8. ஸூரத்துல் அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)

மதனீ, வசனங்கள்: 75

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یَسْـَٔلُوْنَكَ عَنِ الْاَنْفَالِ ؕ قُلِ الْاَنْفَالُ لِلّٰهِ وَالرَّسُوْلِ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَصْلِحُوْا ذَاتَ بَیْنِكُمْ ۪ وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
یَسْـَٔلُوْنَكَஅவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالْاَنْفَالِ ؕபோர்ச் செல்வங்களைப்قُلِநீர் கூறுவீராகالْاَنْفَالُபோர்ச் செல்வங்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்கும்وَ الرَّسُوْلِ ۚஅவனது தூதருக்கும் உரியனவாகும்فَاتَّقُواஎனவே அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ اَصْلِحُوْاமேலும் சீர்படுத்திக் கொள்ளுங்கள்ذَاتَஉறவுகளைبَیْنِكُمْ ۪உங்களுக்கு இடையில்وَ اَطِیْعُواமேலும் கீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்கும்وَ رَسُوْلَهٗۤஅவனது தூதருக்கும்اِنْஎனில்كُنْتُمْநீங்கள்مُّؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக (இருந்தால்)
யஸ்'அலூனக 'அனில் அன்Fபாலி குலில் அன்Fபாலு லில்லாஹி வர் ரஸூலி Fபத்தகுல் லாஹ வ அஸ்லிஹூ தாத Bபய்னிகும் வ அதீ'உல் லாஹ வ ரஸூலஹூ இன் குன்தும் மு'மினீன்
போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِیْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِیَتْ عَلَیْهِمْ اٰیٰتُهٗ زَادَتْهُمْ اِیْمَانًا وَّعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟ۚۖ
اِنَّمَاநிச்சயமாகالْمُؤْمِنُوْنَஇறைநம்பிக்கையாளர்கள்الَّذِیْنَஎவர்கள் என்றால்اِذَاஎப்பொழுதுذُكِرَநினைவுகூரப்படுகிறதோاللّٰهُஅல்லாஹ்وَ جِلَتْபயந்து நடுங்கும்قُلُوْبُهُمْஅவர்களின் உள்ளங்கள்وَ اِذَاமேலும் எப்பொழுதுتُلِیَتْஓதிக் காண்பிக்கப்படுகிறதோعَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتُهٗஅவனுடைய வசனங்கள்زَادَتْهُمْஅவர்களுக்கு அதிகப்படுத்தும்اِیْمَانًاநம்பிக்கையைوَّ عَلٰیமேலும் மீதுرَبِّهِمْதங்கள் இறைவனின்یَتَوَكَّلُوْنَۚۖஅவர்கள் முழு நம்பிக்கை வைப்பார்கள்
இன்னமல் மு'மினூனல் லதீன இதா துகிரல் லாஹு வஜிலத் குலூBபுஹும் வ இதா துலியத் 'அலய்ஹிம் ஆயாதுஹூ Zஜாதத் ஹும் ஈமான(ன்)வ் வ 'அலா ரBப்Bபிஹிம் யதவக்கலூன்
உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟ؕ
الَّذِیْنَஎவர்கள்یُقِیْمُوْنَநிலைநாட்டுகிறார்களோالصَّلٰوةَதொழுகையைوَ مِمَّاமேலும் எவற்றிலிருந்துرَزَقْنٰهُمْநாம் அவர்களுக்கு வழங்கினோமோیُنْفِقُوْنَؕசெலவு செய்கிறார்களோ
அல்லதீன யுகீமூனஸ் ஸலாத வ மிம்மா ரZஜக்னாஹும் யுன்Fபிகூன்
அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.
اُولٰٓىِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ؕ لَهُمْ دَرَجٰتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟ۚ
اُولٰٓىِٕكَஅவர்கள்தாம்هُمُஅவர்களேالْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்حَقًّا ؕஉண்மையாகவேلَهُمْஅவர்களுக்குدَرَجٰتٌபதவிகள்عِنْدَஇடத்தில்رَبِّهِمْதங்கள் இறைவனின்وَ مَغْفِرَةٌமேலும் மன்னிப்பும்وَّ رِزْقٌமற்றும் வாழ்வாதாரமும்كَرِیْمٌۚகண்ணியமான
உலா'இக ஹுமுல் மு'மினூன ஹக்கா; லஹும் தரஜாதுன் 'இன்த ரBப்Bபிஹிம் வ மக் Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.
كَمَاۤ اَخْرَجَكَ رَبُّكَ مِنْ بَیْتِكَ بِالْحَقِّ ۪ وَاِنَّ فَرِیْقًا مِّنَ الْمُؤْمِنِیْنَ لَكٰرِهُوْنَ ۟ۙ
كَمَاۤஎவ்வாறெனில்اَخْرَجَكَஉம்மை வெளியேற்றினானோرَبُّكَஉமது இறைவன்مِنْۢஇருந்துبَیْتِكَஉமது இல்லம்بِالْحَقِّ ۪சத்தியத்தைக் கொண்டுوَ اِنَّமேலும் நிச்சயமாகفَرِیْقًاஒரு பிரிவினர்مِّنَஇருந்துالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்கள்لَكٰرِهُوْنَۙநிச்சயமாக வெறுப்பவர்கள்
கமா அக்ரஜக ரBப்Bபுக மிம் Bபய்திக Bபில்ஹக்க்; வ இன்ன Fபரீகம் மினல் மு'மினீன லகாரிஹூன்
(நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டைவிட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ரு களம் நோக்கி) வெளியேற்றிய போது முஃமின்களில் ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல.
یُجَادِلُوْنَكَ فِی الْحَقِّ بَعْدَ مَا تَبَیَّنَ كَاَنَّمَا یُسَاقُوْنَ اِلَی الْمَوْتِ وَهُمْ یَنْظُرُوْنَ ۟ؕ
یُجَادِلُوْنَكَஅவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்கிறார்கள்فِیகுறித்துالْحَقِّசத்தியத்தைக்بَعْدَ مَاபிறகுتَبَیَّنَஅது தெளிவானதுكَاَنَّمَاபோன்றேیُسَاقُوْنَஅவர்கள் ஓட்டிச் செல்லப்படுகிறார்கள்اِلَیநோக்கிالْمَوْتِமரணத்தைوَ هُمْமேலும் அவர்கள்یَنْظُرُوْنَؕபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
யுஜாதிலூனக Fபில் ஹக்கி Bபஃத மா தBபய்யன க'அன்னமா யஸாகூன இலல் மவ்தி வ ஹும் யன்ளுரூன்
அவர்களுக்கு தெளிவான பின்னரும் சத்தியத்தில் அவர்கள் உம்முடன் விவாதம் செய்கின்றனர்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யாரோ அவர்களை மரணத்தின்பால் இழுத்துக் கொண்டு செல்வது போன்று (நினைக்கின்றார்கள்).
وَاِذْ یَعِدُكُمُ اللّٰهُ اِحْدَی الطَّآىِٕفَتَیْنِ اَنَّهَا لَكُمْ وَتَوَدُّوْنَ اَنَّ غَیْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُوْنُ لَكُمْ وَیُرِیْدُ اللّٰهُ اَنْ یُّحِقَّ الْحَقَّ بِكَلِمٰتِهٖ وَیَقْطَعَ دَابِرَ الْكٰفِرِیْنَ ۟ۙ
وَ اِذْமேலும் (அச்சமயம்)یَعِدُكُمُஉங்களுக்கு வாக்களித்தான்اللّٰهُஅல்லாஹ்اِحْدَیஒன்றைالطَّآىِٕفَتَیْنِஇரு கூட்டங்களில்اَنَّهَاஅதுلَكُمْஉங்களுக்கு (உரியது என்று)وَ تَوَدُّوْنَமேலும் நீங்கள் விரும்பினீர்கள்اَنَّநிச்சயமாகغَیْرَஅல்லாததுذَاتِஉடையالشَّوْكَةِஆயுத பலம்تَكُوْنُஇருக்க வேண்டும் (என்று)لَكُمْஉங்களுக்குوَ یُرِیْدُஆனால் நாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்اَنْஎன்றுیُّحِقَّநிலைநாட்டالْحَقَّசத்தியத்தைبِكَلِمٰتِهٖதனது வார்த்தைகளால்وَ یَقْطَعَமேலும் அறுக்கدَابِرَவேரைالْكٰفِرِیْنَۙநிராகரிப்பவர்களின்
வ இத் ய'இதுகுமுல் லாஹு இஹ்தத் தா'இFபதய்னி அன்னஹா லகும் வ தவத்தூன அன்ன கய்ர தாதிஷ் ஷவ்கதி தகூனு லகும் வ யுரீதுல் லாஹு அய் யுஹிக்கல் ஹக்க Bபிகலிமாதிஹீ வ யக்த'அ தாBபிரல் காFபிரீன்
(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுதமில்லாத (வர்த்தகக் கூட்டமான)து உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் வாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும், நிராகரிப்போரை வேரறுக்கவுமே நாடுகிறான்.
لِیُحِقَّ الْحَقَّ وَیُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ ۟ۚ
لِیُحِقَّநிலைநாட்டுவதற்காகالْحَقَّசத்தியத்தைوَ یُبْطِلَமேலும் அழிக்கالْبَاطِلَஅசத்தியத்தைوَ لَوْஎன்றாலும்كَرِهَவெறுத்தالْمُجْرِمُوْنَۚகுற்றவாளிகள்
லியுஹிக்கல் ஹக்க வ யுBப்திலல் Bபாதில வ லவ் கரிஹல் முஜ்ரிமூன்
மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே (நாடுகிறான்).
اِذْ تَسْتَغِیْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ اَنِّیْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰٓىِٕكَةِ مُرْدِفِیْنَ ۟
اِذْஅச்சமயம்تَسْتَغِیْثُوْنَநீங்கள் உதவி தேடியபோதுرَبَّكُمْஉங்கள் இறைவனிடம்فَاسْتَجَابَஅப்போது அவன் பதிலளித்தான்لَكُمْஉங்களுக்குاَنِّیْநிச்சயமாக நான்مُمِدُّكُمْஉங்களுக்கு உதவி செய்பவன்بِاَلْفٍஆயிரம் பேரைக் கொண்டுمِّنَஇருந்துالْمَلٰٓىِٕكَةِவானவர்களில்مُرْدِفِیْنَதொடர்ச்சியாக வருபவர்களாக
இத் தஸ்தகீதூன ரBப்Bபகும் Fபஸ்தஜாBப லகும் அன்னீ முமித்துகும் Bபி அல்Fபிம் மினல் மலா'இகதி முர்திFபீன்
(நினைவு கூறுங்கள்:) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.
وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰی وَلِتَطْمَىِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْ ۚ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠
وَ مَاமேலும் இல்லைجَعَلَهُஅதனை ஆக்கினான்اللّٰهُஅல்லாஹ்اِلَّاதவிரبُشْرٰیநற்செய்தியாகوَ لِتَطْمَىِٕنَّமேலும் அமைதியடைவதற்காகبِهٖஅதைக் கொண்டுقُلُوْبُكُمْ ۚஉங்கள் உள்ளங்கள்وَ مَاமேலும் இல்லைالنَّصْرُஉதவிاِلَّاதவிரمِنْஇருந்துعِنْدِபுறத்தில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்حَكِیْمٌ۠ஞானமிக்கவன்
வமா ஜ'அலஹுல் லாஹு இல்லா Bபுஷ்ரா வ லிதத்ம'இன்ன Bபிஹீ குலூBபுகும்; வ மன் னஸ்ரு இல்லா மின் 'இன்தில் லாஹ்; இன்னல் லாஹ அZஜீZஜுன் ஹகீம்
உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.  
اِذْ یُغَشِّیْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَیُنَزِّلُ عَلَیْكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً لِّیُطَهِّرَكُمْ بِهٖ وَیُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّیْطٰنِ وَلِیَرْبِطَ عَلٰی قُلُوْبِكُمْ وَیُثَبِّتَ بِهِ الْاَقْدَامَ ۟ؕ
اِذْஅச்சமயம்یُغَشِّیْكُمُஅவன் உங்களை ஆட்கொள்ளச் செய்தான்النُّعَاسَசிறு தூக்கத்தைاَمَنَةًஅமைதிக்காகمِّنْهُஅவனிடமிருந்துوَ یُنَزِّلُமேலும் அவன் இறக்கினான்عَلَیْكُمْஉங்கள் மீதுمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தில்مَآءًநீரைلِّیُطَهِّرَكُمْஉங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகبِهٖஅதன் மூலம்وَ یُذْهِبَமேலும் போக்கடிக்கعَنْكُمْஉங்களிடமிருந்துرِجْزَஅசுத்தத்தைالشَّیْطٰنِஷைத்தானுடையوَ لِیَرْبِطَமேலும் பலப்படுத்தعَلٰیமீதுقُلُوْبِكُمْஉங்கள் உள்ளங்களின்وَ یُثَبِّتَமேலும் நிலைப்படுத்தبِهِஅதன் மூலம்الْاَقْدَامَؕபாதங்களை
இத் யுகஷ்ஷீகுமுன் னு'அஸ்ஸ அமனதம் மின்ஹு வ யுனZஜ்Zஜிலு 'அலய்கும் மினஸ் ஸமா'இ மா'அல் லியுதஹ் ஹிரகும் Bபிஹீ வ யுத்ஹிBப 'அன்கும் ரிஜ்Zஜஷ் ஷய்தானி வ லியர்Bபித 'அல குலூBபிகும் வ யுதBப்Bபித Bபிஹில் அக்தாம்
(நினைவு கூறுங்கள்:) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.
اِذْ یُوْحِیْ رَبُّكَ اِلَی الْمَلٰٓىِٕكَةِ اَنِّیْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِیْنَ اٰمَنُوْا ؕ سَاُلْقِیْ فِیْ قُلُوْبِ الَّذِیْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍ ۟ؕ
اِذْஅச்சமயம்یُوْحِیْஅறிவித்தபோதுرَبُّكَஉமது இறைவன்اِلَیநோக்கிالْمَلٰٓىِٕكَةِவானவர்களிடம்اَنِّیْநிச்சயமாக நான்مَعَكُمْஉங்களுடன் இருக்கிறேன்فَثَبِّتُواஎனவே உறுதிப்படுத்துங்கள்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْا ؕஈமான் கொண்டார்களோسَاُلْقِیْநான் போடுவேன்فِیْஇல்قُلُوْبِஇதயங்களில்الَّذِیْنَஎவர்கள்كَفَرُواநிராகரித்தார்களோالرُّعْبَதிகிலைفَاضْرِبُوْاஎனவே வெட்டுங்கள்فَوْقَமேலேالْاَعْنَاقِகழுத்துகளுக்குوَ اضْرِبُوْاமேலும் வெட்டுங்கள்مِنْهُمْஅவர்களில்كُلَّஒவ்வொருبَنَانٍؕவிரல் நுனியையும்
இத் யூஹீ ரBப்Bபுக இலல் மலா'இகதி அன்னீ ம'அகும் FபதBப்Bபிதுல் லதீன ஆமனூ; ஸ உல்கீ Fபீ குலூBபில் லதீன கFபருர் ருஃBப Fபள்ரிBபூ Fபவ்கல் அஃனாகி வள்ரிBபூ மின்ஹும் குல்ல Bபனான்
(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.
ذٰلِكَ بِاَنَّهُمْ شَآقُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ۚ وَمَنْ یُّشَاقِقِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
ذٰلِكَஅதுبِاَنَّهُمْஏனென்றால் அவர்கள்شَآقُّواமாறுசெய்தார்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ رَسُوْلَهٗ ۚஇன்னும் அவனுடைய தூதரைوَ مَنْமேலும் எவர்یُّشَاقِقِமாறுசெய்கிறாரோاللّٰهَஅல்லாஹ்வைوَ رَسُوْلَهٗஇன்னும் அவனுடைய தூதரைفَاِنَّஆக நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِیْدُகடுமையானவன்الْعِقَابِதண்டனை அளிப்பதில்
தாலிக Bபி அன்னஹும் ஷாக்குல் லாஹ வ ரஸூலஹ்; வ மய் யுஷகிகில் லாஹ வ ரஸூலஹூ Fப இன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBப்
இதற்கு காரணம்: நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் விரோதம் செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டனை செய்பவனாக இருக்கிறான்.
ذٰلِكُمْ فَذُوْقُوْهُ وَاَنَّ لِلْكٰفِرِیْنَ عَذَابَ النَّارِ ۟
ذٰلِكُمْஇதுவேفَذُوْقُوْهُஆகவே அதனைச் சுவையுங்கள்وَ اَنَّமேலும் நிச்சயமாகلِلْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குعَذَابَவேதனைالنَّارِநெருப்பின்
தாலிகும் Fபதூகூஹு வ அன்ன லில்காFபிரீன 'அதாBபன் னார்
“இதை(தண்டனையை)ச் சுவையுங்கள்; நிச்சயமாக காஃபிர்களுக்கு நரக வேதனையுண்டு” என்று (நிராகரிப்போருக்குக்) கூறப்படும்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِیْتُمُ الَّذِیْنَ كَفَرُوْا زَحْفًا فَلَا تُوَلُّوْهُمُ الْاَدْبَارَ ۟ۚ
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِذَاபொழுதுلَقِیْتُمُநீங்கள் எதிர்கொண்டால்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோزَحْفًاஅணிவகுத்துفَلَاஎனவே வேண்டாம்تُوَلُّوْهُمُஅவர்களுக்குக் காட்டுங்கள்الْاَدْبَارَۚபுறமுதுகுகளை
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா லகீதுமுல் லதீன கFபரூ Zஜஹ்Fபன் Fபலா துவல்லூஹுமுல் அத்Bபார்
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நிராகரிப்போரைப் (போரில்) ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள்.
وَمَنْ یُّوَلِّهِمْ یَوْمَىِٕذٍ دُبُرَهٗۤ اِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ اَوْ مُتَحَیِّزًا اِلٰی فِئَةٍ فَقَدْ بَآءَ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰىهُ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
وَ مَنْமேலும் எவர்یُّوَلِّهِمْஅவர்களுக்குத் திருப்புகிறாரோیَوْمَىِٕذٍஅந்நாளில்دُبُرَهٗۤதனது முதுகைاِلَّاதவிரمُتَحَرِّفًاபோர் தந்திரத்திற்காகلِّقِتَالٍபோரிடاَوْஅல்லதுمُتَحَیِّزًاசேர்ந்து கொள்வதற்காகاِلٰیஇடம்فِئَةٍஒரு கூட்டத்தார்فَقَدْநிச்சயமாகبَآءَஅவர் ஆளாகிவிட்டார்بِغَضَبٍகோபத்திற்குمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்وَ مَاْوٰىهُமேலும் அவரது தங்குமிடம்جَهَنَّمُ ؕநரகமாகும்وَ بِئْسَமேலும் அது மிகக் கெட்டالْمَصِیْرُசேருமிடம்
வ மய் யுவல்லிஹிம் யவ்ம'இதின் துBபுரஹூ இல்லா முதஹர்ரிFபல் லிகிதாலின் அவ் முதஹய்யிZஜன் இலா Fபி'அதின் Fபகத் Bபா'அ BபிகளBபிம் மினல் லாஹி வ ம'வாஹு ஜஹன்னமு வ Bபி'ஸல் மஸீர்
(எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் - அவர் தங்குமிடம் நரகமே; இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்.
فَلَمْ تَقْتُلُوْهُمْ وَلٰكِنَّ اللّٰهَ قَتَلَهُمْ ۪ وَمَا رَمَیْتَ اِذْ رَمَیْتَ وَلٰكِنَّ اللّٰهَ رَمٰی ۚ وَلِیُبْلِیَ الْمُؤْمِنِیْنَ مِنْهُ بَلَآءً حَسَنًا ؕ اِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
فَلَمْஎனவே இல்லைتَقْتُلُوْهُمْஅவர்களை நீங்கள் கொன்றீர்கள்وَ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்قَتَلَهُمْ ۪அவர்களைக் கொன்றான்وَ مَاமேலும் இல்லைرَمَیْتَநீர் எறிந்தீர்اِذْபோதுرَمَیْتَநீர் எறிந்தீர்وَ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்رَمٰی ۚஎறிந்தான்وَ لِیُبْلِیَமேலும் அவன் சோதிப்பதற்காகالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களைمِنْهُஅவனிடமிருந்துبَلَآءًஒரு சோதனையைحَسَنًا ؕஅழகியاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
Fபலம் தக்துலூஹும் வ லாகின்னல் லாஹ கதலஹும்; வமா ரமய்த இத் ரமய்த வ லாகின்னல் லாஹ ரமா; வ லியுBப்லியல் மு'மினீன மின்ஹு Bபலா'அன் ஹஸனா; இன்னல் லாஹ ஸமீ'உன் அலீம்
(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
ذٰلِكُمْ وَاَنَّ اللّٰهَ مُوْهِنُ كَیْدِ الْكٰفِرِیْنَ ۟
ذٰلِكُمْஅதுوَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مُوْهِنُபலவீனமாக்குபவன்كَیْدِசூழ்ச்சியைالْكٰفِرِیْنَநிராகரிப்போரின்
தாலிகும் வ அன்னல் லாஹ மூஹினு கய்தில் காFபிரீன்
இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை இழிவாக்கி (சக்தியற்றதாய்) ஆக்குவதற்கும் (இவ்வாறு செய்தான்.)
اِنْ تَسْتَفْتِحُوْا فَقَدْ جَآءَكُمُ الْفَتْحُ ۚ وَاِنْ تَنْتَهُوْا فَهُوَ خَیْرٌ لَّكُمْ ۚ وَاِنْ تَعُوْدُوْا نَعُدْ ۚ وَلَنْ تُغْنِیَ عَنْكُمْ فِئَتُكُمْ شَیْـًٔا وَّلَوْ كَثُرَتْ ۙ وَاَنَّ اللّٰهَ مَعَ الْمُؤْمِنِیْنَ ۟۠
اِنْநீங்கள்تَسْتَفْتِحُوْاதீர்ப்பை வேண்டினால்فَقَدْஅப்படியானால் நிச்சயமாகجَآءَكُمُஉங்களிடம் வந்துவிட்டதுالْفَتْحُ ۚஅந்தத் தீர்ப்புوَ اِنْஇன்னும் நீங்கள்تَنْتَهُوْاவிலகிக் கொண்டால்فَهُوَஅதுخَیْرٌசிறந்ததுلَّكُمْ ۚஉங்களுக்குوَ اِنْஇன்னும் நீங்கள்تَعُوْدُوْاமீண்டும் திரும்பினால்نَعُدْ ۚநாமும் திரும்புவோம்وَ لَنْமேலும் ஒருபோதும்تُغْنِیَபயன் தராதுعَنْكُمْஉங்களுக்குفِئَتُكُمْஉங்கள் கூட்டம்شَیْـًٔاசிறிதும்وَّ لَوْஇன்னும்كَثُرَتْ ۙஅது அதிகமாக இருந்தாலும்وَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مَعَஉடன் (இருக்கிறான்)الْمُؤْمِنِیْنَ۠நம்பிக்கையாளர்கள்
இன் தஸ்தFப்திஹூ Fபகத் ஜா'அகுமுல் Fபத்ஹு வ இன் தன்தஹூ Fபஹுவ கய்ருல் லகும் வ இன் த'ஊதூ ன'உத் வ லன் துக்னிய 'அன்கும் Fபி'அதுகும் ஷய்'அ(ன்)வ் வ லவ் கதுரத் வ அன்னல் லாஹ ம'அல் மு'மினீன்
(நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது; இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்).  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَاَنْتُمْ تَسْمَعُوْنَ ۟ۚۖ
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டீர்களோاَطِیْعُواகீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ رَسُوْلَهٗமேலும் அவனுடைய தூதருக்கும்وَ لَاமேலும் வேண்டாம்تَوَلَّوْاபுறக்கணிக்கعَنْهُஅவரை விட்டும்وَ اَنْتُمْஇன்னும் நீங்கள்تَسْمَعُوْنَۚۖசெவியேற்றுக் கொண்டே
யா அய்யுஹல் லதீன ஆமனூ அதீ'உல் லாஹ வ ரஸூலஹூ வலா தவல்லவ் 'அன்ஹு வ அன்தும் தஸ்ம'ஊன்
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்.
وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ قَالُوْا سَمِعْنَا وَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟
وَ لَاமேலும் வேண்டாம்تَكُوْنُوْاநீங்கள் ஆகிவிடكَالَّذِیْنَஅவர்களைப் போலقَالُوْاஅவர்கள் கூறினார்கள்سَمِعْنَاநாங்கள் செவியுற்றோம்وَ هُمْமேலும் அவர்கள்لَاஇல்லைیَسْمَعُوْنَசெவியேற்கிறார்கள்
வ லா தகூனூ கல்லதீன காலூ ஸமிஃனா வ ஹும் லா யஸ்ம'ஊன்
(மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்துகொண்டே, “நாங்கள் செவியுற்றோம்” என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِیْنَ لَا یَعْقِلُوْنَ ۟
اِنَّநிச்சயமாகشَرَّமிகக் கெட்டவைالدَّوَآبِّஉயிரினங்களில்عِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்الصُّمُّசெவிடர்கள்الْبُكْمُஊமையர்கள்الَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیَعْقِلُوْنَசிந்திக்கிறார்கள்
இன்ன ஷர்ரத் தவாBப்Bபி 'இன்தல் லாஹிஸ் ஸும்முல் Bபுக்முல் லதீன லா யஃகிலூன்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம்.
وَلَوْ عَلِمَ اللّٰهُ فِیْهِمْ خَیْرًا لَّاَسْمَعَهُمْ ؕ وَلَوْ اَسْمَعَهُمْ لَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ ۟
وَ لَوْமேலும், ஒருவேளைعَلِمَஅறிந்திருந்தால்اللّٰهُஅல்லாஹ்فِیْهِمْஅவர்களிடம்خَیْرًاநன்மையைلَّاَسْمَعَهُمْ ؕஅவர்களைச் செவியேற்கச் செய்திருப்பான்وَ لَوْமேலும், ஒருவேளைاَسْمَعَهُمْஅவர்களைச் செவியேற்கச் செய்திருந்தாலும்لَتَوَلَّوْاஅவர்கள் திரும்பியிருப்பார்கள்وَّ هُمْமேலும் அவர்கள்مُّعْرِضُوْنَபுறக்கணிப்பவர்களாகவே
வ லவ் 'அலிமல் லாஹு Fபீஹிம் கய்ரல் ல அஸ்ம'அஹும்; வ லவ் அஸ்ம'அஹும் லதவல்லவ் வ ஹும் முஃரிளூன்
அவர்களிடத்தில் ஏதேனும் நன்மை உண்டு என அல்லாஹ் அறிந்திருந்தால், அவன் அவர்களைச் செவியேற்குமாறு செய்திருப்பான்; (அவர்கள் இருக்கும் நிலையில்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்தாலும் அவர்கள் புறக்கணித்து மாறியிருப்பார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اسْتَجِیْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ لِمَا یُحْیِیْكُمْ ۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَحُوْلُ بَیْنَ الْمَرْءِ وَقَلْبِهٖ وَاَنَّهٗۤ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோاسْتَجِیْبُوْاபதிலளியுங்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குوَ لِلرَّسُوْلِமேலும் தூதருக்கும்اِذَاபொழுதுدَعَاكُمْஅவர் உங்களை அழைக்கும்لِمَاஎதன் பக்கம்یُحْیِیْكُمْ ۚஉங்களுக்கு வாழ்வளிக்கிறதோوَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَحُوْلُகுறுக்கிடுகிறான்بَیْنَஇடையேالْمَرْءِமனிதனுக்கும்وَ قَلْبِهٖஅவனுடைய உள்ளத்திற்கும்وَ اَنَّهٗۤமேலும் நிச்சயமாக அவன்اِلَیْهِஅவனிடமேتُحْشَرُوْنَநீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனுஸ் தஜீBபூ லில்லாஹி வ லிர் ரஸூலி இதா த'ஆகும் லிமா யுஹ்யீகும் வஃலமூ அன்னல் லாஹ யஹூலு Bபய்னல் மர்'இ வ கல்Bபிஹீ வ அன்னஹூ இலய்ஹி துஹ்ஷரூன்
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
وَاتَّقُوْا فِتْنَةً لَّا تُصِیْبَنَّ الَّذِیْنَ ظَلَمُوْا مِنْكُمْ خَآصَّةً ۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
وَ اتَّقُوْاமேலும் அஞ்சிக்கொள்ளுங்கள்فِتْنَةًஒரு சோதனையைلَّاஅதுتُصِیْبَنَّபாதிக்காதுالَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْاஅநியாயம் செய்தார்களோمِنْكُمْஉங்களில்خَآصَّةً ۚகுறிப்பாகوَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِیْدُகடுமையானவன்الْعِقَابِதண்டனை அளிப்பதில்
வத்தகூ Fபித்னதல் லா துஸீBபன்னல் லதீன ளலமூ மின்கும் காஸ்ஸத் வ'லமூ அன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBப்
நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
وَاذْكُرُوْۤا اِذْ اَنْتُمْ قَلِیْلٌ مُّسْتَضْعَفُوْنَ فِی الْاَرْضِ تَخَافُوْنَ اَنْ یَّتَخَطَّفَكُمُ النَّاسُ فَاٰوٰىكُمْ وَاَیَّدَكُمْ بِنَصْرِهٖ وَرَزَقَكُمْ مِّنَ الطَّیِّبٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
وَ اذْكُرُوْۤاமேலும் நினைவு கூருங்கள்اِذْஅச்சமயம்اَنْتُمْநீங்கள்قَلِیْلٌகுறைந்தவர்களாகمُّسْتَضْعَفُوْنَபலவீனர்களாகفِیஇல்الْاَرْضِபூமியில்تَخَافُوْنَநீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தீர்கள்اَنْஎன்றுیَّتَخَطَّفَكُمُஉங்களை அள்ளிச் செல்வார்கள்النَّاسُமனிதர்கள்فَاٰوٰىكُمْஅப்பொழுது அவன் உங்களுக்குப் புகலிடம் அளித்தான்وَ اَیَّدَكُمْமேலும் உங்களைப் பலப்படுத்தினான்بِنَصْرِهٖதனது உதவியைக் கொண்டுوَ رَزَقَكُمْமேலும் உங்களுக்கு வாழ்வாதாரம் அளித்தான்مِّنَலிருந்துالطَّیِّبٰتِதூய்மையானவற்றைلَعَلَّكُمْநீங்கள் ஆகும் பொருட்டுتَشْكُرُوْنَநன்றி செலுத்துபவர்களாக
வத்குரூ இத் அன்தும் கலீலும் முஸ்தள் 'அFபூன Fபிலர்ளி தகாFபூன அய் யதகத் தFபகுமுன் னாஸு Fப ஆவாகும் வ அய்யதகும் Bபினஸ்ரிஹீ வ ரZஜககும் மினத் தய்யிBபாதி ல'அல்லகும் தஷ்குரூன்
“நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலஹீனர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாஞ்சிக் கொண்டு சென்று விடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்த போது அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களை பலப்படுத்தினான் - இன்னும் பரிசுத்தமான ஆகாரங்களையும் அவன் உங்களுக்கு அளித்தான்; இவற்றை நினைவு கூர்ந்து (அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!”
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَخُوْنُوا اللّٰهَ وَالرَّسُوْلَ وَتَخُوْنُوْۤا اَمٰنٰتِكُمْ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاசெய்யாதீர்கள்تَخُوْنُواதுரோகம்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ الرَّسُوْلَஇன்னும் தூதருக்கும்وَ تَخُوْنُوْۤاஇன்னும் மோசடி செய்யாதீர்கள்اَمٰنٰتِكُمْஉங்களுடைய அமானிதங்களில்وَ اَنْتُمْநீங்கள்تَعْلَمُوْنَஅறிந்து கொண்டே
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தகூனல் லாஹ வர் ரஸூல வ தகூனூ அமானாதிகும் வ அன்தும் தஃலமூன்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள்; நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.
وَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ۙ وَّاَنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ ۟۠
وَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّمَاۤநிச்சயமாகاَمْوَالُكُمْஉங்கள் செல்வங்களும்وَ اَوْلَادُكُمْஉங்கள் பிள்ளைகளும்فِتْنَةٌ ۙஒரு சோதனைوَّ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عِنْدَهٗۤஅவனிடமேاَجْرٌநற்கூலிعَظِیْمٌ۠மகத்தானது
வஃலமூ அன்னமா அம்வாலுகும் வ அவ்லாதுகும் Fபித்னது(ன்)வ் வ அன்னல் லாஹ 'இன்தஹூ அஜ்ருன் அளீம்
“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تَتَّقُوا اللّٰهَ یَجْعَلْ لَّكُمْ فُرْقَانًا وَّیُكَفِّرْ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَیَغْفِرْ لَكُمْ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டீர்களோاِنْநீங்கள்تَتَّقُواஅஞ்சினால்اللّٰهَஅல்லாஹ்வைیَجْعَلْஅவன் ஏற்படுத்துவான்لَّكُمْஉங்களுக்குفُرْقَانًاபிரித்தறியும் திறனைوَّ یُكَفِّرْமேலும் அவன் போக்கிவிடுவான்عَنْكُمْஉங்களை விட்டும்سَیِّاٰتِكُمْஉங்கள் தீமைகளைوَ یَغْفِرْமேலும் அவன் மன்னிப்பான்لَكُمْ ؕஉங்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்ذُوஉடையவன்الْفَضْلِஅருட்கொடைالْعَظِیْمِமகத்தான
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன் தத்தகுல் லாஹ யஜ்'அல் லகும் Fபுர்கான(ன்)வ் வ யுகFப்Fபிர் 'அன்கும் ஸய்யி ஆதிகும் வ யக்Fபிர் லகும்; வல்லாஹு துல் Fபள்லில் 'அளீம்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.
وَاِذْ یَمْكُرُ بِكَ الَّذِیْنَ كَفَرُوْا لِیُثْبِتُوْكَ اَوْ یَقْتُلُوْكَ اَوْ یُخْرِجُوْكَ ؕ وَیَمْكُرُوْنَ وَیَمْكُرُ اللّٰهُ ؕ وَاللّٰهُ خَیْرُ الْمٰكِرِیْنَ ۟
وَ اِذْமேலும் எப்போதுیَمْكُرُசூழ்ச்சி செய்தார்களோبِكَஉமக்கு எதிராகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلِیُثْبِتُوْكَஉம்மைச் சிறைப்படுத்தاَوْஅல்லதுیَقْتُلُوْكَஉம்மைக் கொல்லاَوْஅல்லதுیُخْرِجُوْكَ ؕஉம்மை வெளியேற்றوَ یَمْكُرُوْنَஅவர்களும் சூழ்ச்சி செய்கிறார்கள்وَ یَمْكُرُமேலும் சூழ்ச்சி செய்கிறான்اللّٰهُ ؕஅல்லாஹ்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்خَیْرُமிகச் சிறந்தவன்الْمٰكِرِیْنَசூழ்ச்சி செய்வோரில்
வ இத் யம்குரு Bபிகல் லதீன கFபரூ லியுத்Bபிதூக அவ் யக்துலூக அவ் யுக்ரிஜூக்; வ யம்குரூன வ யம்குருல் லாஹு வல்லாஹு கய்ருல் மாகிரீன்
(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا قَالُوْا قَدْ سَمِعْنَا لَوْ نَشَآءُ لَقُلْنَا مِثْلَ هٰذَاۤ ۙ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுتُتْلٰیஓதப்பட்டால்عَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتُنَاநம்முடைய வசனங்கள்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்قَدْநிச்சயமாகسَمِعْنَاநாங்கள் செவியுற்றோம்لَوْஒருவேளைنَشَآءُநாங்கள் நாடினால்لَقُلْنَاநாங்களும் கூறியிருப்போம்مِثْلَபோன்றதைهٰذَاۤ ۙஇதைاِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاۤதவிரاَسَاطِیْرُகட்டுக்கதைகளேالْاَوَّلِیْنَமுன்னோர்களின்
வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா காலூ கத் ஸமிஃனா லவ் னஷா'உ லகுல்னா மித்ல ஹாதா இன் ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
அவர்கள் மீது நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், “நாம் நிச்சயமாக இவற்றை (முன்னரே) கேட்டிருக்கின்றோம்; நாங்கள் நாடினால் இதைப் போல் சொல்லிவிடுவோம்; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” என்று சொல்கிறார்கள்.
وَاِذْ قَالُوا اللّٰهُمَّ اِنْ كَانَ هٰذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَاَمْطِرْ عَلَیْنَا حِجَارَةً مِّنَ السَّمَآءِ اَوِ ائْتِنَا بِعَذَابٍ اَلِیْمٍ ۟
وَ اِذْஇன்னும் எப்போதுقَالُواஅவர்கள் கூறினார்களோاللّٰهُمَّஇறைவாاِنْஒருவேளைكَانَஇருந்தால்هٰذَاஇதுهُوَஅதுவேالْحَقَّஉண்மைمِنْஇருந்துعِنْدِكَஉன்னிடத்தில்فَاَمْطِرْஎனவே பொழியச் செய்வாயாகعَلَیْنَاஎங்கள் மீதுحِجَارَةًகற்களைمِّنَஇருந்துالسَّمَآءِவானம்اَوِஅல்லதுائْتِنَاஎங்களுக்குக் கொண்டு வருவாயாகبِعَذَابٍவேதனையைاَلِیْمٍநோவினை தரும்
வ இத் காலுல் லாஹும்ம இன் கான ஹாதா ஹுவல் ஹக்க மின் 'இன்திக Fப அம்திர் 'அலய்னா ஹிஜாரதம் மினஸ் ஸமா'இ அவி'தினா Bபி 'அதாBபின் அலீம்
(இன்னும் நிராகரிப்போர்:) “அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மாரி பெய்யச் செய், அல்லது எங்களுக்கு நோவினைமிக்க வேதனையை அனுப்பு!” என்று கூறினார்கள் (அதையும் நபியே! நீர் நினைவு கூறும்).
وَمَا كَانَ اللّٰهُ لِیُعَذِّبَهُمْ وَاَنْتَ فِیْهِمْ ؕ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ یَسْتَغْفِرُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَஆவான்اللّٰهُஅல்லாஹ்لِیُعَذِّبَهُمْஅவர்களைத் தண்டிப்பதற்குوَ اَنْتَமேலும் நீர்فِیْهِمْ ؕஅவர்களிடையேوَ مَاமேலும் இல்லைكَانَஆவான்اللّٰهُஅல்லாஹ்مُعَذِّبَهُمْஅவர்களைத் தண்டிப்பவனாகوَ هُمْமேலும் அவர்கள்یَسْتَغْفِرُوْنَபாவமன்னிப்புத் தேடுகிறார்கள்
வமா கானல் லாஹு லியு'அத் திBபஹும் வ அன்த Fபீஹிம்; வமா கானல் லாஹு மு'அத் திBபஹும் வ ஹும் யஸ்தக்Fபிரூன்
ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.
وَمَا لَهُمْ اَلَّا یُعَذِّبَهُمُ اللّٰهُ وَهُمْ یَصُدُّوْنَ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَا كَانُوْۤا اَوْلِیَآءَهٗ ؕ اِنْ اَوْلِیَآؤُهٗۤ اِلَّا الْمُتَّقُوْنَ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
وَ مَاமேலும் என்னلَهُمْஅவர்களுக்குاَلَّاதண்டிக்காமல் இருப்பதற்குیُعَذِّبَهُمُஅவர்களைத் தண்டிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்وَ هُمْஅவர்கள்یَصُدُّوْنَதடுக்கிறார்கள்عَنِஎன்பதால்الْمَسْجِدِமஸ்ஜிதுல்الْحَرَامِஹராமை விட்டும்وَ مَاமேலும் இல்லைكَانُوْۤاஅவர்கள் இருந்தார்கள்اَوْلِیَآءَهٗ ؕஅதன் பாதுகாவலர்களாகاِنْஇல்லைاَوْلِیَآؤُهٗۤஅதன் பாதுகாவலர்கள்اِلَّاதவிரالْمُتَّقُوْنَபயபக்தியுடையவர்கள்وَ لٰكِنَّஎனினும்اَكْثَرَهُمْஅவர்களில் பெரும்பாலோர்لَاஇல்லைیَعْلَمُوْنَஅறிகிறார்கள்
வமா லஹும் அல்லா யு'அத் திBபஹுமுல் லாஹு வ ஹும் யஸுத்தூன 'அனில் மஸ்ஜிதில்-ஹராமி வமா கானூ அவ்லியா'அஹ்; இன் அவ்லியா' உஹூ இல்லல் முத்தகூன வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
(இக்காரணங்கள் இல்லாது) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருக்க (வேறு காரணம்) என்ன இருக்கிறது? அவர்கள் (கஃபாவின்) காரியஸ்தர்களாக இல்லாத நிலையில் அந்த சங்கையான பள்ளிக்கு (மக்கள் செல்வதை)த் தடுக்கின்றனர்; அதன் காரியஸ்தர்கள் பயபக்தியுடையவர்களேயன்றி (வேறெவரும்) இருக்கமுடியாது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்.
وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَیْتِ اِلَّا مُكَآءً وَّتَصْدِیَةً ؕ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَஇருந்ததுصَلَاتُهُمْஅவர்களின் தொழுகைعِنْدَஅருகில்الْبَیْتِஅந்த ஆலயத்தின்اِلَّاதவிரمُكَآءًசீழ்க்கையடிப்பதுوَّ تَصْدِیَةً ؕமற்றும் கைதட்டுவதுفَذُوْقُواஎனவே சுவையுங்கள்الْعَذَابَவேதனையைبِمَاஎதன் காரணமாகكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَكْفُرُوْنَநிராகரித்துக் கொண்டு
வமா கான ஸலாதுஹும் 'இன்தல் Bபய்தி இல்லா முகா அ(ன்)வ்-வ தஸ்தியஹ்; Fபதூகுல் 'அதாBப Bபிமா குன்தும் தக்Fபுரூன்
அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்” (என்று).
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ لِیَصُدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ فَسَیُنْفِقُوْنَهَا ثُمَّ تَكُوْنُ عَلَیْهِمْ حَسْرَةً ثُمَّ یُغْلَبُوْنَ ؕ۬ وَالَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی جَهَنَّمَ یُحْشَرُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோیُنْفِقُوْنَஅவர்கள் செலவிடுகிறார்கள்اَمْوَالَهُمْதங்கள் செல்வங்களைلِیَصُدُّوْاதடுப்பதற்காகعَنْவிட்டுسَبِیْلِபாதையைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்فَسَیُنْفِقُوْنَهَاஎனவே அவர்கள் அதனைச் செலவிடுவார்கள்ثُمَّபிறகுتَكُوْنُஅது மாறும்عَلَیْهِمْஅவர்களுக்குحَسْرَةًகைசேதமாகثُمَّபின்னர்یُغْلَبُوْنَ ؕ۬அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோاِلٰیநோக்கிجَهَنَّمَநரகத்தைیُحْشَرُوْنَۙஅவர்கள் ஒன்று சேர்க்கப்படுவார்கள்
இன்னல் லதீன கFபரூ யுன்Fபிகூன அம்வாலஹும் லியஸுத்தூ 'அன் ஸBபீலில் லாஹ்; Fபஸயுன்Fபிகூனஹா தும்ம தகூனு 'அலய்ஹிம் ஹஸ்ரதன் தும்ம யுக்லBபூன்; வல் லதீன கFபரூ இலா ஜஹன்ன்னம யுஹ்ஷரூனா
நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் - முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.
لِیَمِیْزَ اللّٰهُ الْخَبِیْثَ مِنَ الطَّیِّبِ وَیَجْعَلَ الْخَبِیْثَ بَعْضَهٗ عَلٰی بَعْضٍ فَیَرْكُمَهٗ جَمِیْعًا فَیَجْعَلَهٗ فِیْ جَهَنَّمَ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟۠
لِیَمِیْزَபிரித்தெடுப்பதற்காகاللّٰهُஅல்லாஹ்الْخَبِیْثَதீயதைمِنَஇருந்துالطَّیِّبِநல்லதைوَ یَجْعَلَமேலும் வைப்பான்الْخَبِیْثَதீயதைبَعْضَهٗஅதன் சிலதைعَلٰیமீதுبَعْضٍசிலவற்றின்فَیَرْكُمَهٗபிறகு அதைக் குவியலாக்குவான்جَمِیْعًاஅனைத்தையும்فَیَجْعَلَهٗபிறகு அதை வைப்பான்فِیْஇல்جَهَنَّمَ ؕநரகம்اُولٰٓىِٕكَஅவர்கள்هُمُஅவர்கள்தாம்الْخٰسِرُوْنَ۠நஷ்டவாளிகள்
லியமீZஜல் லாஹுல் கBபீத மினத் தய்யிBபி வ யஜ்'அலல் கBபீத Bபஃளஹூ 'அல Bபஃளின் Fபயர்குமஹூ ஜமீ'அன் Fபயஜ்'அலஹூ Fபீ ஜஹன்ன்னம்; உலா'இக ஹுமுல் காஸிரூன்
அல்லாஹ் நல்லவர்களையும் கெட்டவர்களையும் பிரிப்பதற்காகவும், கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பெற்று ஒன்று சேர்க்கப்பட்டபின் அவர்களை நரகத்தில் போடுவதற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்; எனவே) இவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.  
قُلْ لِّلَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ یَّنْتَهُوْا یُغْفَرْ لَهُمْ مَّا قَدْ سَلَفَ ۚ وَاِنْ یَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِیْنَ ۟
قُلْகூறுவீராகلِّلَّذِیْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோ அவர்களிடம்اِنْஒருவேளைیَّنْتَهُوْاஅவர்கள் விலகிக்கொண்டால்یُغْفَرْமன்னிக்கப்படும்لَهُمْஅவர்களுக்குمَّاஎதுقَدْஏற்கனவேسَلَفَ ۚகடந்துவிட்டதோوَ اِنْஇன்னும் ஒருவேளைیَّعُوْدُوْاஅவர்கள் திரும்பினால்فَقَدْஅப்படியானால் நிச்சயமாகمَضَتْசென்றுவிட்டதுسُنَّتُவழிமுறைالْاَوَّلِیْنَமுன்னோர்களின்
குல் லில்லதீன கFபரூ இ(ன்)ய் யன்தஹூ யுக்Fபர் லஹும் மா கத் ஸலFப வ இ(ன்)ய் யஃஊதூ Fபகத் மளத் ஸுன்னதுல் அவ்வலீன்
நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்: இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேறி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.)
وَقَاتِلُوْهُمْ حَتّٰی لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّیَكُوْنَ الدِّیْنُ كُلُّهٗ لِلّٰهِ ۚ فَاِنِ انْتَهَوْا فَاِنَّ اللّٰهَ بِمَا یَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
وَ قَاتِلُوْهُمْமேலும் அவர்களுடன் போரிடுங்கள்حَتّٰیவரைلَاஇல்லாமல்تَكُوْنَபோகும்فِتْنَةٌகுழப்பம்وَّ یَكُوْنَமேலும் ஆகும்الدِّیْنُமார்க்கம்كُلُّهٗஅது முழுவதும்لِلّٰهِ ۚஅல்லாஹ்வுக்கேفَاِنِஎனவேانْتَهَوْاவிலகிக்கொண்டால்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِمَاஎதைیَعْمَلُوْنَசெய்கிறார்களோبَصِیْرٌஉற்று நோக்குபவன்
வ காதிலூஹும் ஹத்தா லா தகூன Fபித்னது(ன்)வ் வ யகூனத்தீனு குல்லுஹூ லில்லாஹ்; Fப இனின் தஹவ் Fப இன்னல்லாஹ Bபிமா யஃமலூன Bபஸீர்
(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
وَاِنْ تَوَلَّوْا فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَوْلٰىكُمْ ؕ نِعْمَ الْمَوْلٰی وَنِعْمَ النَّصِیْرُ ۟
وَ اِنْஇன்னும் ஒருவேளைتَوَلَّوْاஅவர்கள் புறக்கணித்தால்فَاعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مَوْلٰىكُمْ ؕஉங்கள் பாதுகாவலன்نِعْمَமிகச்சிறந்தالْمَوْلٰیபாதுகாவலன்وَ نِعْمَஇன்னும் மிகச்சிறந்தالنَّصِیْرُஉதவியாளன்
வ இன் தவல்லவ் Fபஃலமூ அன்னல் லாஹ மவ்லாகும்; னிஃமல் மவ்லா வ னிஃமன் னஸீர்
அவர்கள் மாறு செய்தால், நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் - அவன் பாதுகாப்பதிலும் மிகச் சிறந்தவன்; இன்னும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்தவன்.
وَاعْلَمُوْۤا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَیْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَلِلرَّسُوْلِ وَلِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ۙ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَاۤ اَنْزَلْنَا عَلٰی عَبْدِنَا یَوْمَ الْفُرْقَانِ یَوْمَ الْتَقَی الْجَمْعٰنِ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
وَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّمَاநிச்சயமாக எதனைغَنِمْتُمْநீங்கள் போர்ப்பொருளாகப் பெற்றீர்களோمِّنْஅதிலிருந்துشَیْءٍஏதேனும் ஒரு பொருள்فَاَنَّநிச்சயமாகلِلّٰهِஅல்லாஹ்வுக்குரியதுخُمُسَهٗஅதன் ஐந்தில் ஒரு பங்குوَ لِلرَّسُوْلِமேலும் இத்தூதருக்கும்وَ لِذِیமேலும் நெருங்கியالْقُرْبٰیஉறவினர்களுக்கும்وَ الْیَتٰمٰیஅனாதைகளுக்கும்وَ الْمَسٰكِیْنِஏழைகளுக்கும்وَ ابْنِமேலும் வழிப்السَّبِیْلِ ۙபோக்கர்களுக்கும்اِنْ(உண்மையாகவே)كُنْتُمْநீங்கள்اٰمَنْتُمْநம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதும்وَ مَاۤமேலும் எதனைاَنْزَلْنَاநாம் இறக்கி வைத்தோமோ (அதன் மீதும்)عَلٰیமீதுعَبْدِنَاநம் அடியார்یَوْمَநாளில்الْفُرْقَانِபிரித்தறிவிக்கும்یَوْمَ(அந்த) நாளில்الْتَقَیசந்தித்தனவோالْجَمْعٰنِ ؕஇரு படைகளும்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلٰیமீதுكُلِّஅனைத்துப்شَیْءٍபொருட்களின்قَدِیْرٌபேராற்றலுடையவன்
வஃலமூ அன்னமா கனிம்தும் மின் ஷ'இன் Fப அன்ன லில்லாஹி குமுஸஹூ வ லிர் ரஸூலி வ லிதில் குர்Bப வல்யதாமா வல்மஸாகீனி வBப்னிஸ் ஸBபீலி இன் குன்தும் ஆமன்தும் Bபில்லாஹி வ மா அன்Zஜல்னா 'அல 'அBப்தினா யவ்மல் Fபுர்கானி யவ்மல்தகல் ஜம்'ஆன்; வல் லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
(முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
اِذْ اَنْتُمْ بِالْعُدْوَةِ الدُّنْیَا وَهُمْ بِالْعُدْوَةِ الْقُصْوٰی وَالرَّكْبُ اَسْفَلَ مِنْكُمْ ؕ وَلَوْ تَوَاعَدْتُّمْ لَاخْتَلَفْتُمْ فِی الْمِیْعٰدِ ۙ وَلٰكِنْ لِّیَقْضِیَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ۙ۬ لِّیَهْلِكَ مَنْ هَلَكَ عَنْ بَیِّنَةٍ وَّیَحْیٰی مَنْ حَیَّ عَنْ بَیِّنَةٍ ؕ وَاِنَّ اللّٰهَ لَسَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ
اِذْஅப்போதுاَنْتُمْநீங்கள்بِالْعُدْوَةِ(பள்ளத்தாக்கின்) ஓரத்தில்الدُّنْیَاஅருகிலுள்ளوَ هُمْஇன்னும் அவர்கள்بِالْعُدْوَةِ(பள்ளத்தாக்கின்) ஓரத்தில்الْقُصْوٰیதொலைவிலுள்ளوَ الرَّكْبُஇன்னும் வாகனக் கூட்டத்தினர்اَسْفَلَகீழேمِنْكُمْ ؕஉங்களை விடوَ لَوْமேலும் ஒருவேளைتَوَاعَدْتُّمْநீங்கள் ஒருவருக்கொருவர் வாக்களித்திருந்தால்لَاخْتَلَفْتُمْநிச்சயமாக நீங்கள் மாறுபட்டிருப்பீர்கள்فِیஅந்தالْمِیْعٰدِ ۙகுறித்த நேரத்தில்وَ لٰكِنْஆனால்لِّیَقْضِیَநிறைவேற்றுவதற்காகاللّٰهُஅல்லாஹ்اَمْرًاஒரு காரியத்தைكَانَஇருந்ததுمَفْعُوْلًا ۙ۬செய்யப்பட வேண்டியதாகلِّیَهْلِكَஅழிவதற்காகمَنْஎவர்هَلَكَஅழிந்தாரோعَنْۢஅடிப்படையில்بَیِّنَةٍதெளிவான சான்றின்وَّ یَحْیٰیஇன்னும் உயிர் வாழ்வதற்காகمَنْஎவர்حَیَّஉயிர் வாழ்ந்தாரோعَنْۢஅடிப்படையில்بَیِّنَةٍ ؕதெளிவான சான்றின்وَ اِنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَسَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌۙஅறிந்தவன்
இத் அன்தும் Bபில்'உத்வதித் துன்யா வ ஹும் Bபில்'உத்வதில் குஸ்வா வர்ரக்Bபு அஸ்Fபல மின்கும்; வ லவ் தவாத்தும் லக்தலFப்தும் Fபில் மீ'ஆதி வ லாகில் லியக்ளியல் லாஹு அம்ரன் கான மFப்'ஊலல் லியஹ்லிக மன் ஹலக 'அம் Bபய்யினதி(ன்)வ் வ யஹ்யா மன் ஹய்ய 'அம் Bபய்யினஹ்; வ இன்னல் லாஹ ல ஸமீ'உன் 'அலீம்
(பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
اِذْ یُرِیْكَهُمُ اللّٰهُ فِیْ مَنَامِكَ قَلِیْلًا ؕ وَلَوْ اَرٰىكَهُمْ كَثِیْرًا لَّفَشِلْتُمْ وَلَتَنَازَعْتُمْ فِی الْاَمْرِ وَلٰكِنَّ اللّٰهَ سَلَّمَ ؕ اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
اِذْஅப்போதுیُرِیْكَهُمُஅவர்களை உமக்குக் காண்பித்தான்اللّٰهُஅல்லாஹ்فِیْஇல்مَنَامِكَஉமது கனவில்قَلِیْلًا ؕகுறைவாகوَ لَوْஇன்னும் ஒருவேளைاَرٰىكَهُمْஅவர்களை உமக்குக் காண்பித்திருந்தால்كَثِیْرًاஅதிகமாகلَّفَشِلْتُمْநிச்சயமாக நீங்கள் தைரியம் இழந்திருப்பீர்கள்وَ لَتَنَازَعْتُمْஇன்னும் நிச்சயமாக நீங்கள் தர்க்கித்திருப்பீர்கள்فِیஇல்الْاَمْرِஅக்காரியத்தில்وَ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்سَلَّمَ ؕகாப்பாற்றினான்اِنَّهٗநிச்சயமாக அவன்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِஉள்ளிருப்பவற்றைالصُّدُوْرِநெஞ்சங்களின்
இத் யுரீகஹுமுல் லாஹு Fபீ மனாமிக கலீல; வ லவ் அராகஹும் கதீரல் லFபஷில்தும் வ லதனாZஜஃதும் Fபில் அம்ரி வ லாகின்னல் லாஹ ஸல்லம்; இன்னஹூ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
(நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
وَاِذْ یُرِیْكُمُوْهُمْ اِذِ الْتَقَیْتُمْ فِیْۤ اَعْیُنِكُمْ قَلِیْلًا وَّیُقَلِّلُكُمْ فِیْۤ اَعْیُنِهِمْ لِیَقْضِیَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ؕ وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠
وَ اِذْஇன்னும் அச்சமயம்یُرِیْكُمُوْهُمْஅவன் அவர்களை உங்களுக்குக் காட்டினான்اِذِபோதுالْتَقَیْتُمْநீங்கள் சந்தித்தீர்கள்فِیْۤஇல்اَعْیُنِكُمْஉங்கள் கண்களில்قَلِیْلًاகுறைவாகوَّ یُقَلِّلُكُمْமேலும் உங்களை அவன் குறைத்துக் காட்டினான்فِیْۤஇல்اَعْیُنِهِمْஅவர்களின் கண்களில்لِیَقْضِیَநிறைவேற்றுவதற்காகاللّٰهُஅல்லாஹ்اَمْرًاஒரு காரியத்தைكَانَஅது இருந்ததுمَفْعُوْلًا ؕசெய்யப்பட வேண்டியதாகوَ اِلَیமேலும்اللّٰهِஅல்லாஹ்விடமேتُرْجَعُதிருப்பப்படும்الْاُمُوْرُ۠காரியங்கள் (அனைத்தும்)
வ இத் யுரீகுமூஹும் இதில் தகய்தும் Fபீ அஃயுனிகும் கலீல(ன்)வ் வ யுகல்லிலுகும் Fபீ அஃயுனிஹிம் லியக்ளியல் லாஹு அம்ரன் கான மFப்'ஊலா; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான்; இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் - இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِیْتُمْ فِئَةً فَاثْبُتُوْا وَاذْكُرُوا اللّٰهَ كَثِیْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟ۚ
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِذَاபொழுதுلَقِیْتُمْநீங்கள் சந்தித்தால்فِئَةًஒரு படையைفَاثْبُتُوْاஆகவே உறுதியாக நில்லுங்கள்وَ اذْكُرُواமேலும் நினைவுகூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைكَثِیْرًاஅதிகமாகلَّعَلَّكُمْநீங்கள்تُفْلِحُوْنَۚவெற்றியடைவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா லகீதும் Fபி'அதன் Fபத்Bபுதூ வத்குருல் லாஹ கதீரல் ல'அல்லகும் துFப்லிஹூன்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் - அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் - நீங்கள் வெற்றியடைவீர்கள்.
وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِیْحُكُمْ وَاصْبِرُوْا ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِیْنَ ۟ۚ
وَ اَطِیْعُواமேலும் கீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ رَسُوْلَهٗஅவனுடைய தூதருக்கும்وَ لَاமேலும் வேண்டாம்تَنَازَعُوْاநீங்கள் தர்க்கித்துக் கொள்ளفَتَفْشَلُوْاஅதனால் நீங்கள் தைரியமிழந்து விடுவீர்கள்وَ تَذْهَبَமேலும் நீங்கிவிடும்رِیْحُكُمْஉங்கள் பலம்وَ اصْبِرُوْا ؕமேலும் பொறுமையாக இருங்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مَعَஉடன் இருக்கிறான்الصّٰبِرِیْنَۚபொறுமையாளர்களுடன்
வ அதீ'உல் லாஹ வ ரஸூலஹூ வலா தனாZஜ'ஊ FபதFப்ஷலூ வ தத்ஹBப ரீஹுகும் வஸ்Bபிரூ; இன்னல் லாஹ ம'அஸ் ஸாBபிரீன்
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ خَرَجُوْا مِنْ دِیَارِهِمْ بَطَرًا وَّرِئَآءَ النَّاسِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ وَاللّٰهُ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟
وَ لَاமேலும் வேண்டாம்تَكُوْنُوْاநீங்கள் ஆகிவிடكَالَّذِیْنَஅவர்களைப் போலخَرَجُوْاஅவர்கள் வெளியேறினார்களோمِنْஇருந்துدِیَارِهِمْதங்கள் இல்லங்கள்بَطَرًاகர்வத்துடனும்وَّ رِئَآءَமேலும் முகஸ்துதிக்காகவும்النَّاسِமனிதர்களுக்குوَ یَصُدُّوْنَமேலும் அவர்கள் தடுக்கிறார்கள்عَنْஇருந்துسَبِیْلِபாதைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِمَاஎவற்றைیَعْمَلُوْنَஅவர்கள் செய்கிறார்களோمُحِیْطٌசூழ்ந்தறிபவன்
வ லா தகூனூ கல்லதீன கரஜூ மின் தியாரிஹிம் Bபதர(ன்)வ் வ ரி'ஆ'அன் னாஸி வ யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹ்; வல்லாஹு Bபிமா யஃமலூன முஹீத்
பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்.
وَاِذْ زَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْیَوْمَ مِنَ النَّاسِ وَاِنِّیْ جَارٌ لَّكُمْ ۚ فَلَمَّا تَرَآءَتِ الْفِئَتٰنِ نَكَصَ عَلٰی عَقِبَیْهِ وَقَالَ اِنِّیْ بَرِیْٓءٌ مِّنْكُمْ اِنِّیْۤ اَرٰی مَا لَا تَرَوْنَ اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ ؕ وَاللّٰهُ شَدِیْدُ الْعِقَابِ ۟۠
وَ اِذْமேலும் எப்போதுزَیَّنَஅழகாகக் காட்டினான்لَهُمُஅவர்களுக்குالشَّیْطٰنُஷைத்தான்اَعْمَالَهُمْஅவர்களின் செயல்களைوَ قَالَமேலும் கூறினான்لَاஇல்லைغَالِبَவெல்பவர்لَكُمُஉங்களுக்குالْیَوْمَஇன்றுمِنَஇருந்துالنَّاسِமனிதர்களில்وَ اِنِّیْமேலும் நிச்சயமாக நான்جَارٌபாதுகாவலன்لَّكُمْ ۚஉங்களுக்குفَلَمَّاஆனால் எப்போதுتَرَآءَتِநேருக்கு நேர் கண்டனவோالْفِئَتٰنِஇரு படைகளும்نَكَصَஅவன் பின்வாங்கினான்عَلٰیமீதுعَقِبَیْهِதனது குதிங்கால்கள்وَ قَالَமேலும் கூறினான்اِنِّیْநிச்சயமாக நான்بَرِیْٓءٌவிலகியவன்مِّنْكُمْஉங்களை விட்டும்اِنِّیْۤநிச்சயமாக நான்اَرٰیபார்க்கிறேன்مَاஎதைلَاஇல்லைتَرَوْنَநீங்கள் பார்க்கிறீர்களோاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்اللّٰهَ ؕஅல்லாஹ்வைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்شَدِیْدُகடுமையானவன்الْعِقَابِ۠தண்டிப்பதில்
வ இத் Zஜய்யன லஹுமுஷ் ஷய்தானு அஃமாலஹும் வ கால லா காலிBப லகுமுல் யவ்ம மினன் னாஸி வ இன்னீ ஜாருல் லகும் Fபலம்மா தரா'அதில் Fபி'அதானி னகஸ 'அலா அகிBபய்ஹி வ கால இன்னீ Bபரீ'உம் மின்கும் இன்னீ அரா மா லா தரவ்ன இன்னீ அகாFபுல் லாஹ்; வல்லாஹு ஷதீதுல் 'இகாBப்
ஷைத்தான் அவர்களுடைய (பாவச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, “இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை; மெய்யாக நான் உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்!” என்று கூறினான்; இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது அவன் புறங்காட்டிப் பின்சென்று, “ மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன்; நீங்கள் பார்க்க முடியாததை நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடினமானவன்” என்று கூறினான்.  
اِذْ یَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ غَرَّ هٰۤؤُلَآءِ دِیْنُهُمْ ؕ وَمَنْ یَّتَوَكَّلْ عَلَی اللّٰهِ فَاِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
اِذْஅப்போதுیَقُوْلُகூறினர்الْمُنٰفِقُوْنَநயவஞ்சகர்கள்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்فِیْஇல்قُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்கள்مَّرَضٌநோய்غَرَّஏமாற்றிவிட்டதுهٰۤؤُلَآءِஇவர்களைدِیْنُهُمْ ؕஅவர்களின் மார்க்கம்وَ مَنْஇன்னும் எவர்یَّتَوَكَّلْநம்பிக்கை வைக்கிறாரோعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்فَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
இத் யகூலுல் முனாFபிகூன வல்லதீன Fபீ குலூBபிஹிம் மரளுன் கர்ர ஹா'உலா'இ தீனுஹும்; வ மய் யதவக்கல் 'அலல் லாஹி Fப இன்னல் லாஹ 'அZஜீ Zஜுன் ஹகீம்
நயவஞ்சகர்களும் தம் இருதயங்களில் நோய் உள்ளவர்களும் (முஸ்லிம்களைச் சுட்டிக்காட்டி) “இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கி (ஏமாற்றி) விட்டது” என்று கூறினார்கள் - அல்லாஹ்வை எவர் முற்றிலும் நம்புகிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (சக்தியில்) மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் (என்பதில் உறுதி கொள்வார்களாக).
وَلَوْ تَرٰۤی اِذْ یَتَوَفَّی الَّذِیْنَ كَفَرُوا ۙ الْمَلٰٓىِٕكَةُ یَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ ۚ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِیْقِ ۟
وَ لَوْஇன்னும் ஒருவேளைتَرٰۤیநீர் பார்த்தால்اِذْபோதுیَتَوَفَّیஉயிரைக் கைப்பற்றும்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوا ۙநிராகரித்தார்களோالْمَلٰٓىِٕكَةُவானவர்கள்یَضْرِبُوْنَஅடிக்கிறார்கள்وُجُوْهَهُمْஅவர்களின் முகங்களைوَ اَدْبَارَهُمْ ۚஇன்னும் அவர்களின் முதுகுகளைوَ ذُوْقُوْاஇன்னும் சுவையுங்கள்عَذَابَவேதனையைالْحَرِیْقِசுட்டெரிக்கும்
வ லவ் தரா இத் யதவFப் Fபல் லதீன கFபருல் மலா'இகது யள்ரிBபூன வுஜூஹஹும் வ அத்Bபாரஹும் வ தூகூ 'அதாBபல் ஹரீக்
மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று.
ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَیْدِیْكُمْ وَاَنَّ اللّٰهَ لَیْسَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟ۙ
ذٰلِكَஅதுبِمَاஎதன் காரணமாகவென்றால்قَدَّمَتْமுற்படுத்தினவோاَیْدِیْكُمْஉங்கள் கைகள்وَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَیْسَஅல்லன்بِظَلَّامٍஅநீதி இழைப்பவன்لِّلْعَبِیْدِۙஅடியார்களுக்கு
தாலிக Bபிமா கத்தமத் அய்தீகும் வான்னல்லாஹ லய்ஸ Bபிளல்லாமில் லில் 'அBபீத்
இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் - நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான்.
كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ ۙ وَالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ؕ اِنَّ اللّٰهَ قَوِیٌّ شَدِیْدُ الْعِقَابِ ۟
كَدَاْبِநிலையைப் போல்اٰلِகூட்டத்தாரின்فِرْعَوْنَ ۙஃபிர்அவ்னின்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்مِنْஇருந்துقَبْلِهِمْ ؕஅவர்களுக்கு முன்كَفَرُوْاநிராகரித்தார்களோبِاٰیٰتِஅத்தாட்சிகளைاللّٰهِஅல்லாஹ்வின்فَاَخَذَهُمُஆகவே அவர்களைப் பிடித்தான்اللّٰهُஅல்லாஹ்بِذُنُوْبِهِمْ ؕஅவர்களின் பாவங்களினால்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَوِیٌّவல்லமையுள்ளவன்شَدِیْدُகடுமையானவன்الْعِقَابِதண்டனையளிப்பதில்
கதாBபி ஆலி Fபிர்'அவ்ன வல் லதீன மின் கBப்லிஹிம்; கFபரூ Bபி ஆயாதில் லாஹி Fப அகதஹு முல் லாஹு BபிதுனூBபிஹிம்; இன்னல் லாஹ கவிய்யுன் ஷதீதுல் 'இகாBப்
(இவர்களின் நிலையை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப் போன்றதேயாகும்; (இவர்களைப் போலவே) அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான்; நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன்.
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ لَمْ یَكُ مُغَیِّرًا نِّعْمَةً اَنْعَمَهَا عَلٰی قَوْمٍ حَتّٰی یُغَیِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ ۙ وَاَنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ
ذٰلِكَஅதுبِاَنَّஏனெனில்اللّٰهَஅல்லாஹ்لَمْஇல்லைیَكُஇருக்கமாட்டான்مُغَیِّرًاமாற்றுபவனாகنِّعْمَةًஓர் அருட்கொடையைاَنْعَمَهَاஅவன் அதனை வழங்கினான்عَلٰیமீதுقَوْمٍஒரு சமூகத்தின்حَتّٰیவரைیُغَیِّرُوْاஅவர்கள் மாற்றிக்கொள்ளும்مَاஉள்ளதைبِاَنْفُسِهِمْ ۙதங்களுக்குள்ளேوَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌۙநன்கறிந்தவன்
தாலிக Bபி அன்னல் லாஹ லம் யகுமு கய்யிரன் னிஃமதன் அன்'அமஹா 'அலா கவ்மின் ஹத்தா யுகய்யிரூ மா Bபிஅன்Fபுஸிஹிம் வ அன்னல்லாஹ ஸமீ'உன் 'அலீம்
“ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ ۙ وَالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَذَّبُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَغْرَقْنَاۤ اٰلَ فِرْعَوْنَ ۚ وَكُلٌّ كَانُوْا ظٰلِمِیْنَ ۟
كَدَاْبِநிலையைப் போலاٰلِகூட்டத்தாரின்فِرْعَوْنَ ۙஃபிர்அவ்னின்وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்مِنْஇருந்துقَبْلِهِمْ ؕஅவர்களுக்கு முன்னால்كَذَّبُوْاபொய்ப்பித்தார்கள்بِاٰیٰتِஅத்தாட்சிகளைرَبِّهِمْதங்கள் இறைவனுடையفَاَهْلَكْنٰهُمْஎனவே நாம் அவர்களை அழித்தோம்بِذُنُوْبِهِمْஅவர்களின் பாவங்களினால்وَ اَغْرَقْنَاۤமேலும் நாம் மூழ்கடித்தோம்اٰلَகூட்டத்தினரைفِرْعَوْنَ ۚஃபிர்அவ்னின்وَ كُلٌّமேலும் அனைவரும்كَانُوْاஇருந்தார்கள்ظٰلِمِیْنَஅநியாயக்காரர்களாக
கதாBபி ஆலி Fபிர்'அவ்ன வல்லதீன மின் கBப்லிஹிம்; கத்தBபூ Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் Fபாஹ்லக்னாஹும் BபிதுனூBபிஹிம் வ அக்ரக்னா ஆல Fபிர்'அவ்ன்; வ குல்லுன் கானூ ளாலிமீன்
ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள் - ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம் - அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.
اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الَّذِیْنَ كَفَرُوْا فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟ۖۚ
اِنَّநிச்சயமாகشَرَّமிகக் கெட்டவைالدَّوَآبِّஉயிரினங்களில்عِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோفَهُمْஎனவே அவர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَۖۚநம்பிக்கை கொள்வார்கள்
இன்ன ஷர்ரத் தவாBப்Bபி 'இன்தல் லாஹில் லதீன கFபரூ Fபஹும் லா யு'மினூன்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் - அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
اَلَّذِیْنَ عٰهَدْتَّ مِنْهُمْ ثُمَّ یَنْقُضُوْنَ عَهْدَهُمْ فِیْ كُلِّ مَرَّةٍ وَّهُمْ لَا یَتَّقُوْنَ ۟
اَلَّذِیْنَஎவர்கள்عٰهَدْتَّநீர் உடன்படிக்கை செய்தீரோمِنْهُمْஅவர்களில்ثُمَّபின்னர்یَنْقُضُوْنَஅவர்கள் முறிக்கிறார்கள்عَهْدَهُمْதங்களது உடன்படிக்கையைفِیْஇல்كُلِّஒவ்வொருمَرَّةٍமுறையும்وَّ هُمْமேலும் அவர்கள்لَاஇல்லைیَتَّقُوْنَஅஞ்சுகிறார்கள்
அல்லதீன'ஆஹத்த மின் ஹும் தும்ம யன்குளூன 'அஹ்தஹும் Fபீ குல்லி மர்ரதி(ன்)வ் வ ஹும் லா யத்தகூன்
(நபியே!) இவர்களில் நீர் எவருடன் உடன்படிக்கை செய்து கொண்டாலும், ஒவ்வொரு தடவையும் அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்தே வருகின்றனர்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவதேயில்லை.
فَاِمَّا تَثْقَفَنَّهُمْ فِی الْحَرْبِ فَشَرِّدْ بِهِمْ مَّنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ ۟
فَاِمَّاஎனவேتَثْقَفَنَّهُمْநீர் அவர்களை அகப்படுத்திக் கொண்டால்فِیஇல்الْحَرْبِபோர்فَشَرِّدْசிதறடியுங்கள்بِهِمْஅவர்களைக் கொண்டுمَّنْஎவர்களைخَلْفَهُمْஅவர்களுக்குப் பின்னால்لَعَلَّهُمْஅவர்கள்یَذَّكَّرُوْنَபடிப்பினை பெறுவார்கள்
Fப இம்மா தத்கFபன்னஹும் Fபில் ஹர்Bபி Fபஷர்ரித் Bபிஹிம் மன் கல்Fபஹும் ல'அல்லஹும் யத்தக்கரூன்
எனவே போரில் நீர் அவர்கள்மீது வாய்ப்பைப் பெற்று விட்டால், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் பயந்தோடும்படி சிதறடித்து விடுவீராக - இதனால் அவர்கள் நல்லறிவு பெறட்டும்.
وَاِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِیَانَةً فَانْۢبِذْ اِلَیْهِمْ عَلٰی سَوَآءٍ ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْخَآىِٕنِیْنَ ۟۠
وَ اِمَّاமேலும் ஒருவேளைتَخَافَنَّநீர் அஞ்சினால்مِنْஎந்தவொருقَوْمٍசமூகத்தாரிடமிருந்தும்خِیَانَةًமோசடியைفَانْۢبِذْஎனவே எறிந்துவிடுவீராகاِلَیْهِمْஅவர்களிடம்عَلٰیமீதுسَوَآءٍ ؕசமமாகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُحِبُّநேசிக்கிறான்الْخَآىِٕنِیْنَ۠மோசடி செய்பவர்களை
வ இம்மா தகாFபன மின் கவ்மின் கியானதன் Fபம்Bபித் இலய்ஹிம் 'அலா ஸவா'; இன்னல் லாஹ லாயுஹிBப்Bபுல் கா'இனீன்
(உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.  
وَلَا یَحْسَبَنَّ الَّذِیْنَ كَفَرُوْا سَبَقُوْا ؕ اِنَّهُمْ لَا یُعْجِزُوْنَ ۟
وَ لَاமேலும் வேண்டாம்یَحْسَبَنَّஎண்ணالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோسَبَقُوْا ؕதப்பித்துவிட்டதாகاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَاமுடியாதுیُعْجِزُوْنَதோற்கடிக்க
வ லா யஹ்ஸBபன்னல் லதீன கFபரூ ஸBபகூ; இன்னஹும் லா யுஃஜிZஜூன்
நிராகரிப்பவர்கள் தாங்கள் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொண்டதாக எண்ணவேண்டாம்; நிச்சயமாக அவர்கள் (இறையச்சமுடையோரைத்) தோற்கடிக்கவே முடியாது.
وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَیْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِیْنَ مِنْ دُوْنِهِمْ ۚ لَا تَعْلَمُوْنَهُمْ ۚ اَللّٰهُ یَعْلَمُهُمْ ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ شَیْءٍ فِیْ سَبِیْلِ اللّٰهِ یُوَفَّ اِلَیْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ۟
وَ اَعِدُّوْاஇன்னும் தயார் செய்யுங்கள்لَهُمْஅவர்களுக்காகمَّاஎதைاسْتَطَعْتُمْஉங்களால் இயலுமோمِّنْஇருந்துقُوَّةٍபலத்தையும்وَّ مِنْஇன்னும் இருந்துرِّبَاطِலாயத்தில் கட்டப்பட்டالْخَیْلِகுதிரைகளையும்تُرْهِبُوْنَநீங்கள் அச்சமூட்டுவதற்காகبِهٖஅதன் மூலம்عَدُوَّஎதிரியைاللّٰهِஅல்லாஹ்வின்وَ عَدُوَّكُمْஇன்னும் உங்கள் எதிரியையும்وَ اٰخَرِیْنَஇன்னும் மற்றவர்களையும்مِنْஇருந்துدُوْنِهِمْ ۚஅவர்களைத் தவிரلَاஇல்லைتَعْلَمُوْنَهُمْ ۚஅவர்களை நீங்கள் அறிவீர்கள்اَللّٰهُஅல்லாஹ்یَعْلَمُهُمْ ؕஅவர்களை நன்கறிவான்وَ مَاஇன்னும் எதைتُنْفِقُوْاநீங்கள் செலவு செய்கிறீர்களோمِنْஇருந்துشَیْءٍஎந்தப் பொருளையும்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்یُوَفَّமுழுமையாக வழங்கப்படும்اِلَیْكُمْஉங்களுக்குوَ اَنْتُمْமேலும் நீங்கள்لَاஇல்லைتُظْلَمُوْنَஅநீதி இழைக்கப்படுவீர்கள்
வ அ'இத்தூ லஹும் மஸ்ததஃதும் மின் குவ்வதி(ன்)வ் வ மிர்ரிBபாதில் கய்லி துர்ஹிBபூன Bபிஹீ 'அதுவ்வல் லாஹி வ 'அதுவ்வகும் வ ஆகரீன மின் தூனிஹிம் லா தஃலமூ னஹும் அல்லாஹு யஃலமுஹும்; வமா துன்Fபிகூ மின் ஷய்'இன் Fபீ ஸBபீலில் லாஹி யுவFப்Fப இலய்கும் வ அன்தும் லா துள்லமூன்
அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.
وَاِنْ جَنَحُوْا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَ اِنْமேலும் ஒருவேளைجَنَحُوْاஅவர்கள் சாய்ந்தால்لِلسَّلْمِசமாதானத்தின் பக்கம்فَاجْنَحْஎனவே நீரும் சாய்வீராகلَهَاஅதன்பால்وَ تَوَكَّلْமேலும் நம்பிக்கை வைப்பீராகعَلَیமீதுاللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவனேالسَّمِیْعُசெவியேற்பவன்الْعَلِیْمُநன்கறிந்தவன்
வ இன் ஜனஹூ லிஸ்ஸல்மி Fபஜ்னஹ் லஹா வ தவக்கல் 'அலல் லாஹ்; இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
وَاِنْ یُّرِیْدُوْۤا اَنْ یَّخْدَعُوْكَ فَاِنَّ حَسْبَكَ اللّٰهُ ؕ هُوَ الَّذِیْۤ اَیَّدَكَ بِنَصْرِهٖ وَبِالْمُؤْمِنِیْنَ ۟ۙ
وَ اِنْஇன்னும் ஒருவேளைیُّرِیْدُوْۤاஅவர்கள் நாடினால்اَنْஎன்றுیَّخْدَعُوْكَஉம்மை ஏமாற்றفَاِنَّஆகவே நிச்சயமாகحَسْبَكَஉமக்குப் போதுமானவன்اللّٰهُ ؕஅல்லாஹ்هُوَஅவனேالَّذِیْۤஎத்தகையவன் என்றால்اَیَّدَكَஉம்மை வலுவூட்டினான்بِنَصْرِهٖதன் உதவியைக் கொண்டுوَ بِالْمُؤْمِنِیْنَۙமேலும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும்
வ இ(ன்)ய் யுரீதூ அ(ன்)ய்-யக்த'ஊக Fப இன்ன ஹஸ்Bபகல் லாஹ்; ஹுவல் லதீ அய்யதக Bபினஸ்ரிஹீ வ Bபில்மு'மினீன்
அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் - நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
وَاَلَّفَ بَیْنَ قُلُوْبِهِمْ ؕ لَوْ اَنْفَقْتَ مَا فِی الْاَرْضِ جَمِیْعًا مَّاۤ اَلَّفْتَ بَیْنَ قُلُوْبِهِمْ وَلٰكِنَّ اللّٰهَ اَلَّفَ بَیْنَهُمْ ؕ اِنَّهٗ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
وَ اَلَّفَமேலும் அவன் இணைத்தான்بَیْنَஇடையேقُلُوْبِهِمْ ؕஅவர்களின் உள்ளங்களைلَوْஒருவேளைاَنْفَقْتَநீர் செலவு செய்திருந்தாலும்مَاஎவற்றைفِیஉள்ளالْاَرْضِபூமியில்جَمِیْعًاஅனைத்தையும்مَّاۤஇல்லைاَلَّفْتَநீர் இணைத்திருக்கبَیْنَஇடையேقُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்களைوَ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்اَلَّفَஇணைத்தான்بَیْنَهُمْ ؕஅவர்களுக்கிடையேاِنَّهٗநிச்சயமாக அவன்عَزِیْزٌமிகைத்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
வ அல்லFப Bபய்ன குலூBபிஹிம்; லவ் அன்Fபக்த மா Fபில் அர்ளி ஜமீ'அம் மா அல்லFப்த Bபய்ன குலூBபிஹிம் வ லாகின்னல்லாஹ அல்லFப Bபய்னஹும்; இன்னாஹூ 'அZஜீZஜுன் ஹகீம்
மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا النَّبِیُّ حَسْبُكَ اللّٰهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟۠
یٰۤاَیُّهَاالنَّبِیُّநபியேحَسْبُكَஉமக்குப் போதுமானவன்اللّٰهُஅல்லாஹ்وَ مَنِமேலும் எவர்اتَّبَعَكَஉம்மைப் பின்பற்றினாரோمِنَஇருந்துالْمُؤْمِنِیْنَ۠முஃமின்கள்
யா அய்யுஹன் னBபிய்யு ஹஸ்Bபுகல் லாஹு வ மனித்தBப 'அக மினல் மு'மினீன்
நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.
یٰۤاَیُّهَا النَّبِیُّ حَرِّضِ الْمُؤْمِنِیْنَ عَلَی الْقِتَالِ ؕ اِنْ یَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صٰبِرُوْنَ یَغْلِبُوْا مِائَتَیْنِ ۚ وَاِنْ یَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ یَّغْلِبُوْۤا اَلْفًا مِّنَ الَّذِیْنَ كَفَرُوْا بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَفْقَهُوْنَ ۟
یٰۤاَیُّهَاالنَّبِیُّநபியேحَرِّضِஆர்வமூட்டுவீராகالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களைعَلَیமீதுالْقِتَالِ ؕபோரின்اِنْஒருவேளைیَّكُنْஇருந்தால்مِّنْكُمْஉங்களில்عِشْرُوْنَஇருபதுصٰبِرُوْنَபொறுமையாளர்கள்یَغْلِبُوْاஅவர்கள் வெற்றி கொள்வார்கள்مِائَتَیْنِ ۚஇருநூறு பேரைوَ اِنْமேலும் ஒருவேளைیَّكُنْஇருந்தால்مِّنْكُمْஉங்களில்مِّائَةٌநூறு பேர்یَّغْلِبُوْۤاஅவர்கள் வெற்றி கொள்வார்கள்اَلْفًاஆயிரம் பேரைمِّنَஇருந்துالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبِاَنَّهُمْஏனென்றால் அவர்கள்قَوْمٌஒரு சமூகத்தினர்لَّاஇல்லைیَفْقَهُوْنَவிளங்கிக் கொள்கிறார்கள்
யா அய்யுஹன் னBபிய்யு ஹர்ரிளில் மு'மினீன 'அலல் கிதால்; இ(ன்)ய்-யகும் மின்கும் 'இஷ்ரூன ஸாBபிரூன யக்லிBபூ மி'அதய்ன்; வ இ(ன்)ய்-யகும் மின்கும் மி'அது(ன்)ய் யக்லிBபூ அல்Fபம் மினல் லதீன கFபரூ Bபி அன்னஹும் கவ்முல் லா யFப்கஹூன்
நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக; உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).
اَلْـٰٔنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِیْكُمْ ضَعْفًا ؕ فَاِنْ یَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ یَّغْلِبُوْا مِائَتَیْنِ ۚ وَاِنْ یَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ یَّغْلِبُوْۤا اَلْفَیْنِ بِاِذْنِ اللّٰهِ ؕ وَاللّٰهُ مَعَ الصّٰبِرِیْنَ ۟
اَلْـٰٔنَஇப்பொழுதுخَفَّفَஇலகுவாக்கினான்اللّٰهُஅல்லாஹ்عَنْكُمْஉங்களுக்குوَ عَلِمَமேலும் அறிந்தான்اَنَّஎன்றுفِیْكُمْஉங்களிடம்ضَعْفًا ؕபலவீனம்فَاِنْஎனவேیَّكُنْஇருந்தால்مِّنْكُمْஉங்களில்مِّائَةٌநூறுصَابِرَةٌபொறுமையாளர்கள்یَّغْلِبُوْاவெற்றி கொள்வார்கள்مِائَتَیْنِ ۚஇருநூறு பேரைوَ اِنْமேலும்یَّكُنْஇருந்தால்مِّنْكُمْஉங்களில்اَلْفٌஆயிரம் பேர்یَّغْلِبُوْۤاவெற்றி கொள்வார்கள்اَلْفَیْنِஇரண்டாயிரம் பேரைبِاِذْنِஅனுமதியுடன்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்مَعَஉடன் இருக்கிறான்الصّٰبِرِیْنَபொறுமையாளர்கள்
அல்'ஆன கFப்FபFபல் லாஹு 'அன்கும் வ 'அலிம அன்ன Fபீகும் ளஃFபா; Fப-இ(ன்)ய் யகும் மின்கும் மி'அதுன் ஸாBபிரது(ன்)ய் யக்லிBபூ மி'அதய்ன்; வ இ(ன்)ய்-யகும் மின்கும் அல்Fபு(ன்)ய் யக்லிBபூ அல்Fபய்னி Bபி இத்னில் லாஹ்; வல்லாஹு ம'அஸ் ஸாBபிரீன்
நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
مَا كَانَ لِنَبِیٍّ اَنْ یَّكُوْنَ لَهٗۤ اَسْرٰی حَتّٰی یُثْخِنَ فِی الْاَرْضِ ؕ تُرِیْدُوْنَ عَرَضَ الدُّنْیَا ۖۗ وَاللّٰهُ یُرِیْدُ الْاٰخِرَةَ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
مَاஇல்லைكَانَதகாதுلِنَبِیٍّஒரு நபிக்குاَنْஎன்றுیَّكُوْنَஇருக்கلَهٗۤஅவருக்குاَسْرٰیபோர்க்கைதிகள்حَتّٰیவரைیُثْخِنَஅவர் முற்றிலும் முறியடிக்கும்فِیஇல்الْاَرْضِ ؕபூமிتُرِیْدُوْنَநீங்கள் நாடுகிறீர்கள்عَرَضَஆதாயத்தைالدُّنْیَا ۖۗஇவ்வுலகின்وَ اللّٰهُஆனால் அல்லாஹ்یُرِیْدُநாடுகிறான்الْاٰخِرَةَ ؕமறுமையைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
மா கான லி னBபிய்யின் அய் யகூன லஹூ அஸ்ரா ஹத்தா யுத்கின Fபில் அர்ள்; துரீதூன அரளத் துன்யா வல்லாஹு யுரீதுல் ஆகிரஹ்; வல்லாஹு 'அZஜீZஜுன் ஹகீம்
(விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
لَوْلَا كِتٰبٌ مِّنَ اللّٰهِ سَبَقَ لَمَسَّكُمْ فِیْمَاۤ اَخَذْتُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟
لَوْ لَاஇல்லாவிட்டால்كِتٰبٌஒரு விதிمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்سَبَقَமுந்தியிருக்கلَمَسَّكُمْஉங்களைத் தீண்டியிருக்கும்فِیْمَاۤஎதில்اَخَذْتُمْநீங்கள் எடுத்தீர்களோعَذَابٌவேதனைعَظِیْمٌமகத்தான
லவ் லா கிதாBபும் மினல் லாஹி ஸBபக லமஸ்ஸகும் Fபீ மா அகத்தும் 'அதாBபுன் 'அளீம்
அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.
فَكُلُوْا مِمَّا غَنِمْتُمْ حَلٰلًا طَیِّبًا ۖؗ وَّاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
فَكُلُوْاஎனவே உண்ணுங்கள்مِمَّاஎவற்றிலிருந்துغَنِمْتُمْநீங்கள் போரில் பெற்றீர்களோحَلٰلًاஆகுமாக்கப்பட்டதாகطَیِّبًا ۖؗதூய்மையானதாகوَّ اتَّقُواமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிகவும் மன்னிப்பவன்رَّحِیْمٌ۠நிகரற்ற அன்புடையவன்
Fபகுலூ மிம்மா கனிம்தும் ஹலாலன் தய்யிBபா; வத்த குல்லாஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
ஆகவே, எதிரிகளிடமிருந்து உங்களுக்குப் போரில் கிடைத்த பொருள்களை தூய்மையான - ஹலாலானவையாகக் கருதி புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.  
یٰۤاَیُّهَا النَّبِیُّ قُلْ لِّمَنْ فِیْۤ اَیْدِیْكُمْ مِّنَ الْاَسْرٰۤی ۙ اِنْ یَّعْلَمِ اللّٰهُ فِیْ قُلُوْبِكُمْ خَیْرًا یُّؤْتِكُمْ خَیْرًا مِّمَّاۤ اُخِذَ مِنْكُمْ وَیَغْفِرْ لَكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالنَّبِیُّநபியேقُلْகூறுவீராகلِّمَنْஎவர்களிடம்فِیْۤஉள்ளார்களோاَیْدِیْكُمْஉங்கள் கைகளில்مِّنَஇருந்துالْاَسْرٰۤی ۙகைதிகளில்اِنْஎன்றால்یَّعْلَمِஅறிந்தால்اللّٰهُஅல்லாஹ்فِیْஉள்ளقُلُوْبِكُمْஉங்கள் இதயங்களில்خَیْرًاநன்மையைیُّؤْتِكُمْஅவன் உங்களுக்கு வழங்குவான்خَیْرًاசிறந்ததைمِّمَّاۤஎதை விடاُخِذَஎடுக்கப்பட்டதோمِنْكُمْஉங்களிடமிருந்துوَ یَغْفِرْமேலும் அவன் மன்னிப்பான்لَكُمْ ؕஉங்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَفُوْرٌமிகவும் மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
யா அய்யுஹன் னBபிய்யு குல் லிமன் Fபீ அய்தீகும் மினல் அஸ்ரா இ(ன்)ய்-யஃலமில்லஹு Fபீ குலூBபிகும் கய்ர(ன்)ய் யு'திகும் கய்ரம் மிம்மா உகித மின்கும் வ யக்Fபிர் லகும்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
நபியே! உங்கள் வசத்தில் இருக்கும் கைதிகளை நோக்கிக் கூறுவீராக: “உங்களுடைய உள்ளங்களில் ஏதாவது ஒரு நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத்தொகையாக) எடுத்துக் கொள்ளப்பட்டதைவிட (இவ்வுலகில்) மேலானதை உங்களுக்கு அவன் கொடுப்பான்; (மறுமையில்) உங்கள் பாவங்களையும் மன்னிப்பான் - அல்லாஹ் மன்னிப்போனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்.
وَاِنْ یُّرِیْدُوْا خِیَانَتَكَ فَقَدْ خَانُوا اللّٰهَ مِنْ قَبْلُ فَاَمْكَنَ مِنْهُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
وَ اِنْமேலும், ஒருவேளைیُّرِیْدُوْاஅவர்கள் நாடினால்خِیَانَتَكَஉமக்குத் துரோகம் செய்யفَقَدْநிச்சயமாகخَانُواஅவர்கள் துரோகம் செய்தார்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குمِنْஇதற்குقَبْلُமுன்னரேفَاَمْكَنَஎனவே அவன் வாய்ப்பளித்தான்مِنْهُمْ ؕஅவர்கள் மீதுوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
வ இ(ன்)ய்-யுரீதூ கியா னதக Fபகத் கானுல்லாஹ மின் கBப்லு Fப அம்கன மின்ஹும்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
(நபியே!) அவர்கள் உமக்கு மோசம் செய்ய நாடினால் (கவலைப்படாதீர்); இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கே மோசம் செய்யக் கருதினார்கள்; (ஆதலால் தான் அவர்களைச் சிறை பிடிக்க) அவர்கள் மீது உமக்கு சக்தியை அவன் அளித்தான். அல்லாஹ் (எல்லாம்) அறிபவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَالَّذِیْنَ اٰوَوْا وَّنَصَرُوْۤا اُولٰٓىِٕكَ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ؕ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَلَمْ یُهَاجِرُوْا مَا لَكُمْ مِّنْ وَّلَایَتِهِمْ مِّنْ شَیْءٍ حَتّٰی یُهَاجِرُوْا ۚ وَاِنِ اسْتَنْصَرُوْكُمْ فِی الدِّیْنِ فَعَلَیْكُمُ النَّصْرُ اِلَّا عَلٰی قَوْمٍ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ مِّیْثَاقٌ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோوَ هَاجَرُوْاமேலும் ஹிஜ்ரத் செய்தார்களோوَ جٰهَدُوْاமேலும் அறப்போர் செய்தார்களோبِاَمْوَالِهِمْதங்கள் செல்வங்களைக் கொண்டுوَ اَنْفُسِهِمْமேலும் தங்கள் உயிர்களைக் கொண்டுفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اٰوَوْاபுகலிடம் அளித்தார்களோوَّ نَصَرُوْۤاமேலும் உதவி செய்தார்களோاُولٰٓىِٕكَஅத்தகையோர்بَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلِیَآءُபாதுகாவலர்கள்بَعْضٍ ؕசிலருக்குوَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோوَ لَمْமேலும் இல்லைیُهَاجِرُوْاஅவர்கள் ஹிஜ்ரத் செய்யمَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنْஇருந்துوَّلَایَتِهِمْஅவர்களின் பாதுகாப்பில்مِّنْஇருந்துشَیْءٍயாதொன்றும்حَتّٰیவரைیُهَاجِرُوْا ۚஅவர்கள் ஹிஜ்ரத் செய்யும்وَ اِنِமேலும் ஒருவேளைاسْتَنْصَرُوْكُمْஅவர்கள் உங்களிடம் உதவி கோரினால்فِیஇல்الدِّیْنِமார்க்கத்தில்فَعَلَیْكُمُஅப்போது உங்கள் மீது கடமையாகும்النَّصْرُஉதவி செய்வதுاِلَّاதவிரعَلٰیஎதிராகقَوْمٍۭஒரு சமூகத்திற்குبَیْنَكُمْஉங்களுக்கும்وَ بَیْنَهُمْஅவர்களுக்கும் இடையில்مِّیْثَاقٌ ؕஉடன்படிக்கைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோبَصِیْرٌஉற்று நோக்குபவன்
இன்னல் லதீன ஆமனூ வ ஹாஜரூ வ ஜாஹதூ Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம் Fபீ ஸBபீலில் லாஹி வல்லதீன ஆவவ் வ னஸரூ உலா'இக Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃள்; வல்லதீன ஆமனூ வ லம் யுஹாஜிரூ மா லகும் மி(ன்)வ் வலாயதிஹிம் மின் ஷய்'இன் ஹத்தா யுஹாஜிரூ; வ இனிஸ்தன் ஸரூகும் Fபித் தீனி Fப'அலய்கு முன்னஸ்ரு இல்லா 'அலா கவ்மின் Bபய்னகும் வ Bபய்னஹும் மீதாக்; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு, தம் ஊரைவிட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்களோ, அவர்களும்; எவர் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ, அவர்களும்; ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆவார்கள் - எவர் ஈமான் கொண்டு (இன்னும் தம்) ஊரைவிட்டு வெளியேறவில்லையோ, அவர்கள் நாடுதுறக்கும் வரையில், நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திலும் பொறுப்பாளியல்ல; எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும் - ஆனால் உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு விரோதமாக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு கவனித்துக் கொண்டே இருக்கின்றான்.
وَالَّذِیْنَ كَفَرُوْا بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ؕ اِلَّا تَفْعَلُوْهُ تَكُنْ فِتْنَةٌ فِی الْاَرْضِ وَفَسَادٌ كَبِیْرٌ ۟ؕ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلِیَآءُபாதுகாவலர்கள்بَعْضٍ ؕசிலருக்குاِلَّاஇல்லையெனில்تَفْعَلُوْهُநீங்கள் அதைச் செய்யாவிட்டால்تَكُنْஏற்படும்فِتْنَةٌகுழப்பம்فِیஇல்الْاَرْضِபூமிوَ فَسَادٌமேலும் சீர்குலைவுكَبِیْرٌؕமிகப் பெரிய
வல்லதீன கFபரூ Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃள்; இல்லா தFப்'அலூஹு தகுன் Fபித்னதுன் Fபில் அர்ளி வ Fபஸாதுன் கBபீர்
நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَالَّذِیْنَ اٰوَوْا وَّنَصَرُوْۤا اُولٰٓىِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ هَاجَرُوْاமேலும் நாடு துறந்தார்களோوَ جٰهَدُوْاமேலும் அறப்போர் செய்தார்களோفِیْஇல்سَبِیْلِபாதைاللّٰهِஅல்லாஹ்வின்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰوَوْاபுகலிடம் அளித்தார்களோوَّ نَصَرُوْۤاமேலும் உதவி செய்தார்களோاُولٰٓىِٕكَஅவர்கள்தாம்هُمُஅவர்கள்الْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்حَقًّا ؕஉண்மையாகவேلَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்புوَّ رِزْقٌமேலும் வாழ்வாதாரம்كَرِیْمٌகண்ணியமான
வல்லதீன ஆமனூ வ ஹாஜரூ வ ஜாஹதூ Fபீ ஸBபீலில் லாஹி வல்லதீன ஆவவ் வ னஸரூ உலா'இக ஹுமுல் மு'மினூன ஹக்கா; லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்கு புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும் தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள் - அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு.
وَالَّذِیْنَ اٰمَنُوْا مِنْ بَعْدُ وَهَاجَرُوْا وَجٰهَدُوْا مَعَكُمْ فَاُولٰٓىِٕكَ مِنْكُمْ ؕ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰی بِبَعْضٍ فِیْ كِتٰبِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோمِنْۢஇருந்துبَعْدُபின்னர்وَ هَاجَرُوْاமேலும் ஹிஜ்ரத் செய்தார்களோوَ جٰهَدُوْاமேலும் அறப்போர் செய்தார்களோمَعَكُمْஉங்களுடன்فَاُولٰٓىِٕكَஅத்தகையவர்கள்مِنْكُمْ ؕஉங்களைச் சேர்ந்தவர்களேوَ اُولُواமேலும் உடையவர்கள்الْاَرْحَامِஇரத்த உறவுகள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلٰیஅதிக உரிமையுடையவர்கள்بِبَعْضٍசிலருக்குفِیْஇல்كِتٰبِவேதத்தில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمٌ۠நன்கறிந்தவன்
வல்லதீன ஆமனூ மின் Bபஃது வ ஹாஜரூ வ ஜாஹதூ ம'அகும் Fப உலா'இக மின்கும்; வ உலுல் அர்ஹாமி Bபஃளுஹும் அவ்லா BபிBபஃளின் Fபீ கிதாBபில் லாஹ்; இன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
இதன் பின்னரும், எவர்கள் ஈமான் கொண்டு, தம் ஊரைத்துறந்து, உங்களுடன் சேர்ந்து (மார்க்கத்திற்காகப்) போர் புரிகின்றார்களோ, அவர்களும் உங்களை சேர்ந்தவர்களே. இன்னும் அல்லாஹ்வின் வேதவிதிப்படி உங்கள் உறவினர்களே; ஒருவர் மற்றொருவருக்கு மிக நெருக்கமுடையவர்களும் ஆவார்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.