19. ஸூரத்து மர்யம்

மக்கீ, வசனங்கள்: 98

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
كٓهٰیٰعٓصٓ ۟۫ۚ
كٓهٰيٰـعٓـصٓ‌ ۚ‏காஃப் ஹா யா ஐன் ஸாத்
காFப்-ஹா-யா-'அய்ய்ய்ன்-ஸாத்
முஹம்மது ஜான்
காஃப், ஹா, யா, ஐன், ஸாத்
அப்துல் ஹமீது பாகவி
காஃப் ஹா யா ஐன் ஸாத்.
IFT
காஃப், ஹா, யா, ஐன், ஸாத்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
காஃப் ஹா யா ஐன் ஸாத்.
Saheeh International
Kaf, Ha, Ya, ʿAyn, Ṣad.
ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهٗ زَكَرِیَّا ۟ۖۚ
ذِكْرُநினைவு கூர்வதுرَحْمَتِஅருள் செய்ததைرَبِّكَஉமது இறைவன்عَـبْدَهٗதன் அடியார்زَكَرِيَّا ۖ ۚ‏ஸகரிய்யாவுக்கு
திக்ரு ரஹ்மதி ரBப்Bபிக 'அBப்தஹூ Zஜகரிய்யா
முஹம்மது ஜான்
(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவன் தன் அடியார் ஜகரிய்யாவுக்குப் புரிந்த அருளை (இங்கு) நினைவு கூர்வீராக.
IFT
உம் இறைவன் தன் அடியார் ஜகரிய்யா மீது பொழிந்த அருளைப் பற்றிய செய்தியாகும் இது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! இது) உம்முடைய இரட்சகன் தன் அடியார் ஜகரிய்யாவுக்குப் புரிந்த அருள் பற்றி நினைவு கூர்வதாகும்.
Saheeh International
[This is] a mention of the mercy of your Lord to His servant Zechariah
اِذْ نَادٰی رَبَّهٗ نِدَآءً خَفِیًّا ۟
اِذْ نَادٰىஅவர் அழைத்தபோதுرَبَّهٗதன் இறைவனைنِدَآءًஅழைத்தல்خَفِيًّا‏மறைவாக
இத் னாதா ரBப்Bபஹூ னிதா'அன் கFபிய்யா
முஹம்மது ஜான்
அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).
அப்துல் ஹமீது பாகவி
அவர் தன் இறைவனைத் தாழ்ந்த குரலில் (பணிவாக) அழைத்தபோது,
IFT
அவர் தம் இறைவனை மெதுவாக அழைத்தபோது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் தன் இரட்சகனைத் தாழ்ந்த குரலில் அழைத்(துப் பிரார்த்தித்)த பொழுது,
Saheeh International
When he called to his Lord a private call [i.e., supplication].
قَالَ رَبِّ اِنِّیْ وَهَنَ الْعَظْمُ مِنِّیْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَیْبًا وَّلَمْ اَكُنْ بِدُعَآىِٕكَ رَبِّ شَقِیًّا ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவா!اِنِّىْநிச்சயமாக நான்وَهَنَபலவீனமடைந்து விட்டதுالْعَظْمُஎலும்புمِنِّىْஎன்னில்وَاشْتَعَلَவெளுத்து விட்டதுالرَّاْسُதலைشَيْبًاநரையால்وَّلَمْ اَكُنْۢநான் ஆகமாட்டேன்بِدُعَآٮِٕكَஉன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில்رَبِّஎன் இறைவாشَقِيًّا‏துர்பாக்கியவனாக
கால ரBப்Bபி இன்னீ வஹனல் 'அள்மு மின்னீ வஷ்த 'அலர் ர'ஸு ஷய்Bப(ன்)வ் வ லம் அகுன் Bபிது'ஆ'இக ரBப்Bபி ஷகிய்யா
முஹம்மது ஜான்
(அவர்) கூறினார்: “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலவீனமாகி விட்டன. என் தலையும் நரைத்து விட்டது. என் இறைவனே! (இதுவரை) நான் உன்னிடத்தில் கேட்டதில் எதுவுமே தடுக்கப்படவில்லை. (நான் கேட்ட அனைத்தையும் நீ கொடுத்தே இருக்கிறாய்.)
IFT
அவர் பணிவுடன் வேண்டினார்: “என் அதிபதியே! என் எலும்புகளோ நலிவடைந்துவிட்டன. மேலும், நரையினால் என் தலை மினுமினுத்துவிட்டது. மேலும், என் அதிபதியே! நான் உன்னிடம் பிரார்த்தனை புரிந்து ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய இரட்சகனே! நிச்சயமாக நான் - என் எலும்புகள் பலவீனமடைந்து விட்டன, என் தலையும் நரையால் இலங்குகிறது, என் இரட்சகனே! (இதுவரையில்) நான் உன்னிடம் பிரார்த்தனை செய்து (கேட்டதில்) பாக்கியம் இல்லாதவனாக நான் ஆகவில்லை” என்று கூறினார்.
Saheeh International
He said, "My Lord, indeed my bones have weakened, and my head has filled with white, and never have I been in my supplication to You, my Lord, unhappy [i.e., disappointed].
وَاِنِّیْ خِفْتُ الْمَوَالِیَ مِنْ وَّرَآءِیْ وَكَانَتِ امْرَاَتِیْ عَاقِرًا فَهَبْ لِیْ مِنْ لَّدُنْكَ وَلِیًّا ۟ۙ
وَاِنِّىْநிச்சயமாக நான்خِفْتُபயப்படுகிறேன்الْمَوَالِىَஉறவினர்களைمِنْ وَّرَآءِىْஎனக்குப் பின்னால்وَكَانَتِஇன்னும் இருக்கிறாள்امْرَاَتِىْஎன் மனைவிعَاقِرًاமலடியாகفَهَبْஆகவே, தா!لِىْஎனக்குمِنْ لَّدُنْكَஉன் புறத்திலிருந்துوَلِيًّا ۙ‏ஒரு வாரிசை
வ இன்னீ கிFப்துல் மவாலிய மி(ன்)வ் வரா'ஈ வ கானத் இம்ர அதீ 'அகிரன் Fப ஹBப்லீ மில் லதுன்க வலிய்யா
முஹம்மது ஜான்
“இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக!
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நான் எனக்குப் பின்னர் என் உரிமையாளர்களைப் பற்றிப் பயப்படுகிறேன். என் மனைவியோ மலடாகி விட்டாள். ஆகவே, உன் புறத்திலிருந்து எனக்கொரு பாதுகாவலனை (குழந்தையை) வழங்கு!
IFT
எனக்குப்பின் என் உறவினர்கள் (மேற்கொள்ளக்கூடிய) தீயவழி பற்றி நான் அஞ்சுகிறேன். மேலும், என்னுடைய மனைவி மலடியாக இருக்கின்றாள். எனவே, உனது தனிப்பட்ட அருளால் எனக்கு ஒரு வாரிசை வழங்குவாயாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான் எனக்குப் பின் என் உறவினர்(களின் தீமைக)ளை பயப்படுகிறேன்; என்னுடைய மனைவியோ மலடாக ஆகிவிட்டாள்; ஆகவே உன்னிடத்திலிருந்து (எனக்குப்பின் என் காரியங்களை கவனிக்கும்) ஒரு வாரிசை நீ அளிப்பாயாக!”
Saheeh International
And indeed, I fear the successors after me, and my wife has been barren, so give me from Yourself an heir
یَّرِثُنِیْ وَیَرِثُ مِنْ اٰلِ یَعْقُوْبَ ۖۗ وَاجْعَلْهُ رَبِّ رَضِیًّا ۟
يَّرِثُنِىْஅவர் எனக்கும் வாரிசாக ஆகுவார்وَيَرِثُஇன்னும் வாரிசாக ஆகுவார்مِنْ اٰلِகிளையினருக்குيَعْقُوْبَ ۖ யஃகூபுடையوَاجْعَلْهُஇன்னும் அவரை ஆக்குرَبِّஎன் இறைவா!رَضِيًّا‏பொருந்திக் கொள்ளப்பட்டவராக
யரிதுனீ வ யரிது மின் ஆலி யஃகூBப், வஜ்'அல்ஹு ரBப்Bபி ரளிய்யா
முஹம்மது ஜான்
“அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!”
அப்துல் ஹமீது பாகவி
அவன் எனக்கும், யஅகூபுடைய சந்ததிகளுக்கும் வாரிசாகக் கூடியவனாக இருக்க வேண்டும். என் இறைவனே! அவனை (உனக்குப்) பிரியமுள்ளவனாகவும் ஆக்கிவை'' என்று பிரார்த்தித்தார்.
IFT
அவர் எனக்கும் யஃகூபுடைய குடும்பத்தினருக்கும் வாரிசாகத் திகழட்டும். மேலும், என் இறைவா! அவரை விரும்பத்தக்க மனிதராய் ஆக்குவாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவர் எனக்கு (என் உடமையில்) வாரிஸாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததிகளிலிருந்து (நபித்துவத்திற்கு) வாரிஸாகவும் இருப்பார், என் இரட்சகனே! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் நீர் ஆக்கி வைப்பாயாக” (என்று பிரார்த்தித்துக் கூறினார்.)
Saheeh International
Who will inherit me and inherit from the family of Jacob. And make him, my Lord, pleasing [to You]."
یٰزَكَرِیَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ سْمُهٗ یَحْیٰی ۙ لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِیًّا ۟
يٰزَكَرِيَّاۤஸகரிய்யாவே!اِنَّاநிச்சயமாக நாம்نُبَشِّرُكَஉமக்கு நற்செய்தி தருகிறோம்بِغُلٰمِஒரு ஆண் குழந்தையைக் கொண்டுاۨسْمُهٗஅதன் பெயர்يَحْيٰى ۙயஹ்யாلَمْ نَجْعَلْநாம் படைக்கவில்லைلَّهٗஅதற்குمِنْ قَبْلُஇதற்கு முன்سَمِيًّا‏ஒப்பானவரை
யா Zஜகரிய்யா இன்னா னுBபஷ்ஷிருக Bபி குலாமின் இஸ்முஹூ யஹ்யா லம் னஜ்'அல் லஹூ மின் கBப்லு ஸமிய்யா
முஹம்மது ஜான்
“ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு இறைவன் அவரை நோக்கி) ‘‘ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் ‘யஹ்யா' என்ற பெயர் கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) உமக்கு நற்செய்தி கூறுகிறோம். அப்பெயர் கொண்ட ஒருவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை'' (என்று கூறினான்.)
IFT
(பதிலளிக்கப்பட்டது:) “ஜகரிய்யாவே! உமக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்று நாம் நற்செய்தி அறிவிக்கின்றோம்; அதன் பெயர் ‘யஹ்யா’ ஆகும். இந்தப் பெயருடைய எவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு அல்லாஹ் அவரிடம்) “ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் ஒரு மகனை(த்தருவதாக) உமக்கு நன்மாராயங் கூறுகிறோம், அவர் பெயர் யஹ்யாவாகும், இதற்கு முன் அப்பெயரிடப்பட்ட ஒருவரையும் அதற்கு நாம் ஆக்கவில்லை” (என்று கூறினான்.)
Saheeh International
[He was told], "O Zechariah, indeed We give you good tidings of a boy whose name will be John. We have not assigned to any before [this] name."
قَالَ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِیْ عَاقِرًا وَّقَدْ بَلَغْتُ مِنَ الْكِبَرِ عِتِیًّا ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாاَنّٰىஎப்படி?يَكُوْنُகிடைக்கும்لِىْஎனக்குغُلٰمٌகுழந்தைوَّكَانَتِஇருக்கிறாள்امْرَاَتِىْஎன் மனைவிعَاقِرًاமலடியாகوَّقَدْ بَلَـغْتُநானோ அடைந்து விட்டேன்مِنَ الْـكِبَرِமுதுமையின்عِتِيًّا‏எல்லையை
கால ரBப்Bபி அன்னா யகூனு லீ குலாமு(ன்)வ் வகானத் இம்ர அதீ 'ஆகிர(ன்)வ் வ கத் Bபலக்து மினல் கிBபரி 'இதிய்யா
முஹம்மது ஜான்
(அதற்கு அவர்) “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?” எனக் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘என் இறைவனே! எப்படி எனக்குச் சந்ததி ஏற்படும்? என் மனைவியோ மலடி. நானோ முதுமையின் கடைசிப் பாகத்தை அடைந்து விட்டேன்'' என்று கூறினார்.
IFT
அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என் மனைவியோ மலடியாக இருக்கிறாள். நானோ முதுமையினால் தளர்ந்து போய்விட்டேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர் “என் இரட்சகனே! என் மனைவியோ மலடியாக இருக்கிறாள், நானோ முதுமையின் முடிவை திட்டமாக அடைந்து விட்டேன், (இந்நிலையில்) எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாவான்?,” என்று கேட்டார்.
Saheeh International
He said, "My Lord, how will I have a boy when my wife has been barren and I have reached extreme old age?"
قَالَ كَذٰلِكَ ۚ قَالَ رَبُّكَ هُوَ عَلَیَّ هَیِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَیْـًٔا ۟
قَالَகூறினான்كَذٰلِكَ‌ۚஅப்படித்தான்قَالَகூறினான்رَبُّكَஉம் இறைவன்هُوَஅதுعَلَىَّஎனக்குهَيِّنٌமிக எளிதுوَّقَدْதிட்டமாகخَلَقْتُكَநான் உன்னைப் படைத்திருக்கிறேன்مِنْ قَبْلُஇதற்கு முன்னர்وَلَمْ تَكُநீர் இருக்காதபோதுشَيْـٴًـــا‏ஒரு பொருளாக
கால கதாலிக கால ரBப்Bபுக ஹுவ 'அலய்ய ஹய்யினு(ன்)வ் வ கத் கலக்துக மின் கBப்லு வ லம் தகு ஷய்'ஆ
முஹம்மது ஜான்
“(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்” என்று இறைவன் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன் ‘‘(நான் கூறிய) அவ்வாறே நடைபெறும். அ(வ்வாறு செய்வ)து எனக்கு மிக்க எளிதானதே. இதற்கு முன்னர் நீர் ஒன்றுமில்லாமல் இருந்த சமயத்தில் நானே உம்மைப் படைத்தேன் என்று உமது இறைவனே கூறுகிறான்'' என்றும் கூறினான்.
IFT
பதில் கிடைத்தது: “அவ்வாறே ஆகும்.” உம் இறைவன் கூறுகின்றான்: “இது என்னைப் பொறுத்து சுலபமானதாகும் இதற்கு முன், நீர் எப்பொருளாகவும் இல்லாதிருந்தபோது, நான் உம்மைப் படைத்திருக்கின்றேனே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அ(தற்க)வன், அவ்வாறே (நடைபெறும்) என்று கூறினான், இது எனக்கு மிக்க எளிதானது, இதற்கு முன்னர், நீர் ஒன்றுமில்லாமலிருந்த நிலையில் நானே உம்மைப் படைத்தேன்” என்று உமதிரட்சகன் கூறினான்.
Saheeh International
[An angel] said, "Thus [it will be]; your Lord says, 'It is easy for Me, for I created you before, while you were nothing.'"
قَالَ رَبِّ اجْعَلْ لِّیْۤ اٰیَةً ؕ قَالَ اٰیَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَیَالٍ سَوِیًّا ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாاجْعَلْ لِّىْۤஎனக்கு ஏற்படுத்துاٰيَةً‌  ؕஓர் அத்தாட்சியைقَالَஅவன் கூறினான்اٰيَتُكَஉமக்கு அத்தாட்சியாகும்اَلَّا تُكَلِّمَபேசாமல் இருப்பது தான்النَّاسَமக்களிடம்ثَلٰثَமூன்றுلَيَالٍஇரவுகள்سَوِيًّا‏நீர் சுகமாக இருக்க
கால ரBப்Bபிஜ் 'அல் லீ ஆயஹ்; கால ஆயதுக அல்லா துகல்லிமன் னாஸ தலாத லயாலின் ஸவிய்யா
முஹம்மது ஜான்
(அதற்கவர்) “என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!” என்று வேண்டினார்; “நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘என் இறைவனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சி அளி'' என்று கேட்டார். (அதற்கு இறைவன்) ‘‘உமக்கு (நான் அளிக்கும்) அத்தாட்சியாவது நீர் (சுகமாக இருந்துகொண்டே) சரியாக மூன்று இரவுகளும் (பகல்களும்) மனிதர்களுடன் பேச முடியாமல் ஆகிவிடுவதுதான்'' என்று கூறினான்.
IFT
அதற்கு ஜகரிய்யா, “என் இறைவனே! எனக்கு ஓர் அடையாளத்தை நிர்ணயம் செய்வாயாக” என்றார். அதற்கு இறைவன், “உமக்கு அடையாளம், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மக்களிடம் உம்மால் பேச இயலாமல் போவதாகும்” என்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அ(தற்க)வர், “என் இரட்சகனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சியை ஆக்குவாயாக! என (பிரார்த்தித்து)க் கேட்டார், அவன் “உமக்கு அத்தாட்சியாவது, நீர் சரீர சுகவாசியாக இருக்க மூன்று இரவுகள் (பகல்கள்) மனிதர்களுடன் பேச முடியாமல் இருப்பதாகும்” என்று கூறினான்.
Saheeh International
[Zechariah] said, "My Lord, make for me a sign." He said, "Your sign is that you will not speak to the people for three nights, [being] sound."
فَخَرَجَ عَلٰی قَوْمِهٖ مِنَ الْمِحْرَابِ فَاَوْحٰۤی اِلَیْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِیًّا ۟
فَخَرَجَஅவர் வெளியேறி வந்தார்عَلٰى قَوْمِهٖதனது மக்களுக்கு முன்مِنَஇருந்துالْمِحْرَابِதொழுமிடம்فَاَوْحٰٓىஜாடை காண்பித்தார்اِلَيْهِمْஅவர்களை நோக்கிاَنْ سَبِّحُوْاதுதியுங்கள் என்றுبُكْرَةًகாலையிலும்وَّعَشِيًّا‏மாலையிலும்
Fபகரஜ 'அலா கவ்மிஹீ மினல் மிஹ்ராBபி Fப-அவ்ஹா இலய்ஹிம் அன் ஸBப்Bபிஹூ Bபுக்ரத(ன்)வ் வ 'அஷிய்யா
முஹம்மது ஜான்
ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர், “காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹு செய்யுங்கள்” என்று உணர்த்தினார்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டுத் தன் மக்கள் முன் வந்தார். (எனினும், அவரால் வாய் திறந்து பேச முடியாமலாகி விட்டது.) ஆகவே, காலையிலும் மாலையிலும் (இறைவனைப்) புகழ்ந்து துதி செய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு ஜாடை காண்பித்தார்.
IFT
பிறகு, அவர் மாடத்திலிருந்து வெளியேறி தம் சமுதாயத்தாரிடம் வந்து, “நீங்கள் காலையிலும் மாலையிலும் இறைவனைத் துதியுங்கள்” என்று சாடையாய் உணர்த்தினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர் தொழுமிடத்திலிருந்து தன் சமூகத்தினர்பால் வெளியேறி (முன் வந்து) காலையிலும் மாலையிலும் (அல்லாஹ்வைப் புகழ்ந்து) துதிசெய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு சாடையாகக் காண்பித்தார்.
Saheeh International
So he came out to his people from the prayer chamber and signaled to them to exalt [Allah] in the morning and afternoon.
یٰیَحْیٰی خُذِ الْكِتٰبَ بِقُوَّةٍ ؕ وَاٰتَیْنٰهُ الْحُكْمَ صَبِیًّا ۟ۙ
يٰيَحْيٰىயஹ்யாவேخُذِபற்றிப் பிடிப்பீராகالْكِتٰبَவேதத்தைبِقُوَّةٍ‌ ؕபலமாகوَاٰتَيْنٰهُஇன்னும் அவருக்குக் கொடுத்தோம்الْحُكْمَஞானத்தைصَبِيًّا ۙ‏சிறு குழந்தை
யா யஹ்யா குதில் கிதாBப Bபிகுவ்வதி(ன்)வ் வ ஆதய்னாஹுல் ஹுக்ம ஸBபிய்யா
முஹம்மது ஜான்
(அதன் பின்னர்) “யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்” (எனக் கூறினோம்); இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நாம் கூறியவாறே ஜகரிய்யாவுக்கு யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரை நோக்கி) ‘‘யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக'' என்று கூறி, நாம் அவருக்கு (அவருடைய) சிறு வயதிலேயே ஞானத்தையும் அளித்தோம்.
IFT
“யஹ்யாவே, நீர் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளும்.” குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு நாம் ஹுக்மை* வழங்கினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நாம் வாக்களித்தவாறே யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரிடம்) “யஹ்யாவே! நீர் இவ்வேதத்தை பலமாகப் பிடித்துக் கொள்வீராக! (என்று கூறினோம்.) அவர் குழந்தையாக இருந்தபோதே அவருக்கு (சட்ட) ஞானத்தையும் நாம் அளித்தோம்.
Saheeh International
[Allah said], "O John, take the Scripture [i.e., adhere to it] with determination." And We gave him judgement [while yet] a boy
وَّحَنَانًا مِّنْ لَّدُنَّا وَزَكٰوةً ؕ وَكَانَ تَقِیًّا ۟ۙ
وَّحَنَانًاஇரக்கத்தையும்مِّنْ لَّدُنَّاநம்மிடமிருந்துوَزَكٰوةً  ؕதூய்மையையும்وَّكَانَஇன்னும் அவர் இருந்தார்تَقِيًّا ۙ‏இறையச்சமுடையவராக
வ ஹனானம் மில் லதுன்னா வ Zஜகாத(ன்)வ் வ கான தகிய்யா
முஹம்மது ஜான்
அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்); இன்னும் அவர் மிகவும் பயபக்தியுடையவராக இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், இரக்கமுள்ள மனதையும், பரிசுத்தத் தன்மையையும் நாம் அவருக்குக் கொடுத்தோம். ஆகவே, அவர் மிக இறையச்சமுடையவராகவே இருந்தார்.
IFT
மேலும், நம்மிடமிருந்து இளகிய மனத்தையும் தூய்மையையும் வழங்கியிருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், நம்மிடமிருந்து இரக்கத்தன்மையையும், பரிசுத்தத் தன்மையையும் (நாம் அவருக்குக் கொடுத்தோம்.) இன்னும், அவர் மிக்க பயபக்தியுடையவராக இருந்தார்.
Saheeh International
And affection from Us and purity, and he was fearing of Allah
وَّبَرًّا بِوَالِدَیْهِ وَلَمْ یَكُنْ جَبَّارًا عَصِیًّا ۟
وَّبَرًّۢاஇன்னும் நன்மை புரிபவராகبِوَالِدَيْهِதன் பெற்றோருக்குوَلَمْ يَكُنْஅவர் இருக்கவில்லைجَبَّارًاமுரடராகعَصِيًّا‏மாறுசெய்பவராக
வ Bபர்ரம் Bபிவாலிதய்ஹி வ லம் யகும் ஜBப்Bபாரன் 'அஸிய்யா
முஹம்மது ஜான்
மேலும், தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராகவும் இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், தன் தாய் தந்தைக்கு நன்றி செய்பவராகவே இருந்தார். (அவர்களுக்கு) மாறு செய்பவராகவோ முரடராகவோ இருக்கவில்லை.
IFT
அவர் மிகவும் பேணுதல் உள்ளவராயும் தம் தாய் தந்தையரின் கடமைகளைச் செவ்வனே ஆற்றுபவராகவும் திகழ்ந்தார். அவர் முரடராகவோ, கீழ்ப்படியாதவராகவோ இருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவர் தம் பெற்றோர்க்கு நன்மை செய்பவராகவும் (இருந்தார்), அவர் பெருமை கொண்டவராகவோ (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை.
Saheeh International
And dutiful to his parents, and he was not a disobedient tyrant.
وَسَلٰمٌ عَلَیْهِ یَوْمَ وُلِدَ وَیَوْمَ یَمُوْتُ وَیَوْمَ یُبْعَثُ حَیًّا ۟۠
وَسَلٰمٌஇன்னும் ஈடேற்றம்عَلَيْهِஅவருக்குيَوْمَநாளிலும்وُلِدَபிறந்தوَيَوْمَநாளிலும்يَمُوْتُஅவர் மரணிக்கின்றوَيَوْمَ يُبْعَثُஅவர் எழுப்பப்படுகின்ற நாளிலும்حَيًّا‏உயிர் பெற்றவராக
வ ஸலாமுன் 'அலய்ஹி யவ்ம வுலித வ யவ்ம யமூது வ யவ்ம யுBப்'அது ஹய்ய்யா
முஹம்மது ஜான்
ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது ஸலாம் (சாந்தி) நிலைத்திருக்கும்.  
அப்துல் ஹமீது பாகவி
அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும் (மறுமையில்) அவர் உயிருள்ளவராக எழுப்பப்படும் நாளிலும் அவர் மீது ஸலாம் நிலவுக!
IFT
அவர்மீது சாந்தி உண்டாகட்டும் அவர் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளிலும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் பிறந்த நாளிலும் அவர் இறக்கும் நாளிலும், அவர் உயிர் பெற்றவராக எழுப்பப்படும் (மறுமை) நாளிலும் அவர் மீது சாந்தி உண்டாவதாக.
Saheeh International
And peace be upon him the day he was born and the day he dies and the day he is raised alive.
وَاذْكُرْ فِی الْكِتٰبِ مَرْیَمَ ۘ اِذِ انْتَبَذَتْ مِنْ اَهْلِهَا مَكَانًا شَرْقِیًّا ۟ۙ
وَاذْكُرْஇன்னும் நினைவு கூறுவீராகفِى الْـكِتٰبِஇவ்வேதத்தில்مَرْيَمَ‌ۘமர்யமைاِذِ انْتَبَذَتْஒதுங்கியபோதுمِنْ اَهْلِهَاதன் குடும்பத்தினரை விட்டுمَكَانًاஇடத்திற்குشَرْقِيًّا ۙ‏கிழக்கில்
வத்குர் Fபில் கிதாBபி மர்யம; இதின் தBபதத் மின் அஹ்லிஹா மகானன் ஷர்கிய்யா
முஹம்மது ஜான்
(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக; அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவ்வேதத்தில் (ஈஸாவின் தாயாகிய) மர்யமைப் பற்றியும் (சிறிது) கூறுவீராக: அவர் தன் குடும்பத்தினரை விட்டு விலகி கிழக்குத் திசையிலுள்ள (தன்) அறைக்குச் சென்று,
IFT
மேலும் (நபியே!) மர்யத்தைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் விவரித்துக் கூறுவீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரை விட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இவ்வேதத்தில், மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக! அவர் தன் குடும்பத்தினரை விட்டு கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் தனித்தபோது
Saheeh International
And mention, [O Muhammad], in the Book [the story of] Mary, when she withdrew from her family to a place toward the east.
فَاتَّخَذَتْ مِنْ دُوْنِهِمْ حِجَابًا ۪۫ فَاَرْسَلْنَاۤ اِلَیْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِیًّا ۟
فَاتَّخَذَتْஅவர் ஏற்படுத்திக் கொண்டார்مِنْ دُوْنِهِمْஅவர்களுக்கு முன்னாலிருந்துحِجَابًاஒரு திரையைفَاَرْسَلْنَاۤநாம் அனுப்பினோம்اِلَيْهَاஅவரிடம்رُوْحَنَاநமது தூதரைفَتَمَثَّلَஅவர் தோன்றினார்لَهَاஅவளுக்குبَشَرًاஒரு மனிதராகسَوِيًّا‏முழுமையான
Fபத்தகதத் மின் தூனிஹிம் ஹிஜாBபன் Fப அர்ஸல்னா இலய்ஹா ரூஹனா Fபதமத்தல லஹா Bபஷரன் ஸவிய்யா
முஹம்மது ஜான்
அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.
அப்துல் ஹமீது பாகவி
(குளிப்பதற்காகத்) தன் மக்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில் (ஜிப்ரயீல் என்னும்) நம் தூதரை அவரிடம் அனுப்பிவைத்தோம். அவர் முழுமையான ஒரு மனிதனுடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார்.
IFT
அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யத்தின் முன்னிலையில் முழு மனித உருவில் தோன்றினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை ஆக்கிக் கொண்டார், அப்பொழுது (ஜிப்ரீல் என்னும்) நம்முடைய ரூஹை அவரிடம் நாம் அனுப்பி வைத்தோம், அவர் சரியான ஒரு மனிதருடைய உருவத்தில் அவருக்கு முன் தோற்றமளித்தார்.
Saheeh International
And she took, in seclusion from them, a screen. Then We sent to her Our Angel [i.e., Gabriel], and he represented himself to her as a well-proportioned man.
قَالَتْ اِنِّیْۤ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِیًّا ۟
قَالَتْகூறினார்اِنِّىْۤநிச்சயமாக நான்اَعُوْذُபாதுகாவல் தேடுகிறேன்بِالرَّحْمٰنِரஹ்மானிடம்مِنْكَஉம்மிடமிருந்துاِنْ كُنْتَநீர் இருந்தால்تَقِيًّا‏இறையச்சமுடையவராக
காலத் இன்னீ அ'ஊது Bபிர் ரஹ்மானி மின்க இன் குன்த தகிய்யா
முஹம்மது ஜான்
(அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)” என்றார்.
அப்துல் ஹமீது பாகவி
(அவரைக் கண்டதும்) ‘‘நிச்சயமாக நான் உம்மிடமிருந்து என்னை பாதுகாக்க ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (இங்கிருந்து அப்புறப்பட்டு விடுவீராக)'' என்றார்.
IFT
உடனே மர்யம் கூறினார்: “உம்மை விட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாவல் கோருகின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மர்யம் ஜிப்ரீலைக் கண்டதும்,) “நிச்சயமாக நான் உம்மைவிட்டும் (காக்குமாறு) ரஹ்மானிடம் பாதுகாவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (என்னிடம் நெருங்காதீர்)” என்று கூறினார்.
Saheeh International
She said, "Indeed, I seek refuge in the Most Merciful from you, [so leave me], if you should be fearing of Allah."
قَالَ اِنَّمَاۤ اَنَا رَسُوْلُ رَبِّكِ ۖۗ لِاَهَبَ لَكِ غُلٰمًا زَكِیًّا ۟
قَالَஅவர் கூறினார்اِنَّمَاۤ اَنَاநானெல்லாம்رَسُوْلُதூதர்தான்رَبِّكِ ۖஉமது இறைவனின் لِاَهَبَநான்வழங்குவதற்காகلَـكِஉமக்குغُلٰمًاஒரு குழந்தையைزَكِيًّا‏பரிசுத்தமான
கால இன்னமா அன ரஸூலு ரBப்Bபிகி லி அஹBப லகி குலாமன் Zஜகிய்யா
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர், பரிசுத்தமான ஒரு மகனை ‘‘உமக்களி(க்கப்படும் என்பதை உமக்கு அறிவி)ப்ப தற்காக உமது இறைவனால் அனுப்பப்பட்ட (வானவ) தூதர்தான் நான்'' என்றார்.
IFT
அதற்கு அவர் கூறினார்: “நான் உம் இறைவனின் தூதராவேன்; தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “பரிசுத்தமான ஒரு மகனை (அல்லாஹ்விடமிருந்து) உமக்கு நான் நன்கொடையளிப்பதற்காக நிச்சயமாக நான் உமதிரட்சகனின் (மலக்காகிய) ஒரு தூதன்தான்” என்று கூறினார்.
Saheeh International
He said, "I am only the messenger of your Lord to give you [news of] a pure boy [i.e., son]."
قَالَتْ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّلَمْ یَمْسَسْنِیْ بَشَرٌ وَّلَمْ اَكُ بَغِیًّا ۟
قَالَتْஅவர் கூறினார்اَنّٰىஎப்படி?يَكُوْنُ لِىْஎனக்கு ஏற்படும்غُلٰمٌகுழந்தைوَّلَمْ يَمْسَسْنِىْஇன்னும் என்னை தொடவில்லைبَشَرٌஓர் ஆடவர்وَّلَمْ اَكُஇன்னும் நான் இல்லையேبَغِيًّا‏விபச்சாரியாக
காலத் அன்ன யகூனு லீ குலாமு(ன்)வ் வ லம் யம்ஸஸ்னீ Bபஷ்ரு(ன்)வ் வ லம் அகு Bபகிய்யா
முஹம்மது ஜான்
அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘எனக்கு எப்படி சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே; நான் கெட்ட நடத்தையுள்ளவளும் அல்லவே'' என்று கூறினார்.
IFT
மர்யம் கூறினார்: “எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே; நான் தீய நடத்தையுடையவளும் அல்லவே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்? (விவாகத்தின் மூலம்) எந்த ஆடவரும் என்னைத் தீண்டியதில்லையே! நான் கெட்ட நடத்தையுள்ளவளுமல்லவே” என்று கூறினார்.
Saheeh International
She said, "How can I have a boy while no man has touched me and I have not been unchaste?"
قَالَ كَذٰلِكِ ۚ قَالَ رَبُّكِ هُوَ عَلَیَّ هَیِّنٌ ۚ وَلِنَجْعَلَهٗۤ اٰیَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا ۚ وَكَانَ اَمْرًا مَّقْضِیًّا ۟
قَالَஅவர் கூறினார்كَذٰلِكِ‌ ۚஅப்படித்தான் நடக்கும்قَالَகூறுகிறான்رَبُّكِஉமது இறைவன்هُوَஅதுعَلَىَّதனக்குهَيِّنٌ‌ ۚஎளிதாகும்وَلِنَجْعَلَهٗۤஅவரை நாம் ஆக்குவதற்காகவும்اٰيَةًஓர் அத்தாட்சியாகلِّلنَّاسِமனிதர்களுக்குوَرَحْمَةًஓர் அருளாகمِّنَّا‌ ۚநம்புறத்திலிருந்துوَكَانَஇது இருக்கிறதுاَمْرًاஒரு காரியமாகمَّقْضِيًّا‏முடிவுசெய்யப்பட்ட
கால கதாலிகி கால ரBப்Bபுகி ஹுவ 'அலய்ய ஹய்யிமு(ன்)வ் வ லினஜ் 'அலஹூ ஆயதல் லின்னாஸி வ ரஹ்மதம் மின்னா; வ கான அம்ரம் மக்ளிய்யா
முஹம்மது ஜான்
“அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘அவ்வாறே (நடைபெறும் என்று) உமது இறைவன் கூறுகிறான் (என்றும்), அது தனக்கு எளிது (என்றும்), அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம் அருளாகவும் நாம் ஆக்குவோம் (என்றும்) இது முடிவு செய்யப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது'' என்றும் கூறுகிறான்.
IFT
அதற்கு வானவர் கூறினார்: “அவ்வாறே நிகழும்.” உம் இறைவன் கூறுகின்றான்: “அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது;மேலும், நாம் அக்குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்குவதற்காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும், அது நடந்தே தீரும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், அவ்வாறே! “அது எனக்கு எளிது அவரை மனிதர்களுக்கு, ஒரு அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஓர் அருளாகவும் நாம் ஆக்குவதற்காக (நாம் அவரை உண்டாக்கினோம்) என்றும், இது விதிக்கப்பட்டுவிட்ட ஒரு விஷயம் என்றும் உமதிரட்சகனே கூறுகிறான்” என்று கூறினார்.
Saheeh International
He said, "Thus [it will be]; your Lord says, 'It is easy for Me, and We will make him a sign to the people and a mercy from Us. And it is a matter [already] decreed.'"
فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِیًّا ۟
فَحَمَلَـتْهُபின்னர், அவர் அவரை கர்ப்பத்தில் சுமந்தாள்فَانْتَبَذَتْ بِهٖஅதனுடன் விலகிச் சென்றார்مَكَانًاஇடத்திற்குقَصِيًّا‏தூரமான
Fபஹமலத் ஹு Fபன்தBபதத் Bபிஹீ மகானன் கஸிய்யா
முஹம்மது ஜான்
அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், மர்யம் அந்த குழந்தையை கர்ப்பத்தில் சுமந்து அதனுடன் (அவர் இருந்த இடத்திலிருந்து வெளியேறி) தூரத்திலுள்ள ஓர் இடத்தைச் சென்றடைந்தார்.
IFT
பின்னர், மர்யம் அக்குழந்தையைக் கர்ப்பம் தரித்தார். கர்ப்பத்தோடு அவர் தொலைவான ஓர் இடத்திற்கு ஒதுங்கிச் சென்றார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர் (-மர்யம், ஈஸாவாகிய) அவரைக் கருவுற்றார், (பின்னர், அ(க்கர்ப்ப)த்துடன் தூரமான ஓர் இடத்திற்கு ஓதுங்கிச் சென்றடைந்தார்.
Saheeh International
So she conceived him, and she withdrew with him to a remote place.
فَاَجَآءَهَا الْمَخَاضُ اِلٰی جِذْعِ النَّخْلَةِ ۚ قَالَتْ یٰلَیْتَنِیْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْیًا مَّنْسِیًّا ۟
فَاَجَآءَகொண்டு சென்றதுهَاஅவரைالْمَخَاضُபிரசவ வேதனைاِلٰى جِذْعِமரத்தடிக்குالنَّخْلَةِ‌ۚபேரிச்சமரம்قَالَتْஅவர் கூறினார்يٰلَيْتَنِىْ مِتُّநான் மரணிக்க வேண்டுமேقَبْلَமுன்னரேهٰذَاஇதற்குوَكُنْتُஇன்னும் நான் இருக்க வேண்டுமேنَسْيًا مَّنْسِيًّا‏முற்றிலும் மறக்கப்பட்டவளாக
Fப அஜா 'அஹல் மகாளு இலா ஜித்'இன் னக்லதி காலத் யா லய்தனீ மித்து கBப்ல ஹாதா வ குன்து னஸ்யம் மன்ஸிய்யா
முஹம்மது ஜான்
பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார்.
அப்துல் ஹமீது பாகவி
பின்பு, அவர் ஒரு பேரீச்ச மரத்தடியில் செல்லும்பொழுது அவருக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு ‘‘இதற்கு முன்னதாகவே நான் இறந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இறந்திருந்தால் என் எண்ணமே (ஒருவருடைய ஞாபகத்திலும் இல்லாதவாறு) முற்றிலும் மறக்கடிக்கப்பட்டிருப்பேனே'' என்று (வேதனையுடன்) கூறினார்.
IFT
பிரசவ வேதனை அவரை ஒரு பேரீச்சை மரத்தடியின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது. அப்போது அவர், “அந்தோ! நான் இதற்கு முன்னரே மரணமடைந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுப் போயிருந்திருக்கக் கூடாதா?” என்று கூறலானார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை, ஒரு பேரீச்ச மரத்தின் (காய்ந்த அடிபாகத்தின்பால் அவரைக் கொண்டுவந்து சேர்த்தது, “இதற்கு முன்னதாகவே நான் இறந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டவளாக நான் ஆகியிருக்க வேண்டுமே” என்று (மர்யம்) கூறினார்.
Saheeh International
And the pains of childbirth drove her to the trunk of a palm tree. She said, "Oh, I wish I had died before this and was in oblivion, forgotten."
فَنَادٰىهَا مِنْ تَحْتِهَاۤ اَلَّا تَحْزَنِیْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِیًّا ۟
فَنَادٰٮهَاஅவரை அவர் கூவி அழைத்தார்مِنْ تَحْتِهَاۤஅதனுடைய அடிப்புறத்திலிருந்துاَلَّا تَحْزَنِىْகவலைப்படாதீர்قَدْ جَعَلَஏற்படுத்தி இருக்கின்றான்رَبُّكِஉமது இறைவன்تَحْتَكِஉமக்குக் கீழ்سَرِيًّا‏ஓர் ஊற்றை
Fபனாதாஹா மின் தஹ்திஹா அல்லா தஹ்Zஜனீ கத் ஜ'அல ரBப்Bபுகி தஹ்தகி ஸரிய்யா
முஹம்மது ஜான்
(அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(பேரீச்ச மரத்தின்) அடிப்புறமிருந்து (ஜிப்ரயீல்) சப்தமிட்டு ‘‘(மர்யமே!) கவலைப்படாதீர்! உமக்குச் சமீபமாக உமது இறைவன் ஓர் ஊற்றை (உதித்து) ஓடச் செய்திருக்கிறான்.
IFT
அப்பொழுது கீழே இருந்து ஒரு வானவர் அவரை அழைத்துக் கூறினார்: “நீர் கவலைப்படாதீர்; உம் இறைவன் உமக்குக் கீழே ஒரு நீரூற்றை அமைத்துள்ளான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது அவருக்குக் கீழ் புறமிருந்து (ஜிப்ரீயீலாகிய) அவர் சப்தமிட்டு அவரை அழைத்து “(மர்யமே!) நீர் கவலைப்படாதீர்” உம(து பாதத்து)க்கு கீழாக உமதிரட்சகன் ஓர் ஊற்றை திட்டமாக ஆக்கியிருக்கின்றான்” (என்றும்),
Saheeh International
But he called her from below her, "Do not grieve; your Lord has provided beneath you a stream.
وَهُزِّیْۤ اِلَیْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَیْكِ رُطَبًا جَنِیًّا ۟ؗ
وَهُزِّىْۤஇன்னும் அசைப்பீராகاِلَيْكِஉம் பக்கம்بِجِذْعِநடுத்தண்டைالنَّخْلَةِபேரிச்ச மரத்தின்تُسٰقِطْகொட்டும்عَلَيْكِஉம்மீதுرُطَبًاபழங்களைجَنِيًّا‏பழுத்த
வ ஹுZஜ்Zஜீ இலய்கி Bபிஜித் 'இன் னக்லதி துஸாகித் 'அலய்கி ருதBபன் ஜனிய்யா
முஹம்மது ஜான்
“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
அப்துல் ஹமீது பாகவி
இப்பேரீச்ச மரத்தின் கிளையை, உமது பக்கம் பிடித்து (இழுத்து)க் குலுக்குவீராக. அது பழுத்த பழங்களை உம் மீது சொரியும்.
IFT
மேலும், பேரீச்சை மரத்தின் அடிப்பகுதியைப் பிடித்துச் சற்று உலுக்கும். அது உம்மீது புத்தம் புதிய பேரீச்சம் பழங்களை உதிர்க்கும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “இப்பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தை நீர் உம்பக்கம் (இழுத்துக்) குலுக்குவீராக! அது பழுத்த பழங்களை உம்மீது சொரியும்” (என்றும்,)
Saheeh International
And shake toward you the trunk of the palm tree; it will drop upon you ripe, fresh dates.
فَكُلِیْ وَاشْرَبِیْ وَقَرِّیْ عَیْنًا ۚ فَاِمَّا تَرَیِنَّ مِنَ الْبَشَرِ اَحَدًا ۙ فَقُوْلِیْۤ اِنِّیْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْیَوْمَ اِنْسِیًّا ۟ۚ
فَكُلِىْஇன்னும் நீர் புசிப்பீராகوَاشْرَبِىْபருகுவீராகوَقَرِّىْகுளிர்வீராகعَيْنًا‌ ۚகண்فَاِمَّا تَرَيِنَّஆகவே நீர் பார்த்தால்مِنَ الْبَشَرِமனிதரில்اَحَدًا ۙயாரையும்فَقُوْلِىْۤகூறுவீராகاِنِّىْநிச்சயமாக நான்نَذَرْتُநேர்ச்சை செய்துள்ளேன்لِلرَّحْمٰنِரஹ்மானுக்குصَوْمًاநோன்பைفَلَنْ اُكَلِّمَஆகவே நான் அறவே பேசமாட்டேன்الْيَوْمَஇன்றுاِنْسِيًّا ۚ‏எந்த மனிதனிடமும்
Fபகுலீ வஷ்ரBபீ வ கர்ரீ 'அய்னா; Fப இம்மா தரயின்ன்ன மினல் Bபஷரி அஹதன் Fபகூலீ இன்னீ னதர்து லிர் ரஹ்மானி ஸவ்மன் Fபலன் உகல்லிமல் யவ்ம இன்ஸிய்யா
முஹம்மது ஜான்
“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (அப்பழங்களை) நீர் புசித்து (இந்த ஊற்றின் நீரைக்) குடித்து (இக்குழந்தையைக் கண்டு) கண் குளிர்ந்திருப்பீராக! மனிதரில் எவரைக் கண்ட போதிலும் ‘‘நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்க முடிவு செய்துள்ளேன்; ஆகவே, இன்றைய தினம் எம்மனிதருடனும் பேசமாட்டேன் என்று கூறிவிடுவீராக'' என்றும் கூறினார்.
IFT
ஆக, நீர் புசித்தும் பருகியும் கண் குளிர்ந்திருப்பீராக! பிறகு, மனிதரில் எவரையேனும் நீர் கண்டால் (அவரிடம்) கூறிவிடும்: “கருணைமிக்க இறைவனுக்காக நோன்பு நோற்க வேண்டுமென நான் நேர்ந்திருக்கின்றேன். ஆதலால், இன்று நான் எவரிடமும் பேசமாட்டேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அப்போது, (அப்பழங்களை) நீர் உண்பீராக! இன்னும், (ஊற்றின் நீரைக்) குடித்துக் கொள்வீராக! (இக்குழந்தையினால் உம்) கண் குளிர்ந்துமிருப்பீராக! பின்னர், மனிதர்களில் எவரையேனும் நிச்சயமாக நீர் கண்டால், நான் அர்ரஹ்மானுக்கு நோன்பை நேர்ச்சை செய்திருக்கின்றேன்; ஆகவே, இன்றையத்தினம் எந்த மனிதருடனும் நான் பேசவே மாட்டேன் என்று (சைகை மூலம்) கூறிவிடுவீராக” (என்றும் கூறினார்)
Saheeh International
So eat and drink and be contented. And if you see from among humanity anyone, say, 'Indeed, I have vowed to the Most Merciful abstention, so I will not speak today to [any] man.'"
فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ ؕ قَالُوْا یٰمَرْیَمُ لَقَدْ جِئْتِ شَیْـًٔا فَرِیًّا ۟
فَاَتَتْஅவர் வந்தார்بِهٖஅதைக் கொண்டுقَوْمَهَاதனது மக்களிடம்تَحْمِلُهٗ‌ؕஅதைச் சுமந்தவராகقَالُوْاஅவர்கள் கூறினார்கள்يٰمَرْيَمُமர்யமே!لَقَدْ جِئْتِநீ செய்து விட்டாய்شَيْـٴًـــاஒரு காரியத்தைفَرِيًّا‏பெரிய
Fப அதத் Bபிஹீ கவ்மஹா தஹ்மிலுஹூ காலூ யா மர்யமூ லகத் ஜி'தி ஷய்'அன் Fபரிய்யா
முஹம்மது ஜான்
பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்: “மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!”
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், (மர்யம் தான் பெற்ற) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தன் மக்களிடம் வரவே, அவர்கள் (இவரை நோக்கி) ‘‘மர்யமே! நிச்சயமாக நீ மகா கெட்ட காரியத்தைச் செய்து விட்டாய்.
IFT
பிறகு, அவர் அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினர்: “மர்யமே! நீ ஒரு பெரும் பாவச்செயலைச் செய்து விட்டாயே...!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அக்குழந்தையைப் பிரசவித்த) பின்னர், அவர் (மர்யம்) அதைச் சுமந்து கொண்டு தன் சமூகத்தாரிடம் வந்தார், அவர்கள் (இவரை நோக்கி) “மர்யமே! நிச்சயமாக மறுக்கப்பட்ட (இழிவான ஒரு பெருங்)காரியத்தை நீர் கொண்டு வந்து விட்டீர்” என்று கூறினார்கள்.
Saheeh International
Then she brought him to her people, carrying him. They said, "O Mary, you have certainly done a thing unprecedented.
یٰۤاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَبُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِیًّا ۟ۖۚ
يٰۤـاُخْتَசகோதரியேهٰرُوْنَஹாரூனுடையمَا كَانَஇருக்கவில்லைاَ بُوْكِஉமது தந்தைامْرَاَ سَوْءٍகெட்டவராகوَّمَا كَانَتْஇருக்கவில்லைاُمُّكِஉமது தாயும்بَغِيًّا‌ ۖ‌ ۚ‏நடத்தைகெட்டவளாக
யா உக்த ஹாரூன மா கான அBபூகிம்ர'அ ஸவ்'இ(ன்)வ் வமா கானத் உம்முகி Bபகிய்யா
முஹம்மது ஜான்
“ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை” (என்று பழித்துக் கூறினார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
ஹாரூனுடைய சகோதரியே! உன் தந்தை கெட்டவராக இருக்கவில்லை(யே); உன் தாயும் நடத்தைக் கெட்டவளாக இருக்கவில்லையே!'' என்று கூறினார்கள்.
IFT
ஹாரூனின் சகோதரியே! உன் தந்தை கெட்ட மனிதராய் இருக்கவில்லை; உன் தாயும் தீய நடத்தையுடையவளாய் இருக்கவில்லை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஹாரூனுடைய சகோதரியே! உன் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை(யே) உன் தாயும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லை” என்று (நிந்தித்துக்) கூறினார்கள்.
Saheeh International
O sister [i.e., descendant] of Aaron, your father was not a man of evil, nor was your mother unchaste."
فَاَشَارَتْ اِلَیْهِ ؕ قَالُوْا كَیْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِی الْمَهْدِ صَبِیًّا ۟
فَاَشَارَتْஜாடை காண்பித்தார்اِلَيْهِ‌ ؕஅதன் பக்கம்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்كَيْفَஎப்படிنُـكَلِّمُநாங்கள் பேசுவோம்مَنْ كَانَஇருக்கின்றவரிடம்فِى الْمَهْدِமடியில்صَبِيًّا‏குழந்தையாக
Fப அஷாரத் இலய்ஹ்; காலூ கய்Fப னுகல்லிமு மன் கான Fபில் மஹ்தி ஸBபிய்யா
முஹம்மது ஜான்
(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கவர், இதைப் பற்றித் தன் குழந்தையிடம் கேட்கும்படி) அதன் பக்கம் (கையை) ஜாடை காண்பித்தார். அதற்கவர்கள் ‘‘மடியிலிருக்கக்கூடிய சிறு குழந்தையிடம் நாங்கள் எப்படி பேசுவோம்'' என்று கூறினார்கள்.
IFT
அப்போது, மர்யம் குழந்தையின் பக்கம் சைக்கினை செய்தார். அதற்கு மக்கள் கேட்டார்கள்: “தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் நாங்கள் எப்படிப் பேசுவது?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இதைப்பற்றித் தன் குழந்தையிடமே கேட்குமாறு மர்யமாகிய) அவர் அதன் பக்கம் சுட்டிக் காண்பித்தார், அ(தற்க)வர்கள், “மடியில் குழந்தையாக இருப்பவரிடம் நாங்கள் எவ்வாறு பேசுவோம்? என்று கூறினார்கள்.
Saheeh International
So she pointed to him. They said, "How can we speak to one who is in the cradle a child?"
قَالَ اِنِّیْ عَبْدُ اللّٰهِ ؕ۫ اٰتٰىنِیَ الْكِتٰبَ وَجَعَلَنِیْ نَبِیًّا ۟ۙ
قَالَஅவர் கூறினார்اِنِّىْநிச்சயமாக நான்عَبْدُஅடிமைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்اٰتٰٮنِىَஎனக்குக்கொடுப்பான்الْكِتٰبَவேதத்தைوَجَعَلَنِىْஎன்னை ஆக்குவான்نَبِيًّا ۙ‏நபியாக
கால இன்னீ 'அBப்துல்லாஹி ஆதானியல் கிதாBப வ ஜ'அலனீ னBபிய்யா
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(இதைச் செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை நபியாகவும் ஆக்குவான்.
IFT
உடனே, குழந்தை கூறிற்று: “நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதம் அருளினான்; என்னைத் தூதராகவும் ஆக்கினான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அப்பொழுது அவர்களிடம்) “நிச்சயமாக நான், அல்லாஹ்வுடைய அடியான், அவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து நபியாகவும் என்னை அவன் ஆக்கி இருக்கிறான்” என்று (அக்குழந்தை) கூறியது.
Saheeh International
[Jesus] said, "Indeed, I am the servant of Allah. He has given me the Scripture and made me a prophet.
وَّجَعَلَنِیْ مُبٰرَكًا اَیْنَ مَا كُنْتُ ۪ وَاَوْصٰنِیْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَیًّا ۪۟ۖ
وَّجَعَلَنِىْஇன்னும் அவன் என்னை ஆக்குவான்مُبٰـرَكًاஅருள்மிக்கவனாகاَيْنَ مَا كُنْتُநான் எங்கிருந்தாலும்وَاَوْصٰنِىْஎனக்கு கட்டளையிட்டுள்ளான்بِالصَّلٰوةِதொழுகையைக் கொண்டும்وَالزَّكٰوةِஸகாத்தைக் கொண்டும்مَا دُمْتُநான்இருக்கின்றவரைحَيًّا ۖ ‏உயிருள்ளவனாக
வ ஜ'அலனீ முBபாரகன் அய்ன மா குன்து வ அவ்ஸானீ Bபிஸ் ஸலாதி வZஜ் Zஜகாதி மா தும்து ஹய்யா
முஹம்மது ஜான்
“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும்வரை தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான்.
IFT
பெரும் பாக்கியமுடையவனாயும் ஆக்கினான் நான் எங்கிருந்தாலும் சரியே! தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறும் அவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றான், நான் உயிரோடு இருக்கும் காலம் வரை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நான் எங்கிருந்த போதிலும், அவன் என்னை (மிக்க) பரக்கத்துச் செய்யப்பட்டவனாகவும் ஆக்கியிருக்கிறான், நான் ஜீவித்திருக்கும் காலமெல்லாம் தொழுகையை (நிறைவேற்றுவது)க் கொண்டும், ‘ஜகாத்தைக் (கொடுத்து வருவது) கொண்டும் அவன் எனக்கு உபதேசம் செய்திருக்கிறான்.
Saheeh International
And He has made me blessed wherever I am and has enjoined upon me prayer and zakah as long as I remain alive
وَّبَرًّا بِوَالِدَتِیْ ؗ وَلَمْ یَجْعَلْنِیْ جَبَّارًا شَقِیًّا ۟
وَّبَرًّۢاநன்மைசெய்பவனாகبِوَالِدَتِىْஎன் தாய்க்குوَلَمْ يَجْعَلْنِىْஇன்னும் அவன் என்னை ஆக்கவில்லைجَبَّارًاபெருமையுடையவனாகشَقِيًّا‏தீயவனாக
வ Bபர்ரம் Bபிவாலிததீ வ லம் யஜ்'அல்னீ ஜBப்Bபாரன் ஷகிய்யா
முஹம்மது ஜான்
“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
என் தாய்க்கு நான் நன்றி செய்யும்படியாகவும் (எனக்கு உபதேசித்து) நான் முரடனாக வழி கெட்டவனாக ஆகாதபடியும் செய்வான்.
IFT
மேலும், என் தாயின் கடமையை நிறைவேற்றுபவனாயும் என்னை ஆக்கினான். மேலும், முரடனாகவும், துர்ப்பாக்கியமுடையவனாகவும் என்னை ஆக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இன்னும், என்னுடைய தாயாருக்கு நான் நன்றி செய்பவனாகவும் (என்னை ஆக்கினான்.) பெருமைக்காரனாக(வோ), துர்ப்பாக்கியமுள்ளவனாக(வோ) அவன் என்னை ஆக்கவில்லை.
Saheeh International
And [made me] dutiful to my mother, and He has not made me a wretched tyrant.
وَالسَّلٰمُ عَلَیَّ یَوْمَ وُلِدْتُّ وَیَوْمَ اَمُوْتُ وَیَوْمَ اُبْعَثُ حَیًّا ۟
وَالسَّلٰمُஈடேற்றம் உண்டாகுகعَلَىَّஎனக்குيَوْمَநாளிலும்وُلِدْتُّநான் பிறந்தوَيَوْمَ اَمُوْتُநான் மரணிக்கின்றநாளிலும்وَيَوْمَ اُبْعَثُநான் எழுப்பப்படுகின்ற நாளிலும்حَيًّا‏உயிருள்ளவனாக
வஸ்ஸலாமு 'அலய்ய யவ்ம வுலித்து வ யவ்ம அமூது வ யவ்ம உBப்'அது ஹய்யா
முஹம்மது ஜான்
“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.
அப்துல் ஹமீது பாகவி
நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிருள்ளவராக எழுப்பப்படும் நாளிலும், என்மீது ஸலாம் உண்டாகுக!'' (என்றும் அக்குழந்தை கூறியது).
IFT
என் மீது சாந்தி உண்டாகும் நான் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், உயிரோடு மீண்டும் எழுப்பப்படும் நாளிலும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், (மறுமையில்) நான் உயிர்பெற்றவனாக எழுப்பப்படும் நாளிலும், (அல்லாஹ்வின்) சாந்தி என் மீது உண்டாவதாக” (என்றும் கூறியது.)
Saheeh International
And peace is on me the day I was born and the day I will die and the day I am raised alive."
ذٰلِكَ عِیْسَی ابْنُ مَرْیَمَ ۚ قَوْلَ الْحَقِّ الَّذِیْ فِیْهِ یَمْتَرُوْنَ ۟
ذٰ لِكَஇவர்தான்عِيْسَىஈஸாابْنُமகன்مَرْيَمَ ۚமர்யமுடையقَوْلَகூறுங்கள்الْحَـقِّஉண்மையானகூற்றைالَّذِىْஎதுفِيْهِஇதில்தான்يَمْتَرُوْنَ‏அவர்கள் தர்க்கிக்கின்றனர்
தாலிக 'ஈஸBப்-னு மர்யம; கவ்லல் ஹக்கில் லதீ Fபீஹி யம்தரூன்
முஹம்மது ஜான்
இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).
அப்துல் ஹமீது பாகவி
இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா. அவரைப் பற்றி (மக்கள் வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் உண்மையான விஷயம் இதுதான்.
IFT
இவர்தான் மர்யமின் குமாரர் ஈஸா! இதுதான் இவரைக் குறித்து மக்கள் ஐயம் கொண்டிருக்கும் விஷயத்தில் உண்மையான கூற்றாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா (ஆவார்), எதில் அவர்கள் (சந்தேகித்து) தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அது பற்றிய உண்மையான சொல் இதுதான்.
Saheeh International
That is Jesus, the son of Mary - the word of truth about which they are in dispute.
مَا كَانَ لِلّٰهِ اَنْ یَّتَّخِذَ مِنْ وَّلَدٍ ۙ سُبْحٰنَهٗ ؕ اِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟ؕ
مَا كَانَதகுந்ததல்லلِلّٰهِஅல்லாஹ்விற்குاَنْ يَّتَّخِذَஅவன் எடுத்துக் கொள்வதுمِنْ وَّلَدٍ‌ۙகுழந்தையைسُبْحٰنَهٗ‌ؕஅவன் மகா பரிசுத்தமானவன்اِذَا قَضٰٓىஅவன் முடிவு செய்தால்اَمْرًاஒரு காரியத்தைفَاِنَّمَا يَقُوْلُஅவன் கூறுவதெல்லாம்لَهٗஅதற்குكُنْஆகுفَيَكُوْنُؕ‏அது ஆகிவிடும்
மா கான லில்லாஹி அய் யத்தகித மி(ன்)வ் வலதின் ஸுBப்ஹானஹ்; இதா களா அம்ரன் Fப இன்னமா யகூலு லஹூ குன் Fப யகூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, ‘‘(அவர் இறைவனுமல்ல; இறைவனுடைய பிள்ளையுமல்ல. ஏனென்றால்) தனக்குச் சந்ததி எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்கு (ஒரு சிறிதும்) தகுதியல்ல. அவன் மிகப் பரிசுத்தமானவன். எதையும் படைக்கக் கருதினால் அதை ‘ஆகுக!' என அவன் கூறுவதுதான் (தாமதம்). உடனே அது ஆகிவிடும்.
IFT
எவரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வின் நியதியல்ல! அவன் புனிதமானவன்; அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்தால் “ஆகிவிடு” என்றுதான் ஆணையிடுகின்றான்; உடனே அது ஆகிவிடுகின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்விற்கு – எந்த ஒரு புதல்வனையும் - அவன் எடுத்துக் கொள்ள வேண்டியது (அவசியம்) இல்லை, அவன் மிகப் பரிசுத்தமானவன், அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால், அவன் அதற்குச் சொல்லுவதெல்லாம் “ஆகுக” என்பதுதான் (உடனே) அது ஆகிவிடும்.
Saheeh International
It is not [befitting] for Allah to take a son; exalted is He! When He decrees an affair, He only says to it, "Be," and it is.
وَاِنَّ اللّٰهَ رَبِّیْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
وَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்தான்رَبِّىْஎன் இறைவனும்وَرَبُّكُمْஉங்கள் இறைவனும்فَاعْبُدُوْهُ ؕஆகவே, அவனையே வணங்குங்கள்!هٰذَاஇதுதான்صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏நேரான பாதை
வ இன்னல் லாஹ ரBப்Bபீ வ ரBப்Bபுகும் FபஃBபுதூஹ்; ஹாதா ஸிராதும் முஸ்தகீம்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்” (என்று நபியே! நீர் கூறும்).
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். (ஈஸாவல்ல; ஆகவே,) அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி'' (என்று நபியே! கூறுவீராக.)
IFT
மேலும் (ஈஸா கூறியிருந்தார்:) “திண்ணமாக, என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் அல்லாஹ்தான்! எனவே, அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள். இதுதான் நேரான வழியாகும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) “நிச்சயமாக அல்லாஹ்தான் என்னுடைய இரட்சகனும், உங்களின் இரட்சகனுமாவான், (ஈஸாவாகிய நானல்ல.) ஆகவே, அ(வன் ஒரு)வனையே நீங்கள் வணங்குங்கள், இதுதான் நேரான வழி (என்று ஈஸா கூறினார்.)
Saheeh International
[Jesus said], "And indeed, Allah is my Lord and your Lord, so worship Him. That is a straight path."
فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْ بَیْنِهِمْ ۚ فَوَیْلٌ لِّلَّذِیْنَ كَفَرُوْا مِنْ مَّشْهَدِ یَوْمٍ عَظِیْمٍ ۟
فَاخْتَلَفَஆனால் தர்க்கித்தனர்الْاَحْزَابُபல பிரிவினர்مِنْۢ بَيْنِهِمْ‌ۚதங்களுக்கு மத்தியில்فَوَيْلٌஆகவே கேடுதான்لِّـلَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்களுக்குمِنْ مَّشْهَدِஅவர் காணும்போதுيَوْمٍநாளைعَظِيْمٍ‏மகத்தான
Fபக்தலFபல் அஹ்ZஜாBபு மின் Bபய்னிஹிம் Fபவய்லுல் லில்லதீன கFபரூ மின் மஷ்ஹதி யவ்மின் 'அளீம்
முஹம்மது ஜான்
ஆனாலும், அவர்களிடையே இருந்த கூட்டத்தார் இது பற்றி(த் தங்களுக்குள்ளே) அபிப்பிராய பேதங் கொண்டனர். (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் வலுப்பமான நாளில் கேடுதான்!
அப்துல் ஹமீது பாகவி
ஆனால், அவர்களிலுள்ள ஒரு கூட்டத்தினர் (இதைப் பற்றி) தங்களுக்கு இடையே (வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே (நாம் கூறிய) இதை நிராகரிப்பவர்களுக்கு, அனைவரும் நம்மிடம் ஒன்று சேரக்கூடிய மகத்தான நாளில் கேடுதான்.
IFT
ஆயினும், அவர்களில் பல்வேறு பிரிவினர் தமக்குள் கருத்து மாறுபாடு கொள்ளலாயினர். எனவே, அந்த மாபெரும் மறுமை நாளினை அவர்கள் பார்க்கும்போது இறைவனை நிராகரித்தவர்களுக்கு பெரும் கேடுதான் விளையும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆனால், அவர்களிலுள்ள (பல்வேறு கருத்துக் கொண்ட) கூட்டத்தார்கள் (இதைப்பற்றி) தங்களுக்கிடையே கருத்து வேறுபாடு கொண்டனர், ஆகவே (நாம் கூறிய இதனை) நிராகரிப்போருக்கு மகத்தான (மறுமை) நாளின் (பெரும்) காட்சியை காணுமிடத்தில் கேடுதான் (உண்டு),
Saheeh International
Then the factions differed [concerning Jesus] from among them, so woe to those who disbelieved - from the scene of a tremendous Day.
اَسْمِعْ بِهِمْ وَاَبْصِرْ ۙ یَوْمَ یَاْتُوْنَنَا لٰكِنِ الظّٰلِمُوْنَ الْیَوْمَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
اَسْمِعْநன்றாக செவிசாய்ப்பார்கள்بِهِمْஅவர்கள்وَاَبْصِرْۙநன்றாக பார்ப்பார்கள்يَوْمَநாளில்يَاْتُوْنَنَا‌நம்மிடம் அவர்கள் வருகின்றلٰـكِنِஎனினும்الظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்الْيَوْمَஇன்றைய தினம்فِىْ ضَلٰلٍவழிகேட்டில்தான்مُّبِيْنٍ‏தெளிவான
அஸ்மிஃ Bபிஹிம் வ அBப்ஸிர் யவ்ம ய'தூனனா லாகினிள் ளாலிமூனல் யவ்ம Fபீ ளலாலின் முBபீன்
முஹம்மது ஜான்
அவர்கள் நம்மிடத்தில் வரும் நாளில் எவ்வளவு தெளிவாகக் கேட்பார்கள், பார்ப்பார்கள்! எனினும் அந்த அக்கிரமக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இன்று இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இன்றைய தினம் இதை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோதிலும்) நம்மிடம் அவர்கள் வரும் நாளில் (நம் கட்டளைகளுக்கு) எவ்வளவோ நன்றாகச் செவிசாய்ப்பார்கள். (நம் வேதனைகளை) நன்றாகவே (தங்கள் கண்ணாலும்) காண்பார்கள். எனினும், அந்த அநியாயக்காரர்கள் இன்றைய தினம் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.
IFT
அவர்கள் நம்மிடம் வரும் நாளில் அவர்களுடைய காதுகள் நன்கு கேட்டுக்கொண்டிருக்கும்; கண்கள் நன்கு பார்த்துக் கொண்டிருக்கும். ஆயினும், இந்தக் கொடுமையாளர்கள் இன்று வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம்மிடம் அவர்கள் வரும் (மறுமை) நாளில் அவர்களைக் கேட்கச் செய்ததும், பார்க்கச் செய்ததும் எது? (நன்றாகக் கேட்கவும், பார்க்கவும் செய்வார்கள்) எனினும், அந்த அநியாயக்காரர்கள் இன்றையத்தினம் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்
Saheeh International
How [clearly] they will hear and see the Day they come to Us, but the wrongdoers today are in clear error.
وَاَنْذِرْهُمْ یَوْمَ الْحَسْرَةِ اِذْ قُضِیَ الْاَمْرُ ۘ وَهُمْ فِیْ غَفْلَةٍ وَّهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
وَاَنْذِرْهُمْஅவர்களை எச்சரிப்பீராகيَوْمَநாளை(ப் பற்றி)الْحَسْرَةِதுயரமானاِذْ قُضِىَ الْاَمْرُ‌ۘதீர்ப்பு முடிவு செய்யப்படும்போதுوَهُمْஅவர்கள் இருக்கின்றனர்فِىْ غَفْلَةٍஅறியாமையில்وَّهُمْஅவர்கள்لَا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
வ அன்திர்ஹும் யவ்மல் ஹஸ்ரதி இத் குளியல் அம்ர்; வ ஹும் Fபீ கFப்லதி(ன்)வ் வ ஹும் லா யு'மினூன்
முஹம்மது ஜான்
மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! எனினும் அவர்கள் அதைப்பற்றிக் கலலைப்படாதவர்களாகவும், நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆனால், (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் மிக்க துயரமான நாளைப்பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. எனினும், (இன்றைய தினம்) அவர்கள் கவலையற்றிருக்கின்றனர். ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
IFT
(நபியே!) இம்மக்கள் கவனமின்றியும், நம்பிக்கை கொள்ளாதவர்களாயும் உள்ள இந்நிலையில், அந்த மறுமைநாளைக் குறித்து இவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! அந்நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும்போது வருந்துவதைத்தவிர வேறு வழியேதும் இராது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே! நியாயத் தீர்ப்பளிக்கப்பட்டு) காரியம் முடிக்கப் பட்டுவிடும்போது, மிக்க கைசேதமான (அந்த) நாளைப்பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! இன்னும், (இன்றையத் தினம்) அவர்கள் (அதுபற்றி) மறதியில் இருக்கிறார்கள், அவர்களோ விசுவாசங்கொள்ள மாட்டார்கள்.
Saheeh International
And warn them, [O Muhammad], of the Day of Regret, when the matter will be concluded; and [yet], they are in [a state of] heedlessness, and they do not believe.
اِنَّا نَحْنُ نَرِثُ الْاَرْضَ وَمَنْ عَلَیْهَا وَاِلَیْنَا یُرْجَعُوْنَ ۟۠
اِنَّا نَحْنُநிச்சயமாக நாம்தான்نَرِثُவாரிசாகுவோம்الْاَرْضَ وَمَنْ عَلَيْهَاபூமி/இன்னும் அதில் இருப்பவர்களுக்குوَاِلَـيْنَاஇன்னும் நம்மிடமேيُرْجَعُوْنَ‏அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்
இன்னா னஹ்னு னரிதுல் அர்ள வ மன் 'அலய்ஹா வ இலய்னா யுர்ஜ'ஊன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும் நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள்.  
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம்தான் பூமிக்கும், அதிலுள்ளவர்களுக்கும் சொந்தம் கொள்வோம். அவர்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.
IFT
இறுதியில், இப்பூமிக்கும் இதன் மீதுள்ள பொருள்கள் அனைத்திற்கும் நாமே வாரிசாகிவிடுவோம். மேலும், எல்லாரும் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாமே பூமியையும், அதன் மீதிருப்பவர்களையும் வாரிசாக்கிக் (அனந்தரமாக்கி)க் கொள்வோம், அவர்கள் (யாவரும்) நம்மிடமே மீட்கப்பட்டுக் கொண்டு வரப்படுவார்கள்.
Saheeh International
Indeed, it is We who will inherit the earth and whoever is on it, and to Us they will be returned.
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِبْرٰهِیْمَ ؕ۬ اِنَّهٗ كَانَ صِدِّیْقًا نَّبِیًّا ۟
وَاذْكُرْநினைவு கூர்வீராகفِى الْكِتٰبِஇவ்வேதத்தில்اِبْرٰهِيْمَ ۙஇப்றாஹீமைاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருக்கிறார்صِدِّيْقًاஉண்மையாளராகنَّبِيًّا‏நபியாக
வத்குர் Fபில் கிதாBபி இBப்ராஹீம்; இன்னஹூ கான ஸித்தீகன் னBபிய்யா
முஹம்மது ஜான்
(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப்பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் - நபியாகவும் - இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவ்வேதத்தில் இப்றாஹீமை பற்றியும் கூறுவீராக: நிச்சயமாக அவர் மிக்க உண்மையானவராக, நபியாக இருந்தார்.
IFT
மேலும், இவ்வேதத்தில் உள்ள இப்ராஹீமின் சரிதையை விவரிப்பீராக! திண்ணமாக, அவர் வாய்மை உள்ளவராகவும், நபியாகவும் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) இவ்வேதத்தில், இப்றாஹீமைப் பற்றி நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராக, நபியாக இருந்தார்.
Saheeh International
And mention in the Book [the story of] Abraham. Indeed, he was a man of truth and a prophet.
اِذْ قَالَ لِاَبِیْهِ یٰۤاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا یَسْمَعُ وَلَا یُبْصِرُ وَلَا یُغْنِیْ عَنْكَ شَیْـًٔا ۟
اِذْ قَالَ(அந்த) சமயத்தை கூறினார்لِاَبِيْهِதனது தந்தைக்குيٰۤـاَبَتِஎன் தந்தையேلِمَ تَعْبُدُஏன் வணங்குகிறீர்?مَا لَا يَسْمَعُகேட்காதவற்றைوَلَا يُبْصِرُஇன்னும் பார்க்காதவற்றைوَ لَا يُغْنِىْஇன்னும் தடுக்காதவற்றைعَنْكَஉம்மை விட்டுشَيْــٴًـــا‏எதையும்
இத் கால லி அBபீஹி யா அBபதி லிம தஃBபுது மா லா யஸ்ம'உ வலா யுBப்ஸிரு வலா யுக்னீ 'அன்க ஷய்'ஆ
முஹம்மது ஜான்
“என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுக்கு எந்தத் தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே! பார்க்காத, கேட்காத, எந்த ஒரு தீங்கையும் உம்மை விட்டு தடைசெய்யாதவற்றை ஏன் வணங்குகிறீர்?'' என்று கேட்டார்.
IFT
(சற்று அவர்களுக்குப் பின்வரும் சந்தர்ப்பத்தை நினைவூட்டும்:) அப்போது அவர் தம் தந்தையிடம் கூறினார்: “என் அன்புத் தந்தையே! கேட்கவோ, பார்க்கவோ முடியாத, உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவோ இயலாதவற்றை நீங்கள் ஏன் வணங்குகின்றீர்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் தன் தந்தையிடம், “என் தந்தையே! எதையும் செவியேற்காத மற்றும் (எதையும்) பார்க்காத (நன்மையை ஈர்த்தும், தீமையைத் தடுத்தும்) உம்மைவிட்டும் எதையும் தடுக்காததை நீர் ஏன் வணங்குகிறீர்? என்று கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக” அப்போது)
Saheeh International
[Mention] when he said to his father, "O my father, why do you worship that which does not hear and does not see and will not benefit you at all?
یٰۤاَبَتِ اِنِّیْ قَدْ جَآءَنِیْ مِنَ الْعِلْمِ مَا لَمْ یَاْتِكَ فَاتَّبِعْنِیْۤ اَهْدِكَ صِرَاطًا سَوِیًّا ۟
يٰۤـاَبَتِஎன் தந்தையேاِنِّىْநிச்சயமாக நான்قَدْ جَآءَنِىْஎனக்கு வந்திருக்கிறதுمِنَ الْعِلْمِகல்வியில்مَا لَمْ يَاْتِكَஉமக்கு வரவில்லைفَاتَّبِعْنِىْۤஆகவே, என்னைப் பின்பற்றுவீராகاَهْدِكَநான் உமக்கு வழிகாட்டுவேன்صِرَاطًاபாதையைسَوِيًّا‏நேரான
யா அBபதி இன்னீ கத் ஜா'அனீ மினல் 'இல்மி மா லம் ய'திக Fபத்தBபி'னீ அஹ்திக ஸிராதன் ஸவிய்யா
முஹம்மது ஜான்
“என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது; ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, ‘‘என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி ஞானம் (என் இறைவன் அருளால்) எனக்கு கிடைத்துள்ளது. என்னைப் பின்பற்றுவீராக. நான் உம்மை நேரான வழியில் நடத்துவேன்.
IFT
என் தந்தையே! உங்களுக்குக் கிடைக்காத ஒரு ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே, என்னைப் பின்பற்றுவீர்களாக! நான் உங்களுக்கு நேரிய வழியைக் காண்பிப்பேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என் தந்தையே! நிச்சயமாக நான் - என்னிடம் அறிவிலிருந்து உமக்கு வந்திராதது திட்டமாக வந்திருக்கிறது, ஆகவே நீர் என்னைப் பின்பற்றுவீராக! (அப்பொழுது) நான் உமக்கு செவ்வையான வழியைக் காட்டுவேன் (என்றும்),
Saheeh International
O my father, indeed there has come to me of knowledge that which has not come to you, so follow me; I will guide you to an even path.
یٰۤاَبَتِ لَا تَعْبُدِ الشَّیْطٰنَ ؕ اِنَّ الشَّیْطٰنَ كَانَ لِلرَّحْمٰنِ عَصِیًّا ۟
يٰۤـاَبَتِஎன் தந்தையேلَا تَعْبُدِவணங்காதீர்الشَّيْطٰنَ‌ ؕஷைத்தானைاِنَّநிச்சயமாகالشَّيْطٰنَஷைத்தான்كَانَஇருக்கிறான்لِلرَّحْمٰنِரஹ்மானுக்குعَصِيًّا‏மாறுசெய்பவனாக
யா அBபதி லா தஃBபுதிஷ் ஷய்தான்; இன்னஷ் ஷய்தான கான லிர் ரஹ்மானி 'அஸிய்யா
முஹம்மது ஜான்
“என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான், அர்ரஹ்மானுக்கு (அருள் மிக்க நாயனுக்கு) மாறு செய்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர். நிச்சயமாக ஷைத்தான் ரஹ்மானுக்கு மாறு செய்பவனாக இருக்கிறான்.
IFT
என் தந்தையே! நீங்கள் ஷைத்தானுக்கு அடிபணியாதீர்கள்; திண்ணமாக, ஷைத்தான் கருணைமிக்க இறைவனின் கட்டளைக்கு மாறு செய்பவன் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என் தந்தையே ஷைத்தானை நீர் வணங்காதீர், நிச்சயமாக ஷைத்தான் மிகக் கிருபையுடையோ(னாகிய ரஹ்மா)னுக்கு மாறு செய்பவனாக இருக்கிறான் (என்றும்),
Saheeh International
O my father, do not worship [i.e., obey] Satan. Indeed Satan has ever been, to the Most Merciful, disobedient.
یٰۤاَبَتِ اِنِّیْۤ اَخَافُ اَنْ یَّمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمٰنِ فَتَكُوْنَ لِلشَّیْطٰنِ وَلِیًّا ۟
يٰۤاَبَتِஎன் தந்தையேاِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُநான் பயப்படுகிறேன்اَنْ يَّمَسَّكَஉம்மைவந்தடைந்தால்عَذَابٌஒரு வேதனைمِّنَஇருந்துالرَّحْمٰنِபேரருளாளன்فَتَكُوْنَநீர் ஆகிவிடுவீர்لِلشَّيْطٰنِஷைத்தானுக்குوَلِيًّا‏நண்பராக
யா அBபதி இன்னீ அகாFபு அய் யமஸ்ஸக 'அதாBபும் மினர் ரஹ்மானி Fபதகூன லிஷ் ஷய்தானி வலிய்யா
முஹம்மது ஜான்
“என் அருமைத் தந்தையே! நிச்சயமாக அர்ரஹ்மானிடமிருந்துள்ள வேதனை வந்து உங்களைத் தொட்டு, நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி விடுவதைப் பற்றி நான் அஞ்சுகிறேன்” (என்றார்).
அப்துல் ஹமீது பாகவி
என் தந்தையே! ரஹ்மானுடைய வேதனை உம்மை பிடித்துக் கொள்ளுமோ என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன். (ரஹ்மானுக்கு மாறு செய்தால்) ஷைத்தானுக்கு நண்பனாகிவிடுவீர்'' (என்று கூறினார்).
IFT
என் தந்தையே! கருணைமிக்க இறைவனின் தண்டனைக்கு நீங்கள் இலக்காகி விடுவீர்களோ; மேலும் ஷைத்தானின் தோழனாகி விடுவீர்களோ என்று நான் அஞ்சுகின்றேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என் தந்தையே! மிகக் கிருபையுடையவனிலிருந்து வேதனை உம்மைப் பிடித்து (அதனால்) ஷைத்தானுக்கு நீர் சினேகிதராகிவிடுவதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” (என்றும் கூறியபோது)
Saheeh International
O my father, indeed I fear that there will touch you a punishment from the Most Merciful so you would be to Satan a companion [in Hellfire]."
قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِیْ یٰۤاِبْرٰهِیْمُ ۚ لَىِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ وَاهْجُرْنِیْ مَلِیًّا ۟
قَالَகூறினார்اَرَاغِبٌநீ வெறுக்கிறாயா?اَنْتَநீعَنْ اٰلِهَتِىْஎன் தெய்வங்களைيٰۤاِبْرٰهِيْمُ‌ۚஇப்றாஹீமேلَٮِٕنْ لَّمْ تَنْتَهِநீர் விலகவில்லை என்றால்لَاَرْجُمَنَّكَ‌நிச்சயமாக நான் உன்னை கடுமையாக ஏசுவேன்وَاهْجُرْنِىْஇன்னும் என்னை விட்டு விலகிவிடுمَلِيًّا‏பாதுகாப்புப் பெற்றவராக
கால அராகிBபுன் அன்த 'அன் ஆலிஹதீ யா இBப்ராஹீமு ல 'இல் லம் தன்தஹி ல அர்ஜுமன்னக வஹ்ஜுர்னீ மலிய்யா
முஹம்மது ஜான்
(அதற்கு அவர்) “இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘இப்றாஹீமே! நீ என் தெய்வங்களைப் புறக்கணித்து விட்டீரா? நீ இதிலிருந்து விலகிக் கொள்ளாவிடில், கல்லெறிந்து உன்னைக் கொன்று விடுவேன்; (இனி) நீ எப்பொழுதுமே என்னைவிட்டு விலகி நில்லும்'' என்று கூறினார்.
IFT
அதற்கு அவருடைய தந்தை கூறினார்: “இப்ராஹீமே! நீ என்னுடைய தெய்வங்களை நிராகரித்து விட்டாயா? இதனை நீ தவிர்த்துக் கொள்ளாவிடில் நிச்சயம் உன்னை நான் கல்லால் அடிப்பேன்; நீ என்றென்றும் என்னை விட்டுப் பிரிந்து போய்விடு!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) அவர் தந்தை, “இப்றாஹீமே! நீர் என்னுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களைப் புறக்கணிக்கின்றீரா? நீர் இவ்வெண்ணத்திலிருந்து விலகிக் கொள்ளாவிடில் உம்மைக் கல்லால் எறிந்து கொல்வேன், (இனி) நீர் என்னை விட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்று கூறினார்.
Saheeh International
[His father] said, "Have you no desire for my gods, O Abraham? If you do not desist, I will surely stone you, so avoid me a prolonged time."
قَالَ سَلٰمٌ عَلَیْكَ ۚ سَاَسْتَغْفِرُ لَكَ رَبِّیْ ؕ اِنَّهٗ كَانَ بِیْ حَفِیًّا ۟
قَالَகூறினார்سَلٰمٌபாதுகாப்பு உண்டாகுகعَلَيْكَ‌ۚஉமக்குسَاَسْتَغْفِرُபாவமன்னிப்புக் கோருவேன்لَـكَஉமக்காகرَبِّىْؕஎன் இறைவனிடம்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கின்றான்بِىْஎன் மீதுحَفِيًّا‏அருளுடையவனாக
கால ஸலாமுன் 'அலய்க ஸ அஸ்தக்Fபிரு லக ரBப்Bபீ இன்னஹூ கான Bபீ ஹFபிய்யா
முஹம்மது ஜான்
(அதற்கு இப்ராஹீம்) “உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (இப்றாஹீம், இதோ நான் செல்கிறேன்) ‘‘உம்மீது ஸலாம் உண்டாவதாக! பின்னர் நான் உமக்காக என் இறைவனிடத்தில் மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக என் இறைவன் என் மீது மிக்க இரக்கமுடையவனாக இருக்கிறான்'' என்று கூறினார்.
IFT
அதற்கு இப்ராஹீம் கூறினார்: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! உங்களை மன்னித்தருளுமாறு என் இறைவனிடம் நான் இறைஞ்சுவேன். நிச்சயமாக, என் இறைவன் என் மீது மிகவும் கிருபையுள்ளவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு (இப்றாஹீம்) “உம்மீது சாந்தி உண்டாவதாக! (பின்னர்) நான் உமக்காக என் இரட்சகனிடத்தில் பாவமன்னிப்புக் கோருவேன், நிச்சயமாக அவன் என்னுடன் இரக்கமுடையோனாக இருக்கிறான்” என்று கூறினார்.
Saheeh International
[Abraham] said, "Peace [i.e., safety] will be upon you. I will ask forgiveness for you of my Lord. Indeed, He is ever gracious to me.
وَاَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَاَدْعُوْا رَبِّیْ ۖؗ عَسٰۤی اَلَّاۤ اَكُوْنَ بِدُعَآءِ رَبِّیْ شَقِیًّا ۟
وَ اَعْتَزِلُـكُمْஇன்னும் உங்களை விட்டு விலகி விடுகின்றேன்وَمَا تَدْعُوْنَஇன்னும் நீங்கள் வணங்குகின்றவற்றைمِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிوَاَدْعُوْاநான் பிரார்த்திப்பேன்رَبِّىْ‌ ۖ என் இறைவனிடம்عَسٰٓى اَلَّاۤ اَكُوْنَஆகாமல் இருப்பேன்بِدُعَآءِபிரார்த்திப்பதில்رَبِّىْஎன் இறைவனிடம்شَقِيًّا‏நம்பிக்கை அற்றவனாக
வ அஃதZஜிலுகும் வமா தத்'ஊன மின் தூனில் லாஹி வ அத்'ஊ ரBப்Bபீ 'அஸா அல்லா அகூன Bபிது'ஆ'இ ரBப்Bபீ ஷகிய்யா
முஹம்மது ஜான்
நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்; மேலும் நான் என் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்; என் இறைவனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் துர்ப்பாக்கியவனாகாமல் இருக்கப் போதும்” (என்றார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘உங்களை விட்டும் அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் (தெய்வமென) அழைப்பவற்றை விட்டும் நான் விலகிக்கொள்கிறேன். என் இறைவனையே நான் (வணங்கி) பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன். என் இறைவனிடம் நான் செய்யும் பிரார்த்தனைகள் எனக்குத் தடுக்கப்படாதிருக்கும் என்று நான் நம்புகிறேன்'' (என்றும் கூறினார்.)
IFT
மேலும், உங்களைவிட்டும், அல்லாஹ்வை அன்றி, நீங்கள் பிரார்த்தித்து வருகின்ற தெய்வங்களை விட்டும் நான் ஒதுங்கிக் கொள்கின்றேன்; நான் என் இறைவனையே பிரார்த்திக்கின்றேன். நான் என் இறைவனைப் பிரார்த்தித்து ஏமாந்து போகமாட்டேன் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களையும், அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வமென) அழைப்பவைகளையும் விட்டு நான் விலகிக் கொள்கிறேன்; என் இரட்சகனையே நான் பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன்; என் இரட்சகனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் துர்ப்பாக்கியமுடையவனாக ஆகாமல் இருக்கப் போதும் (என்றும் கூறினார்.)
Saheeh International
And I will leave you and those you invoke other than Allah and will invoke my Lord. I expect that I will not be in invocation to my Lord unhappy [i.e., disappointed]."
فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا یَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ وَكُلًّا جَعَلْنَا نَبِیًّا ۟
فَلَمَّا اعْتَزَلَهُمْஅவர் அவர்களை விட்டு விலகியபோதுوَمَا يَعْبُدُوْنَஇன்னும் அவர்கள் வணங்கியதைمِنْ دُوْنِஅன்றிاللّٰهِ ۙஅல்லாஹ்வைوَهَبْنَاவழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَيَعْقُوْبَ‌ ؕஇன்னும் யஃகூபைوَكُلًّاஇன்னும் ஒவ்வொருவரையும்جَعَلْنَاஆக்கினோம்نَبِيًّا‏நபியாக
Fப லம் மஃதZஜலஹும் வமா யஃBபுதூன மின் தூனில் லாஹி வஹBப்னா லஹூ இஸ்-ஹாக வ யஃகூBப்; வ குல்லன் ஜ'அல்னா னBபிய்யா
முஹம்மது ஜான்
(இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் அவர் அவர்களை விட்டும் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டார். அதன் பின்னர் இஸ்ஹாக்கையும், யஅகூபையும் அவருக்கு(ச் சந்ததிகளாக) நாம் வழங்கினோம். அவர்கள் ஒவ்வொருவரையும் நபியாகவும் ஆக்கினோம்.
IFT
பிறகு, அம்மக்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கி வருகின்ற பிற தெய்வங்களையும் விட்டு அவர் ஒதுங்கிக் கொண்டபோது, நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் மற்றும் யஃகூப் போன்ற மக்களையும் வழங்கினோம். மேலும், அவர்கள் ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர், அவர்களையும், அல்லாஹ்வையுமன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் விட்டு விலகிக் கொண்டபோது இஸ்ஹாக்கையும் யஃகூபையும் அவருக்கு(ச் சந்ததிகளாக) நாம் அன்பளிப்பாக அளித்தோம், அவர்கள் ஒவ்வொருவரையும், நபியாக நாம் ஆக்கினோம்.
Saheeh International
So when he had left them and those they worshipped other than Allah, We gave him Isaac and Jacob, and each [of them] We made a prophet.
وَوَهَبْنَا لَهُمْ مِّنْ رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِیًّا ۟۠
وَوَهَبْنَاவழங்கினோம்لَهُمْஅவர்களுக்குمِّنْ رَّحْمَتِنَاநமது அருளிலிருந்துوَجَعَلْنَاஇன்னும் ஏற்படுத்தினோம்لَهُمْஅவர்களுக்குلِسَانَபுகழைصِدْقٍஉண்மையானعَلِيًّا‏உயர்வான
வ வஹBப்னா லஹும் மிர்ரஹ்மதினா வ ஜ'அல்னா லஹும் லிஸான ஸித்கின் 'அலிய்யா
முஹம்மது ஜான்
மேலும் நாம் அவர்களுக்கு நம் ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளையளித்தோம்; அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.  
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு நம் அருட்கொடையையும் அளித்தோம். உண்மையே பேசும்படியான மேலான நாவையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (பின் வருபவர்கள் ‘அலைஹிஸ் ஸலாம்' (அவர்மீது சாந்தி நிலவுக!) என்று எந்நாளும் அவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்யக்கூடிய உயர் பதவியையும் அவர்களுக்கு அளித்தோம்.)
IFT
மேலும், அவர்களுக்கு நம்முடைய அருட்கொடையிலிருந்து வழங்கினோம். உயர்ந்த, உண்மையான புகழையும் அவர்களுக்கு அளித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களுக்கு நம் அருளிலிருந்து அன்பளிப்பாகக் கொடுத்தோம், (எல்லாச் சமூகத்தாரிடத்தும்) உயர்வான நற்பெயரையும் நாம் அவர்களுக்கு ஆக்கினோம்.
Saheeh International
And We gave them of Our mercy, and We made for them a mention [i.e., reputation] of high honor.
وَاذْكُرْ فِی الْكِتٰبِ مُوْسٰۤی ؗ اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِیًّا ۟
وَاذْكُرْநினைவு கூர்வீராகفِى الْكِتٰبِஇவ்வேதத்தில்مُوْسٰٓى‌மூஸாவைاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருக்கிறார்مُخْلَصًاதேர்ந்தெடுக்கப்பட்டவராகوَّكَانَஇன்னும் இருக்கிறார்رَسُوْلًاதூதராகنَّبِيًّا‏நபியாக
வத்குர் Fபில் கிதாBபி மூஸா; இன்னஹூ கான முக்லஸ(ன்)வ் வ கான ரஸூலன் னBபிய்யா
முஹம்மது ஜான்
(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மாசில்லாத (தூயவராக) இருந்தார். அவர் ரஸூலாகவும் நபியாகவும் இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் கலப்பற்ற மனதுடையவராகவும் (நம்) தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
IFT
மேலும், மூஸாவைப் பற்றி இவ்வேதத்தில் உள்ளதைக் கூறுவீராக. நிச்சயமாக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தார்; தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இவ்வேதத்தில் மூஸாவைப்பற்றி (நபியே) நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தார், இன்னும், அவர் (நம்முடைய) தூதராக, நபியாக இருந்தார்,
Saheeh International
And mention in the Book, Moses. Indeed, he was chosen, and he was a messenger and a prophet.
وَنَادَیْنٰهُ مِنْ جَانِبِ الطُّوْرِ الْاَیْمَنِ وَقَرَّبْنٰهُ نَجِیًّا ۟
وَنَادَيْنٰهُஇன்னும் அவரை அழைத்தோம்مِنْ جَانِبِபக்கத்தில்الطُّوْرِமலைالْاَيْمَنِவலதுوَقَرَّبْنٰهُஅவரை நாம் நெருக்கமாக்கினோம்نَجِيًّا‏அவரை இரகசியம் பேசுகிறவராக
வ னாதய்னாஹு மின் ஜானிBபித் தூரில் அய்மனி வ கர்ரBப்னாஹு னஜிய்யா
முஹம்மது ஜான்
இன்னும், நாம் அவரை தூர் (ஸினாய்) மலையின் வலப்புறத்திலிருந்து கூப்பிட்டோம்; மேலும் இரகசியத்தில் பேச நாம் அவரை நம்மிடம் நெருங்கி வரச் செய்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
தூர் (ஸீனாய் என்னும் பாக்கியம் பெற்ற) மலையின் வலது பக்கத்திலிருந்து அவரை நாம் அழைத்தோம். ரகசியம் பேசுகிறவராக அவரை (நமக்கு) நெருக்கமாக்கினோம்.
IFT
மேலும், நாம் ‘தூர்’ மலையின் வலப்பக்கத்தில் இருந்து அவரை அழைத்தோம்; தனியே உரையாடுவதன் மூலம் நம்மிடம் நெருங்குவதற்கான வாய்ப்பை அவருக்கு அளித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் தூர்(ஸினாய்) மலையின் வலப் பக்கத்திலிருந்து அவரை நாம் கூப்பிட்டோம், இரகசியம் பேசுகிறவராக அவரை நாம் (நமக்கு) நெருக்கமாக்கியும் வைத்தோம்.
Saheeh International
And We called him from the side of the mount at [his] right and brought him near, confiding [to him].
وَوَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَاۤ اَخَاهُ هٰرُوْنَ نَبِیًّا ۟
وَ وَهَبْنَاஇன்னும் வழங்கினோம்لَهٗஅவருக்குمِنْ رَّحْمَتِنَاۤநமது அருளால்اَخَاهُஅவருடைய சகோதரர்هٰرُوْنَஹாரூனைنَبِيًّا‏நபியாக
வ வஹBப்னா லஹூ மிர் ரஹ்மதினா அகாஹு ஹாரூன னBபிய்யா
முஹம்மது ஜான்
மேலும், நம்முடைய ரஹ்மத்தில் நின்றும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நபியாக அவருக்கு நன்கொடையளித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
நம் கருணையினால் அவருடைய சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு வழங்கினோம்.
IFT
மேலும், நம் தயவினால் அவருடைய சகோதரர் ஹாரூனை ஒரு நபியாக நியமித்து அவருக்கு உதவியாளராக ஆக்கினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நம் அருளிலிருந்து அவருடைய சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தோம்.
Saheeh International
And We gave him out of Our mercy his brother Aaron as a prophet.
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِسْمٰعِیْلَ ؗ اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِیًّا ۟ۚ
وَاذْكُرْநினைவு கூர்வீராகفِى الْـكِتٰبِஇவ்வேதத்தில்اِسْمٰعِيْلَ‌இஸ்மாயீலைاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருக்கிறார்صَادِقَஉண்மையாளராகالْوَعْدِவாக்கில்وَكَانَஇன்னும் இருக்கிறார்رَسُوْلًاதூதராகنَّبِيًّا‌ ۚ‏நபியாக
வத்குர் Fபில் கிதாBபி இஸ்மா'ஈல்; இன்னஹூ கான ஸாதிகல் வஃதி வ கான ரஸூலன் னBபிய்யா
முஹம்மது ஜான்
(நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் உண்மையான வாக்குறுதி உடையவராகவும், (நம்) தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
IFT
(நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றி (நபியே!) நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையானவராக இருந்தார், இன்னும் அவர் (நம்முடைய) தூதராக நபியாக இருந்தார்.
Saheeh International
And mention in the Book, Ishmael. Indeed, he was true to his promise, and he was a messenger and a prophet.
وَكَانَ یَاْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ ۪ وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِیًّا ۟
وَ كَانَஇருந்தார்يَاْمُرُஏவுகின்றவராகاَهْلَهٗதனது குடும்பத்தினரைبِالصَّلٰوةِதொழுகையைக் கொண்டுوَالزَّكٰوةِஸகாத்தைக் கொண்டுوَكَانَஇருந்தார்عِنْدَ رَبِّهٖதன் இறைவனிடம்مَرْضِيًّا‏திருப்திக்குரியவராக
வ கான ய'முரு அஹ்லஹூ Bபிஸ் ஸலாதி வZஜ் Zஜகாதி வ கான 'இன்த ரBப்Bபிஹீ மர்ளிய்யா
முஹம்மது ஜான்
அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார்; தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
தொழுகையைக் கடைப்பிடிக்கும்படியும், ஜகாத்தும் கொடுத்து வரும்படியும் அவர் தன் குடும்பத்தினரை ஏவிக்கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார்.
IFT
மேலும், அவர் தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறு தம்முடைய குடும்பத்தாரைப் பணிப்பவராக இருந்தார்; மேலும், தம் இறைவனிடம் விரும்பத்தக்க மனிதராகவும் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர் தன் குடும்பத்தினரை, தொழுகையை (நிறைவேற்றுவது)க் கொண்டும், ஜகாத்தைக்(கொடுத்து வருவது) கொண்டும் ஏவுகிறவராக இருந்தார், அவர் தன் இரட்சகனிடத்தில் பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்.
Saheeh International
And he used to enjoin on his people prayer and zakah and was to his Lord pleasing [i.e., accepted by Him].
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِدْرِیْسَ ؗ اِنَّهٗ كَانَ صِدِّیْقًا نَّبِیًّا ۟ۗۙ
وَاذْكُرْநினைவு கூர்வீராகفِى الْكِتٰبِஇவ்வேதத்தில்اِدْرِيْسَ‌இத்ரீஸைاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருக்கிறார்صِدِّيْقًاஉண்மையாளராகنَّبِيًّا ۙ ‏நபியாக
வத்குர் Fபில் கிதாBபி இத்ரீஸ்; இன்னஹூ கான ஸித்தீகன் னBபிய்யா
முஹம்மது ஜான்
(நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இத்ரீஸைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் மிக்க சத்தியவானாகவும் நபியாகவும் இருந்தார்.
IFT
(நபியே!) இத்ரீஸைப் பற்றி இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! திண்ணமாக, அவர் ஒரு நேர்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இத்ரீஸைப் பற்றி (நபியே!) இவ்வேதத்தில் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராக (நம்முடைய) நபியாக இருந்தார்.
Saheeh International
And mention in the Book, Idrees. Indeed, he was a man of truth and a prophet.
وَّرَفَعْنٰهُ مَكَانًا عَلِیًّا ۟
وَّرَفَعْنٰهُஇன்னும் அவரை உயர்த்தினோம்مَكَانًاஇடத்திற்குعَلِيًّا‏உயர்ந்த
வ ரFபஃனாஹு மகானன் 'அலிய்யா
முஹம்மது ஜான்
மேலும், நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம்.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும் அவரை மிக்க மேலான இடத்திற்கு உயர்த்தி விட்டோம்.
IFT
மேலும், நாம் அவரை உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவரை மிக்க மேலான இடத்திற்கு நாம் உயர்த்திவிட்டோம்.
Saheeh International
And We raised him to a high station.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ مِنْ ذُرِّیَّةِ اٰدَمَ ۗ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؗ وَّمِنْ ذُرِّیَّةِ اِبْرٰهِیْمَ وَاِسْرَآءِیْلَ ؗ وَمِمَّنْ هَدَیْنَا وَاجْتَبَیْنَا ؕ اِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِیًّا ۟
اُولٰٓٮِٕكَஇவர்கள்தான்الَّذِيْنَஎவர்கள்اَنْعَمَஅருள் புரிந்திருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْஇவர்கள் மீதுمِّنَ النَّبِيّٖنَநபிமார்களில்مِنْ ذُرِّيَّةِசந்ததிகளில்اٰدَمَஆதமுடையوَمِمَّنْ حَمَلْنَاஇன்னும் நாம் ஏற்றியவர்களிலும்مَعَ نُوْحٍநூஹூடன்وَّمِنْ ذُرِّيَّةِசந்ததிகளிலும்اِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَاِسْرَآءِيْلَஇன்னும் இஸ்ராயீல்وَمِمَّنْ هَدَيْنَاநாம் நேர்வழிகாட்டிوَاجْتَبَيْنَا‌ ؕதேர்ந்தெடுத்தவர்கள்اِذَا تُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِمْஅவர்கள் மீதுاٰيٰتُவசனங்கள்الرَّحْمٰنِபேரருளாளனுடையخَرُّوْاவிழுந்து விடுவார்கள்سُجَّدًاசிரம்பணிந்தவர்களாகوَّبُكِيًّا ۩‏அழுதவர்களாக
உலா'இகல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன மின் துர்ரிய்யதி ஆதம வ மிம்மன் ஹமல்னா ம'அ னூஹி(ன்)வ் வ மின் துர்ரிய்யதி இBப்ராஹீம வ இஸ்ரா'ஈல வ மிம்மன் ஹதய்னா வஜ்த Bபய்னா; இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுர் ரஹ்மானி கர்ரூ ஸுஜ்ஜத(ன்)வ் வ Bபுகிய்யா
முஹம்மது ஜான்
இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, மேற்கூறப்பட்ட) இவர்கள் அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர். இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்றாஹீமுடைய சந்ததியிலும், இஸ்ராயீல் (என்னும் யஅகூப்)உடைய சந்ததியிலும் உள்ளவர்களாவர். மேலும் நாம் தேர்ந்தெடுத்து நேரான வழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள். அவர்கள் மீது ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் (அதற்குப் பயந்து) அழுதவர்களாக (இறைவனுக்குச்) சிரம் பணிந்து தொழுவார்கள்.
IFT
இவர்களோ, அல்லாஹ் தன் அருட்பேறுகளை வழங்கியுள்ள நபிமார்கள் ஆவர். இவர்கள் ஆதத்தின் வழித்தோன்றல்களிலிருந்தும், நூஹுடன் (கப்பலில்) நாம் ஏற்றியிருந்த மக்களின் வழித்தோன்றல்களிலிருந்தும் இப்ராஹீம் மற்றும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலிருந்தும் தோன்றியவர்களாவர். மேலும், நாம் நேர்வழி காட்டி, தேர்ந்தெடுத்துக் கொண்ட மக்களைச் சார்ந்தவர்களுமாவர். இவர்களின் நிலைமை எவ்வாறிருந்த தெனில் கருணைமிக்க இறைவனின் வசனங்கள் இவர்களிடம் ஓதிக்காட்டப்பட்டால், அழுதுகொண்டே ஸுஜூதில்* விழுந்துவிடுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மேற் கூறப்பட்ட) அவர்கள் எத்தகையோரென்றால், ஆதமுடைய சந்ததியிலுள்ள நபிமார்களிலிருந்தும், (நபி) நூஹ்வுடன் கப்பலில் நாம் ஏற்றிக் கொண்டவர்களின் சந்ததிகளிலிருந்தும், இப்றாஹீம் இஸ்ராயீலின் சந்ததியிலிருந்தும் நாம் நேர் வழியில் செலுத்தி நாம் தேர்ந்தெடுத்தவர்களிலுமிருந்து(ம் உள்ளோராவர்). அவர்களின் மீது அல்லாஹ் அருள் செய்து விட்டான், அவர்கள் மீது அர்ரஹ்மானுடைய வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால் (சிரம் பணிந்து) ஸுஜூது செய்தவர்களாக மற்றும் அழுதவர்களாக விழுந்து விடுவார்கள்.
Saheeh International
Those were the ones upon whom Allah bestowed favor from among the prophets of the descendants of Adam and of those We carried [in the ship] with Noah, and of the descendants of Abraham and Israel [i.e., Jacob], and of those whom We guided and chose. When the verses of the Most Merciful were recited to them, they fell in prostration and weeping.
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ یَلْقَوْنَ غَیًّا ۟ۙ
فَخَلَفَதோன்றினார்கள்مِنْۢ بَعْدِபின்هِمْஅவர்களுக்குخَلْفٌஒரு கூட்டம்اَضَاعُواபாழாக்கினர்الصَّلٰوةَதொழுகையைوَاتَّبَعُواஇன்னும் பின்பற்றினர்الشَّهَوٰتِ‌மன இச்சைகளைفَسَوْفَ يَلْقَوْنَஅவர்கள் சந்திப்பார்கள்غَيًّا ۙ‏கய்யை
FபகலFப மின் Bபஃதிஹிம் கல்Fபுன் அளா'உஸ் ஸலாத வத்தBப'உஷ் ஷஹவாதி Fபஸவ்Fப யல்கவ்ன கய்ய்யா
முஹம்மது ஜான்
ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டார்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே (அழிவையே) சந்திப்பார்கள்.
IFT
அவர்களுக்குப் பிறகு, சீர்கெட்ட மக்கள் அவர்களுடைய பிற்சந்ததிகளாகத் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். மன இச்சைகளைப் பின்பற்றினார்கள்! அத்தகையவர்கள் தங்கள் வழிகேட்டின் தீயவிளைவை விரைவில் சந்திப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்களுக்குப் பின்னர், (வழிகெட்ட) தீய பின்தோன்றல்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள், தொழுகையை (த் தொழாது) வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே, அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் சந்திப்பார்கள்.
Saheeh International
But there came after them successors [i.e., later generations] who neglected prayer and pursued desires; so they are going to meet evil -
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا یُظْلَمُوْنَ شَیْـًٔا ۟ۙ
اِلَّاதவிரمَنْ تَابَதிருந்தியவர்கள்وَاٰمَنَநம்பிக்கை கொண்டுوَعَمِلَஇன்னும் செய்தவரைصَالِحًـاநல்லதுفَاُولٰٓٮِٕكَஅவர்கள்يَدْخُلُوْنَநுழைவார்கள்الْجَـنَّةَசொர்க்கத்தில்وَلَا يُظْلَمُوْنَ شَيْــٴًـــا ۙ‏அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்
இல்லா மன் தாBப வ ஆமன வ 'அமில ஸாலிஹன் Fப உலா'இக யத்குலூனல் ஜன்னத வலா யுள்லமூன ஷய்'ஆ
முஹம்மது ஜான்
தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், அவர்களில் எவர்கள் (கைசேதப்பட்டு) பாவத்தில் இருந்து விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (அவர்கள் அடையவேண்டிய கூலியில்) ஒரு சிறிதும் (குறைக்கப்பட்டு) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
IFT
ஆயினும், எவர்கள் பாவமன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ, அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். மேலும், அவர்களுக்கு இம்மியளவும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆயினும்,) அவர்களில் எவர் (பச்சாதாபப்பட்டு) தவ்பாச் செய்து விசுவாசமுங் கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களோ அவர்களைத்தவிர, அத்தகையோர் சுவனத்தில் பிரவேசிப்பார்கள், இன்னும் அவர்கள் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
Saheeh International
Except those who repent, believe and do righteousness; for those will enter Paradise and will not be wronged at all.
جَنّٰتِ عَدْنِ لَّتِیْ وَعَدَ الرَّحْمٰنُ عِبَادَهٗ بِالْغَیْبِ ؕ اِنَّهٗ كَانَ وَعْدُهٗ مَاْتِیًّا ۟
جَنّٰتِசொர்க்கங்களில்عَدْنٍஅத்ன்اۨلَّتِىْஎதுوَعَدَவாக்களித்துள்ளான்الرَّحْمٰنُபேரருளாளன்عِبَادَهٗதன் அடியார்களுக்குبِالْغَيْبِ‌ ؕமறைவில்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கிறதுوَعْدُهٗஅவனுடைய வாக்குمَاْتِيًّا‏நிகழக்கூடியதாக
ஜன்னாதி 'அத்னினில் லதீ வ'அதர் ரஹ்மானு இBபாதஹூ Bபில்கய்Bப்; இன்னஹூ கான வஃதுஹூ ம'திய்யா
முஹம்மது ஜான்
அத்னு என்னும் அந்தச் சுவனபதிகளை அர்ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு - அவற்றை அவர்கள் காண முடியாத போதே - வாக்களித்தான்; நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறும்.
அப்துல் ஹமீது பாகவி
அது ‘அத்ன்' என்னும் என்றென்றும் நிலையான சொர்க்கங்களாகும். (அவை தற்சமயம்) மறைவாக இருந்தபோதிலும், அவற்றை ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு வாக்களித்திருக்கிறான். நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நடைபெற்றே தீரும்.
IFT
கருணைமிக்க இறைவன் தன்னுடைய அடியார்களுக்கு அவர்கள் காணாத நிலையில், அளித்துள்ள வாக்குறுதியான நிலையான சுவனபதிகள் அவர்களுக்கு இருக்கின்றன. நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறியே தீரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அத்னு” என்ற நிலையான சொர்க்கங்கள் (அவர்களுக்கு கூலியாகும்.) – அவை எத்தகையவையென்றால், ரஹ்மான் தன் (நல்) அடியார்களுக்கு (அவை) மறைவாக இருக்கும் நிலையில் வாக்களித்துள்ளான், நிச்சயமாக அவனுடைய வாக்கு வரக்கூடியதாகவே உள்ளது.
Saheeh International
[Therein are] gardens of perpetual residence which the Most Merciful has promised His servants in the unseen. Indeed, His promise has ever been eminent.
لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا اِلَّا سَلٰمًا ؕ وَلَهُمْ رِزْقُهُمْ فِیْهَا بُكْرَةً وَّعَشِیًّا ۟
لَّا يَسْمَعُوْنَசெவிமடுக்க மாட்டார்கள்فِيْهَاஅவற்றில்لَـغْوًاவீணானவற்றைاِلَّاஎனினும்سَلٰمًا‌ؕஸலாமைوَلَهُمْஇன்னும் அவர்களுக்குرِزْقُهُمْஅவர்களுடைய உணவுفِيْهَاஅவற்றில்بُكْرَةًகாலையிலும்وَّعَشِيًّا‏மாலையிலும்
லா யஸ்ம'ஊன Fபீஹா லக்வன் இல்லா ஸலாமா; வ லஹும் ரிZஜ்குஹும் Fபீஹா Bபுக்ரத(ன்)வ் வ 'அஷிய்யா
முஹம்மது ஜான்
ஸலாம் (சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே) தவிர அச்சுவனபதிகளில் அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள்; இன்னும் அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(அவற்றில்) ஸலாம் (என்ற முகமனைத்) தவிர வீணான வார்த்தைகளைச் செவியுற மாட்டார்கள். அங்கு அவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் (மிக்க மேலான) உணவு அளிக்கப்படும்.
IFT
அங்கு அவர்கள் எவ்வித வீணான விஷயத்தையும் செவியுறமாட்டார்கள். எதைச் செவியுற்றாலும் சரியானவற்றையே செவியுறுவார்கள். மேலும், அங்கு அவர்களுக்குரிய உணவு காலையிலும், மாலையிலும் (தொடர்ந்து) அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவற்றில் அவர்கள் ஸலாம் (எனும் சாந்தி) என்பதைத் தவிர (வார்த்தைகளால் வேறு) வீணானதைச் செவியேற்க மாட்டார்கள், அவற்றில் அவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் (மிக்க மேலான) உணவும் உண்டு.
Saheeh International
They will not hear therein any ill speech - only [greetings of] peace - and they will have their provision therein, morning and afternoon.
تِلْكَ الْجَنَّةُ الَّتِیْ نُوْرِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِیًّا ۟
تِلْكَஇந்தالْجَـنَّةُசொர்க்கம்الَّتِىْ نُوْرِثُவாரிசாக ஆக்குவோம்مِنْ عِبَادِنَاநமது அடியார்களில்مَنْஎவர்كَانَஇருக்கின்றார்تَقِيًّا‏இறையச்சமுடையவராக
தில்கல் ஜன்னதுல் லதீ னூரிது மின் 'இBபாதினா மன் கான தகிய்யா
முஹம்மது ஜான்
இத்தகைய சுவர்க்கத்திற்கு நம் அடியார்களில் தக்வா - பயபக்தி - உடையவர்களை நாம் வாரிசாக்கிவிடுவோம்.
அப்துல் ஹமீது பாகவி
இத்தகைய சொர்க்கத்திற்கு நம் அடியார்களில் இறையச்சமுடையவர்களை நாம் வாரிசாக்கி விடுவோம்.
IFT
இத்தகைய சுவனமாகும் அது! நம் அடியார்களில் எவர்கள் இறையச்சம் கொண்டு வாழ்கின்றார்களோ அவர்களையே இதற்கு வாரிசுகளாக்குவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்த சொர்க்கம் எத்தகையதென்றால் அடியார்களில் பயபக்தியுடையவர்களுக்கு (அதை) நாம் அனந்தரமாக்கி விடுவோம்.
Saheeh International
That is Paradise, which We give as inheritance to those of Our servants who were fearing of Allah.
وَمَا نَتَنَزَّلُ اِلَّا بِاَمْرِ رَبِّكَ ۚ لَهٗ مَا بَیْنَ اَیْدِیْنَا وَمَا خَلْفَنَا وَمَا بَیْنَ ذٰلِكَ ۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِیًّا ۟ۚ
وَمَا نَتَنَزَّلُஇறங்க மாட்டோம்اِلَّا بِاَمْرِஉத்தரவைக் கொண்டே தவிரرَبِّكَ‌ ۚஉமது இறைவனின்لَهٗஅவனுக்கே சொந்தம்مَا بَيْنَ اَيْدِيْنَاஎங்களுக்கு முன் இருப்பவையும்وَمَا خَلْفَنَاஎங்களுக்கு பின் இருப்பவையும்وَمَا بَيْنَ ذٰ لِكَ‌ ۚஅவற்றுக்கு மத்தியில் இருப்பவையும்وَمَا كَانَஇருக்கவில்லைرَبُّكَஉமது இறைவன்نَسِيًّا‌ ۚ‏மறதியாளனாக
வமா னதனZஜ்Zஜலு இல்லா Bபி அம்ரி ரBப்Bபிக லஹூ மா Bபய்ன அய்தீனா வமா கல்Fபனா வமா Bபய்ன தாலிக்; வமா கான ரBப்Bபுக னஸிய்யா
முஹம்மது ஜான்
(மலக்குகள் கூறுகிறார்கள்: நபியே!) “உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்; எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்கு பின்னிருப்பதும், இவ்விரண்டிற்குமிடையில் இருப்பதும் அவனுக்கே (சொந்தமாக) இருக்கின்றன; உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்.”
அப்துல் ஹமீது பாகவி
(வானவர்கள் கூறுகின்றனர்: நபியே!) உமது இறைவனின் உத்தரவின்றி நாம் இறங்குவதில்லை. நமக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இவ்விரண்டிற்கு மத்தியில் இருப்பவையும் அவனுக்கே சொந்தமானவை. இதில் (எதையும்) உமது இறைவன் மறப்பவனல்ல.
IFT
(நபியே!) “நாங்கள் உம் இறைவனின் உத்தரவின்றி இறங்குவதில்லை; எங்களுக்கு முன்னால் இருப்பவை, பின்னால் இருப்பவை மற்றும் இவற்றிற்கிடையேயுள்ளவை ஆகிய ஒவ்வொன்றுக்கும் அவனே உரிமையாளன் ஆவான். மேலும், உம் இறைவன் மறக்கக் கூடியவனல்லன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (ஜிப்ரீலானவர், நபியிடம்) உமதிரட்சகனின் கட்டளையைக் கொண்டல்லாது நாம் இறங்குவதில்லை, எங்களுக்கு முன்னிருப்பவைகளும், பின்னிருப்பவைகளும், இவ்விரண்டிற்கும் மத்தியிலிருப்பவைகளும், அவனுக்குச் சொந்தமானவைகளாக இருக்கின்றன.
Saheeh International
[Gabriel said], "And we [angels] descend not except by the order of your Lord. To Him belongs that before us and that behind us and what is in between. And never is your Lord forgetful -
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهٖ ؕ هَلْ تَعْلَمُ لَهٗ سَمِیًّا ۟۠
رَّبُّஇறைவன்السَّمٰوٰتِ وَ الْاَرْضِவானங்கள்/இன்னும் பூமிوَمَا بَيْنَهُمَاஇன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவைفَاعْبُدْهُஆகவே, அவனை வணங்குவீராகوَاصْطَبِرْஇன்னும் பொறுமையாக இருப்பீராகلِـعِبَادَتِهٖ‌ؕஅவனை வணங்குவதில்هَلْ تَعْلَمُநீர் அறிவீராلَهٗஅவனுக்குسَمِيًّا‏ஒப்பானவரை
ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா FபஃBபுத் ஹு வஸ்தBபிர் லி'இBபாததிஹ்; ஹல் தஃலமு லஹூ ஸமிய்யா
முஹம்மது ஜான்
“(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ள வற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?”  
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும், பூமியையும், இவற்றிற்கு மத்தியில் உள்ளவற்றையும் படைத்த இறைவன் அவனே! ஆதலால், அவன் ஒருவனையே வணங்குவீராக. அவனை வணங்குவதில் (உமக்கு ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக. அவனுடைய தன்மைக்கு ஒப்பான எவரையும் நீர் அறிவீரா? (இல்லையே).
IFT
வானங்கள், பூமி மற்றும் அவ்விரண்டிற்குமிடையே உள்ள அனைத்திற்கும் அவன் அதிபதி ஆவான். எனவே, அவனுக்கு நீர் அடிபணிவீராக! மேலும், அவனுக்கு அடிபணிவதிலேயே நிலைத்திருப்பீராக! அவனுக்கு சமமானவர் எவரையேனும் நீர் அறிவீரா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களுக்கும், பூமிக்கும் அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளுக்கும் (அவனே) இரட்சகனாவான், ஆதலால், அ(வன் ஒரு)வனையே நீர் வணங்குவீராக! அவனை வணங்குவதில் (உமக்கு ஏற்படும் கஷ்டங்களையும்) நீர் பொறுத்துக் கொள்வீராக! (பெயரில், வல்லமையில் மற்றும் அனைத்துப் பண்புகளில்) அவனுக்கு ஒப்பானவனை நீர் அறிவீரா? (இவற்றில் ஒப்பானவர் அவனுக்கு நிகராக எவருமே இல்லை)
Saheeh International
Lord of the heavens and the earth and whatever is between them - so worship Him and have patience for His worship. Do you know of any similarity to Him?"
وَیَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَیًّا ۟
وَيَقُوْلُகூறுகிறான்الْاِنْسَانُமனிதன்ءَاِذَا مَا مِتُّநான் மரணித்து விட்டால்لَسَوْفَ اُخْرَجُகண்டிப்பாக எழுப்பப்படுவேனாحَيًّا‏உயிருள்ளவனாக
வ யகூலுல் இன்ஸானு 'அ இதா மா மித்து லஸவ்Fப உக்ரஜு ஹய்யா
முஹம்மது ஜான்
(எனினும்) மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்டுவேனா? என்று.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறிருக்க) மனிதன் ‘‘நான் இறந்த பின்னர் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?'' என்று (பரிகாசமாகக்) கேட்கிறான்.
IFT
மனிதன், கேட்கின்றான்: “நான் இறந்துவிட்டால், உண்மையிலேயே மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவேனா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறிருக்க) “மனிதன் நான் இறந்துவிட்டால், பின்னர் உயிருள்ளவனாக வெளியாக்கப்படுவேனா? என்று கேட்கிறான்.
Saheeh International
And man [i.e., the disbeliever] says, "When I have died, am I going to be brought forth alive?"
اَوَلَا یَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ یَكُ شَیْـًٔا ۟
اَوَلَا يَذْكُرُசிந்திக்க வேண்டாமா!الْاِنْسَانُமனிதன்اَنَّاநிச்சயமாக நாம்خَلَقْنٰهُஅவனைப் படைத்ததைمِنْ قَبْلُமுன்னர்وَلَمْ يَكُஅவன் இருக்கவில்லைشَيْـٴًـــا‏எந்த ஒரு பொருளாகவும்
'அ வலா யத்குருல் இன்ஸானு அன்னா கலக்னாஹு மின் கBப்லு வ லம் யகு ஷய்'ஆ
முஹம்மது ஜான்
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
அப்துல் ஹமீது பாகவி
இதற்கு முன்னர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த அவனை நாமே மனிதனாக படைத்தோம் என்பதை அவன் நினைத்துப்பார்க்க வேண்டாமா?
IFT
முன்பு அவன் எப்பொருளாயும் இல்லாதிருந்தபோது நாம்தாம் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்ப்பதில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “முன்னர் யாதொரு பொருளாகவும் இல்லாதிருக்க, நாம்தான் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?”
Saheeh International
Does man not remember that We created him before, while he was nothing?
فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّیٰطِیْنَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِیًّا ۟ۚ
فَوَرَبِّكَஉம் இறைவன் மீது சத்தியமாகلَـنَحْشُرَنَّهُمْநிச்சயமாக நாம் அவர்களை எழுப்புவோம்وَالشَّيٰطِيْنَஇன்னும் ஷைத்தான்களைثُمَّபிறகுلَــنُحْضِرَنَّهُمْஅவர்களைக் கொண்டு வருவோம்حَوْلَசுற்றிجَهَـنَّمَநரகத்தைجِثِيًّا‌ ۚ‏முழந்தாளிட்டவர்களாக
Fபவ ரBப்Bபிக லனஹ்ஷு ரன்னஹும் வஷ் ஷயாதீன தும்ம லனுஹ்ளிரன்னஹும் ஹவ்ல ஜஹன்னம ஜிதிய்யா
முஹம்மது ஜான்
ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், (அவர்கள் வணங்குகிற) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர் கொடுத்து) எழுப்பி நரகத்தைச் சுற்றி முழந்தாளிட்டவர்களாக அவர்களை ஒன்று சேர்ப்போம்.
IFT
உம் இறைவன் மீது ஆணையாக! அவர்கள் அனைவரையும் (அவர்களோடு) ஷைத்தான்களையும் அவசியம் நாம் ஒன்று திரட்டிக் கொண்டு வருவோம். பிறகு, நரகத்தைச் சுற்றிலும் அவர்களைக் கொண்டுவந்து முழங்காலிட்டு நிறுத்துவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) உமதிரட்சகன் மீது சத்தியமாக! நாம் அவர்களையும் (அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கிற) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர் கொடுத்து) ஒன்று திரட்டுவோம், பின்னர் நரகத்தைச் சூழ முழந்தாளிட்டவர்களாக அவர்களை நாம் நிச்சயமாக முன்னிலைப் படுத்துவோம்.
Saheeh International
So by your Lord, We will surely gather them and the devils; then We will bring them to be present around Hell upon their knees.
ثُمَّ لَنَنْزِعَنَّ مِنْ كُلِّ شِیْعَةٍ اَیُّهُمْ اَشَدُّ عَلَی الرَّحْمٰنِ عِتِیًّا ۟ۚ
ثُمَّபிறகுلَـنَنْزِعَنَّகழட்டி எடுப்போம்مِنْ كُلِّஒவ்வொருشِيْعَةٍகூட்டத்திலும்اَيُّهُمْஅவர்களில்اَشَدُّகடுமையானவரைعَلَى الرَّحْمٰنِரஹ்மானுக்குعِتِيًّا‌ ۚ‏பாவம் செய்வதில்
தும்ம லனன் Zஜி'அன்ன மின் குல்லி ஷீ'அதின் அய்யுஹும் அஷத்து 'அலர் ரஹ்மானி 'இதிய்யா
முஹம்மது ஜான்
பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், ரஹ்மானுக்கு மாறுசெய்வதில் கடினமாக இருந்த அனைவரையும் ஒவ்வொரு கூட்டத்திலிருந்து நிச்சயமாக நாம் பிரித்து விடுவோம்.
IFT
பிறகு, அவர்களில் எவன் கருணைமிக்க இறைவனுக்கு மாறு செய்வதில் தீவிரமாக இருந்தானோ அவனை ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் தனியே பிரித்துவிடுவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அவர்களில் எவர் ரஹ்மானுக்கு மாறு செய்வதில் மிகக் கடினமானவரோ அவரை நிச்சயமாக நாம் (பிரித்து)கழற்றி எடுத்து விடுவோம்.
Saheeh International
Then We will surely extract from every sect those of them who were worst against the Most Merciful in insolence.
ثُمَّ لَنَحْنُ اَعْلَمُ بِالَّذِیْنَ هُمْ اَوْلٰی بِهَا صِلِیًّا ۟
ثُمَّபிறகுلَـنَحْنُநாம்اَعْلَمُமிக அறிந்தவர்கள்بِالَّذِيْنَஎவர்கள்هُمْஅவர்கள்اَوْلٰىமிகவும் தகுதியானவர்கள்بِهَاஅதில்صِلِيًّا‏கடுமையாக வேதனை அனுபவிப்பதற்கு
தும்ம லனஹ்னு அஃலமு Bபில்லதீன ஹும் அவ்லா Bபிஹா ஸிலிய்யா
முஹம்மது ஜான்
பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், நரகத்தில் எரிவதற்கு தகுதி உடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிந்து கொள்வோம்.
IFT
பின்னர், அனைவரையும்விட நரகில் புகுத்தப்படுவதற்கு யார் அதிகம் தகுதியுடையவர்களோ அவர்களை நாம் நன்கு அறிவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அ(ந்நரகத்)தில் நுழைவதற்கு எவர்கள் மிகத் தகுதியுடையோரோ, அவர்களை நிச்சயமாக நாம் அறிவோம்.
Saheeh International
Then, surely it is We who are most knowing of those most worthy of burning therein.
وَاِنْ مِّنْكُمْ اِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلٰی رَبِّكَ حَتْمًا مَّقْضِیًّا ۟ۚ
وَاِنْ مِّنْکُمْஉங்களில் (ஒவ்வொருவரும்) இல்லைاِلَّا وَارِدُهَا ؕதவிர/அதில் நுழையக்கூடியவராகكَانَஇருக்கிறதுعَلٰى رَبِّكَஉமது இறைவன் மீதுحَتْمًاதீர்ப்பாகمَّقْضِيًّا‌ ۚ‏முடிவு செய்யப்பட்ட
வ இன் மின்கும் இல்லா வாரிதுஹா; கான 'அலா ரBப்Bபிக ஹத்மம் மக்ளிய்யா
முஹம்மது ஜான்
மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அதைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உமது இறைவனிடம் முடிவு செய்யப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும்.
IFT
உங்களில் எவரும் நரகத்தைக் கடந்து செல்லாதவராய் இருக்க முடியாது. இது முடிவு செய்யப்பட்ட ஒரு விஷயமாகும்; இதனை நிறைவேற்றுவது உம்முடைய இறைவனின் பொறுப்பாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், உங்களில் எவரும் (ஸிராத் எனும் பாலமான) அதற்கு வரக்கூடியவராகவேயல்லாது இல்லை, உமது இரட்சகன்மீது இது கட்டாயமான முடிவு செய்யப்பட்டதாக ஆகிவிட்டது.
Saheeh International
And there is none of you except he will come to it. This is upon your Lord an inevitability decreed.
ثُمَّ نُنَجِّی الَّذِیْنَ اتَّقَوْا وَّنَذَرُ الظّٰلِمِیْنَ فِیْهَا جِثِیًّا ۟
ثُمَّபிறகுنُـنَجِّىபாதுகாப்போம்الَّذِيْنَ اتَّقَوْاஇறையச்சமுடையவர்களைوَّنَذَرُஇன்னும் விட்டுவிடுவோம்الظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களைفِيْهَاஅதில்جِثِيًّا‏முழந்தாளிட்ட வர்களாக
தும்ம னுனஜ்ஜில் லதீனத் தகவ் வ னதருள் ளாலிமீன Fபீஹா ஜிதிய்யா
முஹம்மது ஜான்
அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆனால், இறையச்சத்துடன் வாழ்ந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) அதில் தள்ளிவிடுவோம்.
IFT
(உலக வாழ்வில்) இறையச்சம் கொண்டு வாழ்ந்தவர்களை நாம் காப்பாற்றுவோம். கொடுமையாளர்களை அதிலேயே வீழ்ந்து கிடக்குமாறு விட்டுவிடுவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறு வந்ததன்) பின்னர் பயபக்தியுடையோராக இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம், அநியாயக்காரர்களை முழந்தாளிட்டவர்களாக அதில் விட்டும் விடுவோம்.
Saheeh International
Then We will save those who feared Allah and leave the wrongdoers within it, on their knees.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوْۤا ۙ اَیُّ الْفَرِیْقَیْنِ خَیْرٌ مَّقَامًا وَّاَحْسَنُ نَدِیًّا ۟
وَاِذَا تُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِمْஅவர்கள் மீதுاٰيٰتُنَاநமது வசனங்கள்بَيِّنٰتٍதெளிவானقَالَகூறுகின்றனர்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்لِلَّذِيْنَ اٰمَنُوْۤا ۙநம்பிக்கையாளர்களுக்குاَىُّயார்?الْفَرِيْقَيْنِஇரு பிரிவினரில்خَيْرٌசிறந்தவர்مَّقَامًاதங்குமிடத்தால்وَّاَحْسَنُமிக அழகானவர்نَدِيًّا‏சபையால்
வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா Bபய்யினாதின் காலல் லதீன கFபரூ லில்லதீன ஆமனூ அய்யுல் Fபரீகய்னி கய்ரும் மகாம(ன்)வ் வ அஹ்ஸனு னதிய்யா
முஹம்மது ஜான்
இன்னும் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்கள்முன் ஓதப்பெறும்போது முஃமின்களிடத்தில், (அவற்றை) நிராகரிக்க முயலும் காஃபிர்கள்: “நம் இரு வகுப்பாரில் இப்பொழுது யாருடைய வீடு மேலானதாகவும், யாருடை சபை மிக அழகானதாகவும் இருக்கிறது?” என்று கேட்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘நம் இரு வகுப்பாரில் எவர்களுடைய வீடு (தற்சமயம்) மேலானதாகவும் அழகான தோற்றத்துடனும் இருக்கிறது?'' என்று கேட்கின்றனர்.
IFT
இவர்களிடம் நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக்காட்டப்பட்டால், நிராகரிப்பவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களிடம், “நம் இரு பிரிவினரில் யார் நல்ல நிலையில் உள்ளவர்கள், யாருடைய அவைகள் மிகக் கம்பீரமாக இருக்கின்றன என்பதைக் காட்டுங்கள்” என்று கூறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் மீது நம்முடைய வசனங்கள் தெளிவானவையாக ஓதப்பட்டால், விசுவாசிகளிடம் நிராகரிப்பவர்கள், நம் இரு வகுப்பாரில் தங்குமிடத்தால் மிகச் சிறந்தவர் யார், இன்னும் சபையால் மிக்க அழகானவர் யார்? என்று கூறுகின்றனர்.
Saheeh International
And when Our verses are recited to them as clear evidences, those who disbelieve say to those who believe, "Which of [our] two parties is best in position and best in association?"
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَحْسَنُ اَثَاثًا وَّرِءْیًا ۟
وَكَمْஎத்தனையோاَهْلَكْنَاநாம் அழித்தோம்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்مِّنْ قَرْنٍதலைமுறையினரைهُمْஅவர்கள்اَحْسَنُமிக அழகானவர்கள்اَثَاثًاபொருட்களாலும்وَّرِءْيًا‏தோற்றத்தாலும்
வ கம் அஹ்லக்னா கBப்லஹும் மின் கர்னின் ஹும் அஹ்ஸனு அதாத(ன்)வ் வ ரி'யா
முஹம்மது ஜான்
இன்னும், இவர்களைவிட மிக்க அழகான தளவாடங்களையும், தோற்றத்தையும் பெற்றிருந்த எத்தனையோ தலைமுறைகளை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களை விட அழகான தோற்றத்தையும், தட்டு முட்டு சாமான்களையும் கொண்ட எத்தனையோ கூட்டத்தாரை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.
IFT
உண்மையில், இவர்களுக்கு முன் இவர்களைவிட எவ்வளவோ அதிகச் சாதனங்களை வைத்திருந்தவர்களும் வெளிப்பகட்டில் இவர்களைவிட மிகைத்திருந்தவர்களுமான எத்தனையோ சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ கூட்டத்தாரை அழித்திருக்கின்றோம், அவர்கள் தளவாடங்களாலும், தோற்றத்தாலும் மிக அழகானவர்கள் (ஆவர்).
Saheeh International
And how many a generation have We destroyed before them who were better in possessions and [outward] appearance?
قُلْ مَنْ كَانَ فِی الضَّلٰلَةِ فَلْیَمْدُدْ لَهُ الرَّحْمٰنُ مَدًّا ۚ۬ حَتّٰۤی اِذَا رَاَوْا مَا یُوْعَدُوْنَ اِمَّا الْعَذَابَ وَاِمَّا السَّاعَةَ ؕ فَسَیَعْلَمُوْنَ مَنْ هُوَ شَرٌّ مَّكَانًا وَّاَضْعَفُ جُنْدًا ۟
قُلْகூறுவீராகمَنْயார்كَانَஇருக்கின்றாரோفِى الضَّلٰلَةِவழிகேட்டில்فَلْيَمْدُدْநீட்டிவிடட்டும்لَهُஅவருக்குالرَّحْمٰنُபேரருளாளன்مَدًّا ۚ‌நீட்டிவிடுதல்حَتّٰٓىஇறுதியாகاِذَا رَاَوْاஅவர்கள் பார்த்தால்مَا يُوْعَدُوْنَஅவர்கள் வாக்களிக்கப்பட்டதைاِمَّاஒன்றுالْعَذَابَவேதனையைوَاِمَّاஅல்லதுالسَّاعَةَ ؕமறுமையைفَسَيَـعْلَمُوْنَஅறிவார்கள்مَنْயார்هُوَஎன்பதைشَرٌّமிகக் கெட்டவர்مَّكَانًاதங்குமிடத்தால்وَّاَضْعَفُமிகப் பலவீனமானவர்جُنْدًا‏படையால்
குல் மன் கான Fபிள்ள லாலதி Fபல்யம்துத் லஹுர் ரஹ்மானு மத்தா; ஹத்தா இதா ர அவ் மா யூ'அதூன இம்மல் 'அதாBப வ இம்மஸ் ஸா'அத Fபஸ யஃலமூன மன் ஹுவ ஷர்ரும் மகான(ன்)வ் வ அத்'அFபு ஜுன்தா
முஹம்மது ஜான்
“யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையை காணும்வரை அர்ரஹ்மான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான்; (அவ்வாறு காணும் போது) எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலஹீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: எவன் வழிகேட்டில் இருக்கிறானோ அவனுக்கு ஏற்பட்ட தண்டனையை அவன் கண்ணால் காணும் வரை ரஹ்மான் அவனுக்கு (இம்மையில்) தவணையளிக்கிறான். (அதை அவன் கண்டதன் பின்னரோ) அவனுக்கு வேதனை கிடைக்கும். அல்லது அவனுடைய காலம் முடிந்துவிடும். பின்னர், எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலவீனமானது என்பதைத் திட்டமாக அவர்கள் (மறுமையில்) அறிந்து கொள்வார்கள்.
IFT
இவர்களிடம் கூறுங்கள்: எவர்கள் வழிகேட்டிலே வீழ்ந்திருக்கின்றார்களோ அவர்களுக்கு கருணைமிக்க இறைவன் கால அவகாசம் அளிக்கின்றான். எதுவரையெனில், தங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்ததை அது அல்லாஹ் அளிக்கும் வேதனையாக இருந்தாலும் சரி, மறுமையாக இருந்தாலும் சரி, அதனை அவர்கள் காண்கிறார்கள்; அப்போது யாருடைய நிலைமை மோசமானது; யாருடைய கூட்டம் பலம் குன்றியது என்பது அவசியம் அவர்களுக்குத் தெரிந்துவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எவர் வழிகேட்டிலிருக்கிறாரோ அவருக்கு அர்ரஹ்மான் கால அவகாசத்தை நீட்டி விடுகிறான், முடிவாக அவர்கள் வாக்களிக்கப்பட்டதை-(அதாவது) ஒன்று இம்மையில் வேதனையை, மற்றொன்று மறுமையை அவர்கள் கண்டுவிட்டால்-அப்போது இடத்தால் கெட்டவர் யார்? படையால் மிகவும் பலவீனமானவர் யார்? என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்” (என்று நபியே!) நீர் (அவர்களுக்குக்) கூறுவீராக!
Saheeh International
Say, "Whoever is in error - let the Most Merciful extend for him an extension [in wealth and time] until, when they see that which they were promised - either punishment [in this world] or the Hour [of resurrection] - they will come to know who is worst in position and weaker in soldiers."
وَیَزِیْدُ اللّٰهُ الَّذِیْنَ اهْتَدَوْا هُدًی ؕ وَالْبٰقِیٰتُ الصّٰلِحٰتُ خَیْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَیْرٌ مَّرَدًّا ۟
وَيَزِيْدُஅதிகப்படுத்துவான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَ اهْتَدَوْاநேர்வழி நடப்போருக்குهُدًى‌ؕநேர்வழியைوَالْبٰقِيٰتُநிரந்தரமானالصّٰلِحٰتُநன்மைகள்தான்خَيْرٌமிகச் சிறந்ததுعِنْدَ رَبِّكَஉங்கள் இறைவனிடம்ثَوَابًاநற்கூலியால்وَّخَيْرٌஇன்னும் மிகச் சிறந்ததுمَّرَدًّا‏முடிவால்
வ யZஜீதுல் லாஹுல் லதீனஹ் ததவ் ஹுதா; வல் Bபாகியாதுஸ் ஸாலிஹாது கய்ருன் 'இன்த ரBப்Bபிக தவாBப(ன்)வ் வ கய்ரும் மரத்தா
முஹம்மது ஜான்
“மேலும், எவர் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் மேலும் நேர்வழியில் செலுத்துகிறான்; இன்னும் நிலைத்திருக்கக் கூடிய நற்கருமங்கள் உம்முடைய இறைவனிடத்திலே சிறந்த கூலியாகவும் சிறந்த தங்குமிடமாகவும் அமையும்.”
அப்துல் ஹமீது பாகவி
நேர்வழி பெற்றவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நேர்வழியை அதிகரித்து வழங்குகிறான். நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தான் உமது இறைவனிடத்தில் நற்கூலியை அடைவதற்கு சிறந்ததாகவும், நல்ல முடிவை தருவதற்கு சிறந்ததாகவும் இருக்கின்றன.
IFT
(இதற்கு மாறாக) எவர்கள் நேர்வழியை மேற்கொள்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் நேர் வழியில் முன்னேற்றத்தை வழங்குகின்றான். மேலும், நிலைத்திருக்கும் நற்செயல்கள்தாம் உம் இறைவனிடத்தில் நற்கூலியையும் நல்ல முடிவையும் பொறுத்து மிகவும் சிறந்தவையாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நேர் வழியில் செல்கிறார்களே அத்தகையோருக்கு அல்லாஹ் (மேலும்) நேர் வழியை அதிகப்படுத்துகிறான், நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள் தாம் உம்முடைய இரட்சகனிடத்தில் நற்கூலியால் மிகச் சிறந்ததாகும், திரும்பிச் செல்லும் இடத்தாலும் மிகச் சிறந்ததாகும்.
Saheeh International
And Allah increases those who were guided, in guidance, and the enduring good deeds are better to your Lord for reward and better for recourse.
اَفَرَءَیْتَ الَّذِیْ كَفَرَ بِاٰیٰتِنَا وَقَالَ لَاُوْتَیَنَّ مَالًا وَّوَلَدًا ۟ؕ
اَفَرَءَيْتَநீர் பார்த்தீரா?الَّذِىْ كَفَرَநிராகரித்தவனைبِاٰيٰتِنَاநமது வசனங்களைوَقَالَகூறுகின்றான்لَاُوْتَيَنَّநிச்சயமாக நான் கொடுக்கப்படுவேன்مَالًاசெல்வமும்وَّوَلَدًا ؕ‏சந்ததியும்
அFபர'அய்தல் லதீ கFபர Bபி ஆயாதினா வ கால ல ஊத யன்ன மால(ன்)வ் வ வலதா
முஹம்மது ஜான்
“நம்முடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டு, (மறுமையிலும்) நான் நிச்சயமாக, செல்வமும், பிள்ளையும் கொடுக்கப்படுவேன்” என்று கூறினானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நம் வசனங்களை நிராகரித்தவனை நீர் பார்த்தீரா? ‘‘(மறுமையிலும்) நிச்சயமாக நான் ஏராளமான பொருள்களும் சந்ததிகளும் கொடுக்கப்படுவேன்'' என்று கூறுகிறான்.
IFT
எவன் நம்முடைய சான்றுகளை மறுக்கின்றானோ மேலும், ‘பொருட் செல்வமும் மக்கட் செல்வமும் எனக்கு வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும்’ என்றும் கூறுகின்றானோ அவனை நீர் பார்த்தீரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நம்முடைய வசனங்களை நிராகரித்தோனை நீர் பார்த்தீரா? அவன் (மறுமையிலும்) நான் நிச்சயமாக செல்வமும், பிள்ளையும் கொடுக்கப்படுவேன் எனவும் கூறினான்.
Saheeh International
Then, have you seen he who disbelieved in Our verses and said, "I will surely be given wealth and children [in the next life]"?
اَطَّلَعَ الْغَیْبَ اَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۟ۙ
اَطَّلَعَஅறிந்துகொண்டானாالْغَيْبَமறைவானதைاَمِஅல்லதுاتَّخَذَஏற்படுத்திக் கொண்டானாعِنْدَ الرَّحْمٰنِரஹ்மானிடம்عَهْدًا ۙ‏ஓர் ஒப்பந்தத்தை
'அத் தல'அல் கய்Bப 'அமித் தகத 'இன்தர் ரஹ்மானி 'அஹ்தா
முஹம்மது ஜான்
(பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் எட்டிப் பார்த்துத் தெரிந்து கொண்டானா; அல்லது அர்ரஹ்மானிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?
அப்துல் ஹமீது பாகவி
அவன் (மறுமையில் நடக்கக்கூடிய) மறைவான விஷயங்களை அறிந்து கொண்டானா? அல்லது ரஹ்மானிடத்தில் (இத்தகையதொரு) வாக்குறுதியைப் பெற்றிருக்கிறானா?
IFT
அவன் மறைவான உண்மைகளை அறிந்துகொண்டானா? அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்து வைத்திருக்கின்றானா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மறுமையில் அவன் கூறியது போன்றது உண்டா? (என்ற) மறைவானதை அவன் அறிந்திருக்கின்றானா? அல்லது அர்ரஹ்மானிடத்தில் அது பற்றியதொரு உறுதிமொழியைப் பெற்றிருக்கின்றானா?
Saheeh International
Has he looked into the unseen, or has he taken from the Most Merciful a promise?
كَلَّا ؕ سَنَكْتُبُ مَا یَقُوْلُ وَنَمُدُّ لَهٗ مِنَ الْعَذَابِ مَدًّا ۟ۙ
كَلَّا ؕஒருக்காலும் அவ்வாறல்லسَنَكْتُبُபதிவு செய்கிறோம்مَا يَقُوْلُஅவன் கூறுவதைوَنَمُدُّஇன்னும் அதிகப்படுத்துவோம்لَهٗஅவனுக்குمِنَ الْعَذَابِவேதனையில்مَدًّا ۙ‏அதிகப்படுத்துதல்
கல்லா; ஸனக்துBபு மா யகூலு வ னமுத்து லஹூ மினல் 'அதாBபி மத்தா
முஹம்மது ஜான்
அப்படியல்ல! அவன் சொல்வதை நாம் எழுதி வருவோம்; இன்னும் நாம் அவனுடைய வேதனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்.
அப்துல் ஹமீது பாகவி
(இவன் கூறுகிறபடி) அல்ல! இவன் (பொய்யாகக்) கூறுகின்றவற்றை நாம் எழுதிக் கொண்டே வருகிறோம். (அதற்குத் தக்கவாறு) அவனுடைய வேதனையையும் நாம் அதிகப்படுத்திவிடுவோம்.
IFT
அப்படி ஒன்றும் இல்லை. அவன் பிதற்றுவதை நாம் எழுதி வைத்துக் கொள்வோம். அவனுக்குத் தண்டனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவன் கூறுகிற அவ்வாறு) அன்று! அவன் கூறுகின்றவற்றை நாம் எழுதி வருவோம், (அதற்குத் தக்கவாறு) வேதனையிலிருந்து நாம் அவனுக்கு மிக மிக அதிகப்படுத்தியும் விடுவோம்.
Saheeh International
No! We will record what he says and extend [i.e., increase] for him from the punishment extensively.
وَّنَرِثُهٗ مَا یَقُوْلُ وَیَاْتِیْنَا فَرْدًا ۟
وَّنَرِثُهٗஇன்னும் வாரிசாகி விடுவோம்مَا يَقُوْلُஅவன் கூறியவற்றுக்குوَيَاْتِيْنَاஇன்னும் நம்மிடம் வருவான்فَرْدًا‏தனியாக
வ னரிதுஹூ மா யகூலு வ ய'தீனா Fபர்தா
முஹம்மது ஜான்
இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் (தனக்குரியதென்று) கூறும் அனைத்துக்கும் நாமே வாரிசாகி விடுவோம். அவன் (இவற்றை விட்டுவிட்டு) நம்மிடம் தனியாகவே வருவான்.
IFT
எந்தப் பொருட் செல்வத்தையும் மக்கட் செல்வத்தையும் பற்றி அவன் பெருமையடித்துக் கொள்கின்றானோ அவை அனைத்தும் இறுதியில் நமக்கே உரியனவாகிவிடும்; அவன் தனியாகவே நம்மிடம் வருவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவன் கூறுகின்றவற்றுக்கு நாமே அனந்தரங்கொண்டு விடுவோம், (இவைகளை இழந்துவிட்டு) தனியாகவே நம்மிடம் அவன் வருவான்.
Saheeh International
And We will inherit him [in] what he mentions, and he will come to Us alone.
وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لِّیَكُوْنُوْا لَهُمْ عِزًّا ۟ۙ
وَاتَّخَذُوْاஇன்னும் ஏற்படுத்திக் கொண்டனர்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிاٰلِهَةًபல தெய்வங்களைلِّيَكُوْنُوْاஅவை இருக்கும் என்பதற்காகلَهُمْதங்களுக்குعِزًّا ۙ‏பாதுகாப்பாக
வத்தகதூ மின் தூனில் லாஹி ஆலிஹதல் லியகூனூ லஹும் 'இZஜ்Zஜா
முஹம்மது ஜான்
(முஷ்ரிக்குகள்) தங்களுக்காக (அல்லாஹ்விடம் மன்றாடுவதற்கு) வல்லமையுடையவையென்று அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டுள்ளார்கள்!
அப்துல் ஹமீது பாகவி
(இணைவைத்து வணங்கும்) இவர்கள் தங்களுக்கு உதவியாக இருக்குமென்று அல்லாஹ் அல்லாதவற்றைத் தெய்வங்களாக எடுத்துக் கொள்கின்றனர்.
IFT
அல்லாஹ்வை விடுத்து வேறு கடவுளரை இவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்; அவர்கள் இவர்களுக்கு உதவியாளராய் ஆக வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இணை வைத்துக்கொண்டிருந்த) இவர்கள், (அல்லாஹ்வின் வேதனையிலிருந்து காத்து) தங்களுக்கு உதவியாக அவர்கள் ஆவதற்காக அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
Saheeh International
And they have taken besides Allah [false] deities that they would be for them [a source of] honor.
كَلَّا ؕ سَیَكْفُرُوْنَ بِعِبَادَتِهِمْ وَیَكُوْنُوْنَ عَلَیْهِمْ ضِدًّا ۟۠
كَلَّا‌ ؕஅவ்வாறல்லسَيَكْفُرُوْنَஅவை நிராகரித்து விடும்بِعِبَادَتِهِمْஅவர்களின் வழிபாட்டைوَيَكُوْنُوْنَஇன்னும் அவை மாறிவிடும்عَلَيْهِمْஅவர்களுக்குضِدًّا‏எதிரானவையாக
கல்லா; ஸ யக்Fபுரூன Bபி'இBபாததிஹிம் வ யகூனூன 'அலய்ஹிம் ளித்தா
முஹம்மது ஜான்
அப்படியல்ல! தங்களை இவர்கள் வணங்கியதையும் நிராகரித்து, இவர்களுக்கு விரோதமாகவும் ஆகிவிடும்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறல்ல; அத்தெய்வங்கள் இவர்கள் தங்களை வணங்கியதையும் நிராகரித்து, இவர்களுக்கு விரோதமாகவும் மாறிவிடும்.
IFT
அவ்வாறு (எந்த உதவியாளரும்) இல்லை! அக்கடவுளர் அனைவரும் இவர்களின் வழிபாட்டை மறுத்துவிடுவர். ஏன், இவர்களுக்கு எதிரிகளாகவும் மாறிவிடுவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்வாறன்று! தங்களை இவர்கள் வணங்கியதையும் (அத்தெய்வங்கள்) நிராகரிப்பார்கள், இவர்களுக்கு விரோதமாகவும் அவர்கள் ஆகிவிடுவர்.
Saheeh International
No! They [i.e., those "gods"] will deny their worship of them and will be against them opponents [on the Day of Judgement].
اَلَمْ تَرَ اَنَّاۤ اَرْسَلْنَا الشَّیٰطِیْنَ عَلَی الْكٰفِرِیْنَ تَؤُزُّهُمْ اَزًّا ۟ۙ
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اَنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنَاஏவி விட்டுள்ளோம்الشَّيٰـطِيْنَஷைத்தான்களைعَلَى الْكٰفِرِيْنَநிராகரிப்பவர்கள் மீதுتَؤُزُّபிடித்துஅசைக்கின்றனهُمْஅவர்களைاَزًّا ۙ‏பிடித்து அசைத்தல்
அலம் தர அன்னா அர்ஸல்னஷ் ஷயாதீன 'அலல் காFபிரீன த'உZஜ்Zஜுஹும் அZஜ்Zஜா
முஹம்மது ஜான்
காஃபிர்களை (வழி கேட்டில் செல்லும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக ஷைத்தான்களை நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்க வில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிராகரிப்பவர்களை (பாவமான காரியங்களைச் செய்யும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பிவைக்கிறோம் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
IFT
நீர் கவனிக்கவில்லையா? சத்தியத்தை நிராகரிப்போர் மீது ஷைத்தான்களை நாம் ஏவி விட்டிருக்கின்றோம். அவர்கள் (சத்தியத்தை எதிர்க்குமாறு) இவர்களை அதிகம் அதிகம் தூண்டிக் கொண்டிருக்கின்றார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிராகரிப்போரை (தீயவைகளைச் செய்யுமாறு) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்கவில்லையா?
Saheeh International
Do you not see that We have sent the devils upon the disbelievers, inciting them [to evil] with [constant] incitement?
فَلَا تَعْجَلْ عَلَیْهِمْ ؕ اِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّا ۟ۚ
فَلَا تَعْجَلْஆகவே அவசரப்படாதீர்عَلَيْهِمْ‌ ؕஅவர்கள் மீதுاِنَّمَاநிச்சயமாக நாம்نَـعُدُّஎண்ணுகிறோம்لَهُمْஅவர்களுக்காகعَدًّا‌ ۚ‏எண்ணுதல்
Fபலா தஃஜல் அலய்ஹிம் இன்னமா ன 'உத்து லஹும் 'அத்தா
முஹம்மது ஜான்
எனவே அவர்களுக்காக நீர் அவசரப்படாதீர்! அவர்களுக்கு (வேதனைக்குரிய தவணையின்) கணக்கை நாம் கணக்கிட்டுக் கொண்டுதானிக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், அவர்களுக்காக (வேதனை வரவேண்டுமென்று) நீர் அவசரப்படாதீர். அவர்களுக்கு (வேதனை வரக்கூடிய நாள்களை) நாம் எண்ணிக்கொண்டே இருக்கிறோம்.
IFT
எனவே, இவர்கள் மீது வேதனை இறங்க வேண்டுமென நீர் அவசரப்படாதீர். நாம் அவர்களுக்காக (நாட்களை) எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆதலால், அவர்களுக்காக நீர் அவசரப்படாதீர், அவர்களுக்காக (வேதனை ஏற்படக்கூடிய நாட்களை) எண்ணிக்கையால் நாம் கணித்துக் கொண்டேயிருக்கிறோம்.
Saheeh International
So be not impatient over them. We only count out [i.e., allow] to them a [limited] number.
یَوْمَ نَحْشُرُ الْمُتَّقِیْنَ اِلَی الرَّحْمٰنِ وَفْدًا ۟ۙ
يَوْمَநாளில்...نَحْشُرُநாம் ஒன்று திரட்டுகின்றோம்الْمُتَّقِيْنَஇறையச்சமுள்ளவர்களைاِلَى الرَّحْمٰنِரஹ்மானின் பக்கம்وَفْدًا‌ ۙ‏குழுவாக
யவ்ம னஹ்ஷுருல் முத்தகீன இலர் ரஹ்மானி வFப்தா
முஹம்மது ஜான்
அர்ரஹ்மானாகிய நம்மிடத்தில் பயபக்தியுடையவர்களை நாம் கூட்டமாக ஒன்று சேர்க்கும் நாளில்;
அப்துல் ஹமீது பாகவி
இறையச்சமுடையவர்களை ரஹ்மானிடம் (விருந்தாளிகளைப் போல) குழுக்களாக நாம் ஒன்று சேர்க்கும் நாளில்,
IFT
அந்த நாள் வரத்தான் போகின்றது. அன்று, கருணை மிக்க இறைவனின் திருமுன் இறையச்சமுள்ள மக்களை, விருந்தினரைப் போன்று ஒன்று சேர்ப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பயபக்தியுடையவர்களை அர்ரஹ்மானிடம், கண்ணியமிக்க (விருந்தினர்) குழுவாக நாம் ஒன்று திரட்டும் நாளில்-
Saheeh International
On the Day We will gather the righteous to the Most Merciful as a delegation
وَّنَسُوْقُ الْمُجْرِمِیْنَ اِلٰی جَهَنَّمَ وِرْدًا ۟ۘ
وَّنَسُوْقُஇன்னும் நாம் ஓட்டிக் கொண்டு வருகின்றோம்الْمُجْرِمِيْنَபாவிகளை, குற்றவாளிகளைاِلٰى جَهَـنَّمَநரகத்தின் பக்கம்وِرْدًا‌ ۘ‏தாகித்தவர்களாக
வ னஸூகுல் முஜ்ரிமீன இலா ஜஹன்னம விர்தா
முஹம்மது ஜான்
குற்றவாளிகளை (அவர்கள்) தாகம் தீர்த்துக் கொள்வதற்காக நரகை நோக்கி நாம் விரட்டுவோம்.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும் குற்றவாளிகளை தாகத்துடன் நரகத்தின் பக்கம் நாம் ஓட்டுகின்ற நாளில்,
IFT
குற்றவாளிகளையோ தாகித்த மிருகங்களைப் போன்று நரகத்தின் பக்கம் விரட்டிச் செல்வோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் குற்றவாளிகளைத் தாகித்தவர்களாக நரகத்தின்பால் (அந்நாளில்) நாம் ஓட்டிச் செல்வோம்.
Saheeh International
And will drive the criminals to Hell in thirst
لَا یَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۟ۘ
لَا يَمْلِكُوْنَஅவர்கள் உரிமை பெறமாட்டார்கள்الشَّفَاعَةَசிபாரிசுக்குاِلَّاதவிரمَنِ اتَّخَذَஏற்படுத்தியவரைعِنْدَ الرَّحْمٰنِரஹ்மானிடம்عَهْدًا‌ ۘ‏ஓர் ஒப்பந்தத்தை
லா யம்லிகூனஷ் ஷFபா'அத இல்லா மனித்தகத 'இன்தர் ரஹ்மானி 'அஹ்தா
முஹம்மது ஜான்
அர்ரஹ்மானிடம் உடன்படிக்கை செய்து கொண்டோரைத் தவிர, எவரும் ஷஃபாஅத்திற்கு - மன்றாட்டத்திற்கு - அதிகாரம் பெற மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ரஹ்மானிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) சிபாரிசு பேச உரிமை பெறமாட்டார்.
IFT
அந்நாளில் எவராலும் எவ்விதப் பரிந்துரையும் சமர்ப்பிக்க இயலாது கருணை மிக்க இறைவனின் ஒப்புதல் பெற்றவர்களைத் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அர்ரஹ்மானிடம் உறுதிமொழி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) பரிந்துரை செய்ய அதிகாரம் பெறமாட்டார்கள்.
Saheeh International
None will have [power of] intercession except he who had taken from the Most Merciful a covenant.
وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ۟ؕ
وَقَالُوْاஇன்னும் கூறுகிறார்கள்اتَّخَذَஎடுத்துக் கொண்டான்الرَّحْمٰنُபேரருளாளன்وَلَدًا ؕ‏குழந்தையை
வ காலுத் தகதர் ரஹ்மானு வலதா
முஹம்மது ஜான்
இன்னும், “அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ரஹ்மான் சந்ததி எடுத்துக் கொண்டதாக அ(ந்த கிறிஸ்தவர்கள், இன்னும் இணைவைப்ப)வர்கள் கூறுகின்றனர்.
IFT
“கருணைமிக்க இறைவன் ஒருவரை மகனாக ஏற்படுத்தியுள்ளான்” என்று அவர்கள் கூறுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (கிறிஸ்தவர்களான) அவர்கள் ரஹ்மான் (தனக்கு) குமாரனை எடுத்துக்கொண்டான் எனக் கூறுகின்றனர்.
Saheeh International
And they say, "The Most Merciful has taken [for Himself] a son."
لَقَدْ جِئْتُمْ شَیْـًٔا اِدًّا ۟ۙ
لَـقَدْதிட்டமாகجِئْتُمْசொல்லி விட்டீர்கள்شَيْــٴًـــاஒரு காரியத்தைاِدًّا ۙ‏பெரிய
லகத் ஜி'தும் ஷய்'அன் இத்தா
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்களை நோக்கி கூறுவீராக:) நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கூறுகிறீர்கள்.
IFT
எத்தகைய அபத்தமான விஷயத்தை நீங்கள் இட்டுக்கட்டுகிறீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள் (என்று நபியே! அவர்களிடம் நீர் கூறுவீராக!)
Saheeh International
You have done an atrocious thing.
تَكَادُ السَّمٰوٰتُ یَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا ۟ۙ
تَكَادُநெருங்கி விட்டனالسَّمٰوٰتُவானங்கள்يَتَفَطَّرْنَ مِنْهُதுண்டு துண்டாகி விடுவதற்குوَتَـنْشَقُّஇன்னும் பிளந்து விடுவதற்குالْاَرْضُபூமிوَتَخِرُّஇன்னும் விழுந்து விடுவதற்குالْجِبَالُமலைகள்هَدًّا ۙ‏விழுவது
தகாதுஸ் ஸமாவாது யதFபத்தர்ன மின்ஹு வ தன்ஷக் குல் அர்ளு வ தகிர்ருல் ஜிBபாலு ஹத்தா
முஹம்மது ஜான்
இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போதிலும்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்கள் கிழிந்து போகவும், பூமி பிளந்து விடவும், மலைகள் இடிந்து சரிந்து விடவும் நெருங்கி விட்டன.
IFT
அதனால் வானங்கள் உடைந்துவிடவும், பூமி பிளந்துவிடவும், மலைகள் தகர்ந்து நொறுங்கிவிடவும் போகின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இ(வ்வாறு நீங்கள் கூறுவ)தனால் வானங்கள் வெடித்துவிடவும், பூமி பிளந்துவிடவும் மலைகள் இடிந்து நொறுங்கி விடவும் நெருங்கிவிடும்.
Saheeh International
The heavens almost rupture therefrom and the earth splits open and the mountains collapse in devastation
اَنْ دَعَوْا لِلرَّحْمٰنِ وَلَدًا ۟ۚ
اَنْ دَعَوْاஅவர்கள் ஏற்படுத்தியதால்لِـلرَّحْمٰنِரஹ்மானுக்குوَلَدًا‌ ۚ‏குழந்தையை
அன் த'அவ் லிர் ரஹ்மானி வலதா
முஹம்மது ஜான்
அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று தாவாச்செய்வதினால்-
அப்துல் ஹமீது பாகவி
ரஹ்மானுக்குச் சந்ததி உண்டென்று அவர்கள் கூறுவதன் காரணத்தால்.
IFT
(ஏனெனில்) இப்படி கருணைமிக்க இறைவனுக்கு சந்ததி இருக்கிறது என்று மக்கள் கூறுவது கொடூரமான பேச்சாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ரஹ்மானுக்கு குமாரன் உண்டென்று அவர்கள் அழைத்ததன் காரணமாக (அவை நிகழக்கூடும்).
Saheeh International
That they attribute to the Most Merciful a son.
وَمَا یَنْۢبَغِیْ لِلرَّحْمٰنِ اَنْ یَّتَّخِذَ وَلَدًا ۟ؕ
وَمَا يَنْۢبَـغِىْதகுந்ததல்லلِلرَّحْمٰنِரஹ்மானுக்குاَنْ يَّتَّخِذَஏற்படுத்திக்கொள்வதுوَلَدًا ؕ‏குழந்தையை
வமா யம்Bபகீ லிர் ரஹ்மானி அய் யத்தகித வலதா
முஹம்மது ஜான்
ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது.
அப்துல் ஹமீது பாகவி
சந்ததி எடுத்துக் கொள்வது ரஹ்மானுக்குத் தகுமானதல்ல.
IFT
ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க இறைவனுக்கு ஏற்றது அல்ல!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
குமாரனை எடுத்துக்கொள்வது அர்ரஹ்மானுக்கு அவசியமுமல்ல.
Saheeh International
And it is not appropriate for the Most Merciful that He should take a son.
اِنْ كُلُّ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ اِلَّاۤ اٰتِی الرَّحْمٰنِ عَبْدًا ۟ؕ
اِنْஇல்லைكُلُّஒவ்வொருவரும்مَنْ فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளوَالْاَرْضِஇன்னும் பூமியில்اِلَّاۤதவிரاٰتِىவருவாரேالرَّحْمٰنِபேரருளாளனிடம்عَبْدًا ؕ‏அடிமையாக
இன் குல்லு மன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி இல்லா ஆதிர் ரஹ்மானி 'அBப்தா
முஹம்மது ஜான்
ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஏனென்றால், நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் ரஹ்மானிடம் அடிமையாகவே வருகிறது.
IFT
வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைவரும் அடிமைகளாய் கருணை மிக்க இறைவனின் திருமுன் வரத்தான் போகின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஏனென்றால்,) வானங்களிலும், பூமியிலும் உள்ள (மனிதர்கள், ஜின் இனத்தவர், அமரர்கள் ஆகியோரில்) ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாக வந்தேயல்லாமல் (வேறு) இல்லை.
Saheeh International
There is no one in the heavens and earth but that he comes to the Most Merciful as a servant.
لَقَدْ اَحْصٰىهُمْ وَعَدَّهُمْ عَدًّا ۟ؕ
لَـقَدْதிட்டமாகاَحْصٰٮهُمْஅவர்களை கணக்கிட்டு வைத்திருக்கிறான்وَعَدَّهُمْஇன்னும் அவர்களை எண்ணி வைத்திருக்கிறான்عَدًّا‏எண்ணுதல்
லகத் அஹ்ஸாஹும் வ அத்தஹும் 'அத்தா
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவற்றையெல்லாம் அவன் சூழ்ந்தறிகிறான்; இன்னும் அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
அவை அனைத்தையும் அவன் சூழ்ந்து அறிந்து கணக்கிட்டும் வைத்திருக்கிறான்.
IFT
அவன் அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொண்டும் இருக்கின்றான்; மேலும், அவர்களைக் கணக்கிட்டும் வைத்துள்ளான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களை திட்டமாக அவன் (பூரணமாக) சூழ்ந்தறிந்துள்ளான், அவர்(களின் எண்ணிக்கை)களை துல்லியமாக கணக்கிட்டும் வைத்திருக்கிறான்.
Saheeh International
He has enumerated them and counted them a [full] counting.
وَكُلُّهُمْ اٰتِیْهِ یَوْمَ الْقِیٰمَةِ فَرْدًا ۟
وَكُلُّهُمْஅவர்கள் ஒவ்வொருவரும்اٰتِيْهِஅவனிடம் வருவார்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்فَرْدًا‏தனியாக
வ குல்லுஹும் ஆதீஹி யவ்மல் கியாமதி Fபர்தா
முஹம்மது ஜான்
கியாம நாளில் அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர்.
அப்துல் ஹமீது பாகவி
அவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் (எவருடைய உதவியுமில்லாமல்) அவனிடம் தனித்தனியாகவே வரும்.
IFT
மறுமை நாளில் இவர்கள் எல்லோரும் தனித்தனியாக அவனது திருமுன் வருவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களில் ஒவ்வொருவரும் மறுமைநாளில் அவனிடம் தனியாகவே வருவர்.
Saheeh International
And all of them are coming to Him on the Day of Resurrection alone.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَیَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைسَيَجْعَلُஏற்படுத்துவான்لَهُمُஅவர்களுக்குالرَّحْمٰنُபேரருளாளன்وُدًّا‏அன்பை
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஸ யஜ்'அலு லஹுமுர் ரஹ்மானு வுத்தா
முஹம்மது ஜான்
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறவர்களை (அனைவரும்) நேசிக்கும்படி ரஹ்மான் செய்வான்.
IFT
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்காக விரைவில் கருணை மிக்க இறைவன் (மக்களின் உள்ளங்களில்) அன்பைத் தோற்றுவிப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர் அவர்களுக்கு (விசுவாசிகளின் இதயங்களில்) நேசத்தையும் அர்ரஹ்மான் நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுப்பான்.
Saheeh International
Indeed, those who have believed and done righteous deeds - the Most Merciful will appoint for them affection.
فَاِنَّمَا یَسَّرْنٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِیْنَ وَتُنْذِرَ بِهٖ قَوْمًا لُّدًّا ۟
فَاِنَّمَا يَسَّرْنٰهُஇதை நாம் இலகுவாக்கியதெல்லாம்بِلِسَانِكَஉமது நாவில்لِتُبَشِّرَநீர் நற்செய்தி கூறுவதற்காகவும்بِهِஇதன் மூலம்الْمُتَّقِيْنَஇறையச்சமுள்ளவர்களுக்குوَتُنْذِرَநீர் எச்சரிப்பதற்காகவும்بِهٖஇதன் மூலம்قَوْمًاமக்களைلُّدًّا‏தர்க்கிக்கின்ற(வர்கள்)
Fப இன்னமா யஸ்ஸர்னாஹு Bபிலிஸானிக லிதுBபஷ்ஷிர Bபிஹில் முத்தகீன வ துன்திர Bபிஹீ கவ்மல் லுத்தா
முஹம்மது ஜான்
(நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் - பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது மொழியில் நாம் இதை (இறக்கி) எளிதாக்கி வைத்ததெல்லாம், இதன்மூலம் இறையச்சமுடையவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவதற்கும், (வீண்) விதண்டாவாதம் செய்யும் மக்களுக்கு இதன் மூலம் நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவுமே ஆகும்.
IFT
எனவே (நபியே!) நாம் இந்த வேதத்தை உம்முடைய மொழியில் (இறக்கியருளி) எளிதாக்கி இருப்பது, இறையச்சம் கொண்டவர்களுக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி அறிவிப்பதற்காகவும் மேலும், பிடிவாதத்தில் மூழ்கியிருக்கும் சமூகத்தை இதன் மூலம் எச்சரிக்கை செய்வதற்காகவுமே ஆகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உம்முடைய மொழியில் நாம் இதை (இறக்கி,) எளிதாக்கி வைத்ததெல்லாம், இதைக்கொண்டு நீர் பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறுவதற்காகவும், இன்னும், இதனைக் கொண்டு வீண்தர்க்கம் செய்யும் சமூகத்தார்க்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும்தான்.
Saheeh International
So, [O Muhammad], We have only made it [i.e., the Qur’an] easy in your tongue [i.e., the Arabic language] that you may give good tidings thereby to the righteous and warn thereby a hostile people.
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ ؕ هَلْ تُحِسُّ مِنْهُمْ مِّنْ اَحَدٍ اَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا ۟۠
وَكَمْஎத்தனையோاَهْلَكْنَاநாம் அழித்தோம்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்مِّنْ قَرْنٍؕதலைமுறையினரைهَلْ تُحِسُّநீர் பார்க்கிறீரா?مِنْهُمْஅவர்களில்مِّنْ اَحَدٍயாரையும்اَوْஅல்லதுتَسْمَعُநீர் கேட்கிறீராلَهُمْஅவர்களுடையرِكْزًا‏சப்தத்தை
வ கம் அஹ்லக்னா கBப்ல ஹும் மின் கர்னின் ஹல் துஹிஸ்ஸு மின்ஹும் மின் அஹதின் அவ் தஸ்ம'உ லஹும் ரிக்Zஜா
முஹம்மது ஜான்
அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?
அப்துல் ஹமீது பாகவி
இதற்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்களில் ஒருவரையேனும் நீர் காண்கிறீரா? அல்லது அவர்களுடைய சிறிய சப்தத்தையேனும் நீர் கேட்கிறீரா?
IFT
இவர்களுக்கு முன்னால் எத்தனையோ சமூகங்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம்; (இன்று) அவர்களில் எவருடைய அடையாளத்தையேனும், நீர் எங்கேயாவது காண்கின்றீரா? அல்லது அவர்களுடைய எந்த அரவத்தையாவது எங்கேயாவது கேட்கின்றீரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம், அவர்களில் எவரையேனும் நீர் காண்கின்றீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தையேனும் நீர் கேட்கின்றீரா?
Saheeh International
And how many have We destroyed before them of generations? Do you perceive of them anyone or hear from them a sound?