الشمائل المحمدية

46. باب ماجاء في فراش رسول الله صلى الله عليه وسلم

அஷ்-ஷமாயில் அல்-முஹம்மதிய்யா

46. சய்யிதினா முஹம்மது நபி (ஸல்) அவர்களின் படுக்கை பற்றிய அறிவிப்புகள்

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَ‏:‏ إِنَّمَا كَانَ فِرَاشُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، الَّذِي يَنَامُ عَلَيْهِ مِنْ أَدَمٍ، حَشْوُهُ لِيفٌ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கும் படுக்கை, ஈச்ச நார்களால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோல் விரிப்பாக இருந்தது."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் இஸ்னாத் (ஸுபைர் அலி ஸயீ)
حَدَّثَنَا أَبُو الْخَطَّابِ زِيَادُ بْنُ يَحْيَى الْبَصْرِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَيْمُونٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، قَالَ‏:‏ سُئِلَتْ عَائِشَةُ،‏:‏ -‏.‏
وَسُئِلَتْ حَفْصَةُ، مَا كَانَ فِرَاشُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي بَيْتِكِ‏؟‏ قَالَتْ‏:‏ مِسْحًا نَثْنِيهِ ثَنِيَّتَيْنِ فَيَنَامُ عَلَيْهِ، فَلَمَّا كَانَ ذَاتَ لَيْلَةٍ، قُلْتُ‏:‏ لَوْ ثَنَيْتَهُ أَرْبَعَ ثَنْيَاتٍ، لَكَانَ أَوْطَأَ لَهُ، فَثَنَيْنَاهُ لَهُ بِأَرْبَعِ ثَنْيَاتٍ، فَلَمَّا أَصْبَحَ، قَالَ‏:‏ مَا فَرشْتُمْ لِيَ اللَّيْلَةَ قَالَتْ‏:‏ قُلْنَا‏:‏ هُوَ فِرَاشُكَ، إِلا أَنَّا ثَنَيْنَاهُ بِأَرْبَعِ ثَنْيَاتٍ، قُلْنَا‏:‏ هُوَ أَوْطَأُ لَكَ، قَالَ‏:‏ رُدُّوهُ لِحَالَتِهِ الأُولَى، فَإِنَّهُ مَنَعَتْنِي وَطَاءَتُهُ صَلاتيَ اللَّيْلَةَ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது. மேலும் ஹஃப்ஸா (ரழி) அவர்களிடம், "உங்களுடைய வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய படுக்கை விரிப்பு எதாக இருந்தது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அது ஒரு முரட்டுத் துணியாகும். நாங்கள் அதனை இரண்டு மடிப்புகளாக மடித்து வைப்போம்; அதன் மீது அவர்கள் உறங்குவார்கள். ஒரு நாள் இரவு நான், 'இதை நான்கு மடிப்புகளாக மடித்தால், அது அவர்களுக்கு (இன்னும்) மென்மையாக இருக்குமே!' என்று கூறினேன். அவ்வாறே நாங்கள் அதை அவர்களுக்காக நான்கு மடிப்புகளாக மடித்தோம். காலை விடிந்ததும் அவர்கள், 'இன்றிரவு எனக்காக எதை விரித்தீர்கள்?' என்று கேட்டார்கள். நாங்கள், 'இது உங்களுடைய விரிப்புதான்; எனினும் நாங்கள் அதனை நான்கு மடிப்புகளாக மடித்தோம். அது உங்களுக்கு மென்மையாக இருக்கும் (என்று கூறினோம்)' என்றோம். அதற்கு அவர்கள், 'இதை அதன் பழைய நிலைக்கே திருப்பிவிடுங்கள். ஏனெனில், இதன் மென்மை இன்றிரவு என்னைத் தொழுகையிலிருந்து தடுத்துவிட்டது!' என்று கூறினார்கள்."

ஹதீஸ் தரம் : ஸனத் மிகவும் பலவீனமானது (ஸுபைர் அலி ஸயீ)