أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْقَطِيعِيُّ , ثنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنِي أَبِي، ثنا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، قَالَ الزُّهْرِيُّ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، وَمَرْوَانَ بْنِ الْحَكَمِ، يُصَدِّقُ حَدِيثَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا صَاحِبُهُ قَالَا: خَرَجَ رَسُولُ اللهِ ﷺ زَمَنَ الْحُدَيْبِيَةِ فِي بِضْعَ عَشْرَةَ مِائَةً مِنْ أَصْحَابِهِ , حَتَّى إِذَا كَانُوا بِذِي الْحُلَيْفَةِ قَلَّدَ رَسُولُ اللهِ ﷺ الْهَدْيَ وَأَشْعَرَهُ وَأَحْرَمَ بِالْعُمْرَةِ , وَبَعَثَ بَيْنَ يَدَيْهِ عَيْنًا لَهُ مِنْ خُزَاعَةَ يُخْبِرُهُ عَنْ قُرَيْشٍ , وَسَارَ رَسُولُ اللهِ ﷺ حَتَّى إِذَا كَانَ بِوَادِي الْأَشْطَاطِ قَرِيبٍ عَنْ عُسْفَانَ أَتَاهُ عَيْنُهُ الْخُزَاعِيُّ فَقَالَ: إِنِّي تَرَكْتُ كَعْبَ بْنَ لُؤَيٍّ وَعَامِرَ بْنَ لُؤَيٍّ قَدْ جَمَعُوا لَكَ الْأَحَابِشَ. قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ: وَقَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ: عَنِ ابْنِ الْمُبَارَكِ , قَدْ جَمَعُوا لَكَ الْأَحَابِيشَ وَجَمَعُوا لَكَ جُمُوعًا وَهُمْ مُقَاتِلُوكَ وَصَادُّوكَ عَنِ الْبَيْتِ , فَقَالَ النَّبِيُّ ﷺ: " أَشِيرُوا عَلَيَّ أَتَرَوْنَ أَنْ نَمِيلَ إِلَى ذَرَارِيِّ هَؤُلَاءِ الَّذِينَ أَعَانُوهُمْ فَنُصِيبَهُمْ , فَإِنْ قَعَدُوا قَعَدُوا مَوْتُورِينَ مَحْزُونِينَ , وَإِنْ نَجَوْا تَكُنْ عُنُقًا قَطَعَهَا اللهُ , أَوْ تَرَوْنَ أَنْ نَؤُمَّ الْبَيْتَ فَمَنْ صَدَّنَا عَنْهُ قَاتَلْنَاهُ؟ ". فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ يَا نَبِيَّ اللهِ , إِنَّمَا جِئْنَا مُعْتَمِرِينَ وَلَمْ نَجِئْ نُقَاتِلُ أَحَدًا , وَلَكِنْ مَنْ حَالَ بَيْنَنَا وَبَيْنَ الْبَيْتِ قَاتَلْنَاهُ. فَقَالَ النَّبِيُّ ﷺ: " فَرُوحُوا إِذًا ". قَالَ الزُّهْرِيُّ: وَكَانَ أَبُو هُرَيْرَةَ يَقُولُ: مَا رَأَيْتُ أَحَدًا قَطُّ كَانَ أَكْثَرَ مَشُورَةً لِأَصْحَابِهِ مِنْ رَسُولِ اللهِ ﷺ , قَالَ الزُّهْرِيُّ فِي حَدِيثِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ وَمَرْوَانَ بْنِ الْحَكَمِ: فَرَاحُوا حَتَّى إِذَا كَانَ بِبَعْضِ الطَّرِيقِ قَالَ النَّبِيُّ ﷺ: " إِنَّ خَالِدَ بْنَ الْوَلِيدِ بِالْغَمِيمِ فِي خَيْلٍ لِقُرَيْشٍ طَلِيعَةٍ , فَخُذُوا ذَاتَ الْيَمِينِ ". فَوَاللهِ مَا شَعَرَ بِهِمْ خَالِدٌ حَتَّى إِذَا هُوَ بِغَبْرَةِ الْجَيْشِ , فَانْطَلَقَ يَرْكُضُ نَذِيرًا لِقُرَيْشٍ , وَسَارَ رَسُولُ اللهِ ﷺ حَتَّى إِذَا كَانَ بِالثَّنِيَّةِ الَّتِي يَهْبِطُ عَلَيْهِمْ مِنْهَا بَرَكَتْ بِهِ رَاحِلَتُهُ , فَقَالَ النَّاسُ: حَلْ حَلْ , فَأَلَحَّتْ فَقَالُوا: خَلَأَتِ الْقَصْوَاءُ خَلَأَتِ الْقَصْوَاءُ , فَقَالَ النَّبِيُّ ﷺ: " مَا خَلَأَتِ الْقَصْوَاءُ وَمَا ذَاكَ لَهَا بِخُلُقٍ , وَلَكِنْ حَبَسَهَا حَابِسُ الْفِيلِ ". ثُمَّ قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَسْأَلُونَنِي خُطَّةً يُعَظِّمُونَ فِيهَا حُرُمَاتِ اللهِ إِلَّا أَعْطَيْتُهُمْ إِيَّاهَا. ثُمَّ زَجَرَهَا فَوَثَبَتْ بِهِ. قَالَ: فَعَدَلَ عَنْهَا حَتَّى نَزَلَ بِأَقْصَى الْحُدَيْبِيَةِ عَلَى ثَمَدٍ قَلِيلِ الْمَاءِ إِنَّمَا يَتَبَرَّضُهُ النَّاسُ تَبَرُّضًا , فَلَمْ يَلْبَثْهُ النَّاسُ أَنْ نَزَحُوهُ , فَشُكِيَ إِلَى رَسُولِ اللهِ ﷺ الْعَطَشُ , فَانْتَزَعَ سَهْمًا مِنْ كِنَانَتِهِ ثُمَّ أَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهُ فِيهِ , قَالَ: فَوَاللهِ مَازَالَ يَجِيشُ لَهُمْ بِالرِّيِّ حَتَّى صَدَرُوا عَنْهُ. قَالَ: فَبَيْنَا هُمْ كَذَلِكَ إِذْ جَاءَ بُدَيْلُ بْنُ وَرْقَاءَ الْخُزَاعِيُّ فِي نَفَرٍ مِنْ قَوْمِهِ , وَكَانُوا عَيْبَةَ نُصْحِ رَسُولِ اللهِ ﷺ مِنْ أَهْلِ تِهَامَةَ , فَقَالَ: إِنِّي تَرَكْتُ كَعْبَ بْنَ لُؤَيٍّ , وَعَامِرَ بْنَ لُؤَيٍّ , قَالَ أَحْمَدُ: حَدَّثَنَاهُ يَحْيَى بْنُ سَعِيدٍ عَنِ ابْنِ الْمُبَارَكِ , وَقَالَ: إِنِّي تَرَكْتُ كَعْبَ بْنَ لُؤَيٍّ وَعَامِرَ بْنَ لُؤَيٍّ نَزَلُوا أَعْدَادَ مِيَاهِ الْحُدَيْبِيَةِ مَعَهُمُ الْعُوذُ الْمَطَافِيلُ وَهُمْ مُقَاتِلُوكَ وَصَادُّوكَ عَنِ الْبَيْتِ. فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: " إِنَّا لَمْ نَجِئْ لِقِتَالِ أَحَدٍ , لَكِنَّا جِئْنَا مُعْتَمِرِينَ , وَإِنَّ قُرَيْشًا قَدْ نَهِكَتْهُمُ الْحَرْبُ وَأَضَرَّتْ بِهِمْ , فَإِنْ شَاءُوا مَادَدْتُهُمْ مُدَّةً وَيُخَلُّوا بَيْنِي وَبَيْنَ النَّاسِ , فَإِنْ أَظْهَرْ فَإِنْ شَاءُوا أَنْ يَدْخُلُوا فِيمَا دَخَلَ فِيهِ النَّاسُ فَعَلُوا , وَإِلَّا فَقَدْ جَمُّوا , وَإِنْ أَبَوْا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَأُقَاتِلَنَّهُمْ عَلَى أَمْرِي هَذَا حَتَّى تَنْفَرِدَ سَالِفَتِي أَوْ لَيُنْفِذَنَّ اللهُ أَمْرَهُ ". قَالَ يَحْيَى: عَنِ ابْنِ الْمُبَارَكِ , حَتَّى تَنْفَرِدَ , قَالَ: فَإِنْ شَاءوا مَادَدْنَاهُمْ مُدَّةً , قَالَ بُدَيْلٌ: سَأُبَلِّغُهُمْ مَا تَقُولُ، فَانْطَلَقَ حَتَّى أَتَى قُرَيْشًا فَقَالَ: إِنَّا قَدْ جِئْنَاكُمْ مِنْ عِنْدِ هَذَا الرَّجُلِ وَسَمِعْنَاهُ يَقُولُ قَوْلًا، فَإِنْ شِئْتُمْ نَعْرِضْهُ عَلَيْكُمْ. فَقَالَ سُفَهَاؤُهُمْ: لَا حَاجَةَ لَنَا فِي أَنْ تُحَدِّثَنَا عَنْهُ بِشَيْءٍ , وَقَالَ ذَوُو الرَّأْيِ مِنْهُمْ: هَاتِ مَا سَمِعْتَهُ يَقُولُ. قَالَ: سَمِعْتُهُ يَقُولُ كَذَا وَكَذَا. فَحَدَّثَهُمْ بِمَا قَالَ النَّبِيُّ ﷺ , فَقَامَ عُرْوَةُ بْنُ مَسْعُودٍ الثَّقَفِيُّ فَقَالَ: أَيْ قَوْمِ , أَلَسْتُمْ بِالْوَلَدِ؟ قَالُوا: بَلَى , قَالَ: أَوَلَسْتُ بِالْوَالِدِ؟ قَالُوا: بَلَى , قَالَ: فَهَلْ تَتَّهِمُونَنِي؟ قَالُوا: لَا , قَالَ: أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنِّي اسْتَنْفَرْتُ أَهْلَ عُكَاظٍ فَلَمَّا جَمَحُوا عَلَيَّ جِئْتُكُمْ بِأَهْلِي وَوَلَدِي وَمَنْ أَطَاعَنِي؟ قَالُوا: بَلَى , قَالَ: فَإِنَّ هَذَا قَدْ عَرَضَ عَلَيْكُمْ خُطَّةَ رُشْدٍ فَاقْبَلُوهَا وَدَعُونِي آتِهِ , فَقَالُوا: ائْتِهِ. فَأَتَاهُ فَجَعَلَ يُكَلِّمُ النَّبِيَّ ﷺ فَقَالَ لَهُ نَحْوًا مِنْ قَوْلِهِ لِبُدَيْلٍ , فَقَالَ عُرْوَةُ عِنْدَ ذَلِكَ: أَيْ مُحَمَّدُ أَرَأَيْتَ إِنِ اسْتَأْصَلْتَ قَوْمَكَ هَلْ سَمِعْتَ بِأَحَدٍ مِنَ الْعَرَبِ اجْتَاحَ أَصْلَهُ قَبْلَكَ , وَإِنْ تَكُنِ الْأُخْرَى فَوَاللهِ إِنِّي لَأَرَى وُجُوهًا وَأَرَى أَوْبَاشًا مِنَ النَّاسِ خُلَقَاءَ أَنْ يَفِرُّوا وَيَدَعُوكَ. فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: امْصُصْ بَظْرَ اللَّاتِ، أَنَحْنُ نَفِرُّ عَنْهُ وَنَدَعُهُ؟ فَقَالَ: مَنْ ذَا؟ فَقَالَ: أَبُو بَكْرٍ , قَالَ: أَمَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْلَا يَدٌ كَانَتْ لَكَ عِنْدِي لَمْ أَجْزِكَ بِهَا لَأَجَبْتُكَ. وَجَعَلَ يُكَلِّمُ النَّبِيَّ ﷺ , فَلَمَّا كَلَّمَهُ أَخَذَ بِلِحْيَتِهِ , وَالْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ قَائِمٌ عَلَى رَأْسِ النَّبِيِّ ﷺ وَمَعَهُ السَّيْفُ وَعَلَيْهِ الْمِغْفَرُ فَكُلَّمَا أَهْوَى عُرْوَةُ بِيَدِهِ إِلَى لِحْيَةِ النَّبِيِّ ﷺ ضَرَبَ يَدَهُ بِنَعْلِ السَّيْفِ وَقَالَ: أَخِّرْ يَدَكَ عَنْ لِحْيَةِ رَسُولِ اللهِ ﷺ , فَرَفَعَ عُرْوَةُ يَدَهُ فَقَالَ: مَنْ هَذَا؟ قَالُوا: الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ , قَالَ: أَيْ غُدَرُ أَوَلَسْتُ أَسْعَى فِي غَدْرَتِكَ , وَكَانَ الْمُغِيرَةُ صَحِبَ قَوْمًا فِي الْجَاهِلِيَّةِ فَقَتَلَهُمْ وَأَخَذَ أَمْوَالَهُمْ , ثُمَّ جَاءَ وَأَسْلَمَ قَالَ النَّبِيُّ ﷺ: " أَمَّا الْإِسْلَامُ فَأَقْبَلُ , وَأَمَّا الْمَالُ فَلَسْتُ مِنْهُ فِي شَيْءٍ " , ثُمَّ إِنَّ عُرْوَةَ جَعَلَ يَرْمُقُ النَّبِيَّ ﷺ بِعَيْنِهِ قَالَ: فَوَاللهِ مَا تَنَخَّمَ رَسُولُ اللهِ ﷺ نُخَامَةً إِلَّا وَقَعَتْ فِي كَفِّ رَجُلٍ مِنْهُمْ فَدَلَكَ بِهَا وَجْهَهُ وَجِلْدَهُ , وَإِذَا أَمَرَهُمُ ابْتَدَرُوا أَمْرَهُ , وَإِذَا تَوَضَّأَ كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وَضُوئِهِ , وَإِذَا تَكَلَّمُوا خَفَضُوا أَصْوَاتَهُمْ , وَمَا يُحِدُّونَ النَّظَرَ إِلَيْهِ تَعْظِيمًا لَهُ , فَرَجَعَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ: أَيْ قَوْمِ , وَاللهِ لَقَدْ وَفَدْتُ عَلَى الْمُلُوكِ وَوَفَدْتُ عَلَى قَيْصَرَ وَكِسْرَى وَالنَّجَاشِيِّ، وَاللهِ إِنْ رَأَيْتُ مَلِكًا قَطُّ يُعَظِّمُهُ أَصْحَابُهُ مَا يُعَظِّمُ أَصْحَابُ مُحَمَّدٍ مُحَمَّدًا , وَاللهِ إِنْ تَنَخَّمَ نُخَامَةً إِلَّا وَقَعَتْ فِي كَفِّ رَجُلٍ مِنْهُمْ فَدَلَكَ بِهَا وَجْهَهُ وَجِلْدَهُ , وَإِذَا أَمَرَهُمُ ابْتَدَرُوا أَمْرَهُ , وَإِذَا تَوَضَّأَ كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وَضُوئِهِ , وَإِذَا تَكَلَّمُوا خَفَضُوا أَصْوَاتَهُمْ عِنْدَهُ , وَمَا يُحِدُّونَ إِلَيْهِ النَّظَرَ تَعْظِيمًا لَهُ , وَإِنَّهُ قَدْ عَرَضَ عَلَيْكُمْ خُطَّةَ رُشْدٍ فَاقْبَلُوهَا. فَقَالَ رَجُلٌ مِنْ بَنِي كِنَانَةَ: دَعُونِي آتِهِ. قَالُوا: ائْتِهِ , فَلَمَّا أَشْرَفَ عَلَى النَّبِيِّ ﷺ وَأَصْحَابِهِ قَالَ النَّبِيُّ ﷺ: " هَذَا فُلَانٌ وَهُوَ مِنْ قَوْمٍ يُعَظِّمُونَ الْبُدْنَ فَابْعَثُوهَا لَهُ " , فَبُعِثَتْ لَهُ وَاسْتَقْبَلَهُ الْقَوْمُ يُلَبُّونَ , فَلَمَّا رَأَى ذَلِكَ قَالَ: سُبْحَانَ اللهِ مَا يَنْبَغِي لِهَؤُلَاءِ أَنْ يُصَدُّوا عَنِ الْبَيْتِ , فَلَمَّا رَجَعَ إِلَى أَصْحَابِهِ قَالَ: رَأَيْتُ الْبُدْنَ قَدْ قُلِّدَتْ وَأُشْعِرَتْ , فَلَمْ أَرَ أَنْ يُصَدُّوا عَنِ الْبَيْتِ , فَقَامَ رَجُلٌ مِنْهُمْ يُقَالُ لَهُ مِكْرَزُ بْنُ حَفْصٍ فَقَالَ: دَعُونِي آتِهِ , فَقَالُوا: ائْتِهِ , فَلَمَّا أَشْرَفَ عَلَيْهِمْ قَالَ النَّبِيُّ ﷺ: " هَذَا مِكْرَزٌ وَهُوَ رَجُلٌ فَاجِرٌ ". فَجَعَلَ يُكَلِّمُ النَّبِيَّ ﷺ , فَبَيْنَا هُوَ يُكَلِّمُهُ ﷺ إِذْ جَاءَ سُهَيْلُ بْنُ عَمْرٍو , قَالَ مَعْمَرٌ: فَأَخْبَرَنِي أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ , أَنَّهُ لَمَّا جَاءَ سُهَيْلٌ قَالَ النَّبِيُّ ﷺ: " قَدْ سُهِّلَ لَكُمْ أَمْرُكُمْ ". قَالَ الزُّهْرِيُّ فِي حَدِيثِهِ: فَجَاءَ سُهَيْلُ بْنُ عَمْرٍو فَقَالَ: هَاتِ اكْتُبْ بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابًا , فَدَعَا الْكَاتِبَ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: " اكْتُبْ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ " , فَقَالَ سُهَيْلٌ: أَمَّا الرَّحْمَنُ فَوَاللهِ مَا أَدْرِي مَا هُوَ , وَلَكِنِ اكْتُبْ: بِاسْمِكَ اللهُمَّ كَمَا كُنْتَ تَكْتُبُ. فَقَالَ الْمُسْلِمُونَ: لَا نَكْتُبُهَا إِلَّا بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ , فَقَالَ النَّبِيُّ ﷺ: " اكْتُبْ بِاسْمِكَ اللهُمَّ ". ثُمَّ قَالَ: " هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللهِ " , فَقَالَ سُهَيْلٌ: وَاللهِ لَوْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ رَسُولُ اللهِ مَا صَدَدْنَاكَ عَنِ الْبَيْتِ وَلَا قَاتَلْنَاكَ , وَلَكِنِ اكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ , فَقَالَ النَّبِيُّ ﷺ: " إِنِّي لَرَسُولُ اللهِ وَإِنْ كَذَّبْتُمُونِي , اكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ. قَالَ الزُّهْرِيُّ: وَذَلِكَ لِقَوْلِهِ: " لَا يَسْأَلُونَنِي خُطَّةً يُعَظِّمُونَ فِيهَا حُرُمَاتِ اللهِ إِلَّا أَعْطَيْتُهُمْ إِيَّاهَا " , فَقَالَ النَّبِيُّ ﷺ: " عَلَى أَنْ تُخَلُّوا بَيْنَنَا وَبَيْنَ الْبَيْتِ فَنَطُوفَ بِهِ "، فَقَالَ سُهَيْلٌ: وَاللهِ لَا تَتَحَدَّثُ الْعَرَبُ أَنَّا أُخِذْنَا ضَغْطَةً , وَلَكِنْ لَكَ مِنَ الْعَامِ الْمُقْبِلِ , فَكَتَبَ , فَقَالَ سُهَيْلٌ: عَلَى أَنْ لَا يَأْتِيَكَ مِنَّا رَجُلٌ وَإِنْ كَانَ عَلَى دِينِكَ إِلَّا رَدَدْتَهُ إِلَيْنَا. فَقَالَ الْمُسْلِمُونَ: سُبْحَانَ اللهِ كَيْفَ يُرَدُّ إِلَى الْمُشْرِكِينَ وَقَدْ جَاءَ مُسْلِمًا؟ فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ جَاءَ أَبُو جَنْدَلِ بْنُ سُهَيْلِ بْنِ عَمْرٍو يَرْسُفُ , وَقَالَ يَحْيَى: عَنِ ابْنِ الْمُبَارَكِ , يَرْصُفُ فِي قُيُودِهِ , وَقَدْ خَرَجَ مِنْ أَسْفَلِ مَكَّةَ حَتَّى رَمَى بِنَفْسِهِ بَيْنَ أَظْهُرِ الْمُسْلِمِينَ , فَقَالَ سُهَيْلٌ: هَذَا يَا مُحَمَّدُ أَوَّلُ مَا أُقَاضِيكَ عَلَيْهِ أَنْ تَرُدَّهُ إِلِيَّ , فَقَالَ النَّبِيُّ ﷺ: " إِنَّا لَمْ نَقْضِ الْكِتَابَ بَعْدُ " , قَالَ: فَوَاللهِ إِذًا لَا نُصَالِحُكَ عَلَى شَيْءٍ أَبَدًا , فَقَالَ النَّبِيُّ ﷺ: " فَأَجِزْهُ لِي " , قَالَ: مَا أَنَا بِمُجِيزِهِ , قَالَ: " بَلَى فَافْعَلْ ". قَالَ: مَا أَنَا بِفَاعِلٍ , قَالَ مِكْرَزٌ: بَلَى قَدْ أَجَزْنَاهُ لَكَ , فَقَالَ أَبُو جَنْدَلٍ: أَيْ مَعَاشِرَ الْمُسْلِمِينَ أُرَدُّ إِلَى الْمُشْرِكِينَ وَقَدْ جِئْتُ مُسْلِمًا , أَلَا تَرَوْنَ مَا قَدْ أَتَيْتُ؟ وَكَانَ قَدْ عُذِّبَ عَذَابًا شَدِيدًا فِي اللهِ عَزَّ وَجَلَّ , فَقَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: فَأَتَيْتُ النَّبِيَّ ﷺ فَقُلْتُ: أَلَسْتَ نَبِيَّ اللهِ؟ قَالَ: " بَلَى " , قُلْتُ: أَلَسْنَا عَلَى الْحَقِّ وَعَدُوُّنَا عَلَى الْبَاطِلِ؟ قَالَ: " بَلَى " , قُلْتُ: فَلِمَ نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا إِذًا؟ قَالَ: " إِنِّي رَسُولُ اللهِ وَلَسْتُ أَعْصِيهِ وَهُوَ نَاصِرِي " , قُلْتُ: أَوَلَيْسَ كُنْتَ تُحَدِّثُنَا أَنَّا سَنَأْتِي الْبَيْتَ فَنَطُوفُ بِهِ؟ قَالَ: " بَلَى فَأَخْبَرْتُكَ أَنَّكَ تَأْتِيهِ الْعَامَ "؟ قُلْتُ: لَا , قَالَ: " فَإِنَّكَ آتِيهِ وَمُطَّوِّفٌ بِهِ ". قَالَ: فَأَتَيْتُ أَبَا بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ فَقُلْتُ: يَا أَبَا بَكْرٍ أَلَيْسَ هَذَا نَبِيَّ اللهِ حَقًّا؟ قَالَ: بَلَى , قُلْتُ: أَلَسْنَا عَلَى الْحَقِّ وَعَدُوُّنَا عَلَى الْبَاطِلِ؟ قَالَ: بَلَى , قُلْتُ: فَلِمَ نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا إِذًا؟ قَالَ: أَيُّهَا الرَّجُلُ إِنَّهُ رَسُولُ اللهِ وَلَنْ يَعْصِيَ رَبَّهُ وَهُوَ نَاصِرُهُ فَاسْتَمْسِكْ بِغَرْزِهِ حَتَّى تَمُوتَ , فَوَاللهِ إِنَّهُ لَعَلَى الْحَقِّ , قُلْتُ: أَوَلَيْسَ كَانَ يُحَدِّثُنَا أَنَّهُ سَيَأْتِي الْبَيْتَ وَيَطُوفُ بِهِ؟ قَالَ: بَلَى , أَفَأَخْبَرَكَ أَنَّكَ تَأْتِيهِ الْعَامَ , قُلْتُ: لَا , قَالَ: فَإِنَّكَ آتِيهِ فَتَطُوفُ بِهِ. قَالَ الزُّهْرِيُّ: قَالَ عُمَرُ: فَعَمِلْتُ لِذَلِكَ أَعْمَالًا. قَالَ: فَلَمَّا فَرَغَ مِنْ قَضِيَّةِ الْكِتَابِ قَالَ رَسُولُ اللهِ ﷺ لِأَصْحَابِهِ: " قُومُوا فَانْحَرُوا ثُمَّ احْلِقُوا ". قَالَ: فَوَاللهِ مَا قَامَ مِنْهُمْ رَجُلٌ حَتَّى قَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ , فَلَمَّا لَمْ يَقُمْ مِنْهُمْ أَحَدٌ قَامَ فَدَخَلَ عَلَى أُمِّ سَلَمَةَ فَذَكَرَ لَهَا مَا لَقِيَ مِنَ النَّاسِ , فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: يَا رَسُولَ اللهِ أَتُحِبُّ ذَلِكَ؟ اخْرُجْ ثُمَّ لَا تُكَلِّمْ أَحَدًا مِنْهُمْ كَلِمَةً حَتَّى تَنْحَرَ بُدْنَكَ وَتَدْعُوَ حَالِقَكَ فَيَحْلِقَكَ. فَقَامَ فَخَرَجَ فَلَمْ يُكَلِّمْ أَحَدًا مِنْهُمْ حَتَّى فَعَلَ ذَلِكَ وَنَحَرَ هَدْيَهُ وَدَعَا حَالِقَهُ , يَعْنِي فَحَلَقَهُ , فَلَمَّا رَأَوْا ذَلِكَ قَامُوا فَنَحَرُوا وَجَعَلَ بَعْضُهُمْ يَحْلِقُ بَعْضًا حَتَّى كَادَ بَعْضُهُمْ يَقْتُلُ بَعْضًا غَمًّا , ثُمَّ جَاءَهُ نِسْوَةٌ مُؤْمِنَاتٌ , فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ} [الممتحنة: 10] حَتَّى بَلَغَ {بِعِصَمِ الْكَوَافِرِ} [الممتحنة: 10]. قَالَ: فَطَلَّقَ عُمَرُ يَوْمَئِذٍ امْرَأَتَيْنِ كَانَتَا لَهُ فِي الشِّرْكِ , فَتَزَوَّجَ إِحْدَاهُمَا مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ , وَالْأُخْرَى صَفْوَانُ بْنُ أُمَيَّةَ , ثُمَّ رَجَعَ إِلَى الْمَدِينَةِ فَجَاءَهُ أَبُو بَصِيرٍ رَجُلٌ مِنْ قُرَيْشٍ وَهُوَ مُسْلِمٌ , وَقَالَ يَحْيَى: عَنِ ابْنِ الْمُبَارَكِ , فَقَدِمَ عَلَيْهِ أَبُو بَصِيرِ بْنُ أُسَيْدٍ الثَّقَفِيُّ مُسْلِمًا مُهَاجِرًا , فَاسْتَأْجَرَ الْأَخْنَسُ بْنُ شَرِيقٍ رَجُلًا كَافِرًا مِنْ بَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ وَمَوْلًى مَعَهُ وَكَتَبَ مَعَهُمَا إِلَى رَسُولِ اللهِ ﷺ يَسْأَلُهُ الْوَفَاءَ. قَالَ: فَأَرْسَلُوا فِي طَلَبِهِ رَجُلَيْنِ , فَقَالُوا: الْعَهْدَ الَّذِي جَعَلْتَ لَنَا فِيهِ. فَدَفَعَهُ إِلَى الرَّجُلَيْنِ فَخَرَجَا بِهِ حَتَّى بَلَغَا بِهِ ذَا الْحُلَيْفَةِ , فَنَزَلُوا يَأْكُلُونَ مِنْ تَمْرٍ لَهُمْ , فَقَالَ أَبُو بَصِيرٍ لِأَحَدِ الرَّجُلَيْنِ: وَاللهِ إِنِّي لَأَرَى سَيْفَكَ يَا فُلَانُ هَذَا جَيِّدًا , فَاسْتَلَّهُ الْآخَرُ فَقَالَ: أَجَلْ , وَاللهِ إِنَّهُ لَجَيِّدٌ , لَقَدْ جَرَّبْتُ بِهِ ثُمَّ جَرَّبْتُ. قَالَ أَبُو بَصِيرٍ: أَرِنِي أَنْظُرْ إِلَيْهِ , فَأَمْكَنَهُ مِنْهُ فَضَرَبَهُ بِهِ حَتَّى بَرَدَ وَفَرَّ الْآخَرُ حَتَّى أَتَى الْمَدِينَةَ فَدَخَلَ الْمَسْجِدَ يَعْدُو , فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: لَقَدْ رَأَى هَذَا ذُعْرًا , فَلَمَّا انْتَهَى إِلَى النَّبِيِّ ﷺ قَالَ: قُتِلَ وَاللهِ صَاحِبِي وَإِنِّي لَمَقْتُولٌ. فَجَاءَ أَبُو بَصِيرٍ فَقَالَ: يَا نَبِيَّ اللهِ قَدْ وَاللهِ أَوْفَى اللهُ ذِمَّتَكَ , قَدْ رَدَدْتَنِي إِلَيْهِمْ , ثُمَّ أَنْجَانِي اللهُ مِنْهُمْ. فَقَالَ النَّبِيُّ ﷺ: " وَيْلُ امِّهِ مِسْعَرَ حَرْبٍ لَوْ كَانَ لَهُ أَحَدٌ ". فَلَمَّا سَمِعَ ذَلِكَ عَرَفَ أَنَّهُ سَيَرُدُّهُ إِلَيْهِمْ , فَخَرَجَ حَتَّى أَتَى سِيفَ الْبَحْرِ. قَالَ: وَيَنْفَلِتُ أَبُو جَنْدَلِ بْنُ سُهَيْلٍ فَلَحِقَ بِأَبِي بَصِيرٍ , فَجَعَلَ لَا يَخْرُجُ مِنْ قُرَيْشٍ رَجُلٌ قَدْ أَسْلَمَ إِلَّا لَحِقَ بِأَبِي بَصِيرٍ , حَتَّى اجْتَمَعَتْ مِنْهُمْ عِصَابَةٌ. قَالَ: فَوَاللهِ مَا يَسْمَعُونَ بِعِيرٍ خَرَجَتْ لِقُرَيْشٍ إِلَى الشَّامِ إِلَّا اعْتَرَضُوا لَهَا فَقَتَلُوهُمْ وَأَخَذُوا أَمْوَالَهُمْ , فَأَرْسَلَتْ قُرَيْشٌ إِلَى النَّبِيِّ ﷺ تُنَاشِدُهُ اللهَ وَالرَّحِمَ لَمَا أَرْسَلَ إِلَيْهِمْ فَمَنْ أَتَاهُ فَهُوَ آمِنٌ , فَأَرْسَلَ النَّبِيُّ ﷺ إِلَيْهِمْ , فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {وَهُوَ الَّذِي كَفَّ أَيْدِيَهُمْ عَنْكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُمْ} [الفتح: 24] حَتَّى بَلَغَ {حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ} [الفتح: 26]، وَكَانَتْ حَمِيَّتُهُمْ أَنَّهُمْ لَمْ يُقِرُّوا أَنَّهُ نَبِيُّ اللهِ , وَلَمْ يُقِرُّوا بِبِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ , وَحَالُوا بَيْنَهُمْ وَبَيْنَ الْبَيْتِ رَوَاهُ الْبُخَارِيُّ فِي الصَّحِيحِ عَنْ عَبْدِ اللهِ بْنِ مُحَمَّدٍ , عَنْ عَبْدِ الرَّزَّاقِ
மிஸ்வர் பின் மக்ரமா (ரழி) மற்றும் மர்வான் பின் அல்-ஹகம் ஆகியோர் அறிவிக்கிறார்கள்:
(அவர்கள் இருவரில் ஒவ்வொருவரின் கூற்றையும் மற்றவர் உண்மையென உறுதிப்படுத்துகின்றனர்)
ஹுதைபியா (ஒப்பந்தக்) காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களது தோழர்கள் ஆயிரத்துச் சொச்சம் (சுமார் ஆயிரத்து நானூறு) பேருடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டார்கள். அவர்கள் துல்-ஹுலைஃபாவை அடைந்ததும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குர்பானிக்காகக் கொண்டு வந்த) பிராணிக்கு அடையாளம் கட்டினார்கள்; அதன் (திமிலில்) லேசாகக் காயப்படுத்தி (அது குர்பானிப் பிராணி என்பதைக் குறிக்கும் வகையில்) குறியிட்டார்கள்; மேலும் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்கள். குரைஷிகளைப் பற்றிய தகவல்களைத் தமக்குத் தெரிவிப்பதற்காக, குஸாஆ குலத்தைச் சேர்ந்த ஒருவரை ஒற்றராகத் தமக்கு முன்பாக அனுப்பி வைத்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உஸ்ஃபான் அருகிலுள்ள 'அஷ்டாட்' பள்ளத்தாக்கை அடைந்தபோது, அந்த ஒற்றர் திரும்பி வந்து, "கஅப் பின் லுஅய் மற்றும் ஆமிர் பின் லுஅய் ஆகியோர் தங்களுடன் பல்வேறு கூட்டத்தாரை (அஹாபீஷ் - குரைஷிகளின் நட்புப் பழங்குடியினரை) திரட்டியுள்ளனர். அவர்கள் உங்களுடன் போரிட்டு, கஅபாவைத் தரிசிக்க விடாமல் உங்களைத் தடுத்து நிறுத்துவார்கள்" என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "எனக்கு ஆலோசனை கூறுங்கள். இவர்களுக்கு உதவிய இவர்களின் குடும்பத்தினர் (மற்றும் குழந்தைகள்) மீது நாம் தாக்குதல் நடத்துவோமா? அவர்கள் (போரிடாமல்) அமைதியாக இருந்தால், துக்கத்துடனும் சோகத்துடனும் (தங்கள் குடும்பத்தை இழந்த நிலையில்) இருப்பார்கள். அவர்கள் தப்பியோடினால், அல்லாஹ் அவர்கள் கழுத்தைத் துண்டித்துவிட்டான் (அவர்களை அழித்துவிட்டான்) என்று அர்த்தம். அல்லது நாம் கஅபாவை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செல்வோம்; யாராவது நம்மைத் தடுத்தால் அவர்களுடன் போரிடுவோம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?" என்று கேட்டார்கள். அபூபக்கர் (ரழி), "அல்லாஹ்வின் நபியே! அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள். நாம் உம்ரா செய்வதற்காகவே வந்துள்ளோம். யாருடனும் போரிடுவதற்காக நாம் வரவில்லை. ஆனால், கஅபாவைத் தரிசிப்பதிலிருந்து யாராவது நம்மைத் தடுத்தால், நாம் அவர்களுடன் போரிடுவோம்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால் முன்னேறிச் செல்லுங்கள்" என்று கூறினார்கள்.
(அஸ்-ஸுஹ்ரி கூறுகிறார்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விடத் தம் தோழர்களிடம் அதிகம் ஆலோசனை கேட்கக்கூடிய எவரையும் நான் பார்த்ததில்லை" என்று அபூஹுரைரா (ரழி) கூறுவார்கள்).
அவர்கள் முன்னேறிச் சென்றார்கள். பாதி வழியில் நபி (ஸல்) அவர்கள், "குரைஷிகளின் முன்னணி குதிரைப்படையுடன் காலித் பின் அல்-வலீத் 'அல்-கமீம்' என்ற இடத்தில் இருக்கிறார். எனவே, நீங்கள் (அவர்களைச் சந்திக்காமல் இருக்க) வலதுபுறமாகச் செல்லுங்கள்" என்றார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (முஸ்லிம்களின்) படையின் புழுதியைக் காணும் வரை காலித் அவர்களை அறியவில்லை. பின்னர் அவர் குரைஷிகளுக்கு எச்சரிக்கை செய்ய வேகமாக (மக்காவை நோக்கி) ஓடிச் சென்றார்.
நபி (ஸல்) அவர்கள் (மக்காவிற்குள்) இறங்கும் மலைப்பாதையை அடைந்தபோது, அவர்களின் ஒட்டகம் படுத்துக்கொண்டது. மக்கள் அதனை எழுப்ப, "ஹல் ஹல்" (என்று ஒட்டகத்தை விரட்டும் சத்தத்தைக்) கூறிப் பார்த்தனர். அது எழ மறுத்ததால், மக்கள், "அல்-கஸ்வா (ஒட்டகம்) பிடிவாதம் பிடிக்கிறது, அல்-கஸ்வா பிடிவாதம் பிடிக்கிறது!" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், "அல்-கஸ்வா பிடிவாதம் பிடிக்கவில்லை; அது அதன் குணமும் அல்ல. மாறாக, (யானைப்படை மக்காவிற்குள் நுழையாதவாறு) யானையைத் தடுத்து நிறுத்தியவனே (அல்லாஹ்) இதையும் தடுத்து நிறுத்தினான்" என்றார்கள். மேலும், "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் புனிதங்களைச் சங்கைப்படுத்தும் எந்தவொரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டாலும் அதை நான் அவர்களுக்கு வழங்குவேன்" என்றார்கள். பின்பு அதை அதட்டினார்கள், அது (உடனடியாக) துள்ளி எழுந்தது.
அங்கிருந்து பாதை மாறி, ஹுதைபியாவின் கடைக்கோடியில் சிறிதளவு தண்ணீர் உள்ள ஒரு குட்டையின் அருகே தங்கினார்கள். மக்கள் சிறுகச் சிறுக அதைப் பயன்படுத்தினர். சிறிது நேரத்திலேயே அதன் நீர் முற்றிலுமாக வற்றிவிட்டது. தாகம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் தமது அம்பறாத்தூணியிலிருந்து ஓர் அம்பை எடுத்து, அதை அந்தக் குட்டையில் வைக்குமாறு கட்டளையிட்டார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மக்கள் அனைவரும் தாகம் தீர்த்துத் திரும்பும் வரை அதிலிருந்து தண்ணீர் சுரந்துகொண்டே இருந்தது.
இந்நிலையில், குஸாஆ குலத்தைச் சேர்ந்த புதைல் பின் வர்கா என்பவர் தன் கூட்டத்தார் சிலருடன் வந்தார். திஹாமா வாசிகளில் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நலன் விரும்பிகளாகவும், (ரகசியங்களைப் பாதுகாக்கும்) நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருந்தனர். அவர், "கஅப் பின் லுஅய் மற்றும் ஆமிர் பின் லுஅய் ஆகியோர் ஹுதைபியாவின் நீர்நிலைகளில் பால்கறக்கும் ஒட்டகங்களுடன் (பெண்களும் குழந்தைகளுடனும்) தங்கியிருப்பதை நான் விட்டு வந்தேன். அவர்கள் உங்களுடன் போரிடவும், கஅபாவிலிருந்து உங்களைத் தடுக்கவும் வந்துள்ளனர்" என்றார்.
அதற்கு ரசூல் (ஸல்) அவர்கள், "நாங்கள் யாருடனும் போரிடுவதற்காக வரவில்லை. உம்ரா செய்யவே வந்துள்ளோம். போரானது குரைஷிகளைப் பலவீனப்படுத்தி, அவர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் விரும்பினால், அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை அளித்து (சமாதான ஒப்பந்தம்) செய்கிறேன். அதற்குள் அவர்கள் எனக்கும் மற்ற மக்களுக்கும் இடையே குறுக்கிடக் கூடாது. (அதில்) நான் வெற்றியடைந்தால், மற்ற மக்கள் இஸ்லாத்தில் இணைந்தது போன்று அவர்களும் விரும்பினால் இணையலாம். இல்லையெனில் அவர்கள் (போரிடத் தேவையான) பலத்தைப் பெற்றிருப்பார்கள். அவர்கள் மறுத்தால், என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! எனது தலை துண்டிக்கப்படும் வரை அல்லது அல்லாஹ் தனது கட்டளையை நிறைவேற்றும் வரை இந்த எனது மார்க்கத்திற்காக அவர்களுடன் போரிடுவேன்" என்றார்கள்.
புதைல், "நீங்கள் கூறுவதை நான் அவர்களிடம் தெரிவிக்கிறேன்" என்று கூறிப் புறப்பட்டார். குரைஷிகளிடம் வந்து, "நாங்கள் அந்த மனிதரிடமிருந்து வந்துள்ளோம். அவர் ஒரு வார்த்தை சொல்வதை நாங்கள் கேட்டோம். நீங்கள் விரும்பினால் அதை உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்" என்றார். குரைஷிகளில் இருந்த அறிவீனர்கள், "அவரைப் பற்றி எதையும் எங்களுக்குச் சொல்லத் தேவையில்லை" என்றனர். விவேகமுள்ளவர்கள், "அவர் சொல்வதை என்ன கேட்டீர்? கூறுவீராக" என்றனர். நபி (ஸல்) அவர்கள் கூறியதை அவர் தெரிவித்தார்.
அப்போது உர்வா பின் மஸ்ஊத் அஸ்-ஸகஃபி எழுந்து, "என் சமூகத்தாரே! நீங்கள் எனது பிள்ளைகள் அல்லவா?" என்றார். அவர்கள், "ஆம்" என்றனர். "நான் உங்கள் தந்தை அல்லவா?" என்றார். அவர்கள், "ஆம்" என்றனர். "என் மீது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா?" என்றார். அவர்கள், "இல்லை" என்றனர். அவர், "நான் உகாழ் வாசிகளின் உதவியைக் கோரியதையும், அவர்கள் மறுத்தபோது, எனக்குக் கீழ்ப்படிந்தவர்களையும், என் குடும்பத்தாரையும் உங்களுக்காகத் திரட்டி வந்தேன் என்பதையும் நீங்கள் அறிவீர்களா?" என்றார். அவர்கள், "ஆம்" என்றனர். அவர், "இந்த மனிதர் ஒரு நல்ல திட்டத்தை உங்களுக்கு முன்வைத்துள்ளார்; அதை ஏற்றுக்கொண்டு என்னை அவரிடம் செல்ல அனுமதியுங்கள்" என்றார். அவர்கள், "செல்லுங்கள்" என்றனர்.
உர்வா நபி (ஸல்) அவர்களிடம் வந்து பேச்சுக் கொடுத்தார். புதைலிடம் கூறியது போன்றே நபி (ஸல்) அவர்கள் உர்வாவிடமும் கூறினார்கள். அப்போது உர்வா, "முஹம்மதே! உமது சொந்த சமூகத்தையே நீர் அழித்துவிட்டால், உமக்கு முன் அரபுகளில் யாராவது தங்கள் சொந்தக் கூட்டத்தையே வேரோடு அழித்ததை நீர் கேள்விப்பட்டிருக்கிறீரா? நிலைமை தலைகீழானால், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உம்முடன் கண்ணியமானவர்களைக் காணவில்லை; மாறாக, உம்மைக் கைவிட்டுத் தப்பியோடக் கூடிய பலதரப்பட்ட மக்களையே நான் காண்கிறேன்" என்றார்.
இதைக் கேட்ட அபூபக்கர் (ரழி), "லாத்தின் (பெண் தெய்வத்தின்) மர்ம உறுப்பைச் சூப்பு! நாங்கள் அவரை விட்டுத் தப்பியோடி விடுவோமா?" என்று (கடுமையான அரபு வழக்காடலில்) சாடினார். உர்வா, "இவர் யார்?" எனக் கேட்க, மக்கள் "அபூபக்கர்" என்றனர். உர்வா, "என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீர் எனக்குச் செய்திருந்த, இன்னும் நான் கைம்மாறு செய்யாத, ஓர் உதவி மட்டும் இல்லாவிட்டால் உமக்கு நான் பதிலடி கொடுத்திருப்பேன்" என்றார்.
உர்வா மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் பேசத் தொடங்கினார். பேசும்போது நபி (ஸல்) அவர்களின் தாடியைப் பிடித்துக் கொண்டார். முஃகீரா பின் ஷுஅபா (ரழி), இரும்புக் கவசம் அணிந்து வாளுடன் நபி (ஸல்) அவர்களின் தலைமாட்டில் நின்றுகொண்டிருந்தார். உர்வா நபி (ஸல்) அவர்களின் தாடியை நோக்கி கையை நீட்டும்போதெல்லாம், முஃகீரா தம் வாளின் உறைப் பகுதியால் உர்வாவின் கையில் அடித்து, "அல்லாஹ்வின் தூதரின் தாடியிலிருந்து உமது கையை எடு" என்றார். உர்வா தலையை உயர்த்தி, "இவர் யார்?" எனக் கேட்க, மக்கள் "முஃகீரா பின் ஷுஅபா" என்றனர். உர்வா, "துரோகியே! உமது துரோகத்தின் விளைவுகளைத் துடைக்க நான் இன்னும் அலைந்து கொண்டிருக்கவில்லையா?" என்றார். (அறியாமைக் காலத்தில் முஃகீரா சிலருடன் பயணம் செய்தபோது, அவர்களைக் கொன்று அவர்களது செல்வங்களை எடுத்துக்கொண்டு மதீனா வந்து இஸ்லாத்தை ஏற்றிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உமது இஸ்லாத்தை நான் ஏற்கிறேன்; ஆனால், அந்தச் செல்வத்தில் எனக்கு எவ்விதச் சம்பந்தமுமில்லை" என்று கூறியிருந்தார்கள்).
உர்வா நபி (ஸல்) அவர்களின் தோழர்களை உற்று நோக்கலானார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உமிழ்ந்தால், தோழர்களில் எவரேனும் ஒருவரின் கையில் அது விழும், அவர் அதைத் தமது முகத்திலும் உடலிலும் தடவிக் கொள்வார். நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் கட்டளையிட்டால், அதை நிறைவேற்ற அவர்கள் முண்டியடிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் உளு (அங்கசுத்தி) செய்தால், அவர்கள் பயன்படுத்திய நீரைப் பெற அவர்கள் சண்டையிடும் அளவுக்குப் போட்டி போடுவார்கள். அவர்கள் பேசினால், நபி (ஸல்) அவர்களுக்கு முன்பாகத் தங்கள் குரல்களைத் தாழ்த்திக் கொள்வார்கள். அவர்கள் மீதுள்ள மரியாதையால் அவர்களைத் தொடர்ந்து உற்று நோக்க மாட்டார்கள்.
உர்வா தமது மக்களிடம் திரும்பிச் சென்று கூறினார்: "என் மக்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நான் பேரரசர்களான கைஸர், கிஸ்ரா, மற்றும் நஜாஷி ஆகியோரின் அவைகளுக்குச் சென்றுள்ளேன். ஆனால், முஹம்மதின் தோழர்கள் முஹம்மதை மதிப்பது போல் எந்த அரசரையும் அவரது தோழர்கள் மதித்ததை நான் கண்டதே இல்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் உமிழ்ந்தால், தோழர்களில் ஒருவரின் கையில் அது விழுகிறது, அவர் அதைத் தமது முகத்திலும் உடலிலும் தடவிக் கொள்கிறார். அவர் கட்டளையிட்டால், அதை நிறைவேற்ற முண்டியடிக்கிறார்கள். அவர் உளு செய்தால், அந்த நீரைப் பெற சண்டையிடும் அளவுக்குப் போட்டி போடுகிறார்கள். அவர் முன் பேசினால் குரல்களைத் தாழ்த்திக் கொள்கிறார்கள். மரியாதையால் அவரை உற்று நோக்க மாட்டார்கள். அவர் உங்களுக்கு ஒரு நல்ல திட்டத்தை முன்வைத்துள்ளார்; அதை ஏற்றுக் கொள்ளுங்கள்."
பனூ கினானா குலத்தைச் சேர்ந்த ஒருவர், "என்னை அவரிடம் செல்ல அனுமதியுங்கள்" என்றார். அவர்கள் "செல்லுங்கள்" என்றனர். அவர் நபி (ஸல்) அவர்களையும் அவர்களது தோழர்களையும் நெருங்கியபோது, நபி (ஸல்) அவர்கள், "இவர் இன்னார். குர்பானிப் பிராணிகளைச் சங்கைப்படுத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவர். எனவே, அவற்றை அவருக்கு முன்னால் அனுப்புங்கள்" என்றார்கள். அவருக்கு முன்னால் அவை அனுப்பப்பட்டன. மக்கள் தல்பியா (லப்பைக்) கூறியவாறு அவரை வரவேற்றனர். அவர் அதைக் கண்டதும், "சுபஹானல்லாஹ்! இந்த மக்கள் கஅபாவிற்குச் செல்வதைத் தடுப்பது தகாது" என்றார். அவர் தன் மக்களிடம் திரும்பிச் சென்று, "பலிப்பிராணிகள் மாலை அணிவிக்கப்பட்டு, அடையாளமிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். அவர்களை கஅபாவைத் தரிசிப்பதிலிருந்து தடுப்பது நல்லதல்ல என்று நான் கருதுகிறேன்" என்றார்.
அப்போது மிக்ரஸ் பின் ஹஃப்ஸ் என்பவர் எழுந்து, "என்னை அவரிடம் செல்ல அனுமதியுங்கள்" என்றார். அவர்கள் "செல்லுங்கள்" என்றனர். அவர் அவர்களை நெருங்கியபோது, நபி (ஸல்) அவர்கள், "இவர் மிக்ரஸ். இவர் ஒரு தீய மனிதர்" என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் பேசத் தொடங்கினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே சுஹைல் பின் அம்ரு வந்தார். சுஹைல் வந்ததும் நபி (ஸல்) அவர்கள், "உங்கள் காரியம் எளிதாகிவிட்டது (சுஹைல் என்ற பெயரின் பொருளைக் கொண்டு சுபச்செய்தியாகக் கூறினார்கள்)" என்றார்கள்.
சுஹைல் பின் அம்ரு வந்து, "வாருங்கள், எங்களுக்கும் உங்களுக்குமிடையே ஓர் ஒப்பந்தத்தை எழுதுங்கள்" என்றார். ரசூல் (ஸல்) அவர்கள் எழுத்தாளரை அழைத்து, "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்று எழுதுங்கள் என்றார்கள். சுஹைல், "ரஹ்மான் என்றால் என்னவென்று அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அறிய மாட்டேன். மாறாக, நீங்கள் முன்பு எழுதுவது போன்று 'பிஸ்மிக்க அல்லாஹும்ம' (இறைவா உன் பெயரால்) என்று எழுதுங்கள்" என்றார். முஸ்லிம்கள், "நாங்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று மட்டுமே எழுதுவோம்" என்றனர். நபி (ஸல்) அவர்கள், "பிஸ்மிக்க அல்லாஹும்ம என்றே எழுதுங்கள்" என்றார்கள்.
பின்னர், "இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் செய்யும் சமாதான ஒப்பந்தம்" என்று கூறினார்கள். சுஹைல், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை நாங்கள் அறிந்திருந்தால், கஅபாவுக்குச் செல்வதிலிருந்து உங்களைத் தடுத்திருக்கவோ, உங்களுடன் போரிட்டிருக்கவோ மாட்டோம். மாறாக, 'முஹம்மத் பின் அப்துல்லாஹ்' என்று எழுதுங்கள்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் என்னைப் பொய்யாக்கிய போதிலும், நான் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர்தான். முஹம்மத் பின் அப்துல்லாஹ் என்றே எழுதுங்கள்" என்றார்கள். (அஸ்-ஸுஹ்ரி கூறுகிறார்: "அல்லாஹ்வின் புனிதங்களைச் சங்கைப்படுத்தும் எதைக் கேட்டாலும் அதை வழங்குவேன்" என்று நபி (ஸல்) அவர்கள் ஏற்கனவே கூறியதாலேயே இதை ஏற்றுக் கொண்டார்கள்).
நபி (ஸல்) அவர்கள், "நாங்கள் கஅபாவைச் சென்று தவாஃப் செய்வதற்கு நீங்கள் எங்களை அனுமதிக்க வேண்டும்" என்றார்கள். சுஹைல், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் நெருக்குதலுக்கு அடிபணிந்துவிட்டோம் என்று அரபுகள் பேசிக்கொள்ள விடமாட்டோம். ஆனால் அடுத்த ஆண்டு உங்களுக்கு அனுமதி உண்டு" என்றார். அதுவும் எழுதப்பட்டது. சுஹைல் மீண்டும், "எங்களிடமிருந்து எவரேனும் ஒருவர் உங்களது மார்க்கத்தில் இணைந்து (தப்பித்து) உங்களிடம் வந்தால், அவரை நீங்கள் எங்களிடமே திருப்பித் தந்துவிட வேண்டும்" என்று நிபந்தனையிட்டார். முஸ்லிம்கள், "சுபஹானல்லாஹ்! ஒரு மனிதர் முஸ்லிமாக வந்த பின் எப்படி இணைவைப்பவர்களிடம் திரும்ப ஒப்படைக்க முடியும்?" என்றனர்.
அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது, அபூ ஜந்தல் பின் சுஹைல் பின் அம்ரு (ஒப்பந்தம் பேசும் சுஹைலின் மகன்) தமது விலங்குகளுடன் தட்டுத்தடுமாறி நடந்து வந்து முஸ்லிம்களுக்கு மத்தியில் விழுந்தார். சுஹைல், "முஹம்மதே! நான் உங்களுடன் செய்யும் சமாதானத்தின் முதல் நிபந்தனையாக, இவனை என்னிடம் திருப்பித் தர வேண்டும்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "நாங்கள் இன்னும் ஒப்பந்தத்தை எழுதி முடிக்கவில்லையே" என்றார்கள். சுஹைல், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அப்படியானால், வேறு எந்த நிபந்தனைக்கும் நான் சமாதானம் செய்ய மாட்டேன்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "இவரை எனக்காக (மட்டும் விதிவிலக்காக) விட்டுவிடு" என்றார்கள். சுஹைல், "நான் விடமாட்டேன்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "அவ்வாறு செய் (விட்டுவிடு)" என்றார். அவர் "நான் செய்ய மாட்டேன்" என்றார். மிக்ரஸ் குறுக்கிட்டு, "நாங்கள் இவரை உங்களுக்கு விட்டுக் கொடுக்கிறோம்" என்றார் (ஆனால் சுஹைல் ஏற்கவில்லை). அபூ ஜந்தல், "முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக வந்த பிறகும் இணைவைப்பவர்களிடம் திருப்பி அனுப்பப்படுவேனா? நான் அடைந்த கொடுமைகளை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கூறினார். அவர் அல்லாஹ்வுக்காகக் கடுமையாகத் சித்திரவதை செய்யப்பட்டிருந்தார்.
உமர் பின் அல்கத்தாப் (ரழி) கூறினார்: நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் நபி இல்லையா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம்" என்றார்கள். "நமது காரியம் சத்தியத்திலும், நமது எதிரிகளின் காரியம் அசத்தியத்திலும் இல்லையா?" என்றேன். "ஆம்" என்றார்கள். "அப்படியானால், நமது மார்க்க விஷயத்தில் நாம் ஏன் தாழ்ந்து போக வேண்டும்?" என்றேன். நபி (ஸல்) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர்! அவனுக்கு நான் மாறுசெய்ய மாட்டேன். அவன் எனக்கு உதவி செய்வான்" என்றார்கள். "கஅபாவிற்குச் சென்று நாம் தவாஃப் செய்வோம் என்று நீங்கள் எங்களிடம் கூறவில்லையா?" என்றேன். "ஆம். ஆனால், இந்த ஆண்டே செல்வோம் என்று உன்னிடம் சொன்னேனா?" என்றார்கள். "இல்லை" என்றேன். "நிச்சயமாக நீ கஅபாவிற்குச் சென்று தவாஃப் செய்வாய்" என்றார்கள்.
உமர் மேலும் கூறினார்: நான் அபூபக்கர் (ரழி) அவர்களிடம் சென்று, "அபூபக்கரே! இவர் உண்மையாகவே அல்லாஹ்வின் நபி இல்லையா?" என்றேன். அவர், "ஆம்" என்றார். "நமது காரியம் சத்தியத்திலும், நமது எதிரிகளின் காரியம் அசத்தியத்திலும் இல்லையா?" என்றேன். அவர், "ஆம்" என்றார். "அப்படியானால், நமது மார்க்க விஷயத்தில் நாம் ஏன் தாழ்ந்து போக வேண்டும்?" என்றேன். அபூபக்கர் (ரழி), "மனிதரே! அவர் அல்லாஹ்வின் தூதர். அவர் தம் இறைவனுக்கு மாறுசெய்ய மாட்டார். இறைவன் அவருக்கு உதவி செய்வான். நீர் இறக்கும் வரை அவரது நிலைப்பாட்டை உறுதியாகப் பற்றிக் கொள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர் சத்தியத்தின் மீதே இருக்கிறார்" என்றார். "கஅபாவிற்குச் சென்று நாம் தவாஃப் செய்வோம் என்று அவர் எங்களிடம் கூறவில்லையா?" என்றேன். "ஆம். ஆனால், இந்த ஆண்டே செல்வாய் என்று அவர் உன்னிடம் சொன்னாரா?" என்றார். "இல்லை" என்றேன். "நிச்சயமாக நீ கஅபாவிற்குச் சென்று தவாஃப் செய்வாய்" என்றார். (அன்று அவசரப்பட்டுப் பேசியதற்கான பரிகாரமாக பல நற்செயல்களைச் செய்தேன் என்று உமர் (ரழி) கூறினார்).
ஒப்பந்தம் எழுதி முடிக்கப்பட்டதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், "எழுந்து உங்களது பலிப்பிராணிகளை அறுத்துவிட்டு, உங்கள் தலைகளை மழித்துக் கொள்ளுங்கள்" என்றார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை சொல்லியும் அவர்களில் ஒருவர்கூட எழவில்லை (அவர்கள் அடைந்திருந்த மனவேதனையினால்). எவரும் எழாததைக் கண்டு, நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் சென்று மக்களிடமிருந்து தமக்கு ஏற்பட்ட நிலையைப் பற்றிக் கூறினார்கள். உம்மு ஸலமா (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் கட்டளை நிறைவேற்றப்பட வேண்டுமென விரும்புகிறீர்களா? வெளியே செல்லுங்கள். உங்கள் பலிப்பிராணியை அறுத்து, முடிதிருத்துபவரை அழைத்து அவர் உங்கள் தலையை மழிக்கும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தை கூடப் பேசாதீர்கள்" என்றார்.
நபி (ஸல்) அவர்கள் வெளியே சென்று, அவ்வாறு செய்து முடிக்கும் வரை எவருடனும் பேசவில்லை. தமது பிராணியை அறுத்தார்கள், முடிதிருத்துபவரை அழைத்து தலையை மழித்துக் கொண்டார்கள். இதைப் பார்த்ததும் தோழர்கள் எழுந்து, பலிப்பிராணிகளை அறுத்தனர். ஒருவர் மற்றவருக்குத் தலைமுடி திருத்திவிடத் தொடங்கினர். அவர்கள் கொண்டிருந்த துக்கத்தினால் ஒருவர் மற்றவரைக் கொன்றுவிடும் அளவுக்கு (நெரிசலில்) நெருக்குண்டனர்.
பின்னர் விசுவாசங்கொண்ட சில பெண்கள் (மக்காவிலிருந்து) வந்தனர். அப்போது அல்லாஹ் மாண்புமிகு குர்ஆனின் பின்வரும் வசனங்களை இறக்கினான்: {யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா ஜாஅகுமுல் முஃமினாத்து முஹாஜிராத்தின்...} (இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் நாடு துறந்து உங்களிடம் வந்தால்...) என்று தொடங்கி {பி இஸமில் கவாஃபிர்} (இறைமறுப்பாளர்களான பெண்களின் திருமண உறவை உங்கள் பிடியில் வைத்துக் கொள்ளாதீர்கள்) என்பது வரை அருளினான். உமர் (ரழி) அன்றைய தினம் இணைவைப்பாளர்களாக இருந்த தமது இரு மனைவியரை விவாகரத்து செய்தார். அவர்களில் ஒருத்தியை முஆவியா பின் அபூ சுஃப்யானும், மற்றவளை ஸஃப்வான் பின் உமையாவும் திருமணம் செய்து கொண்டனர்.
நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பிய பின், குரைஷிகளில் இஸ்லாத்தை தழுவிய அபூ பஸீர் என்பவர் அவர்களிடம் வந்தார். அக்னஸ் பின் ஷரீக் என்பவர் பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்த ஒரு காஃபிரான மனிதரையும், அவனது அடிமையையும் கூலிக்கு அமர்த்தி, ஒப்பந்தப்படி அவரைத் திருப்பித் தருமாறு கடிதம் கொடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினான். நபி (ஸல்) அவர்கள் அபூ பஸீரை அந்த இருவரிடமும் ஒப்படைத்தார்கள். இருவரும் அவரை அழைத்துக் கொண்டு துல்-ஹுலைஃபா வரை சென்றனர். அங்கு அவர்கள் தங்களிடமிருந்த பேரீச்சம்பழங்களைச் சாப்பிட அமர்ந்தனர். அபூ பஸீர் அவர்களில் ஒருவனிடம், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்னாரே, உமது வாள் மிகச் சிறப்பாக இருப்பதைக் காண்கிறேன்" என்றார். அந்த மனிதன் அதை உறையிலிருந்து உருவி, "ஆம், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இது மிகச் சிறந்ததுதான். நான் இதை பலமுறை சோதித்துப் பார்த்துள்ளேன்" என்றான். அபூ பஸீர், "என்னிடம் காட்டுங்கள், நான் பார்க்கிறேன்" என்று கேட்டார். அவன் அதைக் கொடுத்ததும், அவன் இறக்கும் வரை அவனைக் கடுமையாக வெட்டினார். மற்றவன் அங்கிருந்து தப்பியோடி, மதீனாவிற்குள் ஓட்டமாக ஓடி வந்து பள்ளிவாசலில் நுழைந்தான்.
அவனைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள், "இவன் கடுமையாகப் பயந்து போய் வந்துள்ளான்" என்றார்கள். அவன் நபி (ஸல்) அவர்களை நெருங்கியதும், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக, என் தோழன் கொல்லப்பட்டு விட்டான்; நானும் கொல்லப்பட்டு இருப்பேன்" என்றான். அபூ பஸீர் வந்து, "அல்லாஹ்வின் நபியே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அல்லாஹ் உங்களது பொறுப்பை நிறைவேற்றி விட்டான். நீங்கள் என்னை அவர்களிடம் திருப்பி அனுப்பிவிட்டீர்கள். பின்னர் அல்லாஹ் என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றி விட்டான்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "இவனது தாய்க்கு நாசமுண்டாகட்டும்! இவனுக்குத் துணையாகச் சிலர் இருந்திருந்தால் எப்படிப்பட்ட ஒரு போரை மூட்டியிருப்பான்" என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மீண்டும் தன்னை குரைஷிகளிடம் திருப்பி அனுப்பி விடுவார்கள் என்பதை அவர் இதிலிருந்து புரிந்து கொண்டார். எனவே, அவர் கடலோரப் பகுதியை நோக்கிச் சென்றார். மக்காவில் பிடித்து வைக்கப்பட்டிருந்த அபூ ஜந்தல் பின் சுஹைல் தப்பித்து வந்து அபூ பஸீருடன் இணைந்து கொண்டார். அதன்பின், குரைஷிகளில் இஸ்லாத்தை ஏற்கும் எந்தவொரு மனிதரும் தப்பித்து அபூ பஸீரிடம் சென்று இணைந்து கொள்வது வழக்கமாயிற்று. இப்படி அவர்கள் ஒரு பலமான குழுவாக உருவாயினர். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! குரைஷிகளின் வர்த்தகக் கூட்டம் ஷாமை (சிரியா) நோக்கிச் செல்வதைக் கேள்விப்பட்டால், அவர்களை வழிமறித்துத் தாக்கி, கொன்று, அவர்களது செல்வங்களைப் பறிக்கத் தொடங்கினர்.
இதனால், குரைஷிகள் நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பி, அல்லாஹ் மற்றும் உறவுமுறையின் பெயரால் மன்றாடி, "அந்தக் குழுவினரைத் தன்னிடம் அழைத்துக்கொள்ளுமாறும், இனி மக்காவிலிருந்து தப்பித்து உங்களிடம் வருபவர்களுக்கு அடைக்கலம் உண்டு (அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டியதில்லை)" என்றும் கூறினர். அதன்படி நபி (ஸல்) அவர்கள் ஆள் அனுப்பி அவர்களை அழைத்துக்கொண்டார்கள்.
அப்போது அல்லாஹ் பின்வரும் வசனங்களை அருளினான்: {வஹுவல்லதீ கஃப்ப அய்தியஹும் அன்கும் வ அய்தியகும் அன்ஹும்...} (அவனே அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியளித்த பின், அவர்களின் கைகளை உங்களை விட்டும், உங்கள் கைகளை அவர்களை விட்டும் தடுத்தான்) என்று தொடங்கி {ஹமிய்யத்தல் ஜாஹிலிய்யா} (அறியாமைக் காலத்து வீம்பு) என்பது வரை அருளினான்.
அவர்களின் வீம்பு என்பது, அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் நபி என ஏற்க மறுத்ததும், 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று எழுத மறுத்ததும், முஸ்லிம்களை கஅபாவைத் தரிசிப்பதிலிருந்து தடுத்ததும் ஆகும்.