46. ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்)

மக்கீ, வசனங்கள்: 35

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟
تَنْزِيْلُஇறக்கப்படுகிறதுالْكِتٰبِஇந்த வேதம்مِنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துالْعَزِيْزِமிகைத்தவன்الْحَكِيْمِ‏மகா ஞானவான்
தன்Zஜீலுல் கிதாBபி மினல் லாஹில்-'அZஜீZஜில் ஹகீம்
இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
مَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَاَجَلٍ مُّسَمًّی ؕ وَالَّذِیْنَ كَفَرُوْا عَمَّاۤ اُنْذِرُوْا مُعْرِضُوْنَ ۟
مَا خَلَقْنَاநாம் படைக்கவில்லைالسَّمٰوٰتِவானங்களை(யும்)وَالْاَرْضَபூமியையும்وَمَا بَيْنَهُمَاۤஅவை இரண்டிற்குமிடையில் உள்ளவற்றையும்اِلَّاதவிரبِالْحَقِّஉண்மையான காரணத்திற்கு(ம்)وَاَجَلٍ مُّسَمًّى‌ؕஒரு குறிப்பிட்ட தவணைக்கும்وَالَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பவர்கள்عَمَّاۤ اُنْذِرُوْاஅவர்கள் எச்சரிக்கப்பட்டதைمُعْرِضُوْنَ‏புறக்கணிக்கின்றார்கள்
மா கலக்னஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்னஹுமா இல்லா Bபில்ஹக்கி வ அஜலிம் முஸம்மா; வல்லதீன கFபரூ 'அம்மா உன்திரூ முஃரிளூன்
வானங்களையும், பூமியையும் இவையிரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் உண்மையையும், ஒரு குறிப்பிட்ட தவணையையும் கொண்டல்லாமல் நாம் படைக்கவில்லை; ஆனால் நிராகரிப்பவர்களோ, தங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதைப் புறக்கணிப்பவர்களாக இருக்கிறார்கள்.
قُلْ اَرَءَیْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَرُوْنِیْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِی السَّمٰوٰتِ ؕ اِیْتُوْنِیْ بِكِتٰبٍ مِّنْ قَبْلِ هٰذَاۤ اَوْ اَثٰرَةٍ مِّنْ عِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
قُلْநீர் கூறுவீராக!اَرَءَيْتُمْஅறிவியுங்கள்!مَّا تَدْعُوْنَநீங்கள் அழைக்கின்றவற்றை குறித்துمِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிاَرُوْنِىْஎனக்கு காண்பியுங்கள்مَاذَاஎதைخَلَقُوْاபடைத்தார்கள்مِنَ الْاَرْضِபூமியில்اَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குشِرْكٌபங்குفِى السَّمٰوٰتِ‌ؕவானங்களில்اِیْتُوْنِىْ بِكِتٰبٍஒரு வேதத்தை என்னிடம் கொண்டு வாருங்கள்مِّنْ قَبْلِ هٰذَاۤஇதற்கு முன்னுள்ளاَوْஅல்லதுاَثٰرَةٍமீதமிருப்பதைمِّنْ عِلْمٍகல்வியில்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
குல் அர'அய்தும் மா தத்'ஊன மின் தூனில் லாஹி அரூனீ மாதா கலகூ மினல் அர்ளி அம் லஹும் ஷிர்குன் Fபிஸ் ஸமாவாதி ஈதூனீ Bபி கிதாBபிம் மின் கBப்லி ஹாதா அவ் அதாரதிம் மின் 'இல்மின் இன் குன்தும் ஸாதிகீன்
“நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன; அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
وَمَنْ اَضَلُّ مِمَّنْ یَّدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَنْ لَّا یَسْتَجِیْبُ لَهٗۤ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ وَهُمْ عَنْ دُعَآىِٕهِمْ غٰفِلُوْنَ ۟
وَمَنْயார்?اَضَلُّமிகப் பெரிய வழிகேடர்கள்مِمَّنْ يَّدْعُوْاஅழைக்கின்ற வர்களை விடمِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிمَنْ لَّا يَسْتَجِيْبُபதில் அளிக்க மாட்டார்கள்لَهٗۤஅவர்களுக்குاِلٰى يَوْمِ الْقِيٰمَةِமறுமை நாள் வரைوَهُمْஅவர்கள்عَنْ دُعَآٮِٕهِمْஅவர்களின்துஆவைغٰفِلُوْنَ‏அறியமாட்டார்கள்
வ மன் அளல்லு மிம்ம(ன்)ய் யத்'ஊ மின் தூனில் லாஹி மல்லா யஸ்தஜீBபு லஹூ இலா யவ்மில் கியாமதி வ ஹும்'அன் து'ஆ'இஹிம் காFபிலூன்
கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது.
وَاِذَا حُشِرَ النَّاسُ كَانُوْا لَهُمْ اَعْدَآءً وَّكَانُوْا بِعِبَادَتِهِمْ كٰفِرِیْنَ ۟
وَاِذَا حُشِرَஎழுப்பப்படும் போதுالنَّاسُமக்கள்كَانُوْاஆகிவிடுவார்கள்لَهُمْஅவர்களுக்குاَعْدَآءًஎதிரிகளாகوَّ كَانُوْاஇன்னும் ஆகிவிடுவார்கள்بِعِبَادَتِهِمْஅவர்கள் தங்களை வணங்கியதைكٰفِرِيْنَ‏மறுப்பவர்களாக
வ இதா ஹுஷிரன் னாஸு கானூ லஹும் அஃதா'அ(ன்)வ் வ கானூ Bபி'இBபாததிஹிம் காFபிரீன்
அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர்.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۙ هٰذَا سِحْرٌ مُّبِیْنٌ ۟ؕ
وَاِذَا تُتْلٰىஓதிக் காண்பிக்கப்பட்டால்عَلَيْهِمْஇவர்கள் மீதுاٰيٰتُنَاநமது வசனங்கள்بَيِّنٰتٍதெளிவான அத்தாட்சிகளாகقَالَகூறினார்கள்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்لِلْحَقِّசத்தியத்தைப் பார்த்துلَمَّا جَآءَஅது வந்த போதுهُمْۙஅவர்களிடம்هٰذَاஇதுسِحْرٌசூனியமாகும்مُّبِيْنٌؕ‏தெளிவான
வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா Bபய்யினாதின் காலல் லதீன கFபரூ லில்ஹக்கி லம்மா ஜா'அஹும் ஹாதா ஸிஹ்ரும் முBபீன்
மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் தங்களிடம் வந்த அந்த உண்மையை நிராகரித்து விட்டார்களே அவர்கள், “இது தெளிவான சூனியமே!” என்றும் கூறுகிறார்கள்.
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ قُلْ اِنِ افْتَرَیْتُهٗ فَلَا تَمْلِكُوْنَ لِیْ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ هُوَ اَعْلَمُ بِمَا تُفِیْضُوْنَ فِیْهِ ؕ كَفٰی بِهٖ شَهِیْدًا بَیْنِیْ وَبَیْنَكُمْ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
اَمْ يَقُوْلُوْنَகூறுகிறார்களா?افْتَـرٰٮهُ‌ؕஇவர் இதை இட்டுக்கட்டினார்قُلْகூறுவீராக!اِنِ افْتَـرَيْتُهٗநான் இதை இட்டுக்கட்டி இருந்தால்فَلَا تَمْلِكُوْنَநீங்கள் ஆற்றல் பெற மாட்டீர்கள்لِىْஎனக்காகمِنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துشَیْـًٔا ؕஎதையும்هُوَஅவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَاஎதைتُفِيْضُوْنَநீங்கள் ஈடுபடுகிறீர்களோفِيْهِ‌ؕஅதில்كَفٰىபோதுமானவன்بِهٖஅவனேشَهِيْدًاۢசாட்சியால்بَيْنِىْஎனக்கு மத்தியிலும்وَبَيْنَكُمْ‌ ؕஉங்களுக்கு மத்தியிலும்وَهُوَஅவன்தான்الْغَفُوْرُமகா மன்னிப்பாளன்الرَّحِيْمُ‏மகா கருணையாளன்
அம் யகூலூனFப் தராஹு குல் இனிFப் தரய்துஹூ Fபலா தம்லிகூன லீ மினல் லாஹி ஷய்'அன் ஹுவ அஃலமு Bபிமா துFபீளூன Fபீஹி கFபா Bபிஹீ ஷஹீதம் Bபய்னீ வ Bபய்னகும் வ ஹுவல் கFபூருர் ரஹீம்
அல்லது, “இதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார்” என்று அவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறுவீராக: “நான் இதை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால், (அல்லாஹ் அதற்காக தண்டிப்பானே; அப்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்கு ஏற்படும் எதையும் (தடுக்க) நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள். நீங்கள் இதைப் பற்றி என்னென்ன கூறுகிறீர்களோ, அதை அவன் நன்கறிகிறவன்; எனக்கும் உங்களுக்குமிடையே (அது பற்றி) அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான்; அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்” என்று (நபியே! நீர் கூறும்).
قُلْ مَا كُنْتُ بِدْعًا مِّنَ الرُّسُلِ وَمَاۤ اَدْرِیْ مَا یُفْعَلُ بِیْ وَلَا بِكُمْ ؕ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ وَمَاۤ اَنَا اِلَّا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
قُلْகூறுவீராக!مَا كُنْتُநான் இருக்கவில்லைبِدْعًاபுதுமையானவனாகمِّنَ الرُّسُلِதூதர்களில்وَمَاۤ اَدْرِىْஅறியமாட்டேன்مَا يُفْعَلُஎன்ன செய்யப்படும்بِىْஎனக்குوَلَا بِكُمْؕஇன்னும் உங்களுக்குاِنْ اَتَّبِعُபின்பற்ற மாட்டேன்اِلَّاதவிரمَاஎதுيُوْحٰٓىவஹீ அறிவிக்கப்படுகின்றதுاِلَىَّஎனக்குوَمَاۤ اَنَا اِلَّاநான் இல்லை/தவிரنَذِيْرٌஎச்சரிப்பாளராகவேمُّبِيْنٌ‏தெளிவான
குல் மா குன்து Bபித்'அம் மினல் ருஸுலி வ மா அத்ரீ ம யுFப்'அலு Bபீ வலா Bபிகும் இன் அத்தBபி'உ இல்லா மா யூஹா இலய்ய வ மா அன இல்லா னதீரும் முBபீன்
“(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.
قُلْ اَرَءَیْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ وَكَفَرْتُمْ بِهٖ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی مِثْلِهٖ فَاٰمَنَ وَاسْتَكْبَرْتُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟۠
قُلْகூறுவீராக!اَرَءَيْتُمْஅறிவியுங்கள்اِنْ كَانَஇது இருந்தால்مِنْ عِنْدِ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துوَكَفَرْتُمْஇன்னும் நீங்கள் நிராகரித்து விட்டால்بِهٖஇதைوَشَهِدَஇன்னும் சாட்சியும் கூறினார்شَاهِدٌஒரு சாட்சியாளர்مِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களில் உள்ளعَلٰى مِثْلِهٖஇதுபோன்ற ஒன்றுக்குفَاٰمَنَஅவர் நம்பிக்கை கொண்டிருக்கوَاسْتَكْبَرْتُمْ‌ ؕநீங்களோ பெருமை அடித்தீர்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி காட்ட மாட்டான்الْقَوْمَமக்களுக்குالظّٰلِمِيْنَ‏அநியாயக்கார(ர்கள்)
குல் அர'அய்தும் இன் கான மின் 'இன்தில் லாஹி வ கFபர்தும் Bபிஹீ வ ஷஹித ஷாஹிதும் மிம் Bபனீ இஸ்ரா'ஈல 'அலா மித்லிஹீ Fப ஆமன வஸ்தக் Bபர்தும் இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
“இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியானவர் இது போன்றது (வர வேண்டியிருந்தது) என்பதில் சாட்சியங்கூறி ஈமான் கொண்டிருக்கும் போது இதனை நீங்கள் நிராகரித்து பெருமை அடித்துக் கொண்டால் (உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் கவனித்தீர்களா?” என்று நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.  
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوْا لَوْ كَانَ خَیْرًا مَّا سَبَقُوْنَاۤ اِلَیْهِ ؕ وَاِذْ لَمْ یَهْتَدُوْا بِهٖ فَسَیَقُوْلُوْنَ هٰذَاۤ اِفْكٌ قَدِیْمٌ ۟
وَقَالَகூறினார்கள்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்لِلَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களை நோக்கிلَوْ كَانَ خَيْرًاஇது சிறந்ததாக இருந்தால்مَّا سَبَقُوْنَاۤஇவர்கள் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள்اِلَيْهِ‌ ؕஇதனளவில்وَاِذْ لَمْ يَهْتَدُوْاஅவர்கள் நேர்வழி பெறாமல் போனபோதுبِهٖஇதன் மூலம்فَسَيَقُوْلُوْنَகூறுகின்றனர்هٰذَاۤஇதுاِفْكٌபொய்யாகும்قَدِيْمٌ‏பழைய(து)
வ காலல் லதீன கFபரூ லில்லதீன ஆமனூ லவ் கான கய்ரம் மா ஸBபகூனா இல்ய்ஹ்; வ இத் லம் யஹ்ததூ Bபிஹீ Fபஸ யகூலூன ஹாதா இFப்குன் கதீம்
நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப்பற்றி: “இது (குர்ஆன்) நல்லதாக இருந்தால், இவர்கள் எங்களைவிட அதன்பால் முந்தியிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள். மேலுமவர்கள் இதைக் கொண்டு நேர்வழி பெறாத போது “இது பண்டைக்காலக் கட்டுக் கதை” எனக் கூறுவார்கள்.
وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰۤی اِمَامًا وَّرَحْمَةً ؕ وَهٰذَا كِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِیًّا لِّیُنْذِرَ الَّذِیْنَ ظَلَمُوْا ۖۗ وَبُشْرٰی لِلْمُحْسِنِیْنَ ۟ۚ
وَمِنْ قَبْلِهٖஇதற்கு முன்னர்كِتٰبُ مُوْسٰٓىமூஸாவின் வேதம்اِمَامًاஒரு முன்னோடியாக(வும்)وَّرَحْمَةً  ؕஅருளாகவும்وَهٰذَاஇதுவோكِتٰبٌஒரு வேதமாகும்مُّصَدِّقٌமெய்ப்பிக்கக்கூடிய(து)لِّسَانًا عَرَبِيًّاஅரபி மொழியில்لِّيُنْذِرَஎச்சரிப்பதற்காக(வும்)الَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயக்காரர்களைۖ  وَبُشْرٰىநற்செய்தியாகவும்لِلْمُحْسِنِيْنَ‌ۚ‏நல்லவர்களுக்கு
வ மின் கBப்லிஹீ கிதாBபு மூஸா இமாம(ன்)வ்-வ ரஹ்மஹ்; வ ஹாதா கிதாBபும் முஸத் திகுல் லிஸானன் 'அரBபிய்யல் லியுன்திரல் லதீன ளலமூ வ Bபுஷ்ரா லில்முஹ்ஸினீன்
இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது; (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
اِنَّ الَّذِیْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۚ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்قَالُوْاகூறினார்கள்رَبُّنَاஎங்கள் இறைவன்اللّٰهُஅல்லாஹ்தான்ثُمَّபிறகுاسْتَقَامُوْاஉறுதியாக இருந்தார்களோفَلَا خَوْفٌபயமில்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَا هُمْ يَحْزَنُوْنَ‌ۚ‏இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
இன்னல் லதீன காலூ ரBப்Bபுனல் லாஹு தும்மஸ் தகாமூ Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வ லாஹும் யஹ்Zஜனூன்
நிச்சயமாக எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ خٰلِدِیْنَ فِیْهَا ۚ جَزَآءً بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
اُولٰٓٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ الْجَنَّةِசொர்க்கவாசிகள்خٰلِدِيْنَநிரந்தரமாக இருப்பார்கள்فِيْهَا‌ ۚஅதில்جَزَآءًۢகூலியாகبِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு
உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி காலிதீன Fபீஹா ஜZஜா'அம் Bபிமா கானூ யஃமலூன்
அவர்கள் தாம் சுவர்க்கவாசிகள்; அதில் அவர்கள் நன்மை செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாக அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்.
وَوَصَّیْنَا الْاِنْسَانَ بِوَالِدَیْهِ اِحْسٰنًا ؕ حَمَلَتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا ؕ وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰثُوْنَ شَهْرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِیْنَ سَنَةً ۙ قَالَ رَبِّ اَوْزِعْنِیْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِیْۤ اَنْعَمْتَ عَلَیَّ وَعَلٰی وَالِدَیَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَصْلِحْ لِیْ فِیْ ذُرِّیَّتِیْ ؕۚ اِنِّیْ تُبْتُ اِلَیْكَ وَاِنِّیْ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
وَوَصَّيْنَاநாம் உபதேசித்தோம்الْاِنْسَانَமனிதனுக்குبِوَالِدَيْهِதன் பெற்றோருக்குاِحْسَانًا‌ ؕநன்மை செய்வதற்குحَمَلَـتْهُஅவனை சுமந்தாள்اُمُّهٗஅவனது தாய்كُرْهًاசிரமத்துடன்وَّوَضَعَتْهُஇன்னும் அவனை ஈன்றெடுத்தாள்كُرْهًا‌ ؕசிரமத்துடன்وَحَمْلُهٗஅவனை சுமந்ததும்وَفِصٰلُهٗஇன்னும் அவனுக்கு பால்குடி மறக்கச் செய்ததும்ثَلٰـثُوْنَமுப்பதுشَهْرًا‌ ؕமாதங்களாகும்حَتّٰٓىஇறுதியாகاِذَا بَلَغَஅவன் அடைந்து (விட்டால்)اَشُدَّهٗதனது வாலிபத்தைوَبَلَغَஇன்னும் அடைந்து(விட்டால்)اَرْبَعِيْنَநாற்பதுسَنَةً  ۙவயதைقَالَஅவன் கூறுகிறான்رَبِّஎன் இறைவாاَوْزِعْنِىْۤஎன்னை தூண்டுவாயாகاَنْ اَشْكُرَநான் நன்றி செலுத்துவதற்கு(ம்)نِعْمَتَكَஉனது அருளுக்குالَّتِىْۤஎதுاَنْعَمْتَநீ அருள் புரிந்தாய்عَلَىَّஎன்மீது(ம்)وَعَلٰىமீதும்وَالِدَىَّஎன் பெற்றோர்وَاَنْ اَعْمَلَநான் செய்வதற்கும்صَالِحًاநல்ல அமலைتَرْضٰٮهُஅதை நீ திருப்திபடுகின்றாய்وَاَصْلِحْஇன்னும் சீர்திருத்தம் செய்لِىْஎனக்குفِىْ ذُرِّيَّتِىْ ؕۚஎன் சந்ததியில்اِنِّىْநிச்சயமாக நான்تُبْتُதிரும்பி விட்டேன்اِلَيْكَஉன் பக்கம்وَاِنِّىْஇன்னும் நிச்சயமாக நான்مِنَ الْمُسْلِمِيْنَ‏முஸ்லிம்களில் ஒருவனாவேன்
வ வஸ்ஸய்னல் இன்ஸான Bபிவாலிதய்ஹி இஹ்ஸான; ஹமலத் ஹு உம்முஹூ குர்ஹ(ன்)வ்-வ வள'அத் ஹு குர்ஹ(ன்)வ் வ ஹம்லுஹூ வ Fபிஸாலுஹூ தலாதூன ஷஹ்ரா; ஹத்தா இதா Bபலக அஷுத்தஹூ வ Bபலக அர்Bப'ஈன ஸனதன் கால ரBப்Bபி அவ்Zஜிஃ னீ அன் அஷ்குர னிஃமதகல் லதீ அன்'அம்த 'அலய்ய வ 'அலா வாலிதய்ய வ அன் அஃமல ஸாலிஹன் தர்ளாஹு வ அஸ்லிஹ் லீ Fபீ துர்ரிய்யதீ; இன்னீ துBப்து இலய்க வ இன்னீ மினல் முஸ்லிமீன்
மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ نَتَقَبَّلُ عَنْهُمْ اَحْسَنَ مَا عَمِلُوْا وَنَتَجَاوَزُ عَنْ سَیِّاٰتِهِمْ فِیْۤ اَصْحٰبِ الْجَنَّةِ ؕ وَعْدَ الصِّدْقِ الَّذِیْ كَانُوْا یُوْعَدُوْنَ ۟
اُولٰٓٮِٕكَஇவர்கள்الَّذِيْنَஎப்படிப்பட்டவர்கள்نَـتَقَبَّلُஏற்றுக் கொள்வோம்عَنْهُمْஇவர்களிடமிருந்துاَحْسَنَமிக அழகானதைمَا عَمِلُوْاஇவர்கள் செய்தவற்றில்وَنَـتَجَاوَزُஇன்னும் மன்னித்து விடுவோம்عَنْ سَيِّاٰتِهِمْஇவர்களின் பாவங்களைفِىْۤ اَصْحٰبِ الْجَنَّةِ‌ ؕசொர்க்க வாசிகளில்وَعْدَ الصِّدْقِஉண்மையான வாக்காகும்الَّذِىْ كَانُوْا يُوْعَدُوْنَ‏எது/வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்
உலா'இகல் லதீன னத கBப்Bபலு 'அன்ஹும் அஹ்ஸன மா 'அமிலூ வ னதஜாவZஜு 'அன் ஸய்யிஆதிஹிம் Fபீ அஸ்ஹாBபில் ஜன்னதி வஃதஸ் ஸித்கில் லதீ கானூ யூ'அதூன்
சுவனவாசிகளான இ(த்தகைய)வர்கள் செய்தவற்றில் அழகான - நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு, இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம்; இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி உண்மையான வாக்குறுதியாகும்.
وَالَّذِیْ قَالَ لِوَالِدَیْهِ اُفٍّ لَّكُمَاۤ اَتَعِدٰنِنِیْۤ اَنْ اُخْرَجَ وَقَدْ خَلَتِ الْقُرُوْنُ مِنْ قَبْلِیْ ۚ وَهُمَا یَسْتَغِیْثٰنِ اللّٰهَ وَیْلَكَ اٰمِنْ ۖۗ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۖۚ فَیَقُوْلُ مَا هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
وَالَّذِىْஎவர்قَالَகூறினார்لِـوَالِدَيْهِதனது பெற்றோரை நோக்கிاُفٍّ“சீ”لَّكُمَاۤஉங்கள் இருவருக்கும்اَتَعِدٰنِنِىْۤஎன்னை எச்சரிக்கிறீர்களா?اَنْ اُخْرَجَநான் வெளியேற்றப்படுவேன்وَقَدْதிட்டமாகخَلَتِசென்றுள்ளனர்الْقُرُوْنُபல தலைமுறைகள்مِنْ قَبْلِىْ‌ ۚஎனக்கு முன்னர்وَهُمَاஅவ்விருவரும்يَسْتَغِيْثٰنِஉதவி தேடுகின்றனர்اللّٰهَஅல்லாஹ்விடம்وَيْلَكَஉனக்கு என்ன கேடு!اٰمِنْநீ நம்பிக்கை கொள்!ۖ  اِنَّ وَعْدَநிச்சயமாக வாக்குاللّٰهِஅல்லாஹ்வின்حَقٌّ  ۖۚஉண்மையானதே!فَيَقُوْلُஅவன் கூறுகிறான்مَا هٰذَاۤஇது இல்லைاِلَّاۤ اَسَاطِيْرُகதைகளே தவிரالْاَوَّلِيْنَ‏முன்னோரின்
வல்லதீ கால லிவாலி தய்ஹி உFப்Fபில் லகுமா அத'இதனினீ அன் உக்ரஜ வ கத் கலதில் குரூனு மின் கBப்லீ வ ஹுமா யஸ்தகீதானில் லாஹ வய்லக ஆமின் இன்ன வஃதல் லாஹி ஹக்க், Fப யகூலு மா ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
ஆனால் (சன்மார்க்கத்தை தழுவுமாறு கூறிய) தன் பெற்றோரை நோக்கி; “சீச்சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது! (மரணத்திற்குப் பின்) நான் உயிர்ப்பித்து எழுப்பப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? திடமாக எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் சென்று விட்டனரே (அவர்கள் எழுப்பப்படவில்லையா)!” என்று கூறியவனைப் பாதுகாக்குமாறு அவ்விருவரும், (அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பிறகு அவனிடம்) “உனக்கென்ன கேடு! நீ ஈமான் கொள்வாயாக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது” என்று அல்லாஹ்விடம் காவல் தேடுகிறார்கள்; அதற்கவன் “இவையெல்லாம் முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” என்று கூறுகிறான்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ حَقَّ عَلَیْهِمُ الْقَوْلُ فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ؕ اِنَّهُمْ كَانُوْا خٰسِرِیْنَ ۟
اُولٰٓٮِٕكَஇவர்கள்الَّذِيْنَஎவர்கள்حَقَّஉறுதியாகிவிட்டதுعَلَيْهِمُஇவர்கள் மீதும்الْقَوْلُவாக்குفِىْۤ اُمَمٍசமுதாயங்களுடன்قَدْதிட்டமாகخَلَتْசென்றுவிட்ட(னர்)مِنْ قَبْلِهِمْஇவர்களுக்கு முன்னர்مِّنَ الْجِنِّஜின்களில்وَالْاِنْسِ‌ؕமற்றும் மனித(ர்கள்)اِنَّهُمْநிச்சயமாக இவர்கள்كَانُوْاஇருக்கின்றனர்خٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளாகவே
உலா'இகல் லதீன ஹக்க 'அலய்ஹிமுல் கவ்லு Fபீ உமமின் கத் கலத் மின் கBப்லிஹிம் மினல் ஜின்னி வல் இன்ஸி இன்னஹும் கானூ காஸிரீன்
இத்தகையோரின் நிலையோ, இவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்கள் மனிதர்கள் கூட்டத்தினரில் (பாவம் செய்ததினால்) எவர்களுக்கு எதிராக (அல்லாஹ்வின்) வாக்கு மெய்யாக உறுதியாய் விடுகிறதோ, அது போன்றது தான்; நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாய் விட்டனர்.
وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْا ۚ وَلِیُوَفِّیَهُمْ اَعْمَالَهُمْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
وَلِكُلٍّஎல்லோருக்கும்دَرَجٰتٌதகுதிகள் உண்டுمِّمَّا عَمِلُوْا‌ ۚஅவர்கள் செய்தவற்றின் அடிப்படையில்وَلِيُوَفِّيَهُمْஇன்னும் இறுதியாக அவன் அவர்களுக்கு முழு கூலி கொடுப்பான்اَعْمَالَهُمْஅவர்களுடைய செயல்களுக்குوَهُمْஇன்னும் அவர்கள்لَا يُظْلَمُوْنَ‏அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
வ லிகுல்லின் தரஜாதும் மிம்மா 'அமிலூ வ லியுவFப் Fபியஹும் அஃமாலஹும் வ ஹும் லா யுள்லமூன்
அன்றியும், ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு - ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பூரணமாகப் பெறுவதற்காக, ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
وَیَوْمَ یُعْرَضُ الَّذِیْنَ كَفَرُوْا عَلَی النَّارِ ؕ اَذْهَبْتُمْ طَیِّبٰتِكُمْ فِیْ حَیَاتِكُمُ الدُّنْیَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا ۚ فَالْیَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُوْنَ ۟۠
وَيَوْمَ يُعْرَضُசமர்ப்பிக்கப்படுகின்ற நாளில்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்கள்عَلَى النَّارِ ؕநரகத்தின் முன்اَذْهَبْتُمْநீங்கள் போக்கிக் கொண்டீர்கள்طَيِّبٰـتِكُمْஉங்கள் நன்மைகளைفِىْ حَيَاتِكُمُஉங்கள் வாழ்க்கையிலேالدُّنْيَاஉலகوَاسْتَمْتَعْتُمْஇன்னும் இன்பம் அடைந்தீர்கள்بِهَا ۚஅவற்றின் மூலம்فَالْيَوْمَஆகவே இன்றைய தினம்تُجْزَوْنَகூலியாக கொடுக்கப்படுவீர்கள்عَذَابَதண்டனையைالْهُوْنِகேவலமானبِمَا كُنْـتُمْநீங்கள் இருந்த காரணத்தாலும்تَسْتَكْبِرُوْنَநீங்கள் பெருமையடிப்பவர்களாகفِى الْاَرْضِபூமியில்بِغَيْرِ الْحَقِّஅநியாயமாகوَبِمَا كُنْتُمْநீங்கள் இருந்த காரணத்தாலும்تَفْسُقُوْنَ‏நீங்கள் பாவம் செய்பவர்களாக
வ யவ்ம யுஃரளுல் லதீன கFபரூ 'அலன் னாரி அத்ஹBப்தும் தய்யிBபாதிகும் Fபீ ஹயாதிகுமுத் துன்யா வஸ்தம் தஃதும் Bபிஹா Fபல் யவ்ம துஜ்Zஜவ்ன 'அதாBபல் ஹூனி Bபிமா குன்தும் தஸ்தக்Bபிரூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்கி வ Bபிமா குன்தும் தFப்ஸுகூன்
அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், “உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், “ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).  
وَاذْكُرْ اَخَا عَادٍ ؕ اِذْ اَنْذَرَ قَوْمَهٗ بِالْاَحْقَافِ وَقَدْ خَلَتِ النُّذُرُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖۤ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
وَاذْكُرْநினைவு கூர்வீராகاَخَاசகோதரரைعَادٍؕஆது சமுதாயத்தின்اِذْ اَنْذَرَஅவர் எச்சரித்த சமயத்தைقَوْمَهٗதனது மக்களைبِالْاَحْقَافِமணல் பாங்கான இடத்தில்وَقَدْதிட்டமாகخَلَتِசென்றுள்ளனர்النُّذُرُஎச்சரிப்பாளர்கள்مِنْۢ بَيْنِ يَدَيْهِஇவருக்கு முன்னரும்وَمِنْ خَلْفِهٖۤஇவருக்கு பின்னரும்اَلَّا تَعْبُدُوْۤاநீங்கள் வணங்காதீர்கள்اِلَّا اللّٰهَ ؕஅல்லாஹ்வை அன்றிاِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்عَلَيْكُمْஉங்கள் மீதுعَذَابَதண்டனையைيَوْمٍநாளின்عَظِيْمٍ‏பெரிய(து)
வத்குர் அகா 'ஆத், இத் அன்தர கவ்மஹூ Bபில் அஹ்காFபி வ கத் கலதின் னுதுரு மிம் Bபய்னி யதய்ஹி வ மின் கல்Fபிஹீ அல்லா தஃBபுதூ இல்லல் லாஹ இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் 'அளீம்
மேலும் “ஆது” (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூத்) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் - (அவர்) தம் சமூகத்தாரை, “அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்” என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்ததை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக.
قَالُوْۤا اَجِئْتَنَا لِتَاْفِكَنَا عَنْ اٰلِهَتِنَا ۚ فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالُـوْۤاஅவர்கள் கூறினர்اَجِئْتَـنَاநீர் எங்களிடம் வந்தீரா?لِتَاْفِكَنَاஎங்களை திருப்புவதற்காகعَنْ اٰلِهَـتِنَا‌ ۚஎங்கள் தெய்வங்களை விட்டுفَاْتِنَا بِمَا تَعِدُنَاۤஎங்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வதை எங்களிடம் கொண்டு வருவீராக!اِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَ‏உண்மையாளர்களில்
காலூ அஜி'தனா லி தா Fபிகனா 'அன் ஆலிஹதினா Fப'தினா Bபிமா த'இதுனா இன் குன்த மினஸ் ஸாதிகீன்
அதற்கு அவர்கள்: “எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
قَالَ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ۖؗ وَاُبَلِّغُكُمْ مَّاۤ اُرْسِلْتُ بِهٖ وَلٰكِنِّیْۤ اَرٰىكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்اِنَّمَا الْعِلْمُஅறிவெல்லாம்عِنْدَ اللّٰهِ ۖஅல்லாஹ்விடம்தான் இருக்கிறது.وَاُبَلِّغُكُمْஉங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன்مَّاۤஎதைاُرْسِلْتُஅனுப்பப்பட்டேன்بِهٖஅதைக் கொண்டுوَلٰـكِنِّىْۤஎன்றாலும் நான்اَرٰٮكُمْஉங்களை கருதுகிறேன்قَوْمًاமக்களாகتَجْهَلُوْنَ‏நீங்கள் அறியாத(வர்கள்)
கால இன்னமல் 'இல்மு இன்தல் லாஹி வ உBபல்லிகுகும் மா உர்ஸில்து Bபிஹீ வ லாகின்னீ அராகும் கவ்மன் தஜ்ஹலூன்
அதற்கவர்: “(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது; மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்” என்று கூறினார்.
فَلَمَّا رَاَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ اَوْدِیَتِهِمْ ۙ قَالُوْا هٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا ؕ بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهٖ ؕ رِیْحٌ فِیْهَا عَذَابٌ اَلِیْمٌ ۟ۙ
فَلَمَّا رَاَوْهُஅவர்கள் அதை பார்த்த போதுعَارِضًاஅடர்த்தியான கார் மேகமாகمُّسْتَقْبِلَமுன்னோக்கி வரக்கூடிய(து)اَوْدِيَتِهِمْ ۙதங்களது பள்ளத்தாக்கைقَالُوْاகூறினார்கள்هٰذَاஇதுعَارِضٌஅடர்த்தியான கார்மேகமாகும்مُّمْطِرُنَا‌ ؕநமக்கு மழை பொழிவிக்கும்بَلْ هُوَமாறாக இதுمَاஎதைاسْتَعْجَلْتُمْநீங்கள் அவசரமாகத் தேடினீர்கள்بِهٖ ۚஅதைرِيْحٌ(இது) ஒரு காற்றாகும்فِيْهَاஇதில் உள்ளதுعَذَابٌதண்டனைاَ لِيْمٌۙ‏வலி தரக்கூடிய(து)
Fபலம்மா ர அவ்ஹு 'ஆரிளம் முஸ்தக்Bபில அவ்தியதிஹிம் காலூ ஹாதா 'ஆரிளும் மும்திருனா; Bபல் ஹுவ மஸ்தஃஜல்தும் Bபிஹீ ரீஹுன் Fபீஹா 'அதாBபுன் அலீம்
ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், “இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்” எனக் கூறினார்கள்; “அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது:
تُدَمِّرُ كُلَّ شَیْءٍ بِاَمْرِ رَبِّهَا فَاَصْبَحُوْا لَا یُرٰۤی اِلَّا مَسٰكِنُهُمْ ؕ كَذٰلِكَ نَجْزِی الْقَوْمَ الْمُجْرِمِیْنَ ۟
تُدَمِّرُஇது சின்னா பின்னமாக்கிவிடும்كُلَّ شَىْءٍ ۭஎல்லாவற்றையும்بِاَمْرِகட்டளைப்படிرَبِّهَاதனது இறைவனின்فَاَصْبَحُوْاஆகிவிட்டனர்لَا يُرٰٓىபார்க்க முடியாதபடிاِلَّاதவிரمَسٰكِنُهُمْ‌ؕஅவர்களின் வசிப்பிடங்களைكَذٰلِكَஇவ்வாறுதான்نَجْزِىகூலி கொடுப்போம்الْقَوْمَமக்களுக்குالْمُجْرِمِيْنَ‏குற்றவாளிகளான
துதம்மிரு குல்ல ஷய்'இம் Bபி-அம்ரி ரBப்Bபிஹா Fப அஸ்Bபஹூ லா யுரா இல்லா மஸாகினுஹும்; கதாலிக னஜ்Zஜில் கவ்மல் முஜ்ரிமீன்
“அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்” (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
وَلَقَدْ مَكَّنّٰهُمْ فِیْمَاۤ اِنْ مَّكَّنّٰكُمْ فِیْهِ وَجَعَلْنَا لَهُمْ سَمْعًا وَّاَبْصَارًا وَّاَفْـِٕدَةً ۖؗ فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ سَمْعُهُمْ وَلَاۤ اَبْصَارُهُمْ وَلَاۤ اَفْـِٕدَتُهُمْ مِّنْ شَیْءٍ اِذْ كَانُوْا یَجْحَدُوْنَ ۙ بِاٰیٰتِ اللّٰهِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠
وَلَقَدْதிட்டவட்டமாகمَكَّنّٰهُمْஅவர்களுக்கு நாம் வசதியளித்தோம்فِيْمَاۤஎதில்اِنْ مَّكَّنّٰكُمْஉங்களுக்கு நாம் வசதியளிக்கவில்லை(யோ)فِيْهِஅதில்وَجَعَلْنَاஇன்னும் ஏற்படுத்தினோம்لَهُمْஅவர்களுக்குسَمْعًاசெவியை(யும்)وَّاَبْصَارًاபார்வைகளையும்وَّاَفْـِٕدَةً  ۖஉள்ளங்களையும்فَمَاۤ اَغْنٰىதடுக்கவில்லைعَنْهُمْஅவர்களை விட்டும்سَمْعُهُمْஅவர்களின் செவி(யும்)وَلَاۤ اَبْصَارُபார்வைகளும்هُمْஅவர்களின்وَلَاۤ اَفْـِٕدَتُهُمْஅவர்களின் உள்ளங்களும்مِّنْ شَىْءٍஎதையும்اِذْ كَانُوْاஅவர்கள் இருந்தபோதுيَجْحَدُوْنَۙமறுப்பவர்களாகبِاٰيٰتِஅத்தாட்சிகளைاللّٰهِஅல்லாஹ்வின்وَحَاقَஇன்னும் சூழ்ந்து கொண்டதுبِهِمْஅவர்களைمَّاஎதுكَانُوْاஇருந்தார்கள்بِهٖஅதைيَسْتَهْزِءُوْنَ‏பரிகாசம் செய்பவர்களாக
வ லகத் மக்கன்னாஹும் Fபீமா இம் மக்கன்னாகும் Fபீஹி வஜ்'அல்னா லஹும் ஸம்'அ(ன்)வ் வ அBப்ஸார(ன்)வ் வ அFப்'இததன் Fபமா அக்னா 'அன்ஹும் ஸம்'உஹும் வ லா அBப்ஸாருஹும் வ லா அFப்'இததுஹும் மின் ஷய்'இன் இத் கானூ யஜ்ஹதூன Bபி ஆயாதில் லாஹி வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
உங்களுக்கு (மக்காவாசிகளுக்கு) இங்கு எதில் வசதிகள் செய்து கொடுக்காதிருந்தோமோ அவ்வசதிகளையெல்லாம் நாம் அவர்களுக்குத் திடமாகச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் அவர்களுக்கும் செவிப் புலனையும் பார்வைகளையும் இருதயங்களையும் நாம் கொடுத்திருந்தோம்; ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களுடைய செவிப் புலனும், பார்வைகளும் இருதயங்களும் அவர்களுக்கு யாதோர் பயனுமளிக்கவில்லை - எ(வ்வே)தனைப் பற்றி அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.  
وَلَقَدْ اَهْلَكْنَا مَا حَوْلَكُمْ مِّنَ الْقُرٰی وَصَرَّفْنَا الْاٰیٰتِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَهْلَكْنَاநாம் அழித்தோம்مَا حَوْلَـكُمْஉங்களை சுற்றி உள்ளவற்றைمِّنَ الْقُرٰىஊர்களில்وَصَرَّفْنَاஇன்னும் நாம் விவரித்தோம்الْاٰيٰتِஅத்தாட்சிகளைلَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏அவர்கள் திரும்புவதற்காக
வ லகத் அஹ்லக்னா ம ஹவ்லகும் மினல் குரா வ ஸர்ரFப்னல் ஆயாதி ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
அன்றியும், உங்களைச் சுற்றி இருந்த ஊ(ரா)ர்களையும் திடமாக நாம் அழித்திருக்கிறோம், அவர்கள் (நேர்வழிக்கு) மீளும் பொருட்டு நாம் (அவர்களுக்குப்) பல அத்தாட்சிகளைத் திருப்பித் திருப்பிக் காண்பித்தோம்.
فَلَوْلَا نَصَرَهُمُ الَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ قُرْبَانًا اٰلِهَةً ؕ بَلْ ضَلُّوْا عَنْهُمْ ۚ وَذٰلِكَ اِفْكُهُمْ وَمَا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
فَلَوْلَا نَصَرَهُمُ(அவர்கள்) இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா?الَّذِيْنَஎவர்களைاتَّخَذُوْاஎடுத்துக் கொண்டார்கள்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிقُرْبَانًاவழிபாட்டுக்காகاٰلِهَةً ؕதெய்வங்களாகبَلْமாறாகضَلُّوْاஅவர்கள் மறைந்து விட்டனர்عَنْهُمْ‌ۚஇவர்களை விட்டுوَذٰلِكَஇதுاِفْكُهُمْஇவர்களின்பொய்(யும்)وَمَاஇன்னும் எதைكَانُوْاஇருந்தார்களோيَفْتَرُوْنَ‏இட்டுக் கட்டுபவர்களாக
Fபலவ் லா னஸரஹுமுல் லதீனத் தகதூ மின் தூனில் லாஹி குர்Bபானன் ஆலிஹதம் Bபல் ளல்லூ 'அன்ஹும்' வ தாலிக இFப்குஹும் வமா கானூ யFப்தரூன்
(அல்லாஹ்விடம் தங்களை) நெருங்க வைக்கும் தெய்வங்களென்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவர்கள் ஏன் இவர்களுக்கு உதவி புரியவில்லை? ஆனால், அவர்கள் இவர்களை விட்டும் மறைந்து விட்டனர் - அவர்களே இவர்கள் பொய்யாகக் கூறியவையும், இட்டுக் கட்டியவையுமாகும்.
وَاِذْ صَرَفْنَاۤ اِلَیْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ یَسْتَمِعُوْنَ الْقُرْاٰنَ ۚ فَلَمَّا حَضَرُوْهُ قَالُوْۤا اَنْصِتُوْا ۚ فَلَمَّا قُضِیَ وَلَّوْا اِلٰی قَوْمِهِمْ مُّنْذِرِیْنَ ۟
وَاِذْ صَرَفْنَاۤ اِلَيْكَநாம் திருப்பிய சமயத்தை நினைவு கூர்வீராக!/உம் பக்கம்نَفَرًاசில நபர்களைمِّنَ الْجِنِّஜின்களின்يَسْتَمِعُوْنَசெவிமடுக்கின்றனர்الْقُرْاٰنَ‌ۚகுர்ஆனைفَلَمَّا حَضَرُوْهُஅவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோதுقَالُوْۤاகூறினார்கள்اَنْصِتُوْا‌ۚவாய்மூடி இருங்கள்!فَلَمَّا قُضِىَமுடிக்கப்பட்ட போதுوَلَّوْاதிரும்பினார்கள்اِلٰى قَوْمِهِمْதங்களது சமுதாயத்தினர் பக்கம்مُّنْذِرِيْنَ‏எச்சரிப்பவர்களாக
வ இத் ஸரFபினா இலய்க னFபரம் மினல் ஜின்னி யஸ்தமி'ஊனல் குர்'ஆன Fபலம்மா ஹளரூஹு காலூ அன்ஸிதூ Fபலம்மா குளிய வல்லவ் இலா கவ்மிஹிம் முன்திரீன்
மேலும் (நபியே!) நாம் உம்மிடம் இந்த குர்ஆனை செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரை திருப்பியதும், அவர்கள் அங்கு வந்த போது, “மௌனமாக இருங்கள்” என்று (மற்றவர்களுக்குச்) சொன்னார்கள்; (ஓதுதல்) முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.
قَالُوْا یٰقَوْمَنَاۤ اِنَّا سَمِعْنَا كِتٰبًا اُنْزِلَ مِنْ بَعْدِ مُوْسٰی مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ یَهْدِیْۤ اِلَی الْحَقِّ وَاِلٰی طَرِیْقٍ مُّسْتَقِیْمٍ ۟
قَالُوْاகூறினார்கள்يٰقَوْمَنَاۤஎங்கள் சமுதாயமே!اِنَّا سَمِعْنَاநிச்சயமாக நாங்கள் செவியுற்றோம்كِتٰبًاஒரு வேதத்தைاُنْزِلَஇறக்கப்பட்ட(து)مِنْۢ بَعْدِபின்னர்مُوْسٰىமூஸாவிற்குمُصَدِّقًاஉண்மைப்படுத்தக்கூடியلِّمَا بَيْنَ يَدَيْهِதனக்கு முந்தியவற்றைيَهْدِىْۤஅது வழி காட்டுகிறதுاِلَى الْحَقِّஉண்மைக்கு(ம்)وَاِلٰى طَرِيْقٍபாதைக்கும்مُّسْتَقِيْمٍ‏மிக நேரான
காலூ யா கவ்மனா இன்னா ஸமிஃனா கிதாBபன் உன்Zஜில மிம் Bபஃதி மூஸா முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி யஹ்தீ இலல் ஹக்கி வ இலா தரீகிம் முஸ்தகீம்
(ஜின்கள்) கூறினார்கள்: “எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) “வழி” காட்டுகின்றது.
یٰقَوْمَنَاۤ اَجِیْبُوْا دَاعِیَ اللّٰهِ وَاٰمِنُوْا بِهٖ یَغْفِرْ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَیُجِرْكُمْ مِّنْ عَذَابٍ اَلِیْمٍ ۟
يٰقَوْمَنَاۤஎங்கள் சமுதாயமே!اَجِيْبُوْاபதில் தாருங்கள்!دَاعِىَஅழைப்பாளருக்குاللّٰهِஅல்லாஹ்வின்وَاٰمِنُوْاஇன்னும் நம்பிக்கை கொள்ளுங்கள்بِهٖஅவரைيَغْفِرْஅவன் மன்னிப்பான்لَـكُمْஉங்களுக்குمِّنْ ذُنُوْبِكُمْஉங்கள் பாவங்களைوَيُجِرْكُمْஇன்னும் உங்களை பாதுகாப்பான்مِّنْ عَذَابٍதண்டனையிலிருந்துاَ لِيْمٍ‏வலி தரக்கூடிய(து)
யா கவ்மனா அஜீBபூ தா'இயல் லாஹி வ ஆமினூ Bபிஹீ யக்Fபிர் லகும் மின் துனூBபிகும் வ யுஜிர்கும் மின் 'அதாBபின் அலீம்
“எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து (அவர் கூறுவதை ஏற்று) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பளிப்பான், நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான்.
وَمَنْ لَّا یُجِبْ دَاعِیَ اللّٰهِ فَلَیْسَ بِمُعْجِزٍ فِی الْاَرْضِ وَلَیْسَ لَهٗ مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءُ ؕ اُولٰٓىِٕكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
وَمَنْஎவர்لَّا يُجِبْபதில் தரவில்லையோدَاعِىَஅழைப்பாளருக்குاللّٰهِஅல்லாஹ்வின்فَلَيْسَ بِمُعْجِزٍஅவர் தப்பித்துவிட மாட்டார்فِى الْاَرْضِபூமியில்وَلَيْسَஇல்லைلَهٗஅவருக்குمِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاَوْلِيَآءُ ؕபாதுகாவலர்கள்اُولٰٓٮِٕكَஇப்படிப்பட்டவர்கள்فِىْ ضَلٰلٍவழிகேட்டில் இருக்கின்றனர்مُّبِيْنٍ‏மிகத் தெளிவான
வ மல் லா யுஜிBப் தா'இயல் லாஹி Fபலய்ஸ BபிமுஃஜிZஜின் Fபில் அர்ளி வ லய்ஸ லஹூ மின் தூனிஹீ அவ்லியா'; உலா இக Fபீ ளலாலிம் முBபீன்
“ஆனால், எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்க வில்லையோ, அவர் பூமியில் (அல்லாஹ்வை) இயலாமல் ஆக்க முடியாது; அவனையன்றி அவரை பாதுகாப்போர் எவருமில்லை, அ(த்தகைய)வர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.”
اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَلَمْ یَعْیَ بِخَلْقِهِنَّ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یُّحْیِ الْمَوْتٰی ؕ بَلٰۤی اِنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
اَوَلَمْ يَرَوْاஅவர்கள் கவனிக்கவில்லையா?اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்الَّذِىْ خَلَقَபடைத்தவன்السَّمٰوٰتِவானங்களை(யும்)وَالْاَرْضَபூமியையும்وَلَمْ يَعْىَகலைத்து விடாதவனுமாகியبِخَلْقِهِنَّஅவற்றைபடைத்ததால்بِقٰدِرٍஆற்றலுடையவன் (என்பதை)عَلٰۤی اَنْ يُّحْیَِۧஉயிர்ப்பிப்பதற்குالْمَوْتٰى ؕஇறந்தவர்களைبَلٰٓىஏன் இல்லைاِنَّهٗநிச்சயமாக அவன்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதும்قَدِيْرٌ‏‏பேராற்றலுடையவன்
அவலம் யரவ் அன்னல் லாஹல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வ லம் யஃய Bபிகல் கிஹின்ன Bபிகாதிரின் 'அலா அய்யுஹ்யியல் மவ்தா; Bபலா இன்னஹூ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
وَیَوْمَ یُعْرَضُ الَّذِیْنَ كَفَرُوْا عَلَی النَّارِ ؕ اَلَیْسَ هٰذَا بِالْحَقِّ ؕ قَالُوْا بَلٰی وَرَبِّنَا ؕ قَالَ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟
وَيَوْمَநாளில்يُعْرَضُகொண்டுவரப்படும்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்عَلَى النَّارِ ؕநரகத்தின் முன்اَلَيْسَஇல்லையா?هٰذَاஇதுبِالْحَقِّ‌ ؕஉண்மையாகقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்بَلٰىஏன் இல்லை?وَرَبِّنَا‌ ؕஎங்கள் இறைவன் மீது சத்தியமாகقَالَகூறுவான்فَذُوْقُواநீங்கள் சுவையுங்கள்!الْعَذَابَஇந்த வேதனையைبِمَا كُنْـتُمْநீங்கள் இருந்த காரணத்தால்تَكْفُرُوْنَ‏நிராகரிப்பவர்களாக
வ யவ்ம யுஃரளுல் லதீன கFபரூ 'அலன் னாரி அலய்ஸ ஹாத Bபில் ஹக்க்; காலூ Bபலா வ ரBப்Bபினா; கால Fபதூகுல் 'அதாBப Bபிமா குன்தும் தக்Fபுரூன்
மேலும், நிராகரிப்பவர்கள் (நரக) நெருப்பின் முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களிடம்) “இது உண்மையல்லவா?” (என்று கேட்கப்படும்;) அதற்கவர்கள், “எங்கள் இறைவன் மீது சத்தியமாக, உண்மைதான்” என்று கூறுவார்கள். “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்காக இவ்வேதனையை அனுபவியுங்கள்” என்று அவன் கூறுவான்.
فَاصْبِرْ كَمَا صَبَرَ اُولُوا الْعَزْمِ مِنَ الرُّسُلِ وَلَا تَسْتَعْجِلْ لَّهُمْ ؕ كَاَنَّهُمْ یَوْمَ یَرَوْنَ مَا یُوْعَدُوْنَ ۙ لَمْ یَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنْ نَّهَارٍ ؕ بَلٰغٌ ۚ فَهَلْ یُهْلَكُ اِلَّا الْقَوْمُ الْفٰسِقُوْنَ ۟۠
فَاصْبِرْபொறுமை காப்பீராக!كَمَا صَبَرَபொறுத்தது போன்றுاُولُوا الْعَزْمِமிகவும் வீரமிக்கவர்கள்مِنَ الرُّسُلِதூதர்களில்وَلَا تَسْتَعْجِلْ لَّهُمْ‌ؕஅவர்களுக்காக அவசரமாகக் கேட்காதீர்!كَاَنَّهُمْஅவர்களுக்குத் தோன்றும்يَوْمَநாளில்يَرَوْنَஅவர்கள் பார்க்கின்ற(னர்)مَا يُوْعَدُوْنَۙஅவர்கள் எச்சரிக்கப்பட்டதைلَمْ يَلْبَثُوْۤاஅவர்கள் தங்கவில்லைاِلَّا سَاعَةًசில மணிநேரம் தவிரمِّنْ نَّهَارٍ ؕபகலின்بَلٰغٌ ۚஇது எடுத்து சொல்லப்படும் செய்தியாகும்فَهَلْ يُهْلَكُஅழிக்கப்படுவார்களா?اِلَّا الْقَوْمُமக்களைத் தவிரالْفٰسِقُوْنَ‏பாவிகளான
Fபஸ்Bபிர் கமா ஸBபர உலுல் 'அZஜ்மி மினர் ருஸுலி வலா தஸ்தஃஜில் லஹும்; க அன்னஹும் யவ்ம யரவ்ன மா யூ'அதூன லம் யல்Bபதூ இல்லா ஸா'அதம் மின் னஹார்; Bபலாக்; Fபஹல் யுஹ்லகு இல்லல் கவ்முல் Fபாஸிகூன்
“(நபியே!) நம் தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறுமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இவர்களுக்காக (வேதனையை வரவழைக்க) அவசரப்படாதீர்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில், அவர்கள் (இப்பூமியில்) ஒரு நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை (என்று எண்ணுவார்கள். இது) தெளிவாக அறிவிக்க வேண்டியதே! எனவே, வரம்பு மீறியவர்கள் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா?