54. ஸூரத்துல் கமர் (சந்திரன்)

மக்கீ, வசனங்கள்: 55

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
اِقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ ۟
اِقْتَـرَبَتِநெருங்கிவிட்டதுالسَّاعَةُமறுமைوَانْشَقَّஇன்னும் பிளந்து விட்டதுالْقَمَرُ‏சந்திரன்
இக்தரBபதிஸ் ஸா'அது வன் ஷக்கல் கமர்
முஹம்மது ஜான்
(இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.
அப்துல் ஹமீது பாகவி
மறுமை நெருங்கிவிட்டது. (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது.
IFT
மறுமைக்கான நேரம் நெருங்கிவிட்டது. மேலும், சந்திரன் பிளந்து விட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மறுமைநாள் நெருங்கிவிட்டது, (அது பற்றித் தெரிவிக்க) சந்திரனும் பிளந்து விட்டது.
Saheeh International
The Hour has come near, and the moon has split [in two].
وَاِنْ یَّرَوْا اٰیَةً یُّعْرِضُوْا وَیَقُوْلُوْا سِحْرٌ مُّسْتَمِرٌّ ۟
وَاِنْ يَّرَوْاஅவர்கள் பார்த்தால்اٰيَةًஓர் அத்தாட்சியைيُّعْرِضُوْاபுறக்கணிக்கின்றனர்وَيَقُوْلُوْاஇன்னும் கூறுகின்றனர்سِحْرٌசூனியமாகும்مُّسْتَمِرٌّ‏தொடர்ச்சியான(து)
வ இ(ன்)ய் யரவ் ஆயத(ன்)ய் யுஃரிளூ வ யகூலூ ஸிஹ்ருன் முஸ்தமிர்ர்
முஹம்மது ஜான்
எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள்; “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் (அதைப்) புறக்கணித்து ‘‘இது சகஜமான சூனியம்தான்'' என்று கூறுகின்றனர்.
IFT
ஆனால் (இந்த மக்களின் நிலைமை என்னவெனில்), எந்தச் சான்றினைப் பார்த்தாலும் புறக்கணிக்கின்றார்கள். மேலும், “இது எப்போதும் நடைபெறுகின்ற சூனியம்தான்” என்றும் சொல்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும், (அதனை) அவர்கள் புறக்கணித்துவிட்டு, இது (நாள்தோறும்) தொடர்ந்துவரும் சூனியம் என்றும் கூறுகின்றனர்.
Saheeh International
And if they see a sign [i.e., miracle], they turn away and say, "Passing magic."
وَكَذَّبُوْا وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ وَكُلُّ اَمْرٍ مُّسْتَقِرٌّ ۟
وَكَذَّبُوْاஇன்னும் அவர்கள் பொய்ப்பித்தனர்وَاتَّبَعُوْۤاஇன்னும் பின்பற்றினார்கள்اَهْوَآءَهُمْ‌தங்கள் மன இச்சைகளைوَكُلُّஎல்லாاَمْرٍகாரியங்களும்مُّسْتَقِرٌّ‏நிலையாகத் தங்கக் கூடியதுதான்
வ கத்தBபூ வத்தBப'ஊ அஹ்வா'அஹும்; வ குல்லு அம்ரின் முஸ்தகிர்ர்
முஹம்மது ஜான்
அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அதை பொய்யாக்கி தங்களது சரீர இச்சைகளையே பின்பற்றுகின்றனர். (அவர்கள் எதை புறக்கணித்தாலும் வரவேண்டிய) ஒவ்வொரு விஷயமும் (அதனதன் நேரத்தில்) உறுதியாகி விடும்.
IFT
இவர்கள் (இதனையும்) பொய்யெனக் கூறிவிட்டார்கள். மேலும், தங்கள் மன இச்சைகளையே பின்பற்றினார்கள். ஒவ்வொரு விவகாரமும் ஒரு முடிவை அடைந்தே தீரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அதனை அவர்கள் பொய்யாக்கிவிட்டனர், தங்களின் மனோ ஆசைகளையே பின்பற்றுகின்றனர், (அவர்கள் எவ்வாறு நடந்துகொண்ட போதிலும், வரவேண்டிய) ஒவ்வொரு காரியமும் (அதனதன் நேரத்தில்) நிலை பெறக்கூடியதாகும்.
Saheeh International
And they denied and followed their inclinations. But for every matter is a [time of] settlement.
وَلَقَدْ جَآءَهُمْ مِّنَ الْاَنْۢبَآءِ مَا فِیْهِ مُزْدَجَرٌ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகجَآءَவந்துவிட்டதுهُمْஅவர்களிடம்مِّنَ الْاَنْۢبَآءِசெய்திகளில்مَا فِيْهِஎதில் இருக்குமோمُزْدَجَرٌۙ‏எச்சரிக்கை
வ லகத் ஜா'அஹும் மினல் அன்Bபா'இ மா Fபீஹி முZஜ்தஜர்
முஹம்மது ஜான்
அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களுக்குப்) போதுமான படிப்பினை தரக்கூடிய பல விஷயங்கள் (இதற்கு முன்னரும்) நிச்சயமாக அவர்களிடம் வந்தே இருக்கின்றன.
IFT
மேலும், இவர்களிடம் (முந்தைய சமுதாயங்களின்) செய்திகள் வந்துவிட்டிருக்கின்றன. அவற்றில் வரம்பு மீறிய நடத்தையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு போதுமான படிப்பினைகள் உள்ளன;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எதில் (அவர்களுக்கு) அச்சுறுத்தல் உண்டோ அத்தகைய செய்திகள், (இதற்கு முன்னரும்) திட்டமாக அவர்களுக்கு வந்திருக்கின்றன.
Saheeh International
And there has already come to them of information that in which there is deterrence.
حِكْمَةٌ بَالِغَةٌ فَمَا تُغْنِ النُّذُرُ ۟ۙ
حِكْمَةٌ ۢஞானம்بَالِغَةٌ‌மிக ஆழமான(து)فَمَا تُغْنِஆனால், பலனளிக்க முடியவில்லைالنُّذُرُۙ‏எச்சரிப்பாளர்கள்
ஹிக்மதுன் Bபாலிகதுன் Fபமா துக்னின் னுதுர்
முஹம்மது ஜான்
நிறைவான ஞானம் உடையவை - ஆனால் (அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(அவை அவர்களுக்கு) முழு ஞானம் அளிக்கக்கூடியவைதான். எனினும், (அவற்றைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்தது (இவர்களுக்கு) ஒரு பயனும் அளிக்கவில்லை.
IFT
மேலும், அறிவுரையின் நோக்கத்தை முழுவதுமாக நிறைவேற்றும் விவேகமும் உள்ளது. ஆனால் எச்சரிக்கைகள் இவர்களுக்குப் பலன் அளிக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வேதமானது பூரணமான) உச்சத்தை அடைந்துவிட்ட அறிவுகளுடையவை, ஆனால், எச்சரிக்கைகள் (இவர்களுக்கு) யாதொரு பயனுமளிக்கவில்லை.
Saheeh International
Extensive wisdom - but warning does not avail [them].
فَتَوَلَّ عَنْهُمْ ۘ یَوْمَ یَدْعُ الدَّاعِ اِلٰی شَیْءٍ نُّكُرٍ ۟ۙ
فَتَوَلَّஆகவே, நீர் விலகி விடுவீராக!عَنْهُمْ‌ۘஅவர்களை விட்டுيَوْمَநாளில்يَدْعُஅழைக்கின்றالدَّاعِஅழைப்பாளர்اِلٰى شَىْءٍஒன்றை நோக்கிنُّكُرٍۙ‏மிக கடினமான(து)
Fபதவல்ல 'அன்ஹும்; யவ்ம யத்'உத் தா'இ இலா ஷய் 'இன் னுகுர்
முஹம்மது ஜான்
ஆகையால் (நபியே!) அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும்; (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்:
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. இவர்கள் வெறுக்கும் (அந்தக் கேள்வி கணக்கு) விஷயத்திற்காக (இஸ்ராஃபீல் என்னும்) அழைப்பவர் அழைக்கும் நாளில்,
IFT
எனவே (நபியே!) இவர்களைப் பொருட்படுத்தாதீர். மிகவும் வெறுப்புக்குரிய ஒரு விஷயத்தின் பக்கம் அழைக்கக்கூடியவர் அழைக்கும் நாளில்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்துவிடுவீராக! (இன்னும் இவர்கள்) வெறுக்கும் (அந்தகேள்விகணக்கு) விஷயத்திற்காக (இஸ்ராஃபீல் என்னும்) அழைப்பவர் அழைக்கும் நாளில்_
Saheeh International
So leave them, [O Muhammad]. The Day the Caller calls to something forbidding,
خُشَّعًا اَبْصَارُهُمْ یَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌ ۟ۙ
خُشَّعًاஇழிவடைந்தநிலையில்اَبْصَارُهُمْஅவர்களது பார்வைகள்يَخْرُجُوْنَஅவர்கள் வெளியேறுவார்கள்مِنَ الْاَجْدَاثِபுதைக்குழிகளைவிட்டுكَاَنَّهُمْ جَرَادٌஅவர்கள் வெட்டுக் கிளிகளைப் போலمُّنْتَشِرٌۙ‏பரவி வரக்கூடிய(து)
குஷ்ஷ'அன் அBப்ஸாருஹும் யக்ருஜூன மினல் அஜ்தாதி க அன்னஹும் ஜராதும் முன்தஷிர்
முஹம்மது ஜான்
(தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அந்நாளில்) இவர்கள் கீழ் நோக்கிய பார்வையுடன் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுப் பரவிக் கிடக்கும் வெட்டுக் கிளியைப்போல்,
IFT
மக்கள் பயந்த பார்வைகளுடன் தங்களுடைய மண்ணறைகளிலிருந்து வெளிவருவார்கள்; சிதறிய வெட்டுக்கிளிகளைப்போல்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களின் பார்வைகள் கீழ் நோக்கிய நிலையில் பரவிக்கிடக்கும் வெட்டுக் கிளிகளைப் போல் அவர்கள் புதைகுழிகளிலிருந்து வெளியேறுவர்.
Saheeh International
Their eyes humbled, they will emerge from the graves as if they were locusts spreading,
مُّهْطِعِیْنَ اِلَی الدَّاعِ ؕ یَقُوْلُ الْكٰفِرُوْنَ هٰذَا یَوْمٌ عَسِرٌ ۟
مُّهْطِعِيْنَபணிவுடன் பயத்துடன் விரைந்தவர்களாக வருவார்கள்اِلَى الدَّاعِ‌ؕஅழைப்பாளரை நோக்கிيَقُوْلُகூறுவார்கள்الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்هٰذَاஇதுيَوْمٌஒரு நாள்عَسِرٌ‏சிரமமான
முஹ்தி'ஈன இலத் தா'இ யகூலுல் காFபிரூன ஹாதா யவ்முன் 'அஸிர்
முஹம்மது ஜான்
அழைப்பவரிடம் விரைந்து வருவார்கள்; “இது மிகவும் கஷ்டமான நாள்” என்றும் அக்காஃபிர்கள் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அழைப்பவரிடம் விரைந்தோடி வருவார்கள். இது மிக சிரமமான நாள் என்றும் அந்நிராகரிப்பவர்கள் (அச்சமயம்) கூறுவார்கள்.
IFT
அழைக்கக் கூடியவர்களை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள். (உலகில் இதனை மறுத்துக்கொண்டிருந்த) அதே நிராகரிப்பாளர்கள் அப்போது கூறுவார்கள்: “இந்த நாளோ பெரும் கடினமானதாக இருக்கின்றதே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அழைப்பவர் பால் விரைந்தவர்களாக, (வெளியேறுவர்) “இது மிகக் கஷ்டமான நாள்” என்று நிராகரித்துக்கொண்டிருப்போர் (அச்சமயம்) கூறுவார்கள்.
Saheeh International
Racing ahead toward the Caller. The disbelievers will say, "This is a difficult Day."
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்قَوْمُமக்கள்نُوْحٍநூஹூடையفَكَذَّبُوْاஆக, அவர்கள் பொய்ப்பித்தனர்عَبْدَنَاநமது அடியாரைوَقَالُوْاஇன்னும் கூறினர்مَجْنُوْنٌஒரு பைத்தியக்காரர்وَّازْدُجِرَ‏இன்னும் அவர் எச்சரிக்கப்பட்டார்
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹின் Fபகத்தBபூ 'அBப்தனா வ காலூ மஜ்னூனு(ன்)வ் வZஜ்துஜிர்
முஹம்மது ஜான்
இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர்; ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) “பைத்தியக்காரர்” என்று கூறினர்; அவர் விரட்டவும் பட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்த நூஹுடைய மக்களும் (அந்த நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் (அதைப் பற்றி எச்சரிக்கை செய்த) நம் (தூதராகிய) அடியாரைப் பொய்யாக்கியதுடன், அவரைப் பைத்தியக்காரனென்று கூறி (அவரை துன்புறுத்துவதாக) மிரட்டிக்கொண்டும் இருந்தார்கள்.
IFT
இவர்களுக்கு முன்பு நூஹின் சமுதாயத்தினர் பொய்யெனத் தூற்றினர். அவர்கள் நம் அடியாரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். “இவர் ஒரு பைத்தியக்காரர்” என்று சொன்னார்கள். மேலும், அவர் மிக மோசமாக மிரட்டப்பட்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் நூஹ்வுடைய சமூகத்தார் (அந்நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள், ஆகவே, அவர்கள் நம்முடைய அடியாரைப் பொய்யாக்கிப் பைத்தியக்காரரென்றும் அவர்கள் கூறினர். இன்னும், (அவர்களால் தன் தூதை எத்தி வைக்கமுடியாதவாறு) அவர் விரட்டப்பட்டார்.
Saheeh International
The people of Noah denied before them, and they denied Our servant and said, "A madman," and he was repelled.
فَدَعَا رَبَّهٗۤ اَنِّیْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ ۟
فَدَعَاஆகவே, அவர் பிரார்த்தித்தார்رَبَّهٗۤதனது இறைவனிடம்اَنِّىْநிச்சயமாக நான்مَغْلُوْبٌதோற்கடிக்கப்பட்டேன்فَانْـتَصِرْ‏ஆகவே, நீ பழி தீர்ப்பாயாக!
Fபத'ஆ ரBப்Bபஹூ அன்னீ மக்லூBபுன் Fபன்தஸிர்
முஹம்மது ஜான்
அப்போது அவர்; “நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன்; ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!” என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நான் (இவர்களிடம்) தோற்றுவிட்டேன். நீ எனக்கு உதவி செய்!'' என்று பிரார்த்தனை செய்தார்.
IFT
இறுதியில் அவர் தம் அதிபதியை அழைத்தார்: “நான் தோற்றுப்போய் இருக்கின்றேன். நீ இப்போது இவர்களைப் பழி வாங்குவாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர் நிச்சயமாக நான் (இவர்களால்) மிகைக்கப்பட்டு விட்டவன். ஆகவே நீ எனக்கு உதவி செய்(து அவர்களுக்கு தண்டனை வழங்கு)வாயாக! என தம் இரட்சகனிடம் அவர் பிரார்த்தனை செய்தார்.
Saheeh International
So he invoked his Lord, "Indeed, I am overpowered, so help."
فَفَتَحْنَاۤ اَبْوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنْهَمِرٍ ۟ؗۖ
فَفَتَحْنَاۤஆகவே, நாம் திறந்து விட்டோம்اَبْوَابَவாசல்களைالسَّمَآءِமேகத்தின்بِمَآءٍமழையைக் கொண்டுمُّنْهَمِرٍ ۖ‏அடை
FபFபதஹ்னா அBப்வாBபஸ் ஸமா'இ Bபி மா'இன் முன்ஹமிர்
முஹம்மது ஜான்
ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டு, தாரை தாரையாய் மழை கொட்டும்படி நாம் செய்தோம்.
IFT
அப்போது வானின் வாயில்களைத் திறந்துவிட்டு, மழையைக் கொட்டச் செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆதலால், கடுமையாகக் கொட்டும் நீரைக் கொண்டு வானத்தின் வாயில்களை நாம் திறந்து விட்டோம்.
Saheeh International
Then We opened the gates of the heaven with rain pouring down
وَّفَجَّرْنَا الْاَرْضَ عُیُوْنًا فَالْتَقَی الْمَآءُ عَلٰۤی اَمْرٍ قَدْ قُدِرَ ۟ۚ
وَّفَجَّرْنَاஇன்னும் பீறிட்டு ஓடச்செய்தோம்الْاَرْضَபூமியைعُيُوْنًاஊற்றுக் கண்களால்فَالْتَقَىசந்தித்தனالْمَآءُதண்ணீர்عَلٰٓى اَمْرٍஒரு காரியத்தின் மீதுقَدْ قُدِرَ‌ۚ‏திட்டமாகநிர்ணயிக்கப்பட்டது
வ Fபஜ்ஜர்னல் அர்ள 'உயூனன் Fபல்தகல் மா'உ 'அலா அம்ரின் கத் குதிர்
முஹம்மது ஜான்
மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம்; இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், பூமியின் ஊற்றுக்கண்களையும் (பீறிட்டுப்) பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே, நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத்திற்காக தண்ணீர் ஒன்று சேர்ந்தது.
IFT
மேலும், பூமியைப் பிளந்து (அதனை) நீரூற்றுகளாக மாற்றிவிட்டோம். மேலும் நிர்ணயிக்கப்பட்டுவிட்ட பணியை நிறைவேற்றுவதற்காக இந்தத் தண்ணீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், பூமியை ஊற்றுக் கண்களாக(ப் பீறிட்டு)ப் பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே, (ஆதியில்) நிர்ணயிக்கப்பட்ட காரியத்தின் மீது (வானம், பூமி ஆகியவற்றின்) நீரும் இணைந்தது.
Saheeh International
And caused the earth to burst with springs, and the waters met for a matter already predestined.
وَحَمَلْنٰهُ عَلٰی ذَاتِ اَلْوَاحٍ وَّدُسُرٍ ۟ۙ
وَحَمَلْنٰهُஅவரை பயணிக்க வைத்தோம்عَلٰىமீதுذَاتِஉடைய (கப்பல்)اَلْوَاحٍபலகைகள்وَّدُسُرٍۙ‏இன்னும் ஆணிகள்
வ ஹமல்னாஹு 'அலா தாதி அல்வாஹி(ன்)வ் வ துஸுர்
முஹம்மது ஜான்
அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் அவரை(யும், அவரை நம்பிக்கை கொண்டவர்களையும்) பலகையினாலும், ஆணியினாலும் செய்யப்பட்ட கப்பலின் மீது சுமந்து கொண்டோம்.
IFT
மேலும், மரப்பலகைகளால் செய்யப்பட்டு ஆணிகள் அறையப்பட்டதில் (கப்பலில்) நாம் நூஹை ஏற்றினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் அவரை(யும், அவருடனிருந்தவர்களையும்) பலகைகளும், ஆணிகளும் உடைய (மரக்கலத்)தின் மீது ஏற்றி(க்காப்பாற்றி)னோம்.
Saheeh International
And We carried him on a [construction of] planks and nails,
تَجْرِیْ بِاَعْیُنِنَا ۚ جَزَآءً لِّمَنْ كَانَ كُفِرَ ۟
تَجْرِىْஅது செல்கிறதுبِاَعْيُنِنَا‌ۚநமது கண்களுக்கு முன்பாகجَزَآءًகூலி கொடுப்பதற்காகلِّمَنْ كَانَ كُفِرَ‏நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு
தஜ்ரீ Bபி அஃயுனினா ஜZஜா'அன் லிமன் கான குFபிர்
முஹம்மது ஜான்
எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதாக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
அது நம் கண்களுக்கு முன்பாகவே (பிரளயத்தில் மிதந்து) சென்றது. (மற்றவர்களோ மூழ்கி மாண்டனர்.) எவரை இவர்கள் (மதிக்காது) நிராகரித்தனரோ, அவருக்காக இவ்வாறு கூலி கொடுக்கப்பட்டது.
IFT
அது நமது கண்காணிப்பில் சென்று கொண்டிருந்தது. (அவர்களுக்கு) நாம் அளித்த பிரதிபலனாகும் இது, அவமரியாதை செய்யப்பட்ட அந்த மனிதரின் நிமித்தம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது நம் கண்களுக்கு முன்பாகவே (பெரு வெள்ளத்தில் மிதந்து) சென்றது, (இவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு (நூஹ் நபிக்குக் கொடுக்கப்படும் நற்) கூலியாக (இவ்வாறு அவர்களை நாம் தண்டித்தோம்).
Saheeh International
Sailing under Our observation as reward for he who had been denied.
وَلَقَدْ تَّرَكْنٰهَاۤ اٰیَةً فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகتَّرَكْنٰهَاۤஅதை விட்டுவைத்தோம்اٰيَةًஓர் அத்தாட்சியாகفَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
வ லகத் தரக்னாஹா ஆயதன் Fபஹல் மின் முத்தகிர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் இதை (பிற்காலத்தவருக்கு) ஒரு படிப்பினையாகச் செய்து விட்டோம். (இதைக்கொண்டு) நல்லுணர்ச்சி பெறக்கூடியவர் உண்டா?
IFT
அந்தக் கப்பலை நாம் ஒரு சான்றாக விட்டு வைத்தோம். பின்னர் அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக நாம் இதனை (பின்னுள்ளவர்களுக்கு) ஓர் அத்தாட்சியாக விட்டுவைத்தோம், (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா?
Saheeh International
And We left it as a sign, so is there any who will remember?
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
فَكَيْفَஎப்படி?كَانَஇருந்தனعَذَابِىْஎனது வேதனையும்وَنُذُرِ‏எனது எச்சரிக்கையும்
Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
முஹம்மது ஜான்
ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)
அப்துல் ஹமீது பாகவி
எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?
IFT
பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தது நான் அளித்த வேதனை; எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
என்னுடைய வேதனையும், (என்னுடைய) எச்சரிக்கையும் எவ்வாறிருந்தன? (என்பதை கவனிப்பார்களா?)
Saheeh International
And how [severe] were My punishment and warning.
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகيَسَّرْنَاநாம் எளிதாக்கினோம்الْقُرْاٰنَஇந்த குர்ஆனைلِلذِّكْرِநல்லறிவு பெறுவதற்காகفَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறுவதற்காக இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்திருக்கிறோம். (இதன் மூலம்) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
IFT
நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர், அறிவுரையை ஏற்றுக்கொள்ள எவரேனும் இருக்கின்றாரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக நாம் குர் ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம், ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா?
Saheeh International
And We have certainly made the Qur’an easy for remembrance, so is there any who will remember?
كَذَّبَتْ عَادٌ فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்ததுعَادٌஆது சமுதாயம்فَكَيْفَஎப்படி?كَانَஇருந்தனعَذَابِىْஎனது வேதனை(யும்)وَنُذُرِ‏எனது எச்சரிக்கையும்
கத்தBபத் 'ஆதுன் Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
முஹம்மது ஜான்
“ஆது” (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர்; அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?)
அப்துல் ஹமீது பாகவி
ஆது என்னும் மக்களும் (இவ்வாறே நம் தூதரைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். எனினும், (அவர்களுக்கு ஏற்பட்ட) எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?
IFT
‘ஆத்’ சமுதாயத்தினர் பொய்யென வாதிட்டார்கள். பார்த்துக் கொள்ளுங்கள்: அப்போது எப்படி இருந்தது நான் அளித்த வேதனை! மேலும், எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆது (சமூகத்தாரும் நம் தூதரைப்) பொய்யாக்கிக்கொண்டிருந்தனர், பின்னர் (அவர்களுக்கு என் கட்டளையின்படி ஏற்பட்ட) என்னுடைய வேதனையும், (என்னுடைய எச்சரிக்கையும் எவ்வாறிருந்தன (என்பதைக் கவனிப்பார்களா)?
Saheeh International
ʿAad denied; and how [severe] were My punishment and warning.
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا صَرْصَرًا فِیْ یَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّ ۟ۙ
اِنَّاۤநிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுرِيْحًاகாற்றைصَرْصَرًاகுளிர்ந்த சூறாவளிفِىْ يَوْمِநாளில்نَحْسٍஒரு தீமையுடையمُّسْتَمِرٍّۙ‏நிலையான
இன்னா அர்ஸல்னா 'அலய்ஹிம் ரீஹன் ஸர்ஸரன் Fபீ யவ்மி னஹ்ஸின் முஸ்தமிர்ர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் அவர்கள் மீது (என்றும்) நிலையான துர்ப்பாக்கியமுடைய ஒரு நாளில் மிக்க கடினமான புயல் காற்றை அனுப்பிவைத்தோம்.
IFT
நீடித்த துர்ப்பாக்கியத்திற்குரிய ஒரு நாளில் நாம் கடுமையான புயல்காற்றை அவர்களின் மீது அனுப்பினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் அவர்கள் மீது, (என்றும்) நிலையான துர்ப்பாக்கியமுடைய ஒரு நாளில், மிகக்கடும் சப்தமு(ம் குளிரும் உ)டைய காற்றை அனுப்பி வைத்தோம்.
Saheeh International
Indeed, We sent upon them a screaming wind on a day of continuous misfortune,
تَنْزِعُ النَّاسَ ۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ مُّنْقَعِرٍ ۟
تَنْزِعُஅது கழட்டி எரிந்ததுالنَّاسَۙமக்களைكَاَنَّهُمْபோல்/அவர்கள் ஆகிவிட்டார்கள்اَعْجَازُபின் பகுதிகளைنَخْلٍபேரீட்ச மரத்தின்مُّنْقَعِرٍ‏வேரோடு சாய்ந்த
தன்Zஜி'உன் னாஸ க அன்னஹும் அஃஜாZஜு னக்லின் முன்க'இர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்தூறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.
அப்துல் ஹமீது பாகவி
அது வேரற்ற பேரீச்ச மரங்களைப்போல், மனிதர்களைக் களைந்து (எறிந்து) விட்டது.
IFT
அது மக்களை வேகமாகத் தூக்கி எறிந்துகொண்டிருந்தது. அப்போது அவர்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்ச மரத்தின் தடிகளைப் போன்று ஆனார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதுமனிதர்களை_நிச்சயமாக அவர்கள் (பூமிக்குள்ளிருந்து வேரோடு) பிடுங்கக்கபட்ட பேரீச்ச மரங்களின் அடிவேர்களைப் போல (ஆகும் நிலையில்) பிடுங்கி (எறிந்து) விட்டது.
Saheeh International
Extracting the people as if they were trunks of palm trees uprooted.
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
فَكَيْفَஎப்படி?كَانَஇருந்தனعَذَابِىْஎனது வேதனை(யும்)وَنُذُرِ‏எனது எச்சரிக்கையும்
Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
முஹம்மது ஜான்
ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?)
அப்துல் ஹமீது பாகவி
எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?
IFT
பார்த்துக் கொள்ளுங்கள்: எப்படி இருந்தது நான் அளித்த வேதனை; எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
என்னுடைய வேதனையும், எச்சரிக்கையும் எவ்வாறிருந்தன (என்பதை கவனிப்பார்களா)?
Saheeh International
And how [severe] were My punishment and warning.
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟۠
وَلَقَدْதிட்டவட்டமாகيَسَّرْنَاநாம் எளிதாக்கினோம்الْقُرْاٰنَஇந்த குர்ஆனைلِلذِّكْرِநல்லறிவு பெறுவதற்காகفَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?  
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறுவதற்காக இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்திருக்கிறோம். (இதன் மூலம்) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
IFT
நாம் இந்தக் குர்ஆனை அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர் அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக, நாம் குர் ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம், ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா?
Saheeh International
And We have certainly made the Qur’an easy for remembrance, so is there any who will remember?
كَذَّبَتْ ثَمُوْدُ بِالنُّذُرِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்ثَمُوْدُஸமூது சமுதாயம்بِالنُّذُرِ‏எச்சரிக்கையை
கத்தBபத் தமூது Bபின்னுதுர்
முஹம்மது ஜான்
ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறே) ஸமூது என்னும் மக்களும் (தங்களுக்கு அனுப்பப்பட்ட ஸாலிஹ் நபியையும் நமது) எச்சரிக்கைகளையும் பொய்யாக்கினர்.
IFT
‘ஸமூத்’ சமுதாயத்தினரும் எச்சரிக்கைகளைப் பொய்யென வாதிட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறே) ஸமூது (கூட்டத்தாரு)ம் எச்சரிக்கையாளர்களைப் பொய்யாக்கினர்.
Saheeh International
Thamūd denied the warning.
فَقَالُوْۤا اَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُهٗۤ ۙ اِنَّاۤ اِذًا لَّفِیْ ضَلٰلٍ وَّسُعُرٍ ۟
فَقَالُـوْۤاகூறினர்اَبَشَرًاஒரு மனிதரையாمِّنَّاஎங்களில் இருந்துوَاحِدًاஒருவராகنَّتَّبِعُهٗۤ ۙநாங்கள் அவரைப் பின்பற்றுவோம்!اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِذًاஅப்படி என்றால்لَّفِىْ ضَلٰلٍவழிகேட்டிலும் ஆகிவிடுவோம்وَّسُعُرٍ‏சிரமத்திலும்
Fபகாலூ அ' Bபஷரன் மின்னா வாஹிதன் னத்தBபி'உஹூ இன்னா இதல் லFபீ ளலாலி(ன்)வ் வ ஸு'உர்
முஹம்மது ஜான்
“நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்” என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
(பொய்யாக்கியதுடன்) ‘‘நம்மிலுள்ள ஒரு மனிதனையா நாம் பின்பற்றுவது? பின்பற்றினால், நிச்சயமாக நாம் வழிகேட்டில் சென்று சிரமத்திற்குள்ளாகி விடுவோம்'' என்று கூறினார்கள்.
IFT
மேலும், கூறலானார்கள்: “நம்மிலுள்ள ஒரு தனிப்பட்ட மனிதரையா நாம் பின்பற்றிச் செல்வது? அவரைப் பின்பற்றிச் செல்வதற்கு ஏற்றுக்கொண்டோமானால், நாம் வழிகெட்டுப் போய் விட்டோம்; நமது புத்தி பேதலித்துவிட்டது என்பது அதன் பொருளாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், “நம்மிலுள்ள ஒரு மனிதரை_ அவரையா நாம் பின் பற்றுவோம்? (அவ்வாறு பின்பற்றினால்) நிச்சயமாக, நாம் அப்பொழுது வழிகேட்டிலும், சிரமத்திலும் ஆகிவிடுவோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
And said, "Is it one human being among us that we should follow? Indeed, we would then be in error and madness.
ءَاُلْقِیَ الذِّكْرُ عَلَیْهِ مِنْ بَیْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ اَشِرٌ ۟
ءَاُلْقِىَஇறக்கப்பட்டதா?الذِّكْرُஇறைவேதம்عَلَيْهِஅவருக்கு மட்டும்مِنْۢ بَيْنِنَاஎங்களுக்கு மத்தியில்بَلْஇல்லைهُوَஅவர்كَذَّابٌபெரும் பொய்யர்اَشِرٌ‏பெருமையுடைய(வர்)
'அ உல்கியத் திக்ரு 'அலய்ஹி மின் Bபய்னினா Bபல் ஹுவ கத்தாBபுன் அஷிர்
முஹம்மது ஜான்
“நம்மிடையே இருந்து அவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும்; அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்” (என்றும் அவர்கள் கூறினர்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நமக்கு மத்தியில் (நம்மை தவிர்த்து) இவர் மீது தானா வேதம் இறக்கப்பட்டது? மாறாக! இவர் பெரும் பொய் சொல்லும் இறுமாப்புக் கொண்டவர்'' (என்றனர்.)
IFT
இறைவனின் அறிவுரை அருளப்படுவதற்கு நமக்கு மத்தியில் இவர் ஒருவர்தான் இருக்கின்றாரா, என்ன?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நமக்கிடையே இவர் மீதுதானா (திக்ரு எனும்) வேதம் இறக்கப்பட்டது? அன்று! அவர் இறுமாப்புக் கொண்ட பெரும் பொய்யர்” (என்று கூறினார்கள்).
Saheeh International
Has the message been sent down upon him from among us? Rather, he is an insolent liar."
سَیَعْلَمُوْنَ غَدًا مَّنِ الْكَذَّابُ الْاَشِرُ ۟
سَيَعْلَمُوْنَவிரைவில் அறிவார்கள்غَدًاநாளைمَّنِ الْكَذَّابُபெரும் பொய்யர் யார்الْاَشِرُ‏பெருமையுடைய(வர்)
ஸ-யஃலமூன கதன் மனில் கத்தாBபுல் அஷிர்
முஹம்மது ஜான்
“ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்?” என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பொய் சொல்லும் இறுமாப்புக் கொண்டவர் யாரென்பதை, வெகு விரைவில் நாளைய தினமே அறிந்துகொள்வார்கள்.
IFT
(நாம் நம்முடைய தூதரிடம் கூறினோம்:) “நாளையதினம் இவர்களுக்குத் தெரிந்துவிடும்; யார் வடிகட்டிய பொய்யர், தற்பெருமைக்காரர் என்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இறுமாப்புக் கொண்டவரான பெரும் பொய்யர் யார்” என்பதை, நிச்சயமாக நாளைய தினம் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
Saheeh International
They will know tomorrow who is the insolent liar.
اِنَّا مُرْسِلُوا النَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ ۟ؗ
اِنَّاநிச்சயமாக நாம்مُرْسِلُواஅனுப்புவோம்النَّاقَةِபெண் ஒட்டகத்தைفِتْنَةًசோதனையாகلَّهُمْஅவர்களுக்குفَارْتَقِبْهُمْஅவர்களிடம் நீர் எதிர்பார்த்திருப்பீராக!وَاصْطَبِرْ‏இன்னும் பொறுமை காப்பீராக!
இன்னா முர்ஸிலுன் னாகதி Fபித்னதன் லஹும் Fபர்தகிBப்ஹும் வஸ்தBபிர்
முஹம்மது ஜான்
அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம்; ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக!
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே,) அவர்களைச் சோதிப்பதற்காக, மெய்யாகவே ஒரு பெண் ஒட்டகத்தை நாம் அனுப்பி வைப்போம். ஆகவே, (ஸாலிஹ் நபியே!) நீர் பொறுமையாயிருந்து, அவர்களைக் கவனித்து வருவீராக.
IFT
நாம் பெண் ஒட்டகத்தை இவர்களுக்குச் சோதனையாக ஆக்கி அனுப்புகின்றோம். எனவே, இப்போது சற்றுப் பொறுத்திருந்து பாரும்; இவர்களின் கதி என்னவாகிறது என்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே,) அவர்களைச் சோதிப்பதற்காக “ஒரு பெண் ஒட்டகத்தை நிச்சயமாக நாம் அனுப்பிவைப்போராக உள்ளோம், ஆகவே (ஸாலிஹ் நபியே!) நீர் அவர்களைக் கண்காணித்துக்கொண்டு, பொறுமையுடனும் இருப்பீராக!
Saheeh International
Indeed, We are sending the she-camel as trial for them, so watch them and be patient.
وَنَبِّئْهُمْ اَنَّ الْمَآءَ قِسْمَةٌ بَیْنَهُمْ ۚ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ ۟
وَنَبِّئْهُمْஅவர்களுக்கு அறிவிப்பீராகاَنَّ الْمَآءَநிச்சயமாக தண்ணீர்قِسْمَةٌ ۢபங்காகும்بَيْنَهُمْ‌ۚஅவர்களுக்கு மத்தியில்كُلُّ شِرْبٍஎல்லா நேரங்களிலும் தண்ணீர் குடிக்கப்படுகின்றمُّحْتَضَرٌ‏ஆஜராக வேண்டும்
வ னBப்Bபி'ஹும் அன்னல் மா'அ கிஸ்மதுன் Bபய்னஹும் குல்லு ஷிர்Bபின் முஹ்தளர்
முஹம்மது ஜான்
(அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது; “ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்” என்று அவர்களுக்கு அறிவித்து விடும்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘(அவ்வூரில் உள்ள ஊற்றின்) குடிநீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் நிச்சயமாகப் பங்கிடப்பட்டுவிட்டது. ஒவ்வொருவரும் தன் பங்கிற்குத் தகுந்தாற்போல் குடிப்பதற்கு வரலாம்'' என்று அவர்களுக்கு அறிவித்து விடுவீராக.
IFT
தண்ணீர் இவர்களுக்கும் ஒட்டகத்துக்கும் இடையே பங்கிடப்படும் என்றும், ஒவ்வொருவரும் (தம் முறை நாளில் தண்ணீருக்கு) வர வேண்டும் என்றும் இவர்களுக்கு அறிவித்துவிடும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, (கிணற்றின்) “தண்ணீர் அவர்களுக்கும் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது, ஒவ்வோரு தண்ணீர் முறை பாகமும் (முறைப்படி அவரவர் நாளில் குடிப்பதற்கு) என்றும், அவர்களுக்கு அறிவித்து விடுவீராக!” (என்றும் நாம் கூறினோம்).
Saheeh International
And inform them that the water is shared between them, each [day of] drink attended [by turn].
فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطٰی فَعَقَرَ ۟
فَنَادَوْاஅவர்கள் அழைத்தனர்صَاحِبَهُمْதங்கள் தோழரைفَتَعَاطٰىஅவன் பிடித்தான்فَعَقَرَ‏இன்னும் அறுத்தான்
Fப னாதவ் ஸாஹிBபஹும் Fப த'ஆதா Fப 'அகர்
முஹம்மது ஜான்
ஆனால் (அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர்; அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்) தரித்து விட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவர்கள் (கத்தார் என்னும்) தங்கள் நண்பனை அழைத்தனர். அவன் அதை வெட்டி, அதன் கால் நரம்புகளைத் தறித்து விட்டான்.
IFT
இறுதியில், அவர்கள் தங்களுடைய ஆளை அழைத்தார்கள். அவர் இந்தப் பணியை முடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும் ஒட்டகத்தைக் கொன்றுவிட்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும், அவர்கள் (ஒட்டகத்தை அறுத்து விட) தங்களுடைய தோழனை அழைத்தனர், அவன் (வாளை எடுத்து, தன் கையால் ஒட்டகத்தைப்) பிடித்தான், (அதன் கால் நரம்புகளைத் தறித்து) பின்னர் அறுத்து விட்டான்.
Saheeh International
But they called their companion, and he dared and hamstrung [her].
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
فَكَيْفَஎப்படி?كَانَஇருந்தனعَذَابِىْஎனது வேதனையும்وَنُذُرِ‏எனது எச்சரிக்கையும்
Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
முஹம்மது ஜான்
என் (கட்டளையினால் பின்னர் அம் மக்களுக்கு) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?
IFT
பிறகு பார்த்துக்கொள்ளுங்கள்: எவ்வளவு கொடூரமாக இருந்தது நான் அளித்த வேதனை; எவ்வளவு உண்மையானவையாக இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, என்னுடைய வேதனையும் (என்னுடைய) எச்சரிக்கையும் எவ்வாறிருந்தன?
Saheeh International
And how [severe] were My punishment and warning.
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ صَیْحَةً وَّاحِدَةً فَكَانُوْا كَهَشِیْمِ الْمُحْتَظِرِ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنَاஅனுப்பினோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுصَيْحَةًஒரு சப்தத்தைوَّاحِدَةًஒரேفَكَانُوْاஅவர்கள் ஆகிவிட்டனர்كَهَشِيْمِதீணிகளைப் போல்الْمُحْتَظِرِ‏தொழுவத்தின்
இன்னா அர்ஸல்னா 'அலய்ஹிம் ஸய்ஹத(ன்)வ் வாஹிததன் Fபகானூ கஹஷீமில் முஹ்தளிர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரே ஒரு (இடி முழக்கச்) சப்தத்தைத் தான் அனுப்பி வைத்தோம். அதனால், பிடுங்கி எறியப்பட்ட வேலி(க் கூளங்)களைப் போல் அவர்கள் ஆகிவிட்டார்கள்.
IFT
நாம் ஒரேயொரு ஓசையைத்தான் அவர்களின் மீது அனுப்பினோம். உடனே அவர்கள், தொழுவத்தில் மிதித்து நசுக்கப்பட்ட வைக்கோல் போல் ஆகிவிட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் அவர்கள் மீது, ஒரே ஒரு (பேரிடிச்) சப்தத்தை அனுப்பி வைத்தோம், அதனால் வேலி கட்டுபவரின் பிடுங்கி எறியப்பட்ட குப்பை கூளங்களைப் போல் அவர்கள் ஆகிவிட்டார்கள்.
Saheeh International
Indeed, We sent upon them one shriek [i.e., blast from the sky], and they became like the dry twig fragments of an [animal] pen.
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகيَسَّرْنَاநாம் எளிதாக்கினோம்الْقُرْاٰنَஇந்த குர்ஆனைلِلذِّكْرِநல்லறிவு பெறுவதற்காகفَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறுவதற்காக இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்திருக்கிறோம். (இதன் மூலம்) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
IFT
நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்துள்ளோம். அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக நாம் குர் ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கியும் இருக்கின்றோம், ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் எவரும் உண்டா?
Saheeh International
And We have certainly made the Qur’an easy for remembrance, so is there any who will remember?
كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ بِالنُّذُرِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَوْمُமக்களும்لُوْطٍ ۢலூத்துடையبِالنُّذُرِ‏எச்சரிக்கையை
கத்தBபத் கவ்மு லூதின் Bபின்னுதுர்
முஹம்மது ஜான்
லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
லூத்துடைய மக்களும் நம் எச்சரிக்கையைப் பொய்யாக்கினார்கள்.
IFT
லூத்தின் சமுதாயத்தினர் எச்சரிக்கைகளைப் பொய்யென வாதித்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நம்முடைய) எச்சரிக்கையாளர்களை லூத்துடைய சமூகத்தார் பொய்யாக்கினார்கள்.
Saheeh International
The people of Lot denied the warning.
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوْطٍ ؕ نَجَّیْنٰهُمْ بِسَحَرٍ ۟ۙ
اِنَّاۤநிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுحَاصِبًاகல் மழையைاِلَّاۤ اٰلَ لُوْطٍ‌ؕலூத்துடைய குடும்பத்தார்களைத் தவிரنَّجَّيْنٰهُمْஅவர்களைப் பாதுகாத்தோம்بِسَحَرٍۙ‏அதிகாலையில்
இன்னா அர்ஸல்னா 'அலய்ஹிம் ஹாஸிBபன் இல்லா ஆல லூதின் னஜ்ஜய்னாஹும் Bபிஸஹர்
முஹம்மது ஜான்
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம்; விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது நாம் கல்மாரி பொழியச் செய்தோம். விடியற்காலை நேரத்தில் நாம் அவ(ருடைய குடும்பத்தா)ர்களை பாதுகாத்துக் கொண்டோம்.
IFT
நாம் கல்மாரி பொழியும் காற்றை அவர்கள் மீது ஏவினோம். லூத்தின் குடும்பத்தினர் மட்டுமே அதிலிருந்து பாதுகாப்பாக இருந்தனர். நாம் நம்முடைய அருளினால் இரவின் பின்நேரத்தில் அவர்களைக் காப்பாற்றி வெளியே கொண்டுவந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் மீது, நாம் கல்மாரியை அனுப்பிவைத்தோம். (அல்லாஹ்வின் தூதராகிய) லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, அதிகாலை நேரத்தில் நாம் அவர்களைக் காப்பாற்றினோம்.
Saheeh International
Indeed, We sent upon them a storm of stones, except the family of Lot - We saved them before dawn.
نِّعْمَةً مِّنْ عِنْدِنَا ؕ كَذٰلِكَ نَجْزِیْ مَنْ شَكَرَ ۟
نِّعْمَةًஅருட்கொடையாகمِّنْ عِنْدِنَا‌ؕநம்மிடமிருந்துكَذٰلِكَஇவ்வாறுதான்نَجْزِىْநாம் கூலி கொடுப்போம்مَنْ شَكَرَ‏நன்றி செலுத்துபவர்களுக்கு
னிஃமதன் மின் 'இன்தினா; கதாலிக னஜ்Zஜீ மன் ஷகர்
முஹம்மது ஜான்
நம்மிடமிருந்துள்ள அருள் கொடையால் (இப்படிக் காப்பாற்றினோம்) இவ்வாறே நாம் நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
இது நமது அருளாகும். இவ்வாறே நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
IFT
இவ்வாறே நாம் கூலி வழங்குகின்றோம்; நன்றி செலுத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம்மிடமிருந்துள்ள அருட்கொடையாக (இவ்வாறு செய்தோம்), இவ்வாறே நன்றி செலுத்துவோருக்கு நாம் கூலி கொடுப்போம்.
Saheeh International
As favor from Us. Thus do We reward he who is grateful.
وَلَقَدْ اَنْذَرَهُمْ بَطْشَتَنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَنْذَرَهُمْஅவர் அவர்களுக்கு எச்சரித்தார்بَطْشَتَـنَاநமது தண்டனையைفَتَمَارَوْاஅவர்கள் சந்தேகித்தனர்بِالنُّذُرِ‏எச்சரிக்கையை
வ லகத் அன்தரஹும் Bபத்ஷதனா Fபதமாரவ் Bபின்னுதுர்
முஹம்மது ஜான்
திட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்கலாயினர்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை) நாம் பிடித்துக்கொள்வோம் என்று நிச்சயமாக அவர், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார். எனினும், அந்த எச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் தர்க்கிக்க ஆரம்பித்தார்கள்.
IFT
லூத் தம்முடைய சமூக மக்களுக்கு நம்முடைய தண்டனையைக் குறித்து எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அவர்கள் எல்லா எச்சரிக்கைகளையும் சந்தேகமானவை எனக் கருதி எள்ளி நகையாடிக் கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம் (வேதனையின்) பிடியைப்பற்றி நிச்சயமாக (லூத் நபியாகிய) அவர், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார், எனினும், அவ்வெச்சரிக்கையைப் பற்றி அவர்கள் சந்தேகித்தார்கள்.
Saheeh International
And he had already warned them of Our assault, but they disputed the warning.
وَلَقَدْ رَاوَدُوْهُ عَنْ ضَیْفِهٖ فَطَمَسْنَاۤ اَعْیُنَهُمْ فَذُوْقُوْا عَذَابِیْ وَنُذُرِ ۟
وَلَقَدْ رَاوَدُوْهُதிட்டவட்டமாக அவரிடம் அடம்பிடித்தனர்عَنْ ضَيْفِهٖஅவரது விருந்தினர்களை வேண்டிفَطَمَسْنَاۤசமமாக்கி விட்டோம்اَعْيُنَهُمْஅவர்களின் கண்களைفَذُوْقُوْاஆகவே சுவையுங்கள்عَذَابِىْஎன் தண்டனையையும்وَنُذُرِ‏என் எச்சரிக்கையையும்
வ லகத் ராவதூஹு 'அன்ளய்Fபீஹீ Fபதமஸ்னா அஃயுனஹும் Fபதூகூ 'அதாBபீ வ னுதுர்
முஹம்மது ஜான்
அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள்; ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். “என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்” (என்றும் கூறினோம்).
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவருடைய விருந்தாளியையும் (கெட்ட காரியத்திற்காக) மயக்கி (அடித்து)க்கொண்டு போகப் பார்த்தார்கள். ஆகவே, அவர்களுடைய கண்களை நாம் துடைத்து(க் குருடாக்கி) விட்டோம். எனது வேதனையையும், எனது எச்சரிக்கைகளையும் சுவைத்துப்பாருங்கள் என்று கூறினோம்.
IFT
பின்னர் அவருடைய விருந்தாளிகளைப் பாதுகாப்பதிலிருந்து அவரை விலகியிருக்கச் செய்ய அவர்கள் முயற்சி செய்தார்கள். இறுதியில், நாம் அவர்களுடைய கண்களை அவித்துவிட்டோம். சுவையுங்கள், இப்போது நான் அளிக்கும் வேதனையையும் என்னுடைய எச்சரிக்கைகளையும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், திட்டமாக அவருடைய விருந்தினரை(க் கெட்ட காரியத்திற்காக தங்களிடம் ஒப்படைக்குமாறு) அவரிடம் தேடினார்கள். ஆகவே அவர்களுடைய கண்களை நாம் துடைத்து(க் குருடாக்கி) விட்டோம், ஆகவே, என்னுடைய வேதனையையும், (என்னுடைய) எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறினோம்).
Saheeh International
And they had demanded from him his guests, but We obliterated their eyes, [saying], "Taste My punishment and warning."
وَلَقَدْ صَبَّحَهُمْ بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّ ۟ۚ
وَلَقَدْ صَبَّحَهُمْதிட்டமாக காலையில் அவர்களை வந்தடைந்ததுبُكْرَةًஅதிகாலை சூரியன் விடிவதற்கு முன்عَذَابٌவேதனைمُّسْتَقِرٌّ‌ ۚ‏நிலைத்திருக்கக்கூடிய
வ லகத் ஸBப்Bபஹஹும் Bபுக்ரதன் 'அதாBபுன் முஸ்தகிர்ர்
முஹம்மது ஜான்
எனவே, அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அதிகாலையில் நிலையான வேதனை அவர்களை வந்தடைந்தது.
IFT
அதிகாலையில் ஒரு மாபெரிய வேதனை அவர்களை வந்தடைந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அதிகாலையில் நிலையான வேதனை அவர்களுக்கு நிச்சயமாக ஏற்பட்டுவிட்டது.
Saheeh International
And there came upon them by morning an abiding punishment.
فَذُوْقُوْا عَذَابِیْ وَنُذُرِ ۟
فَذُوْقُوْاஆகவே சுவையுங்கள்عَذَابِىْஎன் வேதனையையும்وَنُذُرِ‏என் எச்சரிக்கையையும்
Fபதூகூ 'அதாBபீ வ னுதுர்
முஹம்மது ஜான்
“ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறினோம்).
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, எனது வேதனையையும், எனது எச்சரிக்கைகளையும் நீங்கள் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறினோம்).
IFT
சுவையுங்கள், இப்போது நான் அளிக்கும் வேதனையையும் என்னுடைய எச்சரிக்கைகளையும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, “என்னுடைய வேதனையையும், (என்னுடைய) எச்சரிக்கையையும் நீங்கள் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறினோம்).
Saheeh International
So taste My punishment and warning.
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟۠
وَلَقَدْதிட்டவட்டமாகيَسَّرْنَاநாம் எளிதாக்கினோம்الْقُرْاٰنَஇந்த குர்ஆனைلِلذِّكْرِநல்லறிவு பெறுவதற்காகفَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?  
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறுவதற்காக இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்திருக்கிறோம். (இதன் மூலம்) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
IFT
நாம் இந்தக் குர்ஆனை அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்துள்ளோம். எனவே அறிவுரை பெறுவதற்கு எவரேனும் இருக்கின்றாரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக நாம், குர் ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம், (ஆகவே, இதனை கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா?
Saheeh International
And We have certainly made the Qur’an easy for remembrance, so is there any who will remember?
وَلَقَدْ جَآءَ اٰلَ فِرْعَوْنَ النُّذُرُ ۟ۚ
وَلَقَدْதிட்டவட்டமாகجَآءَவந்தனاٰلَ فِرْعَوْنَஃபிர்அவ்னை பின்பற்றியவர்களுக்குالنُّذُرُ‌ۚ‏எச்சரிக்கை
வ லகத் ஜா'அ ஆல Fபிர்'அவ்னன் னுதுர்
முஹம்மது ஜான்
ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தன.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக, ஃபிர்அவ்னுடைய மக்களிடம் பல எச்சரிக்கைகள் வந்தன.
IFT
மேலும், ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடம் எச்சரிக்கைகள் வந்திருந்தன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக ஃபிர் அவ்னுடைய கூட்டத்தரரிடம் (பல) எச்சரிக்கையாளர்கள் வந்தனர்.
Saheeh International
And there certainly came to the people of Pharaoh warning.
كَذَّبُوْا بِاٰیٰتِنَا كُلِّهَا فَاَخَذْنٰهُمْ اَخْذَ عَزِیْزٍ مُّقْتَدِرٍ ۟
كَذَّبُوْاஅவர்கள் பொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَاநமது அத்தாட்சிகளைكُلِّهَاஎல்லாம்فَاَخَذْنٰهُمْஆகவே அவர்களை தண்டித்தோம்اَخْذَதண்டனையால்عَزِيْزٍமிக்க மிகைத்தவன்مُّقْتَدِرٍ‏மகா வல்லமை உடையவனின்
கத்தBபூ Bபி ஆயாதினா குல்லிஹா Fப அகத்னாஹும் அக்த 'அZஜீZஜிம் முக்ததிர்
முஹம்மது ஜான்
ஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர்; அப்போது, சக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
நமது அத்தாட்சிகள் அனைத்தையும் அவர்கள் பொய்யாக்கிக் கொண்டே வந்தார்கள். ஆகவே, மிக்க சக்திவாய்ந்த பலசாலி பிடிப்பதைப் போல் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.
IFT
ஆனால் அவர்கள் நம்முடைய சான்றுகள் அனைத்தையும் பொய்யென்று வாதித்தார்கள். இறுதியில், நாம் அவர்கள் அனைவரையும் பிடித்துக் கொண்டோம். யாவரையும் மிகைத்த, வலிமை மிக்க ஒருவன் பிடிப்பதைப் போன்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆனால், நம்முடைய அத்தாட்சிகளை_ அவை அனைத்தையும் அவர்கள் பொய்யாக்கினார்கள், ஆகவே, சக்தி வாய்ந்த மிகைப்பவனின் பிடியாக நாம் அவர்களைப் பிடித்துக்கொண்டோம் (அவர்களில் யாரும் எஞ்சியிருக்கவில்லை).
Saheeh International
They denied Our signs, all of them, so We seized them with a seizure of one Exalted in Might and Perfect in Ability.
اَكُفَّارُكُمْ خَیْرٌ مِّنْ اُولٰٓىِٕكُمْ اَمْ لَكُمْ بَرَآءَةٌ فِی الزُّبُرِ ۟ۚ
اَكُفَّارُكُمْ خَيْرٌஉங்களுடைய நிராகரிப்பாளர்கள் சிறந்தவர்களா?مِّنْ اُولٰٓٮِٕكُمْஅவர்களை விடاَمْ لَكُمْஅவர்கள் உங்களுக்கு இருக்கிறதா?بَرَآءَةٌவிடுதலை பத்திரம்فِى الزُّبُرِ‌ۚ‏வேதங்களில்
'அ குFப்Fபாருகும் கய்ருன் மின் உலா'இகும் அம் லகும் Bபரா'அதுன் FபிZஜ் ZஜுBபுர்
முஹம்மது ஜான்
(சென்று போன) அவர்களை விட உங்களிலுள்ள காஃபிர்கள் மேலானவர்களா? அல்லது, உங்களுக்கு (வேதனையிலிருந்து) விலக்கு இருப்பதாக வேத ஆதாரம் உண்டா?
அப்துல் ஹமீது பாகவி
(மக்காவாசிகளே!) உங்களிலுள்ள நிராகரிப்பவர்கள் (அழிந்துபோன) இவர்களைவிட மேலானவர்களா? அல்லது, (உங்களைத் தண்டிக்கப்படாது என்பதற்கு) உங்களுக்கு (ஏதேனும்) விடுதலைச் சீட்டு உண்டா? அல்லது,
IFT
என்ன, உங்களுடைய நிராகரிப்பாளர்கள் அவர்களை விடச் சிறந்தவர்களா? அல்லது வான்மறைகளில் உங்களுக்காகப் பாவமன்னிப்பு ஏதும் எழுதப்பட்டு இருக்கிறதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மக்காவாசிகளே!) உங்களிலுள்ள நிராகரித்துக்கொண்டிருப்போர் (முன்சென்றுபோன) அவர்களைவிட மிகச் சிறந்தவர்களா? அல்லது, (வேதனையிலிருந்து) உங்களுக்கு விலக்கு (பற்றி ஏதும்) வேதங்களில் இருக்கிறதா?
Saheeh International
Are your disbelievers better than those [former ones], or have you immunity in the scriptures?
اَمْ یَقُوْلُوْنَ نَحْنُ جَمِیْعٌ مُّنْتَصِرٌ ۟
اَمْ يَقُوْلُوْنَஅல்லது கூறுகிறார்களா?نَحْنُநாங்கள் ஆவோம்جَمِيْعٌகூட்டம்مُّنْتَصِرٌ‏பழிதீர்த்துக் கொள்கின்ற
அம் யகூலூன னஹ்னு ஜமீ'உன் முன்தஸிர்
முஹம்மது ஜான்
அல்லது (நபியே!) “நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்” என்று அவர்கள் கூறுகின்றார்களா?
அப்துல் ஹமீது பாகவி
‘‘நாங்கள் பெருங்கூட்டத்தினர், நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளக் கூடியவர்கள். (ஆகவே, எங்களுக்கு ஒரு பயமுமில்லை.)'' என்று (நபியே!) இவர்கள் கூறுகின்றனரா?
IFT
அல்லது ‘நாங்கள் ஒரு பலமிக்க குழுவினர் ஆவோம். எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்வோம்’ என்று இந்த மக்கள் கூறுகின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (நபியே!) “நாங்கள் வெற்றி பெரும் (பெருங்) கூட்டத்தினர் என்று இவர்கள் கூறுகின்றனரா?
Saheeh International
Or do they say, "We are an assembly supporting [each other]"?
سَیُهْزَمُ الْجَمْعُ وَیُوَلُّوْنَ الدُّبُرَ ۟
سَيُهْزَمُவிரைவில் தோற்கடிக் கப்படுவார்கள்الْجَمْعُஇந்த கூட்டங்கள்وَيُوَلُّوْنَஇன்னும் காட்டுவார்கள்الدُّبُرَ‏புறமுதுகு
ஸ யுஹ்Zஜமுல் ஜம்'உ வ யுவல்லூனத் துBபுர்
முஹம்மது ஜான்
அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.
அப்துல் ஹமீது பாகவி
அதிசீக்கிரத்தில் இவர்களுடைய கூட்டம் சிதறடிக்கப்பட்டு, (இவர்கள்) புறங்காட்டிச் செல்வார்கள்.
IFT
இந்தக் குழு அதி விரைவில் தோல்வி அடைவதையும், அனைவரும் புறமுதுகிட்டு ஓடுவதையும் காணலாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இக்)கூட்டத்தினர் தோற்கடிக்கப்படுவார்கள், புறமுதுகிட்டும் ஓடுவார்கள்.
Saheeh International
[Their] assembly will be defeated, and they will turn their backs [in retreat].
بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ اَدْهٰی وَاَمَرُّ ۟
بَلِமாறாகالسَّاعَةُமறுமைதான்مَوْعِدُவாக்களிக்கப்பட்ட நேரமாகும்هُمْஇவர்களின்وَالسَّاعَةُமறுமைاَدْهٰىமிக பயங்கரமானதும்وَاَمَرُّ‏மிக கசப்பானதாகும்
Bபலிஸ் ஸா'அது மவ்'இதுஹும் வஸ் ஸா'அது அத்ஹா வ அமர்ர்
முஹம்மது ஜான்
அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும்; மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையானதும் மிக்க கசப்பானதுமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
மாறாக, மறுமை நாள்தான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தவணையாகும். அந்த மறுமை நாள் மிக்க திடுக்கமானதாகவும், மிக்க கசப்பாகவும் இருக்கும்.
IFT
இவர்களின் கணக்கைத் தீர்ப்பதற்காக உண்மையில் வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமைநாளாகும். மேலும், அது பெரும் ஆபத்தான, மிகவும் கசப்பான நேரமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதுவுமின்றி, மறுமைநாள் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும், மறுமை நாள் இவர்களுக்கு மிகப் பயங்கரமானது, மிக்க கசப்பானதுமாகும்.
Saheeh International
But the Hour is their appointment [for due punishment], and the Hour is more disastrous and more bitter.
اِنَّ الْمُجْرِمِیْنَ فِیْ ضَلٰلٍ وَّسُعُرٍ ۟ۘ
اِنَّநிச்சயமாகالْمُجْرِمِيْنَகுற்றவாளிகள்فِىْ ضَلٰلٍவழிகேட்டிலும்وَّسُعُرٍ‌ۘ‏மிகப் பெரிய சிரமத்திலும்
இன்னல் முஜ்ரிமீன Fபீ ளலாலி(ன்)வ் வ ஸு'உர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும் இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாகக் குற்றவாளிகள் (இம்மையில்) வழிகேட்டிலும் (மறுமையில்) நரகத்திலும்தான் இருப்பார்கள்.
IFT
இந்தக் குற்றவாளிகள் உண்மையில் தவறான கருத்துக்களில் உழல்கின்றார்கள். மேலும், இவர்களின் புத்தி பேதலித்திருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாகக் குற்றவாளிகள் வழிகேட்டிலும், பைத்தியத்திலும் இருக்கின்றனர்.
Saheeh International
Indeed, the criminals are in error and madness..
یَوْمَ یُسْحَبُوْنَ فِی النَّارِ عَلٰی وُجُوْهِهِمْ ؕ ذُوْقُوْا مَسَّ سَقَرَ ۟
يَوْمَநாளில்يُسْحَبُوْنَஇழுக்கப்படுவார்கள்فِى النَّارِநரகத்தில்عَلٰى وُجُوْهِهِمْؕஅவர்களின் முகங்கள் மீதுذُوْقُوْاசுவையுங்கள்!مَسَّகடுமையைسَقَرَ‏சகர் நரகத்தின்
யவ்ம யுஸ்-ஹBபூன Fபின் னாரி 'அலா வுஜூஹிஹிம் தூகூ மஸ்ஸ ஸகர்
முஹம்மது ஜான்
அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், “நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று அவர்களுக்கு கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லும் நாளில் இவர்களை நோக்கி ‘‘(உங்களை) நரக நெருப்பு பொசுக்குவதைச் சுவைத்துப் பாருங்கள்'' என்று கூறப்படும்.
IFT
இவர்கள் நரக நெருப்பில் முகங்குப்புற இழுத்துச் செல்லப்படும் நாளில் அவர்களிடம் கூறப்படும்: “இப்போது சுவையுங்கள், நரக நெருப்பின் தீண்டுதலை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்கள் நரகத்திற்கு முகங்களின் மீது இழுத்து செல்லப்படும் நாளில், இவர்களிடம், (நீங்கள்) “நரக நெருப்பின் தீண்டுதலைச் சுவைத்துப்பாருங்கள்” (என்று கூறப்படும்).
Saheeh International
The Day they are dragged into the Fire on their faces [it will be said], "Taste the touch of Saqar."
اِنَّا كُلَّ شَیْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ ۟
اِنَّاநிச்சயமாக நாம்كُلَّ شَىْءٍஎல்லாவற்றையும்خَلَقْنٰهُஅவற்றைப் படைத்தோம்بِقَدَرٍ‏ஓர் அளவில்
இன்னா குல்ல ஷய்'இன் கலக்னாஹு Bபி கதர்
முஹம்மது ஜான்
நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் குறிப்பான திட்டப்படியே படைத்திருக்கிறோம்.
IFT
நிச்சயமாக நாம் ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட விதிமுறையின்படி படைத்திருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும், (நிர்ணயிக்கப்பட்ட) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
Saheeh International
Indeed, all things We created with predestination.
وَمَاۤ اَمْرُنَاۤ اِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍ بِالْبَصَرِ ۟
وَمَاۤ اَمْرُنَاۤநமது கட்டளை இல்லைاِلَّا وَاحِدَةٌஒன்றைத் தவிரكَلَمْحٍۢசிமிட்டுவதைப் போல்بِالْبَصَرِ‏கண்
வ மா அம்ருனா இல்லா வாஹிததுன் க லம்ஹின் Bபில் Bபஸர்
முஹம்மது ஜான்
நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(ஒரு பொருளை நாம் படைக்க நாடினால்) நம் கட்டளை (யெல்லாம்) கண் சிமிட்டுவதைப்போன்ற ஒன்றுதான்.
IFT
மேலும், நமது கட்டளை ஒரே ஒரு கட்டளையாகவே இருக்கின்றது. கண் இமைக்கும் நேரத்திற்குள் அது அமலுக்கு வந்துவிடுகின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம் கட்டளை (நிறைவேறுவது) கண்சிமிட்டுவது போன்ற ஒரு கணமே தவிர இல்லை.
Saheeh International
And Our command is but one, like a glance of the eye.
وَلَقَدْ اَهْلَكْنَاۤ اَشْیَاعَكُمْ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَهْلَـكْنَاۤநாம் அழித்தோம்اَشْيَاعَكُمْஉங்கள் சக கொள்கையுடையவர்களைفَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏நல்லுபதேசம் பெறுபவர் யாரும் உண்டா?
வ லகத் அஹ்லக்னா அஷ்யா'அகும் Fபஹல் மின் முத்தகிர்
முஹம்மது ஜான்
(நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
அப்துல் ஹமீது பாகவி
(மக்காவாசிகளே!) உங்கள் இனத்தாரில், (பாவம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ வகுப்பார்களை நாம் அழித்திருக்கிறோம். உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
IFT
உங்களைப் போன்ற பலரை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். பின்னர் அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மக்காவாசிகளே!) உங்களைப்போன்ற (எத்தனையோ) வகுப்பார்களை நாம் நிச்சயமாக அழித்திருக்கின்றோம். ஆகவே (உங்களில்) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா?
Saheeh International
And We have already destroyed your kinds, so is there any who will remember?
وَكُلُّ شَیْءٍ فَعَلُوْهُ فِی الزُّبُرِ ۟
وَكُلُّ شَىْءٍஎல்லா விஷயங்கள்فَعَلُوْهُசெய்தனர்/அவற்றைفِى الزُّبُرِ‏ஏடுகளில் உள்ளன
வ குல்லு ஷய்'இன் Fப'அலூஹு FபிZஜ் ZஜுBபுர்
முஹம்மது ஜான்
அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் (அவர்களுடைய) பதிவுப் புத்தகத்தில் இருக்கிறது.
IFT
இவர்கள் செய்தவை அனைத்தும் பதிவேடுகளில் பதிக்கப்பட்டுள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் செய்துவிட்ட ஒவ்வொரு விஷயமும் (பதிவு செய்யப்பட்டு அவர்களுடைய) குறிப்பேடுகளில் இருக்கின்றது.
Saheeh International
And everything they did is in written records.
وَكُلُّ صَغِیْرٍ وَّكَبِیْرٍ مُّسْتَطَرٌ ۟
وَ كُلُّஎல்லாصَغِيْرٍசிறியவையும்وَّكَبِيْرٍபெரியவையும்مُّسْتَطَرٌ‏எழுதப்பட்டு உள்ளது
வ குல்லு ஸகீரி(ன்)வ் வ கBபீரின் முஸ்ததர்
முஹம்மது ஜான்
சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
சிறிதோ, பெரிதோ அனைத்துமே அதில் வரையப்பட்டிருக்கும்.
IFT
ஒவ்வொரு சிறிய பெரிய விஷயமும் எழுதப்பட்டுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஒவ்வொரு சிறிதும், பெரிதும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.
Saheeh International
And every small and great [thing] is inscribed.
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّنَهَرٍ ۟ۙ
اِنَّநிச்சயமாகالْمُتَّقِيْنَஇறையச்சமுடையவர்கள்فِىْ جَنّٰتٍசொர்க்கங்களில்وَّنَهَرٍۙ‏இன்னும் நதிகளில்
இன்னல் முத்தகீன Fபீ ஜன்னாதி(ன்)வ் வ னஹர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள்
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கங்களிலும், (அதிலுள்ள) நீரருவிகளின் சமீபத்திலும் இருப்பார்கள்.
IFT
மாறு செய்வதை விட்டு விலகி இருப்பவர்கள் திண்ணமாக சுவனங்களிலும் ஆறுகளிலும் தங்கி இருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக பயபக்தியுடையோர் சுவனபதிகளிலும் (அவற்றிலுள்ள) ஆறுகளிலும் இருப்பார்கள்.
Saheeh International
Indeed, the righteous will be among gardens and rivers,
فِیْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِیْكٍ مُّقْتَدِرٍ ۟۠
فِىْ مَقْعَدِசபையில்صِدْقٍஉண்மையான பேச்சுகளுடையعِنْدَ مَلِيْكٍபேரரசனுக்கு அருகில்مُّقْتَدِرٍ‏மகா வல்லமையுடையவன்
Fபீ மக்'அதி ஸித்கின் 'இன்த மலீகின் முக்ததிர்
முஹம்மது ஜான்
உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அது மெய்யாகவே மிக்க கண்ணியமுள்ள இருப்பிடம்; அது மிக்க சக்திவாய்ந்த பேரரசனிடம் இருக்கிறது.
IFT
உண்மையான கண்ணியத்திற்குரிய இடத்தில், பெரும் அதிகாரம் உடைய அரசனுக்கருகில்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மெய்யாகவே) மிக்க உண்மையான இருக்கையில், மிக்க சக்தி வாய்ந்த அரசனிடத்தில் இருப்பார்கள்.
Saheeh International
In a seat of honor near a Sovereign, Perfect in Ability.