حَدَّثَنَا يَعْقُوبُ حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ عَنْ عَمِّهِ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ قَالَ أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَوْسِ بْنِ الْحَدَثَانِ النَّصْرِيُّ فَذَكَرَ الْحَدِيثَ قَالَ فَبَيْنَا أَنَا جَالِسٌ عِنْدَهُ أَتَاهُ حَاجِبُهُ يَرْفَأُ فَقَالَ لِعُمَرَ هَلْ لَكَ فِي عُثْمَانَ وَعَبْدِ الرَّحْمَنِ وَسَعْدٍ وَالزُّبَيْرِ يَسْتَأْذِنُونَ؟ قَالَ نَعَمْ ائْذَنْ لَهُمْ قَالَ فَدَخَلُوا فَسَلَّمُوا وَجَلَسُوا قَالَ ثُمَّ لَبِثَ يَرْفَأُ قَلِيلًا فَقَالَ لِعُمَرَ هَلْ لَكَ فِي عَلِيٍّ وَعَبَّاسٍ؟ فَقَالَ نَعَمْ فَأَذِنَ لَهُمَا فَلَمَّا دَخَلا عَلَيْهِ جَلَسَا فَقَالَ عَبَّاسٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ اقْضِ بَيْنِي وَبَيْنَ عَلِيٍّ فَقَالَ الرَّهْطُعُثْمَانُ وَأَصْحَابُهُ اقْضِ بَيْنَهُمَا وَأَرِحِ أحَدَهُمَا مِنَ الآخَرِ فَقَالَ عُمَرُ اتَّئِدُوا فَأَنْشُدُكُمْ بِاللهِ الَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالْأَرْضُ هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ لَا نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ ؟ يُرِيدُ بِذَلِكَ رَسُولُ اللهِ ﷺ نَفْسَهُ قَالَ الرَّهْطُ قَدْ قَالَ ذَلِكَ فَأَقْبَلَ عُمَرُ عَلَى عَلِيٍّ وَعَبَّاسٍ فَقَالَ أَنْشُدُكُمَا بِاللهِ هَلْ تَعْلَمَانِ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَدْ قَالَ ذَلِكَ؟ قَالا قَدْ قَالَ ذَلِكَ فَقَالَ عُمَرُ فَإِنِّي أُحَدِّثُكُمْ عَنْ هَذَا الْأَمْرِ إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ كَانَ خَصَّ رَسُولَهُ فِي هَذَا الْفَيْءِ بِشَيْءٍ لَمْ يُعْطِهِ أَحَدًا غَيْرَهُ فَقَالَ اللهُ {وَمَا أَفَاءَ اللهُ عَلَى رَسُولِهِ مِنْهُمْ فَمَا أَوْجَفْتُمْ} [الحشر 6] الْآيَةَ فَكَانَتْ هَذِهِ الْآيَةُ خَاصَّةً لِرَسُولِ اللهِ ﷺ ثُمَّ وَاللهِ مَا احْتَازَهَا وَلا اسْتَأْثَرَ بِهَا عَلَيْكُمْ لَقَدِ أعْطَاكُمُوهَا وَبَثَّهَا فِيكُمْ حَتَّى بَقِيَ مِنْهَا هَذَا الْمَالُ وَكَانَ رَسُولُ اللهِ ﷺ يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَتِهِمْ مِنْ هَذَا الْمَالِ ثُمَّ يَأْخُذُ مَا بَقِيَ مِنْهُ فَيَجْعَلُهُ مَجْعَلَ مَالِ اللهِ فَعَمِلَ بِذَلِكَ رَسُولُ اللهِ ﷺ حَيَاتَهُ أَنْشُدُكُمُ اللهَ هَلْ تَعْلَمُونَ ذَلِكَ؟ قَالُوا نَعَمْ قَالَ لِعَلِيٍّ وَعَبَّاسٍ فَأَنْشُدُكُمَا بِاللهِ هَلْ تَعْلَمَانِ ذَلِكَ؟ قَالا نَعَمْ ثُمَّ تُوُفِّيَ رَسُولُ اللهِ ﷺ فَقَالَ أَبُو بَكْرٍ أَنَا وَلِيُّ رَسُولِ اللهِ ﷺ فَقَبَضَهَا أَبُو بَكْرٍ فَعَمِلَ فِيهَا بِمَا عَمِلَ بِهِ فِيهَا رَسُولُ اللهِ ﷺ وَأَنْتُمْ حِينَئِذٍ وَأَقْبَلَ عَلَى عَلِيٍّ وَعَبَّاسٍ تَزْعُمَانِ أَنَّ أَبَا بَكْرٍ فِيهَا كَذَا وَاللهُ يَعْلَمُ إِنَّهُ فِيهَا لَصَادِقٌ بَارٌّ رَاشِدٌ تَابِعٌ لِلحَقِّ
மாலிக் பின் அவ்ஸ் பின் அல்-ஹதஸான் அந்-நஸ்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, அவர்களுடைய வாயிற்காப்பாளர் யர்ஃபா வந்து, "உஸ்மான், அப்துர்ரஹ்மான், ஸஅத் மற்றும் ஸுபைர் (ரலி) ஆகியோர் உங்களைச் சந்திக்க அனுமதி கேட்கின்றனர்; அவர்களை அனுமதிக்கலாமா?" என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள், "ஆம், அவர்களுக்கு அனுமதியளி" என்றார்கள். அவர்கள் உள்ளே வந்து, ஸலாம் கூறிவிட்டு அமர்ந்தார்கள்.
சிறிது நேரம் கழித்து யர்ஃபா மீண்டும் வந்து உமர் (ரலி) அவர்களிடம், "அலி மற்றும் அப்பாஸ் (ரலி) ஆகியோரை உள்ளே அனுமதிக்கலாமா?" என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள், "ஆம்" என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். அவர்கள் இருவரும் உள்ளே வந்து அமர்ந்ததும் அப்பாஸ் (ரலி) அவர்கள், "அமீருல் முஃமினீன் (இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே)! எனக்கும் அலிக்கும் இடையே (அல்லாஹ்வின் தூதர் விட்டுச் சென்ற சொத்து தொடர்பாக) தீர்ப்பு வழங்குங்கள்" என்று கூறினார்கள்.
அப்போது (அங்கு ஏற்கனவே இருந்த) உஸ்மான் (ரலி) மற்றும் அவர்களுடன் இருந்த குழுவினர், "அவர்களுக்கிடையே தீர்ப்பளித்து ஒருவரிலிருந்து மற்றவருக்கு நிம்மதி அளியுங்கள்" என்றனர். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அவசரப்படாதீர்கள்! எவனுடைய அனுமதியைக் கொண்டு வானமும் பூமியும் நிலைத்து நிற்கின்றனவோ அந்த அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன்: 'நாங்கள் (இறைத்தூதர்கள்) எவரையும் எங்களுக்கு வாரிசாக்கிச் செல்வதில்லை; நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் ஸதகா (தர்மம்) ஆகும்' என்று அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்கள் கூறியதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்கள் தங்களையே குறிப்பிட்டார்கள். அக்குழுவினர், "ஆம், அவர்கள் அவ்வாறு கூறியுள்ளார்கள்" என்றனர்.
பின்னர் உமர் (ரலி) அவர்கள் அலி, அப்பாஸ் (ரலி) ஆகியோரை நோக்கி, "அல்லாஹ்வின் பெயரால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்கள் அவ்வாறு கூறியுள்ளதை நீங்கள் இருவரும் அறிவீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கவர்கள், "ஆம், அவர்கள் அவ்வாறு கூறியுள்ளார்கள்" என்றனர்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "இந்த விஷயத்தைப் பற்றி நான் உங்களிடம் பேசுகிறேன். அல்லாஹு அஸ்ஸவஜல் இந்த ‘ஃபய்உ’ (போரின்றி கிடைத்த) செல்வத்தில் வேறு எவருக்கும் வழங்காத ஒரு சிறப்புரிமையை தன் தூதருக்கு வழங்கியிருந்தான். குர்ஆனில் அல்லாஹ்,
{வமா அஃபாஅல்லாஹு அலா ரசூலிஹி மின்ஹும் ஃப்பமா அவ்ஜஃப்தும்} (அல்குர்ஆன் 59:6)
என்ற வசனத்தை அருளினான். இந்த வசனம் (மூலம் கிடைத்த செல்வம்) அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்தது. அல்லாஹ்வின் மீதும் சத்தியமாக! அவர்கள் அதனை உங்களுக்களிக்காமல் தமக்காக மட்டும் ஒதுக்கிக்கொள்ளவில்லை. அவர்கள் அதை உங்களுக்கே அளித்து, உங்களிடையே பங்கிட்டார்கள். இறுதியில் இந்தச் செல்வம் (மதீனாவிலுள்ள பேரீச்சந்தோப்புகள்) மட்டுமே எஞ்சியிருந்தது.
அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தங்களின் குடும்பத்தாருக்கு ஓராண்டுக்குத் தேவையான செலவினங்களை எடுத்துக்கொள்வார்கள். பின்னர் எஞ்சியதை எடுத்து அல்லாஹ்வின் செல்வத்தை (பொது நலனுக்காக) எந்த வழியில் செலவிடப்படுமோ அந்த வழியில் செலவிடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் இவ்வாறே செயல்பட்டார்கள்.
அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன்: இதை நீங்கள் அறிவீர்களா?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர்கள், "ஆம்" என்றனர். பிறகு, அலி, அப்பாஸ் (ரலி) ஆகியோரிடம், "அல்லாஹ்வின் பெயரால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: இதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும், "ஆம்" என்றனர்.
"பிறகு அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்கள் மரணித்ததும், அபூபக்கர் (ரலி) அவர்கள், 'நான் அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்களின் பொறுப்பாளர் ஆவேன்' என்று கூறி, அந்தச் செல்வத்தைத் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்கள் அதில் எவ்வாறு செயல்பட்டார்களோ அவ்வாறே அபூபக்கர் (ரலி) அவர்களும் செயல்பட்டார்கள்.
ஆனால், அக்காலகட்டத்தில் நீங்கள் - என்று கூறியவாறு உமர் (ரலி) அவர்கள் அலி, அப்பாஸ் (ரலி) இருவரையும் நோக்கினார்கள் - அபூபக்கர் (ரலி) அவர்கள் அச்செல்வத்தின் விஷயத்தில் (தவறாக) இன்னின்னவாறு நடந்துகொண்டதாகக் கருதினீர்கள். ஆனால், அவர் அச்செல்வத்தின் விஷயத்தில் உண்மையாளராகவும், நல்லவராகவும், நேர்வழி பெற்றவராகவும், சத்தியத்தைப் பின்பற்றுபவராகவும் இருந்தார் என்பதை அல்லாஹ் நன்கறிவான்."