59. ஸூரத்துல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்)

மதனீ, வசனங்கள்: 24

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
سَبَّحَ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۚ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
سَبَّحَதுதிக்கின்றனلِلّٰهِஅல்லாஹ்வைمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவை(யும்)وَمَا فِى الْاَرْضِۚபூமியில் உள்ளவையும்وَهُوَஅவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
ஸBப்Bபஹ லில்லாஹி மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு செய்கின்றன (துதிக்கின்றன); அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
هُوَ الَّذِیْۤ اَخْرَجَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ دِیَارِهِمْ لِاَوَّلِ الْحَشْرِ ؔؕ مَا ظَنَنْتُمْ اَنْ یَّخْرُجُوْا وَظَنُّوْۤا اَنَّهُمْ مَّانِعَتُهُمْ حُصُوْنُهُمْ مِّنَ اللّٰهِ فَاَتٰىهُمُ اللّٰهُ مِنْ حَیْثُ لَمْ یَحْتَسِبُوْاۗ وَقَذَفَ فِیْ قُلُوْبِهِمُ الرُّعْبَ یُخْرِبُوْنَ بُیُوْتَهُمْ بِاَیْدِیْهِمْ وَاَیْدِی الْمُؤْمِنِیْنَ ۗ فَاعْتَبِرُوْا یٰۤاُولِی الْاَبْصَارِ ۟
هُوَஅவன்தான்الَّذِىْۤஎவன்اَخْرَجَவெளியாக்கினான்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களைمِنْ اَهْلِ الْكِتٰبِவேதக்காரர்களில்مِنْ دِيَارِهِمْஅவர்களின் இல்லங்களில் இருந்துلِاَوَّلِமுதல் முறைالْحَشْرِ‌ؔؕஒன்று சேர்ப்பதற்காகمَا ظَنَنْـتُمْநீங்கள் எண்ணவில்லைاَنْ يَّخْرُجُوْا‌வெளியேறுவார்கள்وَظَنُّوْۤاஅவர்கள் எண்ணினார்கள்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்مَّانِعَتُهُمْதங்களை பாதுகாக்கும்حُصُوْنُهُمْதங்களது கோட்டைகள்مِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துفَاَتٰٮهُمُஅவர்களிடம் வந்தான்اللّٰهُஅல்லாஹ்مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوْاஅவர்கள் கணித்துப் பார்க்காத விதத்தில்وَقَذَفَஇன்னும் போட்டான்فِىْ قُلُوْبِهِمُஅவர்களின் உள்ளங்களில்الرُّعْبَதிகிலைيُخْرِبُوْنَநாசப்படுத்தினர்بُيُوْتَهُمْதங்கள் வீடுகளைبِاَيْدِيْهِمْதங்கள் கரங்களினாலும்وَاَيْدِىகரங்களினாலும்الْمُؤْمِنِيْنَமுஃமின்களின்فَاعْتَبِـرُوْاஆகவே படிப்பினை பெறுங்கள்!يٰۤاُولِى الْاَبْصَارِ‌‏அகப்பார்வை உடையவர்களே!
ஹுவல் லதீ அகரஜல் லதீன கFபரூ மின் அஹ்லில் கிதாBபி மின் தியாரிஹிம் லி அவ்வலில் ஹஷ்ர்; மா ளனன்தும் அ(ன்)ய் யக்ருஜூ வ ளன்னூ அன்னஹும் மா னி'அதுஹும் ஹுஸூனுஹும் மினல் லாஹி Fபாதாஹுமுல் லாஹு மின் ஹய்து லம் யஹ்தஸிBபூ வ கதFப Fபீ குலூBபிஹிமுர் ருஃBப யுக்ரிBபூன Bபு யூதஹும் Bபி அய்தீஹிம் வ அய்தில் மு'மினீன FபஃதBபிரூ யா உலில் அBப்ஸார்
வேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோ, அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனே; எனினும் அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை; அவர்களும், தங்களுடைய கோட்டைகள் நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் தங்களைத் தடுத்துக் கொள்பவை என்று நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் எண்ணியிராத புறத்திலிருந்து அவர்கள்பால் அல்லாஹ் (வேதனையைக் கொண்டு) வந்து அவர்களுடைய இதயங்களில் பீதியையும் போட்டான்; அன்றியும் அவர்கள் தம் கைகளாலும் முஃமின்களின் கைகளாலும் தம் வீடுகளை அழித்துக் கொண்டனர்; எனவே அகப்பார்வையுடையோரே! நீங்கள் (இதிலிருந்து) படிப்பினை பெறுவீர்களாக.
وَلَوْلَاۤ اَنْ كَتَبَ اللّٰهُ عَلَیْهِمُ الْجَلَآءَ لَعَذَّبَهُمْ فِی الدُّنْیَا ؕ وَلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابُ النَّارِ ۟
وَلَوْلَاۤ اَنْ كَتَبَவிதித்து இருக்கவில்லை என்றால்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمُஅவர்கள் மீதுالْجَـلَاۤءَவெளியேறுவதைلَعَذَّبَهُمْஅவன் கண்டிப்பாக அவர்களை வேதனை செய்து இருப்பான்فِى الدُّنْيَا‌ؕஇவ்வுலகிலேயேوَلَهُمْஇன்னும் அவர்களுக்குفِى الْاٰخِرَةِமறுமையில்عَذَابُவேதனை உண்டுالنَّارِ‏நரக(ம்)
வ லவ் லா அன் கதBபல் லாஹு 'அலய்ஹிமுல் ஜலா'அ ல'அத்தBபஹும் Fபித் துன்யா வ லஹும் Fபில் ஆகிரதி 'அதாBபுன் னார்
தவிரவும், அவர்கள் மீது வெளியேறுகையை அல்லாஹ் விதிக்காதிருந்தால், இவ்வுலகிலேயே அவர்களைக் கடினமாக வேதனை செய்திருப்பான்; இன்னும் அவர்களுக்கு மறுமையிலும் (நரக) நெருப்பின் வேதனை உண்டு.
ذٰلِكَ بِاَنَّهُمْ شَآقُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ۚ وَمَنْ یُّشَآقِّ اللّٰهَ فَاِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
ذٰ لِكَ بِاَنَّهُمْஅதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்شَآقُّواமாறுசெய்தார்கள்اللّٰهَஅல்லாஹ்விற்கு(ம்)وَرَسُوْلَهٗ‌ ۚஅவனது தூதருக்கும்وَمَنْயார்يُّشَآقِّமாறுசெய்வாரோاللّٰهَஅல்லாஹ்விற்குفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِيْدُகடுமையானவன்الْعِقَابِ‏தண்டிப்பதில்
தாலிக Bபி அன்னஹும் ஷாக்குல் லாஹ வ ரஸூலஹூ வ ம(ன்)ய் யுஷாக்கில் லாஹ Fப இன்னல் லாஹ ஷதீதுல்-'இகாBப்
அதற்கு(க் காரணம்): நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள்; அன்றியும், எவன் அல்லாஹ்வை விரோதிக்கின்றானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடினமானவன்.
مَا قَطَعْتُمْ مِّنْ لِّیْنَةٍ اَوْ تَرَكْتُمُوْهَا قَآىِٕمَةً عَلٰۤی اُصُوْلِهَا فَبِاِذْنِ اللّٰهِ وَلِیُخْزِیَ الْفٰسِقِیْنَ ۟
مَا قَطَعْتُمْநீங்கள் வெட்டினாலும்مِّنْ لِّيْنَةٍபேரித்த மரங்களைاَوْஅவர்கள்تَرَكْتُمُوْهَاஅவற்றை நீங்கள் விட்டாலும்قَآٮِٕمَةًநிற்பவையாகعَلٰٓى اُصُوْلِهَاஅவற்றின் வேர்களில்فَبِاِذْنِஉத்தரவின்படிதான்اللّٰهِஅல்லாஹ்வின்وَلِيُخْزِىَஇன்னும் இழிவுபடுத்துவதற்காகالْفٰسِقِيْنَ‏பாவிகளை
மா கதஃதும் மில் லீனதின் அவ் தரக்துமூஹா கா'இமதன்'அலா உஸூலிஹா FபBபி இத்னில் லாஹி வ லியுக்Zஜியல் Fபாஸிகீன்
நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காகவுமே தான்.
وَمَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰی رَسُوْلِهٖ مِنْهُمْ فَمَاۤ اَوْجَفْتُمْ عَلَیْهِ مِنْ خَیْلٍ وَّلَا رِكَابٍ وَّلٰكِنَّ اللّٰهَ یُسَلِّطُ رُسُلَهٗ عَلٰی مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
وَمَاۤ اَفَآءَஎதை உரிமையாக்கிக் கொடுத்தானோاللّٰهُஅல்லாஹ்عَلٰى رَسُوْلِهٖதனது தூதருக்குمِنْهُمْஅவர்களிடமிருந்துفَمَاۤ اَوْجَفْتُمْநீங்கள் ஓட்டவில்லைعَلَيْهِஅவற்றை அடைவதற்காகمِنْ خَيْلٍகுதிரைகளையோوَّلَا رِكَابٍஒட்டகங்களையோوَّلٰڪِنَّஎன்றாலும்اللّٰهَஅல்லாஹ்يُسَلِّطُசாட்டுகின்றான்رُسُلَهٗதனது தூதர்களைعَلٰى مَنْ يَّشَآءُ ؕதான் நாடுகின்றவர்கள் மீதுوَاللّٰهُஅல்லாஹ்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதும்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
வ மா அFபா'அல் லாஹு 'அலா ரஸூலிஹீ மின்ஹும் Fபமா அவ்ஜFப்தும் 'அலய்ஹி மின் கய்லிஇ(ன்)வ் வலா ரிகாBபி(ன்)வ் வ லாகின்னல் லாஹ யுஸல்லிது ருஸுலஹூ 'அலா ம(ன்)ய் யஷா'; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
மேலும், அல்லாஹ் தன் தூதருக்கு அவர்களிலிருந்தும் எதை (மீட்டுக்) கொடுத்தானோ அதற்காக நீங்கள் குதிரைகளையோ, ஒட்டகங்களையோ ஓட்டி(ப் போர் செய்து) விடவில்லை; எனினும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவோர் மீது தம் தூதர்களுக்கு ஆதிக்கத்தைத் தருகிறான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
مَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰی رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰی فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ۙ كَیْ لَا یَكُوْنَ دُوْلَةً بَیْنَ الْاَغْنِیَآءِ مِنْكُمْ ؕ وَمَاۤ اٰتٰىكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ ۗ وَمَا نَهٰىكُمْ عَنْهُ فَانْتَهُوْا ۚ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟ۘ
مَاۤ اَفَآءَசண்டையின்றி எதை உரிமையாக்கிக் கொடுத்தானோاللّٰهُஅல்லாஹ்عَلٰى رَسُوْلِهٖதனது தூதருக்குمِنْ اَهْلِ الْقُرٰىஊர்களில் உள்ளவர்களிடமிருந்துفَلِلّٰهِ(அது) அல்லாஹ்விற்கும்وَلِلرَّسُوْلِதூதருக்கும்وَلِذِى الْقُرْبٰىஉறவினர்களுக்கும்وَالْيَتٰمٰىஅனாதைகளுக்கும்وَالْمَسٰكِيْنِஏழைகளுக்கும்وَابْنِ السَّبِيْلِۙவழிப் போக்கர்களுக்கும்كَىْ لَا يَكُوْنَஆகாமல் இருப்பதற்காகும்دُوْلَةًۢசுற்றக்கூடிய பொருளாகبَيْنَமத்தியில்الْاَغْنِيَآءِசெல்வந்தர்களுக்குمِنْكُمْ‌ ؕஉங்களில் உள்ளوَمَاۤ اٰتٰٮكُمُஎதை உங்களுக்குக் கொடுத்தாரோالرَّسُوْلُதூதர்فَخُذُوْهُஅதைப் பற்றிப் பிடியுங்கள்وَ مَا نَهٰٮكُمْஎதை உங்களுக்குத் தடுத்தாரோعَنْهُஅதை விட்டுفَانْتَهُوْا‌ ۚவிலகிவிடுங்கள்وَاتَّقُواஇன்னும் பயந்து கொள்ளுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்شَدِيْدُகடுமையானவன்الْعِقَابِ‌ۘ‏தண்டிப்பதில்
மா அFபா'அல் லாஹு 'அலா ரஸூலிஹீ மின் அஹ்லில் குரா Fபலில்லாஹி வ லிர் ரஸூலி வ லிதில் குர்Bபா வல் யதாமா வல்மஸாகீனி வBப்னிஸ் ஸBபீலி கய் லா யகூன தூலதம் Bபய்னல் அக்னியா'இ மின்கும்; வ மா ஆதாகுமுர் ரஸூலு Fபகுதூஹு வமா னஹாகும் 'அன்ஹு Fபன்தஹூ; வத்தகுல் லாஹ இன்னல் லாஹ ஷதீதுல்-'இகாBப்
அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.
لِلْفُقَرَآءِ الْمُهٰجِرِیْنَ الَّذِیْنَ اُخْرِجُوْا مِنْ دِیَارِهِمْ وَاَمْوَالِهِمْ یَبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا وَّیَنْصُرُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ ۟ۚ
لِلْفُقَرَآءِஏழைகளுக்குالْمُهٰجِرِيْنَமுஹாஜிர்கள்الَّذِيْنَஎவர்கள்اُخْرِجُوْاவெளியேற்றப்பட்டார்கள்مِنْ دِيَارِهِمْதங்கள் இல்லங்களை விட்டும்وَاَمْوَالِهِمْதங்கள் செல்வங்களை விட்டும்يَبْتَغُوْنَதேடுகிறார்கள்فَضْلًاசிறப்பை(யும்)مِّنَ اللّٰهِஅல்லாஹ்வின்وَرِضْوَانًاபொருத்தத்தையும்وَّيَنْصُرُوْنَஉதவுகிறார்கள்اللّٰهَஅல்லாஹ்விற்கு(ம்)وَرَسُوْلَهٗ‌ؕஅவனது தூதருக்கும்اُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الصّٰدِقُوْنَ‌ۚ‏உண்மையாளர்கள்
லில்Fபுகரா'இல் முஹாஜி ரீனல் லதீன உக்ரிஜூ மின் தியாரிஹிம் வ அம்வாலிஹிம் யBப்தகூன Fபள்லம் மினல் லாஹி வ ரிள்வான(ன்)வ் வ யன்ஸுரூனல் லாஹ வ ரஸூலஹ்; உலா'இக ஹுமுஸ் ஸாதிகூன்
எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்.
وَالَّذِیْنَ تَبَوَّؤُ الدَّارَ وَالْاِیْمَانَ مِنْ قَبْلِهِمْ یُحِبُّوْنَ مَنْ هَاجَرَ اِلَیْهِمْ وَلَا یَجِدُوْنَ فِیْ صُدُوْرِهِمْ حَاجَةً مِّمَّاۤ اُوْتُوْا وَیُؤْثِرُوْنَ عَلٰۤی اَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۫ؕ وَمَنْ یُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟ۚ
وَالَّذِيْنَ تَبَوَّؤُஅமைத்துக் கொண்டவர்கள்الدَّارَவீடுகளைوَالْاِيْمَانَஈமானையும்مِنْ قَبْلِهِمْஅவர்களுக்கு முன்னதாகيُحِبُّوْنَநேசிக்கின்றார்கள்مَنْ هَاجَرَஹிஜ்ரா செய்து வந்தவர்களைاِلَيْهِمْதங்களிடம்وَلَا يَجِدُوْنَஇன்னும் அவர்கள் காணமாட்டார்கள்فِىْ صُدُوْرِهِمْதங்கள் நெஞ்சங்களில்حَاجَةًஎந்தத் தேவையையும்مِّمَّاۤ اُوْتُوْاதங்களுக்கு கொடுக்கப்பட்டவற்றில்وَيُـؤْثِرُوْنَதேர்ந்தெடுப்பார்கள்عَلٰٓى اَنْفُسِهِمْதங்களை விடوَلَوْ كَانَஇருந்தாலும்بِهِمْதங்களுக்குخَصَاصَةٌ ؕகடுமையான தேவைوَمَنْயார்يُّوْقَபாதுகாக்கப்படுவாரோشُحَّகருமித்தனத்தை விட்டும்نَـفْسِهٖதனது உள்ளத்தின்فَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْمُفْلِحُوْنَ‌ۚ‏வெற்றியாளர்கள்
வல்லதீன தBபவ்வ'உத் தார வல் ஈமான மின் கBப்லிஹிம் யுஹிBப்Bபூன மன் ஹாஜர இலய்ஹிம் வலா யஜிதூன Fபீ ஸுதூரிஹிம் ஹாஜதம் மிம்மா ஊதூ வ யு'திரூன 'அலா அன்Fபுஸிஹிம் வ லவ் கான Bபிஹிம் கஸாஸஹ்; வ ம(ன்)ய் யூக ஷுஹ்ஹ னFப்ஸிஹீ Fப உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
وَالَّذِیْنَ جَآءُوْ مِنْ بَعْدِهِمْ یَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِاِخْوَانِنَا الَّذِیْنَ سَبَقُوْنَا بِالْاِیْمَانِ وَلَا تَجْعَلْ فِیْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِیْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟۠
وَالَّذِيْنَஎவர்கள்جَآءُوْவந்தார்கள்مِنْۢ بَعْدِهِمْஇவர்களுக்கு பின்னர்يَقُوْلُوْنَகூறுவார்கள்رَبَّنَاஎங்கள் இறைவாاغْفِرْ لَـنَاஎங்களை(யும்) மன்னிப்பாயாகوَلِاِخْوَانِنَاஎங்கள் சகோதரர்களையும்الَّذِيْنَஎவர்கள்سَبَقُوْنَاஎங்களை முந்தினார்கள்بِالْاِيْمَانِஈமானில்وَلَا تَجْعَلْஆக்கிவிடாதேفِىْ قُلُوْبِنَاஎங்கள் உள்ளங்களில்غِلًّاகுரோதத்தைلِّلَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள் மீதுرَبَّنَاۤஎங்கள் இறைவாاِنَّكَநிச்சயமாக நீதான்رَءُوْفٌமகா இரக்கமுள்ளவன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
வல்லதீன ஜா'ஊ மின் Bபஃதிஹிம் யகூலூன ரBப்Bபனாக் Fபிர் லனா வ லி இக்வானி னல் லதீன ஸBப்கூனா Bபில் ஈமானி வலா தஜ்'அல் Fபீ குலூBபினா கில்லலில் லதீன ஆமனூ ரBப்Bபனா இன்னக ர'ஊFபுர் ரஹீம்
அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ نَافَقُوْا یَقُوْلُوْنَ لِاِخْوَانِهِمُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ لَىِٕنْ اُخْرِجْتُمْ لَنَخْرُجَنَّ مَعَكُمْ وَلَا نُطِیْعُ فِیْكُمْ اَحَدًا اَبَدًا ۙ وَّاِنْ قُوْتِلْتُمْ لَنَنْصُرَنَّكُمْ ؕ وَاللّٰهُ یَشْهَدُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اِلَى الَّذِيْنَ نَافَقُوْاநயவஞ்சகர்களைيَقُوْلُوْنَகூறுகின்றனர்لِاِخْوَانِهِمُதங்கள் சகோதரர்களுக்குالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்مِنْ اَهْلِ الْكِتٰبِவேதக்காரர்களில்لَٮِٕنْ اُخْرِجْتُمْநீங்கள் வெளியேற்றப்பட்டால்لَنَخْرُجَنَّநிச்சயமாக நாங்களும் வெளியேறுவோம்مَعَكُمْஉங்களுடன்وَلَا نُطِيْعُநாங்கள் கட்டுப்பட மாட்டோம்فِيْكُمْஉங்கள் விஷயத்தில்اَحَدًاயாருக்கும்اَبَدًاۙஎப்போதும்وَّاِنْ قُوْتِلْتُمْநீங்கள் போர் செய்யப்பட்டால்لَـنَـنْصُرَنَّكُمْ ؕநிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவுவோம்وَاللّٰهُஅல்லாஹ்يَشْهَدُசாட்சி சொல்கிறான்اِنَّهُمْநிச்சயமாக இவர்கள்لَـكٰذِبُوْنَ‏பொய்யர்கள்தான்
அலம் தர இலல் லதீன னாFபகூ யகூலூன லி இக்வானிஹிமுல் லதீன கFபரூ மின் அஹ்லில் கிதாBபி ல'இன் உக்ரிஜ்தும் லனக்ருஜன்ன ம'அகும் வலா னுதீ'உ Fபீகும் அஹதன் அBபத(ன்)வ்-வ இன் கூதில்தும் லனன்ஸுரன் னகும் வல்லாஹு யஷ்ஹது இன்னஹும் லகாதிBபூன்
(நபியே!) நயவஞ்சகம் செய்வோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையோரிலுள்ள நிராகரித்துக் கொண்டிருப்போரான தம் சகோதரர்களிடம் “நீங்கள் வெளியேற்றப்பட்டால், உங்களுடன் நாங்களும் நிச்சயமாக வெளியேறுவோம்; அன்றியும், (உங்களுக்கெதிராக) நாங்கள் எவருக்கும், எப்பொழுதும் நாம் வழிப்பட மாட்டோம்; மேலும், உங்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்” என்று கூறுகின்றனர்; ஆனால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியங் கூறுகிறான்.
لَىِٕنْ اُخْرِجُوْا لَا یَخْرُجُوْنَ مَعَهُمْ ۚ وَلَىِٕنْ قُوْتِلُوْا لَا یَنْصُرُوْنَهُمْ ۚ وَلَىِٕنْ نَّصَرُوْهُمْ لَیُوَلُّنَّ الْاَدْبَارَ ۫ ثُمَّ لَا یُنْصَرُوْنَ ۟
لَٮِٕنْ اُخْرِجُوْاஅவர்கள் வெளியேற்றப்பட்டால்لَا يَخْرُجُوْنَஇவர்கள் வெளியேற மாட்டார்கள்مَعَهُمْ‌ۚஅவர்களுடன்وَلَٮِٕنْ قُوْتِلُوْاஅவர்கள் போர் செய்யப்பட்டால்لَا يَنْصُرُوْنَهُمْ‌ۚஇவர்கள் அவர்களுக்கு உதவ மாட்டார்கள்وَلَٮِٕنْ نَّصَرُوْهُمْஇவர்கள் அவர்களுக்கு உதவினாலும்لَيُوَلُّنَّ الْاَدْبَارَஇவர்களும் கண்டிப்பாக புறமுதுகுதான் காட்டுவார்கள்ثُمَّ لَا يُنْصَرُوْنَ‏பிறகு/இவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
ல'இன் உக்ரிஜூ லா யக்ருஜூன ம'அஹும் வ ல'இன் கூதிலூ லா யன்ஸுரூனஹும் வ ல'இன் னஸரூஹும் ல யுவல்லுன்னல் அத்Bபார தும்ம லா யுன்ஸரூன்
அவர்கள் வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள்; மேலும், அவர்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், இவர்கள் அவர்களுக்கு உதவி செய்யவும் மாட்டார்கள்; அன்றியும் இவர்கள் அவர்களுக்கு உதவி செய்தாலும், நிச்சயமாக புறமுதுகு காட்டிப் பின் வாங்கி விடுவார்கள் - பின்னர் அவர்கள் (எத்தகைய) உதவியும் அளிக்கப்பட மாட்டார்கள்.
لَاَنْتُمْ اَشَدُّ رَهْبَةً فِیْ صُدُوْرِهِمْ مِّنَ اللّٰهِ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَفْقَهُوْنَ ۟
لَا۟ءَنْتُمْநீங்கள்اَشَدُّ رَهْبَةًகடுமையான பயதிற்குரியவர்கள்فِىْ صُدُوْرِهِمْஅவர்களின் நெஞ்சங்களில்مِّنَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வை விடذٰلِكَ بِاَنَّهُمْஅதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்قَوْمٌமக்கள்لَّا يَفْقَهُوْنَ‏புரிய மாட்டார்கள்
ல அன்தும் அஷத்து ரஹ்Bபதன் Fபீ ஸுதூரிஹிம் மினல் லாஹ்; தாலிக Bபி அன்னஹும் கவ்முல் லா யFப்கஹூன்
நிச்சயமாக, அவர்களுடைய இதயங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றிய பயமே பலமாக இருக்கிறது; (அல்லாஹ்வை விட்டும் அவர்கள் உங்களை அதிகம் அஞ்சுவதற்கு காரணம்) அவர்கள் (உண்மையை) உணர்ந்து கொள்ளாத சமூகத்தினராக இருப்பதனால்தான் இந்த நிலை!
لَا یُقَاتِلُوْنَكُمْ جَمِیْعًا اِلَّا فِیْ قُرًی مُّحَصَّنَةٍ اَوْ مِنْ وَّرَآءِ جُدُرٍ ؕ بَاْسُهُمْ بَیْنَهُمْ شَدِیْدٌ ؕ تَحْسَبُهُمْ جَمِیْعًا وَّقُلُوْبُهُمْ شَتّٰی ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَعْقِلُوْنَ ۟ۚ
لَا يُقَاتِلُوْنَكُمْஉங்களிடம் போர் புரிய மாட்டார்கள்جَمِيْعًاஎல்லோரும் சேர்ந்துاِلَّاதவிரفِىْ قُرًى مُّحَصَّنَةٍபாதுகாப்பான ஊர்களில்اَوْஅல்லதுمِنْ وَّرَآءِபின்னால்جُدُرٍؕசுவர்களுக்குبَاْسُهُمْஅவர்களின் பகைமைبَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்شَدِيْدٌ ؕகடுமையாகتَحْسَبُهُمْநீர் அவர்களை எண்ணுகின்றீர்جَمِيْعًاஒன்றுசேர்ந்தவர்களாகوَّقُلُوْبُهُمْஅவர்களின் உள்ளங்களோشَتّٰى‌ؕபலதரப்பட்டதாகذٰلِكَ بِاَنَّهُمْஅதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்قَوْمٌ لَّا يَعْقِلُوْنَ‌ۚ‏மக்கள்/ நிச்சயமாக அவர்கள் சிந்தித்துப் புரியமாட்டார்கள்
லா யுகாதிலூனகும் ஜமீ'அன் இல்லா Fபீ குரம் முஹஸ் ஸனதின் அவ் மி(ன்)வ் வரா'இ ஜுதுர்; Bபா'ஸுஹும் Bபய்னஹும் ஷதீத்; தஹ்ஸBபுஹும் ஜமீ'அ(ன்)வ்-வ குலூBபுஹும் ஷத்தா; தாலிக Bபிஅன்னஹும் கவ்முல் லா யஃகிலூன்
கோட்டைகளால் அரண் செய்யப்பட்ட ஊர்களிலோ அல்லது மதில்களுக்கு அப்பால் இருந்து கொண்டோ அல்லாமல் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள்; அவர்களுக்குள்ளேயே போரும், பகையும் மிகக் கடுமையானவை; (இந்நிலையில்) அவர்கள் யாவரும் ஒன்று பட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர்; (ஆனால்) அவர்களுடைய இதயங்கள், சிதறிக் கிடக்கின்றன - இதற்குக் காரணம்: மெய்யாகவே அவர்கள் அறிவற்ற சமூகத்தார் என்பதுதான்.
كَمَثَلِ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ قَرِیْبًا ذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْ ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟ۚ
كَمَثَلِஉதாரணத்தைப் போன்றுதான்الَّذِيْنَஎவர்கள்مِنْ قَبْلِهِمْஇவர்களுக்கு முன்னர்قَرِيْبًا‌சற்றுذَاقُوْاஅனுபவித்தார்களேوَبَالَகெடுதியைاَمْرِهِمْ‌ۚதங்கள் காரியத்தின்وَلَهُمْஇன்னும் இவர்களுக்கு உண்டுعَذَابٌதண்டனைاَلِيْمٌ‌ۚ‏வலி தரக்கூடியது
கமதலில் லதீன மின் கBப்லிஹிம் கரீBபன் தாகூ வBபால அம்ரிஹிம் வ லஹும் 'அதாBபுன் அலீம்
இவர்களுக்கு முன்னர் (காலத்தால்) நெருங்கி இருந்த சிலரைப் போன்றே (இவர்களும் இருக்கின்றனர்) அவர்கள் தம் தீய செயல்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
كَمَثَلِ الشَّیْطٰنِ اِذْ قَالَ لِلْاِنْسَانِ اكْفُرْ ۚ فَلَمَّا كَفَرَ قَالَ اِنِّیْ بَرِیْٓءٌ مِّنْكَ اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِیْنَ ۟
كَمَثَلِஉதாரணத்தைப் போன்றுதான்الشَّيْطٰنِஅந்த ஷைத்தானின்اِذْ قَالَஅவன் கூறியபோதுلِلْاِنْسَانِமனிதனுக்குاكْفُرْ‌ۚநீ நிராகரித்து விடுفَلَمَّا كَفَرَஅந்த மனிதன் நிராகரித்துவிடவேقَالَகூறிவிடுகிறான்اِنِّىْநிச்சயமாக நான்بَرِىْٓءٌநீங்கியவன்مِّنْكَஉன்னை விட்டுاِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்اللّٰهَஅல்லாஹ்வைرَبَّஇறைவனாகியالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
கமதலிஷ் ஷய்தானி இத்கால லில் இன்ஸானிக் Fபுர் Fபலம்மா கFபர கால இன்னீ Bபரீ'உம் மின்க இன்னீ அகாFபுல் லாஹ ரBப்Bபல் 'ஆலமீன்
(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்றான்.
فَكَانَ عَاقِبَتَهُمَاۤ اَنَّهُمَا فِی النَّارِ خَالِدَیْنِ فِیْهَا ؕ وَذٰلِكَ جَزٰٓؤُا الظّٰلِمِیْنَ ۟۠
فَكَانَஆகிவிடும்عَاقِبَتَهُمَاۤஅவ்விருவரின் முடிவுاَنَّهُمَاஅவ்விருவரும்فِى النَّارِநரகத்தில்خَالِدَيْنِநிரந்தரமாக தங்குவார்கள்فِيْهَا‌ ؕ وَذٰ لِكَஅதில்/இதுதான்جَزٰٓؤُاகூலியாகும்الظّٰلِمِيْن‏அநியாயக்காரர்களின்
Fபகான 'ஆகிBபதஹுமா அன்னஹுமா Fபின் னாரி காலிதய்னி Fபீஹா; வ தாலிக ஜZஜா'உள் ளாலிமீன்
அவ்விருவரின் முடிவு, நிச்சயமாக அவர்கள் என்றென்றும் தங்கும் நரக நெருப்புத்தான், அநியாயக் காரர்களின் கூலி இதுவேயாகும்.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ ۚ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே!اتَّقُواஅஞ்சிக்கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَلْتَـنْظُرْபார்த்துக் கொள்ளட்டும்نَـفْسٌ مَّا قَدَّمَتْஓர் ஆன்மா/எதை அது முற்படுத்தி இருக்கிறதுلِغَدٍ‌ ۚமறுமைக்காகوَاتَّقُواஅஞ்சிக் கொள்ளுங்கள்!اللّٰهَ‌ؕஅல்லாஹ்வைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்خَبِيْرٌۢஆழ்ந்தறிபவன்بِمَا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்பவற்றை
யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல்-லாஹ; வல்தன்ளுர் னFப்ஸும் மா கத்தமத் லிகதிவ் வத்தகுல்லாஹ்; இன்னல்லாஹ கBபீரும் Bபிமா தஃமலூன்
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.
وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ نَسُوا اللّٰهَ فَاَنْسٰىهُمْ اَنْفُسَهُمْ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
وَلَا تَكُوْنُوْاஆகிவிடாதீர்கள்كَالَّذِيْنَ نَسُواமறந்தவர்களைப் போல்اللّٰهَஅல்லாஹ்வைفَاَنْسٰٮهُمْஅவன் அவர்களுக்கு மறக்கச் செய்து விட்டான்اَنْفُسَهُمْ‌ؕஅவர்களையேاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْفٰسِقُوْنَ‏பாவிகள்
வ லா தகூனூ கல்லதீன னஸுல் லாஹ Fப அன்ஸாஹும் அன்Fபுஸஹும்; உலா'இக ஹுமுல் Fபாஸிகூன்
அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்.
لَا یَسْتَوِیْۤ اَصْحٰبُ النَّارِ وَاَصْحٰبُ الْجَنَّةِ ؕ اَصْحٰبُ الْجَنَّةِ هُمُ الْفَآىِٕزُوْنَ ۟
لَا يَسْتَوِىْۤசமமாக மாட்டார்கள்اَصْحٰبُ النَّارِநரகவாசிகளும்وَاَصْحٰبُ الْجَـنَّةِ‌ؕசொர்க்க வாசிகளும்اَصْحٰبُ الْجَـنَّةِ هُمُசொர்க்கவாசிகள்தான்الْفَآٮِٕزُوْنَ‏வெற்றியாளர்கள்
லா யஸ்தவீ அஸ்-ஹாBபுன் னாரி வ அஸ்ஹாBபுல் ஜன்னஹ்; அஸ் ஹாBபுல் ஜன்னதி ஹுமுல் Fபா'இZஜூன்
நரக வாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள்; சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர்.
لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰی جَبَلٍ لَّرَاَیْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْیَةِ اللّٰهِ ؕ وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَفَكَّرُوْنَ ۟
لَوْ اَنْزَلْنَاநாம் இறக்கி இருந்தால்هٰذَا الْقُرْاٰنَஇந்த குர்ஆனைعَلٰى جَبَلٍஒரு மலையின் மீதுلَّرَاَيْتَهٗநீர் அதைக் கண்டிருப்பீர்خَاشِعًاமுற்றிலும் பணிந்ததாக(வும்)مُّتَصَدِّعًاபிளந்து விடக்கூடியதாக(வும்)مِّنْ خَشْيَةِஅச்சத்தால்اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَتِلْكَ الْاَمْثَالُஇந்த உதாரணங்கள்نَضْرِبُهَاஇவற்றை விவரிக்கின்றோம்لِلنَّاسِமக்களுக்குلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏அவர்கள் சிந்திப்பதற்காக
லவ் அன்Zஜல்னா ஹாதல் குர்'ஆன 'அலா ஜBபிலில் லர அய்தஹூ காஷி'அம் முத ஸத்தி'அம் மின் கஷியதில் லாஹ்; வ தில்கல் அம்தாலு னள்ரிBபுஹா லின்னாஸி ல'அல்லஹும் யதFபக்கரூன்
(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.
هُوَ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ ۚ هُوَ الرَّحْمٰنُ الرَّحِیْمُ ۟
هُوَஅவன்தான்اللّٰهُஅல்லாஹ்الَّذِىْஎவன்لَاۤஅறவே இல்லைاِلٰهَகடவுள்اِلَّا هُوَ‌ ۚஅவனைத் தவிரعٰلِمُநன்கறிந்தவன்الْغَيْبِமறைவானவற்றை(யும்)وَالشَّهَادَةِ‌ ۚ هُوَவெளிப்படையானவற்றையும்/அவன்தான்الرَّحْمٰنُபேரருளாளன்الرَّحِيْمُ‏பேரன்பாளன்
ஹுவல்-லாஹுல்-லதீ லா இலாஹ இல்லா ஹுவ 'ஆலிமுல் கய்Bபி வஷ்-ஷஹாத; ஹுவர் ரஹ்மானுர்-ரஹீம்
அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.
هُوَ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَیْمِنُ الْعَزِیْزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یُشْرِكُوْنَ ۟
هُوَஅவன்தான்اللّٰهُஅல்லாஹ்الَّذِىْஎவன்لَاۤஅறவே இல்லைاِلٰهَகடவுள்اِلَّا هُوَ‌ۚஅவனைத் தவிரاَلْمَلِكُஅரசன்الْقُدُّوْسُமகா தூயவன்السَّلٰمُஈடேற்றம் அளிப்பவன்الْمُؤْمِنُஅபயமளிப்பவன்الْمُهَيْمِنُபாதுகாப்பவன்الْعَزِيْزُமிகைத்தவன்الْجَـبَّارُஅடக்கி ஆள்பவன்الْمُتَكَبِّرُ‌ؕபெருமைக்குரியவன்سُبْحٰنَமகா பரிசுத்தமானவன்اللّٰهِஅல்லாஹ்عَمَّا يُشْرِكُوْنَ‏அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும்
ஹுவல்-லாஹுல்-லதீ லா இலாஹ இல்லா ஹுவல்-மலிகுல் குத்தூஸுஸ்-ஸலாமுல் முமினுல் முஹய்மினுல்-'ஆZஜீZஜுல் ஜBப்Bபாருல்-முதகBப்Bபிர்; ஸுBப்ஹானல் லாஹி 'அம்மா யுஷ்ரிகூன்
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
هُوَ اللّٰهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰی ؕ یُسَبِّحُ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
هُوَஅவன்தான்اللّٰهُஅல்லாஹ்الْخَـالِـقُபடைப்பவன்الْبَارِئُஉருவாக்குபவன்الْمُصَوِّرُ‌உருவம்அமைப்பவன்لَـهُஅவனுக்கே உரியனالْاَسْمَآءُபெயர்கள்الْحُسْنٰى‌ؕமிக அழகியيُسَبِّحُதுதிக்கின்றனلَهٗஅவனையேمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَالْاَرْضِ‌ۚஇன்னும் பூமி(யில்)وَهُوَஅவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
ஹுவல் லாஹுல் காலிகுல் Bபாரி 'உல் முஸவ்விர்; லஹுல் அஸ்மா'உல் ஹுஸ்னா; யுஸBப்Bபிஹு லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.