24. ஸூரத்துந் நூர் (பேரொளி)

மதனீ, வசனங்கள்: 64

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
سُوْرَةٌ اَنْزَلْنٰهَا وَفَرَضْنٰهَا وَاَنْزَلْنَا فِیْهَاۤ اٰیٰتٍ بَیِّنٰتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
سُوْرَةٌஇது ஒரு அத்தியாயமாகும்اَنْزَلْنٰهَاஇதை நாம் இறக்கினோம்وَفَرَضْنٰهَاஇதை நாம் கடமையாக்கினோம்وَاَنْزَلْنَاஇன்னும் நாம் இறக்கினோம்فِيْهَاۤஇதில்اٰيٰتٍۭஅத்தாட்சிகளைبَيِّنٰتٍதெளிவானلَّعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக
ஸூரதுன் அன்Zஜல்னாஹா வ Fபரள்னாஹா வ அன்Zஜல்னா Fபீஹா ஆயாதிம் Bபய்யினாதில் ல'அல்லகும் ததக்கரூன்
(இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.
اَلزَّانِیَةُ وَالزَّانِیْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۪ وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِیْ دِیْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ۚ وَلْیَشْهَدْ عَذَابَهُمَا طَآىِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِیْنَ ۟
اَلزَّانِيَةُவிபச்சாரிوَالزَّانِىْஇன்னும் விபசாரன்فَاجْلِدُوْاஅடியுங்கள்كُلَّ وَاحِدٍஒவ்வொருவரையும்مِّنْهُمَاஅவ்விருவரில்مِائَةَநூறுجَلْدَةٍஅடி‌وَّلَا تَاْخُذْபிடித்துவிட வேண்டாம்كُمْஉங்களைبِهِمَاஅந்த இருவர் மீதுرَاْفَةٌஇரக்கம்فِىْ دِيْنِமார்க்கத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்تُؤْمِنُوْنَநம்பிக்கை கொண்டவர்களாகبِاللّٰهِஅல்லாஹ்வையும்وَالْيَوْمِ الْاٰخِرِ‌ۚமறுமை நாளையும்وَلْيَشْهَدْஆஜராகட்டும்عَذَابَهُمَاஅவ்விருவரின் தண்டனைக்குطَآٮِٕفَةٌஒரு கூட்டம்مِّنَ الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களில்
அZஜ்Zஜானியது வZஜ்Zஜானீ Fபஜ்லிதூ குல்ல வாஹிதிம் மின்ஹுமா மி'அத ஜல்ததி(ன்)வ் வலா தாகுத்கும் Bபிஹிமா ராFபதுன் Fபீ தீனில் லாஹி இன் குன்தும் து'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வல் யஷ்ஹத் 'அதாBபஹுமா தா'இFபதும் மினல் மு'மினீன்
விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
اَلزَّانِیْ لَا یَنْكِحُ اِلَّا زَانِیَةً اَوْ مُشْرِكَةً ؗ وَّالزَّانِیَةُ لَا یَنْكِحُهَاۤ اِلَّا زَانٍ اَوْ مُشْرِكٌ ۚ وَحُرِّمَ ذٰلِكَ عَلَی الْمُؤْمِنِیْنَ ۟
اَلزَّانِىْஒரு விபசாரன்لَا يَنْكِحُஉ(டலு)றவு வைக்க மாட்டான்اِلَّاதவிரزَانِيَةًஒரு விபசாரிاَوْஅல்லதுمُشْرِكَةً இணைவைப்பவள்وَّ الزَّانِيَةُஇன்னும் விபசாரிلَا يَنْكِحُهَاۤஅவளுடன் உ(டலு)றவு வைக்கமாட்டான்اِلَّاதவிரزَانٍஒரு விபசாரன்اَوْஅல்லதுمُشْرِكٌ‌ ۚஇணைவைப்பவன்وَحُرِّمَதடுக்கப்பட்டுள்ளதுذٰ لِكَஇதுعَلَى الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
அZஜ்Zஜானீ லா யன்கிஹு இல்லா Zஜானியதன் அவ் முஷ்ரிகத(ன்)வ் வZஜ்Zஜானியது லா யன்கிஹுஹா இல்லா Zஜானின் அவ் முஷ்ரிக்; வ ஹுர்ரிம தாலிக 'அலல் மு'மினீன்
விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் - இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.
وَالَّذِیْنَ یَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ یَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِیْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا ۚ وَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟ۙ
وَالَّذِيْنَஎவர்கள்يَرْمُوْنَஏசுவார்களோالْمُحْصَنٰتِபத்தினிகளைثُمَّபிறகுلَمْ يَاْتُوْاஅவர்கள் கொண்டுவரவில்லை என்றால்بِاَرْبَعَةِநான்குشُهَدَآءَசாட்சிகளைفَاجْلِدُوْஅடியுங்கள்هُمْஅவர்களைثَمٰنِيْنَஎண்பதுجَلْدَةًஅடிوَّلَا تَقْبَلُوْاஏற்காதீர்கள்لَهُمْஅவர்களின்شَهَادَةًசாட்சியத்தைاَبَدًا‌ ۚஒருபோதும்وَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْفٰسِقُوْنَ ۙ‏பாவிகள்
வல்லதீன யர்மூனல் முஹ்ஸனாதி தும்ம லம் யாதூ Bபி-அர்Bப'அதி ஷுஹதா'அ Fபஜ்லிதூஹும் தமானீன ஜல்தத(ன்)வ் வலா தக்Bபலூ லஹும் ஷஹாததன் அBபதா; வ உலா'இக ஹுமுல் Fபாஸிகூன்
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
اِلَّا الَّذِیْنَ تَابُوْا مِنْ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا ۚ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
اِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்تَابُوْاதிருந்தினார்கள்مِنْۢ بَعْدِபின்னர்ذٰلِكَஅதற்குப்وَاَصْلَحُوْا‌ۚஇன்னும் சீர்படுத்திக் கொண்டார்கள்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
இல்லல் லதீன தாBபூ மிம் Bபஃதி தாலிக வ அஸ்லஹூ Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
وَالَّذِیْنَ یَرْمُوْنَ اَزْوَاجَهُمْ وَلَمْ یَكُنْ لَّهُمْ شُهَدَآءُ اِلَّاۤ اَنْفُسُهُمْ فَشَهَادَةُ اَحَدِهِمْ اَرْبَعُ شَهٰدٰتٍۢ بِاللّٰهِ ۙ اِنَّهٗ لَمِنَ الصّٰدِقِیْنَ ۟
وَالَّذِيْنَஎவர்கள்يَرْمُوْنَஏசுகிறார்களோاَزْوَاجَهُمْதங்களது மனைவிகளைوَلَمْ يَكُنْஇல்லையோلَّهُمْஅவர்களிடம்شُهَدَآءُசாட்சிகள்اِلَّاۤதவிரاَنْفُسُهُمْஅவர்களைفَشَهَادَةُசாட்சிகள் சொல்ல வேண்டும்اَحَدِهِمْஅவர்களில் ஒருவர்اَرْبَعُ شَهٰدٰتٍۭநான்கு முறை சாட்சி சொல்வதுبِاللّٰهِ‌ۙஅல்லாஹ்வின் மீது சத்தியமாகاِنَّهٗநிச்சயமாக தான்لَمِنَ الصّٰدِقِيْنَ‏உண்மை கூறுபவர்களில்
வல்லதீன யர்மூன அZஜ்வாஜஹும் வ லம் யகுல் லஹும் ஷுஹதா'உ இல்லா அன்Fபுஸுஹும் Fபஷஹாதது அஹதிஹிம் அர்Bப'உ ஷஹாதாதிம் Bபில்லாஹி இன்னஹூ லமினஸ் ஸாதிகீன்
எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:
وَالْخَامِسَةُ اَنَّ لَعْنَتَ اللّٰهِ عَلَیْهِ اِنْ كَانَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
وَالْخَـامِسَةُஐந்தாவது முறைاَنَّநிச்சயமாகلَـعْنَتَசாபம் உண்டாகட்டும்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْهِதன் மீதுاِنْ كَانَஒருவனாக இருந்தால்مِنَ الْكٰذِبِيْنَ‏பொய் கூறுபவர்களில்
வல் காமிஸது அன்ன லஃனதல் லாஹி 'அலய்ஹி இன் கான மினல் காதிBபீன்
ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).
وَیَدْرَؤُا عَنْهَا الْعَذَابَ اَنْ تَشْهَدَ اَرْبَعَ شَهٰدٰتٍ بِاللّٰهِ ۙ اِنَّهٗ لَمِنَ الْكٰذِبِیْنَ ۟ۙ
وَيَدْرَؤُاதடுக்கும்عَنْهَاஅவளை விட்டும்الْعَذَابَதண்டனையைاَنْ تَشْهَدَஅவள் சாட்சி சொல்வதுاَرْبَعَ شَهٰدٰتٍۢநான்கு முறை சாட்சி சொல்வதுبِاللّٰهِ‌ۙஅல்லாஹ்வின் மீது சத்தியமாகاِنَّهٗநிச்சயமாக அவர்لَمِنَ الْكٰذِبِيْنَۙ‏பொய் கூறுபவர்களில் உள்ளவர்
வ யத்ர'உ அன்ஹல் 'அதாBப அன் தஷ்ஹத அர்Bப'அ ஷஹா தாதிம் Bபில்லாஹி இன்னஹூ லமினல் காதிBபீன்
இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி:
وَالْخَامِسَةَ اَنَّ غَضَبَ اللّٰهِ عَلَیْهَاۤ اِنْ كَانَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
وَالْخَـامِسَةَஐந்தாவது முறைاَنَّநிச்சயமாகغَضَبَசாபம் உண்டாகட்டும்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْهَاۤதன் மீதுاِنْ كَانَஅவர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَ‏உண்மை கூறுபவர்களில்
வல் காமிஸத அன்ன களBபல் லாஹி 'அலய்ஹா இன் கான மினஸ் ஸாதிகீன்
ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ تَوَّابٌ حَكِیْمٌ ۟۠
وَلَوْلَا فَضْلُஅருளும் இல்லாதிருந்தால்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْكُمْஉங்கள் மீதுوَرَحْمَتُهٗஇன்னும் அவனது கருணையும்وَاَنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்تَوَّابٌபிழை பொறுப்பவனாகவும்حَكِيْمٌ‏ஞானவானாகவும்
வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்கும் வ ரஹ்மதுஹூ வ அன்னல் லாஹ தவ்வாBபுன் ஹகீம்
இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ ؕ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّكُمْ ؕ بَلْ هُوَ خَیْرٌ لَّكُمْ ؕ لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ ۚ وَالَّذِیْ تَوَلّٰی كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்جَآءُوْ بِالْاِفْكِஇட்டுக்கட்டியவர்கள்عُصْبَةٌஒரு குழுவினர்தான்مِّنْكُمْ‌ ؕஉங்களில் உள்ளلَا تَحْسَبُوْهُஅதை கருதாதீர்கள்شَرًّاதீமையாகلَّـكُمْ‌ ؕஉங்களுக்குبَلْமாறாகهُوَஅதுخَيْرٌநன்மைதான்لَّـكُمْ‌ ؕஉங்களுக்குلِكُلِّ امْرِىٴٍஒவ்வொருவருக்கும்مِّنْهُمْஅவர்களில்مَّا اكْتَسَبَஅவர் செய்ததுمِنَ الْاِثْمِ‌ ۚபாவத்தில்وَالَّذِىْ تَوَلّٰىசெய்தவர்கள்كِبْرَهٗபெரியதைمِنْهُمْஅதில்لَهٗஅவருக்குعَذَابٌதண்டனை உண்டுعَظِيْمٌ‏பெரும்
இன்னல் லதீன ஜா'ஊ BபிலிFப்கி 'உஸ்Bபதும் மின்கும்; லா தஹ்ஸBபூஹு ஷர்ரல் லகும் Bபல் ஹுவ கய்ருல் லகும்; லிகுல் லிம்ரி'இம் மின்ஹும் மக் தஸBப மினல்-இத்ம்; வல்லதீ தவல்லா கிBப்ரஹூ மின்ஹும் லஹூ 'அதாBபுன் 'அளீம்
எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.
لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَیْرًا ۙ وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِیْنٌ ۟
لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُநீங்கள் அதைக் கேட்டபோதுظَنَّஎண்ணியிருக்கالْمُؤْمِنُوْنَநம்பிக்கை கொண்ட ஆண்களும்وَالْمُؤْمِنٰتُநம்பிக்கை கொண்ட பெண்களும்بِاَنْفُسِهِمْதங்களைப் பற்றிخَيْرًاۙநல்லதைوَّقَالُوْاஇன்னும் அவர்கள் சொல்லியிருக்க வேண்டாமாهٰذَاۤஇதுاِفْكٌஇட்டுக்கட்டுمُّبِيْنٌ‏தெளிவான
லவ் லா இத் ஸமிஃதுமூஹு ளன்னல் மு'மினூன வல்மு'மினாது Bபி அன்Fபுஸிஹிம் கய்ர(ன்)வ் வ காலூ ஹாதா இFப்கும் முBபீன்
முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” என்று கூறியிருக்க வேண்டாமா?
لَوْلَا جَآءُوْ عَلَیْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ ۚ فَاِذْ لَمْ یَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓىِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْكٰذِبُوْنَ ۟
لَوْلَا جَآءُوْகொண்டு வந்திருக்க வேண்டாமா!عَلَيْهِஅதற்குبِاَرْبَعَةِநான்குشُهَدَآءَ‌ ۚசாட்சிகளைفَاِذْ لَمْ يَاْتُوْاஆகவே அவர்கள் வராததால்بِالشُّهَدَآءِசாட்சிகளைக்கொண்டுفَاُولٰٓٮِٕكَஅவர்கள்தான்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்هُمُஅவர்கள்தான்الْـكٰذِبُوْنَ‏பொய்யர்கள்
லவ் லா ஜா'ஊ 'அலய்ஹி Bபி-அர்Bப'அதி ஷுஹதா'; Fப இத் லம் யாதூ Bபிஷ்ஷுஹதா'இ Fப உலா 'இக 'இன்தல் லாஹி ஹுமுல் காதிBபூன்
அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ لَمَسَّكُمْ فِیْ مَاۤ اَفَضْتُمْ فِیْهِ عَذَابٌ عَظِیْمٌ ۟ۚۖ
وَلَوْلَا فَضْلُஅருளும் இல்லாதிருந்தால்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْكُمْஉங்கள் மீதுوَرَحْمَتُهٗகருணையும்فِى الدُّنْيَاஇம்மையிலும்وَالْاٰخِرَةِமறுமையிலும்لَمَسَّكُمْஉங்களுக்கு கிடைத்திருக்கும்فِىْ مَاۤ اَفَضْتُمْ فِيْهِநீங்கள் ஈடுபட்ட விஷயத்தில்عَذَابٌ عَظِيْمٌ‌ ۖ‌ ۚ‏பெரிய தண்டனை
வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்கும் வ ரஹ்மதுஹூ Fபித்துன்யா வல் ஆகிரதி லமஸ்ஸகும் Fபீ மா அFபள்தும் Fபீஹி 'அதாBபுன் 'அளீம்
இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.
اِذْ تَلَقَّوْنَهٗ بِاَلْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَفْوَاهِكُمْ مَّا لَیْسَ لَكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَیِّنًا ۖۗ وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِیْمٌ ۟
اِذْஏனெனில்تَلَـقَّوْنَهٗஅதை உங்களுக்குள் அறிவித்துக் கொண்டீர்கள்بِاَ لْسِنَتِكُمْநீங்கள்உங்கள் நாவுகளால்وَتَقُوْلُوْنَஇன்னும் அதை கூறுகிறீர்கள்بِاَ فْوَاهِكُمْஉங்கள் வாய்களால்مَّاஎதைப் பற்றிلَـيْسَ لَـكُمْஉங்களுக்கு இல்லையோبِهٖஅதைக் கொண்டுعِلْمٌஅறிவுوَّتَحْسَبُوْنَهٗஅதை கருதுகிறீர்கள்هَيِّنًا ۖமிக இலகுவாக وَّهُوَஅதுவோ இருக்கிறதுعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்عَظِيْمٌ‏மிகப்பெரியதாக
இத் தலக்கவ்னஹூ Bபி அல்ஸினதிகும் வ தகூலூன Bபி அFப்வாஹிகும் மா லய்ஸ லகும் Bபிஹீ 'இல்மு(ன்)வ் வ தஹ்ஸBபூ னஹூ ஹய்யின(ன்)வ் வ ஹுவ 'இன்தல் லாஹி 'அளீம்
இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.
وَلَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا یَكُوْنُ لَنَاۤ اَنْ نَّتَكَلَّمَ بِهٰذَا ۖۗ سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِیْمٌ ۟
وَ لَوْلَاۤவேண்டாமாاِذْ سَمِعْتُمُوْهُஅதை நீங்கள் கேட்டபோதுقُلْتُمْநீங்கள் சொல்லியிருக்கمَّا يَكُوْنُதகாதுلَـنَاۤஎங்களுக்குاَنْ نَّـتَكَلَّمَநாங்கள் பேசுவதுبِهٰذَ اஇதைۖ  سُبْحٰنَكَ هٰذَاஅல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன் / இதுبُهْتَانٌஅபாண்டமான பேச்சுعَظِيْمٌ‏பெரிய
வ லவ் லா இத் ஸமிஃது மூஹு குல்தும் மா யகூனு லனா அன் னதகல்லம Bபிஹாதா ஸுBப்ஹானக ஹாத Bபுஹ்தானுன் 'அளீம்
இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?
یَعِظُكُمُ اللّٰهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖۤ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ
يَعِظُكُمُ اللّٰهُஅல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான்اَنْ تَعُوْدُوْاநீங்கள் மீண்டும் வரக்கூடாது என்றுلِمِثْلِهٖۤஇது போன்றதற்குاَبَدًاஒரு போதும்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‌ۚ‏நம்பிக்கையாளர்களாக
ய'இளுகுமுல் லாஹு அன் த'ஊதூ லிமித்லிஹீ அBபதன் இன் குன்தும் மு'மினீன்
நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.
وَیُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
وَيُبَيِّنُஇன்னும் விவரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمُஉங்களுக்குالْاٰيٰتِ‌ؕவசனங்களைوَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்حَكِيْمٌ‏மகா ஞானவான்
வ யுBபய்யினுல் லாஹு லகுமுல் ஆயாத்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன்.
اِنَّ الَّذِیْنَ یُحِبُّوْنَ اَنْ تَشِیْعَ الْفَاحِشَةُ فِی الَّذِیْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۙ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ يُحِبُّوْنَவிரும்பக்கூடியவர்கள்اَنْ تَشِيْعَபரவுவதைالْفَاحِشَةُஅசிங்கமான செயல்فِى الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களுக்கிடையில்لَهُمْஅவர்களுக்குعَذَابٌதண்டனைاَلِيْمٌۙவலி தரக்கூடியفِى الدُّنْيَاஇம்மையிலும்وَالْاٰخِرَةِ‌ؕமறுமையிலும்وَاللّٰهُஅல்லாஹ்தான்يَعْلَمُஅறிவான்وَاَنْـتُمْநீங்கள்لَا تَعْلَمُوْنَ‏அறியமாட்டீர்கள்
இன்னல் லதீன யுஹிBப்Bபூன அன் தஷீ'அல் Fபாஹிஷது Fபில் லதீன ஆமனூ லஹும் 'அதாBபுன் அலீமுன் Fபித் துன்யா வல் ஆகிரஹ்; வல்லாஹு யஃலமு வ அன்தும் லா தஃலமூன்
எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟۠
وَلَوْلَاஇல்லாதிருந்தால்فَضْلُஅருளும்اللّٰهِஅல்லாஹ்வுடையعَلَيْكُمْஉங்கள் மீதுوَرَحْمَتُهٗஅவனது கருணையும்وَاَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்رَءُوْفٌமிக்க இரக்கமுள்ளவன்رَّحِيْمٌ‏மகா கருணையுள்ளவன்
வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்கும் வ ரஹ்மதுஹூ வ அன்னல் லாஹ ர'ஊFபுர் ரஹீம்
இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையோனாகவும் இருக்கின்றான்.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ وَمَنْ یَّتَّبِعْ خُطُوٰتِ الشَّیْطٰنِ فَاِنَّهٗ یَاْمُرُ بِالْفَحْشَآءِ وَالْمُنْكَرِ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰی مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا ۙ وَّلٰكِنَّ اللّٰهَ یُزَكِّیْ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَتَّبِعُوْاபின்பற்றாதீர்கள்خُطُوٰتِஅடிச்சுவடுகளைالشَّيْطٰنِ‌ ؕஷைத்தானின்وَمَنْயார்يَّتَّبِعْபின்பற்றுகிறானோخُطُوٰتِஅடிச்சுவடுகளைالشَّيْطٰنِஷைத்தானின்فَاِنَّهٗநிச்சயமாக அவன்يَاْمُرُஏவுகிறான்بِالْـفَحْشَآءِஅசிங்கத்தையும்وَالْمُنْكَرِ‌ ؕகெட்டதையும்وَلَوْلَاஇல்லாதிருந்தால்فَضْلُஅருளும்اللّٰهِஅல்லாஹ்வுடையعَلَيْكُمْஉங்கள் மீதுوَرَحْمَتُهٗஅவனது கருணையும்مَا زَكٰىதூய்மை அடைந்திருக்க மாட்டார்مِنْكُمْஉங்களில்مِّنْ اَحَدٍஎவரும்اَبَدًاஒரு போதும்وَّلٰـكِنَّ اللّٰهَஎனினும் அல்லாஹ்يُزَكِّىْபரிசுத்தப்படுத்துகிறான்مَنْ يَّشَآءُ‌ ؕதான் நாடியவரைوَاللّٰهُஅல்லாஹ்سَمِيْعٌநன்கு செவியுறுபவன்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தBபி'ஊ குதுவாதிஷ் ஷய்தான்; வ ம(ன்)ய்-யத்தBபிஃ குதுவாதிஷ் ஷய்தானி Fப இன்னஹூ யாமுரு Bபில்Fபஹ்ஷா'இ வல்முன்கர்; வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்கும் வ ரஹ்மதுஹூ மா Zஜகா மின்கும் மின் அஹதின் அBபத(ன்)வ் வ லாகின்னல் லாஹ யுZஜக்கீ ம(ன்)ய்-யஷா'; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
وَلَا یَاْتَلِ اُولُوا الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ یُّؤْتُوْۤا اُولِی الْقُرْبٰی وَالْمَسٰكِیْنَ وَالْمُهٰجِرِیْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۪ۖ وَلْیَعْفُوْا وَلْیَصْفَحُوْا ؕ اَلَا تُحِبُّوْنَ اَنْ یَّغْفِرَ اللّٰهُ لَكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَلَا يَاْتَلِசத்தியம் செய்ய வேண்டாம்اُولُوا الْـفَضْلِசெல்வம் உடையவர்கள்مِنْكُمْஉங்களில்وَالسَّعَةِஇன்னும் வசதிاَنْ يُّؤْتُوْۤاஅவர்கள் கொடுக்கاُولِى الْقُرْبٰىஉறவினர்களுக்குوَالْمَسٰكِيْنَஇன்னும் வறியவர்களுக்குوَالْمُهٰجِرِيْنَஇன்னும் ஹிஜ்ரா சென்றவர்களுக்குفِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்ۖ  وَلْيَـعْفُوْاஅவர்கள் மன்னிக்கட்டும்وَلْيَـصْفَحُوْا‌ ؕபெருந்தன்மையுடன் விட்டு விடட்டும்اَلَا تُحِبُّوْنَவிரும்ப மாட்டீர்களா?اَنْ يَّغْفِرَமன்னிப்பதைاللّٰهُஅல்லாஹ்لَـكُمْ‌ ؕஉங்களைوَاللّٰهُஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையுடையவன்
வ லா யா'தலி உலுல் Fபள்லி மின்கும் வஸ்ஸ'அதி அய் யு'தூ உலில் குர்Bபா வல்மஸாகீன வல்முஹாஜிரீன Fபீ ஸBபீலில்லாஹி வல்யஃFபூ வல்யஸ்Fபஹூ; அலா துஹிBப்Bபூன அய் யக்Fபிரல் லாஹு லகும்; வல் லாஹு கFபூருர் ரஹீம்
இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.
اِنَّ الَّذِیْنَ یَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۪ وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ يَرْمُوْنَகுற்றம் சுமத்துகிறார்களோالْمُحْصَنٰتِபத்தினிகள்الْغٰفِلٰتِஅறியாத பெண்கள்الْمُؤْمِنٰتِநம்பிக்கைகொண்ட பெண்கள்لُعِنُوْاசபிக்கப்பட்டார்கள்فِى الدُّنْيَاஉலகத்திலும்وَالْاٰخِرَةِமறுமையிலும்وَلَهُمْஇன்னும் அவர்களுக்கு உண்டுعَذَابٌதண்டனைعَظِيْمٌۙ‏பெரிய
இன்னல் லதீன யர்மூனல் முஹ்ஸனாதில் காFபிலாதில் மு'மினாதி லு'இனூ Fபித் துன்யா வல் ஆகிரதி வ லஹும் 'அதாBபுன் 'அளீம்
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
یَّوْمَ تَشْهَدُ عَلَیْهِمْ اَلْسِنَتُهُمْ وَاَیْدِیْهِمْ وَاَرْجُلُهُمْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
يَّوْمَநாளில்تَشْهَدُசாட்சி பகரும்عَلَيْهِمْஅவர்களுக்கு எதிராகاَلْسِنَـتُهُمْஅவர்களது நாவுகளும்وَاَيْدِيْهِمْஅவர்களதுகரங்களும்وَاَرْجُلُهُمْஅவர்களதுகால்களும்بِمَاஎதைكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‏செய்கின்றார்கள்
யவ்ம தஷ்ஹ்ஹது 'அலய்ஹிம் அல்ஸினதுஹும் வ அய்தீஹிம் வ அர்ஜுலுஹும் Bபிமா கானூ யஃமலூன்
அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.
یَوْمَىِٕذٍ یُّوَفِّیْهِمُ اللّٰهُ دِیْنَهُمُ الْحَقَّ وَیَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ الْمُبِیْنُ ۟
يَوْمَٮِٕذٍஅந்நாளில்يُّوَفِّيْهِمُஅவர்களுக்கு முழுமையாக தருவான்اللّٰهُஅல்லாஹ்دِيْنَهُمُஅவர்களுடைய கூலியைالْحَـقَّஉண்மையானوَيَعْلَمُوْنَஇன்னும் அவர்கள் அறிந்து கொள்வார்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்தான்هُوَ الْحَـقُّஉண்மையானவன்الْمُبِيْنُ‏தெளிவானவன்
யவ்ம'இதி(ன்)ய் யுவFப் Fபீஹிமுல் லாஹு தீனஹுமுல் ஹக்க வ யஃலமூன அன்னல் லாஹ ஹுவல் ஹக்குல் முBபீன்
அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்குரிய நியாயமான கூலியை, அவர்களுக்குப் பூரணமாகக் கொடுப்பான்; இன்னும் அல்லாஹ் தான் “பிரத்தியட்சமான உண்மை(யாளன்) என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
اَلْخَبِیْثٰتُ لِلْخَبِیْثِیْنَ وَالْخَبِیْثُوْنَ لِلْخَبِیْثٰتِ ۚ وَالطَّیِّبٰتُ لِلطَّیِّبِیْنَ وَالطَّیِّبُوْنَ لِلطَّیِّبٰتِ ۚ اُولٰٓىِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا یَقُوْلُوْنَ ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟۠
اَلْخَبِيْثٰتُகெட்ட சொற்கள்لِلْخَبِيْثِيْنَகெட்டவர்களுக்கு உரியனوَالْخَبِيْثُوْنَஇன்னும் கெட்டவர்கள்لِلْخَبِيْثٰتِ‌ۚகெட்ட சொற்களுக்கு உரியவர்கள்وَالطَّيِّبٰتُஇன்னும் நல்ல சொற்கள்لِلطَّيِّبِيْنَநல்லவர்களுக்கு உரியனوَالطَّيِّبُوْنَஇன்னும் நல்லவர்கள்لِلطَّيِّبٰتِ‌ۚநல்ல சொற்களுக்கு உரியவர்கள்اُولٰٓٮِٕكَஅவர்கள்مُبَرَّءُوْنَநீக்கப்பட்டவர்கள்مِمَّا يَقُوْلُوْنَ‌ؕஇவர்கள் சொல்வதிலிருந்துلَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்பும்وَّرِزْقٌஅருட்கொடையும்كَرِيْمٌ‏கண்ணியமான
அல் கBபீதாது லில் கBபீதீன வல் கBபீதூன லில் கBபீதாதி வத் தய்யிBபாது லித் தய்யிBபீன வத் தய்யிBபூன லித் தய்யிBபாத்; உலா'இக முBபர்ர'ஊன மிம்ம யகூலூன லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُیُوْتًا غَیْرَ بُیُوْتِكُمْ حَتّٰی تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰۤی اَهْلِهَا ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَدْخُلُوْاநீங்கள் நுழையாதீர்கள்بُيُوْتًاவீடுகளில்غَيْرَ بُيُوْتِكُمْஉங்கள் வீடுகள் அல்லாதحَتّٰىவரைتَسْتَاْنِسُوْاநீங்கள் அனுமதி பெறுகின்றوَتُسَلِّمُوْاஇன்னும் நீங்கள் ஸலாம் கூறிعَلٰٓى اَهْلِهَا ؕஅவ்வீட்டார்களுக்குذٰ لِكُمْஅதுதான்خَيْرٌசிறந்ததுلَّـكُمْஉங்களுக்குلَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்குலூ Bபுயூதன் கய்ர Bபுயூதிகும் ஹத்தா தஸ்தானிஸூ வ துஸல்லிமூ 'அலா அஹ்லிஹா; தாலிகும் கய்ருல் லகும் ல'அல்லகும் ததக்கரூன்
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
فَاِنْ لَّمْ تَجِدُوْا فِیْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰی یُؤْذَنَ لَكُمْ ۚ وَاِنْ قِیْلَ لَكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا هُوَ اَزْكٰی لَكُمْ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِیْمٌ ۟
فَاِنْ لَّمْ تَجِدُوْاநீங்கள் காணவில்லையெனில்فِيْهَاۤஅவற்றில்اَحَدًاஒருவரையும்فَلَا تَدْخُلُوْهَاஅவற்றில் நீங்கள் நுழையாதீர்கள்حَتّٰى يُؤْذَنَஅனுமதி கொடுக்கப்படுகின்ற வரைلَـكُمْ‌ۚஉங்களுக்குوَاِنْ قِيْلَசொல்லப்பட்டால்لَـكُمُஉங்களுக்குارْجِعُوْاதிரும்பி விடுங்கள்فَارْجِعُوْا‌ۚதிரும்பி விடுங்கள்هُوَஅதுاَزْكٰىமிக சுத்தமானதுلَـكُمْ‌ؕஉங்களுக்குوَاللّٰهُஅல்லாஹ்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்வதைعَلِيْمٌ‏நன்கறிந்தவன்
Fப இல் லம் தஜிதூ Fபீஹா அஹதன் Fபலா தத்குலூஹா ஹத்தா யு'தன லகும் வ இன் கீல லகுமுர்ஜி'ஊ Fபர்ஜி'ஊ ஹுவ அZஜ்கா லகும்; வல்லாஹு Bபிமா தஃமலூன 'அலீம்
அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், “திரும்பிப் போய் விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.
لَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَدْخُلُوْا بُیُوْتًا غَیْرَ مَسْكُوْنَةٍ فِیْهَا مَتَاعٌ لَّكُمْ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ ۟
لَـيْسَ عَلَيْكُمْஉங்கள் மீது இல்லைجُنَاحٌகுற்றம்اَنْ تَدْخُلُوْاநீங்கள் நுழைவதுبُيُوْتًاவீடுகளில்غَيْرَ مَسْكُوْنَةٍவசிக்கப்படாதفِيْهَاஅவற்றில்مَتَاعٌபொருள்لَّـكُمْ‌ ؕஉங்களுக்குوَاللّٰهُஅல்லாஹ்يَعْلَمُநன்கறிவான்مَا تُبْدُوْنَநீங்கள்வெளிப்படுத்துவதைوَمَا تَكْتُمُوْنَ‏நீங்கள் மறைப்பதை
லய்ஸ 'அலய்கும் ஜுனாஹுன் அன்ன் தத்குலூ Bபுயூதன் கய்ர மஸ்கூனதின் Fபீஹா மதா'உல் லகும்; வல்லாஹு யஃலமு மா துBப்தூன வமா தக்துமூன்
(எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; மேலும் அல்லாஹ் நீங்கள் பகிரங்கமாக செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நன்கறிவான்.
قُلْ لِّلْمُؤْمِنِیْنَ یَغُضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَیَحْفَظُوْا فُرُوْجَهُمْ ؕ ذٰلِكَ اَزْكٰی لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا یَصْنَعُوْنَ ۟
قُلْகூறுங்கள்لِّـلْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களுக்குيَغُـضُّوْاஅவர்கள் தடுத்துக் கொள்ளட்டும்مِنْ اَبْصَارِهِمْதங்கள் பார்வைகளைوَيَحْفَظُوْاஇன்னும் அவர்கள் பாதுகாத்துக் கொள்ளட்டும்فُرُوْجَهُمْ‌ ؕதங்கள் மறைவிடங்களைذٰ لِكَஅதுاَزْكٰىமிக சுத்தமானதுلَهُمْ‌ ؕஅவர்களுக்குاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்خَبِيْرٌۢஆழ்ந்தறிந்தவன்بِمَا يَصْنَـعُوْنَ‏அவர்கள் செய்வதை
குல் லில்மு' மினீன யகுஉள்ளூ மின் அBப்ஸாரிஹிம் வ யஹ்Fபளூ Fபுரூஜஹும்; தாலிக அZஜ்கா லஹும்; இன்னல்லாஹ கBபீரும் Bபிமா யஸ்ன'ஊன்
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
وَقُلْ لِّلْمُؤْمِنٰتِ یَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَیَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا یُبْدِیْنَ زِیْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْیَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰی جُیُوْبِهِنَّ ۪ وَلَا یُبْدِیْنَ زِیْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآىِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآىِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِیْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِیْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآىِٕهِنَّ اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُهُنَّ اَوِ التّٰبِعِیْنَ غَیْرِ اُولِی الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِیْنَ لَمْ یَظْهَرُوْا عَلٰی عَوْرٰتِ النِّسَآءِ ۪ وَلَا یَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِیُعْلَمَ مَا یُخْفِیْنَ مِنْ زِیْنَتِهِنَّ ؕ وَتُوْبُوْۤا اِلَی اللّٰهِ جَمِیْعًا اَیُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
وَقُلْகூறுங்கள்لِّـلْمُؤْمِنٰتِநம்பிக்கை கொண்ட பெண்களுக்குيَغْضُضْنَஅவர்கள் தடுத்துக் கொள்ளட்டும்مِنْ اَبْصَارِபார்வைகளைهِنَّதங்கள்وَيَحْفَظْنَஇன்னும் அவர்கள் பாதுகாத்துக் கொள்ளட்டும்فُرُوْجَهُنَّதங்கள் மறைவிடங்களைوَلَا يُبْدِيْنَஇன்னும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்زِيْنَتَهُنَّதங்கள் அலங்காரங்களைاِلَّا مَا ظَهَرَவெளியில் தெரிபவற்றை தவிரمِنْهَا‌அதிலிருந்துوَلْيَـضْرِبْنَஇன்னும் அவர்கள் போர்த்திக் கொள்ளட்டும்بِخُمُرِهِنَّதங்கள் முந்தானைகளைعَلٰى جُيُوْبِهِنَّ‌தங்கள் நெஞ்சுப் பகுதிகள் மீதுوَلَا يُبْدِيْنَஇன்னும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்زِيْنَتَهُنَّதங்கள் அலங்காரங்களைاِلَّا لِبُعُوْلَتِهِنَّதங்கள் கணவர்களுக்கு தவிரاَوْஅல்லதுاٰبَآٮِٕهِنَّதங்கள்தந்தைகளுக்குاَوْஅல்லதுاٰبَآءِதந்தைகளுக்குبُعُوْلَتِهِنَّதங்கள் கணவர்களின்اَوْஅல்லதுاَبْنَآٮِٕهِنَّதங்கள் ஆண் பிள்ளைகளுக்குاَوْஅல்லதுاَبْنَآءِஆண் பிள்ளைகளுக்குبُعُوْلَتِهِنَّதங்கள் கணவர்களின்اَوْஅல்லதுاِخْوَانِهِنَّதங்கள் சகோதரர்களுக்குاَوْஅல்லதுبَنِىْۤஆண் பிள்ளைகளுக்குاِخْوَانِهِنَّதங்கள் சகோதரர்களின்اَوْஅல்லதுبَنِىْۤஆண் பிள்ளைகளுக்குاَخَوٰتِهِنَّதங்கள் சகோதரிகளின்اَوْஅல்லதுنِسَآٮِٕهِنَّதங்கள் பெண்களுக்குاَوْ مَا مَلَـكَتْஅல்லது/சொந்தமாக்கியவர்களுக்குاَيْمَانُهُنَّதங்கள் வலக்கரங்கள்اَوِஅல்லதுالتّٰبِعِيْنَபணியாளர்களுக்குغَيْرِ اُولِى الْاِرْبَةِஆசையில்லாதمِنَ الرِّجَالِஆண்களில்اَوِஅல்லதுالطِّفْلِசிறுவர்களுக்குالَّذِيْنَ لَمْ يَظْهَرُوْاஎவர்கள்/அறிவில்லைعَلٰى عَوْرٰتِமறைவிடங்களைالنِّسَآءِ‌பெண்களின்وَلَا يَضْرِبْنَஇன்னும் அவர்கள் தட்டி நடக்க வேண்டாம்بِاَرْجُلِهِنَّதங்கள் கால்களைلِيُـعْلَمَஅறியப்படுவதற்காகمَاஎதைيُخْفِيْنَமறைக்கின்றனர்مِنْ زِيْنَتِهِنَّ‌ ؕதங்கள் அலங்காரங்களைوَتُوْبُوْۤاஇன்னும் பாவமன்னிப்பு கோருங்கள்اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்جَمِيْعًاஅனைத்திற்கும்اَيُّهَ الْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்களேلَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏நீங்கள் வெற்றி பெறுவதற்காக
வ குல் லில்மு'மினாதி யக்ளுள்ன மின் அBப்ஸாரிஹின்ன வ யஹ்Fபள்ன Fபுரூஜஹுன்ன வலா யுBப்தீன Zஜீனதஹுன்ன இல்லா மா ளஹர மின்ஹா வல் யள்ரிBப்ன Bபிகுமுரிஹின்ன 'அலா ஜுயூBபிஹின்ன வலா யுBப்தீன Zஜீனதஹுன்ன இல்லா லிBபு'ஊலதிஹின்ன அவ் ஆBபா'இ ஹின்ன அவ் ஆBபா'இ Bபு'ஊலதி ஹின்ன அவ் அBப்னா'இஹின்ன அவ் அBப்னா'இ Bபு'ஊலதிஹின்ன்ன அவ் இக்வானிஹின்ன்ன அவ் Bபனீ இக்வானிஹின்ன அவ் Bபனீ அகவாதிஹின்ன அவ் னிஸா'இ ஹின்ன அவ் மா மலகத் அய்மானுஹுன்ன அவித் தாBபி'ஈன கய்ரி இலில் இர்Bபதி மினர் ரிஜாலி அவித் திFப்லில்லதீன லம் யள்ஹரூ 'அலா 'அவ்ராதின் னிஸா'இ வல யள்ரிBப்ன்ன Bபி அர்ஜுலிஹின்ன லியுஃலம மா யுக்Fபீன மின் Zஜீனதிஹின்ன்; வ தூBபூ இலல்லாஹி ஜம்மீ'அன் அய்யுஹல் மு'மினூன ல'அல்லகும் துFப்லிஹூன்
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
وَاَنْكِحُوا الْاَیَامٰی مِنْكُمْ وَالصّٰلِحِیْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآىِٕكُمْ ؕ اِنْ یَّكُوْنُوْا فُقَرَآءَ یُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
وَاَنْكِحُواநீங்கள் திருமணம் செய்து வையுங்கள்الْاَيَامٰىஜோடி இல்லாதவர்களுக்குمِنْكُمْஉங்களில்وَالصّٰلِحِيْنَநல்லவர்களுக்குمِنْ عِبَادِஆண் அடிமைகளிலும்كُمْஉங்கள்وَاِمَآٮِٕكُمْ‌ ؕஉங்கள் பெண் அடிமைகளிலும்اِنْ يَّكُوْنُوْاஅவர்கள் இருந்தால்فُقَرَآءَஏழைகளாகيُغْنِهِمُஅவர்களை நிறைவுறச் செய்வான்اللّٰهُஅல்லாஹ்مِنْ فَضْلِهٖ‌ ؕதனது அருளால்وَاللّٰهُஅல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
வ அன்கிஹுல் அயாமா மின்கும் வஸ் ஸாலிஹீன மின் 'இBபாளிகும் வ இமா'இகும்; இ(ன்)ய்-யகூனூ Fபுகரா'அ யுக்னி ஹிமுல் லாஹு மின் Fபத்லிஹ்; வல் லாஹு வாஸி'உன் 'அலீம்
இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
وَلْیَسْتَعْفِفِ الَّذِیْنَ لَا یَجِدُوْنَ نِكَاحًا حَتّٰی یُغْنِیَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَالَّذِیْنَ یَبْتَغُوْنَ الْكِتٰبَ مِمَّا مَلَكَتْ اَیْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِیْهِمْ خَیْرًا ۖۗ وَّاٰتُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِیْۤ اٰتٰىكُمْ ؕ وَلَا تُكْرِهُوْا فَتَیٰتِكُمْ عَلَی الْبِغَآءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّتَبْتَغُوْا عَرَضَ الْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَمَنْ یُّكْرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنْ بَعْدِ اِكْرَاهِهِنَّ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَلْيَسْتَعْفِفِஒழுக்கமாக இருக்கட்டும்الَّذِيْنَ لَا يَجِدُوْنَவசதி பெறாதவர்கள்نِكَاحًاதிருமணத்திற்குحَتّٰىவரைيُغْنِيَهُمُஅவர்களை நிறைவு செய்கிறاللّٰهُஅல்லாஹ்مِنْ فَضْلِهٖ‌ؕதன் அருளால்وَالَّذِيْنَ يَبْتَغُوْنَஇன்னும் விரும்புபவர்கள்الْـكِتٰبَபத்திரம் எழுதிடمِمَّا مَلَـكَتْசொந்தமாக்கிக் கொண்டவர்களில்اَيْمَانُكُمْஉங்கள் வலக்கரங்கள்فَكَاتِبُوْஎழுதிக் கொடுங்கள்هُمْஅவர்களுக்குاِنْ عَلِمْتُمْநீங்கள் அறிந்தால்فِيْهِمْஅவர்களில்خَيْرًاநன்மையைۖ  وَّاٰ تُوْஇன்னும் கொடுங்கள்هُمْஅவர்களுக்குمِّنْ مَّالِசெல்வத்திலிருந்துاللّٰهِஅல்லாஹ்வின்الَّذِىْۤஎது اٰتٰٮكُمْ ؕஉங்களுக்கு கொடுத்தான்وَلَا تُكْرِهُوْاநிர்ப்பந்திக்காதீர்கள்فَتَيٰتِكُمْஉங்கள் பெண் அடிமைகளைعَلَى الْبِغَآءِவிபச்சாரத்தில்اِنْ اَرَدْنَவிரும்பினால்تَحَصُّنًاபத்தினித்தனத்தைلِّـتَبْتَغُوْاநீ விரும்பியதற்காகعَرَضَபொருளைالْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕஉலக வாழ்க்கையின்وَمَنْயார்يُّكْرِهْهُّنَّஅவர்களை நிர்ப்பந்திப்பாரோفَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்مِنْۢ بَعْدِபின்னர்اِكْرَاهِهِنَّஅவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டغَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏கருணை காட்டுபவன்
வல் யஸ்தஃFபிFபில் லதீன லா யஜிதூன னிகாஹன் ஹத்தா யுக்னியஹுமுல் லாஹு மின் Fபள்லிஹ்; வல்லதீன யBப்தகூனல் கிதாBப மிம்மா மலகத் அய்மானுகும் FபகாதிBபூஹும் இன் 'அலிம்தும் Fபீஹிம் கய்ர(ன்)வ் வ ஆதூஹும் மிம்மாலில் லாஹில் லதீ ஆதாகும்; வலா துக்ரிஹூ Fபதயாதிகும் 'அலல் Bபிகா'இ இன் அரத்ன தஹஸ்ஸுனல் லிதBப்தகூ 'அரளல் ஹயாதித் துன்யா; வ மய் யுக்ரிஹ்ஹுன்ன Fப இன்னல் லாஹ மிம் Bபஃதி இக்ராஹிஹின்ன கFபூருர் ரஹீம்
விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
وَلَقَدْ اَنْزَلْنَاۤ اِلَیْكُمْ اٰیٰتٍ مُّبَیِّنٰتٍ وَّمَثَلًا مِّنَ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟۠
وَلَقَدْதிட்டவட்டமாகاَنْزَلْنَاۤஇறக்கியுள்ளோம்اِلَيْكُمْஉங்களுக்குاٰيٰتٍவசனங்களைمُّبَيِّنٰتٍதெளிவானوَّمَثَلًاஉதாரணத்தையும்مِّنَ الَّذِيْنَ خَلَوْاசென்றவர்களின்مِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னர்وَمَوْعِظَةًஉபதேசத்தையும்لِّـلْمُتَّقِيْنَ‏இறையச்சமுள்ளவர்களுக்கு
வ லகத் அன்Zஜல்னா இலய்கும் ஆயாதிம் முBபய்யினாதி(ன்)வ் வ மதலம் மின்னல் லதீன கலவ் மின் கBப்லிகும் வ மவ்'இளதல் லில்முத்தகீன்
இன்னும் நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்.
اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِیْهَا مِصْبَاحٌ ؕ اَلْمِصْبَاحُ فِیْ زُجَاجَةٍ ؕ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّیٌّ یُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰرَكَةٍ زَیْتُوْنَةٍ لَّا شَرْقِیَّةٍ وَّلَا غَرْبِیَّةٍ ۙ یَّكَادُ زَیْتُهَا یُضِیْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ ؕ نُوْرٌ عَلٰی نُوْرٍ ؕ یَهْدِی اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ یَّشَآءُ ؕ وَیَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟ۙ
اَللّٰهُஅல்லாஹ்نُوْرُஒளிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ ؕமற்றும் பூமிمَثَلُதன்மையாவதுنُوْرِهٖஒளியின்كَمِشْكٰوةٍஒரு மாடத்தைப் போன்றாகும்فِيْهَاஅதில்مِصْبَاحٌ‌ ؕஒரு விளக்கு உள்ளதுالْمِصْبَاحُஅந்த விளக்குفِىْ زُجَاجَةٍ‌ ؕகண்ணாடியில் உள்ளதுاَلزُّجَاجَةُஅந்த கண்ணாடிكَاَنَّهَاஅதைப் போல் உள்ளதுكَوْكَبٌஒரு நட்சத்திரம்دُرِّىٌّமின்னக்கூடியيُّوْقَدُஎரிக்கப்படுகிறதுمِنْஇருந்துشَجَرَةٍமரத்தில்مُّبٰـرَكَةٍஅருள் நிறைந்தزَيْتُوْنَةٍஆலிவ் என்னும்لَّا شَرْقِيَّةٍகிழக்கிலும் அல்லாதوَّلَا غَرْبِيَّةٍ ۙமேற்கிலும் அல்லாதيَّـكَادُஆரம்பித்து விடுகிறதுزَيْتُهَاஅதன் எண்ணெய்يُضِىْٓءُஒளிர்கிறதுوَلَوْ لَمْ تَمْسَسْهُஅதன் மீது படவில்லைنَارٌ‌ ؕதீنُوْرٌஒளிعَلٰىமேல்نُوْرٍ‌ ؕஒளிக்குيَهْدِىநேர்வழி காட்டுகிறான்اللّٰهُஅல்லாஹ்لِنُوْرِهٖதன் ஒளிக்குمَنْதான்يَّشَآءُ‌ ؕநாடியவர்களுக்குوَ يَضْرِبُஇன்னும் விவரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்الْاَمْثَالَஉதாரணங்களைلِلنَّاسِ‌ؕமக்களுக்குوَاللّٰهُஅல்லாஹ்بِكُلِّ شَىْءٍஅனைத்தையும்عَلِيْمٌ ۙ‏நன்கறிந்தவன்
அல்லாஹு னூருஸ் ஸமாவாதி வல் அர்ள்; மதலு னூரிஹீ கமிஷ்காதின் Fபீஹா மிஸ்Bபாஹ்; அல்மிஸ்Bபாஹு Fபீ Zஜுஜாஜதின் அZஜ்Zஜுஜாஜது க அன்னஹா கவ்கBபுன் துர்ரிய்யு(ன்)ய் யூகது மின் ஷஜரதிம் முBபாரகதின் Zஜய்தூனதில் லா ஷரிகிய்யதி(ன்)வ் வலா கர்Bபிய்யதி(ன்)ய் யகாது Zஜய்துஹா யுளீ'உ வ லவ் லம் தம்ஸஷு னார்; னூருன் 'அலா னூர்; யஹ்தில் லாஹு லினூரிஹீ மய் யஷா'; வ யள்ரிBபுல் லாஹுல் அம்தால லின்னாஸ்; வல்லாஹு Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
فِیْ بُیُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَیُذْكَرَ فِیْهَا اسْمُهٗ ۙ یُسَبِّحُ لَهٗ فِیْهَا بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۟ۙ
فِىْ بُيُوْتٍஇறை இல்லங்களில்اَذِنَஅனுமதித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்اَنْ تُرْفَعَஅவை உயர்த்திக் கட்டப்படுவதற்குوَيُذْكَرَஇன்னும் நினைவு கூறப்படுவதற்கும்فِيْهَاஅவற்றில்اسْمُهٗۙஅவனது திருப்பெயர்يُسَبِّحُதுதிக்கின்றனர்لَهٗஅவனைفِيْهَاஅவற்றில்بِالْغُدُوِّகாலையிலும்وَالْاٰصَالِۙ‏மாலையிலும்
Fபீ Bபுயூதின் அதினல் லாஹு அன் துர்Fப'அ வ யுத்கர Fபீஹஸ்முஹூ யுஸBப்Bபிஹு லஹூ Fபீஹா Bபில்குதுவ்வி வல் ஆஸால்
இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
رِجَالٌ ۙ لَّا تُلْهِیْهِمْ تِجَارَةٌ وَّلَا بَیْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَاِیْتَآءِ الزَّكٰوةِ یَخَافُوْنَ یَوْمًا تَتَقَلَّبُ فِیْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۟ۗۙ
رِجَالٌ ۙபல ஆண்கள்لَّا تُلْهِيْهِمْஅவர்களை திசை திருப்பி விடாதுتِجَارَةٌவர்த்தகமோوَّلَا بَيْعٌவிற்பனையோعَنْ ذِكْرِநினைவை விட்டும்اللّٰهِஅல்லாஹ்வின்وَاِقَامِஇன்னும் நிலைநிறுத்துவதைالصَّلٰوةِதொழுகையைوَ اِيْتَآءِ الزَّكٰوةِ‌ ۙஇன்னும் அல்லாஹ்விற்கு தூய்மையாக செய்வதைيَخَافُوْنَஅவர்கள் பயப்படுவார்கள்يَوْمًاஒரு நாளைتَتَقَلَّبُதடுமாறும்فِيْهِஅதில்الْقُلُوْبُஉள்ளங்களும்وَالْاَبْصَارُ ۙ‏பார்வைகளும்
ரிஜாலுல் லா துல்ஹீஹிம் திஜாரது(ன்)வ் வலா Bபய்'உன் 'அன் திக்ரில் லாஹி வ இகாமிஸ் ஸலாதி வ ஈதா'இZஜ் Zஜகாதி யகாFபூன யவ்மன் ததகல்லBபு Fபீஹில் குலூBபு வல் அBப்ஸார்
(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
لِیَجْزِیَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا عَمِلُوْا وَیَزِیْدَهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ وَاللّٰهُ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟
لِيَجْزِيَهُمُகூலி வழங்குவதற்காகاللّٰهُஅல்லாஹ்اَحْسَنَமிக அழகியவற்றுக்குمَا عَمِلُوْاஅவர்கள் செய்ததில்وَيَزِيْدَமேலும் அதிகப்படுத்துவதற்காகهُمْஅவர்களுக்குمِّنْ فَضْلِهٖ‌ؕதனது அருளிலிருந்துوَاللّٰهُஅல்லாஹ்يَرْزُقُவழங்குகிறான்مَنْ يَّشَآءُதான் நாடியவருக்குبِغَيْرِ حِسَابٍ‏கணக்கின்றி
லியஜ்Zஜியஹுமுல் லாஹு அஹ்ஸன மா 'அமிலூ வ யZஜீதஹும் மின் Fபள்லிஹ்; வல் லாஹு யர்Zஜுகு மய் யஷா'உ Bபிகய்ரி ஹிஸாBப்
அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.
وَالَّذِیْنَ كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍۭ بِقِیْعَةٍ یَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً ؕ حَتّٰۤی اِذَا جَآءَهٗ لَمْ یَجِدْهُ شَیْـًٔا وَّوَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰىهُ حِسَابَهٗ ؕ وَاللّٰهُ سَرِیْعُ الْحِسَابِ ۟ۙ
وَالَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரிப்பாளர்கள்اَعْمَالُهُمْஅவர்களுடைய செயல்கள்كَسَرَابٍۢகானல்நீர் போலாகும்بِقِيْعَةٍவெட்ட வெளியில்يَّحْسَبُهُஅதை எண்ணுகிறார்الظَّمْاٰنُதாகித்தவன்مَآءً ؕதண்ணீராகحَتّٰۤىஇறுதியாகاِذَا جَآءَهٗஅதனிடம் அவர் வந்தால்لَمْ يَجِدْهُஅதை காணமாட்டார்شَيْــٴًـــاஏதும்وَّ وَجَدَகாண்பார்اللّٰهَஅல்லாஹ்வைعِنْدَهٗஅதனிடம்فَوَفّٰٮهُஅவன் அவருக்கு நிறைவேற்றுவான்حِسَابَهٗ‌ ؕஅவருடைய கணக்கைوَاللّٰهُஅல்லாஹ்سَرِيْعُமிகத் தீவிரமானவன்الْحِسَابِ ۙ‏கேள்வி கணக்கு கேட்பதில்
வல்லதீன கFபரூ அஃமாலுஹும் கஸராBபிம் Bபிகீ'அதி(ன்)ய் யஹ்ஸBபுஹுள் ளமானு மா'அன் ஹத்தா இதா ஜா'அஹூ லம் யஜித் ஹு ஷய்'அ(ன்)வ் வ வஜதல் லாஹ 'இன்தஹூ Fப வFப்Fபாஹு ஹிஸாBபஹ்; வல்லாஹு ஸரீ'உல் ஹிஸாBப்
அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.
اَوْ كَظُلُمٰتٍ فِیْ بَحْرٍ لُّجِّیٍّ یَّغْشٰىهُ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ سَحَابٌ ؕ ظُلُمٰتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ ؕ اِذَاۤ اَخْرَجَ یَدَهٗ لَمْ یَكَدْ یَرٰىهَا ؕ وَمَنْ لَّمْ یَجْعَلِ اللّٰهُ لَهٗ نُوْرًا فَمَا لَهٗ مِنْ نُّوْرٍ ۟۠
اَوْஅல்லதுكَظُلُمٰتٍஇருள்களைப் போலாகும்فِىْ بَحْرٍகடலில் உள்ளلُّـجّـِىٍّஆழமானيَّغْشٰٮهُஅதை சூழ்ந்திருக்கمَوْجٌ مِّنْ فَوْقِهٖஅலை / மேல்مَوْجٌஅதன் அலைمِّنْ فَوْقِهٖஅதற்கு மேல்سَحَابٌ‌ؕமேகம்ظُلُمٰتٌۢஇருள்கள்بَعْضُهَاஅவற்றில் சிலفَوْقَமேலாகبَعْضٍؕசிலவற்றுக்குاِذَاۤ اَخْرَجَஅவன் வெளியே நீட்டினால்يَدَهٗதனது கையைلَمْ يَكَدْ يَرٰٮهَا‌ؕஅதை அவனால் பார்க்க முடியாதுوَمَنْயாருக்குلَّمْ يَجْعَلِஏற்படுத்தவில்லையோاللّٰهُஅல்லாஹ்لَهٗஅவருக்குنُوْرًاஒளியைفَمَاஇல்லைلَهٗஅவருக்குمِنْ نُّوْرٍ‏ஒளியும்
அவ் களுலுமாதின் Fபீ Bபஹ்ரில் லுஜ்ஜிய்யி(ன்)ய் யக்'ஷாஹு மவ்ஜுன் மின் Fபவ்கிஹீ மவ்ஜுன் மின் Fபவ்கிஹீ ஸஹாBப்; ளுலுமதுன் Bபஃளுஹா Fபவ்க Bபஃளின் இதா அக்ரஜ யதஹூ லம் யகத் யராஹா வ மன் லம் யஜ்'அலில் லாஹு லஹூ னூரன் Fபமா லஹூ மின் னூர்
அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُسَبِّحُ لَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالطَّیْرُ صٰٓفّٰتٍ ؕ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِیْحَهٗ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِمَا یَفْعَلُوْنَ ۟
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்வைيُسَبِّحُதுதிக்கின்றனர்لَهٗஅவனைمَنْ فِى السَّمٰوٰتِவானத்தில் உள்ளவர்களும்وَالْاَرْضِஇன்னும் பூமியில்وَالطَّيْرُபறவைகளும்صٰٓفّٰتٍ‌ؕவரிசையாக பறக்கின்றكُلٌّஒவ்வொருவரும்قَدْதிட்டமாகعَلِمَஅறிந்துள்ளனர்صَلَاتَهٗஅவனை தொழுவதையும்وَتَسْبِيْحَهٗ‌ؕஅவனை துதிப்பதையும்وَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِمَا يَفْعَلُوْنَ‏அவர்கள் செய்வதை
அலம் தர அன்னல் லாஹ யுஸBப்Bபிஹு லஹூ மன் Fபிஸ்ஸமாவாதி வல் அர்ளி வத் தய்ரு ஸாFப்Fபாதிம் குல்லுன் கத் 'அலிம ஸலாதஹூ வ தஸ்Bபீஹஹ்; வல்லாஹு 'அலீமும் Bபிமா யFப்'அலூன்
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ وَاِلَی اللّٰهِ الْمَصِیْرُ ۟
وَلِلّٰهِஅல்லாஹ்விற்கேمُلْكُஆட்சி உரியதுالسَّمٰوٰتِவானங்களின்وَالْاَرْضِ‌ۚஇன்னும் பூமியின்وَاِلَىபக்கமேاللّٰهِஅல்லாஹ்வின்الْمَصِيْرُ‏மீளுமிடம்
வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வ இலல் லாஹில் மஸீர்
இன்னும் வானங்களுடையவும் பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்விடமே இருக்கிறது; அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது.
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُزْجِیْ سَحَابًا ثُمَّ یُؤَلِّفُ بَیْنَهٗ ثُمَّ یَجْعَلُهٗ رُكَامًا فَتَرَی الْوَدْقَ یَخْرُجُ مِنْ خِلٰلِهٖ ۚ وَیُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنْ جِبَالٍ فِیْهَا مِنْ بَرَدٍ فَیُصِیْبُ بِهٖ مَنْ یَّشَآءُ وَیَصْرِفُهٗ عَنْ مَّنْ یَّشَآءُ ؕ یَكَادُ سَنَا بَرْقِهٖ یَذْهَبُ بِالْاَبْصَارِ ۟ؕ
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يُزْجِىْஓட்டிவருகிறான்سَحَابًاமேகங்களைثُمَّபிறகுيُؤَلِّفُஇணைக்கிறான்بَيْنَهٗஅவற்றுக்கு இடையில்ثُمَّபிறகுيَجْعَلُهٗஅவற்றை ஆக்குகிறான்رُكَامًاஒன்றிணைக்கப்பட்டதாகفَتَرَىஆகவே பார்க்கிறீர்الْوَدْقَமழைيَخْرُجُவெளிவருவதைمِنْ خِلٰلِهٖ‌ۚஅவற்றுக்கு இடையிலிருந்துوَيُنَزِّلُஅவன் இறக்குகிறான்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துمِنْ جِبَالٍமலைகளில்فِيْهَاஅதில் உள்ளمِنْۢ بَرَدٍபனியிலிருந்துفَيُـصِيْبُஅவன் தண்டிக்கிறான்بِهٖஅதன் மூலம்مَنْ يَّشَآءُதான் நாடியவரைوَ يَصْرِفُهٗஇன்னும் அதை திருப்பிவிடுகிறான்عَنْவிட்டும்مَّنْ يَّشَآءُ‌ ؕதான் நாடியவரைيَكَادُ سَنَاகடுமையான வெளிச்சம் ஆரம்பித்து விடுகிறதுبَرْقِهٖஅதன் மின்னலின்يَذْهَبُபறித்துவிடும்بِالْاَبْصَارِؕ‏பார்வைகளை
அலம் தர அன்னல் லாஹ யுZஜ்ஜீ ஸஹாBபன் தும்ம யு'அல்லிFபு Bபய்னஹூ தும்ம யஜ்'அலுஹூ ருகாமன் Fபதரல் வத்க யக்ருஜு மின் கிலாலிஹீ வ யுனZஜ்Zஜிலு மினஸ் ஸமா'இ மின் ஜிBபாலின் Fபீஹா மிம் Bபரதின் Fப யுஸீBபு Bபிஹீ மய் யஷா'உ வ யஸ்ரிFபுஹூ 'அம் மய் யஷா'உ யக்காது ஸனா Bபர்கிஹீ யத்ஹBபு Bபில் அBப்ஸார்
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.
یُقَلِّبُ اللّٰهُ الَّیْلَ وَالنَّهَارَ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِی الْاَبْصَارِ ۟
يُقَلِّبُமாற்றுகிறான்اللّٰهُஅல்லாஹ்الَّيْلَ وَالنَّهَارَ‌ ؕஇரவு இன்னும் பகலைاِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇவற்றில்لَعِبْرَةًபடிப்பினை இருக்கிறதுلِّاُولِى الْاَبْصَارِ‏அறிவுடையவர்களுக்கு
யுகல்லிBபுல் லாஹுல் லய்ல வன்னஹார்; இன்ன Fபீ தாலிக ல'இBப்ரதல் லி உலில் அBப்ஸார்
இரவையும் பகலையும் அல்லாஹ்வே மாறி மாறி வரச் செய்கிறான்; நிச்சயமாக சிந்தனையுடையவர்களுக்கு இதில் (தக்க) படிப்பினை இருக்கிறது.
وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّنْ مَّآءٍ ۚ فَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰی بَطْنِهٖ ۚ وَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰی رِجْلَیْنِ ۚ وَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰۤی اَرْبَعٍ ؕ یَخْلُقُ اللّٰهُ مَا یَشَآءُ ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
وَاللّٰهُஅல்லாஹ்خَلَقَபடைத்தான்كُلَّஎல்லாدَآبَّةٍஉயிரினங்களையும்مِّنْ مَّآءٍதண்ணீரிலிருந்துۚفَمِنْهُمْஅவர்களில் உண்டுمَّنْ يَّمْشِىْநடப்பவையும்عَلٰى بَطْنِهٖ‌ۚதனது வயிற்றின் மீதுوَمِنْهُمْஅவர்களில் உண்டுمَّنْ يَّمْشِىْநடப்பவையும்عَلٰى رِجْلَيْنِஇரண்டு கால்கள் மீதுوَمِنْهُمْஅவர்களில் உண்டுمَّنْ يَّمْشِىْநடப்பவையும்عَلٰٓى اَرْبَعٍ‌ؕநான்கு கால்கள் மீதுيَخْلُقُபடைக்கிறான்اللّٰهُஅல்லாஹ்مَا يَشَآءُ‌ؕதான் நாடியதைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதும்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
வல்லாஹு கலக குல்ல தாBப்Bபதிம் மிம் மா'இன் Fபமின்ஹும் மய் யம்ஷீ 'அலா Bபத்னிஹீ வ மின்ஹும் மய் யம்ஷீ 'அலா ரிஜ்லய்னீ வ மின்ஹும் மய் யம்ஷீ 'அலா அர்Bப'; யக்லுகுல் லாஹு மா யஷா'; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
لَقَدْ اَنْزَلْنَاۤ اٰیٰتٍ مُّبَیِّنٰتٍ ؕ وَاللّٰهُ یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
لَـقَدْதிட்டவட்டமாகاَنْزَلْنَاۤநாம் இறக்கியுள்ளோம்اٰيٰتٍவசனங்களைمُّبَيِّنٰتٍ‌ؕதெளிவானوَ اللّٰهُஅல்லாஹ்يَهْدِىْநேர்வழி காட்டுகிறான்مَنْ يَّشَآءُதான் நாடியவருக்குاِلٰىபக்கம்صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏நேரான பாதையின்
லகத் அன்Zஜல்னா ஆயாதிம் முBபய்யினாத்; வல்லாஹு யஹ்தீ மய் யஷா'உ இலா ஸிராதிம் முஸ்தகீம்
நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்; மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.
وَیَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا ثُمَّ یَتَوَلّٰی فَرِیْقٌ مِّنْهُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ ؕ وَمَاۤ اُولٰٓىِٕكَ بِالْمُؤْمِنِیْنَ ۟
وَيَقُوْلُوْنَகூறுகின்றனர்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வையும்وَبِالرَّسُوْلِதூதரையும்وَاَطَعْنَاகீழ்ப்படிந்தோம்ثُمَّபிறகுيَتَوَلّٰىதிரும்பி விடுகின்றனர்فَرِيْقٌஒரு பிரிவினர்مِّنْهُمْஅவர்களில்مِّنْۢ بَعْدِபின்னர்ذٰلِكَ‌ؕஅதற்குப்وَمَاۤஇல்லைاُولٰٓٮِٕكَஅவர்கள்بِالْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்கள்
வ யகூலூன ஆமன்னா Bபில்லாஹி வ Bபிர் ரஸூலி வ அதஃனா தும்ம யதவல்லா Fபரீகும் மின்ஹும் மிம் Bபஃதி தாலிக்; வ மா உலா'இக Bபில்மு'மினீன்
“அல்லாஹ்வின் மீதும், (இத்)தூதர் மீதும் நாங்கள் ஈமான் கொண்டோம்; (அவர்களுக்குக்) கீழ்படிகிறோம்” என்று சொல்லுகிறார்கள். (ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர் - எனவே, இவர்கள் (உண்மையில்) முஃமின்கள் அல்லர்.
وَاِذَا دُعُوْۤا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ لِیَحْكُمَ بَیْنَهُمْ اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ ۟
وَاِذَا دُعُوْۤاஅவர்கள் அழைக்கப்பட்டால்اِلَىபக்கம்اللّٰهِஅல்லாஹ்وَرَسُوْلِهٖஇன்னும் அவனது தூதரின்لِيَحْكُمَதீர்ப்பளிப்பதற்காகبَيْنَهُمْஅவர்களுக்கிடையில்اِذَا فَرِيْقٌஅப்போது ஒரு பிரிவினர்مِّنْهُمْஅவர்களில்مُّعْرِضُوْنَ‏புறக்கணிக்கின்றனர்
வ இதா து'ஊ இலல் லாஹி வ ரஸூலிஹீ லி யஹ்கும Bபய்னஹும் இதா Fபரீகும் மின்ஹும் முஃரிளூன்
மேலும் தம்மிடையே (விவகாரம் ஏற்பட்டு, அதுபற்றிய) தீர்ப்புப் பெற அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்களில் ஒரு பிரிவார் (அவ்வழைப்பைப்) புறக்கணிக்கிறார்கள்.
وَاِنْ یَّكُنْ لَّهُمُ الْحَقُّ یَاْتُوْۤا اِلَیْهِ مُذْعِنِیْنَ ۟ؕ
وَاِنْ يَّكُنْஇருந்தால்لَّهُمُஅவர்களுக்கு சாதகமாகالْحَـقُّசத்தியம்يَاْتُوْۤاவருகின்றனர்اِلَيْهِஅவர் பக்கம்مُذْعِنِيْنَؕ‏கட்டுப்பட்டவர்களாக
வ இ(ன்)ய்-யகுல் லஹுமுல் ஹக்கு யாதூ இலய்ஹி முத்'இனீன்
ஆனால், அவர்களின் பக்கம் - உண்மை (நியாயம்) இருக்குமானால், வழி பட்டவர்களாக அவரிடம் வருகிறார்கள்.
اَفِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْۤا اَمْ یَخَافُوْنَ اَنْ یَّحِیْفَ اللّٰهُ عَلَیْهِمْ وَرَسُوْلُهٗ ؕ بَلْ اُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟۠
اَفِىْ قُلُوْبِهِمْஅவர்களது உள்ளங்களில் இருக்கிறதா?مَّرَضٌநோய்اَمِஅல்லதுارْتَابُوْۤاஅவர்கள் சந்தேகிக்கின்றனரா?اَمْஅல்லதுيَخَافُوْنَபயப்படுகின்றனரா?اَنْ يَّحِيْفَஅநீதியிழைத்து விடுவார்கள் என்றுاللّٰهُஅல்லாஹ்வும்عَلَيْهِمْஅவர்கள் மீதுوَرَسُوْلُهٗ‌ؕஇன்னும் அவனது தூதரும்بَلْமாறாகاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الظّٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்
அFபீ குலூBபிஹிம் மரளுன் அமிர்தாBபூ அம் யகாFபூன அ(ன்)ய் யஹீFபல்லாஹு 'அலய்ஹிம் வ ரஸூலுஹ்; Bபல் உலா'இக ஹுமுள் ளாலிமூன்
அவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா? அல்ல! அவர்களே அநியாயக் காரர்கள்.
اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِیْنَ اِذَا دُعُوْۤا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ لِیَحْكُمَ بَیْنَهُمْ اَنْ یَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا ؕ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
اِنَّمَا كَانَ قَوْلَகூற்றாக இருப்பதெல்லாம்الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களுடையاِذَا دُعُوْۤاஅழைக்கப்பட்டால்اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்وَرَسُوْلِهٖஇன்னும் அவனது தூதர்لِيَحْكُمَஅவர் தீர்ப்பளிப்பதற்காகبَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்اَنْ يَّقُوْلُوْاஅவர்கள் கூறுவதுதான்سَمِعْنَاநாங்கள் செவியுற்றோம்وَاَطَعْنَا‌ؕஇன்னும் கீழ்ப்படிந்தோம்وَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْمُفْلِحُوْنَ‏வெற்றியாளர்கள்
இன்னமா கான கவ்லல் மு'மினீன இதா து'ஊ இலல் லாஹி வ ரஸூலிஹீ லி யஹ்கும Bபய்னஹும் அய் யகூலூ ஸமிஃனா வ அதஃனா; வ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்” என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.
وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَیَخْشَ اللّٰهَ وَیَتَّقْهِ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفَآىِٕزُوْنَ ۟
وَمَنْயார்يُّطِعِகீழ்ப்படிகின்றார்اللّٰهَஅல்லாஹ்வுக்கும்وَرَسُوْلَهٗஅவனது தூதருக்கும்وَيَخْشَஇன்னும் பயப்படுகிறார்اللّٰهَஅல்லாஹ்வைوَيَتَّقْهِஇன்னும் அவனை அஞ்சிக் கொள்கிறார்فَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْفَآٮِٕزُوْنَ‏நற்பாக்கியம் பெற்றவர்கள்
வ மய் யுதி'இல் லாஹ வ ரஸூலஹூ வ யக்-ஷல் லாஹ வ யத்தக்ஹி Fப உலா'இக ஹுமுல் Fபா'இZஜூன்
இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.
وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ لَىِٕنْ اَمَرْتَهُمْ لَیَخْرُجُنَّ ؕ قُلْ لَّا تُقْسِمُوْا ۚ طَاعَةٌ مَّعْرُوْفَةٌ ؕ اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟
وَاَقْسَمُوْاசத்தியம் செய்தனர்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுجَهْدَகடுமையாகاَيْمَانِهِمْஅவர்களது சத்தியங்கள்لَٮِٕنْ اَمَرْتَهُمْநீங்கள் அவர்களுக்கு கட்டளையிட்டால்لَيَخْرُجُنَّ‌ ۚநிச்சயமாக அவர்கள் வெளியேறுவார்கள்قُلْகூறுவீராகلَّا تُقْسِمُوْا‌ ۚநீங்கள் சத்தியமிடாதீர்கள்طَاعَةٌகீழ்ப்படிதலேمَّعْرُوْفَةٌ‌  ؕஅறியப்பட்டاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்خَبِيْرٌۢஆழ்ந்தறிபவன்بِمَا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்வதை
வ அக்ஸமூ Bபில்லாஹி ஜஹ்த அய்மானிஹிம் ல'இன் அமர்தஹும் ல யக்ருஜுன்ன குல் லா துக்ஸிமூ தா'அதும் மஃரூFபஹ் இன்னல் லாஹ கBபீரும் Bபிமா தஃமலூன்
இன்னும் (நபியே! நயவஞ்சகர்களுக்கு) நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்து கூறுகிறார்கள்; (அவர்களை நோக்கி:) “நீங்கள் சத்தியம் செய்யாதீர்கள். (உங்கள்) கீழ்படிதல் தெரிந்தது தான்- நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்” என்று கூறுவீராக.
قُلْ اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَیْهِ مَا حُمِّلَ وَعَلَیْكُمْ مَّا حُمِّلْتُمْ ؕ وَاِنْ تُطِیْعُوْهُ تَهْتَدُوْا ؕ وَمَا عَلَی الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
قُلْகூறுவீராகاَطِيْعُواகீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَاَطِيْعُواஇன்னும் கீழ்ப்படியுங்கள்الرَّسُوْلَ‌ۚதூதருக்குفَاِنْ تَوَلَّوْاநீங்கள் விலகிச் சென்றால்فَاِنَّمَاஎல்லாம்عَلَيْهِஅவர் மீதுمَاஎதுحُمِّلَசுமத்தப்பட்டதுوَعَلَيْكُمْஇன்னும் உங்கள் மீதுمَّاஎதுحُمِّلْتُمْ‌ؕசுமத்தப்பட்டீர்கள்وَاِنْ تُطِيْعُوْهُநீங்கள் கீழ்ப்படிந்தால் / அவருக்குتَهْتَدُوْا‌ؕநேர்வழி பெறுவீர்கள்وَمَاகடமை இல்லைعَلَى الرَّسُوْلِதூதர் மீதுاِلَّاதவிரالْبَلٰغُஎடுத்துரைப்பதைالْمُبِيْنُ‏தெளிவாக
குல் அதீ'உல் லாஹ வ அதீ'உர் ரஸூல Fப இன் தவல்லவ் Fப இன்னமா 'அலய்ஹி மா ஹும்மில வ 'அலய்கும் மா ஹும்மில்தும் வ இன் துதீ'ஊஹு தஹ்ததூ; வ மா'அலர் ரஸூலி இல்லல் Bபலாகுல் முBபீன்
“அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை.
وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَیَسْتَخْلِفَنَّهُمْ فِی الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۪ وَلَیُمَكِّنَنَّ لَهُمْ دِیْنَهُمُ الَّذِی ارْتَضٰی لَهُمْ وَلَیُبَدِّلَنَّهُمْ مِّنْ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا ؕ یَعْبُدُوْنَنِیْ لَا یُشْرِكُوْنَ بِیْ شَیْـًٔا ؕ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
وَعَدَவாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்مِنْكُمْஉங்களில்وَ عَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநற்செயல்களைلَـيَسْتَخْلِفَـنَّهُمْஇவர்களை பிரதிநிதிகளாக ஆக்குவான்فِى الْاَرْضِஇப்பூமியில்كَمَاபோன்றுاسْتَخْلَفَபிரதிநிதிகளாக ஆக்கியதுالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْஇவர்களுக்கு முன்னுள்ளவர்களைوَلَيُمَكِّنَنَّஇன்னும் பலப்படுத்தித்தருவான்لَهُمْஇவர்களுக்குدِيْنَهُمُஇவர்களுடைய மார்க்கத்தைالَّذِىஎதுارْتَضٰىஅவன் திருப்தி கொண்டான்لَهُمْஇவர்களுக்காகوَلَـيُبَدِّلَــنَّهُمْஇன்னும் இவர்களுக்கு மாற்றித்தருவான்مِّنْۢ بَعْدِபின்னர்خَوْفِهِمْஇவர்களது பயத்திற்குاَمْنًا‌ ؕநிம்மதியைيَعْبُدُوْنَنِىْஇவர்கள் என்னை வணங்குவார்கள்لَا يُشْرِكُوْنَஇணைவைக்க மாட்டார்கள்بِىْஎனக்குشَيْــٴًــــا‌ ؕஎதையும்وَمَنْயார்كَفَرَநிராகரிப்பார்களோبَعْدَபின்னர்ذٰ لِكَஇதற்குفَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْفٰسِقُوْنَ‏பாவிகள்
வ'அதல் லாஹுல் லதீன ஆமனூ மின்கும் வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ல யஸ்தக்லிFபன் னஹும் Fபில் அர்ளி கமஸ்தக் லFபல் லதீன மின் கBப்லிஹிம் வ ல யுமக்கினன்ன லஹும் தீனஹுமுல் லதிர் தளா லஹும் வ ல யுBபத்திலன்னஹும் மிம் Bபஃதி கவ்Fபிஹிம் அம்னா; யஃBபுதூனனீ லாயுஷ்ரிகூன Bபீ ஷய்'ஆ; வ மன் கFபர Bபஃத தாலிக Fப உலா'இக ஹுமுல் Fபாஸிகூன்
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
وَاَقِيْمُواஇன்னும் நிலைநிறுத்துங்கள்الصَّلٰوةَதொழுகையைوَ اٰ تُواஇன்னும் கொடுங்கள்الزَّكٰوةَஸகாத்தைوَاَطِيْـعُواஇன்னும் கீழ்ப்படியுங்கள்الرَّسُوْلَதூதருக்குلَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏நீங்கள் வெற்றி பெறுவதற்காக
வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத வ அதீ'உர் ரஸூல ல'அல்லகும் துர்ஹமூன்
(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்.
لَا تَحْسَبَنَّ الَّذِیْنَ كَفَرُوْا مُعْجِزِیْنَ فِی الْاَرْضِ ۚ وَمَاْوٰىهُمُ النَّارُ ؕ وَلَبِئْسَ الْمَصِیْرُ ۟۠
لَا تَحْسَبَنَّஎண்ணிவிடாதீர்கள்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்களைمُعْجِزِيْنَ فِى الْاَرْضِ‌ۚபலவீனப்படுத்தி விடுபவர்களாக/இப்பூமியில்وَمَاْوٰٮهُمُஇன்னும் அவர்கள் தங்குமிடம்النَّارُ‌ؕநரகம்தான்وَلَبِئْسَ الْمَصِيْرُ‏அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது
லா தஹ்ஸBபன்னல் லதீன கFபரூ முஃஜிZஜீன Fபில் அர்ள்; வ மாவாஹுமுன் னாரு வ லBபி'ஸல் மஸீர்
நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لِیَسْتَاْذِنْكُمُ الَّذِیْنَ مَلَكَتْ اَیْمَانُكُمْ وَالَّذِیْنَ لَمْ یَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلٰثَ مَرّٰتٍ ؕ مِنْ قَبْلِ صَلٰوةِ الْفَجْرِ وَحِیْنَ تَضَعُوْنَ ثِیَابَكُمْ مِّنَ الظَّهِیْرَةِ وَمِنْ بَعْدِ صَلٰوةِ الْعِشَآءِ ؕ۫ ثَلٰثُ عَوْرٰتٍ لَّكُمْ ؕ لَیْسَ عَلَیْكُمْ وَلَا عَلَیْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ ؕ طَوّٰفُوْنَ عَلَیْكُمْ بَعْضُكُمْ عَلٰی بَعْضٍ ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلِيَسْتَـاْذِنْكُمُஉங்களிடம் அனுமதி கோரட்டும்الَّذِيْنَஎவர்கள்مَلَكَتْசொந்தமாகியவர்களும்اَيْمَانُكُمْஉங்கள் வலக்கரங்கள்وَالَّذِيْنَ لَمْ يَـبْلُغُواஅடையாதவர்களும்الْحُـلُمَபருவத்தைمِنْكُمْஉங்களில்ثَلٰثَமூன்றுمَرّٰتٍ‌ؕநேரங்களில்مِنْ قَبْلِமுன்صَلٰوةِதொழுகைக்குالْفَجْرِகாலைوَحِيْنَ تَضَعُوْنَமதியத்தில்ثِيَابَكُمْஉங்கள் ஆடைகளைمِّنَ الظَّهِيْرَةِநீங்கள் களைந்துவிடும் நேரத்தில்وَمِنْۢ بَعْدِபின்صَلٰوةِதொழுகைக்குالْعِشَآءِ ؕஇஷா ثَلٰثُமூன்றும்عَوْرٰتٍமறைவான நேரங்கள்لَّـكُمْ‌ ؕஉங்களுக்குلَـيْسَஇல்லைعَلَيْكُمْஉங்கள் மீதும்وَ لَا عَلَيْهِمْஅவர்கள் மீதும்جُنَاحٌۢகுற்றம்بَعْدَهُنَّ‌ ؕஅவர்கள் பின்புطَوّٰفُوْنَஅதிகம் வந்துபோகக் கூடியவர்கள்عَلَيْكُمْஉங்களிடம்بَعْضُكُمْஉங்களில் சிலர்عَلٰىமீதுبَعْضٍ‌ ؕசிலரின்كَذٰلِكَஇவ்வாறுيُبَيِّنُதெளிவுபடுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمُஉங்களுக்குالْاٰيٰتِ‌ ؕவசனங்களைوَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்حَكِيْمٌ‏மகா ஞானவான்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லி யஸ்த'தின்குமுல் லதீன மலகத் அய்மானுகும் வல்லதீன லம் யBப்லுகுல் ஹுலும மின்கும் தலாத மர்ராத்; மின் கBப்லி ஸலாதில் Fபஜ்ரி வ ஹீன தள'ஊன தியா Bபகும் மினள் ளஹீரதி வ மின் Bபஃதி ஸலாதில் இஷா'; தலாது 'அவ்ராதில் லகும்; லய்ஸ 'அலய்கும் வலா 'அலய்ஹிம் ஜுனாஹுன் Bபஃதஹுன்ன்; தவ்வாFபூன 'அலய்கும் Bபஃளுகும் 'அலா Bபஃள்; கதாலிக யுBபய்யினுல் லாஹு லகுமுல் ஆயாத்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் “லுஹர்” நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْیَسْتَاْذِنُوْا كَمَا اسْتَاْذَنَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
وَاِذَا بَلَغَஅடைந்துவிட்டால்الْاَطْفَالُகுழந்தைகள்مِنْكُمُஉங்களின்الْحُـلُمَபருவத்தைفَلْيَسْتَـاْذِنُوْاஅவர்கள் அனுமதி கோரட்டும்كَمَا اسْتَـاْذَنَஅனுமதி கோரியது போன்றுالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕஅவர்களுக்கு முன்னுள்ளவர்கள்كَذٰلِكَஇவ்வாறுيُبَيِّنُதெளிவுபடுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்குاٰيٰتِهٖ‌ؕதனது வசனங்களைوَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்حَكِيْمٌ‏மகா ஞானவான்
வ இதா Bபலகல் அத்Fபாலு மின்குமுல் ஹுலும Fபல் யஸ்த'தினூ கமஸ் த'தனல் லதீன மின் கBப்லிஹிம்; கதாலிக யுBபய்யினுல் லாஹு லகும் ஆயாதிஹ்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
وَالْقَوَاعِدُ مِنَ النِّسَآءِ الّٰتِیْ لَا یَرْجُوْنَ نِكَاحًا فَلَیْسَ عَلَیْهِنَّ جُنَاحٌ اَنْ یَّضَعْنَ ثِیَابَهُنَّ غَیْرَ مُتَبَرِّجٰتٍ بِزِیْنَةٍ ؕ وَاَنْ یَّسْتَعْفِفْنَ خَیْرٌ لَّهُنَّ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
وَالْـقَوَاعِدُவயது முதிர்ந்தவர்கள்مِنَ النِّسَآءِபெண்களில்الّٰتِىْ لَا يَرْجُوْنَஆசைப்படாதவர்கள்نِكَاحًاதிருமணத்தைفَلَيْسَஇல்லைعَلَيْهِنَّஅவர்கள் மீதுجُنَاحٌகுற்றம்اَنْ يَّضَعْنَஅவர்கள் கழட்டுவதில்ثِيَابَهُنَّஅவர்களின் துப்பட்டாக்களைغَيْرَ مُتَبَـرِّجٰتٍ ۭவெளியே வராமல்بِزِيْنَةٍ‌ ؕஅலங்காரங்களுடன்وَاَنْ يَّسْتَعْفِفْنَஅவர்கள் பேணுதலாக இருப்பதுخَيْرٌசிறந்ததுلَّهُنَّ‌ ؕஅவர்களுக்குوَاللّٰهُஅல்லாஹ்سَمِيْعٌநன்கு செவியேற்பவன்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
வல்கவா'இது மினன் னிஸா'இல் லாதீ லா யர்ஜூன னிகாஹன் Fப லய்ஸ 'அலய்ஹின்ன ஜுனாஹுன் அய் யளஃன தியாBபஹுன்ன கய்ர முதBபர்ரிஜாதின் Bபி Zஜீனஹ்; வ அய் யஸ்தஃFபிFப் ன கய்ருல் லஹுன்ன்; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; ஆனால் (இதனையும் அவர்கள் தவிர்த்து) ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
لَیْسَ عَلَی الْاَعْمٰی حَرَجٌ وَّلَا عَلَی الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَی الْمَرِیْضِ حَرَجٌ وَّلَا عَلٰۤی اَنْفُسِكُمْ اَنْ تَاْكُلُوْا مِنْ بُیُوْتِكُمْ اَوْ بُیُوْتِ اٰبَآىِٕكُمْ اَوْ بُیُوْتِ اُمَّهٰتِكُمْ اَوْ بُیُوْتِ اِخْوَانِكُمْ اَوْ بُیُوْتِ اَخَوٰتِكُمْ اَوْ بُیُوْتِ اَعْمَامِكُمْ اَوْ بُیُوْتِ عَمّٰتِكُمْ اَوْ بُیُوْتِ اَخْوَالِكُمْ اَوْ بُیُوْتِ خٰلٰتِكُمْ اَوْ مَا مَلَكْتُمْ مَّفَاتِحَهٗۤ اَوْ صَدِیْقِكُمْ ؕ لَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَاْكُلُوْا جَمِیْعًا اَوْ اَشْتَاتًا ؕ فَاِذَا دَخَلْتُمْ بُیُوْتًا فَسَلِّمُوْا عَلٰۤی اَنْفُسِكُمْ تَحِیَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَیِّبَةً ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟۠
لَـيْسَஇல்லைعَلَىமீதுالْاَعْمٰىகுருடர்حَرَجٌகுற்றம்وَّلَاஇன்னும் இல்லைعَلَىமீதுالْاَعْرَجِஊனமுற்றவர்حَرَجٌகுற்றம்وَّلَاஇன்னும் இல்லைعَلَىமீதுالْمَرِيْضِநோயாளிحَرَجٌகுற்றம்وَّلَاஇன்னும் இல்லைعَلٰٓىமீதுاَنْفُسِكُمْஉங்கள்اَنْ تَاْكُلُوْاநீங்கள் உண்பதுمِنْۢ بُيُوْتِكُمْஉங்கள் இல்லங்களிலிருந்துاَوْஅல்லதுبُيُوْتِஇல்லங்களிலிருந்துاٰبَآٮِٕكُمْஉங்கள் தந்தைகளின்اَوْஅல்லதுبُيُوْتِஇல்லங்களிலிருந்துاُمَّهٰتِكُمْஉங்கள் தாய்மார்களின்اَوْஅல்லதுبُيُوْتِஇல்லங்களிலிருந்துاِخْوَانِكُمْஉங்கள் சகோதரர்களின்اَوْஅல்லதுبُيُوْتِஇல்லங்களிலிருந்துاَخَوٰتِكُمْஉங்கள் சகோதரிகளின்اَوْஅல்லதுبُيُوْتِஇல்லங்களிலிருந்துاَعْمَامِكُمْஉங்கள் தந்தையின் சகோதரர்களின்اَوْஅல்லதுبُيُوْتِஇல்லங்களிலிருந்துعَمّٰتِكُمْஉங்கள் மாமிகளின்اَوْஅல்லதுبُيُوْتِஇல்லங்களிலிருந்துاَخْوَالِكُمْஉங்கள் தாய்மாமன்களின்اَوْஅல்லதுبُيُوْتِஇல்லங்களிலிருந்துخٰلٰتِكُمْஉங்கள் தாயின் சகோதரிகளின்اَوْஅல்லதுمَاஎந்தمَلَكْتُمْநீங்கள் உங்கள் உரிமையில் வைத்திருக்கிறீர்களோمَّفَاتِحَهٗۤஅதன் சாவிகளைاَوْஅல்லதுصَدِيْقِكُمْ‌ؕஉங்கள் நண்பனின்لَـيْسَஇல்லைعَلَيْكُمْஉங்கள் மீதுجُنَاحٌகுற்றம்اَنْ تَاْكُلُوْاநீங்கள் உண்பதுجَمِيْعًاநீங்கள் ஒன்றினைந்தவர்களாகاَوْஅல்லதுاَشْتَاتًا‌ ؕபிரிந்தவர்களாகفَاِذَا دَخَلْتُمْநீங்கள் நுழைந்தால்بُيُوْتًاஇல்லங்களில்فَسَلِّمُوْاசலாமை சொல்லுங்கள்عَلٰٓىமீதுاَنْفُسِكُمْஉங்கள்تَحِيَّةًமுகமனாகியمِّنْ عِنْدِ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துمُبٰرَكَةًஅருள்நிறைந்தطَيِّبَةً‌  ؕநல்லكَذٰلِكَஇவ்வாறுيُبَيِّنُதெளிவுபடுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمُஉங்களுக்குالْاٰيٰتِவசனங்களைلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து விளங்குவதற்காக
லய்ஸ 'அலல் அஃமா ஹரஜு(ன்)வ் வலா 'அலல் அஃரஜி ஹரஜு(ன்)வ் வலா 'அலல் மரீளி ஹரஜுன் வலா 'அலா அன்Fபுஸிகும் 'அன் த'குலூ மின் Bபுயூதிகும் அவ் Bபுயூதி ஆBபா'இகும் அவ் Bபுயூதி உம்மஹாதிகும் அவ் Bபுயூதி இக்வானிகும் அவ் Bபுயூதி அகவாதிகும் அவ் Bபுயூதி அஃமாமிகும் அவ் Bபுயூதி 'அம்மாதிகும் அவ் Bபுயூதி அக்வாலிகும் அவ் Bபுயூதி காலாதிகும் அவ் மா மலக்தும் மFபாதிஹஹூ அவ் ஸதீகிகும்; லய்ஸ 'அலய்கும் ஜுனாஹுன் 'அன் த'குலூ ஜமீ'அன் அவ் அஷ்தாத; Fப இதா தகல்தும் Bபுயூதன் Fப ஸல்லிமூ 'அலா அன்Fபுஸிகும் தஹிய்யதன் மின் 'இன்தில் லாஹி முBபாரகதன் தய்யிBபஹ்; கதாலிக யுBபய் யினுல் லாஹு லகுமுல் ஆயாதி ல'அல்லகும் தஃகிலூன்
(முஃமின்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை; முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; உங்கள் மீதும் குற்றமில்லை; நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாய்மார் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயாரின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எ(ந்த வீட்டுடைய)தின் சாவிகள் உங்கள் வசம் இருக்கின்றதோ (அதிலும்) அல்லது உங்கள் தோழரின் வீடுகளிலோ, நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; ஆனால் நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான - பாக்கியம் மிக்க - பரிசுத்தமான (“அஸ்ஸலாமு அலைக்கும்” என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் கூறிக்கொள்ளுங்கள் - நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.  
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاِذَا كَانُوْا مَعَهٗ عَلٰۤی اَمْرٍ جَامِعٍ لَّمْ یَذْهَبُوْا حَتّٰی یَسْتَاْذِنُوْهُ ؕ اِنَّ الَّذِیْنَ یَسْتَاْذِنُوْنَكَ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ۚ فَاِذَا اسْتَاْذَنُوْكَ لِبَعْضِ شَاْنِهِمْ فَاْذَنْ لِّمَنْ شِئْتَ مِنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمُ اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
اِنَّمَا الْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள் எல்லாம்الَّذِيْنَ اٰمَنُوْاஉண்மைப்படுத்தியவர்கள்தான்بِاللّٰهِஇன்னும் அல்லாஹ்வையும்وَرَسُوْلِهٖஇன்னும் அவனது தூதரையும்وَاِذَا كَانُوْاஅவர்கள் இருந்தால்مَعَهٗஅவருடன்عَلٰٓى اَمْرٍஒரு காரியத்தில்جَامِعٍபொதுلَّمْ يَذْهَبُوْاசெல்ல மாட்டார்கள்حَتّٰى يَسْتَاْذِنُوْهُ‌ ؕஅவரிடம் அவர்கள் அனுமதி கேட்காமல்اِنَّ الَّذِيْنَ يَسْتَـاْذِنُوْنَكَநிச்சயமாக உங்களிடம் அனுமதி கேட்பவர்கள்اُولٰٓٮِٕكَஅவர்கள்தான்الَّذِيْنَ يُؤْمِنُوْنَஉண்மைப்படுத்தியவர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வையும்وَرَسُوْلِهٖ‌ ۚஇன்னும் அவனது தூதரையும்فَاِذَا اسْتَاْذَنُوْكَஆகவே, அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால்لِبَعْضِசிலشَاْنِهِمْதங்களின் காரியத்திற்குفَاْذَنْஅனுமதி அளிப்பீராகلِّمَنْ شِئْتَநீர் நாடியவருக்குمِنْهُمْஅவர்களில்وَاسْتَغْفِرْஇன்னும் பாவமன்னிப்புக் கோருவீராகلَهُمُஅவர்களுக்காகاللّٰهَ‌ؕஅல்லாஹ்விடம்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
இன்னமல் மு'மினூனல் லதீன ஆமனூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வ இதா கானூ ம'அஹூ 'அலா அம்ரின் ஜாமி'இல் லம் யத்ஹBபூ ஹத்தா யஸ்த'தினூஹ்; இன்னல் லதீன யஸ்த'தினூனக உலா'இகல் லதீன யு'மினூன Bபில்லாஹி வ ரஸூலிஹ்; Fப இதஸ் த'தனூக லி Bபஃளி ஷ'னிஹிம் Fப'தல் லிமன் ஷி'த மின்ஹும் வஸ்தக்Fபிர் லஹுமுல் லாஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டவர்களே! (உண்மை) முஃமின்களாவார்கள், மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள்; (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள், ஆகவே தங்கள் காரியங்கள் சிலவற்றுக்காக அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், அவர்களில் நீர் விரும்பியவருக்கு அனுமதி கொடுப்பீராக; இன்னும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீர் மன்னிப்புக் கோருவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; கிருபையுடையவன்.
لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَیْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا ؕ قَدْ یَعْلَمُ اللّٰهُ الَّذِیْنَ یَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا ۚ فَلْیَحْذَرِ الَّذِیْنَ یُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِیْبَهُمْ فِتْنَةٌ اَوْ یُصِیْبَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
لَا تَجْعَلُوْاஆக்கிவிடாதீர்கள்دُعَآءَசாபத்தைالرَّسُوْلِதூதரின்بَيْنَكُمْஉங்களுக்கு மத்தியில்كَدُعَآءِசபிப்பது போன்றுبَعْضِكُمْஉங்களில் சிலர்بَعْضًا‌ ؕசிலரைقَدْதிட்டமாகيَعْلَمُநன்கறிவான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَஎவர்கள்يَتَسَلَّلُوْنَநழுவிச் செல்கிறார்கள்مِنْكُمْஉங்களில்لِوَاذًا‌ ۚமறைவாகفَلْيَحْذَرِ(அவர்கள்) உஷாராக இருக்கட்டும்الَّذِيْنَ يُخَالِفُوْنَமாறுசெய்பவர்கள்عَنْ اَمْرِهٖۤஅவருடைய கட்டளைக்குاَنْ تُصِيْبَهُمْதங்களைஅடைவதைفِتْنَةٌகுழப்பம்اَوْஅல்லதுيُصِيْبَهُمْதங்களை அடைவதைعَذَابٌதண்டனைاَ لِيْمٌ‏வலிதரும்
லா தஜ்'அலூ து'ஆ'அர் ரஸூலி Bபய்னகும் க து'ஆ'இ Bபஃளிகும் Bபஃளா; கத் யஃலமுல் லாஹுல் லதீன யதஸல்லலூன மின்கும் லிவாதா; Fபல் யஹ்தரில் லதீன யுகாலிFபூன 'அன் அம்ரிஹீ 'அன் துஸீBபஹும் Fபித்னதுன் அவ் யுஸீBபஹும் 'அதாBபுன் அலீம்
(முஃமின்களே!) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள். உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான் - ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.
اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ قَدْ یَعْلَمُ مَاۤ اَنْتُمْ عَلَیْهِ ؕ وَیَوْمَ یُرْجَعُوْنَ اِلَیْهِ فَیُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّநிச்சயமாகلِلّٰهِஅல்லாஹ்விற்கே சொந்தமானவைمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَالْاَرْضِ ؕஇன்னும் பூமியிலும்قَدْதிட்டமாகيَعْلَمُஅவன் நன்கறிந்தவன்مَاۤ اَنْـتُمْநீங்கள் இருக்கும்عَلَيْهِؕஅதன் மீதுوَيَوْمَநாளில்يُرْجَعُوْنَஅவர்கள் திரும்பக் கொண்டு வரப்படும்اِلَيْهِஅவனிடம்فَيُنَـبِّـئُـهُمْஅவன் அவர்களுக்கு அறிவிப்பான்بِمَا عَمِلُوْا ؕஅவர்கள் செய்ததைوَاللّٰهُஅல்லாஹ்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
'அலா இன்ன லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி கத் யஃலமு மா அன்தும் 'அலய்ஹி வ யவ்ம யுர்ஜ'ஊன இலய்ஹி Fப யுனBப்Bபி'உஹும் Bபிமா 'அமிலூ; வல்லாஹு Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந் நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் - மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன்.