்திர் (ரலி) அவர்களும், ஸைத் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும், வீடுகளில் வசிக்கும் பாம்புகளில் ஒன்றை நான் (கொல்வதற்காக) விரட்டிச் செல்வதைப் பார்க்கும் வரை, நான் எந்தப் பாம்பைக் கண்டாலும் அதைக் கொல்லாமல் விட்டதில்லை. (அதைக் கண்ட) அவர்கள் இருவரும் அதைக் கொல்ல வேண்டாம் என்று என்னைத் தடுத்தனர். அப்போது நான், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றைக் கொல்லும்படி கட்டளையிட்டுள்ளார்களே!' என்றேன். அதற்கு அவர்கள், 'வீடுகளுக்குள் வசிக்கும் பாம்புகளைக் (கொல்ல வேண்டாம் என்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்' என்று கூறினார்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ عَجْلَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «مَا سَالَمْنَاهُنَّ مُنْذُ حَارَبْنَاهُنَّ - يَعْنِي الْحَيَّاتَ - وَمَنْ تَرَكَ قَتْلَ شَيْءٍ مِنْهُنَّ خِيفَةً فَلَيْسَ مِنَّا»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நாம் அவற்றுடன் போர் தொடுத்ததிலிருந்து அவற்றுடன் சமாதானம் செய்து கொள்ளவில்லை - அதாவது பாம்புகளை (குறிப்பிடுகிறார்கள்). அவற்றில் எதையாவது (அது பழிவாங்கும் என்ற) பயத்தினால் கொல்வதை எவர் விட்டுவிடுகிறாரோ, அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல."
ஹதீஸ் தரம் : நம்பகமானது, ஆதாரப்பூர்வமானது
حسن صحيح
أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «اقْتُلُوا الْحَيَّاتِ وَذَا الطُّفْيَتَيْنِ وَالْأَبْتَرَ، فَإِنَّهُمَا يَطْمِسَانِ الْبَصَرَ وَيُسْقِطَانِ الْحَبَلَ» وَكَانَ عَبْدُ اللَّهِ يَقْتُلُ الْحَيَّاتِ كُلَّهَا حَتَّى أَبْصَرَهُ أَبُو لُبَابَةَ يُطَارِدُ حَيَّةً، فَقَالَ: إِنَّهُ نَهَى عَنْ ذَوَاتِ الْبُيُوتِ
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பாம்புகளைக் கொல்லுங்கள். (குறிப்பாக) முதுகில் இரண்டு (வெள்ளை) கோடுகள் உள்ள பாம்பையும், வால் குறைந்த (குட்டையான) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவை (தமது விஷத்தினால்) பார்வையைப் பறித்துவிடும்; மேலும் (கர்ப்பிணிப் பெண்களுக்குக்) கருச்சிதைவை ஏற்படுத்தும்" என்று கூறினார்கள்.

(இதையடுத்து) அப்துல்லாஹ் (இப்னு உமர் - ரலி) அவர்கள் (தமக்குத் தென்படும்) எல்லாப் பாம்புகளையும் கொன்று வந்தார்கள். ஒருமுறை, அவர்கள் ஒரு பாம்பைத் துரத்திக் கொண்டிருப்பதை அபூலுபாபா (ரலி) அவர்கள் கண்டபோது, "வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (அவை ஜின்களாக இருக்கலாம் என்பதால்) கொல்ல வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ ذَرِيحٍ، بِعُكْبَرَا، قَالَ: أَخْبَرَنَا بِشْرُ بْنُ الْوَلِيدِ الْكِنْدِيُّ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ عَلِيٍّ الْعَنَزِيُّ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَعُقَيْلٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: § «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ أَرْبَعَةٍ: الْهُدْهُدِ، وَالصُّرَدِ، وَالنَّمْلَةِ، وَالنَّحْلَةِ»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"ஹுத்ஹுத் (என்னும் கொண்டலாத்தி) பறவை, சுராத் (என்னும் பெரிய தலையுடைய ஒரு வகை வேட்டைப்) பறவை, எறும்பு மற்றும் தேனீ ஆகிய நான்கு (உயிரினங்களை)க் கொல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்."
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا النَّضْرُ، حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الْحَسَنِ، قَالَ: § «نَزَلَ نَبِيٌّ مِنَ الْأَنْبِيَاءِ تَحْتَ شَجَرَةٍ، فَقَالَ تَحْتَهَا، فَلَدَغَتْهُ نَمْلَةٌ فَأَمَرَ بِبَيْتِهِنَّ، فَتُحْرَقَ عَلَى مَنْ فِيهَا، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ: هَلَّا نَمْلَةً وَاحِدَةً»
ஹஸன் (பஸரீ) அவர்கள் கூறியதாவது:

நபிமார்களில் ஒரு நபி ஒரு மரத்தின் கீழே (ஓய்வெடுப்பதற்காகத்) தங்கியிருந்தார். (அவர் அங்கு மதிய ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது) அவரை ஓர் எறும்பு கடித்துவிட்டது. உடனே அவர், அந்த எறும்புகளின் புற்றை அதிலுள்ள அனைத்து (எறும்புகளுடனும்) சேர்த்து எரித்துவிடும்படி உத்தரவிட்டார். (அவ்வாறே அது எரிக்கப்பட்டது). அப்போது அல்லாஹ் அவருக்கு, "(உம்மைக் கடித்த) ஓர் எறும்பை மட்டும் (தண்டித்திருக்க) வேண்டாமா? (அல்லது ஒரு எறும்புக்காக இறைவனைத் துதிக்கும் ஒரு சமூகத்தையே அழிப்பதா?)" என்று வஹீ (இறைச்செய்தி) அருளினான்.
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، وَالْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَا: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ أَمَرَ §بِقَتْلِ الْكِلَابِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்த) நாய்களைக் கொல்லும்படி (ஆரம்ப காலத்தில்) கட்டளையிட்டார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: حَدَّثَنَا أَبُو صَفْوَانَ الْأُمَوِيُّ عَبْدُ اللَّهِ بْنِ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ الْأَيْلِيُّ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي ابْنُ السَّبَّاقِ، أَنَّ ابْنَ عَبَّاسٍ قَالَ: أَخْبَرَتْنِي مَيْمُونَةُ زَوْجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْبَحَ يَوْمًا وَاجِمًا، قَالَتْ مَيْمُونَةُ: يَا رَسُولَ اللَّهِ، اسْتَنْكَرْتُ هَيْئَتَكَ مُنْذُ الْيَوْمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ قَدْ وَعَدَنِي أَنْ يَلْقَانِيَ اللَّيْلَةَ، فَلَمْ يَلْقَنِي أَمَا وَاللَّهِ مَا أَخْلَفَنِي» قَالَتْ: فَظَلَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَهُ ذَلِكَ عَلَى ذَلِكَ، ثُمَّ وَقَعَ فِي نَفْسِهِ جِرْوُ كَلْبٍ تَحْتَ بِسَاطٍ لَنَا فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ، ثُمَّ أَخَذَ بِيَدِهِ مَاءً فَنَضَحَ بِهِ مَكَانَهُ، فَلَمَّا أَمْسَى لَقِيَهُ جِبْرِيلُ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ كُنْتَ وَعَدْتَنِي أَنْ تَلْقَانِيَ اللَّيْلَةَ، قَالَ: أَجَلْ، وَلَكِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ»، فَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ §يَأْمُرُ بِقَتْلِ الْكِلَابِ، حَتَّى إِنَّهُ لَيَأْمُرُ بِقَتْلِ كَلْبِ الْحَائِطِ الصَّغِيرِ وَيَتْرُكُ كَلْبَ الْحَائِطِ الْكَبِيرَ.
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரழி) எனக்கு அறிவித்தார்கள்:

ஒருநாள் காலை நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகுந்த கவலையுடன் (மௌனமாக/வாட்டமாக) காணப்பட்டார்கள். அப்போது மைமூனா (ரழி), "அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் தங்களின் தோற்றத்தில் (ஏதோ ஒரு) மாற்றத்தைக் காண்கிறேனே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜிப்ரீல் (அலை) அவர்கள் நேற்றிரவு என்னைச் சந்திப்பதாக வாக்களித்திருந்தார்கள்; ஆனால் அவர்கள் என்னைச் சந்திக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் (வாக்குறுதி அளித்துவிட்டு) எனக்கு ஒருபோதும் மாறு செய்ததில்லை" என்று கூறினார்கள். அந்த நாள் முழுதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதே நிலையிலேயே இருந்தார்கள்.

பின்னர், எங்கள் விரிப்புக்குக் (கட்டிலுக்குக்) கீழே ஒரு நாய்க்குட்டி இருப்பது (அவர்களுக்குத் தெரியவந்தது). அதை (வெளியேற்றுமாறு) அவர்கள் உத்தரவிட, அது வெளியேற்றப்பட்டது. பிறகு, தம் கையில் சிறிது தண்ணீர் எடுத்து நாய்க்குட்டி இருந்த இடத்தில் தெளித்தார்கள்.

அன்று மாலை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களைச் சந்தித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் நேற்றிரவு என்னைச் சந்திப்பதாக வாக்களித்திருந்தீர்களே?" என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "ஆம்! ஆனால் நாயோ, உருவப்படமோ உள்ள வீட்டிற்குள் நாங்கள் (வானவர்கள்) நுழைவதில்லை" என்று கூறினார்கள்.

அதன்பின் அன்றைய தினத்தின் காலைப் பொழுதில், நாய்களைக் கொல்லும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அதாவது) சிறிய தோட்டங்களைப் பாதுகாக்கும் நாய்களைக் (கொல்லுமாறு) உத்தரவிட்டு, பெரிய தோட்டங்களைப் பாதுகாப்பதற்காக (வளர்க்கப்படும்) நாய்களை மட்டும் விட்டுவிட்டார்கள்.
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا غَسَّانُ بْنُ الرَّبِيعِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «مَنِ اقْتَنَى كَلْبًا لَيْسَ بِكَلْبِ صَيْدٍ وَلَا مَاشِيَةٍ وَلَا حَرْثٍ، نَقَصَ مِنْ أَجْرِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ»
அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"வேட்டைக்காகவோ, கால்நடைகளைப் (பாதுகாப்பதற்காகவோ), விவசாயப் (பயிர்களைப் பாதுகாப்பதற்காகவோ) அல்லாமல் எவர் ஒரு நாயை (தன் வீட்டில்) வளர்க்கிறாரோ, அவருடைய (நற்செயல்களின்) கூலியிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு 'கீராத்' (அளவு) குறையும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى، بِعَسْكَرِ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْكِلَابِ حَتَّى إِنْ كَانَتِ الْمَرْأَةُ تَقْدُمُ مِنَ الْبَادِيَةِ بِالْكَلْبِ فَتَقْتُلُهُ، ثُمَّ نَهَانَا عَنْ قَتْلِهَا، وَقَالَ: § «عَلَيْكُمْ بِالْأَسْوَدِ ذِي النُّقْطَتَيْنِ فَإِنَّهُ شَيْطَانٌ»
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். எந்த அளவிற்கென்றால், கிராமப்புறத்திலிருந்து ஒரு பெண் நாயுடன் வந்தாலும் (அதைக் கண்டால்) அதையும் நாங்கள் கொன்றுவிடுவோம். பின்னர் (பொதுவாக) அவற்றைக் கொல்வதை விட்டும் எங்களைத் தடுத்தார்கள். மேலும், "(கண்களுக்கு மேல்) இரண்டு புள்ளிகள் கொண்ட கருப்பு நிற நாயை (கொல்வதை) நீங்கள் கடைபிடியுங்கள்; ஏனெனில் அது ஒரு சைத்தானாகும்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «مَنْ أَمْسَكَ كَلْبًا نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ إِلَّا كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ»
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"விவசாய நிலம் (பாதுகாப்பு) அல்லது கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக (வளர்க்கப்படும்) நாயைத் தவிர, (வேறு காரணங்களுக்காக) ஒரு நாயை எவர் (பிடித்து) வளர்த்தாலும் அவருடைய (நற்)செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு 'கீராத்' (அளவு நன்மைகள்) குறைந்துவிடும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: أَخْبَرَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «مَنِ اقْتَنَى كَلْبًا إِلَّا كَلْبَ ضَارِيَةٍ أَوْ مَاشِيَةٍ فَإِنَّهُ يَنْقُصُ مِنْ أَجْرِهِ قِيرَاطَانِ كُلَّ يَوْمٍ»
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"வேட்டை (ஆடுவதற்காகப் பயன்படுத்தப்படும்) நாய் அல்லது கால்நடைகளைப் (பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும்) நாயைத் தவிர (வேறு) நாயை எவர் வளர்க்கிறாரோ, நிச்சயமாக அவருடைய (நற்செயல்களின்) கூலியிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு 'கீராத்'கள் (அளவு) குறைந்துவிடும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنِي الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «مَنْ أَمْسَكَ كَلْبًا إِلَّا كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"விவசாயம் (பாதுகாப்பு) அல்லது கால்நடைகளை (மேய்த்தல் மற்றும் பாதுகாத்தல்) தவிர்த்து, (வேறு தேவைகளுக்காக) எவர் ஒரு நாயை வளர்க்கிறாரோ, அவரது (நற்)செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு 'கீராத்' (அளவு நன்மை) குறைந்துவிடுகிறது."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُغَفَّلِ، قَالَ: قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «أَيُّمَا قَوْمٍ اتَّخَذُوا كَلْبًا لَيْسَ بِكَلْبِ صَيْدٍ أَوْ زَرْعٍ أَوْ مَاشِيَةٍ، نَقَصَ مِنْ أُجُورِهِمْ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ»
அப்துல்லாஹ் பின் அல்-முகஃப்ஃபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எந்தவொரு கூட்டத்தினராவது (அல்லது எவரேனும்) வேட்டை (நாய்), விவசாய (பாதுகாப்பு நாய்) அல்லது கால்நடை (பாதுகாப்பு நாய்) ஆகியவற்றுக்காக அல்லாமல் (வேறு காரணங்களுக்காக) ஒரு நாயை வளர்த்தால், அவர்களது (நற்செயல்களின்) கூலியிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு 'கீராத்' அளவு குறைந்துவிடும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَّامٍ الْجُمَحِيُّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ، قَالَ: كُنَّا فِي جَنَازَةِ أَبِي سُفْيَانَ بْنِ الْعَلَاءِ، وَمَعَنَا شُعْبَةُ، فَلَمَّا دُفِنَ، قَالَ شُعْبَةُ: حَدَّثَنِي هَذَا وَأَشَارَ إِلَى قَبْرِ أَبِي سُفْيَانَ بْنِ الْعَلَاءِ، قَالَ: قُلْتُ لِلْحَسَنِ: مَنْ حَدَّثَكَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «لَوْلَا أَنَّ الْكِلَابَ أُمَّةٌ مِنَ الْأُمَمِ لَأَمَرْتُ بِقَتْلِهَا» فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُغَفَّلِ، وَاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا اللَّهُ حَدَّثَنِي فِي هَذَا الْمَسْجِدِ، وَأَوْمَأَ إِلَى مَسْجِدِ الْجَامِعِ.
ஸயீத் பின் உபைது (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அபூஸுஃப்யான் பின் அல்அலா என்பவரின் ஜனாஸாவில் (ஈமச்சடங்கில்) கலந்துகொண்டோம். எங்களுடன் ஷுஅபா (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அவர் (அபூஸுஃப்யான்) அடக்கம் செய்யப்பட்டபோது, ஷுஅபா (ரஹ்) அவர்கள் (அபூஸுஃப்யானின்) மண்ணறையைச் சுட்டிக்காட்டி, "இவர் எனக்கு அறிவித்தார்" என்று கூறினார்கள்.

(அதாவது அபூஸுஃப்யான் பின் அல்அலா கூறியதாவது:) நான் ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்களிடம், " 'நாய்கள் (படைப்பினங்களில்) ஒரு சமுதாயமாக இல்லாதிருந்தால், அவற்றைக் கொன்றுவிடும்படி நான் கட்டளையிட்டிருப்பேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உங்களுக்கு அறிவித்தது யார்?" எனக் கேட்டேன். அதற்கு ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள், "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அப்துல்லாஹ் பின் அல்முஃகப்பல் (ரலி) அவர்கள் இந்தப் பள்ளிவாசலில் வைத்துதான் எனக்கு இதை அறிவித்தார்கள்" என்று கூறிவிட்டு, ஜாமிஉப் (மத்திய) பள்ளிவாசலை நோக்கிச் சைகை செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُغَفَّلِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْلَا أَنَّ الْكِلَابَ أُمَّةٌ مِنَ الْأُمَمِ لَأَمَرْتُ بِقَتْلِهَا، §فَاقْتُلُوا مِنْهَا الْأَسْوَدَ الْبَهِيمَ» قَالَ: «وَأَيُّمَا قَوْمٍ اتَّخَذُوا كَلْبًا لَيْسَ بِكَلْبِ حَرْثٍ أَوْ صَيْدٍ أَوْ مَاشِيَةٍ نَقَصَ مِنْ أَجْرِهِمْ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ» قَالَ: وَكُنَّا نُؤْمَرُ أَنْ نُصَلِّيَ فِي مَرَابِضِ الْغَنَمِ، وَلَا نُصَلِّيَ فِي أَعْطَانِ الْإِبِلِ، فَإِنَّهَا خُلِقَتْ مِنَ الشَّيَاطِينِ
அப்துல்லாஹ் பின் அல்-முகஃப்ஃபல் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நாய்கள் (அல்லாஹ்வின் படைப்பினங்களில்) ஒரு சமுதாயமாக இல்லாவிட்டால், அவற்றைக் கொன்றுவிடும்படி நான் கட்டளையிட்டிருப்பேன். எனவே, அவற்றில் (தீங்கு விளைவிக்கக்கூடிய) முழுமையான கருப்பு நிறமுடைய (நாயைக்) கொன்றுவிடுங்கள்."

மேலும் கூறினார்கள்: "விவசாயம், வேட்டை அல்லது கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக (பயன்படுத்தப்படும்) நாய்களைத் தவிர, வேறு எதற்காகவேனும் ஒரு சமூகத்தினர் நாயை வளர்த்தால், அவர்களின் (நற்செயல்களுக்கான) கூலியிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ‘கீராத்’ (அளவு நன்மைகள்) குறைந்துவிடும்.”

மேலும் அவர் (அப்துல்லாஹ் பின் அல்-முகஃப்ஃபல்) கூறுகிறார்: "ஆடுகள் தங்கும் இடங்களில் (தொழுவங்களில்) தொழுமாறு நாங்கள் ஏவப்பட்டோம். ஒட்டகங்கள் தங்கும் இடங்களில் (அவை நீர் அருந்திவிட்டு ஓய்வெடுக்கும் இடங்களில்) தொழ வேண்டாம் (எனக் கட்டளையிடப்பட்டோம்); ஏனெனில், அவை ஷைத்தான்களிலிருந்து (அதாவது ஷைத்தானின் குணங்களைக் கொண்டு) படைக்கப்பட்டுள்ளன."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَوْلَا أَنَّ الْكِلَابَ أُمَّةٌ مِنَ الْأُمَمِ لَأَمَرْتُ بِقَتْلِهَا، وَلَكِنِ §اقْتُلُوا الْكَلْبَ الْأَسْوَدَ الْبَهِيمَ فَإِنَّهُ شَيْطَانٌ»
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள், "நாய்களும் (படைப்பினங்களில்) ஒரு சமுதாயமாக இல்லாதிருந்தால், அவற்றைக் கொல்லும்படி நான் கட்டளையிட்டிருப்பேன். ஆயினும், (அவற்றில்) முற்றிலும் கருப்பு நிற நாயைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்" என்று கூற நான் கேட்டேன்.
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ الْمَلِكِ، بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنِي عَمِّي، قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §رَخَّصَ فِي كَلْبِ الْحَرْثِ»
அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விவசாயப் பணிகளுக்கான (காவல்) நாய்க்குச் சலுகை (அனுமதி) அளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
بَابُ مَا جَاءَ فِي التَّبَاغُضِ وَالتَّحَاسُدِ وَالتَّدَابُرِ وَالتَّشَاجُرِ وَالتَّهَاجُرِ بَيْنَ الْمُسْلِمِينَ
முஸ்லிம்களுக்கிடையே பரஸ்பரம் வெறுப்புக் கொள்ளுதல், பொறாமைப்படுதல், புறக்கணித்தல், சச்சரவு செய்தல் மற்றும் பேசாமல் உறவை முறித்துக் கொள்ளுதல் ஆகியவை குறித்து வந்துள்ளவை பற்றிய பாடம்.
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «لَا تَبَاغَضُوا، وَلَا تَحَاسَدُوا، وَلَا تَدَابَرُوا، وَكُونُوا عِبَادًا لِلَّهِ إِخْوَانًا، وَلَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ»
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(ஒருவர் மற்றவரை) வெறுக்காதீர்கள்; (ஒருவருக்கொருவர்) பொறாமை கொள்ளாதீர்கள்; (ஒருவரையொருவர்) புறக்கணிக்காதீர்கள்; அல்லாஹ்வின் அடியார்களே! (உங்களுக்குள்) சகோதரர்களாக இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் (பேசாமல்) ஒதுக்கி வைப்பது (மார்க்க ரீதியாக) அனுமதிக்கப்பட்டதல்ல."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ كُلَّ يَوْمِ اثْنَيْنِ وَخَمِيسٍ، فَيَغْفِرُ اللَّهُ جَلَّ وَعَلَا لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلَّا رَجُلًا بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا، أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. அப்போது, அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காத (இணைவைக்காத) ஒவ்வொரு அடியாருக்கும் அல்லாஹ் (அவனது அருளால்) மன்னிப்பு வழங்குகிறான்; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமை (மற்றும் குரோதம்) கொண்டவரைத் தவிர! (அவர்களைக் குறித்து வானவர்களிடம்,) 'இவர்கள் இருவரும் சமாதானம் ஆகிக்கொள்ளும் வரை இவர்களுக்கு (மன்னிப்பு வழங்குவதை) அவகாசம் அளியுங்கள் (தள்ளி வையுங்கள்); இவர்கள் இருவரும் சமாதானம் ஆகிக்கொள்ளும் வரை இவர்களுக்கு அவகாசம் அளியுங்கள்' என்று கூறப்படும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَوْفِ بْنِ الْحَارِثِ وَهُوَ ابْنُ أَخِي عَائِشَةَ لِأُمِّهَا، أَنَّ عَائِشَةَ حَدَّثَتْ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ قَالَ فِي بَيْعٍ أَوْ عَطَاءٍ أَعْطَتْهُ: وَاللَّهِ لَتَنْتَهِيَنَّ عَائِشَةُ أَوْ لَأَحْجُرَنَّ عَلَيْهَا، قَالَتْ عَائِشَةُ حِينَ بَلَغَهَا ذَلِكَ: إِنَّ لِلَّهِ عَلَيَّ نَذْرًا أَنْ لَا أُكَلِّمَ ابْنَ الزُّبَيْرِ أَبَدًا، فَاسْتَشْفَعَ ابْنَ الزُّبَيْرِ حِينَ طَالَتْ هِجْرَتُهَا لَهُ إِلَيْهَا، فَقَالَتْ عَائِشَةُ: وَاللَّهِ لَا أُشَفِّعُ فِيهِ أَحَدًا وَلَا أَحْنَثُ فِي نَذْرِي الَّذِي نَذَرْتُ أَبَدًا، فَلَمَّا طَالَ ذَلِكَ عَلَى ابْنِ الزُّبَيْرِ كَلَّمَ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الْأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ، وَهُمَا مِنْ بَنِي زُهْرَةَ، فَقَالَ لَهُمَا: نَشَدْتُكُمَا بِاللَّهِ إِلَّا أَدْخَلْتُمَانِي عَلَى عَائِشَةَ، فَإِنَّهُ لَا يَحِلُّ لَهَا أَنْ تَنْذِرَ فِي قَطِيعَتِي، فَأَقْبَلَ الْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَسْوَدِ بِعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ وَقَدِ اشْتَمَلَا عَلَيْهِ بِبُرْدَيْهِمَا حَتَّى اسْتَأْذَنَا عَلَى عَائِشَةَ، فَقَالَا: السَّلَامُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِيهٍ نَدْخُلُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ؟ فَقَالَتْ عَائِشَةُ: ادْخُلَا، فَقَالَا: كُلُّنَا؟ قَالَتْ: نَعَمِ ادْخُلُوا كُلُّكُمْ، وَلَا تَعْلَمُ عَائِشَةُ أَنَّ مَعَهُمَا ابْنَ الزُّبَيْرِ، فَلَمَّا دَخَلُوا اقْتَحَمَ ابْنُ الزُّبَيْرِ الْحِجَابَ وَدَخَلَ عَلَى عَائِشَةَ فَاعْتَنَقَهَا وَطَفِقَ يُنَاشِدُهَا وَيَبْكِي، وَطَفِقَ الْمِسْوَرُ وَعَبْدُ الرَّحْمَنِ يُنَاشِدَانِ عَائِشَةَ، وَيَقُولَانِ لَهَا: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ §نَهَى عَمَّا عَمِلْتِيهِ، وَإِنَّهُ لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ، فَلَمَّا أَكْثَرَا عَلَى عَائِشَةَ التَّذْكِرَةَ، طَفِقَتْ تُذَكِّرُهُمْ وَتَبْكِي، وَتَقُولُ: إِنِّي نَذَرْتُ وَالنَّذْرُ شَدِيدٌ، فَلَمْ يَزَالَا بِهَا حَتَّى كَلَّمَتِ ابْنَ الزُّبَيْرِ، ثُمَّ أَعْتَقَتْ عَنْ نَذْرِهَا ذَلِكَ أَرْبَعِينَ رَقَبَةً، ثُمَّ كَانَتْ بَعْدَمَا أَعْتَقَتْ أَرْبَعِينَ رَقَبَةً تَبْكِي حَتَّى تَبُلَّ دُمُوعُهَا خِمَارَهَا.
அப்துல்லாஹ் பின் அஸ்-ஸுபைர் (ரலி) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் செய்த ஒரு விற்பனை அல்லது (அவர்கள் வழங்கிய) ஒரு தர்மத்தைப் பற்றி: "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஆயிஷா (ரலி) அவர்கள் (இப்படி தர்மம் செய்வதை) கண்டிப்பாக நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையெனில் நான் அவர்களை (சொத்துக்களைக் கையாள விடாமல் சட்டப்படி) தடுத்துவிடுவேன்" என்று கூறினார்.

இந்தச் செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டியபோது: "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் இப்னு அஸ்-ஸுபைருடன் ஒருபோதும் பேசமாட்டேன் என்று அல்லாஹ்வுக்காக நேர்ச்சை (نذر) செய்கிறேன்" என்று கூறினார்கள். அவர்களுக்கிடையிலான இந்தப் பேச்சுவார்த்தை முறிவு நீண்ட காலம் நீடித்தபோது, இப்னு அஸ்-ஸுபைர் (ரலி) அவர்கள் (ஆயிஷா ரலி அவர்களிடம்) பரிந்துரை செய்யுமாறு (பலரிடம்) கோரினார்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள்: "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதில் யாருடைய பரிந்துரையையும் நான் ஏற்கமாட்டேன், எனது நேர்ச்சையை ஒருபோதும் முறிக்கமாட்டேன்" என்று கூறிவிட்டார்கள். நிலைமை நீடித்தபோது, இப்னு அஸ்-ஸுபைர் (ரலி) அவர்கள் மிஸ்வர் பின் மக்ரமா மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அல்-அஸ்வத் ஆகியோரிடம் பேசினார். அவர்கள் இருவரும் (குறைஷி கோத்திரத்தின்) பனூ ஸுஹ்ரா கிளையைச் சேர்ந்தவர்கள். அவர் அவர்களிடம்: "அல்லாஹ்வின் பெயரால் உங்கள் இருவரிடமும் வேண்டுகிறேன், என்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் எப்படியாவது அழைத்துச் செல்லுங்கள். என்னுடன் உறவைத் துண்டிப்பதாக அவர் நேர்ச்சை செய்வது அவருக்கு (மார்க்கப்படி) ஆகுமானதல்ல" என்றார்.

எனவே மிஸ்வர் பின் மக்ரமாவும் அப்துர் ரஹ்மான் பின் அல்-அஸ்வத்தும் இப்னு அஸ்-ஸுபைரைத் தங்களது மேலாடைகளால் மறைத்துக் கொண்டு ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து அனுமதி கேட்டனர். அவர்கள்: "அஸ்ஸலாமு அலைக்க யா அய்யுஹந் நபிய்யு (நபியவர்களின் வீடாக இருந்ததால்), நாங்கள் உள்ளே வரலாமா?" என்று கேட்டனர். ஆயிஷா (ரலி) அவர்கள் "உள்ளே வாருங்கள்" என்றார்கள். "நாங்கள் அனைவரும் வரலாமா?" என்று அவர்கள் கேட்க, "ஆம், அனைவரும் வாருங்கள்" என்றார்கள். அவர்களுடன் இப்னு அஸ்-ஸுபைர் இருப்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அவர்கள் உள்ளே சென்றதும், இப்னு அஸ்-ஸுபைர் (ரலி) அவர்கள் (மறைந்திருந்த) திரையைத் தாண்டிச் சென்று ஆயிஷா (ரலி) அவர்களைக் கட்டிப்பிடித்து அழுது கெஞ்சினார். மிஸ்வர் மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (அவருடன் பேசுமாறு) பரிந்துரை செய்து: "நிச்சயமாக நீங்கள் செய்த இந்தச் செயலை (உறவைத் துண்டிப்பதை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனுடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது ஆகுமானதல்ல" என்று கூறினார்கள்.

அவர்கள் இருவரும் ஆயிஷா (ரலி) அவர்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டியபோது, ஆயிஷா (ரலி) அவர்களும் அழுதுகொண்டே: "நான் நேர்ச்சை செய்துவிட்டேன், நேர்ச்சை என்பது மிகவும் பாரதூரமானது" என்று கூறினார்கள். அவர்கள் இருவரும் தொடர்ந்து வலியுறுத்தியதால் இறுதியில் ஆயிஷா (ரலி) அவர்கள் இப்னு அஸ்-ஸுபைருடன் பேசினார்கள். பிறகு தனது நேர்ச்சைக்காக (பரிகாரமாக) நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதன் பிறகும், அந்த நேர்ச்சையை நினைக்கும் போதெல்லாம் தனது முக்காடு நனையும் அளவுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அழுவார்கள்.
ஹதீஸ் தரம் : இதன் அறிவிப்பாளர் தொடர் நம்பகமானது
إسناده حسن
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ، فَيُغْفَرُ لِمَنْ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا إِلَّا الْمُتَهَاجِرَيْنِ، يَقُولُ: رُدُّوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. (அப்போது,) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத (ஒவ்வொரு) அடியாருக்கும் பாவமன்னிப்பு வழங்கப்படுகிறது; தங்களுக்குள் பிணக்கிக் கொண்டு (பேசாமல்) இருக்கும் இருவரைத் தவிர. (அவ்விருவரைக் குறித்து,) 'இவர்கள் இருவரும் தங்களுக்குள் சமாதானம் ஆகும் வரை இவர்களை (மன்னிப்பு வழங்காமல்) தாமதப்படுத்துங்கள்' என்று (மலக்குகளிடம்) கூறப்படும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ الرِّشْكِ، عَنْ مُعَاذَةَ الْعَدَوِيَّةِ، عَنْ هِشَامِ بْنِ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُصَارِمَ مُسْلِمًا فَوْقَ ثَلَاثٍ، وَإِنَّهُمَا نَاكِبَانِ عَنِ الْحَقِّ مَا كَانَا عَلَى صِرَامِهِمَا، وَإِنَّ أَوَّلَهُمَا فَيْئًا يَكُونُ سَبْقُهُ بِالْفَيْءِ كَفَّارَةً لَهُ، وَإِنْ سَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَقْبَلْ سَلَامَهُ رَدَّتْ عَلَيْهِ الْمَلَائِكَةُ، وَرَدَّ عَلَى الْآخَرِ الشَّيْطَانُ، وَإِنْ مَاتَا عَلَى صِرَامِهِمَا لَمْ يَدْخُلَا الْجَنَّةَ وَلَمْ يَجْتَمِعَا فِي الْجَنَّةِ»
ஹிஷாம் பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுடன் மூன்று (நாட்களுக்கு) மேல் உறவை முறித்துக்கொள்வது (பேசாமல் இருப்பது) ஆகுமானதல்ல. அவர்கள் இருவரும் இவ்வாறு உறவை முறித்திருக்கும் காலமெல்லாம் சத்தியத்தை விட்டு விலகியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களில் யார் முதலில் (சமாதானத்திற்குத்) திரும்புகிறாரோ, அவர் அவ்வாறு முந்திக்கொள்வது அவருக்கான (பாவப்) பரிகாரமாக ஆகிவிடுகிறது. அவர் (மற்றவருக்கு) சலாம் கூறியும், அவர் அந்த சலாமை ஏற்கவில்லை என்றால், (சலாம் கூறிய) அவருக்கு மலக்குகள் (வானவர்கள்) பதில் கூறுகின்றனர்; மற்றவருக்கு ஷைத்தான் பதில் கூறுகிறான். அவர்கள் இருவரும் தங்களின் உறவை முறித்துக்கொண்ட நிலையிலேயே மரணித்தால், அவர்கள் (ஆரம்பத்திலேயே) சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; சொர்க்கத்தில் (ஒன்றாக) ஒன்றிணையவும் மாட்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ بِصَيْدَا، وَابْنُ قُتَيْبَةَ وَغَيْرُهُ، قَالُوا: حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الْأَزْرَقُ، قَالَ: حَدَّثَنَا أَبُو خُلَيْدٍ عُتْبَةُ بْنُ حَمَّادٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، وَابْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ مَالِكِ بْنِ يُخَامِرَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «يَطْلُعُ اللَّهُ إِلَى خَلْقِهِ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ»
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஷஅபான் மாதத்தின் மையப் (பதினைந்தாம்) இரவில் அல்லாஹ் தனது படைப்புகளை உற்று நோக்குகிறான். இணைவைப்பவன் அல்லது (முஸ்லிம்களோடு) பகைமை பாராட்டுபவன் ஆகிய இருவரைத் தவிர தனது படைப்புகள் அனைவருக்கும் அவன் மன்னிப்பு வழங்குகிறான்."
ஹதீஸ் தரம் : நம்பகமானது
حسن
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ، فَيَغْفِرُ اللَّهُ لِكُلِّ عَبْدٍ مُسْلِمِ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلَّا رَجُلًا كَانَ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. அப்போது, அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காத ஒவ்வொரு முஸ்லிமான அடியாருக்கும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குகிறான்; தனக்கும் தன் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையைக் கொண்டிருக்கும் மனிதனைத் தவிர! (அவர்களைக் குறித்து வானவர்களிடம்,) 'இவர்கள் இருவரும் சமாதானம் ஆகும் வரை இவர்களுக்கு (மன்னிப்பு வழங்குவதை) அவகாசம் அளியுங்கள்; இவர்கள் இருவரும் சமாதானம் ஆகும் வரை இவர்களுக்கு அவகாசம் அளியுங்கள்' என்று கூறப்படும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكَ بْنَ أَنَسٍ، أَخْبَرَهُ عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «تُعْرَضُ أَعْمَالُ النَّاسِ فِي كُلِّ جُمُعَةٍ مَرَّتَيْنِ: يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ، فَيُغْفَرُ لِكُلِّ مُؤْمِنٍ إِلَّا عَبْدًا بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: اتْرُكُوا هَذَيْنِ حَتَّى يَفِيئَا»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒவ்வொரு வாரமும் (ஜுமுஆ) திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் மக்களின் செயல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அப்போது, தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமை பாராட்டும் அடியாரைத் தவிர, மற்ற அனைத்து இறைநம்பிக்கையாளர்களுக்கும் (முஃமின்களுக்கும்) பாவமன்னிப்பு வழங்கப்படுகிறது. (பகைமை பாராட்டும் அவர்களைக் குறித்து,) 'இவர்கள் இருவரும் (சமரசம் செய்து கொண்டு மீண்டும் நல்லுறவிற்குத்) திரும்பும் வரை இவர்களை (மன்னிக்காமல்) விட்டுவிடுங்கள்' என்று (மலக்குகளிடம்) கூறப்படும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ، فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ مُسْلِمٍ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلَّا رَجُلًا كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. (அப்போது) அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வொரு முஸ்லிமான அடியானுக்கும் (அவனது பாவங்கள்) மன்னிக்கப்படுகின்றன; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமை கொண்டுள்ள மனிதரைத் தவிர! (அவர்களைக் குறித்து வானவர்களிடம்) 'இவர்கள் இருவரும் சமாதானம் ஆகும் வரை இவர்களுக்கு அவகாசம் அளியுங்கள்' என்று கூறப்படும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ»
அபூ அய்யூப் அல்-அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எந்தவொரு முஸ்லிமும் தனது (முஸ்லிம்) சகோதரரை மூன்று இரவுகளுக்கு மேல் (பேசாமல்) விலகி இருப்பது (மார்க்க ரீதியாக) அனுமதிக்கப்பட்டதல்ல. அவர்கள் இருவரும் சந்திக்கும் போது, இவர் அவரைப் புறக்கணிக்கிறார்; அவர் இவரைப் புறக்கணிக்கிறார். அவ்விருவரில் யார் முதலில் ஸலாம் கூறி (பேச்சைத்) தொடங்குகிறாரோ அவரே (அல்லாஹ்விடம்) சிறந்தவர் ஆவார்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا السَّامِيُّ، وَعُمَرُ بْنُ سَعِيدٍ، وَالْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالُوا: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ الزُّهْرِيِّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «لَا يَحِلُّ لِامْرِئٍ مُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ»
அபூ அய்யூப் அல்-அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எந்தவொரு முஸ்லிமும் தன் (முஸ்லிம்) சகோதரரை மூன்று இரவுகளுக்கு மேல் (பேசாமல்) துண்டித்து நடப்பது ஆகுமானதல்ல. அவர்கள் இருவரும் சந்திக்கும்போது, இவர் (அவரைப் புறக்கணித்து) முகத்தைத் திருப்பிக் கொள்வார், அவர் (இவரைப் புறக்கணித்து) முகத்தைத் திருப்பிக் கொள்வார். இவ்விருவரில் யார் முதலில் ஸலாம் (கூறிப் பேச்சைத் தொடங்கு கிறாரோ) அவரே சிறந்தவர் ஆவார்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
بَابُ التَّوَاضُعِ وَالْكِبْرِ وَالْعُجْبِ
பணிவு, பெருமை மற்றும் தற்பெருமை பற்றிய பாடம்
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَلْمَانَ الْأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِيمَا يَحْكِي عَنْ رَبِّهِ جَلَّ وَعَلَا: § «الْكِبْرِيَاءُ رِدَائِي وَالْعَظَمَةُ إِزَارِي، فَمَنْ نَازَعَنِي وَاحِدًا مِنْهُمَا قَذَفْتُهُ فِي النَّارِ»
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இறைவன் (கூறுவதாக) அறிவித்தார்கள்:
"பெருமை (என்பது) எனது மேலாடையாகும்; மகத்துவம் (என்பது) எனது கீழாடையாகும். (இவ்விரண்டு பண்புகளும் எனக்கு மட்டுமே உரியவை.) எனவே, இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றில் என்னோடு எவரேனும் போட்டியிட்டால் (அதாவது இப்பண்புகளைத் தனதாக்கிக் கொள்ள முயன்றால்), அவரை நான் நரகத்தில் வீசி எறிவேன்."
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ زُهَيْرٍ، بِالْأَبُلَّةِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ اللَّهِ جَلَّ وَعَلَا: « §الْكِبْرِيَاءُ رِدَائِي وَالْعَظَمَةُ إِزَارِي، فَمَنْ نَازَعَنِي فِي شَيْءٍ مِنْهُ أَدْخَلْتُهُ فِي النَّارِ»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பெருமை (என்பது) எனது மேலாடையாகும்; மகத்துவம் (என்பது) எனது கீழாடையாகும். (இவை இரண்டும் எனக்கு மட்டுமே உரிய பிரத்யேகப் பண்புகளாகும்). இவற்றில் ஏதேனும் ஒன்றில் என்னோடு யார் போட்டியிடுகிறாரோ (அதாவது இப்பண்புகளைத் தனதாக்கிக் கொள்ள முயல்கிறாரோ), அவரை நான் நரகத்தில் நுழையச் செய்வேன்."
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ الطَّبَّاعِ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُحَمَّدِ بْنِ مُعَاذِ بْنِ أُبَيِّ بْنِ كَعْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §كَانَ يَحْفِزُ عَلَى رُكْبَتِهِ وَلَا يَتَّكِئُ»
உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (உணவு உண்ணும் போதோ அல்லது அமரும் போதோ) எதன் மீதும் சாய்ந்துகொள்ளாமல், தமது முழங்கால்கள் மீது (உடல் எடையை அழுத்தி/ஊன்றி) அமருவார்கள்.
ஹதீஸ் தரம் : பலவீனமானது
ضعيف
أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ، قَالَ: مَرَّ بِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جَالِسٌ قَدْ وَضَعْتُ يَدِي الْيُسْرَى خَلْفَ ظَهْرِي وَاتَّكَأْتُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «أَتَقْعُدُ قِعْدَةَ الْمَغْضُوبِ عَلَيْهِمْ؟ » قَالَ ابْنُ جُرَيْجٍ: وَضَعَ رَاحَتَيْهِ عَلَى الْأَرْضِ وَرَاءَ ظَهْرِهِ
ஷரீத் பின் சுவைது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் எனது இடது கையை முதுகுக்குப் பின்னால் வைத்து (அதன் மீது) சாய்ந்து அமர்ந்திருந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(அல்லாஹ்வின்) கோபத்திற்கு ஆளானவர்கள் அமர்வதைப் போன்று நீ அமர்ந்திருக்கிறாயா?" என்று கேட்டார்கள்.

(அறிவிப்பாளர்) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் (இதனை விளக்கும்போது) கூறுகிறார்கள்: "அவர் தனது (இடது) உள்ளங்கையைத் தனது முதுகுக்குப் பின்னால் தரையில் வைத்திருந்தார்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا سُئِلَتْ: مَا كَانَ عَمَلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِهِ؟ قَالَتْ: «مَا كَانَ إِلَّا بَشَرًا مِنَ الْبَشَرِ، §كَانَ يَفْلِي ثَوْبَهُ، وَيَحْلِبُ شَاتَهُ، وَيَخْدُمُ نَفْسَهُ»
ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் என்ன (வேலை) செய்து கொண்டிருப்பார்கள்?" என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், "அவர்கள் (மற்ற) மனிதர்களில் ஒரு மனிதராகவே இருந்தார்கள். (அவர்கள்) தமது ஆடையைச் சோதிப்பார்கள் (அதில் உள்ள அழுக்கு அல்லது பேன்களை நீக்குவார்கள்), தமது ஆட்டிலிருந்து பால் கறப்பார்கள், மேலும் தமக்குத் தேவையான வேலைகளைத் தாமே செய்து கொள்வார்கள்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ أَحْمَدَ بْنِ بِسْطَامٍ، بِالْأَبُلَّةِ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، أَيُّ شَيْءٍ كَانَ يَصْنَعُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ عِنْدَكِ؟ قَالَتْ: «مَا يَفْعَلُ أَحَدُكُمْ فِي مِهْنَةِ أَهْلِهِ، §يَخْصِفُ نَعْلَهُ، وَيَخِيطُ ثَوْبَهُ، وَيَرْقَعُ دَلْوَهُ»
உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம், "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுடன் (வீட்டில்) இருக்கும்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உங்களில் ஒருவர் தமது வீட்டாருக்கு (உதவும் வகையில்) எவ்வாறு வீட்டுப் பணிகளைச் செய்வாரோ அதையே அன்னாரும் செய்வார்கள். (உதாரணமாக) தமது காலணிகளைப் பழுதுபார்ப்பார்கள்; தமது ஆடைகளைத் தைப்பார்கள்; (மற்றும்) தமது (தண்ணீர்) வாளியில் ஒட்டுப்போடுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا سُئِلَتْ: مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: «كَانَ §يَخِيطُ ثَوْبَهُ، وَيَخْصِفُ نَعْلَهُ، وَيَعْمَلُ مَا يَعْمَلُ الرِّجَالُ فِي بُيُوتِهِمْ»
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"நபி (ஸல்) அவர்கள் தங்களது வீட்டில் (இருக்கும்போது) என்ன செய்து கொண்டிருப்பார்கள்?" என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அவர்கள் தங்களது ஆடையைத் தைப்பார்கள்; தங்களது காலணிகளைப் பழுதுபார்ப்பார்கள்; மேலும், (சாதாரண) ஆண்கள் தங்கள் வீடுகளில் (எந்தெந்த) வேலைகளைச் செய்வார்களோ, அந்த வேலைகளையும் செய்வார்கள்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ دَرَّاجًا، حَدَّثَهُ عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «مَنْ تَوَاضَعَ لِلَّهِ دَرَجَةً يَرْفَعْهُ اللَّهُ دَرَجَةً، حَتَّى يَجْعَلَهُ فِي أَعْلَى عِلِّيِّينَ، وَمَنْ يَتَكَبَّرْ عَلَى اللَّهِ دَرَجَةً يَضَعْهُ اللَّهُ دَرَجَةً حَتَّى يَجْعَلَهُ فِي أَسْفَلِ السَّافِلِينَ، وَلَوْ أَنَّ أَحَدَكُمْ يَعْمَلُ فِي صَخْرَةٍ صَمَّاءَ لَيْسَ عَلَيْهِ بَابٌ وَلَا كُوَّةٌ، لَخَرَجَ مَا غَيَّبَهُ لِلنَّاسِ كَائِنًا مَا كَانَ»
அபூ ஸயீத் அல்-குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் அல்லாஹ்வுக்காக (அவனது திருப்தியை நாடி) ஒரு படிநிலை பணிந்து நடக்கிறாரோ, அல்லாஹ் அவரை (அதற்குப் பகரமாக) ஒரு படிநிலை உயர்த்துகிறான்; எந்த அளவிற்கென்றால், (இறுதியில்) அவரை 'அஃலா இல்லிய்யீன்' (மேலானவர்களில் மிக உயர்ந்த நிலையில்) ஆக்கிவிடுகிறான். மேலும், யார் அல்லாஹ்வுக்கு எதிராக (கட்டளைகளை மீறி) ஒரு படிநிலை பெருமையடிக்கிறாரோ, அல்லாஹ் அவரை ஒரு படிநிலை தாழ்த்துகிறான்; எந்த அளவிற்கென்றால், (இறுதியில்) அவரை 'அஸ்ஃபலஸ் ஸாஃபிலீன்' (தாழ்ந்தவர்களில் மிகத் தாழ்ந்த நிலையில்) ஆக்கிவிடுகிறான். உங்களில் ஒருவர் கதவோ அல்லது துவாரமோ இல்லாத ஒரு திடமான பாறைக்குள் (மறைந்திருந்து) ஒரு செயலைச் செய்தாலும், அவர் மக்களிடமிருந்து மறைத்து வைத்த அச்செயல் - அது எதுவாக இருந்தாலும் - (அல்லாஹ்வின் விருப்பப்படி) வெளிப்பட்டு மக்களுக்குத் தெரியவரும்."
ஹதீஸ் தரம் : பலவீனமானது
ضعيف
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْمَرْوَزِيُّ، قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مَعْبَدُ بْنُ خَالِدٍ، أَنَّهُ سَمِعَ حَارِثَةَ بْنَ وَهْبٍ الْخُزَاعِيَّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «أَلَا أَدُلُّكُمْ عَلَى أَهْلِ الْجَنَّةِ، كُلُّ ضَعِيفٍ مُتَضَعِّفٍ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ، وَأَهْلُ النَّارِ كُلُّ مُسْتَكْبِرٍ جَوَّاظٍ»
ஹாரிஸா பின் வஹ்ப் அல்-குஸாஈ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "சொர்க்கவாசிகள் யார் என்று நான் உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா? (அவர்கள்) பலவீனமான, (பிறரால்) பலவீனமாகக் கருதப்படக்கூடிய (பணிவான) ஒவ்வொருவரும் ஆவர். அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து (ஏதேனும் ஒன்றைக்) கூறினால், அல்லாஹ் அதனை (நிச்சயமாக) நிறைவேற்றி வைப்பான். நரகவாசிகள் (யாரெனில்), பெருமையடிக்கக்கூடிய, (கடுஞ்சொல் பேசும்) முரட்டுச் சுபாவம் கொண்ட, (செல்வத்தைச் சேமித்து வைப்பதில் பேராசை கொண்ட) ஒவ்வொருவரும் ஆவர்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةِ خَرْدَلٍ مِنْ كِبْرٍ، وَلَا يَدْخُلُ النَّارَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةِ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ»
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவருடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவர் (ஆரம்பத்திலேயே) சொர்க்கத்தில் நுழைய மாட்டார். எவருடைய உள்ளத்தில் கடுகளவு ஈமான் (இறைநம்பிக்கை) இருக்கிறதோ அவர் (நிரந்தரமாக) நரகத்தில் நுழைய மாட்டார்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ §الَّذِي يَجُرُّ ثَوْبَهُ مِنَ الْخُيَلَاءِ، لَا يَنْظُرُ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ»
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் பெருமையின் காரணமாகத் தமது ஆடையை(த் தரையில்) இழுபடும்படி இழுத்துச் செல்கிறாரோ, அவரை மறுமை நாளில் அல்லாஹ் (கருணையுடன்) பார்க்க மாட்டான்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا الرُّكَيْنُ بْنُ الرَّبِيعِ الْفَزَارِيُّ، عَنِ الْقَاسِمِ بْنِ حَسَّانَ، عَنْ عَمِّهِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ §يَكْرَهُ جَرَّ الْإِزَارِ، وَالتَّبَرُّجَ بِالزِّينَةِ لِغَيْرِ أَهْلِهَا، وَعَزْلَ الْمَاءِ عَنْ مَحِلِّهِ، وَضَرْبَ الْكِعَابِ، وَالصُّفْرَةَ، وَتَغْيِيرَ الشَّيْبِ، وَعَقْدَ التَّمَائِمِ، وَالرُّقَى إِلَّا بِالْمُعَوِّذَاتِ»
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(பெருமையின் காரணமாகக்) கீழாடையைத் தரையில் இழுபடும்படி அணிவது, (கணவன் அல்லது மஹ்ரம்கள் அல்லாத) தகுதியற்றவர்களுக்கு முன்பாகத் தமது அலங்காரங்களை வெளிப்படுத்துவது, விந்துவை அதன் இடத்திற்குச் செல்லாமல் தடுப்பது (அஸ்ல் செய்வது), பகடைக்காய்கள் (தாயக்கட்டைகள்) கொண்டு விளையாடுவது, (ஆண்கள்) மஞ்சள் நிறப் பூச்சைப் பயன்படுத்துவது, நரை முடியை (கருப்பு நிறம் கொண்டு) மாற்றுவது, தாயத்துகளைக் கட்டுவது மற்றும் 'முஅவ்விதாத்' (பாதுகாப்புத் தேடும் அத்தியாயங்களான அல்-ஃபலக், அந்-நாஸ்) தவிர மற்றவற்றைக் கொண்டு ஓதிப்பார்ப்பது (மந்திரங்கள் ஓதுவது) ஆகியவற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
ஹதீஸ் தரம் : பலவீனமானது - நிராகரிக்கப்பட்டது
ضعيف منكر
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّغُولِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، وَشُعْبَةُ، عَنِ الرُّكَيْنِ بْنِ الرَّبِيعِ، عَنِ الْقَاسِمِ بْنِ حَسَّانَ، عَنْ عَمِّهِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §كَرِهَ عَشْرًا: تَغْيِيرَ الشَّيْبِ، وَخَاتَمَ الذَّهَبِ، وَالضَّرْبَ بِالْكِعَابِ، وَالرُّقَى إِلَّا بِالْمُعَوِّذَاتِ، وَالتَّمَائِمَ، وَجَرَّ الْإِزَارِ، وَالصُّفْرَةَ، وَالتَّبَرُّجَ بِالزِّينَةِ لِغَيْرِ مَحِلِّهَا، وَعَزْلَ الْمَاءِ عَنْ مَحِلِّهِ»
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களை வெறுத்தார்கள்:
(கருப்பு நிறத்தைக் கொண்டு) நரைமுடியை மாற்றுவது, (ஆண்கள்) தங்க மோதிரம் அணிவது, தாயக்கட்டைகளைக் கொண்டு (சூதாடுவது அல்லது) விளையாடுவது, 'முஅவ்விதாத்' (பாதுகாப்புத் தேடும் குர்ஆன் வசனங்கள்) அல்லாதவற்றைக் கொண்டு ஓதிப்பார்ப்பது (ருக்யா), தாயத்துக்கள் அணிவது, (பெருமைக்காகக்) கீழாடையைத் (தரையில்) இழுபடும்படி உடுத்துவது, (ஆண்கள் குங்குமப்பூ போன்ற) மஞ்சள் நிற (வாசனைத் திரவியத்தைப்) பயன்படுத்துவது, (பெண்கள் கணவன் அல்லாத பிறருக்கு முன்னால்) அலங்காரத்தை வெளிப்படுத்துவது மற்றும் (கருத்தடைக்காக) விந்துவை அதன் உரிய இடத்திற்கு வெளியே (வெளியேற்றுவது - 'அஸ்ல்' எனப்படும் முறை) ஆகியவையாகும்.
ஹதீஸ் தரம் : பலவீனமானது - நிராகரிக்கப்பட்டது
ضعيف منكر
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ الْحَسَنِ بْنِ يَزِيدَ الْعَطَّارُ، بِالْبَصْرَةِ، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، أَنَّ فَتًى مِنْ قُرَيْشٍ أَتَى أَبَا هُرَيْرَةَ، فَقَالَ: يَا أَبَا هُرَيْرَةَ، إِنَّكَ تُكْثِرُ الْحَدِيثَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَهَلْ سَمِعْتَهُ يَقُولُ فِي حُلَّتِي هَذِهِ؟ فَقَالَ: لَوْلَا مَا أَخَذَ اللَّهُ عَلَيَّ فِي الْكِتَابِ مَا حَدَّثْتُكُمْ بِشَيْءٍ، سَمِعْتُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «إِنَّ رَجُلًا مِمَّنْ كَانَ قَبْلَكُمْ يَتَبَخْتَرُ إِذْ أَعْجَبَتْهُ جُمَّتُهُ وَبُرْدَاهُ، فَخَسَفَ اللَّهُ بِهِ الْأَرْضَ، فَهُوَ يَتَجَلْجَلُ فِيهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ»
குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்து, "அபூஹுரைராவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஏராளமான ஹதீஸ்களை அறிவிக்கிறீர்கள். (எனவே) என்னுடைய இந்த ஆடையைப் பற்றி (பெருமை கொள்வது குறித்து) அவர்கள் ஏதேனும் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?" என்று கேட்டார்.

அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், "வேதத்தின் வாயிலாக (கல்வியை மறைக்கக் கூடாது என்று) அல்லாஹ் என் மீது (வாக்குறுதி) எடுத்திருக்காவிட்டால், நான் உங்களுக்கு எதையும் அறிவித்திருக்க மாட்டேன். (நிச்சயமாக) 'உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் ஒரு மனிதன், தனது (தோள் வரை வளர்ந்த) தலைமுடியும் தனது இரு ஆடைகளும் தனக்கே வியப்பளித்த நிலையில் (பெருமையுடன்) கர்வமாக நடந்து சென்றான். அப்போது அல்லாஹ் அவனைப் பூமியில் ஆழச் செய்தான் (பூமி அவனை விழுங்கியது). அவன் மறுமை நாள் வரை அதனுள் (கீழே நோக்கித்) தத்தளித்துச் சென்று கொண்டே இருப்பான்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : இதன் அறிவிப்பாளர் தொடர் நம்பகமானது
إسناده حسن
بَابُ الِاسْتِمَاعِ الْمَكْرُوهِ وَسُوءِ الظَّنِّ وَالْغَضَبِ وَالْفُحْشِ
பாடம்: வெறுக்கத்தக்கவற்றைச் செவிமடுத்தல், தவறான எண்ணம், கோபம் மற்றும் ஆபாசம்
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلَالٍ الصَّوَّافُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «مَنْ صَوَّرَ صُورَةً فَإِنَّهُ يُعَذَّبُ حَتَّى يَنْفُخَ فِيهَا الرُّوحَ وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا الرُّوحَ، وَمَنْ تَحَلَّمَ حُلْمًا كَاذِبًا كُلِّفَ أَنْ يَعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْنِ وَيُعَذَّبُ عَلَى ذَلِكَ، وَمَنِ اسْتَمَعَ إِلَى قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ صُبَّ فِي أُذُنَيْهِ الْآنُكُ يَوْمَ الْقِيَامَةِ»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் (உயிரினங்களின்) உருவத்தை உருவாக்குகிறாரோ, அவர் அதில் உயிரை ஊதும் வரை (மறுமையில்) வேதனை செய்யப்படுவார்; ஆனால், அவரால் ஒருபோதும் அதில் உயிரை ஊத முடியாது. எவர் தான் காணாத கனவைக் கண்டதாகப் பொய் சொல்கிறாரோ, அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமை (பார்லி) மணிகளுக்கு இடையே முடிச்சிடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு, அதற்காக வேதனை செய்யப்படுவார். எவர் ஒரு கூட்டத்தினரின் பேச்சை அவர்கள் (அவர் கேட்பதை) விரும்பாத நிலையில் ஒட்டுக் கேட்கிறாரோ, மறுமை நாளில் அவருடைய காதுகளில் உருக்கப்பட்ட ஈயம் ஊற்றப்படும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُمَرَ بْنِ شَقِيقٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «مَنْ صَوَّرَ صُورَةً عَذَّبَهُ اللَّهُ، حَتَّى يَنْفُخَ فِيهَا وَلَيْسَ بِنَافِخٍ، وَمَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ يَفِرُّونَ مِنْهُ، صُبَّ فِي أُذُنَيْهِ الْآنُكُ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ تَحَلَّمَ كُلِّفَ أَنْ يَعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْنِ وَلَيْسَ بِفَاعِلٍ»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் ஓர் உருவத்தை (உயிரினத்தின் உருவத்தை) வரைகிறாரோ, அவர் அதில் உயிரூட்டும் வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; ஆனால், அவரால் (ஒருபோதும்) உயிரூட்ட முடியாது. எவர் ஒரு கூட்டத்தாரின் பேச்சை, அவர்கள் இவரை விட்டு விரண்டோடும் (அல்லது இவர் கேட்பதை அவர்கள் விரும்பாத) நிலையில் ஒட்டுக்கேட்கிறாரோ, மறுமை நாளில் அவருடைய காதுகளில் ஈயம் காய்ச்சி ஊற்றப்படும். எவர் தான் காணாத கனவைக் கண்டதாகப் பொய் சொல்கிறாரோ, அவர் இரண்டு வாற்கோதுமை மணிகளுக்கிடையே முடிச்சிடும்படி (மறுமையில்) நிர்ப்பந்திக்கப்படுவார்; ஆனால், அவரால் (ஒருபோதும் அவ்வாறு) செய்ய முடியாது."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ، وَلَا تَجَسَّسُوا وَلَا تَحَسَّسُوا، وَلَا تَحَاسَدُوا، وَلَا تَنَافَسُوا، وَلَا تَبَاغَضُوا، وَلَا تَدَابَرُوا، وَكُونُوا عِبَادًا لِلَّهِ إِخْوَانًا»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"வீண் சந்தேகங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், (ஆதாரமற்ற) சந்தேகமே பேச்சுகளில் மிகப் பெரிய பொய்யாகும். (பிறருடைய இரகசியங்களைத்) திருட்டுத்தனமாகக் கேட்காதீர்கள்; (பிறருடைய) குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள்; ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; (உலக ஆதாயங்களுக்காகப் பிறருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில்) போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள்; ஒருவருக்கொருவர் பகைமை கொள்ளாதீர்கள்; ஒருவருக்கொருவர் (முகம் திருப்பிப்) புறக்கணிக்காதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (நீங்கள் அனைவரும்) சகோதரர்களாக இருங்கள்."
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدَ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «إِذَا غَضِبَ أَحَدُكُمْ وَهُوَ قَائِمٌ فَلْيَجْلِسْ، فَإِنْ ذَهَبَ عَنْهُ الْغَضَبُ وَإِلَّا فَلْيَضْطَجِعْ»
அபூ தர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவருக்கு நின்றுகொண்டிருக்கும்போது கோபம் வந்தால் அவர் அமர்ந்து கொள்ளட்டும். (அதன் மூலம்) அவரது கோபம் நீங்கிவிட்டால் (சரி); இல்லையெனில் அவர் (பக்கவாட்டில்) படுத்துக் கொள்ளட்டும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، بِبَيْتِ الْمَقْدِسِ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ الْأَحْنَفِ بْنِ قَيْسٍ، عَنِ ابْنِ عَمٍّ لَهُ وَهُوَ جَارِيَةُ بْنُ قُدَامَةَ، أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، قُلْ لِي قَوْلًا يَنْفَعُنِي اللَّهُ بِهِ، وَأَقْلِلْ لَعَلِّي لَا أُغْفِلُهُ، قَالَ: § «لَا تَغْضَبْ» فَعَادَ لَهُ مِرَارًا، كُلُّ ذَلِكَ يَرْجِعُ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَغْضَبْ»
ஜாரியா பின் குதாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக்கூடிய ஒரு (அறிவுரை) வார்த்தையை எனக்குக் கூறுங்கள். (நான் அதனை எளிதாகப் புரிந்து கொண்டு) மறந்துவிடாமல் இருக்கும் வகையில் அதனைச் சுருக்கமாகக் கூறுங்கள்" என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ கோபப்படாதே" என்று கூறினார்கள்.

நான் பலமுறை (அதே கேள்வியைத்) திரும்பத் திரும்பக் கேட்டேன். ஒவ்வொரு முறையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ கோபப்படாதே" என்றே (பதிலாகத்) திரும்பக் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنِ الْأَحْنَفِ بْنِ قَيْسٍ، عَنْ جَارِيَةَ بْنِ قُدَامَةَ، أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قُلْ لِي قَوْلًا وَأَقْلِلْ، قَالَ: § «لَا تَغْضَبْ» فَأَعَادَ عَلَيْهِ، قَالَ: «لَا تَغْضَبْ»
ஜாரியா பின் குதாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், "எனக்கு (பயனுள்ள) ஓர் அறிவுரை கூறுங்கள்; (நான் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில்) அதனைச் சுருக்கமாகக் கூறுங்கள்" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "கோபப்பட வேண்டாம்!" என்று கூறினார்கள். அவர் மீண்டும் (அதே கோரிக்கையைத் திரும்பத் திரும்பக்) கேட்க, நபி (ஸல்) அவர்கள் "கோபப்பட வேண்டாம்!" என்றே (மீண்டும் மீண்டும்) கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي أَبُو عَوَانَةَ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَقُولُونَ فِي الصُّرَعَةِ؟ » قَالَ: قُلْتُ: الَّذِي لَا يَصْرَعُهُ الرِّجَالُ، قَالَ: § «الصُّرَعَةُ الَّذِي يُمْسِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ»
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(மல்யுத்தத்தில் பிறரை வீழ்த்தும்) பலசாலி (அல்-ஸுரஆ) என்பவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "எவரை (மற்ற) மனிதர்களால் (மல்யுத்தத்தில்) வீழ்த்த முடியாதோ அவரே (பலசாலி)" என்று பதிலளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "கோபத்தின்போது எவன் தன்னைத்தானே (தன் மனதைக்) கட்டுப்படுத்திக் கொள்கிறானோ, அவன்தான் (உண்மையான) பலசாலி ஆவான்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ صُرَدٍ، قَالَ: اسْتَبَّ رَجُلَانِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ عِنْدَهُ جُلُوسٌ، وَأَحَدُهُمَا يَسُبُّ صَاحِبَهُ مُغْضَبًا قَدِ احْمَرَّ وَجْهُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «إِنِّي لَأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا لَذَهَبَ عَنْهُ مَا يَجِدُ: أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ» فَقَالُوا لِلرَّجُلِ: أَلَا تَسْمَعُ مَا يَقُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: إِنِّي لَسْتُ بِمَجْنُونٍ
சுலைமான் பின் சுரத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களுக்கு முன்னால் இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தமது தோழரைக் கடுங்கோபத்துடன் திட்டினார். (கோபத்தால்) அவருடைய முகம் சிவந்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிச்சயமாக எனக்கு ஒரு வார்த்தை தெரியும்; அதை இவர் கூறினால், இவருக்கு ஏற்பட்டுள்ள (இந்தக் கோபம்) இவரை விட்டு அகன்றுவிடும். (அந்த வார்த்தை:) ‘அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ (விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்பதாகும்" என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அங்கிருந்தவர்கள் அந்த மனிதரிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நீர் கேட்கவில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "நிச்சயமாக நான் பைத்தியக்காரன் அல்ல" என்று கூறினார்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ §أَثْقَلَ مَا وُضِعَ فِي مِيزَانِ الْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ خُلُقٌ حَسَنٌ، وَإِنَّ اللَّهَ يُبْغِضُ الْفَاحِشَ الْبَذِيءَ»
அபுத் தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை நாளில் ஓர் இறைநம்பிக்கையாளரின் (முஃமினின்) தராசில் வைக்கப்படுபவற்றில் நற்குணமே மிகவும் கனமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் (செயல்களால்) மானக்கேடான மற்றும் (பேச்சால்) ஆபாசமான நபரை வெறுக்கிறான்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى*، قَالَ: حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْحَاقَ، يُحَدِّثُ عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: رَأَيْتُ أُسَامَةَ بْنَ زَيْدٍ يُصَلِّي عِنْدَ قَبْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَجَ مَرْوَانُ بْنُ الْحَكَمِ، فَقَالَ: تُصَلِّي إِلَى قَبْرِهِ؟ فَقَالَ: إِنِّي أُحِبُّهُ، فَقَالَ لَهُ قَوْلًا قَبِيحًا، ثُمَّ أَدْبَرَ، فَانْصَرَفَ أُسَامَةُ، فَقَالَ: يَا مَرْوَانُ إِنَّكَ آذَيْتَنِي، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «إِنَّ اللَّهَ يُبْغِضُ الْفَاحِشَ الْمُتَفَحِّشَ، وَإِنَّكَ فَاحِشٌ مُتَفَحِّشٌ»
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
நான் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கப்ரருகே (அறையினுள் அல்லது அருகாமையில்) தொழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அப்போது (மதீனாவின் ஆளுநராக இருந்த) மர்வான் பின் அல்-ஹகம் வெளியே வந்து அவரிடம், "நீங்கள் அவரது கப்ரையா முன்னோக்கித் தொழுகிறீர்கள்?" என்று (ஆட்சேபித்துக்) கேட்டார். அதற்கு உஸாமா (ரலி) அவர்கள், "நிச்சயமாக நான் அவர்களை (அல்லாஹ்வின் தூதரை) நேசிக்கிறேன் (அதனால் தான் இங்கு தொழுகிறேன்)" என்று பதிலளித்தார்கள். பின்னர் மர்வான் அவர்களிடம் ஒரு மோசமான (அருவருப்பான) வார்த்தையைக் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார்.

பிறகு உஸாமா (ரலி) அவர்கள் (தமது தொழுகையை முடித்துத்) திரும்பியபோது (மர்வானிடம்), "மர்வானே! நீங்கள் (உமது பேச்சால்) எனக்கு வேதனையளித்துவிட்டீர்கள். 'நிச்சயமாக அல்லாஹ் அருவருப்பான வார்த்தைகளைப் பேசுபவனையும் (இயல்பிலேயே கெட்ட வார்த்தை பேசுபவன்), வேண்டுமென்றே அருவருப்பாகப் பேசுபவனையும் (பிறரைத் திட்டுவதற்காகத் தேடிப்பிடித்துக் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துபவன்) வெறுக்கிறான்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன். மேலும், நீங்களும் அருவருப்பாகப் பேசுபவராகவும், வேண்டுமென்றே கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ §أَثْقَلَ مَا وُضِعَ فِي مِيزَانِ الْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ خُلُقٌ حَسَنٌ، وَإِنَّ اللَّهَ يُبْغِضُ الْفَاحِشَ الْبَذِيءَ» *
அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் இறைநம்பிக்கையாளரின் (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் வைக்கப்படும் எடைகனமான பொருள் நற்குணமே ஆகும். மேலும், நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான, அருவருப்பான வார்த்தைகளைப் பேசுபவனை வெறுக்கிறான்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ الْخَلِيلِ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَرْمَلَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَجُلًا اسْتَأْذَنَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا سَمِعَ صَوْتَهُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَائِشَةَ: «بِئْسَ الرَّجُلُ، أَوْ بِئْسَ ابْنُ الْعَشِيرَةِ» فَلَمَّا دَخَلَ انْبَسَطَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا خَرَجَ، كَلَّمَتْهُ عَائِشَةُ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ «بِئْسَ الرَّجُلُ، أَوْ بِئْسَ ابْنُ الْعَشِيرَةِ» فَلَمَّا دَخَلَ انْبَسَطْتَ إِلَيْهِ، فَقَالَ: «يَا عَائِشَةُ §شَرُّ النَّاسِ مَنْ يَتَّقِي النَّاسُ فُحْشَهُ»
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்டார். அவருடைய குரலைக் கேட்டதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "இவர் ஒரு மோசமான மனிதர்" அல்லது "தம் கூட்டத்தாரிலேயே மிகக் கெட்ட மகன்" என்று கூறினார்கள். அவர் உள்ளே வந்ததும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் இன்முகத்துடன் (கனிவாக) நடந்துகொண்டார்கள்.

அவர் வெளியே சென்றதும், ஆயிஷா (ரலி) அவர்கள் நபிகளாரிடம், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் (இவரைப் பற்றி), 'இவர் ஒரு மோசமான மனிதர்' அல்லது 'தம் கூட்டத்தாரிலேயே மிகக் கெட்ட மகன்' என்று கூறினீர்கள். ஆனால், அவர் உள்ளே வந்ததும் அவரிடம் இன்முகத்துடன் நடந்துகொண்டீர்களே (ஏன்)?" என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷாவே! எவனுடைய ஆபாசமான (தீய) வார்த்தைகளுக்கு (அல்லது தீய செயல்களுக்கு) அஞ்சி மக்கள் அவனை விட்டு விலகியிருக்கிறார்களோ, அவன்தான் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மனிதர்களில் மிகவும் கெட்டவன் ஆவான்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «أَبْغَضُ الرِّجَالِ إِلَى اللَّهِ الْأَلَدُّ الْخَصِمُ»
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மனிதர்களில் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவர், (உண்மையை ஏற்க மறுத்து) வீண் பிடிவாதம் பிடித்துக் கடுமையாகத் தர்க்கம் செய்பவரே ஆவார்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
بَابُ مَا يُكْرَهُ مِنَ الْكَلَامِ وَمَا لَا يُكْرَهُ
பேச்சுகளில் வெறுக்கத்தக்கவை மற்றும் வெறுக்கப்படாதவை பற்றிய பாடம்
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ اللَّخْمِيُّ، بِعَسْقَلَانَ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي سُوَيْدٍ، أَنَّ جَدَّهُ سُفْيَانَ بْنَ عَبْدِ اللَّهِ الثَّقَفِيَّ قَالَ: يَا رَسُولَ اللَّهِ §حَدِّثْنِي بِأَمْرٍ أَعْتَصِمُ بِهِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُلْ: رَبِّيَ اللَّهُ، ثُمَّ اسْتَقِمْ»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَكْثَرُ مَا تَخَافُ عَلَيَّ؟ قَالَ: «هَذَا»، وَأَشَارَ إِلَى لِسَانِهِ
சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அத்-ஸகஃபீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் (மார்க்கத்தில்) உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டிய ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "'ரப்பியல்லாஹ்' (என் இறைவன் அல்லாஹ்தான்) என்று நீர் கூறுவீராக! பின்னர் (அதன் மீது) உறுதியாக நிலைத்திருப்பீராக!" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் தாங்கள் மிகவும் அஞ்சுவது எதை?" என்று கேட்டேன். அப்போது அவர்கள் தமது நாவைச் சுட்டிக்காட்டி, "(இதன் தீங்குகளைத் தான்) இது" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حَبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَاعِزٍ، عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، §حَدِّثْنِي بِأَمْرٍ أَعْتَصِمُ بِهِ، قَالَ: «قُلْ: رَبِّيَ اللَّهُ، ثُمَّ اسْتَقِمْ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَخْوَفُ مَا تَخَافُ عَلَيَّ؟ قَالَ: فَأَخَذَ بِلِسَانِ نَفْسِهِ ثُمَّ قَالَ: «هَذَا»
சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்-ஸகஃபீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் (மார்க்கத்தில்) உறுதியாகப் பற்றிக்கொள்ளக்கூடிய ஒரு விஷயத்தை எனக்குக் கூறுங்கள்" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "'ரப்பியல்லாஹ்' (என் இறைவன் அல்லாஹ்வே) என்று நீர் கூறுவீராக! பின்னர் (அதில்) உறுதியாக நிலைத்திருப்பீராக!" என்று கூறினார்கள்.

நான், "அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் நீங்கள் மிகவும் அஞ்சுவது எதை (எந்த உறுப்பை)?" என்று கேட்டேன். அப்போது அவர்கள் தமது நாவைப் பிடித்துக்கொண்டு, "இதைத்தான் (உன் நாவைத்தான்)" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبَانَ الْقُرَشِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَاعِزٍ، عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ §حَدِّثْنِي بِأَمْرٍ أَعْتَصِمُ بِهِ، قَالَ: «قُلْ: رَبِّيَ اللَّهُ، ثُمَّ اسْتَقِمْ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَشَدُّ مَا تَخَافُ عَلَيَّ؟ فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلِسَانِ نَفْسِهِ «
சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அத்-ஸகஃபீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் உறுதியாகப் பற்றிக்கொள்ளும் படியான ஒரு விஷயத்தை எனக்குக் கூறுங்கள்" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "என் இறைவன் அல்லாஹ்வே என்று நீர் கூறுவீராக! பின்னர் (அதிலேயே) நிலைத்திருப்பீராக!" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் நீங்கள் மிகவும் அஞ்சுவது எதை?" என்று கேட்டேன். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நாவைப் பிடித்துக் கொண்டு (இதனைத் தான் என்று காட்டினார்கள்).
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «مَنْ يَتَوَكَّلْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ أَتَوَكَّلْ لَهُ الْجَنَّةَ»
ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் தமது இரு தாடைகளுக்கு இடைப்பட்டதற்கு (நாவிற்கு) என்னிடம் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ (அதனைத் தவறான வழிகளில் பயன்படுத்தாமல் பாதுகாப்பதாக உறுதி அளிக்கிறாரோ), அவருக்குச் சொர்க்கத்தை நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் (உறுதி அளிக்கிறேன்)."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَاعِزِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْعَامِرِيِّ، أَنَّ سُفْيَانَ بْنَ عَبْدِ اللَّهِ الثَّقَفِيَّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، §حَدِّثْنِي بِأَمْرٍ أَعْتَصِمُ بِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُلْ: رَبِّيَ اللَّهُ، ثُمَّ اسْتَقِمْ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَكْثَرُ مَا تَخَافُ عَلَيَّ؟ فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلِسَانِ نَفْسِهِ، ثُمَّ قَالَ: «هَذَا» مَاعِزُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَهُ الزُّبَيْدِيُّ، وَهُوَ مُتْقِنٌ
சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்-ஸகஃபீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் (ஈமானில்) உறுதியாகப் பற்றிக்கொள்வதற்குரிய ஒரு விஷயத்தை எனக்குக் கூறுங்கள்” என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ ‘ரப்பியல்லாஹ்’ (அல்லாஹ்வே எனது இறைவன்) என்று நீர் கூறுவீராக! பின்னர் (அதில்) உறுதியாக நிலைத்திருப்பீராக!” என்று கூறினார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் நீங்கள் மிகவும் அஞ்சுவது எதை?” என்று கேட்டேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது நாவைப் பிடித்துக்கொண்டு, “(உமது) இதைத்தான்!” என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ الْخَلِيلِ، قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «مَنْ وُقِيَ شَرَّ مَا بَيْنَ لَحْيَيْهِ، وَرِجْلَيْهِ دَخَلَ الْجَنَّةَ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் தமது இரு தாடைகளுக்கு இடைப்பட்டதன் (நாவின்) தீங்கிலிருந்தும், தமது இரு கால்களுக்கு இடைப்பட்டதன் (மர்ம உறுப்பின்) தீங்கிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறாரோ, அவர் சொர்க்கத்தில் நுழைவார்."
ஹதீஸ் தரம் : நம்பகமானது, ஆதாரப்பூர்வமானது
حسن صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ ذُرَيْحٍ، بِعُكْبَرَا قَالَ: أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الْفَزَارِيُّ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «الْبَذَاءُ مِنَ الْجَفَاءِ، وَالْجَفَاءُ فِي النَّارِ، وَالْحَيَاءُ مِنَ الْإِيمَانِ، وَالْإِيمَانُ فِي الْجَنَّةِ»
அபூ பக்ரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஆபாசமாகப் பேசுவது (மற்றும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது) முரட்டுத்தனத்தின் (மற்றும் இதயக் கடினத்தின்) ஒரு பகுதியாகும்; முரட்டுத்தனம் (அதற்குரியவரை) நரகத்தில் (சேர்க்கும்). வெட்கம் ஈமானின் (இறைநம்பிக்கையின்) ஒரு பகுதியாகும்; ஈமான் (அதற்குரியவரை) சொர்க்கத்தில் (சேர்க்கும்)."
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «مَنْ حَلَفَ بِاللَّاتِ وَالْعُزَّى، فَلْيَقُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَمَنْ قَالَ لِصَاحِبِهِ: تَعَالَ أُقَامِرْكَ، فَلْيَتَصَدَّقْ بِشَيْءٍ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவரேனும் (அறியாமையினால்) சத்தியம் செய்யும்போது 'லாத்' மற்றும் 'உஸ்ஸா' (ஆகிய சிலைகளின்) மீது சத்தியமாக என்று கூறிவிட்டால், அவர் (அதற்குப் பரிகாரமாக) 'லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறட்டும். மேலும், எவரேனும் தன் நண்பனிடம், 'வா, நாம் சூதாடுவோம்' என்று (சூதாட்டத்திற்கு அழைப்பு விடுத்துக்) கூறினால், அவர் (அதற்குப் பரிகாரமாக) ஏதேனும் ஒரு தர்மத்தைச் செய்யட்டும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ بَحْرٍ الْعُقَيْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ §الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مَا يَرَى بِهَا بَأْسًا يَهْوِي بِهَا فِي النَّارِ سَبْعِينَ خَرِيفًا»
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்:
"நிச்சயமாக ஒரு மனிதர் (அதன் விபரீதத்தை உணராமல்) ஒரு வார்த்தையைப் பேசுவார்; அதில் அவர் எந்தத் தவறும் (அல்லது பாதிப்பும்) இருப்பதாகக் கருதமாட்டார். (ஆனால்) அதன் காரணமாக அவர் எழுபது ஆண்டுகள் (ஆழமுள்ள) நரகத்தில் வீழ்வார்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ §الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ يَنْزِلُ بِهَا فِي النَّارِ أَبْعَدَ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "நிச்சயமாக ஓர் அடியான் (அதன் விளைவைப் பற்றிச் சிந்திக்காமல்) ஒரு வார்த்தையைப் பேசி விடுகிறான்; அதன் காரணமாக அவன், கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான தூரத்தை விட அதிக தொலைவிற்கு நரகத்தில் (ஆழத்தில்) வீழ்ந்து விடுகிறான்."
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَ §الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مَا يَتَثَبَّتُ فِيهَا، يَنْزِلُ بِهَا فِي النَّارِ أَبْعَدَ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஓர் அடியார் (அதன் உண்மைத்தன்மையையோ அல்லது பின்விளைவையோ) தீர விசாரித்து உறுதிப்படுத்தாமல் ஒரு வார்த்தையைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர், (நரகத்தில்) கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான தூரத்தை விடவும் அதிகமான தொலைவுக்கு நரகத்தில் வீழ்ந்து விடுகிறார்."
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الضَّحَّاكِ بْنِ أَبِي جَبِيرَةَ*، قَالَ: كَانَتْ لَهُمْ أَلْقَابٌ فِي الْجَاهِلِيَّةِ، فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا بِلَقَبِهِ، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ يَكْرَهُهُ، فَأَنْزَلَ اللَّهُ: {§وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ} ، قَالَ: وَكَانَتِ الْأَنْصَارُ يَتَصَدَّقُونَ وَيُعْطُونَ مَا شَاءَ اللَّهُ، حَتَّى أَصَابَتْهُمْ سَنَةٌ، فَأَمْسَكُوا، فَأَنْزَلَ اللَّهُ: {وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ} «
ளஹ்ஹாக் பின் அபீ ஜபீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(அறியாமைக் காலத்தில்) அவர்களுக்குச் சில பட்டப்பெயர்கள் இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை அவரது பட்டப்பெயரைக் கூறி அழைத்தார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவர் அதனை வெறுக்கிறார்" என்று கூறப்பட்டது. அப்போது அல்லாஹ், "ஒருவருக்கொருவர் பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்ட பின் (அவ்வாறு அழைப்பது) மிகக் கெட்ட பாவச் செயலாகும்" (அல்குர்ஆன் 49:11) என்ற வசனத்தை அருளினான்.
மேலும் அவர் கூறினார்: அன்சாரிகள் தர்மம் செய்து வந்தனர், மேலும் அல்லாஹ் நாடிய அளவு (தாராளமாகக்) கொடுத்து வந்தனர். அவர்களுக்கு ஒரு பஞ்சம் ஏற்பட்டபோது, அவர்கள் (தர்மம் செய்வதை) நிறுத்திக் கொண்டனர். அப்போது அல்லாஹ், "அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; மேலும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கிறான்" (அல்குர்ஆன் 2:195) என்ற வசனத்தை அருளினான்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «لَا يَقُولَنَّ أَحَدُكُمْ: قَبَّحَ اللَّهُ وَجْهَكُ، وَوَجْهَ مَنْ أَشْبَهَ وَجْهَكَ، فَإِنَّ اللَّهَ خَلَقَ آدَمَ عَلَى صُورَتِهِ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் எவரும் (ஒருவரைப் பார்த்து), 'அல்லாஹ் உனது முகத்தையும், உனது முகத்தை ஒத்திருப்பவர்களின் முகத்தையும் விகாரமாக்குவானாக!' என்று (சாபமிட்டுக்) கூற வேண்டாம். ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை (அல்லாஹ்வின் கண்ணியத்திற்குரிய) அவனது உருவத்திலேயே படைத்துள்ளான்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا صَالِحُ بْنُ حَاتِمِ بْنِ وَرْدَانَ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ أَبِيَ يُحَدِّثُ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «قَالَ رَجُلٌ: وَاللَّهِ لَا يَغْفِرُ اللَّهُ لِفُلَانٍ، فَقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: قَدْ غَفَرْتُ لِفُلَانٍ، وَأَحْبَطْتُ عَمَلَكَ»
ஜுன்துப் பின் அப்தில்லாஹ் அல்-பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு மனிதர், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் இன்னாரை மன்னிக்க மாட்டான்' என்று (ஆணவத்துடன்) கூறினார். அப்போது பாக்கியம் பொருந்தியவனும் உயர்ந்தவனுமான அல்லாஹ், 'நான் இன்னாரை மன்னித்துவிட்டேன்; (இறைவனின் அதிகாரத்தில் தலையிட்ட காரணத்தால்) உமது (நற்)செயல்களைப் பாழாக்கிவிட்டேன்' என்று கூறினான்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا ضَمْضَمُ بْنُ جَوْسٍ، قَالَ: دَخَلْتُ مَسْجِدَ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا أَنَا بِشَيْخٍ مُصَفِّرٍ رَأْسَهُ، بَرَّاقِ الثَّنَايَا، مَعَهُ رَجُلٌ أَدْعَجُ، جَمِيلُ الْوَجْهِ، شَابٌّ، فَقَالَ الشَّيْخُ: يَا يَمَامِيُّ تَعَالَ، لَا تَقُولَنَّ لِرَجُلٍ أَبَدًا: لَا يَغْفِرُ اللَّهُ لَكَ، وَاللَّهِ لَا يُدْخِلُكَ اللَّهُ الْجَنَّةَ أَبَدًا، قُلْتُ: وَمَنْ أَنْتَ؟ يَرْحَمُكَ اللَّهُ قَالَ: أَنَا أَبُو هُرَيْرَةَ، قُلْتُ: إِنَّ هَذِهِ لَكَلِمَةٌ يَقُولُهَا أَحَدُنَا لِبَعْضِ أَهْلِهِ أَوْ لِخَادِمِهِ إِذَا غَضِبَ عَلَيْهَا، قَالَ: فَلَا تَقُلْهَا، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كَانَ §رَجُلَانِ مِنْ بَنِي إِسْرَائِيلَ مُتَوَاخِيَيْنِ، أَحَدُهُمَا مُجْتَهِدٌ فِي الْعِبَادَةِ، وَالْآخَرُ مُذْنِبٌ، فَأَبْصَرَ الْمُجْتَهِدُ الْمُذْنِبَ عَلَى ذَنْبٍ، فَقَالَ لَهُ: أَقْصِرْ، فَقَالَ لَهُ: خَلِّنِي وَرَبِّي، قَالَ: وَكَانَ يُعِيدُ ذَلِكَ عَلَيْهِ، وَيَقُولُ: خَلِّنِي وَرَبِّي، حَتَّى وَجَدَهُ يَوْمًا عَلَى ذَنْبٍ، فَاسْتَعْظَمَهُ، فَقَالَ: وَيْحَكَ أَقْصِرْ قَالَ: خَلِّنِي وَرَبِّي، أَبُعِثْتَ عَلَيَّ رَقِيبًا؟ فَقَالَ: وَاللَّهِ لَا يَغْفِرُ اللَّهُ لَكَ أَبَدًا، أَوْ قَالَ: لَا يُدْخِلُكَ اللَّهُ الْجَنَّةَ أَبَدًا، فَبُعِثَ إِلَيْهِمَا مَلَكٌ فَقَبَضَ أَرْوَاحَهُمَا، فَاجْتَمَعَا عِنْدَهُ جَلَّ وَعَلَا، فَقَالَ رَبُّنَا لِلْمُجْتَهِدِ: أَكُنْتَ عَالِمًا؟ أَمْ كُنْتَ قَادِرًا عَلَى مَا فِي يَدِي؟ أَمْ تَحْظُرُ رَحْمَتِي عَلَى عَبْدِي؟ اذْهَبْ إِلَى الْجَنَّةِ يُرِيدُ الْمُذْنِبَ وَقَالَ لِلْآخَرِ: اذْهَبُوا بِهِ إِلَى النَّارِ»، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَكَلَّمَ بِكَلِمَةٍ أَوْبَقَتْ دُنْيَاهُ وَآخِرَتَهُ «
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கே (அபூஹுரைரா (ரலி) ஆகிய) தலைமுடிக்கு மஞ்சள் சாயம் பூசிய, ஒளிரும் முன்பற்களைக் கொண்ட ஒரு முதியவரைக் கண்டேன். அவருடன் அழகான முகமும் கருத்த கண்களும் கொண்ட ஒரு இளைஞரும் இருந்தார்.

அந்த முதியவர் (என்னை நோக்கி), "யமாமா வாசியே! இங்கே வாரும். ஒருபோதும் எந்த மனிதரைப் பார்த்தும், 'அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான்' என்றோ, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அல்லாஹ் உன்னை ஒருபோதும் சொர்க்கத்தில் நுழைக்க மாட்டான்' என்றோ கூறிவிடாதீர்!" என்றார்.

நான் அவரிடம், "அல்லாஹ் உங்களின் மீது கருணை புரிவானாக! நீங்கள் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "நான் அபூஹுரைரா" என்று பதிலளித்தார்.

நான் அவரிடம், "நிச்சயமாக, நம்முடைய குடும்பத்தாரோ அல்லது பணியாளரோ நமக்குக் கோபத்தை ஏற்படுத்தினால், நம்மில் ஒருவர் (கோபத்தில்) சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைதானே இது?" என்று கூறினேன்.

அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "அவ்வாறு கூறாதீர்! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்:

'பனூ இஸ்ராயீலர்களில் ஒருவரோடு ஒருவர் நெருங்கிய நண்பர்களாக இரண்டு மனிதர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் இறைவழிபாட்டில் மிகவும் முனைப்புடன் ஈடுபடுபவராக இருந்தார். மற்றொருவர் பாவம் செய்பவராக இருந்தார்.

வழிபாட்டில் முனைப்புடன் இருப்பவர், மற்றவர் ஒரு பாவச் செயலில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து, 'இதை நிறுத்திக்கொள்' என்று கூறுவார். அதற்கு அவர், 'என்னையும் என் இறைவனையும் (இடையில்) விட்டுவிடு' என்று கூறுவார். அவர் தொடர்ந்து அவ்வாறே அவருக்கு அறிவுரை கூறி வந்தார். அவரும் 'என்னையும் என் இறைவனையும் விட்டுவிடு' என்றே கூறி வந்தார். ஒரு நாள், அந்தப் பாவி ஒரு பெரிய பாவத்தில் ஈடுபட்டிருந்ததை அவர் கண்டார். உடனே அவர், 'உனக்குக் கேடுதான்! இதை நிறுத்திக்கொள்' என்றார்.

அதற்கு அவர், 'என்னையும் என் இறைவனையும் விட்டுவிடு. நீ என்னைக் கண்காணிப்பவனாகவா அனுப்பப்பட்டுள்ளாய்?' என்று கேட்டார். உடனே அந்த இறைவழிபாட்டாளர், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டான்' அல்லது 'அல்லாஹ் உன்னை ஒருபோதும் சொர்க்கத்தில் நுழைக்க மாட்டான்' என்று கூறினார்.

பின்னர், அவர்கள் இருவரிடமும் ஒரு வானவர் அனுப்பப்பட்டு, அவர்களின் உயிர்கள் கைப்பற்றப்பட்டன. மாண்பும் மகிமையும் மிக்க அல்லாஹ்விடம் அவர்கள் இருவரும் ஒன்றுசேர்க்கப்பட்டனர்.

அப்போது நம் இறைவன் அந்த இறைவழிபாட்டாளரிடம், 'நீ (என் முடிவுகளை) அறிந்தவனா? அல்லது என் கையில் இருப்பதன் (அதிகாரத்தின்) மீது உனக்கு ஆற்றல் உள்ளதா? அல்லது என் அடியான் மீது என் கருணை சென்றடைவதை நீ தடுப்பாயா?' என்று கேட்டான்.

பின்னர், பாவம் செய்தவரைக் குறிப்பிட்டு, 'நீ (எனது கருணையினால்) சொர்க்கத்திற்குச் செல்' என்று கூறிவிட்டு, மற்றவரை (வழிபாட்டாளரை) நோக்கி, 'இவனை நரகத்திற்குக் கொண்டு செல்லுங்கள்' என்று (வானவர்களுக்குக்) கட்டளையிட்டான்.'

(இறுதியாக, அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:) என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! அந்த மனிதர் (கோபத்தில்) கூறிய ஒரேயொரு வார்த்தை, அவருடைய இம்மையையும் மறுமையையும் நாசமாக்கிவிட்டது."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَا يَقُولَنَّ أَحَدُكُمْ: وَاخَيْبَةَ الدَّهْرِ، فَإِنَّ اللَّهَ هُوَ الدَّهْرُ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் எவரும் 'காலமே நாசமாகட்டும் (அல்லது காலத்துக்குக் கேடு உண்டாகட்டும்)' என்று கூற வேண்டாம். ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்வே காலமாக இருக்கிறான் (அதாவது காலத்தையும் அதில் நிகழும் மாற்றங்களையும் படைத்து நிர்வகிப்பவன் அல்லாஹ்வே ஆவான்)."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «قَالَ اللَّهُ: يَسُبُّ ابْنُ آدَمَ الدَّهْرَ، وَأَنَا الدَّهْرُ، بِيَدِي اللَّيْلُ وَالنَّهَارُ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "அல்லாஹ் கூறுகிறான்: 'ஆதமின் மகன் காலத்தைத் திட்டுகிறான் (காலத்தின் மீது பழி சுமத்துகிறான்). நானே காலமாக இருக்கிறேன் (காலத்தைப் படைத்து நிர்வகிப்பவன் நானே); இரவும் பகலும் என் கையிலேயே (என் அதிகாரத்திலேயே) உள்ளன.'"
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ: «كَانَ أَهْلُ الْجَاهِلِيَّةِ يَقُولُونَ: §إِنَّمَا يُهْلِكُنَا اللَّيْلُ وَالنَّهَارُ، هُوَ الَّذِي يُهْلِكُنَا، وَيُمِيتُنَا، وَيُحْيِينَا، قَالَ اللَّهُ: {مَا هِيَ إِلَّا حَيَاتُنَا الدُّنْيَا} الْآيَةَ»
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

அறியாமைக் கால மக்கள் (ஜாஹிலிய்யாக்கள்), "இரவும் பகலும் தான் எங்களை அழிக்கின்றன; அவைதாம் (காலம் தான்) எங்களை அழிக்கின்றன; எங்களை மரணிக்கச் செய்கின்றன; மேலும் எங்களை உயிர்வாழச் செய்கின்றன" என்று கூறுவார்கள். (அவர்களின் இக்கூற்றை மறுத்து) அல்லாஹ், "{மா ஹிய இல்லா ஹயாத்துனத் துன்யா...}" (நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை...) என்ற வசனத்தை (சூரா அல்-ஜாஸியா 45:24) இறக்கினான்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ الْعَتَكِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا الزُّبَيْرُ بْنُ سَعِيدٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ §الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ يُضْحِكُ بِهَا جُلَسَاءَهُ، يَهْوِي بِهَا مِنْ أَبْعَدَ مِنَ الثُّرَيَّا»
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"நிச்சயமாக, ஒரு மனிதன் தன்னுடன் அமர்ந்திருப்பவர்களைச் சிரிக்க வைப்பதற்காக ஒரு வார்த்தையைப் பேசுகிறான். (அதன் காரணமாக) அவன் 'சுரையா' (எனும் விண்மீன் கூட்டத்தை) விடவும் அதிக தொலைவான (நரகத்தின் ஆழத்தில்) வீழ்ந்து விடுகிறான்."
ஹதீஸ் தரம் : நம்பகமானது
حسن
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ الْبَزَّازُ الْبَغْدَادِيُّ، بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ الْأَعْمَشِ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «أَيْمَنُ امْرِئٍ، وَأَشْأَمُهُ مَا بَيْنَ لَحْيَيْهِ» قَالَ وَهْبٌ: - يَعْنِي لِسَانَهُ -
அதீ பின் ஹாத்திம் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதனின் (மிகப் பெரும்) நற்பாக்கியமும், அவனது (மிகப் பெரும்) துரதிர்ஷ்டமும் அவனது இரண்டு தாடைகளுக்கு மத்தியில் உள்ளதாகும்."

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) வஹ்ப் கூறுகிறார்: "(இதன் மூலம் நபி ஸல் அவர்கள்) அவரது நாவையே குறிப்பிடுகிறார்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ التَّمِيمِيُّ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: قَامَ رَجُلَانِ مِنَ الْمَشْرِقِ خَطِيبَيْنِ، فَتَكَلَّمَا، ثُمَّ قَعَدَا، فَقَامَ ثَابِتُ بْنُ قَيْسٍ خَطِيبُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَكَلَّمَ، فَعَجِبُوا مِنْ كَلَامِهِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَطَبَ، فَقَالَ: «أَيُّهَا النَّاسُ، §قُولُوا بِقَوْلِكُمْ، فَإِنَّمَا تَشْقِيقُ الْكَلَامِ مِنَ الشَّيْطَانِ، فَإِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا»
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

கிழக்குத் திசையிலிருந்து (மஷ்ரிக் பகுதியிலிருந்து) வந்த இருவர் (சிறந்த) பேச்சாளர்களாக எழுந்து நின்று உரையாற்றினார்கள்; பின்னர் அவர்கள் அமர்ந்தார்கள். அடுத்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பேச்சாளரான ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் எழுந்து உரையாற்றினார்கள். (அவரது பேச்சாற்றலைக் கண்டு) மக்கள் ஆச்சரியப்பட்டனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், “மக்களே! நீங்கள் (இயல்பாகப் பேசும்) உங்கள் பேச்சையே பேசுங்கள். ஏனெனில், வார்த்தைகளை (ஆடம்பரமாகப்) பிளந்து பேசுவது (தேவையற்ற சொல்லலங்காரங்களில் ஈடுபடுவது) ஷைத்தானிடமிருந்தே ஏற்படுகிறது. நிச்சயமாக, சில பேச்சாற்றல்களில் (மக்களைக் கவரும்) சூனியம் (போன்ற வசீகரம்) உள்ளது” என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَشْوَعَ، عَنِ الشَّعْبِيِّ قَالَ: حَدَّثَنِي كَاتَبُ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: كَتَبَ مُعَاوِيَةُ إِلَى الْمُغِيرَةِ: أَنِ اكْتُبْ إِلَيَّ بِشَيْءٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَتَبَ إِلَيْهِ: «إِنِّي سَمِعْتُهُ يَقُولُ: إِنَّ §اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلَاثًا: قِيلَ وَقَالَ، وَإِضَاعَةَ الْمَالِ، وَكَثْرَةَ السُّؤَالِ» قَالَ ابْنُ عُلَيَّةَ: «إِضَاعَةُ الْمَالِ: إِنْفَاقُهُ فِي غَيْرِ حَقِّهِ»
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தாளர் (வர்ராத்) அறிவிக்கிறார்:

முஆவியா (ரலி) அவர்கள் முஃகீரா (ரலி) அவர்களுக்கு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஏதேனும் ஒரு விஷயத்தை எனக்கு எழுதி அனுப்புங்கள்" என்று (கடிதம்) எழுதினார்கள்.

அதற்கு முஃகீரா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) எழுதி அனுப்பினார்கள்:
"நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுக்கிறான்: (அவர் சொன்னார், இவர் சொன்னார் என ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பும்) வீண் பேச்சு, செல்வத்தை வீணாக்குவது மற்றும் (தேவையற்ற முறையில்) அதிகமாகக் கேள்விகள் கேட்பது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு உலைய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "செல்வத்தை வீணாக்குவது என்பது, அதனை (மார்க்க ரீதியாக) முறையற்ற வழிகளில் செலவிடுவதாகும்."
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، بِنَسَا، حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ §اللَّهَ كَرِهَ لَكُمْ قِيلَ وَقَالَ، وَكَثْرَةَ السُّؤَالِ، وَإِضَاعَةَ الْمَالِ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (மூன்று விஷயங்களை) வெறுக்கிறான்: (ஆதாரமற்ற முறையில்) 'அவர் சொன்னார், இவர் சொன்னார்' (என வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது), (தேவையின்றி) அதிகமாகக் கேள்விகள் கேட்பது மற்றும் செல்வத்தை வீணாக்குவது."
ஹதீஸ் தரம் : நம்பகமானது, ஆதாரப்பூர்வமானது
حسن صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «الْمُؤْمِنُ الْقَوِيُّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَكُلٌّ عَلَى خَيْرٍ، احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَلَا تَعْجِزْ، فَإِنْ غَلَبَكَ شَيْءٌ، فَقُلْ: قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ، وَإِيَّاكَ وَاللَّوَّ، فَإِنَّ اللَّوَّ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பலவீனமான இறைநம்பிக்கையாளரை விட, வலிமையான இறைநம்பிக்கையாளரே அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவர். (இருப்பினும்) அவர்கள் ஒவ்வொருவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயன்தரும் விஷயங்களில் பேரார்வம் கொள்; (அவற்றைச் செய்யும்போது) நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் (உன் சக்திக்கு மீறிய) ஒன்று நேர்ந்துவிட்டால், 'கத்தருல்லாஹ், வ மா ஷாஅ' (இது அல்லாஹ்வின் விதி; அவன் நாடியது நடக்கும்/நடந்தது) என்று சொல். 'இப்படி நடந்திருந்தால்...' (என்று சொல்வதைத்) தவிர்ந்து கொள். ஏனெனில், 'இப்படி நடந்திருந்தால்...' (எனும் வார்த்தை) ஷைத்தானின் செயலுக்கு (வழி) திறந்துவிடுகிறது."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ الْفَارِسِيُّ، بِدَارَا، مِنْ دِيَارِ رَبِيعَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَرْبٍ الطَّائِيُّ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ رَبِيعَةَ بْنِ عُثْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ الْخَيْرُ، فَاحْرِصْ عَلَى مَا تَنْتَفِعُ بِهِ، وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجِزْ، فَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ: لَوْ أَنِّي فَعَلْتُ كَذَا وَكَذَا وَلَكِنْ: قُلْ: قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ، فَإِنَّ اللَّوَّ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ»
அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"வலிமையான இறைநம்பிக்கையாளர் (முஃமின்), பலவீனமான இறைநம்பிக்கையாளரை விடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். (ஆயினும்) அவர்கள் இருவரிடமும் நலம் உள்ளது. உனக்குப் பயனளிக்கும் காரியங்களைச் செய்வதில் நீ பேரார்வம் கொள். அல்லாஹ்விடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே (சோம்பல் கொள்ளாதே)! உனக்கு ஏதேனும் (துன்பம் அல்லது இழப்பு) நேர்ந்தால், 'நான் (இப்படிச் செய்யாமல்) அப்படிச் செய்திருந்தால், அவ்வாறு அவ்வாறு ஆகியிருக்குமே' என்று சொல்லாதே. மாறாக, 'கதருல்லாஹி வமா ஷாஅ ஃபஅல' (இது அல்லாஹ்வின் விதி; அவன் நாடியதைச் செய்தான்) என்று சொல். ஏனெனில், 'அப்படி' (என்று தொடங்கும் 'லவ்' எனும் வார்த்தையான)து ஷைத்தானின் (ஊசலாட்டம் போன்ற தீய) செயல்களுக்கு வழியைத் திறந்துவிடும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ أَبِي مُسْلِمٍ الْجَرْمِيُّ، قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ حُسَيْنٍ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَا يَقُولَنَّ أَحَدُكُمْ: زَرَعْتُ، وَلَكِنْ لِيَقُلْ: حَرَثْتُ» قَالَ أَبُو هُرَيْرَةَ: «أَلَمْ تَسْمَعْ إِلَى قَوْلِ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى: {أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ أَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ} »
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் எவரும் 'நான் (பயிரை) விளைவித்தேன்' என்று (நிச்சயமாகக்) கூற வேண்டாம். மாறாக, 'நான் (நிலத்தை உழுது) பயிரிட்டேன்' என்று கூறட்டும்."

(இதைக் குறிப்பிட்டுவிட்டு) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கேட்டார்கள்: "பாக்கியமும் உயர்வும் மிக்க அல்லாஹ்வின் பின்வரும் கூற்றை நீங்கள் செவியுறவில்லையா?

'{அஃபரஅய்தும் மா தஹ்ருஸூன். அஅன்தும் தஸ்ரஊனஹு அம் நஹ்னுஸ் ஸாரிஊன்}'
(நீங்கள் பயிரிடுவதைக் கவனித்தீர்களா? அதனை நீங்கள் (உண்மையில்) விளைவிக்கிறீர்களா? அல்லது நாம் (அல்லாஹ்வாகிய நாமே அதனை) விளைவிக்கிறோமா?)."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّغُولِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ الْفِرْيَابِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَا يَقُولَنَّ أَحَدُكُمْ: خَبُثَتْ نَفْسِي، وَلَكِنْ لِيَقُلْ: لَقِسَتْ»
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"உங்களில் எவரும் 'எனது உள்ளம் அசுத்தமாகிவிட்டது' (خَبُثَتْ نَفْسِي - கபுஸத் நஃப்ஸீ) என்று கூற வேண்டாம். மாறாக, 'எனது உள்ளம் சஞ்சலமடைகிறது' (لَقِسَتْ - லகிஸத்) என்று கூறட்டும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ الْحَافِظُ، بِتُسْتَرَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ بَحْرِ بْنِ الْبَرِّيِّ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: §رَأَى رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّوْمِ أَنَّهُ لَقِيَ قَوْمًا مِنَ الْيَهُودِ، فَأَعْجَبَتْهُ هَيْئَتُهُمْ، فَقَالَ: إِنَّكُمْ لَقَوْمٌ، لَوْلَا أَنَّكُمْ تَقُولُونَ: عُزَيْرٌ ابْنُ اللَّهِ، فَقَالُوا: وَأَنْتُمْ قَوْمٌ، لَوْلَا أَنَّكُمْ تَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ وَشَاءَ مُحَمَّدٌ، قَالَ: وَلَقِيَ قَوْمًا مِنَ النَّصَارَى، فَأَعْجَبَتْهُ هَيْئَتُهُمْ، فَقَالَ: إِنَّكُمْ قَوْمٌ، لَوْلَا أَنَّكُمْ تَقُولُونَ: الْمَسِيحُ ابْنُ اللَّهِ، فَقَالُوا: وَأَنْتُمْ قَوْمٌ، لَوْلَا أَنَّكُمْ تَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ وَشَاءَ مُحَمَّدٌ، فَلَمَّا أَصْبَحَ قَصَّ ذَلِكَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُنْتُ أَسْمَعُهَا مِنْكُمْ فَتُؤْذُونَنِي، فَلَا تَقُولُوا: مَا شَاءَ اللَّهُ وَشَاءَ مُحَمَّدٌ»
ஜாபிர் பின் சமுரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் தமது கனவில் யூதர்களின் ஒரு கூட்டத்தினரைச் சந்தித்ததாகக் கண்டார். அவர்களது தோற்றம் (மற்றும் நிலை) அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் (அவர்களிடம்), "நீங்கள் 'உஸைர் அல்லாஹ்வின் மகன்' என்று மட்டும் கூறாமல் இருந்திருந்தால், நீங்கள் (சிறந்த) ஒரு சமுதாயத்தினராக இருந்திருப்பீர்கள்" என்று கூறினார். அதற்கு அவர்கள், "நீங்களும் (சிறந்த) ஒரு சமுதாயத்தினர்தான்; 'அல்லாஹ் நாடியதும் முஹம்மத் நாடியதும் (நடைபெறும்)' என்று மட்டும் நீங்கள் கூறாமல் இருந்திருந்தால்!" என்று (பதிலுக்குக்) கூறினர்.

பின்னர் அவர் கிறிஸ்தவர்களின் ஒரு கூட்டத்தினரைச் சந்தித்தார். அவர்களது தோற்றமும் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் (அவர்களிடம்), "நீங்கள் 'மஸீஹ் (ஈஸா) அல்லாஹ்வின் மகன்' என்று மட்டும் கூறாமல் இருந்திருந்தால், நீங்கள் (சிறந்த) ஒரு சமுதாயத்தினராக இருந்திருப்பீர்கள்" என்று கூறினார். அதற்கு அவர்கள், "நீங்களும் (சிறந்த) ஒரு சமுதாயத்தினர்தான்; 'அல்லாஹ் நாடியதும் முஹம்மத் நாடியதும் (நடைபெறும்)' என்று மட்டும் நீங்கள் கூறாமல் இருந்திருந்தால்!" என்று (பதிலுக்குக்) கூறினர்.

அவர் காலையில் விழித்தெழுந்ததும், இதனை நபி (ஸல்) அவர்களிடம் விவரித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இதனைக் கூறுவதை நான் (உங்களிடமிருந்து) செவியுற்று வந்தேன்; (இதன் மூலம்) நீங்கள் எனக்கு நோவினை தந்து கொண்டிருந்தீர்கள். எனவே, இனிமேல் 'அல்லாஹ் நாடியதும் முஹம்மத் நாடியதும்' என்று கூறாதீர்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُكْرَمِ بْنِ خَالِدٍ الْبِرْتِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ، قَالَ: قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، الرَّجُلُ مِنْ قَوْمِي يَشْتُمُنِي وَهُوَ دُونِي، أَفَأَنْتَقِمُ مِنْهُ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «الْمُسْتَبَّانِ شَيْطَانَانِ يَتَهَاتَرَانِ وَيَتَكَاذَبَانِ»
இயாள் பின் ஹிமார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான், "அல்லாஹ்வின் நபியே! என் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் என்னை ஏசுகிறார்; அவரோ (அந்தஸ்தில்) என்னைவிடக் கீழானவர். நான் (அவர் செய்த அதே முறையில்) அவரைப் பழிவாங்கலாமா?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஒருவரையொருவர் ஏசிக்கொள்ளும் இருவரும் (அந்த நேரத்தில்) இரண்டு ஷைத்தான்கள் ஆவர். அவர்கள் ஒருவரையொருவர் தரக்குறைவாகப் பேசிக்கொள்வார்கள்; மேலும் ஒருவரையொருவர் குறித்துப் பொய் சொல்லிக் கொள்வார்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، الرَّجُلُ يَشْتُمُنِي مِنْ قَوْمِي وَهُوَ دُونِي، أَعَلَيَّ مِنْ بَأْسٍ أَنْ أَنْتَصِرَ مِنْهُ؟ قَالَ: § «الْمُسْتَبَّانِ شَيْطَانَانِ يَتَهَاتَرَانِ وَيَتَكَاذَبَانِ»
இயாத் பின் ஹிமார் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான், "அல்லாஹ்வின் தூதரே! என் சமுதாயத்தைச் சேர்ந்த, என்னை விட (அந்தஸ்தில்) கீழான ஒருவன் என்னைத் திட்டுகிறான். நான் அவனுக்குப் பதிலடி கொடுப்பதில் (பழிவாங்குவதில்) என் மீது ஏதேனும் குற்றமுண்டா?" என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளும் இருவரும் (செயலால்) இரண்டு ஷைத்தான்கள் ஆவர். அவர்கள் ஒருவருக்கொருவர் (வீணானவற்றைப் பேசி) அவதூறு பேசிக்கொள்கிறார்கள்; மேலும் (பரஸ்பரம்) பொய் சொல்லிக் கொள்கிறார்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «الْمُسْتَبَّانِ مَا قَالَا، فَعَلَى الْبَادِئِ مِنْهُمَا مَا لَمْ يَعْتَدِ الْمَظْلُومُ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"இருவர் ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளும்போது, (அவ்விருவரும்) கூறும் (வசைகளுக்கான பாவம்) அவ்விருவரில் (அதைத்) தொடங்கி வைத்தவரையே சாரும்; அநீதியிழைக்கப்பட்டவர் (பதிலடி கொடுப்பதில்) வரம்பு மீறாதவரை."
ஹதீஸ் தரம் : இதன் அறிவிப்பாளர் தொடர் நம்பகமானது
إسناده حسن
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ §الْمُسْتَبَّيْنَ مَا قَالَا، فَهُوَ عَلَى الْبَادِئِ مَا لَمْ يَعْتَدِ الْمَظْلُومُ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"இருவர் ஒருவரையொருவர் திட்டிக் கொள்ளும்போது, (அவர்கள் இருவரும்) சொல்லும் (வசைகளுக்கான பாவம்) முதலில் (திட்ட) ஆரம்பித்தவர் மீதே சாரும்; அநீதியிழைக்கப்பட்டவர் (பதிலடி கொடுப்பதில்) வரம்பு மீறாதவரை" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : நம்பகமானது
حسن
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْمَرْوَزِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ أَنَسُ بْنُ عِيَاضٍ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: §أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَارِبٍ، فَقَالَ: «اضْرِبُوهُ»، فَمِنَّا الضَّارِبُ بِيَدِهِ، وَمِنَّا الضَّارِبُ بِنَعْلِهِ، فَقَالَ بَعْضُ الْقَوْمِ: أَخْزَاكَ اللَّهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُولُوا هَكَذَا، لَا تُعِينُوا الشَّيْطَانَ عَلَيْهِ»
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(மது) அருந்திய ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது அவர்கள், "இவரை அடியுங்கள்" என்று கூறினார்கள். எங்களில் சிலர் அவரைத் தம் கைகளால் அடித்தனர்; மற்றும் சிலர் தம் காலணிகளால் அடித்தனர். அப்போது கூட்டத்தாரில் சிலர் (அந்த மனிதரைப் பார்த்து), "அல்லாஹ் உன்னை இழிவுபடுத்துவானாக!" என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவ்வாறு கூறாதீர்கள்; அவனுக்கு எதிராக ஷைத்தானுக்கு நீங்கள் உதவி செய்யாதீர்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَا تَسُبُّوا الدِّيكَ، فَإِنَّهُ يَدْعُو إِلَى الصَّلَاةِ»
ஸைத் பின் காலித் அல்-ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"சேவலைத் திட்டாதீர்கள்; ஏனெனில், அது (அதிகாலை நேரத்தில் கூவுவதன் மூலம்) தொழுகைக்கு அழைக்கிறது."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي الزُهْرِيُّ، قَالَ: أَخْبَرَنِي ثَابِتٌ الزُّرَقِيُّ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ §الرِّيحَ مِنْ رَوْحِ اللَّهِ، تَأْتِي بِالرَّحْمَةِ، وَتَأْتِي بِالْعَذَابِ، فَلَا تَسُبُّوهَا، وَسَلُوا اللَّهَ مِنْ خَيْرِهَا، وَاسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ شَرِّهَا»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்:

"நிச்சயமாகக் காற்று அல்லாஹ்வின் அருளிலிருந்து (உருவானது/உள்ளதாகும்). அது (சில நேரங்களில்) அருளையும் கொண்டு வரும்; (சில நேரங்களில்) வேதனையையும் கொண்டு வரும். எனவே, நீங்கள் அதைத் திட்டாதீர்கள். (மாறாக) அதிலுள்ள நன்மையை அல்லாஹ்விடம் கேளுங்கள்; அதன் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
بَابُ الْكَذِبِ
பொய் பற்றிய பாடம்
حَدَّثَنَا أَبُو حَاتِمٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أُمِّهِ أُمِّ كُلْثُومَ بِنْتِ عُقْبَةَ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ فَيُنْمِي خَيْرًا، أَوْ يَقُولُ خَيْرًا»
உம்மு குல்ஸூம் பின்த் உக்பா (ரலி) அவர்கள் (கூறியதாக) அறிவிக்கிறார்கள்:

"மக்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்பவர் பொய்யர் அல்லர்; (சமாதானத்திற்காக) அவர் நல்லதையே எடுத்துரைப்பார் (வளர்த்துச் சொல்வார்) அல்லது நல்லதையே கூறுவார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالَقَانِيُّ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ خُمَيْرٍ، قَالَ: سَمِعْتُ سُلَيْمَ بْنَ عَامِرٍ، يُحَدِّثُ عَنْ أَوْسَطَ بْنِ إِسْمَاعِيلَ، قَالَ: سَمِعْتُ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «عَلَيْكُمْ بِالصِّدْقِ، فَإِنَّهُ مَعَ الْبِرِّ وَهُمَا فِي الْجَنَّةِ، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ، فَإِنَّهُ مَعَ الْفُجُورِ، وَهُمَا فِي النَّارِ»
அபூபக்கர் அஸ்-ஸித்தீக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் உண்மையையே (உறுதியாகப்) பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! ஏனெனில், நிச்சயமாக அது நன்மையுடன் இணைந்திருக்கிறது; அவை இரண்டும் சொர்க்கத்தில் (கொண்டு போய் சேர்க்கும்). மேலும், நீங்கள் பொய்யைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில், நிச்சயமாக அது தீமையுடன் (பாவத்துடன்) இணைந்திருக்கிறது; அவை இரண்டும் நரகத்தில் (கொண்டு போய் சேர்க்கும்)."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا زِيَادُ بْنُ الْمُنْذِرِ، عَنْ نَافِعِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي بَرْزَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «أَلَا إِنَّ الْكَذِبَ يُسَوِّدُ الْوَجْهَ، وَالنَّمِيمَةَ مِنْ عَذَابِ الْقَبْرِ»
அபூ பர்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக, பொய் (சொல்வது ஒருவரது) முகத்தைக் கருமையாக்கிவிடும். மேலும், கோள் சொல்வது மண்ணறை (கப்ரு) வேதனைக்கு (உரிய காரணங்களில் ஒன்றா)கும்."
ஹதீஸ் தரம் : இட்டுக் கட்டப்பட்ட செய்தி
موضوع
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ زَنْجُوَيْهِ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: § «مَا كَانَ خُلُقٌ أَبْغَضَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْكَذِبِ، وَلَقَدْ كَانَ الرَّجُلُ يَكْذِبُ عِنْدَهُ الْكَذْبَةَ فَمَا تَزَالُ فِي نَفْسِهِ، حَتَّى يَعْلَمَ أَنَّهُ قَدْ أَحْدَثَ مِنْهَا تَوْبَةً»
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பொய்யை விட மிகவும் வெறுப்பான குணம் வேறெதுவும் இருந்ததில்லை. ஒருவர் அவர்களிடம் ஒரு பொய் பேசிவிட்டால், அவர் அதற்காகத் தவ்பாச் செய்துவிட்டார் (பாவமன்னிப்புத் தேடிவிட்டார்) என்பதை அறியும் வரை, (அவர் மீதான அதிருப்தி) நபியவர்களின் மனதில் இருந்துகொண்டே இருக்கும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «لَمْ يَكْذِبْ إِبْرَاهِيمُ قَطُّ إِلَّا ثَلَاثًا، اثْنَتَيْنِ فِي ذَاتِ اللَّهِ: قَوْلُهُ {إِنِّي سَقِيمٌ} ، وَقَوْلُهُ: {بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا} ، قَالَ: وَمَرَّ عَلَى جَبَّارٍ مِنَ الْجَبَابِرَةِ وَمَعَهُ امْرَأَتُهُ سَارَةُ، فَقِيلَ لَهُ إِنَّ رَجُلًا هَاهُنَا مَعَهُ امْرَأَةٌ مِنْ أَحْسَنِ النَّاسِ، قَالَ: فَأَرْسَلَ إِلَيْهِ فَأَتَاهُ، فَدَخَلَ عَلَيْهِ فَسَأَلَهُ، فَقَالَ: هَذِهِ أُخْتِي، قَالَ: فَأَتَاهَا، فَقَالَ لَهَا: إِنَّ هَذَا قَدْ سَأَلَنِي عَنْكِ، وَإِنِّي أَنْبَأْتُهُ أَنَّكِ أُخْتِي، وَإِنَّكَ أُخْتِي فِي كِتَابِ اللَّهِ، فَلَا تُكَذِّبِينِي، قَالَ: فَلَمَّا رَآهَا ذَهَبَ لِيَأْتِيَهَا، فَدَعَتِ اللَّهَ فَأُخِذَ، فَقَالَ: ادْعِي اللَّهَ لِي، وَلَكِ عَلَيَّ أَنْ لَا أَعُودَ، فَدَعَتْ لَهُ، ثُمَّ ذَهَبَ لِيَأْتِيَهَا، فَدَعَتْ فَأُخِذَ أَخْذَةً هِيَ أَشَدُّ مِنَ الْأُولَى، فَقَالَ: ادْعِي اللَّهَ لِي، وَلَكِ عَلَيَّ أَنْ لَا أَعُودَ، فَدَعَتْ لَهُ، فَذَهَبَ لِيَأْتِيَهَا، فَدَعَتْ فَأُخِذَ أَخْذَةً هِيَ أَشَدُّ مِنَ الْأُولَيَيْنِ، فَقَالَ: ادْعِي اللَّهَ لِي، وَلَكِ عَلَيَّ أَنْ لَا أَعُودَ، فَدَعَتْ لَهُ، فَأُرْسِلَ، فَقَالَ لِأَدْنَى حَجَبَتِهِ عِنْدَهُ: إِنَّكَ لَمْ تَأْتِنِي بِإِنْسَانٍ، إِنَّمَا أَتَيْتَنِي بِشَيْطَانٍ، وَأَخْدَمَهَا هَاجَرَ، فَلَمَّا رَآهَا إِبْرَاهِيمُ قَالَ: مَهْيَمْ، قَالَتْ: كَفَى اللَّهُ كَيَدَ الْكَافِرِ الْفَاجِرِ، وَأَخْدَمَهَا هَاجَرَ»، قَالَ: فَكَانَ أَبُو هُرَيْرَةَ إِذَا حَدَّثَ بِهَذَا الْحَدِيثِ قَالَ: تِلْكَ أُمُّكُمْ يَا بَنِي مَاءِ السَّمَاءِ قَالَ: وَمَدَّ النَّضْرُ صَوْتَهُ «
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று முறை தவிர வேறெப்போதும் பொய் சொன்னதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் விஷயத்தில் (மார்க்கத்திற்காகச்) சொல்லப்பட்டவையாகும்: 1. ‘இன்னீ சகீம்’ (நிச்சயமாக நான் நோயுற்றுள்ளேன்) என்று அவர்கள் (தமது சமூகத்தாரின் திருவிழாவிற்குச் செல்வதைத் தவிர்க்கக்) கூறியது. 2. ‘பல் ஃபஅலஹு கபீருஹும் ஹாஸா’ (இல்லை; அந்தச் சிலைகளில் பெரிய சிலையான இதுதான் அக்காரியத்தைச் செய்தது) என்று அவர்கள் (சிலைகளை உடைத்தது யார் என்று கேட்கப்பட்டபோது) கூறியது.

(மூன்றாவது:) இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மனைவி சாரா (அலை) அவர்களுடன் (பயணம் செய்தபோது) ஒரு கொடுங்கோல் அரசனை(க் கடந்து செல்ல நேரிட்டது). அப்போது அந்த அரசனிடம், “இங்கு ஒரு மனிதன் வந்திருக்கிறான்; அவனுடன் மக்களிலேயே மிகவும் அழகான ஒரு பெண் இருக்கிறாள்” என்று சொல்லப்பட்டது.

அரசன் இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்துவர ஆளனுப்பினான். அவர்கள் வந்ததும் அரசன் (சாராவைப் பற்றி) விசாரித்தான். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், “(இவள்) என் சகோதரி” (அதாவது மார்க்கச் சகோதரி) என்று கூறினார்கள்.

பிறகு சாராவிடம் வந்த இப்ராஹீம் (அலை) அவர்கள், “இவன் உன்னைப் பற்றி என்னிடம் விசாரித்தான்; நான் அவனிடம் நீ என் சகோதரி என்று சொல்லியிருக்கிறேன். அல்லாஹ்வின் வேதத்தின்படி நீ என் (மார்க்கச்) சகோதரியாகவே இருக்கிறாய். எனவே, (அவனிடம் நான் சொன்னதை மாற்றிச் சொல்லி) என்னை நீ பொய்யனாக்கி விடாதே!” என்று கூறினார்கள்.

அரசன் சாராவைக் கண்டதும் (தீய எண்ணத்துடன்) அவரைத் தொட முற்பட்டான். அப்போது சாரா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். உடனே அந்த அரசன் (அசைக்க முடியாமல் மூச்சுத் திணறிப்) பிடிபட்டுப் போனான். அப்போது அவன், “எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். இனி நான் உனக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்” என்றான். சாரா (அலை) அவர்கள் அவனுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

அவன் மீண்டும் அவரைத் தொட முற்பட்டான். அவர்கள் பிரார்த்திக்க, அவன் முதல் முறையை விடக் கடுமையாகப் பிடிக்கப்பட்டான். அவன், “எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். இனி நான் உனக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்” என்றான். அவர்கள் பிரார்த்திக்க, அவன் மீண்டான்.

மீண்டும் (மூன்றாம் முறை) அவரைத் தொட முற்பட்டான். அவர்கள் பிரார்த்திக்க, முந்தைய இரண்டு முறைகளை விடவும் மிகக் கடுமையாகப் பிடிக்கப்பட்டான். அவன், “எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். இனி நான் உனக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்” என்றான். சாரா (அலை) அவர்கள் அவனுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்; அவன் விடுவிக்கப்பட்டான்.

பின்னர் அரசன் தன் நெருக்கமான காவலாளியிடம், “நீ என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானையே என்னிடம் கொண்டு வந்திருக்கிறாய்” என்று கூறிவிட்டு, ஹாஜரை (சாராவுக்குப்) பணியாளாக அளித்தான்.

சாரா (அலை) அவர்கள் (திரும்பி) வந்ததைக் கண்ட இப்ராஹீம் (அலை) அவர்கள், “என்ன நடந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அந்தப் பாவியான நிராகரிப்பவனின் சதியை அல்லாஹ் முறியடித்துவிட்டான்; மேலும், ஹாஜரைப் பணியாளாகவும் அவன் தந்துள்ளான்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கும்போதெல்லாம் அபூஹுரைரா (ரலி) அவர்கள் (அரபிகளைப் பார்த்து), “வானத்து நீரின் மக்களே! (அதாவது மழையை நம்பி வாழும் அரபிகளே!) அவர் (ஹாஜர்) தான் உங்கள் தாயார்” என்று கூறுவார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான அந்நள்ரு என்பவர், இதைக் கூறும்போது தமது குரலை நீட்டி ஒலிப்பார்).
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، قَالَتْ: أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةٌ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِيَ ضَرَّةً، فَهَلْ عَلَيَّ جُنَاحٌ أَنْ أَتَشَبَّعَ مِنْ زَوْجِي، مَا لَمْ يُعْطِنِي؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «الْمُتَشَبِّعُ بِمَا لَمْ يُعْطَ كَلَابِسِ ثَوْبَيْ زُورٍ»
அஸ்மா பின்த் அபீபக்கர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு சக்களத்தி (சக மனைவி) இருக்கிறாள். என் கணவர் எனக்குக் கொடுக்காத ஒன்றைக் (கொடுத்ததாகக் கூறி அவளிடம்) நான் பெருமையடித்துக் கொண்டால், என் மீது ஏதேனும் குற்றம் உள்ளதா?" என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தனக்குக் கொடுக்கப்படாத ஒன்றைக் கொடுக்கப்பட்டதாகப் பெருமையடித்துக் கொள்பவர், இரண்டு பொய் ஆடைகளை அணிந்தவரைப் போன்றவர் ஆவார்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، قَالَ: حَدَّثَنَا الطُّفَاوِيُّ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، قَالَتْ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِيَ ضَرَّةً، فَهَلْ عَلَيَّ جُنَاحٌ إِنِ اسْتَكْثَرْتُ مِنْ زَوْجِي بِمَا لَمْ يُعْطِنِي؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «إِنَّ الْمُتَشَبِّعُ بِمَا لَمْ يُعْطَ كَلَابِسِ ثَوْبَيْ زُورٍ»
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரழி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு சக்களத்தி (சக மனைவி) இருக்கிறாள். என் கணவர் எனக்குக் கொடுக்காத ஒன்றை (அவர் எனக்குக் கொடுத்ததாக) அவரிடம் நான் அதிகமாகக் காட்டிக் கொண்டால் (பெருமை பாராட்டினால்) என் மீது குற்றம் ஆகுமா?" என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தனக்குக் கொடுக்கப்படாத ஒன்றைக் கொடுக்கப்பட்டதாகக் (காட்டித் திருப்தியடைபவர்), பொய்த் தோற்றமளிக்கும் (மோசடியான) இரு ஆடைகளை அணிந்தவரைப் போன்றவர் ஆவார்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
بَابُ اللَّعْنِ
சாபமிடுதல் பற்றிய பாடம்
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو قِلَابَةَ، عَنْ عَمِّهِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: §بَيْنَمَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، وَامْرَأَةٌ عَلَى نَاقَةٍ لَهَا، فَضَجرَتْ فَلَعَنَتْهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذُوا مَتَاعَكُمْ عَنْهَا، وَأَرْسِلُوهَا، فَإِنَّهَا مَلْعُونَةٌ» قَالَ: فَفَعَلُوا، فَكَأَنِّي أَنْظُرُ إِلَيْهَا نَاقَةً وَرْقَاءَ.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் (சென்று) கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் தனது ஒட்டகத்தின் மீது (அமர்ந்து) இருந்தார். அவர் (அந்த ஒட்டகத்தின் மெதுவான நடையினால்) சலிப்படைந்து அதனைச் சபித்தார். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதன் மீதுள்ள உங்களின் பொருட்களை (மூட்டை முடிச்சுகளை) எடுத்துவிட்டு, அதனை (அவிழ்த்துத் தனியாக) விட்டுவிடுங்கள். ஏனெனில், அது (சபிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு) சபிக்கப்பட்டுவிட்டது" என்று கூறினார்கள்.

(அவ்வாறே அவர்கள் செய்தார்கள்.) அந்தச் சாம்பல் நிற (மங்கலான கருமை கலந்த வெண்மை நிற) ஒட்டகத்தை (மக்கள் மத்தியில் எவ்விதத் தடையுமின்றித் திரிவதை) நான் இப்போதும் பார்ப்பது போல் இருக்கிறது.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: §بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ إِذْ سَمِعَ لَعْنَةً، فَقَالَ: «مَنْ هَذَا»؟ فَقِيلَ: هَذِهِ فُلَانَةٌ لَعَنَتْ رَاحِلَتَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ضَعُوا عَنْهَا، فَإِنَّهَا مَلْعُونَةٌ»، قَالَ: فَوُضِعَ عَنْهَا قَالَ عِمْرَانُ: «فَكَأَنِّي أَنْظُرُ إِلَيْهَا نَاقَةً وَرْقَاءَ»
இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது) சில பயணங்களில் ஒன்றில் இருந்தபோது, ஒரு சாப (வார்த்தையை)க் கேட்டார்கள். அப்போது, "இது யார்?" என்று கேட்டார்கள். அதற்கு, "இது இன்ன பெண்மணி, (அவர்) தனது வாகனத்தைச் சபிக்கிறார்" என்று கூறப்பட்டது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதன் மீதிருந்து (சுமைகளை) இறக்கிவிடுங்கள்; ஏனெனில், அது சபிக்கப்பட்டதாகும்" என்று கூறினார்கள். (அவ்வாறே) அதிலிருந்து (சுமைகள்) இறக்கிவைக்கப்பட்டன.

"அது ஒரு சாம்பல் நிறப் பெண் ஒட்டகம் (என்பதை) இப்போதும் நான் (என் கண்முன்) பார்ப்பதைப் போன்றுள்ளது" என்று இம்ரான் (ரழி) அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ مُجَاهِدٍ أَبُو حَزْرَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَطْلُبُ الْمَجْدِيَّ بْنَ عَمْرٍو الْجُهَنِيَّ، وَكَانَ النَّاضِحُ يَعْتَقِبُهُ مِنَّا الْخَمْسَةُ، وَالسِّتَّةُ وَالسَّبْعَةُ، فَدَنَا عُقْبَةُ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ عَلَى نَاضِحٍ لَهُ، فَأَنَاخَهُ فَرَكِبَهُ، ثُمَّ بَعَثَهُ، فَتَلَدَّنَ عَلَيْهِ بَعْضَ التَّلَدُّنِ، فَقَالَ: شَأْ لَعَنَكَ اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ هَذَا اللَّاعِنُ بَعِيرَهُ»؟ قَالَ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «انْزِلْ عَنْهُ، فَلَا تَصْحَبْنَا بِمَلْعُونٍ، §لَا تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ، وَلَا تَدْعُوا عَلَى أَوْلَادِكُمْ، وَلَا تَدْعُوا عَلَى أَمْوَالِكُمْ، لَا تُوَافِقُوا مِنَ السَّاعَةِ فَيَسْتَجِيبَ لَكُمْ»
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஜ்தீ பின் அம்ர் அல்-ஜுஹனியைத் தேடிப் புறப்பட்டோம். (அப்போது வாகனப் பற்றாக்குறையினால்) எங்களில் ஐவர், அறுவர் மற்றும் எழுவர் என ஓர் ஒட்டகத்தில் முறை வைத்துச் சவாரி செய்து வந்தோம். அன்சாரிகளில் ஒருவருக்கு அவருக்குரிய ஒட்டகத்தில் சவாரி செய்யும் முறை வந்தது. அவர் அதனை மண்டியிடச் செய்து, அதன் மீது ஏறி, பின்னர் அதனை எழுப்பினார். ஆனால் அது (எழாமல்) சற்று அடம் பிடித்தது. உடனே அவர் (அதனை அதட்டி), "சக்! (நட), அல்லாஹ் உன்னைச் சபிப்பானாக!" என்றார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தம் ஒட்டகத்தைச் சபித்தவர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் தான்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "அதிலிருந்து கீழே இறங்கு. சபிக்கப்பட்ட ஒன்றோடு நீ எங்களுடன் பயணிக்கக் கூடாது" என்று கூறிவிட்டு, (பின்வருமாறு) அறிவுறுத்தினார்கள்:

"உங்களுக்கு நீங்களே (தீமை வேண்டிப்) பிரார்த்திக்காதீர்கள்! உங்கள் குழந்தைகளுக்கும் (தீமை வேண்டிப்) பிரார்த்திக்காதீர்கள்! உங்கள் செல்வங்களுக்கு எதிராகவும் (தீமை வேண்டிப்) பிரார்த்திக்காதீர்கள்! (ஏனெனில்,) நீங்கள் கேட்கும் நேரம் அல்லாஹ்விடம் பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரமாக அமைந்து, அவன் உங்களின் அந்தப் பிரார்த்தனையை ஏற்று (உங்களுக்குத் தீமை விளைவித்து) விடக் கூடாது!"
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي بَرْزَةَ، أَنَّ جَارِيَةً، بَيْنَا هِيَ عَلَى بَعِيرٍ أَوْ رَاحِلَةٍ عَلَيْهَا مَتَاعُ الْقَوْمِ بَيْنَ جَبَلَيْنِ، فَتَضَايَقَ بِهَا الْجَبَلُ، وأَتَى عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا أَبْصَرَتْهُ جَعَلَتْ تَقُولُ: §حَلْ، اللَّهُمَّ الْعَنْهُ، اللَّهُمَّ الْعَنْهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَصْحَبْنَا رَاحِلَةٌ عَلَيْهَا لَعْنَةٌ مِنَ اللَّهِ»
அபூ பர்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு சிறுமி (அல்லது பணிப்பெண்), மக்களின் பொருட்களைச் சுமந்து சென்ற ஓர் ஒட்டகத்தின் மீதோ அல்லது ஒரு வாகனத்தின் மீதோ இரு மலைகளுக்கு இடையே (பயணித்துக்) கொண்டிருந்தாள். அப்போது (மலைகளுக்கிடையேயான அந்தப் பாதை) அவளுக்கு நெருக்கடியானது. (அந்நேரத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளைக் கடந்து வந்தார்கள். அவர்களைக் கண்டதும் அவள் (தன் வாகனத்தை விரைவாகச் செலுத்துவதற்காக), "ஹல் (நட), யா அல்லாஹ்! இதைச் சபிப்பாயாக! யா அல்லாஹ்! இதைச் சபிப்பாயாக!" என்று கூறலானாள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் சாபத்திற்குள்ளான வாகனம் நம்முடன் பயணிக்கக் கூடாது" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ، أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَضْحًى، أَوْ فِطْرٍ إِلَى الْمُصَلَّى، فَصَلَّى ثُمَّ انْصَرَفَ، فَقَامَ، فَوَعَظَ النَّاسَ وَأَمَرَهُمْ بِالصَّدَقَةِ، قَالَ: «أَيُّهَا النَّاسُ، تَصَدَّقُوا»، ثُمَّ انْصَرَفَ، فَمَرَّ عَلَى النِّسَاءِ فَقَالَ: «يَا §مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ، فَإِنِّي أَرَاكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ»، فَقُلْنَ: وَلِمَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «تُكْثِرْنَ اللَّعْنَ، وَتَكْفُرْنَ الْعَشِيرَ، مَا رَأَيْتُ مِنَ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الْحَازِمِ مِنْ إِحْدَاكُنَّ، يَا مَعْشَرَ النِّسَاءِ»، فَقُلْنَ لَهُ: مَا نُقْصَانُ دِينِنَا وَعَقْلِنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَلَيْسَ شَهَادَةُ الْمَرْأَةِ مِثْلَ نِصْفِ شَهَادَةِ الرَّجُلِ»؟ قُلْنَ: بَلَى، قَالَ: «فَذَاكَ نُقْصَانُ عَقْلِهَا، أَوَ لَيْسَتْ إِذَا حَاضَتِ الْمَرْأَةُ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ»؟ قُلْنَ: بَلَى، قَالَ: «فَذَاكَ نُقْصَانُ دِينِهَا» ثُمَّ انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا صَارَ إِلَى مَنْزِلِهِ جَاءَتْ زَيْنَبُ امْرَأَةُ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ تَسْتَأْذِنُ عَلَيْهِ، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، هَذِهِ زَيْنَبُ تَسْتَأْذِنُ عَلَيْكَ، فَقَالَ: «أَيُّ الزَّيَانِبِ»؟ قِيلَ: امْرَأَةُ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: «نَعَمْ، ائْذَنُوا لَهَا»، فَأُذِنَ لَهَا، فَقَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّكَ أَمَرْتَنَا الْيَوْمَ بِالصَّدَقَةِ، وَكَانَ عِنْدِي حُلِيٌّ، فَأَرَدْتُ أَنْ أَتَصَدَّقَ، فَزَعَمَ ابْنُ مَسْعُودٍ أَنَّهُ وَوَلَدَهُ أَحَقُّ مَنْ تَصَدَّقَتْ بِهِ عَلَيْهِمْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَدَقَ.
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஈதுல் அத்ஹா (ஹஜ் பெருநாள்) அல்லது ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) அன்று 'முஸல்லா'வுக்கு (திறந்தவெளித் தொழுகைத் திடலுக்கு) புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு அவர்கள் தொழுது முடித்த பின், (மக்களை நோக்கித் திரும்பி) நின்று, அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்; மேலும், தர்மம் (ஸதகா) செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

"மக்களே! தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். பின்னர் அங்கிருந்து (ஆண்கள் பகுதியைத் தாண்டி) நகர்ந்து சென்று, பெண்களைக் கடந்து சென்றபோது, "பெண்கள் கூட்டமே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை (விண்ணுலகப் பயணத்தின் போது) நான் கண்டேன்" என்று கூறினார்கள்.

அதற்கு அப்பெண்கள், "அதற்குக் காரணம் என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், "நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; மேலும், கணவனுக்கு (அவர் செய்யும் நன்மைகளுக்கு) நன்றி கெட்டவர்களாக நடந்துகொள்கிறீர்கள். அறிவிலும் (சாட்சியம் அளிப்பதில்) மார்க்கத்திலும் (வணக்க வழிபாடுகளில்) குறைபாடுடையவர்களில், உங்களில் ஒருத்தியைப் போன்று தீர்க்கமான சிந்தனையுடைய ஒரு ஆணின் புத்தியைப் பேதலிக்கச் செய்யக்கூடிய வேறு எவரையும் நான் கண்டதில்லை, பெண்களே!" என்று கூறினார்கள்.

அப்பெண்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் மார்க்கத்திலும் அறிவிலும் உள்ள குறைபாடு என்ன?" என்று கேட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஒரு பெண்ணின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்தில் பாதிக்குச் சமமானதல்லவா?" என்று கேட்டார்கள். பெண்கள் "ஆம்" என்றனர். "அதுவே அவளது அறிவின் குறைபாடாகும் (சட்ட ரீதியான பொறுப்பு குறைவு). ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படும்போது அவள் தொழுவதும் இல்லை, நோன்பு நோற்பதும் இல்லையல்லவா?" என்று கேட்டார்கள். பெண்கள் "ஆம்" என்றனர். "அதுவே அவளது மார்க்கத்தின் குறைபாடாகும் (வணக்கங்களில் ஏற்படும் இடைவெளி)" என்று கூறினார்கள்.

பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கிருந்து) திரும்பித் தமது வீட்டிற்குச் சென்றார்கள். அப்போது, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் வந்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! இதோ ஸைனப் உங்களிடம் அனுமதி கேட்கிறார்" என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், "எந்த ஸைனப்?" என்று கேட்டார்கள். "அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் மனைவி" என்று கூறப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஆம், அவருக்கு அனுமதி அளியுங்கள்" என்று கூறினார்கள்.

அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர் உள்ளே வந்து, "அல்லாஹ்வின் நபியே! இன்று நீங்கள் எங்களைத் தர்மம் செய்யும்படிக் கட்டளையிட்டீர்கள். என்னிடம் சில நகைகள் இருந்தன; அவற்றை நான் தர்மம் செய்துவிட நாடினேன். ஆனால், எனது தர்மத்தைப் பெறுவதற்குத் தானும் தன் குழந்தைகளுமே மிகவும் தகுதியானவர்கள் என்று (எனது கணவர்) இப்னு மஸ்ஊத் கூறுகிறார்" என்றார்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அவர் உண்மையே கூறினார். (உனது தர்மத்தைப் பெறுவதற்கு உனது கணவரும் பிள்ளைகளுமே அதிகத் தகுதியுடையவர்கள்)" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو قُدَامَةَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلًا، لَعَنَ الرِّيحَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَا تَلْعَنِ الرِّيحَ، فَإِنَّهَا مَأْمُورَةٌ، وَلَيْسَ أَحَدٌ يَلْعَنُ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ إِلَّا رَجَعَتْ عَلَيْهِ اللَّعْنَةُ»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர் காற்றைச் சபித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "காற்றைச் சபிக்காதீர்கள்! ஏனெனில், அது (இறைவனால்) கட்டளையிடப்பட்டதாகும். மேலும், எவரேனும் தகுதியற்ற ஒரு பொருளைச் சபித்தால், அந்தச் சாபம் (சபித்த) அவர் மீதே திரும்பி வந்துவிடும்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ مَالِكٍ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، قَالَ: كَانَ عَبْدُ الْمَلِكِ يُرْسِلُ إِلَى أُمِّ الدَّرْدَاءِ، قَالَ: وَرُبَّمَا بَاتَتْ عِنْدَهُ، قَالَ: فَدَعَا عَبْدُ الْمَلِكِ خَادِمًا فَأَبْطَأَ عَلَيْهِ، فَقَالَ: اللَّهُمَّ الْعَنْهُ، فَقَالَتْ: لَا تَلْعَنْهُ، فَإِنِّي سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ §اللَّعَّانَيْنَ لَا يَكُونُونَ شُهَدَاءَ، وَلَا شُفَعَاءَ يَوْمَ الْقِيَامَةِ»
அப்துல் மலிக் (இப்னு மர்வான்) அவர்கள் உம்முத் தர்தா (ரஹ்) அவர்களுக்கு (அழைப்பு விடுத்து) ஆளனுப்புவது வழக்கம். சிலவேளைகளில் உம்முத் தர்தா அவர்கள், அப்துல் மலிக் அவர்களின் இல்லத்தில் தங்குவதும் உண்டு. (ஒருமுறை) அப்துல் மலிக் தமது சேவகர் ஒருவரை அழைத்தார். அவர் (வருவதற்குத்) தாமதமானதால், "யா அல்லாஹ்! இவனைச் சபிப்பாயாக" (அல்லாஹும்ம அல்அன்ஹு) என்று கூறினார்.

அப்போது உம்முத் தர்தா (ரஹ்) அவர்கள், "அவரைச் சபிக்காதீர்கள்; ஏனெனில், அபுத்தர்தா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவிக்க நான் கேட்டுள்ளேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'நிச்சயமாக, (பிறரைச்) சபிப்பவர்கள் மறுமை நாளில் சாட்சிகளாகவோ, பரிந்துரை செய்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்.'"
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §قَالَ فِي صَلَاةِ الْفَجْرِ حِينَ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ: «رَبَّنَا وَلَكَ الْحَمْدُ» فِي الرَّكْعَةِ الْآخِرَةِ، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ الْعَنْ فُلَانًا، وَفُلَانًا»، وَدَعَا عَلَى أُنَاسٍ مِنَ الْمُنَافِقِينَ، فَأَنْزَلَ اللَّهُ جَلَّ وَعَلَا: {لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ}
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தியபோது, "ரப்பனா வலகல் ஹம்து" (எங்கள் இறைவா! புகழனைத்தும் உனக்கே உரியது) என்று கூறியதை நான் செவியுற்றேன். பின்னர் அவர்கள், "அல்லாஹும்மல் அன் ஃபுலானன், வ ஃபுலானன்" (யா அல்லாஹ்! இன்னாரையும், இன்னாரையும் நீ சபிப்பாயாக) என்று கூறி, நயவஞ்சகர்களில் சிலருக்கு எதிராகப் பிரார்த்தனை செய்தார்கள்.

அப்போது கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், "லைஸ லக மினல் அம்ரி ஷைய்உன் அவ் யதூப அலைஹிம் அவ் யுஅத்திபஹும் ஃபஇன்னஹும் லாலிமூன்" [(நபியே! அவர்களை மன்னிப்பது அல்லது தண்டிப்பது ஆகிய) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை; அவன் அவர்களை மன்னிக்கலாம் அல்லது அவர்களைத் தண்டிக்கலாம்; ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள்] (அல்குர்ஆன் 3:128) எனும் வசனத்தை அருளினான்.
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَعَنَ اللَّهُ السَّارِقَ يَسْرِقُ الْبَيْضَةَ فَتُقْطَعُ يَدُهُ، وَيَسْرِقُ الْحَبْلَ فَتُقْطَعُ يَدُهُ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"திருடன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அவன் ஒரு முட்டையைத் திருடுகிறான், (அதன் விளைவாகப் படிப்படியாகப் பெரிய திருட்டுகளில் ஈடுபட்டு இறுதியில்) அவனது கை வெட்டப்படுகிறது; மேலும், அவன் ஒரு கயிற்றைத் திருடுகிறான், (அதன் காரணமாகவும் இறுதியில்) அவனது கை வெட்டப்படுகிறது."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْمَوَالِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَوْهَبٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «سِتَّةٌ لَعَنْتُهُمْ، وَلَعَنَهُمُ اللَّهُ وَكُلُّ نَبِيٍّ مُجَابٌ: الزَّائِدُ فِي كِتَابِ اللَّهِ، وَالْمُكَذِّبُ بِقَدَرِ اللَّهِ، وَالْمُسَلَّطُ بِالْجَبَرُوتِ لِيُذِلَّ بِذَلِكَ مَنْ أَعَزَّ اللَّهُ، وَلِيُعِزَّ بِهِ مَنْ أَذَلَّ اللَّهُ، وَالْمُسْتَحِلُّ لِحَرَمِ اللَّهِ، وَالْمُسْتَحِلُّ مِنْ عِتْرَتِي مَا حَرَّمَ اللَّهُ، وَالتَّارِكُ لِسُنَّتِي»
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஆறு நபர்களை நான் சபிக்கிறேன்; அல்லாஹ்வும் அவர்களைச் சபிக்கிறான், மேலும் (பிரார்த்தனைகள்) ஏற்கப்படும் ஒவ்வொரு நபியும் (அவர்களைச் சபிக்கிறார்கள்). (அவர்கள் யாரெனில்:) அல்லாஹ்வின் வேதத்தில் (இல்லாததை) அதிகரிப்பவர், அல்லாஹ்வின் விதியை (கத்ரை) பொய்யாக்குபவர், அல்லாஹ் கண்ணியப்படுத்தியவரைக் கேவலப்படுத்துவதற்காகவும் அல்லாஹ் கேவலப்படுத்தியவரைக் கண்ணியப்படுத்துவதற்காகவும் சர்வாதிகாரத்துடன் அதிகாரம் செலுத்துபவர், அல்லாஹ்வின் (புனிதமான) எல்லையில் (மக்காவில்) ஹராமாக்கப்பட்டவற்றை ஹலாலாக்குபவர் (அனுமதிக்கப்பட்டதாகக் கருதுபவர்), எனது குடும்பத்தார் (அஹ்லுல் பைத்கள்) விஷயத்தில் அல்லாஹ் ஹராமாக்கியதை (அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதை) ஹலாலாக்குபவர், மற்றும் எனது சுன்னத்தை (வழிமுறையை வேண்டுமென்றே) கைவிட்டவர்."
ஹதீஸ் தரம் : பலவீனமானது
ضعيف
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْعَلَّافُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ § «لَعَنَ الْمُذَكَّرَاتِ مِنَ النِّسَاءِ، وَالْمُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ»
ஆண்களைப் போன்று (தோற்றம் மற்றும் நடத்தையில்) தங்களை மாற்றிக்கொள்ளும் பெண்களையும், பெண்களைப் போன்று (தோற்றம் மற்றும் நடத்தையில்) தங்களை மாற்றிக்கொள்ளும் ஆண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் தரம் : நம்பகமானது, ஆதாரப்பூர்வமானது
حسن صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: § «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلَ يَلْبَسُ لِبْسَةَ الْمَرْأَةِ، وَالْمَرْأَةَ تَلْبَسُ لِبْسَةَ الرَّجُلِ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
பெண்களின் ஆடையை (அவர்களின் பிரத்யேக ஆடை முறையை) அணியும் ஆணையும், ஆண்களின் ஆடையை (அவர்களின் பிரத்யேக ஆடை முறையை) அணியும் பெண்ணையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْخَلِيلُ بْنُ أَحْمَدَ، بِوَاسِطَ قَالَ: حَدَّثَنَا جَابِرُ بْنُ الْكُرْدِيِّ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ سَلَمَةَ الْخُزَاعِيُّ وَسَأَلَهُ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: § «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلَ يَلْبَسُ لُبْسَةَ الْمَرْأَةِ، وَالْمَرْأَةَ تَلْبَسُ لِبْسَةَ الرَّجُلِ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(பெண்களுக்கென பிரத்யேகமான) பெண்களின் ஆடையை அணியும் ஆணையும், (ஆண்களுக்கென பிரத்யேகமான) ஆண்களின் ஆடையை அணியும் பெண்ணையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ، قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ، سَمِعْتُ عِيسَى بْنَ هِلَالٍ الصَّدَفِيَّ، وَأَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ يَقُولَانِ: سَمِعْنَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «سَيَكُونُ فِي آخِرِ أُمَّتِي رِجَالٌ يَرْكَبُونَ عَلَى سُرُوجٍ كَأَشْبَاهِ الرِّجَالِ، يَنْزِلُونَ عَلَى أَبْوَابِ الْمَسَاجِدِ، نِسَاؤُهُمْ كَاسِيَاتٌ عَارِيَاتٌ، عَلَى رُءُوسِهِنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْعِجَافِ الْعَنُوهُنَّ فَإِنَّهُنَّ مَلْعُونَاتٌ، لَوْ كَانَ وَرَاءَكُمْ أُمَّةٌ مِنَ الْأُمَمِ خَدَمَهُنَّ نِسَاؤُكُمْ، كَمَا خَدَمَكُمْ نِسَاءُ الْأُمَمِ قَبْلَكُمْ»
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்:

"எனது சமுதாயத்தின் இறுதிக்காலத்தில் சில ஆண்கள் தோன்றுவார்கள். அவர்கள் (பெரிய) சேணங்களில் (நவீன வாகனங்களில்) ஏறி வந்து பள்ளிவாசல்களின் வாசல்களில் இறங்குவார்கள். அவர்களுடைய பெண்கள் ஆடை அணிந்திருந்தும் (மெல்லிய அல்லது இறுக்கமான ஆடையால்) நிர்வாணமாகவே காட்சியளிப்பார்கள். அவர்களது தலை(முடி) மெலிந்த ஒட்டகங்களின் திமில்களைப் போன்று (உயர்த்தித் தூக்கி கட்டப்பட்டு) இருக்கும். அவர்களைச் சபியுங்கள்; ஏனெனில், நிச்சயமாக அவர்கள் (அல்லாஹ்வின் அருளிலிருந்து) சபிக்கப்பட்டவர்கள் ஆவர். உங்களுக்குப் பின்னால் வேறு ஏதேனும் சமுதாயம் வரவிருந்தால், உங்களுக்கு முந்தைய சமுதாயங்களின் பெண்கள் உங்களுக்குச் சேவை செய்ததைப் போன்று, உங்கள் பெண்கள் அவர்களுக்குச் சேவை (அடிமை வேலை) செய்வார்கள்."
ஹதீஸ் தரம் : நம்பகமானது
حسن
بَابُ ذِي الْوَجْهَيْنِ
இரு முகமுடையவன் பற்றிய பாடம்
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ §شَرَّ النَّاسِ ذُو الْوَجْهَيْنِ، الَّذِي يَأْتِي هَؤُلَاءِ بِوَجْهٍ، وَهَؤُلَاءِ بِوَجْهٍ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"நிச்சயமாக மனிதர்களில் மிக மோசமானவன் இரு முகம் கொண்டவன் ஆவான். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும், அவர்களிடம் (மற்றொரு) முகத்துடனும் வருவான் (அதாவது ஒவ்வொரு கூட்டத்தாரிடமும் அவர்களுக்குப் பிடித்தமானவாறு பேசி, அவர்களுக்கிடையே பிரிவினையையும் குழப்பத்தையும் ஏற்படுத்துபவன்)."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «مِنْ شَرِّ النَّاسِ ذُو الْوَجْهَيْنِ، الَّذِي يَأْتِي هَؤُلَاءِ بِوَجْهٍ، وَهَؤُلَاءِ بِوَجْهٍ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மக்களில் மிக மோசமானவன் (யாரெனில்), இரு முகம் கொண்டவன் ஆவான். அவன் இவர்களிடம் (ஒரு கூட்டத்தாரிடம்) ஒரு முகத்துடனும், அவர்களிடம் (மற்றொரு கூட்டத்தாரிடம்) வேறொரு முகத்துடனும் வருவான்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الرُّكَيْنِ بْنِ الرَّبِيعِ، عَنْ نُعَيْمِ بْنِ حَنْظَلَةَ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «مَنْ كَانَ ذَا وَجْهَيْنِ فِي الدُّنْيَا كَانَ لَهُ لِسَانَانِ مِنْ نَارٍ يَوْمَ الْقِيَامَةِ»
அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இவ்வுலகில் எவர் (மக்களிடையே முரண்பட்ட விதத்தில் நடந்துகொள்ளும்) இரண்டு முகங்களை உடையவராக இருக்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் நெருப்பாலான இரண்டு நாவுகள் இருக்கும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «تَجِدُونَ النَّاسَ مَعَادِنَ، فَخِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الْإِسْلَامِ إِذَا فَقُهُوا، وَتَجِدُونَ خَيْرَ النَّاسِ فِي هَذَا الْأَمْرِ أَكْرَهَهُمْ لَهُ قَبْلَ أَنْ يَقَعَ فِيهِ، وَتَجِدُونَ مِنْ شَرِّ النَّاسِ ذَا الْوَجْهَيْنِ، الَّذِي يَأْتِي هَؤُلَاءِ بِوَجْهٍ، وَهَؤُلَاءِ بِوَجْهٍ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மனிதர்களை நீங்கள் (தங்கம், வெள்ளி போன்ற உலோகச்) சுரங்கங்களைப் போன்றவர்களாகக் காண்பீர்கள். அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்திற்கு முந்தைய ஜாஹிலிய்யா காலத்தில் நற்பண்புகளில்) சிறந்தவர்களாக இருந்தவர்கள், (மார்க்கச் சட்டங்களைச் சரியாகப்) புரிந்து கொண்டால் இஸ்லாத்திலும் அவர்களே சிறந்தவர்களாவார்கள். மேலும், இந்த (ஆட்சிப்) பொறுப்பைத் தம்மீது சுமத்தப்படுவதற்கு முன்பு அதைக் கடுமையாக வெறுப்பவர்களையே (தலைமைத்துவத்திற்குத் தகுதியான) சிறந்த மனிதர்களாக நீங்கள் காண்பீர்கள். மனிதர்களில் மிக மோசமானவனாக இரட்டை முகம் கொண்டவனை நீங்கள் காண்பீர்கள். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும், அவர்களிடம் வேறொரு முகத்துடனும் வருவான்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
بَابُ الْغِيبَةِ
புறம்பேசுதல் பற்றிய பாடம்
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «أَتَدْرُونَ مَا الْغِيبَةُ؟ » قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «أَنْ تَذْكُرَ أَخَاكَ بِمَا فِيهِ»، قَالَ: أَرَأَيْتَ إِنْ كَانَ فِي أَخِي مَا ذَكَرْتُ؟ قَالَ: «إِنْ كَانَ فِيهِ مَا ذَكَرْتَ فَقَدِ اغْتَبْتَهُ، وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ مَا ذَكَرْتَ فَقَدْ بَهَتَّهُ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "புறம் பேசுவது (கீபத்) என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு (நபித்தோழர்கள்), "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உமது சகோதரனிடம் உள்ளதை (அவன் விரும்பாத நிலையில்) நீர் குறிப்பிடுவதாகும்" என்று கூறினார்கள். அப்போது, "நான் கூறும் (குறை) என் சகோதரனிடம் உண்மையாகவே இருந்தால் என்ன சொல்வீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீர் கூறும் (குறை) அவனிடம் உண்மையாகவே இருந்தால், நீர் அவனைப் பற்றிப் புறம் பேசிவிட்டீர். நீர் கூறும் (குறை) அவனிடம் இல்லாவிட்டால், நீர் அவன் மீது அவதூறு (புஹ்தான்) கூறிவிட்டீர்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «أَتَدْرُونَ مَا الْغِيبَةُ»؟ قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ»، قَالَ: أَرَأَيْتَ إِنْ كَانَ فِي أَخِي مَا أَقُولُ؟ قَالَ: «فَإِنْ كَانَ فِيهِ مَا تَقُولُ فَقَدِ اغْتَبْتَهُ، وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ فَقَدْ بَهَتَّهُ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "புறம் பேசுதல் (Ghibah) என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு (நபித்தோழர்கள்), "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "(உமது சகோதரன் இல்லாதபோது) உமது சகோதரன் வெறுக்கும் ஒரு விஷயத்தை அவனைப் பற்றி நீர் கூறுவதாகும்" என்றார்கள். அப்போது (ஒருவரால்), "நான் சொல்லும் (அக்குறை) என் சகோதரனிடம் (உண்மையாகவே) இருந்தால் என்ன சொல்வீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீ சொல்லும் (குறை) அவனிடம் (உண்மையாகவே) இருந்தால், நீ அவனைப் பற்றிப் புறம் பேசிவிட்டாய்; அக்குறை அவனிடம் இல்லாவிட்டால், நீ அவன் மீது அவதூறு (Slander) கூறிவிட்டாய்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَمُحَمَّدُ بْنُ سَهْلِ بْنِ عَسْكَرٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ*، عَنْ سُفْيَانَ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ مُعَاوِيَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «إِنَّكَ إِنِ اتَّبَعْتَ عَوْرَاتِ النَّاسِ أَفْسَدْتَهُمْ، أَوْ كِدْتَ أَنْ تُفْسِدَهُمُ» قَالَ: يَقُولُ أَبُو الدَّرْدَاءِ: «كَلِمَةٌ سَمِعَهَا مُعَاوِيَةُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَفَعَهُ اللَّهُ بِهَا»
முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நிச்சயமாக நீங்கள் மக்களின் குறைகளைத் துருவித் துருவி ஆராய்ந்தால், அவர்களை நீங்கள் கெடுத்துவிடுவீர்கள்; அல்லது அவர்களைக் கெடுக்கும் நிலைக்குச் சென்றுவிடுவீர்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்.

(இதைக் குறிப்பிட்ட) அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து முஆவியா (ரலி) அவர்கள் செவியுற்ற ஒரு வார்த்தையாகும். இதன் மூலம் அல்லாஹ் அவருக்குப் பயனளித்தான்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ، عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ، عَنْ يَزِيدَ بْنِ الْأَصَمِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «يُبْصِرُ أَحَدُكُمُ الْقَذَاةَ فِي عَيْنِ أَخِيهِ، وَيَنْسَى الْجِذْعَ فِي عَيْنِهِ»
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தனது சகோதரனின் கண்ணில் உள்ள (மிகச் சிறிய) துரும்பைக் காண்கிறார்; ஆனால், தனது (சொந்தக்) கண்ணில் உள்ள (பெரிய) மரக்கட்டையை மறந்து விடுகிறார்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «إِذَا سَمِعْتَ الرَّجُلَ يَقُولُ: هَلَكَ النَّاسُ، فَهُوَ أَهْلَكُهُمْ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"‘மக்கள் (அனைவரும்) அழிந்துவிட்டார்கள்’ (அதாவது வழிகெட்டுவிட்டார்கள் அல்லது நன்மையை இழந்துவிட்டார்கள்) என்று ஒருவர் கூறுவதை நீங்கள் செவியுற்றால், அவரே அவர்களில் மிகவும் அழிந்தவர் (அல்லது அவரே அவர்களை அழித்தவர்) ஆவார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ السِّجِسْتَانِيُّ، بِبَغْدَادَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ الدَّغُولِيُّ قَالَا: حَدَّثَنَا مَحْمُودُ بْنُ آدَمَ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، عَنْ أَوْفَى بْنِ دَلْهَمٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: صَعِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا الْمِنْبَرَ، فَنَادَى بِصَوْتٍ رَفِيعٍ وَقَالَ: «يَا مَعْشَرَ §مَنْ أَسْلَمَ بِلِسَانِهِ وَلَمْ يَدْخُلِ الْإِيمَانُ قَلْبَهُ، لَا تُؤْذُوا الْمُسْلِمِينَ، وَلَا تُعَيِّرُوهُمْ، وَلَا تَطْلُبُوا عَثَرَاتِهِمْ، فَإِنَّهُ مَنْ يَطْلُبْ عَوْرَةَ الْمُسْلِمِ يَطْلُبِ اللَّهُ عَوْرَتَهُ، وَمَنْ يَطْلُبِ اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ، وَلَوْ فِي جَوْفِ بَيْتِهِ» وَنَظَرَ ابْنُ عُمَرَ يَوْمًا إِلَى الْبَيْتِ فَقَالَ: «مَا أَعْظَمَكَ، وَأَعْظَمَ حُرْمَتَكَ، وَلَلْمُؤْمِنُ أَعْظَمُ عِنْدَ اللَّهِ حُرْمَةً مِنْكَ»
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த மிம்பரின் (பிரசங்க மேடையின்) மீது ஏறி, (மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக) உயர்ந்த குரலில் அழைத்து இவ்வாறு கூறினார்கள்: "தங்கள் நாவுகளால் (மட்டும்) இஸ்லாத்தை ஏற்று, ஈமான் (இறைநம்பிக்கை) இன்னும் உள்ளங்களில் (முழுமையாக) நுழையாத கூட்டத்தாரே! முஸ்லிம்களுக்குத் துன்பம் தராதீர்கள்; அவர்களை (அவர்களின் கடந்த கால தவறுகளைக் கூறி) இழிவாகப் பேசாதீர்கள்; அவர்களின் குறைகளைத் (துருவித் துருவித்) தேடித் திரியாதீர்கள். ஏனெனில், எவர் ஒரு முஸ்லிமின் குறையைத் தேடுகிறாரோ, அவரின் குறையை அல்லாஹ் தேடுவான். அல்லாஹ் ஒருவரின் குறையைத் தேடினால், அவர் தனது வீட்டின் உள்ளறையில் (மறைந்து) இருந்தாலும் அவரை அல்லாஹ் (மக்கள் மத்தியில்) அம்பலப்படுத்தி விடுவான்."

ஒருநாள் இப்னு உமர் (ரலி) அவர்கள் கஅபாவை (இறையில்லத்தை) நோக்கிப் பார்த்துவிட்டு, "(கஅபாவே!) நீ எவ்வளவு மகத்துவமானது! உனது புனிதம் எவ்வளவு மகத்துவமானது! ஆனால், ஒரு முஃமினின் (உண்மையான இறைநம்பிக்கையாளரின்) புனிதம் அல்லாஹ்விடம் உன்னை விட மிக மகத்துவமானதாகும்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : நம்பகமானது, ஆதாரப்பூர்வமானது
حسن صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، قَالَ: حَدَّثَنَا أَبُو يَحْيَى مَوْلَى جَعْدَةَ بْنِ هُبَيْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ §فُلَانَةً ذَكَرَ مِنْ كَثْرَةِ صَلَاتِهَا، غَيْرَ أَنَّهَا تُؤْذِي بِلِسَانِهَا قَالَ: «فِي النَّارِ»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فُلَانَةً ذَكَرَ مِنْ قِلَّةِ صَلَاتِهَا وَصِيَامِهَا، وَأَنَّهَا تَصَدَّقَتْ بِأَثْوَارِ أَقِطٍ، غَيْرَ أَنَّهَا لَا تُؤْذِي جِيرَانَهَا، قَالَ: «هِيَ فِي الْجَنَّةِ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் அதிகமாகத் தொழக்கூடியவளாக (மற்றும் அதிகமாக நோன்பு நோற்கக் கூடியவளாகவும், அதிகமாகத் தர்மம் செய்யக் கூடியவளாகவும்) அறியப்படுகிறாள்; எனினும், அவள் தனது நாவினால் (தன் அண்டை வீட்டாருக்குத்) தொல்லை தருகிறாள்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவள் நரகத்தில் இருப்பாள்" என்று பதிலளித்தார்கள்.

மீண்டும் அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! மற்றொரு பெண், குறைவான தொழுகை மற்றும் நோன்புகளுக்காகவே (அதாவது கடமையானவற்றை மட்டும் செய்பவளாக) அறியப்படுகிறாள்; அவள் (தன்னிடமுள்ள) பாலாடைக்கட்டிகளை (மட்டுமே) தர்மமாக வழங்குகிறாள்; ஆனால், அவள் (தனது நாவினால்) தன் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருவதில்லை" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவள் சொர்க்கத்தில் இருப்பாள்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
بَابُ النَّمِيمَةِ
கோள் சொல்லுதல் பற்றிய பாடம்
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ: كَانَ رَجُلٌ يَنْقُلُ الْحَدِيثَ إِلَى السُّلْطَانِ، فَكُنَّا جُلُوسًا مَعَ حُذَيْفَةَ، فَمَرَّ ذَلِكَ الرَّجُلُ، قِيلَ: هُوَ هَذَا، فَقَالَ حُذَيْفَةُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ»
ஹம்மாம் பின் அல்-ஹாரித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆட்சியாளரிடம் (மக்களின்) செய்திகளைக் கொண்டு செல்பவராக (கோள் மூட்டுபவராக) ஒரு மனிதர் இருந்தார். நாங்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது, அந்த மனிதர் (எங்களைக் கடந்து) சென்றார். (அப்போது ஹுதைஃபா அவர்களிடம்) "அவர்தான் இவர்" என்று கூறப்பட்டது.

அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், " 'கோள் மூட்டுபவன் (கத்தாத்) சொர்க்கத்தில் நுழைய மாட்டான்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
بَابُ الْمَدْحِ
புகழ்ச்சி பற்றிய பாடம்
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُكْرَمِ بْنِ خَالِدٍ الْبِرْتِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: مَدَحَ رَجُلٌ رَجُلًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيْلَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ» مِرَارًا ثُمَّ قَالَ: § «إِذَا كَانَ أَحَدُكُمْ مَادِحًا أَخَاهُ، فَلْيَقُلْ: أَحْسِبُ فُلَانًا، وَاللَّهُ حَسِيبُهُ إِنْ كَانَ يَعْلَمُ ذَلِكَ كَذَا وَكَذَا»
அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னிலையில் ஒருவர் மற்றொருவரைப் புகழ்ந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உனக்குக் கேடு உண்டாகட்டும்! உனது தோழரின் கழுத்தை நீ துண்டித்து விட்டாயே (அவரைப் பெருமையில் வீழ்த்தி அழித்துவிட்டாயே)!" என்று பல முறை கூறினார்கள்.

பின்னர், "உங்களில் ஒருவர் தம் சகோதரரை அவசியம் புகழ வேண்டியிருந்தால், (அவரைப் பற்றி) அவ்வாறு தமக்குத் தெரியுமானால், 'இன்னாரை (இன்னின்னவாறு) நான் கருதுகிறேன்; அல்லாஹ்வே அவரைப் பற்றித் தீர்ப்பளிப்பவன் (அவரது உள்ளத்தை அறிந்தவன்)' என்று சொல்லட்டும்" என்றார்கள்.
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: مَدَحَ رَجُلٌ رَجُلًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيْحَكَ ‍‍ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ» مِرَارًا، ثُمَّ قَالَ: «إِنْ كَانَ §أَحَدُكُمْ مَادِحًا أَخَاهُ لَا مَحَالَةَ، فَلْيَقُلْ: أَحْسِبُ فُلَانًا، وَلَا أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا»
அபூ பக்ரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னிலையில் ஒரு மனிதர் மற்றொரு மனிதரைப் புகழ்ந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உனக்குக் கேடுதான்! உனது தோழரின் கழுத்தை நீ துண்டித்துவிட்டாய் (அவரைப் பெருமைக்குள்ளாக்கி அழித்துவிட்டாய்)" என்று பலமுறை கூறினார்கள். பிறகு, "உங்களில் ஒருவர் தம் சகோதரரைக் கட்டாயமாகப் புகழ்ந்தே ஆக வேண்டும் (என்ற நிலை ஏற்பட்டால்), 'இன்னாரை நான் (இப்படிப்பட்டவர் என்று) கருதுகிறேன்; அல்லாஹ்வுக்கு மேலாக நான் எவரையும் (உறுதியாகத்) தூய்மையானவர் என்று சான்றளிக்க மாட்டேன்' என்று அவர் சொல்லட்டும்" என்றார்கள்.
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، §الرَّجُلُ يَعْمَلُ مِنَ الْخَيْرِ يَحْمَدُهُ النَّاسُ؟ قَالَ: «تِلْكَ عَاجِلُ بُشْرَى الْمُؤْمِنِ»
அபூ தர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் (அல்லாஹ்வின் திருப்தியை நாடி) நற்செயல் புரிகிறார்; (அதைக்கண்டு) மக்கள் அவரைப் புகழ்கிறார்கள் (இது குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அது இறைநம்பிக்கையாளருக்கு (இவ்வுலகிலேயே) கிடைக்கும் உடனடி நற்செய்தியாகும்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ ذَكْوَانَ الدِّمَشْقِيُّ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «احْثُوا فِي أَفْوَاهِ الْمَدَّاحِينَ التُّرَابَ»
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"(முகஸ்துதிக்காகப் பிறரை) அதிகமாகப் புகழ்வோரின் வாய்களில் மண்ணை அள்ளி வீசுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، أَنَّ رَجُلًا مَدَحَ رَجُلًا عِنْدَ ابْنِ عُمَرَ، فَجَعَلَ ابْنُ عُمَرَ يَرْفَعُ التُّرَابَ نَحْوَهُ، وَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «إِذَا رَأَيْتُمُ الْمَدَّاحِينَ فَاحْثُوا فِي وجُوهِهُمُ التُّرَابَ»
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களின் முன்னிலையில் மற்றொரு மனிதரைப் புகழ்ந்தார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகழ்ந்த) அவரை நோக்கி மண்ணை அள்ளி வீசியவாறு, "(அளவுக்கு அதிகமாகப்) புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களின் முகங்களில் மண்ணைத் தூவுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ الْبَرَاءَ، يَقُولُ وَجَاءَهُ رَجُلٌ، فَقَالَ: يَا أَبَا عُمَارَةَ، وَلَّيْتَ يَوْمَ حُنَيْنٍ؟ فَقَالَ: أَمَّا أَنَا فَأَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ لَمْ يُوَلِّ، وَلَكِنْ عَجِلَ سَرَعَانُ الْقَوْمِ فَرَشَقَتْهُمْ هَوَازِنُ، وَأَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ آخِذٌ بِرَأْسِ بَغْلَتِهِ الْبَيْضَاءِ وَهُوَ يَقُولُ: « §أَنَا النَّبِيُّ لَا كَذِبْ، أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبِ»
பராஉ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒருவர் அவர்களிடம் வந்து, "அபூஉமாரா அவர்களே! ஹுனைன் (போர் நடந்த) நாளில் நீங்கள் (போர்க்களத்தை விட்டுப்) புறமுதுகிட்டு ஓடிவிட்டீர்களா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருபோதும்) புறமுதுகிட்டு ஓடவில்லை என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன். ஆனால், மக்களில் (அனுபவம் குறைந்த) சிலர் அவசரப்பட்டு (முன்னால்) சென்றனர். அப்போது (மறைந்திருந்த) ஹவாஸின் குலத்தினர் அவர்கள் மீது அம்புகளைச் சரமாரியாக எய்தனர். (அந்த நெருக்கடியான நேரத்திலும்) அபூசுஃப்யான் பின் அல்-ஹாரிஸ் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வெள்ளைக் கோவேறுகழுதையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'நான் (உண்மையான) நபியாவேன்; இதில் எவ்விதப் பொய்யும் இல்லை. நான் அப்துல் முத்தலிபின் மகன் ஆவேன்!' என்று (உறுதியுடன்) முழங்கிக் கொண்டிருந்தார்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ، أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ أَنَّهُ بَيْنَا هُوَ يَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْفَلَهُ مِنْ حُنَيْنٍ، عَلِقَتِ الْأَعْرَابُ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى اضْطَرُّوهُ إِلَى سَمُرَةٍ، وَخُطِفَ رِدَاءُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: § «أَعْطُونِي رِدَائِي، لَوْ كَانَ لِي عَدَدُ هَذِهِ الْعِضَاهِ نَعَمًا لَقَسَمْتُهَا بَيْنَكُمْ، ثُمَّ لَا تَجِدُونِي كَذَّابًا، وَلَا جَبَانًا»
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அவர்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வரும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது கிராமப்புறத்து அரபிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பொருட்களைக்) கேட்கத் தொடங்கினர். எந்த அளவிற்கென்றால், அவர்கள் நபியவர்களை ஒரு கருவேல மரத்தின் பக்கம் நெருக்கினர். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மேலாடை பறிக்கப்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று, "என் மேலாடையை என்னிடம் கொடுங்கள். இந்த முள் மரங்களின் எண்ணிக்கையளவு என்னிடம் கால்நடைகள் இருந்தாலும், அவற்றை நான் உங்களுக்கிடையே பங்கிட்டுக் கொடுப்பேன். பிறகு என்னை நீங்கள் பொய்யனாகவோ, கோழையாகவோ காண மாட்டீர்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ وَرَّادٍ، كَاتَبِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: قَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ: لَوْ رَأَيْتُ رَجُلًا مَعَ امْرَأَتِي لَضَرَبْتُهُ بِالسَّيْفِ غَيْرَ مُصْفِحٍ عَنْهُ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: § «أَلَا تَعْجَبُونَ مِنْ غَيْرَةِ سَعْدٍ؟ فَوَاللَّهِ لَأَنَا أَغْيَرُ مِنْهُ، وَاللَّهُ أَغْيَرُ مِنِّي، وَمِنْ أَجْلِ غَيْرَةِ اللَّهِ حَرَّمَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَلَا شَخْصَ أَحَبُّ إِلَيْهِ الْعُذْرُ مِنَ اللَّهِ، وَمِنْ أَجْلِ ذَلِكَ بَعَثَ اللَّهُ الْمُرْسَلِينَ مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ، وَلَا شَخَصَ أَحَبُّ إِلَيْهِ الْمَدْحُ مِنَ اللَّهِ، مِنْ أَجْلِ ذَلِكَ وَعَدَ اللَّهُ الْجَنَّةَ»
முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "என் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவனை நான் கண்டால், வாளின் தட்டையான பகுதியைக் கொண்டு அல்லாமல் (அதன் கூர்மையான பகுதியைக் கொண்டே) அவனை வெட்டுவேன்."

இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் கூறினார்கள்: "ஸஅத் அவர்களின் ரோஷத்தைக் (கௌரவ உணர்வைக்) கண்டு நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை விட அதிக ரோஷமுடையவன். அல்லாஹ் என்னை விட அதிக ரோஷமுடையவன் ஆவான். அல்லாஹ் அவனது ரோஷத்தின் (கௌரவத்தின்) காரணமாகவே, வெளிப்படையான மற்றும் மறைமுகமான அனைத்து மானக்கேடான செயல்களையும் (விலக்கப்பட்டவைகளையும்) ஹராமாக்கினான் (தடை செய்துள்ளான்). அல்லாஹ்வை விடக் காரணங்களை (மன்னிப்புக் கோருவதை/புகாரை உறுதிப்படுத்துவதை) அதிகமாக விரும்புபவர் எவருமில்லை; இதன் காரணமாகவே, நற்செய்தி கூறுவோராகவும் எச்சரிக்கை செய்வோராகவும் இறைத்தூதர்களை அல்லாஹ் அனுப்பினான். மேலும், அல்லாஹ்வை விடப் புகழப்படுவதை அதிகமாக விரும்புபவர் எவருமில்லை; இதன் காரணமாகவே, அல்லாஹ் (தன்னைப் புகழ்ந்து வழிபடுபவர்களுக்கு) சொர்க்கத்தை வாக்களித்துள்ளான்."
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
بَابُ التَّفَاخُرِ
பெருமையடித்துக் கொள்ளுதல் பற்றிய பாடம்
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «الْإِ يمَانُ يَمَانٍ، وَالْكُفْرُ قِبَلَ الْمَشْرِقِ، وَالسَّكِينَةُ فِي أَهْلِ الْغَنَمِ، وَالْفَخْرُ وَالرِّيَاءُ فِي الْفَدَّادِينَ أَهْلِ الْخَيْلِ وَالْوَبَرِ، يَأْتِي الْمَسِيحُ، حَتَّى إِذَا جَاوَزَ أُحُدًا صَرَفَتِ الْمَلَائِكَةُ وَجْهَهُ قِبَلَ الشَّامِ، وَهُنَالِكَ يَهْلِكُ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஈமான் (இறைநம்பிக்கை) ஏமன் தேசத்தைச் சார்ந்ததாகும் (ஏமன் மக்களிடம் அது வேரூன்றி உள்ளது). குஃப்ர் (இறைமறுப்பு) கிழக்குத் திசையில் உள்ளது. அமைதி (சகீனா) ஆடுகளை வளர்ப்பவர்களிடம் காணப்படுகிறது. பெருமையும் முகஸ்துதியும் (ரியா) குதிரைகள் மற்றும் ஒட்டகங்களை (அதிகமாக) வளர்க்கும் சப்தமிட்டுப் பேசும் கிராமவாசிகளிடம் (பெடோயின்கள்) காணப்படுகின்றன. மஸீஹ் (தஜ்ஜால்) வருவான்; அவன் உஹுத் (மலையை) நெருங்கும்போது (அல்லது கடக்க முயலும்போது), வானவர்கள் அவனது முகத்தை ஷாம் தேசத்தின் பக்கம் திருப்புவார்கள். அங்கேயே அவன் அழிவான்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «لَا تَفْتَخِرُوا بِآبَائِكُمْ فِي الْجَاهِلِيَّةِ، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَمَّا يُدَهْدِهُ الْجُعَلُ بِمَنْخِرَيْهِ خَيْرٌ مِنْ آبَائِكُمُ الَّذِينَ مَاتُوا فِي الْجَاهِلِيَّةِ»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அறியாமைக் காலத்திலிருந்த உங்களின் மூதாதையர்களைக் குறித்து நீங்கள் பெருமையடிக்க வேண்டாம். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! சாண வண்டு தனது மூக்கினால் உருட்டிச் செல்லும் (சாணத்)தானது, அறியாமைக் காலத்தில் (இறைநிராகரிப்பாளர்களாக) இறந்துபோன உங்களின் மூதாதையர்களை விடச் சிறந்ததாகும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو نَصْرٍ التَّمَّارُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «الْكَرِيمُ ابْنُ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمْ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கண்ணியமானவர், (அவரது தந்தையான) கண்ணியமானவரின் மகன், (அவரது பாட்டனாரான) கண்ணியமானவரின் மகன், (அவரது முப்பாட்டனாரான) கண்ணியமானவரின் மகன் (யார் எனில்), இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனான இஸ்ஹாக் (அலை) அவர்களின் மகனான யஅகூப் (அலை) அவர்களின் மகனான யூஸுஃப் (அலை) ஆவார். அவர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அருளாசிகள் உண்டாவதாக!"
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
بَابُ الشِّعْرِ وَالسَّجْعِ
கவிதை மற்றும் எதுகை உரைநடை பற்றிய பாடம்
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَأَنْ يَمْتَلِئَ جَوْفُ أَحَدِكُمْ قَيْحًا، حَتَّى يَرِيَهُ خَيْرٌ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا»
அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவருடைய வயிறு (அல்லது நெஞ்சுப் பகுதி) சீழினால் நிரம்பி, அது (அவரது உடலை) அரித்துச் சிதைப்பது, அவர் (மனம்) கவிதைகளால் நிரம்பியிருப்பதை விட அவருக்குச் சிறந்ததாகும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عِيسَى بْنِ السُّكَيْنِ، بِبَلَدِ الْمَوْصِلِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَرْبٍ الطَّائِيُّ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ أَبِيهِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ قَالَ: «إنَّ §مِنَ الشِّعْرِ حِكْمَةً»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக கவிதைகளில் (சிலவற்றில்) ஞானம் உண்டு."
ஹதீஸ் தரம் : நம்பகமானது, ஆதாரப்பூர்வமானது
حسن صحيح
أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «لَأَنْ يَمْتَلِئَ جَوْفُ أَحَدِكُمْ قَيْحًا، حَتَّى يَرِيَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவரது வயிறு (அவரைப் பாதிக்கும் அல்லது) அவரை அழிக்கும் அளவுக்குச் சீழால் நிரம்புவது, (அவரது உள்ளம் அல்லது நினைவு) கவிதையால் நிரம்புவதை விட அவருக்குச் சிறந்ததாகும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّيْرَفِيُّ، بِالْبَصْرَةِ أَبُو الطَّيِّبِ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي الشَّوَارِبِ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ أَعْرَابِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَكَلَّمَ بِكَلَامٍ بَيِّنٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ §مِنَ الْبَيَانِ سِحْرًا، وَإِنَّ مِنَ الشِّعْرِ حُكْمًا»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து (மிகவும்) தெளிவான முறையில் பேசினார். (அவரது பேச்சாற்றலைக் கண்டு வியந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிச்சயமாக (சில) பேச்சாற்றலில் சூனியம் (போன்ற வசீகரம்) இருக்கிறது; மேலும், நிச்சயமாக சில கவிதைகளில் ஞானம் (மற்றும் அறிவுரைகள்) இருக்கிறது" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : நம்பகமானது, ஆதாரப்பூர்வமானது
حسن صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: § «جَالَسْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرَ مِنْ مِائَةِ مَرَّةٍ، فَكَانَ أَصْحَابُهُ يَتَنَاشَدُونَ الشِّعْرَ وَيَتَذَاكَرُونَ أَشْيَاءَ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ وَهُوَ سَاكِتٌ، وَرُبَّمَا تَبَسَّمَ مَعَهُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
ஜாபிர் பின் சமுரா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட முறை அமர்ந்திருக்கிறேன். (அப்போது) அவர்களின் தோழர்கள் (தங்களுக்குள்) கவிதைகளைப் பாடிக்கொள்வார்கள்; மேலும் (இஸ்லாத்திற்கு முந்தைய) அறியாமைக் கால (ஜாஹிலிய்யா) விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள். (அச்சமயங்களில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமைதியாக இருப்பார்கள்; சில நேரங்களில் அவர்களுடன் சேர்ந்து (அவர்கள் கூறியவற்றைக் கேட்டு) புன்னகைப்பார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ سُفْيَانَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ، قَالَ: §أَرْدَفَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ، فَقَالَ: «هَلْ مَعَكَ مِنْ شِعْرِ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ»؟ فَقُلْتُ: نَعَمْ، قَالَ: «هِيهِ»، فَأَنْشَدْتُهُ بَيْتًا، فَقَالَ: «هِيهِ»، ثُمَّ أَنْشَدْتُهُ، فَلَمْ يَزَلْ يَقُولُ: «هِيهِ» وَأُنْشِدُهُ حَتَّى أَتْمَمْتُ مِائَةَ بَيْتٍ.
ஷரீத் (பின் ஸுவைத் - ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் வாகனத்தில்) என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டார்கள். அப்போது அவர்கள், "உமைய்யா பின் அபிஸ் ஸல்த் என்பவரின் கவிதைகள் ஏதும் உன்னிடம் (மனப்பாடமாக) உள்ளதா?" என்று கேட்டார்கள். நான், "ஆம்" என்றேன். அவர்கள், "(தொடர்ந்து) சொல்" என்றார்கள். நான் ஒரு கவிதை வரியைப் பாடிக் காட்டினேன். அவர்கள், "(இன்னும்) சொல்" என்றார்கள். நான் தொடர்ந்து பாடினேன். நான் நூறு கவிதை வரிகளை முழுமையாகப் பாடி முடிக்கும் வரை அவர்கள் "(இன்னும்) சொல்" என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்; நானும் அவர்களுக்குப் பாடிக் கொண்டே இருந்தேன்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «أَشْعَرُ كَلِمَةٍ تَكَلَّمَتْ بِهَا الْعَرَبُ كَلِمَةُ لَبِيدٍ:
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"அரபியர்கள் பேசிய (கவிதை) வரிகளிலேயே மிகவும் உண்மையான (மற்றும் கவித்துவமான) வரி லபீத் (எனும் கவிஞர்) கூறிய வரியாகும்: (அதாவது: 'அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வைத் தவிர மற்ற அனைத்தும் அழிந்து போகக்கூடியவையே' என்பதாகும்)."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا الْمُلَائِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: §أَشْعَرُ بَيْتٍ قَالَتْهُ الْعَرَبُ كَلِمَةُ لَبِيدٍ:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"அரபியர்கள் பாடிய கவிதை வரிகளிலேயே மிகவும் உண்மையான (மற்றும் கவித்துவமான) வரி லபீத் (எனும் கவிஞர்) கூறிய வார்த்தையாகும் (அதாவது: 'அறிந்து கொள்க! அல்லாஹ்வைத் தவிர மற்ற அனைத்தும் அழிந்து போகக்கூடியவையே' என்பதாகும்)."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ §أَعْظَمَ النَّاسِ فِرْيَةً اثْنَانِ: شَاعِرٌ يَهْجُو الْقَبِيلَةَ بِأَسْرِهَا، وَرَجُلٌ انْتَفَى مِنْ أَبِيهِ»
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"மனிதர்களிலேயே மிகப் பெரிய அவதூறை இட்டுக்கட்டுபவர்கள் இருவர் ஆவர்: (அவர்கள்) ஒரு முழு கோத்திரத்தையும் (குலத்தையும்) ஒட்டுமொத்தமாக இகழ்ந்து பாடும் கவிஞனும், தன் தந்தையைத் தந்தை இல்லை என மறுத்து (தன் தாய் விபச்சாரம் செய்ததாக மறைமுகமாகக் குற்றம் சாட்டும்) மனிதனும் ஆவார்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ أُنْزِلَ فِي الشِّعْرِ مَا قَدْ أُنْزِلَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ §الْمُؤْمِنَ يُجَاهِدُ بِسَيْفِهِ وَلِسَانِهِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَكَأَنَّمَا تَرْمُونَهُمْ نَضْحَ النَّبْلِ»
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான், "அல்லாஹ்வின் தூதரே! கவிதைகளைக் குறித்து (குர்ஆனில்) அருளப்பட்டவை (எச்சரிக்கைகள்) அருளப்பட்டுவிட்டன" என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக, ஒரு இறைநம்பிக்கையாளர் (முஃமின்) தனது வாளாலும் தனது நாவாலும் அறப்போர் (ஜிஹாத்) செய்கிறார். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! (உங்கள் கவிதைகள் மூலம் எதிரிகளைத் தாக்குவது) அவர்களின் மீது அம்புகளை எய்வதைப் போன்றதாகும்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: §اسْتَأْذَنَ حَسَّانُ بْنُ ثَابِتٍ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هِجَاءِ الْمُشْرِكِينَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَكَيْفَ بِنِسْبَتِي»؟ فَقَالَ حَسَّانُ: لَأَسُلَّنَّكَ مِنْهُمْ كَسَلِّ الشَّعَرَةِ مِنَ الْعَجِينِ
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள், இணைவைப்பாளர்களை (கவிதைகளால்) இகழ்ந்து பாடுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அப்படியானால் அவர்களுடனான) எனது வம்சத் தொடர்பை என்ன செய்வீர்?" என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், "பிசைந்த மாவிலிருந்து முடியை உருவி எடுப்பதைப் போன்று, அவர்களிலிருந்து தங்களை நான் (பழுதின்றி) உருவி எடுத்துவிடுவேன்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، أَخُو مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ، قَالَ: حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §لَمَّا دَخَلَ مَكَّةَ قَامَ أَهْلُ مَكَّةَ سِمَاطَيْنِ»، قَالَ: وَعَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ يَمْشِي وَيَقُولُ:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தபோது, மக்காவாசிகள் (அவர்களை வரவேற்பதற்காக) இரண்டு வரிசைகளாக நின்றார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் (நபிகளாருக்கு முன்னால்) நடந்தவாறே (கவிதைகளை) பின்வருமாறு கூறினார்கள்:
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَتِ الْأَنْصَارُ يَوْمَ الْخَنْدَقِ:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அகழிப் போரின் (கந்தக் போரின்) போது அன்சாரிகள் (மதீனாவாசிகள் பின்வருமாறு) கூறினார்கள்:
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
بَابُ الْمِزَاحِ وَالضَّحِكِ
நகைச்சுவை மற்றும் சிரிப்பு பற்றிய பாடம்
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ §رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ يُقَالُ لَهُ زَاهِرُ بْنُ حَرَامٍ، كَانَ يُهْدِي إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدِيَّةَ، فَيُجَهِّزُهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ زَاهِرًا بَادِينَا، وَنَحْنُ حَاضِرُوهُ»، قَالَ: فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبِيعُ مَتَاعَهُ، فَاحْتَضَنَهُ مِنْ خَلْفِهِ وَالرَّجُلُ لَا يُبْصِرُهُ، فَقَالَ: أَرْسِلْنِي مَنْ هَذَا؟ فَالْتَفَتَ إِلَيْهِ، فَلَمَّا عَرَفَ أَنَّهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَعَلَ يُلْزِقُ ظَهْرَهُ بِصَدْرِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَشْتَرِي هَذَا الْعَبْدَ»؟ فَقَالَ زَاهِرٌ: تَجِدُنِي يَا رَسُولَ اللَّهِ كَاسِدًا، قَالَ: «لَكِنَّكَ عِنْدَ اللَّهِ لَسْتَ بِكَاسِدٍ»، أَوْ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَلْ أَنْتَ عِنْدَ اللَّهِ غَالٍ»
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

கிராமப்புறவாசிகளில் 'ஸாஹிர் பின் ஹராம்' என்று அழைக்கப்படும் ஒரு மனிதர் இருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு (கிராமத்துப் பொருட்களை) அன்பளிப்பாகக் கொண்டு வருவார். அவர் (ஊருக்குப்) புறப்பட நாடும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குத் தேவையான (நகரத்துப் பொருட்களைக் கொண்டு) பயண ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பார்கள். (இதுகுறித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிச்சயமாக ஸாஹிர் நமது கிராமப்புறவாசியாவார்; நாம் அவரது நகர்ப்புறவாசிகளாவோம்" என்று கூறுவார்கள்.

(ஒருமுறை) ஸாஹிர் தமது வியாபாரப் பொருட்களை விற்றுக்கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அவர் (நபி (ஸல்) அவர்களைப்) பார்க்காதவாறு அவருக்குப் பின்புறமாகச் சென்று, அவரைத் தழுவிப் பிடித்துக்கொண்டார்கள்.

அப்போது அவர், "என்னை விட்டுவிடுங்கள்! இது யார்?" என்று கேட்டார். பின்னர் அவர் திரும்பிப் பார்த்தார். அது நபி (ஸல்) அவர்கள் என்பதை அறிந்ததும், (பிரியத்துடன்) தமது முதுகை நபி (ஸல்) அவர்களின் நெஞ்சோடு அழுத்திக் கொண்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நகைச்சுவையாக), "இந்த அடிமையை விலைக்கு வாங்குபவர் யார்?" என்று கேட்டார்கள்.

அதற்கு ஸாஹிர், "அல்லாஹ்வின் தூதரே! (சந்தையில்) நான் விலைபோகாதவன் (மதிப்பற்றவன்) என்பதை நீங்கள் காண்பீர்கள்" என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆனால், அல்லாஹ்விடம் நீர் விலைபோகாதவர் (மதிப்பற்றவர்) அல்லர்" என்று கூறினார்கள். அல்லது "மாறாக, நீர் அல்லாஹ்விடம் மிகவும் மதிப்புமிக்கவர்" என்று (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ إِهَابٍ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: رَأَى نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَارِيَةً يَتِيمَةً عِنْدَ أُمِّ سُلَيْمٍ وَهِيَ أُمُّ أَنَسِ بْنِ مَالِكٍ، فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَقَدْ شِبْتِ، لَا أَشَبَّ اللَّهُ قَرْنَكِ»، فَقَالَتْ أُمُّ سُلَيْمٍ: لَقَدْ دَعَوْتَ يَا رَسُولَ اللَّهِ عَلَى يَتِيمَتِي أَنْ لَا يُشِبَّ اللَّهُ قَرْنَهَا، فَوَاللَّهِ لَا تَشِبُّ أَبَدًا فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أُمَّ سُلَيْمٍ، أَوَ مَا عَلِمْتِ أَنِّي اتَّخَذْتُ عِنْدَ رَبِّي عَهْدًا: أَيُّمَا أَحَدٍ مِنْ أُمَّتِي دَعَوْتُ عَلَيْهِ لَيْسَ مِنْ أَهْلِهَا أَنْ يَجْعَلَهَا لَهُ طَهُورًا، أَوْ قُرْبَةً يُقَرِّبُهُ بِهَا يَوْمَ الْقِيَامَةِ؟ »
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் தாயாரான உம்மு சுலைம் (ரலி) அவர்களின் பாதுகாப்பில் இருந்த ஓர் அனாதைப் சிறுமியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அச்சிறுமியிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ வளர்ந்து பெரியவளாகி விட்டாய்; அல்லாஹ் உனது வயதை (இனி) அதிகரிக்கச் செய்யாதிருப்பானாக!" என்று (விளையாட்டாகக்) கூறினார்கள்.

இதைக் கேட்ட உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எனது அனாதைப் சிறுமியின் வயது அதிகரிக்கக் கூடாது என்று அவளுக்கு எதிராகப் பிரார்த்தித்து விட்டீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! இனி அவள் வளரவே மாட்டாள்" என்று (கவலையுடன்) கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்மு சுலைமே! நான் எனது இறைவனிடம் செய்துகொண்ட ஓர் ஒப்பந்தம் உனக்குத் தெரியாதா? 'என் சமுதாயத்தாரில் எவருக்கேனும் (கோபத்திலோ அல்லது தற்செயலாகவோ) அவர் அதற்குத் தகுதியற்றவராக இருக்கும் நிலையில் நான் அவருக்கு எதிராகப் பிரார்த்தித்தால், அதை அவருக்குத் தூய்மையளிப்பதாகவும், மறுமை நாளில் அவரைத் தன் (இறை) நெருக்கத்திற்குரியவராக ஆக்கும் நற்செயலாகவும் இறைவன் ஆக்கிவிட வேண்டும்' (என்று நான் வேண்டியுள்ளேன்)" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، وَمُوسَى بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا، وَلَبَكَيْتُمْ كَثِيرًا»
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் அறிபவற்றை (மறுமையின் பயங்கரங்கள், நரகத்தின் வேதனை மற்றும் அல்லாஹ்வின் வல்லமை குறித்து) நீங்கள் அறிவீர்களானால், (நிச்சயமாக) குறைவாகவே சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ السَّلَامِ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَقِيلٍ، عَنِ الزُهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا، وَلَبَكَيْتُمْ كَثِيرًا»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"நான் அறிந்தவற்றை (மறுமையின் பயங்கரங்கள் மற்றும் அல்லாஹ்வின் மகத்துவத்தைப் பற்றி) நீங்களும் அறிவீர்களானால், நீங்கள் குறைவாகவே சிரிப்பீர்கள்; (நிச்சயமாக) அதிகமாக அழுவீர்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ وَهُوَ يَذْكُرُ النَّاقَةَ، وَمَنْ عَقَرَهَا، فَقَالَ: «{إِذِ §انْبَعَثَ أَشْقَاهَا} انْبَعَثَ لَهَا رَجُلٌ عَارِمٌ عَزِيزٌ مَنِيعٌ فِي رَهْطِهِ، مِثْلُ أَبِي زَمْعَةَ» ثُمَّ ذَكَرَ النِّسَاءَ، فَقَالَ: «أَلَا لِمَ يَجْلِدُ أَحَدُكُمُ امْرَأَتَهُ جَلْدَ الْعَبْدِ، وَلَعَلَّهُ يُضَاجِعُهَا فِي آخِرِ يَوْمِهِ» ثُمَّ وَعَظَهُمْ فِي الضَّحِكِ مِنَ الضَّرْطَةِ، فَقَالَ: «أَلَا لِمَ يَضْحَكُ أَحَدُكُمْ مِمَّا يَفْعَلُ؟! »
அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது உரையில் (ஸாலிஹ் நபியின்) ஒட்டகத்தைப் பற்றியும், அதன் கால்களை வெட்டி வீழ்த்தியவனைக் குறித்தும் குறிப்பிட்டுவிட்டு, “{இதிம்பஅஸ அஷ்காஹா}” (அவர்களில் மிகவும் துர்பாக்கியசாலி கிளம்பியபோது - அல்குர்ஆன் 91:12) என்று ஓதினார்கள். தொடர்ந்து, "(அபூ ஸம்ஆவைப் போன்று) தன் கூட்டத்தாரிடம் மிகுந்த செல்வாக்கும் பாதுகாப்பும் பெற்றிருந்த, (தீய குணங்கள் கொண்ட) ஒரு வலிமையான மனிதன் அதற்காக (ஒட்டகத்தைக் கொல்ல)க் கிளம்பினான்" என்று கூறினார்கள்.

பின்னர் பெண்களைக் குறித்து (அறிவுரை வழங்குகையில்), "உங்களில் ஒருவன் தன் மனைவியை ஓர் அடிமையைப் போல ஏன் அடிக்கிறான்? (அவ்வாறு அடித்துவிட்டு) அந்த நாளின் இறுதியில் அவன் அவளுடன் படுக்க (தாம்பத்தியம் கொள்ள) நேரிடலாம் அல்லவா!" என்று கேட்டார்கள்.

பின்னர், (ஒருவருக்குக்) காற்றுப் பிரிவதைக் (கேட்டுப் பிறர்) சிரிப்பது குறித்து அவர்களுக்கு அறிவுரை கூறுகையில், "உங்களில் ஒருவர் தாமும் செய்யக்கூடிய ஒரு (இயல்பான) செயலுக்காக (பிறரைப் பார்த்து) ஏன் சிரிக்க வேண்டும்?" என்று கேட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَدِمَ رَجُلَانِ مِنَ الْمَشْرِقِ فَخَطَبَا، فَعَجِبَ النَّاسُ لِبَيَانِهِمَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ §مِنَ الْبَيَانِ لَسِحْرًا أَوْ إِنَّ بَعْضَ الْبَيَانِ سِحْرٌ»
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

கிழக்குப் பகுதியிலிருந்து (ஈராக் போன்ற திசையிலிருந்து) இரண்டு மனிதர்கள் வந்து உரையாற்றினார்கள். அவர்களின் பேச்சாற்றலைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிச்சயமாக சில பேச்சாற்றல்களில் சூனியம் (போன்ற வசீகரம்) இருக்கிறது" அல்லது "நிச்சயமாக சில பேச்சாற்றல் சூனியமாகும்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُمَيْرِ بْنِ يُوسُفَ، بِدِمَشْقَ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ سَهْلٍ الرَّمْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عُتْبَةُ بْنُ السَّكَنِ*، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «الْبَيَانُ مِنَ اللَّهِ، وَالْعِيُّ مِنَ الشَّيْطَانِ، وَلَيْسَ الْبَيَانُ كَثْرَةَ الْكَلَامِ، وَلَكِنَّ الْبَيَانَ الْفَصْلُ فِي الْحَقِّ، وَلَيْسَ الْعِيُّ قِلَّةَ الْكَلَامِ، وَلَكِنْ مَنْ سَفِهَ الْحَقَّ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்:
"தெளிவான பேச்சாற்றல் (அல்-பயான்) அல்லாஹ்விடமிருந்து (கிடைக்கும் அருட்கொடை) ஆகும். சொல்லாற்றலின்மை (அல்-இய்யு) ஷைத்தானிடமிருந்து (உண்டாவதாகும்). தெளிவான பேச்சாற்றல் என்பது அதிகமாகப் பேசுவதல்ல; மாறாக, சத்தியத்தை (அசத்தியத்திலிருந்து) பிரித்துக் காட்டும் தெளிவே (உண்மையான) பேச்சாற்றலாகும். சொல்லாற்றலின்மை என்பது குறைவாகப் பேசுவதல்ல; மாறாக, சத்தியத்தை அறிவீனமாக (புறக்கணிப்பதே) உண்மையான சொல்லாற்றலின்மையாகும்."
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ الزُّبَيْرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «إِنَّمَا النَّاسُ كَالْإِبِلِ الْمِئَةِ، وَلَا يَكَادُ أَنْ يُوجَدَ فِيهَا رَاحِلَةٌ»
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மக்கள் நூறு ஒட்டகங்களைப் போன்றவர்கள்; (அவற்றில் நீண்ட பயணத்திற்கு அல்லது பொதி சுமப்பதற்குத் தகுதியான) ஒரு சிறந்த வாகன ஒட்டகத்தை (ராஹிலா) காண்பது அரிதாகும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ بِالْمَدِينَةِ فَزَعٌ، §فَاسْتَعَارَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا لِأَبِي طَلْحَةَ يُقَالُ لَهُ: مَنْدُوبٌ، فَرَكِبَهُ، فَرَجَعَ، وَقَالَ: «مَا رَأَيْنَا مِنْ فَزَعٍ، وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا»
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

மதீனாவில் (ஒருமுறை) ஒரு பீதி (அச்சம்) ஏற்பட்டது. எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான 'மன்தூப்' எனப்படும் குதிரையை இரவலாகப் பெற்று, அதன் மீது ஏறிச் சென்றார்கள். (சோதனை செய்துவிட்டுத்) திரும்பி வந்ததும், "நாம் (அச்சப்படும்படியாக) எதையும் காணவில்லை. நிச்சயமாக இதனை (வேகத்தில்) ஒரு கடலாகவே கண்டோம்!" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ، قَالَ: حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ الْمَذْحِجِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتِ: اسْتَأْذَنَ عَلَيَّ أَفْلَحُ أَخُو أَبِي قُعَيْسٍ، بَعْدَمَا نَزَلَ الْحِجَابُ، فَقُلْتُ: وَاللَّهِ لَا آذَنُ لَهُ حَتَّى أَسْتَأْذِنَ فِيهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَفْلَحَ أَخَا أَبِي قُعَيْسٍ اسْتَأْذَنَ عَلَيَّ، فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى أَسْتَأْذِنَكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «وَمَا يَمْنَعُكِ أَنْ تَأْذَنِي لِعَمِّكِ»؟ قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الرَّجُلَ لَيْسَ هُوَ الَّذِي أَرْضَعَنِي، إِنَّمَا أَرْضَعَتْنِي امْرَأَتُهُ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ عَمُّكِ، ائْذَنِي لَهُ تَرِبَتْ يَمِينُكِ» قَالَ عُرْوَةُ: فَلِذَلِكَ كَانَتْ عَائِشَةُ تَقُولُ: «حَرِّمُوا مِنَ الرَّضَاعِ مَا تُحَرِّمُونَ مِنَ النَّسَبِ»
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(பெண்கள் அந்நிய ஆடவர்களிடமிருந்து தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்ற) ஹிஜாப் சட்டம் அருளப்பட்ட பிறகு, அபூ குஐஸின் சகோதரரான அஃப்லஹ் என்பவர் என்னிடம் (உள்ளே வருவதற்கு) அனுமதி கேட்டார். அப்போது நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்கும் வரை அவருக்கு நான் அனுமதி அளிக்க மாட்டேன்" என்று கூறினேன்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! அபூ குஐஸின் சகோதரரான அஃப்லஹ் என்னிடம் அனுமதி கேட்டார். ஆனால், உங்களிடம் அனுமதி கேட்கும் வரை அவருக்கு நான் அனுமதி அளிக்க மறுத்துவிட்டேன்" என்று கூறினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனது (பால்குடி உறவுமுறை) சிறிய தந்தைக்கு நீ அனுமதி அளிக்க உன்னைத் தடுத்தது எது?" என்று கேட்டார்கள்.

அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! அந்த மனிதர் (நேரடியாக) எனக்குப் பாலூட்டவில்லை; அவரது மனைவிதான் எனக்குப் பாலூட்டினார்" என்று கூறினேன்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அவர் உனது (பால்குடி உறவுமுறை) சிறிய தந்தைதான், அவருக்கு நீ அனுமதி கொடு! (உனது செயல் சிறக்கட்டும் அல்லது) உனது வலது கரம் மண்ணாகட்டும்!" என்று கூறினார்கள்.

(இதனை அறிவிக்கும்) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஆகையால்தான், "இரத்தப் பந்தத்தின் (பிறப்பின்) மூலம் எவையெல்லாம் (திருமணம் செய்யத்) தடை செய்யப்பட்டவையோ, அவை பால்குடி உறவின் மூலமும் தடை செய்யப்படும்" என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ ابْنِ أَبِي عَدِيٍّ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَتْ أُمُّ سُلَيْمٍ مَعَ نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَائِقٌ يَسُوقُ، فَأَتَى عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا أَنْجَشَةُ، §رُوَيْدًا سَوْقَكَ بِالْقَوَارِيرِ»
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களுடன் உம்மு சுலைம் (ரழி) அவர்களும் (ஒரு பயணத்தில்) இருந்தார்கள். அப்போது ஒட்டகங்களை ஓட்டிச் செல்பவர் (அன்ஜஷா என்பவர்) அவற்றை (வேகமாகப் பாடல்களைப் பாடி) ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்து, "அன்ஜஷாவே! கண்ணாடிப் பாத்திரங்களை (பெண்களை) மெதுவாக (ஒட்டகங்களைச் செலுத்தி) அழைத்துச் செல்வீராக!" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَادٍ يُقَالُ لَهُ: أَنْجَشَةُ، وَكَانَ حَسَنَ الصَّوْتِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «رُوَيْدَكَ يَا أَنْجَشَةُ، لَا تَكْسِرِ الْقَوَارِيرَ» قَالَ قَتَادَةُ: «- يَعْنِي ضَعَفَةَ النِّسَاءِ -»
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் 'அன்ஜஷா' என்று அழைக்கப்படும் (ஒட்டகங்களைச் சீராகச் செலுத்தப் பாடக்கூடிய) ஒட்டகம் ஓட்டுபவர் ஒருவர் இருந்தார். அவர் இனிமையான குரல்வளம் கொண்டவராக இருந்தார். (அவர் பாடிய பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் வேகமாகச் சென்றபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், "அன்ஜஷாவே! (ஒட்டகங்களை) மெதுவாக ஓட்டிச் செல்லுங்கள்; கண்ணாடிப் பாத்திரங்களை (அதாவது பெண்களை) உடைத்து விடாதீர்கள்!" என்று கூறினார்கள்.

('கண்ணாடிப் பாத்திரங்கள்' என்பதன் மூலம்) "பலவீனமான பெண்களையே அவர்கள் குறிப்பிட்டார்கள்" என்று (இதனை அறிவிக்கும்) கதாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْحَلَبِيُّ، بِدِمَشْقَ قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ عُبَيْدُ بْنُ هِشَامٍ الْحَلَبِيُّ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَتْ أُمُّ سُلَيْمٍ مَعَ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسِيرٍ، وَكَانَ سَائِقٌ يَسُوقُ بِهِنَّ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «رُوَيْدًا سَوْقَكَ بِالْقَوَارِيرِ»
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது (அஞ்சஷா எனப்படும்) ஒரு (ஒட்டக) ஓட்டி அவர்களை (ஒட்டகங்களில்) அழைத்துச் சென்று கொண்டிருந்தார். (அவர் ஒட்டகங்களை வேகமாகச் செலுத்தவே) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "(அஞ்சஷாவே!) கண்ணாடிப் பாத்திரங்களை (ஏந்திச் செல்லும் ஒட்டகங்களை) மெதுவாக ஓட்டிச் செல்வீராக!" என்று கூறினார்கள். (இங்கு கண்ணாடிப் பாத்திரங்கள் என்பது பெண்களைக் குறிக்கிறது).
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسَابٍ، قَالَ: أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، وَأَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي مَسِيرٍ لَهُ وَمَعَهُ غُلَامٌ لَهُ أَسْوَدُ يُقَالُ لَهُ: أَنْجَشَةُ، وَهُوَ يَحْدُو، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَنْجَشَةُ، §رُوَيْدًا سَوْقَكَ الْقَوَارِيرَ - يَعْنِي النِّسَاءَ -»
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் 'அன்ஜஷா' என்று அழைக்கப்படும் ஒரு (கறுப்பினப்) பணியாளரும் இருந்தார். அவர் (ஒட்டகங்களை உற்சாகப்படுத்தப் பாடப்படும் 'ஹுதா' எனும் பாடலைப் பாடியவாறு) ஒட்டகங்களை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், "அன்ஜஷாவே! கண்ணாடிக் குப்பிகளை - அதாவது பெண்களை - (ஏற்றிச் செல்லும் ஒட்டகங்களை) மெதுவாக ஓட்டிச் செல்வீராக!" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: أَخْبَرَنَا حَبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ كَهْمَسِ بْنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: § «بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلَاةٌ لِمَنْ شَاءَ» «وَكَانَ ابْنُ بُرَيْدَةَ يُصَلِّي قَبْلَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ»
அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒவ்வொரு இரண்டு அதான்களுக்கும் (அதாவது அதான் மற்றும் இகாமத் ஆகியவற்றுக்கும்) இடையே (உபரியான) ஒரு தொழுகை உண்டு, (அதைச் செய்ய) விரும்பியவர்களுக்கு."

மேலும், இப்னு புரைதா (ரஹ்) அவர்கள் மஃக்ரிப் (தொழுகைக்கான அதானுக்கும் இகாமத்துக்கும்) முன்பு இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ دَاوُدَ بْنِ فَرَاهِيجَ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: § «مَا كَانَ لَنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامٌ إِلَّا الْأَسْوَدَيْنِ: التَّمْرُ، وَالْمَاءُ»
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில், (அல்-அஸ்வதைன் எனப்படும்) பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீர் ஆகிய இரண்டு கறுப்புப் பொருட்களைத் தவிர எங்களுக்கு (வேறு நிலையான) உணவு எதுவும் இருந்ததில்லை."
ஹதீஸ் தரம் : பிற சான்றுகளால் ஆதாரப்பூர்வமானது
صحيح لغيره
بَابُ الِاسْتِئْذَانِ
அனுமதி கோருதல் பற்றிய பாடம்
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا مُوسَى، اسْتَأْذَنَ عَلَى عُمَرَ ثَلَاثَ مَرَّاتٍ، فَلَمْ يُؤْذَنْ لَهُ، فَرَجَعَ، فَبَلَغَ ذَلِكَ عُمَرَ، فَقَالَ: مَا رَدَّكَ؟ فَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلَاثَ مَرَّاتٍ، فَلَمْ يُؤْذَنْ لَهُ، فَلْيَرْجِعْ»، فَقَالَ: لِتَجِئْنِي عَلَى هَذَا بِبَيِّنَةٍ، وَإِلَّا، قَالَ حَمَّادٌ: تَوَعَّدَهُ قَالَ: فَانْصَرَفَ فَدَخَلَ الْمَسْجِدَ، فَأَتَى مَجْلِسَ الْأَنْصَارِ فَقَصَّ عَلَيْهِمُ الْقِصَّةَ: مَا قَالَ لِعُمَرَ، وَمَا قَالَ لَهُ عُمَرُ، فَقَالُوا: لَا يَقُومُ مَعَكَ إِلَّا أَصْغَرُنَا، فَقَامَ مَعَهُ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، فَشَهِدَ، فَقَالَ لَهُ عُمَرُ: إِنَّا لَا نَتَّهِمُكَ، وَلَكِنَّ الْحَدِيثَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَدِيدٌ
அபூமூஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் (உள்ளே வருவதற்கு) மூன்று முறை அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு அனுமதி கிடைக்காததால், அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். இச்செய்தி உமர் (ரலி) அவர்களுக்கு எட்டியதும், "உங்களைத் திரும்பிச் செல்லச் செய்தது எது?" என்று கேட்டார்கள். அதற்கு அபூமூஸா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், அவர் திரும்பிச் சென்றுவிடட்டும்' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என பதிலளித்தார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், "இதற்கு நீங்கள் என்னிடம் (உறுதியான) சாட்சியைக் கொண்டு வர வேண்டும்; இல்லையென்றால் (உமக்குத் தண்டனை அளிப்பேன்)" என்று (ஹம்மாத் எனும் அறிவிப்பாளர் கூறுகிறார்: உமர் ரலி அவர்கள் அவரை) எச்சரித்தார்கள். உடனே அபூமூஸா (ரலி) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். அங்கு அன்சாரிகள் அமர்ந்திருந்த சபைக்குச் சென்று, தான் உமர் (ரலி) அவர்களிடம் கூறியதையும், உமர் (ரலி) தன்னிடம் கூறியதையும் விவரித்தார்கள்.

அதற்கு அவர்கள், "எங்களில் (வயதில்) மிகச் சிறியவரைத் தவிர வேறு யாரும் உங்களுடன் (சாட்சி சொல்ல) வர மாட்டார்கள் (ஏனெனில் இது எங்களிடையே மிகப்பிரபலமான விஷயம்)" என்று கூறினார்கள். அதன்படி அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அவருடன் எழுந்து சென்று (உமர் அவர்களிடம்) சாட்சி கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் (அபூமூஸாவிடம்), "நாம் உங்கள் மீது சந்தேகம் கொள்ளவில்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெயரால் செய்தியை (ஹதீஸை) அறிவிப்பது என்பது மிகவும் கடுமையான (கவனமுடன் கையாள வேண்டிய) விஷயமாகும்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، أَنَّ أَبَا مُوسَى، §اسْتَأْذَنَ عَلَى عُمَرَ ثَلَاثًا، فَلَمْ يُؤْذَنْ لَهُ، وَكَأَنَّهُ كَانَ مَشْغُولًا، فَرَجَعَ أَبُو مُوسَى، فَفَرَغَ عُمَرُ، فَقَالَ: أَلَمْ أَسْمَعْ صَوْتَ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ؟ ائْذَنُوا لَهُ، قِيلَ: إِنَّهُ قَدْ رَجَعَ، فَدَعَا بِهِ فَقَالَ: كُنَّا نُؤْمَرُ بِذَلِكَ، فَقَالَ: لَتَأْتِيَنِّي عَلَى ذَلِكَ بِالْبَيِّنَةِ، فَانْطَلَقَ إِلَى مَجْلِسِ الْأَنْصَارِ، فَسَأَلَهُمْ، فَقَالُوا: لَا يَشْهَدُ لَكَ عَلَى ذَلِكَ إِلَّا أَصْغَرُنَا أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، فَانْطَلَقَ بِأَبِي سَعِيدٍ، فَشَهِدَ لَهُ، فَقَالَ خَفِيَ عَلَيَّ هَذَا مِنْ «أَمْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَلْهَانِي الصَّفْقُ بِالْأَسْوَاقِ، وَلَكِنْ سَلِّمْ مَا شِئْتَ»
அபூ மூஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் (உள்ளே நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டார்கள். ஆனால், அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை; (அப்போது) உமர் (ரலி) அவர்கள் ஏதோ வேலையாக இருப்பது போல் தெரிந்தது. எனவே, அபூ மூஸா (ரலி) அவர்கள் (அங்கிருந்து) திரும்பிச் சென்றுவிட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் (தமது வேலையை முடித்து) ஓய்வு பெற்றதும், "அப்துல்லாஹ் பின் கைஸின் (அபூ மூஸாவின்) குரலை நான் கேட்கவில்லையா? அவருக்கு அனுமதி கொடுங்கள்" என்று கூறினார்கள். (அதற்கு) "அவர் திரும்பிச் சென்றுவிட்டார்" என்று கூறப்பட்டது.

எனவே, உமர் (ரலி) அவர்கள் அவரை அழைத்து வரச் செய்தார்கள். (அப்போது அபூ மூஸா அவர்கள்), "இவ்வாறுதான் (மூன்று முறை அனுமதி கேட்டும் அனுமதி கிடைக்காவிட்டால் திரும்பிச் செல்லுமாறு) நாங்கள் (அல்லாஹ்வின் தூதரால்) கட்டளையிடப்பட்டிருந்தோம்" என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "(நீர் கூறுவது நபியின் சுன்னத் என்பதற்கு) இதற்கான தெளிவான ஆதாரத்தை என்னிடம் நிச்சயமாகக் கொண்டு வர வேண்டும்" என்று கூறினார்கள்.

எனவே, அபூ மூஸா (ரலி) அவர்கள் அன்சாரிகளின் சபைக்குச் சென்று அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டார்கள். அதற்கு அவர்கள், "எங்களில் மிகச் சிறியவரான அபூ ஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் உமக்காக இதற்குச் சாட்சி சொல்ல மாட்டார்கள்" என்று கூறினார்கள். எனவே, அபூ மூஸா (ரலி) அவர்கள் அபூ ஸயீத் (ரலி) அவர்களை அழைத்துச் சென்றார்கள். அவரும் (அபூ மூஸாவிற்கு ஆதரவாகச்) சாட்சி கூறினார்.

(இதைக் கேட்ட) உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறை எனக்குத் தெரியாமல் போய்விட்டது. கடைவீதிகளில் (ஈடுபட்டிருந்த) வியாபார நடவடிக்கைகள் (இதனை அறிந்துகொள்வதை விட்டும்) என்னைத் திசைதிருப்பி விட்டன. (இருப்பினும் இப்போது ஆதாரத்துடன் தெரிந்து கொண்டேன்) எனவே, நீர் விரும்பியவாறே (இனி) ஸலாம் கூறி (அனுமதி கேட்டு)க் கொள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: §أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَقَقْتُ الْبَابَ، فَقَالَ: «مَنْ ذَا»؟ فَقُلْتُ: أَنَا، فَقَالَ: «أَنَا أَنَا» مَرَّتَيْنِ كَأَنَّهُ كَرِهَهُ
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (எனது தந்தையின் கடன் விஷயமாக) வந்து கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். நான், "நான்தான்" என்றேன். (அப்பதிலை) வெறுத்தவர்களைப் போன்று அவர்கள், "நான்தான், நான்தான்" என்று இரண்டு முறை கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، بِبَيْتِ الْمَقْدِسِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنِ الزُهْرِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: اطَّلَعَ رَجُلٌ مِنْ حُجْرٍ فِي حُجْرَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِيَدِهِ مِدْرًى يَحُكُّ بِهِ رَأْسَهُ، فَرَآهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: § «لَوْ أَعْلَمُ أَنَّكَ تَنْظُرُ لَطَعَنْتُ بِهِ فِي عَيْنِكَ، إِنَّمَا جُعِلَ الْإِذْنُ مِنْ أَجْلِ الْبَصَرِ»
ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறையிலிருந்த ஒரு துவாரத்தின் வழியாக எட்டிப் பார்த்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது கையிலிருந்த ஒரு (இரும்பாலான) சீப்பால் (அல்லது ஒரு குச்சியால்) தலையைச் சொறிந்து கொண்டிருந்தார்கள். அவரைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீ (என்னை) எட்டிப் பார்க்கிறாய் என்று (முன்பே) எனக்குத் தெரிந்திருந்தால், இதைக் கொண்டு உனது கண்ணைக் குத்தியிருப்பேன். (பிறர் வீட்டிற்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று (மார்க்கச் சட்டம்) ஆக்கப்பட்டதெல்லாம், பார்வையின் காரணமாகவே (அதாவது பிறரின் அந்தரங்கங்களை அனுமதியின்றிப் பார்ப்பதைத் தடுப்பதற்காகவே) ஆகும்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ، أَنَّ بُسْرَ بْنَ سَعِيدٍ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: كُنَّا فِي مَجْلِسِ عِنْدَ أُبَيِّ بْنِ كَعْبٍ، فَأَتَى أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ بِعَصًا حَتَّى وَقَفَ، فَقَالَ: أَنْشُدُكُمْ بِاللَّهِ، هَلْ سَمِعَ أَحَدٌ مِنْكُمْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «الِاسْتِئْذَانُ ثَلَاثٌ، فَإِنْ أُذِنَ لَكَ، وَإِلَّا فَارْجِعْ»؟ قَالَ أُبَيٌّ: وَمَا ذَاكَ؟ قَالَ: اسْتَأْذَنْتُ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ أَمْسِ ثَلَاثَ مَرَّاتٍ، فَلَمْ يُؤْذَنْ لِي، فَرَجَعْتُ، ثُمَّ جِئْتُهُ، فَدَخَلْتُ عَلَيْهِ، فَأَخْبَرْتُهُ أَنِّي جِئْتُهُ أَمْسِ، فَسَلَّمْتُ ثَلَاثًا، ثُمَّ انْصَرَفْتُ، فَقَالَ: قَدْ سَمِعْنَاكَ وَنَحْنُ حِينَئِذٍ عَلَى شُغْلٍ، فَلَوِ اسْتَأْذَنْتَ حَتَّى يُؤْذَنَ لَكَ؟ قَالَ: اسْتَأْذَنْتُ كَمَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَوَاللَّهِ لَأُوجِعَنَّ ظَهْرَكَ أَوْ لَتَأْتِيَنِّي بِمَنْ يَشْهَدُ لَكَ عَلَى هَذَا، قَالَ: فَقَالَ أُبَيٌّ: وَاللَّهِ لَا يَقُومُ مَعَكَ إِلَّا أَحْدَثُنَا سِنًّا، قُمْ يَا أَبَا سَعِيدٍ، فَقُمْتُ حَتَّى أَتَيْتُ عُمَرَ فَقُلْتُ: قَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هَذَا
அபு ஸயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களின் ஒரு சபையில் அமர்ந்திருந்தோம். அப்போது அபு மூஸா அல்-அஷ்அரீ (ரலி) அவர்கள் ஒரு கைத்தடியுடன் (பதற்றமாக) வந்து நின்றார்கள். அவர் (எங்களை நோக்கி), "அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உங்களிடம் வேண்டுகிறேன். 'அனுமதி கேட்பது மூன்று முறைகளாகும்; உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டால் (உள்ளே செல்லுங்கள்), இல்லையென்றால் திரும்பி விடுங்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை உங்களில் யாராவது கேட்டதுண்டா?" என்று கேட்டார்.

அதற்கு உபை (ரலி) அவர்கள், "என்ன விஷயம் (ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்)?" என்று கேட்டார்கள்.

அதற்கு அபு மூஸா (ரலி) அவர்கள், "நான் நேற்று உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் (உள்ளே செல்ல) மூன்று முறை அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, நான் திரும்பிவிட்டேன். பின்பு (இன்று) அவரிடம் சென்று உள்ளே நுழைந்தேன். நேற்று நான் அவரிடம் வந்து, மூன்று முறை சலாம் கூறி (அனுமதி கேட்டு)விட்டுத் திரும்பியதை அவரிடம் தெரிவித்தேன்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், 'நாங்கள் உமது (சத்தத்தைக்) கேட்டோம், ஆனால் நாங்கள் அப்போது ஒரு வேலையில் (ஈடுபட்டுக்) கொண்டிருந்தோம். உமக்கு அனுமதி அளிக்கப்படும் வரை நீர் (தொடர்ந்து) அனுமதி கேட்டிருக்கலாமே?' என்றார். அதற்கு நான், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டபடியே நான் (மூன்று முறை மட்டும்) அனுமதி கேட்டேன்' என்றேன். (அதைக் கேட்ட) உமர் (ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! உமது முதுகை நான் நோவினை செய்வேன் (தண்டிப்பேன்) அல்லது நீர் கூறுவதற்குச் சாட்சி கூறும் ஒருவரை என்னிடம் கொண்டு வர வேண்டும்' என்று கூறினார்" எனப் பதிலளித்தார்.

(இதனைக் கேட்ட) உபை பின் கஅப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களில் வயதில் மிகச் சிறியவரே உம்முடன் வந்து இதற்குச் சாட்சி சொல்வார். அபு ஸயீதே! நீர் எழுந்து செல்லும்" என்று (என்னிடம்) கூறினார். அதன்படி நான் எழுந்து, உமர் (ரலி) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்" என்று (சாட்சி) கூறினேன்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، وَحَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «رَسُولُ الرَّجُلِ إِلَى الرَّجُلِ إِذْنُهُ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் (மற்றொருவரை அழைத்து வர) இன்னொருவரிடம் அனுப்பும் தூதுவரே, (அவர் அங்கு செல்வதற்கான) அனுமதியாகும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
بَابُ الْأَسْمَاءِ وَالْكُنَى
பெயர்கள் மற்றும் புனைப்பெயர்கள் பற்றிய பாடம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو يُونُسَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «تَسَمَّوْا بِاسْمِي، وَلَا تَكَنَّوْا بِكُنْيَتِي»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எனது பெயரை (முஹம்மத் என்று) நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள். ஆனால், எனது குன்யத்தை (அபுல் காஸிம் என்ற சிறப்புப் பெயரை) நீங்கள் சூட்டிக்கொள்ளாதீர்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ، بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا النُّفَيْلِيُّ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ قَائِمًا بِالْبَقِيعِ، فَنَادَى رَجُلٌ آخَرُ: يَا أَبَا الْقَاسِمِ، فَالْتَفَتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: لَمْ أَعْنِكَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا دَعَوْتُ فُلَانًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «تَسَمَّوْا بِاسْمِي، وَلَا تَكَنَّوْا بِكُنْيَتِي»
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'பகீஃ' (மதீனாவின் பொது மையவாடி) பகுதியில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் (மற்றொரு) ஒருவரைப் பார்த்து, "அபுல் காசிமே!" என்று (சத்தமிட்டு) அழைத்தார். உடனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தங்களைத்தான் அழைக்கிறார்கள் என்று எண்ணி அவர் பக்கம்) திரும்பிப் பார்த்தார்கள். அப்போது அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களை (அழைக்கக்) கருதவில்லை; இன்னாரையே (குறிப்பிட்டு) அழைத்தேன்" என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "என் பெயரை (முஹம்மத் என்று)ச் சூட்டிக் கொள்ளுங்கள்; ஆனால், எனது குன்யாவை (அபுல் காசிம் எனும் சிறப்புப் பெயரை)ச் சூட்டிக் கொள்ளாதீர்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «لَا تَجْمَعُوا بَيْنَ اسْمِي وَكُنْيَتِي»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என்னுடைய பெயரையும் (முஹம்மத்), என்னுடைய குன்யாவையும் (அபுல் காசிம் எனும் சிறப்புப் பெயரையும் ஒரே நபருக்குச் சூட்டுவதன் மூலம்) ஒன்றாகச் சேர்க்காதீர்கள்."
ஹதீஸ் தரம் : நம்பகமானது, ஆதாரப்பூர்வமானது
حسن صحيح
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ، بِالْفُسْطَاطِ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ § «نَهَى أَنْ يَجْمَعَ أَحَدٌ اسْمَهُ وَكُنْيَتَهُ، فَيُسَمَّى مُحَمَّدٌ أَبَا الْقَاسِمِ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(அல்லாஹ்வின் தூதருடைய) பெயரையும், (அவருடைய) சிறப்புப் பெயரையும் (குன்யாவையும்) ஒருவர் ஒன்றிணைத்து, 'முஹம்மத் அபுல் காஸிம்' என்று (தனக்குப்) பெயர் சூட்டிக்கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : நம்பகமானது, ஆதாரப்பூர்வமானது
حسن صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «إِذَا كَنَّيْتُمْ فَلَا تَسَمَّوْا بِي، وَإِذَا سَمَّيْتُمْ بِي، فَلَا تَكَنَّوْا بِي» *
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"நீங்கள் (எனது) குன்யாவை (அபுல் காசிம் என்ற சிறப்புப் பெயரை)ச் சூட்டிக்கொண்டால், எனது பெயரை (முஹம்மத் என்று)ச் சூட்டிக்கொள்ளாதீர்கள். நீங்கள் எனது பெயரைச் சூட்டிக்கொண்டால், எனது குன்யாவைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்."
ஹதீஸ் தரம் : பலவீனமானது - நிராகரிக்கப்பட்டது
ضعيف منكر
أَخْبَرَنَا الْخَلِيلُ بْنُ مُحَمَّدٍ الْبَزَّارُ، بِوَاسِطَ قَالَ: حَدَّثَنَا جَدِّي تَمِيمُ بْنُ الْمُنْتَصِرِ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ الْأَزْرَقُ، عَنْ سُفْيَانَ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَا تَجْمَعُوا بَيْنَ اسْمِي وَكُنْيَتِي، أَنَا أَبُو الْقَاسِمِ، اللَّهُ يُعْطِي، وَأَنَا أَقْسِمُ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எனது பெயரையும் (முஹம்மத்), எனது சிறப்புப் பெயரையும் (அபுல்காசிம் - குன்யாவையும்) ஒன்றாக இணைத்து (ஒருவருக்கே பெயராக) வைக்காதீர்கள். நான் 'அபுல்காசிம்' (பங்கிடுபவன்) ஆவேன். அல்லாஹ்வே (அருட்கொடைகளை) வழங்குகிறான்; நானே (அவற்றை அவனது கட்டளைப்படி) பகிர்ந்தளிக்கிறேன்."
ஹதீஸ் தரம் : நம்பகமானது, ஆதாரப்பூர்வமானது
حسن صحيح
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي زَكَرِيَّا، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَحَسِّنُوا أَسْمَاءَكُمْ»
அபூதர்தா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக மறுமை நாளில் நீங்கள் உங்கள் பெயர்களாலும், உங்கள் தந்தையரின் பெயர்களாலும் அழைக்கப்படுவீர்கள். எனவே, உங்களது பெயர்களை அழகாக (அர்த்தமுள்ளதாக) வைத்துக் கொள்ளுங்கள்."
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §غَيَّرَ اسْمَ عَاصِيَةَ وَقَالَ: أَنْتِ جَمِيلَةُ
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆஸியா' (மாறு செய்பவள்/பாவம் செய்பவள்) என்ற பெயரை மாற்றி, "நீ ஜமீலா" (அழகானவள்) என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعَاصِيَةَ: §أَنْتِ جَمِيلَةُ
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (பாவம் செய்பவள் என்று பொருள்படும்) 'ஆஸியா' (என்ற பெயர் கொண்ட பெண்ணிடம்), "நீ (இனி) 'ஜமீலா' (அழகானவள்)" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : நம்பகமானது
حسن
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ § «مَرَّ بِأَرْضٍ تُسَمَّى غَدِرَةَ، فَسَمَّاهَا خَضِرَةً»
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் 'கதிரா' (வஞ்சகமான அல்லது வளமற்றது எனப் பொருள்படும்) என்று அழைக்கப்பட்ட ஒரு நிலத்தின் வழியாகச் சென்றார்கள். அப்போது (அதன் பெயரை மாற்றி) அதற்கு 'கழிரா' (பசுமையானது எனப் பொருள்படும்) என்று பெயரிட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِجَدِّهِ: § «مَا اسْمُكَ»؟ قَالَ: «حَزْنٌ»، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَلْ أَنْتَ سَهْلٌ»، قَالَ: لَا أُغَيِّرُ اسْمًا سَمَّانِيهِ أَبِي قَالَ سَعِيدٌ: «فَمَا زَالَتْ فِينَا حُزُونَةٌ بَعْدُ»
ஸயீத் பின் அல்-முஸய்யப் (ரஹ்) அவர்கள் தமது தந்தை (முஸய்யப்) வழியாக அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் எனது பாட்டனாரிடம் (ஹஸ்ன் பின் அபீ வஹ்ப் அவர்களிடம்), "உமது பெயர் என்ன?" என்று கேட்டார்கள். அவர், "ஹஸ்ன்" (கடினமான நிலம்/கடினத்தன்மை) என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "இல்லை, நீர் 'ஸஹ்ல்' (எளிமையானவர்/மென்மையானவர்)" என்று கூறினார்கள். அதற்கு அவர், "என் தந்தை எனக்குச் சூட்டிய பெயரை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன்" என்றார்.

ஸயீத் (ரஹ்) கூறுகிறார்: "அதன் பிறகு, (அந்தப் பெயரின் தாக்கத்தினால்) எங்களிடையே அந்தக் கடினத்தன்மை (குணத்திலும் வாழ்விலும்) இருந்து கொண்டே இருந்தது."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ § «سَمِعَ رَجُلًا يَقُولُ: يَا شِهَابُ، قَالَ: » أَنْتَ هِشَامٌ «
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(ஒரு முறை) ஒருவர், "யா ஷிஹாப்" (நெருப்புப் பிழம்பே) என்று (மற்றொருவரை) அழைப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். அப்போது நபியவர்கள், "நீர் ஹிஷாம் (கொடையாளி) ஆவீர்" என்று (அவரது பெயரை மாற்றிச்) சொன்னார்கள்.
ஹதீஸ் தரம் : நம்பகமானது
حسن
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَمْرٍو الضَّبِّيُّ، قَالَ: حَدَّثَنَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَسْرُوقٍ، عَنْ يُوسُفَ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ: أَتَيْتُ عَائِشَةَ، فَقُلْتُ: يَا أُمَّاهُ، حَدِّثِينِي بِشَيْءٍ سَمِعْتِيهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «الطَّيْرُ يَجْرِي بِقَدَرٍ، وَكَانَ يُعْجِبُهُ الْفَأْلُ الْحَسَنُ»
அபூபுர்தா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஏதேனும் ஒரு செய்தியை எனக்குக் கூறுங்கள்" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'பறவைகள் (பறப்பது போன்றவை அனைத்தும்) விதியின்படியே நடக்கின்றன. (அவற்றின் இயக்கத்தைக் கொண்டு சகுனம் பார்ப்பதில் எந்தப் பயனும் இல்லை)' என்று கூறினார்கள். மேலும், நன்னிமித்தம் (அதாவது நற்சொற்கள் மூலம் நன்மையை எதிர்பார்ப்பது) அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : நம்பகமானது
حسن
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §يَتَفَاءَلُ وَيُعْجِبُهُ الِاسْمُ الْحَسَنُ»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (காரியங்களில்) நன்னம்பிக்கை கொள்பவர்களாகவும் (சுப சகுனம் காண்பவர்களாகவும்), நல்ல பெயர்களை (கேட்பதை) விரும்புபவர்களாகவும் இருந்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «لَا عَدْوَى وَلَا طِيَرَةَ، وَأُحِبُّ الْفَأْلَ الصَّالِحَ»
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(அல்லாஹ்வின் நாட்டமின்றித் தானாகவே பரவும்) தொற்றுநோய் கிடையாது; (பறவைகளைக் கொண்டு கணிக்கப்படும்) துர்சகுனம் கிடையாது. மேலும், நற்சகுனத்தை (நன்மையான சொற்களை) நான் விரும்புகிறேன்."
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَبِي إِسْرَائِيلَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ قَتَادَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §لَا يَتَطَيَّرُ مِنَ شَيْءٍ غَيْرَ أَنَّهُ كَانَ، إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَرْضًا سَأَلَ عَنِ اسْمِهَا، فَإِنْ كَانَ حَسَنًا رُئِيَ الْبِشْرُ فِي وَجْهِهِ، وَإِنْ كَانَ قَبِيحًا رُئِيَ ذَلِكَ فِي وَجْهِهِ»
புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதையும் (துரதிர்ஷ்டமாகவோ அல்லது) கெட்ட சகுனமாகவோ கருத மாட்டார்கள். ஆயினும், அவர்கள் ஏதேனும் ஒரு பகுதிக்கு (அல்லது ஊருக்குச்) செல்ல நாடினால், அதன் பெயரைக் குறித்து விசாரிப்பார்கள். அப்பெயர் (பொருள் பொதிந்ததாகவோ அல்லது) நல்லதாகவோ இருந்தால், (அதனால் ஏற்படும்) மகிழ்ச்சி அவர்களின் முகத்தில் தென்படும். அப்பெயர் (பொருளற்றதாகவோ அல்லது) மோசமானதாகவோ இருந்தால், அது (அவ்வாறே) அவர்களின் முகத்தில் வெளிப்படும்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ خَيْثَمَةَ، قَالَ: § «كَانَ اسْمُ أَبِي عَزِيزًا، فَسَمَّاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ الرَّحْمَنِ»
கைஸமா (பின் அப்துர்ரஹ்மான்) அறிவிக்கிறார்கள்:

"என் தந்தையின் பெயர் 'அஸீஸ்' (கண்ணியமிக்கவர்/வல்லமையுள்ளவர்) என்று இருந்தது. (அதை மாற்றிய) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு 'அப்துர்ரஹ்மான்' (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று பெயரிட்டார்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ بْنُ أَبِي السَّفَرِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: سَمِعْتُ كُرَيْبًا يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: § «كَانَ اسْمُ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ بَرَّةَ، فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جُوَيْرِيَةَ»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஜுவைரியா பின்த் அல்-ஹாரித் (ரலி) அவர்களின் (ஆரம்பக்காலப்) பெயர் 'பர்ரா' (நன்மை செய்பவள்) என்பதாக இருந்தது. எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்கு 'ஜுவைரியா' (சிறிய பெண்மணி) எனப் பெயரிட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنَا عَطَاءُ بْنُ أَبِي مَيْمُونَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا رَافِعٍ، يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: § «كَانَ اسْمُ زَيْنَبَ بَرَّةَ، فَقَالُوا: تُزَكِّي نَفْسَهَا، فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْنَبَ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(உம்முல் முஃமினீன்) ஸைனப் அவர்களின் (முந்தைய) பெயர் 'பர்ரா' (புண்ணியவதி) என்றிருந்தது. அப்போது, "(இந்தப் பெயரின் மூலம்) அவர் தன்னைத்தானே தூய்மையானவர் எனப் புகழ்ந்து கொள்கிறார்" என்று (மக்களால்) கூறப்பட்டது. எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு 'ஸைனப்' என்று பெயர் சூட்டினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ الْحَسَنِ الْعَطَّارُ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَائِلٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «لَا تَقُولُوا: الْكَرْمُ، وَلَكِنْ قُولُوا: الْحَبَلَةُ، أَوِ الْعِنَبُ»
வாயில் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(திராட்சைக் கொடியை) 'அல்கர்ம்' என்று சொல்லாதீர்கள்; மாறாக 'அல்ஹபலா' என்றோ அல்லது 'அல்இனப்' (திராட்சை) என்றோ சொல்லுங்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَا تَقُولُوا: الْعِنَبُ الْكَرْمُ، إِنَّمَا الْكَرْمُ الرَّجُلُ الْمُسْلِمُ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"திராட்சையை (திராட்சைக் கொடியை) 'அல்கர்ம்' (வள்ளல் தன்மை மிக்கது) என்று நீங்கள் கூறாதீர்கள். ஏனெனில், உண்மையான 'அல்கர்ம்' (வள்ளல் தன்மை மிக்கவர்/கண்ணியமானவர்) ஒரு முஸ்லிமான மனிதரே ஆவார்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «تَقُولُونَ: وَالْكَرَمُ، وَإِنَّمَا الْكَرْمُ قَلْبُ الْمُؤْمِنِ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் (திராட்சைக் கொடியை) 'அல்கர்ம்' (கண்ணியமானது) என்று கூறுகிறீர்கள்; ஆனால், உண்மையில் 'அல்கர்ம்' (கண்ணியத்திற்குரியது) என்பது இறைநம்பிக்கையாளரின் (முஃமினின்) உள்ளமேயாகும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا حَاجِبُ بْنُ أَرَّكِينَ، بِدِمَشْقَ قَالَ: حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ، عَنِ الزُهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَا يَقُولَنَّ أَحَدُكُمُ: الْكَرْمُ، فَإِنَّ الْكَرْمَ قَلْبُ الْمُؤْمِنِ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் எவரும் (திராட்சையை அல்லது திராட்சைக் கொடியை) 'அல்-கர்ம்' என்று கூற வேண்டாம். ஏனெனில், நிச்சயமாக 'அல்-கர்ம்' (எனும் கண்ணியத்திற்கு மிகவும் தகுதியானது) இறைநம்பிக்கையாளரின் (முஃமினின்) உள்ளமாகும்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «أَخْنَعُ الْأَسْمَاءِ عِنْدَ اللَّهِ رَجُلٌ تُسَمَّى بِمِلْكِ الْأَمْلَاكِ - يَعْنِي: شَاهَانِ شَاهَا -»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"அல்லாஹ்விடம் பெயர்களில் மிகவும் இழிவானது, ஒரு மனிதன் தன்னை 'அரசர்களுக்கெல்லாம் அரசன்' (மாலிகுல் அம்லாக் - அதாவது ஷாஹான் ஷாஹ்) என்று பெயரிட்டுக் கொள்வதாகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ الرُّكَيْنَ بْنَ الرَّبِيعِ، يُحَدِّثُ، عَنْ أَبِيهِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ: § «نَهَانَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُسَمِّيَ رَقِيقَنَا بِأَرْبَعَةِ أَسْمَاءٍ: أَفْلَحَ، وَرَبَاحٍ، وَيَسَارٍ، وَنَافِعٍ»
சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

எங்கள் பணியாளர்களுக்கு (அடிமைகளுக்கு) 'அஃப்லஹ்' (வெற்றியாளன்), 'ரபாஹ்' (இலாபம்), 'யஸார்' (வசதி/எளிமை), 'நாஃபிஉ' (பயன் அளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்டுவதற்கு அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَا تُسَمِّ عَبْدَكَ أَفْلَحَ، وَلَا نَجِيحًا، وَلَا رَبَاحًا، وَلَا يَسَارًا، وَانْظُرُوا أَنْ لَا تَزِيدُوا عَلَيْهِ»
ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உமது அடிமைக்கு (அல்லது பணியாளருக்கு) அஃப்லஹ் (வெற்றியாளன்), நஜீஹ் (தேர்ச்சியாளன்), ரபாஹ் (இலாபம்), யஸார் (வசதி/எளிமை) என்று பெயர் சூட்ட வேண்டாம். மேலும், இவற்றின் மீது (இத்தகைய பொருளுடைய வேறு பெயர்களை) நீங்கள் அதிகரித்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مَكْحُولٌ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكُزْبُرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنِ الرَّبِيعِ بْنِ عُمَيْلَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَا تُسَمِّيَنَّ غُلَامَكَ رَبَاحًا، وَلَا نَجِيحًا، وَلَا يَسَارًا، وَلَا أَفْلَحَ، إِنَّمَا هِيَ أَرْبَعٌ، فَلَا تَزِيدُوا عَلَيْهِ»
சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உமது பணியாளருக்கு (அல்லது சிறுவனுக்கு) 'ரபாஹ்' (இலாபம்) என்றோ, 'நஜீஹ்' (வெற்றியாளர்/தேர்ச்சி பெற்றவர்) என்றோ, 'யஸார்' (வசதி/செல்வம்) என்றோ, 'அஃப்லஹ்' (மிகவும் வெற்றியாளர்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம். அவை (தடுக்கப்பட்டவை) இந்த நான்கு (பெயர்கள்) மட்டுமே. எனவே, நீங்கள் இதில் (வேறெதையும்) அதிகமாக்கிவிட வேண்டாம்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْكَرِيمِ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ عَقِيلِ بْنِ مَعْقِلٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «إِنْ عِشْتُ إِنْ شَاءَ اللَّهُ زَجَرْتُ أَنْ يُسَمَّى بَرَكَةً، وَنَافِعًا، وَأَفْلَحَ»، فَلَا أَدْرِي قَالَ: أَفْلَحُ أَمْ لَا؟ فَقُبِضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَزْجُرْ عَنْ ذَلِكَ، فَأَرَادَ عُمَرُ أَنْ يَزْجُرَ عَنْ ذَلِكَ، ثُمَّ تَرَكَهُ
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்), நான் (தொடர்ந்து) உயிருடன் வாழ்ந்தால், 'பரகத்' (அருள்), 'நாஃபிஉ' (பயனளிப்பவர்), 'அஃப்லஹ்' (வெற்றியாளர்) என்று பெயரிடுவதை நான் (நிச்சயமாகத்) தடை செய்வேன்" என்று கூறுவதை நான் செவியுற்றேன். ('அஃப்லஹ்' என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை). பின்னர், நபி (ஸல்) அவர்கள் அதனைத் தடை செய்யாமலேயே மரணமடைந்துவிட்டார்கள். (அதன் பிறகு) உமர் (ரழி) அவர்கள் அதைத் தடை செய்ய நாடினார்கள்; பிறகு அதனை(த் தடை செய்யாமல்) விட்டுவிட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى، بِعَسْكَرِ مُكْرَمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: § «أَرَادَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْهَى أَنْ يُسَمَّى بِبَرَكَةَ، وَأَفْلَحَ، وَيَسَارٍ، وَنَافِعٍ، وَنَحْوِ ذَلِكَ، ثُمَّ رَأَيْتُهُ سَكَتَ عَنْهَا بَعْدُ، فَلَمْ يَقُلْ شَيْئًا، وَقُبِضَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَرَادَ عُمَرُ أَنْ يَنْهَى عَنْ ذَلِكَ، فَتَرَكَهُ»
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள், பரகா (அருள்), அஃப்லஹ் (வெற்றி பெறுபவன்), யஸார் (வசதி/இலகு), நாஃபிஉ (பயனளிப்பவன்) மற்றும் இவை போன்ற பெயர்களைச் சூட்டுவதைத் தடை செய்ய நாடினார்கள். பின்னர், அவர்கள் அது குறித்து மௌனம் சாதித்ததை நான் கண்டேன். (அதன் பிறகு) அவர்கள் அதுபற்றி வேறு எதுவும் கூறவில்லை; (இந்த நிலையிலேயே) நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்களும் (அப்பெயர்களைத்) தடை செய்ய நாடினார்கள்; ஆனால், (பிறகு அந்த எண்ணத்தைக்) கைவிட்டுவிட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ عُمَرُ: لَئِنْ عِشْتُ لَأُخْرِجَنَّ الْيَهُودَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ، قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَئِنْ عِشْتُ لَأَنْهَيَنَّ أَنْ يُسَمَّى بِرَبَاحٍ، وَنَجِيحٍ، وَأَفْلَحَ، وَيَسَارٍ»
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நான் (இன்னும் சில காலம்) உயிருடன் இருந்தால், அரேபிய தீபகற்பத்திலிருந்து யூதர்களை நிச்சயமாக வெளியேற்றுவேன்."

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் (இன்னும் சில காலம்) உயிருடன் இருந்தால், (பணியாளர்களுக்கு) ரபாஹ், நஜீஹ், அஃப்லஹ் மற்றும் யஸார் ஆகிய பெயர்களைச் சூட்டுவதை நிச்சயமாகத் தடுப்பேன்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: § «هَمَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَزْجُرَ أَنْ يُسَمَّى مَيْمُونٌ، وَبَرَكَةُ، وَأَفْلَحُ وَهَذَا النَّحْوُ، ثُمَّ تَرَكَهُ»
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், 'மைமூன்' (பாக்கியவான்), 'பரகத்' (பாக்கியம்), 'அஃப்லஹ்' (வெற்றியாளன்) மற்றும் இது போன்ற பெயர்களைச் சூட்டுவதைத் தடை செய்ய நாடினார்கள். பின்னர் அதை (தடை செய்யாமல்) விட்டுவிட்டார்கள்.
ஹதீஸ் தரம் : பலவீனமானது - முரண்பட்டது
ضعيف شاذ
بَابُ الصُّوَرِ وَالْمُصَوِّرِينَ
உருவப்படங்கள் மற்றும் உருவம் வரைபவர்கள் பற்றிய பாடம்
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ اللَّيْثِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أُمِّهِ أَسْمَاءَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، وَكَانَتْ فِي حِجْرِ عَائِشَةَ عَنْ عَائِشَةَ، قَالَتْ: §قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَفَرٍ وَعِنْدِي نَمَطٌ فِيهِ صُورَةٌ، فَوَضَعْتُهُ عَلَى سَهْوَتِي، قَالَتْ: فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاجْتَبَذَهُ، وَقَالَ: «أَتَسْتُرِينَ الْجِدَارَ»؟ فَجَعَلْتُهُ وِسَادَتَيْنِ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْتَفِقُ عَلَيْهِمَا
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து (திரும்பி) வந்தார்கள். அப்போது என்னிடம் உருவங்கள் (சித்திரங்கள்) பொறிக்கப்பட்ட ஒரு திரைச்சீலை (விரிப்பு) இருந்தது; அதை நான் எனது (அறையின்) மாடத்தின் (அல்லது அலமாரியின்) மீது தொங்கவிட்டிருந்தேன். (அதைப் பார்த்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைப் பிடித்து இழுத்து (அகற்றி)விட்டு, "சுவருக்கா நீ திரையிடுகிறாய்?" என்று கேட்டார்கள். எனவே, (அதை வெட்டி) நான் இரண்டு தலையணைகளாக மாற்றினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றின் மீது சாய்ந்து கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ § «نَهَى عَنِ الصُّوَرِ فِي الْبَيْتِ»
நபி (ஸல்) அவர்கள் வீட்டில் (உயிரினங்களின்) உருவப்படங்களை (வைத்திருப்பதை)த் தடை செய்தார்கள் என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ، فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ عَلَى الْبَابِ فَلَمْ يَدْخُلْ، فَعَرَفْتُ فِي وَجْهِهِ الْكَرَاهِيَةَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَتُوبُ إِلَى اللَّهِ، وَإِلَى رَسُولِهِ، فَمَاذَا أَذْنَبْتُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «فَمَا بَالُ هَذِهِ النُّمْرُقَةِ»؟ فَقَالَتِ: اشْتَرَيْتُهَا لَكَ، تَقْعُدُ عَلَيْهَا وَتَوَسَّدُهَا، فَقَالَ: «إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ فَيُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ»، ثُمَّ قَالَ: «إِنَّ الْبَيْتَ الَّذِي فِيهِ الصُّوَرُ لَا تَدْخُلُهُ الْمَلَائِكَةُ»
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட ஒரு சிறிய மெத்தையை (தலையணையை) விலைக்கு வாங்கினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கண்டபோது, (வீட்டிற்குள் நுழையாமல்) வாசலிலேயே நின்றுவிட்டார்கள்; அவர்கள் உள்ளே நுழையவில்லை. அவர்களது முகத்தில் வெறுப்பை (அதிருப்தியை) நான் அறிந்து கொண்டேன். எனவே நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் (எனது தவறுக்காக) மீண்டு வருகிறேன் (தவ்பா செய்கிறேன்). நான் என்ன பாவம் செய்தேன்?" என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தத் தலையணையின் நிலை என்ன (இது எதற்காக இங்கு உள்ளது)?" என்று கேட்டார்கள். நான், "நீங்கள் இதன் மீது அமர்வதற்காகவும், இதைத் தலையணையாகப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் (சாய்ந்து கொள்வதற்காகவும்) உங்களுக்காகவே இதை வாங்கினேன்" என்றேன்.

அப்போது அவர்கள், "நிச்சயமாக இந்த உருவங்களை (படங்களை) உருவாக்கியவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களிடம், 'நீங்கள் படைத்தவற்றிற்கு உயிர் கொடுங்கள்' என்று (சவாலாகக்) கூறப்படும்" என்றார்கள். பின்னர், "நிச்சயமாக உருவப்படங்கள் இருக்கும் வீட்டிற்குள் (அருள் புரியும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا ابْنُ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ إِشْكَابٍ، قَالَ: حَدَّثَنَا قُرَادٌ أَبُو نُوحٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْفٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: جَاءَهُ رَجُلٌ فَقَالَ: إِنِّي عَمِلْتُ هَذِهِ التَّصَاوِيرَ، قَالَ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ §اللَّهَ يُعَذَّبُ الْمُصَوِّرِينَ لِمَا صَوَّرُوا»، قَالَ: فَذَهَبَ الرَّجُلُ وَزَعَمَ أَنَّ لَهُ عِيَالًا قَالَ ابْنُ عَبَّاسٍ: «لَا تُصَوِّرْ شَيْئًا فِيهِ رُوحٌ»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒருவர் அவர்களிடம் வந்து, "நான் இந்த உருவப் படங்களை (கைவேலையாகச்) செய்கிறேன்" என்று கூறினார். அதற்கு அவர்கள் (இப்னு அப்பாஸ்), "நபி (ஸல்) அவர்கள், 'நிச்சயமாக அல்லாஹ் உருவங்களை உருவாக்குபவர்களை (உயிரினங்களைச் சித்திரங்களாக வரைபவர்களை), அவர்கள் உருவாக்கியவற்றின் காரணமாகத் தண்டிப்பான்' என்று கூறியுள்ளார்கள்" என்றார்கள்.

(இதைக் கேட்ட) அந்த மனிதர், தமக்கு(ப் பராமரிக்க வேண்டிய) ஒரு குடும்பம் இருப்பதாகக் கூறி (வருத்தத்துடன்) சென்றார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "உயிருள்ள எந்த ஒன்றின் உருவத்தையும் நீர் உருவாக்காதீர்!" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَهِيَ مُسْتَتِرَةٌ بِقِرَامٍ فِيهِ تَمَاثِيلُ، فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَهْوَى إِلَى الْقِرَامِ، فَهَتَكَهُ بِيَدِهِ، ثُمَّ قَالَ: «إِنَّ §أَشَدَّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ الَّذِينَ يُشَبِّهُونَ بِخَلْقِ اللَّهِ»
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

உருவங்கள் (சித்திரங்கள்) பொறிக்கப்பட்ட ஒரு (மெல்லிய கம்பளித்) திரையால் (எனது அறையை) நான் மறைத்திருந்த நிலையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (அதைக் கண்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அவர்கள் அந்தத் திரையை நோக்கிச் சென்று, தமது கையால் அதைக் கிழித்தார்கள். பின்னர், "மறுமை நாளில் மக்களில் மிகக் கடுமையான வேதனைக்குள்ளாகுபவர்கள் யாரெனில், அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாக (உருவங்களை) உருவாக்குபவர்கள்தான்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عَوْفٍ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي الْحَسَنِ، قَالَ: كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ، فَأَتَاهُ رَجُلٌ، فَقَالَ: إِنِّي رَجُلٌ مَعِيشَتِي مِنْ هَذِهِ التَّصَاوِيرِ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: سَمِعْتُ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «مَنْ صَوَّرَ صُورَةٍ، فَإِنَّ اللَّهَ يُعَذِّبُهُ حَتَّى يَنْفُخَ فِيهِ الرُّوحَ، وَلَيْسَ بِنَافِخٍ»، فَاصْفَرَّ لَوْنُهُ، فَقَالَ: إِنْ كُنْتَ لَابُدَّ فَعَلَيْكَ بِالشَّجَرِ وَمَا لَيْسَ فِيهِ رُوحٌ
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "நிச்சயமாக நான் இந்த உருவங்களை (வரைந்து/செதுக்கி) பிழைப்பு நடத்துபவன்," என்று கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "'எவர் ஓர் உருவத்தை (உயிரினங்களின் உருவத்தை) உருவாக்குகிறாரோ, அவர் அதில் உயிரை ஊதும் வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; ஆனால், அவரால் (ஒருபோதும்) அதில் உயிரை ஊத முடியாது' என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன்," என்றார்கள்.

(இதைக் கேட்ட) அந்த மனிதரின் நிறம் (அச்சத்தால்) மாறியது (முகம் வெளிறிப் போனது). அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "நீ (உருவங்களை வரைந்தே) ஆக வேண்டும் என்ற கட்டாய நிலையில் இருந்தால், மரங்களையும் உயிர் இல்லாதவற்றையும் (வரைவதை) நீ மேற்கொள்வாயாக," என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّ رَافِعَ بْنَ إِسْحَاقَ، مَوْلَى آلِ الشِّفَاءِ، أَخْبَرَهُ قَالَ: دَخَلْتُ أَنَا وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي طَلْحَةَ، عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ نَعُودُهُ قَالَ: فَقَالَ لَنَا أَبُو سَعِيدٍ: أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ §الْمَلَائِكَةَ لَا تَدْخُلُ بَيْتًا فِيهِ تَمَاثِيلُ أَوْ صُورَةٌ» يَشُكُّ إِسْحَاقُ أَيُّهُمَا قَالَ أَبُو سَعِيدٍ
அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"(உயிரினங்களின்) உருவச் சிலைகளோ அல்லது உருவப் படங்களோ இருக்கும் வீட்டிற்குள் (அருள் புரியும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தார்கள்.

(இதில் 'உருவச் சிலைகளோ' அல்லது 'உருவப் படங்களோ' என இவ்விரண்டில் எதை அபூ சயீத் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்பதில் அறிவிப்பாளரான இஸ்ஹாக் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது).
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، عَنْ أَبِي طَلْحَةَ، صَاحِبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ §الْمَلَائِكَةَ لَا تَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ» قَالَ بُسْرٌ: ثُمَّ اشْتَكَى فَعُدْنَاهُ، فَإِذَا عَلَى بَابِهِ سِتْرٌ، وَإِذَا فِيهِ صُورَةٌ، فَقُلْتُ لِعُبَيْدِ اللَّهِ الْخَوْلَانِيِّ: أَلَمْ يُخْبِرْنَا، وَيَدَعُ الثَّوْبَ؟ قَالَ عُبَيْدُ اللَّهِ: أَلَمْ تَسْمَعْهُ؟ قَالَ: «إِلَّا رَقْمًا فِي ثَوْبٍ؟ »
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழரான அபூ தல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக உருவப் படங்கள் உள்ள வீட்டிற்குள் மலக்குகள் (வானவர்கள்) நுழைவதில்லை."

புஸ்ர் (பின் ஸயீத்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர் (ஸைத் பின் காலித்) நோயுற்றார், நாங்கள் அவரை உடல்நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவரது வீட்டு வாசலில் ஒரு திரைச்சீலை இருந்தது; அதில் ஒரு உருவப் படம் இருந்தது. நான் உபைதுல்லாஹ் அல்-கவ்லானீயிடம், "(உருவப் படங்கள் குறித்து) அவர் நமக்கு (முன்னர்) அறிவிக்கவில்லையா? (அப்படியிருக்க) இந்தத் துணியை (ஏன் அகற்றாமல்) விட்டுவைத்துள்ளார்?" என்று கேட்டேன்.

அதற்கு உபைதுல்லாஹ், "'ஆடையில் (துணியில்) உள்ள சித்திரங்களைத் (அச்சுப் பதிப்புகளைத்) தவிர' என்று அவர் (ஸைத் பின் காலித்) கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?" என்று கேட்டார்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّهُ دَخَلَ عَلَى أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيِّ يَعُودُهُ، قَالَ: فَوَجَدْنَا عِنْدَهُ سَهْلَ بْنَ حُنَيْفٍ، قَالَ: فَدَعَا أَبُو طَلْحَةَ إِنْسَانًا، فَنَزَعَ نَمَطًا تَحْتَهُ، فَقَالَ لَهُ سَهْلُ بْنُ حُنَيْفٍ: §لِمَ تَنْزِعْهُ؟ فَقَالَ: إِنَّ فِيهِ تَصَاوِيرَ، وَقَدْ قَالَ فِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَدْ عَلِمْتَ، فَقَالَ سَهْلٌ: أَلَمْ يَقُلْ: «إِلَّا مَا كَانَ رَقْمًا فِي ثَوْبٍ»؟ قَالَ: بَلَى، وَلَكِنَّهُ أَطْيَبُ لِنَفْسِي
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூதல்ஹா அல்-அன்சாரி (ரலி) அவர்கள் (நோய்வாய்ப்பட்டிருந்தபோது), அவர்களை நலம் விசாரிக்கச் சென்றேன். அங்கு அவரிடம் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் இருப்பதைக் கண்டேன். அபூதல்ஹா (ரலி) அவர்கள் ஒருவரை அழைக்க, அவர் அபூதல்ஹாவுக்குக் கீழே (விரிக்கப்பட்டிருந்த) ஒரு விரிப்பை அகற்றினார்.

அப்போது ஸஹ்ல் (ரலி) அவர்கள், "அதை ஏன் அகற்றுகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.

அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள், "அதில் உருவப்படங்கள் உள்ளன. அவற்றைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதை (எச்சரிக்கையை) நீங்கள் அறிவீர்களே!" என்று பதிலளித்தார்கள்.

ஸஹ்ல் (ரலி) அவர்கள், "‘ஆடையில் (சித்திரமாகத் தைக்கப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட) அடையாளங்களைத் தவிர’ என்று நபி (ஸல்) அவர்கள் (விதிவிலக்காகக்) கூறவில்லையா?" என்று கேட்டார்கள்.

அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள், "ஆம், (நிச்சயமாகக் கூறினார்கள்;) எனினும், (அதை அகற்றுவதே) என் மனதிற்கு அதிகத் திருப்தியளிக்கிறது (பேணுதலானது)" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، قَالَ: رَأَيْتُ أَبِي اشْتَرَى حَجَّامًا، فَأَتَى بِمَحَاجِمِهِ فَكُسِرَتْ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ § «نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ، وَثَمَنِ الْكَلْبِ، وَكَسْبِ الْبَغِيِّ، وَلَعَنَ الْوَاشِمَةَ، وَالْمُسْتَوْشِمَةَ، وَآكِلَ الرِّبَا وَمُوكِلَهُ، وَلَعَنَ الْمُصَوِّرَ»
அவ்ன் பின் அபீ ஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
என் தந்தை (அபூ ஜுஹைஃபா - ரலி) அவர்கள் (ஹிஜாமா எனப்படும்) இரத்தம் உறிஞ்சி எடுக்கும் மருத்துவம் செய்யும் ஓர் அடிமையை விலைக்கு வாங்கியதை நான் பார்த்தேன். பின்னர் (அவனது) ஹிஜாமாக் கருவிகளைக் கொண்டு வரச் செய்து, அவை உடைக்கப்பட்டன (அவற்றை என் தந்தை உடைத்தார்). இது குறித்து நான் அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரத்தத்தின் விலையையும் (ஹிஜாமா செய்வதற்கான கூலியையும்), நாயின் விலையையும், விபச்சாரியின் வருமானத்தையும் தடை செய்துள்ளார்கள். மேலும், பச்சை குத்தி விடுபவளையும், பச்சை குத்திக் கொள்பவளையும், வட்டி உண்பவனையும் (வாங்குபவனையும்), வட்டி கொடுப்பவனையும் சபித்தார்கள். மேலும் உருவங்களை உருவாக்குபவனையும் (உயிரினங்களின் உருவங்களைச் செதுக்குபவர் அல்லது வரைபவர்) சபித்தார்கள்."
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ السَّبِيعِيِّ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ §جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي بَيْتِ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتْرٌ مُصَوِّرٌ فِيهِ تَمَاثِيلُ، فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ادْخُلْ، فَقَالَ: إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ تَمَاثِيلُ، فَإِنْ كُنْتَ لَابُدَّ جَاعِلًا فِي بَيْتِكَ، فَاقْطَعْ رُءُوسَهَا أَوِ اقْطَعْهَا وَسَائِدَ، وَاجْعَلْهَا بُسُطًا»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வீட்டில் உருவங்கள் (சித்திரங்கள்) பொறிக்கப்பட்ட ஒரு திரைச்சீலை இருந்தது. நபி (ஸல்) அவர்கள் (ஜிப்ரீலிடம்), "உள்ளே வாருங்கள்" என்று கூறினார்கள்.

அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "நிச்சயமாக உருவங்கள் (உயிரினங்களின் படங்கள் அல்லது சிலைகள்) உள்ள எந்த வீட்டிலும் நாங்கள் (வானவர்கள்) நுழைவதில்லை. (அந்தத் துணியை) உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தியே தீர வேண்டும் என்ற நிலை இருந்தால், அந்த உருவங்களின் தலைகளைத் துண்டித்து விடுங்கள் (அப்போது அது உயிரற்ற பொருளின் அல்லது மரத்தின் தோற்றத்தைப் பெற்றுவிடும்); அல்லது அவற்றைக் கிழித்து (கண்ணியப்படுத்தப்படாமல்) தலையணைகளாகவோ, (காலால் மிதிக்கப்படும்) விரிப்புகளாகவோ ஆக்கிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا، يَقُولُ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «أَتَانِي جِبْرِيلُ، فَقَالَ: إِنِّي كُنْتُ أَتَيْتُكَ الْبَارِحَةَ فَلَمْ يَمْنَعْنِي أَنْ أَدْخُلَ الْبَيْتَ الَّذِي كُنْتَ فِيهِ إِلَّا أَنَّهُ كَانَ فِي الْبَيْتِ تِمْثَالُ رَجُلٍ، وَكَانَ فِي الْبَيْتِ سِتْرٌ فِيهِ تَمَاثِيلُ، وَكَانَ فِي الْبَيْتِ كَلْبٌ، فَأَمَرَ بِرَأْسِ التِّمْثَالِ أَنْ يُقْطَعَ، وَأَمَرَ بِالسِّتْرِ الَّذِي فِيهِ التِّمْثَالُ أَنْ يُقْطَعَ رَأْسُ التِّمْثَالِ، وَجُعِلَ مِنْهُ وِسَادَتانِ، وَأَمَرَ بِالْكَلْبِ فَأُخْرِجَ، وَكَانَ الْكَلْبُ جَرْوًا لِلْحَسَنِ وَالْحُسَيْنِ تَحْتَ نَضَدٍ لَهُمْ، قَالَ: ثُمَّ أَتَانِي جِبْرِيلُ، فَمَا زَالَ يُوصِينِي بِالْجَارِ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து, 'நிச்சயமாக நான் நேற்று இரவு உங்களிடம் வந்தேன். நீங்கள் இருந்த அந்த வீட்டிற்குள் நான் நுழைவதற்கு, அந்த வீட்டில் (ஒரு மனிதனின்) உருவச்சிலை இருந்ததும், உருவங்கள் பொறிக்கப்பட்ட ஒரு திரைச்சீலை இருந்ததும், அந்த வீட்டில் ஒரு நாய் இருந்ததுமே என்னைத் தடுத்தன' என்று கூறினார்கள். (மேலும் அவர்) அந்தச் சிலையின் தலையைத் துண்டித்து விடுமாறும் (அப்போதுதான் அது ஒரு மரத்தைப் போன்ற தோற்றத்தைப் பெறும்), உருவம் பொறிக்கப்பட்ட அந்தத் திரைச்சீலையைத் துண்டித்து (அதை மிதிக்கப்படக்கூடிய) இரண்டு தலையணைகளாக ஆக்கிவிடுமாறும், அந்த நாயை வெளியேற்றி விடுமாறும் உத்தரவிட்டார்கள். (அவ்வீட்டிலிருந்த) அந்த நாய், ஹஸன் மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோருக்குச் சொந்தமான ஒரு நாய்க்குட்டியாகும்; அது அவர்களின் கட்டிலுக்கு (அல்லது பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு) கீழே இருந்தது.

பின்னர் ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து, அண்டை வீட்டார் குறித்து எனக்குத் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்கள்; எந்த அளவிற்கென்றால், அண்டை வீட்டாரை (சொத்தில் பங்குபெறும்) வாரிசாகவே ஆக்கிவிடுவார்களோ என்று நான் எண்ணும் அளவிற்கு (அவர்களின் உரிமைகளை வலியுறுத்தினார்கள்)."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: سَمِعْتُ أَبَا طَلْحَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: § «لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"(வேட்டை அல்லது பாதுகாப்புக்காக அல்லாத) நாயோ, (உயிரினங்களின்) உருவப்படமோ (அல்லது சிலையோ) உள்ள வீட்டிற்குள் (அருள் புரியும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லத் தாம் கேட்டதாக அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ السَّبَّاقِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالَ: أَخْبَرَتْنِي مَيْمُونَةُ، زَوْجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْبَحَ يَوْمًا وَاجِمًا، قَالَتْ مَيْمُونَةُ: يَا رَسُولَ اللَّهِ، اسْتَنْكَرْتُ هَيْئَتَكَ مُنْذُ الْيَوْمِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ §جِبْرِيلَ كَانَ وَعَدَنِي أَنْ يَلْقَانِيَ اللَّيْلَةَ فَلَمْ يَلْقَنِي، أَمَا وَاللَّهِ مَا أَخْلَفَنِي»، قَالَ: فَظَلَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَهُ ذَلِكَ عَلَى ذَلِكَ، ثُمَّ وَقَعَ فِي نَفْسِهِ جِرْوُ كَلْبٍ تَحْتَ فُسْطَاطٍ لَهُ، فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ، ثُمَّ أَخَذَ بِيَدِهِ مَاءً، فَنَضَحَ مَكَانَهُ، فَلَمَّا أَمْسَى لَقِيَهُ جِبْرِيلُ، فَقَالَ: «قَدْ كُنْتَ وَعَدْتَنِي أَنْ تَلْقَانِيَ الْبَارِحَةَ» قَالَ: أَجَلْ، وَلَكِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ، وَلَا صُورَةٌ
நபி (ஸல்) அவர்களின் மனைவி மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் காலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பேச்சின்றி) கவலையுடன் காணப்பட்டார்கள். மைமூனா (ரலி) அவர்கள் (நபியவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் உங்களது தோற்றத்தில் (ஏதோ ஒரு) மாற்றத்தைக் காண்கிறேனே?" என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிச்சயமாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் நேற்றிரவு என்னைச் சந்திப்பதாக வாக்களித்திருந்தார்கள்; ஆனால் அவர் என்னைச் சந்திக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (இதுவரை) எனக்கு அளித்த வாக்கை மீறியதில்லை" என்று கூறினார்கள்.

அன்றைய நாள் முழுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதே (கவலைத் தோய்ந்த) நிலையிலேயே இருந்தார்கள். பின்னர், அவர்களுக்குச் சொந்தமான ஒரு கூடாரத் திரை (அல்லது கட்டிலுக்கு) அடியில் ஒரு நாய்க்குட்டி இருப்பது (அவர்களின் கவனத்திற்கு வந்தது). உடனே அவர்கள் கட்டளையிட, அது வெளியேற்றப்பட்டது. பிறகு, அவர்கள் தமது கையில் தண்ணீரை எடுத்து, (அந்த நாய்க்குட்டி) இருந்த இடத்தில் தெளித்தார்கள்.

மாலை நேரமானபோது ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களைச் சந்தித்தார்கள். அப்போது (நபியவர்கள்), "நேற்றிரவு என்னைச் சந்திப்பதாக நீங்கள் வாக்களித்திருந்தீர்களே?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் (ஜிப்ரீல்), "ஆம், உண்மைதான். ஆனால், நாய் அல்லது உருவப்படங்கள் இருக்கும் வீட்டிற்குள் நாங்கள் (வானவர்கள்) நுழைவதில்லை" என்று கூறினார்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْكَرِيمِ، أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ عَقِيلِ بْنِ مَعْقِلٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §أَمَرَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ زَمَنَ الْفَتْحِ وَهُوَ بِالْبَطْحَاءِ أَنْ يَأْتِيَ الْكَعْبَةَ فَيَمْحُوَ كُلَّ صُورَةٍ فِيهَا، فَلَمْ يَدْخُلْهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى مُحِيَتْ كُلُّ صُورَةٍ فِيهَا»
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

மக்கா வெற்றியின்போது, (மக்காவிற்கு அருகிலுள்ள) 'பத்ஹா' என்னுமிடத்தில் இருந்த உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்களிடம், கஅபாவிற்குச் சென்று அதிலுள்ள அனைத்து உருவங்களையும் (ஓவியங்களையும்) அழித்துவிடும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அதிலிருந்த அனைத்து உருவங்களும் (முழுமையாக) அழிக்கப்படும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபாவிற்குள் நுழையவில்லை.
ஹதீஸ் தரம் : நம்பகமானது, ஆதாரப்பூர்வமானது
حسن صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ، عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ دَخَلَ الْبَيْتَ وَجَدَ فِيهِ صُورَةَ إِبْرَاهِيمَ وَصُورَةَ مَرْيَمَ، قَالَ: «أَمَّا هُمْ لَقَدْ سَمِعُوا أَنَّ §الْمَلَائِكَةَ لَا تَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ، هَذَا إِبْرَاهِيمُ مُصَوِّرٌ، فَمَا بَالُهُ يَسْتَقْسِمُ؟ »
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபா) ஆலயத்திற்குள் நுழைந்தபோது, அதில் இப்ராஹீம் (அலை) மற்றும் மர்யம் (அலை) ஆகியோரின் உருவப்படங்களைக் கண்டார்கள். அப்போது அவர்கள், "உருவப்படம் இருக்கும் வீட்டில் மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள் என்பதை இவர்கள் (மக்காவாசிகள்) திண்ணமாகக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். இதோ இப்ராஹீம் (அலை) அவர்களின் உருவப்படம் வரையப்பட்டுள்ளது; அவர் (அம்புகள் மூலம்) குறிபார்ப்பவராக (சித்தரிக்கப்பட்டுள்ளாரே), அவருக்கு என்ன நேர்ந்தது? (அவர் ஒருபோதும் அவ்வாறு செய்ததில்லையே!)" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، قَالَ: دَخَلْتُ أَنَا وَأَبُو هُرَيْرَةَ دَارًا لِسَعِيدٍ، أَوْ لِمَرْوَانَ، فَرَأَى مُصَوِّرًا يُصَوِّرُ فِي الْجِدَارِ، فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: مَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ يَخْلُقُ كَخَلْقِي؟ فَلْيَخْلُقُوا حَبَّةً، أَوْ لِيَخْلُقُوا ذَرَّةً»
அபூசுர்ஆ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஸயீத் அல்லது மர்வான் என்பவருக்குச் சொந்தமான ஒரு வீட்டிற்குள் நுழைந்தோம். அங்கே ஒரு ஓவியர் (அல்லது சிற்பி) சுவரில் உருவங்களை வரைந்துகொண்டிருப்பதை (அல்லது செதுக்கிக் கொண்டிருப்பதை) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கண்டார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பாக்கியம் பொருந்தியவனும், உயர்ந்தவனுமாகிய அல்லாஹ் கூறுகிறான்: 'எனது படைப்பைப் போன்று படைக்க முற்படுபவனை விடப் பெரும் அநீதியிழைப்பவன் வேறு யார் இருக்க முடியும்? (அவர்களுக்கு ஆற்றல் இருந்தால்) அவர்கள் ஒரு தானியத்தையோ அல்லது ஓர் அணுவையோ (அல்லது ஒரு சிறிய எறும்பையோ) படைத்துக் காட்டட்டும்!'"
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ حَدَّثَهُ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا §نَصَبَتْ سِتْرًا فِيهِ تَصَاوِيرُ، فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَزَعَهُ، قَالَتْ: فَقَطَّعْتُهُ وِسَادَتَيْنِ، فَقَالَ رَجُلٌ فِي الْمَجْلِسِ يُقَالُ لَهُ: رَبِيعَةُ بْنُ عَطَاءٍ مَوْلَى بَنِي زُهْرَةَ: أَمَا سَمِعْتَ أَبَا مُحَمَّدٍ يَذْكُرُ أَنَّ عَائِشَةَ قَالَتْ: فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْتَفِقُ عَلَيْهِمَا؟ قَالَ ابْنُ الْقَاسِمِ: لَا، قَالَ: لَكِنِّي قَدْ سَمِعْتُهُ يُرِيدُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ «
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் (உயிரினங்களின்) உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட ஒரு திரைச்சீலையைத் தொங்கவிட்டிருந்தேன். (வீட்டிற்குள்) நுழைந்த நபி (ஸல்) அவர்கள் அதனை (வெறுப்புடன்) அகற்றிவிட்டார்கள். உடனே, நான் அதைக் கிழித்து இரண்டு தலையணைகளாக ஆக்கிக் கொண்டேன்.

(இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்ட) சபையில் இருந்த பனூ ஸுஹ்ரா குலத்தவரின் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ரபீஆ பின் அதாஉ என்பவர் (அப்துர்ரஹ்மான் பின் காஸிமிடம்), "ஆயிஷா (ரழி) அவர்கள், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த இரண்டு தலையணைகளின் மீதும் சாய்ந்து கொள்வார்கள்' என்று (உமது தந்தை) அபூமுஹம்மத் (காஸிம் பின் முஹம்மத்) சொல்ல நீங்கள் கேட்கவில்லையா?" என்று கேட்டார். அதற்கு இப்னுல் காஸிம், "இல்லை" என்றார். (உடனே ரபீஆ), "ஆனால், அவர் (அதாவது காஸிம் பின் முஹம்மத்) அவ்வாறு சொல்வதை நான் கேட்டுள்ளேன்" என்றார்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §لَمَّا رَأَى الصُّوَرَ فِي الْبَيْتِ - يَعْنِي الْكَعْبَةَ - لَمْ يَدْخُلْ، وَأَمَرَ بِهَا فمُحِيَتْ، وَرَأَى إِبْرَاهِيمَ، وَإِسْمَاعِيلَ بِأَيْدِيهِمَا الْأَزْلَامُ، فَقَالَ: «قَاتَلَهُمُ اللَّهُ، وَاللَّهِ مَا اسْتَقْسَمَا بِالْأَزْلَامِ قَطُّ»
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (கஅபா எனும்) இறையில்லத்தில் உருவப் படங்களைக் கண்டபோது, (அவை இருக்கும் வரை) அதனுள் நுழையவில்லை. அவற்றை (அழிக்குமாறு) அவர்கள் உத்தரவிட்டார்கள்; அவ்வாறே அவை அழிக்கப்பட்டன. மேலும், இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகிய இருவரின் கைகளிலும் குறிபார்க்கும் அம்புகள் இருப்பது போன்ற (உருவப் படங்களையும்) அவர்கள் கண்டார்கள். அப்போது, "அல்லாஹ் அவர்களை (இப்பொய்களைப் புனைந்தவர்களை) அழிப்பானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்விருவரும் (இப்ராஹீமும் இஸ்மாயீலும்) குறிபார்க்கும் அம்புகளின் மூலம் ஒருபோதும் குறி கேட்டதில்லை" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ وَحَوْلَهُ ثَلَاثُ مِائَةٍ وَسِتُّونَ صَنَمًا، فَجَعَلَ يَطْعُنُهَا بِعُودٍ كَانَ مَعَهُ وَيَقُولُ: § «جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ، إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا»
அப்துல்லாஹ் (இப்னு மஸ்ஊத் - ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின் போது) பள்ளிவாசலுக்குள் (மஸ்ஜிதுல் ஹராமிற்குள்) நுழைந்தார்கள். அப்போது (கஃபாவைச்) சுற்றி முந்நூற்று அறுபது சிலைகள் இருந்தன. அப்போது, தம்மிடமிருந்த ஒரு குச்சியால் அச்சிலைகளைக் குத்தி(த் தள்ளி)க் கொண்டே, “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. நிச்சயமாக அசத்தியம் அழிந்துபோகக் கூடியதே ஆகும்” (திருக்குர்ஆன் 17:81) என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
بَابُ اللَّعِبِ وَاللَّهْوِ
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு பற்றிய பாடம்
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كُنْتُ §أَلْعَبُ بِالْبَنَاتِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: فَكُنَّ يَأْتِينِي صَوَاحِبِي، فَكُنَّ إِذَا رَأَيْنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْقَمِعْنَ مِنْهُ، فَكَانَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَرِّبُهُنَّ إِلَيَّ يَلْعَبْنَ مَعِي «
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களுக்கு முன்னிலையில்) பொம்மைகளை வைத்து விளையாடுவேன். அப்போது என் தோழிகள் என்னிடம் வருவார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டால் (அவர்களுக்கு அஞ்சி அல்லது வெட்கப்பட்டு) மறைந்து கொள்வார்கள். ஆனால், என்னுடன் விளையாடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழிகளை என்னிடம் (திரும்பி) அனுப்பி வைப்பார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: §دَخَلَ عَلَيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَلْعَبُ بِاللُّعَبِ، فَرَفَعَ السِّتْرَ، وَقَالَ: «مَا هَذَا يَا عَائِشَةُ؟ » فَقُلْتُ: لُعَبٌ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «مَا هَذَا الَّذِي أَرَى بَيْنَهُنَّ»؟ قُلْتُ: فَرَسٌ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَرَسٌ مِنْ رِقَاعٍ لَهُ جَنَاحٌ»؟ قَالَتْ: فَقُلْتُ: أَلَمْ يَكُنْ لِسُلَيْمَانَ بْنِ دَاوُدَ خَيْلٌ لَهَا أَجْنِحَةٌ؟ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(நபி) ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்தார்கள், அப்போது நான் பொம்மைகளைக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தேன். அவர்கள் திரையை உயர்த்தினார்கள், (பிறகு) "ஆயிஷாவே! இது என்ன?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (இவை) பொம்மைகள்" என்றேன். அவர்கள், "இவற்றிற்கு இடையே நான் காண்பது என்ன?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (இது ஒரு) குதிரை" என்றேன். அவர்கள், "துணித் துண்டுகளால் (செய்யப்பட்ட), அதற்கு இறக்கைகள் உள்ள குதிரையா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "ஸுலைமான் பின் தாவூத் (அலை) அவர்களுக்கு இறக்கைகள் கொண்ட குதிரைகள் இருக்கவில்லையா?" என்று கேட்டேன். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §يَدْخُلُ عَلَيَّ وَأَنَا أَلْعَبُ بِالْبَنَاتِ»
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"நான் (துணியால் செய்யப்பட்ட) பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வருவார்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ §أَلْعَبُ بِالْبَنَاتِ، وَتَجِيءُ صَوَاحِبِي فَيَلْعَبْنَ مَعِي، فَإِذَا رَأَيْنَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُمْنَ مِنْهُ، فَكَانَ يُدْخِلُهُنَّ إِلَيَّ فَيَلْعَبْنَ مَعِي»
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

"நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகளை வைத்து விளையாடுவேன். எனது தோழிகள் வந்து என்னுடன் விளையாடுவார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டதும் (வெட்கப்பட்டு அல்லது மரியாதையினால்) நழுவிச் செல்வார்கள். அப்போது என்னுடன் விளையாடுவதற்காக அவர்களை நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்) என்னிடம் அனுப்பி வைப்பார்கள்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: §بَيْنَمَا الْحَبَشَةُ يَلْعَبُونَ بِحِرَابِهِمْ إِذْ دَخَلَ عُمَرُ فَأَهْوَى إِلَى الْحَصَا فَحَصَبَهُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُمْ يَا عُمَرُ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அபிசீனியர்கள் (பள்ளிவாசலில்) தங்களுடைய ஈட்டிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது, உமர் (ரலி) அவர்கள் (அங்கு) நுழைந்து, (அவர்களைத் தடுப்பதற்காகத் தரையிலிருந்த) சிறு கற்களை எடுத்து அவர்கள் மீது எறிந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமரே! அவர்களை (தடுக்காமல்) விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ ابْنَ شِهَابٍ، حَدَّثَهُ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، §أَنَّ أَبَا بَكْرٍ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنًى تُغَنِّيَانِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسَجًّى بِثَوْبِهِ، فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ، فَكَشَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ وَقَالَ: «دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ، فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ»، قَالَتْ: وَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي بِرِدَائِهِ، وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ، وَهُمْ يَلْعَبُونَ وَأَنَا جَارِيَةٌ، فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْعَرِبَةِ الْحَدِيثَةِ السِّنِّ «
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(ஹஜ்ஜின் போது) மினாவின் நாட்களில், அபூபக்கர் (ரழி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது என்னருகில் இரண்டு சிறுமிகள் (புஆஸ் போர் குறித்த பாடல்களைப்) பாடிக்கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆடையால் தங்களைப் போர்த்தியிருந்தார்கள். (பாடிக்கொண்டிருந்த) அந்தச் சிறுமிகளை அபூபக்கர் (ரழி) அவர்கள் கடிந்துகொண்டார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது முகத்திலிருந்த) ஆடையை விலக்கிவிட்டு, "அபூபக்கரே! அவர்களை விட்டுவிடுங்கள்; ஏனெனில், இவை பெருநாள் (ஈத்) நாட்கள்" என்று கூறினார்கள்.

(மேலும்) ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அபிசீனியர்கள் (பள்ளிவாசலில் ஈட்டிகளால்) விளையாடிக் கொண்டிருந்ததை நான் பார்ப்பதற்காக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மேலாடையால் என்னை மறைத்து நின்றார்கள். அப்போது நான் ஒரு (சிறு) சிறுமியாக இருந்தேன். எனவே, விளையாட்டில் ஆர்வம் கொண்ட, இளம் வயது சிறுமியின் (ஆசையின்) அளவை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள் (அதாவது அவர்களுக்கு விளையாட்டில் இருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொள்ளுங்கள்)."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَهْلِ بْنِ عَسْكَرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ إِسْحَاقَ بْنِ رَاشِدٍ*، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَبَا بَكْرٍ، دَخَلَ عَلَيْهَا فِي أَيَّامِ التَّشْرِيقِ وَعِنْدَهَا جَارِيَتَانِ تُغَنِّيَانِ وَتَضْرِبَانِ بِالدُّفِّ، فَسَبَّهُمَا وَخَرَقَ دُفَّيْهِمَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «دَعْهُمَا، فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ»
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'அய்யாமுத் தஷ்ரீக்' (துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய) நாட்களில் அபூபக்கர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது என்னருகில் இரண்டு சிறுமியர் 'தஃப்' (எனும் ஒரு பக்கத் தோல் கருவியை) அடித்துப் (புஆஸ் போர் குறித்த பாடல்களைப்) பாடிக் கொண்டிருந்தனர். (அதைக் கண்ட) அபூபக்கர் (ரலி) அவர்கள், அச்சிறுமியரைக் கடிந்துகொண்டு, அவர்களுடைய 'தஃப்'பைக் கிழித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்! ஏனெனில், இவை (மகிழ்ச்சிக்குரிய) பெருநாள் (ஈத்) நாட்களாகும்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : பலவீனமானது
ضعيف
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ*، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ §الْحَبَشَةَ كَانُوا يَزْفِنُونَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيَتَكَلَّمُونَ بِكَلَامٍ لَا يَفْهَمْهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا يَقُولُونَ»؟ قَالُوا: مُحَمَّدٌ عَبْدٌ صَالِحٌ «
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அபிசீனியர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்பாக (தங்களது பாரம்பரிய முறைப்படி) விளையாடி (நடனமாடி)க் கொண்டிருந்தனர். மேலும், (நபியவர்களுக்குத்) தெரியாத ஒரு மொழியில் அவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர்கள் என்ன சொல்கிறார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு (அங்கிருந்தவர்கள்), "முஹம்மது ஒரு நல்லடியார் (என்று அவர்கள் கூறுகிறார்கள்)" எனப் பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : இதற்கான தரம்/தீர்ப்பு கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَقِيلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ §أَبَا بَكْرٍ، دَخَلَ عَلَيْهَا فِي أَيَّامِ عِيدٍ وَعِنْدَهَا جَارِيَتَانِ تُغَنِّيَانِ، وَتُدَفِّفَانِ، وَتَضْرِبَانِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَغَشٍّ بِثَوْبِهِ، فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ، فَكَشَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ وَجْهِهِ وَقَالَ: «دَعْهُنَّ يَا أَبَا بَكْرٍ، فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ، وَتِلْكَ أَيَّامُ مِنًى»، قَالَتْ عَائِشَةُ: وَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي بِرِدَائِهِ، وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ، وَهُمْ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ وَأَنَا جَارِيَةٌ.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

பெருநாள் தினங்களில் அபூபக்கர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது என்னருகில் இரண்டு சிறுமிகள் (புஆத் போர் பற்றிய பாடல்களைப்) பாடிக்கொண்டும், தஃப் (எனும் ஒரு பக்கத் தோல் கருவியை) அடித்துக்கொண்டும் இருந்தனர். (அந்நேரம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆடையால் தங்களைப் போர்த்திக் கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ட) அபூபக்கர் (ரலி) அவர்கள் அந்தச் சிறுமிகளைக் கடிந்துகொண்டார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்திலிருந்து ஆடையை விலக்கிவிட்டு, “அபூபக்கரே! அவர்களை விட்டுவிடுங்கள். ஏனெனில், இவை பெருநாள் தினங்கள்; (மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய) அவை மினாவுடைய தினங்கள்” என்று கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் (மேலும்) கூறுகிறார்கள்: நான் பள்ளிவாசலில் (ஈட்டி எறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது போர்வையால் என்னை மறைத்து (நின்று எனக்கு வசதி செய்து கொடுத்ததை) நான் பார்த்திருக்கிறேன். அப்போது நான் (சிறு வயதுடைய) ஒரு சிறுமியாக இருந்தேன்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ مُوسَى بْنِ مَيْسَرَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ»
அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் 'நர்த்' (எனும் பகடைக்காய்) விளையாடுகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்துவிட்டார் (அவர்களின் கட்டளையை மீறிவிட்டார்)."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: سَمِعْتُ الثَّوْرِيَّ، يُحَدِّثُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَكَأَنَّمَا غَمَسَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ»
புரைதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"எவர் 'நர்த்' (பகடை) விளையாடுகிறாரோ, அவர் தமது கையைப் பன்றியின் இறைச்சியிலும் அதன் இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்."
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلَّامٍ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §رَأَى رَجُلًا يَتْبَعُ حَمَامَةً فَقَالَ: «شَيْطَانٌ يَتْبَعُ شَيْطَانَةً»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு மனிதர் ஒரு புறாவைப் பின்தொடர்ந்து (விளையாடிக்கொண்டு) செல்வதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது, "(இறை நினைவை விட்டும் திசைதிருப்பப்பட்ட) ஒரு ஷைத்தான், (இவனைத் திசைதிருப்பிய) ஒரு பெண் ஷைத்தானைப் பின்தொடர்ந்து செல்கிறான்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : நம்பகமானது, ஆதாரப்பூர்வமானது
حسن صحيح
فَصْلٌ فِي السَّمَاعِ
செவிமடுத்தல் பற்றிய பிரிவு
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدٍ الزُّهْرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمِّي، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيُّ، عَنْ إِسْحَاقَ بْنِ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ §فِي حِجْرِي جَارِيَةٌ مِنَ الْأَنْصَارِ، فَزَوَّجْتُهَا، قَالَتْ فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عُرْسِهَا، فَلَمْ يَسْمَعْ غِنَاءً وَلَا لَعِبًا، فَقَالَ: يَا عَائِشَةُ، هَلْ غَنَّيْتُمْ عَلَيْهَا «؟ أَوَ لَا تُغَنُّونَ عَلَيْهَا»؟ ثُمَّ قَالَ: «إِنَّ هَذَا الْحَيَّ مِنَ الْأَنْصَارِ يُحِبُّونَ الْغِنَاءَ»
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"என் பொறுப்பில் (வளர்ப்பில்) அன்சாரி குலத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி இருந்தாள். நான் அவளுக்குத் திருமணம் செய்து வைத்தேன். அவளது திருமண நாளன்று (மணப்பெண் கணவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (அங்கு) அவர்கள் எந்தப் பாடலையும் விளையாட்டையும் செவியுறவில்லை. அப்போது அவர்கள், 'ஆயிஷாவே! நீங்கள் அவளுக்காகப் பாடவில்லையா? அல்லது நீங்கள் அவளுக்காகப் பாட மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். பிறகு, 'நிச்சயமாக அன்சாரி சமூகத்தினர் (திருமணக் கொண்டாட்டங்களில்) பாடல்களை விரும்பக் கூடியவர்கள் ஆவர்' என்று கூறினார்கள்."
ஹதீஸ் தரம் : பலவீனமானது
ضعيف
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ §أَبَا بَكْرٍ، دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ تُغَنِّيَانِ بِدُفَّيْنِ، وَتُغَنِّيَانِ فِي أَيَّامِهِمَا، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَتِرٌ بِثَوْبِهِ، فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ، فَكَشَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ وَقَالَ: «دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ، فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ»
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(புஆஸ் போரின் போது பாடப்பட்ட பாடல்களை) இரண்டு சிறுமிகள் தஃப் (எனும் ஒரு பக்கத் தோல் கருவி) அடித்துப் பாடிக் கொண்டிருந்தபோது அபூபக்கர் (ரலி) அவர்கள் என்னிடம் (உள்ளே) வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களது ஆடையால் (தங்களை) மூடியபடி இருந்தார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் அந்த இரண்டு சிறுமிகளையும் (அவ்வாறு பாடியதற்காகக்) கடிந்து கொண்டார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்களை மூடியிருந்த) ஆடையை விலக்கிவிட்டு, "அபூபக்கரே! அவர்களை விட்டுவிடுங்கள். ஏனெனில், இவை (மகிழ்ச்சிக்குரிய) பெருநாள் தினங்களாகும்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
قَالَتْ عَائِشَةُ: وَلَمَّا قَدِمَ وَفْدُ الْحَبَشَةِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامُوا يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §يَسْتُرُنِي بِرِدَائِهِ، وَأَنَا أَنْظُرُ إِلَيْهِمْ وَهُمْ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ حَتَّى أَكُونَ أَنَا الَّذِي أَسْأَمُ، فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ الْحَرِيصَةِ عَلَى اللَّهْوِ
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அபிசீனியக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் பள்ளிவாசலில் (ஈட்டிகளைக் கொண்டு) விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் பள்ளிவாசலில் விளையாடுவதை நான் பார்ப்பதற்காக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மேலங்கியால் என்னை மறைத்துக் கொண்டார்கள். நானாகவே சலிப்படைந்து (திரும்பும்) வரை நான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனவே, விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட இளம் வயதுச் சிறுமியின் (ஆசையை) நீங்கள் மதித்துக் கொள்ளுங்கள் (அல்லது அவளது நிலையை எண்ணிப் பாருங்கள்).
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
قَالَ الزُّهْرِيُّ: وَأَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ: §دَخَلَ عُمَرُ، وَالْحَبَشَةُ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ، فَزَجَرَهُمْ عُمَرُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُمْ يَا عُمَرُ، فَإِنَّهُمْ هُمْ بَنُو أَرْفِدَةَ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(ஒருமுறை) பள்ளிவாசலில் எத்தியோப்பியர்கள் (ஈட்டிகளைக் கொண்டு வீர விளையாட்டுகளை) விளையாடிக் கொண்டிருந்தபோது, உமர் (ரலி) அவர்கள் (அங்கே) உள்ளே வந்தார்கள். (பள்ளிவாசலில் இவ்வாறு விளையாடுவதைக் கண்டு) உமர் (ரலி) அவர்கள் அவர்களை அதட்டினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமரே! அவர்களை விட்டுவிடுங்கள்; ஏனெனில், அவர்கள் பனூ அர்ஃபிதா (எனும் கலைத்திறன் மிக்கவர்கள்) ஆவர்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ الْهَبَّارِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: دَخَلَ عَلَيَّ أَبُو بَكْرٍ وَعِنْدِي جَارِيَتَانِ مِنْ جَوَارِي الْأَنْصَارِ تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتِ الْأَنْصَارُ يَوْمَ بُعَاثٍ، فَقَالَ أَبُو بَكْرٍ: §أَمِزْمَارُ الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ وَذَلِكَ فِي يَوْمِ عِيدٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا بَكْرٍ، إِنَّ لِكُلَّ قَوْمٍ عِيدًا، وَهَذَا عِيدُنَا»
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

என்னிடம் அன்சாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் இருந்தபோது அபூபக்கர் (ரலி) அவர்கள் (என் வீட்டிற்குள்) வந்தார்கள். அந்தச் சிறுமிகள் (அன்சாரிகளுக்கிடையே போர் நடந்த) 'புஆத்' நாளில் அன்சாரிகள் (ஒருவருக்கொருவர் வீரத்தைப் பற்றிப்) பாடிய கவிதைகளைப் பாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா (இசைப் பாடல்களா)?" என்று கேட்டார்கள். அன்று பெருநாள் (ஈத்) தினமாக இருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூபக்கரே! (அவர்களை விட்டுவிடுங்கள்,) ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் ஒரு பெருநாள் உண்டு; இது நமது பெருநாள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ: §جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَخَلَ عَلَيَّ صَبِيحَةَ عُرْسِي، فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي، فَجَعَلَتْ جُوَيْرِيَاتٌ لَنَا يَضْرِبْنَ بِدُفٍّ لَهُنَّ، وَيَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِي يَوْمَ بَدْرٍ إِلَى أَنْ قَالَتْ إِحْدَاهُنَّ: وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ ...................
ருபையிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

எனது திருமண நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இப்போது) நீங்கள் என் அருகில் அமர்ந்திருப்பதைப் போன்றே, அவர்கள் எனது விரிப்பின் மீது வந்து அமர்ந்தார்கள். அப்போது எங்களைச் சேர்ந்த சிறுமியர் சிலர் 'தஃப்' (ஒரு பக்கத் தோல் கருவி) அடித்து, பத்ருப் போரில் கொல்லப்பட்ட எனது முன்னோர்களின் (வீரப் புகழைப்) பாடத் தொடங்கினர். அப்போது அவர்களில் ஒரு சிறுமி, "நாளை நடக்கவிருப்பதை அறியக்கூடிய ஓர் இறைத்தூதர் எங்களிடையே இருக்கின்றார்" என்று பாடினாள். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை (மட்டும்) விட்டுவிடு; இதற்கு முன் நீ என்ன (புகழ் பாடல்களைப்) பாடிக்கொண்டிருந்தாயோ அதையே பாடு!" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح