45. ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்)

மக்கீ, வசனங்கள்: 37

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
حٰمٓ ۟ۚ
حٰمٓۚஹா-மீம்
ஹா-மீம்
முஹம்மது ஜான்
ஹா, மீம்.
அப்துல் ஹமீது பாகவி
ஹா மீம்.
IFT
ஹாமீம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஹாமீம்.
Saheeh International
ha, Meem.
تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟
تَنْزِیْلُஇறக்கியருளப்பட்டதுالْكِتٰبِஇவ்வேதம்مِنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்الْعَزِیْزِமிகைத்தவன்الْحَكِیْمِஞானமிக்கவன்
தன்Zஜீலுல் கிதாBபி மினல் லாஹில் 'அZஜீZஜில் ஹகீம்
முஹம்மது ஜான்
இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
அப்துல் ஹமீது பாகவி
(அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் இறக்கப்பட்டது.
IFT
இந்த வேதம், வல்லமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(யாவரையும்) மிகைத்தோன் தீர்க்கமான அறிவுடையோன் ஆகிய அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறக்கப்பட்டுள்ளது.
Saheeh International
The revelation of the Book is from Allah, the Exalted in Might, the Wise.
اِنَّ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّلْمُؤْمِنِیْنَ ۟ؕ
اِنَّநிச்சயமாகفِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِமற்றும் பூமிلَاٰیٰتٍஅத்தாட்சிகள்لِّلْمُؤْمِنِیْنَؕநம்பிக்கையாளர்களுக்கு
இன்னா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி ல ஆயாதில் லில்மு'மினீன்
முஹம்மது ஜான்
முஃமின்களுக்கு நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கை கொண்டவர்களுக்கு, வானங்களிலும் பூமியிலும் நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
உண்மை யாதெனில், இறைநம்பிக்கையுள்ளவர்களுக்கு வானங்களிலும் பூமியிலும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோர்க்கு நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகளிருக்கின்றன.
Saheeh International
Indeed, within the heavens and earth are signs for the believers.
وَفِیْ خَلْقِكُمْ وَمَا یَبُثُّ مِنْ دَآبَّةٍ اٰیٰتٌ لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟ۙ
وَ فِیْஇன்னும் ...ல்خَلْقِكُمْஉங்களைப் படைத்திருப்பதில்وَ مَاமேலும் எவற்றைیَبُثُّஅவன் பரவச் செய்திருக்கிறானோمِنْஆகியدَآبَّةٍஉயிரினங்களில்اٰیٰتٌஅத்தாட்சிகள் உள்ளனلِّقَوْمٍஒரு சமூகத்தாருக்குیُّوْقِنُوْنَۙஉறுதியான நம்பிக்கை கொள்ளும்
வ Fபீ கல்கிகும் வமா யBபுத்து மின் தாBப்Bபதின் ஆயாதுல் லிகவ்மி(ன்)ய்-யூகினூன்
முஹம்மது ஜான்
இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
உங்களைப் படைத்திருப்பதிலும், (பூமியில்) பல ஜீவராசிகளை(ப் பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருப்பதிலும், (நம்பிக்கையில்) உறுதியான (நல்ல) மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
மேலும், உங்களைப் படைப்பதிலும், (பூமியில்) அல்லாஹ் பரப்பியிருக்கின்ற உயிரினங்களிலும், உறுதிகொள்ளும் மக்களுக்கு பெரும் சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், உங்களைப் படைத்திருப்பதிலும், ஜீவராசிகளை அவன் பரவச்செய்திருப்பதிலும், (விசுவாசத்தில்) உறுதிகொள்கின்ற சமூகத்தார்க்கு அத்தாட்சிகளிருக்கின்றன.
Saheeh International
And in the creation of yourselves and what He disperses of moving creatures are signs for people who are certain [in faith].
وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ رِّزْقٍ فَاَحْیَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَتَصْرِیْفِ الرِّیٰحِ اٰیٰتٌ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
وَ اخْتِلَافِஇன்னும் மாறி மாறி வருவதிலும்الَّیْلِஇரவின்وَ النَّهَارِமற்றும் பகலின்وَ مَاۤஇன்னும் எதனைاَنْزَلَஇறக்கினானோاللّٰهُஅல்லாஹ்مِنَஇருந்துالسَّمَآءِவானத்தில்مِنْஆகرِّزْقٍவாழ்வாதாரத்தைفَاَحْیَاபிறகு உயிர்ப்பித்தானோبِهِஅதைக் கொண்டுالْاَرْضَபூமியைبَعْدَபிறகுمَوْتِهَاஅதன் இறப்பிற்குப்وَ تَصْرِیْفِஇன்னும் திசை திருப்புவதிலும்الرِّیٰحِகாற்றுகளைاٰیٰتٌஅத்தாட்சிகள்لِّقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّعْقِلُوْنَஅவர்கள் சிந்தித்து விளங்குகிறார்கள்
வக்திலாFபில் லய்லி வன்னஹாரி வ மா அன்Zஜலல் லாஹு மினஸ் ஸமா'இ மிர் ரிZஜ்கின் Fப அஹ்யா Bபிஹில் அர்ள Bபஃத மவ்திஹா வ தஸ் ரீFபிர் ரியாஹி ஆயாதுல் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
முஹம்மது ஜான்
மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
இரவு, பகல் மாறிமாறி வரும்படி அல்லாஹ் செய்திருப்பதிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி வைத்து, அதைக்கொண்டு (வறண்டு) இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும், (பல திசைகளுக்கு) காற்றுகளை திருப்பி விடுவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
இரவும் பகலும் வேறுபட்டு இருப்பதிலும், அல்லாஹ், வானத்திலிருந்து மழையை இறக்கி பிறகு அதனைக் கொண்டு இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும் மேலும், காற்றுகளின் சுழற்சியிலும் அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்குப் பல்வேறு அத்தாட்சிகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், இன்னும் வானத்திலிருந்து மழையை அல்லாஹ் இறக்கிவைத்து, அதனைக் கொண்டு பூமியை அது (வறட்சியினால்) இறந்துபோனபின் உயிர்ப்பிப்பதிலும் (நாலாபாகங்களிலும் பருவத்திற்குத்தக்கவாறு) காற்றுகளைத் திருப்பிவிடுவதிலும் விளங்கிக் கொள்ளும் சமூகத்தார்க்கு அத்தாட்சிகளிருக்கின்றன.
Saheeh International
And [in] the alternation of night and day and [in] what Allah sends down from the sky of provision [i.e., rain] and gives life thereby to the earth after its lifelessness and [in His] directing of the winds are signs for a people who reason.
تِلْكَ اٰیٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَیْكَ بِالْحَقِّ ۚ فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَ اللّٰهِ وَاٰیٰتِهٖ یُؤْمِنُوْنَ ۟
تِلْكَஇவைاٰیٰتُவசனங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்نَتْلُوْهَاஅவற்றை நாம் ஓதிக்காட்டுகிறோம்عَلَیْكَஉமக்குبِالْحَقِّ ۚசத்தியத்துடன்فَبِاَیِّஎனவே எந்தحَدِیْثٍۭசெய்தியைبَعْدَபிறகுاللّٰهِஅல்லாஹ்வுக்கும்وَ اٰیٰتِهٖமேலும் அவனது வசனங்களுக்கும்یُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்?
தில்க ஆயதுல் லாஹி னத்லூஹா 'அலய்க Bபில் ஹக்க், FபBபிஅய்யி ஹதீதிம் Bபஃதல் லாஹி வ ஆயாதிஹீ யு'மினூன்
முஹம்மது ஜான்
இவை அல்லாஹ்வுடைய வசனங்கள், இவற்றை (நபியே!) உம்மீது உண்மையுடன் ஓதிக் காண்பிக்கிறோம்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எதனைத் தான் நம்பப் போகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். மெய்யாகவே உம் மீது நாம் இவற்றை ஓதிக் காண்பிக்கிறோம். அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எவ்விஷயத்தைத்தான் நம்புவார்கள்?
IFT
இவை அல்லாஹ்வின் அத்தாட்சிகள். இவற்றை உம்மிடம் நாம் மிகச் சரியாக எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். இனி, அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பிறகு, இவர்கள் எந்த விஷயத்தின் மீது நம்பிக்கை கொள்ளப் போகிறார்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவை(களைத் தன்னகத்தே கொண்ட குர் ஆன்) அல்லாஹ்வுடைய வசனங்களாகும், உண்மையைக் கொண்டு அவற்றை உம்மீது நாம் ஓதிக்காண்பிக்கிறோம், எனவே அல்லாஹ்வுக்கும், அவனுடைய வசனங்களுக்கும் பின்னர், இவர்கள் எச்செய்தியைத்தான் நம்புவார்கள்?
Saheeh International
These are the verses of Allah which We recite to you in truth. Then in what statement after Allah and His verses will they believe?
وَیْلٌ لِّكُلِّ اَفَّاكٍ اَثِیْمٍ ۟ۙ
وَیْلٌகேடுلِّكُلِّஒவ்வொருاَفَّاكٍபெரும் பொய்யனுக்கும்اَثِیْمٍۙபெரும் பாவிக்கும்
வய்லுல் லிகுல்லி அFப்Fபாகின் அதீம்
முஹம்மது ஜான்
(சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு நிராகரித்துவிட்டுப் பொய்யான தெய்வங்களைக்) கற்பனையாகக் கூறும் பாவிகளுக்கெல்லாம் கேடுதான்!
IFT
பொய்யனாகவும் கெட்டவனாகவும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அழிவுதான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நாவால்) பெரும் பொய்கூறி, (செயலால்) பாவியான ஒவ்வொருவருக்கும் கேடுதான்.
Saheeh International
Woe to every sinful liar
یَّسْمَعُ اٰیٰتِ اللّٰهِ تُتْلٰی عَلَیْهِ ثُمَّ یُصِرُّ مُسْتَكْبِرًا كَاَنْ لَّمْ یَسْمَعْهَا ۚ فَبَشِّرْهُ بِعَذَابٍ اَلِیْمٍ ۟
یَّسْمَعُஅவன் செவியேற்கிறான்اٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்تُتْلٰیஓதிக்காட்டப்படுவதைعَلَیْهِஅவனுக்குثُمَّபின்னர்یُصِرُّபிடிவாதம் பிடிக்கிறான்مُسْتَكْبِرًاபெருமையடித்தவனாகكَاَنْபோலلَّمْஇல்லைیَسْمَعْهَا ۚஅவற்றை அவன் செவியேற்றான்فَبَشِّرْهُஎனவே அவனுக்கு நற்செய்தி கூறுவீராகبِعَذَابٍவேதனையைக் கொண்டுاَلِیْمٍநோவினை தரும்
யஸ்ம'உ ஆயாதில் லாஹி துத்லா 'அலய்ஹி தும்ம யுஸிர்ரு முஸ்தக்Bபிரன் க-அல் லம் யஸ்மஃஹா FபBபஷ்ஷிர்ஹு Bபி'அதாBபின் அலீம்
முஹம்மது ஜான்
தன் மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கிறான்; பின்பு பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக் கேளாதது போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதம் செய்கிறான்; அ(த்தகைய)வனுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயம் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டதை செவிமடுத்து விட்டு பின்னர், அதை செவிமடுக்காதவர்களைப்போல் கர்வம் கொண்டு (நிராகரிப்பின் மீதே) பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நற்செய்தி கூறுவீராக.
IFT
அவன் முன்னிலையில் ஓதிக் காட்டப்படும் இறைவசனங்களை அவன் செவியேற்கிறான்; பிறகு முழு ஆணவத்துடன் (தன் நிராகரிப்பில்) அவன் பிடிவாதமாய் இருக்கின்றான், அவ்வசனங்களை அவன் செவியேற்காதது போன்று! இத்தகைய மனிதனுக்குத் துன்புறுத்தும் வேதனையைப் பற்றிய ‘நற்செய்தியை’ அறிவித்து விடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன்மீது ஓதிக்காண்பிக்கப்படும் அல்லாஹ்வின் வசனங்களை அவன் (செவியேற்றுக்) கேட்கிறான், பின்னர் கர்வங்கொண்டு அவற்றைக் (காதால்) கேட்காதவனைப்போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதமாக இருக்கின்றான், அ(த்தகைய)வனுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
Saheeh International
Who hears the verses of Allah recited to him, then persists arrogantly as if he had not heard them. So give him tidings of a painful punishment.
وَاِذَا عَلِمَ مِنْ اٰیٰتِنَا شَیْـَٔا تَّخَذَهَا هُزُوًا ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟ؕ
وَ اِذَاமேலும் எப்போதுعَلِمَஅவர் அறிகிறாரோمِنْஇருந்துاٰیٰتِنَاஎமது வசனங்களில்شَیْـَٔاஎதனையும்ِ۟اتَّخَذَهَاஅவற்றை அவர் ஆக்கிக் கொள்கிறார்هُزُوًا ؕபரிகாசமாகاُولٰٓىِٕكَஅத்தகையோர்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைمُّهِیْنٌؕஇழிவுபடுத்தும்
வ இதா 'அலிம மின் ஆயாதினா ஷய்' 'அனித் தகதஹா ஹுZஜுவா; உலா'இக லஹும் 'அதாBபும் முஹீன்
முஹம்மது ஜான்
நம் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவன் அறிந்து கொண்டால், அதைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறான்; அ(த்தகைய)வர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
நம் வசனங்களில் எதை அவர்கள் அறிந்த போதிலும், அதை அவர்கள் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.
IFT
நம்முடைய வசனங்களிலிருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை அவன் தெரிந்து கொள்ளும்போது அதனை பரிகாசமாய் ஆக்கிக் கொள்கிறான். இத்தகையோர் அனைவர்க்கும் இழிவு தரும் வேதனை இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நம்முடைய வசனங்களில் எதனையாவது அவன் அறிந்து கொண்டால், அதனை அவன் பரிகாசமாக எடுத்துக்கொள்கிறான். அத்தகையோர்_அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.
Saheeh International
And when he knows anything of Our verses, he takes them in ridicule. Those will have a humiliating punishment.
مِنْ وَّرَآىِٕهِمْ جَهَنَّمُ ۚ وَلَا یُغْنِیْ عَنْهُمْ مَّا كَسَبُوْا شَیْـًٔا وَّلَا مَا اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِیَآءَ ۚ وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟ؕ
مِنْஇருந்துوَّرَآىِٕهِمْஅவர்களுக்கு முன்னால்جَهَنَّمُ ۚநரகம்وَ لَاமேலும் இல்லைیُغْنِیْபயன் தரும்عَنْهُمْஅவர்களுக்குمَّاஎதைكَسَبُوْاஅவர்கள் சம்பாதித்தார்களோشَیْـًٔاஎதனையும்وَّ لَاமேலும் இல்லைمَاஎதைاتَّخَذُوْاஅவர்கள் ஆக்கிக்கொண்டார்களோمِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைاَوْلِیَآءَ ۚபாதுகாவலர்களாகوَ لَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைعَظِیْمٌؕமகத்தான
மி(ன்)வ் வரா'இஹிம் ஜஹன்னமு வலா யுக்னீ 'அன்ஹும் மா கஸBபூ ஷய்'அ(ன்)வ் வலா மத் தகதூ மின் தூனில் லாஹி அவ்லியா; வ லஹும் 'அதாBபுன் 'அளீம்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது; அவர்கள் சம்பாதித்துக் கொண்டதில் எப்பொருளும் அவர்களுக்குப் பயன் தராது; அல்லாஹ்வையன்றி, எவற்றை அவர்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களுக்குப் பயன் தராது); மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனையுமுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு (இவர்கள் மரணித்த) பின்னால் நரகம்தான் இருக்கிறது. அவர்கள் சேகரித்திருப்பவையோ அல்லது தங்களுக்குப் பாதுகாப்பாளர்கள் என்று அவர்கள் எடுத்துக்கொண்ட அல்லாஹ் அல்லாதவையோ, அவர்களுக்கு ஒரு பயனும் அளிக்காது. அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.
IFT
அவர்களுக்கு எதிரில் நரகம் உள்ளது. (உலகில்) அவர்கள் சம்பாதித்தது எதுவும் எந்தப் பயனும் அவர்களுக்கு அளிக்காது. அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் யாரை பாதுகாவலர்களாய் எடுத்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது. மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனை இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு முன்னால் நரகந்தான் இருக்கின்றது, அவர்கள் சம்பாதித்துக் கொண்டவை எவையும் அவர்களுக்குப் பயனளிக்காது, அல்லாஹ்வையன்றி பாதுகாப்பாளர்களாக அவர்கள் எடுத்துக் கொண்டவர்களும் (அவர்களுக்குப் பயன் அளிப்பவர்) அல்லர், மேலும், அவர்களுக்கு மகத்தான வேதனையுமுண்டு.
Saheeh International
Before them is Hell, and what they had earned will not avail them at all nor what they had taken besides Allah as allies. And they will have a great punishment.
هٰذَا هُدًی ۚ وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِیْمٌ ۟۠
هٰذَاஇதுهُدًی ۚநேர்வழிوَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبِاٰیٰتِவசனங்களைرَبِّهِمْதங்கள் இறைவனின்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைمِّنْஇருந்துرِّجْزٍமிகக் கொடியاَلِیْمٌ۠நோவினை தரும்
ஹாதா ஹுதா; வல் லதீன கFபரூ Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் லஹும் 'அதாBபும் மிர் ரிஜ்Zஜின் 'அலீம்
முஹம்மது ஜான்
இது (குர்ஆன்)தான் நேர்வழிகாட்டியாகும். எவர்கள் தம்முடைய இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டார்களோ, அவர்களுக்கு நோவினை மிகுந்த கடினமான வேதனையுண்டு.  
அப்துல் ஹமீது பாகவி
இவ்வேதம்தான் நேரான பாதை. ஆகவே, எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு மிக கடினமான துன்புறுத்தும் வேதனை உண்டு.
IFT
இந்தக் குர்ஆன் முற்றிலும் நேர்வழியாய்த் திகழ்கின்றது. தங்கள் இறைவனின் வசனங்களை ஏற்க மறுத்தவர்களுக்கோ பெரும் வேதனை தரும் தண்டனை இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(குர் ஆனாகிய) இது நேர் வழியாகும், இன்னும், தங்களுடைய இரட்சகனின் வசனங்களை நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்_ அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையிலிருந்து துன்புறுத்தும் வேதனையுண்டு.
Saheeh International
This [Qur’an] is guidance. And those who have disbelieved in the verses of their Lord will have a painful punishment of foul nature.
اَللّٰهُ الَّذِیْ سَخَّرَ لَكُمُ الْبَحْرَ لِتَجْرِیَ الْفُلْكُ فِیْهِ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟ۚ
اَللّٰهُஅல்லாஹ்الَّذِیْஎத்தகையவன்سَخَّرَவசப்படுத்தினான்لَكُمُஉங்களுக்குالْبَحْرَகடலைلِتَجْرِیَசெல்வதற்காகالْفُلْكُகப்பல்கள்فِیْهِஅதில்بِاَمْرِهٖஅவனது கட்டளையினால்وَ لِتَبْتَغُوْاமேலும் நீங்கள் தேடுவதற்காகمِنْஇருந்துفَضْلِهٖஅவனது அருளைوَ لَعَلَّكُمْமேலும் நீங்கள்تَشْكُرُوْنَۚநன்றி செலுத்துவீர்கள்
அல்லாஹுல் லதீ ஸஹ்கர லகுமுல் Bபஹ்ர லிதஜ்ரியல் Fபுல்கு Fபீஹி Bபி அம்ரிஹீ வ லிதBப்தகூ மின் Fபள்லிஹீ வ ல'அல்லகும் தஷ்குரூன்
முஹம்மது ஜான்
கப்பல்கள் அவன் கட்டளையைக் கொண்டு (கடலில்) செல்லும் பொருட்டும், நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக்கொள்ளும் பொருட்டும்; மேலும் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டும் உங்களுக்குக் கடலை வசப்படுத்திக் கொடுத்தவன் அல்லாஹ்வே ஆவான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ், கடலை உங்களுக்கு வசதியாக அமைத்திருக்கிறான். அவன் கட்டளையைக் கொண்டு (பல நாடுகளுக்குக்) கப்பலில் சென்று (அதன் மூலம்) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (அதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
IFT
அல்லாஹ்தான் உங்களுக்குக் கடலினை வசப்படுத்தித் தந்தான். அவனது கட்டளைப்படிக் கப்பல்கள் அதில் செல்வதற்காகவும், நீங்கள் அவனது அருளைத் தேடுவதற்காகவும்! மேலும், நீங்கள் நன்றி செலுத்துவோராகத் திகழ்வதற்காகவும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் எத்தகையவனென்றால், கடலை_அதில் அவன் கட்டளையைக் கொண்டு கப்பல்கள் செல்வதற்காகவும், மேலும் (அதன் மூலம்), அவனின் பேரருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் உங்களுக்காக அவன் வசப்படுத்திக் கொடுத்தான்.
Saheeh International
It is Allah who subjected to you the sea so that ships may sail upon it by His command and that you may seek of His bounty; and perhaps you will be grateful.
وَسَخَّرَ لَكُمْ مَّا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ جَمِیْعًا مِّنْهُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
وَ سَخَّرَமேலும் அவன் வசப்படுத்தினான்لَكُمْஉங்களுக்குمَّاஎவற்றைفِیஉள்ளதோالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاஇன்னும் எவற்றைفِیஉள்ளதோالْاَرْضِபூமியில்جَمِیْعًاஅனைத்தையும்مِّنْهُ ؕஅவனிடமிருந்துاِنَّநிச்சயமாகفِیْஉள்ளனذٰلِكَஅதில்لَاٰیٰتٍஅத்தாட்சிகள்لِّقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّتَفَكَّرُوْنَசிந்திக்கும்
வ ஸக்கர லகும் மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி ஜமீ'அம் மின்ஹு; இன்ன Fபீதாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யதFபக்கரூன்
முஹம்மது ஜான்
அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறே) வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தையுமே அவன் தன் அருளால் உங்களு(டைய நன்மை)க்கு (உழைக்கும்படி) கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான். கவனித்து ஆராயும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
IFT
வானங்கள் மற்றும் பூமியின் அனைத்தையுமே உங்களுக்கு அவன் வசப்படுத்திக் கொடுத்தான். அனைத்தையும் தன் சார்பாகவே செய்தான். சிந்திக்கக்கூடிய மக்களுக்குத் திண்ணமாக இதில் பெரும் சான்றுகள் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், வானங்களில் உள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன்னிடமிருந்து உங்களுக்கு அவனே வசப்படுத்திக் கொடுத்தான், நிச்சயமாக இதில் சிந்திக்கும் சமூகத்தார்க்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Saheeh International
And He has subjected to you whatever is in the heavens and whatever is on the earth - all from Him. Indeed in that are signs for a people who give thought.
قُلْ لِّلَّذِیْنَ اٰمَنُوْا یَغْفِرُوْا لِلَّذِیْنَ لَا یَرْجُوْنَ اَیَّامَ اللّٰهِ لِیَجْزِیَ قَوْمًا بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
قُلْகூறுவீராகلِّلَّذِیْنَஎவர்களுக்குاٰمَنُوْاஈமான் கொண்டார்களோیَغْفِرُوْاஅவர்கள் மன்னித்துவிடட்டும்لِلَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیَرْجُوْنَஎதிர்பார்க்கிறார்களோاَیَّامَநாட்களைاللّٰهِஅல்லாஹ்வின்لِیَجْزِیَஅவன் கூலி கொடுப்பதற்காகقَوْمًۢاஒரு சமூகத்திற்குبِمَاஅதற்காகكَانُوْاஅவர்கள்یَكْسِبُوْنَசம்பாதித்துக் கொண்டிருந்தார்களோ
குல் லில்லதீன ஆமனூ யக்Fபிரூ லில்லதீன லா யர்ஜூன அய்யாமல் லாஹி லியஜ்Zஜிய கவ்மம் Bபிமா கானூ யக்ஸிBபூன்
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களுக்கு (நபியே!) நீர் கூறிவிடும்: அல்லாஹ்வுடைய (தண்டனைக்கான) நாட்களை நம்பாதவர்களை அவர்கள் மன்னித்து (அவர்களைப் பற்றி அல்லாஹ்விடம் பரஞ் சாட்டிவிடட்டும்); ஜனங்களுக்கு அவர்கள் தேடிக் கொண்ட வினைக்குத் தக்கபலனை அவன் கொடுப்பான்.  
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நீர் கூறுவீராக: “அவர்கள் அல்லாஹ்வுடைய தண்டனைகளை நம்பாத மக்களை மன்னித்து (அவர்கள் விஷயத்தை அல்லாஹ்விடமே விட்டு) விடுவார்களாக. (நன்மையோ, தீமையோ செய்யும்) மக்களுக்கு அவர்கள் செய்யும் செயலுக்குத் தக்க பலனை அவன் கொடுப்பான்.
IFT
(நபியே!) இறைநம்பிக்கையாளர்களிடம் நீர் கூறிவிடும்: “யார் அல்லாஹ்விடமிருந்து கெட்ட நாள் வருவது பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிருக்கின்றார்களோ அவர்களின் நடவடிக் கைகளைக் கண்டுகொள்ளாது விட்டுவிடுங்கள் ஒரு சமுதாயத்திற்கு அவர்கள் சம்பாதித்ததற்கான கூலியை அல்லாஹ் கொடுப்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) விசுவாசங்கொண்டோருக்கு நீர் கூறுவீராக: அல்லாஹ்வுடைய (தண்டனைகளின்) நாட்களை நம்பாதவர்களை, அவர்கள் மன்னித்துவிடட்டும், ஏனென்றால், அவர்கள் சம்பாதித்துக் கொண்டவற்றிற்குப் பிரதியாக கூட்டத்தினருக்கு அவன் கூலி கொடுப்பதற்காக.
Saheeh International
Say, [O Muhammad], to those who have believed that they [should] forgive those who expect not the days of Allah [i.e., of His retribution] so that He may recompense a people for what they used to earn.
مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۚ وَمَنْ اَسَآءَ فَعَلَیْهَا ؗ ثُمَّ اِلٰی رَبِّكُمْ تُرْجَعُوْنَ ۟
مَنْஎவர்عَمِلَசெய்கிறாரோصَالِحًاநன்மையைفَلِنَفْسِهٖ ۚஅது அவருக்கேوَ مَنْமேலும் எவர்اَسَآءَதீமை செய்கிறாரோفَعَلَیْهَا ؗஅது அவருக்கு எதிராகவேثُمَّபின்னர்اِلٰیநோக்கிرَبِّكُمْஉங்கள் இறைவனைتُرْجَعُوْنَநீங்கள் திருப்பப்படுவீர்கள்
மன் 'அமில ஸாலிஹன் FபலினFப்ஸிஹீ வ மன் அஸா'அ Fப'அலய்ஹா தும்ம இலா ரBப்Bபிகும் துர்ஜ'ஊன்
முஹம்மது ஜான்
எவர் ஸாலிஹான (நல்ல) அமலை செய்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும்; அன்றியும், எவர் தீமையைச் செய்கிறாரோ, அது அவருக்கே தீமையாகும், பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர் நன்மை செய்கிறாரோ அது அவருக்கே நன்று. எவன் தீமை செய்கிறானோ அது அவனுக்கே கேடாகும். பின்னர், நீங்கள் உங்கள் இறைவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்.
IFT
ஒருவர் ஏதேனும் நற்செயல்கள் செய்தால், அவற்றை அவர் தமக்காகவே செய்து கொள்கிறார். ஒருவர் ஏதேனும் தீய செயல் செய்தால் அவற்றின் விளைவை அவரே அனுபவிப்பார். பின்னர், நீங்கள் அனைவரும் உங்கள் அதிபதியிடமே திரும்பக் கொண்டு சொல்லப்பட இருக்கின்றீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர் நற்செயல் செய்கின்றாரோ, (அது) அவருக்கே நன்று, எவர் தீமை செய்கின்றாரோ (அது) அவருக்கே கேடாகும், பின்னர் நீங்கள் உங்கள் இரட்சகனின் பக்கமே மீட்டப்படுவீர்கள்.
Saheeh International
Whoever does a good deed - it is for himself; and whoever does evil - it is against it [i.e., the self or soul]. Then to your Lord you will be returned.
وَلَقَدْ اٰتَیْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۚ
وَ لَقَدْநிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்بَنِیْۤசந்ததியினருக்குاِسْرَآءِیْلَஇஸ்ராயீல்الْكِتٰبَவேதத்தைوَ الْحُكْمَஅதிகாரத்தையும்وَ النُّبُوَّةَநபித்துவத்தையும்وَ رَزَقْنٰهُمْஅவர்களுக்கு நாம் உணவளித்தோம்مِّنَலிருந்துالطَّیِّبٰتِதூய்மையானவற்றைوَ فَضَّلْنٰهُمْஅவர்களை நாம் சிறப்பித்தோம்عَلَیவிடالْعٰلَمِیْنَۚஅகிலத்தாரை
வ லகத் ஆதய்னா Bபனீ இஸ்ரா'ஈலல் கிதாBப வல்ஹுக்ம வன் னுBபுவ்வத வ ரZஜக்னாஹும் மினத் தய்யிBபாதி வ Fபள்ளல்னாஹும்;அலல் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம், இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நுபுவ்வத்தையும் கொடுத்தோம்; அவர்களுக்கு மணமான உணவு (வசதி)களையும் கொடுத்தோம் - அன்றியும் அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வேதத்தையும், (ஞானத்தையும்,) அதிகாரத்தையும், நபிப்பட்டத்தையும் கொடுத்து மேலான உணவுகளையும் கொடுத்தோம். மேலும், உலகத்தார் அனைவரிலும் அவர்களை மேன்மையாக்கி வைத்தோம்.
IFT
இதற்கு முன்பு இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நாம் வேதம், ஞானம், தூதுத்துவம் ஆகியவற்றை வழங்கியிருந்தோம். நாம், அவர்களுக்குச் சிறந்த வாழ்வாதாரங்களையும் வழங்கியிருந்தோம். மேலும், உலக மக்கள் அனைவரைக் காட்டிலும், அவர்களுக்குச் சிறப்பை வழங்கியிருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, நாம் இஸ்ராயீலின் மக்களுக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம், மேலும் (உண்ணுவதற்கு) நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு உணவும் கொடுத்தோம், அன்றியும் அகிலத்தாரைவிட அவர்களை நாம் மேன்மையாக்கியும் வைத்தோம்.
Saheeh International
And We did certainly give the Children of Israel the Scripture and judgement and prophethood, and We provided them with good things and preferred them over the worlds.
وَاٰتَیْنٰهُمْ بَیِّنٰتٍ مِّنَ الْاَمْرِ ۚ فَمَا اخْتَلَفُوْۤا اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ ۙ بَغْیًا بَیْنَهُمْ ؕ اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
وَ اٰتَیْنٰهُمْமேலும் அவர்களுக்கு நாம் வழங்கினோம்بَیِّنٰتٍதெளிவான அத்தாட்சிகளைمِّنَஇருந்துالْاَمْرِ ۚகாரியத்தில்فَمَاஆகவே இல்லைاخْتَلَفُوْۤاஅவர்கள் மாறுபட்டார்கள்اِلَّاதவிரمِنْۢஇருந்துبَعْدِபின்னர்مَاஎதுجَآءَهُمُஅவர்களுக்கு வந்ததோالْعِلْمُ ۙஅறிவுبَغْیًۢاபொறாமையினால்بَیْنَهُمْ ؕதங்களுக்கு இடையில்اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்یَقْضِیْதீர்ப்பளிப்பான்بَیْنَهُمْஅவர்களுக்கு இடையில்یَوْمَநாளில்الْقِیٰمَةِமறுமைفِیْمَاஎதில்كَانُوْاஅவர்கள் இருந்தார்களோفِیْهِஅதில்یَخْتَلِفُوْنَமாறுபடுகிறார்களோ
வ ஆதய்னாஹும் Bபய்யினாதிம் மினல் அம்ரி Fபமக் தலFபூ இல்லா மிம் Bபஃதி மா ஜா'அஹுமுல் 'இல்மு Bபக்யம் Bபய்னஹும்; இன்ன ரBப்Bபக யக்ளீ Bபய்னஹும் யவ்மல் கியாமதி Fபீமா கானூ Fபீஹி யக்தலிFபூன்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், நம் கட்டளைகளைப் பற்றித் தெளிவான வசனங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்களுக்கிடையிலுள்ள பொறாமையின் காரணமாக, அவர்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னர், அவர்கள் தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) பிரிந்து விட்டனர். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் அவர்கள் தர்க்கித்துக் கொண்டவற்றைப் பற்றி மறுமையில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்.
IFT
தீன் இறைமார்க்கம் சம்பந்தமாக அவர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினோம். பின்னர், அவர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது (அறியாமையின் காரணத்தினால் அல்ல; மாறாக) அறிவு ஞானம் வந்த பின்னர்தான் அதுவும் அவர்கள் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்க விரும்பிய காரணத்தால்தான் ஏற்பட்டது! திண்ணமாக, உம் இறைவன் மறுமைநாளில், அவர்கள் கருத்து முரண்பாடு கொண்டிருக்கின்ற விஷயங்களில் தீர்ப்பு வழங்குவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (மார்க்கக்) காரியத்தில் (சான்றுகளிலிருந்து) தெளிவானவைகளை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம், பின்னர், அவர்கள் தங்களுக்கிடையே உண்டான பொறாமையின் காரணமாக, அவர்களுக்கு (வேத) அறிவு வந்ததன் பின்னரே தவிர அவர்கள் அபிப்பிராயபேதம் கொள்ளவில்லை, (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன், அவர்கள் எதில் அபிப்பிரயாபேதம் கொண்டிருந்தார்களோ அதில், மறுமை நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.
Saheeh International
And We gave them clear proofs of the matter [of religion]. And they did not differ except after knowledge had come to them - out of jealous animosity between themselves. Indeed, your Lord will judge between them on the Day of Resurrection concerning that over which they used to differ.
ثُمَّ جَعَلْنٰكَ عَلٰی شَرِیْعَةٍ مِّنَ الْاَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟
ثُمَّபின்னர்جَعَلْنٰكَநாம் உம்மை ஆக்கினோம்عَلٰیமீதுشَرِیْعَةٍஒரு மார்க்கத்தின்مِّنَஉள்ளالْاَمْرِகட்டளையில்فَاتَّبِعْهَاஎனவே அதனைப் பின்பற்றுவீராகوَ لَاமேலும் வேண்டாம்تَتَّبِعْநீர் பின்பற்றاَهْوَآءَமன இச்சைகளைالَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیَعْلَمُوْنَஅறிகிறார்களோ
தும்ம ஜ'அல்னாக 'அலா ஷரீ'அதிம் மினல் அம்ரி Fபத்தBபிஃஹா வலா தத்தBபிஃ அஹ்வா'அல்-லதீன லா யஃலமூன்
முஹம்மது ஜான்
இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.
அப்துல் ஹமீது பாகவி
பிறகு, (நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உம்மை ஆக்கியிருக்கிறோம். ஆகவே, அதையே நீர் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பங்களை நீர் பின்பற்றாதீர்.
IFT
பிறகு (நபியே!) இப்போது தீன் சம்பந்தமான விஷயங்களில் தெளிவான, பிரதான மார்க்கத்தில் (ஷரீஅத்தில்) உம்மை நாம் நிலை நிறுத்தியிருக்கிறோம். எனவே, நீர் அதையே பின்பற்றும். அறியாத மக்களின் மன இச்சைகளைப் பின்பற்றாதீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதன் பின்னர் (மார்க்கக்) காரியத்தில் (தெளிவான) ஒரு வழியின் மீது உம்மை நாம் ஆக்கி இருக்கின்றோம், ஆகவே, அதனை(யே) நீர் பின்பற்றுவீராக! (உண்மையை) அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்.
Saheeh International
Then We put you, [O Muhammad], on an ordained way concerning the matter [of religion]; so follow it and do not follow the inclinations of those who do not know.
اِنَّهُمْ لَنْ یُّغْنُوْا عَنْكَ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ وَاِنَّ الظّٰلِمِیْنَ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ۚ وَاللّٰهُ وَلِیُّ الْمُتَّقِیْنَ ۟
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَنْஒருபோதும்یُّغْنُوْاபயனளிக்க மாட்டார்கள்عَنْكَஉமக்குمِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்شَیْـًٔا ؕசிறிதளவும்وَ اِنَّமேலும் நிச்சயமாகالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلِیَآءُபாதுகாவலர்கள்بَعْضٍ ۚசிலருக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்وَلِیُّபாதுகாவலன்الْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்களுக்கு
இன்னஹும் ல(ன்)ய் யுக்னூ 'அன்க மினல் லாஹி ஷய்'ஆ; வ இன்னள் ளாலிமீன Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃளி(ன்)வ் வல்லாஹு வலிய்யுல் முத்தகீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு யாதோர் உதவியும் செய்து விட முடியாது. இன்னும் நிச்சயமாக அநியாயக்காரர்களில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையவர்களுக்கு அல்லாஹ்வே பாதுகாவலன் ஆவான்
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதமாக உமக்கு ஒரு உதவியும் செய்துவிட முடியாது. நிச்சயமாக அநியாயக்காரர்கள் சிலர், (அவர்களில்) சிலருக்குத்தான் நண்பர்கள். (நம்பிக்கையாளர்களுக்கு அல்ல.) அல்லாஹ்தான் இறையச்சமுடையவர்களின் நண்பன் ஆவான்.
IFT
அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு அவர்களால் எந்தப் பயனும் தர முடியாது. மேலும், கொடுமை புரிபவர்களே தங்களுக்குள் ஒருவருக்கொருவர் தோழர்களாக இருக்கின்றார்கள். மேலும், இறையச்சமுடையோர்க்கு அல்லாஹ் தோழனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, அவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதமாக உம்மைவிட்டு எதனையும் தடுத்து விடவேமாட்டார்கள், நிச்சயமாக, அநியாயக்காரர்கள் _ அவர்களில் சிலர், சிலருக்கு உதவியாளர்களாகவும் இருக்கிறார்கள், இன்னும் அல்லாஹ் பயபக்தியுடைவர்களின் பாதுகாவலன்.
Saheeh International
Indeed, they will never avail you against Allah at all. And indeed, the wrongdoers are allies of one another; but Allah is the protector of the righteous.
هٰذَا بَصَآىِٕرُ لِلنَّاسِ وَهُدًی وَّرَحْمَةٌ لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟
هٰذَاஇதுبَصَآىِٕرُதெளிவான சான்றுகள்لِلنَّاسِமனிதர்களுக்குوَ هُدًیமேலும் வழிகாட்டியாகவும்وَّ رَحْمَةٌமேலும் அருளாகவும்لِّقَوْمٍசமுதாயத்திற்குیُّوْقِنُوْنَஉறுதியாக நம்புகின்ற
ஹாதா Bபஸா'இரு லின்னாஸி வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லிகவ்மி(ன்)ய் யூகினூன்
முஹம்மது ஜான்
இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இது மனிதர்களுக்கு தெளிவான விளக்கமாகவும் நம்பக்கூடிய மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கிறது.
IFT
இவை, மனிதர்கள் அனைவருக்கும் பகுத்துணரும் சான்றுகளாய் இருக்கின்றன. மேலும், உறுதி கொள்ளக்கூடிய மக்களுக்கு வழிகாட்டியாகவும் கருணையாகவும் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(குர் ஆனாகிய) இது மனிதர்களுக்குத் தெளிவான ஆதாரங்களாகவும், உறுதி கொள்கின்ற சமூகத்தார்க்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.
Saheeh International
This [Qur’an] is enlightenment for mankind and guidance and mercy for a people who are certain [in faith].
اَمْ حَسِبَ الَّذِیْنَ اجْتَرَحُوا السَّیِّاٰتِ اَنْ نَّجْعَلَهُمْ كَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ سَوَآءً مَّحْیَاهُمْ وَمَمَاتُهُمْ ؕ سَآءَ مَا یَحْكُمُوْنَ ۟۠
اَمْஅல்லதுحَسِبَஎண்ணிக் கொண்டார்களாالَّذِیْنَஎவர்கள்اجْتَرَحُواசெய்தார்களோالسَّیِّاٰتِதீமைகளைاَنْஎன்றுنَّجْعَلَهُمْஅவர்களை நாம் ஆக்குவோம்كَالَّذِیْنَஅவர்களைப் போலاٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِ ۙநற்செயல்களைسَوَآءًசமமாகمَّحْیَاهُمْஅவர்களின் வாழ்வும்وَ مَمَاتُهُمْ ؕஅவர்களின் மரணமும்سَآءَமிகக் கெட்டதுمَاஎதைیَحْكُمُوْنَ۠அவர்கள் தீர்ப்பளிக்கிறார்களோ
அம் ஹஸிBபல் லதீனஜ் தரஹுஸ் ஸய்யிஆதி அன் னஜ்'அலஹும் கல்லதீன ஆமனூ வ 'அமிலு ஸாலிஹாதி ஸவா'அம் மஹ்யாஹும் வ மமாதுஹும்; ஸா'அ மா யஹ்குமூன்
முஹம்மது ஜான்
எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா? அவர்கள் உயிருடனிருப்பதும், மரணமடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும்.  
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் பாவத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்களை, நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் உயிருடன் இருப்பதும் அவர்கள் இறந்துவிடுவதும் சமமே. அவர்கள் (இதற்கு மாறாகச்) செய்து கொண்ட முடிவு மகா கெட்டது.
IFT
தீமைகளைச் செய்தவர்களையும், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களையும் இரு சாராரின் வாழ்வும் மரணமும் சமமாகும் விதத்தில் ஒன்றுபோல் ஆக்கி விடுவோம் என்று எண்ணிக்கொண்டார்களா என்ன? இவர்கள் செய்யும் முடிவு எவ்வளவு கெட்டது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தீமைகளைச் சம்பாதித்து கொண்டார்களே அத்தகையோர்_ விசுவாசங் கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களே அத்தகையோரைப் போன்று அவர்களையும் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் ஜீவித்து இருப்பதும், அவர்கள் மரணித்துவிடுவதும், சமமே, அவர்கள் (இதற்கு மாறாகத் தீர்ப்புச் செய்து கொண்டது மிகக் கெட்டதாகிவிட்டது.
Saheeh International
Or do those who commit evils think We will make them like those who have believed and done righteous deeds - [make them] equal in their life and their death? Evil is that which they judge [i.e., assume].
وَخَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزٰی كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
وَ خَلَقَமேலும் படைத்தான்اللّٰهُஅல்லாஹ்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَமற்றும் பூமியைبِالْحَقِّசத்தியத்துடன்وَ لِتُجْزٰیமேலும் கூலி வழங்கப்படுவதற்காகكُلُّஒவ்வொருنَفْسٍۭஆத்மாவிற்கும்بِمَاஎதைكَسَبَتْஅது சம்பாதித்ததோوَ هُمْமேலும் அவர்கள்لَاமாட்டார்கள்یُظْلَمُوْنَஅநீதி இழைக்கப்பட
வ கலகல் லாஹுஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்கி வ லிதுஜ்Zஜா குல்லு னFப்ஸிம் Bபிமா கஸBபத் வ ஹும் லா யுள்லமூன்
முஹம்மது ஜான்
வானங்களையும் பூமியையும் அல்லாஹ் உண்மையுடன் (தக்க காரணத்தைக் கொண்டே) படைத்துள்ளான்; ஒவ்வோர் ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க கூலி கொடுக்கப்படுவதற்காக; அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும் பூமியையும் அல்லாஹ் தக்க காரணத்தின் மீதே படைத்திருக்கிறான். ஆகவே, (அவர்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவற்றின் செயலுக்குத்தக்க கூலியே கொடுக்கப்படும். அவை (அணுவளவும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.
IFT
அல்லாஹ் வானங்களையும் பூமியையும் சத்தியத்துடன் படைத்திருக்கிறான் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் சம்பாதித்த கூலி வழங்கப்பட வேண்டும்; மக்கள் மீது சிறிதும் அநீதி இழைக்கப்படக் கூடாது என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களையும் பூமியையும் அல்லாஹ் நீதியைக் கொண்டு (தக்க காரணத்திற்காகவே) படைத்திருக்கிறான், இன்னும், ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்ததைக்கொண்டு கூலி கொடுக்கப்படுவதற்காகவும் (படைத்துள்ளான்), அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.
Saheeh International
And Allah created the heavens and earth in truth and so that every soul may be recompensed for what it has earned, and they will not be wronged.
اَفَرَءَیْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰىهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰی عِلْمٍ وَّخَتَمَ عَلٰی سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰی بَصَرِهٖ غِشٰوَةً ؕ فَمَنْ یَّهْدِیْهِ مِنْ بَعْدِ اللّٰهِ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ ۟
اَفَرَءَیْتَநீர் பார்த்தீரா?مَنِஎவன் ஒருவன்اتَّخَذَஆக்கிக் கொண்டானோاِلٰهَهٗதனது இறைவனாகهَوٰىهُதனது மன இச்சையைوَ اَضَلَّهُமேலும் அவனை வழிகேட்டில் விட்டுவிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுعِلْمٍஞானத்தின்وَّ خَتَمَமேலும் முத்திரையிட்டான்عَلٰیமீதுسَمْعِهٖஅவனது செவியின்وَ قَلْبِهٖமேலும் அவனது இதயத்தின்وَ جَعَلَமேலும் அமைத்தான்عَلٰیமீதுبَصَرِهٖஅவனது பார்வையின்غِشٰوَةً ؕஒரு திரையைفَمَنْஆகவே யார்یَّهْدِیْهِஅவனுக்கு நேர்வழி காட்டுவார்مِنْۢபிறகுبَعْدِபின்னரும்اللّٰهِ ؕஅல்லாஹ்வுக்குப்اَفَلَاநீங்கள் ஏன்تَذَكَّرُوْنَசிந்திக்க மாட்டீர்கள்?
அFபர'அய்த மனித் தகத இலாஹஹூ ஹவாஹு வ அளல் லஹுல் லாஹு 'அலா 'இல்மி(ன்)வ் வ கதம 'அலா ஸம்'இஹீ வ கல்Bபிஹீ வ ஜ'அல 'அலா Bபஸரிஹீ கிஷாவதன் Fபம(ன்)ய் யஹ்தீஹி மிம் Bபஃதில் லாஹ்; அFபலா ததக்கரூன்
முஹம்மது ஜான்
(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) தன் இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக் கொண்ட ஒருவனை நீர் கவனித்தீரா? அவனுக்கு(ப் போதுமான) கல்வி இருந்தும் (அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டுவிட்டான். அவனுடைய செவியின் மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை அமைத்து விட்டான். அல்லாஹ் இவ்வாறு செய்த பின்னர், அவனை யாரால்தான் நேரான வழியில் செலுத்த முடியும்? நீங்கள் நல்லுணர்வு பெற வேண்டாமா?
IFT
தனது மன இச்சையைத் தன்னுடைய கடவுளாக்கிக் கொண்ட மனிதனின் நிலையை எப்போதேனும் நீர் சிந்தித்ததுண்டா? அறிவுடனேயே அல்லாஹ் அவனை வழிகேட்டில் தள்ளிவிட்டான். மேலும், அவனுடைய காதுகளிலும், இதயத்திலும் முத்திரையிட்டுவிட்டான். மேலும் அவனுடைய கண்கள்மீது திரையிட்டு விட்டான். இனி அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு நேர்வழிகாட்டக்கூடியவர் யார்? என்ன, நீங்கள் எந்தப் படிப்பினையும் பெறுவதில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) தன்னுடைய (மனோ) இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக்கொண்டானே அவனை நீர் பார்த்தீரா? (அவன் வழி கெடுவதற்கு உரியவன் என்ற தன்) அறிவினால் அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டு விட்டான், அவனுடைய செவியின் மீதும், அவனுடைய இதயத்தின் மீதும் முத்திரையிட்டுவிட்டான், அன்றியும், அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை ஆக்கிவிட்டான், அல்லாஹ்வுக்குப்பிறகு அவனுக்கு நேர் வழிகாட்டுபவர் யார்? நீங்கள் நினைவு கூர்ந்து உணர மாட்டீர்களா?
Saheeh International
Have you seen he who has taken as his god his [own] desire, and Allah has sent him astray due to knowledge and has set a seal upon his hearing and his heart and put over his vision a veil? So who will guide him after Allah? Then will you not be reminded?
وَقَالُوْا مَا هِیَ اِلَّا حَیَاتُنَا الدُّنْیَا نَمُوْتُ وَنَحْیَا وَمَا یُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ ۚ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۚ اِنْ هُمْ اِلَّا یَظُنُّوْنَ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்مَاஇல்லைهِیَஇதுاِلَّاதவிரحَیَاتُنَاஎமது வாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகنَمُوْتُநாம் மரணிக்கிறோம்وَ نَحْیَاமேலும் நாம் வாழ்கிறோம்وَ مَاமேலும் இல்லைیُهْلِكُنَاۤஎங்களை அழிப்பதுاِلَّاதவிரالدَّهْرُ ۚகாலம்وَ مَاமேலும் இல்லைلَهُمْஅவர்களுக்குبِذٰلِكَஅதைப் பற்றிمِنْஎந்தعِلْمٍ ۚஅறிவும்اِنْஇல்லைهُمْஅவர்கள்اِلَّاதவிரیَظُنُّوْنَஊகம் செய்கிறார்கள்
வ காலூ மா ஹிய இல்லா ஹயாதுனத் துன்யா னமூது வ னஹ்யா வமா யுஹ்லிகுனா இல்லத் தஹ்ர்; வமா லஹும் Bபிதாலிக மின் 'இல்மின் இன் ஹும் இல்லாயளுன்னூன்
முஹம்மது ஜான்
மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
‘‘இவ்வுலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைத் தவிர வேறொரு வாழ்க்கை இல்லை'' என்றும், ‘‘(இதில்தான்) நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; பின்னர் இறந்து விடுகிறோம். காலத்தைத் தவிர (வேறு எதுவும்) நம்மை அழிப்பதில்லை'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதைப்பற்றி இவர்களுக்கு ஒரு ஞானமும் இல்லை. இவர்கள் வீண் சந்தேகத்தில் ஆழ்ந்திருப்போரைத் தவிர வேறில்லை.
IFT
மேலும், இந்த மக்கள் கூறுகிறார்கள்: “வாழ்க்கை என்பது நம்முடைய இந்த உலக வாழ்க்கைதான். இங்குதான் நாம் மரணிக்கவும் உயிர்வாழவும் செய்கின்றோம். கால ஓட்டமல்லாமல் வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” உண்மையில் இது சம்பந்தமாக இவர்களிடம் எந்த ஞானமும் இல்லை. இவர்கள் வெறும் ஊகத்தின் அடிப்படையில்தான் இப்படிக் கூறுகிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இது நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) இல்லை,” (இதில்தான்) நாம் இறந்துவிடுகின்றோம், இன்னும், ஜீவிக்கின்றோம், காலத்தைத் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்றும் அவர்கள் கூறுகின்றனர், அது பற்றிய எவ்வித அறிவும் அவர்களுக்கில்லை, அவர்கள் (வீண் கற்பனையாக) எண்ணுகிறார்களே தவிர (வேறு) இல்லை.
Saheeh International
And they say, "There is not but our worldly life; we die and live, and nothing destroys us except time." And they have of that no knowledge; they are only assuming.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ مَّا كَانَ حُجَّتَهُمْ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتُوْا بِاٰبَآىِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَ اِذَاமேலும் எப்பொழுதுتُتْلٰیஓதிக்காட்டப்படுகிறதோعَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتُنَاநம்முடைய வசனங்கள்بَیِّنٰتٍதெளிவானவையாகمَّاஇல்லைكَانَஇருந்ததுحُجَّتَهُمْஅவர்களுடைய வாதம்اِلَّاۤதவிரاَنْஎன்றுقَالُواஅவர்கள் கூறுவதைائْتُوْاகொண்டு வாருங்கள்بِاٰبَآىِٕنَاۤஎங்கள் முன்னோர்களைاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுன Bபய்யினாதிம் மா கான ஹுஜ்ஜதஹும் இல்லா அன் காலு'தூ Bபி ஆBபா'இனா இன் குன்தும் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்” என்பது தவிர வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு தெளிவான நமது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘மெய்யாகவே (மரணித்தவர்கள் உயிர்பெற்று எழும்புவார்கள் என்ற விஷயத்தில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (இறந்து போன) எங்கள் மூதாதைகளை (உயிர்ப்பித்துக்) கொண்டு வாருங்கள்'' என்று கூறுவதைத் தவிர, (வேறு) பதில் கூற அவர்களுக்கு முடிவதில்லை.
IFT
மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் இவர்களிடம் ஓதிக் காட்டப்படும்போது “நீங்கள் உண்மையாளர்கள் என்றால் எங்கள் முன்னோரை எழுப்பிக் கொண்டுவாருங்கள்” என்று கூறுவதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இவர்களிடம் இருப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்களின் வாதம் “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (உயிர்ப்ப்பித்து)க் கொண்டுவாருங்கள்” என்று அவர்கள் கூறுவதைத் தவிர (வேறெதுவும்) இல்லை.
Saheeh International
And when Our verses are recited to them as clear evidences, their argument is only that they say, "Bring [back] our forefathers, if you should be truthful."
قُلِ اللّٰهُ یُحْیِیْكُمْ ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یَجْمَعُكُمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَا رَیْبَ فِیْهِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟۠
قُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்یُحْیِیْكُمْஉங்களை உயிர்ப்பிக்கிறான்ثُمَّபின்னர்یُمِیْتُكُمْஉங்களை மரணிக்கச் செய்கிறான்ثُمَّபின்னர்یَجْمَعُكُمْஉங்களை ஒன்று சேர்ப்பான்اِلٰیநோக்கிیَوْمِநாள்الْقِیٰمَةِமறுமைلَاஇல்லைرَیْبَசந்தேகம்فِیْهِஅதில்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பாலானالنَّاسِமனிதர்கள்لَاஅறியیَعْلَمُوْنَ۠மாட்டார்கள்
குலில் லாஹு யுஹ்யீகும் தும்ம யுமீதுகும் தும்ம யஜ்ம'உகும் இலா யவ்மில் கியாமதி லா ரய்Bப Fபீஹி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.  
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் அவர்களை நோக்கி கூறுவீராக: ‘‘அல்லாஹ்தான் உங்களை உயிர்ப்பித்தான்; (நானல்ல.) அவனே உங்களை மரணிக்கவைப்பான். பின்னர், மறுமை நாளில் (உயிர் கொடுத்து) உங்களை ஒன்று சேர்ப்பான். இதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதை அறிந்து கொள்வதில்லை.''
IFT
(நபியே, இவர்களிடம்) கூறும்: அல்லாஹ்தான் உங்களை உயிர் வாழச் செய்கின்றான். பின்னர் அவனே உங்களை மரணமடையச் செய்கின்றான். பின்னர், அந்த மறுமைநாளின்போது அவனே உங்களை ஒன்றுதிரட்டுவான். அந்நாளின் வருகையில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும் பெரும்பாலோர் அறிவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் (அவர்களிடம்) கூறுவீராக: ”அல்லாஹ்(தான்) உங்களை உயிர்ப்பிக்கிறான், பின்னர், உங்களை அவன் மரணிக்கச்செய்கிறான், பின்னர், மறுமை நாளுக்காக_(உயிர் கொடுத்து) உங்களை அவன் ஒன்று சேர்ப்பான்,_இதில் சந்தேகமில்லை, எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்.
Saheeh International
Say, "Allah causes you to live, then causes you to die; then He will assemble you for the Day of Resurrection, about which there is no doubt, but most of the people do not know."
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ یَوْمَىِٕذٍ یَّخْسَرُ الْمُبْطِلُوْنَ ۟
وَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியின்وَ یَوْمَமேலும் (எந்த) நாளில்تَقُوْمُஏற்படுமோالسَّاعَةُஇறுதி வேளைیَوْمَىِٕذٍஅந்நாளில்یَّخْسَرُநஷ்டமடைவார்கள்الْمُبْطِلُوْنَபொய்யர்கள்
வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ யவ்ம தகூமுஸ் ஸா'அது யவ்ம 'இதி(ன்)ய் யக்ஸருல் முBப்திலூன்
முஹம்மது ஜான்
அன்றியும், வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; மேலும், இறுதித் தீர்ப்புக்கான வேளை வந்து வாய்க்கும் நாளில், பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. விசாரணை நாள் வரும் அன்று (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்கள் அந்நாளில் நஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பார்கள்.
IFT
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், மறுமைநாள் வந்துவிடும்போது அசத்தியவாதிகள் நஷ்டத்திலேயே கிடப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது, மறுமை நாள் நிலைபெறும் நாளில் பொய்யாக்குவோர் அந்நாளில் நஷ்டமடைவார்கள்.
Saheeh International
And to Allah belongs the dominion of the heavens and the earth. And the Day the Hour appears - that Day the falsifiers will lose.
وَتَرٰی كُلَّ اُمَّةٍ جَاثِیَةً ۫ كُلُّ اُمَّةٍ تُدْعٰۤی اِلٰی كِتٰبِهَا ؕ اَلْیَوْمَ تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
وَ تَرٰیமேலும் நீர் காண்பீர்كُلَّஒவ்வொருاُمَّةٍசமுதாயத்தையும்جَاثِیَةً ۫மண்டியிட்டதாகكُلُّஒவ்வொருاُمَّةٍசமுதாயமும்تُدْعٰۤیஅழைக்கப்படும்اِلٰیநோக்கிكِتٰبِهَا ؕஅதன் பதிவேட்டைاَلْیَوْمَஇன்றைய தினம்تُجْزَوْنَகூலி வழங்கப்படுவீர்கள்مَاஎதைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَعْمَلُوْنَசெய்து கொண்டு
வ தரா குல்ல உம்மதின் ஜாதியஹ்; குல்லு உம்மதின் துத்'ஆ இலா கிதாBபிஹா அல் யவ்ம துஜ்Zஜவ்ன மா குன்தும் தஃமலூன்
முஹம்மது ஜான்
(அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள் (உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அந்நாளில்) ஒவ்வொரு வகுப்பாரும், முழந்தாளிட்டிருக்கக் காண்பீர். ஒவ்வொரு வகுப்பாரும் (விசாரணைக்காக) அவர்களுடைய (பதிவுப்) புத்தகத்தை நோக்கி அழைக்கப்படுவார்கள். (அவர்களை நோக்கி) ‘‘இன்றைய தினம் நீங்கள் உங்கள் செயலுக்குரிய கூலியை கொடுக்கப்படுவீர்கள்'' (என்றும்),
IFT
அந்நேரம் ஒவ்வொரு சமூகமும் முழந்தாளிட்டு விழுந்திருப்பதை நீர் காண்பீர். “வாருங்கள், உங்கள் வினைச்சுவடியைப் பாருங்கள்” என்று ஒவ்வொரு சமுதாயத்தினரும் அழைக்கப்படுவர் (அவர்களிடம் கூறப்படும்:) “நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குப் பிரதிபலன் இன்று உங்களுக்குக் கொடுக்கப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! அந்நாளில்) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்கும் நிலையில் நீர் காண்பீர். ஒவ்வொரு சமுதாயமும் (விசாரணைக்காக) அதனதன் பதிவுப் புத்தகத்தின்பால் அழைக்கப்படும்_”இன்றையத்தினம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்குக் கூலி கொடுக்கப்படுவீர்கள்” (என்றும்).
Saheeh International
And you will see every nation kneeling [from fear]. Every nation will be called to its record [and told], "Today you will be recompensed for what you used to do.
هٰذَا كِتٰبُنَا یَنْطِقُ عَلَیْكُمْ بِالْحَقِّ ؕ اِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
هٰذَاஇதுكِتٰبُنَاஎமது ஏடுیَنْطِقُபேசுகிறதுعَلَیْكُمْஉங்களுக்கு எதிராகبِالْحَقِّ ؕஉண்மையுடன்اِنَّاநிச்சயமாக நாம்كُنَّاநாம் இருந்தோம்نَسْتَنْسِخُபதிவு செய்து கொண்டிருந்தோம்مَاஎவற்றைكُنْتُمْநீங்கள்تَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தீர்களோ
ஹாதா கிதாBபுனா யன்திகு 'அலய்கும் Bபில்ஹக்க்; இன்னா குன்னா னஸ்தன்ஸிகு மா குன்தும் தஃமலூன்
முஹம்மது ஜான்
“இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம்; நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” (என்று கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘இது (உங்கள் செயலைப் பற்றிய) நமது (பதிவுப்) புத்தகம். இது உங்களைப் பற்றிய உண்மையையே கூறும். நிச்சயமாக நாம், நீங்கள் செய்தவற்றையெல்லாம் எழுதி வைத்திருக்கிறோம்'' (என்றும் கூறப்படும்).
IFT
இது, நாம் தயாரித்த வினைச்சுவடி. உங்கள் மீது மிகச் சரியாக சாட்சியம் அளித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் செய்துவந்த செயல்களை நாம் எழுதச் செய்துகொண்டிருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இது உங்களைப் பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய (பதிவுப்) புத்தகம், நிச்சயமாக நாம், நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை (அதில்) பதிவு செய்பவர்களாக இருந்தோம்” (என்றும் கூறப்படும்).
Saheeh International
This, Our record, speaks about you in truth. Indeed, We were having transcribed whatever you used to do."
فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُدْخِلُهُمْ رَبُّهُمْ فِیْ رَحْمَتِهٖ ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِیْنُ ۟
فَاَمَّاஆனால்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைفَیُدْخِلُهُمْஅவர்களைப் புகுத்துவான்رَبُّهُمْஅவர்களுடைய இறைவன்فِیْஇல்رَحْمَتِهٖ ؕஅவனுடைய அருள்ذٰلِكَஅதுதான்هُوَஅதுالْفَوْزُவெற்றிالْمُبِیْنُதெளிவானது
Fப அம்மல் லதீன ஆமானூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபயுத்கிலுஹும் ரBப்Bபுஹும் Fபீ ரஹ்மதிஹ்; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் முBபீன்
முஹம்மது ஜான்
ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து வந்தார்களோ, அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான வெற்றியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களை, அவர்களுடைய இறைவன் தன் அருளில் புகுத்துவான். இதுதான் மிகத் தெளிவான வெற்றியாகும்.
IFT
இனி எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை, அவர்களின் அதிபதி தன் கருணையில் நுழைவிப்பான். இதுவே தெளிவான வெற்றியாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களே அத்தகையோர்_ அவர்களை, அவர்களுடைய இரட்சகன் தன்னுடைய அருளில் நுழைவிக்கிறான், அதுதான் தெளிவான வெற்றியாகும்.
Saheeh International
So as for those who believed and did righteous deeds, their Lord will admit them into His mercy. That is what is the clear attainment.
وَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا ۫ اَفَلَمْ تَكُنْ اٰیٰتِیْ تُتْلٰی عَلَیْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
وَ اَمَّاஆனால்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْا ۫நிராகரித்தார்களோاَفَلَمْஇல்லையாتَكُنْஇருக்கاٰیٰتِیْஎனது வசனங்கள்تُتْلٰیஓதிக்காட்டப்படعَلَیْكُمْஉங்களுக்குفَاسْتَكْبَرْتُمْஅப்போது நீங்கள் பெருமையடித்தீர்கள்وَ كُنْتُمْமேலும் நீங்கள் இருந்தீர்கள்قَوْمًاஒரு கூட்டத்தினராகمُّجْرِمِیْنَகுற்றவாளிகளாக
வ அம்மல் லதீன கFபரூ அFபலம் தகுன் ஆயாதீ துத்லா 'அலய்கும் Fபஸ்தக்Bபர்தும் வ குன்தும் கவ்மம் முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
ஆனால், நிராகரித்தவர்களிடம்: “உங்களுக்கு என் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டுக் கொண்டு இருக்கவில்லையா? அப்பொழுது நீங்கள் பெருமையடித்துக் கொண்டு குற்றவாளிகளாக இருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்தார்களோ (அவர்களை நோக்கி) உங்களுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அச்சமயம் நீங்கள் பெருமைகொண்டு (அதைப் புறக்கணித்து) விட்டீர்கள். இன்னும் நீங்கள் குற்றவாளிகளாக இருந்தீர்கள்'' (என்றும் கூறப்படும்).
IFT
மேலும், எவர்கள் நிராகரித்தார்களோ (அவர்களிடம் சொல்லப்படும்:) “என்னுடைய வசனங்கள் உங்களிடம் ஓதிக்காட்டப்படவில்லையா? ஆனால், நீங்கள் பெருமையடித்தீர்கள். மேலும், குற்றம்செய்யும் மக்களாய் இருந்தீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நிராகரித்தார்களே அத்தகையோர்_ (அவர்களிடம்,) “உங்களுக்கு என்னுடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கவில்லையா? பின்னர் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள், அன்றியும், நீங்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவும் இருந்தீர்கள்” (என்றும் கூறப்படும்).
Saheeh International
But as for those who disbelieved, [it will be said], "Were not Our verses recited to you, but you were arrogant and became a criminal people?
وَاِذَا قِیْلَ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّالسَّاعَةُ لَا رَیْبَ فِیْهَا قُلْتُمْ مَّا نَدْرِیْ مَا السَّاعَةُ ۙ اِنْ نَّظُنُّ اِلَّا ظَنًّا وَّمَا نَحْنُ بِمُسْتَیْقِنِیْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுقِیْلَகூறப்பட்டதோاِنَّநிச்சயமாகوَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வின்حَقٌّஉண்மையானதுوَّ السَّاعَةُமேலும் மறுமை நாள்لَاஇல்லைرَیْبَசந்தேகம்فِیْهَاஅதில்قُلْتُمْநீங்கள் கூறினீர்கள்مَّاஇல்லைنَدْرِیْநாங்கள் அறிவோம்مَاஎன்னவென்றுالسَّاعَةُ ۙமறுமை நாள்اِنْஇல்லைنَّظُنُّநாங்கள் கருதுகிறோம்اِلَّاதவிரظَنًّاஒரு ஊகமாகوَّ مَاமேலும் இல்லைنَحْنُநாங்கள்بِمُسْتَیْقِنِیْنَஉறுதி கொண்டவர்களாக
வ இதா கீல இன்ன வஃதல்லாஹி ஹக்கு(ன்)வ் வஸ் ஸா'அது லா ரய்Bப Fபீஹா குல்தும் மா னத்ரீ மஸ் ஸா'அது இன் னளுன்னு இல்லா ளன்ன(ன்)வ் வமா னஹ்னு Bபிமுஸ்தய்கினீன்
முஹம்மது ஜான்
மேலும் “நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; மறுமை நாள் அது பற்றியும் சந்தேகமில்லை” என்று கூறப்பட்ட போது; “(மறுமை) நாள் என்ன என்று நாங்கள் அறியோம்; அது ஒரு வெறும் கற்பனை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே (அதை) நாங்கள் உறுதியென நம்புபவர்களல்லர்” என்று நீங்கள் கூறினீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், ‘‘ நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது, மறுமை வருவதில் அறவே சந்தேகமில்லை'' என்று (உங்களுக்குக்) கூறப்பட்டால் அதற்கு, ‘‘மறுமை இன்னதென்றே நாங்கள் அறியோம். அது (வீணான) வெறும் எண்ணத்தைத் தவிர வேறில்லை என்றே எண்ணுகிறோம். அதை (மெய்யென்று) நாங்கள் நம்பவுமில்லை'' என்று நீங்கள் கூறினீர்கள் (அல்லவா?) என்று (அவர்களிடம்) கேட்கப்படும்.
IFT
மேலும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும் மறுமைநாள் வருவதில் எவ்வித ஐயமும் இல்லை என்றும் சொல்லப்பட்டால் “மறுமை என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. நாங்கள் வெறும் ஊகம்தான் கொண்டிருக்கின்றோம்; உறுதிகொள்ளக் கூடியவர்களாய் இல்லை” என்று நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது, மறுமைநாள்_அ(து வருமென்ப)தில் யாதொரு சந்தேகமுமில்லை” என்று கூறப்பட்டால், “மறுமைநாள் இன்னதென்றே நாங்கள் அறியோம், அது வெறும் எண்ணத்தைத் தவிர (வேறு) இல்லை என்றே எண்ணுகிறோம், (அதனை உண்மையென்று) நாங்கள் உறுதியாக நம்புகிறவர்களாகவும் இல்லை என்று நீங்கள் கூறினீர்கள் (அல்லவா?” என்று அவர்களிடம் கேட்கப்படும்.)
Saheeh International
And when it was said, 'Indeed, the promise of Allah is truth and the Hour [is coming] - no doubt about it,' you said, 'We know not what is the Hour. We assume only assumption, and we are not convinced.'"
وَبَدَا لَهُمْ سَیِّاٰتُ مَا عَمِلُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
وَ بَدَاமேலும் வெளியாகும்لَهُمْஅவர்களுக்குسَیِّاٰتُதீமைகள்مَاஎவற்றைعَمِلُوْاஅவர்கள் செய்தார்களோوَ حَاقَமேலும் சூழ்ந்துகொள்ளும்بِهِمْஅவர்களைمَّاஎதைكَانُوْاஅவர்கள்بِهٖஅதைக் கொண்டுیَسْتَهْزِءُوْنَபரிகசித்துக் கொண்டிருந்தார்களோ
வ Bபதா லஹும் ஸய்யிஆது மா 'அமிலூ வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
முஹம்மது ஜான்
அவர்கள் செய்த தீமையெல்லாம் (அந்நாளில்) அவர்களுக்கு வெளியாகும்; எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்கள் அனைத்தும், அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தவை அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்.
IFT
அந்த நேரம் அவர்களுடைய செயல்களின் தீய விளைவு அவர்களுக்குத் தென்பட்டுவிடும். மேலும், அவர்கள் எதைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் செய்துகொண்டிருந்த தீயவைகள் (யாவும்) அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும், எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அது அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்.
Saheeh International
And the evil consequences of what they did will appear to them, and they will be enveloped by what they used to ridicule.
وَقِیْلَ الْیَوْمَ نَنْسٰىكُمْ كَمَا نَسِیْتُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا وَمَاْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟
وَ قِیْلَமேலும் சொல்லப்படும்الْیَوْمَஇன்றைய தினம்نَنْسٰىكُمْநாம் உங்களை மறக்கிறோம்كَمَاஎவ்வாறுنَسِیْتُمْநீங்கள் மறந்தீர்களோلِقَآءَசந்திப்பைیَوْمِكُمْஉங்களுடைய நாளின்هٰذَاஇந்தوَ مَاْوٰىكُمُமேலும் உங்கள் தங்குமிடம்النَّارُநரக நெருப்புوَ مَاமேலும் இல்லைلَكُمْஉங்களுக்குمِّنْஎந்தنّٰصِرِیْنَஉதவியாளர்களும்
வ கீலல் யவ்ம னன்ஸாகும் கமா னஸீதும் லிகா'அ யவ்மிகும் ஹாதா வ மாவாகுமுன் னாரு வமா லகும் மின் னாஸிரீன்
முஹம்மது ஜான்
இன்னும், “நீங்கள் உங்களுடைய இந்நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்றே, இன்றைய தினம் நாம் உங்களை மறக்கிறோம்; அன்றியும் நீங்கள் தங்குமிடம் நரகம் தான்; மேலும், உங்களுக்கு உதவி செய்பவர் எவருமில்லை” என்று (அவர்களுக்குக்) கூறப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இந்நாளை சந்திப்பதை மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் உங்களை மறந்துவிட்டோம். உங்கள் தங்குமிடம் நரகம்தான். (இன்றைய தினம்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை'' என்றும் கூறப்படும்.
IFT
மேலும், அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் இந்நாளின் சந்திப்பை எப்படி மறந்திருந்தீர்களோ அப்படியே இன்று நாம் உங்களை மறந்துவிடுகின்றோம். உங்கள் இருப்பிடம் இனி நரகம்தான். மேலும், உங்களுக்கு உதவி செய்வோர் எவரும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் (அவர்களிடம்) “நீங்கள் உங்களுடைய இந்நாளின் சந்திப்பை மறந்தவாறே நாமும் இன்றையத் தினம் உங்களை மறந்துவிட்டோம், மேலும், உங்கள் தங்குமிடம் நரகமாகும், உங்களுக்கு எந்த உதவியாளர்களுமில்லை” என்றும் கூறப்படும்.
Saheeh International
And it will be said, "Today We will forget you as you forgot the meeting of this Day of yours, and your refuge is the Fire, and for you there are no helpers.
ذٰلِكُمْ بِاَنَّكُمُ اتَّخَذْتُمْ اٰیٰتِ اللّٰهِ هُزُوًا وَّغَرَّتْكُمُ الْحَیٰوةُ الدُّنْیَا ۚ فَالْیَوْمَ لَا یُخْرَجُوْنَ مِنْهَا وَلَا هُمْ یُسْتَعْتَبُوْنَ ۟
ذٰلِكُمْஅதுبِاَنَّكُمُஏனெனில் நீங்கள்اتَّخَذْتُمْஆக்கிக் கொண்டீர்கள்اٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்هُزُوًاபரிகாசமாகوَّ غَرَّتْكُمُமேலும் உங்களை ஏமாற்றிவிட்டதுالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَا ۚஇவ்வுலகفَالْیَوْمَஆகவே இன்றைய தினம்لَاஇல்லைیُخْرَجُوْنَஅவர்கள் வெளியேற்றப்படுவார்கள்مِنْهَاஅதிலிருந்துوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یُسْتَعْتَبُوْنَமன்னிப்புக் கோர அனுமதிக்கப்படுவார்கள்
தாலிகும் Bபி அன்னகுமுத் தகத்தும் ஆயாதில் லாஹி ஹுZஜுவ(ன்)வ் வ கர்ரத்குமுல் ஹயாதுத் துன்யா; Fபல் யவ்ம லா யுக்ரஜூன மின்ஹா வ லாஹும் யுஸ்தஃதBபூன்
முஹம்மது ஜான்
நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏளனமாக எடுத்துக் கொண்டதனாலும் இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி ஏமாற்றி விட்டதினாலுமே இந்த நிலை. இன்றைய தினத்தில் அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்; மன்னிப்பளிக்கப்படவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இதன் காரணமாவது: நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள். இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட்டது (என்றும் கூறப்படும்). இன்றைய தினம் நரகத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள். அவர்களுடைய மன்னிப்புக் கோரலும் அங்கீகரிக்கப்படாது.
IFT
உங்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டதற்குக் காரணம், நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தீர்கள். மேலும், உலக வாழ்வு உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருந்தது. எனவே இன்று இவர்கள் நரகத்திலிருந்து விடுவிக்கப்படவும் மாட்டார்கள். மன்னிப்புக்கோரி (உங்கள் அதிபதியின்) உவப்பைப் பெறுங்கள் என்று இவர்களிடம் கூறப்படவும் மாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இ(ந்தத் தண்டனையான)து நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக்கொண்டீர்கள் என்பதினாலாகும், இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கியும்விட்டது” (என்று கூறப்படும்), இன்றையத் தினம் அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள், மேலும், (அந்நாளில் நற்செயல்கள் செய்து இரட்சகனைத்) திருப்திப்படுத்த அவர்கள் தேடப்படமாட்டார்கள்.
Saheeh International
That is because you took the verses of Allah in ridicule, and worldly life deluded you." So that Day they will not be removed from it, nor will they be asked to appease [Allah].
فَلِلّٰهِ الْحَمْدُ رَبِّ السَّمٰوٰتِ وَرَبِّ الْاَرْضِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
فَلِلّٰهِஎனவே அல்லாஹ்வுக்கேالْحَمْدُபுகழனைத்தும்رَبِّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்وَ رَبِّமேலும் இறைவன்الْاَرْضِபூமியின்رَبِّஇறைவன்الْعٰلَمِیْنَஅகிலங்களின்
Fபலில்லாஹில் ஹம்து ரBப்Bபிஸ் ஸமாவாதி வ ரBப்Bபில் அர்ளி ரBப்Bபில்-'ஆலமீன்
முஹம்மது ஜான்
ஆகவே வானங்களுக்கும் இறைவனான - பூமிக்கும் இறைவனான - அகிலத்தாருக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களின் இறைவனும், பூமியின் இறைவனும், இன்னும் அகிலத்தார் அனைவரின் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும்.
IFT
வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும், அகிலத்தார் அனைவரையும் பரிபாலிப்பவனுமாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, வானங்களில் இரட்சகனும், பூமியின் இரட்சகனும் அகிலத்தாரின் இரட்சகனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும்.
Saheeh International
Then, to Allah belongs [all] praise - Lord of the heavens and Lord of the earth, Lord of the worlds.
وَلَهُ الْكِبْرِیَآءُ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۪ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
وَ لَهُஅவனுக்கேالْكِبْرِیَآءُபெருமைفِیஉள்ளالسَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِ ۪மற்றும் பூமிوَ هُوَமேலும் அவன்الْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُ۠ஞானமிக்கவன்
வ லஹுல் கிBப்ரியா'உ Fபிஸ்ஸமாவாதி வல் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
முஹம்மது ஜான்
இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது; மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா பெருமைகளும் அவனுக்கே சொந்தமானவை. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
IFT
வானங்களிலும் பூமியிலும் பெருமை அவனுக்கே உரியதாகும். மேலும் அவன் மிகவும் வல்லமை மிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களிலும், பூமியிலும் (உள்ள) பெருமை அவனுக்கே உரியது, அவனே (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
Saheeh International
And to Him belongs [all] grandeur within the heavens and the earth, and He is the Exalted in Might, the Wise.