103. ஸூரத்துல் அஸ்ரி (காலம்)

மக்கீ, வசனங்கள்: 3

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
وَالْعَصْرِ ۟ۙ
وَالْعَصْرِۙ‏காலத்தின் மீது சத்தியமாக
வல் 'அஸ்ர்
முஹம்மது ஜான்
காலத்தின் மீது சத்தியமாக.
அப்துல் ஹமீது பாகவி
காலத்தின் மீது சத்தியமாக!
IFT
காலத்தின் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
காலத்தின் மீது சத்தியமாக!
Saheeh International
By time,
اِنَّ الْاِنْسَانَ لَفِیْ خُسْرٍ ۟ۙ
اِنَّ الْاِنْسَانَநிச்சயமாக மனிதன்لَفِىْ خُسْرٍۙ‏நஷ்டத்தில்தான்
இன்னல் இன்ஸான லFபீ குஸ்ர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக மனிதன் நஷ்டமடைந்து விட்டான்.
IFT
மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
Saheeh International
Indeed, mankind is in loss,
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ۙ۬ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ۟۠
اِلَّاதவிரالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்وَ عَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநற்செயல்களைوَتَوَاصَوْاஇன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்بِالْحَقِّ   ۙஉண்மையைوَتَوَاصَوْاஇன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்بِالصَّبْرِ‏பொறுமையை
இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ தவாஸவ் Bபில்ஹக்கி வ தவாஸவ் Bபிஸ்ஸBப்ர்
முஹம்மது ஜான்
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் சிரமங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை).
IFT
ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், (பாவங்களை விடுவதிலும், நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்து) பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அத்தகையோரைத் தவிர,
Saheeh International
Except for those who have believed and done righteous deeds and advised each other to truth and advised each other to patience.