தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே? என்று நிராகரிப்பவர்கள் (மறுமையில்) பெரிதும் விரும்புவர்.
IFT
(இன்று இஸ்லாத்தின் அழைப்பை) ஏற்க மறுத்தவர்கள் “நாமும் இறைவனுக்கு அடிபணிந்தவர்களாக இருந்திருக்கக் கூடாதா?” என்று ஏக்கத்துடன் கூறும் நேரம் விரைவில் வரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிராகரிப்போர் தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே என்று பெரிதும் விரும்புவர்.
Saheeh International
Perhaps those who disbelieve will wish that they had been Muslims.
(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக; அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன; (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் (நன்கு) புசித்துக்கொண்டும், (தங்கள் இஷ்டப்படி) சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க (தற்சமயம்) நீர் அவர்களை விட்டுவிடுவீராக. அவர்களுடைய (வீண்) நம்பிக்கைகள் (மறுமையை அவர்களுக்கு) மறக்கடித்து விட்டன. இதன் (பலனை) பின்னர் அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
IFT
(நபியே!) அவர்களை அவர்களுடைய போக்கில் விட்டுவிடும்! அவர்கள் உண்டு மகிழ்ந்து சுகம் அனுபவித்துக் கொள்ளட்டும்! மேலும், அவர்களின் நப்பாசைகள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி வைத்திருக்கட்டும்! இவர்கள் விரைவில் அறிந்து கொள்ளத்தான் போகிறார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் அவர்களை விட்டு விடுவீராக! அவர்கள் உண்ணட்டும், சுகமனுபவிக்கட்டும், (அவர்களுடைய வீண்) ஆசை (மறுமையை) அவர்களுக்கு மறக்கடித்துவிட்டது, (இதன் முடிவை) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
Saheeh International
Let them eat and enjoy themselves and be diverted by [false] hope, for they are going to know.
லவ் மா தாதீனா Bபில் மலா'இகதி இன் குன்த மினஸ் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
“நீர் உண்மையாளரில் ஒருவராக இருப்பின் நீர் எங்களிடத்தில் மலக்குகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்.)
அப்துல் ஹமீது பாகவி
‘‘மெய்யாகவே நீர் உண்மை சொல்பவராக இருந்தால் (உமக்குச் சாட்சியாக) நீர் வானவர்களை அழைத்துக் கொண்டுவர வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.)
IFT
நீர் உண்மையாளராய் இருப்பின் ஏன் எங்களிடம் வானவர்களை நீர் அழைத்து வருவதில்லை?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உண்மையாளர்களில் உள்ளவராக நீர் இருந்தால், (உமக்குச் சாட்சியாக) நீர் எங்களிடம் மலக்குகளை (அழைத்து)க் கொண்டு வந்திருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்.)
Saheeh International
Why do you not bring us the angels, if you should be among the truthful?"
நாம் மலக்குகளை உண்மையான (தக்க காரணத்தோடு அல்லாமல் இறக்குவதில்லை; அப்(படி இறக்கப்படும்) போது அ(ந் நிராகரிப்ப)வர்கள் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நாம் வானவர்களை இறக்கிவைப்பதெல்லாம் எவருடைய காரியத்தையும் அழித்து முடித்துவிடக் கருதினால்தான். அச்சமயம் அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படுவதில்லை. (உடனே அழிக்கப்பட்டுவிடுவர்.)
IFT
நாம் வான வர்களை (வெறுமனே இறக்குவதில்லை.) அவர்கள் இறங்கும்போது சத்தியத்துடனே இறங்குவார்கள். அதன் பிறகு மக்களுக்கு அவகாசம் அளிக்கப்படுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உண்மையைக் கொண்டல்லாது மலக்குகளை நாம் இறக்கி வைப்பதில்லை, (எனவே, வேதனையைக்கொண்டு அவர்கள் இறங்கினால்) அச்சமயம் அவர்கள் அவகாசம் கொடுக்கப்படுவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.
Saheeh International
We do not send down the angels except with truth; and they [i.e., the disbelievers] would not then be reprieved.
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை (உம் மீது) இறக்கிவைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதைப் பாதுகாத்துக் கொள்வோம்.
IFT
திண்ணமாக, இந்த நல்லு ரையை நாம்தாம் இறக்கிவைத்தோம். மேலும், நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம்தான் (திக்ரு என்னும் இவ்)வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம், நிச்சயமாக நாமே அதனை பாதுகாப்பவர்கள்.
Saheeh International
Indeed, it is We who sent down the message [i.e., the Qur’an], and indeed, We will be its guardian.
وَلَوْ فَتَحْنَاநாம் திறந்தால்عَلَيْهِمْஅவர்கள் மீதுبَابًاஒரு வாசலைمِّنَஇருந்துالسَّمَآءِவானம்فَظَلُّوْاபகலில் அவர்கள் ஆகினர்فِيْهِஅதில்يَعْرُجُوْنَۙஏறுபவர்களாக
வ லவ் Fபதஹ்னா 'அலய்ஹிம் BபாBபம் மினஸ் ஸமா'இ Fபளலூ Fபீஹி யஃருஜூன்
முஹம்மது ஜான்
இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
வானத்தில் ஒரு வாசலை இவர்களுக்கு நாம் திறந்துவிட்டு, அதில் பகல் நேரத்திலே இவர்கள் ஏறியபோதிலும் (நம்பிக்கை கொள்ளாமல்),
IFT
மேலும், வானத்தின் வாயிலொன்றை நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டிருந்தாலும், அதில் அவர்கள் பட்டப் பகலிலே ஏறத் தொடங்கிவிட்டிருந்தாலும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், வானத்திலிருந்து ஒரு வாசலை நாம் அவர்களுக்குத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுவதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும், (அவ்வேதத்தை உண்மைப்படுத்த மாட்டார்கள், மாறாக, அவர்கள்)
Saheeh International
And [even] if We opened to them a gate from the heaven and they continued therein to ascend,
“நம் பார்வைகளெல்லாம் மயக்கப்பட்டு விட்டன; இல்லை! நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டமாகி விட்டோம்“ என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘எங்கள் கண்கள் மயங்கிவிட்டன; நாங்கள் சூனியம் செய்யப்பட்டு விட்டோம்'' என்றே கூறுவார்கள். (உண்மையை நம்பமாட்டார்கள்.)
IFT
அப்பொழுதும் அவர்கள் இவ்வாறே கூறியிருப்பர்: “எங்கள் கண்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றன; சரியாகச் சொல்வதானால் எங்களுக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பார்க்க முடியாது, தடுக்கப்பட்டு) “மயக்கப்பட்டதெல்லாம் எங்களுடைய பார்வைகள்தான், (அது மட்டும்) அல்ல, நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டத்தினர்” என்றே கூறுவார்கள்.
Saheeh International
They would say, "Our eyes have only been dazzled. Rather, we are a people affected by magic."
திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஷைத்தானைத்தவிர; (அப்போது) பிரகாசமான தீப்பந்தம் அந்த ஷைத்தானை (விரட்டிப்) பின் பற்றும்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (வானவர்களின்) ஒரு வார்த்தையைத் திருட்டுத்தனமாகக் கேட்டுப் போவதைத் தவிர, (ஷைத்தான் அவற்றை நெருங்க முடியாது. அவ்வாறு ஷைத்தான் நெருங்கினால் சுடர் வீசும்) எரிகின்ற நெருப்பு ஜூவாலை அதை (விரட்டிப்) பின் தொடர்ந்து செல்லும்.
IFT
ஆகையால் எந்த ஒரு ஷைத்தானும் அங்கு செல்ல முடியாது; எதையேனும் ஒட்டுக் கேட்பதைத் தவிர! (அப்படி அவன் ஒட்டுக் கேட்க முயன்றால்) பிரகாசமான ஒரு தீச்சுவாலை அவனைப் பின்சென்று விரட்டும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திருட்டுத்தனமாக (ஒட்டு)க் கேட்பவ(னான ஷைத்தா)னைத் தவிர, அப்போது பிரகாசமான தீப்பந்தம் அவனை (விரட்டி)ப் பின்தொடர்ந்து செல்லும்.
Saheeh International
Except one who steals a hearing and is pursued by a clear burning flame.
நாம் அதில் உங்களுக்கும் நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கியுள்ளோம்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கும், நீங்கள் உணவு கொடுத்து வளர்க்காததுமான (ஆகாயத்திலும் பூமியிலும் வசிக்கின்ற எண்ணற்ற) உயிரினங்களுக்கும் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களை நாமே அதில் அமைத்தோம்.
IFT
மேலும், வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் நாம் அதில் அமைத்தோம் உங்களுக்காகவும் நீங்கள் எவற்றுக்கு உணவளிப்பவர்களாக இல்லையோ அத்தகைய எண்ணற்ற படைப்பினங்களுக்காகவும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களுக்கும், நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழத்தேவையானவற்றை அதில் நாமே ஆக்கியுள்ளோம்.
Saheeh International
And We have made for you therein means of living and [for] those for whom you are not providers.
வ இம் மின் ஷய்'இன் இல்லா 'இன்தனா கZஜா 'இனுஹூ வமா னுனZஜ்Zஜிலுஹூ இல்லா Bபிகதரிம் மஃலூம்
முஹம்மது ஜான்
ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வொரு பொருளின் பொக்கிஷங்களும் நம்மிடமே இருக்கின்றன. எனினும், அவற்றை (அந்தந்தக் காலத்தில் அவற்றிற்குக்) குறிப்பிட்ட அளவில்தான் நாம் இறக்கி வைக்கிறோம்.
IFT
எந்தப் பொருள்களாய் இருந்தாலும் சரி, அதன் கருவூலம் நம்மிடம் இல்லாமல் இல்லை. எந்தப் பொருளையும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே நாம் இறக்கி வைக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எந்தப் பொருளும் அதன் களஞ்சியங்கள் நம்மிடமிருந்தே தவிர இல்லை, எனினும், அவற்றை குறிப்பிட்ட அளவிலே தவிர நாம் இறக்கிவைப்பதும் இல்லை.
Saheeh International
And there is not a thing but that with Us are its depositories, and We do not send it down except according to a known [i.e., specified] measure.
இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
மேகம் கருக்கொள்ளும்படியான காற்றையும் நாமே அனுப்பிவைக்கிறோம். அம்மேகத்திலிருந்து மழையையும் நாமே பொழியச் செய்கிறோம். அதை நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். (மழை நீரை மேகத்திலும், நிலத்திலும்) நீங்கள் சேகரித்து வைக்கவில்லை; (நாம்தான் சேகரிக்கிறோம்.)
IFT
மேலும் (மேகங்களை) கருக்கொள்ளச் செய்யும் காற்றை நாமே அனுப்புகின்றோம். பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றோம். மேலும், அதனை உங்களுக்குப் புகட்டுகின்றோம். அதன் கருவூலதாரர் நீங்கள் அல்லவே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம், பின்னர் வானத்திலிருந்து நாமே (மழையெனும்) நீரைப் பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம், நீங்கள் அதனைச் சேமித்து வைப்பவர்களாகவும் இல்லை.
Saheeh International
And We have sent the fertilizing winds and sent down water from the sky and given you drink from it. And you are not its retainers.
நிச்சயமாக உம்முடைய இறைவன் (இறுதி நாளில்) அவர்களை ஒன்று திரட்டுவான்; நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் இவர்கள் அனைவரையும் (விசாரணைக்காக மறுமையில் தன் முன்) ஒன்று கூட்டுவான். நிச்சயமாக அவன் ஞானமுடையவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.
IFT
நிச்சயம் உம் அதிபதியே அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பான்; திண்ணமாக அவன் நுண்ணறிவாளனும் மிக அறிந்தவனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன்தான் அவர்களை மறுமையில் ஒன்று திரட்டுவான், நிச்சயமாக அவன் தீர்க்கமான அறிவுடையவன், (யாவற்றையும்) நன்கறிகிறவன்.
Saheeh International
And indeed, your Lord will gather them; indeed, He is Wise and Knowing.
وَلَـقَدْதிட்டவட்டமாகخَلَقْنَاபடைத்தோம்الْاِنْسَانَமனிதனைمِنْஇருந்துصَلْصَالٍ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடியதுمِّنْஇருந்துحَمَاٍகளிமண்مَّسْنُوْنٍۚபிசுபிசுப்பானது
வ லகத் கலக்னல் இன்ஸான மின் ஸல்ஸாலிம் மின் ஹம இம் மஸ்னூன்
முஹம்மது ஜான்
ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.
வ இத் கால ரBப்Bபுக லில்மலா' இகதி இன்னீ காலிகும் Bபஷரம் மின் ஸல்ஸாலிம் மின் ஹம இம் மஸ்னூன்
முஹம்மது ஜான்
(நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்: “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்” என்றும்,
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நான், மனிதனை (காய்ந்தபின்) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் படைக்கப்போகிறேன்'' என்று கூறிய சமயத்தில்,
IFT
பின்பு உம் அதிபதி வானவர்களை நோக்கிக் கூறியதை நினைவுகூரும்: “பேதகமடைந்த (சுண்டினால் ஓசை வரக்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து ஒரு மனிதரை திண்ணமாக நான் படைக்கப் போகின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) உமதிரட்சகன் மலக்குகளிடம், “நிச்சயமாக நான் மனிதனை (தட்டினால்) சப்தம் வரக்கூடிய, மாற்றமடைந்த கறுப்புக் களிமண்ணிலிருந்து படைக்கப்போகிறேன்” என்று கூறிய சமயத்தை-(நபியே! நினைவு கூர்வீராக!)
Saheeh International
And [mention, O Muhammad], when your Lord said to the angels, "I will create a human being out of clay from an altered black mud.
அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், “அவருக்கு சிரம் பணியுங்கள்” என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!
அப்துல் ஹமீது பாகவி
‘‘நான் மனிதனை உருவாக்கி அதில் என் (படைப்புக்கு வேண்டிய) உயிரைப் புகுத்தினால் அவருக்கு (மரியாதை செலுத்த) நீங்கள் சிரம் பணியுங்கள்'' (என்று கூறி, பிறகு, சிரம்பணிய கட்டளையிட்டான்.)
IFT
நான் அவரை முழுமையாக்கி, அவருக்குள் என்னுடைய உயிரிலிருந்து ஊதியதும் நீங்கள் அனைவரும் அவருக்குச் சிரம் பணிந்திட வேண்டும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், “அவரை நான் சரியாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்தும் நான் ஊதியபோது அவருக்கு சிரம்பணிந்தவர்களாக விழுங்கள்” (என்று மலக்குகளிடம் அல்லாஹ் கூறியதும்)
Saheeh International
And when I have proportioned him and breathed into him of My [created] soul, then fall down to him in prostration."
قَالَகூறினான்لَمْ اَكُنْநான் இல்லைلِّاَسْجُدَசிரம் பணிபவனாகلِبَشَرٍஒரு மனிதனுக்குخَلَقْتَهٗபடைத்தாய்/அவனைمِنْஇருந்துصَلْصَالٍ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடியதுمِّنْஇருந்துحَمَاٍகளிமண்مَّسْنُوْنٍபிசுபிசுப்பானது
கால லம் அகுல் லி அஸ்ஜுத லிBபஷரின் கலக்தஹூ மின் ஸல்ஸாலிம் மின் ஹம இம் மஸ்னூன்
முஹம்மது ஜான்
அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன் ‘‘(காய்ந்தபின்) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நீ படைத்த மனிதனுக்கு (நெருப்பால் படைக்கப்பட்ட) நான் சிரம் பணிய தயாரில்லை; (ஏனென்றால், நான் அவரைவிட மேலானவன்)'' என்று கூறினான்.
IFT
அதற்கு அவன் கூறினான்: “இந்த மனிதருக்குச் சிரம்பணிவது என் வேலை அல்ல! ஏனெனில் பேதகமடைந்த (சுண்டினால் ஓசை வரக்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து அவரை நீ படைத்துள்ளாய்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வன், “(தட்டினால்) சப்தம் கொடுக்கக் கூடிய மாற்றமடைந்த கருப்புக் களிமண்ணால் நீ அவரை சிருஷ்டித்த (ஒரு) மனிதனுக்கு, (நெருப்பால் படைக்கப்பட்ட) நான் சிரம் பணிபவனாக இருப்பதற்கில்லை” என்று கூறினான்.
Saheeh International
He said, "Never would I prostrate to a human whom You created out of clay from an altered black mud."
قَالَகூறினான்رَبِّஎன் இறைவாبِمَاۤநீ வழி கெடுத்ததன் காரணமாகاَغْوَيْتَنِىْஎன்னைلَاُزَيِّنَنَّநிச்சயமாக அலங்கரிப்பேன்لَهُمْஅவர்களுக்குفِى الْاَرْضِபூமியில்وَلَاُغْوِيَـنَّهُمْஇன்னும் நிச்சயமாக வழிகெடுப்பேன்/அவர்களைاَجْمَعِيْنَۙஅனைவரையும்
(அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன் ‘‘என் இறைவனே! நீ என்னை வழி கெடுத்ததன் காரணமாக பூமியிலுள்ள (பொருள்களை) நான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்.
IFT
அதற்கு அவன் கூறினான்: “என் இறைவனே! நீ என்னை வழிபிறழச் செய்தது போன்று, திண்ணமாக நானும் உலகில் அவர்களுக்குக் கவர்ச்சிகளை ஏற்படுத்தி, அவர்கள் அனைவரையும் வழிபிறழச் செய்வேன்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வன், “என்னுடைய இரட்சகனே! நீ என்னை வழிகேட்டில் விட்டு விட்டதன் காரணமாக பூமியில் (உள்ளவற்றை) நான், நிச்சயமாக அவர்களுக்கு அலங்கரித்துக் காண்பித்து, அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நான் வழிகெடுத்து விடுவேன்” என்று கூறினான்.
Saheeh International
[Iblees] said, "My Lord, because You have put me in error, I will surely make [disobedience] attractive to them [i.e., mankind] on earth, and I will mislead them all
“நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
(மனத்தூய்மையுடைய) என் அடியார்களிடத்தில் நிச்சயமாக உனக்கு ஒரு செல்வாக்கும் இருக்காது. வழிகேட்டில் உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர.
IFT
திண்ணமாக, என்னுடைய வாய்மையான அடியார்கள் மீது உனது அதிகாரம் செல்லுபடியாகாது. ஆனால் எவர்கள் உன்னைப் பின்பற்றி வழிகெட்டுப் போகின்றார்களோ, அவர்களிடம் மட்டும் உனது அதிகாரம் செல்லுபடியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக என்னுடைய அடியார்கள், உனக்கு அவர்கள்மீது யாதொரு அதிகாரமும் இல்லை, (திசை திருப்பப்பட்டு) வழிகெட்டவர்களிலிருந்து உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர.
Saheeh International
Indeed, My servants - no authority will you have over them, except those who follow you of the deviators.
وَنَزَعْنَاநீக்கிவிடுவோம்مَاஎதைفِىْநெஞ்சங்களில்صُدُوْرِهِمْஅவர்களுடையمِّنْ غِلٍّகுரோதத்தைاِخْوَانًاசகோதரர்களாகعَلٰى سُرُرٍகட்டில்கள் மீதுمُّتَقٰبِلِيْنَஒருவர் ஒருவரை முகம் நோக்கியவர்களாக
மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஒருவருக்கு ஒருவர்மீது இம்மையில்) அவர்களின் நெஞ்சங்களில் இருந்த குரோதங்களை நாம் நீக்கிவிடுவோம். (அவர்களும்) சகோதரர்களாக ஒருவர் ஒருவரை முகம் நோக்கி கட்டில்களில் (உல்லாசமாகச் சாய்ந்து) இருப்பார்கள்.
IFT
அவர்களின் உள்ளங்களில் படிந்திருக்கும் குரோதங்களை நாம் அகற்றி விடுவோம். ஒருவருக்கொருவர் சகோதரர்களாக கட்டில்களில் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (இம்மையில்) அவர்களின் நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம், (அவர்களும் உண்மையான) சகோதரர்களாக ஒருவரை ஒருவர் முன்னோக்கியவர்களாகக் கட்டில்களில் (மகிழ்ச்சியுடையோராக) சாய்ந்து இருப்பார்கள்.
Saheeh International
And We will remove whatever is in their breasts of resentment, [so they will be] brothers, on thrones facing each other.
அதற்கு அவர்கள், “பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘‘நீர் பயப்படாதீர். நிச்சயமாக நாம் உமக்கு மிக்க ஞானமுடைய ஓர் மகன் ஒருவரைக் கொண்டு நற்செய்தி கூறுகிறோம்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள், “நீர் அஞ்ச வேண்டாம்! அறிவுக் கூர்மையுள்ள ஒரு குழந்தையைப் பற்றிய நற்செய்தியை உமக்கு நாங்கள் அறிவிக்கின்றோம்” என்று பதில் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “நீர் பயப்படாதீர், நிச்சயமாக நாம் உமக்கு மிக்க அறிவார்ந்த ஒரு குமாரனைக் கொண்டு நன்மாராயங் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
[The angels] said, "Fear not. Indeed, we give you good tidings of a learned boy."
கால அBபஷ்ஷர்துமூனீ 'அலா அம் மஸ்ஸனியல் கிBபரு FபBபிம துBபஷ்ஷிரூன்
முஹம்மது ஜான்
அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?” எனக் கேட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘இம்முதுமையிலா நீங்கள் எனக்கு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறீர்கள்!'' என்று கூறினார்.
IFT
அதற்கு இப்ராஹீம், “இந்தத் தள்ளாத வயதிலா எனக்கு (குழந்தைப்பேறு பற்றி) நற்செய்தி அறிவிக்கின்றீர்கள்? நீங்கள் எப்படிப்பட்ட நற்செய்தியை அறிவிக்கிறீர்கள் என்பதைச் சற்று சிந்தியுங்கள்!” என்று கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “என்னை முதுமை வந்தடைந்துவிட்டபோதா நீங்கள் எனக்கு (குமாரனைக் கொண்டு) நன்மாராயங் கூறுகின்றீர்கள்? எதனைக் கொண்டு நீங்கள் எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்.
Saheeh International
He said, "Have you given me good tidings although old age has come upon me? Then of what [wonder] do you inform?"
அதற்கவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உமக்கு நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி) நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்!” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், (‘‘பரிகாசமாக அல்ல) மெய்யாகவே நாங்கள் உமக்கு (மகனைப் பற்றி) நற்செய்தி கூறுகிறோம். (அதைப் பற்றி) நீர் அவநம்பிக்கைக் கொள்ளாதீர்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள், “நாங்கள் சத்தியமான நற்செய்தியைத்தான் உமக்கு அறிவிக்கின்றோம்; நீர் நம்பிக்கை இழந்துவிடாதீர்!” என்று பதில் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “உண்மையைக் கொண்டே நாங்கள் உமக்கு (மகனைப் பற்றி) நன்மாராயம் கூறுகின்றோம், (அதைப்பற்றி) நிராசை கொண்டோரில் நீர் ஆகிவிட வேண்டாம்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "We have given you good tidings in truth, so do not be of the despairing."
ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர - நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்” என்று (வானவர்கள்) கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவருடைய மனைவியைத் தவிர, நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கி விடுவாளென்று நாம் முடிவு செய்துவிட்டோம்'' (என்று இறைவன் கூறியதாகக் கூறினார்கள்.)
IFT
ஆனால், அவருடைய மனைவியைத் தவிர! (அவளைக் குறித்து இறைவன் கூறுகின்றான்: “வேதனையை அனுபவிக்க) தங்கியிருப்பவர்களுள் அவளும் ஒருத்தியாவாள் என்று நாம் விதித்துவிட்டோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
–“அவருடைய மனைவியைத் தவிர, நிச்சயமாக அவள் (வேதனையடைவதில்) தங்கியவர்களில் உள்ளவளென்று நாம் நிர்ணயித்துவிட்டோம்” என்று அல்லாஹ் கூறியதாகக் கூறினார்கள்.)
Saheeh International
Except his wife." We [i.e., Allah] decreed that she is of those who remain behind.
ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, இன்றிரவில் சிறிது நேரம் இருக்கும்பொழுதே நீங்கள் உங்கள் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு, (அவர்கள் முன்னும்) நீங்கள் பின்னுமாகச் செல்லுங்கள். உங்களில் ஒருவருமே திரும்பிப் பார்க்காது உங்களுக்கு ஏவப்பட்ட இடத்திற்குச் சென்று விடுங்கள்'' என்றார்கள்.
IFT
எனவே, நீர் இரவு சற்று இருக்கும்போதே உம்முடைய குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு வெளியேறிவிடும்; மேலும், நீர் அவர்களைப் பின்தொடர்ந்தே செல்லும்! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்; எங்கு செல்லுமாறு உங்களுக்குக் கட்டளையிடப்படுகின்றதோ அங்கு நேராகச் செல்லுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, இரவின் ஒரு பகுதியில் நீர் உம் குடும்பத்தினருடன் சென்று விடுவீராக! அன்றியும், அவர்களுக்குப் பின்னால் நீர் தொடர்ந்து செல்வீராக! உங்களில் ஒருவருமே திரும்பிப் பார்க்கவும் வேண்டாம், நீங்கள் ஏவப்பட்ட இடத்திற்குச் சென்றும் விடுங்கள்” (என்றார்கள்.)
Saheeh International
So set out with your family during a portion of the night and follow behind them and let not anyone among you look back and continue on to where you are commanded."
(லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இதற்கிடையில் லூத் நபியின் வீட்டிற்கு வாலிபர்கள் சிலர் வந்திருப்பதாக அறிந்து) அவ்வூரார் மிக்க சந்தோஷத்துடன் (லூத் நபியின் வீட்டிற்கு) வந்து (கூடி) விட்டனர்.
IFT
(இதற்குள்ளாக) ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தவர்களாக லூத்தின் இல்லம் வந்(து சூழ்ந்)தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (வாலிபர்கள் சிலர் வந்திருப்பதாக அறிந்த) அந்நகரவாசிகள், மிக்க மகிழ்ச்சியடைந்தவர்களாக வந்து விட்டனர்.
قَالَகூறினார்هٰٓؤُلَاۤءِஇவர்கள்بَنٰتِىْۤஎன் பெண் மக்கள்اِنْ كُنْـتُمْநீங்கள் இருந்தால்فٰعِلِيْنَؕசெய்பவர்களாக
கால ஹா'உலா'இ Bபனாதீ இன் குன்தும் Fபா'இலீன்
முஹம்மது ஜான்
அதற்கவர், “இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘இதோ! என் பெண் மக்கள் இருக்கின்றனர். நீங்கள் (ஏதும்) செய்தே தீரவேண்டுமென்று கருதினால் (இவர்களைத் திருமணம்) செய்து கொள்ளலாம்'' என்று கூறினார்.
IFT
அதற்கு லூத், “நீங்கள் எதையும் செய்தே தீர வேண்டுமென்றால் இதோ என்னுடைய பெண் மக்கள் இருக்கின்றனர்!” என்று கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “இவர்கள் என்னுடைய பெண்மக்கள், நீங்கள் (ஏதும்) செய்பவர்களாக இருந்தால்) இவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்” (என்று கூறினார்)
Saheeh International
[Lot] said, "These are my daughters - if you would be doers [of lawful marriage]."
எனவே அவர்களிடமும் நாம் பழிவாங்கினோம்; (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் பகிரங்கமான (போக்குவரத்து) வழியில் தான் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்களையும் நாம் பழி வாங்கினோம். (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் தெளிவான வழியில்தான் இருக்கின்றன.
IFT
எனவே, நாம் அவர்களையும் பழி வாங்கினோம் (என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்)! இவ்விரு சமூகத்தாரின் (பாழடைந்துபோன) பகுதிகள் அனைவரும் அறியக்கூடிய பாதையில் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்களை நாம் தண்டித்தோம், நிச்சயமாக (அழிக்கப்பட்ட) இவ்விரண்டு (ஊர்களு)ம் பகிரங்கமான வழியில்தான் இருக்கின்றன.
Saheeh International
So We took retribution from them, and indeed, both [cities] are on a clear highway.
(மதீனாவிற்கும், தபூக்கிற்கும் இடைப்பகுதியிலுள்ள “ஹிஜ்ர்” என்ற ஊரில் வாழ்ந்து வந்த ஸமூது கூட்டத்தினரான) ஹிஜ்ருவாசிகளும் (நம்) தூதர்களை திட்டமாகப் பொய்யாக்கினர்.
Saheeh International
And certainly did the companions of al-hijr [i.e., the Thamūd] deny the messengers.
நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வருவதாகவே உள்ளது; ஆதலால் (இவர்களின் தவறுகளை) முற்றாகப் புறக்கணித்துவிடும்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும் பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் தக்க காரணமின்றி நாம் படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வரக்கூடியதே! (அதுவரை இத்தீயவர்களின் விஷமத்தை) நீர் கண்ணியமான முறையில் புறக்கணித்து வருவீராக.
IFT
நாம் வானங்களையும், பூமியையும் இன்னும் அவற்றில் இருக்கின்ற அனைத்தையும் சத்தியத்தின் அடிப்படையிலேயே அன்றி படைக்கவில்லை. திண்ணமாக, இறுதித் தீர்ப்பு நாள் வரத்தான் போகிறது! எனவே (நபியே!) நீர் (அவர்களுடைய முறையற்ற செயல்களை) பொருட்படுத்தாமல் கண்ணியமான முறையில் விட்டுவிடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களையும், பூமியையும் இவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் உண்மையைக் கொண்டேயல்லாது நாம் படைக்கவில்லை, (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய காலமான) மறுமை நாள் நிச்சயமாக வரச்கூடியதே! (அது வரையில் இத் தீயவர்களின் துன்புறுத்தலை) நீர் முற்றாகப் புறக்கணித்து அழகாக மன்னித்துவிடுவீராக!
Saheeh International
And We have not created the heavens and earth and that between them except in truth. And indeed, the Hour is coming; so forgive with gracious forgiveness.
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்த) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களை (உடைய ‘அல்ஹம்து' என்னும் அத்தியாயத்தை)யும், இந்த மகத்தான (முழு) குர்ஆனையும் அளித்திருக்கிறோம்.
IFT
திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களையும் மகத்துவமிக்க குர்ஆனையும் திண்ணமாக நாம் உமக்கு வழங்கியுள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய ஏழு வசனங்களை(யுடைய அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை)யும் இந்த மகத்தான குர் ஆனையும் தந்திருக்கிறோம்.
Saheeh International
And We have certainly given you, [O Muhammad], seven of the often repeated [verses] and the great Qur’an.
அவர்களிலிருந்து, சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது கண்களை நீட்டாதீர்; அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம்; ஆனால் உம் (அன்பென்னும்) இறக்கையை முஃமின்கள் மீது இறக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
(பாவிகளாகிய) இவர்கள் (இவ்வுலகில்) பல வகைகளிலும் சுகமனுபவிக்க இவர்களுக்கு நாம் கொடுத்திருப்பவற்றின் பக்கம் நீர் உமது இரு கண்களையும் நீட்டாதீர்; நீர் இவர்களுக்காக கவலையும் படாதீர். எனினும், நீர் நம்பிக்கையாளர்களுக்கு உமது பணிவான அன்பைக் காட்டுவீராக.
IFT
நாம் இம்மக்களில் பலதரப்பட்டவர்களுக்கு அளித்திருக்கும் வாழ்க்கை வசதிகளை நீர் ஏறிட்டும் பார்க்காதீர்! இவர்களின் நிலை குறித்து வருந்தாதீர். (இவர்களை விட்டுவிட்டு) நம்பிக்கையார்களின்பால் பணிவுடனும் கனிவுடனும் இருப்பீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எதை நாம் அவர்களில் பலதரப்பட்டவர்களுக்கு சுகமனுபவிக்க வைத்துள்ளோமோ, அதன்பால் உம்முடைய இருகண்களை(பார்வைகளை)யும் நிச்சயமாக நீர் நீட்டாதீர்! நீர் அவர்களுக்காக கவலையும் படாதீர், இன்னும், நீர் விசுவாசிகளுக்கு (பணிவெனும்) இறக்கையைத் தாழ்த்துவீராக.
Saheeh International
Do not extend your eyes toward that by which We have given enjoyment to [certain] categories of them [i.e., the disbelievers], and do not grieve over them. And lower your wing [i.e., show kindness] to the believers.
இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக் கொள்கிறார்கள்; (இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்து கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் (உம்மைப் பரிகசிப்பது மட்டுமா?) அல்லாஹ்வுக்கு மற்றொரு (பொய்த்) தெய்வத்தைக் கூட்டாக்குகிறார்கள். (இதன் பலனை) பின்னர் இவர்கள் அறிந்து கொள்வார்கள்.
IFT
அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் கடவுளாக்குகின்றவர்கள் விரைவில் அறிந்துகொள்ளத்தான் போகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால்- அல்லாஹ்வுடன் (பொய்யாக) மற்றொரு வணக்கத்திற்குரிய (தெய்வத்)தையும் (இணையாக) ஆக்குகிறார்கள். (இதன் முடிவைப் பின்னர்) அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
Saheeh International
Who make [equal] with Allah another deity. But they are going to know.
(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உம்மைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை உமது உள்ளத்தை நெருக்குகிறது என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (அதை நீர் ஒரு சிறிதும் பொருட்படுத்தாதீர்.)
IFT
(உம்மைக் குறித்து) இவர்கள் கூறும் கூற்றுகளால் உமது உள்ளம் வருந்துவதை திண்ணமாக நாம் அறிவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவற்றின் காரணமாக உமது நெஞ்சம் கலக்கத்திற்குள்ளாவதை நிச்சயமாக நாம் அறிவோம்.
Saheeh International
And We already know that your breast is constrained by what they say.