எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள்; “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் (அதைப்) புறக்கணித்து ‘‘இது சகஜமான சூனியம்தான்'' என்று கூறுகின்றனர்.
IFT
ஆனால் (இந்த மக்களின் நிலைமை என்னவெனில்), எந்தச் சான்றினைப் பார்த்தாலும் புறக்கணிக்கின்றார்கள். மேலும், “இது எப்போதும் நடைபெறுகின்ற சூனியம்தான்” என்றும் சொல்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும், (அதனை) அவர்கள் புறக்கணித்துவிட்டு, இது (நாள்தோறும்) தொடர்ந்துவரும் சூனியம் என்றும் கூறுகின்றனர்.
Saheeh International
And if they see a sign [i.e., miracle], they turn away and say, "Passing magic."
وَكَذَّبُوْاஇன்னும் அவர்கள் பொய்ப்பித்தனர்وَاتَّبَعُوْۤاஇன்னும் பின்பற்றினார்கள்اَهْوَآءَهُمْதங்கள் மன இச்சைகளைوَكُلُّஎல்லாاَمْرٍகாரியங்களும்مُّسْتَقِرٌّநிலையாகத் தங்கக் கூடியதுதான்
அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அதை பொய்யாக்கி தங்களது சரீர இச்சைகளையே பின்பற்றுகின்றனர். (அவர்கள் எதை புறக்கணித்தாலும் வரவேண்டிய) ஒவ்வொரு விஷயமும் (அதனதன் நேரத்தில்) உறுதியாகி விடும்.
IFT
இவர்கள் (இதனையும்) பொய்யெனக் கூறிவிட்டார்கள். மேலும், தங்கள் மன இச்சைகளையே பின்பற்றினார்கள். ஒவ்வொரு விவகாரமும் ஒரு முடிவை அடைந்தே தீரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அதனை அவர்கள் பொய்யாக்கிவிட்டனர், தங்களின் மனோ ஆசைகளையே பின்பற்றுகின்றனர், (அவர்கள் எவ்வாறு நடந்துகொண்ட போதிலும், வரவேண்டிய) ஒவ்வொரு காரியமும் (அதனதன் நேரத்தில்) நிலை பெறக்கூடியதாகும்.
Saheeh International
And they denied and followed their inclinations. But for every matter is a [time of] settlement.
அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களுக்குப்) போதுமான படிப்பினை தரக்கூடிய பல விஷயங்கள் (இதற்கு முன்னரும்) நிச்சயமாக அவர்களிடம் வந்தே இருக்கின்றன.
IFT
மேலும், இவர்களிடம் (முந்தைய சமுதாயங்களின்) செய்திகள் வந்துவிட்டிருக்கின்றன. அவற்றில் வரம்பு மீறிய நடத்தையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு போதுமான படிப்பினைகள் உள்ளன;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எதில் (அவர்களுக்கு) அச்சுறுத்தல் உண்டோ அத்தகைய செய்திகள், (இதற்கு முன்னரும்) திட்டமாக அவர்களுக்கு வந்திருக்கின்றன.
Saheeh International
And there has already come to them of information that in which there is deterrence.
فَتَوَلَّஆகவே, நீர் விலகி விடுவீராக!عَنْهُمْۘஅவர்களை விட்டுيَوْمَநாளில்يَدْعُஅழைக்கின்றالدَّاعِஅழைப்பாளர்اِلٰى شَىْءٍஒன்றை நோக்கிنُّكُرٍۙமிக கடினமான(து)
ஆகையால் (நபியே!) அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும்; (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்:
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. இவர்கள் வெறுக்கும் (அந்தக் கேள்வி கணக்கு) விஷயத்திற்காக (இஸ்ராஃபீல் என்னும்) அழைப்பவர் அழைக்கும் நாளில்,
IFT
எனவே (நபியே!) இவர்களைப் பொருட்படுத்தாதீர். மிகவும் வெறுப்புக்குரிய ஒரு விஷயத்தின் பக்கம் அழைக்கக்கூடியவர் அழைக்கும் நாளில்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்துவிடுவீராக! (இன்னும் இவர்கள்) வெறுக்கும் (அந்தகேள்விகணக்கு) விஷயத்திற்காக (இஸ்ராஃபீல் என்னும்) அழைப்பவர் அழைக்கும் நாளில்_
Saheeh International
So leave them, [O Muhammad]. The Day the Caller calls to something forbidding,
அழைப்பவரிடம் விரைந்து வருவார்கள்; “இது மிகவும் கஷ்டமான நாள்” என்றும் அக்காஃபிர்கள் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அழைப்பவரிடம் விரைந்தோடி வருவார்கள். இது மிக சிரமமான நாள் என்றும் அந்நிராகரிப்பவர்கள் (அச்சமயம்) கூறுவார்கள்.
IFT
அழைக்கக் கூடியவர்களை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள். (உலகில் இதனை மறுத்துக்கொண்டிருந்த) அதே நிராகரிப்பாளர்கள் அப்போது கூறுவார்கள்: “இந்த நாளோ பெரும் கடினமானதாக இருக்கின்றதே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அழைப்பவர் பால் விரைந்தவர்களாக, (வெளியேறுவர்) “இது மிகக் கஷ்டமான நாள்” என்று நிராகரித்துக்கொண்டிருப்போர் (அச்சமயம்) கூறுவார்கள்.
Saheeh International
Racing ahead toward the Caller. The disbelievers will say, "This is a difficult Day."
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்قَوْمُமக்கள்نُوْحٍநூஹூடையفَكَذَّبُوْاஆக, அவர்கள் பொய்ப்பித்தனர்عَبْدَنَاநமது அடியாரைوَقَالُوْاஇன்னும் கூறினர்مَجْنُوْنٌஒரு பைத்தியக்காரர்وَّازْدُجِرَஇன்னும் அவர் எச்சரிக்கப்பட்டார்
இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர்; ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) “பைத்தியக்காரர்” என்று கூறினர்; அவர் விரட்டவும் பட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்த நூஹுடைய மக்களும் (அந்த நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் (அதைப் பற்றி எச்சரிக்கை செய்த) நம் (தூதராகிய) அடியாரைப் பொய்யாக்கியதுடன், அவரைப் பைத்தியக்காரனென்று கூறி (அவரை துன்புறுத்துவதாக) மிரட்டிக்கொண்டும் இருந்தார்கள்.
IFT
இவர்களுக்கு முன்பு நூஹின் சமுதாயத்தினர் பொய்யெனத் தூற்றினர். அவர்கள் நம் அடியாரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். “இவர் ஒரு பைத்தியக்காரர்” என்று சொன்னார்கள். மேலும், அவர் மிக மோசமாக மிரட்டப்பட்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் நூஹ்வுடைய சமூகத்தார் (அந்நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள், ஆகவே, அவர்கள் நம்முடைய அடியாரைப் பொய்யாக்கிப் பைத்தியக்காரரென்றும் அவர்கள் கூறினர். இன்னும், (அவர்களால் தன் தூதை எத்தி வைக்கமுடியாதவாறு) அவர் விரட்டப்பட்டார்.
Saheeh International
The people of Noah denied before them, and they denied Our servant and said, "A madman," and he was repelled.
فَدَعَاஆகவே, அவர் பிரார்த்தித்தார்رَبَّهٗۤதனது இறைவனிடம்اَنِّىْநிச்சயமாக நான்مَغْلُوْبٌதோற்கடிக்கப்பட்டேன்فَانْـتَصِرْஆகவே, நீ பழி தீர்ப்பாயாக!
Fபத'ஆ ரBப்Bபஹூ அன்னீ மக்லூBபுன் Fபன்தஸிர்
முஹம்மது ஜான்
அப்போது அவர்; “நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன்; ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!” என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நான் (இவர்களிடம்) தோற்றுவிட்டேன். நீ எனக்கு உதவி செய்!'' என்று பிரார்த்தனை செய்தார்.
IFT
இறுதியில் அவர் தம் அதிபதியை அழைத்தார்: “நான் தோற்றுப்போய் இருக்கின்றேன். நீ இப்போது இவர்களைப் பழி வாங்குவாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர் நிச்சயமாக நான் (இவர்களால்) மிகைக்கப்பட்டு விட்டவன். ஆகவே நீ எனக்கு உதவி செய்(து அவர்களுக்கு தண்டனை வழங்கு)வாயாக! என தம் இரட்சகனிடம் அவர் பிரார்த்தனை செய்தார்.
Saheeh International
So he invoked his Lord, "Indeed, I am overpowered, so help."
மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம்; இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், பூமியின் ஊற்றுக்கண்களையும் (பீறிட்டுப்) பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே, நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத்திற்காக தண்ணீர் ஒன்று சேர்ந்தது.
IFT
மேலும், பூமியைப் பிளந்து (அதனை) நீரூற்றுகளாக மாற்றிவிட்டோம். மேலும் நிர்ணயிக்கப்பட்டுவிட்ட பணியை நிறைவேற்றுவதற்காக இந்தத் தண்ணீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், பூமியை ஊற்றுக் கண்களாக(ப் பீறிட்டு)ப் பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே, (ஆதியில்) நிர்ணயிக்கப்பட்ட காரியத்தின் மீது (வானம், பூமி ஆகியவற்றின்) நீரும் இணைந்தது.
Saheeh International
And caused the earth to burst with springs, and the waters met for a matter already predestined.
எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதாக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
அது நம் கண்களுக்கு முன்பாகவே (பிரளயத்தில் மிதந்து) சென்றது. (மற்றவர்களோ மூழ்கி மாண்டனர்.) எவரை இவர்கள் (மதிக்காது) நிராகரித்தனரோ, அவருக்காக இவ்வாறு கூலி கொடுக்கப்பட்டது.
IFT
அது நமது கண்காணிப்பில் சென்று கொண்டிருந்தது. (அவர்களுக்கு) நாம் அளித்த பிரதிபலனாகும் இது, அவமரியாதை செய்யப்பட்ட அந்த மனிதரின் நிமித்தம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது நம் கண்களுக்கு முன்பாகவே (பெரு வெள்ளத்தில் மிதந்து) சென்றது, (இவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு (நூஹ் நபிக்குக் கொடுக்கப்படும் நற்) கூலியாக (இவ்வாறு அவர்களை நாம் தண்டித்தோம்).
Saheeh International
Sailing under Our observation as reward for he who had been denied.
“ஆது” (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர்; அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?)
அப்துல் ஹமீது பாகவி
ஆது என்னும் மக்களும் (இவ்வாறே நம் தூதரைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். எனினும், (அவர்களுக்கு ஏற்பட்ட) எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?
IFT
‘ஆத்’ சமுதாயத்தினர் பொய்யென வாதிட்டார்கள். பார்த்துக் கொள்ளுங்கள்: அப்போது எப்படி இருந்தது நான் அளித்த வேதனை! மேலும், எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆது (சமூகத்தாரும் நம் தூதரைப்) பொய்யாக்கிக்கொண்டிருந்தனர், பின்னர் (அவர்களுக்கு என் கட்டளையின்படி ஏற்பட்ட) என்னுடைய வேதனையும், (என்னுடைய எச்சரிக்கையும் எவ்வாறிருந்தன (என்பதைக் கவனிப்பார்களா)?
Saheeh International
ʿAad denied; and how [severe] were My punishment and warning.
தன்Zஜி'உன் னாஸ க அன்னஹும் அஃஜாZஜு னக்லின் முன்க'இர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்தூறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.
அப்துல் ஹமீது பாகவி
அது வேரற்ற பேரீச்ச மரங்களைப்போல், மனிதர்களைக் களைந்து (எறிந்து) விட்டது.
IFT
அது மக்களை வேகமாகத் தூக்கி எறிந்துகொண்டிருந்தது. அப்போது அவர்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்ச மரத்தின் தடிகளைப் போன்று ஆனார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதுமனிதர்களை_நிச்சயமாக அவர்கள் (பூமிக்குள்ளிருந்து வேரோடு) பிடுங்கக்கபட்ட பேரீச்ச மரங்களின் அடிவேர்களைப் போல (ஆகும் நிலையில்) பிடுங்கி (எறிந்து) விட்டது.
Saheeh International
Extracting the people as if they were trunks of palm trees uprooted.
“நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்” என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
(பொய்யாக்கியதுடன்) ‘‘நம்மிலுள்ள ஒரு மனிதனையா நாம் பின்பற்றுவது? பின்பற்றினால், நிச்சயமாக நாம் வழிகேட்டில் சென்று சிரமத்திற்குள்ளாகி விடுவோம்'' என்று கூறினார்கள்.
IFT
மேலும், கூறலானார்கள்: “நம்மிலுள்ள ஒரு தனிப்பட்ட மனிதரையா நாம் பின்பற்றிச் செல்வது? அவரைப் பின்பற்றிச் செல்வதற்கு ஏற்றுக்கொண்டோமானால், நாம் வழிகெட்டுப் போய் விட்டோம்; நமது புத்தி பேதலித்துவிட்டது என்பது அதன் பொருளாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், “நம்மிலுள்ள ஒரு மனிதரை_ அவரையா நாம் பின் பற்றுவோம்? (அவ்வாறு பின்பற்றினால்) நிச்சயமாக, நாம் அப்பொழுது வழிகேட்டிலும், சிரமத்திலும் ஆகிவிடுவோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
And said, "Is it one human being among us that we should follow? Indeed, we would then be in error and madness.
அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம்; ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக!
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே,) அவர்களைச் சோதிப்பதற்காக, மெய்யாகவே ஒரு பெண் ஒட்டகத்தை நாம் அனுப்பி வைப்போம். ஆகவே, (ஸாலிஹ் நபியே!) நீர் பொறுமையாயிருந்து, அவர்களைக் கவனித்து வருவீராக.
IFT
நாம் பெண் ஒட்டகத்தை இவர்களுக்குச் சோதனையாக ஆக்கி அனுப்புகின்றோம். எனவே, இப்போது சற்றுப் பொறுத்திருந்து பாரும்; இவர்களின் கதி என்னவாகிறது என்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே,) அவர்களைச் சோதிப்பதற்காக “ஒரு பெண் ஒட்டகத்தை நிச்சயமாக நாம் அனுப்பிவைப்போராக உள்ளோம், ஆகவே (ஸாலிஹ் நபியே!) நீர் அவர்களைக் கண்காணித்துக்கொண்டு, பொறுமையுடனும் இருப்பீராக!
Saheeh International
Indeed, We are sending the she-camel as trial for them, so watch them and be patient.
(அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது; “ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்” என்று அவர்களுக்கு அறிவித்து விடும்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘(அவ்வூரில் உள்ள ஊற்றின்) குடிநீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் நிச்சயமாகப் பங்கிடப்பட்டுவிட்டது. ஒவ்வொருவரும் தன் பங்கிற்குத் தகுந்தாற்போல் குடிப்பதற்கு வரலாம்'' என்று அவர்களுக்கு அறிவித்து விடுவீராக.
IFT
தண்ணீர் இவர்களுக்கும் ஒட்டகத்துக்கும் இடையே பங்கிடப்படும் என்றும், ஒவ்வொருவரும் (தம் முறை நாளில் தண்ணீருக்கு) வர வேண்டும் என்றும் இவர்களுக்கு அறிவித்துவிடும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, (கிணற்றின்) “தண்ணீர் அவர்களுக்கும் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது, ஒவ்வோரு தண்ணீர் முறை பாகமும் (முறைப்படி அவரவர் நாளில் குடிப்பதற்கு) என்றும், அவர்களுக்கு அறிவித்து விடுவீராக!” (என்றும் நாம் கூறினோம்).
Saheeh International
And inform them that the water is shared between them, each [day of] drink attended [by turn].
ஆனால் (அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர்; அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்) தரித்து விட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவர்கள் (கத்தார் என்னும்) தங்கள் நண்பனை அழைத்தனர். அவன் அதை வெட்டி, அதன் கால் நரம்புகளைத் தறித்து விட்டான்.
IFT
இறுதியில், அவர்கள் தங்களுடைய ஆளை அழைத்தார்கள். அவர் இந்தப் பணியை முடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும் ஒட்டகத்தைக் கொன்றுவிட்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும், அவர்கள் (ஒட்டகத்தை அறுத்து விட) தங்களுடைய தோழனை அழைத்தனர், அவன் (வாளை எடுத்து, தன் கையால் ஒட்டகத்தைப்) பிடித்தான், (அதன் கால் நரம்புகளைத் தறித்து) பின்னர் அறுத்து விட்டான்.
Saheeh International
But they called their companion, and he dared and hamstrung [her].
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரே ஒரு (இடி முழக்கச்) சப்தத்தைத் தான் அனுப்பி வைத்தோம். அதனால், பிடுங்கி எறியப்பட்ட வேலி(க் கூளங்)களைப் போல் அவர்கள் ஆகிவிட்டார்கள்.
IFT
நாம் ஒரேயொரு ஓசையைத்தான் அவர்களின் மீது அனுப்பினோம். உடனே அவர்கள், தொழுவத்தில் மிதித்து நசுக்கப்பட்ட வைக்கோல் போல் ஆகிவிட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் அவர்கள் மீது, ஒரே ஒரு (பேரிடிச்) சப்தத்தை அனுப்பி வைத்தோம், அதனால் வேலி கட்டுபவரின் பிடுங்கி எறியப்பட்ட குப்பை கூளங்களைப் போல் அவர்கள் ஆகிவிட்டார்கள்.
Saheeh International
Indeed, We sent upon them one shriek [i.e., blast from the sky], and they became like the dry twig fragments of an [animal] pen.
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம்; விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது நாம் கல்மாரி பொழியச் செய்தோம். விடியற்காலை நேரத்தில் நாம் அவ(ருடைய குடும்பத்தா)ர்களை பாதுகாத்துக் கொண்டோம்.
IFT
நாம் கல்மாரி பொழியும் காற்றை அவர்கள் மீது ஏவினோம். லூத்தின் குடும்பத்தினர் மட்டுமே அதிலிருந்து பாதுகாப்பாக இருந்தனர். நாம் நம்முடைய அருளினால் இரவின் பின்நேரத்தில் அவர்களைக் காப்பாற்றி வெளியே கொண்டுவந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் மீது, நாம் கல்மாரியை அனுப்பிவைத்தோம். (அல்லாஹ்வின் தூதராகிய) லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, அதிகாலை நேரத்தில் நாம் அவர்களைக் காப்பாற்றினோம்.
Saheeh International
Indeed, We sent upon them a storm of stones, except the family of Lot - We saved them before dawn.
وَلَقَدْதிட்டவட்டமாகاَنْذَرَهُمْஅவர் அவர்களுக்கு எச்சரித்தார்بَطْشَتَـنَاநமது தண்டனையைفَتَمَارَوْاஅவர்கள் சந்தேகித்தனர்بِالنُّذُرِஎச்சரிக்கையை
வ லகத் அன்தரஹும் Bபத்ஷதனா Fபதமாரவ் Bபின்னுதுர்
முஹம்மது ஜான்
திட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்கலாயினர்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை) நாம் பிடித்துக்கொள்வோம் என்று நிச்சயமாக அவர், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார். எனினும், அந்த எச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் தர்க்கிக்க ஆரம்பித்தார்கள்.
IFT
லூத் தம்முடைய சமூக மக்களுக்கு நம்முடைய தண்டனையைக் குறித்து எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அவர்கள் எல்லா எச்சரிக்கைகளையும் சந்தேகமானவை எனக் கருதி எள்ளி நகையாடிக் கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம் (வேதனையின்) பிடியைப்பற்றி நிச்சயமாக (லூத் நபியாகிய) அவர், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார், எனினும், அவ்வெச்சரிக்கையைப் பற்றி அவர்கள் சந்தேகித்தார்கள்.
Saheeh International
And he had already warned them of Our assault, but they disputed the warning.
அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள்; ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். “என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்” (என்றும் கூறினோம்).
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவருடைய விருந்தாளியையும் (கெட்ட காரியத்திற்காக) மயக்கி (அடித்து)க்கொண்டு போகப் பார்த்தார்கள். ஆகவே, அவர்களுடைய கண்களை நாம் துடைத்து(க் குருடாக்கி) விட்டோம். எனது வேதனையையும், எனது எச்சரிக்கைகளையும் சுவைத்துப்பாருங்கள் என்று கூறினோம்.
IFT
பின்னர் அவருடைய விருந்தாளிகளைப் பாதுகாப்பதிலிருந்து அவரை விலகியிருக்கச் செய்ய அவர்கள் முயற்சி செய்தார்கள். இறுதியில், நாம் அவர்களுடைய கண்களை அவித்துவிட்டோம். சுவையுங்கள், இப்போது நான் அளிக்கும் வேதனையையும் என்னுடைய எச்சரிக்கைகளையும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், திட்டமாக அவருடைய விருந்தினரை(க் கெட்ட காரியத்திற்காக தங்களிடம் ஒப்படைக்குமாறு) அவரிடம் தேடினார்கள். ஆகவே அவர்களுடைய கண்களை நாம் துடைத்து(க் குருடாக்கி) விட்டோம், ஆகவே, என்னுடைய வேதனையையும், (என்னுடைய) எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறினோம்).
Saheeh International
And they had demanded from him his guests, but We obliterated their eyes, [saying], "Taste My punishment and warning."
ஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர்; அப்போது, சக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
நமது அத்தாட்சிகள் அனைத்தையும் அவர்கள் பொய்யாக்கிக் கொண்டே வந்தார்கள். ஆகவே, மிக்க சக்திவாய்ந்த பலசாலி பிடிப்பதைப் போல் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.
IFT
ஆனால் அவர்கள் நம்முடைய சான்றுகள் அனைத்தையும் பொய்யென்று வாதித்தார்கள். இறுதியில், நாம் அவர்கள் அனைவரையும் பிடித்துக் கொண்டோம். யாவரையும் மிகைத்த, வலிமை மிக்க ஒருவன் பிடிப்பதைப் போன்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆனால், நம்முடைய அத்தாட்சிகளை_ அவை அனைத்தையும் அவர்கள் பொய்யாக்கினார்கள், ஆகவே, சக்தி வாய்ந்த மிகைப்பவனின் பிடியாக நாம் அவர்களைப் பிடித்துக்கொண்டோம் (அவர்களில் யாரும் எஞ்சியிருக்கவில்லை).
Saheeh International
They denied Our signs, all of them, so We seized them with a seizure of one Exalted in Might and Perfect in Ability.
அல்லது (நபியே!) “நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்” என்று அவர்கள் கூறுகின்றார்களா?
அப்துல் ஹமீது பாகவி
‘‘நாங்கள் பெருங்கூட்டத்தினர், நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளக் கூடியவர்கள். (ஆகவே, எங்களுக்கு ஒரு பயமுமில்லை.)'' என்று (நபியே!) இவர்கள் கூறுகின்றனரா?
IFT
அல்லது ‘நாங்கள் ஒரு பலமிக்க குழுவினர் ஆவோம். எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்வோம்’ என்று இந்த மக்கள் கூறுகின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (நபியே!) “நாங்கள் வெற்றி பெரும் (பெருங்) கூட்டத்தினர் என்று இவர்கள் கூறுகின்றனரா?
Saheeh International
Or do they say, "We are an assembly supporting [each other]"?
அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், “நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று அவர்களுக்கு கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லும் நாளில் இவர்களை நோக்கி ‘‘(உங்களை) நரக நெருப்பு பொசுக்குவதைச் சுவைத்துப் பாருங்கள்'' என்று கூறப்படும்.
IFT
இவர்கள் நரக நெருப்பில் முகங்குப்புற இழுத்துச் செல்லப்படும் நாளில் அவர்களிடம் கூறப்படும்: “இப்போது சுவையுங்கள், நரக நெருப்பின் தீண்டுதலை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்கள் நரகத்திற்கு முகங்களின் மீது இழுத்து செல்லப்படும் நாளில், இவர்களிடம், (நீங்கள்) “நரக நெருப்பின் தீண்டுதலைச் சுவைத்துப்பாருங்கள்” (என்று கூறப்படும்).
Saheeh International
The Day they are dragged into the Fire on their faces [it will be said], "Taste the touch of Saqar."