21. ஸூரத்துல் அன்பியா(நபிமார்கள்)

மக்கீ, வசனங்கள்: 112

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِیْ غَفْلَةٍ مُّعْرِضُوْنَ ۟ۚ
اِقْتَرَبَநெருங்கிவிட்டதுلِلنَّاسِமக்களுக்குحِسَابُهُمْஅவர்களின் விசாரணைوَهُمْஅவர்களோفِىْ غَفْلَةٍஅலட்சியத்தில்مُّعْرِضُوْنَ‌ۚ‏புறக்கணிக்கின்றனர்
இக்தரBப லின்னாஸி ஹிஸாBபுஹும் வ ஹும் Fபீ கFப்லதிம் முஃரிளூன்
முஹம்மது ஜான்
மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது; ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களுக்கு அவர்களுடைய கேள்வி கணக்கு (நாள்) நெருங்கிக் கொண்டே வருகிறது; எனினும், அவர்களோ அதைப் புறக்கணித்துக் கவலை அற்றவர்களாக இருக்கின்றனர்.
IFT
நெருங்கி வந்திருக்கிறது; மக்களுக்கு அவர்களின் விசாரணைக்கான நேரம்! எனினும், அவர்களோ கவனமற்ற நிலையில் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களுக்கு அவர்களுடைய (கேள்வி) கணக்கு (நாள்) நெருங்கிவிட்டது, அவர்களோ (அதனைப்) புறக்கணித்தவர்களாக மறதியில் இருக்கின்றனர்.
Saheeh International
[The time of] their account has approached for the people, while they are in heedlessness turning away.
مَا یَاْتِیْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنْ رَّبِّهِمْ مُّحْدَثٍ اِلَّا اسْتَمَعُوْهُ وَهُمْ یَلْعَبُوْنَ ۟ۙ
مَا يَاْتِيْهِمْஅவர்களுக்கு வராதுمِّنْ ذِكْرٍஅறிவுரை ஏதும்مِّنْ رَّبِّہِمْஅவர்களுடைய இறைவனிடமிருந்துمُّحْدَثٍபுதியاِلَّاதவிரاسْتَمَعُوْهُஅதை அவர்கள் செவிமடுத்தேوَهُمْஅவர்கள்يَلْعَبُوْنَۙ‏விளையாடுபவர்களாக
மா ய'தீஹிம் மின் திக்ரிம் மிர் ரBப்Bபிஹிம் முஹ்ததின் இல்லஸ் தம'ஊஹு வ ஹும் யல்'அBபூன்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிய நினைவூட்டுதல் வரும்போது அவர்கள் விளையாடியவர்களாக அதை செவி மடுக்கிறார்களே தவிர வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
தங்கள் இறைவனிடமிருந்து புதிதாக ஒரு நல்லுபதேசம் வரும் போதெல்லாம் அதை அவர்கள் (நம்பாது பரிகாசம் செய்து) விளையாடிக் கொண்டே கேட்கிறார்கள்.
IFT
அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிது புதிதாக எந்த அறிவுரை அவர்களிடம் வந்தாலும் அதனை விருப்பமின்றியே செவியேற்கிறார்கள்; கேளிக்கைகளிலும் இலயித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய இரட்சகனிடமிருந்து புதிதாக யாதொரு நினைவூட்டுதல் - அவர்கள் விளையாடியவர்களாக- அதைச் செவிமடுத்தேயல்லாது அவர்களுக்கு வருவதில்லை.
Saheeh International
No mention [i.e., revelation] comes to them anew from their Lord except that they listen to it while they are at play
لَاهِیَةً قُلُوْبُهُمْ ؕ وَاَسَرُّوا النَّجْوَی ۖۗ الَّذِیْنَ ظَلَمُوْا ۖۗ هَلْ هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۚ اَفَتَاْتُوْنَ السِّحْرَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ ۟
لَاهِيَةًஅலட்சியம் செய்கின்றனقُلُوْبُهُمْ‌ ؕஅவர்களது உள்ளங்கள்وَاَسَرُّواபகிரங்கப்படுத்திக் கொண்டனர்النَّجْوَى‌ۖபேச்சைالَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயக்காரர்கள்ۖ  هَلْ هٰذَاۤஇவர் இல்லைاِلَّا بَشَرٌமனிதரே தவிரمِّثْلُكُمْ‌ ۚஉங்களைப் போன்றاَفَتَاْتُوْنَஏற்றுக்கொள்கிறீர்களாالسِّحْرَசூனியத்தைوَاَنْتُمْநீங்கள்تُبْصِرُوْنَ‏அறிந்துகொண்டே
லாஹியதன் குலூBபுஹும்; வ அஸர்ருன் னஜ்வல் லதீன ளலமூ ஹல் ஹாதா இல்லா Bபஷரும் மித்லுகும் 'அFப த'தூனஸ் ஸிஹ்ர வ அன்தும் துBப்ஸிரூன்
முஹம்மது ஜான்
அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன; இன்னும் இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாக: “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை; நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?” என்று கூறிக்கொள்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய உள்ளங்கள் (உண்மையைச்) சிந்திப்பதே இல்லை. இத்தகைய அநியாயக்காரர்கள் (நம் தூதரைப் பற்றி) ‘‘இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறென்ன? நீங்கள் பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தில் சிக்க வருகிறீர்களா?'' என்று தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொள்கின்றனர்.
IFT
அவர்களுடைய உள்ளங்கள் (வேறு சிந்தனைகளில்) மூழ்கியிருக்கின்றன. கொடுமையாளர்கள் தமக்கிடையே இரகசியமாகப் பேசிக்கொள்கின்றார்கள். “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தானே! இதனை நீங்கள் கண்கொண்டு பார்த்தும் மாயவலையில் சிக்கிக் கொள்வீர்களா, என்ன?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய உள்ளங்கள் (உண்மையைச் சிந்திக்காது) மறதியாக இருக்கும் நிலையில் - (செவியேற்கின்றனர்) இன்னும், இத்தகைய அநியாயக்காரர்கள், (நம்முடைய தூதரைப்பற்றி) “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி, (வேறு) இல்லை, நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்க (அவருடைய) சூனியத்திற்கு (அதைப்பின்பற்றி) வருகிறீர்களா?” என்று தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக்கொள்கின்றனர்.
Saheeh International
With their hearts distracted. And those who do wrong conceal their private conversation, [saying], "Is this [Prophet] except a human being like you? So would you approach magic while you are aware [of it]?"
قٰلَ رَبِّیْ یَعْلَمُ الْقَوْلَ فِی السَّمَآءِ وَالْاَرْضِ ؗ وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
قٰلَஅவர் கூறினார்رَبِّىْஎன் இறைவன்يَعْلَمُஅறிகிறான்الْقَوْلَபேச்சுகளைفِى السَّمَآءِவானத்திலும்وَالْاَرْضِ‌பூமியிலும்وَهُوَ السَّمِيْعُஅவன்தான் நன்கு செவியுறுபவன்الْعَلِيْمُ‏நன்கு அறிபவன்
கால ரBப்Bபீ யஃலமுல் கவ்ல Fபிஸ் ஸமா'இ வல் அர்ளி வ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
முஹம்மது ஜான்
“என்னுடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் (பேசப்படும்) சொல்லையெல்லாம் நன்கறிபவன்; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்” என்று அவர் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘வானங்களிலோ பூமியிலோ (ரகசியமாகவும், வெளிப்படையாகவும் பேசப்படும்) எல்லா வாக்கியங்களையும் என் இறைவன் நன்கறிவான். ஏனென்றால், அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்'' என்று (நம் தூதர்) பதில் கூறினார்.
IFT
அதற்கு இறைத்தூதர் கூறினார்: “என்னுடைய இறைவன் வானம் மற்றும் பூமியில் பேசப்படுபவை அனைத்தையும் அறிகின்றான். அவன் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிபவனுமாவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய இரட்சகன், வானிலும் பூமியிலும் உள்ள கூற்றை நன்கறிவான், (ஏனென்றால்) அவனோ (யாவையும்) செவியேற்கிறவன், நன்கறிகிறவன்” என்று (நபியாகிய) அவர் கூறினார்.
Saheeh International
He [the Prophet (ﷺ] said, "My Lord knows whatever is said throughout the heaven and earth, and He is the Hearing, the Knowing."
بَلْ قَالُوْۤا اَضْغَاثُ اَحْلَامٍ بَلِ افْتَرٰىهُ بَلْ هُوَ شَاعِرٌ ۖۚ فَلْیَاْتِنَا بِاٰیَةٍ كَمَاۤ اُرْسِلَ الْاَوَّلُوْنَ ۟
بَلْமாறாகقَالُوْۤاகூறினர்اَضْغَاثُபயமுறுத்துகின்றاَحْلَامٍۢகனவுகள்بَلِமாறாகافْتَـرٰٮهُஇதை இட்டுக்கட்டுகிறார்بَلْமாறாகهُوَஇவர்شَاعِرٌ ۖۚஒரு கவிஞர்فَلْيَاْتِنَاஆகவே எங்களிடம் கொண்டு வரட்டும்بِاٰيَةٍஓர் அத்தாட்சியைكَمَاۤபோன்றுاُرْسِلَஅனுப்பப்பட்டதுالْاَوَّلُوْنَ‏முந்தியவர்கள்
Bபல் காலூ அள்காது அஹ்லாமின் Bபல் இFப்தராஹு Bபல் ஹுவ ஷா'இருன் Fபல் ய'தினா Bபி ஆயதின் கமா உர்ஸிலல் அவ்வலூன்
முஹம்மது ஜான்
அப்படியல்ல! “இவை கலப்படமான கனவுகள்” இல்லை, “அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்” இல்லை, “இவர் ஒரு கவிஞர்தாம்” (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்” என்றும் கூறுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(தவிர, அவர்கள் நம் வசனங்களைப் பற்றி) மாறாக, ‘‘இவை சிதறிய சிந்தனை(யால் ஏற்பட்ட வாக்கியங்)கள் என்றும், நம் தூதர் இதைப் பொய்யாகத் தாமே கற்பனை செய்துகொண்டார் என்றும், இவர் ஒரு கவிஞர்தான்; (தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை) என்றும் (கூறுவதுடன்) முற்காலத்தில் அனுப்பப்பட்ட தூதர்கள் (கொண்டு வந்ததைப்) போல இவரும் (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்'' என்றும் கூறுகின்றனர்!
IFT
அதற்கு அவர்கள் கூறுகின்றார்கள்: “இவை வீண் கனவுகள்; இல்லையில்லை இவை, இவர் கற்பனை செய்து கொண்டவை. இன்னும் சொல்லப்போனால், இவர் ஒரு கவிஞரே! இல்லையென்றால் முற்காலத்து இறைத்தூதர்கள் சான்றுகளுடன் அனுப்பப்பட்டதுபோல் இவரும் நமக்கு ஒரு சான்றினைக் கொண்டுவரட்டும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதற்கவர்கள் அவ்வாறல்ல! “இவை அர்த்தமற்ற கனவுகளாகும்!, அல்ல, அவரே அதனை(ப் பொய்யாக)க் கற்பனை செய்து கொண்டார்! அல்ல, அவர் ஒரு கவிஞர்” ஆகவே, (அவர் அல்லாஹ்வின் உண்மையான தூதராக இருப்பின்) முந்தையவர்கள் (அத்தாட்சிகளுடன்) அனுப்பப்பட்டது போன்று இவரும் (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்” என்று கூறுகின்றனர்.
Saheeh International
But they say, "[The revelation is but] a mixture of false dreams; rather, he has invented it; rather, he is a poet. So let him bring us a sign just as the previous [messengers] were sent [with miracles]."
مَاۤ اٰمَنَتْ قَبْلَهُمْ مِّنْ قَرْیَةٍ اَهْلَكْنٰهَا ۚ اَفَهُمْ یُؤْمِنُوْنَ ۟
مَاۤ اٰمَنَتْநம்பிக்கை கொள்ளவில்லைقَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்مِّنْ قَرْيَةٍஎந்த சமுதாயமும்اَهْلَـكْنٰهَا‌ۚஆகவே, அவர்களை அழித்தோம்اَفَهُمْ?/எனவே, இவர்கள்يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொண்டு விடுவார்கள்
மா ஆமனத் கBப்லஹும் மின் கர்யதின் அஹ்லக்னாஹா அ-Fபஹும் யு'மினூன்
முஹம்மது ஜான்
இவர்களுக்கு முன்னர் நாம் அழித்து விட்ட எந்த ஊ(ரா)ரும் ஈமான் கொள்ளவில்லை; அவ்வாறிருக்க இவர்கள் ஈமான் கொள்வார்களா?
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு முன்னர் நாம் அழித்துவிட்ட ஊராரில் ஒருவருமே (அவர்கள் விரும்பிய அத்தாட்சிகளைக் கண்ட பின்னர்) நம்பிக்கை கொள்ளவில்லை. (அவ்வாறிருக்க) இவர்களா நம்பிக்கை கொள்ளப் போகின்றனர்!
IFT
உண்மை யாதெனில், இவர்களுக்கு முன்னால் நாம் அழிவிற்குள்ளாக்கிய எந்த ஊரும் நம்பிக்கை கொள்ளவில்லை. இனி, இவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்களுக்கு முன்னர், நாம் அதை அழித்துவிட்ட எந்த ஊ(ரா)ரும் விசுவாசங்கொள்ளவில்லை, (அவ்வாறிருக்க) இவர்கள் விசுவாசங்கொள்வார்களா?
Saheeh International
Not a [single] city which We destroyed believed before them, so will they believe?
وَمَاۤ اَرْسَلْنَا قَبْلَكَ اِلَّا رِجَالًا نُّوْحِیْۤ اِلَیْهِمْ فَسْـَٔلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
وَمَاۤ اَرْسَلْنَاநாம் அனுப்பவில்லைقَبْلَكَஉமக்கு முன்னர்اِلَّاதவிரرِجَالًاஆடவர்களைنُّوْحِىْۤவஹீ அறிவிப்போம்اِلَيْهِمْ‌அவர்களுக்குفَسْــٴَــلُوْۤاஆகவே, கேட்டறிந்து கொள்ளுங்கள்اَهْلَ الذِّكْرِவேதத்தையுடையவர்களிடம்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்لَا تَعْلَمُوْنَ‏அறியாதவர்களாக
வ மா அர்ஸல்னா கBப்லக இல்லா ரிஜாலன் னூஹீ இலய்ஹிம் Fபஸ்'அலூ அஹ்லத் திக்ரி இன் குன்தும் லா தஃலமூன்
முஹம்மது ஜான்
(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை; அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே “(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்” (என்று நபியே! அவர்களிடம் கூறும்).
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமக்கு முன்னரும் (மனிதர்களில்) ஆண்களையே தவிர வேறொருவரையும் நாம் நம் தூதராக அனுப்பவில்லை. (உமக்கு அறிவிப்பது போன்றே நம் கட்டளைகளை) அவர்களுக்கும் வஹ்யி (மூலம்) அறிவித்தோம். ஆகவே, (இவர்களை நோக்கி கூறுவீராக. இது) உங்களுக்குத் தெரியாதிருந்தால் (முன்னுள்ள வேத) ஞானமுடையவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
IFT
மேலும் (நபியே!) உமக்கு முன்னரும் நாம் மனிதர்களையே தூதர்களாக அனுப்பியுள்ளோம். அவர்களுக்கும் நாம் வஹி அருளியிருந்தோம். நீங்கள் ஞானமற்றவர்களாயிருந்தால் வேதம் அருளப்பட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) உமக்கு முன்னரும்) மனிதர்களிலிருந்து) ஆடவர்களையே அன்றி, வேறெவரையும் நாம் நம்முடைய தூதராக அனுப்பவில்லை, (உமக்கு அறிவிக்கிற பிரகாரமே) அவர்களுக்கு நாம் வஹீ அறிவித்தோம், ஆகவே, (இவர்களிடம் நீர் கூறுவீராக! இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேதத்தை) அறிந்தோரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
Saheeh International
And We sent not before you, [O Muhammad], except men to whom We revealed [the message], so ask the people of the message [i.e., former scriptures] if you do not know.
وَمَا جَعَلْنٰهُمْ جَسَدًا لَّا یَاْكُلُوْنَ الطَّعَامَ وَمَا كَانُوْا خٰلِدِیْنَ ۟
وَمَا جَعَلْنٰهُمْநாம் அவர்களை ஆக்கவில்லைجَسَدًاஉடல்களாகلَّا يَاْكُلُوْنَசாப்பிடாதالطَّعَامَஉணவுوَمَا كَانُوْاஇன்னும் இருக்கவில்லைخٰلِدِيْنَ‏நிரந்தர தன்மை உள்ளவர்களாக
வமா ஜ'அல்னாஹும் ஜஸதல் லா ய'குலூனத் த'ஆம வமா கானூ காலிதீன்
முஹம்மது ஜான்
அன்றியும் நாம் அவர்களுக்கு உணவு அருந்தாத உடலை அமைக்கவில்லை; மேலும், (பூமியில்) நிரந்தரமானவர்களாகவும் அவர்களிருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
உணவே உட்கொள்ளாத உடலை அவர்களுக்கு (தூதர்களுக்கு) நாம் கொடுக்க வில்லை. தவிர, அவர்கள் (பூமியில் என்றுமே மரணிக்காத) நிரந்தரம் பெற்றவர்களாகவும் இருக்கவில்லை.
IFT
அத்தூதர்களுக்கு உணவு உட்கொள்ளாத உடலை நாம் அளிக்கவில்லை. மேலும், அவர்கள் நித்திய ஜீவிகளாயும் இருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அவர்களுக்கு உணவே உண்ணாதிருக்கக்கூடிய உடலை நாம் ஆக்கவில்லை, மேலும், அவர்கள் (பூமியில்) நிரந்தரமானவர்களாகவும் இருக்கவில்லை.
Saheeh International
And We did not make them [i.e., the prophets] forms not eating food, nor were they immortal [on earth].
ثُمَّ صَدَقْنٰهُمُ الْوَعْدَ فَاَنْجَیْنٰهُمْ وَمَنْ نَّشَآءُ وَاَهْلَكْنَا الْمُسْرِفِیْنَ ۟
ثُمَّபிறகுصَدَقْنٰهُمُநாம் அவர்களுக்கு உண்மைப்படுத்தினோம்الْوَعْدَவாக்கைفَاَنْجَيْنٰهُمْநாம் பாதுகாத்தோம்وَمَنْ نَّشَآءُநாம் நாடியவர்களையும்وَاَهْلَكْنَاநாம் அழித்தோம்الْمُسْرِفِيْنَ‏வரம்பு மீறியவர்களை
தும்ம ஸதக்னா ஹுமுல் வஃத Fப-அன்ஜய்னாஹும் வ மன் னஷா'உ வ அஹ்லக்னல் முஸ்ரிFபீன்
முஹம்மது ஜான்
பின்னர், (நம்) வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம்; அவ்வாறு நாம் அவர்களையும், நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம்; ஆனால் வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், (அவர்களை பாதுகாத்துக் கொள்வதாக நாம்) அவர்களுக்களித்த வாக்குறுதியை உண்மையாக்கும் பொருட்டு அவர்களையும், நாம் விரும்பிய மற்றவர்களையும் பாதுகாத்துக் கொண்டு வரம்புமீறியவர்களை அழித்துவிட்டோம்.
IFT
பின்னர் பாருங்கள், நாம் அவர்களிடம் அளித்திருந்த வாக்குறுதியையும் நிறைவேற்றினோம். மேலும் அவர்களையும், நாம் யார் யாரை நாடினோமோ அவர்கள் அனைவரையும் காப்பாற்றினோம். மேலும், வரம்பு மீறியவர்களை அழித்து விட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், (அவர்களைக் காப்பாற்றுவதாக,) அவர்களுக்கு (அளித்த) வாக்குறுதியை நாம் உண்மையாக்கினோம், ஆகவே அவர்களையும், நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம், வரம்பு மீறியவர்களை நாம் அழித்தும் விட்டோம்.
Saheeh International
Then We fulfilled for them the promise, and We saved them and whom We willed and destroyed the transgressors.
لَقَدْ اَنْزَلْنَاۤ اِلَیْكُمْ كِتٰبًا فِیْهِ ذِكْرُكُمْ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠
لَقَدْதிட்டமாகاَنْزَلْنَاۤஇறக்கி இருக்கிறோம்اِلَيْكُمْஉங்களுக்குكِتٰبًاஒரு வேதத்தைفِيْهِஅதில்ذِكْرُكُمْ‌ؕஉங்களைப் பற்றிய சிறப்பு இருக்கிறதுاَفَلَا تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
லகத் அன்Zஜல்னா இலய்கும் கிதாBபன் Fபீஹி திக்ருகும் அFபலா தஃகிலூன்
முஹம்மது ஜான்
உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா?  
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு(ப் போதுமான) நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக உங்களுக்கு அருளியிருக்கிறோம். இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
IFT
(மக்களே!) உங்களுக்கு ஒரு வேதத்தை அனுப்பியுள்ளோம். அதில் உங்களைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. என்ன, நீங்கள் அறிந்துகொள்ள மாட்டீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக, உங்கள் பால் ஒரு வேதத்தை நாம் இறக்கி இருக்கிறோம் - அதில் உங்களுடைய நினைவுகூர்தல் (உங்களைப்பற்றிய சிறப்பு) இருக்கிறது, (அதை) நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?
Saheeh International
We have certainly sent down to you a Book [i.e., the Qur’an] in which is your mention. Then will you not reason?
وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْیَةٍ كَانَتْ ظَالِمَةً وَّاَنْشَاْنَا بَعْدَهَا قَوْمًا اٰخَرِیْنَ ۟
وَكَمْஎத்தனையோقَصَمْنَاநாம் அழித்தோம்مِنْ قَرْيَةٍபல ஊர்களைكَانَتْஅவை இருந்தனظَالِمَةًதீயவையாகوَّاَنْشَاْنَاஉருவாக்கினோம்بَعْدَهَاஅவற்றுக்குப் பின்னர்قَوْمًا اٰخَرِيْنَ‏வேறு மக்களை
வ கம் கஸம்னா மின் கர்யதின் கானத் ளாலிமத(ன்)வ் வ அன்ஷ' னா Bபஃதஹா கவ்மன் ஆகரீன்
முஹம்மது ஜான்
மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையோ நாம் அழித்தோம்; அதற்குப் பின் (அங்கு) வேறு சமூகத்தை உண்டாக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
அநியாயக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்து நாசமாக்கி விட்டோம். அவர்களுக்குப் பின்னர் (அவ்விடத்தில்) வேறு மக்களை உற்பத்தி செய்தோம்.
IFT
கொடுமைகள் புரிந்துகொண்டிருந்த எத்தனையோ ஊர்களை நாம் தகர்த்தெறிந்திருக்கிறோம். அதற்குப் பின் வேறு ஒரு சமூகத்தைத் தோற்றுவித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அநியாயம் செய்து கொண்டிருந்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்து விட்டோம், அதற்குப் பின்னர், (அவ்விடத்தில்) வேறு சமூகத்தவர்களை உண்டாக்கினோம்.
Saheeh International
And how many a city which was unjust have We shattered and produced after it another people.
فَلَمَّاۤ اَحَسُّوْا بَاْسَنَاۤ اِذَا هُمْ مِّنْهَا یَرْكُضُوْنَ ۟ؕ
فَلَمَّاۤ اَحَسُّوْاஅவர்கள் உணர்ந்தபோதுبَاْسَنَاۤநமது வேதனையைاِذَا هُمْஅப்போது அவர்கள்مِّنْهَاஅதிலிருந்துيَرْكُضُوْنَؕ‏விரைந்து ஓடினர்
Fபலம்மா அஹஸ்ஸூ Bப'ஸனா இதா ஹும் மின்ஹா யர்குளூன்
முஹம்மது ஜான்
ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்தபோது, அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களும் நம் வேதனையின் அறிகுறியை உணர்ந்து கொண்ட மாத்திரத்தில் தங்கள் ஊரைவிட்டு விரைந்து ஓட ஆரம்பித்தார்கள்.
IFT
நம்முடைய வேதனைச் சாட்டை தங்கள் மீது படப் போகிறது என அவர்கள் உணர்ந்தபோது, அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் மீது வேதனையை (அது அவர்களுக்கு வரவிருப்பதை) உணர்ந்து கொண்டபொழுது, அதே சமயம் அவர்கள் அங்கிருந்து (துரிதமாக) வெருண்டோடலானார்கள்.
Saheeh International
And when they [i.e., its inhabitants] perceived Our punishment, at once they fled from it.
لَا تَرْكُضُوْا وَارْجِعُوْۤا اِلٰی مَاۤ اُتْرِفْتُمْ فِیْهِ وَمَسٰكِنِكُمْ لَعَلَّكُمْ تُسْـَٔلُوْنَ ۟
لَا تَرْكُضُوْاவிரைந்து ஓடாதீர்கள்وَ ارْجِعُوْۤاதிரும்புங்கள்اِلٰى مَاۤஎதன் பக்கம்اُتْرِفْتُمْநீங்கள் பெரும் இன்பம் கொடுக்கப்பட்டீர்கள்فِيْهِஅதில்وَمَسٰكِنِكُمْஉங்கள் இல்லங்களின்لَعَلَّكُمْ تُسْـٴَــلُوْنَ‏நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்
லா தர்குளூ வர்ஜி'ஊ இலா மா உத்ரிFப்தும் Fபீஹி வ மஸாகினிகும் ல'அல்லகும் துஸ்'அலூன்
முஹம்மது ஜான்
“விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுக போகங்களுக்கும், உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக” (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது).
அப்துல் ஹமீது பாகவி
(அச்சமயம் நாம் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் வேகமாக ஓடாதீர்கள்! நீங்கள் மிக்க ஆடம்பரமாக அனுபவித்து வந்த செல்வத்தின் பக்கமும், உங்கள் வீடுகளுக்கும் நீங்கள் திரும்புங்கள். அங்கு நீங்கள் அது பற்றி கேட்கப்படுவீர்கள்'' (என்று கூறினோம்.)
IFT
(அப்போது கூறப்பட்டது:) “ஓடாதீர்கள்! நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்த ஆடம்பர வாழ்வு மற்றும் இன்புற்று வாழ்ந்த இல்லங்கள் ஆகியவற்றை நோக்கிச் செல்லுங்கள். நீங்கள் அவற்றைப் பற்றி வினவப்படக் கூடும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அது சமயம்) “நீங்கள் வெருண்டோடாதீர்கள்! எதில் நீங்கள் சுகபோக வாழ்வு கொடுக்கப்பட்டிருந்தீர்களோ அதன்பாலும், இன்னும் உங்கள் குடியிருப்புகளின்பாலும் திரும்பிச் செல்லுங்கள், நீங்கள் (அதுபற்றிக்) கேட்கப்படலாம்” (என்று கூறினோம்).
Saheeh International
[Some angels said], "Do not flee but return to where you were given luxury and to your homes - perhaps you will be questioned."
قَالُوْا یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்يٰوَيْلَنَاۤஎங்கள் நாசமேاِنَّا كُنَّاநிச்சயமாக நாங்கள் இருந்தோம்ظٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களாக
காலூ யா வய்லனா இன்னா குன்னா ளாலிமீன்
முஹம்மது ஜான்
(இதற்கு அவர்கள்) “எங்கள் கேடே! நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று வருந்திக் கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘எங்கள் கேடே! நிச்சயமாக நாங்கள் (வரம்பு மீறிய) தீயவர்களாக இருந்தோம்'' என்று கூக்குரலிட்டார்கள்.
IFT
அதற்கு அவர்கள் புலம்பலானார்கள்: “அந்தோ, எங்கள் துர்பாக்கியமே! திண்ணமாக, நாங்கள் அக்கிரமக்காரர்களாயிருந்தோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள்” எங்களுடைய கேடே! நிச்சயமாக நாங்கள் (இரட்சகனை மறுத்து) அநியாயக்காரர்களாக இருந்தோம்” என (வருந்தி)க் கூறினார்கள்.
Saheeh International
They said, "O woe to us! Indeed, we were wrongdoers."
فَمَا زَالَتْ تِّلْكَ دَعْوٰىهُمْ حَتّٰی جَعَلْنٰهُمْ حَصِیْدًا خٰمِدِیْنَ ۟
فَمَا زَالَتْநீடித்திருந்ததுتِّلْكَஅதுவேدَعْوٰٮهُمْஅவர்களது கூப்பாடாகحَتّٰىஇறுதியாகجَعَلْنٰهُمْஅவர்களை நாம் ஆக்கிவிட்டோம்حَصِيْدًاவெட்டப்பட்டவர்களாகخٰمِدِيْنَ‏அழிந்தவர்களாக
Fபமா Zஜாலத் தில்க தஃவாஹும் ஹத்தா ஜஹல்னாஹும் ஹஸீதன் காமிதீன்
முஹம்மது ஜான்
அறுவடை செய்யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தழிவது போன்று அவர்களை நாம் ஆக்கும் வரை அவர்களுடைய இக்கூப்பாடு ஓயவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய அக்கூக்குரல் அவர்களை நாம் அழித்துச் சாம்பலாக்கும் வரை நீடித்திருந்தது.
IFT
தொடர்ந்து அவர்கள் புலம்பிக் கொண்டே இருந்தார்கள். எதுவரையெனில், வாழ்வின் ஒரு பொறியும் அவர்களிடம் எஞ்சி நிற்காத அளவுக்கு, அரிதாள்கள் அழிக்கப்படுவதுபோல் நாம் அவர்களை அழிக்கும்வரை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அறுவடை செய்யப்பட்ட (வயலின்) அரிதாள்களைப் போன்று கரிந்து அழிந்து விட்டவர்களாக நாம் அவர்களை ஆக்கும் வரையில் (எங்களுடைய கேடே! என்ற) இதுவே அவர்களின் அழைப்பாக, (கூப்பாடாக) நீங்காமல் இருந்தது.
Saheeh International
And that declaration of theirs did not cease until We made them [as] a harvest [mowed down], extinguished [like a fire].
وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا لٰعِبِیْنَ ۟
وَمَا خَلَقْنَاநாம் படைக்கவில்லைالسَّمَآءَவானத்தையும்وَالْاَرْضَபூமியையும்وَمَا بَيْنَهُمَاஅவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும்لٰعِبِيْنَ‏விளையாடுபவர்களாக
வமா கலக்னஸ் ஸமா'அ வல் அர்ள வமா Bபய்னஹுமா லா'இBபீன்
முஹம்மது ஜான்
மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவற்றையும் வீண் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
IFT
நாம் இந்த வானத்தையும் பூமியையும், அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக படைக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானையும், பூமியையும், அவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் விளையாடியவர்களாக (வீண் விளையாட்டுக்காக) நாம் படைக்கவில்லை.
Saheeh International
And We did not create the heaven and earth and that between them in play.
لَوْ اَرَدْنَاۤ اَنْ نَّتَّخِذَ لَهْوًا لَّاتَّخَذْنٰهُ مِنْ لَّدُنَّاۤ ۖۗ اِنْ كُنَّا فٰعِلِیْنَ ۟
لَوْ اَرَدْنَاۤநாம் நாடி இருந்தால்اَنْ نَّـتَّخِذَநாம் ஏற்படுத்திக் கொள்ளلَهْوًاவேடிக்கையைلَّا تَّخَذْنٰهُஅதை ஏற்படுத்திக் கொண்டிருப்போம்مِنْ لَّدُنَّاۤநம்மிடமிருந்தேۖ  اِنْ كُنَّاநாம் இல்லைفٰعِلِيْنَ‏செய்பவர்களாக
லவ் அரத்னா அன் னத்தகித லஹ்வல் லத் தகத்னாஹு மில் லதுன்னா இன் குன்னா Fபா'இலீன்
முஹம்மது ஜான்
வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்துக்கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் வீண் விளையாட்டுக்காரனாக இருந்து விளையாட வேண்டும் என்று நாம் கருதியும் இருந்தால் நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை நாம் எடுத்து (விளையாடி)க் கொண்டிருப்போம்.
IFT
விளையாட்டிற்காக நாம் ஏதேனும் ஒன்றைச் செய்ய நாடியிருந்தால் அதை மட்டுமே நாம் செய்ய வேண்டும் என்றிருந்தால் நம் சார்பாகவே அதனைச் செய்துவிட்டிருப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(வீண்) விளையாட்டுக்கென (மனைவி, மக்கள் கொண்ட) எதனையும் ஆக்கிக்கொள்ள நாம் நாடி, (அதை) செய்வோராக நாம் இருந்திருப்பின் நம்மிடத்தில் உள்ளவற்றிலிருந்தே அதை நாம் எடுத்துக் கொண்டிருப்போம்.
Saheeh International
Had We intended to take a diversion, We could have taken it from [what is] with Us - if [indeed] We were to do so.
بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَی الْبَاطِلِ فَیَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌ ؕ وَلَكُمُ الْوَیْلُ مِمَّا تَصِفُوْنَ ۟
بَلْமாறாகنَـقْذِفُஎறிகிறோம்بِالْحَـقِّசத்தியத்தைعَلَى الْبَاطِلِஅசத்தியத்தின் மீதுفَيَدْمَغُهٗஅது அதை உடைத்து விடுகிறதுفَاِذَاஅப்போதுهُوَஅதுزَاهِقٌ‌ ؕஅழிந்து விடுகிறதுوَلَـكُمُஉங்களுக்குالْوَيْلُநாசம்தான்مِمَّا تَصِفُوْنَ‏வர்ணிப்பதால்
Bபல் னக்திFபு Bபில்ஹக்கி 'அலல் Bபாதிலி Fப யத்மகுஹூ Fப இதா ஹுவ Zஜாஹிக்; வ லகுமுல் வய்லு மிம்மா தஸிFபூன்
முஹம்மது ஜான்
அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறன்று; மெய்யைப் பொய்யின் மீது எறிகிறோம். அது அதை (அதன் தலையை) உடைத்து விடுகிறது. பின்னர் அது அழிந்தும் விடுகிறது. (ஆகவே, இறைவனைப் பற்றி அவனுக்கு மனைவி உண்டென்றும், சந்ததி உண்டென்றும்) நீங்கள் கூறுபவற்றின் காரணமாக உங்களுக்குக் கேடுதான்.
IFT
ஆயினும், நாம் சத்தியத்தைக் கொண்டு அசத்தியத்திற்கு அடி கொடுக்கின்றோம். அது, அசத்தியத்தின் தலையைப் பெயர்த்துவிடுகின்றது. பிறகு பார்த்துக் கொண்டிருக்கவே அசத்தியம் அழிந்தும் விடுகின்றது. நீங்கள் இட்டுக்கட்டிய பேச்சின் காரணத்தால் உங்களுக்குக் கேடுதான் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்வாறன்று! சத்தியத்தை அசத்தியத்தின் மீது எறிகின்றோம், அ(ந்த சத்தியமான)து அ(சத்தியத்)தை அடக்கி விடுகின்றது, உடனே அது அழிந்து விடுகின்றது, அல்லாஹ்வைப் பற்றி அவனுக்கு தகுதியற்றவைகளை(க் கூறி) நீங்கள் வர்ணிப்பதிலிருந்து உங்களுக்குக் கேடுதான் (உண்டு)
Saheeh International
Rather, We dash the truth upon falsehood, and it destroys it, and thereupon it departs. And for you is destruction from that which you describe.
وَلَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَمَنْ عِنْدَهٗ لَا یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَلَا یَسْتَحْسِرُوْنَ ۟ۚ
وَلَهٗஅவனுக்கேمَنْஎவர்கள்فِى السَّمٰوٰتِவானங்களிலும்وَالْاَرْضِ‌ؕபூமியிலும்وَمَنْஇன்னும் எவர்கள்عِنْدَهٗஅவனிடம்لَا يَسْتَكْبِرُوْنَபெருமையடிக்க மாட்டார்கள்عَنْ عِبَادَتِهٖஅவனை வணங்குவதைவிட்டுوَلَا يَسْتَحْسِرُوْنَ‌ۚ‏இன்னும் சோர்வடைய மாட்டார்கள்
வ லஹூ மன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ மன் 'இன்தஹூ லா யஸ்தக்Bபிரூன 'அன் 'இBபாத திஹீ வலா யஸ்தஹ்ஸிரூன்
முஹம்மது ஜான்
வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவுமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுக்குரியனவே! அவனிடத்தில் இருக்கக்கூடிய (வானவர்களாயினும் சரி; அவர்களும் அவனுடைய அடியார்களே! அ)வர்கள் அவனை வணங்காது பெருமை அடிக்கவும் மாட்டார்கள், சோர்வுறவும் மாட்டார்கள்.
IFT
வானங்களிலும், பூமியிலும் உள்ள படைப்பினங்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எவர்கள் அவன் அருகில் இருக்கின்றார்களோ (அதாவது வானவர்கள்) அவர்கள் கர்வம் கொண்டு அவனுக்கு அடிபணிய மறுப்பதில்லை; களைத்துப் போவதுமில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களிலும், பூமியிலும் உள்ளோர் அவனுக்கே உரியவர்கள், மேலும் அவனிடமிருப்பவர்கள் (ஆகிய மலக்குகள்) அவனை வணங்குவதை விட்டும் பெருமையடிக்க மாட்டார்கள், சோர்வடையவுமாட்டார்கள்.
Saheeh International
To Him belongs whoever is in the heavens and the earth. And those near Him [i.e., the angels] are not prevented by arrogance from His worship, nor do they tire.
یُسَبِّحُوْنَ الَّیْلَ وَالنَّهَارَ لَا یَفْتُرُوْنَ ۟
يُسَبِّحُوْنَஅவர்கள் துதிக்கின்றனர்الَّيْلَஇரவுوَالنَّهَارَபகலாகلَا يَفْتُرُوْنَ‏பலவீனப்படுவதில்லை
யுஸBப்Bபிஹூன லய்ல வன்னஹார லா யFப்துரூன்
முஹம்மது ஜான்
இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் இரவு பகல் எந்நேரமும் இடைவிடாது அவனைப் போற்றி புகழ்ந்து துதித்துக் கொண்டே இருக்கின்றனர்.
IFT
(மாறாக) இரவு பகல் எந்நேரமும் அவனைப் புகழ்ந்து துதி பாடிக்கொண்டேயிருக்கின்றார்கள்; சோர்வடைவதும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் இரவிலும், பகலிலும் துதி செய்கின்றனர், (ஆனால் அதில்) அவர்கள் தளர்ச்சியடையமாட்டார்கள்.
Saheeh International
They exalt [Him] night and day [and] do not slacken.
اَمِ اتَّخَذُوْۤا اٰلِهَةً مِّنَ الْاَرْضِ هُمْ یُنْشِرُوْنَ ۟
اَمِ اتَّخَذُوْۤاஎடுத்துக் கொண்டார்களா?اٰلِهَةًகடவுள்களைمِّن الْاَرْضِபூமியில்هُمْஅவர்கள்يُنْشِرُوْنَ‏உயிர்ப்பிக்கின்ற கடவுள்களை
அமித் தகதூ ஆலிஹதம் மினல் அர்ளி ஹும் யுன்ஷிரூன்
முஹம்மது ஜான்
பூமியில் உள்ளவற்றிலிருந்து இவர்கள் தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்களே! அவை (இறந்தோரை) உயிர் கொடுத்து எழுப்புமா?
அப்துல் ஹமீது பாகவி
பூமியில் உள்ளவற்றை இவர்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரே அவை (மரணித்தவர்களை) உயிர்ப்பிக்குமா?
IFT
இவர்கள் உருவாக்கிய பூலோக தெய்வங்கள் (உயிரில்லாதவற்றிற்கு உயிர் கொடுத்து) எழுப்பிக் கொண்டு வரக்கூடியவையா, என்ன!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியிலுள்ளவற்றிலிருந்து அவர்கள் (வணக்கத்திற்குரிய) தெய்வங்காளக எடுத்துக் கொண்டிருக்கின்றனரே அவர்கள் (மரணித்தோரை) உயிர் கொடுத்து எழுப்புவார்களா?
Saheeh International
Or have they [i.e., men] taken for themselves gods from the earth who resurrect [the dead]?
لَوْ كَانَ فِیْهِمَاۤ اٰلِهَةٌ اِلَّا اللّٰهُ لَفَسَدَتَا ۚ فَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعَرْشِ عَمَّا یَصِفُوْنَ ۟
لَوْ كَانَஇருந்திருந்தால்فِيْهِمَاۤஅவை இரண்டிலும்اٰلِهَةٌகடவுள்கள்اِلَّا اللّٰهُஅல்லாஹ்வைத் தவிரلَـفَسَدَتَا‌ۚஅவை இரண்டும் சீரழிந்து இருக்கும்فَسُبْحٰنَமகாத் தூயவன்اللّٰهِஅல்லாஹ்رَبِّஅதிபதியானالْعَرْشِஅர்ஷுடையعَمَّاவிட்டுيَصِفُوْنَ‏அவர்கள் வர்ணிப்பதை
லவ் கான Fபீஹிமா ஆலிஹதுன் இல்லல் லாஹு லFபஸததா; Fப-ஸுBப்ஹானல் லாஹி ரBப்Bபில் 'அர்ஷி 'அம்மா யஸிFபூன்
முஹம்மது ஜான்
(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன்.
IFT
வானத்திலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனைத் தவிர மற்ற கடவுளர்களும் இருந்திருந்தால் அவ்விரண்டின் ஒழுங்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும். எனவே, அவர்களின் பொய்யான வர்ணனையிலிருந்து ‘அர்ஷு’க்கு* உரியவனான அல்லாஹ் மிகப் புனிதமானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(வானங்கள், பூமி ஆகிய) அவை இரண்டிலும் அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய) வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், அவை இரண்டும் சீர்குலைந்து (அழிந்து) போயிருக்கும், ஆகவே, அர்ஷின் இரட்சகனாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகப்பரிசுத்தமானவன்.
Saheeh International
Had there been within them [i.e., the heavens and earth] gods besides Allah, they both would have been ruined. So exalted is Allah, Lord of the Throne, above what they describe.
لَا یُسْـَٔلُ عَمَّا یَفْعَلُ وَهُمْ یُسْـَٔلُوْنَ ۟
لَا يُسْـٴَــلُஅவன் கேள்வி கேட்கப்பட மாட்டான்عَمَّاபற்றிيَفْعَلُஅவன் செய்வதைوَهُمْஅவர்கள்தான்يُسْـٴَـــلُوْنَ‏கேள்வி கேட்கப்படுவார்கள்
லா யுஸ்'அலு 'அம்மா யFப்'அலு வ ஹும் யுஸ்'அலூன்
முஹம்மது ஜான்
அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது; ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் செய்பவற்றைப் பற்றி (ஏன் செய்தாய், எதற்காகச் செய்தாய் என்று) எவருமே அவனைக் கேட்க முடியாது. (அவ்வளவு சர்வ சுதந்திரமும், வல்லமையும் உள்ளவன் அவன்.) எனினும், படைப்புகள்தான் (அவரவர்களுடைய செயலைப் பற்றிக்) கேட்கப்படுவார்கள்.
IFT
அவன் தன்னுடைய செயல்களுக்கு (எவர் முன்னிலையிலும்) பதில் சொல்ல வேண்டியவனல்லன். மற்றவர்கள் அனைவரும் பதில் சொல்ல வேண்டியவர்களே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் செய்பவைகளைப் பற்றி, (எவராலும் விசாரணை செய்து) அவன் கேட்கப்பட மாட்டான், (ஆனால்) அவர்கள்தாம் (அவனால் விசாரணை செய்து) கேட்கப்படுவர்.
Saheeh International
He is not questioned about what He does, but they will be questioned.
اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً ؕ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ ۚ هٰذَا ذِكْرُ مَنْ مَّعِیَ وَذِكْرُ مَنْ قَبْلِیْ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۙ الْحَقَّ فَهُمْ مُّعْرِضُوْنَ ۟
اَمِ اتَّخَذُوْاஅவர்கள் எடுத்துக் கொண்டார்களா?مِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاٰلِهَةً  ؕகடவுள்களைقُلْகூறுவீராகهَاتُوْاகொண்டு வாருங்கள்بُرْهَانَكُمْ‌ ۚஉங்கள் ஆதாரத்தைهٰذَاஇதுذِكْرُபேச்சாகும்مَنْ مَّعِىَஎன்னுடன் உள்ளவர்களைப் பற்றிوَذِكْرُஇன்னும் பேச்சாகும்مَنْ قَبْلِىْ‌ ؕஎனக்கு முன் உள்ளவர்களைப் பற்றிبَلْமாறாகاَكْثَرُهُمْஅவர்களில் அதிகமானவர்கள்لَا يَعْلَمُوْنَ ۙஅறியமாட்டார்கள்الْحَـقَّ‌சத்தியத்தைفَهُمْஆகவே, அவர்கள்مُّعْرِضُوْنَ‏புறக்கணிக்கிறார்கள்
அமித் தகதூ மின் தூனிஹீ ஆலிஹதன் குல் ஹாதூ Bபுர்ஹானகும் ஹாத திக்ரு மம் ம'இய வ திக்ரு மன் கBப்லீ; Bபல் அக்தருஹும் லா யஃலமூனல் ஹக்க Fபஹும் முஃரிளூன்
முஹம்மது ஜான்
அல்லது, அவர்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? “அப்படியாயின், உங்கள் அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்; இதோ என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்பு இருந்தவர்களின் வேதமும் இருக்கின்றன” என்று நபியே! நீர் கூறும்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை; ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றைக் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் அவர்களை நோக்கி) ''என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்னுள்ளவர்களின் வேதமும் இதோ இருக்கின்றன. (இவற்றிலிருந்து இதற்கு) உங்கள் ஆதாரத்தை நீங்கள் கொண்டு வாருங்கள்'' என்று கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையை அறிந்து கொள்ள சக்தி அற்றவர்கள். ஆதலால் அவர்கள் (இவ்வேதத்தையும்) புறக்கணிக்கின்றனர்.
IFT
அவனை விடுத்து அவர்கள் மற்ற கடவுள்களை ஏற்றுக்கொண்டார்களா? (நபியே! இவர்களிடம்) கூறும்: “உங்களின் சான்றினைக் கொண்டு வாருங்கள். இந்த வேதமும் இருக்கிறது. இதில் நான் வாழும் காலத்தைச் சார்ந்தவர்களுக்கு அறிவுரை நல்கப்பட்டுள்ளது. மேலும், எனக்கு முன் சென்றுபோன மக்களுக்கு அறிவுரை வழங்கிய வேதங்களும் இருக்கின்றன.” ஆயினும், அவர்களில் பெரும்பாலோர் உண்மையைப் புரியாதவர்களாய் இருக்கின்றனர்; எனவே, அவர்கள் முகம் திருப்பிச் செல்பவர்களாய் இருக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அவர்கள் அவனையன்றி (வணக்கத்திற்குரிய) வேறு தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? “(அவ்வாறாயின், அது பற்றிய) உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள், (இன்னும், அவர்களிடம்) இது (-குர் ஆன்) என்னுடன் இருப்பவர்களின் உபதேசமும், எனக்கு முன் சென்றவர்களின் உபதேசமுமாகும்” என்று கூறுவீராக! எனினும் அவர்களில் பெரும்பாலோர் உண்மையை அறிந்து கொள்ள மாட்டார்கள், ஆகவே, (இதனை) அவர்கள் புறக்கணிக்கக் கூடியவர்கள்.
Saheeh International
Or have they taken gods besides Him? Say, [O Muhammad], "Produce your proof. This [Qur’an] is the message for those with me and the message of those before me." But most of them do not know the truth, so they are turning away.
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ اِلَّا نُوْحِیْۤ اِلَیْهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدُوْنِ ۟
وَمَاۤ اَرْسَلْنَاநாம் அனுப்பவில்லைمِنْ قَبْلِكَஉமக்கு முன்னர்مِنْ رَّسُوْلٍஎந்த தூதரையும்اِلَّاதவிரنُوْحِىْۤநாம் வஹீ அறிவித்தோம்اِلَيْهِஅவர்களுக்குاَنَّهٗநிச்சயமாக விஷயமாவதுلَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاۤ اَنَاஎன்னைத் தவிரفَاعْبُدُوْنِ‏ஆகவே, என்னையே வணங்குங்கள்
வ மா அர்ஸல்னா மின் கBப்லிக மிர் ரஸூலின் இல்லா னூஹீ இலய்ஹி அன்னஹூ லா இலாஹ இல்லா அன FபஃBபுதூன்
முஹம்மது ஜான்
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம், ‘‘நிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லவே இல்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹ்யி அறிவிக்காமலில்லை.
IFT
உமக்கு முன்னர் நாம் அனுப்பிய எந்தத் தூதரிடத்திலும், “நிச்சயமாக என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, என்னையே நீங்கள் அடிபணிய வேண்டும்” என்றே வஹி*யின் மூலம் நாம் அறிவித்திருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக என்னைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் இல்லை, எனவே, என்னையே நீங்கள் வணங்க வேண்டும் என்று நாம் வஹீ அறிவிக்காமல் (நபியே!) உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை.
Saheeh International
And We sent not before you any messenger except We revealed to him that, "There is no deity except Me, so worship Me."
وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا سُبْحٰنَهٗ ؕ بَلْ عِبَادٌ مُّكْرَمُوْنَ ۟ۙ
وَقَالُواஅவர்கள் கூறுகின்றனர்اتَّخَذَஎடுத்துக் கொண்டான்الرَّحْمٰنُபேரருளாளன்وَلَدًا‌ஒரு குழந்தையைسُبْحٰنَهٗ‌ ؕஅவன் மகா தூயவன்بَلْமாறாகعِبَادٌஅடியார்கள்مُّكْرَمُوْنَ ۙ‏அவனுடைய கண்ணியமான
வ காலுத் தகதர் ரஹ்மானு வலதா; ஸுBப்ஹானஹு Bபல் 'இBபாதும் முக்ரமூன்
முஹம்மது ஜான்
அவர்கள்: “அர்ரஹ்மான் ஒரு குமாரனைத் தனக்கென எடுத்துக் கொண்டிருக்கின்றான்” என்று கூறுகிறார்கள்; (ஆனால்) அவனோ மிகவும் தூயவன்! அப்படியல்ல: (அல்லாஹ்வின் குமாரர்கள் என்று இவர்கள் கூறுவோரெல்லோரும் அல்லாஹ்வின்) கண்ணியமிக்க அடியார்களே ஆவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறிருந்தும்) ரஹ்மான் (வானவர்களை தனக்குப் பெண்) சந்ததியாக்கிக் கொண்டான் என்று இவர்கள் கூறுகின்றனர். அவனோ மிகப் பரிசுத்தமானவன். (வானவர்கள் அவனுடைய சந்ததிகளன்று,) எனினும், (அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள் ஆவர்.
IFT
(கருணைமிக்க இறைவனாகிய) ரஹ்மானுக்கு பிள்ளைகள் உண்டு என்று அவர்கள் கூறுகின்றார்கள். அவன் மிகத் தூய்மையானவன்! உண்மையில் அவர்கள் (வானவர்கள்) அடியார்களாவர். அவர்களுக்குக் கண்ணியம் அளிக்கப்பட்டிருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள், “அர்ரஹ்மான் (தனக்காக) குமாரனை எடுத்துக் கொண்டான்” என்று கூறுகின்றனர், அவன் மிகப் பரிசுத்தமானவன், (மலக்குகள் அவனுடைய சந்ததிகள்) அல்ல. (அவர்கள் அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள்.
Saheeh International
And they say, "The Most Merciful has taken a son." Exalted is He! Rather, they are [but] honored servants.
لَا یَسْبِقُوْنَهٗ بِالْقَوْلِ وَهُمْ بِاَمْرِهٖ یَعْمَلُوْنَ ۟
لَا يَسْبِقُوْنَهٗஅவர்கள் அவனை முந்தமாட்டார்கள்بِالْقَوْلِபேச்சில்وَهُمْஅவர்கள்بِاَمْرِهٖஅவனுடைய கட்டளைக் கொண்டேيَعْمَلُوْنَ‏செய்கின்றனர்
லா யஸ்Bபிகூனஹூ Bபில் கவ்லி வ ஹும் Bபி அம்ரிஹீ யஃமலூன்
முஹம்மது ஜான்
அவர்கள் (எந்த ஒரு பேச்சையும்) அவனை முந்திப் பேச மாட்டார்கள்; அவர்கள் அவன் கட்டளைப் படியே (எதையும்) செய்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவனுக்கு முன்னால்) இ(வ்வான)வர்கள் ஒரு வார்த்தையும் மீறிப் பேச மாட்டார்கள். அவன் இட்ட கட்டளையை இவர்கள் செய்து கொண்டு இருப்பார்கள்.
IFT
அவர்கள் அவனது திருமுன் யாதொரு வார்த்தையையும் மீறிப் பேசுவதில்லை. அவனது கட்டளை எதுவோ அதன்படியே செயல்படுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சொல்லைக்கொண்டு அவனை அவர்கள் முந்தவுமாட்டார்கள், அவர்களோ அவனின் கட்டளையைக் கொண்டு செயல்படுவார்கள்.
Saheeh International
They cannot precede Him in word, and they act by His command.
یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا یَشْفَعُوْنَ ۙ اِلَّا لِمَنِ ارْتَضٰی وَهُمْ مِّنْ خَشْیَتِهٖ مُشْفِقُوْنَ ۟
يَعْلَمُஅவன் நன்கறிவான்مَا بَيْنَ اَيْدِيْهِمْஅவர்களுக்கு முன் உள்ளதையும்وَمَا خَلْفَهُمْஅவர்களுக்குப் பின் உள்ளதையும்وَ لَا يَشْفَعُوْنَۙஅவர்கள் சிபாரிசு செய்ய மாட்டார்கள்اِلَّاதவிரلِمَنِ ارْتَضٰىஅவன் விரும்பியவர்களுக்கேوَهُمْஅவர்கள்مِّنْ خَشْيَـتِهٖஅவனுடைய அச்சத்தால்مُشْفِقُوْنَ‏பயப்படுகிறார்கள்
யஃலமு மா Bபய்ன அய்தீஹிம் வமா கல்Fபஹும் வலா யஷ்Fப'ஊன இல்லா லிமனிர் தளா வ ஹும் மின் கஷ் யதிஹீ முஷ்Fபிகூன்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த் தகைய)வருக்கன்றி - அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள். இன்னும் அவர்கள் அவன் பால் உள்ள அச்சத்தால் நடுங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு முன்னிருப்பவற்றையும், பின்னிருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர்களுக்கே தவிர மற்றெவருக்கும் இவர்கள் சிபாரிசு செய்யமாட்டார்கள். இன்னும், அவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார்கள்.
IFT
அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவன் அறிகின்றான்; அவர்களுக்கு மறைவாக இருப்பவற்றையும் அவன் அறிகின்றான். அவர்கள் யாருக்கும் பரிந்துரை செய்வதில்லை; எவருக்காகப் பரிந்துரை செய்வதை அல்லாஹ் விரும்புகின்றானோ அவர்களுக்காகத் தவிர! மேலும், அவர்கள் அவனுடைய அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு முன்னிருப்பவற்றையும் பின்னிருப்பவற்றையும் அவன் நன்கறிவான், அவன் பொருந்திக் கொண்டவரைத் தவிர (மற்றெவருக்கும்) இவர்கள் பரிந்துரை செய்யவுமாட்டார்கள், இன்னும் அவனது பயத்தால் அவர்கள் நடுங்குபவர்களாவர்.
Saheeh International
He knows what is [presently] before them and what will be after them, and they cannot intercede except on behalf of one whom He approves. And they, from fear of Him, are apprehensive.
وَمَنْ یَّقُلْ مِنْهُمْ اِنِّیْۤ اِلٰهٌ مِّنْ دُوْنِهٖ فَذٰلِكَ نَجْزِیْهِ جَهَنَّمَ ؕ كَذٰلِكَ نَجْزِی الظّٰلِمِیْنَ ۟۠
وَمَنْ يَّقُلْயார் கூறுவாரோمِنْهُمْஅவர்களில்اِنِّىْۤநிச்சயமாக நான்தான்اِلٰـهٌகடவுள்مِّنْ دُوْنِهٖஅவனையன்றிفَذٰلِكَஅவர்نَجْزِيْهِஅவருக்கு கூலியாக கொடுப்போம்جَهَـنَّمَ‌ؕநரகத்தையேكَذٰلِكَஇவ்வாறுதான்نَجْزِىகூலி கொடுப்போம்الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களுக்கு
வ மய் யகுல் மின்ஹும் இன்னீ இலாஹும் மின் தூனிஹீ Fபதாலிக னஜ்Zஜீஹி ஜஹன்னம்; கதாலிக னஜ்Zஜிள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
இன்னும், அவர்களில் எவரேனும் “அவனன்றி நிச்சயமாக நானும் நாயன்தான்” என்று கூறுவாரேயானால், அ(த்தகைய)வருக்கு - நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம் - இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக் கூலி கொடுப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் எவரேனும் ‘‘அல்லாஹ்வையன்றி நிச்சயமாக நானும் வணக்கத்திற்குரிய ஓர் இறைவன்தான்'' என்று கூறினால், அவருக்கு நரகத்தையே நாம் கூலியாக்குவோம். அநியாயக்காரர்களுக்கு அவ்வாறே கூலி கொடுப்போம்.
IFT
“அல்லாஹ்வையன்றி நானும் ஒரு கடவுள்தான்” என்று அவர்களில் எவரேனும் கூறினால், அவருக்கு நாம் நரகத்தினுடைய தண்டனையைக் கொடுப்போம். கொடுமையாளர்களுக்கு நாம் கொடுக்கும் கூலி இதுதான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவர்களில் எவர், “(அல்லாஹ்வாகிய) அவனையன்றி நிச்சயமாக நான்தான் (வணக்கத்திற்குரிய) நாயன்” என்று கூறுகிறாரோ அ(வ்வாறு கூறுப)வர் - அவருக்கு நரகத்தையே நாம் கூலியாகக் கொடுப்போம், அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.
Saheeh International
And whoever of them should say, "Indeed, I am a god besides Him" - that one We would recompense with Hell. Thus do We recompense the wrongdoers.
اَوَلَمْ یَرَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا ؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَیْءٍ حَیٍّ ؕ اَفَلَا یُؤْمِنُوْنَ ۟
اَوَلَمْ يَرَஅவர்கள் அறியவேண்டாமாالَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரிப்பவர்கள்اَنَّநிச்சயமாகالسَّمٰوٰتِவானங்களும்وَالْاَرْضَபூமியும்كَانَـتَاஅவ்விரண்டும் இருந்தனرَتْقًاசேர்ந்துفَفَتَقْنٰهُمَا‌ ؕநாம்தான் அவற்றைப் பிளந்தோம்وَجَعَلْنَاஏற்படுத்தினோம்مِنَ الْمَآءِதண்ணீரிலிருந்துكُلَّ شَىْءٍஎல்லாவஸ்துகளையும்حَىٍّ‌ ؕஉயிருள்ளاَفَلَا يُؤْمِنُوْنَ‏அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்களா
அவலம் யரல் லதீன கFபரூ அன்னஸ் ஸமாவாதி வல் அர்ள கானதா ரத்கன் FபFபதக்னா ஹுமா வ ஜ'அல்னா மினல் மா'இ குல்ல ஷய்'இன் ஹய்யின் அFபலா யு'மினூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
(ஆரம்பத்தில்) வானம் (என்றும்) பூமி (என்றும் தனித்தனியாக) இல்லாமல் இருந்ததை நாமே பிரித்தமைத்து, (வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அந்த மழை) நீரைக் கொண்டு உயிருள்ள ஒவ்வொன்றையும் (வாழ்ந்திருக்கச்) செய்தோம் என்பதையும் இந்நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? ஆகவே, இவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா?
IFT
(நபியின் கூற்றை) நிராகரித்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள், பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு அவற்றை நாம் தனித்தனியாகப் பிளந்தோம்; ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து நாம் படைத்தோம்; (நமது இந்தப் படைப்புத்திறனை) அவர்கள் ஏற்கமாட்டார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆரம்பத்தில்) நிச்சயமாக வானங்களும், பூமியும் (இடைவெளியின்றி) இணைந்திருந்தன, பின்னர், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து உண்டாக்கினோம் என்பதையும் இந்நிராகரிப்போர் அறியவில்லையா? (இதை அறிந்தும்) அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்களா?
Saheeh International
Have those who disbelieved not considered that the heavens and the earth were a joined entity, and then We separated them and made from water every living thing? Then will they not believe?
وَجَعَلْنَا فِی الْاَرْضِ رَوَاسِیَ اَنْ تَمِیْدَ بِهِمْ ۪ وَجَعَلْنَا فِیْهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ یَهْتَدُوْنَ ۟
وَجَعَلْنَاஇன்னும் நாம் ஏற்படுத்தினோம்فِى الْاَرْضِபூமியில்رَوَاسِىَமலைகளைاَنْ تَمِيْدَஅது சாய்ந்து விடாமல் இருப்பதற்காகبِهِمْஅவர்களுடன்وَجَعَلْنَاஏற்படுத்தினோம்فِيْهَاஅதில்فِجَاجًاவிசாலமானسُبُلًاபாதைகளைلَّعَلَّهُمْ يَهْتَدُوْنَ‏அவர்கள் வழிபெறுவதற்காக
வ ஜ'அல்னா Fபில் அர்ளி ரவாஸிய அன் தமீத Bபிஹிம் வ ஜ'அல்னா Fபீஹா Fபிஜாஜன் ஸுBபுலல் ல'அல்லஹும் யஹ்ததூன்
முஹம்மது ஜான்
இன்னும்: இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
பூமி மனிதர்களுடன் சாய்ந்துவிடாதிருக்கும் பொருட்டு அதில் மலைகளை நாம்தான் நாட்டினோம். அவர்கள் விரும்பிய இடத்திற்கு சரியாக செல்லும் பொருட்டு அதில் விசாலமான வழிகளையும் நாம்தான் ஏற்படுத்தினோம்.
IFT
மேலும், பூமியில் நாம் மலைகளை ஊன்றி வைத்தோம்; அவர்களோடு அது சாய்ந்துவிடாமலிருப்பதற்காக! மேலும், அதில் அகன்ற சாலைகளையும் அமைத்தோம். மக்கள் தங்கள் பாதைகளை அறிந்து கொள்வதற்காக.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், பூமி, (மனிதர்களாகிய) அவர்களைக் கொண்டு அசைத்து விடாதிருப்பதற்காக, அதில் உறுதியான மலைகளை நாம் ஆக்கினோம், அவர்கள் நேரான வழியைப் பெறுவதற்காக அதில் விசாலமான பாதைகளையும் நாம் ஆக்கினோம்.
Saheeh International
And We placed within the earth firmly set mountains, lest it should shift with them, and We made therein [mountain] passes [as] roads that they might be guided.
وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا ۖۚ وَّهُمْ عَنْ اٰیٰتِهَا مُعْرِضُوْنَ ۟
وَجَعَلْنَاநாம் ஆக்கினோம்السَّمَآءَவானத்தைسَقْفًاஒரு முகடாகمَّحْفُوْظًا ۖۚபாதுகாக்கப்பட்டوَّهُمْஅவர்கள்عَنْ اٰيٰتِهَاஅதன் அத்தாட்சிகளைمُعْرِضُوْنَ‏புறக்கணிக்கின்றார்கள்
வ ஜ'அல்னஸ் ஸமா'அ ஸக்Fபம் மஹ்Fபூள(ன்)வ் வ ஹும் 'அன் ஆயாதிஹா முஃரிளூன்
முஹம்மது ஜான்
இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், வானத்தைப் பத்திரமான ஒரு முகட்டைப்போல் நாம்தான் அமைத்தோம். (இவ்வாறெல்லாமிருந்தும்) அவற்றிலுள்ள அத்தாட்சிகளை அவர்கள் புறக்கணிக்கின்றனர்.
IFT
மேலும், வானத்தைப் பாதுகாக்கப்பட்ட ஒரு கூரையாகவும் அமைத்தோம். ஆயினும், அவர்கள் பேரண்டத்திலுள்ள சான்றுகளைக் கவனிப்பதேயில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாகவும் நாம் ஆக்கினோம், அவர்களோ அவற்றின் அத்தாட்சிகளை விட்டும் புறக்கணிக்கின்றவர்களாக இருக்கின்றனர்.
Saheeh International
And We made the sky a protected ceiling, but they, from its signs, are turning away.
وَهُوَ الَّذِیْ خَلَقَ الَّیْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ؕ كُلٌّ فِیْ فَلَكٍ یَّسْبَحُوْنَ ۟
وَهُوَ الَّذِىْஅவன்தான்خَلَقَபடைத்தான்الَّيْلَ وَالنَّهَارَஇரவையும் பகலையும்وَالشَّمْسَசூரியனையும்وَالْقَمَرَ‌ؕசந்திரனையும்كُلٌّஒவ்வொன்றும்فِىْ فَلَكٍசுற்று வட்டத்தில்يَّسْبَحُوْنَ‏நீந்துகின்றன
வ ஹுவல் லதீ கலகல் லய்ல வன்னஹார வஷ்ஷம்ஸ வல் கமர குல்லுன் Fபீ Fபலகி(ன்)ய் யஸ்Bபஹூன்
முஹம்மது ஜான்
இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
அப்துல் ஹமீது பாகவி
அவனே இரவையும் பகலையும் (படைத்தான்.) சூரியனையும் சந்திரனையும் படைத்தான். இவை எல்லாம் வானத்தில் நீந்திச் செல்(வதைப் போல் செல்)கின்றன.
IFT
இரவையும் பகலையும் ஏற்படுத்தியவனும், சூரியனையும், சந்திரனையும் படைத்தவனும் அந்த அல்லாஹ்தான்! அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவன் எத்தகையவனென்றால் இரவையும், பகலையும் சூரியனையும், சந்திரனையும் படைத்தான், (அவை) ஒவ்வொன்றும் (வானத்தில் தமக்குரிய) மண்டலங்களில் நீந்திச் செல்கின்றன.
Saheeh International
And it is He who created the night and the day and the sun and the moon; all [heavenly bodies] in an orbit are swimming.
وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّنْ قَبْلِكَ الْخُلْدَ ؕ اَفَاۡىِٕنْ مِّتَّ فَهُمُ الْخٰلِدُوْنَ ۟
وَمَا جَعَلْنَاநாம் ஆக்கவில்லைلِبَشَرٍஎந்த மனிதருக்கும்مِّنْ قَبْلِكَஉமக்கு முன்னர்الْخُـلْدَ‌ ؕநிரந்தரத்தைاَفَا۟ٮِٕنْஇருந்து விடுவார்களாمِّتَّநீர்மரணித்துவிட்டால்فَهُمُ الْخٰـلِدُوْنَ‏அவர்கள் நிரந்தரமானவர்களாக
வமா ஜ'அல்னா லிBபஷரிம் மின் கBப்லிகல் குல்த்; அFப இம்மித்த Fபஹுமுல் காலிதூன்
முஹம்மது ஜான்
(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை; ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் என்றென்றும் வாழப் போகிறார்களா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்குமே நாம் மரணமற்ற வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை. ஆகவே, நீர் இறந்துவிட்ட பின்னர் (என்ன) இவர்கள் என்றென்றும் வாழப்போகிறார்களா?
IFT
(நபியே!) நாம் உமக்கு முன்னரும் எவருக்கும் நிரந்தர வாழ்வைக் கொடுக்கவில்லை. எனவே, நீர் இறந்துவிட்டால், இவர்கள் மட்டும் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) உமக்கு முன்னர் எம்மனிதருக்கும் (இவ்வுலகில்) நிரந்தர (ஜீவிய)த்தை நாம் ஆக்கவில்லை, ஆகவே, நீர் இறந்துவிட்டால் அவர்கள் (மட்டும் என்றென்றும்) நிரந்தரமாக இருக்கப்போகிறார்களா?
Saheeh International
And We did not grant to any man before you eternity [on earth]; so if you die - would they be eternal?
كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ؕ وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ وَالْخَیْرِ فِتْنَةً ؕ وَاِلَیْنَا تُرْجَعُوْنَ ۟
كُلُّஒவ்வோர்نَفْسٍஆன்மாவும்ذَآٮِٕقَةُசுவைக்கக் கூடியதுالْمَوْتِ‌ؕமரணத்தைوَنَبْلُوْநாம் சோதிப்போம்كُمْஉங்களைبِالشَّرِّதுன்பத்தைக் கொண்டுوَالْخَيْرِஇன்னும் இன்பத்தைக்கொண்டுفِتْنَةً‌  ؕசோதிப்பதற்காகوَاِلَيْنَاநம்மிடமேتُرْجَعُوْنَ‏திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
குல்லு னFப்ஸின் தா'இகதுல் மவ்த்; வ னBப்லூகும் Bபி ஷர்ரி வல்கய்ரி Fபித்னத(ன்)வ் வ இலய்னா துர்ஜ'ஊன்
முஹம்மது ஜான்
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிப்போம். பின்னர் நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
IFT
ஒவ்வோர் உயிரினமும் மரணத்தைச் சுவைத்தே தீரும். மேலும், நல்ல, கெட்ட நிலைமைகளைத் தந்து நாம் உங்களைச் சோதித்துக் கொண்டிருக்கின்றோம். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக்கூடியதாகவே இருக்கிறது, தீமையை (துன்பங்களை)க் கொண்டும், நன்மையை (இன்பங்களை)க் கொண்டும் பரீட்சிப்பதற்காக உங்களை நாம் சோதிக்கிறோம், மேலும் நீங்கள் நம்மிடமே திருப்பப்படுவீர்கள்.
Saheeh International
Every soul will taste death. And We test you with evil and with good as trial; and to Us you will be returned.
وَاِذَا رَاٰكَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ یَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ اَهٰذَا الَّذِیْ یَذْكُرُ اٰلِهَتَكُمْ ۚ وَهُمْ بِذِكْرِ الرَّحْمٰنِ هُمْ كٰفِرُوْنَ ۟
وَاِذَا رَاٰكَஉம்மைப் பார்த்தால்الَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரிப்பாளர்கள்اِنْ يَّتَّخِذُوْنَكَஉம்மை எடுத்துக் கொள்ளமாட்டார்கள்اِلَّاதவிரهُزُوًا ؕபரிகாசமாகவேاَهٰذَاஇவராالَّذِىْ يَذْكُرُவிமர்ச்சிக்கிறார்اٰلِهَـتَكُمْ‌ۚஉங்களது கடவுள்களைوَهُمْஅவர்களோبِذِكْرِபெயர் கூறுவதையும்الرَّحْمٰنِபேரருளாளனின்هُمْஅவர்கள்كٰفِرُوْنَ‏மறுக்கின்றனர்
வ இதா ர ஆகல் லதீன கFபரூ இ(ன்)ய்-யத்தகிதூனக இல்லா ஹுZஜுவன்; அஹாதல் லதீ யத்குரு ஆலிஹதகும் வ ஹும் Bபி திக்ரிர் ரஹ்மானி ஹும் காFபிரூன்
முஹம்மது ஜான்
இன்னும் (நபியே!) காஃபிர்கள் உம்மைப் பார்த்தால், “உங்கள் தெய்வங்களைப் பற்றிக் (குறை) கூறுபவர் இவர்தானா?” - என்று (தங்களுக்குள் பேசிக் கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை; மேலும் அவர்கள் ரஹ்மானுடைய நினைவை நிராகரிக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிராகரிப்பவர்கள் உம்மைக் கண்டால் (தங்களுக்குள் ஒருவர் மற்றவரை நோக்கி) ‘‘உங்கள் தெய்வங்களைக் குறை கூறுபவர் இவர்தானா?'' என்று உம்மை(ச் சுட்டிக் காண்பித்து)ப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை. எனினும், அவர்களோ ரஹ்மா(ன் அளவற்ற அருளாளன் என்று இறைவ)னின் பெயரைக் கூறுவதையும் மறுக்கின்றனர்.
IFT
உண்மையை நிராகரிக்கும் இவர்கள் உம்மைக் காணும்போது கேலி செய்கின்றார்கள். “உங்களுடைய தெய்வங்களை (இழிவாகப்) பேசுகிறவர் இவர்தாமா?” (என்று கேட்கின்றார்கள்). ஆனால், இவர்களோ (கருணை மிக்க இறைவனாகிய) ரஹ்மானை நினைவுகூரவும் மறுக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிராகரிப்போர் உம்மைக் கண்டால் உம்மை அவர்கள் பரிகாசமாகவேயன்றி எடுத்துக்கொள்வதில்லை, “உங்கள் தெய்வங்களைக் குறை கூறுபவர் இவரா?” (என்று உம்மைச் சுட்டிக்காட்டி அதிசயமாகக் கூறுகின்றனர்) அவர்களோ, “ரஹ்மான்” என்று (இரட்சகனின் பெயரைக்) கூறுவதையும் மறுப்பவர்களாக இருக்கின்றனர்.
Saheeh International
And when those who disbelieve see you, [O Muhammad], they take you not except in ridicule, [saying], "Is this the one who mentions [i.e., insults] your gods?" And they are, at the mention of the Most Merciful, disbelievers.
خُلِقَ الْاِنْسَانُ مِنْ عَجَلٍ ؕ سَاُورِیْكُمْ اٰیٰتِیْ فَلَا تَسْتَعْجِلُوْنِ ۟
خُلِقَபடைக்கப்பட்டான்الْاِنْسَانُ مِنْ عَجَلٍ‌ؕமனிதன்/விரைவாகسَاُورِيْكُمْஉங்களுக்குக் காண்பிப்போம்اٰيٰتِىْஎனது அத்தாட்சிகளைفَلَا تَسْتَعْجِلُوْنِ‏என்னிடம் அவசரப்படாதீர்கள்
குலிகல் இன்ஸானு மின் 'அஜல்; ஸ உரீகும் ஆயாதீ Fபலா தஸ்தஃஜிலூன்
முஹம்மது ஜான்
மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் அவசரப்படாதீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கிறான். (ஆகவே, அவர்களை நோக்கி நபியே! கூறுவீராக: ‘‘வேதனைகளாகிய) என் அத்தாட்சிகளை நான் அதிசீக்கிரத்தில் உங்களுக்குக் காண்பிப்பேன். ஆகவே, நீங்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்.''
IFT
மனிதன் மிகவும் அவசரப்படக்கூடிய படைப்பாவான். வெகு சீக்கிரத்தில் நான் என்னுடைய சான்றுகளை உங்களுக்குக் காண்பிக்கப் போகின்றேன். எனவே, நீங்கள் என்னிடம் அவசரப்படாதீர்கள்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டிருக்கின்றான், (ஆகவே வேதனை பற்றிய) என்னுடைய அத்தாட்சிகளை நான் உங்களுக்குக் காண்பிப்பேன், (அதற்காக) நீங்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்.
Saheeh International
Man was created of haste [i.e., impatience]. I will show you My signs [i.e., vengeance], so do not impatiently urge Me.
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَيَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்கள்مَتٰىஎப்போதுهٰذَاஇந்தالْوَعْدُவாக்குறுதிاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
“நீங்கள் உண்மையாளர்களாகயிருப்பின், இந்த (வேதனைக்கான) வாக்குறுதி எப்பொழுது (நிறைவேற்றப்படும்)?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘வேதனை வரும் என்று) நீங்கள் கூறுவதில் உண்மையானவர்களாக இருந்தால் இந்த (மிரட்டல்) வாக்கு எப்பொழுது வரும்'' என்று அவர்கள் கேட்கிறார்கள்.
IFT
அவர்கள் கேட்கின்றார்கள்: “நீங்கள் உண்மையாளர்களாயின் இந்த வாக்குறுதி எப்பொழுது நிறைவேறும்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “(வேதனை வருமென்ற கூற்றில் விசுவாசிகளாகிய) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்குறுதி எப்பொழுது (நடந்தேறும்)?” என்று அவர்கள் (நிராகரிப்பவர்கள்) கேட்கிறார்கள்.
Saheeh International
And they say, "When is this promise, if you should be truthful?"
لَوْ یَعْلَمُ الَّذِیْنَ كَفَرُوْا حِیْنَ لَا یَكُفُّوْنَ عَنْ وُّجُوْهِهِمُ النَّارَ وَلَا عَنْ ظُهُوْرِهِمْ وَلَا هُمْ یُنْصَرُوْنَ ۟
لَوْ يَعْلَمُஅறிந்து கொண்டால்...الَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்கள்حِيْنَ(அந்த) நேரத்தைلَا يَكُفُّوْنَதடுக்க மாட்டார்களேعَنْ وُّجُوْهِهِمُதங்களது முகங்களை விட்டும்النَّارَநரக நெருப்பைوَلَاஇன்னும்عَنْ ظُهُوْرِமுதுகுகளை விட்டும்هِمْதங்களதுوَلَا هُمْ يُنْصَرُوْنَ‏இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்களே
லவ் யஃலமுல் லதீன கFபரூ ஹீன லா யகுFப்Fபூன 'அ(ன்)வ் வுஜூஹிஹிமுன் னார வலா 'அன் ளுஹூரிஹிம் வலா ஹும் யுன்ஸரூன்
முஹம்மது ஜான்
தம் முகங்களையும், தம் முதுகுகளையும் (நரக) நெருப்பைத் தடுத்துக் கொள்ள முடியாமலும், (எவராலும்) உதவி செய்யப்படமாலும் இருப்பார்களே அந்த நேரத்தை காஃபிர்கள் அறிந்து கொள்வார்களானால்! (இறுதி நேரம் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.)
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் தங்கள் முகங்களில் இருந்தும், தங்கள் முதுகுகளில் இருந்தும் நரக நெருப்பைத் தட்டிக்கொள்ள முடியாமலும், அவர்களுக்கு உதவி செய்ய ஒருவரும் கிடைக்காமலும் போகக்கூடிய (ஒரு) காலம் வருமென்பதை இந்த நிராகரிப்பவர்கள் அறிந்திருந்தால் (அது இவர்களுக்கே நன்று).
IFT
அந்தோ! தங்களுடைய முகங்களையும் முதுகுகளையும் நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியாத, மேலும், தமக்கு எங்கிருந்தும் உதவி கிட்டாத ஒரு நேரத்தைக் குறித்து இந்நிராகரிப்பாளர்கள் கொஞ்சம் அறிந்திருக்க வேண்டுமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்கள் முகங்களையும், தங்கள் முதுகுகளையும் (நரக) நெருப்பிலிருந்து தடுத்துக்கொள்ள முடியாமலும் யாராலும் தங்களுக்கு உதவி செய்யப்படாமலும் இருப்பார்களே, அந்த நேரத்தை நிராகரிப்பவர்களாகிய (இ)வர்கள் அறிந்து கொள்வார்களானால் (அதுபற்றி கேட்கமாட்டார்கள்).
Saheeh International
If those who disbelieved but knew the time when they will not avert the Fire from their faces or from their backs and they will not be aided...
بَلْ تَاْتِیْهِمْ بَغْتَةً فَتَبْهَتُهُمْ فَلَا یَسْتَطِیْعُوْنَ رَدَّهَا وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟
بَلْமாறாகتَاْتِيْهِمْஅது அவர்களிடம் வரும்بَغْتَةًதிடீரெனفَتَبْهَتُهُمْஅது அவர்களை திடுக்கிடச் செய்யும்فَلَا يَسْتَطِيْعُوْنَஅவர்கள் இயலமாட்டார்கள்رَدَّهَاஅதை தடுப்பதற்குوَلَا هُمْ يُنْظَرُوْنَ‏இன்னும் அவர்கள் தாமதிக்கப்பட மாட்டார்கள்
Bபல் த'தீஹிம் Bபக்ததன் FபதBப்ஹதுஹும் Fபலா யஸ்ததீ'ஊன ரத்தஹா வலா ஹும் யுன்ளரூன்
முஹம்மது ஜான்
அவ்வாறல்ல! அது அவர்களிடம் திடீரென வந்து, அவர்களைத் தட்டழியச் செய்து விடும். அதைத் தடுத்துக் கொள்ள அவர்களால் இயலாது; அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அது இவர்களிடம் திடுகூறாகவே வந்து அவர்களைத் தட்டுக் கெட்டுத் தடுமாறும்படிச் செய்து விடும்; அதைத் தட்டிக் கழித்துவிட இவர்களால் முடியாது. இவர்களுக்கு சிறிதும் அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டாது.
IFT
ஆயினும் அந்த ஆபத்து திடீரென்று அவர்களைத் தாக்கும். அது அவர்களை எந்த அளவு திகைப்படையச் செய்து விடும் எனில், அவர்களால் அதனைத் தடுக்க முடியாது; மேலும், ஒரு கணப்பொழுது கூட அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட மாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்வாறல்ல! அது இவர்களிடம் திடீரென வந்து அவர்களைத் தட்டுக்கெட்டுத் தடுமாறச் செய்துவிடும், அதனைத் தட்டி(க் கழித்து) விட இவர்கள் சக்திபெற மாட்டார்கள், இவர்கள் (தப்பித்துக்கொள்ள) அவகாசம் கொடுக்கப்படவுமாட்டார்கள்.
Saheeh International
Rather, it will come to them unexpectedly and bewilder them, and they will not be able to repel it, nor will they be reprieved.
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِیْنَ سَخِرُوْا مِنْهُمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠
وَلَـقَدِ اسْتُهْزِئَபரிகசிக்கப்பட்டுள்ளதுبِرُسُلٍபல தூதர்களைمِّنْ قَبْلِكَஉமக்கு முன்னர்فَحَاقَவந்து இறங்கியதுبِالَّذِيْنَ سَخِرُوْاஏளனம் செய்தவர்களைمِنْهُمْஅவர்களில்مَّاஎதுكَانُوْاஇருந்தார்களோبِهٖஅதைيَسْتَهْزِءُوْنَ‏பரிகசித்தார்கள்
வ லகதிஸ் துஹ்Zஜி'அ Bபி-ருஸுலிம் மின் கBப்லிக Fபஹாக Bபில்லதீன ஸகிரூ மின்ஹும் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
முஹம்மது ஜான்
இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டார்கள் - ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்ந்து கொண்டது.  
அப்துல் ஹமீது பாகவி
உமக்கு முன்னர் வந்த நம் தூதர்களும் (இவ்வாறே எதிரிகளால்) பரிகாசம் செய்யப்பட்டனர். ஆகவே, பரிகாசம் செய்து கொண்டிருந்தவர்களை அவர்கள் பரிகாசம் செய்த வேதனை வந்து சூழ்ந்து கொண்டது.
IFT
(நபியே!) உமக்கு முன்பும் தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். ஆயினும், அவர்களைப் பரிகாசம் செய்தவர்கள், எதைக் குறித்துப் பரிகாசம் செய்தார்களோ அதுவே அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உமக்கு முன்னர் (வந்த நம்முடைய) தூதர்களும் (இவ்வாறே விரோதிகளால்) பரிகாசம் செய்யப்பட்டனர், ஆகவே, அவர்கள் எதனைப்பற்றிப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களில் பரிகாசம் செய்து வந்தோரைச் சூழ்ந்து கொண்டது.
Saheeh International
And already were messengers ridiculed before you, but those who mocked them were enveloped by what they used to ridicule.
قُلْ مَنْ یَّكْلَؤُكُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ مِنَ الرَّحْمٰنِ ؕ بَلْ هُمْ عَنْ ذِكْرِ رَبِّهِمْ مُّعْرِضُوْنَ ۟
قُلْகூறுவீராகمَنْயார்يَّكْلَـؤُபாதுகாப்பவர்كُمْஉங்களைبِالَّيْلِஇரவிலும்وَالنَّهَارِபகலிலும்مِنَ الرَّحْمٰنِ‌ؕரஹ்மானிடமிருந்துبَلْமாறாகهُمْஅவர்கள்عَنْ ذِكْرِஅறிவுரையைرَبِّهِمْதங்கள் இறைவனின்مُّعْرِضُوْنَ‏புறக்கணிக்கிறார்கள்
குல் மய் யக்ல 'உகும் Bபில்லய்லி வன்னஹாரி மினர் ரஹ்மான்; Bபல் ஹும் 'அன் திக்ரி ரBப்Bபிஹிம் முஃரிளூன்
முஹம்மது ஜான்
“உங்களை, இரவிலும், பகலிலும் அர்ரஹ்மானுடைய (வேதனையிலிருந்து) பாதுகாக்கக்கூடியவர் எவர்?” என்று (நபியே!) நீர் கேளும்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனை நினைப்பதையே புறக்கணிப்பவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இவர்களை நோக்கி) ‘‘இரவிலோ பகலிலோ வரக்கூடிய ரஹ்மானுடைய வேதனையில் இருந்து உங்களை பாதுகாப்பவர் யார்?'' என்று கேட்பீராக. எனினும் இவர்களோ தங்கள் இறைவனை நினைப்பதையே முற்றிலும் புறக்கணித்து விட்டனர்.
IFT
(நபியே!) “இரவிலோ, பகலிலோ கருணை மிக்க இறைவனின் பிடியிலிருந்து உங்களைக் காப்பாற்றக் கூடியவர் யார்?” என்று நீர் அவர்களிடம் கேளும். ஆயினும், அவர்கள் தம்முடைய இறைவனின் நல்லுரையைப் புறக்கணிப்பவர்களாகவே இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! இவர்களிடம்) இரவிலும், பகலிலும் (வரக்கூடிய) அர்ரஹ்மானின் வேதனையி(லிருந்து உங்களைப் பாதுகாக்கக் கூடியவர் யார்? என்று நீர் கேட்பீராக! ஆனால் இவர்களோ தங்கள் இரட்சகனை நினைப்பதையே முற்றிலும் புறக்கணிக்கக் கூடியவர்களாவர்.
Saheeh International
Say, "Who can protect you at night or by day from the Most Merciful?" But they are, from the remembrance of their Lord, turning away.
اَمْ لَهُمْ اٰلِهَةٌ تَمْنَعُهُمْ مِّنْ دُوْنِنَا ؕ لَا یَسْتَطِیْعُوْنَ نَصْرَ اَنْفُسِهِمْ وَلَا هُمْ مِّنَّا یُصْحَبُوْنَ ۟
اَمْ لَهُمْஅவர்களுக்கு உண்டாاٰلِهَةٌகடவுள்கள்تَمْنَعُهُمْபாதுகாக்கின்ற/ அவர்களைمِّنْ دُوْنِنَا ؕநம்மை அன்றிلَا يَسْتَطِيْعُوْنَஇயலமாட்டார்கள்نَـصْرَஉதவுவதற்கேاَنْفُسِهِمْதங்களுக்குوَلَاஇன்னும்هُمْஅவர்கள்مِّنَّاநம்மிடமிருந்துيُصْحَبُوْنَ‏பாதுகாக்கப்பட மாட்டார்கள்
அம் லஹும் ஆலிஹதுன் தம்ன'உஹும் மின் தூனினா; லா யஸ்ததீ'ஊன னஸ்ர அன்Fபுஸிஹிம் வலா ஹும் மின்ன யுஸ்-ஹBபூன்
முஹம்மது ஜான்
அல்லது, (நம்முடைய வேதனையிலிருந்து) நம்மையன்றி அவர்களைக் காப்பாற்றும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் தமக்குத்தாமே உதவிசெய்ய சக்தியற்றவர்கள். மேலும் அவர்கள் நம்மிடமிருந்து காப்பாற்றப்படுபவர்களும் அல்லர்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களை (நம் வேதனையிலிருந்து) தடுக்கக்கூடிய தெய்வங்கள் நம்மைத் தவிர இவர்களுக்கு வேறு இருக்கின்றனவா? (இவர்கள் தெய்வங்கள் எனக் கூறும்) அவை (இவர்களுக்கு உதவி செய்வதென்ன!) தமக்குத்தாமே உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவை. ஆகவே, நமக்கெதிராக அவை இவர்களுக்குத் துணை புரியாது.
IFT
நமக்கு எதிராக அவர்களைப் பாதுகாக்கக்கூடிய வேறு கடவுள்கள் அவர்களுக்கு இருக்கிறார்களா, என்ன? அவை தமக்கே உதவி செய்ய முடியாதவையாக இருக்கின்றன. மேலும், நம்முடைய ஆதரவையும் அவை பெற்றிருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்களை (நம்முடைய வேதனையை) விட்டும் தடுக்கக்கூடிய (வேறு) தெய்வங்கள் நம்மையன்றி அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ள சக்தி பெறமாட்டார்கள், இன்னும் அவர்கள் நம்மிடமிருந்து (நம் வேதனையை விட்டும்) காப்பாற்றப்படவுமாட்டார்கள்.
Saheeh International
Or do they have gods to defend them other than Us? They are unable [even] to help themselves, nor can they be protected from Us.
بَلْ مَتَّعْنَا هٰۤؤُلَآءِ وَاٰبَآءَهُمْ حَتّٰی طَالَ عَلَیْهِمُ الْعُمُرُ ؕ اَفَلَا یَرَوْنَ اَنَّا نَاْتِی الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ؕ اَفَهُمُ الْغٰلِبُوْنَ ۟
بَلْமாறாகمَتَّـعْنَاசுகமளித்தோம்هٰٓؤُلَاۤءِஇவர்களுக்குوَ اٰبَآءَஇன்னும் மூதாதைகளுக்குهُمْஇவர்களின்حَتّٰىஇறுதியாகطَالَநீண்டதுعَلَيْهِمُஇவர்களுக்குالْعُمُرُ ؕவாழ்க்கைاَفَلَا يَرَوْنَஅவர்கள் பார்க்கவில்லையாاَنَّاநிச்சயமாக நாம்نَاْتِىவருகிறோம்الْاَرْضَபூமியைنَـنْقُصُهَاஅதை அழிக்கிறோம்مِنْ اَطْرَافِهَا ؕஅதன் சுற்றுப்புறங்களிலிருந்துاَفَهُمُஆகவே, இவர்கள்الْغٰلِبُوْنَ‏மிகைத்து விடுவார்களா
Bபல் மத்தஃனா ஹா'உலா'இ வ ஆBபா'அஹும் ஹத்தா தால 'அலய்ஹிமுல் 'உமுர்; அFபலா யரவ்ன அன்ன ன'தில் அர்ள னன்குஸுஹா மின் அத்ராFபிஹா; அFபஹுமுல் காலிBபூன்
முஹம்மது ஜான்
எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்; நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்?
அப்துல் ஹமீது பாகவி
இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் (நீண்ட காலம் வரை) சுகமனுபவிக்கச் செய்தோம். அதனால் அவர்களின் ஆயுளும் அதிகரித்தது. (ஆகவே, அவர்கள் கர்வங்கொண்டு விட்டார்களா?) நிச்சயமாக நாம் இவர்களைச் சூழ்ந்துள்ள பூமியை(ப் படிப்படியாக)க் குறைத்து (இவர்களை நெருக்கி)க் கொண்டே வருவதை இவர்கள் காணவில்லையா? இவர்களா (நம்மை) வென்று விடுவார்கள்?
IFT
உண்மை யாதெனில், இவர்களுக்கும் இவர்களுடைய மூதாதையருக்கும் நாம் வாழ்க்கை வசதிகளை அளித்துக் கொண்டிருந்தோம். அவ்வாறு அவர்களுடைய காலம் நீண்டு ஓடியது...! ஆனால், நாம் பூமியை பல்வேறு திசையிலிருந்தும் குறைத்துக் கொண்டே வருகிறோம் என்பது இவர்களுக்குத் தென்படவில்லையா? பிறகு, இவர்கள் (நம்மை) வெற்றி கொண்டு விடுவார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும், இவர்களையும், இவர்களுடைய மூதாதையரையும் இவர்களின் ஆயுட்காலம் நீண்டதாக ஆகும்வரை சுகமனுபவிக்கச் செய்தோம், நிச்சயமாக நாம் பூமியை அதன் ஓரங்களிலிருந்து குறைத்துக்கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் பார்க்கவில்லையா? (அவ்வாறிருக்க) இவர்களா நம்மை மிகைத்து விடுகிறவர்கள்?
Saheeh International
But, [on the contrary], We have provided good things for these [disbelievers] and their fathers until life was prolonged for them. Then do they not see that We set upon the land, reducing it from its borders? Is it they who will overcome?
قُلْ اِنَّمَاۤ اُنْذِرُكُمْ بِالْوَحْیِ ۖؗ وَلَا یَسْمَعُ الصُّمُّ الدُّعَآءَ اِذَا مَا یُنْذَرُوْنَ ۟
قُلْகூறுவீராகاِنَّمَاۤ اُنْذِرُஎச்சரிப்பதெல்லாம்كُمْஉங்களைبِالْوَحْىِ ۖ வஹீ ன் மூலமாகத்தான்وَلَا يَسْمَعُசெவிசாய்க்க மாட்டார்கள்الصُّمُّசெவிடர்கள்الدُّعَآءَஅழைப்புக்குاِذَاபோதுمَا يُنْذَرُوْنَ‏எச்சரிக்கப்படும்
குல் இன்னமா உன்திருகும் Bபில்வஹ்யி; வலா யஸ்ம'உஸ் ஸும்முத் து'ஆ 'அ இதா மா யுன்தரூன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்” என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்களை நோக்கி ‘‘வேதனையைக் கொண்டு) நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹ்யின் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டவற்றையே! (நான் சுயமாக எதையும் கூறவில்லை)'' என்று கூறுவீராக. (எனினும், இவர்கள் செவிடர்களைப் போல் இருக்கின்றனர். ஆகவே) இந்த செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டால் அதை அவர்கள் செவியேற்க மாட்டார்கள்.
IFT
நபியே! நீர் அவர்களிடம் கூறும்: “நான் வஹியின் அடிப்படையில் உங்களுக்கு எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றேன்” ஆயினும், செவிடர்கள் அழைப்பை செவியேற்கவே மாட்டார்கள்அவர்கள் எச்சரிக்கப்படும்போது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! அவர்களிடம்) “நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீயைக் கொண்டுதான்” என்று நீர் கூறுவீராக! இன்னும் அவர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படும்பொழுது, அச்செவிடர்கள் உம் அழைப்பை செவியேற்கமாட்டார்கள்
Saheeh International
Say, "I only warn you by revelation." But the deaf do not hear the call when they are warned.
وَلَىِٕنْ مَّسَّتْهُمْ نَفْحَةٌ مِّنْ عَذَابِ رَبِّكَ لَیَقُوْلُنَّ یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
وَلَٮِٕنْ مَّسَّتْهُمْஅவர்களை அடைந்தால்نَفْحَةٌஒரு பகுதிمِّنْ عَذَابِதண்டனையிலிருந்துرَبِّكَஉமது இறைவனின்لَيَقُوْلُنَّநிச்சயமாக கூறுவார்கள்يٰوَيْلَنَاۤஎங்கள் நாசமேاِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்ظٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களாக
வ ல'இன் மஸ்ஸத் ஹும் னFப்ஹதுன் மின் 'அதாBபி ரBப்Bபிக ல யகூலுன்ன யாவய்லனா இன்ன்னா குன்னா ளாலிமீன்
முஹம்மது ஜான்
உம்முடைய இறைவனிடமிருந்துள்ள வேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத் தீண்டுமானாலும், “எங்களுக்குக் கேடு தான்! திட்டமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்” என்று அவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உமது இறைவனுடைய வேதனையின் வாடை இவர்கள் மீது பட்டாலே போதும் ‘‘நாங்கள் அழிந்தோம்; நிச்சயமாக நாங்களே எங்களுக்குத் தீங்கு இழைத்துக் கொண்டோம்!'' என்று கூச்சல் இடுவார்கள்.
IFT
உம்முடைய இறைவன் தரும் வேதனை சிறிதளவு அவர்களைத் தீண்டிவிட்டால் கூட “எங்களின் துர்ப்பாக்கியமே! திண்ணமாக, நாங்கள் கொடுமையாளர்களாய் இருந்தோம்” என்று அலறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உம் இரட்சகனுடைய வேதனையிலிருந்து ஒரு சிறிதளவு அவர்களைத் தொட்டு விடுமானால், “எங்களுக்கு ஏற்பட்ட கேடே! திட்டமாக நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
Saheeh International
And if [as much as] a whiff of the punishment of your Lord should touch them, they would surely say, "O woe to us! Indeed, we have been wrongdoers."
وَنَضَعُ الْمَوَازِیْنَ الْقِسْطَ لِیَوْمِ الْقِیٰمَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَیْـًٔا ؕ وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَیْنَا بِهَا ؕ وَكَفٰی بِنَا حٰسِبِیْنَ ۟
وَنَضَعُநாம் வைப்போம்الْمَوَازِيْنَதராசுகளைالْقِسْطَநீதமானلِيَوْمِ الْقِيٰمَةِமறுமை நாளில்فَلَا تُظْلَمُஅநீதி இழைக்கப்படாதுنَـفْسٌஓர் ஆன்மாவுக்குشَيْــٴًـــا‌ ؕஅறவேوَاِنْ كَانَஇருந்தாலும்مِثْقَالَஅளவுحَبَّةٍவிதைمِّنْ خَرْدَلٍகடுகின்اَتَيْنَا بِهَا‌ ؕஅதை நாம் கொண்டு வருவோம்وَكَفٰى بِنَاநாமே போதுமானவர்கள்حٰسِبِيْنَ‏விசாரிப்பவர்களாக
வ னள'உல் மவாZஜீனல் கிஸ்த லி யவ்மில் கியாமதி Fபலா துள்லமு னFப்ஸுன் ஷய்'ஆ; வ இன் கான மித்கால ஹBப்Bபதிம் மின் கர்தலின் அதய்னா Bபிஹா; வ கFபா Bபினா ஹாஸிBபீன்
முஹம்மது ஜான்
இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.
அப்துல் ஹமீது பாகவி
மறுமை நாளில் சரியான தராசையே நாம் நிறுத்துவோம். எந்த ஓர் ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை.)
IFT
நாம் மறுமைநாளில் துல்லியமாக எடை போடும் தராசுகளை நிறுவுவோம். பிறகு, எவருக்கும் இம்மியளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது. எவருடைய ஒரு கடுகு மணியளவு செயலாயினும் அதனை நாம் (அங்கு) அவர்முன் கொண்டு வருவோம். கணக்கு வாங்குவதற்கு நாமே போதும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், மறுமை நாளில் நீதமான தராசுகளை நாம் வைப்போம், எந்த ஓர் ஆத்மாவும் (எதையும் குறைத்தோ, கூட்டியோ) சிறிதளவும் அநியாயம் செய்யப்படமாட்டாது, (நன்மையோ, தீமையோ) ஒரு கடுகின் வித்தளவு அது இருந்தபோதிலும், அதனையும் நிறுக்கக்) கொண்டு வருவோம், கணக்கெடுப்பவர்களில் (நமக்கு) நாமே போதும், (கணக்கெடுக்க மற்றவரின் உதவி நமக்குத் தேவையில்லை.)
Saheeh International
And We place the scales of justice for the Day of Resurrection, so no soul will be treated unjustly at all. And if there is [even] the weight of a mustard seed, We will bring it forth. And sufficient are We as accountant.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسٰی وَهٰرُوْنَ الْفُرْقَانَ وَضِیَآءً وَّذِكْرًا لِّلْمُتَّقِیْنَ ۟ۙ
وَلَـقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் கொடுத்தோம்مُوْسٰىமூஸாوَهٰرُوْنَஇன்னும் ஹாரூனுக்குالْفُرْقَانَபிரித்தறிவிக்கக்கூடியوَضِيَآءًவெளிச்சத்தைوَّذِكْرًاஓர் அறிவுரையைلِّـلْمُتَّقِيْنَۙ‏இறையச்ச முள்ளவர்களுக்குரிய
வ லகத் ஆதய்னா மூஸா வ ஹாரூனல் Fபுர்கான வ ளியா'அ(ன்)வ் வ திக்ரல் லில்முத்தகீன்
முஹம்மது ஜான்
இன்னும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய வேதத்தையே நாம் கொடுத்திருந்தோம். அதை பிரகாசமாகவும், இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் ஆக்கினோம்.
IFT
முன்பு நாம் மூஸாவிற்கும், ஹாரூனுக்கும் (சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்தக்கூடிய) ஃபுர்கானையும், ஒளியையும், அறிவுரையையும் அருளியிருந்தோம். இவை இறையச்சமுடையோருக்கு பயனளிக்கக் கூடியவையாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக் கூடியதையும் ஒளியையும், பயபக்தியுடையோருக்கு உபதேசத்தையும் நிச்சயமாக நாம் கொடுத்திருந்தோம்.
Saheeh International
And We had already given Moses and Aaron the criterion and a light and a reminder for the righteous
الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَیْبِ وَهُمْ مِّنَ السَّاعَةِ مُشْفِقُوْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்يَخْشَوْنَபயப்படுவார்கள்رَبَّهُمْதங்கள் இறைவனைبِالْغَيْبِமறைவில்وَهُمْஇன்னும் அவர்கள்مِّنَ السَّاعَةِமறுமையைப் பற்றிمُشْفِقُوْنَ‏அஞ்சுவார்கள்
அல்லதீன யக்-ஷவ்ன ரBப்Bபஹும் Bபில்கய்Bபி வ ஹும் மினஸ் ஸா'அதி முஷ்Fபிகூன்
முஹம்மது ஜான்
அவர்கள் தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும் அஞ்சுவார்கள்; இன்னும் அந்த (இறுதி) வேளையைக் குறித்துப் பயந்து கொண்டும் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இறையச்சமுடையவர்கள்) தங்கள் இறைவனைத் தங்கள் கண்ணால் பார்க்காவிடினும் அவனுக்குப் பயப்படுவதுடன், மறுமையைப் பற்றியும் அவர்கள் (எந்நேரமும் பயந்து) நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.
IFT
அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனில், கண்ணால் பார்க்காமலே தம் இறைவனுக்கு அஞ்சுகின்றார்கள். மேலும் (கணக்கு வாங்கும்) அந்நாளைப் பற்றி அஞ்சுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பயபக்தியுடைய) அவர்கள் எத்தகையோரென்றால், மறைந்த நிலையில் தங்கள் இரட்சகனை பயப்படுவார்கள், இன்னும், அவர்கள் மறுமையைப் பற்றியும் பயந்து (நடுங்கி)க் கொண்டிருப்பவர்கள்.
Saheeh International
Who fear their Lord unseen, while they are of the Hour apprehensive.
وَهٰذَا ذِكْرٌ مُّبٰرَكٌ اَنْزَلْنٰهُ ؕ اَفَاَنْتُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۟۠
وَهٰذَاஇதுذِكْرٌஅறிவுரையாகும்مُّبٰرَكٌஅருள்மிகுந்தاَنْزَلْنٰهُ‌ؕஇதை இறக்கினோம்اَفَاَنْتُمْ?/நீங்கள்لَهٗஇதைمُنْكِرُوْنَ‏மறுக்கின்றீர்கள்
வ ஹாதா திக்ரும் முBபாரகுன் அன்Zஜல்னாஹ்; அFப அன்தும் லஹூ முன்கிரூன்
முஹம்மது ஜான்
இன்னும் இது (குர்ஆன்) நாம் அருள் செய்த பாக்கியம் மிக்க புனிதமான உபதேசமாகும். இதனையா நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்?  
அப்துல் ஹமீது பாகவி
இந்த குர்ஆன் மிக்க பாக்கியமுடைய நல்லுபதேசமாகும். இதை நாமே இறக்கி வைத்தோம். இதை நீங்கள் நிராகரித்து விடுவீர்களா?
IFT
மேலும், பாக்கியங்கள் நிறைந்த இந்த அறிவுரையை இப்பொழுது நாம் (உங்களுக்காக) இறக்கியிருக்கின்றோம். இனி, நீங்கள் இதனை ஏற்க மறுக்கின்றீர்களா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், இந்த குர் ஆனாகிற(து) அதன் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்ட (நிலையில்) பரக்கத்துச் செய்யப்பட்ட நல்லுபதேசமாகும், இதனை நாம் இறக்கி வைத்தோம், இதனை நீங்கள் மறுக்கக்கூடியவர்களா?
Saheeh International
And this [Qur’an] is a blessed message which We have sent down. Then are you with it unacquainted?
وَلَقَدْ اٰتَیْنَاۤ اِبْرٰهِیْمَ رُشْدَهٗ مِنْ قَبْلُ وَكُنَّا بِهٖ عٰلِمِیْنَ ۟ۚ
وَلَـقَدْ اٰتَيْنَاۤநாம் கொடுத்தோம்اِبْرٰهِيْمَஇப்றாஹீமுக்குرُشْدَهٗஅவருடைய நேர்வழியைمِنْ قَبْلُமுன்னர்وَ كُنَّاநாம் இருந்தோம்بِهٖஅவரைعٰلِمِيْنَ‌ۚ‏நன்கறிந்தவர்களாக
வ லகத் ஆதய்னா இBப்ராஹீம ருஷ்தஹூ மின் கBப்லு வ குன்னா Bபிஹீ 'ஆலிமீன்
முஹம்மது ஜான்
இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் இப்றாஹீமுக்கு இதற்கு முன்னரே நல்லறிவைக் கொடுத்திருந்தோம். (அதற்குரிய) அவருடைய தன்மையை நன்கறிந்தோம்.
IFT
அதற்கும் முன்பு நாம் இப்ராஹீமுக்கு நல்லறிவை வழங்கியிருந்தோம். மேலும், நாம் அவரை நன்கு அறிந்திருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இப்றாஹீமுக்கு முன்னரே (சிறு பிராயத்திலிருந்தே) அவருடைய நல்வழியை நாம் கொடுத்திருந்தோம், அவரைப்பற்றி நாம் நன்கறிந்தோராகவும் இருந்தோம்.
Saheeh International
And We had certainly given Abraham his sound judgement before, and We were of him well-Knowing
اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَا هٰذِهِ التَّمَاثِیْلُ الَّتِیْۤ اَنْتُمْ لَهَا عٰكِفُوْنَ ۟
اِذْசமயத்தைقَالَகூறினார்لِاَبِيْهِதனது தந்தைக்குوَقَوْمِهٖஇன்னும் தனது சமுதாயத்திற்குمَاஎன்னهٰذِهِஇந்தالتَّمَاثِيْلُஉருவங்கள்الَّتِىْۤஎதுاَنْتُمْநீங்கள்لَهَاஇதன்மீதுعٰكِفُوْنَ‏நிலையாக இருக்கின்ற
இத் கால லி அBபீஹி வ கவ்மிஹீ மா ஹாதிஹித் தமாதீலுல் லதீ அன்தும் லஹா 'ஆகிFபூன்
முஹம்மது ஜான்
அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் “நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?” என்று கேட்ட போது:
அப்துல் ஹமீது பாகவி
அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி ‘‘நீங்கள் (மிக்க உற்சாகத்தோடு) வணங்கிவரும் இச்சிலைகள் என்ன? (எதற்காக நீங்கள் இவற்றை வணங்குகிறீர்கள்)'' என்று கேட்டதற்கு,
IFT
அவர் தம்முடைய தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் இவ்வாறு கூறியதை நினைத்துப் பாரும். “என்ன இது! நீங்கள் இந்த உருவச்சிலைகள் மீது இத்தனை ஆர்வத்துடன் பற்று கொண்டுள்ளீர்களே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் தன் தந்தையிடமும், தன் சமூகத்தாரிடமும், “இச்சிலைகளென்ன? அவை எத்தகையவையென்றால் நீங்கள் அவற்றிற்காக (வழிபடுவதில்) நிலைத்திருக்கிறீர்கள்” என்று கேட்டபோது,
Saheeh International
When he said to his father and his people, "What are these statues to which you are devoted?"
قَالُوْا وَجَدْنَاۤ اٰبَآءَنَا لَهَا عٰبِدِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்وَجَدْنَاۤகண்டோம்اٰبَآءَنَاஎங்கள் மூதாதைகளைلَهَاஅவற்றைعٰبِدِيْنَ‏வணங்குபவர்களாக
காலூ வஜத்னா ஆBபா'அனா லஹா 'ஆBபிதீன்
முஹம்மது ஜான்
அவர்கள், “எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் ‘‘எங்கள் மூதாதைகள் இவற்றை வணங்கிக் கொண்டிருக்க நாங்கள் கண்டோம். (ஆதலால் நாங்களும் அவற்றை வணங்குகிறோம்)'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள், “எங்கள் மூதாதையர் அவற்றை வணங்கி வந்ததை நாங்கள் கண்டோம்” என்று மறுமொழி தந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள், “எங்கள் மூதாதையர்கள் இவைகளை வணங்கக்கூடியவர்களாக (இருந்ததை) நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "We found our fathers worshippers of them."
قَالَ لَقَدْ كُنْتُمْ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
قَالَகூறினார்لَـقَدْதிட்டமாகكُنْتُمْஇருக்கின்றீர்கள்اَنْتُمْநீங்களும்وَاٰبَآؤُமூதாதைகளும்كُمْஉங்கள்فِىْ ضَلٰلٍவழிகேட்டில்مُّبِيْنٍ‏தெளிவான
கால லகத் குன்தும் அன்தும் வ ஆBபா'உகும் Fபீ ளலாலின் முBபீன்
முஹம்மது ஜான்
(அதற்கு) அவர், “நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையரும் - பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘நீங்களும் உங்கள் மூதாதைகளும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறீர்கள்'' என்று கூறினார்.
IFT
அதற்கு அவர் கூறினார்: “நீங்களும் வழி பிறழ்ந்திருக்கின்றீர்கள்; உங்களுடைய மூதாதையரும் வெளிப்படையான வழிகேட்டில் கிடந்தார்கள்”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “திட்டமாக நீங்களும், உங்கள் மூதாதையரும் பகிரங்கமான வழிகேட்டில்(தான்) இருந்துவிட்டீர்கள்” என்று கூறினார்.
Saheeh International
He said, "You were certainly, you and your fathers, in manifest error."
قَالُوْۤا اَجِئْتَنَا بِالْحَقِّ اَمْ اَنْتَ مِنَ اللّٰعِبِیْنَ ۟
قَالُوْۤاகூறினர்اَجِئْتَـنَاநீர் எங்களிடம் வந்தீரா?بِالْحَـقِّசத்தியத்தைக் கொண்டுاَمْஅல்லதுاَنْتَநீரும் ஒருவராمِنَ اللّٰعِبِيْنَ‏விளையாட்டாக பேசுபவர்களில்
காலூ அஜி'தனா Bபில் ஹக்கி அம் அன்த மினல் லா'இBபீன்
முஹம்மது ஜான்
(அதற்கு) அவர்கள் “நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?” என்று கேட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘நீர் ஏதும் உண்மையான செய்தியை நம்மிடம் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது (இவ்வாறு கூறி நம்முடன்) நீர் விளையாடுகிறீரா?'' என்று கேட்டனர்.
IFT
அதற்கவர்கள் கேட்டார்கள்: “எங்களிடம் உண்மையான கருத்தைத்தான் எடுத்துரைக்கின்றீரா? அல்லது கேலி செய்கின்றீரா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “நீர் எங்களிடம் ஏதும் உண்மை(யான செய்தி)யைக் கொண்டு வந்திருக்கின்றீரா? அல்லது விளையாடுபவர்களில் நீர் இருக்கின்றீரா? என்று கேட்டனர்.
Saheeh International
They said, "Have you come to us with truth, or are you of those who jest?"
قَالَ بَلْ رَّبُّكُمْ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ الَّذِیْ فَطَرَهُنَّ ۖؗ وَاَنَا عَلٰی ذٰلِكُمْ مِّنَ الشّٰهِدِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்بَلْமாறாகرَّبُّكُمْஉங்களுக்கும் இறைவன்رَبُّஇறைவன்தான்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமியின்الَّذِىْஎப்படிப்பட்டவன்فَطَرَهُنَّ ۖ அவற்றைப்படைத்தான்وَاَنَاநானும் ஒருவன்عَلٰى ذٰلِكُمْஇதற்குمِّنَ الشّٰهِدِيْنَ‏சாட்சி கூறுபவர்களில்
கால Bபர் ரBப்Bபுகும் ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளில் லதீ Fபதரஹுன்ன வ அன 'அலா தாலிகும் மினஷ் ஷாஹிதீன்
முஹம்மது ஜான்
“அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘(நான் விளையாடுபவன்) இல்லை. உங்கள் (உண்மையான) இறைவன், வானங்களையும், பூமியையும் படைத்த இறைவன்தான். (இந்த சிலைகளல்ல) இதற்கு நானே உங்களுக்குச் சாட்சி கூறுகிறேன்'' என்று கூறினார்.
IFT
அதற்கவர் பதிலளித்தார்: “இல்லை, உண்மையில் வானங்களையும் பூமியையும் படைத்து அவற்றிற்கு அதிபதியாக இருப்பவன் யாரோ அவனே உங்களின் அதிபதி ஆவான். இதற்கு நான் உங்கள் முன் சாட்சியம் கூறுகின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், (அவ்வாறு) “அல்ல! உங்களுடைய இரட்சகன் (அவன்தான்) வானங்களுக்கும், பூமிக்கும் இரட்சகனாவான், அவனே அவற்றைப் படைத்தான், இதற்கு சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்” என்று (இப்றாஹீம்) கூறினார்.
Saheeh International
He said, "[No], rather, your Lord is the Lord of the heavens and the earth who created them, and I, to that, am of those who testify.
وَتَاللّٰهِ لَاَكِیْدَنَّ اَصْنَامَكُمْ بَعْدَ اَنْ تُوَلُّوْا مُدْبِرِیْنَ ۟
وَ تَاللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகلَاَكِيْدَنَّநிச்சயமாக நான் சதி செய்வேன்اَصْنَامَكُمْஉங்கள் சிலைகளுக்குبَعْدَபின்னர்اَنْ تُوَلُّوْا مُدْبِرِيْنَ‏நீங்கள் திரும்பிச் சென்ற
வ தல்லாஹி ல அகீதன்ன அஸ்னாமகும் Bபஃத அன் துவல்லூ முத்Bபிரீன்
முஹம்மது ஜான்
“இன்னும்: நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!” (என்றும் கூறினார்.)
அப்துல் ஹமீது பாகவி
(இங்கிருந்து) ‘‘நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் சிலைகளைப் பங்கப்படுத்திவிடுவேன்'' (என்றும் கூறினார்.)
IFT
மேலும், அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் இல்லாத சமயம் உங்களுடைய உருவச் சிலைகளை திண்ணமாக, நான் ஒரு கை பார்ப்பேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இன்னும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் (இங்கிருந்து) புறங்காட்டியவர்களாகத் திரும்பிச் சென்ற பின், உங்கள் சிலைகளுக்குத் திண்ணமாக நான் சதி செய்வேன்” (என்றும் கூறினார்.)
Saheeh International
And [I swear] by Allah, I will surely plan against your idols after you have turned and gone away."
فَجَعَلَهُمْ جُذٰذًا اِلَّا كَبِیْرًا لَّهُمْ لَعَلَّهُمْ اِلَیْهِ یَرْجِعُوْنَ ۟
فَجَعَلَهُمْஅவற்றை ஆக்கிவிட்டார்جُذٰذًاசிறுசிறு துண்டுகளாகاِلَّاதவிரكَبِيْرًاபெரிய சிலைلَّهُمْஅவர்களுக்குரியلَعَلَّهُمْஅவர்கள்اِلَيْهِஅதனளவில்يَرْجِعُوْنَ‏திரும்ப வருவதற்காக
Fபஜ'அலஹும் ஜுதாதன் இல்லா கBபீரல் லஹும் ல'அல்லஹும் இலய்ஹி யர்ஜி'ஊன்
முஹம்மது ஜான்
அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்).
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறே அவர்கள் சென்ற பின்னர்) அவற்றில் பெரிய சிலையைத் தவிர (மற்ற) அனைத்தையும் துண்டு துண்டாக உடைத்துத் தள்ளிவிட்டார். அவர்கள் (திரும்ப வந்த பின்னர் இதைப் பற்றி விசாரிப்பதற்காகப்) பெரிய சிலையிடம் செல்லக் கூடும் (என்று அதை மட்டும் உடைக்கவில்லை).
IFT
பிறகு அவர் அவற்றைத் துண்டு துண்டாய் உடைத்தார். அவற்றில் பெரிய சிலையை மட்டும் விட்டு வைத்தார். அவர்கள் அதனை நோக்கி வரக் கூடும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர்) அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) யாவற்றையும் துண்டு துண்டாக ஆக்கி (உடைத்துத் தள்ளி) விட்டார், (பெரிய சிலையாகிய) அதன்பால் (விளக்கம் கேட்டு) அவர்கள் திரும்புவதற்காக (அதனை மட்டும் உடைக்கவில்லை).
Saheeh International
So he made them into fragments, except a large one among them, that they might return to it [and question].
قَالُوْا مَنْ فَعَلَ هٰذَا بِاٰلِهَتِنَاۤ اِنَّهٗ لَمِنَ الظّٰلِمِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்مَنْயார்?فَعَلَசெய்தார்هٰذَاஇதைبِاٰلِهَتِنَاۤஎனவே கடவுள்களுக்குاِنَّهٗநிச்சயமாக அவர்لَمِنَ الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களில் ஒருவர் ஆவார்
காலூ மன் Fப'அல ஹாதா Bபி ஆலிஹதினா இன்னஹூ லமினள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
“எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருப்பான்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (திரும்ப வந்து இக்காட்சியைக் கண்டதும்) ‘‘எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவன் எவன்? நிச்சயமாக அவன் மகா அநியாயக்காரன்'' என்று கூறினார்கள்.
IFT
அவர்கள் (திரும்பி வந்து சிலைகளின் இந்த நிலையைக் கண்டதும்) கேட்கலாயினர்: “நம்முடைய தெய்வங்களை இந்நிலைக்கு ஆளாக்கியவன் யார்? உண்மையில் அவன் பெரும் கொடுமைக்காரனாகத்தான் இருக்க வேண்டும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(திரும்ப வந்து, இவற்றைக் கண்ட) அவர்கள். “எங்கள் (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை இவ்வாறு செய்தவன் யார்? நிச்சயமாக அவன் அநியாயக்காரர்களில் உள்ளவன்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Who has done this to our gods? Indeed, he is of the wrongdoers."
قَالُوْا سَمِعْنَا فَتًی یَّذْكُرُهُمْ یُقَالُ لَهٗۤ اِبْرٰهِیْمُ ۟ؕ
قَالُوْاஅவர்கள் கூறினர்سَمِعْنَاநாங்கள் செவியுற்றோம்فَتًىஒரு வாலிபரைيَّذْكُرُவிமர்சிக்கின்றார்هُمْஅவற்றைيُقَالُசொல்லப்படும்لَهٗۤஅவருக்குاِبْرٰهِيْمُ ؕ‏இப்றாஹீம்
காலூ ஸமிஃனா Fபத(ன்)ய் யத்குருஹும் யுகாலு லஹூ இBப்ராஹீம்
முஹம்மது ஜான்
அதற்கு (அவர்களில் சிலர்) “இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்ராஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (அவர்களில் சிலர்) ‘‘ஒரு வாலிபர் இவற்றைப் பற்றி(க் குறை) கூறிக் கொண்டிருப்பதை நாங்கள் செவியுற்று இருக்கிறோம். அவருக்கு ‘இப்றாஹீம்' என்று பெயர் கூறப்படுகிறது'' என்று கூறினார்கள்.
IFT
(சிலர்) கூறினர்: “இப்ராஹீம் எனும் பெயருடைய ஓர் இளைஞர் இந்தச் சிலைகள் பற்றிக் கூறுவதை நாங்கள் கேட்டிருந்தோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்களில் சிலர் “ஒரு இளைஞர் இவைகளைப் பற்றிக் (குறை) கூறிக் கொண்டிருந்ததை நாங்கள் செவியுற்றிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று (பெயர்) கூறப்படுகிறது” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "We heard a young man mention them who is called Abraham."
قَالُوْا فَاْتُوْا بِهٖ عَلٰۤی اَعْیُنِ النَّاسِ لَعَلَّهُمْ یَشْهَدُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்فَاْتُوْاகொண்டு வாருங்கள்بِهٖஅவரைعَلٰٓى اَعْيُنِகண்களுக்கு முன்النَّاسِமக்களின்لَعَلَّهُمْ يَشْهَدُوْنَ‏அவர்கள் பார்ப்பதற்காக
காலூ Fப'தூ Bபிஹீ 'அலா அஃயுனின் னாஸி ல'அல்லஹும் யஷ் ஹதூன்
முஹம்மது ஜான்
“அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு” என்று சொன்னார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘(அவ்வாறாயின்) அவரை மக்கள் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள். (அவர் கூறும் பதிலுக்கு) அனைவரும் சாட்சியாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கவர்கள் கூறினர்: “பிடித்துக் கொண்டு வாருங்கள் அவரை, எல்லோர் முன்னிலையிலும்! (அவர் மீது எவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை) மக்கள் பார்க்கட்டும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “அவ்வாறாயின், அவரை மக்களின் கண்களுக்கெதிரில் கொண்டு வாருங்கள் (அவரை யாவரும் பார்த்து) அவர்கள் சாட்சியம் கூறலாம்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Then bring him before the eyes of the people that they may testify."
قَالُوْۤا ءَاَنْتَ فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا یٰۤاِبْرٰهِیْمُ ۟ؕ
قَالُوْٓاகூறினர்ءَاَنْتَநீர்தான்فَعَلْتَசெய்தீராهٰذَاஇதைبِاٰلِهَتِنَاஎங்கள் கடவுள்களுடன்يٰۤاِبْرٰهِيْمُؕ‏இப்றாஹீமே
காலூ 'அ-அன்த Fப'அல்த ஹாதா Bபி ஆலிஹதினா யா இBப்ராஹீம்
முஹம்மது ஜான்
“இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?” என்று (அவர் வந்ததும்) கேட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறு இப்றாஹீமைக் கொண்டு வந்து அவரை நோக்கி) ‘‘இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தானோ?'' என்று கேட்டனர்.
IFT
(இப்ராஹீம் வந்ததும்) அவர்கள் கேட்டார்கள்: “இப்ராஹீமே! நீர்தாமா எங்கள் கடவுள்களுடன் இவ்வாறு (தரக்குறைவாக) நடந்து கொண்டது?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறு கொண்டு வரப்பட்ட அவரிடம்,) “இப்றாஹீமே! எங்களுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தானா?” என்று கேட்டனர்.
Saheeh International
They said, "Have you done this to our gods, O Abraham?"
قَالَ بَلْ فَعَلَهٗ ۖۗ كَبِیْرُهُمْ هٰذَا فَسْـَٔلُوْهُمْ اِنْ كَانُوْا یَنْطِقُوْنَ ۟
قَالَஅவர்கள் கூறினர்بَلْமாறாகفَعَلَهٗஇதை செய்ததுۖ  كَبِيْرُபெரிய சிலைதான்هُمْஅவற்றில்هٰذَاஅவைفَسْــٴَــلُوْஆகவே கேளுங்கள்هُمْஅவற்றிடம்اِنْ كَانُوْاஇருந்தால்يَنْطِقُوْنَ‏பேசுபவர்களாக
கால Bபல் Fப'அலஹூ கBபீருஹும் ஹாதா Fபஸ்'அலூஹும் இன் கானூ யன்திகூன்
முஹம்மது ஜான்
அதற்கு அவர் “அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘இல்லை. இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே! இதுதான் செய்திருக்கலாம்! (உடைப்பட்ட) இவை பேசக்கூடியவையாக இருந்தால் அவற்றையே கேளுங்கள்'' என்றார்.
IFT
அதற்கு அவர், “இவற்றில் இந்தப் பெரிய சிலைதான் இவற்றையெல்லாம் செய்திருக்க வேண்டும். (துண்டுபட்ட) இவை பேசுமாயின் இவற்றிடமே கேட்டுப் பாருங்கள்” என்றார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “அவ்வாறல்ல! அதை அவர்களில் பெரியது தான் செய்தது, (உடைக்கப்பட்ட) அவர்கள் பேசக்கூடியவர்களாக இருந்தால் அவர்களையே கேளுங்கள்! என்று கூறினார்.
Saheeh International
He said, "Rather, this - the largest of them - did it, so ask them, if they should [be able to] speak."
فَرَجَعُوْۤا اِلٰۤی اَنْفُسِهِمْ فَقَالُوْۤا اِنَّكُمْ اَنْتُمُ الظّٰلِمُوْنَ ۟ۙ
فَرَجَعُوْۤاஅவர்கள் திரும்பினர்اِلٰٓىபக்கமேاَنْـفُسِهِمْதங்கள்فَقَالُوْۤاகூறினர்اِنَّكُمْ اَنْـتُمُநிச்சயமாக நீங்கள்தான்الظّٰلِمُوْنَۙ‏அநியாயக்காரர்கள்
Fபரஜ'ஊ இலா அன்Fபுஸிஹிம் Fபகாலூ இன்னகும் அன்துமுள் ளாலிமூன்
முஹம்மது ஜான்
(இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) “நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்” என்று பேசிக் கொண்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (இதற்குப் பதில் கூறமுடியாமல் நாணமுற்றுத்) தங்களுக்குள் (ஒருவர் மற்றவரை நோக்கி) “நிச்சயமாக நீங்கள்தான் (இவற்றைத் தெய்வமெனக் கூறி) அநியாயம் செய்து விட்டீர்கள்'' என்று கூறிக் கொண்டார்கள்.
IFT
இதைக் கேட்டு அவர்கள் தங்களுடைய மனச்சாட்சியின் பக்கம் திரும்பினர். பிறகு, ஒவ்வொருவரும் (தங்களுக்குள்) “உண்மையில் நீங்களே அக்கிரமக்காரர்கள்” என்று கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் (நாணமுற்று) தங்கள் பக்கமே திரும்பி (ஒருவர் மற்றவரிடம்,) “நிச்சயமாக நீங்கள் தான் (இவற்றை வணங்கி) அக்கிரமம் செய்து விட்டீர்கள்” என்று கூறிக்கொண்டார்கள்.
Saheeh International
So they returned to [blaming] themselves and said [to each other], "Indeed, you are the wrongdoers."
ثُمَّ نُكِسُوْا عَلٰی رُءُوْسِهِمْ ۚ لَقَدْ عَلِمْتَ مَا هٰۤؤُلَآءِ یَنْطِقُوْنَ ۟
ثُمَّபிறகுنُكِسُوْاமாறினர்عَلٰى رُءُوْسِہِمْ‌ۚஅவர்கள் தலைகீழாகلَـقَدْதிட்டவட்டமாகعَلِمْتَநீர் அறிவீர்مَا هٰٓؤُلَاۤءِ يَنْطِقُوْنَ‏இவை பேசாது என்பதை
தும்ம னுகிஸூ 'அலா ரு'ஊஸிஹிம் லகத் 'அலிம்த மா ஹா'உலா'இ யன்திகூன்
முஹம்மது ஜான்
பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; “இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!” (என்று கூறினர்).
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அவர்கள் (வெட்கத்தால் சிறிது நேரம்) தலை குனிந்திருந்து (இப்றாஹீமை நோக்கி) ‘‘இவை பேசாது என்பதை நிச்சயமாக நீர் அறிவீரே! (அவ்வாறிருக்க இவற்றிடம் நாங்கள் கேட்கும்படி எங்களிடம் எவ்வாறு கூறுகிறீர்?)'' (என்று கூறினார்கள்).
IFT
ஆனால் பிறகு அவர்களுடைய புத்தி தலைகீழாக மாறிற்று. “இப்ராஹீமே! இவை பேசமாட்டா என்பது உமக்குத் தெரிந்ததுதானே!” என்று கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், (வெட்கத்தால்) அவர்கள் தலைகுனியச் செய்யப்பட்டார்கள், (சற்று நேரத்திற்குப் பிறகு இப்றாஹீமிடம்,) “இவைகள் பேசமாட்டா, என்பதை நிச்சயமாக நீர் அறிந்திருக்கிறீர்” என்று கூறினார்கள்.
Saheeh International
Then they reversed themselves, [saying], "You have already known that these do not speak!"
قَالَ اَفَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُكُمْ شَیْـًٔا وَّلَا یَضُرُّكُمْ ۟ؕ
قَالَஅவர் கூறினார்اَفَتَعْبُدُوْنَவணங்குகிறீர்களா?مِنْ دُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைمَاஎவற்றைلَا يَنْفَعُكُمْஉங்களுக்கு பலன் அளிக்காதுشَيْـٴًـــاஅறவேوَّلَا يَضُرُّكُمْؕ‏இன்னும் உங்களுக்கு தீங்கிழைக்காது
கால அFபதஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யன்Fப'உகும் ஷய்'அ(ன்)வ் வலா யளுர்ருகும்
முஹம்மது ஜான்
“(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்” என்று கேட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘உங்களுக்கு ஒரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாத (இ)வற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?
IFT
அதற்கு இப்ராஹீம் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு இலாபத்தையோ, நஷ்டத்தையோ அளிக்க வலிமையற்ற தெய்வங்களையா வணங்குகின்றீர்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“கொஞ்சமும் உங்களுக்கு நன்மை செய்யாத, உங்களுக்குத் தீமையும் செய்யாத, அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று (இப்றாஹீமாகிய) அவர் கேட்டார்.
Saheeh International
He said, "Then do you worship instead of Allah that which does not benefit you at all or harm you?
اُفٍّ لَّكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
اُفٍّசீச்சிلَّـكُمْஉங்களுக்குوَلِمَا تَعْبُدُوْنَஇன்னும் நீங்கள் வணங்குபவர்களுக்குمِنْ دُوْنِஅன்றிاللّٰهِ‌ؕஅல்லாஹ்வைاَفَلَا تَعْقِلُوْنَ‏நிச்சயமாக சிந்தித்து புரியமாட்டீர்களா?
உFப்Fபில் லகும் வ லிமா தஃBபுதூன மின் தூனில் லாஹ்; அFபலா தஃகிலூன்
முஹம்மது ஜான்
“சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?” (என்று இப்ராஹீம் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
சீச்சி! (கேவலம் நீங்களென்ன) உங்களுக்கும் கேடுதான்; நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாத இவைக(ளென்ன இவை)களுக்கும் கேடுதான். என்னே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறினார்.
IFT
சீச்சி! எவ்வளவு கேவலம்! உங்களுக்கும் நீங்கள் வழிபாடு செய்கின்ற தெய்வங்களுக்கும்! உங்களுக்குக் கொஞ்சமும் அறிவில்லையா, என்ன?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாத இவைகளுக்கும் (நாசம்தான்,) நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?” என்று கூறினார்.
Saheeh International
Uff to you and to what you worship instead of Allah. Then will you not use reason?"
قَالُوْا حَرِّقُوْهُ وَانْصُرُوْۤا اٰلِهَتَكُمْ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்حَرِّقُوْهُஅவரை எரித்து விடுங்கள்وَانْصُرُوْۤاஇன்னும் உதவி செய்யுங்கள்اٰلِهَتَكُمْஉங்கள் கடவுள்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்فٰعِلِيْنَ‏(உதவி)செய்பவர்களாக
காலூ ஹர்ரிகூஹு வன்ஸுரூ ஆலிஹதகும் இன் குன்தும் Fபா'இலீன்
முஹம்மது ஜான்
(இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் (தங்கள் மனிதர்களை நோக்கி,) ‘‘நீங்கள் ஏதும் செய்ய வேண்டுமென்றி ருந்தால் இவரை நெருப்பில் எரித்து உங்கள் தெய்வங்களுக்காக இவரிடம் பழி வாங்குங்கள்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள் கூறினார்கள்: “எரித்துவிடுங்கள் இவரை! உதவுங்கள் உங்கள் தெய்வங்களுக்கு நீங்கள் ஏதும் செய்வதாயிருந்தால்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “நீங்கள் ஏதும் செய்பவர்களாக இருந்தால், இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள், (அதன்மூலம்) உங்கள் (வணக்கத்திற்குரிய) தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று (தங்களைச் சார்ந்தோரிடம்) கூறினார்கள்.
Saheeh International
They said, "Burn him and support your gods - if you are to act."
قُلْنَا یٰنَارُ كُوْنِیْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟ۙ
قُلْنَاநாம் கூறினோம்يٰنَارُநெருப்பேكُوْنِىْஆகிவிடுبَرْدًاகுளிர்ச்சியாகவும்وَّسَلٰمًاபாதுகாப்பாகவும்عَلٰٓى اِبْرٰهِيْمَۙ‏இப்றாஹீமுக்கு
குல்னா யா னாரு கூனீ Bபர்த(ன்)வ் வ ஸலாமன் 'அலா இBப்ராஹீம்
முஹம்மது ஜான்
(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறே அவர்கள் இப்றாஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி) ‘‘நெருப்பே! நீ இப்றாஹீமுக்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு!'' என்று நாம் கூறினோம்.
IFT
நாம் கூறினோம்: “நெருப்பே! நீ இப்ராஹீமுக்கு குளுமையாகவும், சாந்தமாகவும் ஆகிவிடு!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்கள், இப்றாஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே,) “நெருப்பே! இப்றாஹீமுக்குக் குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக்கூடியதாகவும் ஆகிவிடு” என்று நாம் கூறினோம்.
Saheeh International
We [i.e., Allah] said, "O fire, be coolness and safety upon Abraham."
وَاَرَادُوْا بِهٖ كَیْدًا فَجَعَلْنٰهُمُ الْاَخْسَرِیْنَ ۟ۚ
وَاَرَادُوْا بِهٖஅவருக்கு நாடினர்كَيْدًاஒரு சூழ்ச்சியைفَجَعَلْنٰهُمُஅவர்களையே ஆக்கிவிட்டோம்الْاَخْسَرِيْنَ‌ۚ‏நஷ்டவாளிகளாக
வ அராதூ Bபிஹீ கய்தன் Fபஜ'அல்னாஹுமுல் அக்ஸரீன்
முஹம்மது ஜான்
மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்!
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் இப்றாஹீமுக்கு தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே நஷ்டமடையும்படிச் செய்து விட்டோம்.
IFT
அவர்கள் இப்ராஹீமுக்குத் தீங்கு செய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களையே தோல்வியுறச் செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள், அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், நாம் அவர்களையே நஷ்டமடைந்தவர்களாகச் செய்து விட்டோம்.
Saheeh International
And they intended for him a plan [i.e., harm], but We made them the greatest losers.
وَنَجَّیْنٰهُ وَلُوْطًا اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا لِلْعٰلَمِیْنَ ۟
وَنَجَّيْنٰهُஇன்னும் நாம் பாதுகாத்தோம்/அவரைوَلُوْطًاலூத்தையும்اِلَىபக்கம்الْاَرْضِபூமியின்الَّتِىْ بٰرَكْنَاஅருள்வளம் புரிந்தفِيْهَاஅதில்لِلْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களுக்கு
வ னஜ்ஜய்னாஹு வ லூதன் இலல் அர்ளில் லதீ Bபாரக்னா Fபீஹா லில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான - பாக்கியமுள்ள - பூமியாக நாம் ஆக்கியுள்ள (பைத்துல் முகத்தஸில்) ஈடேற்றம் பெறச் செய்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் நாம் பாதுகாத்துக் கொண்டு, மனிதர்கள் பெரும் பாக்கியம் அடையக்கூடியதாக நாம் செய்திருக்கும் (பைத்துல் முகத்தஸ் என்னும்) ஊருக்கு கொண்டு வந்து சேர்த்தோம்.
IFT
நாம் அவரையும், லூத்தையும் காப்பாற்றி, உலக மக்கள் அனைவர்க்கும் நாம் பாக்கியம் பொழிந்திருக்கிற பூமிக்கு அவர்களைக் கொண்டு வந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம், அவரையும், லூத்தையும் அகிலத்தார்க்கு நாம் பாக்கியத்தை நல்கிய பூமியின் (பைத்துல் முகத்தஸின்) பால் (வரச்செய்து) ஈடேற்றம் பெறச் செய்தோம்.
Saheeh International
And We delivered him and Lot to the land which We had blessed for the worlds [i.e., peoples].
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ ؕ وَیَعْقُوْبَ نَافِلَةً ؕ وَكُلًّا جَعَلْنَا صٰلِحِیْنَ ۟
وَوَهَبْنَاநாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَ ؕஇஸ்ஹாக்கையும்وَيَعْقُوْبَயஃகூபையும்نَافِلَةً‌  ؕகொடையாகوَكُلًّاஅனைவரையும்جَعَلْنَاஆக்கினோம்صٰلِحِيْنَ‏நல்லவர்களாக
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக; வ யஃகூBப னாFபிலஹ்; வ குல்லன் ஜ'அல்னா ஸாலிஹீன்
முஹம்மது ஜான்
இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், நாம் அவருக்கு (அவருடைய) கோரிக்கைக்கு அதிகமாக இஸ்ஹாக்கையும், யஅகூபையும் அருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நல்லடியார்களாகவும் நாம் ஆக்கினோம்.
IFT
நாம் அவருக்கு இஸ்ஹாக்கை வழங்கினோம்; அதிகப்படியாக யஃகூபையும் வழங்கினோம். இவர்கள் ஒவ்வொருவரையும் நன்மக்களாகவும் நாம் ஆக்கினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், கூடுதலாக யஃகூபையும் அன்பளிப்புச் செய்தோம். (இவர்களில்) ஒவ்வொருவரையும் நல்லோர்களாகவும் நாம் ஆக்கினோம்.
Saheeh International
And We gave him Isaac and Jacob in addition, and all [of them] We made righteous.
وَجَعَلْنٰهُمْ اَىِٕمَّةً یَّهْدُوْنَ بِاَمْرِنَا وَاَوْحَیْنَاۤ اِلَیْهِمْ فِعْلَ الْخَیْرٰتِ وَاِقَامَ الصَّلٰوةِ وَاِیْتَآءَ الزَّكٰوةِ ۚ وَكَانُوْا لَنَا عٰبِدِیْنَ ۟ۚۙ
وَجَعَلْنٰهُمْஇன்னும் அவர்களை ஆக்கினோம்اَٮِٕمَّةًதலைவர்களாகيَّهْدُوْنَநேர்வழி காட்டுகின்றார்கள்بِاَمْرِنَاநமது கட்டளையின்படிوَاَوْحَيْنَاۤஇன்னும் நாம் வஹீ அறிவித்தோம்اِلَيْهِمْஅவர்களுக்குفِعْلَசெய்வதற்கும்الْخَيْرٰتِநன்மைகளைوَاِقَامَஇன்னும் நிலைநிறுத்துவதற்குالصَّلٰوةِதொழுகையைوَاِيْتَآءَஇன்னும் கொடுப்பதற்குالزَّكٰوةِ‌ۚஸகாத்தைوَكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்لَـنَاநம்மைعٰبِدِيْنَ ۙ‌ۚ‏வணங்குபவர்களாக
வ ஜ'அல்னாஹும் அ'இம்மத(ன்)ய் யஹ்தூன Bபி அம்ரினா வ அவ்ஹய்னா இலய்ஹிம் Fபிஃலல் கய்ராதி வ இகாமஸ் ஸலாதி வ ஈதா'அZஜ் Zஜகாதி வ கானூ லனா 'ஆBபிதீன்
முஹம்மது ஜான்
இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக - தலைவர்களாக - நாம் அவர்களை ஆக்கினோம்; மேலும், நன்மையுடைய செயல்களை புரியுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ஜகாத்தை கொடுத்து வருமாறும், நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் - அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், நம் கட்டளைகளை (மக்களுக்கு) ஏவி நேரான வழியை அறிவிக்கக்கூடிய தலைவர்களாகவும் அவர்களை ஆக்கினோம். நன்மையான காரியங்களைச் செய்யுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ‘ஜகாத்' கொடுத்து வருமாறும் அவர்களுக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். அவர்கள் அனைவரும் நம்மையே வணங்கிக் கொண்டிருந்தார்கள்.
IFT
நாம் அவர்களை நம்முடைய கட்டளைப்படி வழிகாட்டுகின்ற தலைவர்களாக (இமாம்களாக) திகழச் செய்தோம். மேலும், அவர்கள் நற்செயல்கள் புரியும்படியும், தொழுகையை நிலை நாட்டும்படியும், ஜகாத் கொடுத்து வரும்படியும் வஹியின் மூலம் அவர்களுக்கு நாம் வழிகாட்டினோம். அவர்கள் நமக்கே அடிபணிபவர்களாய்த் திகழ்ந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நம்முடைய கட்டளையின்படி நேர் வழி காட்டுகின்ற தலைவர்களாவும் அவர்களை நாம் ஆக்கினோம், அன்றியும், நன்மையான காரியங்களைச் செய்யுமாறும், தொழுகையை நிறைவேற்றுமாறும், ஜகாத்தைக் கொடுத்து வருமாறும் இவர்களுக்கு (வஹீ மூலம்) நாம் அறிவித்தோம், இவர்கள் அனைவரும் நம்மையே வணங்குபவர்களாக இருந்தார்கள்.
Saheeh International
And We made them leaders guiding by Our command. And We inspired to them the doing of good deeds, establishment of prayer, and giving of zakah; and they were worshippers of Us.
وَلُوْطًا اٰتَیْنٰهُ حُكْمًا وَّعِلْمًا وَّنَجَّیْنٰهُ مِنَ الْقَرْیَةِ الَّتِیْ كَانَتْ تَّعْمَلُ الْخَبٰٓىِٕثَ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فٰسِقِیْنَ ۟ۙ
وَلُوْطًاஇன்னும் லூத்தை நினைவு கூர்வீராக!اٰتَيْنٰهُஅவருக்கு நாம் கொடுத்தோம்حُكْمًاதீர்ப்பளிக்கின்ற ஆற்றலை(யும்)وَّعِلْمًاகல்வி ஞானத்தையும்وَّنَجَّيْنٰهُநாம் அவரை பாதுகாத்தோம்مِنَ الْقَرْيَةِஊரிலிருந்துالَّتِىْ كَانَتْஇருந்தார்கள்تَّعْمَلُசெய்துகொண்டுالْخَبٰٓٮِٕثَ‌ؕஅசிங்கங்களைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்قَوْمَமக்களாகسَوْءٍகெட்டفٰسِقِيْنَۙ‏பாவிகளாக
வ லூதன் ஆதய்னாஹு ஹுக்ம(ன்)வ் வ 'இல்ம(ன்)வ் வ னஜ்ஜய்னாஹு மினல் கர்யதில் லதீ கானத் தஃமலுல் கBபா'இத்; இன்னஹும் கானூ கவ்ம ஸவ்'இன் Fபாஸிகீன்
முஹம்மது ஜான்
இன்னும், லூத்தையும் (நபியாக்கி) - நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்; நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
லூத்தையும் (நபியாக்கி) அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் கொடுத்துத் தீய காரியங்களைச் செய்து கொண்டிருந்த ஊர் மக்களில் இருந்தும் நாம் அவரை பாதுகாத்துக் கொண்டோம். நிச்சயமாக அவ்வூரார் (மனிதர்களில்) மிகக்கெட்ட மனிதர்களாகவும் பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.
IFT
மேலும், லூத்திற்கு நாம் ஹுக்ம் விவேகத்தையும் ஞானத்தையும் வழங்கினோம். மேலும், அருவருக்கத்தக்க செயல்கள் புரிந்து வந்த ஊரிலிருந்து அவரைக் காப்பாற்றி வெளியேற்றினோம். திண்ணமாக, அவ்வூர் மக்கள் மிகவும் கெட்டவர்களாகவும், பாவிகளாகவும் இருந்தார்கள்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
லூத்தையும் (நபியாக்கி) – அவருக்கு நபித்துவத்ததையும், கல்வியையும் கொடுத்து, அருவருக்கத்தக்க செயல்களைச் செய்து கொண்டிருந்த ஊரிலிருந்தும் நாம் அவரை காப்பாற்றிக் கொண்டோம், நிச்சயமாக, அவர்கள் (மனிதர்களில்) மிகக் கெட்ட சமூகத்தினராக பெரும்பாவிகளாக இருந்தனர்.
Saheeh International
And to Lot We gave judgement and knowledge, and We saved him from the city that was committing wicked deeds. Indeed, they were a people of evil, defiantly disobedient.
وَاَدْخَلْنٰهُ فِیْ رَحْمَتِنَا ؕ اِنَّهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟۠
وَاَدْخَلْنٰهُஇன்னும் அவரை நாம் நுழைத்தோம்فِىْ رَحْمَتِنَا‌ ؕநமது அருளில்اِنَّهٗநிச்சயமாக அவர்مِنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில் உள்ளவர்
வ அத்கல்னாஹு Fபீ ரஹ்மதினா இன்னஹூ மினஸ் ஸாலிஹீன்
முஹம்மது ஜான்
இன்னும், அவரை நம்முடைய கிருபையில் நாம் புகுத்திக் கொண்டோம்; நிச்சயமாக அவர் (ஸாலிஹான) நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் அவரை நம் அருளில் புகுத்தினோம். நிச்சயமாக அவர் நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்.
IFT
மேலும், நாம் லூத்தை நம்முடைய அருளுக்கு உட்படுத்தினோம். அவர் உத்தமர்களில் ஒருவராய்த் திகழ்ந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நூம் (லூத் ஆகிய) அவரை நம்முடைய அருளில் புகுத்திக் கொண்டோம், நிச்சயமாக அவர் நல்லோர்களில் உள்ளவராவார்.
Saheeh International
And We admitted him into Our mercy. Indeed, he was of the righteous.
وَنُوْحًا اِذْ نَادٰی مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهٗ فَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ۚ
وَنُوْحًاஇன்னும் நூஹையும் நினைவு கூர்வீராகاِذْ نَادٰىஅவர் அழைத்தபோதுمِنْ قَبْلُஇதற்கு முன்னர்فَاسْتَجَبْنَاபதிலளித்தோம்لَهٗஅவருக்குفَنَجَّيْنٰهُபாதுகாத்தோம்وَاَهْلَهٗஇன்னும் அவருடைய குடும்பத்தாரைمِنَ الْكَرْبِதண்டனையிலிருந்துالْعَظِيْمِ‌ۚ‏பெரிய
வ னூஹன் இத் னாதா மின் கBப்லு Fபஸ்தஜBப்னா லஹூ Fபனஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ மினல் கர்Bபில் 'அளீம்
முஹம்மது ஜான்
இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்; அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம்.
அப்துல் ஹமீது பாகவி
நூஹையும் (நபியாக அனுப்பிவைத்தோம்.) அவர் இதற்கு முன்னர் செய்து கொண்டிருந்த பிரார்த்தனையை அவருக்காக நாம் அங்கீகரித்துக் கொண்டு, அவரையும் அவரது குடும்பத்தினரையும் பெரும் சிரமத்தில் இருந்து பாதுகாத்துக் கொண்டோம்.
IFT
இதே அருட்பேற்றினை நாம் நூஹுக்கும் வழங்கினோம். இவர்களனைவருக்கும் முன்னதாக அவர் நம்மிடம் இறைஞ்சியதை நினைவுகூரும்! நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு, அவரையும் அவர் குடும்பத்தையும் மாபெரும் துன்பத்திலிருந்து விடுவித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நூஹையும் (நினைவு கூர்வீராக!) முன்னர் அவர் (பிரார்த்தனை செய்து) அழைத்தபோது, அவருக்கு (அவரது பிரார்த்தனையை ஏற்று) நாம் பதில் கூறினோம், (அதன் பொருட்டு) அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெரும் கஷ்டத்திலிருந்து நாம் காப்பாற்றினோம்.
Saheeh International
And [mention] Noah, when he called [to Allah] before [that time], so We responded to him and saved him and his family from the great affliction [i.e., the flood].
وَنَصَرْنٰهُ مِنَ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِیْنَ ۟
وَنَصَرْنٰهُஇன்னும் அவருக்கு நாம் உதவி செய்தோம்مِنَ الْقَوْمِமக்களிடமிருந்துالَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَا ؕநமது அத்தாட்சிகளைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தனர்قَوْمَமக்களாகسَوْءٍகெட்டفَاَغْرَقْنٰهُمْஆகவே நாம் மூழ்கடித்தோம்/அவர்களைاَجْمَعِيْنَ‏அனைவரையும்
வ னஸர்னாஹு மினல் கவ்மில் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா; இன்னஹும் கானூ கவ்ம ஸவ்'இன் Fப-அக்ரக் னாஹும் அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
இன்னும் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களே அந்த சமூகத்தாரிடமிருந்து அவருக்கு உதவி செய்தோம். நிச்சயமாக அவர்கள் மிகக் கெட்ட சமூகத்தாராகவே இருந்தனர் - ஆதலால் அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
நம் வசனங்களைப் பொய்யாக்கிய மக்களுக்கு விரோதமாக அவருக்கு நாம் உதவி செய்தோம். நிச்சயமாக அவர்களும் மிகக் கெட்ட மக்களாகவே இருந்தனர். ஆதலால், அவர்கள் அனைவரையும் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்து விட்டோம்.
IFT
நம் சான்றுகளைப் பொய்யெனத் தூற்றிய சமுதாயத்தார்க்கு எதிராக நூஹுக்கு நாம் உதவியளித்தோம். திண்ணமாக, அம்மக்கள் மிகவும் தீயவர்களாகவே இருந்தார்கள். எனவே, நாம் அவர்களனைவரையும் மூழ்கடித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிய சமூகத்தாரிலிருந்து (அவர்களின் தீமையைத் தடுத்து) அவருக்கு நாம் உதவியும் செய்தோம், நிச்சயமாக அவர்களும் மிகக் கெட்ட சமூகத்தவராகவே இருந்தனர், ஆதலால் அவர்கள் யாவரையும் (பெரு வெள்ளத்தில்) மூழ்கடித்துவிட்டோம்.
Saheeh International
And We aided [i.e., saved] him from the people who denied Our signs. Indeed, they were a people of evil, so We drowned them, all together.
وَدَاوٗدَ وَسُلَیْمٰنَ اِذْ یَحْكُمٰنِ فِی الْحَرْثِ اِذْ نَفَشَتْ فِیْهِ غَنَمُ الْقَوْمِ ۚ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِیْنَ ۟ۗۙ
وَدَاوٗدَஇன்னும் தாவூதுوَسُلَيْمٰنَஇன்னும் ஸுலைமானைاِذْ يَحْكُمٰنِஅவ்விருவரும் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராகفِى الْحَـرْثِவிவசாயத்தின் விளைச்சலில்اِذْ نَفَشَتْநுழைந்த போதுفِيْهِஅதில்غَنَمُஆடுகள்الْقَوْمِ‌ۚமக்களுடையوَكُنَّاஇருந்தோம்لِحُكْمِهِمْஅவர்களின் தீர்ப்பைشٰهِدِيْنَ ۙ‏நாம் அறிந்தவர்களாக
வ தாவூத வ ஸுலய்மான இத் யஹ்குமானி Fபில் ஹர்தி இத் னFபஷத் Fபீஹி கனமுல் கவ்மி வ குன்னா லிஹுக்மிஹிம் ஷாஹிதீன்
முஹம்மது ஜான்
இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
தாவூதையும் ஸுலைமானையும் (நபியாக அனுப்பிவைத்தோம்). ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்து விட்டது பற்றி (தாவூத், சுலைமான் ஆகிய) இருவரும் தீர்ப்புக் கூற இருந்த சமயத்தில் அவர்களுடைய தீர்ப்பை நாம் (கவனித்துப்) பார்த்துக் கொண்டிருந்தோம்.
IFT
இதே அருட்பேற்றினை தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வழங்கினோம். அவர்கள் இருவரும் ஒரு வயல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்ததை நினைத்துப் பாரும்: அந்த வயலிலோ இரவு நேரத்தில் மாற்றாரின் ஆடுகள் பரவலாக மேய்ந்து கொண்டிருந்தன. மேலும், அவர்கள் தீர்ப்பு வழங்கியதை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். அவ்வேளை நாம் ஸுலைமானுக்குச் சரியான தீர்ப்பினை புலப்படுத்தினோம். ஆயினும், இருவருக்குமே தீர்ப்பு கூறும் நுண்ணறிவையும், ஞானத்தையும் நாம் வழங்கியிருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வேளாண்மை நிலத்தில் ஒரு சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்து விட்டபோது, அவ்வேளாண்மை விஷயத்தில் தாவூது, சுலைமான் (ஆகிய இருவரும்) தீர்ப்பளித்த சந்தர்ப்பத்தை (நபியே! நினைவு கூர்வீராக! அப்போது) அவர்களுடைய தீர்ப்பை பார்ப்பவர்களாக நாம் இருந்தோம்.
Saheeh International
And [mention] David and Solomon, when they judged concerning the field - when the sheep of a people overran it [at night], and We were witness to their judgement.
فَفَهَّمْنٰهَا سُلَیْمٰنَ ۚ وَكُلًّا اٰتَیْنَا حُكْمًا وَّعِلْمًا ؗ وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ یُسَبِّحْنَ وَالطَّیْرَ ؕ وَكُنَّا فٰعِلِیْنَ ۟
فَفَهَّمْنٰهَاஅதை புரிய வைத்தோம்سُلَيْمٰنَ‌ۚசுலைமானுக்குوَكُلًّاஎல்லோருக்கும்اٰتَيْنَاநாம் கொடுத்தோம்حُكْمًاஞானத்தை(யும்)وَّعِلْمًا‌இன்னும் கல்வியைوَّسَخَّرْنَاஇன்னும் வசப்படுத்தினோம்مَعَ دَاوٗدَதாவூதுடன்الْجِبَالَமலைகளைيُسَبِّحْنَதுதிக்கின்றவையாகوَالطَّيْرَ‌ ؕஇன்னும் பறவைகளைوَكُنَّاஇன்னும் நாம் இருந்தோம்فٰعِلِيْنَ‏முடிவு செய்தவர்களாக
FபFபஹ்ஹம்னாஹா ஸுலய்மான்; வ குல்லன் ஆதய்னா ஹுக்ம(ன்)வ் வ'இல்ம(ன்)வ் வ ஸக் கர்னா ம'அ தாவூதல் ஜிBபால யுஸBப்Bபிஹ்ன வத்தய்ர்; வ குன்னா Fபா'இலீன்
முஹம்மது ஜான்
அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
தீர்ப்புக் கூறுவதில் இவர்கள் இருவருக்குமே கல்வியையும் ஞானத்தையும் நாம் கொடுத்திருந்த போதிலும், ஸுலைமானுக்கு நியாயத்தை விளக்கிக் காண்பித்தோம். மலைகளையும் பறவைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருடன் அல்லாஹ்வை தஸ்பீஹ் (துதி) செய்தன. நாமேதான் இவற்றை எல்லாம் செய்தோம்.
IFT
மலைகளையும், பறவைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அவை அவருடன் துதிபாடிக் கொண்டிருந்தன. இந்தச்செயலைச் செய்தவர்கள் நாமேதாம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தீர்ப்புக் கூறுவதில் நாம் ஸூலைமானுக்கு அ(தன் நியாயத்)தை விளங்க வைத்தோம், (அவ்விருவரில்) ஒவ்வொருவருக்கும் (தீர்ப்புக் கூறும்) அறிவையும், ஞானத்தையும் நாம் கொடுத்திருந்தோம், மலைகளையும், பட்சிகளையும் தாவூதுடன் (தஸ்பீஹ் செய்ய) வசப்படுத்தியும் கொடுத்தோம், அவை (அவருடன் அல்லாஹ்வை) துதி செய்தன, நாம்தாம் (இவற்றையெல்லாம்) செய்வோராய் இருந்தோம்.
Saheeh International
And We gave understanding of it [i.e., the case] to Solomon, and to each [of them] We gave judgement and knowledge. And We subjected the mountains to exalt [Us], along with David and [also] the birds. And We were doing [that].
وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْ بَاْسِكُمْ ۚ فَهَلْ اَنْتُمْ شٰكِرُوْنَ ۟
وَعَلَّمْنٰهُநாம் அவருக்கு கற்றுக் கொடுத்தோம்صَنْعَةَசெய்வதைلَبُوْسٍஆயுதங்களைلَّـكُمْஉங்களுக்காகلِتُحْصِنَكُمْஉங்களை பாதுகாப்பதற்காகمِّنْۢ بَاْسِكُمْ‌ۚஉங்கள் போரில்فَهَلْஆகவே ?اَنْـتُمْநீங்கள்شٰكِرُوْنَ‏நன்றி செலுத்துவீர்கள்
வ 'அல்லம்னாஹு ஸன்'அத லBபூஸில் லகும் லிதுஹ்ஸினகும் மின் Bப'ஸிகும் Fபஹல் அன்தும் ஷாகிரூன்
முஹம்மது ஜான்
இன்னும் நீங்கள் போரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை, அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தோம் - எனவே (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
(போரில் ஈட்டி, கத்தி ஆகியவற்றின்) காயத்தில் இருந்து உங்களை பாதுகாக்கக் கூடிய கவசங்கள் செய்வதை நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களா?
IFT
மேலும், உங்கள் நன்மைக்காக கவசம் தயார் செய்யும் கலையை நாம் அவருக்குக் கற்றுத் தந்தோம்; நீங்கள் போரிடும்போது உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக! பிறகு நீங்கள் நன்றியுடையவர்களாய் இருக்கின்றீர்களா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நீங்கள் எதிரிகளுடன் போரிடும்போது,) உங்களுடைய யுத்தத்தில் உங்களை தற்காத்துக் கொள்வதற்காக அணிந்துகொள்ளும் கவசங்கள் செய்வதை உங்களுக்காக நாம் அவருக்குக் கற்றுக்கொடுத்தோம், இதற்காக நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக இருக்கிறீர்களா?
Saheeh International
And We taught him the fashioning of coats of armor to protect you from your [enemy in] battle. So will you then be grateful?
وَلِسُلَیْمٰنَ الرِّیْحَ عَاصِفَةً تَجْرِیْ بِاَمْرِهٖۤ اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا ؕ وَكُنَّا بِكُلِّ شَیْءٍ عٰلِمِیْنَ ۟
وَلِسُلَيْمٰنَஇன்னும் சுலைமானுக்கு (நாம் வசப்படுத்தினோம்)الرِّيْحَகாற்றைعَاصِفَةًகடுமையாகவீசக்கூடியتَجْرِىْசெல்லும்بِاَمْرِهٖۤஅவருடைய கட்டளையின்படிاِلَى الْاَرْضِபூமியின் பக்கம்الَّتِىْஎதுبٰرَكْنَاநாம் அருள்வளம் புரிந்தோம்فِيْهَا‌ؕஅதில்وَكُنَّاஇன்னும் நாம் இருந்தோம்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عٰلِمِيْنَ‏அறிந்தவர்களாக
வ லி ஸுலய்மானர் ரீஹ 'ஆஸிFபதன் தஜ்ரீ Bபி அம்ரிஹீ இலல் அர்ளில் லதீ Bபாரக்னா Fபீஹா; வ குன்னா Bபிகுல்லி ஷய்'இன் 'ஆலிமீன்
முஹம்மது ஜான்
இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது; இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம்பெற்ற ஊருக்கு (அவரை எடுத்து)ச்செல்லும் எல்லா விஷயங்களையும் நாம் அறிந்திருந்தோம்.
IFT
மேலும், நாம் ஸுலைமானுக்கு வேகமான காற்றை வசப்படுத்தித் தந்தோம். அது அவருடைய கட்டளைக்கிணங்கி நாம் அருள் வழங்கிய நாடுகளின் பக்கம் வீசிக்கொண்டிருந்தது. மேலும், நாம் ஒவ்வொன்றைப் பற்றியும் அறிந்தவராகவே இருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஸூலைமானுக்கு வேகமாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது அவருடைய கட்டளையின்படி, எந்த பூமியில் பாக்கியத்தை நாம் நல்கினோமோ அந்த பூமியின்பால் (அவரை எடுத்துச்) செல்லும், மேலும், ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நாம் அறிந்தோராக இருந்தோம்.
Saheeh International
And to Solomon [We subjected] the wind, blowing forcefully, proceeding by his command toward the land which We had blessed. And We are ever, of all things, Knowing.
وَمِنَ الشَّیٰطِیْنِ مَنْ یَّغُوْصُوْنَ لَهٗ وَیَعْمَلُوْنَ عَمَلًا دُوْنَ ذٰلِكَ ۚ وَكُنَّا لَهُمْ حٰفِظِیْنَ ۟ۙ
وَمِنَ الشَّيٰطِيْنِஇன்னும் ஷைத்தான்களில்مَنْஎவர்يَّغُوْصُوْنَமூழ்கின்றார்கள்لَهٗஅவருக்காகوَيَعْمَلُوْنَஇன்னும் செய்கின்றார்கள்عَمَلًاசெயலைدُوْنَஅல்லாதذٰ لِكَ‌ ۚஅதுوَكُنَّاநாம் இருந்தோம்لَهُمْஅவர்களைحٰفِظِيْنَۙ‏பாதுகாப்பவர்களாக
வ மினஷ் ஷயாதீனி மய் யகூஸூன லஹூ வ யஃமலூன 'அமலன் தூன தாலிக வ குன்ன லஹும் ஹாFபிளீன்
முஹம்மது ஜான்
இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்; இது தவிர) மற்ற வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும்; அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
கடலில் மூழ்கி (முத்து, பவளம் போன்றவற்றைக் கொண்டு) வரக்கூடிய (மூர்க்க) ஷைத்தான்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். இதைத் தவிர (அவருக்கு அவசியமான) பல வேலைகளையும் அவை செய்துகொண்டு இருந்தன. நாம்தான் அவர்களைக் கண்காணித்து வந்தோம்.
IFT
மேலும், ஷைத்தான்களில் பலவற்றை நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருக்காக (கடலில்) மூழ்கக்கூடியவையாகவும், இதர பணிகளைப் புரிபவையாகவும் இருந்தன. அவர்கள் அனைவரையும் கண்காணிப்பவராக நாமே இருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஷைத்தான்களிலிருந்து அவருக்காக கடலில் மூழ்கி (முத்துக்களை மற்றும் பவளங்களையும் கொண்டு) வரக்கூடியவர்களையும், (நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம்.) இது தவிர (அவருக்காக வேறு) வேலைகளையும் அவர்கள் செய்து கொண்டிருந்தனர், மேலும், நாம்தாம் அவர்களைப் பாதுகாப்போராக இருந்தோம்.
Saheeh International
And of the devils [i.e., jinn] were those who dived for him and did work other than that. And We were of them a guardian.
وَاَیُّوْبَ اِذْ نَادٰی رَبَّهٗۤ اَنِّیْ مَسَّنِیَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟ۚۖ
وَاَيُّوْبَஇன்னும் அய்யூபை நினைவு கூர்வீராகاِذْ نَادٰىஅழைத்தபோதுرَبَّهٗۤதன் இறைவனைاَنِّىْநிச்சயமாக நான்مَسَّنِىَஎன்னை தொட்டுவிட்டனالضُّرُّதீங்குகள்وَاَنْتَநீயோاَرْحَمُமகா கருணையாளன்الرّٰحِمِيْنَ‌ ۖ‌ۚ‏கருணையாளர்களில்
வ அய்யூBப இத் னாதா ரBப்Bபஹூ அன்னீ மஸ்ஸனியள் ளுர்ரு வ அன்த அர்ஹமுர் ராஹிமீன்
முஹம்மது ஜான்
இன்னும், அய்யூப் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித்த போது,
அப்துல் ஹமீது பாகவி
ஐயூபையும் (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நோய் என்னைப் பிடித்துக் கொண்டது. (அதை நீ நீக்கி விடு.) நீயோ கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்'' என்று பிரார்த்தனை செய்தார்.
IFT
இவற்றையே (விவேகம், நுண்ணறிவு மற்றும் ஞானம் ஆகிய அருட்பேறுகளை) நாம் அய்யூபுக்கும் வழங்கியிருந்தோம். அவர், தம்முடைய இறைவனிடம் இறைஞ்சியதை நினைவுகூரும்: “என்னை நோய் பீடித்துவிட்டது; நீயோ கிருபை செய்வோரில் எல்லாம் பெருங்கிருபையாளனாய் இருக்கின்றாய்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அய்யூபையும் (நினைவு கூர்வீராக!) அவர், தன் இரட்சகனிடம், “நிச்சயமாகத் துன்பம் என்னைப்பீடித்துக் கொண்டது, நீயோ கிருபையாளர்களிலெல்லாம் மிகக் கிருபையாளன்” என்று (பிரார்த்தனை செய்து) அழைத்தபோது,
Saheeh International
And [mention] Job, when he called to his Lord, "Indeed, adversity has touched me, and You are the most merciful of the merciful."
فَاسْتَجَبْنَا لَهٗ فَكَشَفْنَا مَا بِهٖ مِنْ ضُرٍّ وَّاٰتَیْنٰهُ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرٰی لِلْعٰبِدِیْنَ ۟
فَاسْتَجَبْنَاஆகவே, நாம் பதிலளித்தோம்لَهٗஅவருக்குفَكَشَفْنَاஅகற்றினோம்مَا بِهٖஅவருக்கு இருந்தمِنْ ضُرٍّ‌தீங்குகளைوَّاٰتَيْنٰهُஇன்னும் அவருக்கு வழங்கினோம்اَهْلَهٗஅவருடைய குடும்பத்தைوَمِثْلَهُمْஅவர்கள் போன்றவர்களைمَّعَهُمْஅவர்களுடன்رَحْمَةًகருணையாகمِّنْ عِنْدِنَاநம் புறத்திலிருந்துوَذِكْرٰىஇன்னும் நினைவூட்டலாகும்لِلْعٰبِدِيْنَ‏வணக்கசாலிகளுக்கு
Fபஸ்தஜBப்னா லஹூ FபகஷFப் னா மா Bபிஹீ மின் ளுர்ரி(ன்)வ் வ ஆதய்னாஹு அஹ்லஹூ வ மித்லஹும் ம'அஹும் ரஹ்மதன் மின் 'இன்தினா வ திக்ரா லில்'ஆBபிதீன்
முஹம்மது ஜான்
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து, அவரைப் பீடித்திருந்த நோயையும் நீக்கி, அவருடைய குடும்பத்தையும் நாம் அவருக்கு அளித்து, நம் அருளால் மேலும் அதைப் போன்ற தொகையினரையும் அவருக்குக் (குடும்பமாகக்) கொடுத்தோம். இது (எனக்குப் பயந்து) என்னை வணங்குபவர்களுக்கு(ம் என்னிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கும்) நல்லுணர்ச்சி ஊட்டக்கூடியதாக இருக்கிறது.
IFT
நாம் அவருடைய இறைஞ்சுதலை ஏற்று அவருக்கிருந்த நோயைப் போக்கிவிட்டோம். அவருக்கு நாம் அவருடைய குடும்பத்தை மட்டும் வழங்கவில்லை, அவர்களுடன் அதே அளவுக்கு இன்னும் அதிகமானவர்களையும் வழங்கினோம் இது நம்முடைய சிறப்பான கிருபையாகவும், அடிபணிந்து வணங்குவோருக்கு ஒரு நினைவூட்டுதலாகவும் அமைவதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் அவருக்கு பதிலளித்து, பின்னர், அவருக்கிருந்த துன்பத்தையும் நீக்கிவிட்டோம், அவருடைய குடும்பத்தையும், அவர்களுடன் அவர்களைப் போன்றவர்களையும் அவருக்கு நாம் கொடுத்தோம், இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் (நம்மை) வணங்குவோருக்கு நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.
Saheeh International
So We responded to him and removed what afflicted him of adversity. And We gave him [back] his family and the like thereof with them as mercy from Us and a reminder for the worshippers [of Allah].
وَاِسْمٰعِیْلَ وَاِدْرِیْسَ وَذَا الْكِفْلِ ؕ كُلٌّ مِّنَ الصّٰبِرِیْنَ ۟ۚۖ
وَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீலை நினைவு கூர்வீராகوَاِدْرِيْسَஇத்ரீஸையும்وَذَا الْكِفْلِ‌ؕதுல்கிஃப்லையும்كُلٌّஎல்லோரும்مِّنَ الصّٰبِرِيْنَ‌ ۖ‌ۚ‏பொறுமையாளர்களில் உள்ளவர்கள்
வ இஸ்மா'ஈல வ இத்ரீஸ வ தல் கிFப்லி குல்லும் மினஸ் ஸாBபிரீன்
முஹம்மது ஜான்
இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!
அப்துல் ஹமீது பாகவி
இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிப்லுவையும் (நாம் நம் தூதர்களாக அனுப்பிவைத்தோம்). இவர்கள் அனைவரும் (தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைச்) சகித்துக் கொண்டனர்.
IFT
மேலும், இதே அருட்பேற்றினை இஸ்மாயீலுக்கும், இத்ரீஸுக்கும், துல்கிஃப்லுக்கும் நாம் வழங்கியிருந்தோம். இவர்களனைவரும் பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களாய் இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிப்லுவையும்- (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) இவர்கள் ஒவ்வொருவரும், பொறுமையாளர்களாக இருந்தனர்.
Saheeh International
And [mention] Ishmael and Idrees and Dhul-Kifl; all were of the patient.
وَاَدْخَلْنٰهُمْ فِیْ رَحْمَتِنَا ؕ اِنَّهُمْ مِّنَ الصّٰلِحِیْنَ ۟
وَاَدْخَلْنٰهُمْஇவர்களை நுழைத்துக் கொண்டோம்فِىْ رَحْمَتِنَا ؕநமது அருளில்اِنَّهُمْநிச்சயமாக இவர்கள்مِّنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில் உள்ளவர்கள்
வ அத்கல்னாஹும் Fபீ ரஹ்மதினா இன்னஹும் மினஸ் ஸாலிஹீன்
முஹம்மது ஜான்
இவர்கள் (எல்லோரையும்) நாம் நம் கிருபையில் புகுத்திக் கொண்டோம், நிச்சயமாக இவர்கள் (ஸாலிஹீன்களான) நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்களே!
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, இவர்கள் அனைவரையும் நாம் நம் அருளில் புகுத்தினோம். ஏனென்றால், நிச்சயமாக இவர்கள் அனைவரும் நல்லவர்களே.
IFT
மேலும், நாம் அவர்களை நம்முடைய அருளில் நுழைவித்தோம். ஏனெனில், அவர்கள் அனைவரும் நல்லடியார்களாகவே திகழ்ந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களை நாம் நம்முடைய அருளில் புகுத்திக்கொண்டோம், நிச்சயமாக அவர்கள் நல்லோர்களில் உள்ளவராவார்கள்.
Saheeh International
And We admitted them into Our mercy. Indeed, they were of the righteous.
وَذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّقْدِرَ عَلَیْهِ فَنَادٰی فِی الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ۖۗ اِنِّیْ كُنْتُ مِنَ الظّٰلِمِیْنَ ۟ۚۖ
وَ ذَا النُّوْنِமீனுடையவரை நினைவு கூர்வீராகاِذْ ذَّهَبَஅவர் சென்றபோதுمُغَاضِبًاகோபித்தவராகفَظَنَّஎண்ணினார்اَنْ لَّنْ نَّـقْدِرَநெருக்கடியை கொடுக்கவே மாட்டோம்عَلَيْهِஅவருக்குفَنَادٰىஅவர் அழைத்தார்فِى الظُّلُمٰتِஇருள்களில் இருந்தவராகاَنْ لَّاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاۤதவிரاَنْتَஉன்னைسُبْحٰنَكَநீ மகா பரிசுத்தமானவன்ۖ  اِنِّىْநிச்சயமாக நான்كُنْتُசேர்ந்து விட்டேன்مِنَ الظّٰلِمِيْنَ‌ ۖ ۚ‏அநியாயக்காரர்களில்
வ தன் னூனி இத் தஹBப முகாளிBபன் Fப ளன்னா அல் லன் னக்திர 'அலய்ஹி Fபனாதா Fபிள் ளுலுமாதி அல் லா இலாஹ இல்லா அன்த ஸுBப்ஹானக இன்னீ குன்து மினள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.
அப்துல் ஹமீது பாகவி
(யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம் தூதராக ஆக்கினோம்). அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக்கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருள்களிலிருந்த அவர் (நம்மை நோக்கி) ‘‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)'' என்று பிரார்த்தனை செய்தார்.
IFT
மேலும், மீன்காரருக்கும் நாம் அருள் பாலித்திருந்தோம். நாம் அவரைப் பிடிக்கமாட்டோம் என்று நினைத்து, கோபப்பட்டுக் கொண்டு அவர் சென்றுவிட்டதை நீர் நினைவுகூரும்! இறுதியில் அவர் இருள்களுக்குள் இருந்துகொண்டு இவ்வாறு இறைஞ்சினார்: “உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை; தூய்மையானவன் நீ! திண்ணமாக, நான் குற்றம் செய்துவிட்டேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
துன்னூனையும் (யூனுஸ் நபியாகிய மீனுடையவரை நபியே! நினைவு கூர்வீராக! தம் சமூகத்தாரைவிட்டு)- அவர் கோபமாக வெளியேறிய சமயத்தில், (நாம் அவரைப் பிடித்து) நெருக்கடிக்குள்ளாக்கி (தண்டித்து) விட மாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; (ஆகவே மீன் வயிற்றின்) இருள்களில் “(நெருக்கடிக்குள்ளான அவர்,) உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் (வேறு ஒருவனும்) இல்லை; நீ மிகப் பரிசுத்தமானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டேன்;” என்று (பிரார்த்தனை செய்து) அழைத்தார்.
Saheeh International
And [mention] the man of the fish [i.e., Jonah], when he went off in anger and thought that We would not decree [anything] upon him. And he called out within the darknesses, "There is no deity except You; exalted are You. Indeed, I have been of the wrongdoers."
فَاسْتَجَبْنَا لَهٗ ۙ وَنَجَّیْنٰهُ مِنَ الْغَمِّ ؕ وَكَذٰلِكَ نُـجِی الْمُؤْمِنِیْنَ ۟
فَاسْتَجَبْنَاநாம் பதிலளித்தோம்لَهٗۙஅவருக்குوَنَجَّيْنٰهُஅவரை நாம் பாதுகாத்தோம்مِنَ الْـغَمِّ‌ؕதுக்கத்திலிருந்துوَكَذٰلِكَஇப்படித்தான்نُـنْجِىநாம் பாதுகாப்போம்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களை
Fபஸ்தஜBப்னா லஹூ வ னஜ்ஜய்னாஹு மினல் கம்ம்; வ கதாலிக னுன்ஜில் மு'மினீன்
முஹம்மது ஜான்
எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (அவருடைய மிக்க துயரமான) சிரமத்திலிருந்தும் அவரை நாம் பாதுகாத்துக் கொண்டோம். இவ்வாறே, (சிரமத்தில் சிக்கி நம்மிடம் பிரார்த்தனை செய்யும்) நம்பிக்கையாளர்களையும் நாம் பாதுகாத்துக் கொள்வோம்.
IFT
அப்போது நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, துன்பத்திலிருந்து அவரை விடுவித்தோம். மேலும், இவ்வாறே நம்பிக்கை கொண்டவர்களை நாம் காப்பாற்றிக் கொள்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவருக்கு நாம் பதிலளித்தோம், (அவருடைய) துக்கத்திலிருந்து அவரை நாம் (விடுவித்துக்) காப்பாற்றினோம், இவ்வாறே விசுவாசிகளையும் நாம் காப்பாற்றுவோம்.
Saheeh International
So We responded to him and saved him from the distress. And thus do We save the believers.
وَزَكَرِیَّاۤ اِذْ نَادٰی رَبَّهٗ رَبِّ لَا تَذَرْنِیْ فَرْدًا وَّاَنْتَ خَیْرُ الْوٰرِثِیْنَ ۟ۚۖ
وَزَكَرِيَّاۤஇன்னும் ஸகரிய்யாவை நினைவுகூர்வீராகاِذْ نَادٰىஅவர் அழைத்தபோதுرَبَّهٗதன் இறைவனைرَبِّஎன் இறைவாلَا تَذَرْنِىْஎன்னை விட்டுவிடாதேفَرْدًاஒருத்தனாகوَّاَنْتَநீதான்خَيْرُமிகச் சிறந்தவன்الْوٰرِثِيْنَ‌ ۖ‌ۚ‏வாரிசுகளில்
வ Zஜகரிய்யா இத் னாதா ரBப்Bபஹூ ரBப்Bபி லா ததர்னீ Fபர்த(ன்)வ் வ அன்த கய்ருல் வாரிதீன்
முஹம்மது ஜான்
இன்னும் ஜகரிய்யா தம் இறைவனிடம் “என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” என்று பிரார்த்தித்த போது:
அப்துல் ஹமீது பாகவி
ஜகரிய்யாவையும் (தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக விட்டுவிடாதே! நீயோ வாரிசாகக்கூடியவர்களில் மிக்க மேலானவன்'' என்று பிரார்த்தனை செய்த சமயத்தில்,
IFT
மேலும், ஜக்கரிய்யாவுக்கும் அருட்பேற்றினை வழங்கினோம். அவர்தம் இறைவனிடம், “என் இறைவனே! என்னை நீ தன்னந்தனியாக விட்டுவிடாதே! நீயே மிகச்சிறந்த வாரிசு ஆவாய்!” என்று பிரார்த்தித்த சமயத்தை நினைவுகூரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஜகரிய்யாவையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) அவர் தன் இரட்சகனை அழைத்து, “என் இரட்சகனே! என்னை(ச் சந்ததியில்லாது) தனித்தவனாக நீ விட்டுவிடாதே! நீயோ, வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன்” என்று (பிரார்த்தனை செய்த) சமயத்தில்,
Saheeh International
And [mention] Zechariah, when he called to his Lord, "My Lord, do not leave me alone [with no heir], while You are the best of inheritors."
فَاسْتَجَبْنَا لَهٗ ؗ وَوَهَبْنَا لَهٗ یَحْیٰی وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗ ؕ اِنَّهُمْ كَانُوْا یُسٰرِعُوْنَ فِی الْخَیْرٰتِ وَیَدْعُوْنَنَا رَغَبًا وَّرَهَبًا ؕ وَكَانُوْا لَنَا خٰشِعِیْنَ ۟
فَاسْتَجَبْنَاநாம் பதிலளித்தோம்لَهٗஅவருக்குوَوَهَبْنَاஇன்னும் வழங்கினோம்لَهٗஅவருக்குيَحْيٰىயஹ்யாவைوَاَصْلَحْنَاஇன்னும் சீர்படுத்தினோம்لَهٗஅவருக்குزَوْجَهٗ ؕஅவருடைய மனைவியைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தனர்يُسٰرِعُوْنَவிரைகின்றவர்களாகفِىْ الْخَيْـرٰتِநன்மைகளில்وَ يَدْعُوْنَـنَاஇன்னும் நம்மை அழைக்கின்றவர்களாகرَغَبًاஆர்வத்துடனும்وَّرَهَبًا ؕபயத்துடனும்وَكَانُوْاஇன்னும் இருந்தனர்لَنَاநம்மிடம்خٰشِعِيْنَ‏பணிவுள்ளவர்களாக
Fபஸ்தஜBப்னா லஹூ வ வஹBப்னா லஹூ யஹ்யா வ அஸ்லஹ்னா லஹூ Zஜவ்ஜஹ்; இன்னஹும் கானூ யுஸாரி'ஊன Fபில் கய்ராதி வ யத்'ஊனனா ரகBப(ன்)வ் வ ரஹBபா; வ கானூ லனா காஷி'ஈன்
முஹம்மது ஜான்
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்; நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (மலடாக இருந்த) அவருடைய மனைவியை குணப்படுத்தி, யஹ்யாவை அவருக்கு(ச் சந்ததியாகக்) கொடுத்தோம். நிச்சயமாக இவர்கள் அனைவரும் நன்மையான காரியங்களைச் செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருந்தார்கள். (நம் அருளை) விரும்பியும் (நம் தண்டனையைப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
IFT
பிறகு நாம் அவருடைய வேண்டுதலை ஏற்றுக்கொண்டு, அவருக்கு யஹ்யாவை கொடையாக வழங்கினோம். அவருடைய மனைவியை அதற்கு அருகதையுள்ளவராகவும் ஆக்கினோம். இவர்கள் யாவரும் நற்பணிகளில் முனைந்து செயற்படுவோராகவும், பேரார்வத்துடனும், அச்சத்துடனும் நம்மிடம் இறைஞ்சக் கூடியவர்களாயும் திகழ்ந்தார்கள். நம் முன் பணிந்தவர்களாயும் விளங்கினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் அவருக்கு பதில் கூறினோம், யஹ்யாவை அவருக்கு (மகனாக)க் கொடுத்தோம், இன்னும், (மலடாக இருந்த) அவருடைய மனைவியை (மகப்பேறுபெற) சீராக்கினோம், நிச்சயமாக இவர்கள் யாவரும், நன்மைகளில் (மிகத்துரிதமாக) விரைபவர்களாக இருந்தார்கள், (நம்முடைய அருளை) ஆசித்தும், (நம் தண்டனையைப்) பயந்தும், நம்மை (பிரார்த்தனை செய்து) அழைப்பவர்களாகவும் இருந்தார்கள்; இன்னும் அவர்கள் (யாவரும்) நம்மிடம் உள்ளச்சமுடையோர்களாகவும் இருந்தார்கள்.
Saheeh International
So We responded to him, and We gave to him John, and amended for him his wife. Indeed, they used to hasten to good deeds and supplicate Us in hope and fear, and they were to Us humbly submissive.
وَالَّتِیْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِیْهَا مِنْ رُّوْحِنَا وَجَعَلْنٰهَا وَابْنَهَاۤ اٰیَةً لِّلْعٰلَمِیْنَ ۟
وَالَّتِىْۤஇன்னும் எவள்اَحْصَنَتْபாதுகாத்துக் கொண்டாள்فَرْجَهَاதனது மறைவிடத்தைفَـنَفَخْنَاநாம் ஊதினோம்فِيْهَاஅவளில்مِنْ رُّوْحِنَاநமது உயிரிலிருந்துوَ جَعَلْنٰهَاஇன்னும் அவளைஆக்கினோம்وَابْنَهَاۤஅவளுடைய மகனையும்اٰيَةًஓர் அத்தாட்சியாகلِّـلْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களுக்கு
வல்லதீ அஹ்ஸனத் Fபர்ஜஹா FபனFபக்னா Fபீஹா மின் ரூஹினா வ ஜ'அல்னாஹா வBப்னஹா ஆயதன் லில்'ஆலமீன்
முஹம்மது ஜான்
இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூறும்); எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
தன் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப)வளை(யும் நீர் ஞாபக மூட்டுவீராக. நம் தூதர்) ஜிப்ரயீல் மூலம் அவளுடைய கர்ப்பத்தில் நாம் ஊதினோம். அவளையும் அவளுடைய மகனையும் உலகத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
IFT
தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக் கொண்ட அந்தப் பெண்ணிற்குள் நம்முடைய ரூஹிலிருந்து* ஊதினோம். மேலும், அப்பெண்ணையும் அவளுடைய மைந்தரையும் உலகத்தாரனைவருக்கும் சான்றாய் திகழச்செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப)வரையும் (நீர் நினைவு கூர்வீராக!) நம் ஆன்மாவிலிருந்து அவரில் நாம் ஊதினோம், அவரையும், அவருடைய மகனையும் அகிலத்தார்க்கு ஓர் அத்தாட்சியாகவும் நாம் ஆக்கினோம்.
Saheeh International
And [mention] the one who guarded her chastity [i.e., Mary], so We blew into her [garment] through Our angel [i.e., Gabriel], and We made her and her son a sign for the worlds.
اِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً ۖؗ وَّاَنَا رَبُّكُمْ فَاعْبُدُوْنِ ۟
اِنَّநிச்சயமாகهٰذِهٖۤஇதுதான்اُمَّتُكُمْஉங்களதுاُمَّةً وَّاحِدَةً  ۖஒரே மார்க்கம்وَّاَنَاநான்தான்رَبُّكُمْஉங்கள் இறைவன்فَاعْبُدُوْنِ‏ஆகவே, என்னை வணங்குங்கள்
இன்ன ஹாதிஹீ உம்மதுகும் உம்மத(ன்)வ் வாஹிதத(ன்)வ் வ அன ரBப்Bபுகும் FபஃBபுதூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக உங்கள் “உம்மத்து” - சமுதாயம் - (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அனைவரும் (ஒரே மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டிய) ஒரே வகுப்பார்தான். (இதில் ஜாதி வேற்றுமை கிடையாது.) உங்கள் அனைவருக்கும் இறைவன் நான் ஒருவனே! ஆகவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்.
IFT
உங்களின் இந்தச் சமுதாயம் உண்மையில் ஒரே ஒரு சமுதாயமே. மேலும், நானே உங்கள் அதிபதி. எனவே, நீங்கள் எனக்கே அடிபணியுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (உங்களுக்குத் தெளிவு செய்யப்பட்ட) இது ஒரே மார்க்கமான உங்களுடைய மார்க்கமாகும், மேலும் நான்(தான்) உங்கள் இரட்சகன், ஆகவே என்னையே வணங்குங்கள்.
Saheeh International
Indeed this, your religion, is one religion, and I am your Lord, so worship Me.
وَتَقَطَّعُوْۤا اَمْرَهُمْ بَیْنَهُمْ ؕ كُلٌّ اِلَیْنَا رٰجِعُوْنَ ۟۠
وَتَقَطَّعُوْۤاபிரிந்து விட்டனர்اَمْرَகாரியத்தில்هُمْதங்கள்بَيْنَهُمْ‌ؕதங்களுக்கு மத்தியில்كُلٌّஎல்லோரும்اِلَـيْنَاநம்மிடமேرٰجِعُوْنَ‏திரும்புவார்கள்
வ தகத்த'ஊ அம்ரஹும் Bபய்னஹும் குல்லுன் இலய்னா ராஜி'ஊன்
முஹம்மது ஜான்
(பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்க) காரியங்களில் பிளவுபட்டனர். அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள்.  
அப்துல் ஹமீது பாகவி
எனினும் இவர்கள் தங்கள் காரியத்தில் (வேறுபட்டு) பல பிரிவுகளாக பிரிந்து விட்டனர். இவர்கள் அனைவரும் நம்மிடம் திரும்ப வரக்கூடியவர்கள்தான்.
IFT
(ஆயினும், இந்த மக்கள் செய்த தவறு என்னவெனில்) அவர்கள் தமக்கிடையே தம்முடைய தீனை மார்க்கத்தை துண்டு துண்டாக்கிவிட்டார்கள் அனைவரும் நம்மிடமே திரும்பி வரக் கூடியவர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்களது (மார்க்கக்)காரியத்தில் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் பிளவுபட்டும் விட்டனர், இவர்கள் ஒவ்வொருவரும் நம்மிடம் திரும்ப வரக்கூடியவர்கள்.
Saheeh International
And [yet] they divided their affair [i.e., that of their religion] among themselves, [but] all to Us will return.
فَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْیِهٖ ۚ وَاِنَّا لَهٗ كٰتِبُوْنَ ۟
فَمَنْயார்يَّعْمَلْசெய்வாரோمِنَ الصّٰلِحٰتِநற்காரியங்களைوَهُوَ مُؤْمِنٌதான் நம்பிக்கையாளராக இருந்துفَلَا كُفْرَانَமறுக்கப்படாதுلِسَعْيِهٖ‌ۚஅவருடைய முயற்சியைوَاِنَّاநிச்சயமாக நாம்لَهٗஅதைكٰتِبُوْنَ‏பதிவு செய்கிறோம்
Fபமய் யஃமல் மினஸ் ஸாலிஹாதி வ ஹுவ மு'மினுன் Fபலா குFப்ரான லிஸஃயிஹீ வ இன்னா லஹூ காதிBபூன்
முஹம்மது ஜான்
எனவே, எவர் முஃமினாக, நல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது. நிச்சயமாக நாமே அதை (அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (இவர்களில்) எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய முயற்சி வீணாகிவிடாது. நிச்சயமாக நாம் அவற்றைப் பதிவு செய்து வருகிறோம்.
IFT
பிறகு, எவர் நம்பிக்கையாளராய்த் திகழ்ந்து நற்செயல்கள் புரிகின்றாரோ அவருடைய உழைப்பு மதிப்பற்றுப் போகாது. மேலும், அதனை நாம் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (இவர்களில்) எவர் விசுவாசங்கொண்டவராக, நற்கருமங்களைச் செய்கின்றாரோ, அவருடைய முயற்சி மறுப்பிற்குரியதல்ல, நிச்சயமாக நாம் அவருக்காக (அவரின் செயல்களை) பதிவு செய்வோராய் இருக்கின்றோம்.
Saheeh International
So whoever does righteous deeds while he is a believer - no denial will there be for his effort, and indeed We [i.e., Our angels], of it, are recorders.
وَحَرٰمٌ عَلٰی قَرْیَةٍ اَهْلَكْنٰهَاۤ اَنَّهُمْ لَا یَرْجِعُوْنَ ۟
وَ حَرٰمٌவிதிக்கப்பட்டுவிட்டதுعَلٰىமீதுقَرْيَةٍஊர் (மக்கள்)اَهْلَكْنٰهَاۤநாம் அழித்து விட்டோம்/அதைاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَا يَرْجِعُوْنَ‏திரும்பவே மாட்டார்கள்
வ ஹராமுன் 'அலா கர்யதின் அஹ்லக்னாஹா அன்னஹும் லா யர்ஜி'ஊன்
முஹம்மது ஜான்
நாம் எவ்வூரார்களை அழித்து விட்டோமோ அவர்கள் (திரும்பவும் இவ்வுலகம் வருவது) தடுக்கப்பட்டுள்ளது; நிச்சயமாக அவர்கள் திரும்ப மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் எவ்வூரார்களை அழித்துவிட்டோமோ அவர்கள் நிச்சயமாக (உலகிற்கு) திரும்பவே மாட்டார்கள் என விதிக்கப்பட்டுள்ளது.
IFT
எந்த ஊர் மக்களை நாம் அழித்துவிட்டோமோ அவர்கள் மீண்டும் திரும்பி வருவது சாத்தியமில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், எதனை நாம் அழித்துவிட்டோமோ அவ்வூ(ரா)ர் மீது (அவர்கள் உலகிற்குத் திரும்புவது) தடுக்கப்பட்டுள்ளது, நிச்சயமாக அவர்கள் திரும்பமாட்டார்கள்.
Saheeh International
And it is prohibited to [the people of] a city which We have destroyed that they will [ever] return
حَتّٰۤی اِذَا فُتِحَتْ یَاْجُوْجُ وَمَاْجُوْجُ وَهُمْ مِّنْ كُلِّ حَدَبٍ یَّنْسِلُوْنَ ۟
حَتّٰٓىஇறுதியாகاِذَا فُتِحَتْதிறக்கப்பட்டால்يَاْجُوْجُயஃஜூஜ்وَمَاْجُوْجُஇன்னும் மஃஜூஜ்وَهُمْஅவர்கள்مِّنْ كُلِّஎல்லா இடத்திலிருந்துحَدَبٍஉயரமானيَّنْسِلُوْنَ‏விரைந்து வருவார்கள்
ஹத்தா இதா Fபுதிஹத் ய'ஜூஜு வ ம'ஜூஜு வ ஹும் மின் குல்லி ஹதBபி(ன்)ய் யன்ஸிலூன்
முஹம்மது ஜான்
யஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்திற்கு வழி திறக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் (தண்ணீர் பாய்ந்து ஓடுவதைப் போல்) வழிந்து (உலகின் பல பாகங்களிலும் அதிசீக்கிரத்தில் பரவி) விடுவார்கள்.
IFT
எதுவரையெனில், யாஃஜூஜ், மாஃஜுஜ் திறந்துவிடப்பட்டு ஒவ்வொரு உயரமான இடங்களிலிருந்தும் அவர்கள் வெளியேறும் வரை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கடைசியாக, யாஜூஜு, மாஜூஜுக்(கூட்டத்திற்)கு (வழி) திறக்கப்பட்டால், அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கி (குழப்பம் விளைவிக்க உலகின் பல பாகங்களிலும்) விரைவார்கள்.
Saheeh International
Until when [the dam of] Gog and Magog has been opened and they, from every elevation, descend
وَاقْتَرَبَ الْوَعْدُ الْحَقُّ فَاِذَا هِیَ شَاخِصَةٌ اَبْصَارُ الَّذِیْنَ كَفَرُوْا ؕ یٰوَیْلَنَا قَدْ كُنَّا فِیْ غَفْلَةٍ مِّنْ هٰذَا بَلْ كُنَّا ظٰلِمِیْنَ ۟
وَاقْتَـرَبَசமீபமாகிவிடும்الْوَعْدُவாக்குالْحَـقُّஉண்மையானفَاِذَا هِىَஅப்போதுشَاخِصَةٌகூர்மையாகிவிடும்اَبْصَارُபார்வைகள்الَّذِيْنَ كَفَرُوْا ؕநிராகரித்தவர்களின்يٰوَيْلَنَاஎங்கள் நாசமேقَدْதிட்டமாகكُنَّاஇருந்து விட்டோம்فِىْ غَفْلَةٍஅலட்சியத்தில்مِّنْ هٰذَاஇதை விட்டுبَلْமாறாகكُـنَّاஇருந்தோம்ظٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களாக
வக்தரBபல் வஃதுல் ஹக்கு Fப-இதா ஹிய ஷாகிஸதுன் அBப்ஸாருல் லதீன கFபரூ யாவய்லனா கத் குன்ன Fபீ கFப்லதின் மின் ஹாத Bபல் குன்னா ளாலிமீன்
முஹம்மது ஜான்
(இறுதி நாளைப் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கினால், (அதைக்காணும்) காஃபிர்களின் கண்கள் திறந்தபடியே நிலைகுத்தி நின்று விடும்; (அன்றியும் அவர்கள்:) “எங்களுக்கு கேடு தான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப்படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம்; - அது மட்டுமில்லை - நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்” (என்று கூறுவார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
(உலக முடிவு பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. (அது வரும் சமயத்தில் அதைக் காணும்) நிராகரிப்பவர்களின் கண்கள் திறந்தது திறந்தவாறே இருக்கும். ‘‘எங்களுக்குக் கேடுதான். நிச்சயமாக நாங்கள் இதைப்பற்றி கவலையற்றவர்களாக இருந்தோமே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோமே!'' (என்றும் அவர்கள் புலம்புவார்கள்).
IFT
மேலும், உண்மையான வாக்குறுதி நிறைவேறும் வேளை வரும் வரை! அப்போது சத்தியத்தை நிராகரித்தவர்களின் விழிகள் நிலைகுத்தி நின்றுவிடும். “ஆ! எங்கள் துர்ப்பாக்கியமே! இவ்விஷயத்தில் நாங்கள் அலட்சியமாக இருந்து விட்டோமே! ஏன், நாங்கள் கொடுமை புரிந்தவர்களாய் இருந்துவிட்டோமே!” என்று அவர்கள் புலம்புவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மறுமை நாள் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கியும் விட்டது, எனவே, (அது வந்துவிட்டால்) நிராகரிப்போரின் கண்கள் திறந்தது திறந்தவாறே இருக்கும், (அப்பொழுது) “எங்களுடைய கேடே! திட்டமாக நாம் இதனைப் பற்றி மறந்தவர்களாக இருந்துவிட்டோம், அதுமட்டுமல்லாது நாங்கள் அநியாயக்காரர்களாகவுமிருந்தோம்” (என்று கூறுவார்கள்)
Saheeh International
And [when] the true promise [i.e., the resurrection] has approached; then suddenly the eyes of those who disbelieved will be staring [in horror, while they say], "O woe to us; we had been unmindful of this; rather, we were wrongdoers."
اِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ حَصَبُ جَهَنَّمَ ؕ اَنْتُمْ لَهَا وٰرِدُوْنَ ۟
اِنَّكُمْநிச்சயமாக நீங்களும்وَمَا تَعْبُدُوْنَநீங்கள் வணங்குகின்றவையும்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிحَصَبُஎறியப்படுபவைجَهَـنَّمَؕநரகத்தில்اَنْـتُمْ لَهَاநீங்கள் அதில்وَارِدُوْنَ‏நுழைவீர்கள்
இன்னகும் வமா தஃBபுதூன மின் தூனில் லாஹி ஹஸBபு ஜஹன்னம அன்தும் லஹா வாரிதூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நீங்களும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கியவையும் நரகத்திற்கு விறகுகளே! நீங்கள் (யாவரும்) நரகத்திற்கு வந்து சேர்பவர்களே! (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.)
அப்துல் ஹமீது பாகவி
(அச்சமயம் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவையும் நரகத்தின் எரிகட்டையாகி விட்டீர்கள். நீங்கள் அனைவரும் அங்கு செல்ல வேண்டியவர்கள்தான்'' (என்று கூறப்படும்).
IFT
திண்ணமாக, நீங்களும், அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வழிபட்டுக் கொண்டிருந்தவைகளும் நரகத்தின் எரிபொருள்களாவீர்கள். நீங்கள் அங்குதான் செல்லவேண்டியிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அப்போது அவர்களிடம்) நிச்சயமாக நீங்களும் அல்லாஹ்வையன்றி (நீங்கள்) வணங்கியவைகளும் நரகத்தின் விறகுகளே! நீங்கள் யாவரும் அதற்கு வரவேண்டியவர்களாவர் (என்று கூறப்படும்.)
Saheeh International
Indeed, you [disbelievers] and what you worship other than Allah are the firewood of Hell. You will be coming to [enter] it.
لَوْ كَانَ هٰۤؤُلَآءِ اٰلِهَةً مَّا وَرَدُوْهَا ؕ وَكُلٌّ فِیْهَا خٰلِدُوْنَ ۟
لَوْ كَانَ هٰٓؤُلَاۤءِஇருந்திருந்தால் இவைاٰلِهَةًகடவுள்களாகمَّا وَرَدُوْهَا‌ ؕஅதில் நுழைந்திருக்க மாட்டார்கள்وَكُلٌّஎல்லோரும்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமாக தங்கக்கூடியவர்கள்
லவ் கான ஹா'உலா'இ ஆலிஹதன் மா வரதூஹா வ குல்லுன் Fபீஹா காலிதூன்
முஹம்மது ஜான்
இவை தெய்வங்களாக இருந்திருந்தால், (அந் நரகத்திற்கு) வந்து சேர்ந்திருக்க மாட்டா; இன்னும் அனைவரும் அதில் நிரந்தரமாயிருப்பர்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த) இவை (உண்மையான) தெய்வங்களாக இருந்தால் நரகத்திற்கு வந்தே இருக்காது. எனினும், அவர்கள் அனைவரும் (நரகத்தில் தள்ளப்பட்டு) என்றென்றும் அதில் தங்கிவிடுவார்கள்.
IFT
உண்மையில் இவர்கள் தெய்வங்களென்றால், அங்குப் போயிருக்கவே மாட்டார்கள். இனி, இவர்கள் எல்லாரும் என்றென்றும் அதிலேயே தங்க வேண்டியுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களால் வணங்கப்பட்ட) இவை வணக்கத்திற்குரியவர்களாக இருந்தால், அதன் (அந்நரகத்தின்) பால் வந்திருக்கமாட்டா, இன்னும், அவர்கள் யாவரும் நிரந்தரமாக (நரகமாகிய) அதில் (தங்கி) இருப்பவர்கள்.
Saheeh International
Had these [false deities] been [actual] gods, they would not have come to it, but all are eternal therein.
لَهُمْ فِیْهَا زَفِیْرٌ وَّهُمْ فِیْهَا لَا یَسْمَعُوْنَ ۟
لَهُمْஅவர்களுக்குفِيْهَاஅதில் உண்டுزَفِيْرٌமூச்சு வெளியேறுதல்وَّهُمْஇன்னும் அவர்கள்فِيْهَاஅதில்لَا يَسْمَعُوْنَ‏செவியுறமாட்டார்கள்
லஹும் Fபீஹா ZஜFபீரு(ன்)வ் வ ஹும் Fபீஹா லா யஸ்ம'ஊன்
முஹம்மது ஜான்
அதில் அவர்களுக்கு வேதனை முனக்கம் இருக்கிறது. மேலும் அவர்கள் அதிலே (எதனையும்) செவியுறமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதில் அவர்கள் திணறித் திணறிக் (கழுதையைப் போல்) கதறுவார்கள். அதில் (மற்றெவரின் சப்தத்தை) அவர்கள் செவியுற மாட்டார்கள்.
IFT
அதில் அவர்கள் கதறுவார்கள். நிலைமை எப்படியிருக்குமெனில், கூச்சல் குழப்பத்தால் அவர்கள் எதையும் செவிமடுக்க முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதில் அவர்களுக்கு (வேதனையின் கடினம் காரணமாக) விம்மிக்கதறுதல் உண்டு, மேலும், அங்கு அவர்கள் (வேறு) எதையும் செவியுறமாட்டார்கள்.
Saheeh International
For them therein is heavy sighing, and they therein will not hear.
اِنَّ الَّذِیْنَ سَبَقَتْ لَهُمْ مِّنَّا الْحُسْنٰۤی ۙ اُولٰٓىِٕكَ عَنْهَا مُبْعَدُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்سَبَقَتْமுந்திவிட்டதுلَهُمْஅவர்களுக்குمِّنَّاநம்மிடமிருந்துالْحُسْنٰٓىۙநற்பாக்கியம்اُولٰٓٮِٕكَஅவர்கள்عَنْهَاஅதிலிருந்துمُبْعَدُوْنَۙ‏தூரமாக் கப்பட்டவர்கள்
இன்னல் லதீன ஸBபகத் லஹும் மின்னல் ஹுஸ்னா உலா'இக 'அன்ஹா முBப்'அதூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, எவர்களுக்கு நம்மிடமிருந்து (மறுமைப் பேற்றுக்கான) நன்மைகள் முன் சென்றிருக்கிறதோ, அவர்கள் அ(ந் நரகத்)திலிருந்து வெகு தொலைவில் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஏற்கனவே நம்மால் எவர்களுக்கு நன்மைகள் எழுதப்பட்டு விட்டதோ அவர்கள், நிச்சயமாக நரகத்திற்கு வெகு தூரமாக இருப்பார்கள்.
IFT
நம்மிடமிருந்து எவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று முன்னரே முடிவு செய்யப்பட்டதோ அவர்கள் திண்ணமாக, நரகத்தைவிட்டு தொலைவில் வைக்கப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக எவர்களுக்கு நம்மிடமிருந்து நன்மை முந்திவிட்டதோ அத்தகையோர்-அவர்கள் அ(ந்நரகத்)தைவிட்டும் தூரமாக்கப்பட்டவர்களாவர்.
Saheeh International
Indeed, those for whom the best [reward] has preceded from Us - they are from it far removed.
لَا یَسْمَعُوْنَ حَسِیْسَهَا ۚ وَهُمْ فِیْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ ۟ۚ
لَا يَسْمَعُوْنَசெவியுறமாட்டார்கள்حَسِيْسَهَا‌ ۚஅதனுடைய சப்தத்தைوَهُمْஅவர்கள்فِىْ مَا اشْتَهَتْவிரும்பியவற்றில்اَنْفُسُهُمْதங்களது உள்ளங்கள்خٰلِدُوْنَ‌ ۚ‏நிரந்தரமாக இருப்பார்கள்
லா யஸ்ம'ஊன ஹஸீ ஸஹா வ ஹும் Fபீ மஷ் தஹத் அன்Fபுஸுஹும் காலிதூன்
முஹம்மது ஜான்
(இத்தகைய சுவர்க்கவாசிகள் நரகின்) கூச்சலைக் கேட்கமாட்டார்கள்; தாம் விரும்பும் இன்பத்திலேயே அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதன் இரைச்சலையும் அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள். இன்னும் அவர்கள் தாங்கள் விரும்பிய சுகபோகங்களை(ச் சொர்க்கத்தில்) என்றென்றும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
IFT
அந்த நரகின் சலசலப்பைக்கூட அவர்கள் கேட்கமாட்டார்கள். தம் மனத்திற்குகந்த இன்பங்களுக்கு மத்தியில் அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நரகமாகிய) அதன் (அசைவின்) சப்தத்தை(க்கூட) அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள், அன்றியும் அவர்கள் தங்களின் மனங்கள் விரும்பிய (சுகபோகங்களைச் சுவைப்ப)தில் நிரந்தரமாக இருப்பவர்கள்.
Saheeh International
They will not hear its sound, while they are, in that which their souls desire, abiding eternally.
لَا یَحْزُنُهُمُ الْفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ؕ هٰذَا یَوْمُكُمُ الَّذِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ۟
لَا يَحْزُنُهُمُஅவர்களை கவலைக்குள்ளாக்காதுالْـفَزَعُதிடுக்கம்الْاَكْبَرُமிகப்பெரியوَتَتَلَقّٰٮهُمُஅவர்களை வரவேற்பார்கள்الْمَلٰٓٮِٕكَةُ ؕவானவர்கள்هٰذَاஇதுيَوْمُكُمُஉங்கள் நாள்الَّذِىْஎதுكُنْـتُمْஇருந்தீர்கள்تُوْعَدُوْنَ‏நீங்கள் வாக்களிக்கப்படுவீர்கள்
லா யஹ்Zஜுனுஹுமுல் FபZஜ'உல் அக்Bபரு வ ததலக் காஹுமுல் மலா'இகது ஹாதா யவ்முகுமுல் லதீ குன்தும் தூ'அதூன்
முஹம்மது ஜான்
(அந்நாளில் ஏற்படும்) பெரும் திகில் அவர்களை வருத்தாது, மலக்குகள் அவர்களைச் சந்தித்து: “உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இதுதான்” (என்று கூறுவார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
(மறுமையில் ஏற்படும்) பெரும் திடுக்கமும் அவர்களை துக்கத்திற்குள்ளாக்காது. (அச்சமயம்) வானவர்கள் அவர்களை எதிர்கொண்டழைப்பார்கள் ‘‘உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (நல்ல) நாள் இதுதான்'' (என்று நற்செய்தியும் கூறுவார்கள்).
IFT
பெரும் திகிலை ஏற்படுத்தும் அந்நேரம் அவர்களைச் சிறிதளவும் துயரத்தில் ஆழ்த்தாது. மேலும், “உங்களிடம் வாக்களிக்கப்பட்ட நாள்தான் இந்நாள்” என்று கூறிக்கொண்டு வானவர்கள் அவர்களை எதிர் கொண்டு வரவேற்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மறுமைநாளில்) மாபெரும் திடுக்கம், அவர்களை கவலைக்குள்ளாக்காது, மேலும், மலக்குகள் அவர்களை எதிர்கொண்டழைத்து, நீங்கள் வாக்களிக்கப்பட்டிருந்தீர்களே, அத்தகைய உங்களுடைய நாள் இதுதான் (என்று கூறுவார்கள்)
Saheeh International
They will not be grieved by the greatest terror, and the angels will meet them, [saying], "This is your Day which you have been promised" -
یَوْمَ نَطْوِی السَّمَآءَ كَطَیِّ السِّجِلِّ لِلْكُتُبِ ؕ كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِیْدُهٗ ؕ وَعْدًا عَلَیْنَا ؕ اِنَّا كُنَّا فٰعِلِیْنَ ۟
يَوْمَநாளில்نَـطْوِىْநாம் சுருட்டுவோம்السَّمَآءَவானத்தைكَطَـىِّசுருட்டுவதைப் போன்றுالسِّجِلِّஏடுகளைلِلْكُتُبِ‌ ؕபுத்தகங்களின் மீதுكَمَاபோன்றேبَدَاْنَاۤநாம் தொடங்கியதுاَوَّلَமுதலாவதைخَلْقٍபடைப்பின்نُّعِيْدُهٗ‌ ؕஅதை திருப்பி விடுவோம்وَعْدًاஇது வாக்காகும்عَلَيْنَا‌ ؕநம்மீது கடமையானاِنَّاநிச்சயமாக நாம்كُنَّاஇருக்கிறோம்فٰعِلِيْنَ‏செய்பவர்களாகவே
யவ்ம னத்விஸ் ஸமா'அ கதய்யிஸ் ஸிஜில்லி லில்குதுBப்; கமா Bபத'னா அவ்வல கல்கின் னு'ஈதுஹ்; வஃதன் 'அலய்னா; இன்னா குன்னா Fபா'இலீன்
முஹம்மது ஜான்
எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!); முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமக நாம் இதனை செய்வோம்.
அப்துல் ஹமீது பாகவி
எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக. முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீளவைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதைச் செய்தே தீருவோம்.
IFT
எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் படைப்போம். இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும். திண்ணமாக, அதனை நாம் நிறைவேற்றியே தீருவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) எழுதப்பட்ட (பெரும்) ஏடுகளைச் சுருட்டுவதைப்போல, நாம் வானத்தைச் சுருட்டிவிடும் நாளை (நினைவு கூர்வீராக!) முதல் படைப்பை நாம் ஆரம்பித்தது போன்றே அதை நாம் (திரும்பவும்) மீளவைப்போம், (இது) நம் மீது கட்டாயமான வாக்குறுதியாகும், நிச்சயமாக நாம் (இதை) செய்வோராய் இருக்கிறோம்.
Saheeh International
The Day when We will fold the heaven like the folding of a [written] sheet for the records. As We began the first creation, We will repeat it. [That is] a promise binding upon Us. Indeed, We will do it.
وَلَقَدْ كَتَبْنَا فِی الزَّبُوْرِ مِنْ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ یَرِثُهَا عِبَادِیَ الصّٰلِحُوْنَ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகكَتَبْنَاநாம் எழுதினோம்فِى الزَّبُوْرِவேதங்களில்مِنْۢ بَعْدِபின்னர்الذِّكْرِஎழுதப்பட்டதற்குاَنَّநிச்சயமாகالْاَرْضَபூமிيَرِثُهَاஅதை அனந்தரமாக அடைவார்கள்عِبَادِىَஎனது அடியார்கள்الصّٰلِحُوْنَ‏நல்ல
வ லகத் கதBப்னா FபிZஜ் ZஜBபூரி மின் Bபஃதித் திக்ரி அன்னல் அர்ள யரிதுஹா 'இBபாதி யஸ் ஸாலிஹூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்: “நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் ‘ஜபூர்' என்னும் வேதத்தில், நல்லுபதேசங்களுக்குப் பின்னர் எழுதியிருக்கிறோம், ‘‘நிச்சயமாக பூமிக்கு என் அடியார்களில் நன்நடத்தை உடையவர்கள்தான் வாரிசாவார்கள்'' என்று.
IFT
“ஜபூரில்”* நல்லுரை வழங்கிய பிறகு, “நம்முடைய நல்லடியார்களே இப்பூமிக்கு வாரிசுகள் ஆவார்கள்” என்று எழுதி வைத்துவிட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக நாம் ஜபூர் (என்னும்) வேதத்தில் நல்லுபதேசங்களுக்குப் பின்னர், “நிச்சயமாக பூமியை என்னுடைய நல்லடியார்கள்தாம் அதை வாரிசாக அடைவார்கள்” என்று எழுதிவிட்டோம்.
Saheeh International
And We have already written in the book [of Psalms] after the [previous] mention that the land [of Paradise] is inherited by My righteous servants.
اِنَّ فِیْ هٰذَا لَبَلٰغًا لِّقَوْمٍ عٰبِدِیْنَ ۟ؕ
اِنَّ فِىْ هٰذَاநிச்சயமாக இதில்لَبَلٰغًاஅறிவுரை இருக்கிறதுلّـِقَوْمٍமக்களுக்குعٰبِدِيْنَؕ‏வணங்குகின்ற
இன்ன Fபீ ஹாத லBபலா கல் லிகவ்மின் 'ஆBபிதீன்
முஹம்மது ஜான்
வணங்கும் மக்களுக்கு இதில் (இக்குர்ஆனில்) நிச்சயமாகப் போதுமான (வழிகாட்டுதல்) இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
என்னையே வணங்குபவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு நற்செய்தி இருக்கிறது.
IFT
அடிபணிந்து வாழும் மக்களுக்கு இதில் மாபெரும் அறிவிப்பு இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இரட்சகனையே)! வணங்குகின்ற சமூகத்தார்களுக்கு, நிச்சயமாக இதில் (வழிகாட்டல்களைக் கொண்ட அத்தாட்சிகள்) போதுமானது உள்ளது.
Saheeh International
Indeed, in this [Qur’an] is notification for a worshipping people.
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّلْعٰلَمِیْنَ ۟
وَمَاۤ اَرْسَلْنٰكَஉம்மை அனுப்பவில்லைاِلَّاதவிரرَحْمَةًஓர் அருளாகவேلِّـلْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களுக்கு
வ மா அர்ஸல்னாக இல்லா ரஹ்மதல் லில்'ஆலமீன்
முஹம்மது ஜான்
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உம்மை உலகத்தாருக்கு ஓர் அருளாகவே தவிர நாம் அனுப்பவில்லை.
IFT
(நபியே!) நாம் உம்மை உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உம்மை அகிலத்தார்க்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை.
Saheeh International
And We have not sent you, [O Muhammad], except as a mercy to the worlds.
قُلْ اِنَّمَا یُوْحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ فَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟
قُلْநீர் கூறுவீராகاِنَّمَا يُوْحٰۤىவஹீ அறிவிக்கப்படுவதெல்லாம்اِلَىَّஎனக்குاَنَّمَاۤ اِلٰهُكُمْநிச்சயமாக உங்கள் கடவுள் எல்லாம்اِلٰـهٌஒரு கடவுள்وَّاحِدٌ‌  ۚஒரேفَهَلْ?اَنْـتُمْநீங்கள்مُّسْلِمُوْنَ‏முற்றிலும் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடப்பீர்கள்
குல் இன்னமா யூஹா இலய்ய அன்னமா இலாஹுகும் இல்லாஹு(ன்)வ் வாஹித், Fபஹல் அன்தும் முஸ்லிமூன்
முஹம்மது ஜான்
“எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம்: “உங்கள் நாயன் ஒரே நாயன் தான்” என்பதுதான்; ஆகவே நீங்கள் அவனுக்கு வழிப்பட்டு நடப்பீர்களா?” (என்று நபியே!) நீர் கேட்பீராக!
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே) நீர் கூறுவீராக: ‘‘எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதெல்லாம் ‘‘உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவனே'' என்றுதான். ஆகவே, நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடப்பீர்களாக!
IFT
நீர் அவர்களிடம் கூறும்: “உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு வஹி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் அவனுக்கு அடிபணிந்தவர்களாய் இருக்கிறீர்களா, என்ன?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(எனவே) நீர் கூறுவீராக! “எனக்கு வஹீ அறிவிக்கப்படுவதெல்லாம், உங்களுடைய (வணக்கத்திற்குரிய) நாயன் ஒரே ஒரு நாயன் என்று தான், ஆகவே நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு (முஸ்லீம்களாக) நடப்பீர்களா?
Saheeh International
Say, "It is only revealed to me that your god is but one God; so will you be Muslims [in submission to Him]?"
فَاِنْ تَوَلَّوْا فَقُلْ اٰذَنْتُكُمْ عَلٰی سَوَآءٍ ؕ وَاِنْ اَدْرِیْۤ اَقَرِیْبٌ اَمْ بَعِیْدٌ مَّا تُوْعَدُوْنَ ۟
فَاِنْ تَوَلَّوْاஅவர்கள் விலகிச் சென்றால்فَقُلْநீர் கூறிவிடுவீராகاٰذَنْـتُكُمْஉங்களுக்கு நான் அறிவித்து விட்டேன்عَلٰى سَوَآءٍ ؕமிகத் தெளிவாகوَاِنْ اَدْرِىْۤநான் அறியமாட்டேன்اَقَرِيْبٌசமீபமாக உள்ளதாاَمْஅல்லதுبَعِيْدٌதூரமாக உள்ளதாمَّا تُوْعَدُوْنَ‏நீங்கள் வாக்களிக்கப்பட்டது
Fப இன் தவல்லவ் Fபகுல் ஆதன்துகும் 'அலா ஸவா'; வ இன் அத்ரீ அகரீBபுன் அம் Bப'ஈதுன் மா தூ'அதூன்
முஹம்மது ஜான்
ஆனால், அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் “நான் உங்கள் (எல்லோருக்கும்) சமமாக அறிவித்துவிட்டேன்; இன்னும், உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட (வேதனையான)து சமீபத்திலிருக்கிறதா அல்லது தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்” என்று (நபியே!) நீர் சொல்லிவிடுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டாலோ (அவர்களை நோக்கி) ‘‘நான் (என் தூதை) உங்கள் அனைவருக்கும் சமமாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை (வந்தே தீரும். எனினும், அது) சமீபத்தில் இருக்கிறதா தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்'' என்று கூறுவீராக.
IFT
அவர்கள் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: “நான் வெளிப்படையாக உங்களுக்கு எச்சரிக்கை செய்துவிட்டேன். இனி உங்களிடம் வாக்களிக்கப்படுகின்ற அந்த விஷயம் அண்மையில் இருக்கிறதா அல்லது வெகு தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எனவே அவர்கள் (இதைப்) புறக்கணித்துவிட்டால், நான் (என்னுடைய தூதை) உங்கள் யாவருக்கும் சமமாக அறிவித்துவிட்டேன், நீங்கள் வாக்களிக்கப்பட்டது (வேதனையான அது) சமீபத்திலிருக்கிறதா, அல்லது தூரத்திலிருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
But if they turn away, then say, "I have announced to [all of] you equally. And I know not whether near or far is that which you are promised.
اِنَّهٗ یَعْلَمُ الْجَهْرَ مِنَ الْقَوْلِ وَیَعْلَمُ مَا تَكْتُمُوْنَ ۟
اِنَّهٗநிச்சயமாக அவன்يَعْلَمُஅறிவான்الْجَـهْرَவெளிப்படையானதைمِنَ الْقَوْلِபேச்சில்وَيَعْلَمُஇன்னும் அவன் அறிவான்مَا تَكْتُمُوْنَ‏நீங்கள் மறைப்பதை(யும்)
இன்னஹூ யஃலமுல் ஜஹ்ர மினல் கவ்லி வ யஃலமு மா தக்துமூன்
முஹம்மது ஜான்
வெளிப்படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்; நீங்கள் (இருதயத்தில்) மறைத்து வைப்பதையும் அவன் (நிச்சயமாக) அறிகிறான் (என்றும்)
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (என் இறைவன்) நீங்கள் (வாயால்) சப்தமிட்டுப் பேசுவதையும் (உங்கள் உள்ளங்களில் அதற்கு மாறாக) மறைத்து வைத்திருப்பதையும் அறிந்து கொள்கிறான்.
IFT
உரக்கக் கூறுவனவற்றையும் நீங்கள் மூடி மறைத்துச் செய்வனவற்றையும் திண்ணமாக அல்லாஹ் அறிவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக (என் இரட்சகனாகிய) அவன் சொல்லில் பகிரங்கமானதை அறிகிறான், (அதற்கு மாறாக) நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அறிந்து கொள்கிறான்”
Saheeh International
Indeed, He knows what is declared of speech, and He knows what you conceal.
وَاِنْ اَدْرِیْ لَعَلَّهٗ فِتْنَةٌ لَّكُمْ وَمَتَاعٌ اِلٰی حِیْنٍ ۟
وَاِنْ اَدْرِىْநான்அறியமாட்டேன்لَعَلَّهٗஅது இருக்கலாம்فِتْنَةٌசோதனையாகவும்لَّـكُمْஉங்களுக்குوَمَتَاعٌஇன்பமாகவும்اِلٰىவரைحِيْنٍ‏ஒரு நேரம்
வ இன் அத்ரீ ல'அல்லஹூ Fபித்னதுல் லகும் வ மதா'உன் இலாஹீன்
முஹம்மது ஜான்
இந்த தாமதம் உங்களுக்கு சோதனையாகவும் குறிப்பட்ட காலம் வரை சுகம் அனுபவிப்பதற்காகவும் இருக்குமா என்பதை நான் அறியமாட்டேன்.
அப்துல் ஹமீது பாகவி
(இன்னும் இதுவரை வேதனை செய்யாது) உங்களை விட்டு வைத்திருப்பது உங்களைச் சோதிப்பதற்காகவோ அல்லது குறித்த காலம் வரை நீங்கள் வாழ்ந்திருப்பதற்காகவோ என்பதை நான் அறிய மாட்டேன்.
IFT
நான் புரிந்துகொள்வது இதுவே: ஒருவேளை இது (கால அவகாசம்) உங்களுக்கு ஒரு சோதனையாக இருக்கலாம். மேலும், குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் இன்பம் அனுபவிக்க கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகவும் இருக்கலாம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இன்னும் (உங்களுக்கு வேதனையை பிற்படுத்தி வைத்திருப்பதான) அது உங்களுக்குச் சோதனையாகவும், சிறிதுகாலம் வரை (நீங்கள்) சுகம் அனுபவிப்பதற்காகவும் இருக்கலாமோ என்பதையும் நான் அறியமாட்டேன் (என்றும் கூறுவீராக!)
Saheeh International
And I know not; perhaps it is a trial for you and enjoyment for a time."
قٰلَ رَبِّ احْكُمْ بِالْحَقِّ ؕ وَرَبُّنَا الرَّحْمٰنُ الْمُسْتَعَانُ عَلٰی مَا تَصِفُوْنَ ۟۠
قٰلَகூறினார்கள்رَبِّஎன் இறைவாاحْكُمْதீர்ப்பளிப்பாயாகبِالْحَـقِّ‌ؕசத்தியத்தைக் கொண்டுوَرَبُّنَاஎங்கள் இறைவன்الرَّحْمٰنُபேரருளாளன்الْمُسْتَعَانُஅவனிடமே உதவி தேடப்படுகிறதுعَلٰىஎதிராகمَا تَصِفُوْنَ‏நீங்கள் வர்ணிப்பதற்கு
கால ரBப்Bபிஹ் கும் Bபில் ஹக்க்; வ ரBப்Bபுனர் ரஹ்மா னுல் முஸ்த'ஆனு 'அலா மா தஸிFபூன்
முஹம்மது ஜான்
என் இறைவா! சத்தியத் தீர்ப்பு வழங்குவாயாக! என்று கூறினார். எங்கள் இறைவனோ அளவற்ற அருளாளன். நீங்கள் வர்ணிப்பதற்கு எதிராக உதவி தேடப்படுபவன்.
அப்துல் ஹமீது பாகவி
(மேலும் முஹம்மது) கூறினார்: ‘‘என் இறைவனே! (எனக்கும் இந்நிராகரிப்பவர்களுக்கும் இடையில்) நீ நீதமான தீர்ப்பளிப்பாயாக! எங்கள் இறைவன்தான் பேரருளாளன். உங்கள் (பொய்யான) கூற்றுகளுக்கு எதிராக அவனிடமே உதவி தேடுகிறோம்.''
IFT
இறுதியில் இறைத்தூதர் கூறினார்: “என் அதிபதியே! நீ சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பாயாக! மேலும், மக்களே! நீங்கள் இட்டுக்கட்டி கூறுவதற்கு எதிராக எங்களுக்கு உதவி யாளனாக இருப்பவன் கிருபையுள்ள எங்கள் இறைவன்தான்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மேலும்) “என் இரட்சகனே! (எனக்கும், சத்தியத்தைப் பொய்யாக்கியோருக்குமிடையில்) சத்தியத்தீர்ப்பு வழங்குவாயாக!” என்று கூறினார், எங்கள் இரட்சகனோ பேரருளாளன், நீங்கள் (பொய்யாக) வர்ணிப்பவைகளுக்கெதிராக உதவி தேடப்படுபவன்.
Saheeh International
[The Prophet (ﷺ] has said, "My Lord, judge [between us] in truth. And our Lord is the Most Merciful, the one whose help is sought against that which you describe."