51. ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)

மக்கீ, வசனங்கள்: 60

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
وَالذّٰرِیٰتِ ذَرْوًا ۟ۙ
وَالذّٰرِيٰتِ ذَرْوًا ۙ‏வேகமாக வீசக்கூடிய காற்றுகள் மீது சத்தியமாக!
வத்-தாரியாதி தர்வா
முஹம்மது ஜான்
(புழுதியைக் எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!
அப்துல் ஹமீது பாகவி
(கடல் நீரை ஆவியாக்கிச் சிதறடிக்கும்) சூறாவளிகள் மீதும்,
IFT
புழுதியைக் கிளப்பக் கூடிய (காற்றுகளின் மீது) பிறகு,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
புழுதியை பறக்கவிடும் காற்றுகளின் மீது சத்தியமாக!
Saheeh International
By the [winds] scattering [dust], dispersing [it]
فَالْحٰمِلٰتِ وِقْرًا ۟ۙ
فَالْحٰمِلٰتِ وِقْرًا ۙ‏சுமையை சுமக்கின்ற மேகங்கள் மீது சத்தியமாக!
Fபல்ஹாமிலாதி விக்ரா
முஹம்மது ஜான்
(மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்,
அப்துல் ஹமீது பாகவி
(அந்த நீராவியை) சுமந்து செல்லும் மேகங்கள் மீதும்,
IFT
நீர் நிரம்பிய மேகங்களைச் சுமக்கக்கூடிய,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மழையின் கனத்தை) சுமந்து வரும் மேகங்களின் மீதும் சத்தியமாக!
Saheeh International
And the [clouds] carrying a load [of water]
فَالْجٰرِیٰتِ یُسْرًا ۟ۙ
فَالْجٰرِيٰتِ يُسْرًا ۙ‏மென்மையாக செல்கின்ற கப்பல்கள் மீது சத்தியமாக!
Fபல்ஜாரியாதி யுஸ்ரா
முஹம்மது ஜான்
பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும்,
அப்துல் ஹமீது பாகவி
(பல பாகத்திற்கு அதை) எளிதாக(த் தாங்கிச்) செல்லும் மேகங்கள் மீதும்,
IFT
மெதுவான வேகத்தில் செல்லக்கூடிய,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(கடல்களில்) இலகுவாகச் செல்கின்றவைகளின் மீதும் சத்தியமாக!
Saheeh International
And the ships sailing with ease
فَالْمُقَسِّمٰتِ اَمْرًا ۟ۙ
فَالْمُقَسِّمٰتِ اَمْرًا ۙ‏கட்டளைகளை பிரிப்பவர்கள் மீது சத்தியமாக!
Fபல்முகஸ்ஸிமாதி அம்ரா
முஹம்மது ஜான்
(பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக
அப்துல் ஹமீது பாகவி
அதை (பூமியின் பல பாகங்களில்) மழையாக பிரித்துவிடும் வானவர்கள் மீதும் சத்தியமாக!
IFT
பெரும் பணியை (மழையை)ப் பகிர்ந்தளிக்கக்கூடிய காற்றுகளின் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கட்டளையைப் பங்கிடுவோர்(களான வானவர்)கள் மீதும் சத்தியமாக!
Saheeh International
And the [angels] apportioning [each] matter,
اِنَّمَا تُوْعَدُوْنَ لَصَادِقٌ ۟ۙ
اِنَّمَا تُوْعَدُوْنَநீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம்لَصَادِقٌ ۙ‏உண்மைதான்
இன்னமா தூ'அதூன ல-ஸாதிக்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(செயலுக்குத் தக்க கூலி கொடுக்கப்படுமென்று) உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமாக உண்மையானதே.
IFT
எது பற்றி உங்களுக்கு அச்சுறுத்தப்படுகின்றதோ அது உண்மையானதே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நற்செயலுக்கு நற்கூலியும், தீயசெயலுக்கு தண்டனையும் உண்டென்று) நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையானதாகும்.
Saheeh International
Indeed, what you are promised is true.
وَّاِنَّ الدِّیْنَ لَوَاقِعٌ ۟ؕ
وَّاِنَّநிச்சயமாகالدِّيْنَகூலி கொடுக்கப்படுவதுلَوَاقِعٌ ؕ‏நிகழ்ந்தே தீரும்
வ இன்னத் தீன ல வாகி'
முஹம்மது ஜான்
அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (செயல்களுக்குரிய) கூலி கொடுக்கப்பட்டே தீரும்.
IFT
மேலும், செயல்களுக்குக் கூலி வழங்குவதென்பது அவசியம் நிகழக்கூடியதே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, (செயலுக்குத் தக்க) கூலி கொடுக்கப்படுவது நடந்தே தீரும்.
Saheeh International
And indeed, the recompense is to occur.
وَالسَّمَآءِ ذَاتِ الْحُبُكِ ۟ۙ
وَالسَّمَآءِவானத்தின் மீது சத்தியமாக!ذَاتِ الْحُـبُكِ ۙ‏அழகிய படைப்புடைய
வஸ்ஸமா'இ தாதில் ஹுBபுக்
முஹம்மது ஜான்
அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!
அப்துல் ஹமீது பாகவி
(நட்சத்திரங்களின்) அழகிய பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக!
IFT
பலவகையான தோற்றங்களையுடைய வானத்தின் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக,
Saheeh International
By the heaven containing pathways,
اِنَّكُمْ لَفِیْ قَوْلٍ مُّخْتَلِفٍ ۟ۙ
اِنَّـكُمْநிச்சயமாக நீங்கள்لَفِىْ قَوْلٍபேச்சில் இருக்கின்றனர்مُّخْتَلِفٍ ۙ‏மாறுபட்ட
இன்னகும் லFபீ கவ்லிம் முக்தலிFப்
முஹம்மது ஜான்
நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நீங்கள் (சத்தியத்திற்கு) முரணாகப் பேசுவதில்தான் நிலைத்து விட்டீர்கள்.
IFT
(மறுமையைப் பற்றிய) உங்களுடைய கூற்று ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நீங்கள், (நபியைப்பற்றி) மாறுபட்ட கூற்றில் இருக்கின்றீர்கள்.
Saheeh International
Indeed, you are in differing speech.
یُّؤْفَكُ عَنْهُ مَنْ اُفِكَ ۟ؕ
يُّـؤْفَكُதிருப்பப்படுகிறார்عَنْهُஇதை விட்டும்مَنْஎவர்اُفِكَ ؕ‏திருப்பப்பட்டார்
யு'Fபகு 'அன்ஹு மன் உFபிக்
முஹம்மது ஜான்
அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(ஏற்கனவே, அல்லாஹ்வுடைய விதியின்படி) திருப்பப்பட்டவனே சத்தியத்தை விட்டும் திருப்பப்படுவான்.
IFT
எவன் சத்தியத்திலிருந்து பிறழ்ந்திருக்கின்றானோ அவன் மட்டுமே அதனால் தடுமாற்றம் அடைவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வுடைய தூதர் கொண்டுவந்த உண்மையான விஷயங்கள் ஏற்பதைவிட்டும்) திருப்பபட்டவர் (வேதமாகிய) அதை விட்டும் திருப்பப்படுகிறார்.
Saheeh International
Deluded away from it [i.e., the Qur’an] is he who is deluded.
قُتِلَ الْخَرّٰصُوْنَ ۟ۙ
قُتِلَஅழிந்து போகட்டும்الْخَـرّٰصُوْنَۙ‏பொய்யை கற்பனை செய்பவர்கள்
குதிலல் கர்ராஸூன்
முஹம்மது ஜான்
பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பொய் சொல்பவர்கள் அழிந்தே போவர்.
IFT
அழிந்துவிட்டார்கள்; கணிப்பு மற்றும் ஊகத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பவர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பொய்யர்கள் அழிந்தேபோவர்.
Saheeh International
Destroyed are the misinformers
الَّذِیْنَ هُمْ فِیْ غَمْرَةٍ سَاهُوْنَ ۟ۙ
الَّذِيْنَஎவர்கள்هُمْஅவர்கள்فِىْ غَمْرَةٍமயக்கத்தில்سَاهُوْنَۙ‏மறதியாளர்களாக
அல்லதீன ஹும் Fபீ கம்ரதின் ஸாஹூன்
முஹம்மது ஜான்
அவர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் தங்கள் மடமையால் (மறுமையையே) மறந்துவிட்டனர்.
IFT
அவர்கள் எத்தகையவர்களெனில், அறியாமையில் மூழ்கி, அலட்சியத்தினால் மதியிழந்து இருப்பவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால் (தங்கள்) மடமையால், (மறுமையையே மறந்தோராய் இருப்போர் (ஆவர்).
Saheeh International
Who are within a flood [of confusion] and heedless.
یَسْـَٔلُوْنَ اَیَّانَ یَوْمُ الدِّیْنِ ۟ؕ
يَسْــٴَـــلُوْنَஅவர்கள் கேட்கின்றனர்اَيَّانَஎப்போதுيَوْمُநாள்الدِّيْنِؕ‏கூலி கொடுக்கப்படும்
யஸ்'அலூன அய்யான யவ்முத் தீன்
முஹம்மது ஜான்
(நன்மை, தீமைக்குக்) “கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?” என்று அவர்கள் கேட்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள், ‘‘கூலி கொடுக்கும் நாள் எப்பொழுது வரும்?'' என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.
IFT
“கூலி கொடுக்கப்படும் அந்நாள் எப்போது வரும்?” என வினவுகின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“கூலி கொடுக்கும் நாள் எப்பொழுது (வரும்)?” என்று அவர்கள் (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.
Saheeh International
They ask, "When is the Day of Recompense?"
یَوْمَ هُمْ عَلَی النَّارِ یُفْتَنُوْنَ ۟
يَوْمَநாளில்...هُمْஅவர்கள்عَلَى النَّارِநெருப்பின் மீதுيُفْتَنُوْنَ‏வேதனை செய்யப்படுகின்றனர்
யவ்ம ஹும் 'அலன் னாரி யுFப்தனூன்
முஹம்மது ஜான்
நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் அவர்கள், நெருப்பில் பொசுக்கி வேதனை செய்யப்படுவார்கள்.
IFT
இவர்கள் நெருப்பில் வதைக்கப்படும் நாளில் அது வரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அந்நாள்) அவர்கள் நெருப்பில் (பொசுக்கப்பட்டு) தண்டிக்கப்படும் நாள்.
Saheeh International
[It is] the Day they will be tormented over the Fire.
ذُوْقُوْا فِتْنَتَكُمْ ؕ هٰذَا الَّذِیْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ ۟
ذُوْقُوْاசுவையுங்கள்!فِتْنَتَكُمْؕஉங்கள் வேதனையைهٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ‏இது நீங்கள் அவசரமாகத் தேடிக்கொண்டிருந்தது
தூகூ Fபித்னதகும் ஹா தல் லதீ குன்தும் Bபிஹீ தஸ் தஃஜிலூன்
முஹம்மது ஜான்
“உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்;” எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை நோக்கி) ‘‘உங்கள் வேதனையை சுவைத்துப் பாருங்கள். நீங்கள் (எப்பொழுது வருமென்று) அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது இதுதான்'' (என்றும் கூறப்படும்).
IFT
(அவர்களிடம் கூறப்படும்:) “இப்போது சுவையுங்கள்; உங்களுடைய வேதனையை! எதற்காக நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களிடம்) “உங்கள் தண்டனையைச் சுவைத்துப் பாருங்கள் (எப்பொழுது வருமென்று) நீங்கள் எதனை அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது இது தான்” (என்றும் கூறப்படும்).
Saheeh International
[And will be told], "Taste your torment. This is that for which you were impatient."
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
اِنَّ الْمُتَّقِيْنَநிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள்فِىْ جَنّٰتٍசொர்க்கங்களில்وَّعُيُوْنٍۙ‏இன்னும் நீரூற்றுகளில்
இன்னல் முத்தகீன Fபீ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கங்களிலும், நீரருவிகளுக்கு அருகிலும் இருப்பார்கள்.
IFT
இறையச்சம் கொண்டவர்கள் (அந்த நாளில்) திண்ணமாகத் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (சுவனபதிகளின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
Saheeh International
Indeed, the righteous will be among gardens and springs,
اٰخِذِیْنَ مَاۤ اٰتٰىهُمْ رَبُّهُمْ ؕ اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُحْسِنِیْنَ ۟ؕ
اٰخِذِيْنَபெற்றுக்கொள்வார்கள்مَاۤ اٰتٰٮهُمْஅவர்களுக்கு கொடுத்ததைرَبُّهُمْ‌ؕஅவர்களின் இறைவன்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்قَبْلَ ذٰلِكَஇதற்கு முன்னர்مُحْسِنِيْنَؕ‏நல்லவர்களாக
ஆகிதீன மா ஆதாஹும் ரBப்Bபுஹும்; இன்னஹும் கானூ கBப்ல தாலிக முஹ்ஸினீன்
முஹம்மது ஜான்
அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் தங்கள் இறைவன் கொடுப்பதை(த் திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்பவர்களாகவே இருந்தார்கள்.
IFT
அவர்களின் அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அந்நாள் வருவதற்கு முன்னரே நல்லவர்களாக இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள், தங்களிரட்சகன் அவர்களுக்குக் கொடுத்ததை (திருப்தியுடன்) எடுத்துக் கொண்டோராக (இருப்பர்), நிச்சயமாக, அவர்கள் அதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தார்கள்.
Saheeh International
Accepting what their Lord has given them. Indeed, they were before that doers of good.
كَانُوْا قَلِیْلًا مِّنَ الَّیْلِ مَا یَهْجَعُوْنَ ۟
كَانُوْاஇருந்தார்கள்قَلِيْلًاமிகக் குறைவாகمِّنَ الَّيْلِஇரவில்مَا يَهْجَعُوْنَ‏தூங்குபவர்களாக
கானூ கலீலம் மினல் லய்லி மா யஹ்ஜ'ஊன்
முஹம்மது ஜான்
அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் இரவில் வெகு சொற்ப (நேர)மே நித்திரை செய்பவர்களாக இருந்தனர்.
IFT
இரவு நேரங்களில் குறைவாகவே தூங்குபவர்களாகவும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இரவில் வெகு சொற்ப(நேர)மே தூங்கக் கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள்.
Saheeh International
They used to sleep but little of the night,
وَبِالْاَسْحَارِ هُمْ یَسْتَغْفِرُوْنَ ۟
وَبِالْاَسْحَارِஅதிகாலையில்هُمْ يَسْتَغْفِرُوْنَ‏அவர்கள் பாவமன்னிப்புத் தேடுவார்கள்
வ Bபில் அஸ் ஹாரி ஹும் யஸ்தக்Fபிரூன்
முஹம்மது ஜான்
அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்து தங்கள் இறைவனை வணங்கி, அவனிடம் பாவ) மன்னிப்புக் கோருவார்கள்.
IFT
பின்னிரவு நேரங்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் விடியற்காலை(ஸஹர் நேரங்)களில் (எழுந்து அல்லாஹ்வை வணங்கி, தங்களிரட்சகனிடம்) மன்னிப்புக்கோரிக் கொண்டிருப்பார்கள்.
Saheeh International
And in the hours before dawn they would ask forgiveness,
وَفِیْۤ اَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّآىِٕلِ وَالْمَحْرُوْمِ ۟
وَفِىْۤ اَمْوَالِهِمْஇன்னும் அவர்களது செல்வங்களில்حَقٌّஉரிமைلِّلسَّآٮِٕلِயாசிப்பவருக்கு(ம்)وَالْمَحْرُوْمِ‏இல்லாதவருக்கும்
வ Fபீ அம்வாலிஹிம் ஹக்குல் லிஸ்ஸா'இலி வல்மஹ்ரூம்
முஹம்மது ஜான்
அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய பொருள்களில், (வாய் திறந்து) யாசகம் கேட்பவர்களுக்கும், (கேட்காத) வறியவர்களுக்கும் பாகமுண்டு. (அனைவருக்கும் அவர்கள் தானம் செய்வார்கள்.)
IFT
மேலும், அவர்களின் செல்வங்களில் உரிமை இருந்தது, யாசிப்பவருக்கும் இல்லாதவருக்கும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களுடைய செல்வங்களில் கேட்போருக்கும், கேட்காதோருக்கும் உரிமையுண்டு.
Saheeh International
And from their properties was [given] the right of the [needy] petitioner and the deprived.
وَفِی الْاَرْضِ اٰیٰتٌ لِّلْمُوْقِنِیْنَ ۟ۙ
وَفِى الْاَرْضِஇன்னும் பூமியில்اٰيٰتٌபல அத்தாட்சிகள்لِّلْمُوْقِنِيْنَۙ‏உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு
வ Fபில் அர்ளி ஆயாதுல் லில்மூகினீன்
முஹம்மது ஜான்
உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
உறுதி(யாக நம்பிக்கை) கொண்டவர்களுக்குப் பூமியில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
உறுதியாக நம்புபவர்களுக்கு பூமியில் பல சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உறுதி(யாக விசுவாசங்)கொண்டவர்களுக்குப் பூமியில் அத்தாட்சிகளிருக்கின்றன.
Saheeh International
And on the earth are signs for the certain [in faith]
وَفِیْۤ اَنْفُسِكُمْ ؕ اَفَلَا تُبْصِرُوْنَ ۟
وَفِىْۤ اَنْفُسِكُمْ‌ؕஇன்னும் உங்களிலும்اَفَلَا تُبْصِرُوْنَ‏நீங்கள் உற்று நோக்க மாட்டீர்களா?
வ Fபீ அன்Fபுஸிகும்; அFபலா துBப்ஸிரூன்
முஹம்மது ஜான்
உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு உள்ளாகவும் (பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றை) நீங்கள் ஆழ்ந்து கவனித்துப் பார்க்க வேண்டாமா?
IFT
ஏன், உங்களிடத்திலும்கூட! உங்களுக்குப் புலப்படுவதில்லையா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்குள்ளேயும்_(பல அத்தாட்சிகள் இருக்கின்றன, அவைகளை) நீங்கள் (கவனித்துப்) பார்க்கமாட்டீர்களா?
Saheeh International
And in yourselves. Then will you not see?
وَفِی السَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ ۟
وَفِى السَّمَآءِஇன்னும் வானத்தில்رِزْقُكُمْஉங்கள் உணவும்وَمَا تُوْعَدُوْنَ‏நீங்கள் வாக்களிக்கப்படுவதும்
வ Fபிஸ்ஸமா'இ ரிZஜ்குகும் வமா தூ'அதூன்
முஹம்மது ஜான்
அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவையும் உங்கள் உணவும் வானத்தில் தான் இருக்கின்றன.
IFT
வானத்தில்தான் இருக்கின்றன, உங்கள் வாழ்வாதாரமும், உங்களுக்கு வாக்களிக்கப்படுகின்றவையும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உங்களுடைய உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கபட்டீர்களே அவையும் வானத்திலிருக்கின்றன.
Saheeh International
And in the heaven is your provision and whatever you are promised.
فَوَرَبِّ السَّمَآءِ وَالْاَرْضِ اِنَّهٗ لَحَقٌّ مِّثْلَ مَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَ ۟۠
فَوَرَبِّஅதிபதியின் மீது சத்தியமாகالسَّمَآءِ وَالْاَرْضِவானம், பூமியுடையاِنَّهٗநிச்சயமாக இதுلَحَـقٌّஉண்மைதான்مِّثْلَபோன்றேمَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَ‏நிச்சயமாக நீங்கள் பேசுவது
Fபவ ரBப்Bபிஸ் ஸமா'இ வல் அர்ளி இன்னஹூ லஹக்கும் மித்ல மா அன்னகும் தன்திகூன்
முஹம்மது ஜான்
ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக்கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.  
அப்துல் ஹமீது பாகவி
வானம், பூமியின் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக இது, (உங்கள் வார்த்தைகளை) நீங்கள்தான் கூறுகிறீர்கள் என்பதில் சந்தேகமில்லாதிருப்பதைப் போல் (இந்த குர்ஆனில் உள்ள அனைத்தும்) உண்மையானதாகும்.
IFT
வானம் மற்றும் பூமியினுடைய அதிபதியின் மீது ஆணையாக! திண்ணமாக, இந்த விஷயம் சத்தியமானது; நீங்கள் பேசிக் கொண்டிருப்பது எவ்வாறு உறுதியானதோ அவ்வாறே இதுவும் உறுதியானது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, வானம், மற்றும் பூமியுடைய இரட்சகன் மீது சத்தியமாக, (உங்கள் வார்த்தைகளை) நிச்சயமாக நீங்கள் தாம் கூறுகின்றீர்கள் என்ப(தில் சந்தேகமில்லாதிருப்ப)தைப்போல, நிச்சயமாக இது_(இந்த குர் ஆனில் உள்ள யாவும்) உண்மையானதாகும்.
Saheeh International
Then by the Lord of the heaven and earth, indeed, it is truth - just as [sure as] it is that you are speaking.
هَلْ اَتٰىكَ حَدِیْثُ ضَیْفِ اِبْرٰهِیْمَ الْمُكْرَمِیْنَ ۟ۘ
هَلْ اَتٰٮكَஉமக்கு வந்ததா?حَدِيْثُசெய்திضَيْفِவிருந்தினர்களின்اِبْرٰهِيْمَஇப்ராஹிமுடையالْمُكْرَمِيْنَ‌ۘ‏கண்ணியமான(வர்கள்)
ஹல் அதாக ஹதீது ளய்Fபி இBப்ராஹீமல் முக்ரமீன்
முஹம்மது ஜான்
இப்ராஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இப்ராஹீமுடைய மிக்க கண்ணியமுள்ள விருந்தினர்களின் விஷயம் உமக்கு எட்டியிருக்கிறதா?
IFT
(நபியே!) இப்ராஹீமிடம் வந்த கண்ணியத்துக்குரிய விருந்தாளிகளின் செய்தி உமக்குக் கிடைத்ததா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) கௌரவத்திற்குரியவர்களான இப்றாஹீமுடைய விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
Saheeh International
Has there reached you the story of the honored guests of Abraham? -
اِذْ دَخَلُوْا عَلَیْهِ فَقَالُوْا سَلٰمًا ؕ قَالَ سَلٰمٌ ۚ قَوْمٌ مُّنْكَرُوْنَ ۟
اِذْ دَخَلُوْاஅவர்கள் நுழைந்த போதுعَلَيْهِஅவரிடம்فَقَالُوْاஅவர்கள் கூறினர்سَلٰمًا‌ؕஸலாம்قَالَகூறினார்سَلٰمٌ ۚ“ஸலாம்”قَوْمٌமக்கள்مُّنْكَرُوْنَ‌‏அறியாத
இத் தகலூ 'அலய்ஹி Fபகாலூ ஸலாமன் கால ஸலாமுன் கவ்மும் முன்கரூன்
முஹம்மது ஜான்
அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி: “உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார்கள்; (அதற்கவர்), “(உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார். “இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே” என்று எண்ணிக் கொண்டார்).
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அவரிடம் வந்தபோது (அவரை நோக்கி “உமக்கு) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!'' என்று கூறினார்கள். அதற்கு (இப்ராஹீம், “உங்களுக்கும்) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!'' என்று கூறி, (இவர்கள் நாம்) அறியாத மக்களாக இருக்கின்றனரே! (என்று தன் மனத்தில் எண்ணினார்.)
IFT
அவர்கள் அவரிடம் வந்தபோது, “உம்மீது சாந்தி நிலவட்டும்!” என்று அவர்கள் கூறினார்கள். அவர் கூறினார்: “உங்கள் மீதும் சாந்தி நிலவுக! அறிமுகமில்லாத ஆட்களாக இருக்கிறார்களே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள், அவரிடம் நுழைந்தபொழுது “சாந்தி உண்டாவதாக!” என்று கூறினார்கள். (அதற்கு இப்றாஹீம் உங்களுக்கும்)” சாந்தி உண்டாவதாக!” என்று கூறி (இவர்கள் நமக்கு) அறிமுகமில்லாத சமூகத்தார் (என்று தன் மனதில் எண்ணிக்கொண்டு,)
Saheeh International
When they entered upon him and said, "[We greet you with] peace." He answered, "[And upon you] peace; [you are] a people unknown."
فَرَاغَ اِلٰۤی اَهْلِهٖ فَجَآءَ بِعِجْلٍ سَمِیْنٍ ۟ۙ
فَرَاغَதிரும்பிச் சென்றார்اِلٰٓى اَهْلِهٖதனது குடும்பத்தாரிடம்فَجَآءَவந்தார்بِعِجْلٍ سَمِيْنٍۙ‏கொழுத்த காளைக் கன்றைக் கொண்டு
Fபராக இலா அஹ்லிஹீ Fபஜா'அ Bபி'இஜ்லின் ஸமீன்
முஹம்மது ஜான்
எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
பிறகு, விரைவாகத் தன் வீட்டினுள் சென்று கொழுத்ததொரு கன்றுவின் (பொரித்த) மாமிசத்தைக் கொண்டுவந்தார்.
IFT
பின்னர், அவர் சந்தடியில்லாமல் தம் வீட்டாரிடம் சென்றார்; (பொரிக்கப்பட்ட) கொழுத்த காளைக்கன்றைக் கொண்டு வந்து
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் தன் இல்லத்தாரிடம் விரைவாகச் சென்று (நெருப்பில் சுடப்பட்ட) கொழுத்தகாளைக் கன்றைக் கொண்டு வந்தார்.
Saheeh International
Then he went to his family and came with a fat [roasted] calf.
فَقَرَّبَهٗۤ اِلَیْهِمْ قَالَ اَلَا تَاْكُلُوْنَ ۟ؗ
فَقَرَّبَهٗۤஅதை நெருக்கமாக்கினார்اِلَيْهِمْஅவர்கள் பக்கம்قَالَகூறினார்اَلَا تَاْكُلُوْنَ‏நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?
Fபகர்ரBபஹூ இலய்ஹிம் கால அலா தா'குலூன்
முஹம்மது ஜான்
அதை அவர்கள் முன் வைத்து, “நீங்கள் புசிக்க மாட்டீர்களா?” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதை அவர்கள் முன் வைத்தார். (ஆனால், அதை அவர்கள் புசிக்கவில்லை. ஆதலால், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் புசிக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார்.
IFT
அதனை விருந்தினர் முன்வைத்தார். பிறகு கூறினார்: “சாப்பிடாமல் இருக்கின்றீர்களே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அதனை அவர்கள் அருகில் வைத்தார். (அவர்கள் உண்ணாததால்) அவர்களிடம், “நீங்கள் உண்ணமாட்டீர்களா” என்று கேட்டார்.
Saheeh International
And placed it near them; he said, "Will you not eat?"
فَاَوْجَسَ مِنْهُمْ خِیْفَةً ؕ قَالُوْا لَا تَخَفْ ؕ وَبَشَّرُوْهُ بِغُلٰمٍ عَلِیْمٍ ۟
فَاَوْجَسَஆகவே, உணர்ந்தார்مِنْهُمْஅவர்களினால்خِيْفَةً ؕபயத்தைقَالُوْاகூறினார்கள்لَا تَخَفْ‌ ؕபயப்படாதீர்وَبَشَّرُوْهُஇன்னும் அவருக்கு நற்செய்தி கூறினார்கள்بِغُلٰمٍஓர் ஆண் குழந்தையைக்கொண்டுعَلِيْمٍ‏கல்வியாளரான
Fப அவ்ஜஸ மின்ஹும் கீ Fபதன் காலூ லா தகFப் வ Bபஷ்ஷரூஹு Bபிகுலாமின் 'அலீம்
முஹம்மது ஜான்
(அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்பட்டது, “(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!” எனக் கூறினர்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
(இருப்பினும், அவர்கள் புசிக்காமலிருப்பதைக் கண்ட) அவர், அவர்களைப் பற்றி பயந்தார். (இதை அறிந்த அவர்கள் ‘‘இப்ராஹீமே!) பயப்படாதீர்'' என்று கூறி, (இஸ்ஹாக் என்னும்) மிக்க ஞானமுள்ள மகனை அவருக்கு நற்செய்தி கூறினார்கள்.
IFT
பின்னர், அவர்களைக் குறித்து அவர் மனத்திற்குள் அஞ்சினார். அவர்களோ, “அஞ்சாதீர்!” என்று கூறினார்கள். மேலும், அறிவுள்ள ஒரு மகன் பிறக்கப் போவதாக அவருக்கு நற்செய்தி அறிவித்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னும் புசிக்காமல் இருந்ததால் தன் மனதில்) அவர்கள் பற்றிய பயத்தை உணர்ந்தார். அப்போது “(இப்ராஹீமே! நீர் பயப்படாதீர்,” என்று அவர்கள் கூறினர், மேலும், (இஸ்ஹாக் என்னும்) அறிவார்ந்த ஆண் குழந்தை (அவருக்குப் பிறக்குமென்ற செய்தி)யைக் கொண்டு அவருக்கு நன்மாராயம் கூறினார்கள்.
Saheeh International
And he felt from them apprehension. They said, "Fear not," and gave him good tidings of a learned boy.
فَاَقْبَلَتِ امْرَاَتُهٗ فِیْ صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوْزٌ عَقِیْمٌ ۟
فَاَقْبَلَتِமுன்னோக்கி வந்தால்امْرَاَتُهٗஅவருடைய மனைவிفِىْ صَرَّةٍசப்தத்தோடுفَصَكَّتْஇன்னும் அறைந்தார்وَجْهَهَاதனது முகத்தைوَقَالَتْஇன்னும் கூறினாள்عَجُوْزٌகிழவி ஆயிற்றேعَقِيْمٌ‏மலடியான(வள்)
Fப அக்Bபலதிம் ர-அதுஹூ Fபீ ஸர்ரதின் Fபஸக்கத் வஜ்ஹஹா வ காலத் 'அஜூZஜுன் 'அகீம்
முஹம்மது ஜான்
பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே!” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(இதைச் செவியுற்ற) அவருடைய மனைவி (ஸாரா) கூச்சலுடன் அவர்கள் முன்வந்து, தன் முகத்தில் அறைந்துகொண்டு ‘‘(நானோ) தள்ளாடிய கிழவி; அதிலும் மலடி. (எவ்விதம் எனக்குக் குழந்தை பிறக்கும்?)'' என்று கூறினார்.
IFT
(அதனைக் கேட்டு) அவருடைய மனைவி கூச்சலிட்டவாறு முன்னே வந்தாள்; தன் முகத்தில் அறைந்து கொண்டு கிழவி, மலடி என்று கூறினாள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், (இதனைச் செவியுற்ற) அவருடைய மனைவி (ஸாரா) உரத்த சப்தத்தில் அவர்கள் எதிரில் வந்து, தன் முகத்தில் அடித்துக் கொண்டு, “(நானோ) மலட்டுக்கிழவி (எவ்விதம் எனக்குக் குழந்தை பிறக்கும்?”) என்று கூறினார். (அதற்கவர்கள்),
Saheeh International
And his wife approached with a cry [of alarm] and struck her face and said, "[I am] a barren old woman!"
قَالُوْا كَذٰلِكِ ۙ قَالَ رَبُّكِ ؕ اِنَّهٗ هُوَ الْحَكِیْمُ الْعَلِیْمُ ۟
قَالُوْاகூறினார்கள்كَذٰلِكِ ۙஅவ்வாறுதான்قَالَகூறினான்رَبُّكِ‌ؕஉமது இறைவன்اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்الْحَكِيْمُமகா ஞானவான்الْعَلِيْمُ‏நன்கறிந்தவன்
காலூ கதாலிகி கால ரBப்Bபுகி இன்னஹூ ஹுவல் ஹகீமுல் 'அலீம்
முஹம்மது ஜான்
(அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று:) “இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்” என்று கூறினார்கள்.  
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘‘இவ்வாறே, உமது இறைவன் கூறுகிறான். நிச்சயமாக அவன்தான் மிக ஞானமுள்ளவன், அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்'' என்றார்கள்.
IFT
அவர்கள் கூறினர்: “ ஆம், அவ்வாறுதான் (நடைபெறும்) என்று உன் இறைவன் கூறியுள்ளான். அவன் நுண்ணறிவாளனாகவும், அனைத்தும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இவ்வாறே உமதிரட்சகன் கூறுகின்றான், நிச்சயமாக, அவனே தீர்க்கமான அறிவுடையோன், (யாவையும்) நன்கறிந்தோன் என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Thus has said your Lord; indeed, He is the Wise, the Knowing."
قَالَ فَمَا خَطْبُكُمْ اَیُّهَا الْمُرْسَلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்فَمَا خَطْبُكُمْஉங்கள் காரியம்தான் என்ன?اَيُّهَا الْمُرْسَلُوْنَ‏தூதர்களே!
கால Fபமா கத்Bபுகும் அய்யுஹல் முர்ஸலூன்
முஹம்மது ஜான்
(பின்னர் இப்ராஹீம்:) “தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?” என்று வினவினார்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர் இப்ராஹீம் வானவர்களை நோக்கி) ‘‘தூதர்களே! உங்கள் காரியமென்ன? (எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்?)'' என்று கேட்டார்.
IFT
இப்ராஹீம் கேட்டார்: “இறைத்தூதர்களே! நீங்கள் எந்தப் பணியை ஆற்ற அனுப்பப்பட்டுள்ளீர்கள்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னர் இப்றாஹீம் மலக்குகளிடம்) “தூதர்களே! உங்கள் காரியமென்ன? (எதற்கு நீங்கள் இங்கு வந்தீர்கள்?) என்று கேட்டார்.
Saheeh International
[Abraham] said, "Then what is your business [here], O messengers?"
قَالُوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمٍ مُّجْرِمِیْنَ ۟ۙ
قَالُـوْۤاகூறினார்கள்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اُرْسِلْنَاۤஅனுப்பப்பட்டுள்ளோம்اِلٰى قَوْمٍமக்கள் பக்கம்مُّجْرِمِيْنَۙ‏குற்றவாளிகளான
காலூ இன்னா உர்ஸில்னா இலா கவ்மிம் முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
“குற்றவாளிகளான ஒரு சமூகத்தினர் பால் நாங்கள் நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘நிச்சயமாக நாங்கள் (பெரும்) குற்றவாளிகளான (லூத் நபியின்) மக்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறினர்.
IFT
அவர்கள் கூறினர்: “குற்றம் புரிந்த ஒரு சமுதாயத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் நிச்சயமாக நாங்கள் குற்றவாளிகளான ஒரு சமூகத்தார் பால் அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Indeed, we have been sent to a people of criminals
لِنُرْسِلَ عَلَیْهِمْ حِجَارَةً مِّنْ طِیْنٍ ۟ۙ
لِنُرْسِلَநாங்கள் எறிவதற்காகعَلَيْهِمْஅவர்கள் மீதுحِجَارَةًகல்லைمِّنْ طِيْنٍۙ‏களிமண்ணினால்ஆன
லினுர்ஸில 'அலய்ஹிம் ஹிஜா ரதம் மின் தீன்
முஹம்மது ஜான்
“அவர்கள் மீது (சுட்ட) களிமண் கற்களை எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-
அப்துல் ஹமீது பாகவி
‘‘நாங்கள், அவர்கள் மீது களி மண்ணால் செய்த (சுட்ட) கற்களை எறிவதற்காக (அனுப்பப்பட்டுள்ளோம்).''
IFT
சுட்ட கற்களை அவர்கள்மீது பொழிவதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நாங்கள், அவர்களின் மீது களிமண்ணால் செய்த (சுட்ட) கற்களை எறிவதற்காக (அனுப்பப்பட்டுள்ளோம்).
Saheeh International
To send down upon them stones of clay,
مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِیْنَ ۟
مُّسَوَّمَةًஅடையாளமிடப்பட்டعِنْدَ رَبِّكَஉமது இறைவனிடம்لِلْمُسْرِفِيْنَ‏பாவிகளுக்காக
முஸவ்வமதன் 'இன்த ரBப்Bபிக லில்முஸ்ரிFபீன்
முஹம்மது ஜான்
“வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை.”
அப்துல் ஹமீது பாகவி
‘‘(அவை) உமது இறைவனிடம் வரம்பு மீறியவர்களுக்கென (பெயர்கள் எழுதப்பட்டு) அடையாளமிடப்பட்டவையாகும்.''
IFT
அவை வரம்பு மீறிச் செல்வோருக்காக உம் இறைவனிடத்தில் அடையாளமிடப்பட்ட கற்களாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வரம்பு மீறியவர்களுக்காக, உமது இரட்சகனிடத்தில் (பெயர்கள் எழுதப்பட்டு) அடையாளமிடப்பட்டவைகளாக (அவை இருக்கின்றன.)”
Saheeh International
Marked in the presence of your Lord for the transgressors."
فَاَخْرَجْنَا مَنْ كَانَ فِیْهَا مِنَ الْمُؤْمِنِیْنَ ۟ۚ
فَاَخْرَجْنَاஆக, நாம் வெளியேற்றி விட்டோம்مَنْ كَانَஇருந்தவர்களைفِيْهَاஅதில்مِنَ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏நம்பிக்கையாளர்களாக
Fப அக்ரஜ்னா மன் கான Fபீஹா மினல் மு'மினீன்
முஹம்மது ஜான்
ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (அவர்கள் அழிவதற்கு முன்னதாகவே அவ்வூரில் இருந்த) நம்பிக்கை கொண்டவர்களை அதிலிருந்து நாம் வெளிப்படுத்தி விட்டோம்.
IFT
பின்னர், அந்த ஊரில் இருந்த இறைநம்பிக்கையாளர்கள் அனைவரையும் நாம் வெளியேற்றினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே (அவர்கள் அழிக்கப்படுவதற்கு முன்,) விசுவாசங்கொண்டவர்களிலிருந்து அ(ந்நகரத்)திலிருந்தவர்களை நாம் வெளியேற்றிவிட்டோம்.
Saheeh International
So We brought out whoever was in them [i.e., the cities] of the believers.
فَمَا وَجَدْنَا فِیْهَا غَیْرَ بَیْتٍ مِّنَ الْمُسْلِمِیْنَ ۟ۚ
فَمَا وَجَدْنَاஆனால் நாம் காணவில்லைفِيْهَاஅதில்غَيْرَ بَيْتٍஒரு வீட்டைத் தவிரمِّنَ الْمُسْلِمِيْنَ‌ۚ‏முஸ்லிம்களுடைய
Fபமா வஜத்னா Fபீஹா கய்ர Bபய்திம் மினல் முஸ்லிமீன்
முஹம்மது ஜான்
எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அதில் (லூத்துடைய) ஒரு வீட்டாரைத் தவிர, நம்பிக்கை கொண்ட ஒருவரையும் நாங்கள் காணவில்லை.
IFT
மேலும், அங்கு ஒரேயொரு வீட்டைத் தவிர முஸ்லிம் வீடுகள் வேறு எதையும் நாம் காணவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டைத் தவிர (மற்றெதையும்) நாம் காணவில்லை.
Saheeh International
And We found not within them other than a [single] house of Muslims.
وَتَرَكْنَا فِیْهَاۤ اٰیَةً لِّلَّذِیْنَ یَخَافُوْنَ الْعَذَابَ الْاَلِیْمَ ۟ؕ
وَتَرَكْنَاநாம் விட்டுள்ளோம்فِيْهَاۤஅதில்اٰيَةًஓர் அத்தாட்சியைلِّـلَّذِيْنَ يَخَافُوْنَபயப்படுகின்றவர்களுக்குالْعَذَابَதண்டனையைالْاَلِيْمَؕ‏வலி தரக்கூடிய(து)
வ தரக்னா Fபீஹா ஆயதல் லில்லதீன யகாFபூனல் 'அதாBபல் அலீம்
முஹம்மது ஜான்
நோவினை தரும் வேதனையை அஞ்சுகிறார்களே அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சியை விட்டு வைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
துன்புறுத்தும் வேதனையை பயப்படுகிறவர்களுக்கு அதில் ஒரு படிப்பினையை விட்டு வைத்தோம்.
IFT
இதன் பின்னர், நாம் அங்கு ஒரு சான்றினை விட்டு வைத்தோம், துன்புறுத்தும் வேதனைக்கு அஞ்சுகின்ற மக்களுக்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், துன்புறுத்தும் வேதனையை பயப்படுகிறார்களே அவர்களுக்கு அதில் ஓர் அத்தாட்சியை நாம் விட்டு வைத்தோம்.
Saheeh International
And We left therein a sign for those who fear the painful punishment.
وَفِیْ مُوْسٰۤی اِذْ اَرْسَلْنٰهُ اِلٰی فِرْعَوْنَ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟
وَفِىْ مُوْسٰۤیஇன்னும் மூஸாவிலும்اِذْ اَرْسَلْنٰهُநாம் அவரை அனுப்பிய போதுاِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்بِسُلْطٰنٍஆதாரத்தைக் கொண்டுمُّبِيْنٍ‏தெளிவான(து)
வ Fபீ மூஸா இத் அர்ஸல்னாஹு இலா Fபிர்'அவ்ன Bபிஸுல்தா னிம் முBபீன்
முஹம்மது ஜான்
மேலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர் அத்தாட்சி இருக்கிறது; நாம் அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிய போது:
அப்துல் ஹமீது பாகவி
மூஸாவுடைய (சரித்திரத்)திலும் (ஒரு படிப்பினை) இருக்கிறது. தெளிவான அத்தாட்சிகளுடன் அவரை ஃபிர்அவ்னிடம் நாம் அனுப்பிய சமயத்தில்,
IFT
மேலும், மூஸாவின் வரலாற்றில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) நாம் தெளிவான சான்றுடன் அவரை ஃபிர்அவ்னிடம் அனுப்பியபோது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், மூஸாவி(ன் சரித்திரத்தி)லும்_(ஒரு படிப்பினை இருக்கின்றது), தெளிவான சான்றுடன் ஃபிர் அவ்னின்பால் அவரை நாம் அனுப்பியபோது,
Saheeh International
And in Moses [was a sign], when We sent him to Pharaoh with clear authority.
فَتَوَلّٰی بِرُكْنِهٖ وَقَالَ سٰحِرٌ اَوْ مَجْنُوْنٌ ۟
فَتَوَلّٰىவிலகினான்بِرُكْنِهٖதனது பலத்தினால்وَقَالَஇன்னும் கூறினான்سٰحِرٌஒரு சூனியக்காரர்(தான்)اَوْஅல்லதுمَجْنُوْنٌ‏ஒரு பைத்தியக்காரர்(தான்)
Fபதவல்ல Bபிருக்னிஹீ வ கால ஸாஹிருன் அவ் மஜ்னூன்
முஹம்மது ஜான்
அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து: “இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் வலுவான தன் ஆட்சியின் கர்வத்தால் அவரைப் புறக்கணித்து, ‘‘இவரொரு சூனியக்காரர்; அல்லது பைத்தியக்காரர்'' என்று கூறினான்.
IFT
அவன் தன் வலிமையின் காரணமாக செருக் குற்றுப் புறக்கணித்தான். மேலும், “இவர் ஒரு சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் தன்னுடைய (பக்கபலமென்று நினைத்த படைகள், அதிகாரம் ஆகியவற்றின்) பலத்தால் (அவரைப்) புறக்கணித்தான், இன்னும் (இவர்) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று அவன் கூறினான்.
Saheeh International
But he turned away with his supporters and said, "A magician or a madman."
فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِی الْیَمِّ وَهُوَ مُلِیْمٌ ۟ؕ
فَاَخَذْنٰهُஅவனையும் நாம் பிடித்தோம்وَجُنُوْدَهٗஅவனுடைய ராணுவங்களையும்فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّஅவர்களை எறிந்தோம்/கடலில்وَهُوَஅவனோمُلِيْمٌؕ‏பழிப்புக்குள்ளானவன்
Fப அகத்னாஹு வ ஜுனூ தஹூ FபனBபத்னாஹும் Fபில் யம்மி வ ஹுவ முலீம்
முஹம்மது ஜான்
ஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும் பிடித்து அவர்களைக் கடலில் எறிந்தோம்; அவன் நிந்தனைக்கும் ஆளாகி விட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், அவனையும் அவனுடைய படைகளையும் நாம் பிடித்துக் கடலில் எறிந்துவிட்டோம். அவன் என்றென்றுமே நிந்தனைக்குள்ளாகி விட்டான்.
IFT
இறுதியில் நாம் அவனையும் அவனுடைய படைகளையும் பிடித்தோம். அவர்கள் அனைவரையும் கடலில் எறிந்துவிட்டோம். மேலும், அவன் பழிப்புக்குரியவனாகிவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆதலால், அவனையும், அவனுடைய படைகளையும் நாம் பிடித்தோம், பின்னர் அவர்களைக் கடலில் எறிந்துவிட்டோம், அவனோ (என்றென்றுமே) நிந்தனைக்குள்ளாக்கப்பட்டுவிட்டான்.
Saheeh International
So We took him and his soldiers and cast them into the sea, and he was blameworthy.
وَفِیْ عَادٍ اِذْ اَرْسَلْنَا عَلَیْهِمُ الرِّیْحَ الْعَقِیْمَ ۟ۚ
وَفِىْ عَادٍஇன்னும் ஆதிலும்اِذْ اَرْسَلْنَاநாம் அனுப்பியபோதுعَلَيْهِمُஅவர்கள் மீதுالرِّيْحَ الْعَقِيْمَ‌ۚ‏மலட்டுக் காற்றை
வ Fபீ 'ஆதின் இத் அர்ஸல்னா 'அலய்ஹிமுர் ரீஹல்'அகீம்
முஹம்மது ஜான்
இன்னும், “ஆது” (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக்காற்றை அனுப்பிய போது;
அப்துல் ஹமீது பாகவி
‘ஆது' என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு). அவர்கள் மீது நாம் (நாசகரமான) மலட்டுக் காற்றை அனுப்பிய சமயத்தில்,
IFT
மேலும், ஆத் சமூகத்தினரில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) அவர்கள் மீது நாம் நாசத்தை ஏற்படுத்தும் காற்றை அனுப்பினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
‘ஆது’ வி(ன் சமூகத்தார்களி)லும்_(ஓர் அத்தாட்சி உண்டு) அவர்கள் மீது, நாம் (நாசகரமான) மலட்டுக் காற்றை அனுப்பிய சமயத்தில்,
Saheeh International
And in ʿAad [was a sign], when We sent against them the barren wind.
مَا تَذَرُ مِنْ شَیْءٍ اَتَتْ عَلَیْهِ اِلَّا جَعَلَتْهُ كَالرَّمِیْمِ ۟ؕ
مَا تَذَرُஅது விடாதுمِنْ شَىْءٍஎதையும்اَتَتْசெல்கிறதோعَلَيْهِஅதன் மீதுاِلَّا جَعَلَتْهُஅதை ஆக்காமல்كَالرَّمِيْمِؕ‏பழைய மக்கிப்போன பொருளைப் போன்று
மா ததரு மின் ஷய்'இன் அதத் 'அலய்ஹி இல்லா ஜ'அலத் ஹு கர்ரமீம்
முஹம்மது ஜான்
அ(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அது பட்டதையெல்லாம் தூசியா(க்கிப் பறக்கடி)க்காமல் விடவில்லை.
IFT
அது எந்த ஒரு பொருளின்மீது பட்டபோதிலும் அதனைச் சிதைத்து அழித்துவிட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எப்பொருளிலிருந்தும் அதன்மீது அ(க்காற்றன)து (கடந்து) வந்து, அதை மக்கிப் போனதைப் போன்று ஆக்கியே தவிர அது விட்டு வைக்கவில்லை.
Saheeh International
It left nothing of what it came upon but that it made it like disintegrated ruins.
وَفِیْ ثَمُوْدَ اِذْ قِیْلَ لَهُمْ تَمَتَّعُوْا حَتّٰی حِیْنٍ ۟
وَفِىْ ثَمُوْدَஇன்னும் சமூதிலும்اِذْ قِيْلَசொல்லப்பட்ட போதுلَهُمْஅவர்களுக்குتَمَتَّعُوْاசுகமாக இருங்கள் என்றுحَتّٰىவரைحِيْنٍ‏சிறிது காலம்
வ Fபீ தமூத இத் கீல லஹும் தமத்த''ஊ ஹத்தா ஹீன்
முஹம்மது ஜான்
மேலும் “ஸமூது” (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); “ஒரு காலம் சுகம் அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது:
அப்துல் ஹமீது பாகவி
‘ஸமூது' என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு). ‘‘நீங்கள் ஒரு காலம் வரை சுகமாக வாழ்ந்திருங்கள்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு,
IFT
மேலும், ஸமூத் கூட்டத்தாரில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) “ஒரு குறிப்பிட்ட காலம் வரை சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டபோது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
‘ஸமூது’ வி(ன் கூட்டத்தாரி)லும் (ஓர் அத்தாட்சியுண்டு) “நீங்கள் ஒரு காலம் வரையில் சுகம் அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது,
Saheeh International
And in Thamūd, when it was said to them, "Enjoy yourselves for a time."
فَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ وَهُمْ یَنْظُرُوْنَ ۟
فَعَتَوْاபெருமை அடித்தனர்عَنْ اَمْرِகட்டளையை ஏற்காமல்رَبِّهِمْதங்கள் இறைவனின்فَاَخَذَتْهُمُஅவர்களைப் பிடித்ததுالصّٰعِقَةُஇடிமுழக்கம்وَ هُمْஅவர்களோيَنْظُرُوْنَ‏எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்
Fப'அதவ் 'அன் அம்ரி ரBப்Bபிஹிம் Fப அகதத் ஹுமுஸ் ஸா'இகது வ ஹும் யன்ளுரூன்
முஹம்மது ஜான்
அவர்கள் தங்கள் இறைவனுடைய கட்டளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை மீறினார்கள். ஆகவே, அவர்கள் (தங்களை அழிக்க வந்த மேகத்தைப்) பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களை ஓர் இடி முழக்கம் பிடித்துக் கொண்டது.
IFT
(இந்த எச்சரிக்கைக்குப் பிறகும்) அவர்கள் தங்கள் அதிபதியின் கட்டளையை ஆணவத்துடன் மீறினார்கள். இறுதியில், அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென்று உடைந்துவிழும் வேதனை ஒன்று அவர்களைப் பிடித்துக் கொண்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்கள் இரட்சகனின் கட்டளையை அவர்கள் மீறினார்கள், ஆகவே, அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக்கொண்டது.
Saheeh International
But they were insolent toward the command of their Lord, so the thunderbolt seized them while they were looking on.
فَمَا اسْتَطَاعُوْا مِنْ قِیَامٍ وَّمَا كَانُوْا مُنْتَصِرِیْنَ ۟ۙ
فَمَا اسْتَطَاعُوْاஇயலாமல் ஆகிவிட்டார்கள்مِنْ قِيَامٍநிற்பதற்குوَّمَا كَانُوْاஇருக்கவில்லைمُنْتَصِرِيْنَۙ‏பழிதீர்ப்பவர்களாகவும்
Fபமஸ் ததா'ஊ மின் கியாமி(ன்)வ் வமா கானூ முன்தஸிரீன்
முஹம்மது ஜான்
ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்தி பெற்றார்களில்லை; (எத்தகைய) உதவியும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்கள் நிற்கவும் முடியவில்லை. (உட்காரவும் முடியவில்லை;) நம்மிடம் பழிவாங்கவும் முடியவில்லை. (இருந்தவாறே அழிந்து விட்டனர்.)
IFT
பின்னர், அவர்களால் எழுந்து நிற்கவும் முடியவில்லை; தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடியவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்திபெறவில்லை, (நம்முடைய வேதனையிலிருந்து தப்பிக்க எவரிடமிருந்தும்) உதவி பெறுபவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை.
Saheeh International
And they were unable to arise, nor could they defend themselves.
وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟۠
وَقَوْمَஇன்னும் மக்களையும்نُوْحٍநூஹூடையمِّنْ قَبْلُ‌ؕஇதற்கு முன்னர்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தனர்قَوْمًاமக்களாகفٰسِقِيْنَ‏பாவிகளான
வ கவ்ம னூஹிம் மின் கBப்லு இன்னஹும் கானூ கவ்மன் Fபாஸிகீன்
முஹம்மது ஜான்
அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இதற்கு முன்னர் (இருந்த) நூஹுடைய மக்களையும் (அழித்து விட்டோம்). நிச்சயமாக அவர்களும் பாவம் செய்யும் மக்களாகவே இருந்தனர்.
IFT
மேலும், இவர்கள் அனைவருக்கும் முன்பு நூஹின் சமூகத்தினரை நாம் அழித்தோம்; ஏனெனில், அவர்கள் தீய மக்களாய் இருந்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவர்கள் அனைவருக்கும்) முன்னர் நூஹுடைய சமூகத்தாரையும் (நாம் அழித்துவிட்டோம்) நிச்சயமாக அவர்கள், பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தனர்.
Saheeh International
And [We destroyed] the people of Noah before; indeed, they were a people defiantly disobedient.
وَالسَّمَآءَ بَنَیْنٰهَا بِاَیْىدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ ۟
وَ السَّمَآءَவானத்தைبَنَيْنٰهَاஅதை நாம் உயர்த்தினோம்بِاَيْٮدٍபலத்தால்وَّاِنَّاநிச்சயமாக நாம்لَمُوْسِعُوْنَ‏மிகவும் வசதி படைத்தவர்கள் ஆவோம்
வஸ்ஸமா'அ Bபனய்னா ஹா Bபி அய்தி(ன்)வ் வ இன்னா லமூஸி'ஊன்
முஹம்மது ஜான்
மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
அப்துல் ஹமீது பாகவி
(எவருடைய உதவியுமின்றி) நம் சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் (அதை அவர்களின் அறிவிற்கெல்லாம் எட்டாதவாறு) மிக்க விசாலமாக்கியும் வைத்திருக்கிறோம்.
IFT
வானத்தை நாம் நம் வலிமையினால் படைத்துள்ளோம்.மேலும், நாம் அதற்கான ஆற்றல் உடையவராக இருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், வானத்தை (எவருடைய உதவியுமின்றி) நம்முடைய சக்தியைக் கொண்டே அதை நாம் அமைத்தோம், நிச்சயமாக நாம் (படைக்கின்ற காரியத்தில்) மிக்க விசாலத்தை உடையோராக இருக்கிறோம் (யாவும் நம் சக்திக்குட்பட்டதே).
Saheeh International
And the heaven We constructed with strength, and indeed, We are [its] expander.
وَالْاَرْضَ فَرَشْنٰهَا فَنِعْمَ الْمٰهِدُوْنَ ۟
وَالْاَرْضَபூமியைفَرَشْنٰهَاஅதை நாம் விரித்தோம்فَنِعْمَநாம் மிகச் சிறந்தவர்கள்الْمٰهِدُوْنَ‏விரிப்பவர்களில்
வல் அர்ள Fபரஷ்னாஹா Fபனிஃமல் மாஹிதூன்
முஹம்மது ஜான்
இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.
அப்துல் ஹமீது பாகவி
பூமியை நாம் (விசாலமாக) விரித்தோம். விரிப்பவர்களிலெல்லாம் மிக்க மேலான விதத்தில் விரிப்பவர் நாமே.
IFT
பூமியை நாம் விரித்திருக்கின்றோம். நாம் மிகச் சிறந்த முறையில் செம்மைப்படுத்துபவர்களாய் இருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், பூமியை_அதனை நாம் (விசாலமாக) விரித்தோம், (அதனைச் சீர்படுத்தி செவ்வையாக்கி) விரிப்போரில் (நாம்) நல்லோராவோம்.
Saheeh International
And the earth We have spread out, and excellent is the preparer.
وَمِنْ كُلِّ شَیْءٍ خَلَقْنَا زَوْجَیْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
وَمِنْ كُلِّ شَىْءٍஒவ்வொன்றிலும்خَلَقْنَاபடைத்தோம்زَوْجَيْنِஇரண்டு ஜோடிகளைلَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
வ மின் குல்லி ஷய்'இன் கலக்னா Zஜவ்ஜய்னி ல'அல்லகும் ததக்கரூன்
முஹம்மது ஜான்
நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வொரு வஸ்துக்களையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாகவே நாம் படைத்திருக்கிறோம். (இதைக்கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக!
IFT
மேலும், நாம் ஒவ்வொன்றையும் இணைகளாய்ப் படைத்திருக்கின்றோம். நீங்கள் இதிலிருந்து படிப்பினை பெறக்கூடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக ஒவ்வொரு பொருளிலிருந்தும் (ஆண், பெண் கொண்ட) இருவகையை நாம் படைத்திருக்கின்றோம்.
Saheeh International
And of all things We created two mates [i.e., counterparts]; perhaps you will remember.
فَفِرُّوْۤا اِلَی اللّٰهِ ؕ اِنِّیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۚ
فَفِرُّوْۤاஆகவே விரண்டு ஓடுங்கள்اِلَى اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின் பக்கம்اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குمِّنْهُஅவனிடமிருந்துنَذِيْرٌஎச்சரிப்பாளர்مُّبِيْنٌ‌ۚ‏தெளிவான(வர்)
FபFபிர்ரூ இலல் லாஹி இன்னீ லகும் மின்ஹு னதீரும் முBபீன்
முஹம்மது ஜான்
ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக).
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் வெகு தீவிரமாக நீங்கள் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் அவனைப் பற்றி உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.
IFT
எனவே, ஓடி வாருங்கள், அல்லாஹ்வின் பக்கம்! நான் அவனுடைய சார்பாக உங்களுக்குத் தெள்ளத்தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, “(நிராகரிப்பு, பாவம் ஆகியவற்றிலிருந்து விலகி), அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் விரைந்து செல்லுங்கள், நிச்சயமாக நான், அவனிடமிருந்து உங்களுக்குக் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவ(னாக இருக்கிறே)ன்,
Saheeh International
So flee to Allah. Indeed, I am to you from Him a clear warner.
وَلَا تَجْعَلُوْا مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ؕ اِنِّیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
وَلَا تَجْعَلُوْاஏற்படுத்தாதீர்கள்مَعَ اللّٰهِஅல்லாஹ்வுடன்اِلٰهًا اٰخَرَ‌ؕவேறு ஒரு கடவுளைاِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குمِّنْهُஅவனிடமிருந்துنَذِيْرٌஎச்சரிப்பாளர்مُّبِيْنٌ‌ۚ‏தெளிவான(வர்)
வ லா தஜ்'அலூ ம'அல் லாஹி இலாஹன் ஆகர இன்னீ லகும் மின்ஹு னதீரும் முBபீன்
முஹம்மது ஜான்
மேலும், அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே - இருக்கின்றேன் (என்றும் கூறும்).
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனை ஆக்காதீர்கள். நிச்சயமாக நான், அவனிடமிருந்து உங்களுக்கு (இதைப் பற்றியும்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராக இருக்கிறேன்.
IFT
அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக நான் அவனுடைய சார்பில் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வுடன் வேறொரு (வணக்கத்திற்குரிய) நாயனை ஆக்காதீர்கள், நிச்சயமாக நான், அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் (என்று நபியே! நீர் கூறுவீராக!).
Saheeh International
And do not make [as equal] with Allah another deity. Indeed, I am to you from Him a clear warner.
كَذٰلِكَ مَاۤ اَتَی الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا قَالُوْا سَاحِرٌ اَوْ مَجْنُوْنٌ ۟ۚ
كَذٰلِكَஇவ்வாறுதான்مَاۤ اَتَىவந்ததில்லைالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْஇவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்குمِّنْ رَّسُوْلٍஒரு தூதரும்اِلَّا قَالُوْاஇவர்கள் கூறாமல்سَاحِرٌஒருசூனியக்காரர்اَوْ مَجْنُوْنٌ‌ۚ‏அல்லது ஒரு பைத்தியக்காரர்
கதாலிக மா அதல் லதீன மின் கBப்லிஹிம் மிர் ரஸூலின் இல்லா காலூ ஸாஹிருன் அவ் மஜ்னூன்
முஹம்மது ஜான்
இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதிலும், அவரை சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமலிருக்கவில்லை.
IFT
இப்படித்தான் நடந்துகொண்டு வருகின்றது. இவர்களுக்கு முன்னிருந்த சமூகத்தாரிடம் எந்த ஓர் இறைத்தூதர் வந்தாலும் அவரை அம்மக்கள் “இவர் ஒரு சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்” என்றுதான் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறே அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களுக்கு எந்த தூதரும் வந்ததில்லை, (அவர்களிடம் வந்த அத்தூதரை) சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று அவர்கள் கூறியே தவிர
Saheeh International
Similarly, there came not to those before them any messenger except that they said, "A magician or a madman."
اَتَوَاصَوْا بِهٖ ۚ بَلْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ ۟ۚ
اَتَوَاصَوْاஇவர்கள் தங்களுக்குள் உபதேசித்துக் கொண்டார்களா?بِهٖ‌ۚஇதைبَلْமாறாகهُمْஇவர்கள்قَوْمٌமக்கள்طَاغُوْنَ‌ۚ‏வரம்பு மீறிய(வர்கள்)
அதவாஸவ் Bபிஹ்; Bபல் ஹும் கவ்முன் தாகூன்
முஹம்மது ஜான்
இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு கூறும்படியே) அவர்கள் தங்களுக்குள் (பரம்பரை பரம்பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனர் போலும்! இல்லை, அவர்கள் (இயற்கையிலேயே இவ்வாறு கூறக் கூடிய) அநியாயக்கார மக்களாக இருந்தனர்.
IFT
இவர்கள் அனைவரும் இது தொடர்பாக தமக்குள் ஏதேனும் ஒப்பந்தம் செய்துகொண்டார்களா, என்ன? அவ்வாறில்லை. மாறாக, இவர்கள் வரம்புமீறிச் செல்கின்ற மக்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறு (கூறுமாறே) அவர்கள் (தங்களுக்குள் பரம்பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனரா? இல்லை! அவர்கள் (இயற்கையிலேயே) அட்டூழியம் செய்யும் கூட்டத்தாராவர்.
Saheeh International
Did they suggest it to them? Rather, they [themselves] are a transgressing people.
فَتَوَلَّ عَنْهُمْ فَمَاۤ اَنْتَ بِمَلُوْمٍ ۟
فَتَوَلَّஆகவே விலகுவீராகعَنْهُمْஅவர்களை விட்டுفَمَاۤ اَنْتَநீர் இல்லைبِمَلُوْمٍ‏பழிக்கப்பட்டவராக
Fபதவல்ல 'அன்ஹும் Fபமா அன்த Bபிமலூம்
முஹம்மது ஜான்
ஆகவே (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. (அவர்கள் நிராகரிப்பதைப் பற்றி) நீர் நிந்திக்கப்பட மாட்டீர்.
IFT
ஆகவே (நபியே!) இவர்களை விட்டு முகம் திருப்பிக் கொள்ளும். நீர் பழிப்புக்குரியவரல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! (அதற்காக) நீர் நிந்திக்கபடுபவரல்லர்.
Saheeh International
So leave them, [O Muhammad], for you are not to be blamed.
وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰی تَنْفَعُ الْمُؤْمِنِیْنَ ۟
وَّذَكِّرْநீர் நல்லுபதேசம் செய்வீராக!فَاِنَّநிச்சயமாகالذِّكْرٰىநல்லுபதேசம்تَنْفَعُபலனளிக்கும்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
வ தக்கிர் Fப இன்னத் திக்ரா தன்Fப'உல் மு'மினீன்
முஹம்மது ஜான்
மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக. நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும்.
IFT
ஆயினும், அறிவுரை கூறிக்கொண்டிருப்பீராக! ஏனெனில், அறிவுரை இறைநம்பிக்கை கொள்வோருக்குப் பயனளிக்கக் கூடியதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனென்றால் நிச்சயமாக நல்லுபதேசம் விசுவாசிகளுக்குப் பயனளிக்கும்.
Saheeh International
And remind, for indeed, the reminder benefits the believers.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِیَعْبُدُوْنِ ۟
وَمَا خَلَقْتُநான் படைக்கவில்லைالْجِنَّஜின்களையும்وَالْاِنْسَமனிதர்களையும்اِلَّاதவிரلِيَعْبُدُوْنِ‏அவர்கள் என்னை வணங்குவதற்கே
வமா கலக்துல் ஜின்ன வல் இன்ஸ இல்லா லியஃBபுதூன்
முஹம்மது ஜான்
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஜின்களையும், மனிதர்களையும் (அவர்கள் என்னை அறிந்து) என்னை வணங்குவதற்கே தவிர (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை.
IFT
நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை.
Saheeh International
And I did not create the jinn and mankind except to worship Me.
مَاۤ اُرِیْدُ مِنْهُمْ مِّنْ رِّزْقٍ وَّمَاۤ اُرِیْدُ اَنْ یُّطْعِمُوْنِ ۟
مَاۤ اُرِيْدُநான் நாடவில்லைمِنْهُمْஅவர்களிடம்مِّنْ رِّزْقٍஎவ்வித உணவையும்وَّمَاۤ اُرِيْدُநான் நாடவில்லைاَنْ يُّطْعِمُوْنِ‏அவர்கள் எனக்கு உணவளிப்பதையும்
மா உரீது மின்ஹும் மிர் ரிZஜ்கி(ன்)வ் வ மா உரீது அ(ன்)ய்யுத்'இமூன்
முஹம்மது ஜான்
அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களிடத்தில் நான் ஒரு பொருளையும் கேட்கவில்லை. அவர்கள் எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் நான் கோரவில்லை. (ஆகவே,)
IFT
நான் அவர்களிடமிருந்து எந்த வாழ்வாதாரத்தையும் நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளித்திட வேண்டுமென்றும் நான் நாடவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களிடத்தில் (என் படைப்புகளுக்காக) நான் யாதொரு உணவையும் நாடவில்லை, அன்றியும், எனக்கு அவர்கள் உணவளிப்பதையும் நான் நாடவில்லை.
Saheeh International
I do not want from them any provision, nor do I want them to feed Me.
اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِیْنُ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَ هُوَஅல்லாஹ்தான்الرَّزَّاقُ(எல்லோருக்கும்) உணவளிப்பவன்ذُو الْقُوَّةِபலமுள்ளவன்الْمَتِيْنُ‏மிக உறுதியுடையவன்
இன்னல் லாஹ ஹுவர் ரZஜ்Zஜாகு துல் குவ்வதில் மதீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நீர் கூறுவீராக:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்க முடியாத பலசாலியுமாவான்.
IFT
நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப்பவனாகவும், பெரும் ஆற்றலுடையவனாகவும், வலிமைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! நீர் கூறுவீராக:) “நிச்சயமாக அல்லாஹ்_அவன்தான் (யாவருக்கும்) மிக்க உணவளிப்பவன், பலமுடையவன், உறுதியானவன்.”
Saheeh International
Indeed, it is Allah who is the [continual] Provider, the firm possessor of strength.
فَاِنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذَنُوْبًا مِّثْلَ ذَنُوْبِ اَصْحٰبِهِمْ فَلَا یَسْتَعْجِلُوْنِ ۟
فَاِنَّநிச்சயமாகلِلَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயம் செய்தவர்களுக்குذَنُوْبًاபெரிய பங்குண்டுمِّثْلَபோலذَنُوْبِபெரிய பங்குاَصْحٰبِهِمْஅவர்களின் கூட்டாளிகளுடையفَلَا يَسْتَعْجِلُوْنِ‏ஆகவே, அவர்கள் அவசரமாகத் தேடவேண்டாம்
Fப இன்ன லில்லதீன ளலமூ தனூBபம் மித்ல தனூBபி அஸ்ஹாBபிஹிம் Fபலா யஸ்தஃஜிலூன்
முஹம்மது ஜான்
எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு; ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வக்கிரமக்காரர்களின் நண்பர்களுக்கு இருந்த (நன்மை, தீமையை அளக்கக்கூடிய) அளவுப் படிகளைப் போலவே, நிச்சயமாக இவர்களுக்கும் அளவுப் படிகளுண்டு. (அவை நிறைந்ததும் வேதனையைக் கொண்டு இவர்களைப் பிடித்துக் கொள்வோம்.) ஆதலால், அவர்கள் அவசரப்பட வேண்டாம்.
IFT
இவர்களுக்கு முன்னிருந்த கொடுமைக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட வேதனையின் பங்கு போலவே, இந்தக் கொடுமைக்காரர்களுக்கும், அவர்களுடைய வேதனை தயாராக இருக்கின்றது. அதற்காக இவர்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, நிச்சயமாக அநியாயம் செய்து விட்டார்களே, அவர்களுக்கு (முன் வாழ்ந்த) அவர்களுடைய சிநேகிதர்களுக்கிருந்த பங்கைப்போன்று (வேதனையில்) பங்குண்டு ஆகவே, அவர்கள் (தண்டனைக்காக என்னிடம்) அவசரப்படவேண்டாம்.
Saheeh International
And indeed, for those who have wronged is a portion [of punishment] like the portion of their companions [i.e., predecessors], so let them not impatiently urge Me.
فَوَیْلٌ لِّلَّذِیْنَ كَفَرُوْا مِنْ یَّوْمِهِمُ الَّذِیْ یُوْعَدُوْنَ ۟۠
فَوَيْلٌஆகவே, நாசம் உண்டாகட்டும்لِّـلَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களுக்குمِنْ يَّوْمِهِمُஅவர்களின் நாளில்الَّذِىْஎதுيُوْعَدُوْنَ‏அவர்கள் வாக்களிக்கப்பட்டார்கள்
Fபவய்லுல் லில்லதீன கFபரூ மி(ன்)ய் யவ்மிஹிமுல் லதீ யூ'அதூன்
முஹம்மது ஜான்
ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
(விசாரணைக்காக பாவிகளுக்கு) வாக்களிக்கப்பட்ட நாளில் இந்நிராகரிப்பவர்களுக்குக் கேடுதான்.
IFT
நிராகரிப்பாளர்களுக்கு இறுதியில் எந்த நாளைக் குறித்து அவர்களுக்கு அச்சுறுத்தப்பட்டு வருகின்றதோ, அந்த நாளில் மாபெரும் அழிவு இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகையால், நிராகரித்தோருக்கு_ அவர்கள் வாக்களிக்கப்பட்டுள்ளார்களே அத்தகைய அவர்களுடைய நாளில் கேடுதான்.
Saheeh International
And woe to those who have disbelieved from their Day which they are promised.