61. ஸூரத்துஸ் ஸஃப்ஃபு (அணிவகுப்பு)

மதனீ, வசனங்கள்: 14

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
سَبَّحَ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۚ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
سَبَّحَதுதிக்கின்றார்கள்لِلّٰهِஅல்லாஹ்வைمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவர்களும்وَمَا فِى الْاَرْضِ‌ۚபூமியில் உள்ளவர்களும்وَهُوَஅவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
ஸBப்Bபஹ லில்லாஹி மா Fபிஸமாவாதி வமா Fபில் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருக்கின்றன; அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே!لِمَ تَقُوْلُوْنَஏன் கூறுகிறீர்கள்?مَا لَا تَفْعَلُوْنَ‏நீங்கள் செய்யாதவற்றை
யா அய்யுஹல் லதீன ஆமனூ லிம தகூலூன மா லா தFப்'அலூன்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ ۟
كَبُرَ مَقْتًاபெரும் கோபத்திற்குரியதுعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்اَنْ تَقُوْلُوْاநீங்கள் கூறுவதுمَا لَا تَفْعَلُوْنَ‏நீங்கள் செய்யாதவற்றை
கBபுர மக்தன் 'இன்தல் லாஹி அன் தகூலூ மா லா தFப்'அலூன்
நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.
اِنَّ اللّٰهَ یُحِبُّ الَّذِیْنَ یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِهٖ صَفًّا كَاَنَّهُمْ بُنْیَانٌ مَّرْصُوْصٌ ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يُحِبُّவிரும்புகின்றான்الَّذِيْنَ يُقَاتِلُوْنَபோர் புரிபவர்களைفِىْ سَبِيْلِهٖஅவனுடைய பாதையில்صَفًّاவரிசையாக நின்றுكَاَنَّهُمْ بُنْيَانٌஅவர்களோ கட்டிடத்தைப் போல்مَّرْصُوْصٌ‏உறுதியான(து)
இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் லதீன யுகாதிலூன Fபீ ஸBபீலிஹீ ஸFப்Fபன் க அன்னஹும் Bபுன்யானும் மர்ஸூஸ்
எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ لِمَ تُؤْذُوْنَنِیْ وَقَدْ تَّعْلَمُوْنَ اَنِّیْ رَسُوْلُ اللّٰهِ اِلَیْكُمْ ؕ فَلَمَّا زَاغُوْۤا اَزَاغَ اللّٰهُ قُلُوْبَهُمْ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟
وَاِذْ قَالَகூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!مُوْسٰىமூஸாلِقَوْمِهٖதனது மக்களுக்குيٰقَوْمِஎன் மக்களே!لِمَ تُؤْذُوْنَنِىْஎனக்கு ஏன் தொந்தரவு தருகிறீர்கள்?وَقَدْதிட்டமாகتَّعْلَمُوْنَநீங்கள் அறிவீர்கள்اَنِّىْநிச்சயமாக நான்رَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَيْكُمْؕஉங்களுக்குفَلَمَّا زَاغُوْۤاஅவர்கள் சருகிய போதுاَزَاغَதிருப்பிவிட்டான்اللّٰهُஅல்லாஹ்(வும்)قُلُوْبَهُمْ‌ؕஅவர்களின் உள்ளங்களைوَاللّٰهُஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்களைالْفٰسِقِيْنَ‏பாவிகளான
வ இத் கால மூஸா லிகவ்மிஹீ யா கவ்மி லிம து'தூனனீ வ கத் தஃலமூன அன்னீ ரஸூலுல் லாஹி இலய்கும் Fபலம்மா Zஜாகூ அZஜாகல் லாஹு குலூBபஹும்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
மேலும், மூஸா தம் சமூகத்தாரிடம்: “என் சமூகத்தாரே! நிச்சயமாக நான், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன் என்பதை நீங்கள் திடமாக அறிந்து கொண்டே, ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள்?” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக); ஆகவே அவர்கள் (நேர்வழியிலிருந்து) சருகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இருதயங்களை (நேர்வழியிலிருந்து) சருகச் செய்தான். அன்றியும் - ஃபாஸிக்குகளான - பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
وَاِذْ قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اِنِّیْ رَسُوْلُ اللّٰهِ اِلَیْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیَّ مِنَ التَّوْرٰىةِ وَمُبَشِّرًا بِرَسُوْلٍ یَّاْتِیْ مِنْ بَعْدِی اسْمُهٗۤ اَحْمَدُ ؕ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَیِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِیْنٌ ۟
وَاِذْ قَالَகூறியதை நினைவு கூர்வீராக!عِيْسَىஈஸாابْنُ مَرْيَمَமர்யமுடைய மகன்يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களே!اِنِّىْநிச்சயமாக நான்رَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَيْكُمْஉங்களுக்குمُّصَدِّقًاநான் உண்மைப்படுத்துகின்றேன்لِّمَا بَيْنَ يَدَىَّஎனக்கு முன்னுள்ளதைمِنَ التَّوْرٰٮةِதவ்றாத்தைوَمُبَشِّرًۢاஇன்னும் நற்செய்தி கூறுகின்றேன்بِرَسُوْلٍஒரு தூதரைيَّاْتِىْவருகின்றார்مِنْۢ بَعْدِىஎனக்குப் பின்اسْمُهٗۤஅவரது பெயர்اَحْمَدُ‌ؕஅஹ்மத்فَلَمَّا جَآءَஅவர் வந்த போதுهُمْஅவர்களிடம்بِالْبَيِّنٰتِஅத்தாட்சிகளுடன்قَالُوْاகூறினார்கள்هٰذَاஇதுسِحْرٌசூனியமாகும்مُّبِيْنٌ‏தெளிவான
வ இத் கால 'ஈஸBப்-னு-மர்யம யா Bபனீ இஸ்ரா'ஈல இன்னீ ரஸூலுல் லாஹி இலய்கும் முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ய மினத் தவ்ராதி வ முBபஷ்ஷிரம் Bபி ரஸூலி(ன்)ய் யா'தீ மிம் Bபஃதிஸ் முஹூ அஹ்மத்; Fபலம்மா ஜா'அஹும் Bபில் Bபய்யினாதி காலூ ஹாதா ஸிஹ்ரும் முBபீன்
மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ الْكَذِبَ وَهُوَ یُدْعٰۤی اِلَی الْاِسْلَامِ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۚ
وَمَنْயார்?اَظْلَمُஅநியாயக்காரர்مِمَّنِ افْتَـرٰىஇட்டுக் கட்டுபவரை விடعَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுالْكَذِبَபொய்யைوَهُوَஅவரோيُدْعٰٓىஅழைக்கப்படுகிறார்اِلَى الْاِسْلَامِ‌ ؕஅல்லாஹ்வின் பக்கம்وَاللّٰهُஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்களைالظّٰلِمِيْنَ‏அநியாயக்கார(ர்கள்)
வ மன் அள்லமு மிம்ம னிFப் தரா 'அலல் லாஹில் கதிBப வ ஹுவ யத்'ஆ இலல் இஸ்லாம்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
மேலும், எவன் இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்ட நிலையில், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? அன்றியும், அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
یُرِیْدُوْنَ لِیُطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ ؕ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟
يُرِيْدُوْنَஅவர்கள் நாடுகின்றனர்لِيُطْفِـــٴُــوْاஅவர்கள் அணைத்துவிடنُوْرَஒளியைاللّٰهِஅல்லாஹ்வின்بِاَ فْوَاهِهِمْதங்களது வாய்களினால்وَاللّٰهُஅல்லாஹ்مُتِمُّமுழுமைப்படுத்துவான்نُوْرِهٖதனது ஒளியைوَلَوْ كَرِهَவெறுத்தாலும் சரியே!الْكٰفِرُوْنَ‏நிராகரிப்பாளர்கள்
யுரீதூன லியுத்Fபி'ஊ னூரல் லாஹி Bபி அFப்வாஹிஹிம் வல்லாஹு முதிம்மு னூரிஹீ வ லவ் கரிஹல் காFபிரூன்
அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.
هُوَ الَّذِیْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰی وَدِیْنِ الْحَقِّ لِیُظْهِرَهٗ عَلَی الدِّیْنِ كُلِّهٖ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ ۟۠
هُوَ الَّذِىْۤஅவன்தான்اَرْسَلَஅனுப்பினான்رَسُوْلَهٗதனது தூதரைبِالْهُدٰىநேர்வழியைக் கொண்டும்وَدِيْنِ الْحَـقِّஇன்னும் சத்திய மார்க்கத்தைلِيُظْهِرَهٗஅதை மேலோங்க வைப்பதற்காகعَلَى الدِّيْنِ كُلِّهٖஎல்லா மார்க்கங்களை விடوَلَوْ كَرِهَவெறுத்தாலும் சரியே!الْمُشْرِكُوْنَ‏இணைவைப்பவர்கள்
ஹுவல் லதீ அர்ஸல ரஸூலஹூ Bபில்ஹுதா வ தீனில் ஹக்கி லியுள்ஹிரஹூ 'அலத் தீனி குல்லிஹீ வ லவ் கரிஹல் முஷ்ரிகூன்
(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا هَلْ اَدُلُّكُمْ عَلٰی تِجَارَةٍ تُنْجِیْكُمْ مِّنْ عَذَابٍ اَلِیْمٍ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே!هَلْ اَدُلُّكُمْஉங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?عَلٰى تِجَارَةٍஒரு வியாபாரத்தைتُنْجِيْكُمْஅது உங்களை பாதுகாக்கும்مِّنْ عَذَابٍதண்டனையை விட்டும்اَلِيْمٍ‏வலி தரக்கூடிய(து)
யா அய்யுஹல் லதீன ஆமனூ ஹல் அதுல்லுகும் 'அலா திஜாரதின் துன்ஜீகும் மின் 'அதாBபின் அலீம்
ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُجَاهِدُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟ۙ
تُؤْمِنُوْنَநீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்بِاللّٰهِஅல்லாஹ்வையும்وَرَسُوْلِهٖஅவனது தூதரையும்وَتُجَاهِدُوْنَஇன்னும் ஜிஹாது செய்யுங்கள்!فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்بِاَمْوَالِكُمْஉங்கள் செல்வங்களாலும்وَاَنْفُسِكُمْ‌ؕஉங்கள் உயிர்களாலும்ذٰلِكُمْஅதுதான்خَيْرٌசிறந்ததுلَّـكُمْஉங்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்تَعْلَمُوْنَۙ‏அறிபவர்களாக
து'மினூன Bபில்லாஹி வ ரஸூலிஹீ வ துஜாஹிதூன Fபீ ஸBபீலில் லாஹி Bபி அம்வாலிகும் வ அன்Fபுஸிகும்; தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
(அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
یَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ وَیُدْخِلْكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ وَمَسٰكِنَ طَیِّبَةً فِیْ جَنّٰتِ عَدْنٍ ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟ۙ
يَغْفِرْஅவன் மன்னிப்பான்لَـكُمْஉங்களுக்குذُنُوْبَكُمْஉங்கள் பாவங்களைوَيُدْخِلْكُمْஇன்னும் உங்களை நுழைப்பான்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்وَمَسٰكِنَஇன்னும் தங்குமிடங்களில்طَيِّبَةًஉயர்ந்தفِىْ جَنّٰتِசொர்க்கங்களில்عَدْنٍ‌ؕஅத்ன்ذٰلِكَஇதுதான்الْفَوْزُ الْعَظِيْمُۙ‏மகத்தான வெற்றி
யக்Fபிர் லகும் துனூBபகும் வ யுத்கில்கும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு வ மஸாகின தய்யிBபதன் Fபீ ஜன்னாதி 'அத்ன்; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.
وَاُخْرٰی تُحِبُّوْنَهَا ؕ نَصْرٌ مِّنَ اللّٰهِ وَفَتْحٌ قَرِیْبٌ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟
وَاُخْرٰىவேறு ஒன்றும்تُحِبُّوْنَهَا‌ ؕஅதை நீங்கள் விரும்புவீர்கள்نَصْرٌஉதவியும்مِّنَ اللّٰهِஅல்லாஹ்வின் புறத்தில் இருந்துوَفَـتْحٌவெற்றியும்قَرِيْبٌ‌ ؕவெகு விரைவில்وَبَشِّرِஇன்னும் நற்செய்தி கூறுவீராகالْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
வ உக்ரா துஹிBப்Bபூனஹா னஸ்ரும் மினல் லாஹி வ Fபத் ஹுன் கரீBப்; வ Bபஷ்ஷிரில் மு'மினீன்
அன்றியும் நீங்கள் நேசிக்கும் வேறொன்றும் உண்டு; (அதுதான்) அல்லாஹ்விடமிருந்து உதவியும், நெருங்கி வரும் வெற்றியுமாகும்; எனவே ஈமான் கொண்டவர்களுக்கு (இதைக் கொண்டு) நன்மாராயம் கூறுவீராக!
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ لِلْحَوَارِیّٖنَ مَنْ اَنْصَارِیْۤ اِلَی اللّٰهِ ؕ قَالَ الْحَوَارِیُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ فَاٰمَنَتْ طَّآىِٕفَةٌ مِّنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ وَكَفَرَتْ طَّآىِٕفَةٌ ۚ فَاَیَّدْنَا الَّذِیْنَ اٰمَنُوْا عَلٰی عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظٰهِرِیْنَ ۟۠
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே!كُوْنُوْۤاநீங்கள் ஆகிவிடுங்கள்اَنْصَارَஉதவியாளர்களாகاللّٰهِஅல்லாஹ்வின்كَمَا قَالَகூறியதைப் போன்றுعِيْسَىஈஸாابْنُ مَرْيَمَமர்யமுடைய மகன்لِلْحَوٰارِيّٖنَஉற்ற தோழர்களை நோக்கிمَنْயார்اَنْصَارِىْۤஎனது உதவியாளர்கள்اِلَى اللّٰهِ‌ؕஅல்லாஹ்விற்காகقَالَகூறினார்(கள்)الْحَـوٰرِيُّوْنَஉற்றதோழர்கள்نَحْنُநாங்கள்اَنْصَارُஉதவி செய்பவர்கள்اللّٰهِ‌அல்லாஹ்விற்குفَاٰمَنَتْஆகவே நம்பிக்கை கொண்டதுطَّآٮِٕفَةٌஒரு பிரிவுمِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களில்وَكَفَرَتْஇன்னும் நிராகரித்ததுطَّآٮِٕفَةٌ ۚஒரு பிரிவுفَاَيَّدْنَاஆகவே, நாம் பலப்படுத்தினோம்الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களைعَلٰى عَدُوِّهِمْஅவர்களின் பகைவர்களுக்கு எதிராகفَاَصْبَحُوْاஆகவே ஆகிவிட்டார்கள்ظٰهِرِيْنَ‏வெற்றியாளர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ கூனூ அன்ஸாரல் லாஹி கமா கால 'ஈஸBப்-னு-மர்யம லில் ஹவாரிய்யீன மன் அன்ஸாரீ இலல் லாஹ்; காலல் ஹவாரிய்யூன னஹ்னு அன்ஸா ருல் லாஹி Fப ஆமனத் தா'இFபதும் மிம் Bபனீ இஸ்ரா'ஈல வ கFபரத் தா'இFபதுன் Fப அய்யத்னல் லதீன ஆமனூ 'அலா 'அதுவ்விஹிம் Fப அஸ்Bபஹூ ளாஹிரீன்
ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.