وَفِىْ خَلْقِكُمْஉங்களைப் படைத்திருப்பதிலும்وَمَا يَبُثُّபரப்பி இருப்பதிலும்مِنْ دَآبَّةٍஉயிரினங்களைاٰيٰتٌபல அத்தாட்சிகள்لِّقَوْمٍமக்களுக்குيُّوْقِنُوْنَۙஉறுதியாக நம்பிக்கை கொள்கின்றனர்
வ Fபீ கல்கிகும் வமா யBபுத்து மின் தாBப்Bபதின் ஆயாதுல் லிகவ்மி(ன்)ய்-யூகினூன்
முஹம்மது ஜான்
இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
உங்களைப் படைத்திருப்பதிலும், (பூமியில்) பல ஜீவராசிகளை(ப் பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருப்பதிலும், (நம்பிக்கையில்) உறுதியான (நல்ல) மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
மேலும், உங்களைப் படைப்பதிலும், (பூமியில்) அல்லாஹ் பரப்பியிருக்கின்ற உயிரினங்களிலும், உறுதிகொள்ளும் மக்களுக்கு பெரும் சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், உங்களைப் படைத்திருப்பதிலும், ஜீவராசிகளை அவன் பரவச்செய்திருப்பதிலும், (விசுவாசத்தில்) உறுதிகொள்கின்ற சமூகத்தார்க்கு அத்தாட்சிகளிருக்கின்றன.
Saheeh International
And in the creation of yourselves and what He disperses of moving creatures are signs for people who are certain [in faith].
மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
இரவு, பகல் மாறிமாறி வரும்படி அல்லாஹ் செய்திருப்பதிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி வைத்து, அதைக்கொண்டு (வறண்டு) இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும், (பல திசைகளுக்கு) காற்றுகளை திருப்பி விடுவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
இரவும் பகலும் வேறுபட்டு இருப்பதிலும், அல்லாஹ், வானத்திலிருந்து மழையை இறக்கி பிறகு அதனைக் கொண்டு இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும் மேலும், காற்றுகளின் சுழற்சியிலும் அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்குப் பல்வேறு அத்தாட்சிகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், இன்னும் வானத்திலிருந்து மழையை அல்லாஹ் இறக்கிவைத்து, அதனைக் கொண்டு பூமியை அது (வறட்சியினால்) இறந்துபோனபின் உயிர்ப்பிப்பதிலும் (நாலாபாகங்களிலும் பருவத்திற்குத்தக்கவாறு) காற்றுகளைத் திருப்பிவிடுவதிலும் விளங்கிக் கொள்ளும் சமூகத்தார்க்கு அத்தாட்சிகளிருக்கின்றன.
Saheeh International
And [in] the alternation of night and day and [in] what Allah sends down from the sky of provision [i.e., rain] and gives life thereby to the earth after its lifelessness and [in His] directing of the winds are signs for a people who reason.
تِلْكَஇவைاٰيٰتُவசனங்களாகும்اللّٰهِஅல்லாஹ்வின்نَـتْلُوْهَاஇவற்றை ஓதுகிறோம்عَلَيْكَஉம்மீதுبِالْحَقِّ ۚஉண்மையாகவேفَبِاَىِّ حَدِيْثٍۢஎந்த செய்தியைبَعْدَபின்னர்اللّٰهِஅல்லாஹ்وَاٰيٰتِهٖஇன்னும் அவனது அத்தாட்சிகளுக்குيُؤْمِنُوْنَஇவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்
இவை அல்லாஹ்வுடைய வசனங்கள், இவற்றை (நபியே!) உம்மீது உண்மையுடன் ஓதிக் காண்பிக்கிறோம்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எதனைத் தான் நம்பப் போகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். மெய்யாகவே உம் மீது நாம் இவற்றை ஓதிக் காண்பிக்கிறோம். அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எவ்விஷயத்தைத்தான் நம்புவார்கள்?
IFT
இவை அல்லாஹ்வின் அத்தாட்சிகள். இவற்றை உம்மிடம் நாம் மிகச் சரியாக எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். இனி, அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பிறகு, இவர்கள் எந்த விஷயத்தின் மீது நம்பிக்கை கொள்ளப் போகிறார்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவை(களைத் தன்னகத்தே கொண்ட குர் ஆன்) அல்லாஹ்வுடைய வசனங்களாகும், உண்மையைக் கொண்டு அவற்றை உம்மீது நாம் ஓதிக்காண்பிக்கிறோம், எனவே அல்லாஹ்வுக்கும், அவனுடைய வசனங்களுக்கும் பின்னர், இவர்கள் எச்செய்தியைத்தான் நம்புவார்கள்?
Saheeh International
These are the verses of Allah which We recite to you in truth. Then in what statement after Allah and His verses will they believe?
தன் மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கிறான்; பின்பு பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக் கேளாதது போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதம் செய்கிறான்; அ(த்தகைய)வனுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயம் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டதை செவிமடுத்து விட்டு பின்னர், அதை செவிமடுக்காதவர்களைப்போல் கர்வம் கொண்டு (நிராகரிப்பின் மீதே) பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நற்செய்தி கூறுவீராக.
IFT
அவன் முன்னிலையில் ஓதிக் காட்டப்படும் இறைவசனங்களை அவன் செவியேற்கிறான்; பிறகு முழு ஆணவத்துடன் (தன் நிராகரிப்பில்) அவன் பிடிவாதமாய் இருக்கின்றான், அவ்வசனங்களை அவன் செவியேற்காதது போன்று! இத்தகைய மனிதனுக்குத் துன்புறுத்தும் வேதனையைப் பற்றிய ‘நற்செய்தியை’ அறிவித்து விடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன்மீது ஓதிக்காண்பிக்கப்படும் அல்லாஹ்வின் வசனங்களை அவன் (செவியேற்றுக்) கேட்கிறான், பின்னர் கர்வங்கொண்டு அவற்றைக் (காதால்) கேட்காதவனைப்போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதமாக இருக்கின்றான், அ(த்தகைய)வனுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
Saheeh International
Who hears the verses of Allah recited to him, then persists arrogantly as if he had not heard them. So give him tidings of a painful punishment.
நம் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவன் அறிந்து கொண்டால், அதைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறான்; அ(த்தகைய)வர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
நம் வசனங்களில் எதை அவர்கள் அறிந்த போதிலும், அதை அவர்கள் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.
IFT
நம்முடைய வசனங்களிலிருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை அவன் தெரிந்து கொள்ளும்போது அதனை பரிகாசமாய் ஆக்கிக் கொள்கிறான். இத்தகையோர் அனைவர்க்கும் இழிவு தரும் வேதனை இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நம்முடைய வசனங்களில் எதனையாவது அவன் அறிந்து கொண்டால், அதனை அவன் பரிகாசமாக எடுத்துக்கொள்கிறான். அத்தகையோர்_அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.
Saheeh International
And when he knows anything of Our verses, he takes them in ridicule. Those will have a humiliating punishment.
அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது; அவர்கள் சம்பாதித்துக் கொண்டதில் எப்பொருளும் அவர்களுக்குப் பயன் தராது; அல்லாஹ்வையன்றி, எவற்றை அவர்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களுக்குப் பயன் தராது); மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனையுமுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு (இவர்கள் மரணித்த) பின்னால் நரகம்தான் இருக்கிறது. அவர்கள் சேகரித்திருப்பவையோ அல்லது தங்களுக்குப் பாதுகாப்பாளர்கள் என்று அவர்கள் எடுத்துக்கொண்ட அல்லாஹ் அல்லாதவையோ, அவர்களுக்கு ஒரு பயனும் அளிக்காது. அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.
IFT
அவர்களுக்கு எதிரில் நரகம் உள்ளது. (உலகில்) அவர்கள் சம்பாதித்தது எதுவும் எந்தப் பயனும் அவர்களுக்கு அளிக்காது. அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் யாரை பாதுகாவலர்களாய் எடுத்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது. மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனை இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு முன்னால் நரகந்தான் இருக்கின்றது, அவர்கள் சம்பாதித்துக் கொண்டவை எவையும் அவர்களுக்குப் பயனளிக்காது, அல்லாஹ்வையன்றி பாதுகாப்பாளர்களாக அவர்கள் எடுத்துக் கொண்டவர்களும் (அவர்களுக்குப் பயன் அளிப்பவர்) அல்லர், மேலும், அவர்களுக்கு மகத்தான வேதனையுமுண்டு.
Saheeh International
Before them is Hell, and what they had earned will not avail them at all nor what they had taken besides Allah as allies. And they will have a great punishment.
இது (குர்ஆன்)தான் நேர்வழிகாட்டியாகும். எவர்கள் தம்முடைய இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டார்களோ, அவர்களுக்கு நோவினை மிகுந்த கடினமான வேதனையுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வேதம்தான் நேரான பாதை. ஆகவே, எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு மிக கடினமான துன்புறுத்தும் வேதனை உண்டு.
IFT
இந்தக் குர்ஆன் முற்றிலும் நேர்வழியாய்த் திகழ்கின்றது. தங்கள் இறைவனின் வசனங்களை ஏற்க மறுத்தவர்களுக்கோ பெரும் வேதனை தரும் தண்டனை இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(குர் ஆனாகிய) இது நேர் வழியாகும், இன்னும், தங்களுடைய இரட்சகனின் வசனங்களை நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்_ அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையிலிருந்து துன்புறுத்தும் வேதனையுண்டு.
Saheeh International
This [Qur’an] is guidance. And those who have disbelieved in the verses of their Lord will have a painful punishment of foul nature.
கப்பல்கள் அவன் கட்டளையைக் கொண்டு (கடலில்) செல்லும் பொருட்டும், நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக்கொள்ளும் பொருட்டும்; மேலும் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டும் உங்களுக்குக் கடலை வசப்படுத்திக் கொடுத்தவன் அல்லாஹ்வே ஆவான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ், கடலை உங்களுக்கு வசதியாக அமைத்திருக்கிறான். அவன் கட்டளையைக் கொண்டு (பல நாடுகளுக்குக்) கப்பலில் சென்று (அதன் மூலம்) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (அதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
IFT
அல்லாஹ்தான் உங்களுக்குக் கடலினை வசப்படுத்தித் தந்தான். அவனது கட்டளைப்படிக் கப்பல்கள் அதில் செல்வதற்காகவும், நீங்கள் அவனது அருளைத் தேடுவதற்காகவும்! மேலும், நீங்கள் நன்றி செலுத்துவோராகத் திகழ்வதற்காகவும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் எத்தகையவனென்றால், கடலை_அதில் அவன் கட்டளையைக் கொண்டு கப்பல்கள் செல்வதற்காகவும், மேலும் (அதன் மூலம்), அவனின் பேரருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் உங்களுக்காக அவன் வசப்படுத்திக் கொடுத்தான்.
Saheeh International
It is Allah who subjected to you the sea so that ships may sail upon it by His command and that you may seek of His bounty; and perhaps you will be grateful.
அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறே) வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தையுமே அவன் தன் அருளால் உங்களு(டைய நன்மை)க்கு (உழைக்கும்படி) கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான். கவனித்து ஆராயும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
IFT
வானங்கள் மற்றும் பூமியின் அனைத்தையுமே உங்களுக்கு அவன் வசப்படுத்திக் கொடுத்தான். அனைத்தையும் தன் சார்பாகவே செய்தான். சிந்திக்கக்கூடிய மக்களுக்குத் திண்ணமாக இதில் பெரும் சான்றுகள் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், வானங்களில் உள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன்னிடமிருந்து உங்களுக்கு அவனே வசப்படுத்திக் கொடுத்தான், நிச்சயமாக இதில் சிந்திக்கும் சமூகத்தார்க்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Saheeh International
And He has subjected to you whatever is in the heavens and whatever is on the earth - all from Him. Indeed in that are signs for a people who give thought.
ஈமான் கொண்டவர்களுக்கு (நபியே!) நீர் கூறிவிடும்: அல்லாஹ்வுடைய (தண்டனைக்கான) நாட்களை நம்பாதவர்களை அவர்கள் மன்னித்து (அவர்களைப் பற்றி அல்லாஹ்விடம் பரஞ் சாட்டிவிடட்டும்); ஜனங்களுக்கு அவர்கள் தேடிக் கொண்ட வினைக்குத் தக்கபலனை அவன் கொடுப்பான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நீர் கூறுவீராக: “அவர்கள் அல்லாஹ்வுடைய தண்டனைகளை நம்பாத மக்களை மன்னித்து (அவர்கள் விஷயத்தை அல்லாஹ்விடமே விட்டு) விடுவார்களாக. (நன்மையோ, தீமையோ செய்யும்) மக்களுக்கு அவர்கள் செய்யும் செயலுக்குத் தக்க பலனை அவன் கொடுப்பான்.
IFT
(நபியே!) இறைநம்பிக்கையாளர்களிடம் நீர் கூறிவிடும்: “யார் அல்லாஹ்விடமிருந்து கெட்ட நாள் வருவது பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிருக்கின்றார்களோ அவர்களின் நடவடிக் கைகளைக் கண்டுகொள்ளாது விட்டுவிடுங்கள் ஒரு சமுதாயத்திற்கு அவர்கள் சம்பாதித்ததற்கான கூலியை அல்லாஹ் கொடுப்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) விசுவாசங்கொண்டோருக்கு நீர் கூறுவீராக: அல்லாஹ்வுடைய (தண்டனைகளின்) நாட்களை நம்பாதவர்களை, அவர்கள் மன்னித்துவிடட்டும், ஏனென்றால், அவர்கள் சம்பாதித்துக் கொண்டவற்றிற்குப் பிரதியாக கூட்டத்தினருக்கு அவன் கூலி கொடுப்பதற்காக.
Saheeh International
Say, [O Muhammad], to those who have believed that they [should] forgive those who expect not the days of Allah [i.e., of His retribution] so that He may recompense a people for what they used to earn.
எவர் ஸாலிஹான (நல்ல) அமலை செய்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும்; அன்றியும், எவர் தீமையைச் செய்கிறாரோ, அது அவருக்கே தீமையாகும், பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர் நன்மை செய்கிறாரோ அது அவருக்கே நன்று. எவன் தீமை செய்கிறானோ அது அவனுக்கே கேடாகும். பின்னர், நீங்கள் உங்கள் இறைவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்.
IFT
ஒருவர் ஏதேனும் நற்செயல்கள் செய்தால், அவற்றை அவர் தமக்காகவே செய்து கொள்கிறார். ஒருவர் ஏதேனும் தீய செயல் செய்தால் அவற்றின் விளைவை அவரே அனுபவிப்பார். பின்னர், நீங்கள் அனைவரும் உங்கள் அதிபதியிடமே திரும்பக் கொண்டு சொல்லப்பட இருக்கின்றீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர் நற்செயல் செய்கின்றாரோ, (அது) அவருக்கே நன்று, எவர் தீமை செய்கின்றாரோ (அது) அவருக்கே கேடாகும், பின்னர் நீங்கள் உங்கள் இரட்சகனின் பக்கமே மீட்டப்படுவீர்கள்.
Saheeh International
Whoever does a good deed - it is for himself; and whoever does evil - it is against it [i.e., the self or soul]. Then to your Lord you will be returned.
நிச்சயமாக நாம், இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நுபுவ்வத்தையும் கொடுத்தோம்; அவர்களுக்கு மணமான உணவு (வசதி)களையும் கொடுத்தோம் - அன்றியும் அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வேதத்தையும், (ஞானத்தையும்,) அதிகாரத்தையும், நபிப்பட்டத்தையும் கொடுத்து மேலான உணவுகளையும் கொடுத்தோம். மேலும், உலகத்தார் அனைவரிலும் அவர்களை மேன்மையாக்கி வைத்தோம்.
IFT
இதற்கு முன்பு இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நாம் வேதம், ஞானம், தூதுத்துவம் ஆகியவற்றை வழங்கியிருந்தோம். நாம், அவர்களுக்குச் சிறந்த வாழ்வாதாரங்களையும் வழங்கியிருந்தோம். மேலும், உலக மக்கள் அனைவரைக் காட்டிலும், அவர்களுக்குச் சிறப்பை வழங்கியிருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, நாம் இஸ்ராயீலின் மக்களுக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம், மேலும் (உண்ணுவதற்கு) நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு உணவும் கொடுத்தோம், அன்றியும் அகிலத்தாரைவிட அவர்களை நாம் மேன்மையாக்கியும் வைத்தோம்.
Saheeh International
And We did certainly give the Children of Israel the Scripture and judgement and prophethood, and We provided them with good things and preferred them over the worlds.
அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், நம் கட்டளைகளைப் பற்றித் தெளிவான வசனங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்களுக்கிடையிலுள்ள பொறாமையின் காரணமாக, அவர்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னர், அவர்கள் தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) பிரிந்து விட்டனர். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் அவர்கள் தர்க்கித்துக் கொண்டவற்றைப் பற்றி மறுமையில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்.
IFT
தீன் இறைமார்க்கம் சம்பந்தமாக அவர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினோம். பின்னர், அவர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது (அறியாமையின் காரணத்தினால் அல்ல; மாறாக) அறிவு ஞானம் வந்த பின்னர்தான் அதுவும் அவர்கள் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்க விரும்பிய காரணத்தால்தான் ஏற்பட்டது! திண்ணமாக, உம் இறைவன் மறுமைநாளில், அவர்கள் கருத்து முரண்பாடு கொண்டிருக்கின்ற விஷயங்களில் தீர்ப்பு வழங்குவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (மார்க்கக்) காரியத்தில் (சான்றுகளிலிருந்து) தெளிவானவைகளை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம், பின்னர், அவர்கள் தங்களுக்கிடையே உண்டான பொறாமையின் காரணமாக, அவர்களுக்கு (வேத) அறிவு வந்ததன் பின்னரே தவிர அவர்கள் அபிப்பிராயபேதம் கொள்ளவில்லை, (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன், அவர்கள் எதில் அபிப்பிரயாபேதம் கொண்டிருந்தார்களோ அதில், மறுமை நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.
Saheeh International
And We gave them clear proofs of the matter [of religion]. And they did not differ except after knowledge had come to them - out of jealous animosity between themselves. Indeed, your Lord will judge between them on the Day of Resurrection concerning that over which they used to differ.
இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.
அப்துல் ஹமீது பாகவி
பிறகு, (நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உம்மை ஆக்கியிருக்கிறோம். ஆகவே, அதையே நீர் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பங்களை நீர் பின்பற்றாதீர்.
IFT
பிறகு (நபியே!) இப்போது தீன் சம்பந்தமான விஷயங்களில் தெளிவான, பிரதான மார்க்கத்தில் (ஷரீஅத்தில்) உம்மை நாம் நிலை நிறுத்தியிருக்கிறோம். எனவே, நீர் அதையே பின்பற்றும். அறியாத மக்களின் மன இச்சைகளைப் பின்பற்றாதீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதன் பின்னர் (மார்க்கக்) காரியத்தில் (தெளிவான) ஒரு வழியின் மீது உம்மை நாம் ஆக்கி இருக்கின்றோம், ஆகவே, அதனை(யே) நீர் பின்பற்றுவீராக! (உண்மையை) அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்.
Saheeh International
Then We put you, [O Muhammad], on an ordained way concerning the matter [of religion]; so follow it and do not follow the inclinations of those who do not know.
நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு யாதோர் உதவியும் செய்து விட முடியாது. இன்னும் நிச்சயமாக அநியாயக்காரர்களில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையவர்களுக்கு அல்லாஹ்வே பாதுகாவலன் ஆவான்
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதமாக உமக்கு ஒரு உதவியும் செய்துவிட முடியாது. நிச்சயமாக அநியாயக்காரர்கள் சிலர், (அவர்களில்) சிலருக்குத்தான் நண்பர்கள். (நம்பிக்கையாளர்களுக்கு அல்ல.) அல்லாஹ்தான் இறையச்சமுடையவர்களின் நண்பன் ஆவான்.
IFT
அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு அவர்களால் எந்தப் பயனும் தர முடியாது. மேலும், கொடுமை புரிபவர்களே தங்களுக்குள் ஒருவருக்கொருவர் தோழர்களாக இருக்கின்றார்கள். மேலும், இறையச்சமுடையோர்க்கு அல்லாஹ் தோழனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, அவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதமாக உம்மைவிட்டு எதனையும் தடுத்து விடவேமாட்டார்கள், நிச்சயமாக, அநியாயக்காரர்கள் _ அவர்களில் சிலர், சிலருக்கு உதவியாளர்களாகவும் இருக்கிறார்கள், இன்னும் அல்லாஹ் பயபக்தியுடைவர்களின் பாதுகாவலன்.
Saheeh International
Indeed, they will never avail you against Allah at all. And indeed, the wrongdoers are allies of one another; but Allah is the protector of the righteous.
எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா? அவர்கள் உயிருடனிருப்பதும், மரணமடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் பாவத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்களை, நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் உயிருடன் இருப்பதும் அவர்கள் இறந்துவிடுவதும் சமமே. அவர்கள் (இதற்கு மாறாகச்) செய்து கொண்ட முடிவு மகா கெட்டது.
IFT
தீமைகளைச் செய்தவர்களையும், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களையும் இரு சாராரின் வாழ்வும் மரணமும் சமமாகும் விதத்தில் ஒன்றுபோல் ஆக்கி விடுவோம் என்று எண்ணிக்கொண்டார்களா என்ன? இவர்கள் செய்யும் முடிவு எவ்வளவு கெட்டது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தீமைகளைச் சம்பாதித்து கொண்டார்களே அத்தகையோர்_ விசுவாசங் கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களே அத்தகையோரைப் போன்று அவர்களையும் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் ஜீவித்து இருப்பதும், அவர்கள் மரணித்துவிடுவதும், சமமே, அவர்கள் (இதற்கு மாறாகத் தீர்ப்புச் செய்து கொண்டது மிகக் கெட்டதாகிவிட்டது.
Saheeh International
Or do those who commit evils think We will make them like those who have believed and done righteous deeds - [make them] equal in their life and their death? Evil is that which they judge [i.e., assume].
வானங்களையும் பூமியையும் அல்லாஹ் உண்மையுடன் (தக்க காரணத்தைக் கொண்டே) படைத்துள்ளான்; ஒவ்வோர் ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க கூலி கொடுக்கப்படுவதற்காக; அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும் பூமியையும் அல்லாஹ் தக்க காரணத்தின் மீதே படைத்திருக்கிறான். ஆகவே, (அவர்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவற்றின் செயலுக்குத்தக்க கூலியே கொடுக்கப்படும். அவை (அணுவளவும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.
IFT
அல்லாஹ் வானங்களையும் பூமியையும் சத்தியத்துடன் படைத்திருக்கிறான் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் சம்பாதித்த கூலி வழங்கப்பட வேண்டும்; மக்கள் மீது சிறிதும் அநீதி இழைக்கப்படக் கூடாது என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களையும் பூமியையும் அல்லாஹ் நீதியைக் கொண்டு (தக்க காரணத்திற்காகவே) படைத்திருக்கிறான், இன்னும், ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்ததைக்கொண்டு கூலி கொடுக்கப்படுவதற்காகவும் (படைத்துள்ளான்), அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.
Saheeh International
And Allah created the heavens and earth in truth and so that every soul may be recompensed for what it has earned, and they will not be wronged.
(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) தன் இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக் கொண்ட ஒருவனை நீர் கவனித்தீரா? அவனுக்கு(ப் போதுமான) கல்வி இருந்தும் (அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டுவிட்டான். அவனுடைய செவியின் மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை அமைத்து விட்டான். அல்லாஹ் இவ்வாறு செய்த பின்னர், அவனை யாரால்தான் நேரான வழியில் செலுத்த முடியும்? நீங்கள் நல்லுணர்வு பெற வேண்டாமா?
IFT
தனது மன இச்சையைத் தன்னுடைய கடவுளாக்கிக் கொண்ட மனிதனின் நிலையை எப்போதேனும் நீர் சிந்தித்ததுண்டா? அறிவுடனேயே அல்லாஹ் அவனை வழிகேட்டில் தள்ளிவிட்டான். மேலும், அவனுடைய காதுகளிலும், இதயத்திலும் முத்திரையிட்டுவிட்டான். மேலும் அவனுடைய கண்கள்மீது திரையிட்டு விட்டான். இனி அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு நேர்வழிகாட்டக்கூடியவர் யார்? என்ன, நீங்கள் எந்தப் படிப்பினையும் பெறுவதில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) தன்னுடைய (மனோ) இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக்கொண்டானே அவனை நீர் பார்த்தீரா? (அவன் வழி கெடுவதற்கு உரியவன் என்ற தன்) அறிவினால் அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டு விட்டான், அவனுடைய செவியின் மீதும், அவனுடைய இதயத்தின் மீதும் முத்திரையிட்டுவிட்டான், அன்றியும், அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை ஆக்கிவிட்டான், அல்லாஹ்வுக்குப்பிறகு அவனுக்கு நேர் வழிகாட்டுபவர் யார்? நீங்கள் நினைவு கூர்ந்து உணர மாட்டீர்களா?
Saheeh International
Have you seen he who has taken as his god his [own] desire, and Allah has sent him astray due to knowledge and has set a seal upon his hearing and his heart and put over his vision a veil? So who will guide him after Allah? Then will you not be reminded?
மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
‘‘இவ்வுலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைத் தவிர வேறொரு வாழ்க்கை இல்லை'' என்றும், ‘‘(இதில்தான்) நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; பின்னர் இறந்து விடுகிறோம். காலத்தைத் தவிர (வேறு எதுவும்) நம்மை அழிப்பதில்லை'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதைப்பற்றி இவர்களுக்கு ஒரு ஞானமும் இல்லை. இவர்கள் வீண் சந்தேகத்தில் ஆழ்ந்திருப்போரைத் தவிர வேறில்லை.
IFT
மேலும், இந்த மக்கள் கூறுகிறார்கள்: “வாழ்க்கை என்பது நம்முடைய இந்த உலக வாழ்க்கைதான். இங்குதான் நாம் மரணிக்கவும் உயிர்வாழவும் செய்கின்றோம். கால ஓட்டமல்லாமல் வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” உண்மையில் இது சம்பந்தமாக இவர்களிடம் எந்த ஞானமும் இல்லை. இவர்கள் வெறும் ஊகத்தின் அடிப்படையில்தான் இப்படிக் கூறுகிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இது நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) இல்லை,” (இதில்தான்) நாம் இறந்துவிடுகின்றோம், இன்னும், ஜீவிக்கின்றோம், காலத்தைத் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்றும் அவர்கள் கூறுகின்றனர், அது பற்றிய எவ்வித அறிவும் அவர்களுக்கில்லை, அவர்கள் (வீண் கற்பனையாக) எண்ணுகிறார்களே தவிர (வேறு) இல்லை.
Saheeh International
And they say, "There is not but our worldly life; we die and live, and nothing destroys us except time." And they have of that no knowledge; they are only assuming.
அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்” என்பது தவிர வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு தெளிவான நமது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘மெய்யாகவே (மரணித்தவர்கள் உயிர்பெற்று எழும்புவார்கள் என்ற விஷயத்தில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (இறந்து போன) எங்கள் மூதாதைகளை (உயிர்ப்பித்துக்) கொண்டு வாருங்கள்'' என்று கூறுவதைத் தவிர, (வேறு) பதில் கூற அவர்களுக்கு முடிவதில்லை.
IFT
மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் இவர்களிடம் ஓதிக் காட்டப்படும்போது “நீங்கள் உண்மையாளர்கள் என்றால் எங்கள் முன்னோரை எழுப்பிக் கொண்டுவாருங்கள்” என்று கூறுவதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இவர்களிடம் இருப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்களின் வாதம் “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (உயிர்ப்ப்பித்து)க் கொண்டுவாருங்கள்” என்று அவர்கள் கூறுவதைத் தவிர (வேறெதுவும்) இல்லை.
Saheeh International
And when Our verses are recited to them as clear evidences, their argument is only that they say, "Bring [back] our forefathers, if you should be truthful."
குலில் லாஹு யுஹ்யீகும் தும்ம யுமீதுகும் தும்ம யஜ்ம'உகும் இலா யவ்மில் கியாமதி லா ரய்Bப Fபீஹி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் அவர்களை நோக்கி கூறுவீராக: ‘‘அல்லாஹ்தான் உங்களை உயிர்ப்பித்தான்; (நானல்ல.) அவனே உங்களை மரணிக்கவைப்பான். பின்னர், மறுமை நாளில் (உயிர் கொடுத்து) உங்களை ஒன்று சேர்ப்பான். இதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதை அறிந்து கொள்வதில்லை.''
IFT
(நபியே, இவர்களிடம்) கூறும்: அல்லாஹ்தான் உங்களை உயிர் வாழச் செய்கின்றான். பின்னர் அவனே உங்களை மரணமடையச் செய்கின்றான். பின்னர், அந்த மறுமைநாளின்போது அவனே உங்களை ஒன்றுதிரட்டுவான். அந்நாளின் வருகையில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும் பெரும்பாலோர் அறிவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் (அவர்களிடம்) கூறுவீராக: ”அல்லாஹ்(தான்) உங்களை உயிர்ப்பிக்கிறான், பின்னர், உங்களை அவன் மரணிக்கச்செய்கிறான், பின்னர், மறுமை நாளுக்காக_(உயிர் கொடுத்து) உங்களை அவன் ஒன்று சேர்ப்பான்,_இதில் சந்தேகமில்லை, எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்.
Saheeh International
Say, "Allah causes you to live, then causes you to die; then He will assemble you for the Day of Resurrection, about which there is no doubt, but most of the people do not know."
அன்றியும், வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; மேலும், இறுதித் தீர்ப்புக்கான வேளை வந்து வாய்க்கும் நாளில், பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. விசாரணை நாள் வரும் அன்று (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்கள் அந்நாளில் நஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பார்கள்.
IFT
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், மறுமைநாள் வந்துவிடும்போது அசத்தியவாதிகள் நஷ்டத்திலேயே கிடப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது, மறுமை நாள் நிலைபெறும் நாளில் பொய்யாக்குவோர் அந்நாளில் நஷ்டமடைவார்கள்.
Saheeh International
And to Allah belongs the dominion of the heavens and the earth. And the Day the Hour appears - that Day the falsifiers will lose.
(அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள் (உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அந்நாளில்) ஒவ்வொரு வகுப்பாரும், முழந்தாளிட்டிருக்கக் காண்பீர். ஒவ்வொரு வகுப்பாரும் (விசாரணைக்காக) அவர்களுடைய (பதிவுப்) புத்தகத்தை நோக்கி அழைக்கப்படுவார்கள். (அவர்களை நோக்கி) ‘‘இன்றைய தினம் நீங்கள் உங்கள் செயலுக்குரிய கூலியை கொடுக்கப்படுவீர்கள்'' (என்றும்),
IFT
அந்நேரம் ஒவ்வொரு சமூகமும் முழந்தாளிட்டு விழுந்திருப்பதை நீர் காண்பீர். “வாருங்கள், உங்கள் வினைச்சுவடியைப் பாருங்கள்” என்று ஒவ்வொரு சமுதாயத்தினரும் அழைக்கப்படுவர் (அவர்களிடம் கூறப்படும்:) “நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குப் பிரதிபலன் இன்று உங்களுக்குக் கொடுக்கப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! அந்நாளில்) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்கும் நிலையில் நீர் காண்பீர். ஒவ்வொரு சமுதாயமும் (விசாரணைக்காக) அதனதன் பதிவுப் புத்தகத்தின்பால் அழைக்கப்படும்_”இன்றையத்தினம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்குக் கூலி கொடுக்கப்படுவீர்கள்” (என்றும்).
Saheeh International
And you will see every nation kneeling [from fear]. Every nation will be called to its record [and told], "Today you will be recompensed for what you used to do.
“இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம்; நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” (என்று கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘இது (உங்கள் செயலைப் பற்றிய) நமது (பதிவுப்) புத்தகம். இது உங்களைப் பற்றிய உண்மையையே கூறும். நிச்சயமாக நாம், நீங்கள் செய்தவற்றையெல்லாம் எழுதி வைத்திருக்கிறோம்'' (என்றும் கூறப்படும்).
IFT
இது, நாம் தயாரித்த வினைச்சுவடி. உங்கள் மீது மிகச் சரியாக சாட்சியம் அளித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் செய்துவந்த செயல்களை நாம் எழுதச் செய்துகொண்டிருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இது உங்களைப் பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய (பதிவுப்) புத்தகம், நிச்சயமாக நாம், நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை (அதில்) பதிவு செய்பவர்களாக இருந்தோம்” (என்றும் கூறப்படும்).
Saheeh International
This, Our record, speaks about you in truth. Indeed, We were having transcribed whatever you used to do."
ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து வந்தார்களோ, அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான வெற்றியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களை, அவர்களுடைய இறைவன் தன் அருளில் புகுத்துவான். இதுதான் மிகத் தெளிவான வெற்றியாகும்.
IFT
இனி எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை, அவர்களின் அதிபதி தன் கருணையில் நுழைவிப்பான். இதுவே தெளிவான வெற்றியாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களே அத்தகையோர்_ அவர்களை, அவர்களுடைய இரட்சகன் தன்னுடைய அருளில் நுழைவிக்கிறான், அதுதான் தெளிவான வெற்றியாகும்.
Saheeh International
So as for those who believed and did righteous deeds, their Lord will admit them into His mercy. That is what is the clear attainment.
وَاَمَّاஆகالَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரித்தவர்கள்اَفَلَمْ تَكُنْஇருக்கவில்லையா?اٰيٰتِىْஎனது வசனங்கள்تُتْلٰىஓதப்படுகின்றனعَلَيْكُمْஉங்கள் மீதுفَاسْتَكْبَرْتُمْநீங்கள் பெருமை அடித்தீர்கள்وَكُنْتُمْஇன்னும் நீங்கள் இருந்தீர்கள்قَوْمًاமக்களாகمُّجْرِمِيْنَகுற்றம் புரிகின்றவர்கள்
ஆனால், நிராகரித்தவர்களிடம்: “உங்களுக்கு என் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டுக் கொண்டு இருக்கவில்லையா? அப்பொழுது நீங்கள் பெருமையடித்துக் கொண்டு குற்றவாளிகளாக இருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்தார்களோ (அவர்களை நோக்கி) உங்களுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அச்சமயம் நீங்கள் பெருமைகொண்டு (அதைப் புறக்கணித்து) விட்டீர்கள். இன்னும் நீங்கள் குற்றவாளிகளாக இருந்தீர்கள்'' (என்றும் கூறப்படும்).
IFT
மேலும், எவர்கள் நிராகரித்தார்களோ (அவர்களிடம் சொல்லப்படும்:) “என்னுடைய வசனங்கள் உங்களிடம் ஓதிக்காட்டப்படவில்லையா? ஆனால், நீங்கள் பெருமையடித்தீர்கள். மேலும், குற்றம்செய்யும் மக்களாய் இருந்தீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நிராகரித்தார்களே அத்தகையோர்_ (அவர்களிடம்,) “உங்களுக்கு என்னுடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கவில்லையா? பின்னர் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள், அன்றியும், நீங்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவும் இருந்தீர்கள்” (என்றும் கூறப்படும்).
Saheeh International
But as for those who disbelieved, [it will be said], "Were not Our verses recited to you, but you were arrogant and became a criminal people?
மேலும் “நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; மறுமை நாள் அது பற்றியும் சந்தேகமில்லை” என்று கூறப்பட்ட போது; “(மறுமை) நாள் என்ன என்று நாங்கள் அறியோம்; அது ஒரு வெறும் கற்பனை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே (அதை) நாங்கள் உறுதியென நம்புபவர்களல்லர்” என்று நீங்கள் கூறினீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், ‘‘ நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது, மறுமை வருவதில் அறவே சந்தேகமில்லை'' என்று (உங்களுக்குக்) கூறப்பட்டால் அதற்கு, ‘‘மறுமை இன்னதென்றே நாங்கள் அறியோம். அது (வீணான) வெறும் எண்ணத்தைத் தவிர வேறில்லை என்றே எண்ணுகிறோம். அதை (மெய்யென்று) நாங்கள் நம்பவுமில்லை'' என்று நீங்கள் கூறினீர்கள் (அல்லவா?) என்று (அவர்களிடம்) கேட்கப்படும்.
IFT
மேலும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும் மறுமைநாள் வருவதில் எவ்வித ஐயமும் இல்லை என்றும் சொல்லப்பட்டால் “மறுமை என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. நாங்கள் வெறும் ஊகம்தான் கொண்டிருக்கின்றோம்; உறுதிகொள்ளக் கூடியவர்களாய் இல்லை” என்று நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது, மறுமைநாள்_அ(து வருமென்ப)தில் யாதொரு சந்தேகமுமில்லை” என்று கூறப்பட்டால், “மறுமைநாள் இன்னதென்றே நாங்கள் அறியோம், அது வெறும் எண்ணத்தைத் தவிர (வேறு) இல்லை என்றே எண்ணுகிறோம், (அதனை உண்மையென்று) நாங்கள் உறுதியாக நம்புகிறவர்களாகவும் இல்லை என்று நீங்கள் கூறினீர்கள் (அல்லவா?” என்று அவர்களிடம் கேட்கப்படும்.)
Saheeh International
And when it was said, 'Indeed, the promise of Allah is truth and the Hour [is coming] - no doubt about it,' you said, 'We know not what is the Hour. We assume only assumption, and we are not convinced.'"
அவர்கள் செய்த தீமையெல்லாம் (அந்நாளில்) அவர்களுக்கு வெளியாகும்; எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்கள் அனைத்தும், அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தவை அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்.
IFT
அந்த நேரம் அவர்களுடைய செயல்களின் தீய விளைவு அவர்களுக்குத் தென்பட்டுவிடும். மேலும், அவர்கள் எதைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் செய்துகொண்டிருந்த தீயவைகள் (யாவும்) அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும், எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அது அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்.
Saheeh International
And the evil consequences of what they did will appear to them, and they will be enveloped by what they used to ridicule.
இன்னும், “நீங்கள் உங்களுடைய இந்நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்றே, இன்றைய தினம் நாம் உங்களை மறக்கிறோம்; அன்றியும் நீங்கள் தங்குமிடம் நரகம் தான்; மேலும், உங்களுக்கு உதவி செய்பவர் எவருமில்லை” என்று (அவர்களுக்குக்) கூறப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இந்நாளை சந்திப்பதை மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் உங்களை மறந்துவிட்டோம். உங்கள் தங்குமிடம் நரகம்தான். (இன்றைய தினம்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை'' என்றும் கூறப்படும்.
IFT
மேலும், அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் இந்நாளின் சந்திப்பை எப்படி மறந்திருந்தீர்களோ அப்படியே இன்று நாம் உங்களை மறந்துவிடுகின்றோம். உங்கள் இருப்பிடம் இனி நரகம்தான். மேலும், உங்களுக்கு உதவி செய்வோர் எவரும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் (அவர்களிடம்) “நீங்கள் உங்களுடைய இந்நாளின் சந்திப்பை மறந்தவாறே நாமும் இன்றையத் தினம் உங்களை மறந்துவிட்டோம், மேலும், உங்கள் தங்குமிடம் நரகமாகும், உங்களுக்கு எந்த உதவியாளர்களுமில்லை” என்றும் கூறப்படும்.
Saheeh International
And it will be said, "Today We will forget you as you forgot the meeting of this Day of yours, and your refuge is the Fire, and for you there are no helpers.
நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏளனமாக எடுத்துக் கொண்டதனாலும் இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி ஏமாற்றி விட்டதினாலுமே இந்த நிலை. இன்றைய தினத்தில் அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்; மன்னிப்பளிக்கப்படவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இதன் காரணமாவது: நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள். இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட்டது (என்றும் கூறப்படும்). இன்றைய தினம் நரகத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள். அவர்களுடைய மன்னிப்புக் கோரலும் அங்கீகரிக்கப்படாது.
IFT
உங்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டதற்குக் காரணம், நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தீர்கள். மேலும், உலக வாழ்வு உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருந்தது. எனவே இன்று இவர்கள் நரகத்திலிருந்து விடுவிக்கப்படவும் மாட்டார்கள். மன்னிப்புக்கோரி (உங்கள் அதிபதியின்) உவப்பைப் பெறுங்கள் என்று இவர்களிடம் கூறப்படவும் மாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இ(ந்தத் தண்டனையான)து நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக்கொண்டீர்கள் என்பதினாலாகும், இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கியும்விட்டது” (என்று கூறப்படும்), இன்றையத் தினம் அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள், மேலும், (அந்நாளில் நற்செயல்கள் செய்து இரட்சகனைத்) திருப்திப்படுத்த அவர்கள் தேடப்படமாட்டார்கள்.
Saheeh International
That is because you took the verses of Allah in ridicule, and worldly life deluded you." So that Day they will not be removed from it, nor will they be asked to appease [Allah].