27. ஸூரத்துந் நம்லி(எறும்புகள்)

மக்கீ, வசனங்கள்: 93

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
طٰسٓ ۫ تِلْكَ اٰیٰتُ الْقُرْاٰنِ وَكِتَابٍ مُّبِیْنٍ ۟ۙ
طٰسٓ‌தா, சீன்.تِلْكَஇவைاٰيٰتُவசனங்கள்الْقُرْاٰنِஇந்த குர்ஆனுடையوَكِتَابٍஇன்னும் வேதத்தின்مُّبِيْنٍۙ‏தெளிவான
தா-ஸீன்; தில்க ஆயாதுல் குர்ஆனி வ கிதாBபிம் முBபீன்
தா, ஸீன். இவை குர்ஆனுடைய தெளிவான வேதத்துடைய - வசனங்களாகும்.
هُدًی وَّبُشْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟ۙ
هُدًىநேர்வழியாகவும்وَّبُشْرٰىநற்செய்தியாகவும்لِلْمُؤْمِنِيْنَۙ‏நம்பிக்கையாளர்களுக்கு
ஹுத(ன்)வ் வ Bபுஷ்ரா லில் மு'மினீன்
(இது) முஃமின்களுக்கு நேர்வழி காட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது.
الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ یُوْقِنُوْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்يُقِيْمُوْنَநிலை நிறுத்துவார்கள்الصَّلٰوةَதொழுகையைوَيُؤْتُوْنَஇன்னும் தருவார்கள்الزَّكٰوةَஸகாத்தைوَ هُمْஇன்னும் அவர்கள்بِالْاٰخِرَةِமறுமையைهُمْஅவர்கள்يُوْقِنُوْنَ‏நம்பிக்கை கொள்வார்கள்
அல்லதீன யுகீமூனஸ் ஸலாத வ யு'தூனZஜ் Zஜகாத வ ஹும் Bபில் ஆகிரதி ஹும் யூகினூன்
(அவர்கள் எத்தகையோரென்றால்) அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; இன்னும், ஜகாத்தைக் கொடுப்பார்கள்; அன்றியும், அவர்கள் மறுமை வாழ்வின் மீது திட நம்பிக்கை கொள்வார்கள்.
اِنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ زَیَّنَّا لَهُمْ اَعْمَالَهُمْ فَهُمْ یَعْمَهُوْنَ ۟ؕ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ளாதவர்கள்بِالْاٰخِرَةِமறுமையைزَيَّـنَّاநாம் அலங்கரித்து விட்டோம்لَهُمْஅவர்களுக்குاَعْمَالَهُمْஅவர்களுடைய செயல்களைفَهُمْஆகவே, அவர்கள்يَعْمَهُوْنَؕ‏தறிகெட்டு அலைகிறார்கள்
இன்னல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி Zஜய்யன்னா லஹும் அஃமாலஹும் Fபஹும் யஃமஹூன்
நிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாக(த் தோன்றுமாறு) செய்தோம்; எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَهُمْ سُوْٓءُ الْعَذَابِ وَهُمْ فِی الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ ۟
اُولٰٓٮِٕكَ الَّذِيْنَஅவர்கள்தான்لَهُمْஅவர்களுக்கு உண்டுسُوْٓءُகெட்டالْعَذَابِதண்டனைوَهُمْஅவர்கள்فِى الْاٰخِرَةِமறுமையில்هُمُஅவர்கள்தான்الْاَخْسَرُوْنَ‏நஷ்டவாளிகள்
உலா'இகல் லதீன லஹும் ஸூ'உல் 'அதாBபி வ ஹும் Fபில் ஆகிரதி ஹுமுல் அக்ஸரூன்
அத்தகையவர்களுக்குத் தீய வேதனை உண்டு; மறுமை வாழ்வில் அவர்கள் பெரும் நஷ்டமடைபவர்களாக இருப்பார்கள்.
وَاِنَّكَ لَتُلَقَّی الْقُرْاٰنَ مِنْ لَّدُنْ حَكِیْمٍ عَلِیْمٍ ۟
وَاِنَّكَநிச்சயமாக நீர்لَـتُلَـقَّىநீர் பெற்றுக்கொள்கிறீர்الْقُرْاٰنَஇந்த குர்ஆனைمِنْ لَّدُنْ حَكِيْمٍமகா ஞானவானிடமிருந்துعَلِيْمٍ‏நன்கறிந்தவன்
வ இன்னக லதுலக்கல் குர்ஆன மில் லதுன் ஹகீமின் 'அலீம்
(நபியே!) நிச்சயமாக மிக்க ஞானமுடைய (யாவற்றையும்) நன்கறிந்தவனிடமிருந்து இந்த குர்ஆன் உமக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.
اِذْ قَالَ مُوْسٰی لِاَهْلِهٖۤ اِنِّیْۤ اٰنَسْتُ نَارًا ؕ سَاٰتِیْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ اٰتِیْكُمْ بِشِهَابٍ قَبَسٍ لَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ ۟
اِذْ قَالَஅந்த சமயத்தை நினைவு கூறினார்مُوْسٰىமூசாلِاَهْلِهٖۤதன்குடும்பத்தினருக்குاِنِّىْۤநிச்சயமாக நான்اٰنَسْتُநான் பார்த்தேன்نَارًاؕநெருப்பைسَاٰتِيْكُمْஉங்களுக்கு கொண்டு வருகிறேன்مِّنْهَاஅதிலிருந்துبِخَبَرٍஒரு செய்தியைاَوْஅல்லதுاٰتِيْكُمْஉங்களுக்கு கொண்டு வருகிறேன்بِشِهَابٍநெருப்பைقَبَسٍகொள்ளிக்கட்டைلَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ‏நீங்கள் குளிர் காய்வதற்காக
இத் கால மூஸா லி அஹ்லிஹீ இன்னீ ஆனஸ்து னாரன் ஸ'ஆதீகும் மின்ஹா BபிகBபரின் அவ் ஆதீகும் BபிஷிஹாBபின் கBபஸில் ல'அல்லகும் தஸ்தலூன்
மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி: “நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்” என்று கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக!
فَلَمَّا جَآءَهَا نُوْدِیَ اَنْ بُوْرِكَ مَنْ فِی النَّارِ وَمَنْ حَوْلَهَا ؕ وَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
فَلَمَّا جَآءَهَاஅவர் அதனிடம் வந்த போதுنُوْدِىَஅழைக்கப்பட்டார்اَنْۢ بُوْرِكَபாக்கியம் அளிக்கப்பட்டதுمَنْ فِى النَّارِநெருப்பில் இருப்பவன்وَ مَنْ حَوْلَهَا ؕஇன்னும் அதை சுற்றி உள்ளவர்களும்وَسُبْحٰنَமிகப் பரிசுத்தமானவன்اللّٰهِஅல்லாஹ்رَبِّஇறைவன்الْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
Fபலம்மா ஜா'அஹா னூதிய அம் Bபூரிக மன் Fபின்ன்ன்னாரி வ மன் ஹவ்லஹா வ ஸுBப்ஹானல் லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
அவர் அதனிடம் வந்த போது: “நெருப்பில் இருப்பவர் மீதும், அதனைச் சூழ்ந்திருப்பவர் மீதும் பெரும் பாக்கியம் அளிக்கப் பெற்றுள்ளது; மேலும் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்” என்று அழைக்கப்பட்டார்.
یٰمُوْسٰۤی اِنَّهٗۤ اَنَا اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟ۙ
يٰمُوْسٰۤىமூஸாவே!اِنَّـهٗۤநிச்சயமாகاَنَاநான்தான்اللّٰهُஅல்லாஹ்الْعَزِيْزُமிகைத்தவனானالْحَكِيْمُۙ‏மகா ஞானமுடையவனான
யா மூஸா இன்னஹூ அனல் லாஹுல் 'அZஜீZஜுல் ஹகீம்
“மூஸாவே! நிச்சயமாக நானே அல்லாஹ்! (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
وَاَلْقِ عَصَاكَ ؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰی مُدْبِرًا وَّلَمْ یُعَقِّبْ ؕ یٰمُوْسٰی لَا تَخَفْ ۫ اِنِّیْ لَا یَخَافُ لَدَیَّ الْمُرْسَلُوْنَ ۟ۗۖ
وَاَ لْقِபோடுவீராக!عَصَاكَ‌ ؕஉமது தடியைفَلَمَّا رَاٰهَاஅவர் அதை பார்த்த போதுتَهْتَزُّநெளிவதாகكَاَنَّهَاஅது போன்றுجَآنٌّபாம்பைوَّلّٰىதிரும்பினார்مُدْبِرًاபுறமுதுகிட்டுوَّلَمْ يُعَقِّبْ‌ ؕஅவர் திரும்பவே இல்லைيٰمُوْسٰىமூஸாவே!لَا تَخَفْபயப்படாதீர்اِنِّىْநிச்சயமாக நான்لَا يَخَافُபயப்பட மாட்டார்கள்لَدَىَّஎன்னிடம்الْمُرْسَلُوْنَ ۖ‏இறைத்தூதர்கள்
வ அல்கி 'அஸாக்; Fபலம்ம்மா ர ஆஹா தஹ்தZஜ்Zஜு க அன்னஹா ஜான்னு(ன்)வ் வல்லா முத்Bபிர(ன்)வ் வ லம் யு'அக்கிBப்; யா மூஸா லா தகFப் இன்னீ லா யகாFபு லதய்யல் முர்ஸலூன்
“உம் கைத்தடியைக் கீழே எறியும்;” (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார்; “மூஸாவே! பயப்படாதீர்! நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்.”
اِلَّا مَنْ ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسْنًا بَعْدَ سُوْٓءٍ فَاِنِّیْ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
اِلَّاதவிரمَنْ ظَلَمَதவறிழைத்தவரைثُمَّபிறகுبَدَّلَமாற்றி செய்தார்حُسْنًۢاஅழகிய செயலைبَعْدَபின்னர்سُوْٓءٍதீமைக்குفَاِنِّىْஏனெனில், நிச்சயமாக நான்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
இல்லா மன் ளலம தும்ம Bபத்தல ஹுஸ்னம் Bபஃத ஸூ'இன் Fப இன்னீ கFபூருர் ரஹீம்
ஆயினும், தீங்கிழைத்தவரைத் தவிர; அ(த்தகைய)வரும் (தாம் செய்த) தீமையை (உணர்ந்து அதை) நன்மையானதாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக நான் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றேன்.
وَاَدْخِلْ یَدَكَ فِیْ جَیْبِكَ تَخْرُجْ بَیْضَآءَ مِنْ غَیْرِ سُوْٓءٍ ۫ فِیْ تِسْعِ اٰیٰتٍ اِلٰی فِرْعَوْنَ وَقَوْمِهٖ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟
وَاَدْخِلْநுழைப்பீராக!يَدَكَஉமது கரத்தைفِىْ جَيْبِكَஉமது சட்டைப் பையில்تَخْرُجْவெளிவரும்بَيْضَآءَவென்மையாக மின்னும்مِنْ غَيْرِ سُوْٓءٍ‌எவ்வித குறையுமின்றிفِىْ تِسْعِஒன்பதுاٰيٰتٍஅத்தாட்சிகளில்اِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னுக்கும்وَقَوْمِهٖؕஅவனதுமக்களுக்கும்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருக்கிறார்கள்قَوْمًاமக்களாகفٰسِقِيْنَ‏பாவிகளான
வ அத்கில் யதக Fபீ ஜய்Bபிக தக்ருஜ் Bபய்ளா'அ மின் கய்ரிஸூ'இன் Fபீதிஸ்'இ ஆயாதின் இலா Fபிர்'அவ்ன வ கவ்மிஹ்; இன்னஹும் கானூ கவ்மன் Fபாஸிகீன்
“இன்னும் உம்முடைய கையை உமது (மார்பு பக்கமாக) சட்டைப் பையில் நுழைப்பீராக!” அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இவ்விரு அத்தாட்சிகளும்) ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் (நீர் காண்பிக்க வேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர்.
فَلَمَّا جَآءَتْهُمْ اٰیٰتُنَا مُبْصِرَةً قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِیْنٌ ۟ۚ
فَلَمَّا جَآءَتْهُمْஆக, அது அவர்களிடம் வந்தபோதுاٰيٰتُنَاநம் அத்தாட்சிகள்مُبْصِرَةًபார்க்கும்படியாகقَالُوْاகூறினர்هٰذَاஇதுسِحْرٌசூனியம்مُّبِيْنٌ‌ۚ‏தெளிவான
Fபலம்மா ஜா'அத் ஹும் ஆயாதுனா முBப்ஸிரதன் காலூ ஹாதா ஸிஹ்ரும் முBபீன்
இவ்வாறு, நம்முடைய பிரகாசமான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்த போது, அவர்கள் “இது பகிரங்கமான சூனியமேயாகும்” என்று கூறினார்கள்.
وَجَحَدُوْا بِهَا وَاسْتَیْقَنَتْهَاۤ اَنْفُسُهُمْ ظُلْمًا وَّعُلُوًّا ؕ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟۠
وَجَحَدُوْاஅவர்கள் மறுத்தனர்بِهَاஅவற்றைوَاسْتَيْقَنَـتْهَاۤஅவற்றை உறுதியாக நம்பினاَنْفُسُهُمْஅவர்களுடைய ஆன்மாக்களோظُلْمًاஅநியாயமாகوَّعُلُوًّا‌ ؕஇன்னும் பெருமையாகفَانْظُرْஆகவே நீர் கவனிப்பீராகكَيْفَ كَانَஎவ்வாறுஆகிவிட்டதுعَاقِبَةُமுடிவுالْمُفْسِدِيْنَ‏விஷமிகளின்
வ ஜஹதூ Bபிஹா வஸ்தய்கனத் ஹா அன்Fபுஸுஹும் ளுல்ம(ன்)வ்-வ 'உலுவ்வா; Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முFப்ஸிதீன்
அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதி கொண்ட போதிலும், அநியாயமாகவும், பெருமை கொண்டவர்களாகவும் அவர்கள் அவற்றை மறுத்தார்கள். ஆனால், இந்த விஷமிகளின் முடிவு என்ன வாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக.  
وَلَقَدْ اٰتَیْنَا دَاوٗدَ وَسُلَیْمٰنَ عِلْمًا ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ فَضَّلَنَا عَلٰی كَثِیْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِیْنَ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் தந்தோம்دَاوٗدَதாவூதுக்கும்وَ سُلَيْمٰنَசுலைமானுக்கும்عِلْمًا‌ ۚஅறிவைوَقَالَاஅவ்விருவரும் கூறினர்الْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்விற்கேالَّذِىْஎவன்فَضَّلَنَاஎங்களை மேன்மைப்படுத்தினான்عَلٰى كَثِيْرٍபலரைப் பார்க்கிலும்مِّنْ عِبَادِهِதனது அடியார்களில்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களான
வ லகத் ஆதய்னா தாவூத வ ஸுலய்மான 'இல்மா; வ காலல் ஹம்து லில் லாஹில் லதீ Fபள்ளலனா 'அலா கதீரிம் மின் 'இBபாதிஹில் மு'மினீன்
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்” என்று கூறினார்கள்.
وَوَرِثَ سُلَیْمٰنُ دَاوٗدَ وَقَالَ یٰۤاَیُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّیْرِ وَاُوْتِیْنَا مِنْ كُلِّ شَیْءٍ ؕ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِیْنُ ۟
وَوَرِثَவாரிசாக ஆனார்سُلَيْمٰنُசுலைமான்دَاوٗدَ‌தாவூதுக்குوَقَالَஇன்னும் , கூறினார்يٰۤاَيُّهَا النَّاسُமக்களே!عُلِّمْنَاநாங்கள் கற்பிக்கப்பட்டோம்مَنْطِقَபேச்சைالطَّيْرِபறவைகளின்وَاُوْتِيْنَاவழங்கப்பட்டோம்مِنْ كُلِّ شَىْءٍؕ‌எல்லாம்اِنَّநிச்சயமாகهٰذَا لَهُوَஇதுதான்الْفَضْلُமேன்மையாகும்الْمُبِيْنُ‏தெளிவான
வ வரித ஸுலய்மானு தாவூத வ கால யா அய்யுஹன் னாஸு 'உல்லிம்னா மன்திகத் தய்ரி வ ஊதீனா மின் குல்லி ஷய்'இன் இன்ன ஹாதா லஹுவல் Fபள்லுல் முBபீன்
பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.
وَحُشِرَ لِسُلَیْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّیْرِ فَهُمْ یُوْزَعُوْنَ ۟
وَحُشِرَஒன்று திரட்டப்பட்டனلِسُلَيْمٰنَசுலைமானுக்குجُنُوْدُهٗஅவருடைய ராணுவங்கள்مِنَ الْجِنِّஜின்களிலிருந்துوَالْاِنْسِஇன்னும் மனிதர்கள்وَالطَّيْرِஇன்னும் பறவைகளில்فَهُمْஆகவே, அவர்கள்يُوْزَعُوْنَ‏நிறுத்தப்படுவார்கள்
வ ஹுஷிர ஸுலய்மான ஜுனூதுஹூ மினல் ஜின்னி வல் இன்ஸி வத்தய்ரி Fபஹும் யூZஜ'ஊன்
மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன.
حَتّٰۤی اِذَاۤ اَتَوْا عَلٰی وَادِ النَّمْلِ ۙ قَالَتْ نَمْلَةٌ یّٰۤاَیُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ ۚ لَا یَحْطِمَنَّكُمْ سُلَیْمٰنُ وَجُنُوْدُهٗ ۙ وَهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
حَتّٰٓىஇறுதியாகاِذَاۤ اَتَوْاஅவர்கள் வந்த போதுعَلٰى وَادِஒரு பள்ளத்தாக்கில்النَّمْلِۙஎறும்புகளின்قَالَتْகூறியதுنَمْلَةٌஓர் எறும்புيّٰۤاَيُّهَا النَّمْلُஎறும்புகளே!ادْخُلُوْاநுழைந்து விடுங்கள்!مَسٰكِنَكُمْ‌ۚஉங்கள் பொந்துகளுக்குள்لَا يَحْطِمَنَّكُمْஉங்களை மிதித்து அழித்து விடவேண்டாம்سُلَيْمٰنُசுலைமானும்وَجُنُوْدُهٗۙஅவருடைய ராணுவங்களும்وَهُمْஅவர்களோلَا يَشْعُرُوْنَ‏உணர மாட்டார்கள்
ஹத்தா இதா அதவ் 'அலா வாதின் னம்லி காலத் னம்லது(ன்)ய் யா அய்யுஹன் னம்லுத் குலூ மஸாகினகும் லா யஹ்திமன்னகும் ஸுலய்மானு வ ஜுனூதுஹூ வ ஹும் லா யஷ்'உரூன்
இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.
فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِیْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِیْۤ اَنْعَمْتَ عَلَیَّ وَعَلٰی وَالِدَیَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَدْخِلْنِیْ بِرَحْمَتِكَ فِیْ عِبَادِكَ الصّٰلِحِیْنَ ۟
فَتَبَسَّمَஆக, புன்முறுவல் பூத்தார்ضَاحِكًاஅவர் சிரித்தவராகمِّنْ قَوْلِهَاஅதன் பேச்சினால்وَقَالَஇன்னும் கூறினார்رَبِّஎன் இறைவா!اَوْزِعْنِىْۤஎனக்கு நீ அகத்தூண்டுதலை ஏற்படுத்து!اَنْ اَشْكُرَநான் நன்றி செலுத்துவதற்குنِعْمَتَكَஉன் அருளுக்குالَّتِىْۤஎதுاَنْعَمْتَநீ அருள்புரிந்தாய்عَلَىَّஎன் மீதும்وَعَلٰى وَالِدَىَّஎன் பெற்றோர் மீதும்وَاَنْ اَعْمَلَநான் செய்வதற்கும்صَالِحًـاநல்லதைتَرْضٰٮهُநீ மகிழ்ச்சியுறுகின்றوَاَدْخِلْنِىْஇன்னும் என்னைநுழைத்துவிடுبِرَحْمَتِكَஉன் கருணையால்فِىْ عِبَادِكَஉன் அடியார்களில்الصّٰلِحِيْنَ‏நல்லவர்கள்
FபதBபஸ்ஸம ளாஹிகம் மின் கவ்லிஹா வ கால ரBப்Bபி அவ்Zஜிஃனீ அன் அஷ்குர னிஃமத கல் லதீ அன்'அம்த 'அலய்ய வ 'அலா வாலிதய்ய வ அன் அஃமல ஸாலிஹன் தர்ளாஹு வ அத்கில்னீ Bபிரஹ்மதிக Fபீ 'இBபாதிகஸ் ஸாலிஹீன்
அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.
وَتَفَقَّدَ الطَّیْرَ فَقَالَ مَا لِیَ لَاۤ اَرَی الْهُدْهُدَ ۖؗ اَمْ كَانَ مِنَ الْغَآىِٕبِیْنَ ۟
وَتَفَقَّدَஅவர் தேடினார்الطَّيْرَபறவைகளில்فَقَالَகூறினார்مَا لِىَஎனக்கென்னلَاۤ اَرَىநான் காணமுடியவில்லைالْهُدْهُدَ ۖ ஹூத்ஹூதைاَمْஅல்லதுكَانَஅது இருக்கிறதா?مِنَ الْغَآٮِٕبِيْنَ‏வராதவர்களில்
வ தFபக்கதத் தய்ர Fபகால மா லிய லா அரா அல் ஹுத்ஹுத, அம் கான மினல் கா'இBபீன்
அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து: “நான் (இங்கே) ஹுத்ஹுத் (பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார்.
لَاُعَذِّبَنَّهٗ عَذَابًا شَدِیْدًا اَوْ لَاَاَذْبَحَنَّهٗۤ اَوْ لَیَاْتِیَنِّیْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟
لَاُعَذِّبَـنَّهٗ عَذَابًاநிச்சயமாக நான் அதை தண்டிப்பேன்شَدِيْدًاகடுமையாகاَوْஅல்லதுلَا۟اَذْبَحَنَّهٗۤஅதை நிச்சயமாக நான் அறுத்து விடுவேன்اَوْஅல்லதுلَيَاْتِيَنِّىْஅது என்னிடம் கொண்டு வரவேண்டும்بِسُلْطٰنٍஆதாரத்தைمُّبِيْنٍ‏தெளிவான
ல-உ'அத்திBபன்னஹூ 'அதாBபன் ஷதீதன் அவ் ல அத்Bபஹன்னஹூ அவ் ல யா'தியன்னீ Bபிஸுல்தானிம் முBபீன்
“நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றும் கூறினார்.
فَمَكَثَ غَیْرَ بَعِیْدٍ فَقَالَ اَحَطْتُّ بِمَا لَمْ تُحِطْ بِهٖ وَجِئْتُكَ مِنْ سَبَاٍۭ بِنَبَاٍ یَّقِیْنٍ ۟
فَمَكَثَஅவர் தாமதித்தார்غَيْرَ بَعِيْدٍசிறிது நேரம்தான்فَقَالَஆக, அது கூறியதுاَحَطْتُّஅறிந்துள்ளேன்بِمَا لَمْ تُحِطْ بِهٖஎதை/நீ்ர் அறியவில்லை/அதைوَ جِئْتُكَஉம்மிடம் கொண்டு வந்துள்ளேன்مِنْ سَبَاٍۢ‘சபா’ இனத்தாரிடமிருந்துبِنَبَاٍசெய்தியைيَّقِيْنٍ‏உறுதியான
Fபமகத கய்ர Bப'ஈதின் Fபகால அஹத்து Bபிமா லம் துஹித் Bபிஹீ வ ஜி'துக மின் ஸBபய்ம் BபினBப இ(ன்)ய்-யகீன்
(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுத்ஹுத் வந்து) கூறிற்று: “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”
اِنِّیْ وَجَدْتُّ امْرَاَةً تَمْلِكُهُمْ وَاُوْتِیَتْ مِنْ كُلِّ شَیْءٍ وَّلَهَا عَرْشٌ عَظِیْمٌ ۟
اِنِّىْநிச்சயமாக நான்وَجَدْتُّகண்டேன்امْرَاَةًஒரு பெண்ணைتَمْلِكُهُمْஅவர்களை ஆட்சி செய்கின்றவளாகوَاُوْتِيَتْஅவள் வழங்கப்பட்டு இருக்கிறாள்مِنْ كُلِّ شَىْءٍஎல்லாம்وَّلَهَاஅவளுக்கு சொந்தமானعَرْشٌஅரச கட்டிலும்عَظِيْمٌ‏ஒரு பெரிய
இன்னீ வஜத்தும் ர அதன் தம்லிகுஹும் வ ஊதியத் மின் குல்லி ஷய்'இ(ன்)வ் வ லஹா 'அர்ஷுன் 'அளீம்
“நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.
وَجَدْتُّهَا وَقَوْمَهَا یَسْجُدُوْنَ لِلشَّمْسِ مِنْ دُوْنِ اللّٰهِ وَزَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِیْلِ فَهُمْ لَا یَهْتَدُوْنَ ۟ۙ
وَجَدْتُّهَاஅவளையும் கண்டேன்وَقَوْمَهَاஅவளுடைய மக்களையும்يَسْجُدُوْنَசிரம் பணிந்து வணங்குகின்றவர்களாகلِلشَّمْسِசூரியனுக்குمِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிوَزَيَّنَஇன்னும் அலங்கரித்து விட்டான்لَهُمُஅவர்களுக்குالشَّيْطٰنُஷைத்தான்اَعْمَالَهُمْஅவர்களின் செயல்களைفَصَدَّஆகவே, அவன் தடுத்து விட்டான்هُمْஅவர்களைعَنِ السَّبِيْلِபாதையிலிருந்துفَهُمْஆகவே, அவர்கள்لَا يَهْتَدُوْنَۙ‏நேர்வழி பெறவில்லை
வஜத்துஹா வ கவ்மஹா யஸ்ஜுதூன லிஷ்ஷம்ஸி மின் தூனில் லாஹி வ Zஜய்யன லஹுமுஷ் ஷய்தானு அஃமாலஹும் Fபஸத்தஹும் 'அனிஸ் ஸBபீலி Fபஹும் லா யஹ்ததூன்
“அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.
اَلَّا یَسْجُدُوْا لِلّٰهِ الَّذِیْ یُخْرِجُ الْخَبْءَ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَیَعْلَمُ مَا تُخْفُوْنَ وَمَا تُعْلِنُوْنَ ۟
اَلَّا يَسْجُدُوْاஅவர்கள் சிரம் பணியாமல் இருப்பதற்காلِلّٰهِஅல்லாஹ்விற்குالَّذِىْஎவன்يُخْرِجُவெளிப்படுத்துகின்றான்الْخَبْءَமறைந்திருப்பவற்றைفِى السَّمٰوٰتِவானங்களிலும்وَالْاَرْضِபூமியிலும்وَيَعْلَمُஇன்னும் அறிகின்றான்مَا تُخْفُوْنَநீங்கள் மறைப்பதையும்وَمَا تُعْلِنُوْنَ‏நீங்கள் வெளிப்படுத்துவதையும்
அல்லா யஸ்ஜுதூ லில்லாஹில் லதீ யுக்ரிஜுல் கBப்'அ Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வ யஃலமு மா துக்Fபூன வமா துஃலினூன்
“வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா?
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ ۟
اَللّٰهُஅல்லாஹ்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَஅவனைرَبُّஅதிபதிالْعَرْشِஅர்ஷுடையالْعَظِيْمِ ۩‏மகத்தான
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ ரBப்Bபுல் 'அர்ஷில் அளீம்
“அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்” (என்று ஹுது ஹுது கூறிற்று).
قَالَ سَنَنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்سَنَـنْظُرُஆராய்ந்துபார்ப்போம்اَصَدَقْتَநீ உண்மை கூறினாயா?اَمْஅல்லதுكُنْتَஆகிவிட்டாயா?مِنَ الْكٰذِبِيْنَ‏பொய்யர்களில்
கால ஸனன்ளுரு அஸதக்த அம் குன்த மினல் காதிBபீன்
(அதற்கு ஸுலைமான்:) “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” என்று கூறினார்.
اِذْهَبْ بِّكِتٰبِیْ هٰذَا فَاَلْقِهْ اِلَیْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا یَرْجِعُوْنَ ۟
اِذْهَبْஎடுத்துச் செல்!بِّكِتٰبِىْஎனது இந்தக் கடிதத்தைهٰذَاஇதைفَاَلْقِهْஅதைப் போடு!اِلَيْهِمْஅவர்கள் முன்ثُمَّபிறகுتَوَلَّவிலகி இரு!عَنْهُمْஅவர்களை விட்டுفَانْظُرْநீ பார்!مَاذَاஎன்னيَرْجِعُوْنَ‏அவர்கள் பதில் தருகிறார்கள்
இத்ஹBப் BபிகிதாBபீ ஹாத Fப அல்கிஹ் இலய்ஹிம் தும்ம்ம தவல்ல 'அன்ஹும் Fபன்ளுர் மாதா யர்ஜி'ஊன்
“என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு; பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி; அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி” (என்று கூறினார்).
قَالَتْ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اِنِّیْۤ اُلْقِیَ اِلَیَّ كِتٰبٌ كَرِیْمٌ ۟
قَالَتْஅவள் கூறினாள்يٰۤاَيُّهَا الْمَلَؤُاபிரமுகர்களே!اِنِّىْۤநிச்சயமாகاُلْقِىَஅனுப்பப்பட்டுள்ளதுاِلَىَّஎன்னிடம்كِتٰبٌஒரு கடிதம்كَرِيْمٌ‏கண்ணியமான
காலத் யா அய்யுஹல் மல'உ இன்னீ உல்கிய இலய்ய கிதாBபுன் கரீம்
(அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்: “பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது.”
اِنَّهٗ مِنْ سُلَیْمٰنَ وَاِنَّهٗ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۙ
اِنَّهٗநிச்சயமாக அதுمِنْ سُلَيْمٰنَசுலைமானிடமிருந்துوَاِنَّهٗநிச்சயமாக செய்தியாவதுبِسْمِபெயரால்اللّٰهِஅல்லாஹ்வின்الرَّحْمٰنِபேரருளாளன்الرَّحِيْمِۙ‏பேரன்பாளன்
இன்னஹூ மின் ஸுலய்மான வ இன்னஹூ Bபிஸ்மில் லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது.
اَلَّا تَعْلُوْا عَلَیَّ وَاْتُوْنِیْ مُسْلِمِیْنَ ۟۠
اَلَّا تَعْلُوْاநீங்கள் பெருமை காட்டாதீர்கள்!عَلَىَّஎன்னிடம்وَاْتُوْنِىْஎன்னிடம் வந்து விடுங்கள்!مُسْلِمِيْنَ‏பணிந்தவர்களாக
அல்லா தஃலூ 'அலய்ய வா தூனீ முஸ்லிமீன்
“நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்” (என்றும் எழுதப்பட்டிருக்கிறது).  
قَالَتْ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اَفْتُوْنِیْ فِیْۤ اَمْرِیْ ۚ مَا كُنْتُ قَاطِعَةً اَمْرًا حَتّٰی تَشْهَدُوْنِ ۟
قَالَتْஅவள் கூறினாள்يٰۤاَيُّهَا الْمَلَؤُاபிரமுகர்களே!اَفْتُوْنِىْநீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள்فِىْۤ اَمْرِىْ‌ۚஎனது காரியத்தில்مَا كُنْتُநான் இல்லைقَاطِعَةًமுடிவு செய்பவளாகاَمْرًاஒரு காரியத்தைحَتّٰىவரைتَشْهَدُوْنِ‏நீங்கள் என்னிடம் ஆஜராகின்ற
காலத் யா அய்யுஹல் மல'உ அFப்தூனீ Fபீ அம்ரீ மா குன்து காதி'அதன் அம்ரன் ஹத்தா தஷ்ஹ்ஹதூன்
எனவே பிரமுகர்களே! “என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்ல” என்று கூறினாள்.
قَالُوْا نَحْنُ اُولُوْا قُوَّةٍ وَّاُولُوْا بَاْسٍ شَدِیْدٍ ۙ۬ وَّالْاَمْرُ اِلَیْكِ فَانْظُرِیْ مَاذَا تَاْمُرِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்نَحْنُநாங்கள்اُولُوْا قُوَّةٍபலமுடையவர்கள்وَّاُولُوْا بَاْسٍஇன்னும் வலிமை உடையவர்கள்شَدِيْدٍ ۙகடும்وَّالْاَمْرُஇன்னும் முடிவுاِلَيْكِஉன்னிடம்இருக்கிறதுفَانْظُرِىْஆகவே, நீ நன்கு யோசித்துக் கொள்!مَاذَا تَاْمُرِيْنَ‏நீ உத்தரவிடுவதை
காலூ னஹ்னு உலூ குவ்வதி(ன்)வ் வ உலூ Bபா'ஸின் ஷதீத்; வல் அம்ரு இலய்கி Fபன்ளுரீ மாதா தா'முரீன்
“நாங்கள் பெரும் பலசாலிகளாகவும், கடினமாக போர் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்; (ஆயினும்) முடிவு உங்களைப் பொறுத்தது, என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்கள் சொன்னார்கள்.
قَالَتْ اِنَّ الْمُلُوْكَ اِذَا دَخَلُوْا قَرْیَةً اَفْسَدُوْهَا وَجَعَلُوْۤا اَعِزَّةَ اَهْلِهَاۤ اَذِلَّةً ۚ وَكَذٰلِكَ یَفْعَلُوْنَ ۟
قَالَتْஅவள் கூறினாள்اِنَّ الْمُلُوْكَநிச்சயமாகமன்னர்கள்اِذَا دَخَلُوْاநுழைந்து விட்டால்قَرْيَةًஓர் ஊருக்குள்اَفْسَدُوْهَاஅதை சின்னா பின்னப்படுத்தி விடுவார்கள்وَجَعَلُوْۤاஆக்கிவிடுவார்கள்اَعِزَّةَகண்ணியவான்களைاَهْلِهَاۤ اَذِلَّةً  ۚஅந்த ஊர் வாசிகளில் உள்ள/இழிவானவர்களாகوَكَذٰلِكَஅப்படித்தான்يَفْعَلُوْنَ‏செய்வார்கள்
காலத் இன்னல் முலூக இதா தகலூ கர்யதன் அFப்ஸதூஹா வ ஜ'அலூ அ'இZஜ்Zஜத அஹ்லிஹா அதில்லஹ்; வ கதாலிக யFப்'அலூன்
அவள் கூறினாள்: “அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்.
وَاِنِّیْ مُرْسِلَةٌ اِلَیْهِمْ بِهَدِیَّةٍ فَنٰظِرَةٌ بِمَ یَرْجِعُ الْمُرْسَلُوْنَ ۟
وَاِنِّىْநிச்சயமாக நான்مُرْسِلَةٌஅனுப்புகிறேன்اِلَيْهِمْஅவர்களிடம்بِهَدِيَّةٍஓர் அன்பளிப்பைفَنٰظِرَةٌۢபார்க்கிறேன்بِمَஎன்ன பதில்يَرْجِعُதிரும்ப கொண்டு வருகிறார்கள்الْمُرْسَلُوْنَ‏தூதர்கள்
வ இன்னீ முர்ஸிலதுன் இலய்ஹிம் Bபிஹதிய்யதின் Fபனாளிரதும் Bபிம யர்ஜி'உல் முர்ஸலூன்
“ஆகவே, நிச்சயமாக நான் அவர்களுக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி, (அதைக் கொண்டு செல்லும்) தூதர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்.”
فَلَمَّا جَآءَ سُلَیْمٰنَ قَالَ اَتُمِدُّوْنَنِ بِمَالٍ ؗ فَمَاۤ اٰتٰىنِ اللّٰهُ خَیْرٌ مِّمَّاۤ اٰتٰىكُمْ ۚ بَلْ اَنْتُمْ بِهَدِیَّتِكُمْ تَفْرَحُوْنَ ۟
فَلَمَّا جَآءَஅவர் வந்தபோதுسُلَيْمٰنَசுலைமானிடம்قَالَஅவர் கூறினார்اَتُمِدُّوْنَنِநீங்கள் எனக்கு தருகிறீர்களா?بِمَالٍசெல்வத்தைفَمَاۤ اٰتٰٮنَِۧஎனக்கு தந்திருப்பதுاللّٰهُஅல்லாஹ்خَيْرٌமிகச் சிறந்ததுمِّمَّاۤ اٰتٰٮكُمْ‌ۚஅவன் உங்களுக்கு தந்திருப்பதை விடبَلْமாறாகاَنْـتُمْநீங்கள்بِهَدِيَّتِكُمْஉங்கள் அன்பளிப்புகளைக் கொண்டுتَفْرَحُوْنَ‏பெருமிதம் அடைவீர்கள்
Fபலம்மா ஜா'அ ஸுலய்மான கால அதுமித்தூனனி Bபிமாலின் Fபமா ஆதானியல் லாஹு கய்ரும் மிம்ம்மா ஆதாகும் Bபல் அன்தும் Bபிஹதிய்-யதிகும் தFப்ரஹூன்
அவ்வாறே (தூதர்கள்) ஸுலைமானிடம் வந்தபோது; அவர் சொன்னார்: “நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்(ய நினைக்)கிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது, உங்களுக்கு அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்; எனினும், உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்கள் தான் மகிழ்ச்சி அடைகிறீர்கள்!
اِرْجِعْ اِلَیْهِمْ فَلَنَاْتِیَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَنُخْرِجَنَّهُمْ مِّنْهَاۤ اَذِلَّةً وَّهُمْ صٰغِرُوْنَ ۟
اِرْجِعْநீ திரும்பிப் போ!اِلَيْهِمْஅவர்களிடம்فَلَنَاْتِيَنَّهُمْநாம் அவர்களிடம் கொண்டு வருவோம்بِجُنُوْدٍஇராணுவங்களைلَّا قِبَلَஅறவே வலிமை இருக்காதுلَهُمْஅவர்களுக்குبِهَاஅவர்களை எதிர்க்கوَلَـنُخْرِجَنَّهُمْநிச்சயமாக அவர்களை நாம் வெளியேற்றுவோம்مِّنْهَاۤஅதிலிருந்துاَذِلَّةًஇழிவானவர்களாகوَّهُمْஅவர்கள்صٰغِرُوْنَ‏சிறுமைப்படுவார்கள்
இர்ஜிஃ இலய்ஹிம் Fபலனாதியன் னஹும் Bபிஜுனூதில் லா கிBபல லஹும் Bபிஹா வ லனுக்ரி ஜன்னஹும் மின்ஹா அதில்லத(ன்)வ் வ ஹும் ஸாகிரூன்
“அவர்களிடமே திரும்பிச் செல்க; நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள) ஒரு பெரும் படையைக் கொண்டு அவர்களிடம் வருவோம்; நாம் அவர்களைச் சிறுமைப் படுத்தி, அவ்வூரிலிருந்து வெளியேற்றிவிடுவோம், மேலும் அவர்கள் இழிந்தவர்களாவார்கள்” (என்று ஸுலைமான் கூறினார்).
قَالَ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اَیُّكُمْ یَاْتِیْنِیْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ یَّاْتُوْنِیْ مُسْلِمِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்يٰۤاَيُّهَا الْمَلَؤُاபிரமுகர்களே!اَيُّكُمْஉங்களில் யார்يَاْتِيْنِىْஎன்னிடம் கொண்டு வருவார்بِعَرْشِهَاஅவளுடைய அரச கட்டிலைقَبْلَமுன்னர்اَنْ يَّاْتُوْنِىْஅவர்கள் என்னிடம் வருவதற்குمُسْلِمِيْنَ‏பணிந்தவர்களாக
கால யா அய்யுஹல் மல'உ அய்யுகும் யா'தீனீ Bபி'அர்ஷிஹா கBப்ல அய் யா'தூனீ முஸ்லிமீன்
“பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார்.
قَالَ عِفْرِیْتٌ مِّنَ الْجِنِّ اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ تَقُوْمَ مِنْ مَّقَامِكَ ۚ وَاِنِّیْ عَلَیْهِ لَقَوِیٌّ اَمِیْنٌ ۟
قَالَகூறியதுعِفْرِيْتٌசாதுர்யமான ஒன்றுمِّنَ الْجِنِّஜின்களில்اَنَاநான்اٰتِيْكَஉம்மிடம் கொண்டு வருவேன்بِهٖஅதைقَبْلَமுன்னர்اَنْ تَقُوْمَநீர் எழுவதற்குمِنْ مَّقَامِكَ‌ۚஉமது இடத்திலிருந்துوَاِنِّىْநிச்சயமாக நான்عَلَيْهِஅதற்குلَـقَوِىٌّஆற்றல் உள்ளவன்اَمِيْنٌ‏நம்பிக்கைக்குரியவன்
கால 'இFப்ரீதும் மினல் ஜின்னி அன ஆதீக Bபிஹீ கBப்ல அன் தகூம மிம் மகாமிக வ இன்னீ 'அலய்ஹி லகவிய்யுன் அமீன்
ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.”
قَالَ الَّذِیْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْكِتٰبِ اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ یَّرْتَدَّ اِلَیْكَ طَرْفُكَ ؕ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّیْ ۖ۫ لِیَبْلُوَنِیْۤ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ ؕ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا یَشْكُرُ لِنَفْسِهٖ ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّیْ غَنِیٌّ كَرِیْمٌ ۟
قَالَஒருவர் கூறினார்الَّذِىْஎவர்عِنْدَهٗதன்னிடம்عِلْمٌஞானம்مِّنَ الْـكِتٰبِவேதத்தின்اَنَاநான்اٰتِيْكَஉம்மிடம் கொண்டு வருவேன்بِهٖஅதைقَبْلَமுன்னர்اَنْ يَّرْتَدَّதிரும்புவதற்குاِلَيْكَஉன் பக்கம்طَرْفُكَ‌ؕஉமது பார்வைفَلَمَّا رَاٰهُஅவர் பார்த்த போதுمُسْتَقِرًّاநிலையாகி விட்டதாகعِنْدَهٗதன்னிடம்قَالَகூறினார்هٰذَا مِنْ فَضْلِஇது/அருளாகும்رَبِّىْ‌ۖஎன் இறைவனின்لِيَبْلُوَنِىْٓஅவன் என்னை சோதிப்பதற்காகءَاَشْكُرُநான் நன்றி செலுத்துகிறேனா?اَمْஅல்லதுاَكْفُرُ‌ؕநன்றி கெடுகிறேனா?وَمَنْயார்شَكَرَநன்றிசெலுத்துகிறாரோفَاِنَّمَا يَشْكُرُஅவர் நன்றி செலுத்துவதெல்லாம்لِنَفْسِهٖ‌ۚஅவருக்குத்தான்وَمَنْயார்كَفَرَநிராகரிப்பாரோفَاِنَّஏனெனில்رَبِّىْஎன் இறைவன்غَنِىٌّமுற்றிலும் தேவை அற்றவன்كَرِيْمٌ‏பெரும் தயாளன்
காலல் லதீ இன்தஹூ 'இல்மும் மினல் கிதாBபி அன ஆதீக Bபிஹீ கBப்ல அய் யர்தத்த இலய்க தர்Fபுக்; Fபலம்மா ர ஆஹு முஸ்தகிர்ரன் 'இன்தஹூ கால ஹாதா மின் Fபள்லி ரBப்Bபீ லி யBப்லுவனீ 'அ-அஷ்குரு அம் அக்Fபுரு வ மன் ஷகர Fப இன்னமா யஷ்குரு லினFப்ஸிஹீ வ மன் கFபர Fப இன்ன ரBப்Bபீ கனிய்யுன் கரீம்
இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார்.
قَالَ نَكِّرُوْا لَهَا عَرْشَهَا نَنْظُرْ اَتَهْتَدِیْۤ اَمْ تَكُوْنُ مِنَ الَّذِیْنَ لَا یَهْتَدُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்نَكِّرُوْاநீங்கள் மாற்றி விடுங்கள்لَهَاஅவளுக்குعَرْشَهَاஅவளுடைய அரச கட்டிலைنَـنْظُرْநாம் பார்ப்போம்اَتَهْتَدِىْۤஅவள் அறிந்து கொள்கிறாளா?اَمْஅல்லதுتَكُوْنُஅவள் ஆகிவிடுகிறாளா?مِنَ الَّذِيْنَ لَا يَهْتَدُوْنَ‏அறியாதவர்களில்
கால னக்கிரூ லஹா 'அர்ஷஹா னன்ளுர் அதஹ்ததீ அம் தகூனு மினல் லதீன லா யஹ்ததூன்
(இன்னும் அவர்) கூறினார்: “(அவள் கண்டு அறிந்து கொள்ள முடியாதபடி) அவளுடைய அரியாசன(த்தின் கோல)த்தை மாற்றி விடுங்கள்; அவள் அதை அறிந்து கொள்கிறாளா, அல்லது அறிந்து கொள்ள முடியாதவர்களில் ஒருத்தியாக இருக்கிறாளா என்பதை நாம் கவனிப்போம்.”
فَلَمَّا جَآءَتْ قِیْلَ اَهٰكَذَا عَرْشُكِ ؕ قَالَتْ كَاَنَّهٗ هُوَ ۚ وَاُوْتِیْنَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِیْنَ ۟
فَلَمَّا جَآءَتْஅவள் வந்தபோது,قِيْلَகேட்கப்பட்டதுاَهٰكَذَاஇது போன்றாعَرْشُكِ‌ؕஉனது அரச கட்டில்قَالَتْஅவள் கூறினாள்كَاَنَّهٗஅதைப் போன்றுதான்هُوَ‌ۚஇதுوَاُوْتِيْنَاநாம் கொடுக்கப்பட்டோம்الْعِلْمَஅறிவுمِنْ قَبْلِهَاஇவளுக்கு முன்னரேوَ كُنَّاஇன்னும் இருக்கிறோம்مُسْلِمِيْنَ‏முஸ்லிம்களாக
Fபலம்மா ஜா'அத் கீல அஹாகத 'அர்ஷுகி காலத் க'அன்னஹூ ஹூ; வ ஊதீனல் 'இல்ம மின் கBப்லிஹா வ குன்னா முஸ்லிமீன்
ஆகவே, அவள் வந்த பொழுது, “உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்: “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது” என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று ஸுலைமான் கூறினார்).
وَصَدَّهَا مَا كَانَتْ تَّعْبُدُ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اِنَّهَا كَانَتْ مِنْ قَوْمٍ كٰفِرِیْنَ ۟
وَصَدَّهَاஅவளைத் தடுத்து விட்டதுمَاஎதுكَانَتْஇருந்தாள்تَّعْبُدُஅவள் வணங்கிக் கொண்டுمِنْ دُوْنِ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வையன்றிاِنَّهَاநிச்சயமாக, அவள்كَانَتْஇருந்தாள்مِنْ قَوْمٍமக்களில்كٰفِرِيْنَ‏நிராகரிக்கின்ற
வ ஸத்தஹா மா கானத் தஃBபுது மின் தூனில் லாஹி இன்னஹா கானத் மின் கவ்மின் காFபிரீன்
அல்லாஹ்வையன்றி (மற்றவர்களை) அவள் வணங்கிக் கொண்டிருந்ததுதான் அவளைத் தடுத்துக் கொண்டிருந்தது நிச்சயமாக அவள் காஃபிர்களின் சமூகத்திலுள்ளவளாக இருந்தாள்.
قِیْلَ لَهَا ادْخُلِی الصَّرْحَ ۚ فَلَمَّا رَاَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَیْهَا ؕ قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِیْرَ ؕ۬ قَالَتْ رَبِّ اِنِّیْ ظَلَمْتُ نَفْسِیْ وَاَسْلَمْتُ مَعَ سُلَیْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠
قِيْلَகூறப்பட்டதுلَهَاஅவளுக்குادْخُلِىநீ நுழை!الصَّرْحَ‌ ۚமாளிகையில்فَلَمَّا رَاَتْهُஅவள் அதைப் பார்த்த போதுحَسِبَـتْهُஅவள் அதை கருதினாள்لُـجَّةًஅலை அடிக்கும் நீராகوَّكَشَفَتْஅகற்றினாள்عَنْ سَاقَيْهَا ؕதன் இரு கெண்டைக் கால்களை விட்டும்قَالَகூறினார்اِنَّهٗநிச்சயமாக இதுصَرْحٌமாளிகைمُّمَرَّدٌசமப்படுத்தப்பட்டதுمِّنْ قَوَارِيْرَ ۙகண்ணாடிகளால்‌قَالَتْஅவள் கூறினாள்رَبِّஎன் இறைவா!اِنِّىْநிச்சயமாக நான்ظَلَمْتُஅநீதி செய்து கொண்டேன்نَـفْسِىْஎனக்கேوَ اَسْلَمْتُநானும் முஸ்லிமாகி விட்டேன்مَعَ سُلَيْمٰنَசுலைமானுடன்لِلّٰهِஅல்லாஹ்விற்குرَبِّஇறைவனானالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
கீல லஹத் குலிஸ் ஸர்ஹ Fபலம்மா ர அத் ஹு ஹஸிBபத் ஹு லுஜ்ஜத(ன்)வ் வ கஷFபத் 'அன் ஸாகய்ஹா; கால இன்னஹூ ஸர்ஹும் முமர்ரதும் மின் கவாரீர்; காலத் ரBப்Bபி இன்னீ ளலம்து னFப்ஸீ வ அஸ்லம்து ம'அ ஸுலய்மான லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
அவளிடம்: “இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!” என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்; (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), “அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!” என்று கூறினார். (அதற்கு அவள்) “இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள்.  
وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا اَنِ اعْبُدُوا اللّٰهَ فَاِذَا هُمْ فَرِیْقٰنِ یَخْتَصِمُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاۤநாம் அனுப்பினோம்اِلٰى ثَمُوْدَஸமூது (மக்களு)க்குاَخَاசகோதரர்هُمْஅவருடையصٰلِحًاஸாலிஹைاَنِ اعْبُدُوْاநீங்கள்வணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைفَاِذَا هُمْஆனால், அவர்கள் அப்போதுفَرِيْقٰنِஇரண்டு பிரிவுகளாகيَخْتَصِمُوْنَ‏தங்களுக்குள் தர்க்கித்துக் கொள்கின்றனர்
வ லகத் அர்ஸல்னா இலா தமூத அகாஹும் ஸாலிஹன் அனிஃBபுதுல் லாஹ Fப இதா ஹும் Fபரீகானி யக்தஸிமூன்
தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை: “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” (என்று போதிக்குமாறு) அனுப்பினோம்; ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள்.
قَالَ یٰقَوْمِ لِمَ تَسْتَعْجِلُوْنَ بِالسَّیِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ ۚ لَوْلَا تَسْتَغْفِرُوْنَ اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்يٰقَوْمِஎன் மக்களே!لِمَ تَسْتَعْجِلُوْنَஏன் அவசரப்படுகிறீர்கள்?بِالسَّيِّئَةِதீமையைقَبْلَ الْحَسَنَةِ‌ۚநன்மைக்குமுன்னதாகلَوْلَا تَسْتَغْفِرُوْنَநீங்கள் பாவமன்னிப்புத் தேடமாட்டீர்களா?اللّٰهَஅல்லாஹ்விடம்لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்
கால யா கவ்மி லிம தஸ்தஃஜிலூன Bபிஸ்ஸய்யி'அதி கBப்லல் ஹஸனதி லவ் லா தஸ் தக்Fபிரூனல் லாஹ ல'அல்லகும் துர்ஹமூன்
(அப்போது அவர்:) “என்னுடைய சமூகத்தாரே! நன்மைக்கு முன்னால், தீமைக்காக நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள், நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு அல்லாஹ்விடம் தவ்பா (செய்து மன்னிப்புக்) கேட்கமாட்டீர்களா?” எனக் கூறினார்.
قَالُوا اطَّیَّرْنَا بِكَ وَبِمَنْ مَّعَكَ ؕ قَالَ طٰٓىِٕرُكُمْ عِنْدَ اللّٰهِ بَلْ اَنْتُمْ قَوْمٌ تُفْتَنُوْنَ ۟
قَالُواஅவர்கள் கூறினர்اطَّيَّرْنَاநாங்கள் துற்சகுணம் அடைந்தோம்بِكَஉம்மாலும்وَبِمَنْ مَّعَكَ‌ ؕஇன்னும் உம்முடன் உள்ளவர்களாலும்قَالَஅவர் கூறினார்طٰٓٮِٕرُكُمْமாறாக உங்கள் துன்பத்தின் காரணம்عِنْدَ اللّٰهِ‌அல்லாஹ்விடம்தான் இருக்கிறதுبَلْமாறாகاَنْـتُمْநீங்கள்قَوْمٌமக்கள்تُفْتَـنُوْنَ‏சோதிக்கப்படுகின்ற
காலுத் தய்யர்னா Bபிக வ Bபிமம் ம'அக்; கால தா'இருகும் 'இன்தல் லாஹி Bபல் அன்தும் கவ்முன் துFப்தனூன்
அதற்கவர்கள்: “உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுணமாகக் காண்கிறோம்” என்று சொன்னார்கள்; அவர் கூறினார்: “உங்கள் துர்ச்சகுணம் அல்லாஹ்விடம் இருக்கிறது; எனினும், நீங்கள் சோதனைக்குள்ளாக்கப்படும் சமூகத்தாராக இருக்கிறீர்கள்.”
وَكَانَ فِی الْمَدِیْنَةِ تِسْعَةُ رَهْطٍ یُّفْسِدُوْنَ فِی الْاَرْضِ وَلَا یُصْلِحُوْنَ ۟
وَكَانَஇருந்தனர்فِى الْمَدِيْنَةِஅப்பட்டணத்தில்تِسْعَةُஒன்பதுرَهْطٍபேர்يُّفْسِدُوْنَஅவர்கள் குழப்பம் செய்தனர்فِى الْاَرْضِபூமியில்وَلَا يُصْلِحُوْنَ‏சீர்திருத்தம் செய்யவில்லை
வ கான Fபில் மதீனதி திஸ்'அது ரஹ்தி(ன்)ய் யுFப்ஸிதூன Fபில் அர்ளி வலா யுஸ்லிஹூன்
இன்னும், அந்நகரில் ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் நன்மை எதுவும் செய்யாது பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிகிறார்கள்.
قَالُوْا تَقَاسَمُوْا بِاللّٰهِ لَنُبَیِّتَنَّهٗ وَاَهْلَهٗ ثُمَّ لَنَقُوْلَنَّ لِوَلِیِّهٖ مَا شَهِدْنَا مَهْلِكَ اَهْلِهٖ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்تَقَاسَمُوْاதங்களுக்குள் சத்தியம் செய்தனர்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுلَـنُبَيِّتَـنَّهٗநிச்சயமாக நாங்கள் அவரை கொன்று விடுவோம்وَ اَهْلَهٗஅவருடைய குடும்பத்தையும்ثُمَّ لَـنَقُوْلَنَّபிறகு கூறுவோம்لِوَلِيِّهٖஅவருடைய பொறுப்பாளருக்குمَا شَهِدْنَاநாம்ஆஜராகவில்லைمَهْلِكَ اَهْلِهٖஅவ(ரும் அவ)ரது குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்குوَاِنَّا لَصٰدِقُوْنَ‏நாங்கள் உண்மையாளர்கள்
காலூ தகாஸமூ Bபில்லாஹி லனுBபய்யிதன்னஹூ வ அஹ்லஹூ தும்மா லனகூலன லிவலிய் யிஹீ மா ஷஹித்னா மஹ்லிக அஹ்லிஹீ வ இன்னா லஸாதிகூன்
அவர்கள்: “நாம் அவரையும் (ஸாலிஹையும்), அவருடைய குடும்பத்தாரையும் இரவோடிரவாக திட்டமாக அழித்து விடுவோம்; (இதனை யாரிடமும் சொல்வதில்லை) என்று நாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கொள்வோமாக!” பிறகு அவருடைய வாரிஸ்தாரிடம் (அவர்கள் பழிக்குப்பழி வாங்க வந்தால்) “உங்கள் குடும்பத்தார் அழிக்கப்பட்டதை நாங்கள் காணவேயில்லை; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்” என்று திட்டமாகக் கூறிவிடலாம் (எனச் சதி செய்தார்கள்).
وَمَكَرُوْا مَكْرًا وَّمَكَرْنَا مَكْرًا وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
وَمَكَرُوْا مَكْرًاஅவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர்وَّمَكَرْنَا مَكْرًاநாம் ஒரு சூழ்ச்சி செய்தோம்وَّهُمْஅவர்கள்لَا يَشْعُرُوْنَ‏உணர மாட்டார்கள்
வ மகரூ மக்ர(ன்)வ் வ மகர்னா மக்ர(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
(இவ்வாறு) அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்; ஆனால் அவர்கள் அறியாதவாறு நாமும் சூழ்ச்சி செய்தோம்.
فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ مَكْرِهِمْ ۙ اَنَّا دَمَّرْنٰهُمْ وَقَوْمَهُمْ اَجْمَعِیْنَ ۟
فَانْظُرْநீர் பார்ப்பீராக!كَيْفَஎப்படி என்றுكَانَஆகியதுعَاقِبَةُமுடிவுمَكْرِهِمْۙஅவர்கள் சூழ்ச்சியின்اَنَّاநிச்சயமாக நாம்دَمَّرْنٰهُمْஅவர்களை அழித்து விட்டோம்وَقَوْمَهُمْஅவர்களின் மக்கள்اَجْمَعِيْنَ‏அனைவரையும்
Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபது மக்ரிஹிம் அன்னா தம்மர் னாஹும் வ கவ்மஹும் அஜ்ம'ஈன்
ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (முடிவு) அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார் எல்லோரையும் நாம் அழித்தோம்.
فَتِلْكَ بُیُوْتُهُمْ خَاوِیَةً بِمَا ظَلَمُوْا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
فَتِلْكَஇதோبُيُوْتُهُمْஅவர்களது வீடுகள்خَاوِيَةً ۢவெறுமையாக இருக்கின்றனبِمَا ظَلَمُوْا‌ ؕஅவர்கள் தீமை செய்ததால்اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கிறதுلَاٰيَةًஓர் அத்தாட்சிلِّـقَوْمٍமக்களுக்குيَّعْلَمُوْنَ‏அறிகின்ற
Fபதில்க Bபுயூதுஹும் கா வியதம் Bபிமா ளலமூ; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிகவ் மி(ன்)ய்-யஃலமூன்
ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் (அதோ அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் அதோ பாழடைந்து கிடக்கின்றன; நிச்சயமாக இதிலே, அறியக் கூடிய சமூகத்தாருக்கு அத்தாட்சி இருக்கிறது.
وَاَنْجَیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟
وَاَنْجَيْنَاநாம் பாதுகாத்தோம்الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களைوَكَانُوْا يَتَّقُوْنَ‏அவர்கள் அஞ்சிக் கொண்டிருந்தனர்
வ அன்ஜய்னல் லதீன ஆமனூ வ கானூ யத்தகூன்
மேலும், ஈமான் கொண்டு, (அல்லாஹ்விடம்) பயபக்தியுடையவர்களாக இருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்.
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ ۟
وَلُوْطًاஇன்னும் லூத்தையும்اِذْகூறிய சமயத்தைقَالَநினைவு கூறுவீராக!لِقَوْمِهٖۤஅவர் தம் மக்களுக்குاَتَاْتُوْنَநீங்கள் செய்கிறீர்களா?الْـفَاحِشَةَமகா அசிங்கமானوَاَنْـتُمْநீங்கள்تُبْصِرُوْنَ‏அறியத்தான் செய்கிறீர்கள்
வ லூதன் இத் கால லிகவ்மிஹீ அதாதூனல் Fபா ஹிஷத வ அன்தும் துBப்ஸிரூன்
லூத்தையும் (நினைவு கூர்வீராக!) அவர் தம் சமூகத்தாரிடம்; “நீங்கள் பார்த்துக் கொண்டே மானக்கேடான செயலைச் செய்கின்றீர்களா?” என்று கூறினார்.
اَىِٕنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ ؕ بَلْ اَنْتُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ ۟
اَٮِٕنَّكُمْ?/நீங்கள்لَـتَاْتُوْنَதீர்க்கிறீர்கள்الرِّجَالَஆண்களிடமாشَهْوَةًஇச்சையைمِّنْ دُوْنِஅன்றிالنِّسَآءِ‌ؕபெண்கள்بَلْமாறாகاَنْـتُمْநீங்கள்قَوْمٌமக்கள்تَجْهَلُوْنَ‏நீங்கள் அறிய மாட்டீர்கள்
அ'இன்னகும் லதாதூனர் ரிஜால ஷஹ்வதம் மின் தூனின் னிஸா'; Bபல் அன்தும் கவ்முன் தஜ்ஹலூன்
“நீங்கள் பெண்களை விட்டு விட்டு, மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்” (என்றும் கூறினார்).
فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَخْرِجُوْۤا اٰلَ لُوْطٍ مِّنْ قَرْیَتِكُمْ ۚ اِنَّهُمْ اُنَاسٌ یَّتَطَهَّرُوْنَ ۟
فَمَا كَانَஇருக்கவில்லைجَوَابَபதிலோقَوْمِهٖۤஅவருடைய மக்களின்اِلَّاۤதவிரاَنْ قَالُـوْۤاகூறுவதாகவேاَخْرِجُوْۤاவெளியேற்றுங்கள்اٰلَகுடும்பத்தாரைلُوْطٍலூத்துடையمِّنْ قَرْيَتِكُمْ‌ۚஉங்கள் ஊரிலிருந்துاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்اُنَاسٌஅந்த மக்கள்يَّتَطَهَّرُوْنَ‏அசூசைப்படுகிறார்கள்
Fபமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலூ அக்ரிஜூ ஆலா லூதிம் மின் கர்யதிகும் இன்னஹும் உனாஸு(ன்)ய் யததஹ்ஹரூன்
அதற்கவருடைய சமுதாயத்தவர் (தம் இனத்தாரிடம்) “லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரைவிட்டு நீங்கள் வெளியேற்றி விடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகவும் பரிசுத்தமான மனிதர்களே!” என்று (பரிகாசமாகக்) கூறினார்களே தவிர வேறொரு பதிலும் அவர்களிடமில்லை.
فَاَنْجَیْنٰهُ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ؗ قَدَّرْنٰهَا مِنَ الْغٰبِرِیْنَ ۟
فَاَنْجَيْنٰهُஎனவே, நாம் அவரை(யும்) பாதுகாத்தோம்وَ اَهْلَهٗۤஅவருடைய குடும்பத்தையும்اِلَّاதவிரامْرَاَتَهٗஅவருடைய மனைவியைقَدَّرْنٰهَاஅவளை முடிவு செய்தோம்مِنَ الْغٰبِرِيْنَ‏மிஞ்சியவர்களில்
Fப அன்ஜய்னாஹு வ அஹ்லஹூ இல்லம் ர அதஹூ கத்தர்னாஹா மினல் காBபிரீன்
ஆனால், நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொண்டோம்; அவருடைய மனைவியைத் தவிர (ஈமான் கொள்ளாமல்) பின்தங்கி (அழிந்து) விட்டவர்களில் ஒருத்தியாக அவளை தீர்மானித்தோம்.
وَاَمْطَرْنَا عَلَیْهِمْ مَّطَرًا ۚ فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِیْنَ ۟۠
وَاَمْطَرْنَاபொழிவித்தோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுمَّطَرًا‌ۚமழைفَسَآءَமிகக் கெட்டதாகும்مَطَرُஅந்த மழைالْمُنْذَرِيْنَ‏எச்சரிக்கப்பட்டவர்களின்
வ அம்தர்னா 'அலய்ஹிம்ம் மதரன் Fபஸா'அ மதருல் முன்தரீன்
இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மழை பொழியச் செய்தோம்; எனவே, எச்சரிக்கப்பட்ட அவர்கள் மீது பெய்த அம்மழை மிகவும் கெட்டது.  
قُلِ الْحَمْدُ لِلّٰهِ وَسَلٰمٌ عَلٰی عِبَادِهِ الَّذِیْنَ اصْطَفٰی ؕ ءٰٓاللّٰهُ خَیْرٌ اَمَّا یُشْرِكُوْنَ ۟
قُلِகூறுவீராகالْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்விற்கேوَسَلٰمٌஇன்னும் ஸலாம்عَلٰى عِبَادِهِஅவனுடைய அடியார்களுக்குالَّذِيْنَஎவர்கள்اصْطَفٰىؕஅவன் தேர்ந்தெடுத்தான்ءٰۤللّٰهُ?/அல்லாஹ்خَيْرٌசிறந்தவையாاَمَّا يُشْرِكُوْنَؕ‏அல்லது அவர்கள் இணைவைப்பவையா?
குலில் ஹம்து லில்லாஹி வ ஸலாமுன் 'அலா 'இBபாதிஹில் லதீனஸ் தFபா; ஆல்லாஹு கய்ருன் அம்ம்மா யுஷ்ரிகூன்
(நபியே!) நீர் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?”  
اَمَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ لَكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَنْۢبَتْنَا بِهٖ حَدَآىِٕقَ ذَاتَ بَهْجَةٍ ۚ مَا كَانَ لَكُمْ اَنْ تُنْۢبِتُوْا شَجَرَهَا ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ بَلْ هُمْ قَوْمٌ یَّعْدِلُوْنَ ۟ؕ
اَمَّنْ?/எவன்خَلَقَபடைத்தான்السَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضَபூமியையும்وَاَنْزَلَஇன்னும் அவன் இறக்கினான்لَـكُمْஉங்களுக்குمِّنَ السَّمَآءِமேகத்திலிருந்துمَآءً‌ ۚமழையைفَاَنْۢبَتْنَاநாம் முளைக்க வைத்தோம்بِهٖஅதன்மூலம்حَدَآٮِٕقَதோட்டங்களைذَاتَ بَهْجَةٍ‌ ۚஅழகிய காட்சியுடையمَا كَانَமுடியாதுلَـكُمْஉங்களால்اَنْ تُـنْۢبِتُوْاநீங்கள் முளைக்க வைக்கشَجَرَهَا ؕஅதன் மரங்களைءَاِلٰـهٌ(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!مَّعَ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வுடன்بَلْமாறாகهُمْஅவர்கள்قَوْمٌமக்கள்يَّعْدِلُوْنَ ؕ‏இணைவைக்கின்றனர்
அம்மன் கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வ அன்Zஜல லகும் மினஸ் ஸமா'இ மா'அன் Fப அன்Bபத்னா Bபிஹீ ஹதா'இக தாத Bபஹ்ஜஹ்; மா கான லகும் அன் துன்Bபிதூ ஷஜரஹா; 'அ-இலாஹுன் ம'அல்லாஹ்; Bபல் ஹும் கவ்மு(ன்)ய் யஃதிலூன்
அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.
اَمَّنْ جَعَلَ الْاَرْضَ قَرَارًا وَّجَعَلَ خِلٰلَهَاۤ اَنْهٰرًا وَّجَعَلَ لَهَا رَوَاسِیَ وَجَعَلَ بَیْنَ الْبَحْرَیْنِ حَاجِزًا ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۟ؕ
اَمَّنْ?/எவன்جَعَلَஆக்கினான்الْاَرْضَபூமியைقَرَارًاநிலையானதாகوَّجَعَلَஇன்னும் ஏற்படுத்தினான்خِلٰلَهَاۤஅதற்கிடையில்اَنْهٰرًاஆறுகளைوَّجَعَلَஇன்னும் படைத்தான்لَهَاஅதற்காகرَوَاسِىَபெரும் மலைகளைوَجَعَلَஇன்னும் அமைத்தான்بَيْنَஇடையில்الْبَحْرَيْنِஇரு கடல்களுக்குحَاجِزًا‌ ؕதடுப்பைءَاِلٰـهٌ(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!مَّعَ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வுடன்بَلْ اَكْثَرُهُمْமாறாக/அதிகமானவர்கள்/அவர்களில்لَا يَعْلَمُوْنَ ؕ‏அறியமாட்டார்கள்
அம்மன்ன் ஜ'அலல் அர்ள கரார(ன்)வ் வ ஜ'அல கிலாலஹா அன்ஹார(ன்)வ் வ ஜ'அல லஹா ரவாஸிய வ ஜ'அல Bபய்னல் Bபஹ்ரய்னி ஹாஜிZஜா; 'அ-இலாஹுன் ம'அல்லாஹ்; Bபல் அக்தருஹும் லா யஃலமூன்
இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
اَمَّنْ یُّجِیْبُ الْمُضْطَرَّ اِذَا دَعَاهُ وَیَكْشِفُ السُّوْٓءَ وَیَجْعَلُكُمْ خُلَفَآءَ الْاَرْضِ ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟ؕ
اَمَّنْஅல்லது/எவன்يُّجِيْبُபதிலளிப்பான்الْمُضْطَرَّசிரமத்தில் இருப்பவருக்குاِذَا دَعَاهُஅவர் அவனை அழைக்கும்போதுوَيَكْشِفُமேலும், நீக்குகின்றான்السُّوْٓءَதுன்பத்தைوَيَجْعَلُكُمْஇன்னும் உங்களை ஆக்குகின்றான்خُلَفَآءَபிரதிநிதிகளாகالْاَرْضِ‌ ؕஇப்பூமியின்ءَاِلٰـهٌ(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!مَّعَ اللّٰهِ ؕஅல்லாஹ்வுடன்قَلِيْلًا مَّاமிகக் குறைவாகவேتَذَكَّرُوْنَ ؕ‏நீங்கள் நல்லுணர்வு பெறுகிறீர்கள்
அம்ம(ன்)ய்-யுஜீBபுல் முள் தர்ர இதா த'ஆஹு வ யக்ஷிFபுஸ் ஸூ'அ வ யஜ்'அலுகும் குல Fபா'அல் அர்ளி 'அ-இலாஹுன் ம'அல்லாஹ் கலீலன் மா ததக் கரூன்
கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.
اَمَّنْ یَّهْدِیْكُمْ فِیْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَنْ یُّرْسِلُ الرِّیٰحَ بُشْرًاۢ بَیْنَ یَدَیْ رَحْمَتِهٖ ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ تَعٰلَی اللّٰهُ عَمَّا یُشْرِكُوْنَ ۟ؕ
اَمَّنْ?/எவன்يَّهْدِيْكُمْஉங்களுக்கு வழிகாட்டுகிறான்فِىْ ظُلُمٰتِஇருள்களில்الْبَرِّதரையின்وَ الْبَحْرِமற்றும் கடலின்وَمَنْஇன்னும் எவன்يُّرْسِلُஅனுப்புகிறானோالرِّيٰحَகாற்றுகளைبُشْرًۢاசுபச் செய்தியாகبَيْنَ يَدَىْமுன்னர்رَحْمَتِهٖؕதனது அருளுக்குءَاِلٰـهٌ(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!مَّعَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடன்تَعٰلَىமிக்க உயர்ந்தவன்اللّٰهُஅல்லாஹ்عَمَّا يُشْرِكُوْنَؕ‏அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு
அம்ம(ன்)ய்-யஹ்தீகும் Fபீ ளுலுமாதில் Bபர்ரி வல் Bபஹ்ரி வ ம(ன்)ய் யுர்ஸிலு ரியாஹ Bபுஷ்ரன் Bபய்ன யதய் ரஹ்மதிஹ்; 'அ-இலாஹுன் ம'அல்லாஹ்; த'ஆலல் லாஹு 'அம்மா யுஷ்ரிகூன்
கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய “ரஹ்மத்” என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.
اَمَّنْ یَّبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ وَمَنْ یَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
اَمَّنْ?/எவன்يَّبْدَؤُاமுதலில் உருவாக்குகின்றான்الْخَـلْقَபடைப்புகளைثُمَّபிறகுيُعِيْدُهٗஅவற்றை மீண்டும் உருவாக்குகின்றான்وَمَنْஇன்னும் எவன்يَّرْزُقُكُمْஉங்களுக்கு உணவளிக்கின்றான்مِّنَ السَّمَآءِமேகத்திலிருந்தும்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமியிலிருந்தும்ءَاِلٰـهٌஒரு கடவுளா?!مَّعَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடன்قُلْகூறுவீராகهَاتُوْاகொண்டு வாருங்கள்بُرْهَانَكُمْஉங்கள் ஆதாரத்தைاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
அம்ம(ன்)ய் யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹூ வ ம(ன்)ய்-யர்Zஜுகுகும் மினஸ் ஸமா'இ வல் அர்ள்; 'அ-இலாஹுன் ம'அல்லஹ்; குல் ஹாதூ Bபுர்ஹானகும் இன் குன்தும் ஸாதிகீன்
முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.”
قُلْ لَّا یَعْلَمُ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَیْبَ اِلَّا اللّٰهُ ؕ وَمَا یَشْعُرُوْنَ اَیَّانَ یُبْعَثُوْنَ ۟
قُلْகூறுவீராகلَّا يَعْلَمُஅறியமாட்டார்مَنْஎவரும்فِى السَّمٰوٰتِவானங்களிலும்وَالْاَرْضِஇன்னும் பூமியிலும்الْغَيْبَமறைவானவற்றைاِلَّاதவிரاللّٰهُ‌ؕஅல்லாஹ்வைوَمَا يَشْعُرُوْنَஇன்னும் உணரமாட்டார்கள்اَيَّانَஎப்போதுيُبْعَثُوْنَ‏தாங்கள் எழுப்பப்படுவோம் என்பதை
குல் லா யஃலமு மன் Fபிஸ் ஸம்மாவாதி வல் அர்ளில் கய்Bப இல்லல் லாஹ்; வமா யஷ்'உரூன அய்யான யுBப்'அதூன்
(இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.”
بَلِ ادّٰرَكَ عِلْمُهُمْ فِی الْاٰخِرَةِ ۫ بَلْ هُمْ فِیْ شَكٍّ مِّنْهَا ۫ؗ بَلْ هُمْ مِّنْهَا عَمُوْنَ ۟۠
بَلِ ادّٰرَكَஅல்லது மறைந்து விட்டதா?عِلْمُهُمْஅவர்களது அறிவுفِى الْاٰخِرَةِ‌மறுமை விஷயத்தில்بَلْமாறாகهُمْஅவர்கள்فِىْ شَكٍّசந்தேகத்தில் இருக்கின்றனர்مِّنْهَا அதில்بَلْமாறாகهُمْஅவர்கள்مِّنْهَاஅதில்عَمُوْنَ‏குருடர்கள் ஆவர்
Bபலித் தாரக 'இல்முஹும் Fபில் ஆகிரஹ்; Bபல் ஹும் Fபீ ஷக்கின் மின்ஹா Bபல் ஹும் மின்ஹா 'அமூன்
ஆனால் மறுமையைப் பற்றிய அவர்களுடைய அறிவோ மிகக் கீழ்நிலையிலே உள்ளது; அவர்கள் அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே இருக்கின்றனர்; அது மட்டுமா? அதைப்பற்றி அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர்.  
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْۤا ءَاِذَا كُنَّا تُرٰبًا وَّاٰبَآؤُنَاۤ اَىِٕنَّا لَمُخْرَجُوْنَ ۟
وَقَالَஇன்னும் கூறினர்الَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரித்தவர்கள்ءَاِذَا كُنَّاநாங்கள் மாறிவிட்டாலும்تُرٰبًاமண்ணாகوَّاٰبَآؤُنَاۤஎங்கள் மூதாதைகளும்اَٮِٕنَّا لَمُخْرَجُوْنَ‏நிச்சயமாக நாங்கள் வெளியேற்றப்படுவோமா?
வ காலல் லதீன கFபரூ 'அ-இதா குன்னா துராBப(ன்)வ் வ ஆBபா'உனா அ'இன்னா லமுக்ரஜூன்
மேலும், நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்: “நாங்களும் எங்கள் மூதாதையரும் (மரித்து) மண்ணாகிப் போன பின்னர், மீண்டும் வெளியே கொண்டு வரப்படுவோமா?
لَقَدْ وُعِدْنَا هٰذَا نَحْنُ وَاٰبَآؤُنَا مِنْ قَبْلُ ۙ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
لَـقَدْதிட்டவட்டமாகوُعِدْنَاநாங்கள் வாக்களிக்கப்பட்டோம்هٰذَاஇதைنَحْنُநாங்களும்وَاٰبَآؤُنَاஎங்கள் மூதாதைகளும்مِنْ قَبْلُۙஇதற்கு முன்னர்اِنْ هٰذَاۤஇது (வேறு) இல்லைاِلَّاۤஅன்றிاَسَاطِيْرُகட்டுக் கதைகள்الْاَوَّلِيْنَ‏முன்னோர்களின்
லகத் வு'இத்னா ஹாதா னஹ்னு வ ஆBபா'உனா மின் கBப்லு இன் ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
நிச்சயமாக, இ(ந்த அச்சுறுத்தலான)து எங்களுக்கும் எங்களுக்கு முன் சென்று போன எங்கள் மூதாதையருக்கும் வாக்களிக்கப்பட்டே வருகிறது; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” (என்றுங் கூறுகின்றனர்).
قُلْ سِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِیْنَ ۟
قُلْகூறுவீராக!سِيْرُوْاசெல்வீர்களாக!فِى الْاَرْضِபூமியில்فَانْظُرُوْاபார்ப்பீர்களாக!كَيْفَஎப்படி என்றுكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُجْرِمِيْنَ‏குற்றவாளிகளின்
குல் ஸீரூ Fபில் அர்ளி Fபன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் முஜ்ரிமீன்
“பூமியில் பிரயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக.
وَلَا تَحْزَنْ عَلَیْهِمْ وَلَا تَكُنْ فِیْ ضَیْقٍ مِّمَّا یَمْكُرُوْنَ ۟
وَلَا تَحْزَنْஇன்னும் நீர் துக்கப்படாதீர்!عَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَا تَكُنْஇன்னும் நீர் ஆகிவிடாதீர்!فِىْ ضَيْقٍநெருக்கடியில்مِّمَّا يَمْكُرُوْنَ‏அவர்கள் சூழ்ச்சி செய்கின்ற காரணத்தால்
வ லா தஹ்Zஜன் 'அலய்ஹிம் வலா தகுன் Fபீ ளய்கின் மிம்மா யம்குரூன்
அவர்களுக்காக நீர் கவலைப்படாதீர்; மேலும், அவர்கள் செய்யும் சூழ்ச்சியைப் பற்றியும் நீர் சங்கடத்தில் ஆக வேண்டாம்.
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَيَقُوْلُوْنَஇன்னும் அவர்கள் கூறுகின்றனர்مَتٰىஎப்போதுهٰذَاஇந்தالْوَعْدُவாக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
இன்னும்: “நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்?)” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
قُلْ عَسٰۤی اَنْ یَّكُوْنَ رَدِفَ لَكُمْ بَعْضُ الَّذِیْ تَسْتَعْجِلُوْنَ ۟
قُلْகூறுவீராகعَسٰٓى اَنْ يَّكُوْنَவரக்கூடும்رَدِفَசமீபமாகلَـكُمْஉங்களுக்குبَعْضُசிலالَّذِىْஎவைتَسْتَعْجِلُوْنَ‏அவசரப்படுகின்றீர்கள்
குல் 'அஸா அ(ன்)ய்-யகூன ரதிFப லகும் Bபஃளுல் லதீ தஸ்தஃஜிலூன்
“நீங்கள் அவசரப்படுபவற்றில் சில இப்பொழுதே உங்களுக்கு வந்து சேரக்கூடும்” என்று (நபியே!) நீர் கூறிவிடுவீராக.
وَاِنَّ رَبَّكَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَشْكُرُوْنَ ۟
وَاِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَذُوْ فَضْلٍஅருளுடையவன்عَلَى النَّاسِமக்கள் மீதுوَلٰكِنَّஎனினும்اَكْثَرَஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்لَا يَشْكُرُوْنَ‏நன்றி அறிய மாட்டார்கள்
வ இன்ன ரBப்Bபக லதூ Fபள்லின் 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரஹும் லா யஷ்குரூன்
இன்னும் நிச்சயமாக உம் இறைவன் மனிதர்கள் மீது மிக்க கிருபையுடையவனாகவே இருக்கின்றான்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
وَاِنَّ رَبَّكَ لَیَعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا یُعْلِنُوْنَ ۟
وَاِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَيَـعْلَمُநன்கறிவான்مَاஎவற்றைتُكِنُّமறைக்கின்றனصُدُوْرُஉள்ளங்கள்هُمْஅவர்களதுوَمَاஇன்னும் எவற்றைيُعْلِنُوْنَ‏வெளிப்படுத்துகின்றனர்
வ இன்ன ரBப்Bபக ல யஃலமு மா துகின்னு ஸுதூருஹும் வமா யுஃலினூன்
மேலும்: அவர்களின் இருதயங்கள் மறைத்து வைத்திருப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான்.
وَمَا مِنْ غَآىِٕبَةٍ فِی السَّمَآءِ وَالْاَرْضِ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟
وَمَاஇல்லைمِنْ غَآٮِٕبَةٍமறைந்த எதுவும்فِى السَّمَآءِவானத்திலும்وَالْاَرْضِஇன்னும் பூமியிலும்اِلَّاதவிரفِىْ كِتٰبٍபதிவேட்டில்مُّبِيْنٍ‏தெளிவான
வமா மின் கா'இBபதின் Fபிஸ் ஸமா'இ வல் அர்ளி இல்லா Fபீ கிதாBபின் முBபீன்
வானத்திலும், பூமியிலும் மறைந்துள்ளவற்றில் நின்றும் எதுவும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான குறிப்பேட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை.
اِنَّ هٰذَا الْقُرْاٰنَ یَقُصُّ عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ اَكْثَرَ الَّذِیْ هُمْ فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
اِنَّநிச்சயமாகهٰذَاஇந்தالْقُرْاٰنَகுர்ஆன்يَقُصُّவிவரிக்கிறதுعَلٰىமீதுبَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்கள்اَكْثَرَபல விஷயங்களைالَّذِىْஎவைهُمْஅவர்கள்فِيْهِஅதில்يَخْتَلِفُوْنَ‏முரண்படுகின்றனர்
இன்ன ஹாதல் குர்ஆன யகுஸ்ஸு 'அலா Bபனீ இஸ்ரா'ஈல அக்தரல் லதீ ஹும் Fபீஹி யக்தலிFபூன்
நிச்சயமாக இந்த குர்ஆன் பனூ இஸ்ராயீல்களுக்கு அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததில் பெரும்பாலானதை விவரித்துக் கூறுகிறது.
وَاِنَّهٗ لَهُدًی وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ ۟
وَاِنَّهٗநிச்சயமாக இதுلَهُدًىநேர்வழியும்وَّرَحْمَةٌகருணையும்لِّلْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
வ இன்னஹூ லஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லில்மு'மினீன்
மேலும்: நிச்சயமாக இது முஃமின்களுக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாக (நல்லருளாக)வும் இருக்கிறது.
اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ بِحُكْمِهٖ ۚ وَهُوَ الْعَزِیْزُ الْعَلِیْمُ ۟ۙۚ
اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்يَقْضِىْதீர்ப்பளிப்பான்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்بِحُكْمِهٖ‌ۚதனது சட்டத்தின் படிوَهُوَஅவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْعَلِيْمُ ۙ‌ۚ‏நன்கறிந்தவன்
இன்ன ரBப்Bபக யக்ளீ Bபய்னஹும் Bபிஹுக்மிஹ்; வ ஹுவல் 'அZஜீZஜுல் 'அலீம்
நிச்சயமாக உம் இறைவன் (இறுதியில்) தன் கட்டளையைக் கொண்டு அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான் - மேலும், அவன்தான் மிகைத்தவன்; நன்கறிந்தவன்.
فَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ اِنَّكَ عَلَی الْحَقِّ الْمُبِیْنِ ۟
فَتَوَكَّلْஆகவே, நம்பிக்கை வைப்பீராக!عَلَىமீதுاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்اِنَّكَநிச்சயமாக நீர்عَلَىமீதுالْحَـقِّசத்தியத்தின்الْمُبِيْنِ‏தெளிவான
Fபதவக்கல் 'அலல் லாஹி இன்னக 'அலல் ஹக்கில் முBபீன்
எனவே, (நபியே!) அல்லாஹ்வின் மீதே (முற்றிலும்) நம்பிக்கை வைப்பீராக நிச்சயமாக நீர் தெளிவான உண்மையின் மீது இருக்கின்றீர்.
اِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰی وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِیْنَ ۟
اِنَّكَநிச்சயமாக நீர்لَا تُسْمِعُநீர் செவியுறச் செய்யமுடியாதுالْمَوْتٰىமரணித்தவர்களைوَلَا تُسْمِعُஇன்னும் நீர் செவியுறச் செய்ய முடியாதுالصُّمَّசெவிடர்களுக்கும்الدُّعَآءَஅழைப்பைاِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ‏அவர்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பினால்
இன்னக லா துஸ்மி'உல் மவ்தா வலா துஸ்மி'உஸ் ஸும்மத் து'ஆ இதா வல்லவ் முத்Bபிரீன்
நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது; - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது - (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது.
وَمَاۤ اَنْتَ بِهٰدِی الْعُمْیِ عَنْ ضَلٰلَتِهِمْ ؕ اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ یُّؤْمِنُ بِاٰیٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ ۟
وَمَاۤ اَنْتَநீர் முடியாதுبِهٰدِىநேர்வழிபடுத்தالْعُمْىِகுருடர்களைعَنْ ضَلٰلَتِهِمْ‌ؕஅவர்களின் வழிகேட்டிலிருந்துاِنْ تُسْمِعُநீர் செவியுறச் செய்ய முடியாதுاِلَّاதவிரمَنْஎவர்يُّؤْمِنُநம்பிக்கை கொள்வார்بِاٰيٰتِنَاநமது வசனங்களைفَهُمْஅவர்கள்தான்مُّسْلِمُوْنَ‏முற்றிலும் பணிந்து நடப்பவர்கள்
வ மா அன்த Bபிஹாதில் 'உம்யி 'அன் ளலாலதிஹிம் இன் துஸ்மி'உ இல்லா மய் யு'மினு Bபி ஆயாதினா Fபஹும் முஸ்லிமூன்
இன்னும்: நீர் குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து (அகற்றி) நேர் வழியில் செலுத்த முடியாது - எவர்கள் நம் வசனங்களை நம்புகிறார்களோ அவர்களைத் தான் (அவற்றைக்) கேட்கும்படி நீர் செய்ய முடியும்; ஏனெனில் அவர்கள் (அவற்றை) முற்றிலும் ஏற்றுக்கொள்வர்.
وَاِذَا وَقَعَ الْقَوْلُ عَلَیْهِمْ اَخْرَجْنَا لَهُمْ دَآبَّةً مِّنَ الْاَرْضِ تُكَلِّمُهُمْ ۙ اَنَّ النَّاسَ كَانُوْا بِاٰیٰتِنَا لَا یُوْقِنُوْنَ ۟۠
وَ اِذَا وَقَعَநிகழ்ந்து விட்டால்الْقَوْلُவாக்குعَلَيْهِمْஅவர்கள் மீதுاَخْرَجْنَاநாம் வெளிப்படுத்துவோம்لَهُمْஅவர்களுக்குدَآبَّةًஒரு மிருகத்தைمِّنَ الْاَرْضِபூமியிலிருந்துتُكَلِّمُهُمْۙஅது பேசும்/அவர்களிடம்اَنَّ النَّاسَநிச்சயமாக மக்கள்كَانُوْاஇருந்தனர்بِاٰيٰتِنَاநமது அத்தாட்சிகளைக் கொண்டுلَا يُوْقِنُوْنَ‏உறுதி கொள்ளாதவர்களாக
வ இதா வக'அல் கவ்லு 'அலய்ஹிம் அக்ரஜ்னா லஹும் தாBப்Bபதன் மினல் அர்ளி துகல் லிமுஹும் அன்னன் னாஸ கானூ Bபி ஆயாதினா லா யூகினூன்
அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
وَیَوْمَ نَحْشُرُ مِنْ كُلِّ اُمَّةٍ فَوْجًا مِّمَّنْ یُّكَذِّبُ بِاٰیٰتِنَا فَهُمْ یُوْزَعُوْنَ ۟
وَ يَوْمَநாளில்نَحْشُرُநாம்எழுப்புகின்றோம்مِنْ كُلِّ اُمَّةٍஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும்فَوْجًاகூட்டத்தைمِّمَّنْ يُّكَذِّبُபொய்ப்பிக்கின்றவர்களின்بِاٰيٰتِنَاநமது அத்தாட்சிகளைفَهُمْஆகவே, அவர்கள்يُوْزَعُوْنَ‏தடுத்து நிறுத்தப்படுவார்கள்
வ யவ்ம னஹ்ஷுரு மின் குல்லி உம்மதின் Fபவ்ஜன் மிம்ம(ன்)ய் யுகத்திBபு Bபி ஆயாதினா Fபஹும் யூZஜ'ஊன்
(அவர்களிலுள்ள) ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை(ப் பிரித்து) ஒரு படையாக நாம் சேகரிக்கும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக).
حَتّٰۤی اِذَا جَآءُوْ قَالَ اَكَذَّبْتُمْ بِاٰیٰتِیْ وَلَمْ تُحِیْطُوْا بِهَا عِلْمًا اَمَّاذَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
حَتّٰٓىஇறுதியாகاِذَا جَآءُوْஅவர்கள் வந்து விடும்போதுقَالَஅவன் கூறுவான்اَكَذَّبْتُمْநீங்கள்பொய்ப்பித்தீர்களா?بِاٰيٰتِىْஎனதுஅத்தாட்சிகளைوَلَمْ تُحِيْطُوْا بِهَا عِلْمًاநீங்கள் முழுமையாக அறியாமல் இருக்க/அவற்றைاَمَّاذَا?/அல்லது/என்னكُنْتُمْ تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்து கொண்டு இருந்தீர்கள்?
ஹத்தா இதா ஜா'ஊ கால அகத்தBப்தும் Bபி ஆயாதீ வ லம் துஹீதூ Bபிஹா 'இல்மன் அம்மாதா குன்தும் தஃமலூன்
அவர்கள் யாவரும் வந்ததும்: “நீங்கள் என் வசனங்களைச் சூழ்ந்தறியாத நிலையில் அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களா? நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்பான்.
وَوَقَعَ الْقَوْلُ عَلَیْهِمْ بِمَا ظَلَمُوْا فَهُمْ لَا یَنْطِقُوْنَ ۟
وَوَقَعَநிகழ்ந்து விட்டதுالْقَوْلُகூற்றுعَلَيْهِمْஅவர்கள் மீதுبِمَا ظَلَمُوْاஅவர்களின் தீமைகளால்فَهُمْஆகவே, அவர்கள்لَا يَنْطِقُوْنَ‏பேசமாட்டார்கள்
வ வக'அல் கவ்லு 'அலய்ஹிம் Bபிமா ளலமூ Fபஹும் லா யன்திகூன்
அன்றியும், அவர்கள் செய்து வந்த அக்கிரமத்தின் காரணத்தினால் அவர்கள் மீது (வேதனை பற்றிய) வாக்கு ஏற்பட்டு விட்டது; ஆகவே, அவர்கள் பேசமாட்டார்கள்.
اَلَمْ یَرَوْا اَنَّا جَعَلْنَا الَّیْلَ لِیَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
اَلَمْ يَرَوْاஅவர்கள் பார்க்கவில்லையா?اَنَّاநிச்சயமாக நாம்جَعَلْنَاநாம் அமைத்தோம்الَّيْلَஇரவைلِيَسْكُنُوْاஅவர்கள் ஓய்வு பெறுவதற்காக(வும்)فِيْهِஅதில்وَالنَّهَارَஇன்னும் பகலைمُبْصِرًا ؕவெளிச்சமாகவும்اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில்لَاٰيٰتٍபல அத்தாட்சிகள்لِّـقَوْمٍமக்களுக்குيُّؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்கின்றனர்
அலம் யரவ் அன்னா ஜ'அல்னல் லய்ல லி யஸ்குனூ Fபீஹி வன்னஹார முBப்ஸிரா; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ் மி(ன்)ய்-யு'மினூன்
நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَیَوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ فَفَزِعَ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ ؕ وَكُلٌّ اَتَوْهُ دٰخِرِیْنَ ۟
وَيَوْمَநாளில்يُنْفَخُஊதப்படும்فِىْ الصُّوْرِ‘சூர்’ல்فَفَزِعَதிடுக்கிடுவார்(கள்)مَنْ فِىْ السَّمٰوٰتِவானங்களில் உள்ளவர்களும்وَمَنْ فِى الْاَرْضِபூமியில் உள்ளவர்களும்اِلَّاதவிரمَنْ شَآءَஎவர்களை நாடினான்اللّٰهُ‌ؕஅல்லாஹ்وَكُلٌّஎல்லோரும்اَتَوْهُஅவனிடம் வருவார்கள்دٰخِرِيْنَ‏பணிந்தவர்களாக
வ யவ்ம யுன்Fபகு Fபிஸ் ஸூரி FபFபZஜி'அ மன் Fபிஸ் ஸமாவாதி வ மன் Fபில் அர்ளி இல்லா மன் ஷா'அல் லாஹ்; வ குல்லுன் அதவ்ஹு தாகிரீன்
இன்னும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் திகிலடைந்து விடுவார்கள்; அவ்வனைவரும் பணிந்தவர்களாக அவனிடம் வருவார்கள்.
وَتَرَی الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَّهِیَ تَمُرُّ مَرَّ السَّحَابِ ؕ صُنْعَ اللّٰهِ الَّذِیْۤ اَتْقَنَ كُلَّ شَیْءٍ ؕ اِنَّهٗ خَبِیْرٌ بِمَا تَفْعَلُوْنَ ۟
وَتَرَىபார்ப்பீர்الْجِبَالَமலைகளைتَحْسَبُهَاஅவற்றை நீர் கருதுவீர்جَامِدَةًஉறுதியாக நிற்பதாகوَّهِىَஅவையோتَمُرُّசெல்கின்றனمَرَّசெல்வதைப் போன்றுالسَّحَابِ‌ؕமேகங்கள்صُنْعَசெயலாகும்اللّٰهِஅல்லாஹ்வின்الَّذِىْۤஎவன்اَتْقَنَசெம்மையாகச் செய்தான்كُلَّ شَىْءٍ‌ؕஎல்லாவற்றையும்اِنَّهٗநிச்சயமாக அவன்خَبِيْرٌۢஆழ்ந்தறிபவன்بِمَا تَفْعَلُوْنَ‏நீங்கள் செய்பவற்றை
வ தரல் ஜிBபால தஹ்ஸBபுஹா ஜாமிதத(ன்)வ் வ ஹிய தமுர்ரு மர்ரஸ் ஸஹாBப்; ஸுன்'அல் லாஹில் லதீ அத்கன குல்ல ஷய்'; இன்னஹூ கBபீருன் Bபிமா தFப்'அலூன்
இன்னும் நீர் மலைகளைப் பார்த்து அவை மிகவும் உறுதியாக இருப்பதாக எண்ணுகிறீர்; (எனினும் அந்நாளில்) அவை மேகங்களைப் போல் பறந்தோடும்; ஒவ்வொரு பொருளையும் உறுதியாக்கிய அல்லாஹ்வின் செயல்திறனாலேயே (அவ்வாறு நிகழும்.) நிச்சயமாக, அவன் நீங்கள் செய்வதை நன்கு அறிபவன்.
مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَیْرٌ مِّنْهَا ۚ وَهُمْ مِّنْ فَزَعٍ یَّوْمَىِٕذٍ اٰمِنُوْنَ ۟
مَنْயார்جَآءَவருவரோبِالْحَسَنَةِநன்மையைக் கொண்டுفَلَهٗஅவருக்கு உண்டுخَيْرٌசிறந்ததுمِّنْهَا‌ۚஅதன் காரணமாகوَهُمْஅவர்கள்مِّنْ فَزَعٍதிடுக்கத்திலிருந்துيَّوْمَٮِٕذٍஅந்நாளில்اٰمِنُوْنَ‏பாதுகாப்புப் பெறுவார்கள்
மன் ஜா'அ Bபில் ஹஸனதி Fபலஹூ கய்ருன் மின்ஹா வ ஹும் மின் FபZஜ'இ(ன்)ய் யவ்ம'இதின் ஆமினூன்
(அந்நாளில்) எவர் நன்மையைக் கொண்டு வருகிறாரோ, அவருக்கு அதைவிட மேலானது உண்டு - மேலும் அவர்கள் அந்நாளின் திடுக்கத்தை விட்டும் அச்சந் தீர்ந்து இருப்பார்கள்.
وَمَنْ جَآءَ بِالسَّیِّئَةِ فَكُبَّتْ وُجُوْهُهُمْ فِی النَّارِ ؕ هَلْ تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
وَمَنْஇன்னும் யார்جَآءَவருவாரோبِالسَّيِّئَةِதீமையைக் கொண்டுفَكُبَّتْதள்ளப்படும்وُجُوْهُهُمْஅவர்களுடைய முகங்கள்فِى النَّارِؕநரகத்தில்هَلْ تُجْزَوْنَகூலி கொடுக்கப்படுவீர்களா?اِلَّاதவிரمَا كُنْتُمْஎதற்கு நீங்கள் இருந்தீர்கள்تَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
வ மன் ஜா'அ Bபிஸ்ஸய் யி'அதி FபகுBப்Bபத் வுஜூஹுஹும் Fபின் னாரி ஹல் துஜ்Zஜவ்ன இல்லா மா குன்தும் தஃமலூன்
இன்னும்: எவர் தீமையைக் கொண்டு வருகிறாரோ அவர்களுடைய முகங்கள் குப்புற (நரக) நெருப்பில் தள்ளப்படும்; “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு அன்றி (வேறு) நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று கூறப்படும்.)
اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ رَبَّ هٰذِهِ الْبَلْدَةِ الَّذِیْ حَرَّمَهَا وَلَهٗ كُلُّ شَیْءٍ ؗ وَّاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِیْنَ ۟ۙ
اِنَّمَاۤ اُمِرْتُநான் கட்டளையிடப்பட்டதெல்லாம்اَنْ اَعْبُدَவணங்குவதற்குத்தான்رَبَّஇறைவனைهٰذِهِ الْبَلْدَةِஇந்த ஊரின்الَّذِىْ حَرَّمَهَاஎவன்/புனிதப்படுத்தியுள்ளான்/அதைوَلَهٗஅவனுக்குத்தான்كُلُّஎல்லாشَىْءٍ‌பொருள்களும்وَّاُمِرْتُஇன்னும் , நான் கட்டளை இடப்பட்டுள்ளேன்اَنْ اَكُوْنَநான் ஆகவேண்டும் என்றுمِنَ الْمُسْلِمِيْنَۙ‏முஸ்லிம்களில்
இன்னமா உமிர்து அன் அஃBபுத ரBப்Bப ஹாதிஹில் Bபல்ததில் லதீ ஹர்ரமஹா வ லஹூ குல்லு ஷய்'இ(ன்)வ் வ உமிர்து அன் அகூன மினல் முஸ்லிமீன்
“இந்த ஊரை எவன் கண்ணியப் படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன; அன்றியும் அவனுக்கே முற்றிலும் வழிபட்டவானக இருக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று நபியே! நீர் கூறுவீராக).
وَاَنْ اَتْلُوَا الْقُرْاٰنَ ۚ فَمَنِ اهْتَدٰی فَاِنَّمَا یَهْتَدِیْ لِنَفْسِهٖ ۚ وَمَنْ ضَلَّ فَقُلْ اِنَّمَاۤ اَنَا مِنَ الْمُنْذِرِیْنَ ۟
وَاَنْ اَتْلُوَاஇன்னும் நான் ஓதுவதற்குالْقُرْاٰنَ‌ۚகுர்ஆனைفَمَنِஆகவே, யார்اهْتَدٰىநேர்வழி பெறுகிறாரோفَاِنَّمَا يَهْتَدِىْநிச்சயமாக அவர் நேர்வழி பெறுவதெல்லாம்لِنَفْسِهٖ‌ۚஅவரது நன்மைக்காகத்தான்وَمَنْயார்ضَلَّவழி கெடுகின்றானோفَقُلْகூறுவீராக!اِنَّمَاۤ اَنَاநான் எல்லாம்مِنَ الْمُنْذِرِيْنَ‏எச்சரிப்பவர்களில் உள்ளவன்தான்
வ அன் அத்லுவல் குர்ஆன Fபமனிஹ் ததா Fப இன்னமா யஹ்ததீ லினFப்ஸிஹீ வ மன் ளல்ல Fபகுல் இன்னமா அன மினல் முன்திரீன்
இன்னும்: குர்ஆனை ஓதி வரவும் (நான் ஏவப்பட்டுள்ளேன்); ஆகவே எவர் நேர்வழியை அடைகிறாரோ - அவர் நேர்வழியடைவது அவர் நன்மைக்கேயாகும்; அன்றியும் எவர் வழி கெடுகிறாரோ (அவருக்குக்) கூறுவீராக: “நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்.“
وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ سَیُرِیْكُمْ اٰیٰتِهٖ فَتَعْرِفُوْنَهَا ؕ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟۠
وَقُلِகூறுவீராகالْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்விற்கேسَيُرِيْكُمْஉங்களுக்கு காண்பிப்பான்اٰيٰتِهٖதனது அத்தாட்சிகளைفَتَعْرِفُوْنَهَا‌ ؕஅச்சமயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள் / அவற்றைوَمَاஇல்லைرَبُّكَஉமது இறைவன்بِغَافِلٍகவனிக்காதவனாகعَمَّا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்பவற்றை
வ குலில் ஹம்து லில்லாஹி ஸ யுரீகும் ஆயாதிஹீ Fப தஃரிFபூனஹா; வமா ரBப்Bபுக BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
இன்னும் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” மேலும் உம்முடைய இறைவன் நீங்கள் செய்வதை விட்டும் பராமுகமாக இல்லை.