29. ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி)

மக்கீ, வசனங்கள்: 69

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَحَسِبَ النَّاسُ اَنْ یُّتْرَكُوْۤا اَنْ یَّقُوْلُوْۤا اٰمَنَّا وَهُمْ لَا یُفْتَنُوْنَ ۟
اَحَسِبَநினைத்துக் கொண்டனராالنَّاسُமக்கள்اَنْ يُّتْرَكُوْۤاஅவர்கள் விடப்படுவார்கள்اَنْ يَّقُوْلُوْۤاஎன்று அவர்கள் கூறுவதால்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்وَهُمْஅவர்கள்لَا يُفْتَـنُوْنَ‏சோதிக்கப்படாமல்
அஹஸிBபன் னாஸு அ(ன்)ய் யுத்ரகூ அ(ன்)ய் யகூலூ ஆமன்னா வ ஹும் ல யுFப்தனூன்
“நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
وَلَقَدْ فَتَنَّا الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَلَیَعْلَمَنَّ اللّٰهُ الَّذِیْنَ صَدَقُوْا وَلَیَعْلَمَنَّ الْكٰذِبِیْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகفَتَـنَّاநாம் சோதித்தோம்الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களைفَلَيَـعْلَمَنَّஆகவே, நிச்சயமாக அறிவான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَ صَدَقُوْاஉண்மையாளர்களை(யும்)وَلَيَعْلَمَنَّஇன்னும் நிச்சயமாக அறிவான்الْكٰذِبِيْنَ‏பொய்யர்களை(யும்)
வ லகத் Fபதன்னல் லதீன மின் கBப்லிஹிம் Fபல யஃலமன்னல் லாஹுல் லதீன ஸதகூ வ ல யஃலமன்னல் காதிBபீன்
நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.
اَمْ حَسِبَ الَّذِیْنَ یَعْمَلُوْنَ السَّیِّاٰتِ اَنْ یَّسْبِقُوْنَا ؕ سَآءَ مَا یَحْكُمُوْنَ ۟
اَمْ حَسِبَஅல்லது எண்ணிக் கொண்டார்களா?الَّذِيْنَ يَعْمَلُوْنَசெய்பவர்கள்السَّيِّاٰتِதீமைகளைاَنْ يَّسْبِقُوْنَا‌ ؕநம்மை முந்தி விடுவார்கள் என்றுسَآءَமிகக் கெட்டதுمَا يَحْكُمُوْنَ‏அவர்கள் தீர்ப்பளிப்பது
அம் ஹஸிBபல் லதீன யஃமலூனஸ் ஸய்யிஆதி அ(ன்)ய் யஸ்Bபிகூனா; ஸா'அ மா யஹ்குமூன்
அல்லது: தீமை செய்கிறார்களே அவர்கள் நம்மைவிட்டும் தாங்கள் தப்பிக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் (அவ்வாறு) தீர்மானித்துக் கொண்டது மிகவும் கெட்டது.
مَنْ كَانَ یَرْجُوْا لِقَآءَ اللّٰهِ فَاِنَّ اَجَلَ اللّٰهِ لَاٰتٍ ؕ وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
مَنْயார்كَانَஇருப்பாரோيَرْجُوْاஆதரவு வைக்கின்றார்لِقَآءَசந்திப்பைاللّٰهِஅல்லாஹ்வின்فَاِنَّநிச்சயமாகاَجَلَதவணைاللّٰهِஅல்லாஹ்வின்لَاٰتٍ‌ؕவரக்கூடியதுதான்وَهُوَஅவன்தான்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُ‏நன்கறிந்தவன்
மன் கான யர்ஜூ லிகா 'அல்லாஹி Fப இன்ன அஜலல் லாஹி ல'ஆத்; வ ஹுவஸ்ஸ் ஸமீஉல் 'அலீம்
எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று நம்புகிறார்களோ அவர்கள் (அதற்காக நல்ல அமல்களைச் செய்து கொள்ளட்டும்); ஏனெனில் அல்லாஹ் (அதற்காகக் குறித்துள்ள) தவணை நிச்சயமாக வருவதாக இருக்கிறது; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
وَمَنْ جَاهَدَ فَاِنَّمَا یُجَاهِدُ لِنَفْسِهٖ ؕ اِنَّ اللّٰهَ لَغَنِیٌّ عَنِ الْعٰلَمِیْنَ ۟
وَمَنْயார்جَاهَدَபோரிடுவாரோفَاِنَّمَا يُجَاهِدُஅவர் போரிடுவதெல்லாம்لِنَفْسِهٖؕதனக்காகத்தான்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَـغَنِىٌّமுற்றிலும் தேவையற்றவன்عَنِ الْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களை விட்டு
வ மன் ஜாஹத Fப-இன்னமா யுஜாஹிது லினFப்ஸிஹ்; இன்னல் லாஹ லகனிய்யுன் 'அனில் 'ஆலமீன்
இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கிறார்; நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் (உதவி எதுவும்) தேவைப்படாதவன்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَلَنَجْزِیَنَّهُمْ اَحْسَنَ الَّذِیْ كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைلَـنُكَفِّرَنَّநாம் நீக்கி விடுவோம்عَنْهُمْஅவர்களை விட்டும்سَيِّاٰتِهِمْஅவர்களின் பாவங்களைوَلَـنَجْزِيَنَّهُمْநாம் அவர்களுக்கு கூலியாகத் தருவோம்اَحْسَنَமிகச் சிறந்ததைالَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ‏அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லனுகFப் Fபிரன்ன 'அன்ஹும் ஸய்யிஆதிஹிம் வ லனஜ்Zஜியன்னஹும் அஹ்ஸனல் லதீ கானூ யஃமலூன்
ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்.
وَوَصَّیْنَا الْاِنْسَانَ بِوَالِدَیْهِ حُسْنًا ؕ وَاِنْ جَاهَدٰكَ لِتُشْرِكَ بِیْ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ؕ اِلَیَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
وَوَصَّيْنَاநாம் உபதேசித்தோம்الْاِنْسَانَமனிதனுக்குبِوَالِدَيْهِஅவன் தனது பெற்றோரிடம்حُسْنًا‌ ؕஅழகிய முறையில்وَاِنْ جَاهَدٰكَஅவர்கள் உன்னை வற்புறுத்தினால்لِتُشْرِكَநீ இணைஆக்கும்படிبِىْஎனக்குمَاஎதைلَـيْسَஇல்லைلَـكَஉனக்குبِهٖஅதைப் பற்றிعِلْمٌஅறிவுفَلَا تُطِعْهُمَا ؕஅவர்களுக்கு நீ கீழ்ப்படியாதே!اِلَىَّஎன் பக்கமேمَرْجِعُكُمْஉங்கள் மீட்சி இருக்கிறதுفَاُنَبِّئُكُمْநான் உங்களுக்கு அறிவிப்பேன்بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை
வ வஸ்ஸய்னல் இன்ஸான Bபிவாலிதய்ஹி ஹுஸ்ன(ன்)வ் வ இன் ஜாஹதாக லிதுஷ்ரிக Bபீ மா லய்ஸ லக Bபிஹீ 'இல்முன் Fபலா துதிஃஹுமா; இலய்ய மர்ஜி'உகும் Fப உனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்; என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُدْخِلَنَّهُمْ فِی الصّٰلِحِیْنَ ۟
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைلَـنُدْخِلَـنَّهُمْஅவர்களை நாம் நிச்சயமாக நுழைவிப்போம்فِى الصّٰلِحِيْنَ‏நல்லோரில்
வல்லதீன ஆமனூ வ'அமிலுஸ் ஸாலிஹாதி லனுத்கிலன் னஹும் Fபிஸ் ஸாலிஹீன்
அன்றியும் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்களைச் செய்கிறார்களோ அவர்களை நல்லடியார்களுடன் நிச்சயமாக நாம் சேர்த்து விடுவோம்.
وَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ فَاِذَاۤ اُوْذِیَ فِی اللّٰهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللّٰهِ ؕ وَلَىِٕنْ جَآءَ نَصْرٌ مِّنْ رَّبِّكَ لَیَقُوْلُنَّ اِنَّا كُنَّا مَعَكُمْ ؕ اَوَلَیْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِمَا فِیْ صُدُوْرِ الْعٰلَمِیْنَ ۟
وَمِنَ النَّاسِமக்களில் இருக்கின்றனர்مَنْஎவர்يَّقُوْلُகூறுகின்றார்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வைفَاِذَاۤ اُوْذِىَஅவர்கள் துன்புறுத்தப்பட்டால்فِى اللّٰهِஅல்லாஹ்வின் விஷயத்தில்جَعَلَஆக்கிவிடுகிறார்فِتْنَةَசோதனையைالنَّاسِமக்களுடையكَعَذَابِதண்டனையைப் போன்றுاللّٰهِؕஅல்லாஹ்வின்وَلَٮِٕنْ جَآءَவந்தால்نَـصْرٌஓர் உதவிمِّنْ رَّبِّكَஉமது இறைவனிடமிருந்துلَيَـقُوْلُنَّநிச்சயமாக கூறுகின்றனர்اِنَّاநிச்சயமாக நாம்كُنَّاஇருக்கின்றோம்مَعَكُمْ‌ؕஉங்களுடன்اَوَلَـيْسَஇல்லையா?اللّٰهُஅல்லாஹ்بِاَعْلَمَமிக அறிந்தவனாகبِمَا فِىْ صُدُوْرِநெஞ்சங்களில் உள்ளவற்றைالْعٰلَمِيْنَ‏அகிலத்தாரின்
வ மினன் னாஸி ம(ன்)ய் யகூலு ஆமன்னா Bபில்லாஹி Fப-இதா ஊதிய Fபில் லாஹி ஜ'அல Fபித்னதன் னாஸி க'அதாBபில் லாஹி வ ல'இன் ஜா'அ னஸ்ரும் மிர் ரBப்Bபிக ல யகூலுன்ன இன்னா குன்னா ம'அகும்; அவ லய்ஸல் லாஹு Bபி அஃலம Bபிமா Fபீ ஸுதூரில் 'ஆலமீன்
மேலும், மனிதர்களில் சிலர் “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளோம்” என்று சொல்கிறார்கள்; எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் துன்பம் உண்டானால், மனிதர்களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின் வேதனைபோல் கருதி (உம்மை விட்டும் நீங்க முனைந்து) விடுகிறார்கள்; ஆனால் உம் இறைவனிடத்திலிருந்து உதவி வரும்போது: “நிச்சயமாக நாங்கள் உங்களுடனே தான் இருந்தோம்” என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை நன்கறிந்தவனாக இல்லையா?
وَلَیَعْلَمَنَّ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَلَیَعْلَمَنَّ الْمُنٰفِقِیْنَ ۟
وَلَيَـعْلَمَنَّநிச்சயமாக நன்கறிவான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களைوَلَيَـعْلَمَنَّஇன்னும் நிச்சயமாக நன்கறிவான்الْمُنٰفِقِيْنَ‏நயவஞ்சகர்களை
வ ல யஃலமன்னல் லாஹுல் லதீன ஆமனூ வ ல யஃலமன்னல் முனாFபிகீன்
அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான்.
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوا اتَّبِعُوْا سَبِیْلَنَا وَلْنَحْمِلْ خَطٰیٰكُمْ ؕ وَمَا هُمْ بِحٰمِلِیْنَ مِنْ خَطٰیٰهُمْ مِّنْ شَیْءٍ ؕ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
وَقَالَகூறினர்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்لِلَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களை நோக்கிاتَّبِعُوْاநீங்கள் பின்பற்றுங்கள்!سَبِيْلَـنَاஎங்கள் பாதையைوَلْـنَحْمِلْநாங்கள் சுமந்து கொள்கிறோம்خَطٰيٰكُمْ ؕஉங்கள் தவறுகளைوَمَا هُمْஅவர்கள் அல்லர்بِحٰمِلِيْنَசுமப்பவர்கள்مِنْ خَطٰيٰهُمْஅவர்களுடைய தவறுகளில்مِّنْ شَىْءٍ‌ؕஎதையும்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَـكٰذِبُوْنَ‏பொய்யர்கள்தான்
வ காலல் லதீன கFபரூ லில்லதீன ஆமனுத் தBபி'ஊ ஸBபீலனா வல்னஹ்மில் கதாயாகும் வமா ஹும் Bபிஹாமிலீன மின் கதா யாஹும் மின் ஷய்'இன் இன்னஹும் லகாதிBபூன்
நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம்: “நீங்கள் எங்கள் வழியை (மார்க்கத்தைப்) பின்பற்றுங்கள்; உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக (தாங்குபவர்களாக) இல்லையே! எனவே (உங்கள் குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!
وَلَیَحْمِلُنَّ اَثْقَالَهُمْ وَاَثْقَالًا مَّعَ اَثْقَالِهِمْ ؗ وَلَیُسْـَٔلُنَّ یَوْمَ الْقِیٰمَةِ عَمَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠
وَلَيَحْمِلُنَّநிச்சயம் அவர்கள் சுமப்பார்கள்اَ ثْقَالَهُمْதங்கள்சுமைகளையும்وَاَ ثْقَالًاஇன்னும் பல சுமைகளையும்مَّعَ اَثْقَالِهِمْ‌தங்களது சுமைகளுடன்وَلَـيُسْـٴَــلُنَّநிச்சயம் விசாரிக்கப்படுவார்கள்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்عَمَّاபற்றிكَانُوْا يَفْتَرُوْنَ‏இன்னும் அவர்கள் பொய்யை இட்டுக்கட்டிக் கொண்டிருந்தார்கள்
வ ல யஹ்மிலுன்ன அத்கா லஹும் வ அத்காலம் ம'அ அத்காலிஹிம் வ ல யுஸ்'அலுன்ன யவ்மல் கியாமதி 'அம்மா கானூ யFப்தரூன்
ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய (பளுவான பாவச்) சுமைகளையும், தம் (பளுவான பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச்) சுமைகளையும் சுமப்பார்கள்; கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள்.  
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَلَبِثَ فِیْهِمْ اَلْفَ سَنَةٍ اِلَّا خَمْسِیْنَ عَامًا ؕ فَاَخَذَهُمُ الطُّوْفَانُ وَهُمْ ظٰلِمُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்نُوْحًاநூஹைاِلٰى قَوْمِهٖஅவரது மக்களிடம்فَلَبِثَஅவர் தங்கி இருந்தார்فِيْهِمْஅவர்களுடன்اَ لْفَஆயிரம்سَنَةٍஆண்டுகள்اِلَّاதவிரخَمْسِيْنَஐம்பதுعَامًا ؕஆண்டுகள்فَاَخَذَஇறுதியில் பிடித்ததுهُمُஅவர்களைالطُّوْفَانُவெள்ளப் பிரளயம்وَهُمْஅவர்கள் இருக்கظٰلِمُوْنَ‏அநியாயக்காரர்களாக
வ லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ FபலBபித Fபீஹிம் அல்Fப ஸனதின் இல்லா கம்ஸீன 'ஆமன் Fப அகதஹுமுத் தூFபானு வ ஹும் ளாலிமூன்
மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது.
فَاَنْجَیْنٰهُ وَاَصْحٰبَ السَّفِیْنَةِ وَجَعَلْنٰهَاۤ اٰیَةً لِّلْعٰلَمِیْنَ ۟
فَاَنْجَيْنٰهُஅவரை(யும்) நாம் பாதுகாத்தோம்وَاَصْحٰبَ السَّفِيْنَةِஇன்னும் கப்பலுடையவர்களை(யும்)وَجَعَلْنٰهَاۤஇன்னும் அதை ஆக்கினோம்اٰيَةًஓர் அத்தாட்சியாகلِّـلْعٰلَمِيْنَ‏அகிலத்தாருக்கு
Fப அன்ஜய்னாஹு வ அஸ் ஹாBபஸ் ஸFபீனதி வ ஜ'அல்னாஹா ஆயதல் லில்'ஆலமீன்
(அப்போது) நாம் அவரையும், (அவருடன்) கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம்; மேலும், அதை உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
وَاِبْرٰهِیْمَ اِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
وَاِبْرٰهِيْمَஇன்னும் இப்ராஹீம்اِذْ قَالَஅவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்لِقَوْمِهِதனது மக்களுக்குاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاتَّقُوْهُ‌ ؕஇன்னும் அவனை அஞ்சுங்கள்ذٰ لِكُمْஇதுதான்خَيْرٌசிறந்ததாகும்لَّـكُمْஉங்களுக்குاِنْ كُنْـتُمْநீங்கள் இருந்தால்تَعْلَمُوْنَ‏அறிகின்றவர்களாக
வ இBப்ரஹீம இத் கால லிகவ்மிஹிஃ Bபுதுல் லாஹ வத்தகூஹு தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்” என்று கூறிய வேளையை (நபியே! நினைவூட்டுவீராக).
اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا ؕ اِنَّ الَّذِیْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا یَمْلِكُوْنَ لَكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ ؕ اِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
اِنَّمَا تَعْبُدُوْنَநீங்கள் வணங்குவதெல்லாம்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிاَوْثَانًاசிலைகளைத்தான்وَّتَخْلُقُوْنَஇன்னும் இட்டுக்கட்டுகிறீர்கள்اِفْكًا‌ ؕபொய்யைاِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்களைتَعْبُدُوْنَநீங்கள் வணங்குகிறீர்கள்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிلَا يَمْلِكُوْنَஉரிமை பெறமாட்டார்கள்لَـكُمْஉங்களுக்குرِزْقًاஉணவளிக்கفَابْتَغُوْاஆகவே, தேடுங்கள்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்الرِّزْقَஉணவைوَاعْبُدُوْهُஇன்னும் அவனை வணங்குங்கள்وَاشْكُرُوْاஇன்னும் நன்றி செலுத்துங்கள்لَهٗ ؕஅவனுக்குاِلَيْهِஅவன் பக்கமேتُرْجَعُوْنَ‏திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்
இன்னமா தஃBபுதூன மின் தூனில் லாஹி அவ்தான(ன்)வ்-வ தக்லுகூன இFப்கா; இன்னல் லதீன தஃBபுதூன மின் தூனில் லாஹி லா யம்லிகூன லகும் ரிZஜ்கன் FபBப்தகூ 'இன்தல் லாஹிர் ரிZஜ்க வஃBபுதூஹு வஷ்குரூ லஹூ இலய்ஹி துர்ஜ'ஊன்
அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
وَاِنْ تُكَذِّبُوْا فَقَدْ كَذَّبَ اُمَمٌ مِّنْ قَبْلِكُمْ ؕ وَمَا عَلَی الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
وَاِنْ تُكَذِّبُوْاநீங்கள் பொய்ப்பித்தால்فَقَدْதிட்டமாகكَذَّبَபொய்ப்பித்துள்ளனர்اُمَمٌபல சமுதாயத்தினர்مِّنْ قَبْلِكُمْ‌ؕஉங்களுக்கு முன்னர்وَمَاவேறில்லைعَلَىமீதுالرَّسُوْلِதூதர்اِلَّاதவிரالْبَلٰغُஎடுத்துரைத்தலேالْمُبِيْنُ‏தெளிவான
வ இன் துகத்திBபூ Fபகத் கத்தBப உமமும் மின் கBப்லிகும் வ மா'அலர் ரஸூலி இல்லல் Bபலாகுல் முBபீன்
இன்னும் நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால் (தளர்ந்து போவதில்லை - ஏனெனில்) உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தவரும் (அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; ஆகவே, (இறை) தூதரின் கடமை (தம் தூதை) பகிரங்கமாக எடுத்துரைப்பதன்றி (வேறு) இல்லை.”
اَوَلَمْ یَرَوْا كَیْفَ یُبْدِئُ اللّٰهُ الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ ؕ اِنَّ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟
اَوَلَمْ يَرَوْاஅவர்கள் பார்க்கவில்லையா?كَيْفَஎப்படிيُبْدِئُஆரம்பமாக படைத்தான்اللّٰهُஅல்லாஹ்الْخَـلْقَபடைப்புகளைثُمَّபிறகுيُعِيْدُهٗ ؕஅவற்றை அவன் மீண்டும் உருவாக்குகிறான்اِنَّநிச்சயமாகذٰ لِكَஇதுعَلَى اللّٰهِஅல்லாஹ்விற்குيَسِيْرٌ‏இலகுவானதாகும்
அவ லம் யரவ் கய்Fப யுBப்தி'உல் லாஹுல் கல்க தும்ம யு'ஈதுஹ்; இன்ன தாலிக 'அலல் லாஹி யஸீர்
அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு (அதனை எவ்வாறு) தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபம்.
قُلْ سِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ بَدَاَ الْخَلْقَ ثُمَّ اللّٰهُ یُنْشِئُ النَّشْاَةَ الْاٰخِرَةَ ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟ۚ
قُلْகூறுவீராக!سِيْرُوْاசுற்றுங்கள்!فِى الْاَرْضِபூமியில்فَانْظُرُوْاபாருங்கள்!كَيْفَஎப்படிبَدَاَஅவன்ஆரம்பித்தான்الْخَـلْقَ‌படைப்புகளைثُمَّபிறகுاللّٰهُஅல்லாஹ்يُنْشِئُஉருவாக்குவான்النَّشْاَةَஉருவாக்குதல்الْاٰخِرَةَ‌ ؕமற்றொரு முறைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்عَلٰىமீதுكُلِّ شَىْءٍஎல்லாவற்றின்قَدِيْرٌ‌ۚ‏பேராற்றலுடையவன்
குல் ஸீரூ Fபில் அர்ளி Fபன்ளுரூ கய்Fப Bபத அல் கல்க தும்ம் அல்லாஹு யுன்ஷி''உன் னஷ் அதல் ஆகிரஹ்; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
“பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
یُعَذِّبُ مَنْ یَّشَآءُ وَیَرْحَمُ مَنْ یَّشَآءُ ۚ وَاِلَیْهِ تُقْلَبُوْنَ ۟
يُعَذِّبُவேதனை செய்வான்مَنْ يَّشَآءُதான் நாடியவரைوَيَرْحَمُஇன்னும் கருணை காட்டுவான்مَنْ يَّشَآءُ ۚஅவன் நாடியவருக்குوَاِلَيْهِஅவனிடமேتُقْلَبُوْنَ‏நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
யு'அத்திBபு ம(ன்)ய் யஷா'உ வ யர்ஹமு ம(ன்)ய் யஷா'; வ இலய்ஹி துக்லBபூன்
தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்குக் கிருபை செய்கிறான் - (இறுதியில்) அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ ؗ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟۠
وَمَاۤ اَنْـتُمْ بِمُعْجِزِيْنَநீங்கள் பலவீனப்படுத்திவிட முடியாதுفِى الْاَرْضِபூமியில்وَلَا فِى السَّمَآءِ‌இன்னும் வானத்தில்وَمَا لَـكُمْஇன்னும் உங்களுக்கு இல்லைمِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிمِنْ وَّلِىٍّஒரு பாதுகாவலரும்وَّلَا نَصِيْرٍ‏உதவியாளரும்
வ மா அன்தும் BபிமுஃஜிZஜீன Fபில் அர்ளி வலா Fபிஸ்ஸமா'இ வமா லகும் மின் தூனில் லாஹி மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
பூமியிலோ, வானத்திலோ நீங்கள் (அவனை) இயலாமல் ஆக்குபவர்களல்லர். மேலும், உங்களுக்கு அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலனோ, உதவியாளனோ இல்லை.  
وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ وَلِقَآىِٕهٖۤ اُولٰٓىِٕكَ یَىِٕسُوْا مِنْ رَّحْمَتِیْ وَاُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
وَالَّذِيْنَ كَفَرُوْاநிராகரிக்கின்றவர்கள்بِاٰيٰتِஅத்தாட்சிகளையும்اللّٰهِஅல்லாஹ்வின்وَلِقَآٮِٕهٖۤஅவனது சந்திப்பையும்اُولٰٓٮِٕكَஅவர்கள்يَٮِٕسُوْاநிராசை அடைந்து விட்டனர்مِنْ رَّحْمَتِىْஎனது கருணையிலிருந்துوَاُولٰٓٮِٕكَஅவர்கள்لَهُمْஅவர்களுக்கு உண்டுعَذَابٌதண்டனைاَلِيْمٌ‏வேதனை தரும்
வல்லதீன கFபரூ Bபி ஆயாதில் லாஹி வ லிகா'இஹீ உலா'இக ய'இஸூ மிர் ரஹ்மதீ வ உலா'இக லஹும் 'அதாBபுன் அலீம்
இன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ, அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள்; மேலும், இ(த்தகைய)வர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا اقْتُلُوْهُ اَوْ حَرِّقُوْهُ فَاَنْجٰىهُ اللّٰهُ مِنَ النَّارِ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
فَمَا كَانَஇல்லைجَوَابَபதில்قَوْمِهٖۤஅவருடைய மக்களின்اِلَّاۤதவிரاَنْ قَالُواஎன்று கூறியேاقْتُلُوْهُஅவரைகொள்ளுங்கள்اَوْஅல்லதுحَرِّقُوْهُஅவரை எரித்து விடுங்கள்فَاَنْجٰٮهُஆக, அவரை பாதுகாத்தான்اللّٰهُஅல்லாஹ்مِنَ النَّارِ ؕநெருப்பிலிருந்துاِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் உள்ளனلَاٰيٰتٍபல அத்தாட்சிகள்لِّقَوْمٍமக்களுக்குيُّؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்கின்ற
Fபமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலுக்துலூஹு அவ் ஹர்ரிகூஹு Fப அன்ஜாஹுல் லாஹு மினன் னார்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லி கவ்மி(ன்)ய் யு'மினூன்
இதற்கு அவருடைய சமூகத்தாரின் பதிலெல்லாம் “அவரைக் கொன்று விடுங்கள் அல்லது நெருப்பிலிட்டுப் பொசுக்குங்கள்” என்று கூறியதைத் தவிர வேறில்லை; ஆனால், அல்லாஹ் அவரை (அந்த) நெருப்பிலிருந்து ஈடேற்றினான்; நிச்சயமாக இதில், ஈமான் கொண்ட சமூகத்தோருக்கு தக்க அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَقَالَ اِنَّمَا اتَّخَذْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا ۙ مَّوَدَّةَ بَیْنِكُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۚ ثُمَّ یَوْمَ الْقِیٰمَةِ یَكْفُرُ بَعْضُكُمْ بِبَعْضٍ وَّیَلْعَنُ بَعْضُكُمْ بَعْضًا ؗ وَّمَاْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟ۗۙ
وَقَالَஇன்னும் கூறினார்اِنَّمَا اتَّخَذْتُمْநீங்கள் எடுத்துக் கொண்டதெல்லாம்مِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிاَوْثَانًا ۙசிலைகளைمَّوَدَّةَஅன்பினால்தான்بَيْنِكُمْஉங்களுக்கு மத்தியில்فِى الْحَيٰوةِவாழ்வில்الدُّنْيَا ۚஇவ்வுலகثُمَّபிறகுيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்يَكْفُرُமறுத்து விடுவார்கள்بَعْضُكُمْஉங்களில் சிலர்بِبَعْضٍசிலரைوَّيَلْعَنُசபிப்பார்கள்بَعْضُكُمْஉங்களில் சிலர்بَعْضًا சிலரைوَّمَاْوٰٮكُمُஉங்கள் தங்குமிடம்النَّارُநரகம்தான்وَمَا لَـكُمْஉங்களுக்கு யாரும் இல்லைمِّنْ نّٰصِرِيْنَ ۙஉதவியாளர்கள்
வ கால இன்னமத் தகத் தும் மின் தூனில் லாஹி அவ்தானம் மவத்தத Bபய்னிகும் Fபில் ஹயாதித் துன்யா தும்ம யவ்மல் கியாமதி யக்Fபுரு Bபஃளுகும் BபிBபஃளி(ன்)வ் வ யல்'அனு Bபஃளுகும் Bபஃள(ன்)வ் வ ம'வாகுமுன் னாரு வமா லகும் மின் னாஸிரீன்
மேலும் (இப்ராஹீம்) சொன்னார்: “உலக வாழ்க்கையில் அல்லாஹ்வையன்றி (சிலரை) வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டது (அவர்கள் மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தினால்தான்; பின்னர் கியாம நாளன்று உங்களில் சிலர் சிலரை நிராகரிப்பார்கள்; உங்களில் சிலர் சிலரை சபித்துக் கொள்வர்; (இறுதியில்), நீங்கள் ஒதுங்குந்தலம் (நரக) நெருப்புத்தான்; (அங்கு) உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை.”
فَاٰمَنَ لَهٗ لُوْطٌ ۘ وَقَالَ اِنِّیْ مُهَاجِرٌ اِلٰی رَبِّیْ ؕ اِنَّهٗ هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
فَاٰمَنَஆக, நம்பிக்கைகொண்டார்لَهٗஅவரைلُوْطٌ‌ۘலூத்وَقَالَஇன்னும் அவர் கூறினார்اِنِّىْநிச்சயமாக நான்مُهَاجِرٌவெளியேறிசெல்கிறேன்اِلٰى رَبِّىْ ؕஎன் இறைவனின் பக்கம்اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
Fப ஆமன லஹூ லூத்; வ கால இன்னீ முஹஜிருன் இலா ரBப்Bபீ இன்னஹூ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
(இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்ராஹீம்): “நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” என்று கூறினார்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ وَجَعَلْنَا فِیْ ذُرِّیَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتٰبَ وَاٰتَیْنٰهُ اَجْرَهٗ فِی الدُّنْیَا ۚ وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟
وَوَهَبْنَاநாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கையும்وَيَعْقُوْبَயஃகூபையும்وَجَعَلْنَاஇன்னும் ஆக்கினோம்فِىْ ذُرِّيَّتِهِஅவரது சந்ததிகளில்النُّبُوَّةَநபித்துவத்தையும்وَالْكِتٰبَவேதங்களையும்وَاٰتَيْنٰهُஇன்னும் அவருக்கு நாம் கொடுத்தோம்اَجْرَهٗஅவருடைய கூலியைفِى الدُّنْيَا ۚஇம்மையில்وَاِنَّهٗநிச்சயமாக அவர்فِى الْاٰخِرَةِமறுமையில்لَمِنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில் இருப்பார்
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப வ ஜ'அல்னா Fபீ துர்ரிய்யதிஹின் னுBபுவ்வத வல் கிதாBப வ ஆதய்னாஹு அஜ்ரஹூ Fபித் துன்யா வ இன்னஹூ Fபில் ஆகிரதி லமினஸ் ஸாலிஹீன்
மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اِنَّكُمْ لَتَاْتُوْنَ الْفَاحِشَةَ ؗ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِیْنَ ۟
وَلُوْطًاஇன்னும் லூத்தைاِذْ قَالَஅவர் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக!لِقَوْمِهٖۤதனது மக்களுக்குاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَـتَاْتُوْنَசெய்கிறீர்கள்الْفَاحِشَةَமானக்கேடான செயலைمَا سَبَـقَكُمْஉங்களுக்கு முன் செய்ததில்லைبِهَا مِنْ اَحَدٍஇதை/ஒருவரும்مِّنَ الْعٰلَمِيْنَ‏அகிலத்தாரில்
வ லூதன் இத் கால லிகவ்மிஹீ இன்னகும் ல த'தூனல் Fபாஹிஷத மா ஸBபககும் Bபிஹா மின் அஹதின் மினல் 'ஆலமீன்
மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.
اَىِٕنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ وَتَقْطَعُوْنَ السَّبِیْلَ ۙ۬ وَتَاْتُوْنَ فِیْ نَادِیْكُمُ الْمُنْكَرَ ؕ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللّٰهِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
اَٮِٕنَّكُمْ لَـتَاْتُوْنَநீங்கள் உறவு கொள்கிறீர்களா?الرِّجَالَஆண்களிடம்وَتَقْطَعُوْنَதடுக்கிறீர்கள்السَّبِيْلَ ۙபாதைகளைوَتَاْ تُوْنَசெய்கிறீர்கள்فِىْ نَادِيْكُمُஉங்கள் சபைகளில்الْمُنْكَرَ ؕகெட்டசெயலைفَمَا كَانَஇருக்கவில்லைجَوَابَபதில்قَوْمِهٖۤஅவருடைய மக்களின்اِلَّاۤதவிரاَنْ قَالُواஎன்று கூறியதைائْتِنَاஎங்களிடம் கொண்டு வருவீராகبِعَذَابِதண்டனையைاللّٰهِஅல்லாஹ்வின்اِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَ‏உண்மையாளர்களில்
அ'இன்னகும் ல த'தூனர் ரிஜால வ தக்த'ஊனஸ் ஸBபீல வ த'தூன Fபீ னாதீகுமுல் முன்கர Fபமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலு' தினா Bபி'அதாBபில் லாஹி இன் குன்த மினஸ் ஸாதிகீன்
நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்” என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: “நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக” என்பது தவிர வேறு எதுவுமில்லை.
قَالَ رَبِّ انْصُرْنِیْ عَلَی الْقَوْمِ الْمُفْسِدِیْنَ ۟۠
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவா!انْصُرْنِىْஎனக்கு நீ உதவுவாயாகعَلَىஎதிராகالْقَوْمِமக்களுக்குالْمُفْسِدِيْنَ‏கெடுதி செய்கின்ற(வர்கள்)
கால ரBப்Bபின் ஸுர்னீ 'அலல் கவ்மில் முFப்ஸிதீன்
அப்போது அவர்: “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.  
وَلَمَّا جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِیْمَ بِالْبُشْرٰی ۙ قَالُوْۤا اِنَّا مُهْلِكُوْۤا اَهْلِ هٰذِهِ الْقَرْیَةِ ۚ اِنَّ اَهْلَهَا كَانُوْا ظٰلِمِیْنَ ۟ۚۖ
وَلَمَّا جَآءَتْவந்த போதுرُسُلُنَاۤநமது தூதர்கள்اِبْرٰهِيْمَஇப்ராஹீமிடம்بِالْبُشْرٰىۙநற்செய்தியுடன்قَالُـوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்مُهْلِكُوْۤاஅழிக்கப் போகிறோம்اَهْلِவசிப்பவர்هٰذِهِஇந்தالْقَرْيَةِ ۚஊரில்اِنَّநிச்சயமாகاَهْلَهَاஇதில் வசிப்பவர்கள்كَانُوْاஇருக்கின்றனர்ظٰلِمِيْنَ‌ ۖ ۚ‏தீயவர்களாக
வ லம்மா ஜா'அத் ருஸுலுனா இBப்ராஹீம Bபில் Bபுஷ்ரா காலூ இன்னா முஹ்லிகூ அஹ்லி ஹாதிஹில் கர்யதி இன்ன அஹ்லஹா கானூ ளாலிமீன்
நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள்.
قَالَ اِنَّ فِیْهَا لُوْطًا ؕ قَالُوْا نَحْنُ اَعْلَمُ بِمَنْ فِیْهَا ؗۥ لَنُنَجِّیَنَّهٗ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ؗۗ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்اِنَّநிச்சயமாகفِيْهَاஅதில் இருக்கிறார்لُوْطًا ؕலூத்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்نَحْنُநாங்கள்اَعْلَمُநன்கறிந்தவர்கள்بِمَنْ فِيْهَا‌அதில்உள்ளவர்களைلَـنُـنَجِّيَـنَّهٗநிச்சயமாக அவரையும் நாம் பாதுகாப்போம்وَاَهْلَهٗۤஅவருடைய குடும்பத்தாரையும்اِلَّاதவிரامْرَاَتَهٗஅவருடைய மனைவியைكَانَتْஅவள்ஆகிவிடுவாள்مِنَ الْغٰبِرِيْنَ‏மீதம் இருப்பவர்களில்
கால இன்ன Fபீஹா லூதா; காலூ னஹ்னு அஃலமு Bபிமன் Fபீஹா லனுனஜ்ஜ்ஜியன்னஹூ வ அஹ்லஹூ இல்லம் ர அதஹூ கானத் மினல் காBபிரீன்
“நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்ராஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.
وَلَمَّاۤ اَنْ جَآءَتْ رُسُلُنَا لُوْطًا سِیْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالُوْا لَا تَخَفْ وَلَا تَحْزَنْ ۫ اِنَّا مُنَجُّوْكَ وَاَهْلَكَ اِلَّا امْرَاَتَكَ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
وَلَمَّاۤ اَنْ جَآءَتْவந்த போதுرُسُلُـنَاநமது தூதர்கள்لُوْطًاலூத்திடம்سِىْٓءَஅவர் மனம் புண்பட்டார்بِهِمْஅவர்களால்وَضَاقَஇன்னும் அவர் நெருக்கடிக்கு உள்ளானார்بِهِمْஅவர்களால்ذَرْعًاமனوَّقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَا تَخَفْபயப்படாதீர்وَلَا تَحْزَنْ‌இன்னும் கவலைப்படாதீர்!اِنَّاநிச்சயமாக நாம்مُنَجُّوْكَஉம்மைபாதுகாப்போம்وَاَهْلَكَஉமது குடும்பத்தையும்اِلَّاதவிரامْرَاَتَكَஉமது மனைவியைكَانَتْஅவள்ஆகிவிடுவாள்مِنَ الْغٰبِرِيْنَ‏மீதம் இருப்பவர்களில்
வ லம்மா அன் ஜா'அத் ருஸுலுனா லூதன் ஸீ'அ Bபிஹிம் வ ளாக Bபிஹிம் தர்'அ(ன்)வ் வ காலூ லா தகFப் வலா தஹ்Zஜன் இன்னா முனஜ்ஜூக வ அஹ்லக இல்லம் ர அதக கானத் மினல் காBபிரீன்
இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் “நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்” என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.
اِنَّا مُنْزِلُوْنَ عَلٰۤی اَهْلِ هٰذِهِ الْقَرْیَةِ رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்مُنْزِلُوْنَஇறக்குவோம்عَلٰٓىமீதுاَهْلِவசிப்பவர்هٰذِهِஇந்தالْقَرْيَةِஊரில்رِجْزًاதண்டனையைمِّنَ السَّمَآءِவானத்திலிருந்துبِمَا كَانُوْا يَفْسُقُوْنَ‏அவர்கள் பாவம் செய்துகொண்டு இருந்ததால்
இன்னா முன்Zஜிலூன 'அலா அஹ்லி ஹாதிஹில் கர்யதி ரிஜ்Zஜன் மினஸ் ஸமா'இ Bபிமா கானூ யFப்ஸுகூன்
நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது, இவர்கள் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக, வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.
وَلَقَدْ تَّرَكْنَا مِنْهَاۤ اٰیَةً بَیِّنَةً لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகتَّرَكْنَاநாம் விட்டுள்ளோம்مِنْهَاۤஅதில்اٰيَةًۢஅத்தாட்சியைبَيِّنَةًதெளிவானلِّـقَوْمٍமக்களுக்குيَّعْقِلُوْنَ‏சிந்தித்து புரிகின்ற
வ லகத் தரக்னா மின் ஹா ஆயதன் Bபய்யினதன் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
(அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம்.
وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ۙ فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ وَارْجُوا الْیَوْمَ الْاٰخِرَ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
وَاِلٰى مَدْيَنَஇன்னும் ‘மத்யன்’க்குاَخَاசகோதரர்هُمْஅவர்களுடையشُعَيْبًا ۙஷுஐபைفَقَالَஅவர் கூறினார்يٰقَوْمِஎன் மக்களே!اعْبُدُواவணங்குங்கள்!اللّٰهَஅல்லாஹ்வைوَ ارْجُواஇன்னும் ஆதரவு வையுங்கள்!الْيَوْمَநாளைالْاٰخِرَமறுமைوَلَا تَعْثَوْاவரம்பு மீறி அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்فِى الْاَرْضِபூமியில்مُفْسِدِيْنَ‏தீயவர்களாக இருந்து
வ இலா மத்யன அகாஹும் ஷு'அய்Bபன் Fபகால யா கவ்மிஃ-Bபுதுல் லாஹ வர்ஜுல் யவ்மல் ஆகிர வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
மேலும், மத்யன் (ஊராருக்கு) அவர்கள் சகோதரராகிய ஷுஐபை (அனுப்பி வைத்தோம்); ஆகவே அவர்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; இறுதி நாளை (நம்பி) எதிர்பாருங்கள், மேலும், பூமியில் குழப்பம் செய்வோராக, (விஷமிகளாகத்) திரியாதீர்கள்” என்று கூறினார்.
فَكَذَّبُوْهُ فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟ؗ
فَكَذَّبُوْهُஅவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்فَاَخَذَتْهُمُஆகவே, அவர்களைப் பிடித்ததுالرَّجْفَةُநிலநடுக்கம்فَاَصْبَحُوْاஅவர்கள் காலையில் ஆகிவிட்டனர்فِىْ دَارِهِمْதங்கள் இல்லத்தில்جٰثِمِيْنَ‏இறந்தவர்களாக
Fபகத்தBபூஹு Fப அகதத் ஹுமுர் ரஜ்Fபது Fப அஸ்Bபஹூ Fபீ தாரிஹிம் ஜாதிமீன்
எனினும் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலால் அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது; ஆகவே, அவர்கள் தம் வீடுகளில் அதிகாலையில் (மரித்து) முகங்குப்புற விழுந்து கிடந்தார்கள்.
وَعَادًا وَّثَمُوْدَاۡ وَقَدْ تَّبَیَّنَ لَكُمْ مِّنْ مَّسٰكِنِهِمْ ۫ وَزَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِیْلِ وَكَانُوْا مُسْتَبْصِرِیْنَ ۟ۙ
وَعَادًاஇன்னும் ஆதைوَّثَمُوْدَا۟இன்னும் சமூதைوَقَدْ تَّبَيَّنَதெளிவாக இருக்கின்றதுلَـكُمْஉங்களுக்குمِّنْ مَّسٰكِنِهِمْ‌அவர்களின் தங்குமிடங்களில் இருந்துوَزَيَّنَஅலங்கரித்தான்لَهُمُஅவர்களுக்குالشَّيْطٰنُஷைத்தான்اَعْمَالَهُمْஅவர்களின் செயல்களைفَصَدَّதடுத்தான்هُمْஅவர்களைعَنِ السَّبِيْلِபாதையிலிருந்துوَكَانُوْاஅவர்கள் இருந்தனர்مُسْتَـبْصِرِيْنَۙ‏தெளிவானவர்களாக
வ 'ஆத(ன்)வ் வ தமூத வ கத் தBபய்யன லகும் மின் மஸாகினிஹிம் வ Zஜய்யன லஹுமுஷ் ஷய்தானு அஃமாலஹும் Fபஸத்தஹும் 'அனிஸ் ஸBபீலி வ கானூ முஸ்தBப்ஸிரீன்
இவ்வாறே, ஆது, ஸமூது (சமூகத்தாரையும் அழித்தோம்); அன்றியும் அவர்கள் வசித்த இடங்களிலிருந்து (ஒரு சில சின்னங்கள்) உங்களுக்குத் தெளிவாக தென்படுகின்றன; ஏனெனில் ஷைத்தான் அவர்களுடைய (தீச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் நல்லறிவு படைத்தவர்களாக இருந்தும், அவர்களை நேர்வழியில் (போக விடாது) தடுத்து விட்டான்.
وَقَارُوْنَ وَفِرْعَوْنَ وَهَامٰنَ ۫ وَلَقَدْ جَآءَهُمْ مُّوْسٰی بِالْبَیِّنٰتِ فَاسْتَكْبَرُوْا فِی الْاَرْضِ وَمَا كَانُوْا سٰبِقِیْنَ ۟ۚۖ
وَقَارُوْنَஇன்னும் காரூனையும்وَفِرْعَوْنَஃபிர்அவ்னையும்وَهَامٰنَ‌ஹாமானையும்وَلَقَدْதிட்டவட்டமாகجَآءَهُمْஅவர்களிடம் வந்தார்مُّوْسٰىமூசாبِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَاسْتَكْبَرُوْاஅவர்கள் பெருமையடித்தனர்فِى الْاَرْضِபூமியில்وَمَا كَانُوْاஅவர்கள் இல்லைسٰبِقِيْنَ ۖ ۚ‏தப்பி விடுபவர்களாக
வ காரூன வ Fபிர்'அவ்ன வ ஹாமான வ லகத் ஜா'அஹும் மூஸா Bபில்Bபய்யினாதி Fபஸ்தக்Bபரூ Fபில் அர்ளி வமா கானூ ஸாBபிகீன்
இன்னும் ஃகாரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (அழித்தோம்); திடனாக, அவர்களிடம் மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்; எனினும், (அவற்றை நிராகரித்து) அவர்கள் பூமியில் பெருமையடித்து நின்றார்கள். ஆனால் அவர்கள் (அழிவிலிருந்து) தப்பித்தார்களில்லை.
فَكُلًّا اَخَذْنَا بِذَنْۢبِهٖ ۚ فَمِنْهُمْ مَّنْ اَرْسَلْنَا عَلَیْهِ حَاصِبًا ۚ وَمِنْهُمْ مَّنْ اَخَذَتْهُ الصَّیْحَةُ ۚ وَمِنْهُمْ مَّنْ خَسَفْنَا بِهِ الْاَرْضَ ۚ وَمِنْهُمْ مَّنْ اَغْرَقْنَا ۚ وَمَا كَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
فَكُلًّاஒவ்வொருவரையும்اَخَذْنَاநாம் தண்டித்தோம்بِذَنْۢبِهٖ‌ ۚஅவர்களின் பாவத்தினால்فَمِنْهُمْஇவர்களில்مَّنْஎவர்கள்اَرْسَلْنَاநாம் அனுப்பினோம்عَلَيْهِஅவர்கள் மீதுحَاصِبًا‌ ۚகல் மழையைوَمِنْهُمْஇன்னும் இவர்களில்مَّنْ اَخَذَتْهُஎவர்கள்/பிடித்தோம்/அவர்கள்الصَّيْحَةُ‌ ۚஇடி முழக்கம்وَمِنْهُمْஇன்னும் , இவர்களில்مَّنْஎவர்கள்خَسَفْنَاநாம் சொருகினோம்بِهِஅவர்களைالْاَرْضَ‌ ۚபூமியில்وَمِنْهُمْஇன்னும் இவர்களில்مَّنْ اَغْرَقْنَا‌ ۚஎவர்கள்/நாம் மூழ்கடித்தோம்وَمَا كَانَஇல்லைاللّٰهُஅல்லாஹ்لِيَـظْلِمَهُمْஅவர்களுக்கு அநியாயம் செய்பவனாகوَلٰـكِنْஎனினும்كَانُوْۤاஅவர்கள் இருந்தனர்اَنْفُسَهُمْதங்களுக்கேيَظْلِمُوْنَ‏அநியாயம் செய்பவர்களாக
Fபகுல்லன் அகத்னா Bபி தன்Bபிஹீ Fபமின்ஹும் மன் அர்ஸல்னா 'அலய்ஹி ஹாஸிBபா; வ மின்ஹும் மன் அகதத் ஹுஸ் ஸய்ஹது வ மின்ஹும் மன் கஸFப்னா Bபிஹில் அர்ள வ மின்ஹும் மன் அக்ரக்னா; வமா கானல் லாஹு லி யள்லிமஹும் வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை; அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.
مَثَلُ الَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِیَآءَ كَمَثَلِ الْعَنْكَبُوْتِ ۚۖ اِتَّخَذَتْ بَیْتًا ؕ وَاِنَّ اَوْهَنَ الْبُیُوْتِ لَبَیْتُ الْعَنْكَبُوْتِ ۘ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟
مَثَلُஉதாரணம்الَّذِيْنَஎவர்கள்اتَّخَذُوْاஆக்கிக் கொண்டனர்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிاَوْلِيَآءَபாதுகாவலர்களாகكَمَثَلِஉதாரணத்தைப் போலالْعَنْكَبُوْتِ ۖۚசிலந்தியின்اِتَّخَذَتْஅது ஆக்கிக் கொண்டதுبَيْتًا ؕஒரு வீட்டைوَ اِنَّநிச்சயமாகاَوْهَنَமிக பலவீனமானதுالْبُيُوْتِவீடுகளில்لَبَيْتُவீடேالْعَنْكَبُوْتِ‌ۘசிலந்தியின்لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
மதலுல் லதீனத் தகதூ மின் தூனில் லாஹி அவ்லியா'அ கமதலில் 'அன்கBபூத், இத்தகதத் Bபய்தா; வ இன்ன அவ்ஹனல் Bபுயூதி ல Bபய்துல் 'அன்கBபூத்; லவ் கானூ யஃலமூன்
அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).
اِنَّ اللّٰهَ یَعْلَمُ مَا یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مِنْ شَیْءٍ ؕ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يَعْلَمُஅறிகின்றான்مَا يَدْعُوْنَஅவர்கள் அழைக்கின்றவற்றைمِنْ دُوْنِهٖஅவனையன்றிمِنْ شَىْءٍ‌ؕஎதுவாக இருந்தாலும்وَهُوَஅவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
இன்னல் லாஹ யஃலமு மா யத்'ஊன மின் தூனிஹீ மின் ஷய்'; வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் - இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ ۚ وَمَا یَعْقِلُهَاۤ اِلَّا الْعٰلِمُوْنَ ۟
وَتِلْكَஇந்தالْاَمْثَالُஉதாரணங்கள்نَضْرِبُهَاஅவற்றை நாம் விவரிக்கிறோம்لِلنَّاسِ‌ۚமக்களுக்குوَمَا يَعْقِلُهَاۤஇவற்றை சிந்தித்து புரியமாட்டார்கள்اِلَّاதவிரالْعٰلِمُوْنَ‏அறிஞர்களை
வ தில்கல் அம்தாலு னள்ரிBபுஹா லின்னாஸி வமா யஃகிலுஹா இல்லல் 'ஆலிமூன்
இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّلْمُؤْمِنِیْنَ ۟۠
خَلَقَபடைத்தான்اللّٰهُஅல்லாஹ்السَّمٰوٰتِவானங்களையும்وَ الْاَرْضَபூமியையும்بِالْحَـقِّ‌ ؕஉண்மையான காரணத்திற்கேاِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில்لَاٰيَةًஓர் அத்தாட்சி இருக்கிறதுلِّـلْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
கலகல் லாஹுஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்க்; இன்ன Fபீ தாலிக ல ஆயதன் லில் மு'மினீன்
வானங்களையும், பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே படைத்துள்ளான் - நிச்சயமாக இதில் முஃமின்களுக்கு அத்தாட்சி இருக்கிறது.  
اُتْلُ مَاۤ اُوْحِیَ اِلَیْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ ؕ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰی عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ ؕ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مَا تَصْنَعُوْنَ ۟
اُتْلُஓதுவீராக!مَاۤ اُوْحِىَவஹீ அறிவிக்கப்பட்டதைاِلَيْكَஉமக்குمِنَ الْكِتٰبِவேதத்தில்وَاَقِمِஇன்னும் நிலைநிறுத்துவீராகالصَّلٰوةَ ؕதொழுகையைاِنَّநிச்சயமாகالصَّلٰوةَதொழுகைتَنْهٰىதடுக்கிறதுعَنِ الْفَحْشَآءِமானக்கேடானவற்றை விட்டும்وَالْمُنْكَرِ‌ؕதீயகாரியங்களை விட்டும்وَلَذِكْرُநினைவு கூர்வதுاللّٰهِஅல்லாஹ்اَكْبَرُ ؕமிகப் பெரியதுوَاللّٰهُஅல்லாஹ்يَعْلَمُநன்கறிகின்றான்مَا تَصْنَعُوْنَ‏நீங்கள் செய்பவற்றை
உத்லு மா ஊஹிய இலய்க மினல் கிதாBபி வ அகிமிஸ் ஸலாத இன்னஸ் ஸலாத தன்ஹா 'அனில் Fபஹ்ஷா'இ வல் முன்கர்; வ லதிக்ருல் லாஹி அக்Bபர்; வல் லாஹு யஃலமு மா தஸ்ன'ஊன்
(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.
وَلَا تُجَادِلُوْۤا اَهْلَ الْكِتٰبِ اِلَّا بِالَّتِیْ هِیَ اَحْسَنُ ۖۗ اِلَّا الَّذِیْنَ ظَلَمُوْا مِنْهُمْ وَقُوْلُوْۤا اٰمَنَّا بِالَّذِیْۤ اُنْزِلَ اِلَیْنَا وَاُنْزِلَ اِلَیْكُمْ وَاِلٰهُنَا وَاِلٰهُكُمْ وَاحِدٌ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
وَلَا تُجَادِلُوْٓاதர்க்கம் செய்யாதீர்கள்اَهْلَ الْكِتٰبِவேதமுடையவர்களிடம்اِلَّاஅன்றிبِالَّتِىْமுறையில்هِىَஅதுاَحْسَنُ ۖமிக அழகியதுاِلَّاதவிரالَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயக்காரர்களைمِنْهُمْ‌அவர்களில் இருக்கின்றوَقُوْلُوْٓاஇன்னும் நீங்கள் கூறுங்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِالَّذِىْۤ اُنْزِلَஇறக்கப்பட்டதையும்اِلَيْنَاஎங்களுக்குوَاُنْزِلَஇறக்கப்பட்டதையும்اِلَيْكُمْஉங்களுக்குوَاِلٰهُـنَاஎங்கள் கடவுளும்وَاِلٰهُكُمْஉங்கள் கடவுளும்وَاحِدٌஒருவன்தான்وَّنَحْنُநாங்கள்لَهٗஅவனுக்குத்தான்مُسْلِمُوْنَ‏கீழ்ப்பணிந்தவர்கள்
வ லா துஜாதிலூ அஹ்லல் கிதாBபி இல்லா Bபில்லதீ ஹிய அஹ்ஸனு இல்லல் லதீன ளலமூ மின்ஹும் வ கூலூ ஆமன்னா Bபில்லதீ உன்Zஜில இலய்னா வ உன்Zஜில இலய்கும் வ இலாஹுன்ன வ இலஹுகும் வாஹிது(ன்)வ்-வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; “எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்” என்று கூறுவீர்களாக.
وَكَذٰلِكَ اَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ ؕ فَالَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یُؤْمِنُوْنَ بِهٖ ۚ وَمِنْ هٰۤؤُلَآءِ مَنْ یُّؤْمِنُ بِهٖ ؕ وَمَا یَجْحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا الْكٰفِرُوْنَ ۟
وَكَذٰلِكَஇவ்வாறுதான்اَنْزَلْنَاۤநாம் இறக்கினோம்اِلَيْكَஉமக்குالْكِتٰبَ‌ؕஇவ்வேதத்தைفَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُஎவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்குالْكِتٰبَவேதத்தைيُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்வார்கள்بِهٖ‌ۚஇதைوَمِنْ هٰٓؤُلَاۤءِஇன்னும் இவர்களில்مَنْ يُّؤْمِنُ بِهٖ ؕநம்பிக்கை கொள்கின்றவர்களும்/இதைوَ مَا يَجْحَدُமறுக்க மாட்டார்கள்بِاٰيٰتِنَاۤநமது வசனங்களைاِلَّاதவிரالْكٰفِرُوْنَ‏நிராகரிப்பாளர்களை
வ கதாலிக அன்Zஜல்னா இலய்கல் கிதாBப்; Fபல்லதீன ஆதய்னாஹுமுல் கிதாBப யு'மினூன Bபிஹீ வ மின் ஹா'உலா'இ ம(ன்)ய் யு'மினு Bபிஹ்; வமா யஜ்ஹது Bபி'ஆயாதினா இல்லல் காFபிரூன்
இவ்விதமே, (அவர்களுக்கு வேதம் இறக்கியது போன்றே நபியே!) உமக்கும் இவ்வேதத்தை இறக்கியிருக்கிறோம்; ஆகவே, நாம் (முன்னர்) எவருக்கு வேதத்தை, வழங்கியுள்ளோமோ, அவர்கள் இதனை நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும், இதை நம்பி ஏற்றுக் கொள்வோரும் இவர்களில் இருக்கிறார்கள் - காஃபிர்களைத் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
وَمَا كُنْتَ تَتْلُوْا مِنْ قَبْلِهٖ مِنْ كِتٰبٍ وَّلَا تَخُطُّهٗ بِیَمِیْنِكَ اِذًا لَّارْتَابَ الْمُبْطِلُوْنَ ۟
وَمَا كُنْتَநீர் இல்லைتَـتْلُوْاஓதுபவராகمِنْ قَبْلِهٖஇதற்கு முன்مِنْ كِتٰبٍஒரு வேதத்தைوَّلَا تَخُطُّهٗஇன்னும் அதை எழுதுபவராகவும் இல்லைبِيَمِيْنِكَ‌உமது வலக்கரத்தால்اِذًاஅப்படி இருந்திருந்தால்لَّارْتَابَநிச்சயமாக சந்தேகம் கொண்டிருப்பார்கள்الْمُبْطِلُوْنَ‏வீணர்கள்
வமா குன்த தத்லூ மின் கBப்லிஹீ மின் கிதாBபி(ன்)வ் வலா தகுத்துBப்ஹூ Bபி யமீனிக இதல் லர்தாBபல் முBப்திலூன்
அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.
بَلْ هُوَ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ فِیْ صُدُوْرِ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ ؕ وَمَا یَجْحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا الظّٰلِمُوْنَ ۟
بَلْமாறாக,هُوَஇதுاٰيٰتٌۢஅத்தாட்சிகளாகும்بَيِّنٰتٌதெளிவானفِىْ صُدُوْرِநெஞ்சங்களில்الَّذِيْنَ اُوْتُواகொடுக்கப்பட்டவர்களின்الْعِلْمَ‌ؕகல்விوَمَا يَجْحَدُமறுக்க மாட்டார்கள்بِاٰيٰتِنَاۤநமது வசனங்களைاِلَّاதவிரالظّٰلِمُوْنَ‏அநியாயக்காரர்களை
Bபல் ஹுவ ஆயாதும் Bபய்யினாதுன் Fபீ ஸுதூரில் லதீன ஊதுல் 'இல்ம்; வமா யஜ்ஹது Bபி ஆயாதினா இல்லள் ளாலிமூன்
அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
وَقَالُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیٰتٌ مِّنْ رَّبِّهٖ ؕ قُلْ اِنَّمَا الْاٰیٰتُ عِنْدَ اللّٰهِ ؕ وَاِنَّمَاۤ اَنَا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
وَقَالُوْاஅவர்கள் கூறினர்لَوْلَاۤ اُنْزِلَஇறக்கப்பட வேண்டாமா?عَلَيْهِஇவர் மீதுاٰيٰتٌஅத்தாட்சிகள்مِّنْ رَّبِّهٖ‌ؕஅவரது இறைவனிடமிருந்துقُلْகூறுவீராக!اِنَّمَاஎல்லாம்الْاٰيٰتُஅத்தாட்சிகள்عِنْدَ اللّٰهِ ؕஅல்லாஹ்விடம்وَاِنَّمَاۤஎல்லாம்اَنَا۟நான்نَذِيْرٌஎச்சரிப்பாளர்தான்مُّبِيْنٌ‏தெளிவான
வ காலூ லவ் லா உன்Zஜில 'அலய்ஹி ஆயாதும் மிர் ரBப்Bபிஹீ குல் இன்னமல் ஆயாது 'இன்தல் லாஹி வ இன்னமா அன னதீரும் முBபீன்
“அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
اَوَلَمْ یَكْفِهِمْ اَنَّاۤ اَنْزَلْنَا عَلَیْكَ الْكِتٰبَ یُتْلٰی عَلَیْهِمْ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَرَحْمَةً وَّذِكْرٰی لِقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠
اَوَلَمْ يَكْفِهِمْஅவர்களுக்கு போதுமாகாதா?اَنَّاۤநிச்சயமாக நாம்اَنْزَلْنَاஇறக்கியதுعَلَيْكَஉம்மீதுالْكِتٰبَஇந்த வேதத்தைيُتْلٰىஓதப்படுகின்றعَلَيْهِمْ‌ؕஅவர்கள் மீதுاِنَّநிச்சயமாகفِىْ ذٰلِكَஇதில் இருக்கின்றனلَرَحْمَةًஅருளும்وَّذِكْرٰىஅறிவுரையும்لِقَوْمٍமக்களுக்குيُّؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்கின்ற
அவ லம் யக்Fபிஹிம் அன்னா அன்Zஜல்னா 'அலய்கல் கிதாBப யுத்லா 'அலய்ஹிம்; இன்ன Fபீ தாலிக லரஹ்மத(ன்)வ் வ திக்ரா லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.  
قُلْ كَفٰی بِاللّٰهِ بَیْنِیْ وَبَیْنَكُمْ شَهِیْدًا ۚ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَالَّذِیْنَ اٰمَنُوْا بِالْبَاطِلِ وَكَفَرُوْا بِاللّٰهِ ۙ اُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
قُلْகூறுவீராக!كَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேبَيْنِىْஎனக்கிடையில்وَبَيْنَكُمْஉங்களுக்குஇடையில்شَهِيْدًا ۚசாட்சியால்يَعْلَمُஅவன் நன்கறிவான்مَاஉள்ளவற்றைفِى السَّمٰوٰتِவானங்களில்وَالْاَرْضِ‌ ؕஇன்னும் பூமியில்وَالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்بِالْبَاطِلِபொய்யைوَكَفَرُوْاநிராகரித்தவர்கள்بِاللّٰهِ ۙஅல்லாஹ்வைاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْخٰسِرُوْنَ‏நஷ்டவாளிகள்
குல் கFபா Bபில்லாஹி Bபய்னீ வ Bபய்னகும் ஷஹீதா; யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; வல்லதீன ஆமனூ Bபில் Bபாதிலி வ கFபரூ Bபில்லாஹி உலா'இக ஹுமுல் காஸிரூன்
“எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே போதுமானவன்; வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான்; எனவே, எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்” என்று (நபியே!) நீர் கூறும்.
وَیَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ ؕ وَلَوْلَاۤ اَجَلٌ مُّسَمًّی لَّجَآءَهُمُ الْعَذَابُ ؕ وَلَیَاْتِیَنَّهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
وَيَسْتَعْجِلُوْنَكَஅவர்கள் உம்மிடம் அவசரமாகக் கேட்கின்றனர்بِالْعَذَابِ‌ؕதண்டனையைوَلَوْلَاۤ اَجَلٌஒரு தவணை இல்லை என்றால்مُّسَمًّىகுறிப்பிடப்பட்டلَّجَآءَவந்தே இருக்கும்هُمُஅவர்களுக்குالْعَذَابُؕதண்டனைوَلَيَاْتِيَنَّهُمْஅவர்களிடம் வரும்بَغْتَةًதிடீரெனوَّهُمْநிச்சயமாக அவர்கள்لَا يَشْعُرُوْنَ‏உணராதவர்களாக இருக்க
வ யஸ்தஃஜிலூனக Bபில்'அதாBப்; வ லவ் லா அஜலும் முஸம்மல் லஜா'அஹுமுல் அ'தாBப்; வ ல ய'திஅன்னஹும் Bபக்த த(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
இன்னும், (மறுமையின்) வேதனையைப் பற்றி அவர்கள் உம்மை அவசரப்படுத்துகிறார்கள்; மேலும், (அதற்கெனக்) குறிப்பிட்ட தவணை ஏற்படுத்தப்படாதிருப்பின் அவ்வேதனை அவர்களுக்கு வந்திருக்கும்; எனினும் (அத்தவணையை) அவர்கள் உணர்ந்தறிய முடியாதிருக்கும் நிலையில், அவர்களிடம் அ(வ்வேதனையான)து திடீரென்று வந்து சேரும்.
یَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ ؕ وَاِنَّ جَهَنَّمَ لَمُحِیْطَةٌ بِالْكٰفِرِیْنَ ۟ۙ
يَسْتَعْجِلُوْنَكَஅவர்கள் உம்மிடம் அவசரமாகக் கேட்கின்றனர்بِالْعَذَابِؕதண்டனையைوَ اِنَّநிச்சயமாகجَهَنَّمَநரகம்لَمُحِيْطَةٌ ۢசூழ்ந்தே உள்ளதுبِالْكٰفِرِيْنَۙ‏நிராகரிப்பாளர்களை
யஸ்தஃஜிலூனக Bபில்'அதாBப்; வ இன்ன ஜஹன்னம ல முஹீததும் Bபில் காFபிரீன்
அவ்வேதனையை அவசரப்படுத்து மாறு அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள் - ஆனால், நிச்சயமாக நரகம் காஃபிர்களைச் சூழ்ந்து கொள்வதாக இருக்கிறது.
یَوْمَ یَغْشٰىهُمُ الْعَذَابُ مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ وَیَقُوْلُ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
يَوْمَநாளில்يَغْشٰٮهُمُஅவர்களை மூடிக்கொள்கின்றالْعَذَابُதண்டனைمِنْ فَوْقِهِمْஅவர்களுக்கு மேலிருந்தும்وَمِنْ تَحْتِகீழே இருந்தும்اَرْجُلِهِمْஅவர்களின் கால்களுக்குوَيَقُوْلُகூறுவான்ذُوْقُوْاநீங்கள் சுவையுங்கள்مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்து கொண்டிருந்ததை
யவ்ம யக்'ஷாஹுமுல் 'அதாBபு மின் Fபவ்கிஹிம் வ மின் தஹ்தி அர்ஜுலிஹிம் வ யகூலு தூகூ மா குன்தும் தஃமலூன்
அந்நாளில், அவ்வேதனை அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்குக் கீழிருந்தும் அவர்களை மூடிக் கொள்ளும். (அப்போது இறைவன்) “நீங்கள் செய்து கொண்டிருந்த(தின் பய)னைச் சுவைத்துப் பாருங்கள்“ என்று கூறுவான்.
یٰعِبَادِیَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ اَرْضِیْ وَاسِعَةٌ فَاِیَّایَ فَاعْبُدُوْنِ ۟
يٰعِبَادِىَஎன் அடியார்களே!الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டவர்கள்اِنَّநிச்சயமாகاَرْضِىْஎனது பூமிوَاسِعَةٌவிசாலமானதுفَاِيَّاىَஆகவே, என்னையேفَاعْبُدُوْنِ‏நீங்கள் வணங்குங்கள்!
யா 'இBபாதியல் லதீன ஆமனூ இன்ன அர்ளீ வாஸி 'அதுன் Fப இய்யாய FபஃBபுதூன்
ஈமான் கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது; ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.
كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ۫ ثُمَّ اِلَیْنَا تُرْجَعُوْنَ ۟
كُلُّஎல்லாنَفْسٍஆன்மாவும்ذَآٮِٕقَةُசுவைக்கக் கூடியதேالْمَوْتِமரணத்தைثُمَّபிறகுاِلَيْنَاநம்மிடமேتُرْجَعُوْنَ‏நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
குல்லு னFப்ஸின் தா'இகதுல் மவ்தி தும்ம இலய்னா துர்ஜ'ஊன்
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُبَوِّئَنَّهُمْ مِّنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ نِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟ۗۖ
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُوْاஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைلَـنُبَـوِّئَنَّهُمْஅவர்களுக்கு நாம் தயார்படுத்திக் கொடுப்போம்مِّنَ الْجَـنَّةِசொர்க்கத்தில்غُرَفًاபல அறைகளைتَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَஅவர்கள் நிரந்தரமானவர்கள்فِيْهَا ؕஅதில்نِعْمَமிகச் சிறப்பானதேاَجْرُகூலிالْعٰمِلِيْنَ‌ۖ‏அமல் செய்தவர்களின்
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ல னுBபவ்வி 'அன்னஹும் மினல் ஜன்னதி குரFபன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; னிஃம அஜ்ருல் 'ஆமிலீன்
எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
الَّذِیْنَ صَبَرُوْا وَعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟
الَّذِيْنَ صَبَرُوْاஅவர்கள் பொறுமையாக இருந்தனர்وَعَلٰىஇன்னும் மீதேرَبِّهِمْதங்கள் இறைவன்يَتَوَكَّلُوْنَ‏சார்ந்து இருந்தனர்
அல்லதீன ஸBபரூ வ 'அலா ரBப்Bபிஹிம் யதவக்கலூன்
(ஏனெனில்) அவர்கள் பொறுமையைக் கொண்டார்கள்; மேலும் தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
وَكَاَیِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا ۗۖ اَللّٰهُ یَرْزُقُهَا وَاِیَّاكُمْ ۖؗ وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَكَاَيِّنْஎத்தனையோمِّنْ دَآبَّةٍகால்நடைகள்لَّا تَحْمِلُசுமப்பதில்லைرِزْقَهَا ۖதனது உணவைاللّٰهُஅல்லாஹ்தான்يَرْزُقُهَاஅவற்றுக்கும் உணவளிக்கிறான்وَاِيَّاكُمْ‌ۖஉங்களுக்கும்وَهُوَஅவன்தான்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُ‏நன்கறிந்தவன்
வ க அய்யிம் மின் தாBப்Bபதில் லா தஹ்மிலு ரிZஜ்கஹா; அல் லாஹு யர்Zஜுகுஹா வ இய்யாகும்; வ ஹுவஸ் ஸமீ'உல் அலீம்
அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை; அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான் - இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَیَقُوْلُنَّ اللّٰهُ ۚ فَاَنّٰی یُؤْفَكُوْنَ ۟
وَلَٮِٕنْ سَاَلْتَهُمْஅவர்களிடம் நீர் கேட்டால்مَّنْ خَلَقَயார் படைத்தான்?السَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضَபூமியையும்وَسَخَّرَவசப்படுத்தினான்الشَّمْسَசூரியனையும்وَالْقَمَرَசந்திரனையும்لَيَقُوْلُنَّநிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்اللّٰهُ‌ۚஅல்லாஹ்தான்فَاَنّٰىஆக, அவர்கள் எப்படிيُؤْفَكُوْنَ‏திருப்பப்படுகிறார்கள்
வ ல'இன் ஸ அல்தஹும் மன் கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வ ஸக்கரஷ் ஷம்ஸ வல் கமர ல யகூலுன்னல் லாஹு Fப அன்ன யு'Fபகூன்
மேலும், (நபியே!) “நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?” என்று கேட்டால், “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்?
اَللّٰهُ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَیَقْدِرُ لَهٗ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
اَللّٰهُஅல்லாஹ்தான்يَبْسُطُவிசாலமாக்குகின்றான்الرِّزْقَஉணவைلِمَنْ يَّشَآءُதான் நாடியவர்களுக்குمِنْ عِبَادِهٖதனது அடியார்களில்وَيَقْدِرُஇன்னும் சுருக்குகின்றான்لَهٗ ؕஅவருக்குاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
அல்லாஹு யBப்ஸுதுர் ரிZஜ்க லிம(ன்)ய் யஷா'உ மின் 'இBபாதிஹீ வ யக்திரு லஹ்; இன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
“அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்.”
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ نَّزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحْیَا بِهِ الْاَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَیَقُوْلُنَّ اللّٰهُ ؕ قُلِ الْحَمْدُ لِلّٰهِ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْقِلُوْنَ ۟۠
وَلَٮِٕنْ سَاَلْتَهُمْநீர் அவர்களிடம் கேட்டால்مَّنْயார்نَّزَّلَஇறக்கினான்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துمَآءًமழையைفَاَحْيَاஉயிர்ப்பிப்பவன்بِهِஅதன் மூலம்الْاَرْضَபூமியைمِنْۢ بَعْدِபின்னர்مَوْتِهَاஅது இறந்து விட்டلَيَقُوْلُنَّநிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்اللّٰهُ‌ؕஅல்லாஹ்قُلِநீர் கூறுவீராக!الْحَمْدُபுகழ் எல்லாம்لِلّٰهِ‌ؕஅல்லாஹ்விற்கே!بَلْமாறாகاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்لَا يَعْقِلُوْنَ‏சிந்தித்து புரிய மாட்டார்கள்
வ ல'இன் ஸ அல்தஹும் மன் னZஜ்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fப அஹ்யா Bபிஹில் அர்ள மின் Bபஃதி மவ்திஹா ல யகூலுன்னல் லாஹ்; குலில் ஹம்து லில்லாஹ்; Bபல் அக்தருஹும் லா யஃகிலூன்
இன்னும், அவர்களிடம்: ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?” என்று நீர் கேட்பீராயின்: “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) “அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக; எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.  
وَمَا هٰذِهِ الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا لَهْوٌ وَّلَعِبٌ ؕ وَاِنَّ الدَّارَ الْاٰخِرَةَ لَهِیَ الْحَیَوَانُ ۘ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟
وَمَا هٰذِهِஇல்லைالْحَيٰوةُவாழ்க்கைالدُّنْيَاۤஇவ்வுலகاِلَّاதவிரلَهْوٌவேடிக்கையாகவும்وَّلَعِبٌ‌ؕவிளையாட்டாகவும்وَاِنَّநிச்சயமாகالدَّارَவீடுالْاٰخِرَةَமறுமைلَهِىَஅதுதான்الْحَـيَوَانُ‌ۘநிரந்தரமானதுلَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே!
வமா ஹாதிஹில் ஹயா துத் துன்யா இல்லா லஹ்வு(ன்)வ்-வ ல'இBப்; வ இன்னத் தாரல் ஆகிரத ல ஹியல் ஹ யவான்; லவ் கானூ யஃலமூன்
இன்னும், இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை - இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும் - இவர்கள் (இதை) அறிந்திருந்தால்.
فَاِذَا رَكِبُوْا فِی الْفُلْكِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۚ۬ فَلَمَّا نَجّٰىهُمْ اِلَی الْبَرِّ اِذَا هُمْ یُشْرِكُوْنَ ۟ۙ
فَاِذَا رَكِبُوْاஅவர்கள் பயணித்தால்فِى الْفُلْكِகப்பலில்دَعَوُاஅழைக்கின்றனர்اللّٰهَஅல்லாஹ்வைمُخْلِصِيْنَதூய்மைப்படுத்தியவர்களாகلَـهُஅவனுக்கு மட்டும்الدِّيْنَ ۚவணக்க வழிபாட்டைفَلَمَّا نَجّٰٮهُمْஅவன் அவர்களை காப்பாற்றிக் கொண்டு வந்தால்اِلَى الْبَـرِّகரைக்குاِذَا هُمْஅப்போது அவர்கள்يُشْرِكُوْنَۙ‏இணைவைக்கின்றனர்
Fப-இதா ரகிBபூ Fபில் Fபுல்கி த'அவுல் லாஹ முக்லிஸீன லஹுத் தீன Fபலம்மா னஜ்ஜா ஹும் இலல் Bபர்ரி இதா ஹும் யுஷ்ரிகூன்
மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.
لِیَكْفُرُوْا بِمَاۤ اٰتَیْنٰهُمْ ۙۚ وَلِیَتَمَتَّعُوْا ۥ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
لِيَكْفُرُوْاஇறுதியாக, நிராகரிப்பதற்காகவும்بِمَاۤ اٰتَيْنٰهُمْ ۙۚநாம் அவர்களுக்கு கொடுத்தவற்றைوَلِيَتَمَتَّعُوْا‌அவர்கள் இன்புறுவதற்காகவும்فَسَوْفَ يَعْلَمُوْنَ‏அவர்கள் அறிவார்கள்
லி யக்Fபுரூ Bபிமா ஆதய்னாஹும் வ லி யதமத்த'ஊ Fபஸவ் Fப யஃலமூன்
அவர்கள், நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றுக்கு மாறு செய்து கொண்டு, (இவ்வுலகின் அற்ப) சுகங்களை அனுபவிக்கட்டும் - ஆனால் (தம் தீச்செயல்களின் பயனை) அறிந்து கொள்வார்கள்.
اَوَلَمْ یَرَوْا اَنَّا جَعَلْنَا حَرَمًا اٰمِنًا وَّیُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ ؕ اَفَبِالْبَاطِلِ یُؤْمِنُوْنَ وَبِنِعْمَةِ اللّٰهِ یَكْفُرُوْنَ ۟
اَوَلَمْ يَرَوْاஅவர்கள் பார்க்கவில்லையா?اَنَّاநிச்சயமாக நாம்جَعَلْنَاஏற்படுத்தினோம்حَرَمًاபுனித தலத்தைاٰمِنًاபாதுகாப்புஅளிக்கின்றوَّيُتَخَطَّفُசூறையாடப்படுகின்றனர்النَّاسُமக்கள்مِنْ حَوْلِهِمْ‌ ؕஅவர்களைச் சுற்றிاَفَبِالْبَاطِلِபொய்யைيُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்கின்றனரா?وَبِنِعْمَةِஅருளைاللّٰهِஅல்லாஹ்வின்يَكْفُرُوْنَ‏நிராகரிக்கின்றனரா?
அவலம் யரவ் அன்னா ஜ'அல்னா ஹரமன் ஆமின(ன்)வ் வ யுதகத்தFபுன் னாஸு மின் ஹவ் லிஹிம்; அFபBபில் Bபாதிலி யு'மினூன வ Bபினிஃமதில் லாஹி யக்Fபுரூன்
அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா?
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِالْحَقِّ لَمَّا جَآءَهٗ ؕ اَلَیْسَ فِیْ جَهَنَّمَ مَثْوًی لِّلْكٰفِرِیْنَ ۟
وَمَنْயார்?اَظْلَمُமகா அநியாயக்காரன்مِمَّنِ افْتَرٰىஇட்டுக்கட்டியவனை விடعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்வின்كَذِبًاபொய்யைاَوْஅல்லதுكَذَّبَபொய்ப்பித்தான்بِالْحَـقِّஉண்மையைلَـمَّا جَآءَهٗ‌ؕஅது தன்னிடம் வந்த போதுاَلَيْسَஇல்லையா?فِىْ جَهَـنَّمَநரகத்தில்مَثْوًىதங்குமிடம்لِّلْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களுக்கு
வ மன் அள்லமு மிம்ம னிFப் தரா 'அலல் லாஹி கதிBபன் அவ் கத்தBப Bபில்ஹக்கி லம்மா ஜா'அஹ்; அலய்ஸ Fபீ ஜஹன்னம மத்வல் லில் காFபிரீன்
அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது,
وَالَّذِیْنَ جَاهَدُوْا فِیْنَا لَنَهْدِیَنَّهُمْ سُبُلَنَا ؕ وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِیْنَ ۟۠
وَالَّذِيْنَஎவர்கள்جَاهَدُوْاபோரிட்டனர்فِيْنَاநமக்காகلَنَهْدِيَنَّهُمْஅவர்களுக்கு நாம் நிச்சயமாக வழிகாட்டுவோம்سُبُلَنَا ؕநமது பாதைகளைوَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَمَعَ الْمُحْسِنِيْنَநல்லோருடன் இருக்கின்றான்
வல்லதீன ஜாஹதூ Fபீனா லனஹ்தியன்னஹும் ஸுBபுலன; வ இன்னல் லாஹ லம'அல் முஹ்ஸினீன்
மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.