நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் விரும்பினால் அவர்களுடைய கழுத்துகள் பணிந்து குனிந்து வரும்படி (வேதனை) செய்யக்கூடிய அத்தாட்சிகளை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.
IFT
நாம் நாடினால் விண்ணிலிருந்து ஒரு சான்றினை இவர்கள் மீது இறக்கி வைத்திருக்க முடியும். அதன் முன்னே இவர்களின் பிடரி பணிந்து விடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் நாடினால் வானத்திலிருந்து ஓர் அத்தாட்சியை அவர்கள்மீது இறக்கியிருப்போம், (அப்போது) அவர்களுடைய கழுத்துகள் அதற்கு(க்குனிந்து) பணிந்தவையாக ஆகிவிடும்.
Saheeh International
If We willed, We could send down to them from the sky a sign for which their necks would remain humbled.
فَقَدْதிட்டமாகكَذَّبُوْاஇவர்கள் பொய்ப்பித்தனர்فَسَيَاْتِيْهِمْஆகவே, அவர்களிடம் விரைவில் வரும்اَنْۢـبٰٓــؤُاசெய்திகள்مَاஎதுكَانُوْاஇருந்தனர்بِهٖஅதைيَسْتَهْزِءُوْنَபரிகாசம் செய்பவர்களாக
திடனாக அவர்கள் (இவ்வேதத்தையும்) பொய்ப்பிக்க முற்படுகிறார்கள்; எனினும், அவர்கள் எதனை பரிகசித்துக் கொண்டிருக்கிறர்களோ, அதன் (உண்மையான) செய்திகள் அவர்களிடம் சீக்கிரமே வந்து சேரும்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, இதையும்) நிச்சயமாக அவர்கள் பொய்யாக்குகின்றனர். எனினும், அவர்கள் எதைப் (பொய்யாக்கிப்) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ அதன் (உண்மை) செய்திகள் நிச்சயமாக அவர்களிடம் வந்தே தீரும்.
IFT
இதோ இப்போதும் இவர்கள் பொய்யெனத் தூற்றிவிட்டிருக்கின்றார்கள். ஆனால், எதனை இவர்கள் கேலி செய்துகொண்டிருக்கிறார்களோ அதனைப் பற்றிய உண்மைச் செய்திகள் விரைவில் இவர்களுக்கு(ப் பல்வேறு வழிகளின் மூலம்) தெரிந்துவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே, வேதமாகிய இதனையும்) அவர்கள் திட்டமாகப் பொய்யாக்கினார்கள்; ஆகவே, அவர்கள் எதனைப் பரிகசித்துக் கொண்டிருந்தார்களோ அதன் (உண்மைச்) செய்திகள் அவர்களிடம் வந்துவிடும்.
Saheeh International
For they have already denied, but there will come to them the news of that which they used to ridicule.
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? - அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான எத்தனையோ புற்பூண்டுகளை ஜோடி ஜோடியாகவே நாம் முளைப்பித்து இருக்கிறோம்.
IFT
இவர்கள் பூமியின் மீது பார்வை செலுத்தவில்லையா என்ன? எத்துணை அதிக அளவில் எல்லாவிதமான உயர்தர தாவரங்களை நாம் அதில் முளைக்கச் செய்திருக்கின்றோம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியின்பால் அவர்கள் பார்க்கவில்லையா? (அதில்) மேலான ஒவ்வொரு வகையிலிருந்தும் (பயன்தரக்கூடிய) எவ்வளவோ (புற்பூண்டுகளை ஜதை ஜதையாகவே) நாம் முளைப்பித்திருக்கின்றோம்.
Saheeh International
Did they not look at the earth - how much We have produced therein from every noble kind?
“என் நெஞ்சு நெருக்கடிக்குள்ளாகிவிடும். (தெளிவாய் பேசமுடியும் படி) என் நாவும் அசையாது; ஆகவே (என்னுடன்) ஹாரூனையும் அனுப்புவாயாக!
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், “(அவ்வாறு அவர்கள் பொய்யாக்கினால்) என் மனமுடைந்து விடும். (அத்துடன் எனக்குக் கோனல் இருப்பதால்) என் நாவால் (சரியாகப்) பேசமுடியாது. ஆதலால் (என்னுடன்) வருமாறு ஹாரூனுக்கு நீ அறிவிப்பாயாக!
IFT
என் நெஞ்சம் இடுங்கிவிடுகின்றது; என் நாவுக்கு சரளமாகப் பேச வருவதில்லை. எனவே, நீ ஹாரூனுக்கு தூதுத்துவத்தை வழங்குவாயாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறு பொய்ப்படுத்தினால்) என் மனம் நெருக்கடிக்குள்ளாகியும் விடும்; என் நாவும் (சரியாக) பேசாது; ஆதலால் (எனக்கு வஹீ அனுப்பியது போன்று) ஹாரூனுக்கு (வஹீ) அனுப்புவாயாக!
Saheeh International
And that my breast will tighten and my tongue will not be fluent, so send for Aaron.
وَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَلَىَّஎன் மீதுذَنْۢبٌஒருகுற்றம்இருக்கிறதுفَاَخَافُஆகவே, நான் பயப்படுகிறேன்اَنْ يَّقْتُلُوْنِۚஅவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று
வ லஹும் 'அலய்ய தம்Bபுன் Fப அகாFபு அய் யக்துலூன்
முஹம்மது ஜான்
“மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது; எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
மேலும், என் மீது அவர்களுக்கு ஒரு குற்றச்சாட்டுதலும் இருக்கிறது. அதற்காக அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என நான் பயப்படுகிறேன்'' (என்றும் கூறினார்).
IFT
மேலும், என்னைப் பற்றி அவர்களிடம் ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது. எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று நான் அஞ்சுகின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மேலும், அவர்களுக்கு என்மீது ஒரு (கொலைக்) குற்றச்சாட்டுதலும் உண்டு; அதற்காக அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்றும் நான் பயப்படுகிறேன்” (என்று கூறினார்).
Saheeh International
And they have upon me a [claim due to] sin, so I fear that they will kill me."
قَالَஅவன் கூறினான்كَلَّا ۚஅவ்வாறல்ல!فَاذْهَبَاநீங்கள் இருவரும் செல்லுங்கள்بِاٰيٰتِنَآஎனது அத்தாட்சிகளை கொண்டுاِنَّا مَعَكُمْநிச்சயமாக நாம் உங்களுடன்مُّسْتَمِعُوْنَசெவியேற்பவர்களாக
கால கல்லா Fபத்ஹBபா Bபி ஆயாதினா இன்னா ம'அகும் முஸ்தமி'ஊன்
முஹம்மது ஜான்
(அதற்கு இறைவன்) அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளுடன் செல்லுங்கள் - நிச்சயமாக நாம் உங்களுடன் (யாவற்றையும்) செவியேற்போராக இருக்கின்றோம்” எனக் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘ அவ்வாறல்ல (பயப்படாதீர்; ஹாரூனையும் அழைத்துக் கொண்டு) நீங்கள் இருவரும் என் அத்தாட்சிகளை (எடுத்து)க் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக் கொண்டிருப்பேன்.
IFT
இறைவன் கூறினான்: “அப்படியல்ல! நீங்கள் இருவரும் என்னுடைய சான்றுகளை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். நாம் உங்களுடன் அனைத்தையும் செவியுற்றுக் கொண்டிருப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “அவ்வாறன்று நீங்களிருவரும் நம்முடைய அத்தாட்சிகளை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்; நிச்சயமாக நாம் உங்களுடன் (யாவற்றையும்) செவியேற்கக் கூடியவர்களாக இருப்போம்” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
Saheeh International
[Allah] said, "No. Go both of you with Our signs; indeed, We are with you, listening.
فَاْتِيَاஆகவே, நீங்கள் இருவரும் வாருங்கள்فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்فَقُوْلَاۤநீங்கள் இருவரும் கூறுங்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்رَسُوْلُதூதராக இருக்கிறோம்رَبِّஇறைவனுடையالْعٰلَمِيْنَۙஅகிலங்களின்
ஆதலின் நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்: “நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று, ‘‘ நிச்சயமாக நாங்கள் உலகத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிப்பவனின் தூதர்களாவோம்.''
IFT
இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். மேலும், அவனிடம் கூறுங்கள்: அகிலங்களின் இறைவன் எங்களை அனுப்பியிருக்கின்றான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே நீங்களிருவரும் ஃபிர் அவ்னிடம் சென்று நிச்சயமாக நாங்கள் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வின் தூதராவோம் என்று நீங்களிருவரும் கூறுங்கள்.” (அதன் காரணமாக)
Saheeh International
Go to Pharaoh and say, 'We are the messengers of the Lord of the worlds,
கால அலம் னுரBப்Bபிக Fபீனா வலீத(ன்)வ் வ லBபித்த Fபீனா மின் 'உமுரிக ஸினீன்
முஹம்மது ஜான்
(ஃபிர்அவ்ன்) கூறினான்: நீர் குழந்தையாக இருந்தபோது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா? இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா? (எனக் கூறினான்.)
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறே அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று கூறவே) அதற்கவன் (மூஸாவை நோக்கி) “நாங்கள் உம்மைக் குழந்தையாக எடுத்துக்கொண்டு வளர்க்கவில்லையா? நீர் (உமது வாலிபத்தை அடையும் வரை) பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்திருந்தீர்.
IFT
அதற்கு ஃபிர்அவ்ன் கூறினான்: “நீ குழந்தையாய் இருந்தபோது உன்னை நாம் எம்மிடத்திலே வைத்து வளர்க்கவில்லையா? மேலும், உன் வாழ்நாளில் பல ஆண்டுகள் நீ எம்மிடம் கழித்திருக்கின்றாய்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறே ஃபிர் அவ்னிடம் சென்று அவ்விருவரும் கூறவே,) அதற்கவன் (மூஸாவிடம்), குழந்தையாக உம்மை (எடுத்து) எங்களுக்கு மத்தியில் நாங்கள் வளர்க்கவில்லையா? நீர் உம் வயதில் அநேக ஆண்டுகள் நம்மிடத்தில் தங்கியும் இருந்தீர்” என்று அவன் கூறினான்.
Saheeh International
[Pharaoh] said, "Did we not raise you among us as a child, and you remained among us for years of your life?
فَفَرَرْتُநான் ஓடிவிட்டேன்مِنْكُمْஉங்களை விட்டுلَمَّا خِفْتُكُمْஉங்களை நான் பயந்தபோதுفَوَهَبَஆகவே,வழங்கினான்لِىْஎனக்குرَبِّىْஎன் இறைவன்حُكْمًاதூதுவத்தைوَّجَعَلَنِىْஇன்னும் என்னை ஆக்கினான்مِنَ الْمُرْسَلِيْنَதூதர்களில் ஒருவராக
“ஆகவே, நான் அப்போது உங்களைப் பற்றி பயந்தபோது, உங்களை விட்டு(த் தப்பி) ஓடினேன்; பிறகு என் இறைவன் எனக்கு ஞானத்தை அளித்து, (அவனுடைய) தூதர்களில் என்னை (ஒருவனாக) ஆக்கியிருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால் நான் உங்களுக்குப் பயந்து உங்களை விட்டும் ஓடிவிட்டேன். எனினும், என் இறைவன் எனக்கு ஞானத்தைக் கொடுத்துத் தன் தூதராகவும் என்னை ஆக்கினான்.
IFT
பின்னர், நான் உங்களுக்கு அஞ்சி உங்களிடமிருந்து ஓடிவிட்டேன். பின் என் இறைவன் எனக்கு நுண்ணறிவுத் திறனை வழங்கினான்; என்னைத் தூதர்களில் ஒருவனாகவுமாக்கினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆதலால் நான் உங்களுக்கு பயந்தபொழுது உங்களை விட்டு வெருண்டோடி விட்டேன், பிறகு என்னுடைய இரட்சகன் எனக்கு அறிவையும் கொடுத்துத் (தன்னுடைய) தூதர்களில் உள்ளவனாகவும் என்னை ஆக்கினான்”
Saheeh International
So I fled from you when I feared you. Then my Lord granted me judgement [i.e., wisdom and prophet hood] and appointed me [as one] of the messengers.
“பனூ இஸ்ராயீல்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது நீ எனக்குச் சொல்லிக் காண்பிக்கக் கூடிய பாக்கியமாகுமா?”
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நீ இஸ்ராயீலின் சந்ததிகளை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், இது நீ எனக்குச் சொல்லி காண்பிக்கக் கூடிய ஒரு நன்றியாகுமா?'' (இவ்வாறு மூஸா கூறினார்.)
IFT
எனக்குச் செய்ததாக நீ சொல்லிக் காட்டும் அந்த உபகாரத்தின் உண்மைநிலை யாதெனில், நீ இஸ்ராயீல் வழித்தோன்றல்களை அடிமைப்படுத்தி வைத்திருந்ததேயாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மேலும், (குழந்தைப்பருவத்தில் என்னை நீ வளர்த்துப் பரிபாலித்த) அது, (என் இனத்தாராகிய) இஸ்ராயீலின் மக்களை நீ அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலைமையில் (என்னையும் அடிமையாக்காது) நீ எனக்கு சொல்லிக் காண்பிக்கக்கூடிய ஓர் அருட்கொடையே ஆகும்” (என்று கூறினார்).
Saheeh International
And is this a favor of which you remind me - that you have enslaved the Children of Israel?"
قَالَகூறினார்رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَاؕஇன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّوْقِنِيْنَஉறுதிகொள்பவர்களாக
கால ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா இன் குன்தும் மூகினீன்
முஹம்மது ஜான்
அதற்கு (மூஸா) “நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (மூஸா) ‘‘ வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் இறைவன்தான் (உலகத்தாரின் இறைவனும் ஆவான்). (இவ்வுண்மையை) நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால் (நம்பிக்கை கொள்ளுங்கள்)'' என்று கூறினார்.
IFT
அதற்கு மூஸா பதிலளித்தார்: “அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றிற்கு இடையிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் அதிபதி ஆவான் நீங்கள் உறுதியான நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “நீங்கள் உறுதிகொண்டவர்களாக இருப்பின் வானங்கள் மற்றும் பூமி அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவை ஆகியவற்றின் இரட்சகன்” என்று (மூஸா கூறினார்),.
Saheeh International
[Moses] said, "The Lord of the heavens and earth and that between them, if you should be convinced."
قَالَஅவன் கூறினான்اِنَّநிச்சயமாகرَسُوْلَـكُمُஉங்கள் தூதர்الَّذِىْۤஎவர்اُرْسِلَஅனுப்பப்பட்டاِلَيْكُمْஉங்களிடம்لَمَجْنُوْنٌகண்டிப்பாக ஒரு பைத்தியக்காரர்
கால இன்ன ரஸூலகுமுல் லதீ உர்ஸில இலய்கும் லமஜ்னூன்
முஹம்மது ஜான்
(அதற்கு ஃபிர்அவ்ன்:) “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் (அவர்) ஒரு பைத்தியக் காரரே ஆவார்” எனக் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) ‘‘ உங்களிடம் அனுப்பப்பட்ட(தாகக் கூறும்) இந்தத் தூதர் நிச்சயமாக சுத்தப் பைத்தியக்காரர்'' என்று சொன்னான்.
IFT
அதற்கு ஃபிர்அவ்ன் (அவையோரை நோக்கி) கூறினான்: “உங்களிடம் அனுப்பப்பட்ட இந்தத் தூதர் சரியான பைத்தியக்காரராய்த் தெரிகின்றார்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் - (அவர்) திட்டமாக ஒரு பைத்தியக்காரர்தாம்” என்று (ஃபிர் அவ்னாகிய) அவன் கூறினான்.
Saheeh International
[Pharaoh] said, "Indeed, your 'messenger' who has been sent to you is mad."
قَالَஅவர் கூறினார்رَبُّஇறைவன்الْمَشْرِقِகிழக்கு திசைوَالْمَغْرِبِஇன்னும் மேற்கு திசைوَمَا بَيْنَهُمَا ؕஇன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்تَعْقِلُوْنَசிந்தித்துபுரிபவர்களாக
கால ரBப்Bபுல் மஷ்ரிகி வல் மக்ரிBபி வமா Bபய்ன ஹுமா இன் குன்தும் தஃகிலூன்
முஹம்மது ஜான்
(அதற்கு மூஸா) “நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின், அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (மூஸா) ‘‘ கீழ் நாடு மேல் நாடு இன்னும் இதற்கு மத்தியிலுள்ள தேசங்களின் இறைவனும் (அவன்தான்). நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (இதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்)'' என்று கூறினார்.
IFT
அதற்கு மூஸா கூறினார்: “கிழக்கு, மேற்கு மற்றும் அவற்றிற்கிடையேயுள்ள அனைத்திற்கும் அவன் அதிபதியாவான் நீங்கள் சற்றேனும் அறிவுடையோராக இருந்தால்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு மூஸா “அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றிற்கும் இரட்சகன், (இதனை) நீங்கள் விளங்கிக் கொள்பவர்களாக இருப்பின் (அவனை விசுவாசங்கொள்ளுங்கள்)” என்று கூறினார்.
Saheeh International
[Moses] said, "Lord of the east and the west and that between them, if you were to reason."
قَالَஅவன் கூறினான்لَٮِٕنِ اتَّخَذْتَநீர் எடுத்துக் கொண்டால்اِلٰهًاஒரு கடவுளைغَيْرِىْஎன்னைஅன்றிவேறுلَاَجْعَلَـنَّكَஉம்மையும் ஆக்கி விடுவேன்مِنَ الْمَسْجُوْنِيْنَசிறைப்படுத்தப்பட்டவர்களில்
கால ல'இனித் தகத்த இலாஹன் கய்ரீ ல அஜ்'அலன்னக மினல் மஸ்ஜூனீன்
முஹம்மது ஜான்
(அதற்கு ஃபிர்அவ்ன்:) “நீர் என்னை அன்றி வேறு நாயனை ஏற்படுத்திக் கொள்வீராயின் நிச்சயமாக உம்மைச் சிறைப்பட்டோரில் ஒருவராக நான் ஆக்கிவிடுவேன்” எனக் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன் ‘‘ என்னைத் தவிர (மற்றெதனையும்) நீர் கடவுளாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக நான் உம்மை சிறைப்பட்டோரில் ஆக்கிவிடுவேன்'' என்று கூறினான்.
IFT
அதற்கு ஃபிர்அவ்ன் கூறினான்: “நீர் என்னைத் தவிர வேறு எவரையேனும் வணக்கத்திற்குரியவராய் ஏற்றுக் கொண்டால், சிறையில் வாடி வதங்கிக் கிடப்பவர்களுடன் உம்மையும் நான் சேர்த்து விடுவேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வன், “என்னை அன்றி (மற்றெதனையும் வணக்கத்திற்குரிய) நாயனாக நீர் எடுத்துக்கொண்டால், நிச்சயமாக நான் உம்மைச் சிறையிடப்பட்டோரில் (ஒருவராக) ஆக்கிவிடுவேன்” என்று கூறினான்.
Saheeh International
[Pharaoh] said, "If you take a god other than me, I will surely place you among those imprisoned."
وَّنَزَعَஅவர் வெளியே எடுத்தார்يَدَهٗதனது கையைفَاِذَاஉடனேهِىَஅது ஆகிவிட்டதுبَيْضَآءُவெண்மையாகلِلنّٰظِرِيْنَபார்ப்பவர்களுக்கு
வ னZஜ'அ யதஹூ Fப-இதா ஹிய Bபய்ளா'உ லின்னா ளிரீன்
முஹம்மது ஜான்
இன்னும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார்; உடனே அது பார்ப்பவர்களுக்கு பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவர் தன் கையை(ச் சட்டைப் பையில்) இட்டு வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு(க் கண்ணைக் கூசச்செய்யும் பிரகாசமுடைய) வெண்மையாகத் தோன்றியது.
IFT
பிறகு, அவர் தம் கையை (அக்குளிலிருந்து) வெளியே எடுத்தார். உடனே அது பார்ப்போர் அனைவரின் முன்னிலையிலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவர் தன்னுடைய கையை(ச் சட்டைக்குள்ளிருந்து) வெளியில் எடுத்தார், அப்போது அது பார்ப்போருக்கு (ஒளிமயமான) வெண்மையாக இருந்தது.
Saheeh International
And he drew out his hand; thereupon it was white for the observers.
யுரீது அய் யுக்ரிஜகும் மின் அர்ளிகும் Bபிஸிஹ்ரிஹீ Fபமாதா தாமுரூன்
முஹம்மது ஜான்
“இவர் தம் சூனியத்தைக் கொண்டு உங்களை உங்கள் நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே இதைப் பற்றி நீங்கள் கூறும் யோசனை என்ன?” (என்று கேட்டான்.)
அப்துல் ஹமீது பாகவி
இவர் தன் சூனியத்தால் உங்கள் ஊரை விட்டும் உங்களைத் துரத்திவிட எண்ணுகிறார். ஆகவே, இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்'' என்று கேட்டான்.
IFT
தன்னுடைய சூனியத்தின் வலிமையால் உங்களை உங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற விரும்புகின்றார். இப்போது கூறுங்கள், நீங்கள் என்ன கட்டளை இடப்போகின்றீர்கள்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இவர் தன் சூனியத்தைக் கொண்டு உங்கள் (ஊரான இப்) பூமியைவிட்டும் உங்களை வெளியேற்றிவிட நாடுகிறார், ஆகவே (இதைப்பற்றி) நீங்கள் (எனக்கு) எதை(ச்செய்ய) ஏவுகிறீர்கள்”? (என்று ஃபிர் அவன் கேட்டான்).
Saheeh International
He wants to drive you out of your land by his magic, so what do you advise?"
அதற்கவர்கள் “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக-
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘‘ அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் ஒரு தவணை அளித்து, துப்பறிபவர்களைப் பல ஊர்களுக்கும் அனுப்பிவை.
IFT
அதற்கு அவர்கள் கூறினார்கள்: “இவரையும், இவருடைய சகோதரரையும் தடுத்து வையுங்கள். முரசறைவோரை நகரங்களுக்கு அனுப்புங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிடு, மேலும், (சூனியக்காரர்களை) திரட்டிக்கொண்டு வருவோரைப் பல நகரங்களுக்கும் அனுப்பி வை” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Postpone [the matter of] him and his brother and send among the cities gatherers
فَجُمِعَஆகவே, ஒன்று சேர்க்கப்பட்டனர்السَّحَرَةُசூனியக்காரர்கள்لِمِيْقَاتِகுறிப்பிட்ட தவணையில்يَوْمٍஒரு நாளின்مَّعْلُوْمٍۙஅறியப்பட்ட
Fப ஜுமி'அஸ் ஸஹரது லிமீகாதி யவ்மிம் மஃலூம்
முஹம்மது ஜான்
சூனியக்காரர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேளையில் ஒன்று திரட்டப்பட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறே துப்பறிபவர்கள் பல ஊர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு) குறித்த நாளில், குறித்த நேரத்தில் (குறித்த இடத்தில்) சூனியக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள்.
IFT
அவ்வாறு ஒருநாள் குறிப்பிட்ட நேரத்தில் சூனியக்காரர்கள் ஒன்று திரட்டப்பட்டனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (பல நகரங்களுக்கும் திரட்டுவோர் அனுப்பி வைக்கப்பட்டு குறிப்பிட்ட நாளின் குறித்த நேரத்திற்குச் சூனியக்காரர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள்.
Saheeh International
So the magicians were assembled for the appointment of a well-known day.
ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, “திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லவா ?” என்று கேட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
சூனியக்காரர்கள் அனைவரும் வந்தபொழுது அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி ‘‘மெய்யாகவே நாங்கள் வெற்றிபெற்றால் அதற்குரிய கூலி எங்களுக்கு உண்டா?'' என்று கேட்டார்கள்.
ஆகவே, சூனியக்காரர்கள் வந்தபொழுது அவர்கள் ஃபிர்அவ்னிடம், “நாங்களே மிகைத்தவர்களாகி (வென்று) விட்டால், (அதற்குரிய) கூலி (வெகுமதி) நிச்சயமாக எங்களுக்கு உண்டா?” என்று கேட்டார்கள்.
Saheeh International
And when the magicians arrived, they said to Pharaoh, "Is there indeed for us a reward if we are the predominant?"
قَالَஅவன் கூறினான்نَعَمْஆம்وَاِنَّكُمْஇன்னும் நிச்சயமாக நீங்கள்اِذًاஅப்போதுلَّمِنَ الْمُقَرَّبِيْنَநெருக்கமானவர்களில்
கால ன'அம் வ இன்னகும் இதல் லமினல் முகர்ரBபீன்
முஹம்மது ஜான்
“ஆம்! (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்) இன்னும் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்” என்று அவன் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன் ‘‘ ஆம் (கூலி உண்டு.... கூலி மட்டுமா?) அந்நேரத்தில் நீங்கள் (நம் சபையிலும் வீற்றிருக்கக்கூடிய) நமக்கு நெருங்கிய பிரமுகர்களாகவும் ஆகிவிடுவீர்கள்'' என்று கூறினான்.
IFT
அதற்கு அவன், “ஆம்! மேலும், நீங்கள் அப்போது எனக்கு நெருக்கமானவர்களாயும் இருப்பீர்கள்” என்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர் “ஆம்! உண்டு அந்நேரத்தில், நிச்சயமாக நீங்கள் (நம்முடைய சபையிலும்) நமக்கு நெருக்கமாக்கப்பட்டவர்களில் உள்ளவராவீர்கள்” என்று கூறினான்.
Saheeh International
He said, "Yes, and indeed, you will then be of those near [to me]."
فَاَلْقَوْاஆகவே, அவர்கள் எறிந்தனர்حِبَالَهُمْதங்கள் கயிறுகளைوَعِصِيَّهُمْஇன்னும் தங்கள் தடிகளைوَقَالُوْاஇன்னும் அவர்கள் கூறினர்بِعِزَّةِகௌரவத்தின் மீது சத்தியமாக!فِرْعَوْنَஃபிர்அவ்னுடையاِنَّا لَـنَحْنُநாங்கள்தான் நிச்சயமாகالْغٰلِبُوْنَவெற்றியாளர்கள்
ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்கள் தங்கள் தடிகளையும், கயிறுகளையும் எறிந்து ‘‘ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியம் நிச்சயமாக நாங்கள்தான் வென்றுவிட்டோம்'' என்று கூறினார்கள்.
IFT
உடனே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், கைத்தடிகளையும் எறிந்தனர்; மேலும், கூறினர்: “ஃபிர்அவ்னின் மகிமை கொண்டு நாங்களே வெற்றியாளர்களாய்த் திகழ்வோம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, தங்களுடைய கயிறுகளையும், தங்களுடைய தடிகளையும் அவர்கள் போட்டார்கள், ஃபிர் அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நாமே வெற்றியாளர்கள்” என்றும் கூறினார்கள்.
Saheeh International
So they threw their ropes and their staffs and said, "By the might of Pharaoh, indeed it is we who are predominant."
(அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவரிடம் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுகொடுத்த உங்களைவிடப் பெரியவராக அவர் இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் (இதன் விளைவைத்) தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் எனக் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (ஃபிர்அவ்ன்), ‘‘ நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு சூனியம் கற்றுக்கொடுத்த உங்கள் குரு அவர்தான். (இதன் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான்.
IFT
ஃபிர்அவ்ன் கூறினான்: “மூஸா கூறியதை ஏற்றுக்கொண்டு விட்டீர்களே நான் அனுமதி அளிப்பதற்கு முன்பே! திண்ணமாக, உங்களுக்கு சூனியத்தைக் கற்றுத்தந்த உங்களின் பெரிய குருவாக இருக்கின்றார் இவர்! சரி, இப்பொழுது உங்களுக்குத் தெரிந்துவிடும். நிச்சயமாக, நான் உங்கள் மாறு கை, மாறு கால்களைத் துண்டித்துவிடுவேன்; உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்துவிடுவேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு, பிர் அவ்னாகிய,) அவன் “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை விசுவாசித்து விட்டீர்களா? நிச்சயமாக உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்களின் பெரியவர் அவர்தான், அதிசீக்கிரத்தில் (அதன் முடிவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள், திண்ணமாக உங்களுடைய கைகளையும், உங்களுடைய கால்களையும் மாறாக (ஒரு பக்கத்துக் கையையும், மறுபக்கத்துக் காலையும்) நான் துண்டித்து உங்கள் அனைவரையும் நிச்சயமாக நான் கழுவேற்றிவிடுவேன்” என்று கூறினான்.
Saheeh International
[Pharaoh] said, "You believed him [i.e., Moses] before I gave you permission. Indeed, he is your leader who has taught you magic, but you are going to know. I will surely cut off your hands and your feet on opposite sides, and I will surely crucify you all."
“(அவ்வாறாயின் அதனால் எங்களுக்கு) எந்தக் கெடுதியுமில்லை; நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தாம் திரும்பிச் செல்வோம்” எனக் கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘ (அதனால் எங்களுக்கு) ஒரு பாதகமுமில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கமே திரும்பச் சென்று விடுவோம்.
IFT
அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “பரவாயில்லை! நாங்கள் எங்கள் இறைவனின் திருமுன் சென்று விடுவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “(அவ்வாறு செய்வதால்) எங்களுக்கு யாதொரு கெடுதியுமில்லை, (ஏனென்றால்), நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகன் பக்கமே திரும்பச் செல்லக்கூடியவர்கள்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "No harm. Indeed, to our Lord we will return.
“(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்” என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் (என்றுங் கூறினார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (மூஸாவை) நம்பிக்கை கொண்டவர்களில் நாங்கள் முதன்மையானவர்களாக இருக்கும் காரணத்தினால், எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை மன்னித்துவிடுவான் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்.''
IFT
எங்கள் இறைவன் எங்களுடைய பாவங்களை மன்னித்து விடுவான் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஏனெனில், அனைவர்க்கும் முன்னதாக நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாகி விட்டோமே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக (மூஸாவை) விசுவாசங்கொண்டவர்களில் முதலாமவர்களாக நாங்கள் இருப்பதினால், எங்கள் இரட்சகன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்துவிடுவான் என்று நிச்சயமாக நாங்கள் ஆதரவு வைக்கிறோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
Indeed, we aspire that our Lord will forgive us our sins because we were the first of the believers."
மேலும், “நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், மூஸாவுக்கு நாம் வஹ்யி அறிவித்ததாவது: ‘‘ (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு நீங்கள் இரவோடு இரவாக சென்றுவிடுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் (அவர்களால்) பின்தொடரப்படுவீர்கள்'' (என்றோம்).
IFT
மேலும், நாம் மூஸாவுக்கு வஹி அறிவித்தோம்: “என் அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாகப் புறப்படுவீராக! நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், மூஸாவுக்கு நாம் வஹீ அறிவித்தோம் “(இஸ்ராயீலின் மக்களாகிய) என்னுடைய அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நிச்சயமாக நீங்கள் பின்தொடரப்படுவோராய் உள்ளீர்கள்.”
Saheeh International
And We inspired to Moses, "Travel by night with My servants; indeed, you will be pursued."
وَاِنَّاஇன்னும் நிச்சயமாக நாம்لَجَمِيْعٌஅனைவரும்حٰذِرُوْنَؕதயாரிப்புடன் இருப்பவர்கள்தான்
வ இன்னா லஜமீ'உன் ஹாதிரூன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம்.”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாங்கள் பெருந்தொகையினர்; (அத்துடன்) மிக்க எச்சரிக்கை உடையவர்கள்'' (என்று கூறி, பல ஊரார்களையும் ஒன்று திரட்டிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.)
IFT
நாம் எப்பொழுதும் விழிப்பாக இருக்கக்கூடிய கூட்டத்தினர் அல்லவா!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனிருக்கின்றவர்கள்” (என்று கூறினான்.)
قَالَஅவர் கூறினார்كَلَّا ۚஅவ்வாறல்லاِنَّநிச்சயமாகمَعِىَஎன்னுடன் இருக்கின்றான்رَبِّىْஎன் இறைவன்سَيَهْدِيْنِஅவன் எனக்கு விரைவில் வழிகாட்டுவான்
கால கல்லா இன்ன ம'இய ரBப்Bபீ ஸ யஹ்தீன்
முஹம்மது ஜான்
அதற்கு (மூஸா), “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்” என்று கூறினார்;.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (மூஸா) ‘‘ அவ்வாறல்ல. நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். (நாம் தப்பிக்கும்) வழியை நிச்சயமாக அவன் எனக்கு அறிவிப்பான்'' என்றார்.
IFT
அதற்கு மூஸா கூறினார்: “ஒருபோதும் இல்லை. என்னோடு என் இறைவன் இருக்கின்றான். அவன் திண்ணமாக, எனக்கு வழிகாட்டுவான்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “ஒருபோதும் இல்லை! நிச்சயமாக என்னுடன், என்னுடைய இரட்சகன் இருக்கின்றான், (இதிலிருந்து ஈடேறும்) வழியை நிச்சயமாக எனக்கு அவன் காட்டுவான்” என்று (மூஸாவாகிய) அவர் கூறினார்.
Saheeh International
[Moses] said, "No! Indeed, with me is my Lord; He will guide me."
உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நாம் மூஸாவை நோக்கி ‘‘ நீர் உமது தடியினால் இந்தக் கடலை அடிப்பீராக'' என வஹ்யி அறிவித்தோம். (அவர் அடிக்கவே) அது (பல வழிகளாகப்) பிளந்துவிட்டது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலைகளைப்போல் இருந்தது.
IFT
மூஸாவுக்கு நாம் வஹியின் மூலம் கட்டளையிட்டோம்: “உமது கைத்தடியினால் கடலை அடியும்!” உடனே கடல் பிளந்துவிட்டது. மேலும், அதன் ஒவ்வொரு பகுதியும் மாபெரும் மலை போன்றாகிவிட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அப்போது) “நீர் உம்முடைய (கைத்) தடியினால் கடலை அடிப்பீராக” என மூஸாவின்பால் வஹீ அறிவித்தோம், (அவர் அடிக்கவே) அது பிளந்துவிட்டது, ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
Saheeh International
Then We inspired to Moses, "Strike with your staff the sea," and it parted, and each portion was like a great towering mountain.
(அப்போது அவர்கள்) “இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘ இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்து கொண்டிருக்க நாங்கள் கண்டோம் (ஆகவே, நாங்களும் அவற்றை ஆராதனை செய்கிறோம்)'' என்றார்கள்.
IFT
அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “இல்லை. ஆயினும், எங்கள் முன்னோர் இவ்வாறே செய்து கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இல்லை எங்கள் மூதாதையர்களை இவ்வாறே செய்பவர்களாக நாங்கள் கண்டோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
“இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”
அப்துல் ஹமீது பாகவி
பிற்காலத்திலும் (உலக முடிவு நாள் வரை அனைவரும்) எனக்கு (அலைஹிஸ்ஸலாம்-அவர் மீது சாந்தி நிலவுக! என்று பிரார்த்திக்கக்கூடிய) நற்பெயரையும் சிறப்பையும் தந்தருள்வாயாக!
IFT
மேலும், பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான புகழை வழங்குவாயாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“பின்வருபவர்களில் (அவர்கள் என் விஷயத்தில் என்னைப்பற்றி அழகானவற்றைக் கூற) எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக”
Saheeh International
And grant me a mention [i.e., reputation] of honor among later generations.
“எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).”
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்).
IFT
ஆனால், எந்த மனிதர் தூய்மையான உள்ளத்தோடு அல்லாஹ்வின் சமூகத்திற்கு வருகை தருகின்றாரோ அவரைத் தவிர!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆயினும், இணைவைப்பதிலிருந்து நீக்கம் பெற்ற) பரிசுத்தமான இதயத்துடன் தன் இரட்சகனாகிய) அல்லாஹ்விடம் யார் வந்தாரோ அவர் தவிர (மற்றெவருக்கும் பயனளிக்காத நாள்.)
Saheeh International
But only one who comes to Allah with a sound heart."
مِنْ دُوْنِஅன்றிاللّٰهِؕஅல்லாஹ்வைهَلْ يَنْصُرُوْنَكُمْஅவை உங்களுக்கு உதவுமா?اَوْஅல்லதுيَنْتَصِرُوْنَؕதமக்குத் தாமே உதவிக் கொள்ளுமா?
மின் தூனில் லாஹி ஹல் யன்ஸுரூனகும் அவ் யன்தஸிரூன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை வணங்கினீர்களே! இப்போது) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களேனும் உதவி செய்து கொள்ளுமா,”
அப்துல் ஹமீது பாகவி
(இச்சமயம்) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களையே பாதுகாத்துக் கொள்ளுமா?'' என்று கேட்கப்படும்.
IFT
“நீங்கள் அல்லாஹ்வை விடுத்து வணங்கி வந்தீர்களே அந்தத் தெய்வங்கள் எங்கே? அவை உங்களுக்கு ஏதேனும் உதவி செய்து கொண்டிருக்கின்றனவா? அல்லது அவற்றால் தம்மையேனும் காப்பாற்றிக் கொள்ள முடிகிறதா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வையன்றி – (நீங்கள் வணங்கிவந்த) அவை (இப்போது) உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களே உதவி செய்து (தங்களைக் காப்பாற்றிக்) கொள்ளுமா? (என்று கேட்கப்படும்)
Saheeh International
Other than Allah? Can they help you or help themselves?"
اِنْ حِسَابُهُمْஅவர்களது விசாரணை இல்லைاِلَّاதவிரعَلٰىமீதேرَبِّىْஎன் இறைவன்لَوْ تَشْعُرُوْنَۚநீங்கள் உணரவேண்டுமே!
இன் ஹிஸாBபுஹும் இல்லா 'அலா ரBப்Bபீ லவ் தஷ்'உரூன்
முஹம்மது ஜான்
நீங்கள் அறியக்கூடியவர்களாக இருப்பின், அவர்களுடைய கேள்வி கணக்கு (பற்றிய விசாரணை) என்னுடைய இறைவனிடம்தான் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(இவற்றைப் பற்றி) அவர்களிடம் கணக்குக் கேட்பது என் இறைவன் மீதே கடமை. (என் மீதல்ல.) இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
IFT
அவர்களுடைய கணக்கெல்லாம் என் அதிபதியின் பொறுப்பிலுள்ளது. நீங்கள் சற்று உணர்ந்து செயல்படக்கூடாதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(“அவைபற்றிய) அவர்களின் கணக்கு என் இரட்சகன் மீதே தவிர (என்மீது கடமை) இல்லை, (இது பற்றி நீங்கள் உணருபவர்களாக இருப்பின்” (அவர்களை இழித்துக் கூறி இருக்க மாட்டீர்கள்).
Saheeh International
Their account is only upon my Lord, if you [could] perceive.
அதற்கவர்கள் கூறினார்கள்: “நூஹே! நீர் (உம் பிரச்சாரத்தை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் கல்லாலெறிந்து கொல்லப்படுவீர்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘ நூஹே! நீர் இதை விட்டும் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீர் கல்லெறிந்து கொல்லப்படுவீர்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள், “நூஹே! நீர் இதனைத் தவிர்த்துக்கொள்ளாவிடில், கல்லடிபட்டு விரட்டப்படுவோரில் நீரும் ஒருவராகிவிடுவீர்” என்று கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “நூஹே! நீர் (இவ்வாறு கூறுவதிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், (கல்லால்) எறியப்படுபவர்களில் (ஒருவராக) நிச்சயமாக நீர் ஆகிவிடுவீர்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "If you do not desist, O Noah, you will surely be of those who are stoned."
ஆகவே, நீ எனக்கும், அவர்களுக்கு மிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக!” (என்று பிரார்த்தித்தார்.)
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், எனக்கும் அவர்களுக்குமிடையில் நீ ஒரு தீர்ப்பு செய்து, என்னையும் என்னுடனுள்ள நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வாயாக! என்று பிரார்த்தித்தார்.
IFT
இனி எனக்கும் அவர்களுக்குமிடையில் திட்டவட்டமான ஒரு தீர்ப்பை வழங்குவாயாக! மேலும், என்னையும் என்னுடன் இருக்கும் இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக!”
இதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “நீர் நல்லுரை கூறினாலும் கூறாவிட்டாலும் எல்லாம் எங்களுக்கு ஒன்றுதான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் “நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும், உபதேசம் செய்பவர்களில் நீர் இல்லாமலிருந்தாலும் சமம் தான் (நாங்கள் எங்கள் வழியிலிருந்து திரும்பப்போவதில்லை) என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "It is all the same to us whether you advise or are not of the advisors.
فَكَذَّبُوْهُஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்فَاَهْلَـكْنٰهُمْؕஆகவே, அவர்களை நாம் அழித்தோம்.اِنَّநிச்சயமாகفِىْ ذٰلِكَஇதில் இருக்கிறதுلَاَيَةً ؕஓர் அத்தாட்சிوَ مَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களாக
(இவ்வாறு கூறி) அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலின் நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
மேலும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம். நிச்சயமாக இதில் நல்லதோர் அத்தாட்சியிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
IFT
இறுதியில் அவர்கள் அவரைப் பொய்யர் எனக் கூறிவிட்டார்கள். நாம் அவர்களை அழித்துவிட்டோம்.திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள், ஆகவே, நாம் அவர்களை அழித்துவிட்டோம், நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது, இன்னும், அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங்கொள்பவர்களாக இருக்கவில்லை.
Saheeh International
And they denied him, so We destroyed them. Indeed in that is a sign, but most of them were not to be believers.
“வேளாண்மைகளிலும் (மிருதுவான ஈரமுள்ள பழங்களைத் தாங்கியதாக) அவற்றின் குலைகள் இருக்கும், பேரீச்ச மரங்களிலும் (ஆகியவற்றிலெல்லாம் நீங்கள் அச்சமற்றிருக்க விட்டுவைக்கப்படுவீர்களா?)
Saheeh International
And fields of crops and palm trees with softened fruit?
“நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை; எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்” (என்றனர்).
அப்துல் ஹமீது பாகவி
நீர் நம்மைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறில்லை. நீர் உண்மை சொல்பவராக இருந்தால் (நாம் விரும்பியவாறு) ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவீராக'' (என்று கூறினார்கள்.)
IFT
நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறென்ன? நீர் உண்மையாளராயின் ஏதேனுமொரு சான்றினைக் கொண்டு வாரும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர, (வேறு) இல்லை, ஆகவே, உண்மையாளர்களில நீர் இருந்தால் (நாங்கள் வேண்டியவாறு) ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்” (என்று கூறினார்கள்)
Saheeh International
You are but a man like ourselves, so bring a sign, if you should be of the truthful."
قَالَஅவர் கூறினார்هٰذِهٖஇது ஒருنَاقَةٌபெண் ஒட்டகைلَّهَاஇதற்குشِرْبٌநீர் அருந்துவதற்குரிய ஒரு பங்குوَّلَـكُمْஇன்னும் உங்களுக்கும்شِرْبُநீர் அருந்துவதற்குரிய பங்கு உள்ளதுيَوْمٍநாளில்مَّعْلُوْمٍۚகுறிப்பிட்ட
கால ஹாதிஹீ னாகதுல் லஹா ஷிர்Bபு(ன்)வ் வலகும் ஷிர்Bபு யவ்மிம் மஃலூம்
முஹம்மது ஜான்
அவர் சொன்னார்: “இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு; உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்.”
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘ (உங்களுக்கு அத்தாட்சியாக) இதோ ஒரு பெண் ஒட்டகம் (வந்து) இருக்கிறது. (நீங்கள் தண்ணீரருந்தும் இத்துரவில்) அது குடிப்பதற்கு ஒரு நாளும், நீங்கள் குடிப்பதற்கு ஒரு நாளும் குறிப்பிடப்படுகிறது.
IFT
அதற்கு ஸாலிஹ் கூறினார்: “இதோ! ஒரு பெண் ஒட்டகம்; (ஒரு நாள்) இது தண்ணீர் அருந்தட்டும். மற்றொரு நாள் நீங்களெல்லோரும் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர் (அத்தாட்சியாக) “இதோ ஒரு பெண் ஒட்டகம் (குறிப்பிட்ட நாளில் கிணற்றிலிருந்து) இதற்கு தண்ணீர் அருந்தும் பங்கும், (அதுபோன்று) உங்களுக்கு குறிப்பிட்ட ஒருநாள் தண்ணீர் அருந்தும் பங்கும் உண்டு” என்று கூறினார்.
Saheeh International
He said, "This is a she-camel. For her is a [time of] drink, and for you is a [time of] drink, [each] on a known day.
وَلَا تَمَسُّوْهَاஅதை தொட்டு விடாதீர்கள்!بِسُوْٓءٍதீங்கைக் கொண்டுفَيَاْخُذَபிடித்துக்கொள்ளும்كُمْஉங்களைعَذَابُதண்டனைيَوْمٍநாளின்عَظِيْمٍபெரிய
வ லா தமஸ்ஸூஹா Bபிஸூ'இன் Fப யாகுதகும் 'அதாBபு யவ்மின் 'அளீம்
முஹம்மது ஜான்
“இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்.”
அப்துல் ஹமீது பாகவி
மேலும், நீங்கள் அதற்கு ஒரு தீங்கும் செய்யாதீர்கள். அவ்வாறாயின் கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்'' என்று கூறினார்.
IFT
இதற்கு எவ்விதத் தீங்கும் இழைக்காதீர்கள்; அப்படி தீங்கு இழைத்தீர்களானால் ஒரு மாபெரும் நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், “நீங்கள் எந்தத் தீங்கைக் கொண்டும் அதனைத் தீண்டாதீர்கள் (அவ்வாறு தீண்டினால்) மகத்தான நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்)
Saheeh International
And do not touch her with harm, lest you be seized by the punishment of a terrible day."
فَعَقَرُوْهَاஆக, அவர்கள் அதை அறுத்து விட்டார்கள்فَاَصْبَحُوْاஆகவே ஆகிவிட்டனர்نٰدِمِيْنَۙகைசேதப்பட்டவர்களாக
Fப'அகரூஹா Fப அஸ்Bபஹூ னாதிமீன்
முஹம்மது ஜான்
அவர்கள் அதன் கால் நரம்பைத் துண்டித்து (கொன்று) விட்டனர். அதனால் அவர்கள் கைசேதப்பட்டவர்களாகவே ஆகிவிட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு கூறியிருந்தும்) அவர்கள் அதன் கால் நரம்பைத் தறித்து விட்டார்கள். (அதனால் வேதனை வருவதன் அறிகுறியைக் கண்டபொழுது) அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.
IFT
ஆயினும், அவர்கள் அதன் கால் நரம்புகளை வெட்டி விட்டார்கள். பிறகு வருந்தக்கூடியவர்களாகி விட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தும் அதன் குதிகால் நரம்பினைத்தறித்து அவர்கள் அதை அறுத்துவிட்டார்கள், பின்னர் கைசேதப்பட்டோராய் ஆகிவிட்டனர்.
ஆகவே, வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது - நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும், அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது. நிச்சயமாக (அவர்களுக்கு) இதிலோர் அத்தாட்சி இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவேயில்லை.
IFT
அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது! நிச்சயமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது, நிச்சயமாக இதிலோர் அத்தாட்சி இருக்கிறது, அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங் கொள்பவர்களாக இருக்கவுமில்லை.
Saheeh International
And the punishment seized them. Indeed in that is a sign, but most of them were not to be believers.
“இன்னும், உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவிமார்களை விட்டு விடுகிறீர்கள்; இல்லை, நீங்கள் வரம்பு கடந்த சமூகத்தாராக இருக்கின்றீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்த உங்கள் மனைவிகளை நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்களே! நீங்கள் (அல்லாஹ்வின் இயற்கை முறையை) மீறிவிட்ட மக்கள் ஆவீர்கள்'' என்று கூறினார்.
IFT
மேலும், உங்கள் மனைவியரிடம் உங்களுக்காக உங்கள் இறைவன் படைத்திருப்பனவற்றை விட்டுவிடுகின்றீர்களா? உண்மை யாதெனில், நீங்கள் வரம்பு மீறிச் செல்லும் மக்களாவீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்கள் இரட்சகன் உங்களின் மனைவியரிலிருந்து உங்களுக்கெனப் படைத்ததையும் நீங்கள் விட்டுவிடுகிறீர்கள் இல்லை! நீங்கள் (அல்லாஹ்வின்) வரம்பைக் கடந்த சமூகத்தவர்கள்” (என்றும் கூறினார்).
Saheeh International
And leave what your Lord has created for you as mates? But you are a people transgressing."
அதற்கவர்கள்; “லூத்தே (இப்பேச்சையெல்லாம் விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் (இங்கிருந்து) வெளியேற்றப்படுவீர்” எனக் கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘ லூத்தே! (இவ்வாறு கூறுவதை விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீர் (நம் ஊரை விட்டுத்) துரத்தப்படுவீர்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள் கூறினார்கள்: “லூத்தே! நீர் இவ்வாறு கூறுவதைத் தவிர்த்துக் கொள்ளாவிடில், (எங்கள் ஊரிலிருந்து) வெளியேற்றப்படுகிறவர்களில் நீரும் சேர்க்கப்படுவீர்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “லூத்தே! (இவ்வாறு உபதேசிப்பதிலிருந்து) நீர் விலகிக்கொள்ளாவிடில், நிச்சயமாக நீர் (ஊரிலிருந்து) வெளியேற்றப்பட்டவர்களில் ஆகிவிடுவீர்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "If you do not desist, O Lot, you will surely be of those evicted."
இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மாரி பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள் மீது (அக்கல்) மாரி மிகவும் கெட்டதாக இருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் மீது நாம் (கல்) மழையை பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட(அ)வர்களின் (மீது பொழிந்த கல்) மழை மகா கெட்டது.
IFT
இன்னும் அவர்கள் மீது பொழிய வைத்தோம், ஒரு மழையை! அது மிக மோசமான மழையாக இருந்தது. அதுவோ எச்சரிக்கப்பட்டவர்கள் மீது இறங்கியது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் மீது நாம் (கல்)மாரியை பொழியச் செய்தோம், ஆகவே, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட (அவர்களின்) மீது பொழியச்செய்த கல்மாரி கெட்டதாகிவிட்டது.
Saheeh International
And We rained upon them a rain [of stones], and evil was the rain of those who were warned.
وَلَا تَبْخَسُواகுறைக்காதீர்கள்النَّاسَமக்களுக்குاَشْيَآءَபொருள்களைهُمْஅவர்களுடையوَلَا تَعْثَوْاஇன்னும் கடும் குழப்பம் செய்யாதீர்கள்!فِى الْاَرْضِபூமியில்مُفْسِدِيْنَۚகலகம்செய்தவர்களாக
“மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள் - மேலும், நீங்கள் பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களுக்கு நிறுத்துக் கொடுக்க வேண்டிய அவர்களுடைய பொருள்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள். நீங்கள் பூமியில் கடுமையாக விஷமம் (-கலகம்) செய்து கொண்டு அலையாதீர்கள்.
IFT
மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள். பூமியில் அராஜகம் விளைவித்துக் கொண்டு திரியாதீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மனிதர்களுக்கு அவர்களின் பொருள்களை நீங்கள் குறைத்தும் விடாதீர்கள், நீங்கள் பூமியில் குழப்பம் செய்கிறவர்களாகவும் அலையாதீர்கள்.”
Saheeh International
And do not deprive people of their due and do not commit abuse on earth, spreading corruption.
فَكَذَّبُوْهُஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர்فَاَخَذَஆகவே, பிடித்ததுهُمْஅவர்களைعَذَابُதண்டனைيَوْمِநாளின்الظُّلَّةِؕமேகம்اِنَّهٗநிச்சயமாக அதுكَانَஇருக்கிறதுعَذَابَதண்டனையாகيَوْمٍஒரு நாளின்عَظِيْمٍபெரிய
பின்னரும், அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, (அடர்ந்திருண்ட) மேகத்துடைய நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது; நிச்சயமாக அது கடினமான நாளின் வேதனையாகவே இருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்) பின்னரும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆகவே, ஒரு நாள் அவர்களை (அடர்ந்த) நிழலையுடைய மேகத்தின் வேதனை பிடித்துக் கொண்டது. நிச்சயமாக அது மகத்தான நாளின் வேதனையாக இருந்தது.
IFT
அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினர். இறுதியில் குடை நாளின் வேதனை அவர்களைப் பீடித்துக்கொண்டது. திண்ணமாக, அது பயங்கரமான ஒரு நாளின் வேதனையாய் இருந்தது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னரும், அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள், ஆகவே, (அடர்ந்திருண்ட மேகங்களின்) நிழலுடைய நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக்கொண்டது, நிச்சயமாக அது மகத்தான (கடினமான) நாளின் வேதனையாக இருந்தது.
Saheeh International
And they denied him, so the punishment of the day of the black cloud seized them. Indeed, it was the punishment of a terrible day.
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆயினும்,) அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து (பிறர் மூலம்) அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர், பழி வாங்கினார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தான். பிறரை துன்புறுத்திய) அநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.
IFT
ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிந்தார்களோ, மேலும், அல்லாஹ்வை அதிகம் நினைத்தார்களோ, மேலும், தங்களுக்குக் கொடுமை இழைக்கப்பட்டபோது அதற்காக மட்டும் பழிவாங்கினார்களோ அவர்களைத் தவிர! மேலும், கொடுமை புரிகின்றவர்கள், அவர்கள் எந்த கதியை அடையப் போகின்றார்கள் என்பதை அதிவிரைவில் அறிந்துகொள்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆயினும் அவர்களில்) விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்து, அல்லாஹ்வையும் அதிகமாக நினைவுகூர்ந்து, தாங்கள் அநியாயம் செய்யப்பட்ட பின் பழி தீர்த்துக்கொண்டார்களே அத்தகையோரைத் தவிர. மேலும், அநியாயம் செய்தோர், தாங்கள் எந்த மீளும் தலத்திற்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை (அதிசீக்கிரத்தில்) அறிந்து கொள்வார்கள்.
Saheeh International
Except those [poets] who believe and do righteous deeds and remember Allah often and defend [the Muslims] after they were wronged. And those who have wronged are going to know to what [kind of] return they will be returned.